நல்வரவு_()_


Friday 16 November 2012

முத்துக்களோ கண்கள்!!

இல்ல!! இல்ல! பெரிகள்!(berries:))!!!
என்ன இது நம்மட “கொப்பி வலது” க் கலரில பழுத்திருக்கே:)..
ஆப்புடலாமா வாண்டாமா?:))
இவை கிரான்பெரீஸ்... எங்கள் வீட்டு வேலியில் நிற்கிறது. ஆனால் ஒரு பழம்கூடச் சாப்பிடுவதில்லை, காரணம் ஒழுங்காக மருந்து வாங்கி அடிக்க வேண்டும், அடிக்காவிட்டால் புழுப்பிள்ளைகள்:).. குடி வந்திடுவார்கள்:). படமெடுப்பதற்காக ஆய்ந்தேன், 
பின்பு கொட்டி விட்டேன்..


 மரம் தெரியாமல் கொத்துக் கொத்தாக காய்த்துப் பழுத்து, பின் காய்ந்து போகும், குருவிகள்கூட கொஞ்சம்தான் உண்பினம்.
 இந்தக் கிரான்பெரி, இங்கு பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தேடுவாரில்லாமல் காய்த்திருக்கும், ஆனால் எல்லோரும் சூப்ப மார்கட்டில்தான் பணம் கொடுத்து வாங்குவினம்.

=======================================
இது பிளாக்பெரீஸ்ஸ்... இவையும் இங்கு எல்லா இடங்களிலும் காய்த்துக் குலுங்கும், ஆரும் தொடமாட்டினம். இவை ஸ்கூலுக்குப் பக்கத்தில் ஒரு காணியில் காய்த்திருந்துது. நான் ஒரு வயதானவரைக் கேட்டேன், வயதானோர்தான் இங்கு அயகா விளக்கம் சொலுவினம்:)..)..  இவை சாப்பிடும் பெரீஸ் தானே என. அதுக்கு அவர் நின்று நிதானமாகச் சொன்னார், பயப்பிடாமல் சாப்பிடலாம் ஜாம் செய்யலாம், எனக் கூறிக்கொண்டே ஒன்றைப் பிடுங்கித் தந்து சாப்பிட்டுப் பாருங்கோ என்றார்... சூப்பர்.

 இப்போ புரிஞ்சிருக்குமே எங்கட இடம் எவ்ளோ இயற்கை அயகு:) நிறைஞ்சதென.. நான் அதிராவைச் சொல்லல்ல:).. ஹையோ முறைக்காதீங்கோ.. பிறகு அந்த முருகனே பொறுக்க மாட்டார்:).
நோ தங்கூ.. கண்ட நிண்ட பழங்களை எல்லாம் புடுங்கி லபக்கென வாயில போட்டிடக்கூடாதென:) வீட்டில:) கடுமையான உத்தரவு போடப்பட்டிருக்கு:)).. அவிங்க ஜொன்னா, நான் மீற மாட்டனாக்கும்:).

====================================================
ஊசி இணைப்பு:
எப்பவுமே வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும், சோர்ந்து போயிடக்கூடாதாம், மாத்தி ஓசிக்கோணும் எனப் 
பெரியவங்க ஜொள்ளியிருக்கினம்:)... 
கூரை வேயக் கிடுகு இல்லையே
கிடுகு வாங்கப் பணமில்லையே
என வருந்தாதே...
ஆஹா.. இரவிலே வீட்டுக்குள்
இருந்தபடியே நட்சத்திரங்களைப்
பார்க்க முடிகிறதே..
ஆருக்குக் கிடைக்கும்
இந்தப் பாக்கியம்:)
என மாத்தி ஓசிக்கோணும்:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குட்டி இணைப்பு 4 அவர் கிரே8:) கிட்னீஸ்:)
 “ஆடம்பரம் இல்லாத, சாந்தமான சூழலில்தான், உண்மையானதும், நிரந்தரமானதுமான அமைதி பிறக்கிறது”

