நல்வரவு_()_


Monday 1 April 2019

பிசுக்கங்காய்த் தோசை + பிசுக்கங்காய் சட்னி
உபயம்: டேவடைக் கிச்சின் ஓனர்👸 அஞ்சு:))

மம்மி நான் சந்தைக்குப் போகப்போறேன்:)
ஹா ஹா ஹா இம்முறை எப்படியாவது அஞ்சு செய்த வாழைத்தண்டு தோசை செய்திடோணும் எனத்தான் நினைச்சிருந்தேன், எங்கட தமிழ்க் கடைக்குப் போய், அங்கு இருந்தால் வாங்கி வரலாம் என அஞ்சுவிடம் ஐடியாக் கேட்டேன், வாழைத்தண்டு இல்லை எனில் பிசுக்கங்காய் இருந்தாலும் செய்யலாமே என்றா. கடைக்குப் போனால் வாழைத்தண்டு இல்லை, ஆனா பிசுக்கு இருந்துதா.. வாங்கி வந்து தோசை சுட்டுவிட்டேன்.

வழமையான அரிசித்தோசையை அரைச்சு வச்சு, விடிய எடுத்து அதில் பிசுக்கங்காயைத் தோலை நீக்கி விட்டு அரைத்துச் சேர்த்தேன் தோசை மாவில். சரி தோலை எறிஞ்சிடாதீங்க அதில் சட்னி செய்யுங்கோ என இரண்டாவது ஐடியாத் தந்தா அஞ்சு.. ஹா ஹா ஹா அப்படியே ஆகட்டும் என சட்னியும் செய்தேன் இரண்டுமே சூப்பர். இனிப்பாக இருந்துது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆஆஆ:)

என் தோசை மா, ஒரு இரவில் இங்கு புளிக்காது, அதனால புளிக்காமலேயே சுட்டேன்.


இதில் சட்னி செய்வது, ஒரு மேசைக்கரண்டி உழுந்தையும் செத்தல் மிளகாயையும் கொஞ்ச எண்ணெயில் நன்கு வதக்கி எடுத்துவிட்டு, அதனுள் இந்தத் தோலைப்போட்டு நன்கு வதக்க வேண்டும், பச்சை இல்லாமல் வதங்கியதும் அதனுள் பழப்புளியையும் தேங்காய்ப்பூவையும் போட்டு கொஞ்சமாக வதக்கியபின், உப்புச் சேர்த்து, தண்ணி சேர்க்காமல் அரைத்து எடுத்தேன்.

சைட்டிலே மடித்து இருப்பது நல்லெண்ணெய் விட்டு முறுகலாக சுட்ட எண்ணெய்த்தோசையாக்கும். இதில் அரைக்கும்போது புளிப்புக்காக ஒரு பீஸ் பிரெட் சேர்ப்பது வழக்கம், இம்முறை வைட் பிரெட் இல்லாமையால் பிறவுண் பிரெட் சேர்த்தேன் அதுதான் கலரை டார்க் ஆக்கி விட்டது:(.

================================

இது கால் கப் உழுந்துக்கு, அரை கப் அவித்த கினோவா மாவும், அரைக் கப் பச்சை ரவ்வையும் சேர்த்து, புளிக்க வச்சுச் சுட்ட கினோவாத் தோசை:).

இதேபோல ரவ்வை தோசைக்கு, அரைக்கப் உழுந்தை ஊறப்போட்டு அரைச்சு, அதுக்கு பச்சை ரவ்வை 1.5-2 கப் சேர்த்துக் குழைச்சுப் புளிக்க வச்சுச் சுடுவோம். இதேபொல் இட்டலிக்கு உழுந்துடன்  ரவ்வையை நன்கு அவித்து ஆற விட்ட பின்னர் சேர்ப்போம்[தகவல்: நெல்லைத்தமிழனுக்காக:)]

 ((((((!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!இடைவேளை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!))))))
பாருங்கோ, ஒரு செக்கரட்டறி எப்பூடி இருக்கோணும் என்பதைப் பாருங்கோ:).. அதாவது, ட்றம்ப் அங்கிளுக்கு செக்கரட்டறியாக இருப்பதால், என் அழகிய டமில் பேசப் பழக்கி விட்டிட்டிருக்கிறேன்:).. இல்லை எனில் டமில்ல டி எடுத்தேன் எனச் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கென நீங்களே சொல்லுங்கோ?:))

((((((!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!&&&&&&&&&!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!))))))

இது இப்போ எங்கள் கார்டினில் வளர்ந்திருந்த கபேஜ் லீவ்ஸ்.. இந்தக் குளிருக்குள்ளும் கிசுகிசு என வந்திருந்துது, பாருங்கோ ஒரு புளு பூச்சிச் சேட்டை இல்லை இலைகளில்.. அவ்ளோ குளிரெல்லோ, அனைத்து இலையும் அப்படியே எந்த சேதமுமில்லாமல் இருக்குது. சுண்டல் செய்தேனாக்கும் இன்று.


இது பயறை நன்கு முளைக்கப் பண்ணி விட்டு, மோர் மிளகாயை நன்கு வதக்கி, அதனுள் வெங்காயம் போட்டு வதக்கி, அதனுள் இந்த முளைத்த பயறைக் கொட்டி நன்கு பிரட்டி எடுத்தேன் அவிக்காமலேயே... சூப்பராக வந்துதே...



இந்தாங்கோ இதில எது வேணுமெண்டாலும் எடுத்துக் கொள்ளுங்கோ:)... இப்போ எங்கள் கடைக்கும் சப்போட்டா வருகிறதே..

============================================

இன்று ஒரு டகவல்:)
நான் பிசுக்கங்காய் சட்னி டொல்லித் தந்தேன், ஓசை டொல்லித்தந்தேன் .. அதற்காக என் ஃபீசைத்தாங்கோ.. இப்பவே தாங்கோ என என்னை ஒழுங்கா தோசை சப்பிடவும் விடவில்லை அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஆனாப் பாருங்கோ நட்புக்குள் காசு குடுக்கிறது வடிவில்லை எல்லோ?:) அதனால என்ன கிஃப்ட் குடுக்கலாம் என, வானம் பார்த்துப் பூமி பார்த்து கிழக்கால மேற்கால எல்லாம் பார்த்து ஓசிச்ச இடத்தில காசி தெரிஞ்சுது கண்ணில:)) டக்கென அஞ்சுவுக்கு ரிக்கெட் புக் பண்ணிட்டேன்.. இனியும் மாட்டேன் எனச் சொல்லுவாவோ?:) பாருங்கோ அஞ்சுவுக்கு மட்டும்தேன், அம்முலுவும் அல்ல:))
இதென்ன புரொம் சென்னை என இருக்கே.. எனத்தானே யோசிக்கிறீங்க? அது இங்கிருந்து காரில சென்னை போகிறோம்.. மீதான் ட்றைவர்:))

=========================================
அமேசனில் தேடினேன் மண்சட்டி கிடைக்கிறதே[விதம் விதமாக அனைத்தும்], அதுவும் இது கரண்ட் அடுப்பில் சமைக்கும் விதமாக, ஆனா விலை என்ன தெரியுமோ 42 பவுண்ட்ஸ்:) ஹா ஹா ஹா தொட்டதும் உடைஞ்சிட்டால்ல் என்ன ஆகும்ம்:)..
====================================================

ஊசி இணைப்பு:

ஊசிக்குறிப்பு:
=====================================================


 “மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா".
 மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்"
யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்”.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