நல்வரவு_()_


Monday 31 December 2012

சிறு துரும்பும்...

பல்குத்த உதவும்....
 எனச் சேர்த்து வச்சால்ல்ல்...
பின்னாளில்.. மில்லியனெயார் ஆகலாம்:))

இப்பவெல்லாம் ஒரு புழுப், பூச்சி, இலை, ஈ, இலையான்... பேப்பர் துண்டு எதையுமே  நாங்க வீசுறேல்லையாக்கும்:))
ஆஆஆ பறக்குதே.. பொறுக்கி வச்சால் ஏதும் செய்ய உதவும்:)
குயில்:) வேர்க் செய்வதுக்கு(QUILLING WORK)இப்படித்தான் பேப்பரை SHREDDER இல் போட்டு வெட்டி எடுக்க வேண்டும் முதலில்.

Saturday 29 December 2012

பரிசு வரும்...:))

ஒருநாள் தெரியவரும்... 
முதல் பரிசு ஆருக்கென:)) 
அப்போ உங்களுக்கெல்லாம் மயக்கம் வரும்:)
1.ஸ்பினாஜ் கீரைக்கறி
 

Tuesday 25 December 2012

எனக்கே எனக்கா?:)

என்னாது.. எனக்கா? நானா?:))

Monday 17 December 2012

கிறிஸ்மஸ்ஸும் +:)

ஒவ்வொரு கிரிஸ்மஸ்க்கும்.. பிரெசண்ட் வைத்து.. படமெல்லாம் எடுத்து, அதிகாலையில் சன்ரா பிரசண்ட் கொண்டு வந்து வச்சிருக்கிறார் என எழும்பி உடைப்பது வழக்கம்... படங்களைத் தேடினேன் கிடைக்குதில்லை.. என் அவசரத்துக்கு:)..

Saturday 15 December 2012

ஓயமாட்டேன்:)) ஓயமாட்டேன்:)) TOAD IN THE HOLE:)

பரிசு கிடைக்கும்வரை ஓயமாட்டேன்:)
நான் செய்து எப்பத்தான் அளவு பிழைச்சிருக்கு?:)
எங்கிட்டயேவா?:)
TOAD IN THE HOLE
                                                                          தேவையான பொருட்கள்:                        மினி சொசேஜ் - 8/10                                   கோதுமை மா - 100 கிராம்                                  முட்டை - 2                                                           பசுப் பால் -  250 ml                                               வெங்காயம் -பெரிது 1                               உப்பு -1/4 தே.கரண்டி + கொஞ்சம் மிளகுபவுடர்.                                       எண்ணெய் .
செய்முறை:    
              முதலில் சொசேஜ்ஜை சிறிது எண்ணெயில் பொரித்து எடுக்கவும், வெங்காயத்தை குட்டியாக நறுக்கி வதக்கி எடுக்கவும். மாவில் முட்டை, ஒருமேசைக்கரண்டி எண்ணெய், பால், உப்பு, மிளகு செர்த்து நன்கு அடித்து எடுக்கவும்.. பின்பு வெங்காயத்தைக் கலக்கவும்.                                            
 அடுப்பில் ஒரு நொன் ஸ்ரிக் பானை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சொசேஜை.. பரப்பி வைக்கவும், அதனுள் இவ் மாக்கலவையை ஊத்தி மிகவும் குறைந்த நெருப்பில், அவிய விடவும், கொஞ்ச நேரம் மூடி விட்டுத் திறப்பது நல்லது. மேல் பகுதி அவியக் கஸ்டப்பட்டால், ஒருதடவை அழகாகப் பிரட்டி விட்டு இறக்கவும்..