 “மனித(பூஸ்:) உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போலத்தான், அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்”
------------ தயாரித்து வழங்கியவர்:- புலாலியூர் பூஸானந்தா:))-----------

Tuesday 6 November 2012

ஆ... கொழுத்த ...கட்டை:)

கொழுக்கட்டை:)..
தினைக் கொழுக்கட்டை சாப்பிட்டிருப்பாரோ இவர்:)
தங்க ஃபிஸ்ஸு.. அதேன் அஞ்சு சொன்னா.. எங்கட சூப்பர் மார்கட்டில தினை கிடைக்குது.. என. அதைக் கேட்டதும், எனக்கு ஊரில அம்மம்மா, சாமியரிசியில செய்து தந்த பிடிக்கொழுக்கட்டை நினைவுக்கு வந்திட்டுது:)).. அது என்னா சுசி தெரியுமோ?:).. உடனே ஓடிச் சென்று வாங்கி வந்து மீயும் பிடிக்கொழுக்கட்டை செய்தேன்.

தினையை ஒரு நாள் முழுவதும் ஊறவிட்டு, பின்பு கழுவி, நன்கு வடித்து உலர விட்டேன்
 உலர்ந்ததும், நன்கு அரைத்து எடுத்து, சக்கரை, தேங்காய்ப்பூச் சேர்த்து குழைத்தேன். இதில் வறுத்த பயற்றம் பருப்பும் சேர்ப்பார்கள், நான் மறந்திட்டேன் சேர்க்க:).
 பின்பு, பிடியாகப் பிடித்து, இடியப்பம் அவிப்பதுபோல ஆவியில்(steam)  அவித்தெடுத்தேன். நல்ல ஒரு ஸ்ரோங் ரீயுடன் தொப்பை அப்பனுக்குக் கொடுத்தேன்ன்:).. அதைச் சாப்பிடுவதை விட்டுப்போட்டு “புறுணம்” பார்க்கிறார் பாருங்கோ:)).. ஆர் வந்து, என்ன சொல்லீனம் எனவாக்கும்:).
 இதில முக்கிய விடயம், சக்கரை தேங்காப்பூவோடு தண்ணி சேர்த்திடக் கூடாது, தண்ணி சேர்க்காமலேலே தண்ணியாகிடுது:), அதனால உடனே குழைத்து உடனே அவிக்கோணும். என்னா ருசி:)) சூப்பர்:)).. ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆ:)).
தினைக் கொழுக்கட்டைக்கான ஒரு ஊஊஊசிக்குறிப்பூஊஊ:)
என்னாண்னா,, நான் கண்டு பிடிச்சேன், இதில் அலர்ஜி இருக்கு. சிலருக்கு சில உணவுப் பண்டங்கள் அலர்ஜி. எங்கள் பக்கத்து வீட்டுக் கிரிஸுக்கு, கோதுமை அலர்ஜியாம், அதனால பிரட்டிலிருந்து(bread), எதுவும் சாப்பிட மாட்டார். அதுபோல, நான் கண்டுபிடிச்சேன்ன்.. தினையிலும் அலர்ஜி இருக்கு... பார்த்து ஜாக்ர்ர்ர்ர்தை:).
=====================================================

சரி அது முடிஞ்சுது, அடுத்து ஒரு கதை ஜொள்ளப்போறன்:).. என்னெண்டால், எங்கட வீட்டாளுக்கு:).... ஆராவது சாத்திரம் அங்க சொல்கிறார்கள், இங்க சொல்கிறார்கள் என்றால் போச்சூ... உடனேயே எனையும் அழைத்துக் கொண்டு அங்கு போய்விடுவார், அது அவருக்கு ஒரு ஹொபி, விருப்பம், அதனால எந்தப் பாதிப்பும் இல்லை, போய்க் கேட்பதோடு சரி, நல்லதைப் பொறுக்கிக் கொள்வோம் அவ்வளவுதான்.

