நல்வரவு_()_


Thursday 5 October 2017

ஓவி... என்னை மன்னித்து விடு..:(

இம்முறை நம்ம ஏரியாவில்... நெல்லைத் தமிழனால் கொடுக்கப்பட்ட கருவுக்கு, கதை எனும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்:), நன்றாக இல்லை எனில் மன்னிச்சுக்கோங்கோ.. இது ஒரு உண்மைச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு.. சிலபொய்களை சேர்த்து, பூசி மெழுகி எழுதியிருக்கிறேன்.- _()_

 “அப்பா.. போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது.. எங்களோட வந்துடுங்க.’  வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்.

‘வேணாம்டா.  இங்கயே இருந்துட்டேன். இங்கயே போயிடறேன்டா. வானதியோட எப்போவும் தொடர்புல இருடா. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்’, சுவாமினாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கண்ணைமூடினார்.

வாசுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது. கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக்கொண்டான். வசுமதி அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்..
[[. இங்கின கருக்கொடுத்தவரின் பெயரில் எனக்கொரு சந்தேகம்.. அது “சுவாமினாதன்” என வராதாக்கும்.. “சுவாமிநாதன்” எனத்தான் வரோணும்:))... கரீட்டுத்தானே?:)]]

ஆரம்பம் வைத்துக் கதை தொடர்கிறது...

ந்தச் சம்பவம் நேற்று நடந்ததுபோலவே இருக்கிறது, ஆனா இது நடந்து 40 வருடங்களாகி விட்டது. அந்நேரம் எனக்கிருந்த இளமைத் துடிப்பில், அப்பாவை வருத்தப்பட வைக்கிறேனே எனும் எண்ணம் எனக்குத் தோணவில்லை.. உங்களால்தானே அப்பா இந்த நிலைமை எனக்கு, எனும் கோபம்தான் அப்போ மேலோங்கி இருந்தது... அதனாலேயே திருமணமாகியும், வானதியை என்னோடு அழைத்துப் போகாமல் வீட்டில், அப்பா.. அம்மாவுடனேயே விட்டிருந்தேன், அது அப்போ அப்பாவுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கலாம்...

ப்பா அன்று படுத்திருந்த அதே இடத்தில், இன்னொரு புதிய சாய்வு நாற்காலியில் படுத்து கண்களை மூடிக் கொள்கிறார் வாசு.  இன்றும் அதேபோல தங்கை வசுமதி வந்திருந்தாள்... மனைவி வானதி அடுப்படியில் சமையலில் மும்முரமாக இருந்தா. வாசுவின் மனமோ, இளமைக் கால நினைவுகளுக்குத் தாவுகிறது..

வாசுவின் மனதில் அந்தச் சம்பவம் கண்ணில் நிழலாடுகிறது.. அன்று அப்பாவை அழைத்துவிட்டு, அப்பா வர மறுக்கிறாரே எனும் நினைப்போடு கொழும்புக்குப் புறப்பட்டுப் போன வாசுவுக்கு... அப்பா மறைந்திட்டார் எனும் செய்திதான் ஒரு மாதத்தில் வந்து சேர்ந்தது. இதுக்காகத்தானோ அன்று கடைசியாக வானதியைக் கைவிட்டு விடாதே எனச் சொன்னார்?..

நான் உங்கள் மகன் அப்பா, உங்கள் சொல்லைத் தட்டிடக்கூடாது என்றுதானே, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதானே, நான் உயிராக விரும்பிய ஓவியிடம், என் மனதைக் கல்லாக்கிக் கொண்டு ... நேரில் பார்த்து...  “உன்னை திருமணம் செய்ய முடியாத சூழ்நிலை, என்னை மன்னித்து விடு, எனக்குத் திருமணம் முற்றாகி விட்டது” எனச் சொன்னேன்.

நீங்கள் எனக்கு மனைவியாக்கிய வானதியைப் பற்றிக் கவலைப்பட்டீங்கள் அப்பா, ஆனால் நான் உயிராக விரும்பிய பெண்ணுக்குத் துரோகம் செய்து விட்டேனே.. அந்தக் குற்ற உணர்வு உங்களுக்கு கொஞ்சம் கூட இருந்ததே இல்லையா அப்பா.

நான் உங்கள் ஒரே மகன் என, காணி பூமி எல்லாம் விற்று என்னை டொக்டராக்கினீங்கள்... அதுக்காக நான் யாரையும் விரும்பக்கூடாதா அப்பா?..

ங்கள் குடும்ப நிலைமை தெரிஞ்சு, நாம் எவ்வளவு கஸ்டப்பட்டோம் எனத் தெரிஞ்சுதானப்பா , மிகவும் ஏழ்மையில் இருந்த ஓவியை நான் காதலித்தேன்.. அப்பவும் ஓவி அடிக்கடி கேட்பாள்.. நீங்கள் டொக்டராக இருக்கிறீங்கள்.. நாமோ நகைகூடப் போட முடியாத ஏழைகள்.. இக்காதல் திருமணத்தில் முடியுமோ? இல்லை ஏமாத்திப் போடுவீங்களோ என?.. நான் ஏமாத்துபவன் இல்லை என வாக்குக் கொடுத்திருந்தேனே அப்பா...

ங்களால் கொடுத்த வாக்கை மீறி விட்டேனே.. ஓவி ஏழைப்பெண் என்பதால், நான் எனக்கு திருமணம் நிட்சயமாகிவிட்டது, அப்பாவுக்காக இக்கல்யாணத்தைச் செய்கிறேன் எனக் கல்நெஞ்சுக்காரனாக சொன்னபோது, ஓவியால் அழ மட்டுமே முடிஞ்சது... அதன் பின் அவள் என்ன ஆனாள் எனக்கூட அறிய முற்படவில்லை அப்பா.. எல்லாம் உங்களுக்காகவே.

நம்மிடம் காசு பணம் இப்போ பெரிதாக இல்லை, பெண் கொடுத்துப் பெண் கேட்கிறார்கள், தங்கை வசுமதிக்கு அவர்களே நகை போட்டு எடுக்கிறார்கள், உனக்கும் வீடு பணம் எல்லாம் தருகிறார்கள்.. இதை விட்டால் தங்கைக்கு நல்ல இடம் கிடைக்காது, நீ இதைச் செய்ய சம்மதிச்சே ஆகோணும் என வற்புறுத்த எப்படி அப்பா உங்களுக்கு மனசு வந்தது?.. நான் டொக்டராகி விட்டேன், இனிக் கடன் எல்லாம் தீர்த்திடுவேன், தங்கைக்கு நல்ல இடமாகப் பார்த்து நானே செய்து வைக்கிறேன், கொஞ்சம் அவகாசம் கொடுங்கோ எனக் கேட்டுக் கெஞ்சினேனே அப்பா... நீங்கள் அதுக்கு செவி சாய்க்கவே இல்லையே...

ங்களுக்காகவும், தங்கை வசுமதியின் வருங்காலத்துக்காகவும், நான் வானதியை மணந்து கொண்டேன், பார்ப்போருக்கும் உங்களுக்கும், என் காதல் தூசாகத் தெரியலாம், சிம்பிளாகத் தூக்கி எறிந்து விட்டேன், எறிய வைத்து விட்டீங்கள் என் காதலை என, நீங்கள் மனதின் உள்ளே பெருமைப்பட்டிருக்கலாம், ஆனா அந்த வலியும் வேதனையும் ஏழு ஜென்மத்திலும் என்னை விட்டுப் போகாதப்பா... பாவம் ஓவி செய்த தவறு என்ன? என்னை நம்பி விரும்பியது தவறா?:).. நான் துரோகி அப்பா...

ங்களுக்காக, வெளி உலகுக்காக நான் வாழ்கிறேன் அப்பா, ஆனா உங்களுக்கு தெரிய நியாயமில்லை, நான் வானதியை நெருங்கியது கிடையாது என்பது, என்னால் முடியவில்லை அப்பா. இன்று நான் ஒரு மகப்பேற்று மருத்துவ நிபுணர்.. என்னால் எத்தனையோ குழந்தைகள் பிறக்க வைக்கப் பட்டிருக்கின்றன, ஆனால் எனக்கொரு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய் விட்டதே. ஆனால் அதுக்காக வானதியை நான் நெருங்கியது கிடையாதே தவிர, என்னை நம்பி வந்த பெண் என, இன்றுவரை நல்லபடி மனம் நோகாமல்தானப்பா நடத்துகிறேன், கணவர் தன்னை நெருங்குவதில்லை என்பதை, கடவுளின் புண்ணியத்தால் அவளும் பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை.

ரம்பம் கொஞ்சம் கவலைப்பட்டாள், ஆனால் அவள் பெரிய இடத்துப் பிள்ளை, நண்பிகள்.. சுற்றுலா என வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டமையால், நானும் போதிய சுகந்திரம் கொடுத்து விட்டிருந்தேன்.. தன் நண்பிகளோடு ஊர்சுற்றி நல்லாத்தான் வாழ்கிறா. நான் என்னை மருத்துவப் பணிக்கே அர்ப்பணித்து விட்டேன் அப்பா.

நான் இன்று இந்த நாடே அறிந்த ஒரு பிரபல டொக்டர்.. ஆனால் என் வாழ்க்கைக்குள்ளிருக்கும் துன்பத்தையும் போராட்டத்தையும் என்னைத் தவிர யார் அறிவார்?.. நான் என்னைப்பற்றி இப்போ எண்ணுவதில்லை அப்பா.. உங்கள் விருப்பப்படி திருமணம் நிகழ்ந்து, தங்கை வசுமதி இப்போ, குழந்தைகள் பேரப்பிள்ளைகள் என நன்றாக, நல்ல வசதியாக இருக்கிறாள்.. 

ன் மனைவி வானதியோடும், நல்ல நண்பிபோலவே பழகுகிறாள்.. அதைப் பார்த்து நான் மகிழ்ந்து கொள்கிறேன் அப்பா. நீங்களும் நிம்மதியாக இருங்கோ. நான் என்றைக்கும் வானதியைக் கை விட்டிட மாட்டேன், நீங்கள் கடைசியாகக் கேட்டுக்கொண்டபடி, அன்றிலிருந்து இன்றுவரை வானதியை நல்லபடியேதான் பார்த்துக் கொள்கிறேன்... என் ஆசைகளுக்கெல்லாம் அப்பவே விலங்கிட்டு விட்டு, உங்கள் ஆசைக்காக, உங்கள் மகனாகவே வாழ்கிறேன் அப்பா... 

கண்ணில் நீர் வடிய கற்பனையில் ஆழ்ந்திருந்தவரை.. “எழும்பி குளிச்சிட்டு வாங்கோ சாப்பிடலாம்” எனும் வானதியின் குரல், வழமைக்குத் திரும்ப வைத்தது.

முற்றும்:)_()_

ஊசிக்குறிப்பு:
இதில் வரும் வாசு, இலங்கையில் ஒரு பிரபல டொக்டர், இலங்கையின் ஒரு பெரிய பொறுப்பிலும் சில வருடங்கள் பணியாற்றியவர். உண்மைப் பெயர் சொன்னால் பலருக்கு தெரிய வரும்... அதனால் வேண்டாம். இவர் என் கணவருக்கு குருவாக இருந்தவர், பின்பு நண்பன் போலானவர்...[வயதில் எங்கள் அப்பா போன்றவர்] அடிக்கடி பிரித்தானியாவுக்கு வேலை நிமித்தம் தனியேதான் வந்து போவார்[இப்போ வயதாகிவிட்டது], யார் வீட்டுக்கும் பெரிதாகப் போக மாட்டார், சாப்பிடவும் மாட்டார்[சைவம் மட்டுமே உண்பவர்], ஆனால் என் கணவரை ரொம்பப் பிடிக்கும் அத்தோடு என்னையும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால், எம்மிடம் சில தடவைகள் வந்து போயிருக்கிறார்.

