நல்வரவு_()_


Tuesday 18 November 2014

சந்தர்ப்பம்!!



தவைத் தட்டாத காரணத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப் பட்டிருக்கின்றன... என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதானே.

அதுபோலத்தான், கடவுளில் நம்பிக்கை வைத்து நன்கு கும்பிடுவோம், ஆனால் ஏதும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் ..கடவுள் கூடக் கை விட்டு விட்டாரே எனப் புலம்புவதும் உண்டுதானே. ஆனால் பூஸ் ரேடியோவில் கேட்டேன், கடவுள், நம்பிக்கை வைத்திருக்கும் தம் பக்தர்களைக் கை விடுவதில்லையாம், அவர் நமக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவாராம், நாம் தான் அச் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன் படுத்தாமல் தவற விட்டு விட்டு, கடவுளைக் குறை கூறுகிறோமாம்.

ஒரு குட்டிக் கதை.

ஒருவர் மிக கடவுள் நம்பிக்கையானவர், அவருக்கு கடவுள் தன்னை எப்பவும், கை விட மாட்டார், காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை இருந்தது.

அப்போ ஒரு நாள், அவர்கள் ஊரில் வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கி விட்டது. இவரின் வீட்டுக்குள்ளும் வெள்ளம், ஊரெல்லாம் வெள்ளம், அப்போ தோணிகளில் சென்று சென்று மக்களைக் காப்பாற்றினார்கள். அப்போ தோணிக்காரர் ஒருவர் இவரை வந்து ஏறும்படி அழைத்தார், அதுக்கு இவர்..  “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” எனக் கூறி, வீட்டின் கூரையில் ஏறி அமர்ந்து கொண்டார்.

பின்பு கூரைகளில் இருப்போரைக் காப்பாற்றவென தீயணைக்கும் படையினர் வந்து அழைத்தனர்.. அதுக்கு இவர் அப்பவும்..  “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” 

எனக் கூறிக் கொண்டு , போக மறுத்து விட்டார். பின்னர் வெள்ளப் பெருக்கு இன்னும் அதிகமாகிவிட்டது, இவர் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் தாவி ஏறிக் கொண்டார், உச்சிக் கொப்பிலே இருந்தார்..

அப்போ ஹெலி வந்து மக்களைக் காப்பாற்றியது, அப்பவும் இவர் ஹெலியில் ஏற மறுத்து..  “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” எனக் கூறி போக மறுத்து விட்டார்.

மறுநாள் இன்னும் வெள்ளம் அதிகமாகி, மரத்தை மூடி விட்டது, இவர் வெள்ளத்தோடு அடிபட்டு, இறந்து போய்ச் சொர்க்கத்தில் சேர்ந்தார்...

அப்போ கடவுளைத் திட்டினார்ர்.. “உன்னை நான் எவ்வளவு நம்பினேன், நீ என்னைக் கை விட்டு விட்டாயே” என.

அதுக்கு கடவுள் சொன்னார்...

 “நீ என் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல்தான், நான் உனக்கு ஒவ்வொரு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்தேன், ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் நீ, நானே நேரில் வருவேன் என தவறாக எதிர்பார்த்து, அத்தனை சந்தர்ப்பங்களையும் இழந்து விட்டாயே, இதுக்கு நான் என்ன செய்வேன்” என்றார்.

இப்படித்தான் நமக்கு அளிக்கப்படும் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்திட வேண்டும். எதுவும் நேராகக் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறு.
========================================================================
ஸ்ஸ்ஸ்ஸ் மக்களுக்கு “அட்வைஸ்” :) பண்ணிப் பண்ணியே:) நான்  நொந்து நூலாகிடுவன் போல இருக்கே வைரவா:)..
========================================================================
நன்றி காட்டுவது 3 வகைப்படும்:
1.இதயத்தால் உணர்தல்.
2.சொற்களால் தெரிவித்தல்.
3.பதிலுக்கு உதவி செய்தல்.
கரீட்டா?..: இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..
===================================================================================================

Monday 10 November 2014

இது எங்கட கார்டின் இல்லை:)

ஸ்ஸ்ஸ் ஏன் முறைக்கிறீங்க எல்லோரும்.. நம்புங்கோ:) இது எங்கட வீட்டுக் கார்டின் இல்லை:).. நம்பமாட்டினமாம் கர்ர்:).. ஹா..ஹா..ஹா..:).

