நல்வரவு_()_


Friday 28 December 2018

நம் எனர்ஜி லெவல்:)

(1)
ந்த நம்முடைய எனர்ஜி லெவல் பற்றி, பல பல விசயங்கள்.. அனுபவங்களாகவும், கேட்டதும் அறிஞ்சதும் தெரிந்ததுமாக பல விசயங்கள் இருந்தாலும், போஸ்ட்டாகப் போடலாமே எனும் எண்ணம் தோன்றியதில்லை, ஆனா அடிக்கடி டெய்சிப் பிள்ளைக்கு இப்படிச் செய்வேன், இருப்பினும் சமீபத்தில் டக்கென நினைச்சேனா, உடனே போஸ்ட்டில் எழுதும் ஆசை வந்துது.
(2)

அதாவது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு எனர்ஜி இருக்குதுதானே, அது அனைவருக்கும் மாறுபடும்.. இந்த எனர்ஜி தான் நம்மை வெளிக்கொணர உதவுகிறது, அதாவது நல்லவராகவும் மாற்றும், தீயவராகவும் மாற்றும், கெட்ட செயல்கள் செய்யத் தூண்டும்.. இப்படி.

(3)

முதலில் கணவன் மனைவியிலிருந்து ஆரம்பித்தால், இருவருக்கும் எனர்ஜி லெவல் சேம் எனில் பிரச்சனை இல்லாமல் வண்டில் ஓடும்:).. ஆனா பொதுவாக ஆண்கள் வேலைக்குப் போய் வருவதனால் அவர்களின் எனர்ஜி செலவழிக்கப்படும், பெண்ணும் அதேபோல வேர்க் பண்ணுபவராயின் ஓகே, ஆனா பெண் வீட்டிலிருப்பவவாயின்... அதிலும் அவவின் எனர்ஜி லெவல் அதிகமாகவும் இருக்கும் இடத்து....

அவவின் எனர்ஜியை எவ்வழியிலாவது செலவழிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்... இப்போ நம்மைப்போல புளொக் எழுதி... கொமெண்ட்ஸ் போட்டு, இல்லை சிலர் விதம் விதமாக சமைப்பார்கள், கைவேலை செய்வது, கார்டினிங், வீட்டை அலங்கரிப்பது, இப்படி எதுவாயினும் ஒரு வழியில் பெண்கள் ஈடுபடும்போது, தேவையில்லாத பிரச்சனைகள் தவிர்க்கப்படும்... அதாவது அவர்களின் எனர்ஜி.. இவ்வழியில் செலவழிக்கப்பட்டுவிடும்.

ஹா ஹா ஹா மன்னிச்சுக்கோங்க, இம்முறை அதிக ஆசையா இருந்தமையால இரண்டு ஆங்கில கோட்ஸ் போடுறேன்ன்:))
(4)


எங்காவது பெட்டி வைத்தால் போதும், உடனே அதனுள் இறங்கி 
இடம் பிடிச்சிடுவா:) கர்ர்ர்ர்ர்:)))
(5)

ஆனா இப்படி எதுவும் செய்யாமல் பொழுது போகவில்லையே என இருப்போர்தான் அதிகமாக வீண் வம்புகளில் சிக்கல்களில் மாட்டி தம் எனர்ஜியை தப்பான வழியில் செலவழித்து விடுகின்றனர். இதனால வீட்டிலிருப்போரை, எப்பவும் அடக்கி வைத்திருக்க நினைக்கக்கூடாது, அவர்களின் எனர்ஜி நல்ல வழியில் செலவழிவதற்கு நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும். அதையும் தாண்டி தப்புப் பாதையில் போவோரை ஒண்ணும் பண்ண முடியாது:)..

அதேபோலத்தான் ஆண்களிலும் ஓவர் எனர்ஜி உள்ளோர், வேலை முடிந்த பின்பும்.. எப்பவும் ஓடி ஆடி அங்கு போக வேண்டும், இங்கு போக வேண்டும் என அமளிப்படுவோரும் இருக்கிறார்கள், அதுக்கேற்ப நாமும் அவர்களோடு ஒத்துப் போக வேண்டும். சண்டை, வெட்டுதல், போராட்டம் இப்படியானவைகூட ஒருவிதத்தில் அவர்களின் எனர்ஜி வேறு வழியில் செலவழிக்கப்படாமையாலேயே, இப்படிப் பாதையில் செலவாகிறது...
(6)

பிள்ளைகள் விசயத்தில் இது சரியான முறையில் கையாளப்பட வேண்டும். அவர்களை எப்பவுமே வீட்டில் இரு, படி படி எனச் சொல்லிக் கொண்டிருந்தால்.. சில பிள்ளைகள் முளுக்க முளுக்க படிப்பில் செலவிடக்கூடும், ஆனா பெரும்பாலான பிள்ளைகளுக்கு வேறு பொழுது போக்கு, விளையாட்டும் தேவைப்படுகிறது, அதை நாம் கண்டித்து முடக்கினால், அது தப்பாக தேவையில்லாத சட்டிங்குகளில் ஈடுபடுதல்[காதல் பிரச்சனை], இல்லை சிகரட், குடி என இறங்குதல் இப்படி தப்பான வழியில் செல்லும் வாய்ப்பும் அதிகம்.