அவருக்கு ஒரு தடவை, பல சைவக் கறிகளோடு, சாதாரண மைசூர்ப் பருப்புக் கறியும் சமைத்திருந்தேன்,.[இலங்கையர்கள் எல்லோரும் சமைக்கும் சாதாரண முறையில் சமைத்தேன்.. [[எங்கள் புளொக்குக்கு ரெசிப்பி அனுப்பட்டோ?:).. சரி சரி அமைதி அமைதி, நான் அனுப்பேல்லை:):))]]. அதைச் சாப்பிட்டவருக்கு, சந்தோசம் தாள முடியவில்லை, இதனை எப்படிச் சமைத்தீங்கள், சொல்லுங்கோ, மனைவியிடம் சொல்லிச் சமைக்கச் சொல்லப்போகிறேன் என என்னிடம் ரெசிப்பி வாங்கிக் கொண்டார்,[அந்நேரம் மனைவி, மலேசியாவுக்கு சுற்றுலா போயிருப்பதாகவும் சொன்னார்]. இங்கு அவர் ஹொட்டேல் ரூமில் தங்கியிருந்தமையால், பக் பண்ணித் தரட்டோ எனக் கேட்டேன்ன்.. யேஸ் யேஸ் பிளீஸ்... எனச் சொல்லி, குழல் புட்டும், இப்பருப்புக் கறியும் பக் பண்ணி எடுத்துப் போனார். என் கணவருக்கோ ஆச்சரியம்.. இவர் சாதாரணமானவர் இல்லையே.. எப்படி உங்களோடு இப்படி நெருங்கிப் பழகுகிறார் என வியந்தார்....ஹா ஹா ஹா..

அவருக்கும் கண்ணதாசன் அங்கிளை ரொம்பப் பிடிக்குமாம், அதனால் நானும் எனக்குப் பிடிக்கும் எனக்கூறி, அர்த்தமுள்ள இந்துமதம் பற்றி எல்லாம் லெஃப்ட்டூஊ ரைட்டூஊ எனச் சொல்லச் சொல்ல..:) அதிராவுக்குள் இம்புட்டு அறிவா என அவரும் வியந்துதான் போனார்.... ஹா ஹா ஹா:).


ஊசி இணைப்பு
====================================HHHHHHHHHH==================================
 “உலகில் உண்மையான தானம்.. ஒருவருக்கு ஆறுதல் சொல்றதுதானாம், ஏனெனில் அட்வைஸ் எல்லோராலும் சொல்ல முடியுமாம், ஆனா ஆறுதல் சொல்ல சிலரால் மட்டுமேதான் முடியுமாம்”
இதனை வைரமுத்து அங்கிளிடம் இருந்து வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்தவர்... உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)
===================================HHHHHHHHHH=====================================
கடசியா ஒரு இணைப்பு:
இந்திய வம்சாவழிகளை வச்சு.. அதிரா மட்டும்தேன் கரீட்டாப் பதில் சொல்லியிருக்கிறேன்.. ஓ நீங்க கை தட்டுவது கேட்குது.. இருக்கட்டும் இருக்கட்டும்:).. நேக்குப் பாருங்கோ புகழ்ச்சி பிடிக்காது ரொம்ப ஷை ஆக்கும் மீ:).. இங்கே போய்ப் பாருங்கோ கில்லர்ஜி பக்கம்.. பரிசுக்கு நன்றி கில்லர்ஜி. ஆனா என்வலப் இன்னும் வந்து கிடைக்கவில்லை:).
===============================================================================
================================================================================
ஆஆஆஆவ்வ்வ்வ் மீக்கு தமனாக்கா மகுடம் கிடைத்துவிட்டதூஊஊ:).. சின்னச் சின்னச் சந்தோசங்கள்தான் பெரிய சந்தோசத்தைக் கொடுக்கும்:)..  வாக்களித்த அனைவருக்கும் நன்றி_()_

108 comments :

  1. மிக அருமையான கதை! சரளமான நடை! ஆனால் மனைவியைத்தொடவே இல்லை என்பது தான் உறுத்தல் என்பதோடு வானதிக்கும் அதில் விருப்பம் இல்லை என்பது கொஞ்சம் நிரடலாகவே இருக்கிறது. என்ன தான் தங்கை வசுமதியின் குழந்தைகளைத் தங்கள் குழந்தைகளாகவே பார்த்தாலும் அவர்களுக்கென விருப்பம்? கொஞ்சம் யோசிக்க வைத்த கதை! மறுபடி வருவேன்.! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதாக்கா வாங்கோ.. முதலாவதா வந்திட்டீங்க மிக்க மகிழ்ச்சி.

      //ஆனால் மனைவியைத்தொடவே இல்லை என்பது தான் உறுத்தல் //
      ஹா ஹா ஹா இது சரியான உண்மை அல்ல.. ஒரு கணிப்புத்தான்..

      தந்தைக்காகத்தானே தன் காதலைத் துறந்தார், அதனால அவரால் எப்படி திடீரென மனம் மாறி இன்னொரு பெண்ணோடு நெருங்க முடியும்.. கால அவகாசமாவது தேவைதானே?... இவர்களுக்கு கடசிவரை குழந்தைகள் இல்லை என்பது உண்மை. அவர் நினைத்தால், அல்லது மனைவி சண்டைப்பிடித்திருந்தால் நிட்சயம் குழந்தை பெற்றிருக்கலாம்... இது ஏதோ காரணம் இருந்திருக்கிறது:)...

      இன்னொன்று வானதியும் இவர் காதலைத் தெரிந்தே இவரை மணந்திருக்கலாம்.. அதனால அவரின் மனநிலை புரிந்து அவரோடு ஒத்து ஓடியிருக்கலாம்.. அதனாலேயே அவரும் கடசிவரை , மனைவியை நல்லபடியே நடத்தும் வாய்ப்பும் இருக்கு.. இல்லையெனில் டிவோஸ் இல் கூட முடிந்திருக்கும்...


      இப்படிப் பல கோணத்தில் நாம் நமக்குள் சிந்தித்தோம்:)

      அக்காலத்துத் தந்தையர்கள், தாம் செய்வதே சரி என எண்ணுபவர்கள்தானே... அதேநேரம்.. தன்னைப் படிப்பிக்க அப்பா எவ்வளவு கஸ்டப்பட்டார் எனும்போது மகனால் தந்தையை எதிர்க்கவும் முடியவில்லை:(. பாழாய்ப்போன காதல் எழுந்ததுதான் அனைத்துக்கும் காரணம் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி கீதாக்கா.. மறுபடி வாங்கோ:)

      Delete
  2. மை வச்சாச்சு. கொஞ்சம் பிஸி. இதுலவேற வார விடுமுறை வருது. படித்துக் கருத்திடுகிறேன்.

    அதிராவுக்குள் இம்புட்டு அறிவா - நேக்குப் பாருங்கோ புகழ்ச்சி பிடிக்காது - படிக்கறவங்க எல்லோரும் ஒரு பாரா படித்தபின்பு அதை மறந்துவிடுவார்கள் என்பதில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கைபோலும்.

    முதல்ல கதையைப் படித்து கருத்து சொல்லிட்டு அப்புறம் மீதி விஷயங்களுக்கு வரேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //படிக்கறவங்க எல்லோரும் ஒரு பாரா படித்தபின்பு அதை மறந்துவிடுவார்கள் என்பதில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கைபோலும்.///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சிலர் இதுக்காகவே வல்லாரை ஊஸ் ஐ முக்கி முக்கிக் குடிச்சு ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கினமே:))

      Delete
  3. உங்கள் அங்கிள் சொன்னது ஸூப்பர்
    கதையை படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி வாழும் எத்தனையோ உள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றனர்... அதற்காக வானதியை நெருங்காமல் வாழ்வதற்கு அவள் என்ன குற்றம் செய்தாள் ?

      சின்ன டவுட்டு கண்ணதாசனும் அங்கிள் வைரமுத்துவும் அங்கிளா ?

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      வானதியிலும் குற்றம் இருக்கலாம்.. என்பது நம் ஊகம்.. கீழே விளக்கமாக சொல்கிறேன். இன்னொன்று.. நெருங்காமல் வாழ்ந்தார் என்பது 100 வீதமும் கண்டறியப்பட்ட உண்மை இல்லை:) அது கதைக்காக நான் எழுதியது... ஆனால் அப்படிப் பேசிக்கொண்டார்களாம் அந்நேரத்தில் மக்கள்.

      கமலும் அங்கிள்தான் ஹா ஹா ஹா எல்லாம் ஒரு மருவாதைக்காகத்தான் உறவுமுறை சொல்ல வெளிக்கிட்டால் நாடு தாங்காது:)))..

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
    3. உண்மைச்சம்பவம் என்று சொல்லி விட்டீர்கள் நம்புகிறேன்
      கிட்டதட்ட நானும்கூட அவ்வகை ஜாதிதான்.

      Delete
    4. மீள் வருகைக்கு நன்றி கில்லர்ஜி.... என்ன சொல்றீங்க.. நீங்களும் இவ்வகையோ? அப்பூடியெனில்??? ஹையோ என் நித்திரை போச்சே:)

      Delete
    5. ஆவ்வ்வ் தி.முன் சொல்றீங்களோ.. தி.பின் சொல்றீங்களோ:) ஹையோ என் ஆர்வக்கோளாறுக்கு ஒரு அளவே இல்லாமல் போச்ச்ச்ச்ச்:))..

      Delete
  4. ஆஅஆவ் :) அதிராஆவ் மீ லேண்டட் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கஞ்சு வாங்க..

      //மீ லேண்டட் :)//
      இதெல்லாம் ஜொள்ளியே தெரியோணும்:) புளொக் ஆடும்போதே நான் கண்டுபிடிச்சிட்டனே:).

      Delete
  5. ஒரு முடிவோடுதான் இருக்கீங்க :) ஆனாலும் இன்னும் எனக்கு ஹாலிடேஸ் ஹாங் ஓவர்லருந்து வெளி வர முடில :)
    விறுவிறுப்பா போஸ்ட் போடறீங்க இந்தாங்க ஓர் பூங்கொத்து :)

    [im]https://st2.depositphotos.com/1031481/7561/i/450/depositphotos_75614209-stock-photo-cat-with-a-bouquet-at.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பூஸாருக்கு வயதான லேடியின் சுவெட்டரைப்போட்டு வயதானவராகக் காட்டி:), பூங்கொத்துக் கொடுத்தவரின் கால்களை பதினாறுவய்சுபோல காட்டியுள்ளமைக்கும் என் வன்மையான கண்டங்கள்:)..

      Delete
  6. மனசுக்கு என்னமோ செஞ்சது :( எப்பவுமே உண்மை சம்பவங்கள் வலி தரும் ..
    ஆனா அந்த டாக்டர் மனைவியை மனைவியாய் நடத்தாதது உறுத்துகிறது ..என்னதான் உண்மை காதலுக்கு மரியாதை என்றாலும் நம்பி வந்த பெண்ணுக்கும் மனசு உணர்வுகள் இருந்திருக்குமே ..

