நல்வரவு_()_


Thursday 7 September 2017

நியூயோர்க்கில் ஒரு கிழமை:)

தெரிஞ்சோ தெரியாமலோ என்னோடு ஃபிரெண்ட்:) ஆகிட்டீங்க:) அதனால என்னுடைய போட்டோக்கள் எழுத்துக்களைப் பார்த்து:) சகித்துக்கொண்டு, நீங்க கொமெண்ட் போட்டுத்தானே ஆகணும்:).. அது உங்கள் முன்வினைப் பயன் ஹா ஹா ஹா:)..
பின்ன.. காசு செலவழிச்சுப் போய் படமெடுத்து வந்திருக்கிறேன்ன்.. அதை உங்களுக்குப் போட்டுக் காட்ட வாணாம்ம்ம்.... இங்கு ஒரு வசனம் எனக்கு நினைவுக்கு வருது:).. இனிச் “செத்தார்யா சேகரூஊஊ”.. ஹா ஹா ஹா:)..

வ்வொரு தடவையும்.. ஒவ்வொரு இடம் போகும்போதும் நிண்டு, இருந்து, குனிந்து, தவண்டு, ஏறி நிண்டெல்லாம் பல படங்கள் எடுப்பேன்ன்.. [ “பிரபல பதிவர்” எனும் காரணத்தால்.. ஹையோ எதுக்கு இப்போ மரக்கொப்பை முறிக்கிறீங்க கர்:)].. ஆனா, சுடச்சுடப் போட்டால்தான் சரி, இல்லை எனில் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்றாகி விடுகிறது. சரி என் அலட்டலை இத்தோடு முடித்துக் கொண்டு விசயத்துக்கு வாறேன்:)..

வ்வொரு இடமும், ஊரும், ஒவ்வொரு விசயத்தில் அழகுதானே.. அப்படி நியூயோர்க்கில் அழகு,,... கட்டிடங்கள்தான்.. கண்கொண்டு பார்க்க முடியாது... மிக நெருக்கமாகவும்.. ஒவ்வொன்றும் வானைத் தொடுவது போலவும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு டிசைனிலும்.. ஒவ்வொரு கலரிலும்... சொல்லி முடியாது அதன் அழகு.

ரோட்டுக்கள் அகலம் பெருப்பிக்கப்படவில்லை.. ஆனா கட்டிடங்கள் வானைத் தொடுகிறது, அதனால ஒவ்வொன்றையும் அண்ணாந்து பார்த்தே கழுத்து சுழுக்கு வந்துவிடும். சில ரோட்டுக்களால் போகும்போது மேலே மழை கொட்டுவது தெரியும் ஆனா நம்மில் மழை படாது:).

னக்கு அங்கு மிகவும் பிடித்த இரண்டு விசயங்கள்... ஒன்று WIFI  அதாவது சிட்டியில் எங்கு போனாலும் ஃபிரீயாகக் கிடைக்கிறது.. கடைகள், ரெஸ்டோரண்ட், மோல்கள், பில்டிங். இப்படி எங்கு போனாலும் ஃபிரீயாகக் கிடைக்கிறது, பாஸ்வேர்ட் கூட இல்லை, உள்ளே செட்டிங்கில் சென்று கனெக்ட் பண்ணினால் போதும். இப்படி வசதி வேறு எங்காவது இருக்குதோ தெரியவில்லை.

தனால பிள்ளைகளைக் கையில் பிடிச்சு இழுத்து வைத்திருக்க வேண்டி இருக்கவில்லை... கூப்பிட்டு எடுக்க வசதியாக இருந்தது.

டுத்தது UBER TAXI..  நமக்கு ரக்‌ஷி வேணும் எனச் சொல்லிவிட்டுத் திரும்பினால் ...அருகில் நிற்பார்கள்.. 4 நிமிடத்துக்கு மேல் டிலே ஆகாது.
888888888888888888888888888888888888INTERVAL888888888888888888888888888888888888
88888888888888888888888888888888888முடிஞ்சுது88888888888888888888888888888888888

நாம் தங்கியிருந்த ஹோட்டல், சிட்டிக்குள்ளேயே என்பதனால.. நடந்து நடந்து அந்த சன நெரிசலில் சுற்றி வர இலகுவாக இருந்தது. பேமஸ் ஆன பில்டிங் எம்பயர் ஸ்ரேட் பில்டிங். [ Empire State Building]அது எங்கள் ஹோட்டல் ரூமிலிருந்து பார்க்க அருகில் தெரிந்தது.. நைட்ஸ் ல லைட்ஸ் உடன் பார்க்க ஒரு அழகு.  பழைய கிங் கொங் மூவியில் இதன் வெளிப்பக்கமாகத்தான் கிங்கொங் ஏறி உச்சிக்குப் போவார்.


ரவில் போனால் மேலே ஏறி வெளி லைட்ஸ் பார்க்கலாமே என 10 மணிக்கு மேல்தான் போய் ஏறினோம், நாம் தங்கிய ஹோட்டலில் அதுக்கு விஷேட சலுகை இருந்தமையால்.. கியூவில் நிற்காமல் வி ஐ பி லைனில் கடகடவென உள்ளே அனுப்பினார்களே:).

இனி சிட்டியில் இருந்த சில பில்டிங்க்ஸ் ஐப் பார்க்கலாம் வாங்கோ..
 சிலது City Tour Bus  இல் போகும்போது எடுத்தவை..







ஆரம்பமே இப்பத்தானே:).. என் பயணத் தொல்லைகள் தொடரும்:).. ஹா ஹா ஹா ஹையோ ஆரும் காணாமல் போயிடாதீங்கோ:)..
==================================================================================
ஊசி இணைப்பு: 
இது சில நேரங்களில் எனக்கும் இப்படி ஆகி வேதனைப் பட்ட்டிருக்கிறேன்.. நான் அதிகமாக என்னை வருத்தி.. சாப்பிடாமல், குளிக்காமல், நித்திரை கொள்ளாமல் மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்குவதுண்டு:)..[முக்கியமாக ரெலிஃபோன் கோல்களுக்கு, பேசுவோர் தமக்கு ஃபிறீ ஆகும்போது எடுப்பார்கள், ஆனா நானோ அவர்களுக்காக, என் ரைமை ஒதுக்கிக் கதைப்பேன்- பலர் இதை உணர்ந்து கொள்வதில்லை]

ஆங்ங்ங்ங் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:)..  கையில் மை போட்டு:) தமிழ் மணத்தில் வோட்டுப் போட வரும் உங்களுக்காக இதோ
தமிழ்மண லிங்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

90 comments :

  1. நயூயோர்க் ஜாலியான இடம். ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    கடைசியில் வரும் இங்கிலுசு பொன்மொழி அற்புதம். அந்தம்மா எதுக்கு அழுவுறாங்க?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ அப்பாத்துரை வாங்கோ... முதன் முதலா வந்திருக்கிறீங்க.. ஆனா தப்பு நடந்துபோச்சு.. அதுக்காக முதலில் ஒரு நியூர்க் ரிக்கெட் + ஹோட்டல் புக்கிங் உடன் தந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்:).

      காரணம்.. உங்களுடையதும்..ட்றுத் உடையதும்.. என் மெயிலுக்கு வருவதில்லை.. நேரே வெயிட்டிங் கொமெண்ட்ஸ் க்குள் போய் நின்று விடுகிறது.

      நான் மெயில் டொயிங் டொயிங் என மணி அடிக்கும்போது பக்குப் பக்கென கொமெண்ட்ஸ் ஐ வெளியிட்டு விடுவேன்.. இந்த வெயிட்டிங் கொமெண்ட் பொக்ஸ் ஐ.. நானாக என் கிட்னி அறிவித்தல் தரும்போதுதான் ஓடிச்சென்று திறந்து பார்த்து.. வெளியிடுகிறேன்..

      அதனாலயே இந்த தாமதம் மன்னிக்கவும்.

      உண்மைதான் மிகவும் ரசித்தோம்ம்.. கட்டிடங்களின் அழகு சொல்லி வேலையில்லை.. மலைகள் ஆறுகளைப் பார்க்கும்போது ஒரு உணர்வு.. இப்படி விசித்திரமான கட்டிடங்களைப் பார்க்கும்போது இன்னொரு உணர்வு.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகுதான்..

