பாகம் ஒன்றிலிருந்து தொடர்கிறது... முதலாவது பாகம் படிக்க.. கையை இங்க வைங்க:)
யார் என்னதான் சொன்னாலும், காலம் இப்போ எவ்வளவோ முன்னேறிவிட்டதே என ஊடகங்களில், மீடியாக்களில் புலம்பினாலும், ஒரு பெண்ணுக்கு விலைமதிக்க முடியாத சொத்தெனில் அது அவளுடைய கற்புத்தான். அதைக்கூட நான் விரும்பிய போதெல்லாம் விட்டுத் தந்தாயே வைதேகி. என்னை ஒரு காதலனாக எண்ணாமல், கணவனாக எண்ணி, முழு நம்பிக்கையோடு வாழத் தொடங்கினாய்.
“ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும் என்பார்கள்” அது உண்மையேதான், அந்த நூலாகிய என்னை, நூறு வீதத்துக்கும் மேலாக நம்பியமையால், நுழைய இடம் கொடுத்தாய். ஆனால் என் இளரத்தம், உன்னை மதிக்கத் தவறினேன். என் நட்புக்கே முன்னுரிமை அளித்தேன். ஆனாலும் எப்பவுமே உன்னில் எந்த மாறுதலையும் நான் கண்டதில்லை, எப்பவும் ஒரே மாதிரித்தான் நீ இருந்தாய்.
எம் மூன்று வருடக் காதலில் ஒருநாள் நீ சொன்னாய், “என் உடம்பில் ஏதோ மாற்றம் தெரிகிறது, எனக்குப் பயமாக இருக்கிறது, வாருங்கள் சேஜ்க்குப் போய் மோதிரம் மாத்திடலாம், பதிவுத் திருமணம் செய்திடலாம் என. அப்ப கூட நண்பர்கள்தான் எனக்குப் பெரிதாகத் தெரிந்தர்கள், திருமணம் பற்றி யோசிக்க முன்னமே, நண்பர்களோடு சேர்ந்து நடாத்திய சண்டையில், தவறுதலாக பொதுமகன் ஒருவர் இறக்க, குற்றம் செய்யாத என்னில் பழி வந்து விழுந்தது.
நான் “கொலைக் குற்றவாளி” எனும் பெயரில் கைது செய்யப்பட்டு உடனேயே பாதாள சிறையில் அடைக்கப்பட்டேன். அதை அறிந்து நீ, எப்படித் துடித்திருப்பாய் வைதேகி.
எனக்குக் காச்சல்க்குணமாக, தடிமன்குணமாக இருக்கு எனச் சொன்னாலே.. பத்துத் தரம் விசாரிப்பாய், சூப் செய்து எடுத்து வந்து ஊட்டி விடுவாய், தைலம் பூசி விடுவாய், அப்படிப்பட்ட நீ, இதை எப்படித் தாங்கியிருப்பாய்?.
எனக்குத் தெரியும் நீ என்னை நம்புவாய். நான் கத்துவேன், கூப்பாடு போடுவேன், கோபிப்பேன், ஆனால் கொலை செய்யுமளவுக்குத் துணிய மாட்டேன், அந்தளவு தூரம் கெட்டவனுமல்ல, அவை எல்லாம் உதட்டிலிருந்து உருவாபவையே தவிர உள்ளத்திலிருந்தல்ல என்பது உனக்கு மட்டும் நன்கு தெரியும். என் பெற்றோரைவிட, சகோதரத்தை விட, என் நண்பர்களையும் காட்டிலும் என்னைப் புரிந்து கொண்டவளும், என் மீது தூய அன்பைக் காட்டியவளும் நீதான். நான்தான் அதைக் காலம் தாழ்த்தி உணர்ந்திருக்கிறேன் வைதேகி.
நான் “பயங்கரக் கொலையாளி” யாம், அதனால் வெளித்தொடர்பேதும் இருக்கப் படாதென, யாரையாவது சந்திப்பதையோ அல்லது கடிதத் தொடர்பு வைப்பதையோ தடுத்து விட்டர்கள் வைதேகி, இறுதியாக அன்று, உன்னோடு ஒரு வசனமாவது பேச விடும்படி ஆசைப்பட்டுக் கெஞ்சிக் கேட்டேன், ஆனால் மறுத்து விட்டார்கள் வைதேகி.
