நல்வரவு_()_


Sunday 24 December 2017

ந்திட்டுதோ கிறிஸ்மஸ்?:)

சன்ரா வந்திட்டாரா? சன்ரா வந்திட்டாரா? கண்ணைத் திறக்கட்டோ?:)

Monday 18 December 2017

மழையில் நனைந்து விறைத்த புறாப்பிள்ளை:)

ஸ்ஸ்ஸ்ஸ் சாப்பிடும்போதுகூட மனிசரால நிம்மதியாச் சாப்பிட முடியுதோ.. கர்ர்ர்ர்ர்ர்:))

Thursday 14 December 2017

மீ.. பஸ்ல போய்.. ஊஞ்சல் ஆடினேனே:)

ங்கு எங்களுக்கு பஸ்  இல் ஏறும் வாய்ப்பே கிடைப்பதில்லை, வெளி நாடுகளுக்குப் போனால் மட்டுமே பஸ் இலும் ஏறுவதுண்டு, இங்கு அப்படித்தேவைப் பட்டால் ரக்‌ஷிதான்.

அதனால பஸ் இல் போவதெனில் சரியான விருப்பம் எனக்கு. ஆனா எங்கள் ஊருக்கு வரும் பஸ், காரில் 15 நிமிடத்தில் வந்திடும் தூரத்தை, இது 45 நிமிடங்கள் எடுக்கும் வந்து சேர.. ஊரெல்லாம் சுத்திச் சுத்தி வரும்:)).. அவசரமில்லை எனும் நேரங்களில், பஸ் எனில் ஹப்பியாக எஞ்சோய் பண்ணி வரலாம்.

Wednesday 6 December 2017

கம்புத் தோசை, கொள்ளுத்தோசை தேம்ஸ்:) ஸ்பெஷல்:)

ளாளுக்கு கண்ட நிண்ட ஸ்பெசல் எனப் பெயர் வைக்கும்போது:) மீ ஏன் தேம்ஸ் ஸ்பெசல் என வைக்கக்கூடாது எனப் பலமா ஓசிச்சே இந்த முடிவுக்கு வந்தேன்:)..

இப்போ உலகமெல்லாம் வாழும் நம்மவர்கள்.. அரிசியை, மா வகையை எல்லாம் குறைத்து, தானிய வகையை அதிகப்படுத்தி வருகின்றனர் ஹெல்த் க்காக, ஆனா அதிராவைப் பொறுத்தவரை, நான் ஹெல்த் க்காக எனப் பெரிசாப் பார்ப்பதில்லை, பிடிச்சதைச் செய்வேன் .. அந்த வகையில் எனக்கு எப்பவும் விதம் விதமாக இலைவகைகள் மற்றும் தானிய வகைகள் ரொம்பவும் பிடிக்கும், எங்கு போனாலும் வித்தியாசமாக என்ன இருக்கு எனத் தேடிப் பார்த்து வாங்கி வந்திடுவேன், ஒத்துக் கொள்ளவில்லை எனில் விட்டிட வேண்டியதுதான்.

என் கிச்சின் ட்றோவெரில் இருக்கும் ஸ்ரொக்:)

சரி... கம்பு, கொள்ளு, வரகு , கோதுமை.. இவை எல்லாம் வாங்குவேன், எப்பவும் கஞ்சி அல்லது சுண்டல்தான் செய்வேன்.. 

எனக்கு இட்லி, தோசை எப்படிக் கஸ்டப்பட்டு வச்சாலும் பொயிங்கவே பொயிங்காது:), இங்கு குளிரும் அதிகம் என்பதனால் அவணை கீட் பண்ணி ஓவ் பண்ணிப்போட்டு வச்சு எடுப்பேன், அபூர்வமாகத்தான் பொயிங்கும்:).. அதனால செய்ய விரும்புவதில்லை...

இதுபற்றி அஞ்சுவுக்கு மெயில் அனுப்பியபோது, நான் தோசை மாக்குழைப்பதில் ஒரு தெக்கினிக்கைப் பாவிப்பேன்:) எனச் சொன்னேன்:).. அதைக் கேட்டு அஞ்சு ஹீல்ஸ் ஐக் கழட்டிப்போட்டு என்னைக் கலைக்கத் தொடங்கிட்டா:)... ஹையோ எதுக்குக் கலைக்கிறீங்க எனக் கேய்ட்டேன்ன்:).. நான் சுடுதண்ணியில்தான் (கொதிநீர் அல்ல வோம் வோட்டர்).. குழைப்பேன் எனச் சொல்லிட்டேனாம்:) ஹா ஹா ஹா:).. விரைவில் புளிக்கட்டுமே என அப்படிச் செய்வேன்:). அது டப்பா?:)..

அதனால இனிமேல் குளிர் தண்ணியிலேயெ கரைச்சு வையுங்கோ  என மிரட்டினா:)

அப்போ இம்முறை தோசை செய்யலாமே என வெளிக்கிட்டேன்:).

முக்கால் கப் முழு உழுந்து, கால் கப் கம்பு சேர்த்து ஒரு மேசைக்கரண்டி வெந்தயம், ஒரு 5,6 மணி நேரம் ஊறவிட்டு, பின்பு நன்கு அரைத்து, 2 கப்பிலும் கொஞ்சம் குறைந்த ரவ்வை சேர்த்துக் குழைச்சு... கவனிக்கவும் குளிர் தண்ணியில்:))... இதில் பாவிக்கும் ரவ்வை எப்பவும் கோர்ஸ் ஆக இருக்கோணும் ஃபைன் ரவ்வை கூடாது.........

உப்பு, சோடா எதுவுமே சேர்க்காமல் குழைத்து வைத்துப், 10 மணி நேரத்தால் பார்த்தேன் பொயிங்கி வந்திருந்துதே.. ஹையோ என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை:)).. அப்போ இவ்ளோ காலமும் பொயிங்காததுக்கு காரணம் என் சுடு தண்ணியாஆஆஆஆ?:)

எதுக்கும் தோசை சாப்பிட முன்னர், இந்தாங்கோ.. இதைக் குடிச்சு கொஞ்சம் தென்பாகுங்கோ:)) ஃபுரூட் யூஸரில் அடிச்செடுத்த... கரட், பீற்றூட், அப்பிள் சேர்ந்த ஊஸ்:).. அருகிலே இருப்பது பிழிந்து கிடைத்த சக்கை.. கொட்ட்டுவதற்கு முன் படமெடுத்தேன்..