      //அந்தம்மா எதுக்கு அழுவுறாங்க?///

      ஹா ஹா ஹா தமிமனத்தைக்:) காணவில்லை எனும் கவலையாகக் கூட இருக்கலாம்:).. நான் இன்னும் ஏன் அழுவுறீங்க அக்கா?:) எனக் கேய்க்கல்லே:)..

      ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றி.

      Delete
    2. எனக்கு ஒரு ஆறுதல். மதுரைத்தமிழன் / அப்பாதுரை (அப்பாதுரை கமெண்ட்ஸ் முன்னால் ஒழுங்காக வந்து கொண்டிருந்தன) கமெண்ட்ஸ் என் மெயில் பாக்ஸுக்கும் வருவதில்லை. போஸ்டில் பார்த்துதான் தெரிந்து கொள்வேன். ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று பலமுறை கேட்டிருக்கிறேன். யாரும் பதில் சொன்னதில்லை. இப்போதான் உங்கள் தளத்திலும் இப்படி என்று தெரிகிறது. அப்பா........டி! இப்போதான் கொஞ்சம் திருப்தி!

      Delete
    3. /// ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று பலமுறை கேட்டிருக்கிறேன். யாரும் பதில் சொன்னதில்லை.//

      இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடெ.. எங்கெங்கோ.. ஞானத்தங்கமே.... ஹையோ அது சிட்டுவேஷன் சோங் பிபிசில போகுதே:)... எங்கெல்லாமோ கேட்டீங்க ஸ்ரீராம், என்னைக் கேட்டிருந்தால் சொல்லியிருப்பேனெல்லோ... ஹா ஹா ஹா அது இவர்கள் இருவரின் கொமெண்ட்ஸ் சுகளுக்குள்ளும் ஏதோ சூஊஊஊஊஉனியம் இருக்குமோ என்னமோ:)) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. இல்லை எனில் எனக்கு ரெண்டு வோட்டுக் குறைஞ்சிடப்போகுதேஎ:))..

      நன்றி ஸ்ரீராம் மீள் வரவுக்கு.

      Delete
  2. என்னடா இந்தப் பூசுக்கு வந்த சோதனை தமிழ்மணம் வாக்குப் படையில் வாக்கிட முடியலையே அது என்னமோ சப்மிட் டு தமிழ்மணம் ன்னு சொல்லுது ...ம்ம் என்னத்தையோ சப்ப சொல்லுது போல ம்ம் மீண்டும் வந்து பார்ப்போம்

    ReplyDelete
  3. வாங்கோ மேஜரே... முதலாவதா வந்திருக்கிறீங்க... உங்களுக்கு ஒரு நியூயோக் ரிக்கெட் இந்தாங்க... :)

    அது இன்று தமிழ் மணம் அனைத்து புளொக்குகளிலும் செயலிழந்து போயிருக்குது... ஒருவேளை தமிழ்மணத்தாலதான் நாட்டுக்குள் பிரச்சனை என நான் சொன்னது கேட்டிட்டுதோ என்னமோ:) அரோகரா:)...

    மிக்க நன்றி சீராளன்.

    ReplyDelete
  4. படங்கள் அழகு
    இன்று அனைவரது வலைப் பூவிலும் தமிழ் மணத்தைக் காணவில்லை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. தமிழ்மணம் retired ஆகிட்டார்போல:).. திரும்ப ஆரம்பிக்கும் வரை நாமும் கொஞ்சம் ரென்ஷன் இல்லாமல் இருக்கலாம் ஹா ஹா ஹா:).

      Delete
  5. வா..வ் அழகா இருக்கு. இருக்கிற ஆசையை தூண்டிவிட்டீங்க. கர்ர்ர்ர்ர்.. படங்கள் எல்லாமே எங்களுக்கும் (கணவருக்கு) நியூயோர்க் செல்ல விருப்பம் (யாருக்குதான் இல்லை) இருக்கு. உங்க பதிவையையும் காட்டியாச்சு..
    ஊசி இணைப்பு உண்மை.. எனக்கும்தான்..
    தமிழ்மணம் ???

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. நிட்சயம் போய்ப் பாருங்கோ.. படத்தில் பார்ப்பதைவிட நேரில் பார்க்கும்போது கட்டிடங்களின் அழகு சொல்லி வேலையில்லை.. கனடாவின் அழகு.. அனைத்தும் புதுசு.. மிக அகன்ற.. பல ரோட்டுக்கள் அப்படி அது ஒரு விதம்.. இது மிக நெருக்கமான வானுயர்ந்த கட்டிடங்கள்.. ஆனா ரோட் மட்டும்.. பழையகாலத்து ரோட்.. போக ஒன்று வர ஒன்று.. இப்படித்தான் அதிகம்... தொடர்ந்து படங்கள் போடுவேன்?:).. பாருங்கோ..

      ஊசி இணைப்பு அனுபவம் பலருக்கு இருக்குது போல.. மிக்க நன்றி அம்முலு.. ஆங்ங்ங் எங்கே கையில மை இல்லை ஹா ஹா ஹா:).

      Delete
  6. வந்து த ம வச்சுட்டு அப்புறம் பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா வெறும் XXXXX என்று காண்பிக்கிறதே! ஆவிகளைப் பற்றிய இடுகை போடப்போறேன்னு சொன்னதும் ஆவிகள் செய்த வேலையாயிருக்குமோ? (அது எப்படி? ஆவிகள்டயே ஆவி வேலையைக் காண்பிக்காதே)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      ///(அது எப்படி? ஆவிகள்டயே ஆவி வேலையைக் காண்பிக்காதே)//
      ஹா ஹா ஹா இருங்கோ இந்த வாய்க்கு... ஒருநாளைக்காவது.. நைட் ல,ஜன்னல் தன்பாட்டில் மூடித்திறந்து சத்தம்போட்டு நீங்கள் பயந்து பக்கத்து ரூம் கதவைத் தட்ட வைக்கிறேன்:)

      Delete
  7. எனக்குப் படங்களையெல்லாம் பார்க்கும்போது திருநெவேலில எல்லா லாலாக் கடைகளிலும் மைசூர்பாக்கு, சர்க்கரை மிட்டாய் அடுக்கிவைத்திருப்பதுபோல் தெரிந்தது.

    கூகுள் பண்ணி எடுத்த அனைத்து போட்டோக்களும் அருமை. :))

    மதுரைத்தமிழன் மனதில் நினைக்கிறார் - ஒருநாள் நியூயார்க், டிரிப்புக்கு ரெண்டு இடுகை என்றால் ஆறுவார கனடா டிரிப்புக்கு எத்தனை இடுகைகளோ கர்த்தரே...

    பூனைகள் படத்துல குழந்தை அம்மாகிட்ட ஆறுதல் சொல்லறமாதிரி இருக்கு.

    கடைசி ஊசிக்குறிப்பு - எளிதாக்க் கிடைக்கும் எந்தப் பொருளுக்கும் மதிப்பில்லை. அந்தப் பொருள் கையைவிட்டுப் போகும்போதுதான் அதன் அருமை புரியும். அப்போது காலம் கடந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //நெல்லைத் தமிழன்Friday, September 08, 2017 7:52:00 am
      எனக்குப் படங்களையெல்லாம் பார்க்கும்போது திருநெவேலில எல்லா லாலாக் கடைகளிலும் மைசூர்பாக்கு, சர்க்கரை மிட்டாய் அடுக்கிவைத்திருப்பதுபோல் தெரிந்தது.//

      ஹாஹாஆ :) எனக்கு நேரா நிக்க வச்ச கேட்பரீஸ் சாக்லேட் பார் நினைவுக்கு வருது ஆனா லாலா கடை மிட்டாய்தான் செம :)

      Delete
    2. ரிசிப்பி பதிவா போட்டுகிட்டு இருந்தால் பார்கிறது எல்லாம் திண்பண்டங்களாகவே உங்களுக்கு தோன்றுகிறது

      Delete
    3. //எளிதாக்க் கிடைக்கும் எந்தப் பொருளுக்கும் மதிப்பில்லை. அந்தப் பொருள் கையைவிட்டுப் போகும்போதுதான் அதன் அருமை புரியும். //


      உண்மையோ உண்மை.