    சில நேரங்களில் யோசிப்பேன் திருமணத்துக்கு முன் காதல் எனும் உணர்வு வராமல் இருந்திருக்கலாமோ ...அதுவும் நம் நாட்டு அன்பு பிணைப்பால்குடும்ப சூழல்களுக்கு காதல் வேணுமான்னு தோன்றுகிறது :(

    ஆனா நல்லவர்களுக்கும் நேர்மையானவங்களுக்கும்தான் கஷ்டங்கள் துன்பங்கள் வருது பாருங்க

    அந்த ஓவி என்ன ஆனார் ?
    அவரும் டாக்டரை போல் இருந்திட்டாரா ?

    ReplyDelete
    Replies
    1. ///..என்னதான் உண்மை காதலுக்கு மரியாதை என்றாலும் நம்பி வந்த பெண்ணுக்கும் மனசு உணர்வுகள் இருந்திருக்குமே ..///
      உண்மைதான், நீதி நியாயப்படி பார்த்தால் தப்புத்தான்.. ஆனா சிலரால் எதையும் இலகுவாக எடுக்க முடிகிறது, சிலரால் முடிவதில்லை:(.

      //அதுவும் நம் நாட்டு அன்பு பிணைப்பால்குடும்ப சூழல்களுக்கு காதல் வேணுமான்னு தோன்றுகிறது :(//

      உண்மைதான்...

      ஓவி பற்றிய விபரம் எதுவும் நம் காதுகளுக்கு எட்டவில்லை..

      Delete
  7. 80/90 களில் இந்த மாதிரி நிறைய குடும்பத்துக்காக விட்டுக்கொடுத்த காதல் நிகழ்வுகள் இருந்திருக்கு .அப்போல்லாம் பெத்தவங்களுக்கு பிள்ளைங்க ரொம்ப மரியாதை இப்போ பிள்ளைங்க ஆசைக்கு பெற்றோர் இறங்கி வந்தாச்சு ..
    எனக்கு தெரிந்த ஒரு அண்ணாவின் வாழ்க்கையிலும் பெற்றோர் தங்கையை காரணம் காட்டி அவரது காதலை உடைச்சாங்க கடைசியில் அவர் கொஞ்சம் வழிமாறி பிறகு வாழ்நாளெல்லாம் குடிக்கு அடிமையாகி சீக்கிரம் போய்ட்டார்

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின் - நீங்க சொல்றதை நான் எப்படிப் புரிஞ்சுக்கறேன்னா,

      "தன் சொல் கேட்காமல், தன் பிள்ளை யாரையானும் காதலித்தால், அந்தப் பிள்ளைக்கு வாழ்நாள் தண்டனையாக, காதலித்த பெண்ணையே திருமணம் செய்துவைத்துவிடவேண்டும்"

      என்பதாகத்தான். இது எப்படி இருக்கு?

      Delete
    2. அவ்வ்வ் அப்படியில்லை :)ஆனா நான் சொன்னவர் அவர் விருப்பத்துக்கு அவங்கப்பா இணங்கியிருந்தா இந்நேரம் உயிருடனாவது இருந்திருப்பார் ..நான் தி .பி .கா (லவ் after மேரேஜ் :) இருங்க தெளிவா சொல்றேன் கல்யாணத்துக்குப்பின் தன மனைவியை லவ் செய்யும் கட்சி :)

      காதல் விஷயத்தில் நிறைய அவசரம் இருக்கோன்னு தோணுது ..தன குடும்ப நிலைப்பாடு தெரியாமல் காதலில் விழுவது தவறு ஆனா இதெல்லாம் காதலிப்போருக்கு எங்கே தெரியுது

      Delete
    3. ///இப்போ பிள்ளைங்க ஆசைக்கு பெற்றோர் இறங்கி வந்தாச்சு ..///
      உண்மைதான் அஞ்சு.. இதை நானும் வரவேற்கிறேன்... பெற்றோம் வளர்த்தோம் என்பதுக்காக பிள்ளைகளின் உணர்வுகளை முடக்கக்கூடாது, புத்திமதி சொல்லலாம், ஆனா அவங்க ஸ்ரோங்காக இருப்பின் ஒத்துப் போயிடோணும்.

      //அவர் கொஞ்சம் வழிமாறி பிறகு வாழ்நாளெல்லாம் குடிக்கு அடிமையாகி சீக்கிரம் போய்ட்டார்///
      அக்காலத்தில் இப்படிச் சம்பவங்கள் நிறைய உண்டு அஞ்சு.. ஏனெனில் பெற்றோர் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.. அதனால் பிள்ளைகள் இறங்கி வந்து, ஆனா மனதால் ஏற்கமுடியாமல் மனமொடிஞ்சு போயிடுவார்கள்.. அப்படிப் பார்க்கும்போது இப்போதைய பெற்றோர் எவ்வளவோ பெட்டர்..


      இங்கு ஒரு கேரளாக் குடும்பம், மகன் யுனிவசிட்டியில் படிக்கும்போது, ஒரு சுவிஸ் கேர்ள் ஐ விரும்பினார், எப்படி ஏற்றுக்கொள்வது அதிலும் அவ உயரமும் கூடவாம்.. இவர் சொல்லுக் கேட்காமல் வீட்டுக்கும் கூட்டி வந்திருக்கிறார்.

      அப்போ தாய் சரியா கவலைப்பட்டபோது, கணவர் சொன்னாராம் .. பேசாமல் இரு... இதெல்லாம் சும்மா கவர்ச்சிதான், இன்னும் ஒருவருடத்தில் படிப்பு முடிய அவன் விட்டிடுவான்.. அதனால இப்போ சண்டை எல்லாம் வேண்டாம் என... அவவும் விட்டிட்டா... இப்போ படிச்சு முடிஞ்சு வேக்கும் எடுத்திட்டார்.. என்ன ஆச்சோ தெரியல்ல:)..

      Delete
    4. பெற்றோர் பிள்ளைகளின் ஆசையைத் தீர்ப்பதில் இப்போ எல்லாம் நல்லாவே செய்யறாங்க. ஆனா பிள்ளைங்கதான் பெற்றோரை அப்புறம் சரியா கவனிக்காம....

      அதிரா நீங்கள் சொல்லுவது போல் என் மகன் வகுப்பிலும் பல ஜோடிகள் கல்லூரி முடியும் வரை நாங்கள் அவர்கள் கல்யாணம் செய்வார்கள் என்று நினைத்தோம் ஆனால் எல்லாம் ஜஸ்ட் ஃபார் டைம் பாஸ் என்பது போல் திரிந்தார்கள் எப்படி இப்படி அவர்களால் செய்ய முடிகிறது என்று தெரியவில்லை..... அதில் இரு ஜோடி மட்டுமே உண்மையாக இணைகிறார்கள்....என் மகனின் நண்பர்கள்...

      கீதா

      Delete
    5. ///"தன் சொல் கேட்காமல், தன் பிள்ளை யாரையானும் காதலித்தால், அந்தப் பிள்ளைக்கு வாழ்நாள் தண்டனையாக, காதலித்த பெண்ணையே திருமணம் செய்துவைத்துவிடவேண்டும்"

      என்பதாகத்தான். இது எப்படி இருக்கு?///

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் என்ன சொல்றீங்க?:).. காதலித்த பெண்ணையே கட்டிக்கொடுப்பது நல்ல விசயம்தானே...

      ஒரு பாடல் வரி நினைவுகு வருதே... காதலித்த பெண்ணே மனைவியாக வரும்போது சொர்க்கம் கூட சுகமாகும்.. என்னமோ இப்பூடி ஹையோ:)

      Delete
    6. //AngelinThursday, October 05, 2017 4:34:00 pm
      அவ்வ்வ் அப்படியில்லை :)ஆனா நான் சொன்னவர் அவர் விருப்பத்துக்கு அவங்கப்பா இணங்கியிருந்தா இந்நேரம் உயிருடனாவது இருந்திருப்பார் //

      கீழே இன்னொரு மனதை உருக்கும் உண்மைக் கதை சொல்கிறேன் படியுங்கோ..

      Delete
    7. வாங்கோ கீதா.
      //ஆனா பிள்ளைங்கதான் பெற்றோரை அப்புறம் சரியா கவனிக்காம....//

      இனிவரும் காலங்களில் எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது.. பிள்ளைகளை இவ்வுலகுக்கு கொண்டு வந்தது நாங்க.. அவர்கள் கேட்டு வரவில்லை.. அதனால பெற்றோராக செய்ய வேண்டியவற்றை செய்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது நம் கடமை...

      திரும்ப அவர்கள் பார்க்கோணும் நம்மை என எதிர்பார்க்கக்கூடாது.. வெள்ளையர்களில் கலாச்சாரத்துக்குத் தானே நாமும் மாறி வருகிறோம்.. என்பது என் கருத்து.

      அடுத்து கீதா, அவசரப்பட்டுத் திருமணம் செய்து.. பின்பு அவஸ்தைப்பட்டு .. படாதபாடுபட்டு டிவோஸ் எடுப்பதைக் காட்டிலும் .. காதல் எனும் பெயரில் பேசிப்பழகி.. பிடிக்காட்டில் பிரிவது எவ்வளவோ மேல்ல்.. ஆனா ஒழுக்கம் முக்கியம்...

      Delete
    8. "காதலித்த பெண்ணே மனைவியாக வரும்போது சொர்க்கம் கூட சுகமாகும்." - 'நெஜமாவா? எனக்குத் தெரியலை. ஆனா நான் கேள்விப்படறதெல்லாம், அந்த அன்பு ரொம்ப நாள் இருப்பதில்லை என்பதைத்தான். அதாவது அந்த தீபம் குறைந்த நாட்களில் அணைந்துவிடுகிறது, அப்புறம் அவங்க மற்றவர்கள்போல்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

      Delete
    9. ஹா ஹா ஹா காதலித்த பெண்ணே மனைவியாக வரும்போது சந்தோசம் கிடைப்பது மணவறையில் மட்டும்தான் எனச் சொல்றீங்கபோல:)

      எனக்கும் காதலில் நம்பிக்கை இல்லை... ஆனால் காதலிப்போருக்கு நான் எதிரியும் இல்லை, படிக்கும்போது காதலர்களுக்கு நிறையக் கெல்ப் பண்ணி, நான் மாட்டுப்பட்டிருக்கிறேன், :).

      Delete
  8. //“சுவாமிநாதன்” எனத்தான் வரோணும்:))... கரீட்டுத்தானே?:)]]//

    கரெக்ட் :) ஹஆஹாஆ நம்ம ட்ரெயினிங் இப்போதான் வேலை செய்யது :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... நெல்லைத்தமிழனில் மேடைக்கு வரவும்..:) பூஸோ கொக்கோ:)) ஹையோ வரும் வேகத்தில தேம்ஸ்ல தள்ளினாலும் தள்ளிடுவார்ர்.. எதுக்கும் காலை நன்கு ஊன்றி ஸ்ரோங்கா நிற்போம்ம்:).

      Delete
  9. கதை நன்றாகத்தான் இருக்கிறது. நடந்தும் இருக்கலாம். உண்மை புனைவு கதைகளைவிட ஆச்சர்யகரமானது.