இங்கே பாருங்கோ.. என் ஓசை:) என்னா சூப்பரா வந்திருக்குதென:)
 ஆனா கம்புத் தோசை கொஞ்சம் தடிப்பாக வரும்.. சுவை சூப்பர்ர்.. மிகுதி மாவில் இட்லியும் அவித்தேன்.. அதுவும் சூப்பர்.. படம் எடுக்காமல் விட்டிட்டனே:).

தோசை மா, பொயிங்கியதால், ஆசையில் டக்கென திரும்பவும் தோசைக்கு வைக்கலாம் என:).. இம்முறை அரைக்கப் உழுந்து, கால் கப்பிலும் கூடிய கம்பு, மிகுதிக்கு கொள்ளுச் சேர்த்து ஒரு கப்பாக்கினேன்... அதே முறையில், வெந்தயம் மட்டும் சேர்த்து அரைச்சு, 1.45 கப் ரவ்வை சேர்த்தேன்.. வேறு எதுவும் சேர்க்கவில்லை..... பொயிங்கியிருக்குது பாருங்கோ:)..

ஹையோ அது பேப்பர் தோசையேதான்... பாருங்கோ அதிரா சுட்ட ஓசையின் அழகை:)..

 எப்பவும் நல்லெண்ணெய் ஊற்றித்தான் தோசை சுடுவதுண்டு, இது நெல்லைத்தமிழனின் இட்லிப்பொடி அரைத்து வச்சிருக்கிறேன், அதை மேலே தூவி, அதனுள் ஒலிவ் ஒயிலை விட்டு.. வெந்ததும் ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆஆஆ:))
 அப்படியே மடிச்சு, புரட்டிப் பிரட்டிப் போட்டு முறுகலாக்கி எடுத்தேன் என்னா சுவை தெரியுமோ?:)..



இதுக்கு சட்னி கூடத் தேவையில்லை, நல்லெண்ணெய் விட்டுச் சுட்டமையால், சும்மாவே சாப்பிடலாம் தெரியுமோ:)..
எங்கள் சூப்பர்மார்கட்டுக்கு இப்படி விதம் விதமாக பல வண்ணங்கள் பல சைஸ்களில் பூசணிக்காய்கள் வரும், ஆனா எனக்கு வாங்கப் பயம்:)..
இந்த வெங்காயம் எங்காவது கண்டிருக்கிறீங்களோ?:)  இது அதிரா ஊரில் மட்டும்தான் கிடைக்குதூஊ..:) அதனாலதான் மெல்லிசூஊஊஊ அதிராவைப்போலவே:)).. ஏனைய இடங்களில் எல்லாம் குண்டாக்கும்:)..   அ.. வைப்போல:))
ஊசி இணைப்பு:-
என் கீரைவடை பார்த்து, பல நூறு ரசிகர்கள் உடனேயே செய்து, எனக்கு மெயில் அனுப்பினர்:) எல்லாத்தையும் இங்கின போட முடியாதெல்லோ:).. அதனால என் பரம ரசிகை[ஹா ஹா ஹா அம்முலு மன்னிக்கவும்:))] ஃபுறொம் ஜேர்மனி:)).. இதைச் செய்து அனுப்பியிருந்தா..  அம்முலு எனும் பிரியசகி.. அதை அஞ்சுட பேர்த்டேக்கு டெடிகேட்:) பண்ணுறாவாம்:)

இது கீதாக்காவின் ரெசிப்பி பார்த்து, அதிரா செய்த சுவீட் போளி:)
===========================================================================
சுயநலமென்பது குடிசைக்குச் சமனானது, பொது நலமோ அரண்மனைக்குச் சமனானது... இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)
======================================================================
ஆவ்வ்வ்வ் டங்கியூ:))

=======================================================================

Sunday 3 December 2017

மார்கழித்  “தேவதை:)”  க்கு வாழ்த்துக்கள்!!!...

இது அஞ்சுவின் பிறந்தநாளுக்கு அதிரா செய்த குயிலிங்:).. இம்முறை அல்ல:), படம் புரியுதோ? மீனைப் பிடிப்பதற்காக:) குளக்கரையில் பூஸ் காவல் இருக்குது... லிப்ஸ்ரிக் + மீசையுடன்:))
ஓடி வாங்கோ ஓடிவாங்கோ.. எங்கள் வலையுலகத் தேவதை.. அதிராவின் அன்பு எதிரி:).. பாசக்காரப் பெரியம்மா (டெய்சியின் முறையில ஜொன்னேன்:))..  ஹா ஹா ஹா ஹையோ கலைக்கிறாவே:)
இடிக்கப்பூடாது அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னையும் பேர்த்டேப் போட்டோக்குப் போஸ் குடுக்க விடோணும் :)

இரண்டடிக் ஹீல்ஸ் க்கு சொந்தக்காரர்:).. கிச்சினைத்திறந்து, சமைக்காமலேயே, தான் சமையலில் வில்லி எனச் சொல்லித் திரிபவர்:).. கட்டிலுக்குக் கீழே ஒளிச்சிருந்தபடியே, தான் பெண்களுக்குக் குரல் கொடுக்கும் தீவிரவாதி:) என முழங்குபவர்:).. கண்ட நிண்ட பூச்சி, புழுக்கள் எது நகர்ந்தாலும்:) அவற்றோடு நின்று, வீட்டில் சமைப்பதைக்கூட மறந்து பேசிவரும்:).. பிரியமான பூச்சிகளின் தோழி:)  இப்பூடிப் பலபல பட்டங்களோடும் புகழோடும் வாழ்ந்து வரும்.. 

காகிதப்பூக்கள் , பேப்பர்கிராஃப்ட் புளொக்குகளின் ஓனர்:) அஞ்சுவுக்குப் .... 04/12/17
பிறந்தநாள்... இன்று பிறந்தநாள்...
பிள்ளைகள்போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்தநாள்....