அதுபோல எங்கட அண்ணனுக்கு, ஆரும் தமிழ் வைத்தியங்கள் பற்றிக் கதைச்சால் சரி... உடனே அதைச் செய்திடுவார், அண்ணியைக் கஸ்டப் படுத்தமாட்டார், தானே செய்து அண்ணிக்கு பிள்ளைகளுக்கும் கொடுப்பார். அதாவது தினமும் காலையில் சீரகம் அவிச்சுக் குடிக்கோணும், இஞ்சி கார்லிக், தேனுடன் சேர்த்து அரைத்து.. இப்படி என்னவாயினும்.. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வைத்தியம் ஆவர்கள் வீட்டில் போய்க் கொண்டே இருக்கும்..

இம்முறை நாம் அங்கு நின்றபோது, எங்களுக்கோ, 24 மணிநேரமும் வயிற்றில் இடமிருக்கவில்லை:)).. அது ரோல்ஸ், பற்றிஸ், கட்லட், கொத்து ரொட்டி.. இப்படியே சாப்பிட்டு.. எப்பவும் ஃபுல்லாக இருந்ததாக ஒரு ஃபீலிங்:).

அப்போ ஒருநாள், பின்னேரம் அண்ணன், எங்களுக்காக மட்டின் ரோல்ஸ் வாங்கி வந்திருந்தார், நாங்களோ சாபிடவே முடியாமல் போயிருந்தோம். சொன்னார், இங்கிருக்கும் போதுதானே சாப்பிடுவீங்க, சாப்பிடுங்கோ என, நான் சொன்னேன், என்னால முடியவே முடியாது அண்ணன், எனக்கு வேண்டாம், கேட்காதே என.

உடனே சொன்னார், இருந்துகொள் 5 நிமிடத்தில் உனக்கொரு  “சூப் ரசம்” தாறேன், குடித்தால் எல்லாம் செமித்திடும் எனச் சொல்லிக் கிச்சினுக்குள் போனார்... அண்ணியிடம் கேட்டேன்,  “என்ன அண்ணி அது”? என, அவ சொன்னா.. வீட்டில் இருக்கும் அத்தனை பொருட்களும் போட்டு:), கபேஜ்ஜிலிருந்து என்னவோ மரக்கறி எல்லாம் போட்டு ஒரு சூப் செய்வார், பொறுங்கோ என.

அதேபோல டக்கெனச் செய்து வடித்து கொண்டு வந்து சுடச் சுடக் குடியுங்கோ எனத் தந்தார், நன்றாகவே இருந்துது.

இதேபோல அவர் கண்டு பிடித்த ஒரு சட்னி. உடம்புக்கு தீங்கில்லாதது, இப்போ நானும் அடிக்கடி செய்வதுண்டு, நீங்களும் முயற்சியுங்கோ..

அதாவது, பெரிய வெங்காயம் 2 எடுத்து, பெரிதாக வெட்டிக் கொள்ளோணும், ஒரு பெரிய துண்டு இஞ்சி, பாதிப் பூடு, 5,6 செத்தல் மிளகாய், 5,6 மிளகு,  இத்தனையையும் அடுப்பில் வாட்டோணும், சும்மா அரை வாட்டம், வாட்டுவதற்கு நல்லெண்ணெய் அல்லது ஒலிஃப் ஒயில் பாவிக்கோணும்.


அப்படியே மிக்‌ஷியில் போட்டு, அளவுக்கு பழப்புளியும் போட்டு உப்பும் சேர்த்து அரைத்து எடுத்தால் சூப்பர் சட்னி. விரும்புபவர்கள் ஒரு மேசைக்கரண்டி தேங்காய்ப்பூச் சேர்க்கலாம்.
=================================================


சரி ஏற்கனவே பின்னூட்டத்தில் போட்டிருந்தாலும், இதிலும் போடட்டாம்:) என உள்மனது சொல்லுது, அதனால... என் கறி ஒட்டி:).