                                                               இது ஒரு ஆங்கிலேய உணவு.
=====================================================

இரண்டாவதாக இங்கு போட்ட குறிப்பை நீக்கி விட்டேன்ன்ன்ன்

ஹையோ மக்கள்ஸ்ஸ் ஒரு குறிப்பு குறைஞ்சுபோச்ச்ச்சே.. அப்போ நேக்குப் பரிசு கிடைக்காதோ?:)))
==========================================================
Enjoy:)
 இது ஜல் அக்காவின் போட்டிக்கு அனுப்புறேன்ன்ன்.. நீங்க மொய் எழுதாட்டிலும் பறவால்ல:) எனக்குப் பரிசு கிடைக்கோணும் என நேர்த்தி வையுங்கோ மக்கள்ஸ்ஸ்:)) 
சிறுஊசிக்குறிப்பு:) நேர்த்தியை நீங்கதான் நிறைவேத்தோணும்.. இப்பவே சொல்லிட்டேன்ன் எங்கிட்டயேவா?:))..
========================================================
கடிகார முள் சுத்தாமலிருக்கலாம்
ஆனால் - காலம் கடந்துகொண்டுதானிருக்கும்
========================================================

Monday 10 December 2012

எண்ணம் அழகானால்....

எல்லாம் அழகாகும்:)

இயற்கையைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திடாமல் இப்பூடியெல்லாம் செய்து வீட்டை அலங்கரிக்கோணும்:)).. இது ஒருவித பற்றை:)).., பூண்டு... பார்க்க அழகாக இருக்கும். செப்டெம்பர் மாதத்தில் இப்படி பூக்க ஆரம்பிக்கும்.. இன்றுவரை இருக்கு..

அதனை வெட்டி வந்து கொஞ்ச நாட்கள் காய வைத்தேன்.

பின்பு பெயிண்ட் வாங்கிப் பூசிக் காய விட்டேன்ன்ன்..
எப்பூடி?:)) அயகா இருக்கோ?:)
ஊசி இணைப்பு:
இப்பவெல்லாம், எந்தப் புல், பூண்டு, பற்றை படாரைப் பார்த்தாலும்... உடனே, அதில என்ன கைவண்ணம் காணலாம் எனும் நினைப்புத்தான் வருகிறது.. அந்த நினைப்பு உருவாக முழுக்க முழுக்க காரணமானவர் இமாதான்:).

இம்முறை கனடாவில்கூட ஒரு Bagமுட்ட ஒருமரப்பூ(பெயர் இப்போ சொல்லமாட்டன்) சேகரித்து எடுத்து வந்திருக்கிறேன்:))).. வேலை நடக்கிறது விரைவில் வெளிவரும்:)..

அதேபோல, எந்த காகிதம், கலர்ப்பேப்பர், ரிபன், பட்டின்... இப்படி கார்ட்க்குப் பயன்படும் (ரீசைக்கிள்)பொருட்கள் எதையுமே வெளியே எறிய மனமில்லாமல் சேகரித்து வைக்கிறேன்ன்.. இதுக்கு முழுக்க முழுக்க காரணம் அஞ்சுவே:)....

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவெனில்... என் கணவருக்கே இப்போ தெரியும்:), எங்கட வீடு குப்பையாவதற்கு முழுக்க முழுக்க காரணம்... அஞ்சுவும், இமாவுமே தவிர:)) அதிரா இல்லை என்பது:))).. அதிரா ரொம்ப நல்ல பொண்ணாச்சே:)) 6 வயசிலிருந்தே:))...

ஆவ்வ்வ்வ்வ் நசிக்கீனமே....மே:))).. மீ எஸ்கேப்ப்ப்:))))


=============================================

உங்களுக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லை எனில்
தற்கொலை செய்து கொள்ளுங்கள்.. ஆனால்
அந்தத் தற்கொலை செய்வதற்காக 
உங்களுக்குள் ஏற்படும் தைரியத்தை வைத்தே... 
ஒரு தடவை வாழ்ந்துதான் பாருங்களேன்... 
இந்த அரிய தத்துவத்தைச் சொன்னவர்.. புலாலியூர் பூஸானந்தா:))
=============================================

Monday 3 December 2012

குயிலி(ன்)ங் அழகு:)


    

 எப்படியாவது அஞ்சுவின் பிறந்தநாளுக்குள் செய்திடோணும் எனக் கங்கணம் கட்டிச் செய்திட்டேன்ன்.. நேரம் இன்மையால் அவசரக் கார்ட் இது:) இது என் கன்னிக் குயிலிங் வேர்க்:)).. எல்லோரும் வந்து வாழ்த்தி, அறுகரிசி போட்டு:)) மொய் எழுதுங்கோ:)))

