நல்வரவு_()_


Saturday 23 February 2013

அப்பாவின் அட்வைஸ்....


ம்முறை நான் சிரிக்கப் போறதில்லை:) சீரியசாக எழுதப்போறன்:)... ஏனெண்டால் சிரிச்சால் விஷயத்துக்கு வர நேரமெடுக்குது:).. அதனால ஸ்ஸ்ஸ்ஸ்ரெயிட்டா களமிறங்கிடோணும் எனக் கங்கணம் கட்டிட்டன்:)) அதனால மீற மாட்டன்....:).

நான் குட்டிப் பொண்ணாக:) இருந்த காலத்தில(அதுக்காக இப்ப வளர்ந்திட்டீங்களோ எனக் கேட்கப்புடா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்த்தியாம்ம்:)) சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)), இலங்கையின் வடபகுதி, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருந்த கொஞ்சக் காலத்தை அனுபவித்திருக்கிறேன். அந்தப் பாக்கியம் எல்லோருக்க்கும் கிடைக்காது, அந்நேரம் அங்கிருந்தோருக்கு மட்டுமே கிடைச்சிருக்கும். அது ஒரு அழகிய பொற்காலம்....:).

ஏன் அப்படிச் சொல்கிறேன் எனில், ஊரில் களவு என்ற சொல்லுக்கே அந்நேரம் இடமில்லை. ஒரு பொம்பிளைப் பிள்ளை எத்தனை மணிக்கும் வெளியே போய்வரக்கூடிய சுகந்திரம் இருந்தது. எந்த விதமான ஷேஸ்டைகள், தனகல்களே கிடையாது.. அவ்வளவு ஒரு கட்டுப்பாடான காலமாக அது இருந்தது.

ஆனா எந்தவித வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. தபால் தொடர்பு மட்டுமே இருந்தது. ரெலிபோன் எனில் கச்சேரியில் இருந்தது.. அது ஒன்றுதான் எனக்குத் தெரியும். போக்குவரத்துக்கூட துண்டித்திருந்தது, தரைப்பாதை இல்லை. இடையில் கடல்வழியேதான் தொடுக்கப் பட்டிருந்தது.

வெளி உணவுகள் , இங்கிலீசு மரக்கறி, சோப், இப்படியாக எதுவும் வாங்குவது கஸ்டம். ஆனாலும் கிடைக்கும்.. ஆனை விலை பூனை விலையில்:).. காசு இருப்போருக்கு பிரச்சனை பெரிதாக தெரியாது. கரண்ட் இல்லை ஆனாலும் ஜெனரேட்டர் பிடிச்சு புதுப்படங்கள் எல்லாம் பார்ப்போம். 

சைக்கிள் டைனமோவில் பாட்டுக் கேட்பார்கள், பனம்பழத்தில் சோப் உற்பத்தி நடந்துது... இப்படி பல புதுமைகள். பற்றரி வாங்கலாம் ஆனா விலைதான். மண் எண்ணெயிலயே வாகனங்கள் இயங்கின.

வீடுகளில் தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய் விளக்குகள்தான். ஆனால் ஜெனரேட்டர் பிடிச்சு, கோயில் திருவிளாக்கள், கல்யாணக் கொண்டாட்டம் எல்லாம் கோலாகலமாக நடக்கும்.. அதுக்கெல்லாம் குறையிருக்கவில்லை.

இப்படியான காலத்தில என் அளப்பரிய சொத்தாக ஒரு புது “லுமாலா லேடீஸ் பைக்” எனக்கிருந்தது. 

ஓரம்போங்கோ.. ஓரம்போங்கோ அதிராட லுமாலா
சைக்கிள் வருதூஊஊஊஊ:)
அதுக்கு கரியர், முன்னால குடை எல்லாம் அழகாகப் போட்டு, என்னவெல்லாம் போட்டு அலங்கரிக்கோணுமோ அலங்கரிச்சு:), ஸ்டிக்கர் எல்லாம் அளவா+ அழகா ஒட்டி, எப்பவும் துடைச்சு துடைச்சு பளபளா என வைத்திருப்பேன். அந்நேரம் என்னைப் பார்த்தொருவர் சொன்னார், உங்களின் சைக்கிளைப் பார்த்தாலே தெரியுது, நீங்கள் எவ்வளவு சுத்தமாக இருப்பீங்களென, ஆனா இப்போ என் காரைப் பார்த்தால் அவர் என்ன சொல்லுவாரோ?:) ...ஙேஙேஙே.... சரி சரி அதெல்லாம் இப்ப எதுக்கு:).

கூகிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன்ன் .. உலகத்தில..
இப்படி ஒரு காரைக் காணவில்ல:)
ஆனாலும் என் வயிற்றெரிச்சலைச் சொல்லியே ஆகணும். அப்படிப்பட்ட என் ஆசைச் சைக்கிளை இடம் பெயர்வின்போது, நாவற்குழி என்னுமிடத்தில் வைத்து களவெடுத்திட்டினம்... பிறகுதானே அறிஞ்சன் அது வேறு ஆருமில்லை.. இப்போ ரேடியோ ஜக்கியாக இருக்கும்.. நி.... வில்:) ஆரம்பிக்கும் பெயர் கொண்டவர்தான் எடுத்ததென:)).. சரி சரி பழசெல்லாம் இப்ப எதுக்கு:)?. விஷயத்துக்கு வாறன்.

இப்படியான காலப்பகுதியில், அப்பா வடபகுதிக்கு வெளியேதான் வேலை பார்த்தவர்... அதனால் அவர் 3,4 மாதங்களுக்கொரு முறைதான் ஊருக்கு வந்து போவார். அப்போ அம்மாவும் நானும்தான். அப்பாவின் ஊர் பக்கத்து ஊர்தான் என் சைக்கிளில் 15, 20 நிமிடத்தில், நான் மாமி வீட்டில் நிற்பேன். அப்பாவின் ஊரில்தான் அந்நேரம் என் வயதொத்த மச்சாள்மார் நிறைய இருந்தவை. எங்களிடத்தில் பெரிதாக எனக்கு குரூப் இல்லை..

அதனால நான் எப்பவும் அங்குதான் ஓடுவேன். அதிலும் ஒரு மாமிக்கு இரு மகள்மார். அவர்களோடுதான் நான் அதிகம் ஒட்டு. தினமும் அவர்களை மீட் பண்ணுவேன், இல்லையெனில் சாப்பிடாததுபோல இருக்கும்.

அம்மாவின் சட்டம், நீ போய்வா, ஆனா 3 மணிக்கு முன் போகக்கூடாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடோணும்... இதை எப்பவும் மீறமாட்டேன் நான், ஆனா எப்படியும் 6 மணிக்கு 10, 15 நிமிடம் தாமதமாகிடும் வந்து சேர.. ஏனெனில் என்னைக் காணவில்லை எனில், இன்னொரு ஆள் அனுப்பித்தான் தேடோணும், ஃபோன் வசதி இல்லையெல்லோ. அதுதான் பிரச்சனையே. அங்கு மாமி வீட்டு Gate இல் 5.45 க்கு சைக்கிளோடு வெளியே வருவேன், ஆனால் விடமாட்டினம், கேட்டில் நின்று கதைக்கவே நேரம் போயிடும்.. கதைச்சு முடியாது, பிறகு மின்னல் வேகத்தில் வீட்டுக்கு வந்திடுவேன்.

மாமி சுகமில்லாமல் இருந்தவ. அதனால் மகள்மாரால் வெளியே பெரிசாக வெளிக்கிட முடியாது. ஆனாலும் நான் 3 மணிக்கு அங்கு போகவில்லையாயின், 3.30 க்கு மாமியின் மகளின் சைக்கிள் எங்கட வீட்டில இருக்கும், ஏன் வரவில்லை எனக் கேட்டபடி.

அதிகமான நாட்கள் திரும்பிவர விடாயினம், நில்லுங்கோ என மறிப்பினம், அப்படியெனில்... ஆரும் தம்பிமாரை கெஞ்சி, ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லிப்போட்டு வரும்படி அனுப்பி வைப்போம்.. இப்படியெல்லாம் செட்டப்புக்கள் நடக்கும்.

அப்படியான காலநேரத்தில் ஒரு தடவை, அப்பா லீவில் வந்து நிண்டவர். ஒருநாள் இரவு, என் ரூமில் நான் படுத்திருக்கிறேன், வெளியே ஹோலில் அப்பாவும் அம்மாவும் கதைச்சுக் கொண்டிருக்கினம், நான் நித்திரையாகவில்லை, அது அவர்களுக்கும் தெரியும் என்பது அப்போ எனக்கு புரியவில்லை:).

அப்போ அம்மா சொல்கிறா அப்பாவுக்கு.... “இஞ்ச பாருங்கோ, என்னால அதிராவைப் பார்க்க முடியாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடும்படி சொன்னால், நேரத்துக்கு வருவதில்லை, நானும் எத்தனை நாளைக்குத்தான் இப்படிப் பயப்பிடுவது தனியே, நீங்கள் நிண்டு கவனியுங்கோ” என. இதைக் கேட்டதும் எனக்கோ அப்பா ஏசுவாரோ என நெஞ்சு திக்கு திக்கு எண்ணுது...

ஆனா பாருங்கோ உடனே அப்பா என்ன சொன்னார் தெரியுமோ?:).. “அதிராவைப் பற்றியா சொல்றீங்க? என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியாதோ? சும்மா எல்லாம் சொல்லாதீங்க, அதிரா சொன்ன சொல் மீறாத பிள்ளை, அவள் நேரத்துக்குத்தான் வந்திருப்பாள், நீங்கதான் சும்மா சொல்றீங்க” என்றார்....

