நல்வரவு_()_


Thursday 29 April 2010

அன்பு மலர்களே!!!!


மலர்களே!!! மலர்களே!!! குளிரிலே பூத்த மலர்களே!!!

இன்று காலையில் சுடச்சுடப் பறித்தது, மன்னிக்கவும் வீதி வீதியாக (சூட்டிங் செய்தேன்) படமெடுத்தேன்...


தோட்டக்காரர் சொன்னார்
பூக்கள் பறிப்பதற்கல்ல
பூக்கள் சொன்னது - ஆம்
செடிகளிலேயே கருகத்தான்

(இதை என் பதிவுகளில் ஆங்காங்கு பார்த்திருப்பீங்கள்.... திரும்பத் திரும்ப எழுதுகிறேன் என அடிக்கத் துரத்தாதீங்கோ... எனக்கு மிகவும் பிடித்தது..)


கிட்டப் பாருங்கோ... வடிவாப் பாருங்கோ... உத்துப் பாருங்கோ.. ஆனால் கண்படுத்திடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்..




போய் வருகிறேன்
என்றதாம் பூ
போகும் நீ திரும்ப
வரப்போவதில்லை
கண்ணீர் விட்டதாம்
காம்பு




பூக்கள் மலர்ந்தது அதிசயமோ? இல்லை... படமெடுத்துப் போட்டது அதிசயமோ....:):).

ரகசியச் செய்தி:
இன்னும் இருக்கு, ஆனால் இப்ப உங்களுக்கு காட்டமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் நேரமில்லையெனில், நீங்கள் நிட்சயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்.... மாவீரன் அலெக்‌ஷாண்டர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Saturday 24 April 2010

தாத்தாவின் நினைவுகள்(நிறைவுப்பகுதி)

இது (Aircraft carrier)இரண்டு கிழமைக்கு முன்பு எங்கள் ஆற்றிலே வந்தபோது படம் எடுத்தேன். பின்னாலே இரண்டு ஹெலியும் முன்னாலே ஒரு பிளேனும் நிற்கிறது(பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும்).


தாத்தாவின் நினைவு தொடர்கிறது...
ன் மகனுக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்களும், இரு பெண்பிள்ளைகளும் இருக்கிறார்கள். எனக்கும் மீனாட்சிக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் குழந்தை கிடைக்காமல், நாங்கள் செய்யாத வைத்தியமில்லை, போகாத கோயிலில்லை. எமக்கு அந்தநேரம், ஆறுதல் தந்து, எம்மை மனிதராக வாழத் தைரியம் கொடுத்தது, எமது உறவுகளும், ஊர் மக்களுமே. பின்னர்தான் எம் மகன் பிறந்தான். அத்துடன் நிறுத்திக் கொண்டோம் என்று சொல்ல மாட்டோம், அவனுக்குப் பிறகு குழந்தைகள் கிடைக்கவில்லை.

பல இடங்களில் பார்த்திருக்கிறேன், தனிப்பிள்ளைகளாக இருப்பவர்கள், தனிமையில் வளர்வதால், அவர்களுக்கு, விட்டுக்கொடுக்கும் தன்மை, பகிர்ந்துகொள்ளும் தன்மை என்பன குறைவாகவே இருக்கிறது. பெற்றோரும், ஒரு பிள்ளை என்று, மொத்த செல்லத்தையும் அப்பிள்ளைமேல் பொழிந்து, பொத்திப் பொத்தி வளர்ப்பதால், பிள்ளை பெரியவர் ஆனால்கூட, தோல்வியைக் கண்டு துவண்டு போகிறது. இது எனது உடை, எனது விழையாட்டுப் பொருட்கள், யாரும் எடுக்கக்கூடாது, வைத்த பொருள் கலையாமல் அதிலேயே இருக்கவேண்டும். இப்படியெல்லாம் பழக்கப்பட்டு விடுகிறது. இதனால், திருமணத்தின் பின்னரும், அனுசரித்துச் செல்லும் தன்மைகள் குறைகிறது.

இவற்றை எல்லாம் மனதில் கொண்டே, நாங்கள் மகனைப் பூட்டி வைத்து வளர்க்கவில்லை. ஒரு சொக்கலேற் வாங்கிக் கொடுத்தாலும், அதை அவனது நண்பர்களுக்கும் கொடுத்தே உண்ணவேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தோம். "ஆடையைப் பார்த்து எடை போடக்கூடாது, சேற்றிலேதானே செந்தாமரை மலர்கிறது" என்பதைப் புரியவைத்து, தகுதி, தராதரம் பார்க்காமல் எல்லாப் பிள்ளைகளோடும் சேர்ந்தே விளையாடவேணும் என்பதைச் சொல்லிக் கொடுத்தோம். மொத்தத்திலே, நங்கள் அவனுக்குப் பெற்றோராக மாத்திரம் இராமல், நல்ல நண்பர்களாகவும் இருந்து, நன்கு படிக்க வைத்து, இன்று நல்ல ஒரு பதவிக்கு வர வழிவகுத்துக் கொடுத்துவிட்டோம். அவனது விருப்பத்தோடும், எங்களது ஆசியோடும், எமது ஊர்ப்பெண்ணையே முடித்து வைத்தோம். மீனாட்சியினதும், என்னுடையதும் வழிநடத்தல் வீணாகவில்லையென்பது, இன்று என் மகன், தன் குடும்பத்தை அக்கறையோடும், அன்போடும் வழிநடாத்தும் விதத்திலே புரிந்து, நான் பெருமைப்படுகிறேன்.

என் மருமகள், நாலாவது வாரிசை வயிற்றிலே சுமந்தபோது ஒருநாள், போனிலே மகனுடன் கதைத்தபோது, மீனாட்சி கேட்டாள், "தம்பி!! தூர தேசத்திலே, தனியாக இருக்கிறீங்களே, எப்படி வளர்க்கப்போறீங்கள்?, ஊரிலே என்றால் பறவாயில்லை, நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்வோம்" என்று. அதற்கு மகன் சொன்னான், " அம்மா!! நான் தனிப்பிள்ளையாக இருந்தேன் ஆனால், ஊர் என்பதால், என்னைத் தனிமை தெரியாமல் வளர்த்துவிட்டீங்கள், வெளிநாட்டில் அப்படி வளர்க்க முடியாதம்மா, வீட்டுக்குள்லேதானே இருந்து வளர்கிறார்கள், நாம் அதிகம் கஸ்டப்பட்டாலும் பறவாயில்லை, பிள்ளைகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்களே என்றுதானம்மா" என்று. இங்கு வந்த பின்னரே எனக்கும், மகன் சொன்னது சரியென்றே படுகிறது.

வீட்டுக்குள்ளேயே சேர்ந்து விழையாடுகிறார்கள். ஆண்பிள்ளைகளுக்கு ஒரு அறையும், பெண்குழந்தைகளுக்கு ஒரு அறையும் கொடுக்கப்பட்டுள்ளது. தங்களது அறையை, தமது விருப்பத்திற்கேற்ப சோடித்து வைத்திருக்கிறார்கள். இரவு எட்டுமணியானதும், தத்தமது கட்டிலுக்குப் போகப் பழகியிருக்கிறார்கள். காலையில்தான் கொஞ்சம் கஸ்டப்பட்டு எழும்புவார்கள். அதுவும் குளிர்காலத்தில், பார்க்கப் பாவமாக இருக்கும். அவர்களின் எடையைவிட, அதிகமாக உடையணிந்து வெளிக்கிடுவார்கள்.

ஆனாலும் பள்ளிக்கூடம் போவதென்றால், மிகவும் பிரியமாகப் போகிறார்கள். உடல் நலமில்லை என்றாலும், வீட்டில் நிற்க மறுக்கிறார்கள். அதற்குக் காரணம், பாடசாலையில், படிப்பை மட்டுமே திணிக்காமல், பாதி படிப்பு, பாதி விழையாட்டாக நடாத்துகிறார்கள். அத்துடன் ஆசிரியர்களும், மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்துப் புரிய வைக்கிறார்களாம். வீட்டு வேலைகூட அதிகம் கொடுப்பதில்லை. பள்ளிப்படிப்பே போதுமென்கிறார்களாம். ஹை ஸ்கூல் போனபின்னரே, படிப்பு அதிகமாகுமாம். சிறு வயதிலேயே அதிகமாகப் படிப்பைத் திணித்து, வெறுப்பேற்றிடக் கூடாதென்று எண்ணுகிறார்கள்.

ஓ.... சுவர் மணிக்கூட்டிலுள்ள குருவி, வெளியே வந்து கூவி, இரவு பதினொரு மணியாகிவிட்டதை அறிவிக்கிறது. எனக்கு மீண்டும் ஊர் ஞாபகம் வந்துவிட்டது. எங்கள் ஊரிலே, எது குறைவாக இருக்கிறதோ தெரியாது, ஆனால் அதிகமிருப்பது கோயில்கள்தான். அங்கே இருந்த காலங்களில், நான் மணிக்கூட்டில் நேரம் பார்ப்பதில்லை. அதிகாலை நாலரை மணிக்கு, கந்தசாமியாற்ற மணி அடிக்கும். அதைத் தொடர்ந்து, பிள்ளையாற்ற மணி, ஐந்து மணியாகிவிட்டதைத் தெரிவிக்கும். அந்த மணியோசையோடு நான் எழுந்துகொள்வேன். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நேரமும் ஒலிக்கும் மணியோசை நேரத்தை அறிவித்தபடியே இருக்கும்.

இங்கு வந்ததிலிருந்து, மணியோசை என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. எனது வயோதிபக் காலத்தில் எல்லாவற்றையுமே இழந்துவிட்டமாதிரி ஓர் உணர்வு அடிக்கடி வந்து போகிறது. ஆனால் எது எப்படி இருந்தாலும், என் மகன் ஒருநாள் சொன்னான், "அப்பா!! ஊரை நினைத்துக் கவலைப்படாதயுங்கோ, தமிழே தெரியாமல் இருந்த என் பிள்ளைகள், இப்போ நீங்கள் வந்தபிறகுதான், நன்கு தமிழ் கதைக்கிறார்கள், அதை நினைத்துப் பெருமைப்படுங்கோ" என்று, அந்த ஒரு வார்த்தை எனக்குப் போதும், எத்தனை துன்பங்களையும், இதற்காக நான் தாங்கிக் கொள்வேன். என மனதிலே எண்ணியபடி, என் அறையை நோக்கிச் செல்கிறேன் நித்திரைக்காக.
------------- முற்றும் -----------------


இது நான் முதன் முதலில் பார்த்த.... சீ...சீ...
முதன் முதலில் தொட்ட.... சே..சே... என்னப்பா இது,
முதன் முதலில் எங்கள் வீட்டில் பூக்கத் தொடங்கியிருக்கும் டஃபடில்(Daffodils) பூவிதூஊ.....


இப்போ, இங்கு, எங்கு பார்த்தாலும்(காடு, மேடு, ரோட்டோரம்) டபடில் பூ மயமாகவே அழகாகக் காட்சி தருகிறது.



இது அன்புச் ஸாதிகா அக்கா, என் கொசு மெயிலுக்கு அனுப்பியது... எதிரிக்கும்(கவனிக்கவும்) கப்கேக்கைக் கொடுத்து உண்ணும் பரம்பரையாக்கும் எங்கட பரம்பரை:).



பின் குறிப்பு::

இதைப் படிச்சிட்டு, பதில் போடாமல்,பேசாமல் மூடிட்டுப் போனீங்களே எண்டால், ஒரு மாத்தத்துக்குள் தாத்தா அல்லது பாட்டியாகிடுவீங்களாம். பூனை சொன்னால் பலிக்குமாமே? முடிவு உங்கட கைகளில்.

------------------------------------------------------------------------------------------
“உண்மையான நண்பர்கள், மறந்துவிடுவார்கள்,
நம்மையல்ல நாம் விட்ட தவறுகளை”
------------------------------------------------------------------------------------------

Thursday 22 April 2010

ஆஆ.... நானோ??? 2010 இன்...... ?????.


மிக்க நன்றி ஸாதிகா அக்கா, 2010 இல் அதிராவைத் தெரிவுசெய்தமைக்கு.... உங்களுக்குப் புரியுது பலபேருக்குப் புரியவே மாட்டுதாமே...., புகை அதிகமாகத் தெரியுது... அதால இப்ப வாணாம் பிறகு மீதியைக் கதைப்போம்.

---------------------------------------------------------------------------------------


நேரமாகுது கெதியாப்பிடிச்சு வாங்கோ BBQ போடோணும்...



ஆ... என்ன இது பயத்தில கோட்சூட் போட்டிட்டார் எங்கட ..... மாதிரி... ஓக்கை இன்றுமட்டும் புழைச்சுப்போகட்டும், இன்னொருநாள் பார்த்திடலாம்....



இது அன்பு இலா அனுப்பிய படங்கள்..
---------------------------------------------------------------------------------------

இது அன்புத்தம்பி ஜீனோ கொசுமெயிலில் அனுப்பியது...

கண்ணை மூடுங்கோ தம்பி, கண்டநிண்ட படமெல்லாம் காட்டீனம் பிறகு கனவில பலமாக் கத்துவீங்கள். பாசக்கார அக்கா...

---------------------------------------------------------------------------------------
பூஸார் என்றால் என்ன வீரமில்லாதவரோ? விட்டிடுவோமா நாங்க... அதையும் பார்த்திடலாம்.....

---------------------------------------------------------------------------------------

பின் இணைப்பு:
அழாதீங்க பேபி அதிரா.. இதைப்பார்க்கும் எல்லோரும் கொமெண்ட் சொல்லிட்டுத்தான் போவினம்... இல்லாட்டில்.....:):):)



முடியலே... மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

Sunday 11 April 2010

தாத்தாவின் நினைவுகள்(பகுதி 2)


நினைவு தொடர்கிறது...

ங்கு நான் தனிமை என்பதை உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக மகனும் மருமகளும் ஏதேதோ வசதிகளெல்லாம் செய்துதான் தந்திருக்கிறார்கள். பாவம் இவர்கள்தான் என்ன செய்வார்கள். நான் அவர்களை ஒருபோதும் குறை கூறமாட்டேன். அவர்கள் வேலைக்குப் போகிறார்கள். பின்னேரம் வேலையால் வந்தால் சமையல்வேலை, வீட்டுவேலை, பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல் இப்படியே பம்பரமாகச் சுற்றுவார்கள். பத்துமணிக்கு முன்னரே எல்லோரும் படுத்து விடுவார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் கொண்டாட்டம்தான். இரவு ஒன்று இரண்டு மணியாகிவிடும் எல்லோரும் படுக்க. அதேபோல் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும்பாலும் காலை பத்து மணிக்குப் பின்னர்தான் எல்லா வீடுகளிலும் எழும்புவார்கள். அதனால் பத்து, பதினொரு மணிக்கு முன்பு, யாரும் யாருக்கும் "போன்" கூடப் பண்ணுவதில்லை. அப்படியொரு பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பாடசாலை மூன்று மணிக்குத்தான் முடிவடையும். வீட்டுக்கு வந்தால் ரீவியுடனேயே பிள்ளைகளின் பொழுது கழிகிறது. அவர்கள்தான் என்ன செய்வார்கள். வெளியில் இறங்கமுடியாது குளிர். என் கடைசிப் பேரனுக்கு இப்போ ஐந்து வயதுதான். முதலாம் வகுப்பில் படிக்கிறான். அந்தக் குட்டியும் ஏதோ "காட்டூன்" என்கிறார்கள், பூனை, நாய் எல்லாம் ஆங்கிலத்தில் கதைக்கிறது. அதைப் பார்த்து இவன் சிரித்தபடி இருப்பான். கூப்பிட்டால்கூட காதில் விழாது. அப்படியே இங்குள்ள பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள். பகல் முழுவதும் ஆங்கிலத்திலேயே கதைத்துவிட்டு வீட்டுக்கு வருவதால் தமிழை மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு அது புரிந்துகொள்ளக் கஸ்டமாக இருக்கிறது. படங்கள் என்றாலும் பாட்டென்றாலும் ஆங்கிலத்தையே விரும்புகிறார்கள்.

