நல்வரவு_()_


Wednesday 23 November 2011

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்....

நிலவுக்குத் தெரியாது...
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் பூஸுக்குக் கிடையாது:)....



நிலவு எழும்பி வருவது தெரியுதோ? நான் படமெடுத்தது ஒரு மலையிலிருந்து, அதனால்தான் அம்புலிமாமா கீழே தெரிகிறார்.



இலை உதிர்ந்த மரங்களும் நிலவாரின் உதயமும்:))


பறந்தாலும் விடமாட்டேன்.... நான் நிலவுக்குச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்:)...


நாங்களெல்லாம் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து, தியானம், ஹீலிங், யோகா செய்வோமாக்கும்..க்கும்..க்கும்...:)) அதனாலதான்... சூரியன் எழும்பும் காட்சி... இது வேற:))


அருகிலே பாருங்கோ பயப்புடாமல் ஒரு பைலட்:) பிளேனைக் கொண்டு போயிருக்கிறாரே அவ்வ்வ்வ்வ்வ்:))).. அது பிளேன் போன அடையாளம்...:)))


காலைக் கதிரவன் தான், கண் விழிக்கும் முன் , நாம் எழும்போணும் ஓக்கை:))... நான் எனக்குச் சொல்லவில்லை:)))


இலை உதிர் காலம்....ம்ம்...ம்ம்ம்...


குட்டி இணைப்பு:)
நான் தொட்டிட்டனோ? தொட்டிட்டனோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 100 ஐத் தொட்டிட்டனோ எனக் கேட்டேன், கரீட்டா எண்ணிச் சொல்லுங்க மாயா:)), சிவா தப்புத்தப்பா எண்ணுறார்:). 

ஊசி இணைப்பு:))
அதிகாலையில் எழுந்து யோகாச் செய்வதால... இப்போ பாருங்கோ... உங்களால முடியுமோ?:))).

====================================================== 
“உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு, இடிக்குப் பயப்பட முடியுமோ? எதிர்கொண்டேதான் ஆகவேண்டும்”
======================================================

Thursday 17 November 2011

நாஆஆஆன் உன்னை அழைக்கவில்லை:)


இன்று ஒரு பகிடி ...:)) என் சொந்தக்கதை சோகக்கதையைக் கேளுங்கோ:))).



பார்ஷல் போஸ்ட் பண்ண வேண்டியிருந்தது. ஸ்கூலுக்குப் போகும்போது போஸ்ட் பண்ணிடலாம் என இருந்தேன். வேலை முடித்து வெளிக்கிட, நேரம் மட்டுமட்டாக இருந்துது. 25 நிமிடங்களே இருந்தன ஸ்கூல் முடிய.

கொஞ்சம் விரைவாகப் போனால் நேரம் போதும், ஸ்கூலுக்கு கொஞ்சம் தள்ளி போஸ்ட் ஓபிஸ், அங்குபோய் மீண்டும் திரும்பி வர வேண்டும் ஸ்கூலுக்கு.

சரி இன்று எப்படியாவது பார்ஷலை அனுப்பிடோணும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டேன்:) (நான் தான் சொன்னேனே, எதையாவது நினைத்தால், அதை உடனே முடிக்காதுவிட்டால், எனக்கு ஏதோபோல் இருக்கும்).

வழியில் ரோட் வேலை நடக்கிறது. அப்போ ஒரு பக்கம் கார்கள் பார்க் பண்ணியிருக்கு, மறுபக்கம் ரோட் திருத்தும் மெஷின்கள் பார்க் பண்ணி வேலை நடக்குது...

ரோட்டின் நடுவிலே உள்ள இடைவெளியால் போக வேண்டும். அது போதும் போகலாம். ஆனா எதிரே ஒரு பெரிய கார்.. அதில் ஒரு நல்ல வயதானவதான் ரைவர்.. அவ அந்த இடைவெளியால் எடுக்க முற்பட்டுவிட்டு, பயத்தில போலும், முன் பக்கத்தை மட்டும் கரைக்கு திருப்பி விட்டு, பின் பகுதி நடு ரோட்டிலே நிற்குது கார்.        எதிரே வந்து, கரையில் நின்ற என்னை, வா..வா.. என லைட் போட்டா, அவவின் பின்னாலும் பல கார்கள், என் பின்னாலும் பல கார்கள்.

இங்கே ஒரு முறை இருக்கிறது, கார் லைட்டை அடித்தால், நீங்கள் முதலில் காரை எடுங்கள், அல்லது வழி விடுகிறேன் போங்கள் என அர்த்தம்.

ஆனா அவதான் வர முடியும் நான் போக முடியாது, அப்போ நான் லைட் அடித்தேன் நீ வா என... அவ கையைக் காட்டினா நீ வா என.. கிழிஞ்சுது போ என எண்ணிக்கொண்டு, சரி அவ கூப்பிடுறா, வயதானவ, நான் கிட்டப்போவம் என, ஒரு மாதிரி வெட்டி எடுத்தேன், ஆனா அங்கால போக முடியாது....