      Delete
    4. ஹா ஹா ஹா உண்மைதான் முட்டாய் அடுக்கியதுபோல.. ஒவ்வொன்றும் ஒரு அழகு.. அப்போ நீங்க நியூயோர் பக்கம் போகேல்லையோ?:) அப்பாடா இப்போதான் நிம்மதி..

      ஏனெனில் லெவ்ட்டு ரைட்டு எனப் படமெடுத்தாச்சு.. ஆனா அதைப் போடும்போது கரெக்ட்டா விளக்கமும் கொடுக்கோணும் எல்லோ:) மாறிக்கீறி கொடுத்திட்டால்ல்.. ட்றுத் உம் நீங்களும் கண்டு பிடிச்சு மிரட்டுவீங்களே எனும் பயத்தோடு இருந்தேன்.. இனி ட்றுத் மட்டும்தானே:) சாமாளிச்சிடலாம்..:).

      ///கூகுள் பண்ணி எடுத்த அனைத்து போட்டோக்களும் அருமை. :))//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சூனியக் கியவியை அனுப்பிடுவேன்ன்:) டமில் மணத்துக்கு அனுப்பியதைப்போல:).. ஹா ஹா ஹா ஹையோ சும்மா இருக்கும் என்னைப் பிடிச்சு உள்ளே போட்டிடப்போகினம்:) என் வாய்தேன் நேக்கு எதிரி:).

      Delete
    5. //மதுரைத்தமிழன் மனதில் நினைக்கிறார் - ஒருநாள் நியூயார்க், டிரிப்புக்கு ரெண்டு இடுகை என்றால் ஆறுவார கனடா டிரிப்புக்கு எத்தனை இடுகைகளோ கர்த்தரே...//
      ஹா ஹா ஹா பரலோகத்தில் இருக்கின்ற நமது பிதாவே என்னையும் காப்பாத்துங்கோ:)..

      //பூனைகள் படத்துல குழந்தை அம்மாகிட்ட ஆறுதல் சொல்லறமாதிரி இருக்கு.//
      நோ கொமெண்ட்ஸ் ஹா ஹா ஹா:).

      Delete
    6. //கடைசி ஊசிக்குறிப்பு - எளிதாக்க் கிடைக்கும் எந்தப் பொருளுக்கும் மதிப்பில்லை. அந்தப் பொருள் கையைவிட்டுப் போகும்போதுதான் அதன் அருமை புரியும். அப்போது காலம் கடந்திருக்கும்.//

      உண்மை இதுவும் ஒன்று, இன்னொன்று, நாம் எப்பவும் அவர்களுக்கு அவலபிளாக இருக்கும்போது, அதைச் சிலர் தப்பாகவும் மலிவாகவும் எடுத்து விடுகிறார்கள்.. சிலர் நினைப்பது என்னவெனில், இவர் எப்பவும் சும்மாதான் இருக்கிறார்போல என... அவர்களுக்காக நாம் கஸ்டப்பட்டு நேரம் ஒதுக்குகிறோம் என்பதை புரிந்து கொள்வதில்லை.

      இது ரெலிபோன் கோல்களுக்கு மட்டுமல்ல.. பின்னூட்டங்களுக்கும் பொருந்தும்.. அதனாலதான் நான் என்னிடம் வரும் பின்னூட்டங்களுக்கு நேரம் ஒதுக்கி பதில் கொடுப்பது. ஒரு சொல் ஒருவர் எழுதினால் கூட.. அவர் நமக்காக நம் புளொக் வந்து கொமெண்ட் பொக்ஸ் திறந்து, பின்னூட்டம் போட்டு விட்டுப் போயிருக்கிறாரே எனத்தான் நினைப்பேன்..

      அதனால்தான் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பதில் கொடுப்பேன்.. எனக்கு சின்ன வயதிலேயே ஒரு அண்ணா சொல்லித்தந்தார்.. நாம் எப்பவும் நம் இடத்தில் இருந்து சிந்திக்கக்கூடாது.. அடுத்தவர் இடத்திலிருந்தும் சிந்திக்கோணும் என.. ஓவரா அலட்டிவிட்டேனோ?:))..
      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.. இம்முறை உங்கள் எல்லோருக்கும் மை வைக்கும் வேலை மிச்சம்...

      இன்னொன்று பாஸ்வெர்ட், ஐடியை பத்திரமா எழுதி வையுங்கோ.. சில நாட்கள் பாவிக்காது விட்டால் மறந்துபோக வாய்ப்பிருக்கு:)..[தமிழ்மணம்]

      Delete
    7. //AngelinFriday, //ஆனா லாலா கடை மிட்டாய்தான் செம :)//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ரொம்ப முக்கியம் ஹா ஹா ஹா:).

      Delete
    8. //ஸ்ரீராம்.Friday, September 08, 2017 3:00:00 pm
      //எளிதாக்க் கிடைக்கும் எந்தப் பொருளுக்கும் மதிப்பில்லை. அந்தப் பொருள் கையைவிட்டுப் போகும்போதுதான் அதன் அருமை புரியும். //


      உண்மையோ உண்மை.//

      ஹா ஹா ஹா ஸ்ரீராம் எப்பவோ எதையோ படுபயங்கரமாக மிஸ் பண்ணியிருக்கிறார்போலும்... அது மனிதராகத்தான் இருக்கோணும் என்றில்லை.... ஒரு உடையாக, வாகனமாக.. பூனை நாயாக எதுவாகவும் இருக்கலாம்.

      காலையில் எழுந்து..ரீ குடிக்கும்போது டெய்லி ஒரு குயில் வந்து மாங்கொப்பில் இருந்து கூவும்... சில சமயம் துரத்தியும் இருப்போம்.... ஆனா 2 நாட்கள் அது வராது விட்டால்.. பயங்கரமாக மிஸ் பண்ணுவோம்ம்.. ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன்:).

      Delete
    9. ///Avargal UnmaigalFriday, September 08, 2017 2:13:00 pm
      ரிசிப்பி பதிவா போட்டுகிட்டு இருந்தால் பார்கிறது எல்லாம் திண்பண்டங்களாகவே உங்களுக்கு தோன்றுகிறது///

      ஹா ஹா ஹா:) ட்றுத்..., நெல்லைத்தமிழன் ஒரு சகல கலா வல்லவர்.. அடுத்த வியாளன் அவரது “காதல் கவிதை” வெளிவர இருக்கிறது:).. இப்படிப்பட்டவரைப்போய் உப்பூடிக் கதைக்கலாமோ?:)...

      இருப்பினும் ஒரு ரகசியம் சொல்றேன்ன்ன்:).. கொஞ்சம் கரெக்ட்டாத்தான் கண்டு பிடிக்கிறீங்க என்பது கீழே அஞ்சுவின் கொமெண்ட்டையும் பார்க்கும்போது உறுதியாகுது:).. அவவும் தான் ஒரு சமையல்களை வல்லி..வில்லி.. என சத்தமாகப் பாடிக்கொண்டு திரிவதாக காத்து வாக்கில் அறிஞ்சேன்:).

      Delete
    10. ஹா ஹா ஹா அது கலை:).. ஆனா களை என்பது அஞ்சுவுக்குப் பொருந்தும்போல இருக்கே:)..

      Delete
  8. ஹலோவ் எங்கே தமிழ் மண லிங்கை காணோம் :) பூனை வீட்லயே திருட்டா :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன்:) எனக்கு உங்களிலதான் கொஞ்சம் சந்தேகமாக் கிடக்கு:).. நீங்கதான் என்னைத்தள்ளுவதுக்குப் பதில் தமிழ்மண வோட்டை தேம்ஸ்ல தள்ளிட்டீங்களோ என:).. தேடித்திரிகிறார்களாம்.. எதுக்கும் கொஞ்ச நாளைக்கு கட்டிலுக்குக் கீழயே இருங்கோ அல்லது பிக்பொஸ் வீட்டுக்குள் போய் இருங்கோவன்:) அங்கு யாரும் நுழைய முடியாதே:) ஹா ஹா ஹா:).