வீட்டுக்குள்ளேயே, பிள்ளைகள் ஒருவருக்கொருவர் "தங்கியூ" எனச் சொல்லிக்கொள்கிறார்கள். ஒருமுறை எனது கடைசிப் பேரனிடம், கொஞ்சம் தண்ணீர் எடுத்து வரும்படி சொன்னேன். அவனும் கொண்டுவந்தான். நான் எதுவும் சொல்லவில்லை, வாங்கிக் குடித்துவிட்டேன். அது அவனுக்கு பெரிய குறையாகிவிட்டது. தாத்தா தங்கியூ சொல்லவில்லை எனத் தகப்பனிடம் முறையிட்டான். நான் தங்கியூ எனச் சொன்ன பின்பே, அவனுக்கு ஆறுதல் ஏற்பட்டது. இங்கு குழந்தைகள் காப்பகம் அல்லது நேசறியிலேயே, அங்குள்ள ஆசிரியர்கள், ஒரு பொருளை பிள்ளைகளின் கையில் கொடுக்கிறபோது, "தங்கியூ" சொல்லுங்கோ எனக்கூறி, பிள்ளைகள் சொன்ன பின்னரே, கையை விடுகிறார்களாம். அப்போது தொடக்கம் குழந்தைகளும், தங்கியூ என்பது கட்டாயமான ஒன்றாகக் கருதுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் தங்கியூ, சொறி, என சொல்லப் பழகுகிறார்கள். எங்கள் ஊர்களில் ஒரே குடும்பத்துள், நன்றி என்றெல்லாம் நாங்கள் சொல்வதில்லையே. தப்பித்தவறி யாராவது சொல்லிவிட்டாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்து, ஏழனப்படுத்தி, திரும்பவும் அவர் அப்படிச் சொல்லமுடியாதபடி செய்துவிடுவோமே.

-------------------------------------------------இடைவேளை------------------------------

இது அன்பு ஆசியா, என் கொசுமெயிலுக்கு அனுப்பிய பூஸாரும் பப்பியும்.... இப்படத்தைப் பார்த்ததும் அவவுக்கு உடன்பிறப்புக்களின்(கிக்..கிக்..கீஈஈஈஈ தெரியாட்டில் கேளுங்கோ ஆரென) ஞாபகம் வந்துவிட்டுதாம், அதுதான் உடனே அனுப்பியிருந்தா. டிங்...டிங்....டிங்... இடைவேளை முடிந்து நினைவு தொடர்கிறது.......

ட்டு மணிவரை வீட்டில் ஒரே அமளியாக இருக்கும். பின் ஒவ்வொருவராகத் தத்தமது கட்டிலுக்குப் போய்விடுவார்கள். மகனும் மருமகளும் பத்து மணிவரை, என்னுடன் கதைத்துக் கொண்டிருப்பார்கள், பின் அவர்களும் நித்திரையாகிவிடுவார்கள். விடிய எழுப்பவேண்டுமே என்ற ஏக்கம் அவர்களுக்கு, எனக்குத்தான் எந்தப் பொறுப்பும் இல்லையே. எத்தனை மணிக்கும் படுக்கலாம், எத்தனை மணிக்கும் எழும்பலாம். அதிலும் இந்த நாட்டிற்கு வந்தபின், இரவு பகலெல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. குளிர்காலங்களில், விடிவதே எட்டு மணியின் பின்னர்தான். பின்னேரம் மூன்றரைக்கே இருட்டிவிடும். சூரியனைக் காண்பதும் குறைவுதான். அந்தக்காலங்களில்தான், நான் ஊரை அதிகமாக நினைப்பேன். இது என்ன நாடென்று வெறுப்பேற்படும்.

னது கிராமத்து வீட்டில், கிழக்கு வாசலில், ஒரு பெரிய மாமரம் இருக்கிறது. அதன்கீழ், சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தால், என்ன ஒரு சுகம்... அங்காங்கே மர இலைகளினூடாக, வெயில் மண்ணில் படுவதே, ஒரு தனி அழகுதான். அதை எல்லாம் இனி நினைத்துப் பார்க்கவே முடியாதே. எங்கள் பக்கத்து வளவில், மகன், பெரிய மாடி வீடு கட்டியிருக்கிறான். எவ்வளவோ தடவை சொல்லியும், நானும் மீனாட்சியும் எங்கள் வீட்டிலேயே இருந்தோம். அது எங்களுக்குப் பழகிவிட்டது. எங்கள் வயோதிபக் காலத்திற்கு, அது ஒரு சுதந்திரமான வீடாக இருந்தது.