பிரித்தானியாவில் SURREY   எனுமிடத்தில் இருக்கும் கார்டின்.. பெரீஈஈஈஈய பரப்பளவில் அனைத்து மரக்கறிகள், பழங்கள் என எல்லாம் செய்து.. சனங்களை ஓபினாகப் போக விடுவினம். ரிக்கெட் எதுவுமில்லை. நாம் போய் அங்கு பாக் இருக்கும் எடுத்துப் போய் நம் விருப்பத்துக்கு பிடுங்கி பாக்கில் போட்டு எடுத்து வந்து கொடுத்தால் நிறுத்து விலை போடுவினம். நடந்தெல்லாம் போக முடியாது, காரில்தான் போய் ஒவ்வொரு இடமாக பார்க் பண்ணிப் பண்ணிப் பார்க்கோணும்.. அவ்ளோ பெரிசூஊஊஊஊ:)..

பெரிதாக எந்த செக்கியூரிட்டியும் கிடையாது. எம் இஸ்டத்துக்கு பழங்கள் பிடுங்கி முடிந்தவரை சாப்பிடலாம்..

எனக்கு புளொக்கில் போடும் பிளான் இருக்கவில்லை, அதனால அனைத்தையும் படமெடுக்கவில்லை. முன்பும் போயிருக்கிறோம். எத்தனை தடவை போனாலும் அலுக்காது.

பீற்றூட், கரட், ஸ்பினாஜ்(கீரை), பலவகை பீன்ஸ், உருளைக்கிழங்கு, கபேஜ், லீக்ஸ், மறோ, ஹொலிபிளவர்... சோளம்..

பழங்களில்.. ஸ்ரோபெரி, பிளாக்பெரி, கிரான்பெரி... கிட்டத்தட்ட  அனைத்து பெரிகளும்... சில பக்கம் நாம் போகவில்லை களைத்து விட்டோம்ம்..

சூரியகாந்தி கண்டோம்ம்.. அதில் அதிசயம் என்னவெனில் இம்முறைதான் முதன் முதலில் மரூண் கலரில் கண்டோம்...
சரி வாங்கோ கார்டின் பார்க்கலாம்...
----------------------------------------------------------------------------------------------------------------------

இது பீற்றுட்... பெரிய வயல் போல இருந்துது, நம் விருப்பத்துக்கு எதை வேணுமானாலும் பிடுங்கலாம்.. கொடுமை என்னவெனில் நம் மக்கள்ஸ்ஸ்.. ஆடு மாடு உளக்குவது போல அனைத்தையும் உளக்கி, ஓடியாடித்தான் பிடுங்குகிறார்கள்..

இதேபோலத்தான் ஸ்பினாஜ்.. கீரை வயலும்... தேடித் தேடிப் பார்த்து நல்ல குருத்து இலைகளாகப் பிடுங்கி வந்தோம்... கடையில் வாங்கும் ஸ்பினாஜ் சலாட்போல தண்ணி இலையாக இருக்கும்.. இது நல்ல தடிப்பு.. சரியாக பொன்னாங்கண்ணிக் கறிபோல இருந்துது சுவை.. ஒரு மாதமாக பிரிஜ்ஜில் வைத்துச் சமைத்தேன்.. பழுதாகவே இல்லை.


எனக்கு நீண்ட காலமாக ஆசை, பீற்றூட் இலைகள் பிடுங்கி வறை செய்யோணும் என.. அதனால் ஆசை தீர பார்த்துப் பார்த்து, பிடுங்கி வந்தேன். இந்த பீற்றூட் கிழங்குகள்.. நான் எப்பவுமே சாப்பிட்டிராத ருசியாக இருந்தன அவ்ளோ இனிமை. சனங்கள் பிடுங்கிறார்கள்.. பின்பு கிழங்கு கொஞ்சம் சின்னனெனில் எறிந்து போட்டு மற்றதைப் பிடுங்குகிறார்கள்... பார்க்கப் பார்க்க கவலையாக இருந்துது.