இதைக் கேட்ட எனக்கு நெஞ்செல்லாம் அடைக்கத் தொடங்கிட்டுது, கடவுளே அப்பா என்னில எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறார், இந்த நம்பிக்கையை எண்டைக்கும் நான் வீணடிச்சிடக்கூடாது, என மனதில் சபதம் எடுத்தேன். ஏனெனில் அப்போதிருந்த வயது சபலமான வயது, பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரம்:).. நாட்டிலும் பிரச்சனையான நேரம்..ஆனால் அப்பாவின் அந்த ஒரு வசனம், என்னை உறுதியான ஒரு பெண்ணாக வளர வழிவகுத்தது.

பின்னர்தான் நான் ஓசிச்சுக் கண்டு பிடிச்சேன், எனக்குக் கேட்கட்டும் என்றுதான் அப்பா அப்படிச் சொல்லியிருப்பார் என. ஏனெனில் எப்பவுமே பிள்ளைகளை ஏசுவதை விட, இப்படிச் சொன்னால் அவர்கள் நல்லபடி வளர இதுவும் ஒரு முறையாம்.

சின்ன வயதிலிருந்தே ஒரே அட்வைஸ் நடக்கும், அப்போ சொல்லித் தருவார், ஆரும் ஏதும் சொன்னாலோ, கிண்டல் பண்ணினாலோ பயந்திடாதே.. உன்னைப் பார்த்து குரங்குபோல இருக்கே என ஒருவர் சொன்னால்கூட... கலங்கிடாதே.. நீ சொன்னால் சொல்லிட்டுப்போ எனக்குத் தெரியும் என்னைப்பற்றி என மனதில நினை... இப்படியான பிரச்சனைகள் வரும்போது மனதில் போட்டுக் குழம்பிடாதே, தூசுபோல தட்டிப்போட்டு உன் வேலையைக் கவனிக்கப்பழகு...

இப்படி அட்வைஸ்கள் நீளும். அப்போ எழுந்து போக முடியாமல் பல்லைக் கடித்தபடி கேட்டுக்கொண்டிருப்போம், ஆனால் அவைகள்தான் எனக்கு மனதில் பல உறுதியையும் எல்லோரோடும் தயங்காமல் பழகும் தன்மையையும் கொடுத்ததெனலாம். ஆண்பிள்ளைகளோடு எப்படிப் பழகுவது என்றெல்லாம் கூச்சப்படாதே, ஆரோடும், பேசினால் பேசு, ஆனா பழகும்போது உனக்கு தெரியவரும், எப்படிப் பட்டவர்கள் என, உன் மனதுக்கு ஏதும் வித்தியாசமாகத் தோன்றினால் உடனேயே கட் பண்ணிடு தொடர்பை, அப்படிக் கற்றுக்கொள், அதை விடுத்து கதைக்காமல் ஒதுங்கிப் போகாதே என்றெல்லாம் சொல்லுவார்ர்...

இப்பவும் தொடருது அட்வைஸ் எனில் பாருங்களன்:)).. இப்போ பிள்ளை வளர்ப்பு பற்றியும், உணவுமுறை பற்றியும் நடக்கும்:).. இன்று கூட சொன்னார், தினமும் 3 மிளகு சப்பிச் சாப்பி்ட்டு தண்ணி குடிச்சால், இருமல், தடிமன் போன்ற வருத்தங்கள் வராதாம், எல்லோரும் அப்படி செய்யுங்கோ என்றார்:).

ஊசிக்குறிப்பு:
தனிப் பதிவுகள் போட்டும், எனக்காக நேரம் ஒதுக்கி கார்ட்ஸ்கள் செய்தும், “எண்ணம் அழகானால்..” குரூப்பிலும் தனிப்பதிவுகள் போட்டும், மற்றும் மனதார என் பிறந்தநாளுக்கு(ஹையோ மீக்கு ஷை ஷையா வருதே:)).. வாழ்த்துக்கள் சொல்லிய அனிவருக்கும்... இதயத்திலிருந்து நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன்ன்ன்...
=============================================
நிழல் பிரிவதில்லைத் தன் உடலை விட்டு, 
அது அழிவதில்லைக் கால் அடிகள் பட்டு...
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால், 
இங்கு நடப்பது நலமாய் நடந்துவிடும்... 
உருக்கத்தோடு சொல்பவர்:) புலாலியூர்ப் பூஸானந்தா:)
=============================================
எனக்கு இன்னும் தமிழ்மணத்தில் வோட் பண்ணக் “கை” வருகுதில்லை, அதனால அதிராவுக்கு வோட் பண்ணோனும் என  “பெரியமனசு” பண்ணி முன் வந்தீங்கன்னா:).. இந்த லிங்கில் போய் வோட் பண்ணுங்கோ.. வோட் பண்ணினால்..  “அகரகர்” கலர்கலரா செய்து தருவனாக்கும்:)
இங்கே கிளிக் செய்யுங்கோ மக்கள்ஸ்
==============================================

Tuesday 19 February 2013

கூகிள்.. கூகிள்.. பண்ணிப்பார்த்தேன்ன்..:)

இந்தப் பிரித்தானியாவில..... 
இவர்போல ஒரு அழகனைக் கண்டதில்லை:)
 இவர்தான் எங்கட வீட்டு புது வரவு.. ஆண்பிள்ளை.. பெயர் ரிமி(Timmy). ஆனா எனக்கு வாயில “நிபி” எண்டுதான் வருது:), (அஞ்சுவின் செல்ல மகனின் பெயர் “நிபி”:)).நிபியைப் பார்க்க இங்க வாங்க..