 கிழங்கை அவித்து உரித்து மசித்து எடுத்துக் கொண்டு, சிறிது எண்ணெய் விட்டு குட்டியாக அரிந்தெடுத்த வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, பின்பு குட்டியாக அரிந்த லீக்ஸ் போட்டு வதக்கி, கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு, அடுப்பை அணைத்து விட்டு, இந்தக் கிழங்கைக்கொட்டி கிளறி பாதி தேசிக்காய் சேர்க்கோணும்.

அதற்கு முன் மைதா மாவுக்கு உப்புப் போட்டு, கொஞ்சம் எண்ணெய் அல்லது butter/margarine போட்டு குழைத்து வைக்கோணும்.

தோசைக்கல்லில், மெல்லிய ரொட்டியாகத் தட்டிப் போட்டு 2 செக்கனில் பிரட்டி விட்டுவிட்டு, உடனே கறியை வைத்து மடித்திட வேண்டும், இல்லையெனில் ஒட்டாது. பின்பு நீண்ட நேரம் பிரட்டிப் பிரட்டி வாட்டி எடுக்க வேண்டும்.


அதில் அதிகம் மிஞ்சி விட்டது, அதனால மிகுதியை அடுத்த நாள் கறி பன்னாக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்தேன்.

பின்பு உள்ளுடன்(கறி) முடிந்துவிட்டது, ஆனால் மா மிஞ்சி விட்டது, அதுக்கு கொஞ்சம் பச்சைக் கலர் சேர்த்து, இப்படி வெட்டிப் பொரித்தேன்...

====================================================
பின் இணைப்பு:
அடுத்து இங்கு ஹை ஸ்கூலில், ஹோம் எகொனமிக்ஸ் ம் ஒரு பாடம் இருக்கு. ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு விதமான சமையல் குறிப்பு செய்வினம். அதை எங்கட மகன், வீட்டுக்கு வந்து தானே செய்து தருவார். அப்படி அவர் செய்த பொட்டாட்டோ வித் கொலஸ்லோ(coleslaw) தான் இது. 

ஒருவருக்கான அளவு..
ஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்து, முள்ளுக்கரண்டியால் குத்தி அடையாளப்படுத்தி விட்டு, மைக்றோவேவ் பிளேட்டில் வைத்து, 7 நிமிடங்கள் அவிக்கவும், பின்பு திருப்பி வைத்து மீண்டும் 7 நிமிடங்கள் அவிக்கவும்..  அவிந்து வெடித்து வரும், அப்போது எடுத்து பிளந்து வைக்கவும்... பின்பு...
கரட் - பாதி
கோவா/கோஸ் - சிறு துண்டு(20 /25 g)
பெரிய வெங்காயம் -பாதி.
மெயோனீஸ் - 4/5 மேசைக்கரண்டி


கரட், கோவா/கோஸ், வெங்காயம், மிக மெல்லிதாக அரிந்தெடுத்து, மெயோனீஸ் சேர்த்துக் குழைக்கவும், அதை, அவிந்த கிழங்கில், நடுவில் இதனை  வைத்து சாப்பிடோணும்.
 ====================================================


குட்டி இணைப்பு:)
சமைக்கிற சாப்பாடை, எங்கட உறவுக்காரருக்கும் கொடுத்துத்தான் ஆப்புடுவமாக்கும்:).. இதிலிருந்து தெரியுதோ?, அதிரா, கர்ணன் பரம்பரை என:).

ஊசி இணைப்பு:
இது குயினின்ர பேத்தி, குயினுக்குக் குடுக்க ரோசாப்பூ ஆய்கிறா:))... உங்களுக்கல்ல:). கையில இருப்பது ஒரிஜினல் முத்தூஊஊஊஊ:).
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உன் திறமை, உன் நேர்மை, உன் பெருமை எதுவுமே, செயல் மூலமாக வெளிப்படாதவரை எவரும் அறிய முடியாது...
                சொன்னவர் புலாலியூர் பூஸானந்தா:)
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!