(7)

முக்கியமாக ஆண்குழந்தைகளை நன்கு விளையாட அனுமதிக்க வேண்டும்.. அப்போதான் எனர்ஜி வெளியேறி, அமைதியாக அடக்கமாக இருப்பார்கள். எங்கள் வீட்டில் சில நாட்களில் இரவு 10 மணிக்கும்.. கோல் வரும்[வீட்டுக்குள் இருந்தே:)] அல்லது கதவு தட்டப்படும்.. ரெட்மில் செய்யப் போகிறேன் என, ஓம் செய்யுங்கோ எனத்தான் ஓகே பண்ணுவது, போய் 20-30 நிமிடங்கள் செய்வார்கள், பின்பு குளித்துவிட்டுப் படுப்பார்கள்.. இப்படி எந்த வழியிலாவது ஒவ்வொருவரின் எனர்ஜியும் செலவழிக்கப் பட வேண்டும், அது நல்ல வழியில் செலவழியும்போது பிரச்சனை இல்லை, மாறி தீய பாதையில் கால் வைத்திட்டால் மீள்வது கஸ்டமாகிவிடும்.

இதேபோல்தான் எங்கள் டெய்சிப்பிள்ளையும் எப்பவும் வெளியே விடு வெளியே விடு என அடம் பிடிப்பா....

கவனமாகப் பாருங்கோ.. இடப்பக்கம் அணில்பிள்ளை ஜம்பண்ணி வேலியால ஓடுறார், எனக்கு இவ கீழே குதிக்கும்வரை நெஞ்சுக்குள் தண்ணியே இல்லை:)..

 சாதாரண பூனைகளை விட இவவுக்கு எனர்ஜி லெவல் கொஞ்சம் அதிகம்.. எப்பவும் ஓவரா ஓடோணும் துள்ளோணும் என இருப்பா. சிலசமயம் வெளியே போய் மழையில் நனைந்து வந்திருப்பா, அப்படி உள்ளே வந்தால் உடனே அவவை புரட்டிப் புரட்டி துடைச்சு விடோணும்.. அதுவரை விடமாட்டா.. மீயா மீயா எனக் கத்திக் கொண்டே பின்னால வருவா, துடைக்கும்போது கீழே படுத்திருந்து, வடிவேல் அங்கிளைப்போல .. இங்க துடை.. ஆ இங்க துடை எனபது போல கை காலை தூக்கித் தருவா, பின்பு 5 நிமிடத்தில் உடனேயே அடம் பிடிப்பா, கதவைத்திற வெளியே போக என...

விடாமுயற்சி:)

அந்நேரம் திரும்பவும் மழையில விட்டு துடைக்கோணுமெல்லோ.. அதனால நான் அவவுக்கு ஓடப்பண்ண விளையாட்டுக்கள் காட்டுவேன்.. ஓடி ஓடி பாய்ந்து பிடித்து உருண்டு பிரண்டு விளையாடுவா.. ஒரு 5 -10 நிமிடத்தில் எனர்ஜி இழந்து களைத்து ஓடிப்போய்ப் படுத்து அமைதியாக நித்திரை கொள்ளுவா... இதனை நோட் பண்ணியே.. இந்த எனர்ஜி லெவல் உண்மை என நம்பி.. இப்போஸ்ட் எழுத ஆரம்பிச்சேன்.

(8)

இது உண்மைதானே?
(9)

கீசாக்கா போனதடவை .. மீ கேக்கூஊஊ தரவில்லை எனச் சொல்லியிருந்தா, அதனால இந்தாங்கோ கிறிஸ்மஸ்க்கு[வாங்கிய:)] எக்லெஸ் ஃபுருட் அண்ட் நட் கேக்:)

ஊசி இணைப்பு:)
ஆஆஆஆ புதுவருடத்துக்கு இம்முறை அதிரா நிறையக் காசு தரப்போறேனாக்கும் எல்லோருக்கும்:))).. என்னிடம் இருந்தவற்றை மட்டும் வச்சுப் படமெடுத்தேன்:).. இதில முதலாவதாக வருபவருக்கு.. 20 ரூபாய்த் தாள்கள்.. 2 வதாக வருபவருக்கு 10 பவுண்ட் தாள்கள்.. லேட்டா வருபவருக்கு கேக் துண்குகள்:).. கடசிப் பெட்டியில் ஏறுவோருக்கு வெற்றலை பாக்கு:)) ஹா ஹா ஹா அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்💝.