 எப்பூடி வண்ணத்துப் பூச்சி?:)).. இமாவை நினைவு படுத்துதோ?:)
ஏதோ என்னால முடிஞ்சது, ஆனா நீற்றா வராததுபோல இருக்கு.. இருக்கென்ன வரவில்லை... இன்னும் திரும்ப முயற்சிப்போம்ம்:)))

குட்டி இணைப்பு:
இப்போ நாங்கள் வெள்ளையாய், குளிர்ந்துபோய் இருக்கிறமாக்கும்:)).. ஸ்நோ வந்திட்டுதூ:))

ஸ்பெஷல் இணைப்பு:
இது இளமதி செய்த கார்ட்.. விடுங்கோ விடுங்கோ என்னத் தடுக்காதீங்கோ.. இதைப் பார்த்த பின்பும் நான் இங்கின இருப்பனோ?:)) நான் காசிக்குப் புறப்பட்டுவிட்டேன்ன்ன்ன்:)))


ஊசி இணைப்பு:
ஹையோ முருகா.. கனநாளா ஒருவரும் பெரிசா மொய் எழுதேல்லை:)).. அதால. ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் போய் ஒழுங்கா மட்டின் பிர்ராணி சாப்பிடவும் முடியாமல் போச்ச்ச்ச்:)).. அஞ்சுட சாட்டிலயாவது ஆரும் வருகினமோ பார்ப்பம்:)..
=========================================
கண்ணாடி கயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு, அது உடைந்து காயம் ஏற்படுத்திய பின் வருவது அனுபவம்.. 
இந்த அரிய தத்துவத்தைச் சொன்னவர்.. புலாலியூர் பூஸானந்தா:))
=========================================

Saturday 1 December 2012

அவ...காடோ?:)

அவ்வ்வ்வ்வ்வ்வ் புளொக்குக்கு இடைவெளி விட்டதால தலைப்பு மாறியிருக்கலாம்:).. ஆனால் என் சமையல் மாறாது:).... இது [AVOCADO] அவகாடோவில(தமிழ் சரிதானே?:)) செய்த சான்விச்... நன்றாகவே இருந்துது...
உஸ்ஸ்ஸ் ரெசிப்பி போட்டாலும் போட்டதுதான்ன்..
எல்லோரும் கியூவில வருகினம் அவகாடோ வாங்க:)
கனிந்த அவகாடோ பழம், கரை நீக்கிய bread  துண்டுகள், ஒரு துளி உப்பு, இரு துளி பெப்பர் தூள்.(துளி என்பது இரு விரல்களால் எடுத்துப் போடும் அளவு:))... அவ்வ்வ்வ் மறந்திட்டேன்ன் அத்தோடு ..பட்டர்.

பழத்தை மசித்து, உப்பும் மிளகும் சேர்த்து, பிரெட்டுக்கு பட்டரைப் பூசி, இதனை மேலே பூசிக்கொள்ளுங்கள்:).. அவ்ளோதேன்ன்.. ச்ச்சோஓஓஓஒ சிம்பிளா இல்ல?:))..
 விரும்பிய வடிவத்தில் கட் பண்ணி எடுங்கள்... இது பார்ட்டிகளின்போது செய்து வைக்க உகந்தது.
ஊசி இணைப்பு:)
அவகாடோ பழத்தில் கொழுப்பிருக்கு என்பினம், ஆனா அது நல்ல கொழுப்பாமே.. உடலுக்கு நல்லதாமே...

குட்டி இணைப்பு:)
என்னடா இது இப்போ அதிராவும் தனிப்பதிவா சமையல் போடத்தொடங்கிட்டாவே எனத்தானே யோசிக்கிறீங்க?:)) இதுக்கு ஒரு விடை விரைவில (இந்த வருடம் முடிய முன்) தந்திடுவன்... இது ஜல் அக்காவின் போட்டியில கலக்குவதற்காக போடுகிறேன்:).... பதிவில் இம்முறை ஏதுமில்லையே என ஓசிச்சிடாதீங்க... விரைவில் வழமைக்குத் திரும்பிடலாம்:)..

ஊசி ரிப்ஸ்:)
வெங்காயம் வதக்கும்போது, சிறிது உப்பு சேர்த்திட்டால் விரைவில் வதங்கிடும். அதுபோல்... இஞ்சி, கார்லிக் பேஸ்ட் போட்டு வதக்கும்போதும் உப்பு சேர்த்திட்டால்ல்.. பாத்திரத்தில் ஒட்டாமல் வதங்கும்... தயாரித்து வழங்கியவர்.:அதிராமியாவ்:).