      Delete
  9. ஊசி இணைப்பு ...தகுதி இல்லாதவங்களுக்காக ஒரு சொட்டு வியர்வை கூட சிந்தக்கூடாதாம் ..அதெல்லாம் நமக்கெங்கே புரியுது

    ReplyDelete
    Replies
    1. //தகுதி இல்லாதவங்களுக்காக ஒரு சொட்டு வியர்வை கூட சிந்தக்கூடாதாம் .//

      இதுவும் சரி. ஆனால் அப்படி இருக்க முடிவதில்லை!

      Delete
    2. ஹி ஹீ :) இதில் நாமெல்லாம் சேம் பின்ச் :)

      Delete
    3. ///AngelinFriday, September 08, 2017 8:41:00 am
      ஊசி இணைப்பு ...தகுதி இல்லாதவங்களுக்காக ஒரு சொட்டு வியர்வை கூட சிந்தக்கூடாதாம் ..அதெல்லாம் நமக்கெங்கே புரியுது///

      200 வீதம் உண்மை அஞ்சு... ஆனா நாம் ஏற்கனவே நமக்குப் பட்டம் கொடுத்து வச்சிருக்கிறோமே:).. அதாவது “வந்தபின் காப்போன்கள்” என:).. ஹா ஹா ஹா.. அடிபட்ட பின்புதானே தெரிந்து கொள்கிறோம் -

      Delete
    4. ///ஸ்ரீராம்.Friday, September 08, 2017 3:01:00 pm
      //தகுதி இல்லாதவங்களுக்காக ஒரு சொட்டு வியர்வை கூட சிந்தக்கூடாதாம் .//

      இதுவும் சரி. ஆனால் அப்படி இருக்க முடிவதில்லை!//

      ஆரம்பம் எதுவும் தெரிவதில்லைத்தானே.. எல்லோரையும் ஒரே மாதிரியே நினைத்து விடுகிறோம்... இல்லையெனில் கொஞ்சமாவது உசாராகலாம்தானே ஆகவும் லூசாக இருக்காமல் ஹா ஹா ஹா:)..

      Delete
  10. இன்னது பயணத்தொல்லைகளா ஆவ் ..நான் இன்னும் ரெண்டு மாசம் விடுப்பு எடுத்துக்கறேன் bye :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தேம்ஸ்ல தள்ளிடுவேன்:).. உங்களை எல்லாம் நம்பி எல்லோ படமெடுத்து வந்தனான்:).. அப்போ போட்டுக் காட்ட வாணாம்?:)).. ஹா ஹா ஹா இங்கே படங்கள் போட்டு வைத்தால்.. எந்த நாட்டில் இருந்தாலும் அந்தர அவசரத்துக்கு எடுக்க முடியுது... கொம்பியூட்டரில் போட்டு வைக்கும்போது.. வேறு இடத்தில் இருக்கும்போது சடாரென ஆசைக்கு ஒரு படம் காட்ட முடிவதில்லை.

      ஸ்கூலில் ரீச்சேர்ஸ் ஏதும் கேட்டால்.. சமையல்.. குயிலிங் எதுவாயினும்.. டக்கென புளொக்கை திறந்து காட்டுவேன், இது நான் செய்ததென.. இல்லையெனில் முடியாத காரியம்:)... அதனால புளொக்கும் ஒரு பொக்கிஷம்தானே:)..

      Delete
  11. நியூயார்க் அழகு பேரழகுதான் ஆனான் மரங்களை அழிச்சி பசுமையை கொன்ற ஒரு அழகு மனதுக்கு வருத்தத்தை மட்டும் வைக்கிறது ..நான் லண்டன் பக்கமே போக விரும்ப மாட்டேன் வானுயர்ந்த கட்டிடங்கள் !!! மனம் கிராமப்புற கண்ட்ரி சைட் காட்சிக்கே எப்பவும் எனது வோட்டு :)
    உயரமான பில்டிங்ஸ் பாக்க பயம் எல்லாம் எனக்கில்லை எல்லா படத்தையும் ரசித்தேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹலோ நீயூயார்க்கில் நிறைய மரங்கள் இருக்கின்றன் இந்தியாவை போல இல்லை செண்ட்ரல் பார்க் என்ற மிகப் பெரிய பார்க் உண்டு அதுமட்டுமல்ல மிகப் பெரிய மிருக காட்சி சாலை நீயூயார்க் சிட்டிக்குள்ள நிறைய மரங்களுடன் உள்ளன்

      Delete
    2. மரங்களை அழிச்சு கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என்பது நியூயோர்க், லண்டன் போன்ற பழமை வாய்ந்த நகரங்களுக்குப் பொருந்தாது அஞ்சு. ஏனெனில் இந்த நகரங்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டன... இப்போ இருந்த கட்டிடங்களைப் பெருப்பிக்கிறார்கள் அவ்வளவேதான்.

      அத்தோடு சிட்டி எனில் கட்டிடங்கள் இருந்தால்தானே அது எங்கயும் சிட்டி ஆகும்.

      இன்னொன்று கட்டிடங்கள் என்பதற்காக நியூயோர்க்கில் மரங்கள் இல்லாமல் இல்லை.. மேலே படங்களில் பாருங்கள்.. ஒவ்வொரு படத்திலும் அநேகமாக பச்சை தெரிகிறதே.

      ஒரு வீடியோ எடுத்திருக்கிறேன்ன்.. அதில் இருக்கும் மரங்களைப் பாருங்கள்.. பின்பு அதனை ஒரு வீடியோ பதிவாகப் போட நினைக்கிறேன்ன் .. நடக்குமோ?:)

      அது என்னமோ தெரியவில்லை.. அங்கு கட்டிடங்கள் எனில் சொல்ல முடியாத பிரமாண்டமும் அழகும்...

      Delete
    3. ஹலோ மியாவ் யு ஆர் ட்ரிக்கெரிங் மீ :) மரம் இருக்கும் அதில் புலி படுத்து உறங்கும் என உத்திரவாதம் தர முடியுமா. இல்லை பறவை nest இருக்குதனு பார்திஙலா.இப்பொவெ முகபுத்தகம் போறேன் விரு விருன்னு விழிப்புந்னர்வு பதிவு போடரென்

      Delete
    4. ///இப்பொவெ முகபுத்தகம் போறேன்//
      ஹையோ ஆண்டவா எனக்கு ரெண்டு கண் போனாலும் பறவாயில்லை.. எதிரிக்கு ஒரு கண் எண்டாலும் போகோணும் எனும் முடிவை விட மோசமா இருக்கே இந்த முடிவு:)..

      இப்போ என்ன உங்களுக்கு?.. அந்த நியூயோர்க் மரத்துக்குக் கீழ, புலி படுக்கோணும்.. அதுவும் எங்கட ட்றுத் அந்த ரோட்டால போகும் நேரம் பார்த்து அவ்ளோதானே?:)..யாமிருக்கப் பயமேன்.. அடுத்த மீட்டிங்கின்போது உங்கள் இந்த வாதத்தை ட்றம்ப் அங்கிளின் மேசைக்கு எடுத்துச் செல்கிறேன்:)...

      பீ ஆப்பி:)..

      Delete
    5. Truth ..நீங்க ஒரு மரத்துக்கு கீழே நின்னு இடப்பக்கம் சிங்கம் வலப்பக்கம் புலியோட ஒரு படம் போட்டாதான் நம்புவேன் :)))))))))))))))))

      Delete
    6. மதுரைத் தமிழனுக்கு இதெல்லாம் ஜுஜுபி மேட்டர். எத்தனை வருஷம் மனைவியோடு சமாளித்திருக்கிறார். அதுவே ஆண் புலி ஆண் சிங்கம்னா இன்னுமே மூவரும் ஃப்ரெண்ட்லியாயிருக்க சான்ஸ் ஜாஸ்தி. அவர் வந்து நான் சொன்னதை கன்ஃபர்ம் பண்ணுவார்.