ஊசி இணைப்பு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மேலே படங்களுக்கு நம்பர் கொடுத்திருக்கிறேன், ஏதும் சொல்ல நினைச்சால் உங்கள் வேலையை ஈசியாக்க:).
கமலா சிஸ்டர் சொன்னா, தான் வருசம் முடிவதற்குள் 4 போஸ்ட்டாவது போட்டிட வேணும் என, அப்பூடித்தான் நானும் நினைச்சேன், 2018 சூசைட்டு பண்ண முந்தி:) மீயும் போட்டிடோணும் என.. போட்டிட்டேன்ன்ன்:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday 24 December 2018

திராவும் திர்வுளும்:)👸

2013 ம் ஆண்டென நினைக்கிறேன் கனடா ரொரண்டோவில பெரிய ஸ்னோ ஸ்ரோம் வந்து, கறண்ட் இல்லாமல் தண்ணியில்லாமல் போய் சனமெல்லாம் ஹோட்டேலில் போய்த் தங்கி வந்த சம்பவம் நடந்துது, அப்போ நாங்களும் அங்கு போயிருந்தோம்.. அப்போ எடுத்த அழகிய:) படங்களில் சில..

Friday 21 December 2018


💑👫ஸ்கொட்லாந்தில் முதல் நாள்:)👫💑

ஸ்கொட்லாந்தில் வந்து காலை எடுத்து வைக்கிறேன் நிலத்திலே.... சில்லென ஒரு குளிர்... பின்னேரம் ஒரு 3 மணி இருக்கும்.. சுட்டெரிக்கும் வெயில்... அப்படியே எயார்போர்ட்டிலிருந்து வீடு நோக்கிப் பயணம்.. பச்சைப் பசும் புல் வெளிகளும்.. அங்காங்கு செம்மறி ஆட்டுப் பிள்ளைகள்.. கொழுத்த குண்டு மாட்டுக் கண்டுகள், அழகிய மலைகள்.. இடையே ஆறு. இப்படி ரிவியில் பார்த்ததை நேரில் பார்த்தபோது ஏதோ ஒரு பரவசம்... விதம் விதமாக கண்ணில் இடையிடையே பட்டது.. மனதை மிக உற்சாகமாக்கி விட்டது...


வீட்டுக்குப் போன களைப்பில் சாப்பிட்டு விட்டு, நித்திரையாகி விட்டோம்,  திடீரென கண்ணில ஏதோ சுடுவதைப்போல இருந்துது, திடுக்கிட்டு கண் முழிச்சேன், ஜன்னல் கேர்ட்டின் சரியாக மூடுப்படவில்லை, அந்த இடைவெளிக்குள்ளாலே சூரியன் என் கண்ணை கூசப்பண்ணியது..

படாரென துடிச்சுப் பதைச்சு எழுந்தேன், அய்யய்யோ காலை விடிஞ்சு பத்து மணி வெயில்போல இருக்கே[இலங்கையில் அப்படித்தானே],  நேரமும் புரியுதில்ல, எங்கு இருக்கிறேன் எனவும் தெரியவில்லை, இது இலங்கையா இல்ல ஸ்கொட்லாண்ட் வந்து விட்டோமா.. என பதைபதைத்து கொஞ்சம் நிதானத்துக்கு வந்து, நாளைக்கு வேர்க் இருக்கு என ஹஸ்.. சொன்னாரே, எலாம் வைக்க மறந்து விட்டோமே என அவசரமாக கணவரைத் தட்டி எழுப்பினேன், அவர் எழும்பி நேரத்தைப் பார்த்துப்போட்டுச் சொன்னார்.. இப்போ நேரம்- இரவு பத்து மணியாகிறது .. பயந்து விட்டீங்களோ.. இப்பவே வெளிக்கிடுங்கோ வெளியே போய்ச் சுற்றிவிட்டு வரலாம் என,  “என்ன? பத்து மணிக்கு இப்படி வெய்யிலா?.. நீங்க பொய் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன், இது விடிஞ்சுபோச்சு”.. எனச் சொன்ன, அந்த முதல் நாள் இரவு வெயிலை, வாழ்க்கையில் மறக்கவே முடியாது.

இங்கு கோடை காலத்தில் இரவு 11 வரை வெயில் இருக்கும்... அதேபோல காலை 3.30-4 மணிக்கே சூரியனார் பளாச் என மின்னுவார்ர்... அதனால இவ்வருடம் சில படங்கள் எடுத்தேன்.. இரவுப் படங்கள்.. ஏதோ ஓடி ஓடி நிறைய எடுத்ததைப்போல இருந்துது, ஆனா இப்போ பார்க்க கொஞ்சம் தான்:).. ஆனா படத்தில வெளிச்சம் குறைவாகக் காட்டுது நேரில் பார்பதை விட..

இந்தப் படம் இரண்டும் ஒரே நேரத்திலேயே எடுத்தேன் நேரம் இரவு 10.30. நிலவு இடது பக்கமும் சூரியன் வலது பக்கத்தில் மறைவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.. ஆனா நிலவு தெரியும் திசை தென்மேற்கு, சூனியன் அங்கிள் மறைவது வட மேற்கில்...