இது பீன்ஸ்ஸ், இவ்வளவுதான் இந்த மரத்தின் உயரம்.. சூப்பர் சுவை.

இது பிளாக் பெரி.. இப்போதான் கறுப்புக் கறுப்புக் கொத்து கொத்துப் பழங்கள் சாப்பிட முடியவில்லை ஒரே புளிப்பு(முத்தவில்லை).. அதனால மக்கள் பிடுங்கி பிடுங்கி எறிந்திருக்கிறார்கள்..

இது ராஸ்பெரி... இனிமையோ இனிமை.. கடையில் எனில் ஒரு 15 பழங்களுக்கு மட்டும் 2 பவுண்டுகள் கொடுக்க வேண்டும்.. இது போதுமானவரை சாப்பிட்டோம். அங்கிருந்த ஸ்ரோபெரியின் இனிப்போ சொல்லி வேலையில்லை அப்படி ஒரு இனிப்பு.
 இது மரோ.. பச்சையாக இருக்கும்... கியூகம்பர் போல.. நாம் இதுக்குள் போகவில்லை.. எல்லாமே பெரிய பெரிய வயல்போலத்தான்.
 இவைதான் சூரிய காந்தி.. பெரிதாக்கிப் பாருங்கோ மரூண் கலரிலும் இருக்கிறது.
ஏனைய படங்கள் எடுக்கவில்லை. கபேஜ்/கோவா/முட்டைக்கோஸ்.. எல்லாம்  அப்படியே பிடுங்கி விரிந்திருக்கும் இலைகளை.. அது நல்ல பிஞ்சு இலைகள்தான்.. ஆனா ஓசியில கிடைக்கும்போது அப்படித்தானே...:) உள்ளே இருக்கும் முட்டைபோன்றதை மட்டுமே எடுக்கினம்...

உருளைக்கிழங்கு ஏரியா, ஒரு மெஷின் நிக்குது, அது கொஞ்ச இடத்தைக் கிளறி விடும்... அதில் விருப்பமான கிழங்கை மக்கள் பார்த்து பொறுக்கியபின்.. இன்னும் கொஞ்ச ஏறியாவைக் கிளறி விடும்...

இப்படித்தான் சோளக்காடும்:).. பொத்தியை முறித்து உரிச்சுப் பார்க்கினம் சின்னனெனில் வீசிவிட்டு மற்றதை முறிக்கினம்...

அதைப்பற்றிக் கேட்பார் பார்ப்பாரே இல்லாமல் விட்டிருக்கு... ஆனா இப்படிக் கார்டின் நடத்தி ஆசைக்கு எம்மை எல்லாம் அனுபவிக்க வைக்கும் அவர்கள் வாழ்க...

ஊசிக்குறிப்பு:
புறுணம் என்னவெனில்... நண்பி குடும்பமும் வந்திருந்தார்கள்.. அதுதாங்க நான் ஏற்கனவே இங்கு சொல்லியிருக்கும், என் ஸ்கூல் நண்பி. அப்போ அங்கு இடையிடையே “மணத்தக்காழி” பார்த்தனே.. ச்சும்மா ச்சும்மா ஆங்காங்கு முழைத்திருந்தது.. குட்டிக் குட்டிப் பழங்களோடு... சந்தோசம் தாங்க முடியவில்லை.. உடனே நண்பியைக் கேட்டேன்.. இதுதானே “மணத்தக்காழி” என... உடனே என்னைப் பார்த்துக் கேட்டா... அப்படீன்னா?????????... இதுக்கு மேல என் நிலைமை எப்பூடி இருந்திருக்கும்:) என் வாய்க்கு சட்டர் போட்டிட்டேன்ன்ன்ன்ன்:).. படங்கள் எடுக்காமல் விட்டிட்டேன்ன், இப்போதான் ஃபீல் பண்ணுறேன்.
======================================================================
 “நம்மை மீறி நடக்கும் விஷயங்களை நினைத்துப் ஃபீல் பண்ணி, நம் கொன்றோலில் இருக்கும் விஷயங்களைக் கோட்டை விட்டிடக் கூடாது”
இந்த அளப்பெரிய தத்துவத்தைக் கண்டு பிடித்துக் காவி வந்தவர்: பெருமதிப்புக்குரிய:) புலாலியூர்ப் பூஸானந்தா:)
======================================================================