      Delete
    7. ///Avargal UnmaigalFriday, September 08, 2017 2:11:00 pm
      ஹலோ நீயூயார்க்கில் நிறைய மரங்கள் இருக்கின்றன் இந்தியாவை போல இல்லை செண்ட்ரல் பார்க் என்ற மிகப் பெரிய பார்க் உண்டு///

      ஆங்ங் இந்தக் கொமெண்ட் என் கண்ணில படாமல் வெயிட்டிங் மொடரேசனில் மறைஞ்சிருந்ததால நேற்று அஞ்சு தப்பிச்சுட்டா:)...

      யேஸ்ஸ் ட்றுத் அந்த சென்றல் பார்க் போனோம்ம்.. அதென்னது.. சிட்டிக்குள்ளே இப்படி ஒரு பெருங்காடோ என வியக்க வச்சது.. சிட்டிக்குள் அப்படி ஒரு பார்க்.. கிட்டத்தட்ட பெருங்காடுதானே.. நினைத்துப் பார்க்க முடியவில்லை...

      நாம் மியூசியம் பார்த்து முடிச்சிட்டு.. பார்க்குக்குள் போனதால் நேரமும் போய் விட்டது நாமும் களைத்து விட்டோம்ம்.. கால் பங்கு கூடப் பார்க்கவில்லை... பின்னர் போஸ்ட்டில் விபரம் சொல்கிறேன்:)..

      Delete
    8. //AngelinSaturday, September 09, 2017 10:25:00 am
      Truth ..நீங்க ஒரு மரத்துக்கு கீழே நின்னு இடப்பக்கம் சிங்கம் வலப்பக்கம் புலியோட ஒரு படம் போட்டாதான் நம்புவேன் :)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர் பூரிக்கட்டைப் பயத்திலேயே மீன் குழம்பை கராஜ் ஃபிரிஜ்ல ஒளிக்கிறவர்.. இதில புபுபுலியுடனோ?:))..

      ஆனாலும் அஞ்சு இது ரொம்ப ஓவரூஊஊஊ:).. கிச்சினுக்குள் ரொயிலட் இருக்கோணும்.. ரொயிலட்டுக்குக்ள்ளும் அடுப்பிருக்கோணும்... என்பதுபோல இருக்கு உங்கள் எதிர்பார்ப்பு... சிட்டி எனில் அப்படித்தான் இருக்கும்.. காடெனில் உப்புடித்தான் இருக்கும்.. பூஸ் எனில் சோபாவில மெத்தையிலதான் படுத்துறங்கும்.. டிங் டிங் டிங்..... அப்பாடா முடிஞ்சு போச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா:)..

      Delete
    9. //நெல்லைத் தமிழன்Saturday, September 09, 2017 2:52:00 pm
      மதுரைத் தமிழனுக்கு இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்.///அவர் வந்து நான் சொன்னதை கன்ஃபர்ம் பண்ணுவார்.///

      ஹா ஹா ஹா அவர் இப்போ அரசியலில் குதிச்சிட்டார்ர்:) இங்கெல்லாம் அடிக்கடி வரமாட்டார்ர்:)) இருப்பினும் நீங்க சொல்வது கரீட்டுத்தான் நெல்லைத்தமிழன்...

      இப்போ கட்டிலில் மற்றப் பக்கம் யாருமில்லையே படுப்பதற்கு எனக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்ர்.. ஒரு பக்கம் அவருடைய சன்னி[பப்பி] தூங்குமெல்லோ:)... ஹா ஹா ஹா அதனால புலியைக் கூட்டிப் போய் மற்றப்பக்கம் படுக்க வைப்பார்ர்:)

      Delete
    10. ஹாஆஹாஆ :) நான் போட்டோ மட்டும்தான் கேட்டேன் இங்கே பூஸார் உங்களை காலி செய்ய பிளானிங் :)

      Delete
    11. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அஞ்சு:) ட்றுத் துக்கு புலி என்பது எலி மாதிரி ஆக்கும்..க்கும்..க்கும்..:).

      Delete
  12. ஹாஹா கொழுமொழு அம்மாவுக்கு பிள்ளை சமாதானமா :)

    பழைய கிங்கோங் மூவி :))))))))))))) வசமா மாட்டுச்சி பூனை இனிமே எங்காச்சும் 16 னு சொல்லிப்பாருங்க கல்லு விழும்

    ReplyDelete
    Replies
    1. //AngelinFriday, September 08, 2017 8:51:00 am
      ஹாஹா கொழுமொழு அம்மாவுக்கு பிள்ளை சமாதானமா :) //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கொஞ்சம் குண்டா:) அயகா:) கொழுகொழு என ஆரும் இருந்திட்டால் புடிக்காதே:))

      ஹா ஹா ஹா என்னாது கிங்கொங் க்கும் 16 க்கும் சம்பந்தம் இருக்கோ கர்ர்ர்ர்ர்:).. அப்போ அஞ்சு பார்த்த “மாஜாபஜார்”:).. ? ஹையோ இந்த விசயம் நெல்லைத்தமிழனுக்கு மட்டுமாவது தெரியோணும் ஜாமீஈஈஈஈஈ:).

      ஹா ஹா ஹா அனைவர் பின்னூட்டங்களையும் சிரித்தபடியே படித்து சிரித்தபடியே கொமெண்ட்ஸ் போடுறேன்:).. இந்தப் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமோ எண்டெல்லாம் கேய்க்கவே மாட்டேன்ன்:)..

      மிக்க நன்றி அஞ்சு.. வாறீங்களோ நியூயோர்க் போகலாம்?:)..

      Delete
    2. ஏஞ்சல் ஹாஹாஹாஹ் ஹூஹூஹுஹூஊ...ஹேஹேஹேஹேஹே ஹாஹாஹா...செமையா சொன்னீங்களே பூசாருக்கு...

      கீதா

      Delete
    3. ///Thulasidharan V ThillaiakathuSaturday, September 09, 2017 8:08:00 pm
      ஏஞ்சல் ஹாஹாஹாஹ் ஹூஹூஹுஹூஊ...ஹேஹேஹேஹேஹே ஹாஹாஹா..//

      இங்கின ஆரோ பலமா சிரிச்சுக்கேக்குதே உண்மையா அஞ்சு?:)).. கொஞ்சம் மெதுவாச் சிரிக்கச் சொல்லுங்கோ என் மகள்(டெய்ஸி) பயப்பிடுறா:) ஹா ஹா ஹா கீதா...:)

      Delete
  13. அந்த ஊர் பஸ்களுக்குக் கூரை கிடையாதா ஒரேயடியாகக் கட்டிடங்களையே பார்த்துக் கொண்டிருந்தால் கழுத்து வலிக்காதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..

      ஹையோ இந்த ஐயாவின் கண்களுக்கு எப்ப பார்த்தாலும் நெகரிவ்வான விசயங்கள் மட்டுமே தெரியுதே:).. சமையல் குறிப்பு போட்டாலும்.. எனக்கிது பிடிக்காது என்கிறாரே:).. ஹா ஹா ஹா உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்கள் குணம் பிடிச்சிருக்குது எனக்கு.

      ஹா ஹா ஹா இவை எல்லாம் உல்லாசப் பயணிகளுக்கான பஸ்கள், இரட்டைத்தட்டு பஸ்கள்.. மேல் தட்டுக்கு கூரை இருக்காது.. அப்போதானே வடிவா எல்லா இடங்களையும் பார்க்கலாம்.. இதுக்கென ஒருவர் பஸ்ஸில் இருந்து எனவுன்ஸ் பண்ணிக்கொண்டிருப்பார் இடங்களை... ஃபிரீயாக இயஃபோனும்.. மழை பெய்தால் ரெயின் கோட்டும் தருவார்கள்.

      இப்படி உல்லாசப் பயணிகளுக்கான பஸ்கள் அனைத்து நாட்டிலும்.. உள்ளன.. சிட்டிகளில் மட்டும்.

      தொடர்ந்து பஸ்ஸில் இருக்க வேண்டுமென்றில்லை.. ஒருநாள் பயண ரிக்கெட் என எடுத்தால்.. காலையில் இருந்து மாலை வரை பஸ்கள் ஓடிய வண்ணம் இருக்கும்.. நாம் நமக்கு பார்க்க விரும்பும் இடங்களில்.. இறங்கிப் பார்த்திட்டு மீண்டும் அடுத்த பஸ்ஸில் ஏறி இருந்திடலாம்.. 20-30 நிமிடத்துக்கொரு பஸ் வந்த வண்ணமிருக்கும்.