இதில் வெள்ளையா நடுவில் இருக்கும் அப்பாவிதேன் நான்:).. மற்றது கீதா, அஞ்சு, அம்முலு ஆக்கும்:))

இந்தப் பதினேழாம் ஆண்டில் தனது 66 வது [பிரட்டிப் போட்டாலும் 66 தேன்.. மீ இதில ரொம்ப விபரமாக்கும்:)]  பிறந்ததினத்தைக் கொண்டாடும் அஞ்சுவுக்கு.. ஆண்டவர் நல்ல ஆயுளையும், நிரந்தர மகிழ்ச்சியையும், நலம் நிறைந்த வாழ்க்கையையும்.. மற்றும் அனைத்து செல்வங்களையும் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...
ந்தப்பாடல் என் கண்ணில் பட்டு இப்போ கிட்டத்தட்ட ஒரு வருடமாகுது, கேட்ட உடனேயே இதை அஞ்சுவின் பிறந்தநாளுக்கு வெளியிடலாமே என சேஃப் பண்ணிப் பத்திரமாக வச்சிருந்தேன்ன்.. இதை முன்பு எப்பவுமே கேட்டதில்லை நான்.. நீங்கள் கேட்டிருக்கிறீங்களோ? முழுமையாகக் கேழுங்கோ.

==================================================================================
மற்றும் இம்மாதம் 1ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடிய கெள அண்ணனுக்கும், வரும் 8ம் திகதி தன் பிறந்தநாளைக் கொண்டாடும் கோபு அண்ணனுக்கும், திகதி தெரியாது ஆனா டிசம்பரில் பிறந்தநாளைக் கொண்டாடும் சகோ கில்லர்ஜி க்கும்.. , சகோ தனிமரம் நேசனுக்கும் மற்றும் பிறந்தநாளை இம்மாதம் கொண்டாடும் அனைவரையும்.. வலையுலக ஓனர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்..._()_.
==================================================================================
ஆங்ங்ங்ங் பொயிண்டுக்கு வந்தாச்ச்ச்ச்சு:).. கொண்டு வாங்கோ கொண்டு வாங்கோ.. பிரசண்ட்டை எல்லாம் பவுண்ட்ஸ் ஆ மாத்தி இந்த உண்டியலில் போடுங்கோ:) நான் அஞ்சுவுக்கு வைர நெல்க்லெஸ் செய்து குடுக்கப்போறேன்ன்:))
-----------------------------------------------------------------------------------------------
தமனாக்காவை அன்போடு டச்சு செய்ய:)
_________________()________________

Tuesday 28 November 2017

தேடி வந்த பொக்கிசம் - ஸ்கிப்பி:)

ன்று சதுர்த்தி, அப்போ சதுர்த்தி எனில் பகல் முழுக்க சாப்பிட மாட்டேன், இரவு பிள்ளையாருக்குப் பூசை முடிஞ்சு, சுவாமி வெளிவீதி சுத்துவார், அது பார்த்து வந்தபின்னர்தான்.. புட்டுச் சாப்பிட்டு விரத்தத்தை முடிப்பேன், அதிலயும் பாருங்கோ, மாமி வீட்டுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோயில் எனில், 5 மணிக்கு எல்லாம் வெளிவீதி சுத்தி முடித்து விடுவார்கள், நமக்கும் களைப்பிருக்காது. 

Monday 20 November 2017

ரவுள் நீளுதே:)

தேம்ஸ் இல் குதிப்பேன் காசிக்குப் போய்
நிரந்தரமாகத் தங்குவேன்:)
என மிரட்டியும் - நீ
வர மறுக்கிறாய்..!!

Thursday 16 November 2017

தானாக வந்த வைரவர்:)


லங்கையில் இருந்த காலத்தில் எப்பவும் வீட்டில் ஒரு நாயும், பூனையும் நம்மிடம் இருக்கும்.  பின்னர் நாட்டுப்பிரச்சனைகள் அதிகமாக, கொஞ்சக்காலம் சொந்த ஊரில் போய் இருந்தோம். அப்போ இனி எந்தப் பிராணியும் வளர்ப்பதில்லை, என மனதில் நினைத்தாயிற்று. எங்கள் ஊரில் ஒரு வழக்கம் இருந்தது [இப்ப குறைந்துவிட்டது, இல்லாமல் போய் விட்டதென்றும் சொல்லலாம்:(].

ஒருவர் வீட்டிலிருந்து, அடுத்தவர் வீட்டுக்குப் போவதாயின், முன் கேற் வழியாகப் போகத் தேவையில்லை. ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இடையேயுள்ள வேலியிலே "பொட்டு" என்று சொல்வார்கள். அது எப்படி என்றால், ஒரு 3 அடி உயரத்தில் "n" வடிவத்திலே அழகாக நிலத்திலிருந்து வெட்டிவிடுவார்கள் வேலியை. சின்னப் பிள்ளைகள் நாய் பூனை எல்லாம் போய் வரலாம். பெரியவர்கள் இருந்து/ குனிந்து போக வேண்டும். இப்பாதையைப் பெண்களும் குழந்தைகளுமே பாவிப்பார்கள். ஆண்களெல்லாம் கேற்றைத்தான் பாவிப்பார்கள்.

ஊர் என்பதால் பெரும்பாலும் அந்த ஏரியா முழுவதும் ரத்த பந்தமாகவே இருப்பதால், இப்படி ஒரு முறை வந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட வீடுகளுக்கு மாத்திரம் இப்படித் தொடர்பு இருக்கும். பக்கத்துக் கோயிலுக்கு/ கடைக்கு போவதானால்கூட, இந்த உள் பாதையாலே போவார்கள். அப்போ, போக வர ஒவ்வொரு வீட்டுக்காரரோடும் கதைத்துக் கதைத்துப் போவார்கள். பிள்ளைகளும் இதேபோல் அடுத்த வீடுகளுக்குப் போய் விழையாடி வருவார்கள், அதனால் பாதுகாப்பும் அதிகம். பின்னர் மதில் வந்த போதும் பெரும்பாலும் மதில் கட்டியவர்களும் பழக்கத்தை மாற்றாமல், ஒரு சிறிய கேற் போட்டார்கள்.