    இதில் வானதி செய்த குற்றம் என்ன? பெண் என்பவள் வெறும் சௌகரியங்களைக் கொடுத்தால் மட்டும் ஏற்றுக்கொள்வாளா? அவளை மனைவியாக நடத்தாதது அந்த மருத்துவரின் பெரிய தவறல்லவா? தன் தந்தையிடம் நல்ல பெயர் எடுக்க ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிப்பது பெரிய தவறல்லவா? ஒருவரின் வாழ்க்கையைக் கொன்றுவிட்டு (Actually இரண்டுபேர், காதலித்த ஓவி) ஊர் மக்களைக் காப்பாற்றப்போகிறேன் என்று சொல்வதும் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதல்லவா? தன் மனைவியை அப்பா அம்மாவுக்கு சேவை செய்யும் தாதியைப்போல் விட்டுவிட்டாரே. அவர் செய்ததை Justify செய்ய இயலாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. உங்களின் கதையின் கருப்பார்த்த உடனேயே என் மனதில் இக்கதைதான் நினைவுக்கு வந்துது, அதனால சுடச்சுட எழுதிட்டேன்.

      ///இதில் வானதி செய்த குற்றம் என்ன? பெண் என்பவள் வெறும் சௌகரியங்களைக் கொடுத்தால் மட்டும் ஏற்றுக்கொள்வாளா? அவளை மனைவியாக நடத்தாதது அந்த மருத்துவரின் பெரிய தவறல்லவா?///

      இதில் நீங்கள் கேட்பதுபோலத்தான் எனக்கும் கேள்விகள் எழும்பியது, ஆனா சில விசயங்களை நாம் டிஸ்கஸ் பண்ணியபோது, இன்னொரு கோணமும் தோணிச்சுது..

      இலங்கையில்[அனைவரையும் சொல்லவில்லை, இப்போ நிறையவே மாறிவிட்டது, முன்பொரு காலத்தில் இப்படித்தான் இருந்தது நிலைமை]..

      ஒரு ஆண்... நல்ல தொழிலில், அனைத்திலும் நல்லவராக, பேஸனலிட்டியுடன்...ஒழுக்கமுள்ளவராக, பெற்றோர் சொல் கேட்பவராக இருந்தால்...

      வசதி உள்ள குடும்பத்தில் பெண் வைத்திருக்கும் பெற்றோர்... நிறைய டவுறியைக் கொட்டி... மாப்பிள்ளை எடுக்க முன்வருவார்கள். அப்போ மணமகனின் பெற்றோருக்கும் அதுதான் பெரிதாகத் தெரியும்... வசதி உள்ள நல்ல குடும்பத்தில் பெண் கிடைச்சால் போதும் என நினைப்பார்கள்..

      இப்படிப்பட்ட சூழலில் அந்த ஆண் ஒரு பெண்ணை விரும்பியிருக்கிறார் எனத் தெரிஞ்சாலும், மணமகனின் பெற்றோர் சொல்லுவினம்.. அது சும்மா வயசுக்கோளாறு என மழுப்பினால்ல்.. திருமணத்தின் பின் சரியாகிடும் என நினைக்கும் பல பெற்றோர் உண்டு... இது பெண்ணின்[வானதி] காதுக்கு எட்டினாலும்.. அவவுக்கு அதைவிட, அந்த ஆணின் அழகு, அந்தஸ்து, ஒழுக்கம்(குடி வெறி இன்மை).. போன்றவை இருப்பின்.. சரி பழசை மறந்திடுவார் .. நாம் ஏற்றுக் கொள்ளுவோம் என மனப் பக்குவம் வரும்...

      இக்காலம்போல மணமகன் மணமகளை எல்லாம் ஃபிரீயா பேச விடவும் மாட்டினம்.. ரெக்னோலஜியும் வளர்ச்சியில்லாத நேரம்தானே.. லாண்ட் ஃபோன்கள் மட்டுமே இருந்திருக்கும் என நினைக்கிறேன்..

      இதனால அவர் ஒரு பெண்ணை விரும்பியது தெரிஞ்சே வானதி மணம் முடிக்க சம்மதித்திருக்கலாம்.. பலர் மனதை மாத்தி, வாழ்ந்திருக்கிறார்கள்தானே.. ஆனா சிலரால் மனதை மாற்ற முடிவதில்லை...

      அத்தோடு சில மகன்கள் தந்தையை முகம் பார்த்துப் பேசவே பயப்பிடும் காலம் எல்லோ.. அப்பாவின் மானப்பிரச்சனை, தங்கையின் வாழ்க்கை இவற்றை நினைச்சு மணவாழ்க்கைக்கு சம்மதித்திருக்கலாம் பயத்தில்:).. வீட்டை உதறிவிட்டு வெளியே போகும் தைரியம் இல்லாதிருந்திருக்கும்.

      அத்தோடு, தங்கையைக் கொண்டு வந்து இணைத்தமையாலேயே இவரால் எதிர்க்க முடியாமல் போயிருக்கும்.. இல்லை எனில் திருமணம் வேண்டாம் எனச் சொல்லியிருப்பாரோ என்னமோ.. இதுதான் விதியோ..

      அப்பா அம்மாவுக்கு சேவை செய்ய விட்டது என்பது என் கற்பனை ஹா ஹா ஹா:).. கதையின் கருவுக்கு கொண்டு வந்து பொருத்தினேன்:).

      Delete
  10. ஊசி இணைப்பு சூப்பர் :) உண்மைதான் நிஜம் எத்தனை சந்தோஷத்தை தந்தாலும் பழைய நினைவுகள் மனசில் அப்படியே இருக்கு ஒவ்வொருநேரமும் நினைத்துப்பார்க்க இனிமை ..அந்த நினைவுகள் நிஜமாக முடியாது எனும் காலகட்டம் வரும்போது மட்டும் மனசு வலிக்கும்

    ReplyDelete
    Replies
    1. அந்த நினைவுகள் நிஜமாக முடியாது எனும் காலகட்டம் வரும்போது மட்டும் மனசு வலிக்கும்//

      யெஸ் யெஸ் ஏஞ்சல்...நினைவுகள் என்னதான் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அது நிஜமாக முடியாலைனா....ரொமப்வே வலிக்கும்...அதிலிருந்து மீள்வதும் சிரமமாக இருக்கும்...ஆனால் மீண்டுதான் ஆகணும்..வேறு வழி..

      கீதா

      Delete
    2. உண்மைதான் அஞ்சு... கடந்துவிட்ட காலங்கள் திரும்ப வராது... ஆனா நினைக்க நினைக்க இனிமை...

      நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது.. வீட்டு முற்றத்திலே ஒரு குட்டித்தென்னை மரம்.. அதில் காய்கள் தொங்கும்... அப்பா என்னைத் தன் தோளில் இருத்திவிட்டு[நான் முன்பு நெத்தலிபோல இருப்பேன் ஒல்லியாக:)].. இளநி பிடுங்கச் சொல்வார்.. நான் கஸ்டப்பட்டு முறுக்கி தேங்காய் பிடுங்கிக் கொடுப்பேன்... இப்படி இளமை.. இனிமை நினைவுகள் ஒன்றா ரெண்டா....:(. 5 வயசில் இருந்து இப்போ “சுவீட் 16” வரை நடந்தவை அனைத்தும் நினைவில் இருக்கே:) ஹா ஹா ஹா:)..

      Delete
    3. உண்மை கீதா.. நினைவு நிஜமாகாது விட்டாலும் வலிக்கும்.. அஞ்சு சொன்னதுபோல.. நிஜம் நினைவுகளானபின்... இனி நிஜமாகச் சான்ச் இல்லையே என எண்ணும்போதும் வலிக்குதே.. அதுக்குத்தான் என் முந்தைய ஊசி இணைப்பு.. போனால் திரும்பி வரமாட்டேன்ன்.. போகும்போதே என்னை ரசித்துக் கொண்டுபோ என்கிறது வாழ்க்கை:)..

      Delete
  11. இத்தகைய சந்தர்ப்பங்களில், யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தே ஆகவேண்டும். விட்டுக்கொடுத்தபின்பு அதைப் பற்றிச் சிந்தியாது, மேலே வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டும். இந்தப் பெண்ணுடன் வாசு வாழ்ந்திருந்தால், ஓவிக்குச் செய்த பாவத்தோடு போயிருக்கும். இப்போது இரண்டு பெண்களின் சாபத்தையுமல்லவா வாங்கிக்கொண்டார். வானதி எப்படி இப்படிப்பட்ட வாழ்க்கையை digest செய்துகொண்டு வாழமுடியும்?

    இதற்கு இரண்டுவிதமான தீர்வுகள்தான் உண்டு.

    1.
    'அப்பா... நீங்கள் என்னை வளர்த்தீர்கள். சரி.. என் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். நான் காதலித்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன். தங்கையின் திருமணப் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அது என் கடமை. உங்களைப் பார்த்துக்கொள்வதும் என் கடமை. அதற்குமேல் என் வாழ்க்கையை நீங்கள் வாழ நினைக்காதீர்கள்'.

    2. "அப்பா, நான் காதலித்த பெண்ணைக் கைவிடச் சொல்லுகிறீர்கள். பெண் பாவம் பொல்லாதது. உங்களைக் கேட்காமல் நான் செய்தது தவறு. சரி.. என் தவறினால் விளைந்த பாவத்தை நானே ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் சொல்லும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன்" இப்படிச் சொல்லி, திருமணம் முடித்தபின்னர் புது வாழ்வை ஆரம்பிப்பது.

    உங்கள் கதையில் இரண்டுங்கெட்டானாக ஒரு முடிவை எடுத்திருக்கிறார் டாக்டர். அவர் மீது நல்லெண்ணம் வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ///1.
      'அப்பா... நீங்கள் என்னை வளர்த்தீர்கள். சரி.. என் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். நான் காதலித்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன். தங்கையின் திருமணப் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அது என் கடமை. உங்களைப் பார்த்துக்கொள்வதும் என் கடமை. அதற்குமேல் என் வாழ்க்கையை நீங்கள் வாழ நினைக்காதீர்கள்'.//

      இதை அவர் சொல்லிக் கெஞ்சினார் எனத்தானே மேலே குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால் அத் தந்தை கேட்கவில்லையே...:(.

      Delete
    2. /// நீங்கள் சொல்லும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன்" இப்படிச் சொல்லி, திருமணம் முடித்தபின்னர் புது வாழ்வை ஆரம்பிப்பது.

      உங்கள் கதையில் இரண்டுங்கெட்டானாக ஒரு முடிவை எடுத்திருக்கிறார் டாக்டர். அவர் மீது நல்லெண்ணம் வரவில்லை.
      ///

      அவர் செய்தது தப்புத்தான், சரி எனச் சொல்லவில்லை... நடப்பது நடக்கட்டும் என திருமணம் வேண்டாம் என நினைச்சிருக்கலாம்... ஆனா சரி தங்கைக்காக அப்பாவுக்காக புது வாழ்க்கையை ஆரம்பிப்போம் என எண்ணியே சம்மதித்திருக்கலாம்.. பின்பு அவரால் முடியவே முடியாமல் போயிருக்கலாமல்லவா....

      என் பிள்ளைகள் கேட்கிறார்களே, அவர்களுக்காக செய்யுதான் பார்ப்போமே என சுவிமிங் பூலிலே அந்த குழாய்க்குள் ஏறி.. பின்பு என்னால் முடியவே முடியாமல் போன கதை படிச்சீங்கதானே?:)) ஹா ஹா ஹா அது சின்ன விசயம்...
      அப்படிக்கூட நினைச்சு அவர் இறங்கியிருக்கலாம்.. பின்பு மனம் இடங்கொடுக்காமல் போயிருக்கலாம் ... சரி பிழை கரெக்ட்டாச் சொல்லத் தெரியல்ல..