இது நேரம் சரியாக சொல்லத் தெரியவில்லை, அநேகமாக 10-11 மணிக்கு இடைப்பட்ட நேரம்தான்..

இதில் பாருங்கோ காரில் நேரம் தெரிகிறது, நைட் 9.46 காட்டுது, வெளியே போனபோது ரோட்டில் எடுத்தேன்.. ரோட் லைட் கூடப் பத்தவில்லைப்பாருங்கோ.. அவ்ளோ வெளிச்சம்..

😊😊===============😊😊INTERVAL😊😊==============😊😊
ஆவ்வ்வ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:).. இந்தப் பூங்கொத்தை எப்பூடி நெல்லைத்தமிழனிடம் குடுப்பேன், நேக்கு ஒரே ஷை.. ஷையா வருதே ஏனெண்டால்ல்.. புளொக்குகளிலெல்லாம்.. என்னைத் “தமனா” எனச் சொல்லாமல்..  “கொடி இடையாள்”..  “இடையிலாள்”, எண்டெல்லோ சொல்றாராம்.., அதில அவர் இப்போ நெருங்கிட்டாராமே.. ஐ மீன் சென்னைக்கே வந்திட்டாராமே... சீ..... நேக்கு வெய்க்கமா வருது:))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்ன ஸ்ரீராம்.. எதுக்கு இவ்ளோ வெய்க்கப் படுறீங்க?:) நிமிர்ந்து பாருங்கோ:). இந்தாங்கோ பூங்கொத்து... புளொக்குகளிலெல்லாம் என்னை அனுஸ்.. அனுஸ்ஸ் எனச் செல்லமாக அழைக்கிறீங்களாமே.. அப்போ வராத வெய்க்கம் இப்போ எப்பூடி.. வெய்க்கப் படாதீங்கோ ஸ்ரீராம்:))
========================😛😛😛😛=======================

 இந்தப் படங்கள் இரவு பகல் கலந்திருக்குது.. முகில்களைப் பாருங்கோ ஏதும் கதை சொல்லுதோ உங்கள் காதில்:).. கப்பல் போவது இந்த விண்டரில். மலை மீது.. ஸ்னோ இருப்பது தெரியுதெல்லோ...

இது ஒரு மழைநேரம் போல இருக்கே... கண்ணழகிபோல இன்னொரு அழகி போகிறா எங்கள் ஆத்தில்:)..

இது நல்லா இருக்குதெல்லோ?:)

ஹா ஹா ஹா எங்கட குண்டுப்பிள்ளையாரை, குட்டி எலிப்பிள்ளை ஏத்திப் போகுதே.. என்னா தைரியம் :). 

ஹா ஹா ஹா அதானே?:)

ஊசி இணைப்பு:)

  ஊசிக்குறிப்பு
💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑

திருவாவடுதுறை முருகப் பெருமானே வள்ளிக்கு இம்முறை ஏமாத்தாமல் வைர மூக்குத்தி போடுவேன் என்னைக் காட்டிக் குடுத்திடாமல் காப்பாத்துங்கோ:)..
()()()()()()()()()()()()()()()()()

Monday 3 December 2018

😍😍எங்கள் டேவடைக்கு:) வாழ்த்துக்கள்😍😍

Monday 26 November 2018

鮽鮽鮽அதிராஸ் ஸ்பெஷல் சீனி அரியதரம்鮽鮽鮽

தெக்கினிக்கா தலைப்பைப் போடோணும், அப்போதானே, இது என் செய்முறை, ஆரும் நோ குறொஸ் கொஸ்ஸன் பிளீஸ் எனச் சொல்லி வாயை அடைச்சிடலாம்:))
அப்பாவி போல முகத்தை வச்சிருந்தால்தால் இண்டைக்குத் தப்பலாம்:)

அதிரா வீட்டுச் சீனி அரியதரம் சாப்பிடலாம் வாங்கோ. எங்கள் வீட்டிலதான் இனிப்பு என்பது யாருக்குமே பிடிக்காதே.. அதாவது பலகாரங்கள், மற்றும்படி சொக்கலேட் ஐஸ்கிரீம் பற்றி இங்கு நான் பேசவே இல்லை:).

ஆனாலும் செய்ய வேண்டிய கட்டாயம், ஏனெனில்..கெளரி விரதம் என்பது 21 நாட்கள் நோன்பிருந்து முடிவில் கையில் இருக்கும் பழைய காப்பை கழட்டி வைத்து விட்டுப் புதிய காப்பைக் கட்டிக் கொள்வோம். அந்த காப்புக் கட்டும் அன்று காப்புக் கட்டுபவர், ஒருநேர உணவாக இந்த சீனி அரியதரம் மட்டுமே சாப்பிடோணும்.. இப்படித்தான் நம் வழக்கம். கோயில் இருக்கும் ஊர்களில் பூஜைக்கு பணம் கொடுத்தால் கோயில்லயே சுட்டுத் தருவார்கள், அதிரா என்ன பண்ண முடியும் ஜொள்ளுங்கோ:).. அதனால நானே சுட்டு எடுப்பேன்.. சிலசமயம் பாறாங்கல்லுப் போலவும் வந்திருக்கு:) என் பற்கள்தான் எதையும் உடைச்செறியுமே அதனால எனக்கு இதுபற்றிய கவலை எல்லாம் இருந்ததேயில்லை:) ஹா ஹா ஹா.