======================================================
அழகாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்... முடிந்தால் வாழ்க்கையை அழகுபடுத்துங்கள், முடியாவிட்டால் அதை அசிங்கப்படுத்தாமல் இருக்கவாவது கற்றுக் கொள்ளுங்கள்..
......இதைச் சொன்னவர் ஒரு “பெரியவர்”..
======================================================

Friday 16 November 2012

முத்துக்களோ கண்கள்!!

இல்ல!! இல்ல! பெரிகள்!(berries:))!!!
என்ன இது நம்மட “கொப்பி வலது” க் கலரில பழுத்திருக்கே:)..
ஆப்புடலாமா வாண்டாமா?:))
இவை கிரான்பெரீஸ்... எங்கள் வீட்டு வேலியில் நிற்கிறது. ஆனால் ஒரு பழம்கூடச் சாப்பிடுவதில்லை, காரணம் ஒழுங்காக மருந்து வாங்கி அடிக்க வேண்டும், அடிக்காவிட்டால் புழுப்பிள்ளைகள்:).. குடி வந்திடுவார்கள்:). படமெடுப்பதற்காக ஆய்ந்தேன், 
பின்பு கொட்டி விட்டேன்..


 மரம் தெரியாமல் கொத்துக் கொத்தாக காய்த்துப் பழுத்து, பின் காய்ந்து போகும், குருவிகள்கூட கொஞ்சம்தான் உண்பினம்.
 இந்தக் கிரான்பெரி, இங்கு பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தேடுவாரில்லாமல் காய்த்திருக்கும், ஆனால் எல்லோரும் சூப்ப மார்கட்டில்தான் பணம் கொடுத்து வாங்குவினம்.

=======================================
இது பிளாக்பெரீஸ்ஸ்... இவையும் இங்கு எல்லா இடங்களிலும் காய்த்துக் குலுங்கும், ஆரும் தொடமாட்டினம். இவை ஸ்கூலுக்குப் பக்கத்தில் ஒரு காணியில் காய்த்திருந்துது. நான் ஒரு வயதானவரைக் கேட்டேன், வயதானோர்தான் இங்கு அயகா விளக்கம் சொலுவினம்:)..)..  இவை சாப்பிடும் பெரீஸ் தானே என. அதுக்கு அவர் நின்று நிதானமாகச் சொன்னார், பயப்பிடாமல் சாப்பிடலாம் ஜாம் செய்யலாம், எனக் கூறிக்கொண்டே ஒன்றைப் பிடுங்கித் தந்து சாப்பிட்டுப் பாருங்கோ என்றார்... சூப்பர்.

 இப்போ புரிஞ்சிருக்குமே எங்கட இடம் எவ்ளோ இயற்கை அயகு:) நிறைஞ்சதென.. நான் அதிராவைச் சொல்லல்ல:).. ஹையோ முறைக்காதீங்கோ.. பிறகு அந்த முருகனே பொறுக்க மாட்டார்:).
நோ தங்கூ.. கண்ட நிண்ட பழங்களை எல்லாம் புடுங்கி லபக்கென வாயில போட்டிடக்கூடாதென:) வீட்டில:) கடுமையான உத்தரவு போடப்பட்டிருக்கு:)).. அவிங்க ஜொன்னா, நான் மீற மாட்டனாக்கும்:).

====================================================
ஊசி இணைப்பு:
எப்பவுமே வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும், சோர்ந்து போயிடக்கூடாதாம், மாத்தி ஓசிக்கோணும் எனப் 
பெரியவங்க ஜொள்ளியிருக்கினம்:)... 
கூரை வேயக் கிடுகு இல்லையே
கிடுகு வாங்கப் பணமில்லையே
என வருந்தாதே...
ஆஹா.. இரவிலே வீட்டுக்குள்
இருந்தபடியே நட்சத்திரங்களைப்
பார்க்க முடிகிறதே..
ஆருக்குக் கிடைக்கும்
இந்தப் பாக்கியம்:)
என மாத்தி ஓசிக்கோணும்:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குட்டி இணைப்பு 4 அவர் கிரே8:) கிட்னீஸ்:)
 “ஆடம்பரம் இல்லாத, சாந்தமான சூழலில்தான், உண்மையானதும், நிரந்தரமானதுமான அமைதி பிறக்கிறது”