தன் எக்ஸசைஸ் மெஷினில் ஏறி எக்‌சஷைஸ் செய்கிறார்ர்..:).

கீழே இறங்கத் தெரியாது, ஆனா கடகடவென மேலே ஏறிடுவார்.. ஏறியிருந்து இறங்க முடியாமல் முழிசுறார் பாருங்கோ:).. படியிலும் கடகடவென ஏறிப்போவார், ஆனா கீழே இறங்கி வரமாட்டார்:).

ஹொலிபிளவர் சாப்பிடுகிறார், பக்கத்திலே அவரின் சூப்பி போத்தல்(தண்ணிப்போத்தல்) எக்‌ஷஸைஸ் செய்வார், ஓடிவந்து தண்ணி குடிப்பார், மீண்டும் ஓடிப்போய் செய்வார்.. ஏதோ எக்ஸாமுக்கு ரெயினிங் எடுக்கிறவை மாதிரி:)..
அவருக்கு விடியும் நேரம் .. எங்கட நைட் 8 மணி. அப்பத்தான் எழும்புவார். படுக்கும் நேரம் எங்களி்ன் காலை 7 மணி. இரவிரவாகத்தான் விளையாட்டுக்கள் காட்டுவார். கேஜ்ஜினுள் மெத்தைபோல ஒருவித மரத்தூள் இருக்கு அவருக்கென, அதை அழகாகப் போட்டு பரவி விடுவோம், இரவிரவாக, தும்புத்தடி கொண்டு கூட்டுவதுபோல அழகாகக் கூட்டி, ஒரு மூலையில் மணல்கோபுரம்போல கட்டி, அதில் ஏறிப் புதைந்து கிடந்துதான் நித்திரை கொள்வார்.

இப்படித்தான் எம்மைக் கண்டால், கம்பியில் ஏறி உணவு கேட்பார், கொடுப்பதை எல்லாம், வாயின் அருகில் இருக்கும் பாக் போன்ற பையினுள் கடகடவென போடுவார், அது முட்டியதும், ஓடிப்போய் அவரின் சாப்பிடும் தட்டிலே கொட்டி வைப்பார், மீண்டும் ஓடிவந்து மிகுதியை வாங்குவார்.

ஆனா இவருக்கு வால் இல்லை சிரியன் வகையைச் சேர்ந்த ஹம்ஸ்டர்தான் இவர்:)... குண்டர்:))..

அடுத்து எங்க வீட்டு செல்லங்கள்.. படம் பாருங்கோ.. விளக்கம் தேவைப்படாதென நினைக்கிறேன்ன்..



==============================================
சரி இப்பத்தான் விஷயத்துக்கே வந்திருக்கிறேன்ன்ன்...

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி:).. சுவீட் 16:) ஆட்களும் வோட் பண்ணலாம் என குயின் அம்மம்மா சொல்லிட்டா:),அதனால அதிராவும் எலக்‌ஷனில.. சே..சே... அது டங்கு ஸ்லிப்பாச்சு:).... தமிழ்மணத்தில இணைஞ்சிட்டா.. அல்லோரும் அதிராவுக்கு ஓட்டுப் போட வாங்கோ.. இப்பத்தான் தமிழ்மணம் பற்றியும் வோட் பண்ணுவது பற்றியும் அறிந்துகொண்டு வருகிறேன்ன்... இனி நானும் உங்களிடம் வோட் பண்ணும் அட்டை இருப்பின் உங்களுக்காகவும் வோட் பண்ணுவேன்ன்..என்பதனை இந்த தேம்ஸ்நதித் தண்ணிமீது அடித்து சொல்லிக்கொள்கிறேன்ன்ன்:).

 ஊசிக்குறிப்பு:. என்னிடம் மைனஸ் வோட் பண்ணும் அடையாளம் இல்லையாக்கும்:) அதனால எல்லா வோட்டும் பிளஸ்ஸுக்கே :)..

பின் ஊசி இணைப்பு:
ஓடி வாங்கோ சுவீட் எடுங்கோ...
நோஓஓஓஓ இடிபட்டிடப்பூடா, முதல்ல உங்கட சின்ன விரலைக் காட்டுங்கோ:), சின்னி விரலில் மை இருந்தால்தான் சுவீட் தருவேன்ன்:).. அதாவது வோட்டுப் போட்டால் சின்னி விரலில் மை போடுவினமெல்லோ:)).. அதுதான்.. விரலைக் காட்டிட்டு சுவீட் எடுங்கோ:).
===========================================
வாழ்க்கையின் அழகான பகுதியை நேசிக்கப் பயில வேண்டும். 

எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொள்ளல் வேண்டும்.
சுவாமி விவேகானந்தரிடமிருந்து இதனை, புத்திசாலித்தனமாக களவெடுத்து வந்தவர்:):- புலாலியூர் பூஸானந்தா:).
======================================================


Saturday 16 February 2013

ஆவ்வ் பிறந்திட்டுதூஊஊஊஊஊ:)

சுகப் பிரசவம் தான்ன்ன்ன்:)..
பெயர் வச்சது, மீயும் என் கணவரும் சேர்ந்து, கலந்து, கதைச்சுத்தான்:).

பிறந்தது 16.02.2009. இன்று நான்காவது பிறந்ததினம்..
ல்லோரும் வாங்கோ வாழ்த்துங்கோ.. அதுக்கு முன்னம்.. மொய்ய்ய்ய்ய் ஐ வாசல்லயே எழுதிடுங்கோ:).. பரிசின்(மொய்யின்:)) தகுதிக்கேற்ப்ப.. பல்கனியா:), கலரியோ:), என சீட் நம்பர் கையில் கொடுக்கப்படும்:) அதற்குரிய இருக்கைகளில் அமர்ந்து, கேக் வெட்டும் காட்சியை கண்குளிரக் கண்டுகளியுங்கோ:).

கேக் வெட்டமுன் வானிலை அறிக்கை வாசிக்கப்படும்:), ஏனென்டால் வெளிநாடுகளில் காலநிலை அறிக்கைதான் முக்கியம்:).. இங்கு ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது... ஹலோ!!! ஹவ் ஆ  யூ?.. என்பதுக்கு அடுத்து வரும் வசனம், வெதர் பற்றியதாகத்தான் இருக்கும்..

முன்பின் அறிமுகமில்லாத ஒருவர்கூட எதிருக்கெதிர் சந்திக்க நேரின், நைஸ் வெதர், வொண்டபுல் வெதர், லவ்லி வெதர்.. இப்படி ஏதும் சொல்லிட்டுப் போவினம்.. அதுதான் இங்கத்தைய ஒரு நாகரீகமான உரையாடல்.

அதனாலதான் இப்பிறந்தநாளில்.. மீயும் வெதர்பற்றி வாசிக்கிறனாக்கும்:)).

வானிலை அறிக்கை...
வாசிப்பவர்: .. புலாலியூர் பூஸானந்தா..


மூன்று வாரமாக
மேகம் கர்ப்படைந்திருந்தது!
அக் கர்ப்பத்துக்கு காரணம்
சூரியன் தான், எனக் கூறி..
முகிலினங்கள் கர்த்தால் நடத்தின!
அதனானல் பூமிக்கு
சூரியன் தென்படவில்லை...

தைக் கேட்டு
மனமுடைந்த மேகம்..
தன் கர்ப்பத்துக்கு காரணம்
சூரியன் அல்ல எனவும்
இதனால் அப்பாவிப்
பூமியைத் தண்டிக்க வேண்டாம்
எனவும் அறிக்கைகள் விட்டது..!

தையும் ஏற்காமல் தொடர்ந்தும்
வழியடைப்புச் செய்தன முகில்கள்..
இதுக்கொரு தீர்வு காண வேண்டி..
மேகம் தன் கருவைக்
கலைக்க முடிவெடுத்தது..!

தனால் கடுமையாக
உடலைக் குலுக்கியது..
காற்றின் வெப்பநிலையைக்
குறைத்தது....!

ர்ப்பம் ஈடாட்டம் கண்டது..
அதன் வெற்றியாக
இன்று ஸ்நோத் தூறல்கள்
விழ ஆரம்பித்தன..
இது நீடித்து..

ரும் வெள்ளிக்கிழமை
அதிக ஸ்நோவோடு
மேகத்தின் கர்ப்பம்

முழுவதும் கலைக்கப்படுமென
எதிர்ப்பார்க்கப் படுகிறது :)..

இது போனமாதம் இங்கத்தைய வானிலை அறிக்கையை கேட்டவுடன், அதிரடியாக என் மனதில் உதித்த கவிதை, ஏற்கனவே சிலருக்கு இது தெரியும்.. இருப்பினும்..:))..