ஆனா அடிபட்டு இடிபட்டு.... போனவருடத்தை விட இம்முறை மிகவும் சூப்பராகவும் சொஃப்ட்டாகவும் வந்துது.. இந்த நேரம் பார்த்துப் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக, தீபாவளி வாழ்த்துப் பரிமாற்றத்தோடு.. அம்முலு[பிரியசகி] கேட்டா, அதிரா சீனிஅரியதர ரெசிப்பி போடுங்கோ.. இதுவரை நான் செய்ததில்லை, எனவே செய்யப்போகிறேன் என:)).. அவ்வ்வ்வ்வ் கிடைச்ச சான்ஸ் ஐ மிஸ் பண்ணுவேனோ நான்?:).. அதனாலதான் ரெசிப்பி போடத் துணிஞ்சேன்:)..


முதலில் வாங்கோ சுவாமி அறைக்குப் போய்க் கும்பிடலாம்..
தில ஒரு குட்டிக் கதை சொல்லோணும் உங்களுக்கு, எனக்கு இந்தக் கெளரி காப்பு[படத்திலிருக்கே] கனடாவிலிருந்துதான் வரும், அதை அங்கு பூஜையில் வைத்து, கடைசி வாரம்தான் எடுத்துப் போஸ்ட் பண்ணுவார்கள், ரைமுக்குக் கிடைத்துவிடும், ஆனா இம்முறை நான் அனைத்து வேலைகளும் முடித்து, சுவாமிக்குப் படைத்தும் விட்டேன், காப்பு வந்து சேரவில்லை, நேரமோ பகல் 1.30 தாண்டி விட்டது, சரி இனி நாளைக்குத்தான் வரலாம், பறவாயில்லை, தொடர்ந்து கந்தசஷ்டி விரதம் தானே, அதுக்குள் கட்டிடலாம் என எண்ணிக் கொண்டே, கும்பிட்டு முடித்து விட்டு, எதுக்கும் லாஸ்ட்டா ஒரு தடவை ஜன்னலால பார்ப்போமே, போஸ்ட்மான் வருகிறாரா என எண்ணி, ஜன்னல் அருகே போனேன், வீட்டு டோரில், டொங்ங்ங்ங் எனக் கேட்டுதா.. ஓடிப்போய்ப் பார்த்தால் காப்பு வந்திருக்குது.. எப்படி இருந்திருக்கும் எனக்கு.. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை:).

சரி செய்முறைக்குள் நுழைவோமா?:).. தீட்டல் பச்சை அரிசிதான் இதுக்குப் பாவிப்போம், அது வெள்ளை அல்லது சிவப்பு எதுவாயினும், நான் பொதுவாக சிவப்புத் தீட்டல்ப் பச்சைதான் பாவிப்பேன். ஒரு கப் அரிசி எடுத்து 2,3 மணி நேரம் ஊறவிட்டு, பின்னர் வடித்து வைத்து விடுங்கோ, கொஞ்சம் ஈரத்தன்மை போகும்வரை.

பின்பு அரிசியை அரைத்து, அரித்து எடுக்க வேண்டும். அரிப்பதற்கு அரிதட்டு பெரிய கண் உள்ளதாக இருக்கோணும், அதாவது குருணலும் சேர்ந்து மாவுடன் வர வேண்டும், தனி மா எனில் சரியில்லை. சிலர் என்ன பண்ணுவார்கள் எனில், அரித்துப்போட்டு, மிகுதி மாக்கட்டையை கொளித்தெடுத்துக் குருணலையும் இதனோடு கலப்பார்கள், அதுக்கு கொஞ்சம் பிறக்டிஸ் வேணும் என்பதால, இப்படி பெரிய கண் அரிதட்டைப் பாவிப்பது நல்லது.

இனி நீங்கள் செய்வதற்கு ரெடியாகியதும்தான், மிகுதி வேலையைத் தொடரோணும், பிக்கோஸ்ஸ்ஸ்.. சீனியைக் கலந்துவிட்டால், உடனேயே சுட்டிட வேண்டும்.. இலை எனில் தண்ணியாகிடும்.

இப்போ ஒரு கப் இற்கு அரைக் கப் அல்லது முக்கால் கப் சீனி எடுத்து மாவுடன் கலந்து குழைக்க வேணும். தண்ணி சேர்க்கக்கூடாது, மாவில் இருக்கும் ஈரத்தன்மையுடன் சீனி கரைந்து வரும், அல்லது கையை மட்டும் தண்ணியில் தொட்டுத் தொட்டு குழைத்தால் போதும், 10 நிமிடம் அப்படியே விட்டாலே தன் பாட்டுக்கு மா குழைந்து வரும்.