இதேபோல் எங்கள் வீட்டுக்கு பின்னாலே இருந்த வீட்டுக்காரர்கள், தம் மகளுக்காக, எங்கள் பின் மதிலோடு, புதிதாக வீடு கட்டி, மகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தார்கள். எங்கள் வழக்கப்படி, மாப்பிள்ளைதானே பெண் வீட்டுக்கு வந்திருப்பார். அதேபோல் இப்புது மாப்பிள்ளையும் அப் புதுவீட்டுக்கு வந்து, மனைவியுடன் குடியேறினார். அவர் வேறு ஊர்க்காரர் என்பதால், அவருக்கு தன் வளவால் மற்றவர்கள் போய்வருவது பிடிக்கவில்லை:). எங்கள் மதிலில் கேற் இருந்தபடியால் அதை அவர் ஒன்றும் செய்ய முடியாது போயிற்று.

அதனால் தன் வீட்டுக்கு அடுத்தவர்கள் வந்துபோகும் அந்த "பொட்டுப் பாதையை" மறிக்க நினைத்தார்:). அவரும் நல்லவர்தான், பயந்த சுபாவமுடையவர், பெரிதாக யாரோடும் கதைக்க மாட்டார், கொஞ்சம் கூச்ச சுபாவமுடையவர். அதனால் அவரால், யாருக்கும் வாயால் சொல்ல முடியவில்லை, இப்பாதையைப் பாவிக்க வேண்டாம் என்று. அவர் மனைவியும் எதையும் பொருட்படுத்தமாட்டார், நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள் என்பதுபோல், தான் முன்பு பழகியபடியே அப்பாதையை பாவித்தார்.

இதனால் புது மாப்பிள்ளை, பாதைக்கு கல்லு வைத்து தடுத்தார். போய் வருபவர்கள் கல்லை எடுத்துப் போட்டுவிட்டுப் போனார்கள். தடிகள் வைத்து மறித்தார், அதையும் இழுத்து எறிந்துவிட்டுப் பாதையைத் தொடர்ந்து பாவித்தார்கள்[ஹா ஹா ஹா ஏனெனில் இரு பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது]. 

எதுவுமே சரிவராததால், புது மாப்பிள்ளை யோசித்தார், இனி நல்ல சாதி நாய் ஒன்று வளர்த்தால் ஆட்களைத் தடுக்கலாம் என்று. தன் நண்பன் ஒருவரிடம் "அல்ஷேஷன் குறொஸ்" ஒன்று இருந்தது, அதன் குட்டியைக் கேட்டு வைத்தார். அது குட்டி போட்டு கிட்டத்தட்ட நான்கு மாதக் குட்டியாக ஒரு குட்டியை வாங்கி வந்தார். அல்ஷேஷன் சாதி என்பதால், நான்கு மாதத்திலேயே நல்ல உயரம்கு, பளபள எனும் சுத்தக் கறுப்பு நிறம். குரலும் ஒரு கம்பீரம். குலைத்தால் அதிரும். அக்குட்டியை அவரது நண்பரோடு கொண்டுவந்து இவர் தன் முற்றத்து சண்ஷெட் தூண் ஒன்றில் கட்டியாச்சு.

ஆனால் இவருக்கும் நாயென்றால் கொஞ்சம் பயம்போல:). அதனாலோ என்னவோ, அக் குட்டிக்கு கிட்டப் போகப் பயந்தார். இதைக்கண்ட அக்குட்டி, இவரைப் பார்த்து குலைக்கத் தொடங்கிவிட்டது. இவர் மனைவி சொல்லிக்கேட்டது, உங்களுக்கேன் தேவையில்லாத வேலை என்று. ஒரு இரவு முடிந்துவிட்டது. இவர், குட்டிக்கு கிட்டப் போகவுமில்லை, குட்டியை அவிழ்த்து விடவுமில்லை:). அடுத்தநாள் விடிய எப்படியோ ஒரு மாதிரி சங்கிலியைக் கழட்டி விட்டார். கழட்டியதும், பின்னர் கட்டுவதற்காகக் கிட்டப் போனார், அது குலைக்கத் தொடங்கிவிட்டது.

இவர் பின்னாலே மெதுவாகப் போனார், எங்கள் பின் கேற் திறந்திருக்கிறது, குட்டி அதனூடாக எங்கள் பின் வாசலுக்கு வந்துவிட்டது. அவரும் பின்னாலே சங்கிலியோடு வந்தார். எனக்கு அக் குட்டியையும் அதன் முகத்தையும் பார்த்ததுமே அப்படியே மனம் பிடித்துவிட்டது. எமக்கு நாய் பூனை வளர்த்துப் பழக்கமென்பதால், நான் எங்கள் பரம்பரை நாயாரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன், குட்டி வாலாட்டியபடி என்னருகில் வந்தது.

தடவியபடியே சொன்னேன், இப்போ சங்கிலியைக் கொண்டு வந்து கட்டுங்கோ என்று. அவரைப் பார்த்தாலே குட்டி உறுமியது. அவரது குரல், அதன் காதில் கேட்டதும் பெரிதாகக் குலைத்தது. இதனால் பயந்துபோய், அவர் சங்கிலியை என்னிடம் தந்து சொன்னார், ஒருக்கால் கட்டிவிடுவீங்களோ என்று. நான் கட்டிவிட்டேன், அப்போ அவர் சொன்னார், கொஞ்ச நேரம் குட்டி இங்கே இருக்கட்டும், நான் பின்னர் வந்து கூட்டிப் போகிறேன் என்று போய்விட்டார். நான் எங்கள் மரமொன்றில் கட்டி சாப்பாடும் போட்டேன், அது சாப்பிட்டு விட்டு நித்திரை கொண்டது. ஆனால் மதில்கரையில் அவர் குரல் கேட்டால் மட்டும் பெரிதாகக் குலைத்தது ஹா ஹா ஹா..