 “மனித(பூஸ்:) உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போலத்தான், அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்”
------------ தயாரித்து வழங்கியவர்:- புலாலியூர் பூஸானந்தா:))-----------

Tuesday 6 November 2012

ஆ... கொழுத்த ...கட்டை:)

கொழுக்கட்டை:)..
தினைக் கொழுக்கட்டை சாப்பிட்டிருப்பாரோ இவர்:)
தங்க ஃபிஸ்ஸு.. அதேன் அஞ்சு சொன்னா.. எங்கட சூப்பர் மார்கட்டில தினை கிடைக்குது.. என. அதைக் கேட்டதும், எனக்கு ஊரில அம்மம்மா, சாமியரிசியில செய்து தந்த பிடிக்கொழுக்கட்டை நினைவுக்கு வந்திட்டுது:)).. அது என்னா சுசி தெரியுமோ?:).. உடனே ஓடிச் சென்று வாங்கி வந்து மீயும் பிடிக்கொழுக்கட்டை செய்தேன்.

தினையை ஒரு நாள் முழுவதும் ஊறவிட்டு, பின்பு கழுவி, நன்கு வடித்து உலர விட்டேன்
 உலர்ந்ததும், நன்கு அரைத்து எடுத்து, சக்கரை, தேங்காய்ப்பூச் சேர்த்து குழைத்தேன். இதில் வறுத்த பயற்றம் பருப்பும் சேர்ப்பார்கள், நான் மறந்திட்டேன் சேர்க்க:).
 பின்பு, பிடியாகப் பிடித்து, இடியப்பம் அவிப்பதுபோல ஆவியில்(steam)  அவித்தெடுத்தேன். நல்ல ஒரு ஸ்ரோங் ரீயுடன் தொப்பை அப்பனுக்குக் கொடுத்தேன்ன்:).. அதைச் சாப்பிடுவதை விட்டுப்போட்டு “புறுணம்” பார்க்கிறார் பாருங்கோ:)).. ஆர் வந்து, என்ன சொல்லீனம் எனவாக்கும்:).
 இதில முக்கிய விடயம், சக்கரை தேங்காப்பூவோடு தண்ணி சேர்த்திடக் கூடாது, தண்ணி சேர்க்காமலேலே தண்ணியாகிடுது:), அதனால உடனே குழைத்து உடனே அவிக்கோணும். என்னா ருசி:)) சூப்பர்:)).. ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆ:)).
தினைக் கொழுக்கட்டைக்கான ஒரு ஊஊஊசிக்குறிப்பூஊஊ:)
என்னாண்னா,, நான் கண்டு பிடிச்சேன், இதில் அலர்ஜி இருக்கு. சிலருக்கு சில உணவுப் பண்டங்கள் அலர்ஜி. எங்கள் பக்கத்து வீட்டுக் கிரிஸுக்கு, கோதுமை அலர்ஜியாம், அதனால பிரட்டிலிருந்து(bread), எதுவும் சாப்பிட மாட்டார். அதுபோல, நான் கண்டுபிடிச்சேன்ன்.. தினையிலும் அலர்ஜி இருக்கு... பார்த்து ஜாக்ர்ர்ர்ர்தை:).
=====================================================

சரி அது முடிஞ்சுது, அடுத்து ஒரு கதை ஜொள்ளப்போறன்:).. என்னெண்டால், எங்கட வீட்டாளுக்கு:).... ஆராவது சாத்திரம் அங்க சொல்கிறார்கள், இங்க சொல்கிறார்கள் என்றால் போச்சூ... உடனேயே எனையும் அழைத்துக் கொண்டு அங்கு போய்விடுவார், அது அவருக்கு ஒரு ஹொபி, விருப்பம், அதனால எந்தப் பாதிப்பும் இல்லை, போய்க் கேட்பதோடு சரி, நல்லதைப் பொறுக்கிக் கொள்வோம் அவ்வளவுதான்.