இப்படியே விட்டேன்ன்..

பத்து நிமிடத்தில் இப்படி ஆச்சு..

இப்போ சுட ஆரம்பிச்சிடோணும், இல்லை எனில் இன்னும் தண்ணியாகிவிடும். இப்படிக் குட்டிக் குட்டி உருண்டைகளாக்கிப்போட்டு...

எண்ணெயை நன்கு கொதிக்க விட்டு, பின்பு உருண்டைகளை தட்டையாக பருப்பு வடைபோலத்தட்டி, ஸ்லோ ஃபயரிலேயே பொரித்தெடுக்க வேண்டும், அப்போதான் உருண்டையின் உள்ளும் மா அவிந்திருக்கும். நெருப்பு அதிகம் எனில், சீனி சேர்த்திருப்பதால் வெளிப்பகுதி டக்கெனக் கருகி விடும்.

ஆஆஆவ்வ் அதிராஸ் ஸ்பெஷல் சீனி அரியதரம் ரெடீஈஈஈ:)

இது என்ன தெரியுதோ? சுவீட் பொட்டாட்டோவும்[நாங்கள் வத்தாளங்கிழங்கு எனச் சொல்லுவோம்] சாதாரண பொட்டாட்டோவும், இது கிட்டத்தட்ட ஒரு கிலோ அளவு இருக்கும். அதன் அழகில் மயங்கி வாங்கினேன், சின்னவருக்கு மட்டும் இது ரொம்பப் பிடிக்கும்.

அதில் இதுவரை அவித்தே குடுப்பேன், இம்முறை அதிகம் என்பதால், பாதியைப் பொரித்து, உப்பு, தூள் எதுவும் போடாமல் பொரித்து எடுத்து அந்த சூட்டிலேயே உப்பையும் தூளையும் கொட்டிப் பிரட்ட வேண்டும், பொரியல் வகைகளுக்கு இப்படிச் செய்து பாருங்கோ... எண்ணெயும் பழுதடையாது, சுவையும் சூப்பர்.

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா கந்தசஷ்டி பாரணையும் முடிஞ்சு போச்சு..  மகிழ்ச்சி, நிறைவு...
 இனி அடுத்து...:))

ஊசி இணைப்பு:
[ஸ்ரீராம்:-///"பிள்ளையாரப்பா... இருக்கற பிரச்னைகள் யாவும் சீக்கிரம் நல்லபடியா முடியணும்..."//
அதிரா:- ஹா ஹா ஹா...இதுக்கொரு மீம்ஸ் வச்சிருக்கிறேன்ன்.. போட்டு விடுறேன் விரைவில்:)..]
ஸ்ரீராமுக்குச் சொல்லியிருந்தேன் அதுதான் இது:)

ஊசிக் குறிப்பு:

சரி அப்போ புறப்படலாமோ?:).. மீண்டும் இன்னொரு இனிய சமையல் குறிப்புடன் உங்களைச் சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெறுபவர் உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:)_()_.

கடுதாசி இணைப்பு:-
இக்கிழமை முழுவதும் மீ பிசியாக இருப்பதால், பதில் தர பலசமயம் தாமதமாகலாம்.. பல நாட்கள்கூட ஆகலாம்:).. அதனால கோபிச்சிடாதீங்கோ என இப்பவே மன்னிப்புக் கேட்கிறேன்_()_.
அப்போ இப்போ எதுக்கு அவசரமாக போஸ்ட் போட்டீங்க என நெ.தமிழனின் மைண்ட் வொயிஸ் கேட்குது:).. அது அம்முலு எங்காவது அந்தாட்டிக்கா அப்புறிக்கா எனப் பயணம் போயிட்டாலும் எனத்தான் அவசரப் போஸ்ட்:)... ஸ்ஸ்ஸ் அப்பா முடியல்ல:)
銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏 

Sunday 11 November 2018

 “எங்கள்புளொக்” இலிருந்து ஒரு  “நூல்வேலி”

ப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே:)) ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ, எல்லாம் நல்ல விசயம் தான்:)..  ஹா ஹா ஹா:)).

Saturday 3 November 2018

தக்காளி “காய்” வெள்ளைக்கறி..

வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ சுடச்சுடச் சுவையான டிஷ்:) உங்களுக்காகவே கனடாவில் இருந்து இறக்குமதி செய்து, சமைச்சுக் காட்டியிருக்கிறேன்.. ஆனா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரும் டச்சூப் பண்ணக்கூடாதூஊஊஊஉ பிக்கோஸ்ஸ்ஸ் இது அதிராவின் கன்னிக் கறீஈஈ:)).

Wednesday 24 October 2018

நமக்கு, இறப்பின் பின்னர் சிறப்புத் தேவையோ?