எனக்கென்னவோ அந்த நாய்க்குட்டியை, விட மனமே இல்லை. அம்மாவிடம் சொன்னேன், நாங்களே வளர்ப்போம் என்று. அம்மா சொன்னா, இது அவருடையதுதானே, ஆனால் அவரிடம் இக்குட்டி போகும்போல் தெரியவில்லை, எதற்கும் பொறுத்துப் பார்ப்போம் என்று. பின்னேரம் ஆகியது. புது மாப்பிள்ளை மதிலால் எட்டிப்பார்த்துச் சொன்னார், ஒருக்கால் நாய்க்குட்டியைக் கொண்டுவந்து எங்கள் தூணில் கட்டிவிடுவீங்களோ என்று. குரல் கேட்டதும், கண்விழித்த குட்டி குலைக்கத் தொடங்கிவிட்டது. அம்மா சொன்னா, நீங்கள் வந்து அவிழ்த்துக்கொண்டு போங்கோ என்று.

மாப்பிள்ளை நல்ல உஷாராக வந்தார். நாய்க்குட்டி எழும்பிப் பாய்ந்து பாய்ந்து குரைத்தது. அவருக்குக் கோபம் வந்துவிட்டது, ஏய் சத்தம் போடாதே என உறுக்கிப்பார்த்தார். அது விடாமல் குரைத்தது, எனக்கும் அம்மாவுக்கும் சிரிப்பை அடக்கமுடியாமல் அவதிப்பட்டோம். கடைசியில் அவருக்கு முடியாமல் போகவே, சொன்னார் கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும் என்று. அன்றுமுதல் அக்குட்டிக்கு எங்கள் பரம்பரைப் பெயரை வைத்து வளர்க்கத் தொடங்கினோம்.
=======================INTERVAL========================
=======================INTERVAL========================
 நான் தான் அதன் எல்லாப் பொறுப்பும். எல்லாமே நேரத்துக்குச் செய்வேன். காலையில் கட்டுவது, மாலையில் சாப்பாடு வைத்துவிட்டு, அவிட்டுவிடுவது. பகலில் தேவைப்பட்டால் அவிழ்ப்பது. எல்லோரையுமே வழமைபோல் எங்கள் வளவால் போய்வர நாய்க்குட்டி அனுமதித்தது. ஆனால் சிலபேரை மட்டும் கண்டாலே அவருக்குப் பிடிக்காது. அந்தப் புதுமாப்பிள்ளை நம் வளவினுள் கால் வைக்கவே முடியாது:), மதிலால எட்டிப் பார்த்தாலே வள் வள் எனக் கத்தியது.. ஹா ஹா ஹா:).

அதை நாய்க்குட்டி என்று சொல்வதே தப்பெனப் படுகிறது. கதைக்க மட்டும் தெரியாதே தவிர, மற்றதத்தனையும் அதற்குத் தெரியும். நாம் சொல்வதெல்லாம் புரிந்துகொள்ளும், பதிலுக்கு தானும் ஊ..... ஊ..... என என்னோடு கதைக்கும். என் சட்டையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல், வாயால் என் சட்டையைக் கடித்து இழுப்பார். எனக்கு பொழுது போகாதுவிட்டால், முற்றத்தில் நின்று, அவர் பெயரைச் சொல்லி, என் கையை உயர்த்தி இரு விரல்களால் சுண்டுவேன், உடனே விளையாடத் தொடங்கிவிடுவார். ஆளும் நல்ல உயரம். என் தோள்வரை பாய்ந்து பாய்ந்து விழையாடும், விடவே மாட்டுது, கடைசியில் நான், அம்மா, அம்மா என்று கத்தினால், அம்மா "டேய்" என்று ஒரு குரல் கொடுத்தால் போதும், மிக நல்ல பிள்ளையாக கண்ணை உருட்டி உருட்டிப் பார்க்கும் அம்மா எங்கே நிற்கிறா என்று. அம்மாவைக் காணவில்லையாயின் மீண்டும் என் மீது பாயத் தொடங்கிவிடும்.

காலையில் அம்மாதான் வழமையாக எழுந்து கதவைத் திறப்பா. நான் என் அறையில் படுத்திருப்பேன். கதவை அம்மா திறந்ததும்தான், நேரே ஒரே ஓட்டமாக என் கட்டிலுக்கு வந்து, ஒரே பாய்ச்சலில் என் மீது ஏறி, தன் முதுகை என்மீது வைத்து புரளும், இருபக்கமும் புரளும், சில நாட்கள் நான் நித்திரையில் திடுக்கிட்டு விழிப்பேன். அம்மாவுக்கு மட்டும் பயப்படும் , அம்மாக்கு தெரியும் நேரே என் அறைக்குத்தான் வந்திருப்பார் என்று, அம்மா, "டேய் வெளியே வாடா" என்பா, உடனே ஓடிப்போய் அறைகதவுக் கேட்டினோடு நின்று என்னையும் அம்மாவையும் பார்க்கும். அம்மா போனால் மீண்டும் ஓடிவந்து புரளும். நான் எழுந்து வெளியே போகும்வரை இது நடக்கும்.

எங்கள் வீட்டுக் கோழிகளை அவருக்கு அடையாளம் தெரியும். கோழிகள் அவர்மீது ஏறி உளக்கிக்கொண்டும் போகும், காணாதவர்போல் படுத்திருப்பார். ஆனால் தப்பித்தவறியும் அடுத்த வீட்டுக் கோழி வளவுக்குள் வந்திடக்கூடாது, பாய்ந்து கலைக்கும், சிலவேளை கோழிகள் மேலே எழும்பிப் பறக்கும். இதனால் பக்கத்து வீட்டுக்காரரும் நினைத்திருக்கலாம், நாம்தான் கலைக்கிறோம் என்று. ஆனால் எமக்கே தெரியாவிட்டாலும் நாய்ப்பிள்ளைக்கு அடையாளம் தெரிந்துவிடும்.

நான் காலையில் எழுந்து ரீ குடித்த பின்னரே அவரைக் கட்டுவேன். நான் ரீ குடிக்கும்போது, என்னைப்பர்த்து வாலாட்டும், கொடுக்காவிட்டால் ஊ..... ஊ.... என்று கேட்கும், அதன்பின்னர் அவரது டிஷ்ஸிலும் கொஞ்சம் ஊத்துவேன் குடிப்பார். ஆனால் எனக்கு இப்ப நினைக்க கவலையாக இருக்கு, நான் குடிக்கும்போது அவருக்கும் ஆத்திக் கொடுத்திருக்கலாம், அந்நேரம் எனக்கு கிட்னி:) வேலை செய்யவில்லை. இப்பத்தான் கவலைப்படுகிறேன். பால் காய்ச்சிக் கொடுப்போம், ஆனால் நான் குடிக்கும்போது கொடுக்க நினைப்பதில்லை. அவர் கேட்டால் மட்டுமே கொடுப்பேன். அவரும் தினமும் கேட்பார்:).