அதுபோல எங்கட அண்ணனுக்கு, ஆரும் தமிழ் வைத்தியங்கள் பற்றிக் கதைச்சால் சரி... உடனே அதைச் செய்திடுவார், அண்ணியைக் கஸ்டப் படுத்தமாட்டார், தானே செய்து அண்ணிக்கு பிள்ளைகளுக்கும் கொடுப்பார். அதாவது தினமும் காலையில் சீரகம் அவிச்சுக் குடிக்கோணும், இஞ்சி கார்லிக், தேனுடன் சேர்த்து அரைத்து.. இப்படி என்னவாயினும்.. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வைத்தியம் ஆவர்கள் வீட்டில் போய்க் கொண்டே இருக்கும்..

இம்முறை நாம் அங்கு நின்றபோது, எங்களுக்கோ, 24 மணிநேரமும் வயிற்றில் இடமிருக்கவில்லை:)).. அது ரோல்ஸ், பற்றிஸ், கட்லட், கொத்து ரொட்டி.. இப்படியே சாப்பிட்டு.. எப்பவும் ஃபுல்லாக இருந்ததாக ஒரு ஃபீலிங்:).

அப்போ ஒருநாள், பின்னேரம் அண்ணன், எங்களுக்காக மட்டின் ரோல்ஸ் வாங்கி வந்திருந்தார், நாங்களோ சாபிடவே முடியாமல் போயிருந்தோம். சொன்னார், இங்கிருக்கும் போதுதானே சாப்பிடுவீங்க, சாப்பிடுங்கோ என, நான் சொன்னேன், என்னால முடியவே முடியாது அண்ணன், எனக்கு வேண்டாம், கேட்காதே என.

உடனே சொன்னார், இருந்துகொள் 5 நிமிடத்தில் உனக்கொரு  “சூப் ரசம்” தாறேன், குடித்தால் எல்லாம் செமித்திடும் எனச் சொல்லிக் கிச்சினுக்குள் போனார்... அண்ணியிடம் கேட்டேன்,  “என்ன அண்ணி அது”? என, அவ சொன்னா.. வீட்டில் இருக்கும் அத்தனை பொருட்களும் போட்டு:), கபேஜ்ஜிலிருந்து என்னவோ மரக்கறி எல்லாம் போட்டு ஒரு சூப் செய்வார், பொறுங்கோ என.

அதேபோல டக்கெனச் செய்து வடித்து கொண்டு வந்து சுடச் சுடக் குடியுங்கோ எனத் தந்தார், நன்றாகவே இருந்துது.

இதேபோல அவர் கண்டு பிடித்த ஒரு சட்னி. உடம்புக்கு தீங்கில்லாதது, இப்போ நானும் அடிக்கடி செய்வதுண்டு, நீங்களும் முயற்சியுங்கோ..

அதாவது, பெரிய வெங்காயம் 2 எடுத்து, பெரிதாக வெட்டிக் கொள்ளோணும், ஒரு பெரிய துண்டு இஞ்சி, பாதிப் பூடு, 5,6 செத்தல் மிளகாய், 5,6 மிளகு,  இத்தனையையும் அடுப்பில் வாட்டோணும், சும்மா அரை வாட்டம், வாட்டுவதற்கு நல்லெண்ணெய் அல்லது ஒலிஃப் ஒயில் பாவிக்கோணும்.


அப்படியே மிக்‌ஷியில் போட்டு, அளவுக்கு பழப்புளியும் போட்டு உப்பும் சேர்த்து அரைத்து எடுத்தால் சூப்பர் சட்னி. விரும்புபவர்கள் ஒரு மேசைக்கரண்டி தேங்காய்ப்பூச் சேர்க்கலாம்.
=================================================


சரி ஏற்கனவே பின்னூட்டத்தில் போட்டிருந்தாலும், இதிலும் போடட்டாம்:) என உள்மனது சொல்லுது, அதனால... என் கறி ஒட்டி:).

 கிழங்கை அவித்து உரித்து மசித்து எடுத்துக் கொண்டு, சிறிது எண்ணெய் விட்டு குட்டியாக அரிந்தெடுத்த வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, பின்பு குட்டியாக அரிந்த லீக்ஸ் போட்டு வதக்கி, கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு, அடுப்பை அணைத்து விட்டு, இந்தக் கிழங்கைக்கொட்டி கிளறி பாதி தேசிக்காய் சேர்க்கோணும்.