ங்கு, துப்புவது, மூக்குச் சீறுவதெல்லாம் வீட்டுக்குள்ளேயே செய்வது, மிகவும் கஸ்டமாக இருக்கிறது. வெளியில் துப்பக்கூடாதாம். வீதிகளில், அடிக்கடி குப்பை போடுவதற்கென, குப்பை பரல்கல் வைக்கப்பட்டிருக்கும். சிறு கடதாசியைக்கூட குப்பைத் தொட்டியில் போட, மக்கள் பழகிவிட்டார்கள். தப்பித்தவறி விழும் குப்பைகளை, துப்பரவு செய்வதற்காக வாகனங்களோ அல்லது ஆட்களோ இருப்பார்கள். இங்குள்ள வெள்ளையின மக்கள், நாய்களை அதிகமாக விரும்பி வளர்க்கிறார்கள். ஒரு பிள்ளையை எப்படி வளர்க்கிறோமோ, அந்தளவு கவனமாக நாய்களை வளர்க்கிறார்கள். நாய்களை பெல்ட்டால் கட்டி, கையில் பிடித்தபடி வெளியில் கொண்டு செல்வார்கள். அப்போது, கையில் பொலித்தீன் பைகள் வைத்திருப்பார்கள், ஆரம்பத்தில், எனக்கது விளங்கவில்லை, பின்னர் மகன்தான் சொல்லித் தந்தான், நாய்களைக் கூட்டிச் செல்கிறபோது, அவை ஏதாவது அசிங்கம் செய்தால், அதை அப்படியே, அந்தப் பையால் அள்ளி, அதை அங்காங்கே, நாய்க்கழிவுகளுக்கென்றே "பின்கள்" வைக்கப்பட்டிருக்கும், அதில் போடுவார்களென்று. இது இங்கே ஒரு சட்டமாகவே இருக்கிறது. எனக்கு, அதனைப் பார்க்கவே பெரிய அருவருப்பாக இருந்தது. ஆனால் யோசித்துப் பார்க்கையில், எவ்வளவு தூரம், நாட்டைச் சுத்தமாகப் பேணுகிறார்கள் என்று ஆச்சரியமாகவே இருக்கிறது.

தொடரும்..........



*********************************************************************************** பூனைகளின் எதிரி???..... அப்போ எப்பூடி எனக்கு இவரைப் புடிக்கும் சொல்லுங்கோ??

***********************************************************************************
பின் இணைப்பு:

மக்கள்ஸ்ஸ்......
தீயனவற்றைப் பார்க்காதீங்கோ....(நிலவு பார்க்கலாம்)
தீயனவற்றைக் கேளாதீங்கோ....(காதில் இலவம் பஞ்சை அடையலாம்)
தீயனவற்றைப் பேசாதீங்கோ....(பெரீஈஈ அமெரிக்கன் பேர்கரை வாயில் திணிக்கலாம்). ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி....


எனவே இப்படி மகிழ்ச்சியாக இருப்போம்....(கண்படுத்திடாதீங்கோ....)

********************************************************************************



********************************************************************************
“ஒருவருக்குப் புத்திமதி கூற விரும்பினால்,
தனிமையில் கூறுங்கள்,
ஒருவரைப் புகழ விரும்பினால்,
நாலுபேர் மத்தியிலே புகழுங்கள்”
********************************************************************************

Thursday 8 April 2010

ஆ...விதம்விதமா...கிடைக்குதூஊஊ..


ஆ... கண்பட்டிடாமல் இருக்கோணும் என ஆரம்பமே திருஷ்டி சுத்தித்டேன்....



இது எனக்கு கிடைத்துள்ள இரண்டாவது விருது..... ஜெய்..லானி வழங்கியுள்ளார்... நட்புக்காகவாம்... வைரம்.... வைரம்....