 அவவின் கார் பின்பக்கம் புளொக் பண்ணிச்சுது, அவவோ அசையாமல் நிற்கிறா, அப்போ நான் விண்டோவைத் திறந்து மரியாதையாகச் சொன்னேன், பிளீஸ் கொஞ்சம் முன்னுக்கு எடுங்கோ என, அப்போ அவ சொன்னா, நான் பேவ்மண்ட்டில எல்லாம் ஏத்த மாட்டேன் என....  வேலில போன ஓணானை, வீட்டுக்குள் எடுத்துவிட்ட கதையாக என்னைக் கூப்பிட்டுப்போட்டு, இப்படிச் சொன்னால்... நான் என்ன பண்ணுவது..

நானோ என் கணவரோ, கார் ரயர் எல்லாம் பார்க்க மாட்டோம், பேவ்மண்டில் ஏத்தோணும் என்றாலும், கல்லோ முள்ளோ ரயர் போனால் மாத்தலாம், முதலில் பிரச்சனை தீரட்டும் என்றுதான் முடிவெடுப்போம்.... ஆனா இது எப்படியும் 70 வயதிருக்கும், சரியான மேக்கப்பும் போட்டிருக்கிறா, காரும் நல்ல புதுக்கார், இங்குள்ள வயசானோருக்கு, நல்ல பெரிய ரோட்டில் நேராக போய் பார்க் பண்ணித் திரும்புவினம், ஆனா இப்படி ஏதும் இடக்கு முடக்கென்றால், அவர்களால முடியாது, ரிவேசும் பண்ணக் கஸ்டப்படுவார்கள்... அதனால அப்படியே அசையாமல் நிற்பார்கள், நாம்தான் வெட்டி எடுக்க வேண்டும்.... அதுதான் பிரச்சனையே..

 என்னாலும் கோபிக்க முடியவில்லை, ஆனா ஒருவித விசராகிட்டேன், என் பக்கம் பேவ்மண்டும் இல்லை, இருந்திருந்தால் ஏத்தியிருப்பேன்..பின்பு மீண்டும் விண்டோவைத் திறந்து சொன்னேன், பிளீஸ் கொஞ்சம் அப்போ, பின்னால எடுக்கிறீங்களோ என, பின்னால் நின்ற காரெல்லாம் ரிவேஸ் எடுத்து, இடம் விட்டுவிட்டார்கள், இவவின் கார் boot  மட்டும் நடு ரோட்டில், அப்போ அவ சொன்னா.. என்ன ஜோக் பண்ணுகிறாயா? என்னால் பின்னுக்குப் போக முடியாது என்று...., சும்மா நிண்ட என்னை அவதானே வா வா எனக் கூப்பிட்டா, நான் நம்பியெல்லோ வந்தனான்... என மனதில எண்ணினேன், அதன்பின் மெதுமெதுவாக வெட்டி வெட்டிப் பின்னுக்கு எடுத்தா.... நான் கடந்து போய் விட்டேன்...

 “இதுவும் கடந்து போகும்” என மனதில் எண்ணிக்கொண்டேன்... ஆனாலும் உடம்பு ஒருவித டென்ஷனாகிவிட்டது, மனதில் ஒரு அரியண்டமான உணர்வு ஏற்பட்டது, கோபமல்ல. அதில் பத்து நிமிடம் போய் விட்டது.

பறவாயில்லை, போஸ்ட் ஓபிஷில் பார்க்கிங் இருக்கோணும் ஆண்டவா.. என எண்ணியவாறு விரைந்து போனேன், அங்கு பக்கத்திலே பொலீஸ் ஸ்டேஷன் இருக்கு, அதன் முன்னால்தான் சில நேரம் பார்க்கிங் கிடைக்கும் . அதில் சில பார்க்கிங் போலீசுக்கென ரிசேவ் பண்ணப்பட்டிருக்கும். அப்போ நினைத்தேன் பார்க்கிங் கிடைத்தால் இன்று, கிடைக்காதுவிட்டால், இன்று போய் நாளை வருவோம்.... இனி என்ன செய்வது என. ஆனா அங்கு ஒரு பார்க்கிங் இருந்துது. அப்பாடா என பார்க் பண்ணினேன்.

நல்ல மழை ஊஊ எனக் காத்தோடு பெய்து கொண்டிருந்தது. தொப்பியெல்லாம் போட்டு, கீழே இறங்கி பார்ஷல்களையும் நனைந்திடாமல் நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொண்டு, விறுவிறு என போஸ்ட் ஒபீஷை நோக்கி நடந்தேன்... அப்போ பின்னாலிருந்து பீம்...பீஈஈஈஈஈம் என கார்க் கோன் சத்தம் கேட்டுது.

இங்கு யாருமே கோன் பண்ணுவதில்லை, அப்படிப் பண்ணுவதாயின், ஆரையும் அவசரமாகக் கூப்பிட, அல்லது ஆராவது தவறு செய்தால் மட்டுமே. அப்போ கோன் சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன், என் ஜீப்பின் பக்கத்திலே போலீஸ் கார், அவர்கள்தான் கோன் பண்ணினார்கள்... எனக்கு ஏற்கனவே இருந்த டென்ஷனோடு, இன்னும் டென்ஷனாகிட்டேன். தொட்டில் பழக்கம்:), இப்பவும் போலீஸ், ஆமியைக் கண்டால் மனம் பதட்டமாகிவிடுது.

