நல்வரவு_()_


Monday 25 September 2017

_()_அதிரா வீட்டில் மாவிளக்கு_()_

து எல்லோருக்கும் தெரிஞ்ச மாவிளக்குத்தான், இருப்பினும் அதிரா வீட்டுக் கன்னி மாவிளக்கு இது:).. இந்த மாவிளக்கை நினைச்சாலே பல சம்பவங்கள் கூடவே ஒட்டிக்கொண்டு வந்து விடுகிறது...

இது திங்கட்கிழமை:) அங்கே:) வர வேண்டிய ரெசிப்பி:) அங்கு ஞாயிறு, திங்கள் ஆனமையால் ...இம்முறை இங்கு வந்திருக்கு:).. ஹா ஹா ஹா:).

ஸ்ஸ்ஸ் இப்பூடிக் கண்ணாடியோடு இருந்திட்டால், ஆரும் திட்டினாலும்.. எந்த ரியாக்‌ஷனும் முகத்தில் காட்டிடாமல் புன்னகையோடு இருந்திடலாம்:)

நாங்கள் எப்பவும் மாவிளக்குப் போடுவது தினை/சாமி மாவில்தான்.  ஊரில் யாரும் அரிசிமாவில் போட்டு நான் பார்த்ததில்லை. சின்ன வயதிலிருந்தே நிறையச் சாப்பிட்டிருக்கிறேன், சூப்பராக இருக்கும், ஆனா செய்ததில்லை.

எங்கள் மூத்த மகன் பிறந்தபோது, அம்மா நேர்த்தி வச்சிட்டா, கதிர்காமம் போய் அங்குதான் முதல் மொட்டை போட்டு, கங்கையில் நீராடி, மாவிளக்கும் கோயிலில் போடுவோம் என. நாங்கள் எப்பவும் குழந்தை பிறந்து முதன்முதலில் மொட்டைதான் போடுவோம், பின்னர்தான் ஸ்டைல் ஸ்டைலா வெட்டுவதெல்லாம்.

அதனால, சரி நேர்த்தியை நிறைவேத்தலாம் என கதிர்காமம் போனோம் . மொட்டை போட்டாச்சு:)..

அங்குதான் அம்மா செய்துதர நான் மாவிளக்கு ஏற்றினேன்.. எப்பூடி அதிராவின் அந்த மாவிளக்கு அயகோ?:)..

பின்னர் எப்பவும் அதுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. தினையும் கிடைக்கவில்லை. இம்முறை தமிழ்க்கடையில் தினை பார்த்தபோது, ஆஹா நவராத்திரியின் ஒரு நாளைக்கு, மாவிளக்குப் போடலாமே எனும் ஆசை மேலோங்கி பொருட்கள் வாங்கி வந்தோம்..

^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^இடைவேளை^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^
இந்த விளக்கு எரிக்க எரிக்க பல பழைய பாடல்கள் மனதில் ஓடின... பல நினைவுகள் பரிமாறிக்கொண்டோம்:).. [ https://www.youtube.com/watch?v=_i8QMynY0qU] திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக... குலம் விளங்க எங்க வீட்டில் குடியிருக்க வருக...  மணமகள்(அது நாந்தேன்:)), கையில் மாலையோடு மணவறையை நோக்கி ஷையோடு:) நடந்து வரும்போது இப்பாடல் ஒலித்ததே:) [சிடியில் இருக்கு].