ஓ நாங்க படிச்சிட்டமே எனச் சொல்லிட்டு ஓடாமல்.. ஆஹா.. ஓஹோ சூப்பர்ர்.. வைரமுத்து அங்கிளையே மிஞ்சிட்டீங்க:)எண்டெல்லாம் புகழ்ந்து சொல்லோணும் சொல்லிட்டேன்ன்ன்... பாருங்கோ:))

இல்லாட்டில் பட்டினைத் தட்டிடுவேன்ன்ன்:)) எங்கிட்டயேவா?:).
==============================================

ஊசிக்குறிப்பு:
புளொக் எப்ப ஆரம்பித்தேன் என்பதே எனக்கு மறந்துபோயிருந்தது, ஒருதடவைகூட இதை நினைவு கூர்ந்ததில்லை இதுவரை. இம்முறை புளொக்கை அழகாக வடிவமைக்கும்போது, மணிதான் நினைவு படுத்தினார்.. 4ஆம் ஆண்டு நிறைவு வருகிறதே என, அதனால்தான் இந்த திடீர் கேக் கட்டிங்:).. நன்றி மணி.
===============================================
 “வாழ்க்கையில் பயம் இருக்கோணும் - ஆனால்
வாழ்க்கையே பயம் ஆகிடக்கூடாது”...
இப்படிக்கு புலாலியூர் பூஸானந்தா:)
===============================================

Wednesday 13 February 2013

வகுப்புக்கள் ஆரம்பம்!!!

                                                  பறந்தாலும்.. விடமாட்டேஏஏஏஏஏன்ன்ன்ன்:))
ஆஹா அதிராவும் ஏதோ ஆரம்பிச்சிட்டா என ஓடி வந்திருப்பீங்க:).. அது வேறொன்றுமில்லை, இன்ரநெட்டில கனபேர், நிறைய உழைக்கினமாம்:).. அதேன்ன் மீயும் புறப்பட்டு விட்டேன்ன்ன்ன்.. எங்கேயோ? உழைக்கத்தான்:).

சரி என்ன வகுப்பு என ஓசிப்பீங்கள், உங்கட கிட்னியால ஓசிச்சு அதைப் பழுதாக்கிடாதையுங்கோ பத்திரமா வச்சிருங்கோ..:) நான் சொல்றன்.

வகுப்பு:  குயில் கார்ட் எப்பூடிச் செய்வது?:) .

ஆசிரியர்:  பல வருடங்கள், வெரி சொறி டங்கு ஸ்லிப்பாச்ச்ச்:) பல நாட்கள் இதில் அனுபவம் வாய்ந்த:), மிகவும் பொறுமையுள்ள:)(அஞ்சு நோட் திஸ் பொயிண்ட்:)), ஸ்டெப் பை ஸ்டெப்பாகச் சொல்லித்தரும் பக்குவமுடைய:), மிகவும் கண்டிப்பான:), கண்ணியமான:), பிரித்தானியாவில் பிரபல்யமாகிவிட்ட:) (குயில் வேர்க்கிலதான்:).. சுவீட் சிக்ஸ்டீனில் இருக்கும்... பெருமதிப்பிற்குரிய அதிரா றீச்சர்...:)...

ஆரம்பம் : ஆரம்பமாகிவிட்டது.....

ஃபீஸ் : இது முக்கியமான விடயம்.. இதைப் பார்க்க(படிக்க) முன், ஃபீஸை, என் எக்கவுண்டில் சேர்த்திடோணும்:)..

சரி சரி கதைக்காமல் முதலாவது அத்தியாயம் படியுங்கோ மீ ரொம்ப ரயேட்.. ஒரு ரீ குடிச்சிட்டு வாறன்:)...

இரண்டாவது அத்தியாயம்.. ஸ்ஸ்ஸ்ஸ் வாய் திறக்கப்பூடாது, தலையைக் குனிஞ்சுகொண்டு கை மட்டும் வேலை செய்யோணும்.. எனக்கு ஒரு முக்கியமான ஃபோன் கோல் அட்டன் பண்ணோனும் பண்ணிட்டு வாறன்:)


ஆஆஆஆஆங்ங்ங்ங் எப்பூடி???  அழகா வந்திட்டுதெல்லே?..

அவ்வ்வ்வ் முதலாவது கார்ட்டே.. றீச்சருக்கு தாறீங்கள் தங்கூசொல்லி... ஆஆ ஆஆஆஆ... புல்லாஆஆஆஆஆஆ அரிச்சுட்டன் மீ:)

சரி சரி அடுத்த வகுப்பில அன்னம் செய்வது எப்பூடி எனப் படிப்பம்.. ஏனெண்டால்ல்ல்.. அன்னம்போல வாழப்பழகு என எப்பவுமே அம்மம்மா சொல்லுவா:).. அதாவது நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை கவனிக்காமல் காக்கா போகப் பழகோணுமாம்.... ட்றிங் ..ட்றிங்..  ட்றிங்... மணி அடிச்சு, வகுப்பு முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்.. நன்றி வணக்கம்!!:).

பின் இணைப்பு:
இது இன்று காலை அதிராவைத்தேடி வந்த ஸ்னோ... சுடச்சுட போடுகிறேன்ன்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. சுடுதூஊஊஊஊஊஊ:)..

====================================
14 Feb.. 2013.
pin child
பேபி அதிரா கொட்டிப்போடாமல் வச்சிருக்கோணும்:)
=========================================
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் 
இறுதி வரைக்கும் அதிரா இருப்பா:).. 
ச்ச்சேஏஏஏஏ டங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்:) அமைதி இருக்கும்..
=========================================

Tuesday 12 February 2013

ஜெல்ப்!!... ஜெல்ப்!!!.. :)


No..No... No Problem :) எனக்கு நோகல்ல:) நீங்க எப்பூடியாவது பிடிச்சிடுங்க:), பாபகியூ மெஷினை ஓன் பண்ணிட்டேன்:). நாங்க எப்பவுமே இப்பூடியான உதவிக்கு, பின் நிற்கமாட்டோம் :)

ன்னாது தலைப்பு பார்த்து என்னமோ ஏதோ ஆகிட்டுது அதிராவுக்கு, என நினைச்சிருப்பீங்களே?:) ஆ.. எண்டாலும்.. ஊ எண்டாலும் அதிராவுக்கு என்னமோ ஆகிட்டுது என நினைப்பதே புழைப்பாப் போச்ச்ச்ச்:)).. சரி சரி அதிகம் பேசினால் சொல்ல வந்த விஷயத்தை மறந்திடுவேன்ன்:).. அதனால சுருக்கமா...  அவ்வைப்பாட்டியின்:) “திருக்குறள்” போல:).. சொல்லிடுறேன்ன்ன்.. அதாவது..
உதவி
ந்த “ஜெல்ப்” பற்றி நிறையச் சொல்லோணும் என நீண்ட நாளா ஒரு கனவு, சமீபத்தில பூஸ் ரேடியோவில போய்ச்சுதா... அதைக் கேட்டு வச்சேன், ஆனா முழுவதும் மைண்டில ஏத்த முடியாமல் போச்ச்ச்:) அதனால சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லிடுறேன்.

லகத்தில எங்கு பார்த்தாலும் எல்லோருமே “உதவி” செய்யோணும் என்றுதான் சொல்கிறார்கள்.அது உண்மைதான், செய்யத்தான் வேண்டும், ஆனால் நான் அறிந்து, வள்ளுவர் காலம் தொடங்கி, கண்ணதாசன் உள்பட, இந்த உதவிக்கு கூட ஒரு “வரையறை” சொல்லியிருக்கிறார்கள்.

ம்மில்(மனிதரில்) பலவகையினர் இருக்கிறார்கள், அதாவது சிலர் உதவியே செய்ய மாட்டார்கள், சிலர் தம் தகுதியைப் பொறுத்துச் செய்வார்கள், சிலர் தம் தகுதியையும் மீறிச் செய்வார்கள், கேளாமலே செய்வோர், கேட்டுச் செய்வோர் இப்படி பலவகையில் உதவி செய்வோர் உண்டு.

தேபோல, தன்னைவிட, தன் குடும்பத்தை விட, அடுத்தவருக்காகவே பாடுபட்டு, அவர்களை முன்னேற்றி விட்டு, பின்னர் தம்மால் படியேறி முன்னேறியோர்... திரும்பியும் பார்க்காமல், ஒரு பேச்சுக்குக்கூட, இவரால்தான் நான் இந் நிலைமைக்கு வந்தேன் என ஒரு வார்த்தை கூறவில்லையே என, மனம் வருந்தி, உதவி செய்யும் எண்ணத்தையே கைவிட்டோரும் உண்டு.

ங்கட “கண்ணதாசன்” என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமோ? “உதவி செய்யவேண்டும் என்பதற்காக, எல்லோருக்கும் செய்யாதீர்கள், யாருக்குச் செய்கிறோம் என்பதும் முக்கியம்”.

து உண்மையேதான், சிலர் இருக்கிறார்கள் எப்பவுமே ஆருக்காவது உதவி செய்யவேணும் என்பதிலேயே தீவிரமாக இருப்பார்கள், ஆனால் அந்த உதவியால், நன்மை நடக்கிறதா? தீமை நடக்கிறதா என்பதைத் தீர்மானிக்கத் தவறிவிடுவர்.

ப்போ ஒரு குடிகாரர் வந்து, “வீட்டிலே மனைவி பிள்ளைகள் உணவில்லாமல் இருக்கிறார்கள், உதவி செய்யுங்கள்” எனப் பணம் கேட்டால்,  உடனே இரக்கப்பட்டுத் தூக்கிக் கொடுத்திட்டால், அவர் அதில் மீண்டும் குடிக்கத்தான் செய்வார். அப்படி உதவ எண்ணினால், அவரின் குடும்பத்தை வரவழைத்து நேரடியாக உதவலாம்.

தேபோல, பாவமே  என உதவி செய்யப்போய், 4 வார்த்தை ஆறுதலாகச் சொன்னால்...  அதைத் தப்பாகப் புரிந்து, லெவல்பட்டு, ஏளனமாகப் பார்ப்போரும் உண்டு. அல்லது உதவப் போனவரே,   “பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுமளவுக்கு”.. அதிக உதவி எதிர்பார்த்துத் தொல்லை கொடுப்போரும் உண்டு.