அப்போ, நான் அவர்களிடத்தில் பார்க் பண்ணிவிட்டேனோ, இல்லையே, சரியாகத்தானே பார்க்பண்ணினேன்... என்னில் எந்தப் பிழையும் இல்லையே, அப்போ ஏன் கூப்பிடுகிறார்கள், சரி புதுசாக ஏதும் சட்டம் வந்திட்டுதோ, அதில் பார்க் பண்ணப்படாதென, எனக்குத் தெரியாதுதானே, தெரிந்து செய்தால்தான் பயப்பட வேணும்.. என எண்ணியபடி திரும்ப நடந்து கிட்டப் போனேன், போலீஸ்காரர்கள், வானம் பார்ப்பவர்கள்போல இருந்தார்கள்.... கிட்டப் போய்க் கேட்டேன்... என்னையோ கூப்பிட்டீங்கள் என...

அப்போதுதான் திடுக்கிட்டவர்களாக... நான் உன்னை அழைக்கவில்லை....... என்றார்கள்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))). (பயந்திடாதீங்க... வெள்ளையர்கள்தான்:)) இவ்வளாத்துக்கும் 20 நிமிடம் செலவாகியிருக்கும், துன்பம் வரும்போது சிரிங்க... என அடிக்கடி நான் மனதில் எண்ணுவதுண்டு, அப்படித்தான் நினைத்து மனதில் ஹா..ஹா..ஹா.. என சிரித்துக்கொண்டே...

மீண்டும் போஸ்ட் ஓபிஷை நோக்கி ஓடினேன்.... நல்லவேளை அங்கு கியூ இருக்கவில்லை. பார்ஷல்களைப் போஸ்ட் பண்ணிவிட்டு, ஸ்கூல் வாசலுக்கு வரவும் பெல் அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

இவ்ளோ சிரமப்பட்டு அனுப்பிய பார்ஷல்கள் நேர காலத்தோடு, உரிய இடத்தில் கிடைத்திட வேண்டுமென, வேண்டச்சொல்லி நீங்களையும்:) கேட்டுக்கொள்கிறேன்.

இதைப் பின்னூட்டமாகப் போட நினைத்தே ரைப் பண்ணினேன்... ஆனா நீஈஈஈஈஈண்டு விட்டதால்... இதுக்கடிச்சது யோகம்... ஒரு தலைப்புப்போடக் கொடுத்து வச்சிருக்கு:))).

ஊசி இணைப்பு:
இதுதான் வழி எனத் தெரிந்தால், 
முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால் 
எது வழி எனத் தெரியாதபோது,
என்ன செய்ய முடியும்?..  
                                                                                                      .....கண்ண......தாசன்.
(((((((((((((((((((((((((((((((((*******************)))))))))))))))))))))))))))))))))

Tuesday 15 November 2011

“வீட்டில ஆருமே இல்லை”:)




இரவு 11.15 ஆகிவிட்டது, நித்திரை வரவில்லை, அப்போது... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஓ என் மொபைல் வைபிரேட் பண்ணுதே.. அடடா இந்த நேரத்தில மெசேஜ் ஆரிடமிருந்து.....

ஓ பூஸ் அனுப்பியிருக்கு... “வீட்டில ஆருமே இல்லை”... மெஷேஜ்ஜைப் பார்த்ததும் பதறிப்போய் எழும்புகிறேன்....

என்னாது வீட்டில் ஆருமில்லாமல் பூஸ் தனியா இருக்குதா?... இந்தச் சாமத்திலயா? சும்மாவே இருட்டென்றால் நடுங்கும் பூஸ், இப்போ எப்படித் தனியே வீட்டில் இருக்கப்போகுது, சே... பாவம், பயத்திலதான் எனக்கு மெஷேஜ் அனுப்பியிருக்கு.. இல்லாவிட்டால் இப்படி மெஷேஜ் அனுப்பாதே... 

அட சீ... என்ன பெற்றோர் இவர்கள், வயசுக்கு வந்த பெண்ணை தனியே விட்டுவிட்டுப் போயிருக்கினம், என்னதான் பாதுகாப்பானா ஏரியாவாக இருப்பினும் பொம்பிளைப்பிள்ளையைத் தனியே விட்டுவிட்டுப் போகலாமோ...  நான் ஒரு காதலனாக இருந்தும் இப்போ போகாவிட்டால் என்ன உபயோகம்?..

 ஓடிப்போய், அக்கா வாங்கி வைத்த சந்தன சோப்பைப் போட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து....

 அந்த ரீ ஷேட்டைத் தேடுறேன்...அன்று நண்பன் கார்த்தியோடு கடைக்குப் போன இடத்தில் ஒரு கொலர் வைத்த, நீல ரீ ஷேட் கண்டு வாங்கிவந்து, போட்டேன்...

அதைக் கண்ட தோழி அதிரா.. ஆ...முகில்.. நீ இந்த ரீ ஷேட்டில் சூப்பர் ஸ்மாட்டாக இருக்கிறாய், ஸ்லிம்மாகவும் தெரிகிறாய் எனச் சொன்னதிலிருந்து எங்கு போனாலும் அதைப்போடச் சொல்லியே மனம் சொல்லுது. அதிரா எனக்கு நல்ல தோழி... எதையும் பட்டெனச் சொல்லி, என்னை உஷார்ப்படுத்திவிடுவார்.