Wednesday 5 November 2014

ங்ளுக்கும் தெரியுமாக்கும்:)

னைவரும் நலம்தானே?. எல்லோருக்கும் ஆசைதான் +  விருப்பம்தான் பழைய காலம்போல, புளொக் உலகம் கலக்க வேண்டும் எல்லோரும் போட்டிபோட்டு பதிவுகள் இட்டு கலகலப்பாக இருக்கோணும் என.

அஞ்சுவும் என்னை விட்ட பாடில்லை, பழையபடி வாங்கோ அதிரா எழுதுங்கோ அதிரா என.. முக்கால்வாசியும் அஞ்சுவின் ஊக்கத்தாலும்+எனக்கும் எழுத ஆசைதான்.. எப்படியும் தொடரோணும் என... ஆனாலும் என்னமோ பழைய துடிப்பு இல்லாமல் இருக்கு. எல்லாம் ஒரு காலம்தான். ஒவ்வொரு காலத்துக்கு எமக்கு சந்தோசங்கள் ஒவ்வொரு விதமாக கிடைக்குது அவ்வளவே. கிடைத்தது போலவே கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனா வேறு விதமாகக் கிடைக்கும்.

ஒரு காலத்தில் தமிழ்த் தோட்டம், பின்பு அறுசுவையில் கலக்கினோம், பின்னர் புளொக்.. இனி என்னாகுமோ?? சரி அதை விடுவோம்.

இமாவின்  கை வண்ணம் பார்த்தே, எனக்கு இதைச் செய்யும் ஆர்வமும் ஐடியாவும் எழுந்துது. அதனால இப்பதிவுக்கு றீச்சர்ர்ர் வந்து, கடசி 15 பின்னூட்டமாவது போடோணும்:).. குறைவாகப் போட்டால் அவ கணக்கில ரொம்ப வீக்கு:) என கதை கட்டி விடப்படும்:)[சூப்பரா மாட்டி விட்டிட்டேன்].

என்னிடம் நிறைய இப்படி கழுத்துக்கு, காதுக்கு, கைக்கு என இருக்கு. ஒழுங்கா வச்செடுக்க ஓரிடம் இல்லாமையால் போட்டதையே திரும்ப திரும்ப போட்டுக் கொண்டு போவேன்.

அதனால நெக்லெஸ் ஹங்கர் தேடினேன் நெட்டில்.. அது விலையாகவும் இருந்துது + கொஞ்சம்தான் அதில் கொழுவலாம். ச்சோஒ நானே ஐடியாப் போட்டு இப்படிச் செய்தேன் எங்கட வோல் கபேர்ட்டில்:).

இப்படி முதலில் சுவரில் அடித்தேன்..

இந்த ஆணிகளைப் பாவித்து...

இப்படி அடித்தேன்

எப்பூடி என் கிட்னியா?:) பூஸோ கொக்கோ?:)

இவை சில மேக்கப் பொருட்கள்...

இவை மணிக்கூடுகள்..

இவை மோதிரங்கள்.. ஒன்றில் இருப்பது தோடுகள்..


இவைக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கிறன் இன்னும் செய்து முடிக்கவில்லை.. இப்போதைக்கு இங்கின இருக்க விட்டிருக்கிறன் இவையை:)
அடாது மழை பெய்தாலும்.. விடாது பதிவு போடப்படும்..:) போட்டிட்டனெல்லோ?:) எங்கிட்டயேவா:).. நாளைக்கும் பதிவு வரும்:)

ஊசிக் குறிப்பு:
--()---------------------()----------------------()----------------------()-----------------------()------------------()--