இத்தோடு இன்னொரு நினைவு.... எங்கள் அக்காவின் திருமணத்தின் போது, மணமகன்(அத்தான்)... மாப்பிள்ளை சூட்டோடு.. அலங்கரிக்கப்பட்ட காராலே இறங்கி, கழுத்தில் ரோஜாப்பூ மாலையுடன் மணவறையை நோக்கி வரும்போது.... “ராஜாத்தீஈஈஈஈஈஈ.. என்னைத்தேடி வருவாரே ராஜா.. ராஜா... ரோஜாப்பூஊஊஊ மாலை சூடி வருவாரே லேசா லேசா... எனும் பாடல் போட்டார்கள்.. என்ன ஒரு பொருத்தமாக இருந்தது.. இதில் இன்னொன்று அத்தானின் பெயரில் ராஜா இருக்கு:).
^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^
முக்கிய அறிவித்தல்:- முன்ன முன்னம் நான் செய்தமையால் மாவின் பதத்தில் கொஞ்சம் சொதப்பி விட்டது:).. அது என்னுடைய தப்பூஊ:)..  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதாரது சிரிக்கிறது:).. என்ன தப்பாச்சு எனச் சொல்கிறேன், நீங்கள் செய்ய நினைச்சால் திருத்திக் கொள்ளுங்கோ:).

தேவையானவை..
தினை, சக்கரை, தேன், வாழைப்பழம், நெய்.

இதில் தினை அரிசியை 2 மணிநேரம் ஊறவிட்டு, வடித்து எடுத்து பேப்பரில் போட்டு உலர்த்தி எடுங்கள்.[காய வைக்கச் சொல்லவில்லை, ஈரத்தைப் போக்கச் சொன்னேன்]

உலர்த்திய தினையை அரைத்து, மாவை எடுக்க வேண்டும்.[ நான் செய்த தவறு மாவோடு சக்கரையையும் சேர்த்து அரைத்து எடுத்தேன்].. அப்படிச் செய்யக்கூடாது. மாவை எடுத்து அதில் சக்கரையைத் தூளாக்கிச் சேர்த்து, தேன் சேர்த்துக் குழைக்கவேணும். அப்போது பதம் சரியாக விளக்கு பிடிக்க வரவில்லை எனில் கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழம் சேர்த்துக் குழைக்க வேண்டும். தண்ணி சேர்ப்பதில்லை.

நான் செய்த இன்னொரு தவறு, மாவைக் குழைச்சு, ஊறட்டுமே என ஒருமணிநேரம் விட்டு விட்டேன்.. அது இன்னும் கசிந்து மா நன்கு குழைந்துவிட்டது.

மாக்குழைத்த உடனேயே சுட்டி விளக்குகள்போல பிடித்து உடனேயே எரிக்கத் தொடங்க வேண்டும்.

விளக்கின் நடுவே இருக்கும் குழியில் நெய் ஊற்றி, எரிக்க வேண்டும்.

 இதற்கு நிறைய நெய் தேவைப்படும், நிறையத் திரி அல்லது திரிச்சீலையை நெய்யில் தோய்த்து விளக்கின் எல்லாப் பக்கமும் எரிய விடவேணும்.

 கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் எரிய மட்டும் எடுத்தது. சுவை சூப்பர் சுவை... இங்கு வாழை இலை கிடைக்காத காரணத்தால் விளக்கின் அடிப்பகுதி ஒட்ட்டியிருந்தது.. வாழை இலையில்தான் இதனை எரிக்க வேண்டும்.
========================================================================
மா விளக்கு சாப்பிட்ட மயக்கத்தில் இருப்பீங்கள்.. இந்த மயக்கத்தோடு எங்கே விரலைக் காட்டுங்கோ.. ஆங்ங்ன் இங்கின.. தம் அப்:)[இப்போ தெளிவாச் சொல்லாட்டில் பயம்ம்மாக்கிடக்கே:)] இங்கின தமனா அக்காவை டச்சு பண்ணுங்கோ:) பீஸ்ஸ்ஸ்ஸ்:).))

ஆவ்வ்வ்வ் மகுடம் கிடைச்சிட்டுதூஊஊ:)
========================================================================
ஊசி இணைப்பு:
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

Thursday 21 September 2017

ண்ளால் ப்டியும் ம் டுக்முடியுமோ?:)

ஹா ஹா ஹா தலைப்பைப் பார்த்து யாரும் பயந்திடாதீங்கோ:) இந்தக் காலத்தில உங்களை யாரும் இப்படி சபதம் எடுக்கச் சொல்லிக் கேய்க்கவே மாட்டோம்:).