இப்போ அந்த ரீ ஷேட் போட்டு பூஸ் வீட்டுக்குப் போனால், ஆஹா... பூஸ் என்ன சொல்லுமோ. நல்ல வேளை, இன்று காலைதான் அம்மா “உதை எத்தனை நாளைக்குத்தான் போடுவாய்?” எனக் கேட்டபடி தோய்க்க எடுத்துப்போனா,  “இப்ப தோய்க்காதீங்கோ” என வாங்கி வச்சது நல்லதாகிவிட்டது.

அவசரமாக அதைப்போட்டு, என் பேவரிட் “CK” பேர்பியூமை நன்கு அடிக்கிறேன்.

பின்னேரம் கார்த்தி ஃபோன் பண்ணிக் கேட்டான்,  “மச்சான்!!!! மியாவ் தியேட்டரில ஏழாம் அறிவு படம் ஓடுது, வாறியா போவம்” என...

இல்லடா எனக்கு கால் நோகுது, மோட்டர் பைக் ஸ்ராட் அடிக்க கஸ்டம், இன்னொரு நாளைக்குப் போகலாம் என ஏதோ ஒரு யோசனையில் சொன்னது, இப்போ எவ்வளவு நல்லதாகிவிட்டது.

பல தடவை கடவுளைத் திட்டியிருக்கிறேன், நீ என்ன கல்லா... உனக்கெதுக்கு தேங்காயும் கற்பூரமும் என, ஆனா இப்பூடித்தான் அப்பப்ப எதையாவது செய்து, என் நம்பிக்கையை கூட்டிடுவார்...

 நான் படம் பார்க்கப் போயிருந்தால், இப்போ பூஸ் வீட்டுக்குப் போயிருக்க முடியுமோ?  ...

“பிள்ளையாரப்பா இப்ப சொல்றேன் கேட்டுக்கொள்.. நாளைக்கு காலையில, முதல் வேலையா, உனக்கு நான், புஸ்பா அங்கிள் கடையில, புகை வராத கற்பூரம் வந்திருக்காம், அதில ஒரு பெட்டி வாங்கிக் கொழுத்துறேன்..”..

என எண்ணியபடி, என் சன் கிளாஸசையும் தூக்கிப் போட்டேன், அதிராதான் சொன்னா.. நீல ரீ ஷேட்டுக்கு சன் கிளாஸும் போட்டுப் போகேக்கைதான் இன்னும் எடுப்பாயிருக்குதென, அதில இருந்து இருட்டிலயும் கழட்டுறேல்லை:))......

பூஸ் பகிடி பண்ணும்தான், அது இரவில பூச்சி அதிகம் அதுதான் எனச் சொல்லி சமாளிச்சிட வேண்டியதுதான்... நான் என்ன செய்தாலும் பூஸுக்குப் பிடிக்கும், என்னில நல்ல விருப்பம் எதுக்கும் கோபிக்காது.

ஆனா சரியான கண்டிஷன் எல்லாம் போட்டிருக்குது பூஸ், கிழமையில ஒருநாள் மட்டும்தான்.. நேரில சந்திப்போம், மற்றும்படி ஃபோன் மட்டுமே.

முந்தநாள்தான் சந்தித்தோம், இப்படி திடுதிப்பென ஒரு சந்திப்பு வருமென நான் கனவிலயும் நினைச்சிருக்கேல்லை, இண்டைக்கு விடிய விடியக் கதைக்கலாம். 

ஒரு அடியில மோட்டார் பைக் ஸ்ராட் ஆகிட்டுது, பூஸ் வீடு நோக்கிப் பறக்கிறேன்....

“செத்தாலும் உனை நான் விடமாட்டேன் - ஆனா
உன் உத்தரவு இல்லாமல் தொடமாட்டேன்” .... 

சே..சே... சிட்டுவேஷனுக்கு ஏற்றமாதிரி அப்பப்ப பாட்டு வேற வந்து தொலைச்சிடுது மனசில....

 ஆனா திருமணமாகும்வரை நான் ஒரு ஒழுக்கமான, நல்ல காதலனாக இருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்... அதையேதான் பூஸும் எதிர்பார்க்குது, ஆனா அதிலிருந்து கடுகளவும் நான் தவறமாட்டேன்.

சரியா 35 நிமிடத்தில பூஸ் வீட்டு வாசலில் நிற்கிறேன், மாலையானாலே சப்பரத் திருவிளா மாதிரி, எல்லா லைட்டையும் பயத்தில போட்டிடுமாம் பூஸ், ஆனா இன்று ஒரு லைட் கூட இல்லையே... பயத்தில போர்த்திட்டுப் படுத்திட்டுதுபோல, பாவம், நான் பதில் மெஷேஜ்ஜும் அனுப்பாமையால், நான் நித்திரையாக்கும் என நினைச்சிருக்கும்.

நொக்....நொக்...
நொக்...நொக்... கதவைத்தட்டுகிறேன்... ம்ஹூம் சத்தமில்லை.... பாவம் பயந்திடப்போகுது, எதுக்கும் ஃபோன் பண்ணுவோம்...