நாங்கள் சைவமான நாட்களில் அவருக்காக, எலும்பு/ கருவாடு வாங்கி புறிம்பாக சமைத்துக் கொடுப்போம். சைவம் அவருக்குப் பிடிப்பதில்லை. தினமும் இரவில் அவரது தட்டிலே சாப்பாட்டை வைத்து, ஆளை அவிட்டு விடுவோம். சாப்பிட்டு விட்டு போவார். கொஞ்ச நாளாகப் பார்த்தோம், முக்கால்வாசிச் சாப்பாடு மட்டுமே சாப்பிடுவார், கால்வாசி பிளேட்டில்
இருக்கும். கொஞ்சம் தள்ளிப்போய் படுத்திருப்பார். சாப்பாட்டை யாரும் எடுத்துவிடாதபடி காவல் காப்பதுபோல். நாங்கள் பிளேட்டுக்கு கிட்டப் போனால் ஓடிவந்து மிகுதியையும் சாப்பிடுவதுபோல் பாவனை செய்வார், ஆனால் சாப்பிட மாட்டார். கொஞ்ச நேரம் பொறுத்து மீண்டும் போனால் சாப்பாடு முடிந்திருக்கும். இது என்ன மர்மம் எனக் கண்டு பிடிக்க வேண்டும் என்று, ஒருநாள் சாப்பாட்டை வைத்துவிட்டு ஒளித்திருந்து பார்த்தோம்.

வழமைபோல் இவர் முக்கால் வாசியைச் சாப்பிட்டார், கால்வாசியை மிச்சம் வைத்துவிட்டு போய்த் தள்ளிப் படுத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் மற்ற மரத்துக்கு கீழே ஒரு சத்தம் கேட்டது, யாரோ நடப்பதுபோல், உடனே இவர் ஓடிச் சென்றார், ( அது அடுத்த வீட்டுப் பொம்பிளை:), இவரது காதலி:)), முகத்தோடு முகம் வைத்து கதைப்பதுபோல் பாவனை செய்தார், உடனே அவ இவரோடு வந்தா, பிளேட்டுக்கு கிட்ட கூட்டிவந்துவிட்டார், அவ சாப்பிட்டா, இவர் பார்த்துக்கொண்டிருந்தார், சாப்பாடு முடிந்ததும் இருவரும் ஓடி ஓடி விளையாடியபடி போனார்கள்.

இதைப் பார்த்து எங்களுக்கு நம்பவே முடியாமல் போய் விட்டது. ஒரு நாய், இப்படி மனிதர்கள் போல நடந்துகொள்கிறதே என்று. அவரை பப்பி என்பதைவிட ஒரு தம்பி என்று சொல்லலாம். அந்தளவிற்கு அறிவு இருந்தது. சனிக்கிழமைகளில் தவறாமல், சம்போ போட்டுக் குளிக்க வார்த்து துடைத்துவிடுவேன். கறுப்பு உடம்பு பளபளவென்று மின்னும். குளிக்க வாடா என்றால், உடனே வந்து குளிக்கும் இடத்தில் நிற்பார். இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். அதுதான் கடைசியாக நாங்கள் வளர்த்த பப்பி. அதன் பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை வளர்க்க. இதோடு சேர்த்து பூனையும் வளர்த்தோம், அதன் கதையையும் சொல்லி, இவரது முடிவையும் அதில் சொல்கிறேன். அந்த பப்பியாரை, நாங்கள் வளர்த்தது கிட்டத்தட்ட 3 வருடங்களே, பின்னர் கைவிட்டோம். இப்போ நினைக்க மிகவும் கவலையாக இருக்கு. பூஸாரின் கதையோடு, நாயாரை ஏன் கைவிட வேண்டி வந்தது என்பதனைப் பின்பு சொல்கிறேன்.

ஊசி இணைப்பு:
எப்பூடிப் பிடிக்கலாம்?:)..

YYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYY

__________________________()________________________

Friday 10 November 2017

ச்சைப்ஜ்ஜி:)

பஜ்ஜி உறைக்குதோ?:)
வ்வ்வ் பஜ்ஜி பஜ்ஜி.. ஓடிவாங்கோ ஆளாளுக்கு ஒன்று மட்டும் எடுங்கோ. எங்களுக்கு தமிழ்க் கடை வந்ததிலிருந்து என்பாடு கொண்டாட்டமாகவே இருக்குது. எனக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கக்கூடியதாக இருக்கே.

Monday 6 November 2017

சிரிச்சுக் கன நாள் ஆச்சு:)..  சிரிக்கலாம் வாங்கோ:)

சிரிக்கலாம் வாங்கோ என அம்பாக்:) கூப்பிட்டால், சிரிச்சுக்கொண்டே வரோணும்:) சொல்லிட்டேன்:)..

Wednesday 25 October 2017

ஒரு கிடாயின் கருணை மனு:)


து என்ன தலைப்பே புதுசா இருக்கே எனத்தானே ஓசிக்கிறீங்க:).. இப்போ சமீபத்தில, இந்தமாதம் தானாக்கும் வெளி வந்த கிடாய்:)...

Thursday 19 October 2017

அன்புள்ள ஜெபா ஆன்ரிக்கு:(

உங்கள் ஆத்மா அமைதியடையவும், நிம்மதியான உறக்கம் கொள்ளவும் ...நாம் பிரார்த்திக்கிறோம்.

இமாவின் அம்மா , ஜெபா ஆன்ரி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் எனக் கேட்டதிலிருந்து பல பழைய நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது..