ங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் பகிர்ந்துகொண்ட இந்தக் கதைப் பகுதிதான், என்னை இப்போஸ்ட்  போடத் தூண்டியது. நான் எப்பவும் நினைப்பதுண்டு, உயிரோடிருக்கும் போதுதானே எதுவும் தேவை, இந்த உயிர் உடம்பை விட்டுப் பிரிந்த பின், நம்மை சந்தனத்தால் குளிப்பாட்டி என்ன? வைரத்தால் அலங்கரித்தென்ன? நமக்குத் தெரியவா போகிறது?..

Tuesday 9 October 2018

அப்பிள் பெண்ணே நீ யாரோ?:)

நிலவு..பெண், புய்ப்பம்... பெண், எண்டெல்லாம் சொல்லி இப்போ பார்த்தீங்களோ அப்பிளையும் பெண்ணுக்கு ஒப்பிட்டு விட்டார்கள்:).. வர வர மருவாதை:) ரொம்பவும் தான் கூடிட்டே போகுது நமக்கு:).. சரி சரி முறைச்சு ஒண்ணும் ஆகப்போவதில்லை:)) ஸ்மைல் பிளீச்ச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா.

Wednesday 3 October 2018

சொர்க்கத்துக்கு போறதை நினைச்சாலே பயம்மாக்கிடக்கூஊஊ:)

ஹா ஹா ஹா இப்போ எதுக்கு திடீரென அதிரா சொர்க்கம் பற்றிப் பேசுறா எனத்தானே ஓசிக்கிறீங்க:).. அது மீ ஞானியாகிட்டேனெல்லோ.. ஞானி ஆனாலே இப்படியான அலசல்கள் எல்லாம் தானா வந்திடுது:).

இப்போ நாம் சொர்க்கத்தைக் காணுவதென்பது பரலோகம் போய்த்தான் என்றில்லை:).. சொர்க்கம் என்றால் என்ன எனில் ஒரு மட்டட்ட மகிழ்வைத் தரக்கூடிய சூழலே சொர்க்கம். அதுக்கு நாம் என்ன பண்ணோனும், நம்மைப்போன்ற ஒத்த அலைவரிசையுடையோரோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ளோனும், நம் ரசனை விருப்பு வெறுப்புக்கேற்றபடி இன்னொருவரும் இருக்கும் போது, அவரோடு நாம் பேசும்போது நம் மனம் மகிழ்ச்சியை உணருது. இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே என மனம் எண்ணுது.. அதுதான் சொர்க்கம்.
சிலர் எப்பவும், நம் கருத்துக்கு முரணாகவே கருத்துச் சொல்வர்.. அதுக்காக நம் கருத்துத்தான் சரி என அர்த்தம் இல்லை..  ஆனா அவருக்கும் நமக்குமான அலைவரிசை பொருந்தவில்லை என அர்த்தம், அதனால அப்படியானோரோடு எப்பவும் கூடியிருந்தால் அது நம் மனதுக்கு எப்பவும் துன்பத்தையே கொடுக்கும். அதனாலதான் நம் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுப்பது நம் கையிலேயே இருக்கிறது.

வேலியில் போகும் ஓணானைப் பிடிச்சுத் தோளில் போட்டு விட்டுக் குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்:) ஹா ஹா ஹா.

இதேபோல, சந்தோசம் என்பதும் ஒரு தொற்று நோய்போலத்தான்:), நாம் சந்தோசமாகப் பேசுவோரோடு சேர்ந்து இருப்பின், அவர்களின் மகிழ்ச்சி நம்மைத் தொற்றிக் கொள்ளும்..

=======================இடைவேளை======================
ம் மூத்தவருக்கு இங்கு யுனிக்காக வொலன்ரியர் வேர்க் செய்யோணும் எனச் சொல்லியிருந்தேன் தானே. அதுக்காக இவர் கடந்த ரெண்டு வருடங்களாக ஒரு பிறைவேட் சீனியர் ஹோமுக்குப் போய்க் கொண்டிருந்தார். அதனை சிஸ்டேர்ஸ்தான் நடத்துகிறார்கள்.. மிக அழகிய இடம்.. பூங்கா போல இருக்கும். அங்கு உள்ளே ஒரு குட்டிச் சேர்ஜ் உம் உண்டு, சென் ஜோசப் சேர்ஜ்.. நாமும் அங்கு போனதுண்டு, எனக்கு அதில் நம்பிக்கையும் அதிகம். அந்த சேர்ஜ் ன் வெளியே.. ஃபிரான்ஸ் லூர்த்து மேரி மாதா சிலையும் உண்டு.. மிக அழகாக இருக்கும்.

ப்போ மெடிசின் கிடைச்சதும், கேக் சொக்லேட் எல்லாம் வாங்கி தாங்கியூ கார்ட்டும் எடுத்துப் போய்க் குடுத்தோம்,  அப்போ அங்கு ஒரு வயதானவரை சந்தித்தோம்... பார்த்தால் சின்னப் பெடியன்போல இருந்தார்.. குடுகுடுவென தொப்பியும் போட்டு வெளியே வோக் போயிட்டு வந்தார், கண்ணில கண்ணாடி கூட இல்லை. வயசு போனதன் அடையாளமாக முகத்தில சுருக்கங்கள் இருந்தது... அது மட்டும்தான்..