பூஸிட ஃபோன் ரிங் போகுது.....

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்....
நீ பேசாவிட்டால் நானும் பேச மாட்டேன்...

பூஸ் விழித்துக் கொண்டது...  “ஆஆஆஆஆ.. ஹலோ முகில்.. என்ன இந்த நேரத்தில?”...

முகில்: இல்ல பூஸ் வாசல்லதான் நிற்கிறேன் பயப்பிடாமல் கதவைத் திறங்க..

பூஸ்: ...ஙேஙேஙே.... எந்த வாசல்ல?

முகில்: உங்கட வீட்டு வாசல்லதான்...

பூஸ்: அதுதானே முகில்!!!! மெசேஜ் அனுப்பினேனே பார்க்கவில்லையா? “வீட்டில ஆரும் இல்லை” என்று. 

முகில்: அப்போ நீங்களும் இல்லையா பூஸ்?:(

பூஸ்: நாங்க காலையிலயே எங்கட அப்பம்மா வீட்டுக்கு வந்திட்டம், உங்களுக்குத்தான் தெரியுமே, என்னைத் தனியே விட்டு விட்டு, அப்பா அம்மா எங்கேயும் போக மாட்டார்களே!!!!.. ஃபோனில கதைக்க முடியாமல் போச்சா அதுதான் டெக்ஸ்ட் அனுப்பினேன்..., திருப்பி ஃபோன் பண்ணியிருக்கலாமெல்லோ?

முகில்: அது வந்து .. நேரில் (மனதில்... ஃபோன் பண்ணினால் வரவேணாம் எனச் சொல்லிட்டாலும் என்ற பயம்தான்:)) பேசலாம் என.. ஓக்கை.. ஓக்கை பூஸ், குட்நைட் நாளைக்கு பேசலாம்.....

 “பிள்ளையாரப்பா, நீ எல்லாம் ஒரு கடவுளா:))))? என்னை இப்படி ஏமாத்திப்போட்டியே? உனக்கு புகையில்லாத கற்பூரம் கேட்குதா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))”.

 கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்... வரும்போது ஒரு அடியில் ஸ்ராட் ஆன மோட்டர் பைக், இப்போ அடிக்க அடிக்க ஸ்ராட் ஆகாதாமே...

அவ்வ்வ்வ்வ்வ் வலிமை உடலிலல்ல... மனதில்தான்:))))...

“இதுவும் கடந்து போகும்”... வீட்டை நோக்கிப் பறக்கிறேன்.

இது பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு ஜோக், இரு வரியில் சொன்ன ஜோக்கை, நான் ஒரு கதையாக்கிட்டேன்.

====================================================
பின் இணைப்பு:

அவரா சொன்னார்.... ஈஈக்காது...
அப்படி எதுவும் ஈஈக்காது....
ஈஈக்கவும் கூடாது.... 
ல்லை....ல்லை.... நம்ப முடியவில்லை:))))..

(படிக்கும் காலத்தில் , நாம் எமக்குள் சொல்லிச் சிரிக்கும் ஒரு பாடல் வசனம்...)
======================================================

Wednesday 9 November 2011

இதுவும் கடந்து போகும்....


மியாவ் படம் பார்த்து ஆரும் சிரிச்சால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))

ஒரு அரச சபையிலே, ஒரு மந்திரி இருந்தாராம். அவர் மிகவும் புத்திசாலியாம். அங்கு எப்படிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லியே அனைவரையும் மடக்கிடுவாராம். அதனால அரசருக்கு கொஞ்சம் இந்த மந்திரியில் பொறாமையாம்.

அரச சபையில் அவர் இருப்பது, அரசருக்கு நல்லதுதானாம், இருப்பினும் பொறாமை காரணமாக, இந்த மந்திரியை எப்படியும் கலைத்திட வேண்டும் என அரசர் முடிவெடுத்தாராம். அவர் மிகவும் புத்திசாலி என்பதால், அவரை கலைப்பது சுலபமில்லை. எனவே ஏதும் முடியாத வேலையாக சொல்ல வேண்டும் என எண்ணி....

அந்த மந்திரியை அழைத்துச் சொன்னாராம்,  “எனக்கு அணிந்துகொள்ள ஒரு மோதிரம் வேண்டும், அந்த மோதிரத்தை, நான் துக்கமாக இருக்கும்போது பார்த்தால், எனக்கு சந்தோசம் கிடைக்க வேண்டும், அதேபோல சந்தோசமான நேரம் பார்த்தால், உடனே மனம் துக்கமாகிட வேண்டும்”,  என்று.

அதுவும் ஆறு மாதங்களுக்குள் கண்டுபிடித்து தர வேண்டும், இல்லையெனில் அரச சபையை விட்டு ஓடிப்போயிட வேண்டும் எனவும், அரசர் கட்டளையிட்டாராம்.

இதைக் கேட்டு, மோதிரத்தைத் தேடி மந்திரி புறப்பட்டாராம். ஒவ்வொரு இடமாக, ஊராகத் தேடுறாராம் எங்கேயும் அப்படி மோதிரம் கிடைக்கவில்லையாம்.

ஆறுமாதங்கள் முடியும் நாள் நெருங்கி விட்டதாம், மந்திரி, இனிச் சரிவராது என நினைத்த வேளை, ஒரு ரோட்டோரத் தட்டிக் கடையில், மோதிரங்கள் இருப்பதைக் கண்டு, அங்குபோய், இந்த நிபந்தனையைச் சொல்லிக் கேட்டாராம், உடனே கடைக்காரர் என்னிடம் இருக்கிறதே அப்படி மோதிரம், எனச் சொல்லி, எழுத்துக்கள் போட்ட மோதிரம் ஒன்றைக் கொடுத்தாராம்.

மந்திரிக்கு அதைப் பார்த்ததுமே கவலை மறைந்து மகிழ்ச்சி வந்துவிட்டதாம். அதை எடுத்துக்கொண்டு அரச சபைக்குப் போய்ச் சேர்ந்தாராம்.

இவரின் வரவைக் கண்டதும் அரசருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லையாம், ஏனெனில், மோதிரம் எங்கே கிடைத்திருக்கப் போகிறது, முடியவில்லை எனச் சொல்லிவிட்டு போயிடப் போகிறார் என சந்தோஷப் பட்டுக்கொண்டிருக்கும்போது, மந்திரி மோதிரத்தைக் கொண்டு வந்து “இந்தாருங்கள் அரசே, கண்டு பிடித்துவிட்டேன்” எனக் கொடுத்தாராம்.

அந்த மோதிரத்தைப் பார்த்ததுமே, அரசருக்கு சந்தோசம் மறைந்து, துக்கம் வந்துவிட்டதாம், காரணம் மந்திரி கண்டு பிடித்துவிட்டாரே என.

அந்த மோதிரத்தில் எழுதப்பட்டிருந்தது.. “இதுவும் கடந்து போகும்” எனும் மூன்று வார்த்தைகள்தானாம்.

இதேபோல்தான் மனித வாழ்வில் இன்பமோ துன்பமோ எதுவுமே நிலையில்லாதது, இன்று மகிழ்ச்சியாக இருக்கும்போது அதிகம் துள்ளப்படாது, இதுவும் கடந்து போகும் என எண்ண வேண்டும். அ-து.. அடடடடக்கி வாசிக்க வேண்டும்:)))))...

அதேபோல, அதிக துன்பத்தில் இருக்கும்போதும், மனதில் எண்ண வேண்டும் “இதுவும் கடந்து போகும்”.

இன்றிருப்பது போலவேதான், நாளையும் இருக்குமென்றில்லை... “இதுவும் கடந்து போகும்”


பின் இணைப்பு:
தொப்பி போட்டு, மவ்ளர் கட்டி....


கிளவுசும் போட்டாச்சூஊஊஉ:))..
குளிர் ஆரம்பமாகிவிட்டது.... “இதுவும் கடந்து போகும்”.


ஊசிக்குறிப்பு:
தொப்பி, மவ்ளர் கலர் பார்த்து ஆரும் சட்லைட்மூலம் என்னத்தேடிடாதீங்க:), ஏனெனில் எனக்கு பொழுதுபோக்கே, மவ்ளர், தொப்பி, மணிக்கூடுகள் வாங்கிச் சேர்ப்பது, அதனால அடிக்கடி கலர் மாறிக்கொண்டிருக்கும்:)))).


===================================================
என்ன, என் பதிவு பார்த்துக் கோபம் வருதோ?:)))..


===================================================

Tuesday 1 November 2011

இசையும் பூஸும்:) (கதையும்)..



முன்பு ஊரில் இருந்தபோது, இலங்கை வானொலியில் “இசையும் கதையும்” என ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும், கிழமையில் ஒருநாள். அதைக் கேட்கத் தவறுவதில்லை.


அதன் நினைவாக... அப்போ தொடக்கமே நானும் ஒன்று அப்படி எழுதோணும் என ஆசை. அதைத்தான் என் கற்பனையில் உருவாக்கி ஒரு இனிமையான கற்பனைக் கதையாக இங்கே வடித்திருக்கிறேன்:)).
=====================================================
இது தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.... நேரம் நான்ன்ன்ன்கு மணி, முப்பது நிமிடங்கள்... இசையும் கதையும்.... இன்று தொகுத்து அனுப்பியிருப்பவர்...
வடமாகாணத்திலிருந்து...  “மியாவ்” அவர்கள்:))...

 வழங்குபவர் கே.எஸ்.ரஜாஆஆஆஆஆ(அவரின் ஸ்டைலே ஸ்டைல்தான்.. அதை ஆராலும் அவரைப்போல் உச்சரிக்கவே முடியாது:))..

டொட்ட டொயிங்...............
======================================================


ம்யா... எழும்பம்மா... வெய்யில் அறைக்குள்ள வந்தது கூடத் தெரியாமல் நித்திரை கொள்கிறாய்” என்ற அம்மாவின் குரல் கேட்டு, திடுக்கிட்டு விழிக்கிறேன்...

