ஆவ்வ்வ்வ்.. வாங்கோ வாங்கோ.. காதைக் கொண்டு வாங்கோ.. அட..சே..சே.. நான் என்ன கதைக்கிறேன் என எனக்கே புரியுதில்லை.. ஓடிவாங்கோ!!! உங்கட உங்கட மூக்குக் கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு... பூஸோ கொக்கோ.. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா... கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்:))..
இதைப் பார்க்க முன்பு இங்கின ( http://gokisha.blogspot.co.uk/2013/06/blog-post_12.html ) போய் வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்..
நீண்ட விடுமுறைக்குப் பின்பு, இன்றுதான் வோக் போக ஆரம்பித்தேன், அப்போ மனதில எண்ணினேன்ன்.. அந்த சுவான் தம்பதிகள், குழந்தைகளோடு இருப்பார்களா.. சே..சே.. குழந்தை கிடைத்து, தொட்டிலில் போடும் வைபவம் பெயர் வைப்பு:) எல்லாம் முடிஞ்சு காணாமல் போயிருப்பினம், என எண்ணிக்கொண்டே.. அப்பக்கம் போனனா... அவர்கள் இருந்த அந்த அழகிய மெத்தை இப்படி வெறிச்சோடிக் கிடந்தது... அதைப் பார்க்க எனக்கும் சோகமாக இருந்துது...:(
கண்படாமல் வாழ்க இந்த அழகிய சுவான் குடும்பம்... எனக்கு இவையை பார்க்கும்போது.. பறவை இனமாகத் தெரியவில்லை.. மனிதக் குடும்பமாகவே தெரிகினம்... உணவேதும் எடுத்துப் போகவில்லையே எனக் கவலையாக இருந்துது... நாளை போகும்போது பார்க்கலாம்ம்..
இதைப் பார்க்க முன்பு இங்கின ( http://gokisha.blogspot.co.uk/2013/06/blog-post_12.html ) போய் வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்..
நீண்ட விடுமுறைக்குப் பின்பு, இன்றுதான் வோக் போக ஆரம்பித்தேன், அப்போ மனதில எண்ணினேன்ன்.. அந்த சுவான் தம்பதிகள், குழந்தைகளோடு இருப்பார்களா.. சே..சே.. குழந்தை கிடைத்து, தொட்டிலில் போடும் வைபவம் பெயர் வைப்பு:) எல்லாம் முடிஞ்சு காணாமல் போயிருப்பினம், என எண்ணிக்கொண்டே.. அப்பக்கம் போனனா... அவர்கள் இருந்த அந்த அழகிய மெத்தை இப்படி வெறிச்சோடிக் கிடந்தது... அதைப் பார்க்க எனக்கும் சோகமாக இருந்துது...:(
நான் எதிர்பார்த்து மனக்கோட்டை எல்லாம் கட்டிப் போனால், அது ஏடாகூடமாய்த்தான் நடக்கும்:)).. ஆனா எதிர்பாராமல்... போனால் தலைகால் புரியாத, புதுப்புது நிகழ்வெல்லாம் நடக்கும்:))... இது எதிர்பார்த்ததே நடந்துபோச்ச்... அவர்கள் போயே விட்டினம் என எண்ணினேன்ன்...
“எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்” எனும் அரிய தத்துவம் நன்கு தெரிந்தாலும், பாழாப்போன மனது பலதடவைகளில் எதிர்பார்த்து விடுகிறது... :)) இப்போ இதுவா முக்கியம்:)... ஹையோ பொயிண்ட்டுக்கு வாங்கோ எல்லாரும், கொஞ்சம் இங்கின திரும்புங்கோ..
நானும் திரும்பி மறுபக்கம் பார்த்தனா...
செந்ந்ந்ந்ந்ந்ந்ந்....தேனில் கலந்து....
பொன்வானில் மிதந்தூஊஊஊஊஊஊ...
ஹையோ கண்ட நிண்ட பாட்டெல்லாம் வாயில வருதே.. நேக்கு சந்தோஷத்தில தலையும் தெரியல்ல.. லெக்கும் ஆடல்ல... ஹார்ட் அட்டாக் வந்திடும்போல இருந்துது... அந்த “அஞ்சு” பேர் கொண்ட குடும்பத்தை, பார்த்ததும், கடவுள் சத்தியமா என் மனதில் எழுந்த நினைப்பு... “ஆண்டவா இக் குடும்பம் கண்பட்டுவிடக்கூடாது”.. என்பதாகும்.
அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தினம் அப்போ..
நான் அருகே போனதும், இரு குழந்தைகள் முழித்து கீச்ச்ச்ச்...கீச்ச்ச்ச்.. என குரலெழுப்பிச்சினம், “ஆரோ வந்திருக்கினம் அப்பா அம்மா எழும்புங்கோ”.. என்பதுபோலவோ.. அல்லது “ஆரோ உணவு கொண்டு வந்திருக்கினம்” எனச் சொல்வது போலவோ இருந்துது அது...
அவர்களின் குரல் கேட்டு, தாயாக இருக்கலாம், விழித்துக் கொண்டா. தந்தை.. கண்களைத் திறந்து பார்த்து விட்டு.. “அட இது அதிரா:) அவ ஒண்ணும் பண்ணமாட்டா.. பயப்பூடாதீங்கோ”:) என்பதுபோல சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிட்டார்ர்:)).[கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் முறைக்கிறீங்க:))]
எனக்கு அவர்களைப் பார்த்ததும் உச்சியிருந்து உள்ளங்கால் வரை இனம் புரியாத மகிழ்ச்சி.. கிடைக்காது என நினைத்திருந்தது, இப்படி ஒரு அழகிய குடும்பமாகத் தென்பட்டதும்.. என் நடையின் ஸ்பீட்டும், ஸ்டைலும்:)) கூட மாறி விட்டதெனில் பாருங்கோவன்:)).. கடகடவென ஒரு ரவுண்ட் நடந்து விட்டு, திரும்பி வந்தேன்ன்..
இப்படி சன்பார்த் எடுக்கினம்ம்..
கண்படாமல் வாழ்க இந்த அழகிய சுவான் குடும்பம்... எனக்கு இவையை பார்க்கும்போது.. பறவை இனமாகத் தெரியவில்லை.. மனிதக் குடும்பமாகவே தெரிகினம்... உணவேதும் எடுத்துப் போகவில்லையே எனக் கவலையாக இருந்துது... நாளை போகும்போது பார்க்கலாம்ம்..
ஊசி இணைப்பு:
இவை அங்கிருந்து பொறுக்கி வந்து கழுவி விட்டிருக்கிறேன்ன்.. ஏன் எதுக்கு என உங்களுக்கு ஏதும் புரியுதோ? இல்லல்ல? நேக்கும்தான்:)).. ஆனா குப்புறக் கிடந்து, கிட்னியை ஊஸ் பண்ணிக் கண்டுபிடிச்சு:).. எதாவது செய்திட்டு விரைவில் வருகிறேன்ன்ன்:)).
=============================================================
==============================================================
|
Tweet |
|
|||