2008 ஆம் ஆண்டென நினைக்கிறேன், அறுசுவைத் தளத்தில், ஜெபா எனும் பெயரோடு ஒருவர் வந்து, இடைக்கிடை ஒரு வரிக் கொமென்ட்ஸ் போடுவார், என் எழுத்துக்களை ரசிப்பார், அப்போ நான் நினைச்சேன் குட்டிப் பெண்ணாக இருப்பா என, ஜெபா ஜெபா என அழைத்தேன்... பின்னர் சில காலங்களின் பின்புதான் தெரிந்தது அவ இமாவின் அம்மா என...
அன்றிலிருந்து மனம் சங்கடமாகி விட்டது இவ்வளவு பெரிய ஒருவரையா பெயர் சொல்லி அழைத்தேன் என, பின்பு ஜெபா ஆன்ரி எனக் கூப்பிடத் தொடங்கினேன்.

அவவும் ஒரு புளொக் வைத்திருந்தா, அங்கும் நாம் போய் அவ போடுவதை எல்லம் ஊக்கப்படுத்துவோம்,  2010,11 இலிருந்து அவவுக்கு முடியாமல் போய் விட்டது எழுதுவதை நிறுத்தி விட்டா என நினைக்கிறேன்...

இப்போ இந்த மாதம் இமா புதுப் போஸ்ட் போட்டபோது, முதலாவதாக ஜெபா ஆன்ரி நலமோ எனத்தான் கேட்டேன், இல்லை அதிரா:(, இனி அவ நலமாவா எனச் சொல்ல முடியாது என்றா, சொல்லி ஒரு மாதம் கூட முடியவில்லை, ஜெபா ஆன்ரி மறைந்திட்டா...

ஜனனம் என்ற ஒன்று இருப்பின் மரணம் என்பதும் இருக்கும் தானே, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனத்தைரியத்தை அனைவரும் வளர்த்துக் கொள்வோம்..

ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

"ஆண்டாண்டு தோறும், அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ?"

எனக்கு என்ன எழுதுவது எப்படி எழுதுவது என தெரியவில்லை, மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன், என் கொம்பியூட்டர் வேறு மூட் ஓவ் ஆகி இருக்கு , அதனால எழுதுவதும் கஸ்டமாக இருக்கு, இப்பதிவை தமிழ் மணத்தில் இணைக்கிறேன், ஆனால் யாரும் இம்முறை இப்போஸ்ட்டுக்கு வோட் போட வேண்டாம்...
நன்றி,
அதிரா.

Thursday 5 October 2017

ஓவி... என்னை மன்னித்து விடு..:(

இம்முறை நம்ம ஏரியாவில்... நெல்லைத் தமிழனால் கொடுக்கப்பட்ட கருவுக்கு, கதை எனும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்:), நன்றாக இல்லை எனில் மன்னிச்சுக்கோங்கோ.. இது ஒரு உண்மைச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு.. சிலபொய்களை சேர்த்து, பூசி மெழுகி எழுதியிருக்கிறேன்.- _()_

Tuesday 3 October 2017

திருமணமான புதுமணத் தம்பதிகள் இதைப் பார்க்க வேண்டாம்:)

சரி சரி வாங்கோ வாங்கோ... பத்து வசனம் சொல்வதை, ஒரு படம் விளக்கிடும்:).. அதனால படம் படமாப் போடுவதில் ஒண்ணும் தப்பில்லையே:) [ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடி எல்லாம் ஜொள்ளிச் சமாளிச்சுப் படம் காட்ட வேண்டிக்கிடக்கு:)].. ஓகே கடலில் குதிக்கலாம் வாங்கோ:)..

Monday 25 September 2017

_()_அதிரா வீட்டில் மாவிளக்கு_()_

து எல்லோருக்கும் தெரிஞ்ச மாவிளக்குத்தான், இருப்பினும் அதிரா வீட்டுக் கன்னி மாவிளக்கு இது:).. இந்த மாவிளக்கை நினைச்சாலே பல சம்பவங்கள் கூடவே ஒட்டிக்கொண்டு வந்து விடுகிறது...

இது திங்கட்கிழமை:) அங்கே:) வர வேண்டிய ரெசிப்பி:) அங்கு ஞாயிறு, திங்கள் ஆனமையால் ...இம்முறை இங்கு வந்திருக்கு:).. ஹா ஹா ஹா:).

ஸ்ஸ்ஸ் இப்பூடிக் கண்ணாடியோடு இருந்திட்டால், ஆரும் திட்டினாலும்.. எந்த ரியாக்‌ஷனும் முகத்தில் காட்டிடாமல் புன்னகையோடு இருந்திடலாம்:)

நாங்கள் எப்பவும் மாவிளக்குப் போடுவது தினை/சாமி மாவில்தான்.  ஊரில் யாரும் அரிசிமாவில் போட்டு நான் பார்த்ததில்லை. சின்ன வயதிலிருந்தே நிறையச் சாப்பிட்டிருக்கிறேன், சூப்பராக இருக்கும், ஆனா செய்ததில்லை.

எங்கள் மூத்த மகன் பிறந்தபோது, அம்மா நேர்த்தி வச்சிட்டா, கதிர்காமம் போய் அங்குதான் முதல் மொட்டை போட்டு, கங்கையில் நீராடி, மாவிளக்கும் கோயிலில் போடுவோம் என. நாங்கள் எப்பவும் குழந்தை பிறந்து முதன்முதலில் மொட்டைதான் போடுவோம், பின்னர்தான் ஸ்டைல் ஸ்டைலா வெட்டுவதெல்லாம்.

அதனால, சரி நேர்த்தியை நிறைவேத்தலாம் என கதிர்காமம் போனோம் . மொட்டை போட்டாச்சு:)..

அங்குதான் அம்மா செய்துதர நான் மாவிளக்கு ஏற்றினேன்.. எப்பூடி அதிராவின் அந்த மாவிளக்கு அயகோ?:)..

பின்னர் எப்பவும் அதுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. தினையும் கிடைக்கவில்லை. இம்முறை தமிழ்க்கடையில் தினை பார்த்தபோது, ஆஹா நவராத்திரியின் ஒரு நாளைக்கு, மாவிளக்குப் போடலாமே எனும் ஆசை மேலோங்கி பொருட்கள் வாங்கி வந்தோம்..

^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^இடைவேளை^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^
இந்த விளக்கு எரிக்க எரிக்க பல பழைய பாடல்கள் மனதில் ஓடின... பல நினைவுகள் பரிமாறிக்கொண்டோம்:).. [ https://www.youtube.com/watch?v=_i8QMynY0qU] திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக... குலம் விளங்க எங்க வீட்டில் குடியிருக்க வருக...  மணமகள்(அது நாந்தேன்:)), கையில் மாலையோடு மணவறையை நோக்கி ஷையோடு:) நடந்து வரும்போது இப்பாடல் ஒலித்ததே:) [சிடியில் இருக்கு].

இத்தோடு இன்னொரு நினைவு.... எங்கள் அக்காவின் திருமணத்தின் போது, மணமகன்(அத்தான்)... மாப்பிள்ளை சூட்டோடு.. அலங்கரிக்கப்பட்ட காராலே இறங்கி, கழுத்தில் ரோஜாப்பூ மாலையுடன் மணவறையை நோக்கி வரும்போது.... “ராஜாத்தீஈஈஈஈஈஈ.. என்னைத்தேடி வருவாரே ராஜா.. ராஜா... ரோஜாப்பூஊஊஊ மாலை சூடி வருவாரே லேசா லேசா... எனும் பாடல் போட்டார்கள்.. என்ன ஒரு பொருத்தமாக இருந்தது.. இதில் இன்னொன்று அத்தானின் பெயரில் ராஜா இருக்கு:).
^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^
முக்கிய அறிவித்தல்:- முன்ன முன்னம் நான் செய்தமையால் மாவின் பதத்தில் கொஞ்சம் சொதப்பி விட்டது:).. அது என்னுடைய தப்பூஊ:)..  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதாரது சிரிக்கிறது:).. என்ன தப்பாச்சு எனச் சொல்கிறேன், நீங்கள் செய்ய நினைச்சால் திருத்திக் கொள்ளுங்கோ:).

தேவையானவை..
தினை, சக்கரை, தேன், வாழைப்பழம், நெய்.

இதில் தினை அரிசியை 2 மணிநேரம் ஊறவிட்டு, வடித்து எடுத்து பேப்பரில் போட்டு உலர்த்தி எடுங்கள்.[காய வைக்கச் சொல்லவில்லை, ஈரத்தைப் போக்கச் சொன்னேன்]

உலர்த்திய தினையை அரைத்து, மாவை எடுக்க வேண்டும்.[ நான் செய்த தவறு மாவோடு சக்கரையையும் சேர்த்து அரைத்து எடுத்தேன்].. அப்படிச் செய்யக்கூடாது. மாவை எடுத்து அதில் சக்கரையைத் தூளாக்கிச் சேர்த்து, தேன் சேர்த்துக் குழைக்கவேணும். அப்போது பதம் சரியாக விளக்கு பிடிக்க வரவில்லை எனில் கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழம் சேர்த்துக் குழைக்க வேண்டும். தண்ணி சேர்ப்பதில்லை.

நான் செய்த இன்னொரு தவறு, மாவைக் குழைச்சு, ஊறட்டுமே என ஒருமணிநேரம் விட்டு விட்டேன்.. அது இன்னும் கசிந்து மா நன்கு குழைந்துவிட்டது.

மாக்குழைத்த உடனேயே சுட்டி விளக்குகள்போல பிடித்து உடனேயே எரிக்கத் தொடங்க வேண்டும்.

விளக்கின் நடுவே இருக்கும் குழியில் நெய் ஊற்றி, எரிக்க வேண்டும்.

 இதற்கு நிறைய நெய் தேவைப்படும், நிறையத் திரி அல்லது திரிச்சீலையை நெய்யில் தோய்த்து விளக்கின் எல்லாப் பக்கமும் எரிய விடவேணும்.

 கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் எரிய மட்டும் எடுத்தது. சுவை சூப்பர் சுவை... இங்கு வாழை இலை கிடைக்காத காரணத்தால் விளக்கின் அடிப்பகுதி ஒட்ட்டியிருந்தது.. வாழை இலையில்தான் இதனை எரிக்க வேண்டும்.
========================================================================
மா விளக்கு சாப்பிட்ட மயக்கத்தில் இருப்பீங்கள்.. இந்த மயக்கத்தோடு எங்கே விரலைக் காட்டுங்கோ.. ஆங்ங்ன் இங்கின.. தம் அப்:)[இப்போ தெளிவாச் சொல்லாட்டில் பயம்ம்மாக்கிடக்கே:)] இங்கின தமனா அக்காவை டச்சு பண்ணுங்கோ:) பீஸ்ஸ்ஸ்ஸ்:).))

ஆவ்வ்வ்வ் மகுடம் கிடைச்சிட்டுதூஊஊ:)
========================================================================
ஊசி இணைப்பு:
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

Thursday 21 September 2017

ண்ளால் ப்டியும் ம் டுக்முடியுமோ?:)

ஹா ஹா ஹா தலைப்பைப் பார்த்து யாரும் பயந்திடாதீங்கோ:) இந்தக் காலத்தில உங்களை யாரும் இப்படி சபதம் எடுக்கச் சொல்லிக் கேய்க்கவே மாட்டோம்:).

2ம் பகுதியிலிருந்து கதை தொடர்கிறது.. வழமைபோல என் பாஷையில் மானே தேனே போட்டு எழுதுவதால், தவறுகள் வரலாம் மன்னிச்சிடுங்கோ:).. இதன்
முதல் பாகம் படிக்க இங்கு..
2ம் பாகம் படிக்க இங்கு..

Monday 18 September 2017

பகுதி ரெண்டு:) [இப்படியும்...:)]

த் தொடரின் முதல் பகுதியைக் காண.... இங்கின கையை வையுங்கோ..

இது உங்கள் யாருக்கும் தெரியாத கதை:)..  “ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:).. தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” இப்பூடித்தான் சொல்லோணும் ஓக்கே?:). ஹா ஹா ஹா. தொடர்கிறது...

“அகல்யா சொல்? யார் நீ? எதுக்காக நமக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் கொல்கிறாய்?.. இக்குழந்தை எனக்கு வேணும்..” என்கிறார்...