தொடர்ந்து .... ரம்யா! அப்பா உன்னை சுவாமி அறைக்குள் வரட்டாம்.. முகம் கழுவிக்கொண்டு கெதியாப்போ.. எல்லாம் நல்ல சேதிதான்... என ஒரு புன்னகையோடு சொன்ன அம்மாவைப் பார்த்ததும், சடாரென எழுந்துவிட்டேன், நல்ல சேதி எனில் அது நிட்சயம்... என் திருமணம் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும், என எண்ணியபடி பார்த்ரூமை நோக்கி ஓடுகிறேன்...

பேஸ்ட் போட்டுத் தீட்ட பொறுமை இருக்கவில்லை, போத்தலில் இருந்த  “அண்ணாபற்பொடி” யைத் தொட்டு, ஒரு தடவை பல்துலக்கிக்கொண்டு, கொஞ்சம் தண்ணியால முகத்தையும் கழுவிக்கொண்டு, வெளியே வந்தேன், அம்மம்மா நின்றா, அவவின் சேலைத்தலைப்பை இழுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு.. சுவாமி அறை நோக்கி ஓடினேன்:).

அங்கே அப்பா கும்பிட்டுக்கொண்டு நின்றவர் என்னைப் பார்த்ததும்...  “வாம்மா... இன்றுதான் மாப்பிள்ளை வீட்டிலிருந்து தகவல் வந்துது, அவர்களுக்கு உன்னையும், நமது குடும்பத்தையும் நன்கு பிடித்துவிட்டதாம், வருகிறமாதம் மாப்பிள்ளை ஊருக்கு வருவாராம், அப்பவே திருமணத்தை வைத்திடலாம் என்றார்கள்”... என்று சொல்லி தீர்க்க சுமங்கலியாக இரம்மா.. எனத் திருநீறு பூசிவிட்டார்.

நேரே என் அறைக்கு ஓடிவந்து கட்டிலில் விழுந்தேன்...


..

இது கனவா அல்லது உண்மையில் நிஜமா...  “மாப்பிள்ளை இவர்தான், பிடிச்சிருக்கோ” எனப் படம் காட்டியபோதே... அவரை நன்கு பிடித்திருந்தது..

இதை உடனே என் ஒரே ஒரு தோழி அதிராவிடம் சொல்லிட வேண்டும், அதிராவும் நானுமாகத்தான் அவரின் படம் பார்த்தோம். அதிரா சொன்னா.. உனக்கேற்ற ஜோடியாகவே சூப்பராக இருக்கிறார் என்று. இப்போ இதைக் கேட்டால், அதிரா மிகவும் சந்தோசப்படுவா. அதிராவுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை.

இப்போ அதிராவை விட்டு வெளிநாடு போகப்போவதை நினைக்க மனம் கலங்குது.

அவர் பக்கத்து ஊரவர்தான், சின்னவயதில் கோயிலில் சுவாமி காவும்போது பார்த்திருக்கிறேன் அவரை. ஆனால் பல்கலைக்கழகம் முடிந்ததும் நேரே வெளிநாடு போயிருந்தார். மிகவும் நல்லவர் என எல்லோரும் சொல்லியிருந்தார்கள். எப்படிப்பட்டவராயினும், கோபம் வராதவராக, அன்பானவராக இருந்திடவேண்டும் என மனம் வேண்டிக்கொண்டது.

காலையில் எதுவும் சாப்பிட முடியவில்லை எனக்கு. மீண்டும் அம்மா சொன்னா,  “இன்று மாலை 4 மணியுடன் ராகுகாலம் முடியுதாம், அதன்பின்னர் நல்ல நேரமாம், மாப்பிள்ளை உன்னோடு கதைக்கப்போகிறாராம் எங்கேயும் போயிடாமல் ஆயத்தமாக இரு ஃபோன் வரும்” என.

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... என்ன கதைப்பது? எப்படிக் கதைப்பது?... எதுவும் புரியவில்லை.. காத்திருந்தேன்.... சரியாக 4.30 க்கு ஃபோன் அலறியது..

எனக்கு கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்துக் கொட்டியது... ஒரு சொல்ல முடியாத இன்பப் படபடப்பு.... அப்பா ஃபோனை எடுத்தார் கதைப்பது கேட்குது...

அவரேதான், பின்பு அம்மாவும் நலம் விசாரித்தா... பின்னர் “ரம்யா”... அம்மாவில் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்... எனக்கு வார்த்தை வரவில்லை, கோட்லெஸ் ஃபோனைக் கொண்டு வந்து, ரூமிலே தந்துவிட்டு கதவைச் சாத்திவிட்டு அம்மா நகர்கிறா....

பக்கத்தில் ஆராவது நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என ஒருகணம் எண்ணினேன், மெதுவாக “ஹலோ” என்றேன், நாக்குக் குழைந்தது, கை ஃபோனைப் பிடிக்க முடியாமல் நடுங்கியது.... உச்சிமுதல் உள்ளங்கால் வரை என்னவோ செய்தது.... எதிர்ப்பக்கத்திலிருந்து.. “ஹலோ ரம்யா.... நான் முகில் பேசுகிறேன்”...

அப்படியே அக்குரல்.. காதில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது...ஆளைப் பிடித்ததுக்கு மேலாக குரலைப் பிடித்துப் போயிட்டுதெனக்கு.





என்னென்னவோ கேட்டார், சொன்னார்... நீங்கள் சிரிப்பது கேட்க இனிமையாக இருக்கிறது என்றார், எனக்கு எதுவும் பேச வரவில்லை, ஃபோனை வைத்தாயிற்று. அடிக்கடி எடுக்கிறேன், கதைக்கலாம் என்றார்.

இது என்ன பேசவே மாட்டாத பெண்ணோ, இதையெல்லாம் கட்டி நான் என்ன செய்யப்போகிறேன் என நினைத்திருப்பாரோ... நான் வாய் திறந்தால் மூட மாட்டேன் என்பது, வீட்டில் உள்ளோருக்கல்லவா தெரியும்:)).

ஃபோனிலும் மெயிலிலும் நாட்கள் நகர்ந்தன... ஊருக்கு வந்துவிட்டார். நாளை அவர் எங்கள் வீட்டுக்கு முதன் முதலில் வரப்போகிறார்.. அடுத்த கிழமை திருமணம்...  அனைத்துமே ஆரவாரமாக நடந்துகொண்டிருக்கு...

நான் அழகான சந்தனக் கலர் சேலை உடுத்து அவர் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.. அதோ கார் வந்து எம் கேட்டில் நிற்பது தெரிகிறது... முதலாவதாக அவர்தான் இறங்குகிறார்....

இதுதான் பாட்டு, கேட்டுப் பாருங்கோ

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), இதில ஒரு பூஸைப் போட்டுத் தந்திருக்கலாம், அதை விட்டுப்போட்டு பச்சை ரோசாவைப்போட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இருப்பினும் ஊஊஊ ரியூப்பில போட்டமைக்கு டாங்ஸ்ஸூஊஊ:))... விடமாட்டமில்ல:))).

ராஜாத்தி என்ன தேடி வருவாரே ராஜா ராஜா
ரோஜாப்பூ மாலை சூடி தொடுவாரே லேசா லேசா
ராஜாத்தி என்ன தேடி வருவாரே ராஜா ராஜா
ரோஜாப்பூ மாலை சூடி தொடுவாரே லேசா லேசா
முதல் சந்திப்பு..... வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பு... நிறையப் பேசினோம், உணவுண்டோம்... நாட்கள் கடுகதி வேகத்தில் பறந்தது... திருமணம் முடித்தாயிற்று. 


அவர் எனக்கு கணவராகிட்டார்... என் கழுத்திலே தாலி, அதைத் தொட்டுப் பார்க்கிறேன்... சொல்ல முடியாத ஒரு பூரிப்பு..., நாணம்...,  பெரீய பதவி உயர்வு கிடைத்ததைப் போன்ற பரவசம்...





அனைத்தும் நிறைவாகி... மாப்பிள்ளை வீட்டுக்குப் போக கார் தயாராக சோடனையோடு வாசலில் வந்து நிற்கிறது, அப்பா ஓடிவந்து கட்டியணைத்து அழுகிறார்.... 


வாழ்க்கையில் முதல் தடவையாக அப்பாவின் கண்ணிலே கண்ணீரைப் பார்க்கிறேன்... அம்மா என்னைப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி நிற்கிறா... தங்கை மெளனமாக அழுவது தெரிகிறது... அண்ணன் கண்கள் இரண்டும் சிகப்பாகி காரோடு நிற்கிறார்.... உறவுகள் எல்லோரும் வழியனுப்ப தயாராகி நிற்கிறார்கள்.. நான் அழுகிறேன்... 


புதுமணப் பெண் அழக்கூடாது... சந்தோசமாகப் புறப்பட்டுப் போகவேணும் எனச் சொல்கிறார்கள்.... என்னால் முடியவில்லை தேம்பித் தேம்பி அழுகிறேன்..... காரில் ஏற வரும்போது பார்க்கிறேன், பந்தலின் ஓரத்திலே அதிரா... மீண்டும் ஓடுகிறேன் அதிராவைக் கட்டியணைத்து ஓவென அழுதுவிட்டேன்... 


தன் கண்களைத்துடைத்தபடி, அதிரா... “எதற்காக அழுகிறாய், சந்தோஷமாகப் போய் வா” என வழியனுப்புகிறா... கார் புறப்பட்டுவிட்டது மாப்பிள்ளை வீடு நோக்கி...... 





======================================================
பின் இணைப்பு:

======================================================


குட்டி ஆசை இணைப்பு:
எனக்கு இதை தொடர் பதிவாக்கினால் என்ன என ஒரு குட்டி ஆசை, அதனால இமா, ஸாதிகா அக்கா, ஆசியா, இளைய தளபதி நிரூபன், எங்கட நகைச்சுவை மன்னன் மாயா... ஆகியோரை அன்போடு அழைக்கிறேன், உங்களால முடியும், நேரம் கிடைக்கும்போது, உங்களுக்கு பிடித்த தலைப்பில் எழுதுங்கோ, முடியாவிட்டாலும் ஓக்கை, கோபமில்லை.

இது உங்களுக்கு இல்லை:
கிரிஸ் அங்கிள்... பிளீஸ்ஸ், இமா சொல்லச் சொல்ல ரைப் பண்ணிக்கொடுங்கோ, உங்களுக்கு நான் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும், பைலட் அண்ணனிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறேன்:))