ஆரம்பம் நான் சிறைவைக்கப் பட்டிருந்த ஒரு ஜெயிலில், கடைசியும் முதலுமான உன் ஒரு காதல் மடல் என் கைக்குக் கிடைத்தது, அந்த ஜெயிலர் மிகவும் நல்லவர் என்பதனால் என்னிடம் தந்தார். அதில் நீ எனக்காகக் காத்திருப்பதாகவும், நமக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாகவும் எழுதியிருந்தாய்.. சாந்து.. சாந்து என, நீ அன்பைக் கொட்டி எழுதியிருந்த மடல் பார்த்து நான் துடித்துப் போய் விட்டேன் வைதேகி... இப்பகூட அதை என்னுடனேயே வைத்திருக்கிறேன்ன்.. அதை தினமும் அடிக்கடி படிப்பதுதான் என் சந்தோசம், பொழுதுபொக்கு, மன அமைதி எல்லாமே.
உனக்கு, என் மனைவி எனும் அஸ்தத்தைத் தரமுன்னமே கைது செய்துவிட்டார்களே வைதேகி. இப்போ நம் மகனுக்கு 11 வயதாகியிருக்கும், நன்கு வளர்ந்திருப்பான், உன்னைப்போலவா இல்ல என்னைப்போலவா இருப்பான்?.
எனக்குத் தெரியும், நீ எப்பவுமே என்னைக் குறை கூற மாட்டாய், அடுத்தவர் கூறினாலே சண்டைக்குப் போவாய், அப்படிப்பட்ட நீ, என்னை ஒரு நல்லவராகவே நம் மகனுக்கு ஊட்டி வளர்த்திருப்பாய். நான் நிரபராதி வைதேகி, அது உனக்கு நன்கு தெரியும்.
இந்தப் 12 வருட ஜெயில் வாழ்க்கையில், நீ கொட்டிய அன்பையும் கூறிய தத்துவங்களையும் மட்டுமே இரைமீட்டிக் காலத்தைக் கடத்தி இருக்கிறேன். உன் அன்பு எனக்குக் கிடைத்திராவிட்டால் நான் என்றோ காணாமல் போயிருப்பேன் வைதேகி.
நாளைக்கு நாம் சந்திக்கப் போகிறோம், “நீ என்னைத் திட்டுவாயா வைதேகி?”, இல்லை நிட்சயமாக என்னைத் திட்ட மாட்டாய், உனக்குத் திட்டத் தெரியாது. இறைவன் எனக்காக அனுப்பிய ஒரு தேவதையாகத்தான் பார்க்கிறேன் உன்னை இப்போ.
திருமணமாகாமலே கையில் ஒரு கைக் குழந்தையையும் தந்துவிட்டு வந்தேனே..இந்தப் 12 பாலைவன வருடங்களையும், எப்படி நீ கடந்திருப்பாய்? ஊராரின் வசை மொழிகளை எல்லாம் எப்படித் தாங்கியிருப்பாய்?. நான் முடிவெடுத்திட்டேன் வைதேகி, நாளைமுதல், உனக்காகவும் நம் மகனுக்காகவுமே வாழப் போகிறேன்.
இனி நான் பேச மாட்டேன், உன்னையே பேசவிட்டு, 24 மணி நேரமும் உன் பேச்சையே கேட்டு மகிழப் போகிறேன். நான் இப்பொழுது பழைய “சாந்தன்” அல்ல.. மூலஸ்தானத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும், நீ நம்பிய, நீ எதிர்பார்த்த உன் “சாந்து” வாகத்தான் வெளியே வரப்போகிறேன்.
இந்த ஜெயில் வாழ்க்கையில் உன்னை நினைக்காத நேரமில்லை, நிறையவே உன்னை மிஸ் பண்ணிவிட்டேன். ஒருவேளை, இப்படி ஒரு பழி என்னில் விழுந்திராவிட்டால், உனை நான் புரிந்து கொள்ளாமலே போயிருப்பேனோ என்னவோ?, இப்பிரிவின் மூலம் உன்னை நான் நிறையவே புரிந்து கொண்டேன்.
