நல்வரவு_()_


Tuesday 20 October 2009

தத்துவ முத்துக்கள் தொகுப்பு -2

1)நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?, நினைப்பவ்ந்தான் நீ, முடிப்பவன் அவன்(இறைவன்).

2)நித்திரை கொள்பவனை எழுப்பலாம், ஆனால் நித்திரை போல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது.

3)மல்லிகை புதரில் பூத்தாலும், அதன் மணம் வெளியே பரவாது விட்டுவிடுமா?

4)சுட்டுவிரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில், மற்றும் மூன்று விரல்களும் உங்கள் மார்பினைத்தான் காட்டுகிறது.

5)விளக்கு எரிவதற்காக வெந்து கருகிப்போகிற திரிமாதிரி, சிலர் தங்கள் வாழ்க்கையைத் திரியாக்கிக் கொள்கிறார்கள், "திரி இல்லாதுவிட்டால் தீபம் ஏது?".

6)ஆடையைப் பார்த்து எடை போடாதீர்கள், சேற்றிலேதான் செந்தாமரை மலர்கிறது.

7)ஆலயமுன்றலில் பாடக்கூடாத பாடல்கள், யார் அதைக் கவனிக்கிறார்கள்?, கடவுளை வணங்க வைப்பதற்குக்கூட, எதையாவது காட்டித்தானே மக்களை அழைக்க வேண்டி இருக்கிறது.

8)பாலைப்போல கள்ளும் உண்டு, நிறத்தாலே இரண்டும் ஒன்று.

9)குப்பைகளை நாடிச் செல்லும் கோழிகளை எத்தனை நாள் கூட்டில் வைத்துக் காக்க முடியும்?

10)முகத்தில் சுருக்கங்கள் விழலாம், ஆனால் இதயத்தில் விழக்கூடாது.