      Delete
  12. எங்க தாத்தா அதான் உங்க அங்கிள் கிட்டருந்து களவாடிய குறிப்பும் சூப்பர் :)தாத்தா சரியாதான் சொல்லியிருக்கார்

    ஆனா சில நேரம் அட்வைஸ் கொடுக்காட்டியும் தவறாகிடும் நான் 85%ஆறுதல் 15% அட்வைஸ் தருவேன் .அந்த 15% அட்வைஸ் கூட ஒரு அலெர்ட் எச்சரிக்கை மாதிரிதான் சொல்வேன் :)
    எங்க செல்லம் ஓவியா கூட ஜூலிகிட்ட எவ்ளோ சொல்லிச்சி வேணாம் ஜூலி னு கேட்டுச்சா :) இன்னும் எல்லாரும் கழுவி ஊத்தறாங்க பாருங்க .

    ஒருவருக்கு எந்த சூழலிலும் கைவிடாம ஆறுதலா இருப்பது என்பது ஒரு வரம்

    ReplyDelete
    Replies
    1. //எங்க தாத்தா அதான் உங்க அங்கிள்//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர் சாகும்போது இளமையாகத்தானே இருந்தார்.. அப்படம்தான் மனக்கண்ணில் நிக்குது:)..

      //ஆனா சில நேரம் அட்வைஸ் கொடுக்காட்டியும் தவறாகிடும் நான் 85%ஆறுதல் 15% அட்வைஸ் தருவேன் .அந்த 15% அட்வைஸ் கூட ஒரு அலெர்ட் எச்சரிக்கை மாதிரிதான் சொல்வேன் :)//

      கரீட்டு.. முதலில் தேவைப்படுவது ஆறுதல்.. ஏனெனில் துன்பத்தில் இருக்கும்போது ஒரு துளி அட்வைஸ் காதில் விழுந்தாலே கொலைவெறியாக கோபம் வரும்:) அதனால ஆறுதல் படுத்திவிட்டுப் பின் மெதுவாக அட்வைஸ் கொடுக்கோணும் என நான் நினைக்கிறேன்:)..


      ///எங்க செல்லம் ஓவியா கூட ஜூலிகிட்ட எவ்ளோ சொல்லிச்சி வேணாம் ஜூலி னு கேட்டுச்சா :) இன்னும் எல்லாரும் கழுவி ஊத்தறாங்க பாருங்க .//

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யாரும் உலகில் 100 வீதம் நல்லவரும் இல்லை.. 100 வீதம் கெட்டவரும் இல்லை:))... அடுத்தவரைக் கழுவிக் கழுவி ஊத்துவோரிலும் ஆயிரம் குற்றங்கள் இருக்கலாம்...அதனாலும் ஒருவரைக் குற்றம் சொல்லும்போது கொஞ்சம் யோசிப்பது நல்லதே...

      “சுட்டு விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில்... மற்றும் 3 விரல்களும் நம் மார்பைத்தான் காட்டும்”.. ஹா ஹா ஹா:)).. ஹையோ ஆராவது என்னை அடிச்சுக் கலைக்கப்போகினமே:))..

      //ஒருவருக்கு எந்த சூழலிலும் கைவிடாம ஆறுதலா இருப்பது என்பது ஒரு வரம் //
      100 வீதம்... இதுக்கு மனங்களும் ஒத்துப் போகோணும்..

      Delete
    2. இல்லை வெளி ஆளா இருந்தா மனசுக்குள் ப்ரார்த்தனையோட முற்றுப்புள்ளி வச்சிடுவேன்.ஆனா ரொம்ப தெரிஞ்சவங்க அப்பாவியா குழியில் விழும்போது தலையில் ஒரு தட்டு தட்டி கவனம்னு சொல்றதில் தப்பில்லை .பாத்தியா சொல் பேச்சு கேக்காம விழுந்த இல்லனு சொல்றதை விட அடுத்த ஸ்டேப் கவனமா எடுத்து வைன்னு அட்வைஸ் சொல்றதில் தப்பில்லை ..

      Delete
    3. அடடா எல்லாரும் அந்த மூணு விரல் நம்மை நோக்கி விஷயத்தையே சொல்றாங்கப்பா ..இதுக்குதான் குற்றம் சொல்லும்போது என்னை மாதிரி ஒரு குச்சியை பிடிச்சிக்கிட்டு குற்றவாளியை நோக்கி நீட்டனும் ஹாஹா :)

      எல்லாரும் இவ்வுலகில் எல்லாவற்றிலும் சிறந்தவருமில்லை அது மாதிரி புத்திசாலிகள் எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சிருக்கும்னு அர்த்தமுமில்லை ..ஸ்ஸ்ஸ் யப்பா இந்த பூனையோட சேர்ந்து நனையும் தத்துவமா பேச ஆரம்பிச்சுட்டேனே கடவுளே சேவ் மீ

      Delete
    4. அட்வைஸ் சொல்வது தப்பெனச் சொல்லவில்லை அஞ்சு, ஆனா ஒருவருக்கு ஆறுதல் சொல்வது என்பது கடினமான ஒன்றாம், அது எல்லோராலும் முடியாத ஒரு விசயமாம்.. அட்வைஸ் எல்லோரும் சொல்வதுதானே.. அதைத்தான் வைரமுத்து அங்குளூஊஊ டென்னாரூஊஊஊ:).

      ///இதுக்குதான் குற்றம் சொல்லும்போது என்னை மாதிரி ஒரு குச்சியை பிடிச்சிக்கிட்டு குற்றவாளியை நோக்கி நீட்டனும் ஹாஹா :)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) அப்போ 4 விரல்கள் எல்லோ நம்மைக் காட்டும்:)..

      ஆஹா வரவர அஞ்சுவுக்கும் டத்துவம்:) கன்னாபின்னா என வருதே:).. அப்போ ஞானியாக்கி காசிக்குக் கூட்டிப்போய்:).. திரும்பி வரும்போது விட்டிட்டு வந்திட வேண்டியதுதேன்:).. காசிக்குப் போனா எதையாவது விட்டிட்டு வரோணுமாமே?:)) அதனாலதான் ஆர் கிடைப்பினம் என மீ வெயிட்டிங் அங் சேஜ்சிங்:)) ஹா ஹா ஹா:))

      Delete

  13. //எங்கள் புளொக்குக்கு ரெசிப்பி அனுப்பட்டோ?:)//

    Awwwww

    [im]https://memegenerator.net/img/instances/500x/44169127/santosssss-naan-appediye-shock-aiten.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் எப்படி இப்படிப் படம் எல்லாம் ரிப்ளையில் போடுறீங்க? என்ன டெக்னிக்? நான் முயற்சி செய்தேன் வரலை...

      கீதா

      Delete
    2. ஹாஹாஹாஹா செம ஏஞ்சல்!!!

      Delete
    3. ///https://memegenerator.net/img/instances/500x/44169127/santosssss-naan-appediye-shock-aiten.jpg///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஸ்ரீராமும் இப்படித்தான் ஷொக்ட் ஆகி.. அதுபற்றி வாய் திறக்காமல் போயிட்டார்ர்:) திறந்தால் அனுப்பிடுவேனோ எனும் பயத்தில ஹா ஹா ஹா:)..

      Delete
    4. கீதா அது ஈஸி இதோ சொல்லித்தரேன் :)

      முதலில் [im ] போடுங்க
      அடுத்தது என்ன படம் வேணுமோ அதை சேர்ச் பாரில் தேடி திறங்க
      அடுத்தது அதை லெப்ட் க்ளிக் செஞ்சா copy image லிங்க் வரும் அதை காப்பியுங்க :)
      அதை [im ] ------------------------ இந்த கோடுங்க வர இடத்தில பேஸ்டுங்க அப்புறம் முடிவில் [/im ]
      போடுங்க அவ்ளோ தான்


      [im]paste image link[/im]
      dont leave extra space between brackets

      Delete
    5. ஹா ஹா ஹா கீதா... அஞ்சுவை நம்பாதீங்க:) டப்பு டப்பா சொல்லித்தாறா ஆனா கரெக்ட்டாப் பண்றா:) ஹா ஹா ஹா:).. டாங்ஸ் அஞ்சு..:)

      கீதா அஞ்சு சொன்னதுபோல தான் போட வேண்டும், ஆனா முதலில் கூகிள் இமேஜ் ஐ எடுத்து.. அதில் கேசரை வச்சு ரைட் கிளிக் நொட் லெஃப்ட்:) பண்ணுங்கோ அப்போ ஒரு லிஸ்ட் வரும்... அந்த லிஸ்ட்டில் copy image url என இருக்கும் பாருங்கோ.. அதை கிளிக் பண்ணிப்போட்டு நேரே இங்கு கொமெண்ட்ஸ் பொக்ஸ் க்கு வந்து மிகுதி அஞ்சு சொன்னதுபோலவே... [] இதே ப்ரக்கெட்ஸ் பாவிச்சு.. ஐஎம் போட்டு.. பேஸ்ட் கொடுங்கோ.. முடிவிலும் /ஐஎம் எனக் குடுங்கோ.. ச்ச்சும்மா முயற்சியுங்கோ இங்கு..

      Delete
  14. தலைப்பு //வானதி என்னை மன்னித்துவிடுன்னு// வந்திருக்கலாமோன்னு தோணுது

    ReplyDelete
    Replies
    1. இவங்க எழுதினது இத்தனை படிக்கிறீங்களே ஏஞ்சலின்.. இன்னுமா தெரியலை? ஒரு கதையை எழுதி, அதையே எங்கள் கிரியேஷனுக்கும், 'சீதை ராமனை மன்னித்தாள்' எங்கள் பிளாக்குக்கும் அனுப்பலாம் என்று சிலர் திட்டம் போட்டிருந்தார்கள். துரதிருஷ்டவசமாக இரண்டு பிளாக்குகளையும் ஒரே குழுதான் Manage செய்கிறது. இப்போது கதை புரிகிறதா?

      Delete
    2. ஹஆஹாஆ :) ஆமால்ல

      Delete
    3. ///AngelinThursday, October 05, 2017 2:09:00 pm
      தலைப்பு //வானதி என்னை மன்னித்துவிடுன்னு// வந்திருக்கலாமோன்னு தோணுது///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அஞ்சு.. ஓவிக்கு:) இருக்கும் பவர் வானதிக்கு இல்லை..:) ஐ மீன் இந்த வலையுலகில்:) அதனாலதான் இப்போ வியூஸ் 1000 ஐத் தாண்டிக்கொண்டிருக்குது:)

      // துரதிருஷ்டவசமாக இரண்டு பிளாக்குகளையும் ஒரே குழுதான் Manage செய்கிறது. இப்போது கதை புரிகிறதா?///

      ஹா ஹா ஹா நெ.தமிழன் கர்ர்ர்ர்ர்:)) நல்லாவே கண்டு பிடிக்கிறீங்க.. நல்லவேளை இனி நீங்க ஒரு கிழமைக்கு பிசியாக இருப்பீங்க என நினைக்கிறேன் ஹா ஹா ஹா என் ஜோய்ய்..

      Delete
  15. ஹாஹா வாழ்த்துக்கள் :) முறை எல்லாம் சரியா சொல்லி பரிசு பெற்றதுக்கு :)ஆக்சுவலி நாங்க யூத் இப்போதைய ஜெனரேஷன் என்பதால் ஒன்லி மாம் இன்லா ஃபாதர் பிரதர் சிஸ்டர் இன்லா அங்கிள் ஆன்டி கிரான்பா கிரான்மா கசின் கோ பிரதர் சிஸ்டர் மட்டுமே தெரியும் :) அதனால் போட்டியில் கலந்துக்கல

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா ச்சே இப்படிச் சொல்லும் வாய்ப்பை நான் இழந்தேனேனு இருக்கு இப்ப!!!!