இது எனக்கு கிடைத்த முதேஏஏஏஏஏஏஏஏஏல் விருது...
ஆசியா, செல்வியக்கா, ஜலீலாக்கா கொடுத்தார்கள்...



இனிதே அனுபவியுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் வாழ்க்கையை....



விருதுக்கான முதல் பாராட்டே எங்கட ஒபாமாவிடம் கிடைத்தமையிட்டு பூஸாருக்கு பெரூஊஊஊஊஊ மகிழ்ச்சி...



சந்தோசம் பொங்குதே.... சந்தோசம் பொங்குதே.... சந்தோசம் நெஞ்சில் பொங்குதே... அனைவருக்கும் மிக்க நன்றி.


ஆஆஅஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
முயற்சி செய்துகொண்டே இருந்தால் முடிவில் வெற்றிதான்
ஆஆஅஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ



Thursday 1 April 2010

ஜலீலா, ஸாதிகா அக்காஸ்`க்கு எசப்பாட்டு!!!




எப்போது விடியும்?..
துபாய் நாட்டினிலே..
வானத்து நிலவொளியில்
நள்ளிரவில் துணையின்றி
கார்களின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளைப் பார்த்தபடி
எங்கோ கேட்கும் ஏதோ
ஒலிகளை உணர்ந்தபடி...

தெரு விளக்குகளின்
பிரகாசத்தை ரசித்தபடி
சுத்தமான அகலத் தெருகளில்
நிமிர்ந்த நடையுடனும்
நேரான பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்..

விலைமதிப்பான பொருட்களுடனும்
விலைமதிப்பற்ற பெண்மையுடனும்
சின்ன ஒரு சீண்டலுக்கும்

சிக்காமல் வீடு திரும்பும்போது
இதயம் ஏங்கியது எப்போது விடியும்
என் தேசமும் இப்படியென்று????!!!

(எசப்பாட்டு எப்பூடி? ஸாதிகா அக்கா கண்ணை மூடுங்கோ..., மக்கள்ஸ்!! இது சொந்த “ரீ” அல்ல...:)).



இனிப்பு
யாருக்காவது வேலையில்
பிரமோஷன் கிடைத்தால்
இனிப்பை வழங்குவார்கள்

இனிப்பை எடுத்துக்கொண்டு நீ
சிரிப்பை வழங்குவாய்
வாங்கியதை திருப்பித் தருவதில்
உனக்கு நிகர் நீயே....

***** ***** ***** *****

காதல் என்பது???
காதலிக்கும்போது
புனிதமாய்த் தோன்றியது
தோல்வியானதும்
துரோகமாய்த் தோன்றியது
வாழ்வு புரிந்ததும்
விழையாட்டாய்த் தோன்றியது
அடுத்தவனின் காதல்
மடத்தனமாய்த் தோன்றியது
பிள்ளையின் காதல்
வெறுப்பை ஊட்டியது
அப்படியென்றால்
காதல் என்பது??


---------------------------------------------------------------------------------------------------

பூந்தோட்டத்திலே பூஸார்... ரொம்ப அழகு இல்ல?:)... இது அன்பு அம்முலு பூஸாருக்காக அனுப்பியது...

---------------------------------------------------------------------------------------------------

இது அன்புச் ஸாதிகா அக்கா, அதிராவின் பீலிங்ஸைப்போக்க அனுப்பிய மருந்து சே..சே.. பூஸ் பிக்ஸர்...
நாளை முதல் குடிக்க மாட்டேன்... இது சத்தியம் “கவிசிவா”(கவிசிவாவின் புளொக் பதிவு பார்த்ததன் எஃபெக்ட்:))







இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்
நினைத்துவாழ ஒன்று....
மறந்து வாழ ஒன்று....
*** *** *** *** *** *** *** *** *** ***** *** *** ***

பின் இணைப்பு:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஈஸ்ரர் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் "Happy Easter" சொல்கிறோம் எங்கட குண்டர் “மொப்பி” அண்ட் அதிரா...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“பேசுவதற்கு முன் ஒருமுறை யோசியுங்கள்
எழுதுவதற்கு முன் இருமுறை யோசியுங்கள்”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~