அதற்கு முன் மைதா மாவுக்கு உப்புப் போட்டு, கொஞ்சம் எண்ணெய் அல்லது butter/margarine போட்டு குழைத்து வைக்கோணும்.

தோசைக்கல்லில், மெல்லிய ரொட்டியாகத் தட்டிப் போட்டு 2 செக்கனில் பிரட்டி விட்டுவிட்டு, உடனே கறியை வைத்து மடித்திட வேண்டும், இல்லையெனில் ஒட்டாது. பின்பு நீண்ட நேரம் பிரட்டிப் பிரட்டி வாட்டி எடுக்க வேண்டும்.


அதில் அதிகம் மிஞ்சி விட்டது, அதனால மிகுதியை அடுத்த நாள் கறி பன்னாக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்தேன்.

பின்பு உள்ளுடன்(கறி) முடிந்துவிட்டது, ஆனால் மா மிஞ்சி விட்டது, அதுக்கு கொஞ்சம் பச்சைக் கலர் சேர்த்து, இப்படி வெட்டிப் பொரித்தேன்...

====================================================
பின் இணைப்பு:
அடுத்து இங்கு ஹை ஸ்கூலில், ஹோம் எகொனமிக்ஸ் ம் ஒரு பாடம் இருக்கு. ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு விதமான சமையல் குறிப்பு செய்வினம். அதை எங்கட மகன், வீட்டுக்கு வந்து தானே செய்து தருவார். அப்படி அவர் செய்த பொட்டாட்டோ வித் கொலஸ்லோ(coleslaw) தான் இது. 

ஒருவருக்கான அளவு..
ஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்து, முள்ளுக்கரண்டியால் குத்தி அடையாளப்படுத்தி விட்டு, மைக்றோவேவ் பிளேட்டில் வைத்து, 7 நிமிடங்கள் அவிக்கவும், பின்பு திருப்பி வைத்து மீண்டும் 7 நிமிடங்கள் அவிக்கவும்..  அவிந்து வெடித்து வரும், அப்போது எடுத்து பிளந்து வைக்கவும்... பின்பு...
கரட் - பாதி
கோவா/கோஸ் - சிறு துண்டு(20 /25 g)
பெரிய வெங்காயம் -பாதி.
மெயோனீஸ் - 4/5 மேசைக்கரண்டி


கரட், கோவா/கோஸ், வெங்காயம், மிக மெல்லிதாக அரிந்தெடுத்து, மெயோனீஸ் சேர்த்துக் குழைக்கவும், அதை, அவிந்த கிழங்கில், நடுவில் இதனை  வைத்து சாப்பிடோணும்.
 ====================================================


குட்டி இணைப்பு:)
சமைக்கிற சாப்பாடை, எங்கட உறவுக்காரருக்கும் கொடுத்துத்தான் ஆப்புடுவமாக்கும்:).. இதிலிருந்து தெரியுதோ?, அதிரா, கர்ணன் பரம்பரை என:).

ஊசி இணைப்பு:
இது குயினின்ர பேத்தி, குயினுக்குக் குடுக்க ரோசாப்பூ ஆய்கிறா:))... உங்களுக்கல்ல:). கையில இருப்பது ஒரிஜினல் முத்தூஊஊஊஊ:).
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உன் திறமை, உன் நேர்மை, உன் பெருமை எதுவுமே, செயல் மூலமாக வெளிப்படாதவரை எவரும் அறிய முடியாது...
                சொன்னவர் புலாலியூர் பூஸானந்தா:)
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thursday 25 October 2012

போனா வருவீரோ?:(

(நான் இலைகளுக்குச் சொன்னேன்:))
வந்தால் போவீரோ?:)
இலையுதிர் காலமே..
உன் அழகால.. நான்
பூஸாஆஆஆ உருகுறேனே:(

லையுதிர்காலம் வந்துவிட்டது... வீதியோரம் நிற்கும் மரங்களின் அழகோ சொல்ல முடியாது.. அந்த அழகை ரசிக்க இரு கண்கள் போதாமல் இருக்கு...
பச்சை மரம் மஞ்சளாக மாறிவிட்டது... அது சூரியன் பட்டபோது... தங்கம்தேன்ன்ன்:)..
படமெடுப்பதற்காகவே, ஊரெல்லாம் நடந்தேன்ன்.. கொஞ்சம் இருங்கோ.. கால் வலிக்குது:) கொஞ்சூண்டு ஹொட் வோட்டர் பாக் வச்சிட்டு ரைப்பண்ணுறேன்ன்.. காலுக்குத்தேன்ன்:)..


இதிலே ஒரு ரெயினும் நிண்டுதே.. நான் பார்த்தேன்.. படமெடுக்கும்போது தெரிஞ்சுது.. அந்த போர்ட்க்குப் பக்கமாக, ஆனா இப்போ காணல்ல.. ஆரோ சுட்டுப்போட்டினம் ரெயினை.. கர்ர்ர்ர்ர்ர்ர்:))..
 =====================இடைவேளை===================
அன்பும் + பண்பும் நிறைந்த, பெருமதிப்புக்குரிய, மணியம் கஃபே ஓனர் அவர்களுக்கு:)...( உஸ்ஸ் ஸப்பா இப்பவே கை நடுங்குது:)).

போன தலைப்பிலே நீங்க தந்த தாயத்தை:), அம்மம்மாவிடம் கொடுத்துக் கட்டிக் கொண்டேன்ன்:)... என்ன மாயமோ.. என்ன மந்திரமோ.. கட்டிய பிறகு, நேக்குப் பாம்பைக் கண்டால் ஏறி உளக்கிக்கொண்டு போகலாம் போல:) துணிச்சல் வந்திருக்கு:)... இங்கின சிலருக்கும்(வான்ஸ், அஞ்சு, மகி, கீரி:)) அது தேவைப்படுது:) நீங்க ஒரு சைட் பிஸ்னஸாக இதை ஆரம்பித்தால் என்ன?:) 
கொஞ்சம் மாத்தி ஓசியுங்கோ:). 
பணத்தைப் பவுண்ட்டில மாத்தி அனுப்பிடலாம்:).

அதுக்காக நீங்க ஆசைப்படும் 20 பவுண்ட் நோட்.. வச்சிருக்கிறன் எடுங்கோ..:)) எங்க காணல்லியே எனத் தேடவேண்டாம், மேசைக்குக் கீழ இருக்கு:)...
-----இப்படிக்கு அன்பே இல்லாத  “அதிரா”----
==============இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்:))===========


இதில பச்சையாக தெரியும் மரங்கள் எப்பவுமே அப்பூடித்தேன் இருப்பினம்:)).. அதாவது அதிராவைப்போல:)) ஐ மீன் சுவீட் 16 ஆக.. இலையுதிர் காலமும் இல்லை, இளவேனிற் காலமுமில்லை.. அப்பவும் இப்பவும் எப்பவும் அப்பூடித்தேன்ன்:))


என் ரோசாப் பயங்களும்:) எல்லாம் வதங்கிப்போயிட்டுதே:))

மனிதர்களில்தான், வயது வித்தியாசமாம்:) ஆனா இவர்களுக்கு?.. இலை உதிரும்போது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்குமே உதிருதே.. என்னே புறுணம்:) இது ஆண்டவா:) 

குட்டி இணைப்பு:)
இது ரெயின் பிரியர்களுக்காக... நீல நிறப் புகை வண்டி:)(இது வேற வண்டி:)) நிற்பது தெரியுதோ?..

ஊசி இணைப்பு:)
உதிர்வதென்பது எப்போதும்
 சோகமானதுதான் என்கிற 
என் நினைப்பை 
உன் உதட்டிலிருந்து உதிர்க்கின்ற 
ஒரு சின்னப் புன்னகை 
பொய்யாக்கி விடுகிறதே
====================================================
உதென்ன உதெல்லாம் பெரிய “புறுணமோ”? எனச் சொல்லிப்போட்டுப் பேசாமல் போனீங்களெண்டால், நான் டக்கென ரிக்கெட்டைப் போட்டுக் கொண்டு காசிக்குப் போயிடுவேன்:) ........................... பிறகும் நீங்கதான் கவலைப்படுவீங்க டொல்லிட்டேன்:)..................... 
========================================================