      கீதா

      Delete
    2. ////ஆக்சுவலி நாங்க யூத் இப்போதைய ஜெனரேஷன் என்பதால்/// ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈஈ இன்னும் எதுக்கு இந்த உசிரு உடம்பில இருக்குதூஊஊஊஊ:)) ஹா ஹா ஹா:)...

      கீதா கவலைப்படாதீங்க:) என்னால முடியல்ல மீ காசிக்கு கிளம்பிங்:) கூடவே வாங்கோ பத்திரமாக் கூட்டிப்போவேன் நம்புங்கோ:))

      Delete
  16. பரிசுக்கு நன்றி கில்லர்ஜி. ஆனா என்வலப் இன்னும் வந்து கிடைக்கவில்லை:).//

    @ கில்லர்ஜி..
    ஒரு என்வலப்பில் ஒரே ஒரு துண்டு சீஸ் போட்டு அனுப்பி விடுங்க :)பூனைக்கு அது போதும்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா சரியா சொன்னீங்க ஏஞ்சல்..பூஸாரை அத மட்டும் கொடுத்துக் கவிழ்த்திடலாம்...ஹாஹாஹா

      கீதா

      Delete
    2. என்னாது சீஸ் ஆஆஆஆ?:) அது எலிக்கெல்லோ?:) பூஸ் க்கு எலிதானே வேணும்:) ஹையோ ஹையோ அஞ்சுவும் கீதாவும் ரோட்டலி புரூட்டலி குழம்பிப்போய் இருக்கினம்:) .. எல்லாம் காசிக்குக் கூட்டிப்போய் விட்டிட்டு வந்திடுவேன் எனும் பயம்தான் போல:)..

      Delete
  17. எனக்குத் தெரிந்து நடந்தது/படித்த உண்மைச் சம்பவங்கள் இரண்டு.

    ஒன்று, ஒரு பெரிய வக்கீலுக்கு வெகு அழகான பெண்ணைத் திருமணம் செய்துவைத்தார்கள். அந்த வக்கீல் அவ்வளவு அழகானவர் இல்லை. அதனால் அந்தப் பெண், அவருடன் உறவு வைத்துக்கொள்ளவிரும்பவில்லை. வெளியில் நடக்கும்போதும், அந்தப் பெண் (மனைவி) பத்திருபது அடிகள் பின்னால்தான் வருவார் (அவரது கணவரின் அழகில்லாத் தன்மையால்). சில வருடங்கள் கழித்து அந்தப் பெண் தன் தாய் வீட்டுக்கே வந்து அங்கேயே இருந்துவிட்டார். கணவர் நல்லவர், பொறுமைசாலி. பலப் பல வருடங்கள் கழிந்தபின்பு தன் தவறு புரிந்து, அந்தப் பெண் கணவரின் வீட்டுக்கு வந்தார். காலம் கடந்துபோயிருந்தது. குழந்தைப் பேறே வாய்க்கவில்லை.

    இரண்டாவது, தன் அக்காள் மகளை, தன் ஒரே மகனுக்கு விடாப்பிடியாக திருமணம் செய்துவைத்தார் ஒரு தந்தை. திருமணம் செய்துவைப்பதற்குள் பலப் பல வருடங்களாகிவிட்டன. எத்தனையோ பேர் சொல்லியும் மாட்டேன் என்று பிடிவாதமாக மகன் இருந்தார். இத்தனைக்கும் அந்தப் பெண், இவர் வீட்டுக்கே வந்து (அப்பா, சகோதரிகளுடன் இவர் இருந்த வீடு, அதுவும் மாமா வீடுதானே) ஒரு வருடங்களுக்குமேல் இருந்தாள் (மாமாவுக்கு உதவியாக). இப்படியெல்லாம் நடக்க நடக்க, மகனுக்கு அந்தப் பெண்மேல் வெறுப்புதான் அதிகமானது. ஒரு நாள் அப்பா கண்ணீர் விட்டு அழுதார், தான் இறப்பதற்குள் அவனைத் திருமண கோலத்தில் பார்க்கவேண்டும், தவமிருந்து பெற்ற மகன் தன் சொல்லைப் புறக்கணிக்கிறானே.... மகன், அப்பா அழுததைப் பார்த்ததே இல்லை. கடைசியில் சம்மதித்துத் திருமணம் செய்துகொள்கிறான்.இப்படிப் போகும் கதை. இது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் வாழ்க்கையில் நடந்த கதை (இந்தக் கவிஞர்தான், கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்றெல்லாம் பாடல்கள் இயற்றியவர். மீதிக் கதையைக் கேட்டால் நமக்கு புல்லரிக்கும். நம்ப முடியாது, அவருக்கே நம்ப முடியவில்லையாம்)

    இப்படிலாம் சம்பவங்கள் இருக்கும்போது, நீங்கள் குறிப்பிட்டதும் நடந்திருக்கக்கூடியது. ஆனால் வாழ்க்கையை வீணாக்கிவிட்டாரே, என்ன படித்து என்ன பயன் இந்த டாக்டருக்கு என்று தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. நாமக்கல் கவிஞர் குறித்த இந்தத் தகவல்கள் நான் அறியாதவை. மற்றபடி உங்கள் கருத்தே என் கருத்தும். வானதியின் வாழ்க்கை வீணானது மன்னிக்க முடியாத குற்றம்.

      Delete
    2. நாமக்கல் கவிஞர் பற்றிய வாழ்க்கைத் தகவல்கள் புதிது நெல்லைத் தமிழன்.

      ஆமாம் இப்படியெல்லாம் நடக்கும் போது அதிராவின் கதையும் நடந்திருக்க வாய்ப்புண்டு தான்.

      Delete
    3. உண்மைக்கதைகளை நேரம் ஒதுக்கிச் சொன்னமைக்கு மிக்க நன்றி நெ.தமிழன். நன்றி கீதா.

      // வானதியின் வாழ்க்கை வீணானது மன்னிக்க முடியாத குற்றம்.// உண்மைதான் கீதாக்கா.. இதில் நான் இன்னொன்று சொல்லலாம் என நினைக்கிறேன்... வானதியின் வாழ்க்கை ஒன்றும் வீணாகிடவில்லையே.. அவ மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறா, சுற்றுலா செல்கிறா, கணவரோடுதான் இருக்கிறா... என்ன... உறவு இருக்கவில்லை என்பது ஒரு யூகம்:))..

      இதில் இருவரும் ஒன்றுசேர்வதென்பது மனித வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதிதானே.. ஒரு 20 வீதத்தை ஒதுக்கலாம்.. மிகுதி 80 வீதமும்.. கணவரின் ஒழுக்கம், நடத்தை, மனைவியை கவனித்தல், அன்பாக பாதுகாப்பு அளித்தல், சுகந்திரம் தருதல் எனப் பலவகை அடங்குகிறதெல்லோ.... அப்போ இங்கு பார்க்கும்போது...

      வாசுவால் இவவோடு உடலளவில் ஒன்றாக முடியவில்லையே தவிர மற்றப்படி அவர் மிக நல்லவராகத்தானே இருந்தார்.. ஒரு மனைவியை எப்படி வைத்திருக்கோணுமோ அப்படி வைத்திருந்தார், இன்னொன்று பழைய தொடர்பை அப்படியே விட்டுவிட்டார்.. கள்ளமாகக்கூட தொடர்பு வைக்கவில்லை.. இவ்வளவு நல்லவராக இருக்கும்போது.... அந்த 20 வீதத்தைவிட.. 80 வீதம்தானே பெரியது... அப்படி நினைச்சுக்கூட வானதி போனாபோகுதென வாழ்ந்திருக்கலாம்.. இப்படி எல்லாம் எண்ண வருதே:))...

      ஹா ஹா ஹா.. தெரியல்ல:) இனி நேரில் பேட்டி கண்டால் மட்டுமே உண்டு:)... இன்னொரு உண்மைக்கதை இருக்கு.. நாளை தொடர்கிறேன்:)..

      Delete
    4. அந்த இன்னொரு கதை... இது அம்மம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

      ஊரில் ஒரு குடும்பத்தில் 8,9 பெண் பிள்ளைகளாம்.. அக்காக்காள் எல்லோரும் திருமணமானபின், இதில் கடசிப் பிள்ளை அப்பா அம்மாவோடு இருக்கும்போது, அவவின் சொந்த மாமா மகனை(மச்சானை) விரும்பியிருக்கிறா.. மாமாவின் மகன் விவசாயம் செய்பவராம்.. இவர்கள் குடும்பம் அக்காலத்திலேயே படித்து கொஞ்சம் நல்ல உத்தியோக மாப்பிள்ளைகளாம் அதனால..

      இவவை அடிச்சு மிதிச்சு, இவவின் ஒரு அக்கா ஸ்கூல் ஹெட் ரீச்சராம்... அவதான் முன்னின்று பிரிச்சு.. சிங்கப்பூரில் ஒரு எக்கவுண்டன் மாப்பிள்ளைக்கு கட்டி, சிங்கப்பூருக்கு அனுப்பியாச்சாம்....[20,21 வயதில்]

      அந்த மச்சான், திருமணம் முடிக்காமலே இருந்து பின்பு 40 வயதுகளில் எல்லோரின் வற்புறுத்தலால் முடிச்சாராம்.

      இவ போனவ போனவதான்... 4 குழந்தைகள் பிறந்தது.. ஊரில் அப்பா அம்மா இறந்து, அத்தனை அக்காக்களும் இறந்து, இவவின் கணவர் சிங்கப்பூரில் இறந்து.. அந்த மச்சானும் ஊரில் இறந்தபின்பு... அவவின் 75 வயதிலோ என்னமோ... முதன் முதலாக ஊருக்கு வந்து, தான் இருந்த இடம், கோயில் கிணறு இப்படிப் பார்த்துப் போனாவாம் திரும்பி...

      அப்போ ஏதோ கட்டியாச்சு வாழ்வோம் என, மெஷின்போல குழந்தைகளையும் பெற்றிருக்கிறாவே தவிர... இவவால் காதலை மறக்க முடியவில்லை என்பதுதானே உண்மை... இக்கதையை நினைத்தாலே எனக்கு என்னமோ செய்யும்..

      Delete
    5. அடப்பாவிகளா.... கடைசி தங்கைதானே. சொந்தக் காரனைத்தானே கட்டிக்கறேன்னு சொல்லியிருக்கா. அப்புறம் அவளின் அக்காக்களுக்கென்ன? அந்தப் பெண்ணிற்குப் ப்ராப்தம் இல்லை. பாவம்.

      Delete
    6. உண்மைதான், அதேதான்... அந்தக்கா ஒரு ஸ்கூலில் ஹெட் ரீச்சராக இருந்தாவாம், அதனால் ஊரில் மானம் போயிடும் என இப்படிப் பிடிவாதமாகப் பண்ணிட்டாவாம்.