      மிக்க நன்றி ஐயா வருகைக்கு.

      Delete
  14. ஆஹா இதெல்லாம் நீயூயார்க்கில் இருக்கிறதா எலுமிச்சை சாதம் மற்று புளிசாதம் கட்டிக்கிட்டு ஒரு நடை போய் பார்த்திட்டு வந்திட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. முதலில் மன்னிக்கவும்.. இடைவேளை விட்டு போஸ்ட் போட ஆரம்பிச்சிருப்பதால்.. வெயிட்டிங் கொமெண்ட்ஸ் பொக்ஸ் பார்க்க மறந்திடுறேன்ன்:)..

      அப்பவும் மனதில நினைச்சேன்ன்.. மேலேயும் உங்களைப் பற்றி எழுதினேன்.. ஆனா பிசியாக்கும் என நினைச்சேனே தவிர.. உங்கள் கொமெண்ட் மெயிலுக்கு வராதே என நினைக்க மறந்திட்டேன்ன்...

      ஹா ஹா ஹா இதுமட்டுமில்லை.. ட்றுத் வீட்டில் பாவிக்கும் பூரிக்கட்டைக் கடையும் அங்கிருத்துத்தாமே:).. நான் தேடினேன்....கூகிளாருக்கு சரியாக இடம் காட்டத்தெரியவில்லை:)..

      சாதத்தோடு ஒளிச்சு வச்ச மீன் குழம்பையும் மறந்திடாமல் எடுத்துப்போய்.. நடுச் சனத்துக்குள் இருந்து கையால குழைச்சுக்க்க்க்க்க்க் குழைச்சுச்ச்ச்ச்ச் சாப்பிடுங்கோ ஹா ஹா ஹா:).

      மிக்க நன்றி ட்றுத் அனைத்துக்கும்.

      Delete
  15. //சுடச்சுடப் போட்டால்தான் சரி, இல்லை எனில் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்றாகி விடுகிறது.//

    நீங்கள் சொல்வது சரிதான் அதிரா. நான் இரண்டு தடவை நியூயார்க்,
    போய் வந்தும் பதிவிடவில்லை.
    உங்கள் அழகான படங்கள் நினைவுகளை மீட்டன.
    பூனையார் படங்களும் அழகு.

    ஊசிகுறிப்பு சொல்லுவது உண்மை.
    இனிமையான பயண தொடர் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ
      ////நீங்கள் சொல்வது சரிதான் அதிரா. நான் இரண்டு தடவை நியூயார்க்,
      போய் வந்தும் பதிவிடவில்லை.
      உங்கள் அழகான படங்கள் நினைவுகளை மீட்டன.//

      உண்மைதானே.. தாமதமானால் நமக்கே வெறுப்பு வந்திடும் போட. இன்னொன்று, நாம் பெரும்பாலும் ரவல் ஷனல்/ பார்ப்போம்.. அதில்.. ஒவ்வொரு நாடுகளுக்கும் போய்.. அங்குள்ள நல்ல ரெஸ்டோரண்டுகள்.. அவற்றின் உணவுகள்.. எங்கு எங்கு என்ன எல்லாம் இருக்குதெனச் சொல்வார்கள்.. அப்படிப் பார்த்த சில உணவுகளை, நியூயோர்க்கில் வாங்கிச் சாப்பிடோணும் என நினைச்சுக் கொண்டே போனோம்.. ஆனா அப்படித் தேடிப்போக முடியவில்லை.. அத்தோடு நினைத்தளவு பெரிதாகவும் இருக்கவில்லை. அங்கு எல்லாமே போசனில் பெரிதாக இருக்கும் எனக் கேள்விப்பட்டோம்.. நேரில் போனபோது வித்தியாசம் இருக்கவில்லை.

      //இனிமையான பயண தொடர் தொடரட்டும்.//
      மிக்க நன்றி.. மிக்க நன்றி.

      Delete
  16. அட, நீங்க பிரபல பதிவர் இல்லை என்றால் வேறு யார் பிரபலம்?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஹா ஹா ஹா ஹையோ நீங்க என்னைக் கம்பி எண்ண வைக்காமல் விடமாட்டீங்கபோல இருக்கே:)

      Delete
  17. 'கண்கொண்டு பார்க்க முடியாது' என்று சொல்வதற்கு அர்த்தமே வேற ஆச்சே! அது சரி அப்படி நிமிர்ந்து நிமிர்ந்து ஏன் எல்லாக் கட்டடத்தையும் பார்க்கவேண்டும் - நினைத்தாலே இனிக்கும் ரஜினி மாதிரி?

    ReplyDelete
    Replies
    1. //கண்கொண்டு பார்க்க முடியாது' என்று சொல்வதற்கு அர்த்தமே வேற ஆச்சே!//
      ஹையோ இது என்ன புதுக்கதை... மிக ஆச்சரியமானவை.. அழகானவை.. வார்த்தையில் சொல்லிப் புரிய வைக்க முடியாதனவற்றைத்தானே இப்படிச் சொல்லுவோம்..:)

      ///அப்படி நிமிர்ந்து நிமிர்ந்து ஏன் எல்லாக் கட்டடத்தையும் பார்க்கவேண்டும் - நினைத்தாலே இனிக்கும் ரஜினி மாதிரி?//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).. அங்கு போனதே கட்டிடங்கள் பார்க்கோணும் எண்டுதானே:).. பொய் விட்டுக் கழுத்துளையுது எனச் சொல்லலாமோ?:).. நானும் கட்டிடத்தின் உச்சி தெரியுதோ என ரோட்டெல்லாம் நிண்டு நிண்டு பார்த்தேன்ன்.. ம்ஹூம்ம்ம்.. முடிவு தெரியாது..

      Delete
  18. //இப்படி வசதி வேறு எங்காவது இருக்குதோ தெரியவில்லை. (WIFI)//

    ஹி ஹி ஹி ஹி எங்கள் வீட்டில் இருக்கிறது!

    இந்தியாவிலும் ஊபர் டாக்சி (ரக்ஷி!)ரொம்ப டிலே எல்லாம் பண்ணுவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. //ஹி ஹி ஹி ஹி எங்கள் வீட்டில் இருக்கிறது!//

      ஹா ஹா ஹா ரைமிங் கொமெடி:).. இதை நான் யோசிக்கல்லியே:).. பாஸ்வேர்ட் போடாமல் பாவிக்க விடுவீஇங்களோ?:)..

      ஊபர்.. ஓம் பெரும்பாலும் அது ஏனையதை விட ஏழியா வரும்.. ஆனா அங்கு.. சொல்ல்லித் திரும்புவதுக்குள் அருகில் நிற்கும்.. ஹோட்டேல் லிவ்ட்டில் இருந்து கோல் பண்ணினால்.. லிவ்ட்டால் இறங்க முன், வாசலில் நிக்கும்:).. என்னமோ அது ஒரு வித ஸ்பீட்டாகத் தெரிஞ்சுது அங்கு.

      Delete
  19. இண்டர்வெல்லில் இருக்கும் இரண்டு பூனைகளில் எது அதிரா?

    அமெரிக்காவை (கொஞ்ச பகுதியை) சுற்றிக் காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ///இண்டர்வெல்லில் இருக்கும் இரண்டு பூனைகளில் எது அதிரா?///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதெல்லாம் கேட்டோ தெரியோணும்... எங்கு மெலிஞ்சு வயக்கெட்டதுபோல இருந்தாலும் அது மீ:).. குண்டா கொளு கொளு என(கறுப்பா ஹா ஹா ஹா) இருப்பின் அது அஞ்சு:).. ச்ச்ச்ச்ச்சோஒ ஈசி எல்லோ கண்டு பிடிக்கிறது:).. ஹா ஹா ஹா.

      //அமெரிக்காவை (கொஞ்ச பகுதியை) சுற்றிக் காட்டியமைக்கு நன்றி.//

      ஆரம்பமே இப்போதானே:).. இன்னும் நிறைய வர இருக்கின்றன:) ஒற்றைத்தலைவலியைச் சாட்டி வராமல் விட்டிடக்கூடா சொல்லிட்டேன்ன்:) ஹா ஹா ஹா:)..