என்னை அழைத்துச் செல்ல, நாளைக்கு நீயும் மகனும் வருவதாகச் சொன்னார்கள், அந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், உனக்கு தூக்குவதுதானே ரொம்பப் பிடிக்கும், நாளை உன்னைப் பார்த்ததும் தூக்கப் போகிறேன், அதை நம் மகன் வெட்கத்தோடு பார்க்கப் போகிறான்.
நிஜமாகவே என்னை விரும்பிய “நீ ஒரு லூஸுதான், எனக்கு மட்டும் நீ லூஸுப் பெண்தான்”
நாளையிண்டைய தீபாவளிதான் நமக்கு “தலைத் தீபாவளி”
இந்தப் 12 வருட ஜெயில் வாழ்க்கையில், நீ கொட்டிய அன்பையும் கூறிய தத்துவங்களையும் மட்டுமே இரைமீட்டிக் காலத்தைக் கடத்தி இருக்கிறேன். உன் அன்பு எனக்குக் கிடைத்திராவிட்டால் நான் என்றோ காணாமல் போயிருப்பேன் வைதேகி.
நாளைக்கு நாம் சந்திக்கப் போகிறோம், “நீ என்னைத் திட்டுவாயா வைதேகி?”, இல்லை நிட்சயமாக என்னைத் திட்ட மாட்டாய், உனக்குத் திட்டத் தெரியாது. இறைவன் எனக்காக அனுப்பிய ஒரு தேவதையாகத்தான் பார்க்கிறேன் உன்னை இப்போ.
திருமணமாகாமலே கையில் ஒரு கைக் குழந்தையையும் தந்துவிட்டு வந்தேனே..இந்தப் 12 பாலைவன வருடங்களையும், எப்படி நீ கடந்திருப்பாய்? ஊராரின் வசை மொழிகளை எல்லாம் எப்படித் தாங்கியிருப்பாய்?. நான் முடிவெடுத்திட்டேன் வைதேகி, நாளைமுதல், உனக்காகவும் நம் மகனுக்காகவுமே வாழப் போகிறேன்.
இனி நான் பேச மாட்டேன், உன்னையே பேசவிட்டு, 24 மணி நேரமும் உன் பேச்சையே கேட்டு மகிழப் போகிறேன். நான் இப்பொழுது பழைய “சாந்தன்” அல்ல.. மூலஸ்தானத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும், நீ நம்பிய, நீ எதிர்பார்த்த உன் “சாந்து” வாகத்தான் வெளியே வரப்போகிறேன்.
இந்த ஜெயில் வாழ்க்கையில் உன்னை நினைக்காத நேரமில்லை, நிறையவே உன்னை மிஸ் பண்ணிவிட்டேன். ஒருவேளை, இப்படி ஒரு பழி என்னில் விழுந்திராவிட்டால், உனை நான் புரிந்து கொள்ளாமலே போயிருப்பேனோ என்னவோ?, இப்பிரிவின் மூலம் உன்னை நான் நிறையவே புரிந்து கொண்டேன்.
என்னை அழைத்துச் செல்ல, நாளைக்கு நீயும் மகனும் வருவதாகச் சொன்னார்கள், அந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், உனக்கு தூக்குவதுதானே ரொம்பப் பிடிக்கும், நாளை உன்னைப் பார்த்ததும் தூக்கப் போகிறேன், அதை நம் மகன் வெட்கத்தோடு பார்க்கப் போகிறான்.
நிஜமாகவே என்னை விரும்பிய “நீ ஒரு லூஸுதான், எனக்கு மட்டும் நீ லூஸுப் பெண்தான்”
நாளையிண்டைய தீபாவளிதான் நமக்கு “தலைத் தீபாவளி”
அனைத்தும், அதிராவின் “சொந்தக் கிட்னியில்” உருவான கற்பனையே:...
====================================
காதல் என்றால்
தெய்வம் கூட மறுப்பதில்லையே
அது, வேதம் தெரிந்த குருவைக் கூட
விடுவதில்லையே
சொன்னவர் நம்மட கண்ணதாசன்
==============================================
|
|
Tweet |
|
|||