      Delete
  18. சுவாமிநாதன் என்பதுதான் சரி. ஆனால் தட்டச்சு செய்யும்போது அதுவே சுவாமினாதன் என்று எடுத்துக்கொள்கிறது. அதேபோல் தமிழ்'நாடு என்று டைப் செய்யும்போது தமிழ்னாடு என்று வருகிறது (அதற்காகத்தான் ' டைப் செய்து அதன்பின் ந என்று டைப் செய்யவேண்டும். அதுக்குச் சோம்பேறித்தனம்தான்)

    சிவாஜிகணேசனின் படங்களை சில நாட்களுக்கு முன்னால் பார்த்தேன். அதில் திருவிளையாடல் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது கேட்ட வசனம் நினைவுக்கு வந்துவிட்டது. 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'

    ReplyDelete
    Replies
    1. ///'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'///

      ஹா ஹா ஹா:)..

      அவ்வைப்பாட்டியின் ஆத்திசூடிப் புத்தகத்தை சில நாட்களுக்கு முன்னால் படிச்சேன்:).. அதிலிருந்தது..” ஆனைக்கொருகாலம் வந்தா பூனைக்கொரு காலம் வருமாம்” என.. ஹா ஹா ஹா ஹையோ.. மீ எஸ்கேப்பூஊஊஊஊ:)..

      ஹா ஹா ஹா அனைத்துக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
  19. ​நன்றாயிருக்கிறது. உண்மை சம்பவம் என்று வேறு சொல்லி விட்டீர்கள். ஆனால் சட்டென்று ஒரு முடிவு எதுவும் இல்லாமல் முடிந்து விட்டதோ? தப்பில்லை. பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படித்தான் எழுதுவார்கள். ஊசிக்குறிப்பும் சூப்பர்.


    பாவம் வானதி. அவள் செய்த குற்றம்தான் என்ன? வாசு ஆனாலும் வளர மோசம்.​

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.... உண்மைச்சம்பவத்தில் முடிவு அப்படித்தானே இருக்கிறது... அதனால் அப்படியே நிறுத்தி விட்டேன்:).

      // பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படித்தான் எழுதுவார்கள்.// ஹா ஹா ஹா கல்கி அவர்களைத்தானே சொல்றீங்க?:)

      Delete
  20. ஓவியாவை விட மாட்டேன் என்கிறீர்கள். மேலும் காதலில் ஓவியாவுக்கு எப்போதும் தோல்விதானா? என்ன கொடும ஆரவ்... சே சரவணன்...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அருண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக தெரியுமாமே:).. ஓவியா ஆமியில் இருப்போருக்கும் இப்படித்தான் போல:).. அப்பாடா மாட்டி விட்டச்சூஊஊ:)..

      மிக்க நன்றி ஸ்ரீராம்.. கெளதமன் அண்ணனுக்கும் நன்றி சொல்லிடுங்கோ வோட் போட்டமைக்கு..

      Delete
  21. //கதை எனும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்:)//

    சந்தேகமே வேண்டாம். இது கட்டுரையல்ல; கதைதான்.

    கதாசிரியனின் தலையீடின்றிக் கதை மாந்தனையே கதை சொல்ல வைப்பது வாசகனைக் கதை நிகழ்வுடன் ஒன்றிவிடச் செய்வதற்கான சிறந்த உத்திகளுள் ஒன்று. அந்த உத்தி இக்கதையில் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உடலுறைவைப் புறக்கணித்து வாழ்ந்தவர்கள்/வாழ்பவர்கள் வெகு அரிதாக இருந்தார்கள்/ இருக்கவே செய்கிறார்கள். வாசு-வானதி தம்பதியர் கதையில் இன்னும் வலுவான காரணத்தைக் கற்பித்திருக்கலாம்.

    உண்மைச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு ஒரு சுவையான கதையைப் படைத்தளித்த அதிராவுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ..

      //சந்தேகமே வேண்டாம். இது கட்டுரையல்ல; கதைதான்.//
      ஹா ஹா ஹா நிஜமாவோ? எழுதி முடித்தபின் பயமாக இருந்துது.. கதைபோல தெரியவில்லையே என..

      //அந்த உத்தி இக்கதையில் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
      //
      மிக்க நன்றி.. மிக்க நன்றி.. இப்பூடியெல்லாம் உற்சாகமூட்டினால்.. மளமளவென இன்னும் எழுதிப்போடுவேன்ன்:) ஹா ஹா ஹா.

      ///வாசு-வானதி தம்பதியர் கதையில் இன்னும் வலுவான காரணத்தைக் கற்பித்திருக்கலாம். ///

      நினைத்து நினைத்துப் பார்த்தேன்.. அதிகம் எதுவும் சொல்லத்தெரியவில்லை.. கற்பனைக் கதை எனில் இன்னும் சில விசயங்களைப் புகுத்தியிருப்பேன்ன்.. இது நிஜக் கதை என்பதால்.. கதையைப் பொய்யாக்கிடாமல் சோட் டாக முடிச்சிட்டேன்..

      மிக்க மிக்க நன்றிகள் வோட்டுக்கும்..

      Delete
  22. அதிரா கதை நன்றாக இருக்கிறது.
    சில மனிதர்கள் வாழ்க்கை இப்படித்தான் வீணாகி போகிறது.
    விருப்பம் இல்லையென்றால் முன்பே சொல்லும் துணிவு வர வேண்டும். தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு பின் டாக்டர் திருமணம் செய்து கொண்டு இருக்கலாம்.

    என்ன செய்வது விதி வலியது. வானதி, சுவாமிநாதன் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இருக்கே!

    ஊசிக்குறிப்பு மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. உண்மைதான்.. முந்தி ஒரு காலத்தில் பெற்றோருக்குப் பயந்தே இப்படிப் பல திருமணங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.. பின்னர்தானே மெதுவாக, பெற்றோரை எதிர்த்து, காதலை வெற்றியடையச் செய்யும் காலமாக மாறி வந்தது..

      //தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு பின் டாக்டர் திருமணம் செய்து கொண்டு இருக்கலாம்.//

      அதுதான் சொன்னேனே அத்தந்தை அதுக்கு சம்மதிக்கவில்லை.

      உண்மைதான் சில விதிகளை மாற்ற முடியாது:(..

      மிக்க நன்றி கோமதி அக்கா.. பதில்கள் உடனே கொடுக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

      Delete
  23. Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி வரவுக்கு.

      Delete
  24. உங்கள் கதையும் நன்று ஊசிக்குறிப்பும் மிக அருமை.த ம 12

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ புலவர் ஐயா.. அனைத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  25. Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ.. இம்முறை மகுடம் கிடைச்சிருக்கே எனக்கு:).. மிக்க நன்றி.

      Delete
  26. நீங்க இவ்வளவு அறிவாளியா போங்கோ ஆதிரா இங்கே தீஞ்ச ஸ்ம்மல் வருது
    என் சோக கதையை கேளு பிளாக்மக்களே
    அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே கதையை எழுதிட்டீங்க கர்ச்சீவ் பர்றதுன்னு துண்டு வச்சிட்டு இந்த பின்னுட்டம் கொடுக்கிறேன் பாருங்க எழுத்தெல்லாம் நனைந்து போயிருக்கும் டச் பண்ணிட்டீங்க நானும் டச் பண்ணிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ..
      //நீங்க இவ்வளவு அறிவாளியா போங்கோ ஆதிரா //

      என்ன இப்பூடிக் கேட்டுப்போட்டீங்க?:) இது என் கிட்னியின்[மூளை/அறிவு:)] ஒரு சிறிய பகுதிதான்.. மொத்தக் கிட்னியையும் பார்த்தால் வேர்த்து விறுவிறுத்துப் போவீங்க:) அதனாலதான் நான் காட்டுவதில்லை:)..

      ஹா ஹா ஹா நல்லவேளை நீங்களே கர்சீவ் கொண்டு வந்திருக்கிறீங்க.. நல்ல பழக்கம்:).. மீ எனில் அழுதழுது டிஷ்யூ:) கேட்டு வாங்கித் துடைப்பதுதான் வயக்கம்:)..

      ஹா ஹா ஹா இம்முறை நீங்க எல்லாம் டச்சூஊஊஊ பண்ணியமையால்தான்.. என் மகுடத்தை ஆரும் பறிக்காமல் என்னிடமே இருந்துதே:)... மிக்க நன்றி பூவிழி.

      Delete
  27. ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீக்கு மகுடம் கிடைச்சிட்டுதூஊஊஊஉ.... மீ பெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.... ஸ்ரீராமிடம் இருந்து பறிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.... ஹையோ இனி ஆர் பறிக்கப் போகினமோ.... விடமாட்டேன்ன்ன்ன்ன்:).

    ReplyDelete
  28. அதிரா எப்போ கதை போட்டீங்க!? இப்பத்தான் எங்க மெயில் பொட்டிக்கு வந்துச்சு....ஸோ லேட்டாகிப் போச்சு..

    துளசி: கதை நன்றாக இருக்கிறது அதிரா. உண்மைச் சம்பவம் என்று சொல்லியிருக்கிறீர்கள். என்றாலும் வானதியும், வாசுவும் இப்படி வாழ்வது அர்த்தமே இல்லாமல் இருப்பது போல் இருக்கிறது. இருந்தாலும் உங்கள் நடை அருமை. சொன்ன விதம் நம்மையும் அப்படியே ஒன்றி வைத்துவிடுகிறது. பாராட்டுகள், வாழ்த்துகள்.

    கீதா: அட அதிரா அதுக்குள்ள நெ தவின் ரெசிப்பிய செஞ்சு கொடுத்திட்டீங்க! சூப்பர். டக் டக்கென்று எழுதிப் போடுவது என்பது ஒரு கலை. அதற்கு வாழ்த்துகள் அதிரா.

    கதையும், எழுதிய விதமும் ரொம்பவே நன்றாக இருக்கிறது. உண்மைச் சம்பவம் என்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மையாகவே இருந்தாலும் வாசு வானதிக்குச் செய்தது கொஞ்சம் தவறுதான் என்று தோன்றுகிறது. வானதியும் அப்படி இருக்க முடியுமோ என்றும் தோன்றியது. அல்லது ஏதேனும் ஸ்ட்ராங்க் ரீஸன் இருந்தால் வானதி அல்லது வாசு அப்படி இருப்பதை ஏற்க முடியுமோ அதிரா?! வாசு தன் தந்தையிடம் பாசம் கொள்வது என்பது வேறு அவன் வாழ்க்கை என்பது வேறு அல்லவா? தன் காதலை தந்தையிடம் வலுவாகச் சொல்லியிருக்கலாமோ என்றும் தோன்றியது...ஆனால் நீங்கள் உண்மைச் சம்பவம் என்று முதலிலேயே சொன்னதால் இதைப் பற்றி ரொம்பச் சொல்ல முடியலை அதிரா....என்றாலும் உங்கள் சொல்லும் விதம் ரொம்ப நன்றாக இருக்கிறது..அருமை....பாராட்டு பூங்கொத்து கொடுத்தே ஆகணும். இப்படி உடனே எழுதுவது என்பது என்னால் எல்லா நேரமும் முடிவதில்லை...சூப்பர் அதிரா...

    மை வைச்சாச்சு!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ..

      /அதிரா எப்போ கதை போட்டீங்க!? இப்பத்தான் எங்க மெயில் பொட்டிக்கு வந்துச்சு....ஸோ லேட்டாகிப் போச்சு..///

      மெயிலுக்கு வரக் கொஞ்சம் தாமதமாகும்தான் கீதா, இம்முறை கதையை டக்கென எழுதிட்டேன் என்பதனால, என்னால பொறுமை காக்க முடியவில்லை.. அதனால்தான் அடுத்தடுத்து 2 பதிவுகள் போட்டு எல்லோருக்கும் கஸ்டம் கொடுத்திட்டேன்..

      கருத்துக்கு மிக்க நன்றிகள்.