வருக்கு 92 வயசென அறிஞ்சிருந்தோம்... கேட்டபோது சொன்னார், இல்லை எனக்கு இப்போ 94 என... உங்கள் இளமையின் ரகசியம் என்ன எனக் கேட்டதுக்கு[வழமையான கேள்விதானே:)]...

அவர் சொன்ன பதில்...

நான் எப்பவும் சிரிச்சுக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பேன், மற்றது, அடுத்தவர்களோடு எப்பவும் நல்ல வார்த்தையில் மகிழ்வான வார்த்தையில் மட்டுமே பேசுவேன் என்றார்... அப்போ அதிலும் உண்மை இருக்கிறதுதானே பார்த்தீங்களோ?
===================================================
லகத்திலே உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் துக்கம் இருக்கத்தான் செய்யும்.. ஒவ்வொரு வடிவில்.. ஆனா அதுக்காக அதையே நினைச்சிருந்தால், இப்போ நமக்கிருக்கும் மகிழ்ச்சியை நாம் இழந்து விடுவோம்.. அதனால எப்பவும் கடந்த காலத்தையும் நினைக்கக்கூடாது எதிர்காலத்தையும் நினைக்கக்கூடாது... இப்போ இருக்கும் மகிழ்ச்சியை கைவிட்டிடவும் கூடாது... இதுவும் உண்மைதானே? போன வருடம் நடந்ததை நினைச்சு.. கவலைப்பட்டு:), இப்போ அதிராவுக்கு கொமெண்ட் போடாமல் விட்டிடாதீங்கோ எனச் சொல்ல வந்தேனாக்கும்:)..

%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%
சே..சே ட்றம்ப் அங்கிளுக்கு பேசனல் செக்கரட்டறியாக இருந்தும் அவரின் பெயரைக் காப்பாற்ற முடியாமல் போச்சே என்னால:) ஹா ஹா ஹா:).
%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%
ரு நல்ல குடும்பம், நல்ல வீடு என்பதற்கு அடையாளம் என்ன தெரியுமோ? சண்டை கூச்சல் இல்லாத, மகிழ்ச்சி சிரிப்பொலியுடன் கூடிய அமைதியான வீடே நல்ல வீடாகும். “ஒலிக்குறைவான வாழ்க்கை முறை.. உயர்ந்த வாழ்க்கை முறை” என்கின்றனர்.. இதில் சொல்லப்படும் ஒலிக்குறைவு என்பது சண்டை சச்சரவைக் குறிக்கும்.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை முறை என்கிறார்கள். இதில் புரிதல் என்றால் என்ன?.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழப் பழக வேண்டும். அதுக்காக ஒருவருக்கு தப்பான நடவடிக்கைகள் இருப்பின், அதை அப்படியே ஏற்று வாழ வேண்டும் எனச் சொல்லவில்லை.. ஒருவரின் குணாதிசயங்கள் எனப்படும்போது... நகைச்சுவைப்பேச்சு, சிரிப்பு, கோபம், அமைதியாக இருத்தல்.. இப்படியான குணங்கள்...

அவற்றை மாற்ற வெளிக்கிடக்கூடாது... 
அவர் அப்படித்தான்.., சொன்னாலும் கேட்க மாட்டார்.. ஓன் லைனில் தான் எல்லாம் வாங்குவார்.. என மனைவியும்... அவ அப்படித்தான் இருப்பா, எனக்கு இப்போ அக்குணம் பிடித்து விட்டது, பழக்கமாகியும் விட்டது என கணவனும்[ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன்].. புரிந்து கொண்டு அதன்படி விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை.... அதை விட்டுப்போட்டு அடிச்சுப் பிடிச்சுத்.. திருத்துறேன் பேர்வழி எனத் திருத்த வெளிக்கிட்டால் வாழ்வு நரகமாகிவிடும்.

தேபோல குடும்பத்தில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால், சரி ஏதோ கோளாறு.. தவறாகி விட்டது, இனிமேல் அப்படி நடந்திடக்கூடாது என்பது பற்றித்தான் சிந்திச்சு செயல் பட வேண்டுமே தவிர, அத்தவறை அடிக்கடி சுட்டிக் காட்டி, குடும்ப மகிழ்ச்சியை நாசம் பண்ணிக்கொண்டிருக்கக் கூடாது.

ஊசி இணைப்பு:

ஊசிக் குறிப்பு:
==============நன்றி_()_=============
ஒரு குட்டி வேண்டுகோள்:
கடவுளை நாம் வணங்குவதற்குக் காரணம் “பக்தி” தான், என்பதற்குக் கொஞ்சம் பொயிண்ட்ஸ் சொல்லுங்கோவன் பிளீஸ்ஸ்.. ஒவ்வொருவர் ஒவ்வொரு பொயிண்ட் சொன்னாலே நிறைய வந்துவிடும்.. நன்றி.
==============================================