      Delete
  20. ஊசி இணைப்பில் சொல்லப்பட்டிருப்பது எனக்கும் பொருந்தும் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எதுக்கு வார்த்தைகள் இப்பூடித் தடுமாறுது:).. உண்மைதான் இது பலருக்கும் பொருந்தும்.

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்... எங்கள் புளொக் வந்த ஆரம்பம், இந்த ஸ்ரீ .. எனும் எழுத்தைக் கண்டு பிடிக்க கஸ்டப்பட்டு.. பின்பு கண்டு பிடிச்சு வச்சிருந்தேன்..

      இப்போ ஹொலிடே போன காலம்.. எழுத்து பாவிக்காமல் போனமையால்.. ஹொலிடே முடிஞ்சு உங்கள் புளொக் வந்ததும்.. கை மறந்து விட்டது எதை தட்டுவதென:) பின்பு கண்டு பிடிச்சிட்டேன்..

      இன்னுமொன்று கீ போர்ட்டில் ஸ்ரீ.. எழுதிடுவோம்.. ஆனா எழுத்தைப் பார்க்காமல் டக்கென பென் எடுத்து பேப்பரில் எழுதுங்கோ.. இப்போ வரவே வராது.. நாம் கையால் எழுதுவதில்லைத்தானே... அன்று ஸ்ரீ ராம ஜெயம் எழுதப் போக மறந்திட்டேன்ன்.. பின்பு கூகிளில் தேடி எடுத்து வச்சிட்டுத்தான் எழுதினேன்.. ஹையோ ஹையோ..

      Delete
  21. அதிரா வெரி சாரி கொஞ்சம் தாமதமாகிப் போச்சு...உடனே கொமென்ட் போட இயலல!!! கீதாவினால்தான் தாமதம். துளசி வாசித்து கீதாவுக்குக் கமென்ட் அனுப்பி...ஹாஹாஹா..படங்கள் அனைத்தும் அழகோ அழகு!! துளசியாவது 6 அடி....கீதா 4 அடி அப்போ இந்த பில்டிங்க் எல்லாம் கீதாவுக்கு எப்பூடி இருக்கும் ஹாஹாஹா...

    கீதா உங்க இந்த வரிகளை...//ஒவ்வொரு தடவையும்.. ஒவ்வொரு இடம் போகும்போதும் நிண்டு, இருந்து, குனிந்து, தவண்டு, ஏறி நிண்டெல்லாம் பல படங்கள் எடுப்பேன்ன்.// ரசித்தாள் ஏன் சொல்லுங்க அவளும் இப்படித்தானே ஃபோட்டோ எடுப்பாள் ஹாஹாஹாஹாஹா...

    கும்மி அடிக்க முடியலை...நிறைய கொமென்ட்ஸ் வந்துருக்கு பார்க்கறேன் முடியுதானு...

    ஊசி இணைப்பு செம!!! எனக்கு இது அடிக்கடி தோணும்...அதாவது நான் நிறைய தொடர்புகள் வைத்துக் கொள்வது உண்டு...ஆனால் எல்லோரும்ரொம்ப பிஸியாக இருப்பார்கள் அப்போது அவர்கள் என்னை ஏதோ நான் வெட்டியாக இருப்பது போல நினைக்கிறார்கள். ஹாஹாஹா...அவர்கள் நினைத்தால் என்ன நாம விடுவோமா..ஆனாலும் குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது கொஞ்சம் கஷ்டம்தான்....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..

      // கீதாவினால்தான் தாமதம்.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் 4 கீதா:).. வளமையா கீதாதானே தலைமைதாங்கி வருவா.. இம்முறை நீங்க வசமா.. தனியே இங்கு மாட்டுப்பட்டிட்டீங்க:) ஹா ஹா ஹா:)..

      //கீதா உங்க இந்த வரிகளை...//....// ரசித்தாள் ஏன் சொல்லுங்க அவளும் இப்படித்தானே ஃபோட்டோ எடுப்பாள் ஹாஹாஹாஹாஹா...///

      ஹா ஹா ஹா அதுதான் எங்களுக்கும் தெரியுமே.. காகத்தையே கலைச்சுக் கலைச்சுப் படமெடுத்த வீரப்பெண்:) ஆக்கும் கீதா:).

      //ஆனால் எல்லோரும்ரொம்ப பிஸியாக இருப்பார்கள் அப்போது அவர்கள் என்னை ஏதோ நான் வெட்டியாக இருப்பது போல நினைக்கிறார்கள். ஹாஹாஹா...அவர்கள் நினைத்தால் என்ன நாம விடுவோமா.///

      ஹா ஹா ஹா கரெக்ட்டாச் சொன்னீங்க.. சிலர் பிசி இல்லாதுவிடினும் பயங்கர பிசிபோல காட்டிக் கொள்வார்கள்...

      நானும், நீங்கள் சொல்வதுபோலத்தான்.. அடிபட்டாலும் .. மனமொடிஞ்சாலும்.. அப்போது கவலைப்பட்டுவிட்டு.. திரும்பவும் பழையபடிதான் நடப்பேன்ன்.. நான் ஒரு மண்ணுண்ணிப் பாம்புபோல என எப்பவும் என்னை நான் நினைப்பதுண்டு:).. மண்ணுண்ணிப் பாம்பு எப்படி இருக்கும் எனத்தெரியும்தானே... எவ்ளோ அடிச்சாலும் துன்புறுத்தினாலும்.. அந்த இடத்திலேயே நெளியும்.. உருளும்.. செத்தே விட்டதுபோலக்கூடக் கிடக்கும்:)... கொஞ்ச நேரத்தால் எதுவுமே நடக்காததுபோல மீண்டும் பழையபடி மூவ் பண்ணிப் போகும் ஹா ஹா ஹா:)..

      நாம் நாமாக இருப்பதுதான் அழகு.. மிகுதியைக் கடவுள் பார்த்துக் கொள்வார்:)...

      மிக்க நன்றி துளசி அண்ணன்.. கீதாவைக் கெதியா வரச்சொல்லுங்கோ:).

      Delete
  22. அந்தக் கொழு கொழு பூஸார் நம்ம பூஸார் என்று எமக்குத் தெரியாதாக்கும்...அதான் மத்த பூஸார் சொல்லுறார்...."நீ குண்டு எல்லாம் இல்லை கொஞ்சம் கொழு கொழுனு இருக்க அவ்வளவுதான்" ஹாஅஹாஹாஅஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. ஆவ்வ்வ் இப்போதானே துளசி அண்ணன் மூலம் தூது விட்டேன்ன்:).. ஸ்ரீராம் போனகிழமை போட்ட அந்தப் பாடல்.. சரிதா.. ராஜேஷ்.. அந்த மூவி பார்க்கத் தொடங்கிட்டனே.. நன்றாகப் போகுது.. இன்னும் பார்த்து முடிக்கவில்லை:).

      //அந்தக் கொழு கொழு பூஸார் நம்ம பூஸார் என்று எமக்குத் தெரியாதாக்கும்//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) இதைப் பார்த்த சந்தோசத்தில் இப்போ ஒராள் ஓடிவருவா பாருங்கோ:)).. சப்போர்ட்டுக்கு [எனக்கல்ல]:).

      Delete
  23. தமிழ்மணப் பெட்டியும் கண்ணுக்குத் தெரியலை....லிங்கூம் ஹைலைட் ஆக மாட்டேங்குது..அதிரா..என்னாச்சு?யாரு கண்ணு போட்டாங்க?? ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது என்னாச்சுன்னா கீதா:)..

      நான் நினைக்கிறேன் தமிழ்மணத்தில் புனரமைப்பு நடக்கிறது.. இனிப் புதுப்பொலிவோடு வரும் என எதிர்பார்க்கிறேன்:).. அதில் புது மாற்றங்களையும் எதிர்பார்க்கிறேன்:).. அதாவது வோட்ஸ் அடிப்படையில் மட்டுமல்லாது.. கொமெண்ட்ஸ் அடிப்படையையும் கணக்கெடுத்துத்தான்.. மகுடம் சூட்டப்படுமாம்ம்:).. ஹா ஹா ஹா...