      உங்களைப்போலவேதான் பெரும்பாலும் எல்லோரும் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.. முடிந்தவரை பதில்கள் மேலே கொடுத்திட்டேன் கீதா, மேல் பின்னூட்டங்கள் படிச்சால் கொஞ்சம் புரியும்..

      மை வச்சு தமனாக்காவை டச்சு பண்ணியமைக்கு மிக்க நன்றிகள்.. இம்முறை அவவுக்கு உடம்பெல்லாம் மொய்.. சொறி மை:)..

      மிக்க நன்றி துளசி அண்ணன், கீதா.

      Delete
  29. ஊசிக்குறிப்பு செம. உண்மைதான் நிஜத்தை விட நினைவுகள் எப்போதுமே சுகம் தான்...

    அதான் வாசுவும் நினைவில் அப்படியே சாய்ந்திருக்கிறார் போலும்!!!

    ஓவியா பாவம் தான்...அவள் எங்கிருக்கிறாளோ என்ன செய்கிறாளோ?? வாசுவையே நினைத்து வாழ்கிறாளோ இல்லை குடும்பம் என்றோ...பாவம்...

    புலியானந்தா சொன்னதும் அருமை!!

    அப்புறம் கில்லர்ஜியின் கேள்விகளுக்குப் பதில்கள் அனைத்தும் சரியாகச் சொன்னமைக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்.

    மகுடத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஓவி பற்றி எமக்கு தகவல் ஏதும் தெரியாது...

      ஹா ஹா ஹா கர்:) அது பூஸானந்தா கீதா:)..

      கில்லர்ஜி இன்னமும் என்வலப் அனுப்பவில்லை கீதா, அடுத்தமுறை ஃபோன் பேசும்போது மறக்காமல் நினைவூட்டி விடுங்கோ பிளீஸ்ஸ்:)

      யேஸ்.. மகுடம் கிடைச்சிட்டுது கதைக்கு .. மிக்க மகிழ்ச்சி.. மிக்க சந்தோசம்.
      மிக்க நன்றி.

      Delete
  30. ஒரு வழியாக உங்கள் தளம் திறந்து விட்டது .நேற்றிலிருந்து முயற்சி செய்து :)

    இதில் பாதிக்கப் படுபவர் அவர் மனைவி என்று நாம் நினைத்தாலும் ,அவரே சரியென்று ஏற்றுக் கொள்ளும் போது நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ..

      நீங்க உடனேயே வோட் போட்டிருந்ததைப் பார்த்தேன்.. ஏதோ பிசிபோல அதுதான் கொமெண்ட் போடவில்லை என நினைச்சேன்.

      புளொக் திறக்க நேரம் எடுத்துதோ?.. அது நான் யூ ரியூப் பாட்ட்டு எல்லாம் போட்டிருப்பதால் என நினைக்கிறேன்.. நெட் ஸ்பீட் குறையும் நேரங்களில் அப்படிக் கஸ்டம் கொடுக்கும் எனக்கும்.

      //இதில் பாதிக்கப் படுபவர் அவர் மனைவி என்று நாம் நினைத்தாலும் ,அவரே சரியென்று ஏற்றுக் கொள்ளும் போது நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை :)//

      உங்கள் கருத்தும் வித்தியாசமான சிந்தனையில் இருக்கிறது.. உண்மைதான்.. அவ ஹப்பியாக இருக்கும்போது நாம் என்ன பேச முடியும்..

      மிக்க நன்றி.. டபிள்:) நன்றி பகவான் ஜீ..

      Delete
  31. மகுடம் சூட்டியமைக்கு முதலில் வாழ்த்துக்கள் அதிரா..

    நான் கதையை அலசிஆராயவில்லை.நிறையபேர் ஆய்ஞ்சு போட்டினம்.சீ ஆராய்ந்திட்டீனம். எனக்கு நீங்க இக்கதையை எழுதி ஊரில் நடந்த சம்பவங்களை ஞாபகப்படுத்திவிட்டீங்க. இப்படி காதல் சம்பவத்தினால் அடிதடி சண்டைகள் கூட நடந்திருக்கு. நிறைவேறா காதல்,நிறைவேறிய காதல், ஓடிப்போன காதல், தற்கொலையில் முடிந்தகாதல்,போராடி நிறைவேறிய காதல் என நடந்தவைகள் எல்லாம் கண்முன்னே.
    ஆனா நீங்க எழுதிய கதையில் பெற்றோருக்காக தியாகம் செய்து, அவரின்/அவளின் காதலை பெருந்தன்மையா ஏற்று நடந்த திருமணம் இருக்கு.
    10மணி41 நிமி நெல்லைதமிழன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் பதில் மிகவும் உண்மை. (நீங்க நிறைய பதில் கொடுத்தீங்க, அதுதான் நேரத்தை எழுதினான்.ஹி..ஹி..ஹி..)கொப்பிபேஸ்ட் பண்ணேலாது பெரிய்ய்ய்ய பதில்)
    லாண்ட் லைன் அப்ப இல்லையென நினைக்கிறேன். கடிதம்தான் முக்கியமா இருந்தது.
    உண்மைக்கருவை வைத்து கதை எழுதினமைக்கு வாழ்த்துக்கள் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..
      //மகுடம் சூட்டியமைக்கு முதலில் வாழ்த்துக்கள் அதிரா..//
      தங்கூ.. தங்கூ... நீங்கள் எல்லோரும் தவறாமல் வந்து வோட் போட்டு விடுவதால்.. நேக்கு மகுடம் சூட முடிகிறது:)..

      //நான் கதையை அலசிஆராயவில்லை.நிறையபேர் ஆய்ஞ்சு போட்டினம்.சீ ஆராய்ந்திட்டீனம்.///

      ஹா ஹா ஹா யேஸ் பலகோணத்தில் எல்லோரும் சிந்தித்துப் பல பதில்கள் வந்திருக்கு.. எனக்கும் தோணினதை மேலே எழுதியிருக்கிறேன்.

      //10மணி41 நிமி நெல்லைதமிழன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் பதில் மிகவும் உண்மை.//
      ஹா ஹா ஹா மிக்க நன்றி.. அதுதானே யாழ் நிலைமை:)..

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
  32. அதிராவுக்குள் இம்புட்டு அறிவா என அவரும் வியந்துதான் போனார்// அவருக்கு உங்களின் மற்றைய திறமை எல்லாம் தெரிந்தால் மயங்கி விழுந்துவிடுவார்.
    சூப்பர் தத்துவம். நானும் அப்பாவின் தோள் மீது இருந்து நல்லூர் சாமியை பார்த்தது ஞாபகம். இப்படி பல நினைவுகளை அடிக்கடி நினைத்துப்பார்ப்பேன். அது என்றுமே பசுமையா ஞாபகத்தில் இருக்கு.
    கில்லர் ஜி அண்ணாவின் பரிசை பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மாறிப்புரிஞ்சு பின்பு டிலீட் பண்ணி இப்போ மீண்டும் கொமெண்ட்:)..
      ///அவருக்கு உங்களின் மற்றைய திறமை எல்லாம் தெரிந்தால் மயங்கி விழுந்துவிடுவார்.//
      ஹா ஹா ஹா

      உண்மைதான் ஓல்ட் இஸ் கோல்ட்:).. பழைய நினைவுகளும் கோல்ட்தான்:)..

      கில்லர்ஜி பூங்கொத்து மட்டுமே தந்தார்ர்:) இன்னும் என்வலப் தரவில்லை:).. ஹா ஹா ஹா இப்பூடிப் பல இடங்களில் நின்று கூக்குரல் போட்டால்தான் என்வலப்பை தருவார்.. உள்ளே குவைத் மணி வச்சு:).. ஹா ஹா ஹா.. தாமதத்துக்கு மன்னிக்கவும் அம்முலு.
      இன்று பதில்கள் போட்டு முடிப்பது எனக் கங்கணம் கட்டி அமர்ந்திருக்கிறேன்ன்.. ஆர் கூப்பிட்டாலும் இப்போ எனக்குக் காது கேய்க்காது முழுசா அடைச்சிருக்கு .. அதனால கூப்பிடக்கூடா எனச் சொல்லிட்டேன்:).

      மிக்க நன்றி.

      Delete
    2. என்வலப் உகாண்டாவிலிருந்து விரைவில் வரும்.

      Delete
    3. இன்னும் வந்து சேரவில்லை என்பதனை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்:)

      Delete
  33. கதை மனதை நெருடுகின்றது! பாவம் ஓவி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. நீங்கள்உம் எப்பவும் தவறவிட்டிடாமல்.. ஓடிவந்து ரெயினின் கார்ட் பெட்டியில் ஏறிடுறீங்க:) ஹா ஹா ஹா.. ஓவி உண்மையில் பாவம்தான்:(

      Delete
  34. யாழ்ப்பாணத்தின் வாழ்வியல்முறை பல சிக்க்ச்ல்களின் கூடாரம் போல விட்டுக்கொடுப்பதும் வேதனை அடைவதும் பலரின் பார்வையில் கேட்டும் இருக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஆனா இப்போ நிறையவே மாறிவிட்டது நேசன்... பலபல சம்பவங்கள் பார்த்து, பெற்றோரும் விரும்பிட்டால் புறிச்சிடக்கூடாது எனும் மனநிலைக்கு வந்திட்டார்கள்..

      ஊரில் இப்படிப் பல பிரச்சனைகளை அறிவதால், எங்கட அம்மா அடிக்கடி சொல்லுவா, யாரவது உண்மையாக லவ் பண்ணினால், நமக்குப் பிடிக்காட்டிலும், கையை விட்டிடோணும் அதை விட்டு.. பிரித்து இன்னொருவருக்கு கட்டிக்கொடுக்கக்கூடாது அது எப்படியும் ஹப்பியான வாழ்வாக அமையாது என.

      Delete
  35. ஊசிக்குறிபொஉ சூப்பர் அப்படியே சினேஹாவை நினைக்கவைத்துவிட்டீர்களே)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது நேசனின் வீட்டு லவ்வருக்குத்:) தெரியுமோ?:).. மிக்க நன்றி நேசன்..

      Delete
  36. இருந்தாலும் -
    கலாவோட நாத்தனார் இம்புட்டு அளவுக்கு கலக்குவாவோ..ன்டு தெரியாமப் போச்சே!..

    பால் பொங்கல்..ன்னு வந்தா - பால் பாயாசமா..ல்லோ இருக்கு!..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்க வலது காலை எடுத்து வச்சு வாங்கோ... நல்வரவு மிக்க மகிழ்ச்சி...

      ஹா ஹா ஹா இப்போதானே புளொக்குக்குள் வந்திருக்கிறீங்க இனித்தானே இன்னும் கலக்கல்களைப் பார்க்கப்போறீங்க மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  37. வணக்கம் பூஸ் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விளக்கணித் திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க நலம் வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும் !

    என்ன கறுமுறு சத்தம் வருது ம்ம்ம் இருக்கட்டும் கதைக்கான கவிதை வரும் அப்போ பார்த்துக்குறேன் ஹா ஹா ஹா இன்னும் ஓரிரு நாட்களில் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் அப்போது வருகிறேன் அதுவரை ஆங்..........

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.. கொம்பியூட்டர் முட் ஓவ் ஆகிட்டமையால் உடனுக்குடன் பதில் போடாமல் விட்டு விட்டேன், மன்னிக்கவும்... பிஸியான வேலைக்கு மத்தியிலும் தவறாமல் வந்து போவதற்கு மிக்க நன்றிகள்.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.