தைத்தான் அன்று  “வள்ளுவர்”, திருக்குறளில் சொல்லியிருக்கிறார்..
“ஒருவரின் பண்பறிந்தே உதவுங்கள்” என.

ஊசி இணைப்பு:)
ஆனாப் பாருங்கோ ஆர் என்ன சொன்னாலும் சரி, நாம உதவி செய்யுறது செய்யுறதுதான்:).. ஆனா பலனை எதிர்பார்க்கப்பூடா:)..  எம்மிடம் உதவி பெற்றவரேதான் திரும்ப எமக்குச் செய்வார் என எதிர்பார்ப்பது தப்பு. நாம் நல்லது செய்தால் அது என்றைக்குமே வீணாகாது, வேறொருவர் வடிவில் அப்பலன் எமக்கு கிடைத்தே தீரும்... இப்படிக்கு புலாலியூர் பூஸானந்தா :)

பின் இணைப்பு:
என் பக்கம் பார்த்திருப்பீங்களே!! பளபளா என கலர்ஃபுல்லா  “மாத்தி”யாச்செல்லோ:)....  அதை அழகாக வடிவமைத்துத் தந்தவர் வேறு யாருமல்ல “மணி” தான். அதுக்கு நன்றியைப் பப்ளிக்கில் சொன்னால்தான் நல்லதென என் மனம் எண்ணியது, அதுதான் சொல்கிறேன்ன்.. மியாவும் நன்றி மணி. 

இன்னுமொன்று, தமிழ் மணம்பற்றி எனக்கு பெரிசாக ஏதும் தெரியாது, அதிலுள்ள நன்மைகளைச் சொல்லி, எனக்கு அதில் இணையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திய பெருமை அவரையே சாரும். நான் இணைந்ததும், இப்போ எனக்கொரு ஆசை, இங்கு, இதுவரை இணையாமல் இருப்போரும் இணைய வேண்டும் என. அதனால் அதனைக் குறிப்பிட்டேன் போன பதிவின் பின்னூட்டத்தில், அதுக்கு எப்படி இணைவது, அதனால் என்ன நன்மை எண்டெல்லாம் “இளமதிக்கு” டவுட்டுகள் வந்திச்சா:)... அதனால என் கிட்னியில் ஒரு எண்ணம் உதிச்சுது, அதை ஒரு பதிவாகப் போடும்படி மணியிடம் கேட்டால் என்ன என.

அதுதான் மணி, உங்களுக்கு நேரமிருப்பின், அதுபற்றி விரிவான ஒரு பதிவு போட்டுவிடுங்கோவன். ஆர்வம் இருப்போர் எல்லோரும் இணைய அது உதவியாக இருக்கும்.

பொயிங்கல் குறிப்பு:
உங்களுக்கொரு புறுணம் தெரியுமோ?  ஒவ்வொரு நாட்டிலும் எந்த எந்த சைட்ஸ் முன்னுரிமை வகிக்குது எனக் கண்டு பிடிக்கவும் ஒரு வெப்சைட் இருக்கு... அதுக்குப் பெயர். Alexa.

 என் புளொக் புளொக்ஸ்பொட்.com தானே? அஞ்சுவோடதும் அதுதான். அப்போ, உந்த அலெக்ஸ்ஸாவில தேடினேன்.. 

இலங்கையில் புளொக்ஸ்பொட் டொட் கொம் எத்தனையாவது இடத்தில இருக்கென, அது ஐந்தாவது இடத்தில இருக்கு.

Top Sites in Sri Lanka

 இந்தியாவில தேடினேன் அது 6 ஆவது இடத்தில இருக்கு.

Top Sites in India

பிரித்தானியாவில தேடினேன்ன்.. நான் மயங்கி விழாத குறை:) ஏன் தெரியுமோ? 13 ஆவது இடத்தில இருந்திச்சா:))...

Top Sites in United Kingdom 

அதைப் பார்த்ததும், எனக்கு உடனேயே புரிஞ்சுபோச்சு:).. இவ்ளோ பின்னுக்குப் போனதன் காரணம், கொஞ்சக்காலமா நான் ஒழுங்காக பதிவெழுதாததுதான் என:).. ஹையோ ஏன் முறைக்கிறீங்க:).... என்னோடு சேர்ந்து அஞ்சுவும் விட்டிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதனாலதான் கீழ கீழ போயிட்டிருக்கு... அதைப் பார்த்ததும்தான் நான் “பொயிங்கிட்டேன்” சுனாமியா:).. இனி, வாரம் 4 பதிவுகளை என்னிடம் இருந்து எதிர்பாருங்கோ:)) மீக்கும்....  சூடு, சுரணை, ரோஷம், மானம் இருக்காக்கும்..க்கும்..க்கும்:)... புளொக்ஸ்பொட் டொட் கொம்மை மேலே ஏத்தாமல் ஓயமாட்டேன்ன்ன்ன்:)).
நன்றி!! வணக்கம்!!!!.
_____( )____