      அப்பூடியெனில்.. நேரமில்லை என யாரும் சொல்ல மாட்டினம்.. ஓடி ஓடிக் கொமெண்ட்ஸ் க்கு எல்லாம் பதில் போடுவினம்:)..

      ஆனா ஒன்று, சிலர்.. இப்போ 4,5 கொமெண்ட்ஸ் போடுவோர்.. போட்டியில் ஒரு கொமெண்ட் மட்டுமே போடுவினம்.. ஹா ஹா ஹா எப்பூடி என் கற்பனை:).

      மிக்க நன்றி கீதா.

      Delete
  24. எங்கின விட்டேன்ன் ஜாமீஈஈ.. கொஞ்ச நேரம் காணாமல் போனாலே.. எதுவும் புரியுதில்லை.. தமிழ்மணத்தை விட மோசமாத் தலை சுத்துதே எனக்கு:).

    ReplyDelete
  25. அதிரா! எப்படி இருக்கிறீர்கள்?
    புகைப்படங்கள் அனத்தும் அழகாக, நல்ல clarityயுடன் இருக்கின்றன!

    ReplyDelete
  26. வாங்கோ மனோ அக்கா வாங்கோ... நாம் நலமோடு இருக்கிறோம் மிக்க நன்றி.. நீங்களும் நலம் என்பது தெரிந்து கொண்டேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  27. அருமை
    த+ம வாக்கு போட்டச்சு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ.. உங்கள் கொமெண்ட் பார்த்ததும் , ஏதோ நகைச்சுவைக்கு என்னைப்போல சொல்றீங்க வோட் போட்டாச்சு என நினைச்சேன், பின்பு பார்த்தால் உண்மையில் தமிழ்மணம் இயங்கத் தொடங்கி விட்டது.. நன்றி மொகமட்.

      Delete
  28. வணக்கம் இதுதான் கோபமா.... ?
    உண்மையிலேயே உங்களது பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவில்லை மேலும் நான் கடந்த 10 நாட்களாக பாம்பன் சென்று இருந்தேன் பலரது தளத்திற்கும் வரவில்லை இது எல்லோருக்கும் தெரியும்.

    ரைட்டு பதிவில் உள்ள போட்டோக்கள் தேவகோட்டையை மிஞ்சும் விதமாக இருக்கிறதே.... தேவகோட்டையிலும் எங்கும் வைபி கிடைக்கும் பணம் கொடுத்தால்.....

    இன்னும் தொடர்ந்து வரட்டும்... ஆவலாய்....

    தமன்னா - 3

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. இருப்பினும் செல்லாது.. செல்லாது.. துவக்குக் காட்டி மிரட்டி எல்லோ எல்லோரையும் இங்கின கூட்டி வரவேண்டிக்கிடக்கூஊஉ:))..

      என்னாது பாம்பன் போயிருந்தீங்களோ? இலங்கை இந்தியாவை இணைக்கும் பாலம்தானே பாம்பன் பாலமா? அது இப்போ மூடப்பட்டிருக்கே.. பாம்பன் என ஒரு இடமும் இருக்குதோ?.. சரி விடுங்கோ அது போகட்டும்.

      //ரைட்டு பதிவில் உள்ள போட்டோக்கள் தேவகோட்டையை மிஞ்சும் விதமாக இருக்கிறதே.... //

      ஹா ஹா ஹா நீங்க தேவகோட்டையில் இருக்கும்வரை.. வேறு எதுவும் தேவர்கோட்டையை மிஞ்சாது:)...

      /// தேவகோட்டையிலும் எங்கும் வைபி கிடைக்கும் பணம் கொடுத்தால்.....//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  29. நான் US போகும்போது நியூயோர்க் நிச்சையம் பார்க்க இருக்கும் இடமாக திட்டமிட்டிருக்கிரேன்.
    அதனால் பதிவில் எழுதிய தகவல்கள் உதவும் எனக்கு அக்கா:)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மகேஷ் ஊர் திரும்பியாச்சோ... நிறைய இருக்கு மகேஷ்.. ஒவ்வொரு சிட்டி பார்க்க ஒவ்வொரு கிழமை ஒதுக்கோணும்:)..

      மிக்க நன்றி மகேஷ்.

      Delete
  30. ஆகா ,மகுடம் சூடப்பட வேண்டிய அருமையான பதிவு ,எனக்கு உள்பட பலருக்கும் வந்து சேரவில்லை .தமிழ் மணத்திலும் தடயம் எதுவும் இல்லை ...நீங்களாவது பதிவைப் பற்றி சொல்லி இருக்கலாம் ,சரி ,இன்னொரு முறை ,தலைப்பை மாற்றி தமிழ்மணத்தில் இணைக்க முயற்சி செய்யுங்கள் !
    த ம 7
    மீண்டும் வருவேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ.. எத்தனை போராட்டங்களுக்குப் பின் உங்களை இங்கு கூட்டி வந்திருக்கிறேன் ஹா ஹா ஹா:).. தமிழ்மணம் தான் என் போஸ்ட் பார்த்து அதிர்ச்சியில் தன் மூச்சை நிறுத்திக்கொண்டது... இனி எதுக்கு அடுத்த போஸ்ட்டை இணைப்போம்...

      மிக்க நன்றி மீண்டும் வாங்கோ.

      Delete
  31. நியூயார்க் படங்கள் அருமை

    ReplyDelete
  32. தோழிக்கு வணக்கம், நலமா , உங்கள் எழுத்து நடை வாசித்து காலங்கள் எவ்வளவு ஆயிற்று. அருமை, சந்திப்போம் , நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ் வாங்கோ றமேஸ் வாங்கோ.. எத்தனை வருடங்களாகி விட்டது ஆனாலும் எல்லாமும் நேற்று நடந்ததுபோலவே இருக்கு.. மாயாவையும் உங்களையும் அப்பப்ப நினைப்பதுண்டு..

      மறக்காமல் எட்டிப் பார்த்தமைக்கு மிக்க நன்றி றமேஷ்.. முடியும்போது வாங்கோ.. உங்கள் புளொக்கையும் தூசு தட்டுங்கோ...

      ஒருநாள் மாயா சொன்னது நினைவு வருதெனக்கு.. தன்னாலதான்.. தன் ஊக்கத்தால்தான்.. நீங்க புளொக் எழுதுறீங்க, தான் இல்லையெனில் புளொக் எழுதமாட்டீங்க என ஒருநாள் சொன்னார்..

      மிக்க நன்றி, மிக்க சந்தோசம் றமேஸ்.. நலமாக இருங்கோ வீட்டில் அனைவரும்.. மற்றும் அம்மா நலம்தானே?.

      Delete
  33. அட.....ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்.....சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ... அட ஆமா ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்... ஹா ஹா ஹா:).

      Delete
  34. பதிவை முன்பே படித்தாலும்....பதில் இட தாமதம் ஆகிவிட்டது அதிரா......

    நாங்களெல்லாம் அவ்வொலோ பிசி...ஹி..ஹி....

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க எல்லோரும் உங்கள் புளொக்கை தூசு தட்டுவதிலேயே பிசி.. அப்பூடி எண்டு நான் சொல்லல்ல.. யூ நோ மீ ரொம்ப நல்ல பொண்ணு:))..

      ஹா ஹா ஹா எப்படியாயினும் வந்தமைக்கு மிக்க நன்றி அனு.. ரைம் கிடைக்கும்போது எட்டிப் பாருங்கோ.. கொமெண்ட் போடுங்கோ காசா பணமா.. இதிலொரு மகிழ்ச்சி அவ்வளவே.

      Delete
  35. படமெல்லாம் பார்க்க எனக்கும் போய்ப் பார்க்க வேணும் எண்டு இருக்கு. ஆனால் போக மாட்டன். முடிக்க இன்னும் கன பயணம் இருக்கு. இப்ப அதிரா எழுதுறதை ரசிப்போம். :-)
    //பேசுவோர் தமக்கு ஃபிறீ ஆகும்போது எடுப்பார்கள்,// என்னால இரவு நித்திரையைக் குழப்ப ஏலுறேல்ல இப்ப எல்லாம். அடுத்த நாள் கஷ்டமா இருக்கு. ;(

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.