2ம் பகுதியிலிருந்து கதை தொடர்கிறது.. வழமைபோல என் பாஷையில் மானே தேனே போட்டு எழுதுவதால், தவறுகள் வரலாம் மன்னிச்சிடுங்கோ:).. இதன்
முதல் பாகம் படிக்க இங்கு..
2ம் பாகம் படிக்க இங்கு..

Monday 18 September 2017

பகுதி ரெண்டு:) [இப்படியும்...:)]

த் தொடரின் முதல் பகுதியைக் காண.... இங்கின கையை வையுங்கோ..

இது உங்கள் யாருக்கும் தெரியாத கதை:)..  “ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:).. தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” இப்பூடித்தான் சொல்லோணும் ஓக்கே?:). ஹா ஹா ஹா. தொடர்கிறது...

“அகல்யா சொல்? யார் நீ? எதுக்காக நமக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் கொல்கிறாய்?.. இக்குழந்தை எனக்கு வேணும்..” என்கிறார்... 

Saturday 16 September 2017

இப்படியும் ஒரு மகன் இருக்க முடியுமோ?

ன்னமோ தெரியல்ல.. இக் கதை கேட்டதிலிருந்து .. இதை எல்லோருக்கும் சொல்லோணும் எனும் ஆவல் அதிகமானது, அவ்ளோ தூரம் மனதை டச்சுப் பண்ணி விட்டது.... அதனால நான் உள் வாங்கியதை.. என் பாஷையில் சோட் அண்ட் சுவீட்டாகவும் அங்கங்கு மானே.. தேனே எல்லாம் போட்டு மெருகூட்டியும்... வெளியே தருகிறேன்.. தப்புக்கள் தவறுகள் இருப்பின் மன்னிச்சுக்கோங்ங்ங்ங்:). பெயரெல்லாம் என் விருப்பத்துக்கு வைத்துள்ளேன்.. ஆனாலும் நீங்க கண்டு பிடிச்சிடுவீங்க:).

Thursday 7 September 2017

நியூயோர்க்கில் ஒரு கிழமை:)

தெரிஞ்சோ தெரியாமலோ என்னோடு ஃபிரெண்ட்:) ஆகிட்டீங்க:) அதனால என்னுடைய போட்டோக்கள் எழுத்துக்களைப் பார்த்து:) சகித்துக்கொண்டு, நீங்க கொமெண்ட் போட்டுத்தானே ஆகணும்:).. அது உங்கள் முன்வினைப் பயன் ஹா ஹா ஹா:)..
பின்ன.. காசு செலவழிச்சுப் போய் படமெடுத்து வந்திருக்கிறேன்ன்.. அதை உங்களுக்குப் போட்டுக் காட்ட வாணாம்ம்ம்.... இங்கு ஒரு வசனம் எனக்கு நினைவுக்கு வருது:).. இனிச் “செத்தார்யா சேகரூஊஊ”.. ஹா ஹா ஹா:)..

Saturday 2 September 2017

கொஞ்சம் அழுகை.. கொஞ்சம் மகிழ்ச்சி:)

இது  “நம்மஏரியா” வுக்கான, கதையின் கருவை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை... கதையின் கருக் கண்டிஷனாக மூன்று வசனங்களைக் கெள அண்ணன் கொடுத்திருந்தார்.. அவை இங்கே ஆரம்பத்திலும் நடுவிலும்.. முடிவிலும் பச்சை எழுத்துக்களால் காட்டப்பட்டிருக்கு.. விபரம் அறிய மேலே நம்மஏரியா வைக் கிளிக் பண்ணிப் போய்ப் படிச்சிட்டு வாங்கோ..  வெரி சோரி நான் வரமாட்டேன்ன்:).. நான் அவரோடு கோபமாக்கும்:)..