நல்வரவு_()_


Sunday 29 April 2012

பூஊஊ..பூஊஊ ஐஸ் இனிப்பூஊ:))

கண்டுபிடிச்சிட்டேன்.. கண்டு பிடிச்சிட்டேன்.. அண்டாட்டிக்கா இனிப்பாரைக் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்.. எங்கிட்டயேவா? ஆரும் ஒளிச்சிருக்கவே முடியாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

இந்தாங்கோ இந்தாங்கோ.. ஒராளுக்கு ஒன்றுதான் தருவேன்:))) இது நான் அண்டாட்டிக்கா போன நேரம் ஓடிவந்து பின்னூட்டம் போட்டும் கதைத்தும் மகிழ்ந்திருந்தோருக்கும்,... இனிப்புக்காகவே பின்னூட்டம் போட்டுச் சென்ற “சிட்டுக்குருவி” க்கும் ஒன்று:))
Maple Sweets
இது அங்கிருந்துதான் வாங்கி வந்தேன் ஹலோ கிற்ரி..., குட்டித் தங்கை, என் முதலும் கடைசியுமான:)) சிஷ்யை:).. கலைக்காக, படம்தான் கலைக்கு, நான் என் காரில கொழுவியிருப்பேன்:), கலை எப்ப வந்தாலும் கிடைக்கும்:)).

இது , கலையோடு சேர்ந்து, என் புளொக்கை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்த யோகா அண்ணனுக்காக.....

உஸ்ஸ்ஸ் யப்பா இனியும் ஆரும் அண்டாட்டிக்கா இனிப்புப் பற்றிக் கேட்பினமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

இனிக் கொஞ்சம் ரொரன்ரோ ஸ்காபரோவின் அழகை ரசிக்கலாம் வாங்கோ.. திட்டிடாதீங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இனிமேல் படம் படமாத்தான் காட்டுவேன்:))))...

இது ரொரன்ரோ city அல்ல, ரொரன்ரோவிலுள்ள எம் தமிழர்கள் அதிகம் இருக்கும் ஒரு இடம்.. அடுத்துத்தான் CITY  காட்டுவேன்:)). படங்களின் மேல் கேர்சரை வைத்துக் கிளிக் பண்ணி, பெரிசூஊஊஊஊஉ ஆக்கிப் பாருங்கோ:)))



ரோட்டால் போகும்போது எடுத்த சில வீடுகள்...





இதில் இன்னும் டொடரும்:))))).. ஹையோ ஆரது ஓடுறது, இதைவிட பேஸ் புக் எவ்ளோ மேல் எனச் சொல்லிக் கேட்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. விடமாட்டமில்ல:)).. “உரலுக்குள் தலையைக் கொடுத்திட்டு, இடிக்குப் பயப்பூட முடியுமோ?”... முழுசா அனைத்தையும், அதுவும் ரசிச்சூஊஊஊ:)) ரசிச்சுப் பார்க்கோணும்:)).

***************************************************
ஊசி இணைப்பு:)
ஜீனோவை இம்முறை எப்பூடியும் கூட்டி வருவேன் என, இமா வாக்குக் கொடுத்திருக்கிறா:), அதுதான் மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு பூஸ் வெயிட்டிங்:)) நேக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:))

===================================================
குட்டி இணைப்பு:
செய் அல்லது செத்துப் போ
......................................காந்தி அடிகள்...
===================================================

Tuesday 24 April 2012

மீஈஈஈ வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))



என்ன இது.... இப்பூடிக் கத்தியும்.. ஆருமே ஓடி வந்து ஆஆஆஆஆ வந்திட்டீங்களோ வாங்கோ வாங்கோ எனக் கூப்பிடுறமாதிரிக் கேக்கேல்லையே:).... இப்பூடியெண்டால் நான் அங்கின “நயகரா” விலயே குதிச்சிருப்பேனே:)).. உசிரைக் கையில இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டேனேஏஏஏஏஏஏ:))).. ஒருவேளை எனக்குத்தான் பிளைட்டில வந்து காது அடைச்சிட்டுதோ?:) எதுவும் கேட்குதில்லையோ? இருக்கும் இருக்கும் அப்பூடித்தான் இருக்கும் எல்லாத்தையும் “மாத்தியோசி” க்கோணும்.. பெரியவங்க சொல்லியிருக்கினம்ம்ம்ம்ம்:))).

கண் திறக்க முடியேல்லை.... ஒரு கண்ணாலதான் ரைப்பிங் நடக்குது.... இதெல்லாம் புதுசா என்ன?:))....


கட்டிலெது மேசை எது எனத் தெரியாமல் நித்திரை வருது:))))


போன தலைப்பில் பின்னூட்டமாகப் போட நினைத்தேன், ஆனால் பின்னூட்டம் அதிகமாகிட்டுதே என்பதால.. புதுசாப் போட்டுவிட்டேன் இதை.

எப்படி ஆரம்பிப்பது எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.... நான் இல்லையெனினும் மறவாமல் வந்து பின்னூட்டம் போட்டு கதைத்து மகிழ்ந்து போன அனைவருக்கும் நன்றி.... நன்றி.... நன்றி...

நான் கேட்டுக்கொண்டதற்கும் மேலாக என் புளொக்கைப் பார்த்துப் பராமரித்த அன்புத் தங்கை கலைக்கு... எப்பூடி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை... நன்றி நன்றி நன்றி...

முக்கியமான ஒருவர், நான் எதிர்பாராமல், தினமும் வந்து என் பிளாக் இருக்கு என பாதுகாத்த “யோகா அண்ணனுக்கு” என்ன சொல்வது? எப்படி நன்றி சொல்வது?.... சுயநலம் கருதாமல், தன்னிடம் புளொக் இல்லாதபோதும், எதையும் எதிர் பார்க்காமல் தினமும் வந்து “வெளிநாட்டு + உள் நாட்டுத் திருடர்கள்”  இடமிருந்து:)பத்திரமாகப் பாதுகாத்து வந்த உங்களுக்கு நன்றி ..நன்றி.. நன்றி...

வதன புத்தகத்தில் கககககககலக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்......இன்னும் உஷாராகக் கலக்க மருந்து கொண்டு வந்திருக்கிறேன்:).. (இது வேற கலக்கல்:))) கொஞ்சம் பொறுங்கோ.. இப்போ மீ ரூ ரயேட்ட்ட்ட்ட்ட்ட்:)).

எல்லோருக்கும் அண்டாட்டிக்கா இனிப்புக் கொண்டு வந்திருக்கிறேன், நம்புங்கோ...எந்த பாக்கில(Bag) வச்சனான் எனத் தெரியேல்லை:), அதனால இனிவரும் தலைப்புக்களில் தேடிக் கண்டு பிடிச்சுத் தருவேன்ன்ன்ன்ன்ன்ன்:)).

உடம்பும் மனமும் வழமைக்குத் திரும்பட்டும்... அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி...