நல்வரவு_()_


Friday 16 September 2011

பூஸ் வேணுமோ?:) பப்பி வேணுமோ?:)


((((((((((((((((((((****************)))))))))))))))))))))

ஹைஷ் அண்ணன் + லதா அக்கா வுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் 17.09.20011

((((((((((((((((((((****************)))))))))))))))))))))


நோஓஓஓஓஓஓ... இவரைத் தரமாட்டேன்ன்ன்ன்ன்ன்:)))



இங்கு BUILD A BEAR WORKSHOP என ஒரு கடை இருக்கிறது(எல்லா இடத்திலும் இருக்கும் என நினைக்கிறேன்). அங்கு எல்லா வகையான பொம்மைகளும், தைத்தபடி மட்டும் இருக்கும். அங்கு போய், விருப்பமானதை தெரிவு செய்து, பின் மெஷினில் பஞ்சு இருக்கும், அங்கிருக்கும் ஒரு பட்டினை அமத்தி, குழாயில் பொம்மையைப் பிடிக்க நன்கு பஞ்சு அடையும், எம் விருப்பப்படி, இறுக்கமாகவோ, அல்லது மென்மையாகவோ பஞ்சை உள்ளடைத்துக் கொடுக்க, அந்த இடைவெளியை தைத்துத் தருவார்கள்.

பின் அங்கு குளிக்க வார்க்கும் இடம் இருக்கிறது, அதுவும் ஆக்‌ஷிலரேட்டர்மாதிரி காலால அமத்த, காத்தடிக்கும், அதில் பிரஸ் போட்டு தேய்த்து கிளீன் பண்ணி, பின்பு தாமே, உடைகள், தொப்பி, சப்பாத்து.... இன்னும் என்னவோ எல்லாம் இருக்கு, போட்டு மேக்கப் பண்ணிக் கொடுத்தால், பின்னர் கொம்பியூட்டரில், ஒரு ஃபோம்... அது பேர்த் சேட்டிபிகேட்டாம்:)), அதையும் பிள்ளைகளே நிரப்பி, தாம் செலக்ட் பண்ணியதுக்கு பெயரும் சூட்டினால், அப்பெயரோடு பேர்த் சேர்டிபிகேட்டும் சேர்த்து, பில் போட்டுத் தருவார்கள்.

கிட்டத்தட்ட, ஒரு ஹொஸ்பிட்டலுக்குப் போய், ஒரு குழந்தையை வாங்கி வந்த பீலிங் கிடைக்கும்:)).

வீட்டில் பிள்ளைகள் இருவரும் கொஞ்ச நாளாகக் கேட்டார்கள், பொம்மைகள் வைத்திருக்க ஆசையில்லை, ஆனால் இப்படி மேக் பண்ண வேண்டும் என ஆசை. சின்னவர் மட்டும் எப்பவும் தன்னோடு கொண்டு திரிவார். வாங்கித்தரலாம் எனச் சொல்லியிருந்தோம். அதுக்குள் அவர்களின் மாமி வந்தவ, அவ இங்கு வரமுன்பே  லிஸ்ட் ரெடி பண்ணச் சொன்னா, என்ன என்ன வாங்க வேண்டும் என்று:). அந்த லிஸ்ட்டில இதுவும் சேர்ந்து கொண்டது:).

இவை இரண்டுக்குமான செலவு.. £62 பவுண்டுகள்தான். உடை, சப்பாத்து... அனைத்தும் சேர்த்து.

இதுதான் SHOP:)


மேலே, செய்து வைக்கப்பட்டிருக்கு, கீழே தைத்த பொம்மை இருக்கு, விரும்பியதை செலக்ட் பண்ணிவிட்டு....


 இதுதான் பஞ்சு இருக்கும் மெஷின், இந்த சிகப்பு குழாயில் வைத்து, பட்டினைப் போட்டு, நன்கு பஞ்சை நிரப்ப வேண்டும்.



பின்னர் இதில் குளிக்க வார்க்க வேண்டும்:))




அதன் பின்பு, விரும்பியபடி, அனைத்தையும் தெரிவு செய்து, சோடிக்கலாம்..


இது நான் மேக்கப் பண்ணிய பூஸார்.. எப்பூடி இருக்கிறார்?:))



இது அவர்கள் மேக்கப் பண்ணி வைத்திருந்த நீலப் பூஸார்:))


இது எங்கள் மூத்தவர் செய்த Panda Bear...உம் உடைகளும், அதுக்குப் PANDY எனப் பெயர் வைத்திருக்கிறார். செய்ததோடு சரி, பின்னர் தொடுவதில்லை, நான்தான் சிலநேரம் தூக்கி வைத்திருப்பேன், ஆசையாக இருக்கும்.

இது சின்னவருடையது.. பப்பி. இதுக்கு FLOPPY எனப் பெயரும் வைத்தாச்சு:)). அவருக்கு ஹிட்டார் பிடிக்கும், அதனால ஹிட்டாரும் வாங்கிக் கொழுவிக்கிடக்கூஊஊ:)).



உடுப்பெல்லாம் போட்டுக்கொண்டு, சோஃபா வில் இருக்கினம்:))


பின் இணைப்பு:
இது அஞ்சலினுக்காக...(தாமதத்துக்கு மன்னிக்கவும்).


உண்டானாம் ஒடியற் கூழ்... என, 2ம் வகுப்புத் தமிழ்ப் புத்தகத்தில ஒரு பாடல்/பாடம் இருந்தது, அதில் எப்படி ஒடியல் கூழ் செய்வது என்ற செய்முறையையும் கதைபோல சொல்லியிருந்தார்கள்.. இப்பவும் மனதில் நிற்குது... இதிலிருந்து என்ன தெரியுது மக்கள்ஸ்ஸ்:))... நாங்களெல்லாம் 6 வயசிலயே சமையல் குறிப்பு படிச்சனாங்கள் தெரியுமோ?:))).  சரி சரி குறிப்புக்கு வருவோம்.

நான் இக்கூழ் பெரிதாக செய்ததில்லை, அம்மாதான் செய்வா, ஆனா எனக்கும் தெரியுமில்ல:)

ஒடியல் மா - ஒரு கப்
செத்தல் மிழ(ள)காய்..(ஊ.கு: பாழாய்ப்போன ள,ழ வால மனிசனுக்கு நிம்மதியே போச்ச்ச்:)))-- 5--10(உங்கள் விருப்பம்)
பழப்புளி, பயற்றங்காய், மரவள்ளிக்கிழங்கு, பலாக்கொட்டை முக்கியம். 

அசைவக்கூழுக்கு... நிறைய மீன் பொரித்துப் போடவேணும், இரால், நண்டு, மீன் அவித்துச் சேர்க்கவேண்டும்.

சைவக்கூழுக்கு, வேறு ஏதாவது காய்கறிகள் கொஞ்சமாக விருப்பம்போல் சேர்த்துக் கொள்ளலாம். முருங்கை இலைதான் கட்டாயம். இங்கு கிடைக்காதென்பதால், கொஞ்சம் கீரையை குட்டியாக வெட்டிப் போடுவோம்.

இலங்கைத் தமிழ்க் கடைகளில் கிடைக்கும்,  “ஒடியல்மா” எனக் கேட்டு வாங்க வேண்டும். புளுக்கொடியல்மா அல்ல.

செய்முறை:
முதலில் ஒடியல் மாவை ஒரு பாத்திரத்தில்போட்டு, நிறையத் தண்ணி ஊற்றி ஊற விடுங்கள். அரை மணிக்கொருக்கால், அத்தண்ணியை மெதுவாக சரித்து ஊத்தி விட்டு மீண்டும் தண்ணி ஊத்தி ஊறவிடுங்கள். இப்படி 3 அல்லது 4 முறை செய்தால் நல்லது. அதிலுள்ள கயர்த் தன்மை போய்விடும்.

அந்த ஊறும் இடைவெளியில், மரவள்ளிக் கிழங்கில் பாதிப்பங்கை சின்னதாக வெட்டிப் பொரித்தெடுங்கள். இரால், சின்ன மீன் அனைத்தையும் பொரித்து புறிம்பாக வைத்துக்கொள்ளுங்கள்.  பொரியல்தானே... அது உங்கள் விருப்பம்...
அதைவிட மீன், நண்டு(குட்டி நண்டுதான் நல்லது, ஆனால் நண்டு முக்கியமில்லை, நாம் போடுவது குறைவு). மீனை உப்பு போட்டு அவித்து புறிம்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

செத்தல் மிளகாயை கொஞ்ச நேரம் தண்ணியில் ஊறவிட்டு, பின் மிக்ஸியில் அல்லது அம்மியில், இருவல் நருவலாக அரைத்து எடுத்து, புளியைக் கரைத்து வடித்தெடுத்து இரண்டையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பிலே பெரிய பாத்திரத்தை வைத்து, அதில் பயற்றங்காய், மீதி மரவள்ளிக்கிழங்கு, பலாக்கொட்டை போட்டு, உப்பு + மஞ்சள் தூள் (கொஞ்சம்) போட்டு, நன்கு அவிய விடுங்கள். அவிந்து வந்ததும் புளி + மிளகாய் கரைசலை ஊற்றி அவிய விடுங்கள். எப்பவும் தண்ணி வற்றாதபடி இருக்கவேண்டும். அவிந்ததும் கரைத்து வைத்துள்ள ஒடியல்மா கரைசலை சேருங்கள். மா சேர்த்தவுடன்.... டக்கென தடித்து கெட்டியாகப் பார்க்கும், அதனால் எப்பவுமே கேற்றலில் கொதி தண்ணி ரெடியாக இருக்கட்டும்.

 கொதி தண்ணியை ஊற்றி ஊற்றி, மா இறுக விடாமல், கூழ் பதமாக கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும், கடைசியாக முருங்கையிலை(கிடைக்காட்டில்) கீரை அல்லது கோவா இலைகூட குட்டியாக அரிந்து சேர்த்திடலாம், இல்லாவிட்டாலும் ஓக்கே.  பூண்டு பாதி உடைத்து தட்டிப் போடலாம்(முக்கியமில்லை), இஞ்சி சேர்ப்பதில்லை.

அப்படியே மெல்லிய தீயில் அல்லது இடைக்கிடை அடுப்பை ஓன் பண்ணி, ஹீட் பண்ணிக்கொண்டே குடிப்பதுதான் ருசி. ஆறினால் இறுகிவிடும். ஒருகப் மா(250 மி.லீ) போதும், 3,4 பேர் குடிக்கலாம். பலாக்கொட்டையும் பொரித்தும் போடலாம், பொரியல் எவ்வளவு சேர்த்தாலும் சுவை அதிகமாகும். சைவக் கூழாயின் சோயாமீற் பொரித்து, பலாக்கொட்டையும் பொரித்துச் சேர்க்கலாம். மீன் கிடைக்காதுவிட்டால், நெத்தலிக் கருவாடும், பொரித்தும் அவித்தும் போடலாம்.

குடிக்கும் டிஸ் இனுள் கூழை எடுத்து, எம் தேவைப்படி பொரியல், மீன் அனைத்தையும் போட்டு நாம் குடிப்பது வழக்கம். சிலர் கிழங்கு பயற்றங்காய் அவியும்போதே... மீன் எல்லாம் போட்டு அவிப்பார்கள். ஆனா நாம் அப்படிச் செய்வதில்லை, சைவக் கூழாகச் செய்து, டிஸ் இல் எடுக்கும்போது அசைவம் சேர்ப்போம். வேண்டுமாயின் இரால் மட்டும் சேர்த்து அவிக்கலாம், ஏனெனில் அது கரையாதெல்லோ.

இதில் புளியும், உறைப்பும் கொஞ்சம் அதிகமாக இருந்தால்தான் சுவையும் அதிகமாகும். இதுக்கு அம்மா, செத்தலும், வெங்காயமும் தாளித்துக் கொட்டுவா. பயற்றங்காய் அதிகம் சேர்க்கத் தேவையில்லை. ஏதாவது சொல்ல மறந்திட்டனோ தெரியேல்லை:)), அப்பூடி இருக்காது, இருந்தால் பின்பு சொல்கிறேன்.


உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ... முடியேல்லை மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:)).


====================================================
கூடி இருந்து குலாவுவார் வீட்டில்... 
ஓடி உண்ணும் கூழும் இனிதே.. 
.....................இது இலங்கைப் பயமொயி:)))
====================================================

148 comments :

  1. இருங்க ஆதிஸ்ஸ்ஸ்ஸ் முதல புடிச்சு இழுக்குது பொம்ம பாத்துட்டு வரேன்னு சொல்லுங்க்க்....

    ReplyDelete
  2. புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  3. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஹைஷ் தம்பதியினருக்கு.
    பூஸூம் வேண்டா, பப்பியும் வேண்டா,
    ஓடியற் கூழ் வேண்டும்..
    செய்முறையே செம டாப்பாக இருக்கு.

    ReplyDelete
  4. ஹைஷ் அண்ணன் + லதா அக்கா வுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் 17.09.20011

    ReplyDelete
  5. பப்பிபிபிபிபி தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  6. கூடி இருந்து குலாவுவார் வீட்டில்...
    ஓடி உண்ணும் கூழும் இனிதே..
    .....................இது இலங்கைப் பயமொயி:)))//

    நல்லாருக்கே

    ReplyDelete
  7. பின் இணைப்பை பார்த்தவுடனே அஆஹஹ்ஹா நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  8. எங்க வீட்லயும் நிறைய பொம்மை இருக்கு அதிரா ,வாங்கி எல்லாத்துக்கும் பேர் வச்சு சோபா முழுக்க அவங்க தான் உக்காந்திருக்காங்க

    ReplyDelete
  9. நீங்க மேக்கப் செய்த பூஸ் ரொம்ப அழகா இருக்கார் .

    ReplyDelete
  10. ஹைஷ் அண்ணன் + லதா அக்கா வுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. Tick Tack Toe
    Tick tack toe
    Round I go
    if i miss
    i'll take this
    என் வீட்டு குட்டி எலி ரெண்டாவது விரலை தொட்டதால் ,இன்னிக்கு நோ
    spelling mistakes .

    ReplyDelete
  12. நாளை மீண்டும் வருவேன்

    ReplyDelete
  13. //சொல்ல மறந்திட்டனோ தெரியேல்லை:)), அப்பூடி இருக்காது, இருந்தால் பின்பு சொல்கிறேன்.//

    நீங்களே கேட்டுகறதாலே இதை மட்டும் சொல்லிடறேன் .
    அடுப்பை on செய்யணுமா வேண்டாமா !!!!!
    Good Night

    ReplyDelete
  14. ஹைஷ் & லதாவிற்கு என் மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துக்கள் . @}->--

    //பாழாய்ப்போன ள,ழ வால மனிசனுக்கு நிம்மதியே போச்ச்ச்:))// கீக் கீக் கீக்க்க்க் முடியவே... இல்ல. ;)))

    பூஸ் வடிவா இருக்கிறார் அதீஸ்.

    //அடுப்பை on செய்யணுமா வேண்டாமா !!!!!// வேணும். பிறகு முடிவில... ;))

    ReplyDelete
  15. இங்கையும் அமெரிக்காவில் இருக்கு இந்தக் கடை( Build a bear). ஒரு முறை போயிருந்தோம். வாங்கின புதிதில் ஏதோ ஒரே ஆரவாரமா இருந்திச்சு. இப்ப தேடுவார் இல்லாமல் நாய்க்குட்டி பேஸ்மென்டில் இருக்கிறார்.
    கிக்க்க்க்க்க்... டீச்சர் வேறு பிரம்போடு திரிகிறா!!!! எதுக்கும் சந்தேகம் இருந்தா இப்படி ழ, ள, ல என்று மூன்றையும் போட்டுட்டா படிக்கிறவர்கள் பொருத்தமானதை பொறுக்கி எடுத்துப் படிப்பார்கள். எல்லோரும் இதையே பின்பற்றுங்கப்பா!!!
    ஒடியல் கூழ் என் அம்மா தான் எபோதும் சுவையாக செய்வார்கள். நல்ல குறிப்பு.

    ReplyDelete
  16. //கூடி இருந்து குலாவுவார் வீட்டில்...
    ஓடி உண்ணும் கூழும் இனிதே.. //

    என்ன கூழுனு சொல்லலியே...

    வெட்டிங் பார்ட்டி அமர்களமாக இருந்தது நன்றி பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  17. //ழ, ள, ல என்று மூன்றையும் போட்டுட்டா படிக்கிறவர்கள் பொருத்தமானதை பொறுக்கி எடுத்துப் படிப்பார்கள். எல்லோரும் இதையே பின்பற்றுங்கப்பா!!!// ஆஹா! ஆஹா! ஆஹாஹா!! ;))))

    ReplyDelete
  18. //எங்களுக்கும் ஹிந்தி தெரியுமில்ல//

    தெரியத்தானே செய்யும் பேச தெரியாதுலே?

    //எனக்கு பாடலில் என்ன வருது எனத் தெரியாது.//

    பாட்டை பாடியவனுக்கே தெரியாது போது நீங்கள் மட்டும் தெரிந்து என்ன செய்யப் போகிறிகள்?

    //உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ...இந்த அந்நியனின் தொல்லை தாங்க முடியேல்லை மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:)).//

    ReplyDelete
  19. இதுதான் SHOP:)

    என்ன வெறும் போர்டு காமிச்சி கடைன்னு சொல்றீங்க

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  20. ரமேஷ் :-பொம்மைகள் அருமை ,அதிலும் அந்த கடையில் அலங்கரித்து வைத்திருக்கும் பொம்மை அழகு .

    ஆதிரா :-அப்பா நாங்க வீட்டுக்கு வாங்கிட்டு வந்த பொம்மை அழகா இல்லையா ?.ஹும் ...

    ரமேஷ் :- ஹைய்யோ ....அதுவும் அழகாகத்தான் இருக்கு

    ஆதிரா :- ஹும்....

    ரமேஷ் :- ஓ.கே...ஓ.கே
    வீட்டுக்கு வாங்கிட்டு வந்த பொம்மை மட்டும் தான் அழகா இருக்கு .ஓ.கே.வா ...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  21. 6 வயசிலயே சமையல் குறிப்பு படிச்சனாங்கள் தெரியுமோ?:))).

    அது சரி ஆனா..... எப்ப சமைக்க ஆரம்பிச்சொம்னு
    சொல்லவேயில்லையே........ஹா ஹா ஹா

    ReplyDelete
  22. கூடி இருந்து குலாவுவார் வீட்டில்...
    ஓடி உண்ணும் கூழும் இனிதே..
    .....................இது இலங்கைப் பயமொயி:)))

    கூழானாலும் குளித்து குடி

    இதுவும் பழமொழி இங்கே ....எப்பூடி ...

    ReplyDelete
  23. கிட்டத்தட்ட, ஒரு ஹொஸ்பிட்டலுக்குப் போய், ஒரு குழந்தையை வாங்கி வந்த ""பீலிங்"" கிடைக்கும்://


    ஏன் ,பொம்மை மேலே மருந்து வாடை அடிக்குமா !

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  24. மியா மியா பூனை

    மீசை வச்ச பூனை

    ஆசை பட்ட குழந்தைகளுக்கு

    சந்தோசம் குடுக்கும் பூனை .


    ஆதிரா :-
    ஹைய்யோ....பாட்டெல்லாம் பாடாதீங்க ரமேஷ்
    இங்க வரவங்க ஓடிடுவாங்க ,..அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  25. மாய உலகம் said...
    இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  26. ஹைஷ் அண்ணன் , லதா தோழிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    பொம்மைகள் சூப்பர்

    அந்த ஹிந்தி சீரியல் பார்க்கிறீங்கலா?சமீப காலமா தான் பார்த்தேன்
    ஆஹா வீடு சூப்பர்
    அவங்க பேசும் வார்த்தைகள் மரியாதை கலந்த வார்த்தைகள் சூப்பர், என்க்கு ரொம்ப பிடிச்சிது ஆனால் தொடர்ந்து பார்கக்தான் நேரம் இல்லை

    ReplyDelete
  27. முதல் பாட்டு, மியுசிக் டைரெக்டர் என் கோ சிஸ்டரின் மச்சான் தான்.. இயற்றியது.

    ReplyDelete
  28. அதிரா பெண் குழந்தைகள் இல்லாததால் எங்க வீட்டில் பொம்மைகள் கிடையாது

    ஆனால் நாங்கள் வளரும் போது கீ கொடுத்த பேசும் பொம்மை நல்ல ஒரு ஒன்ற முழ நீளம் சூப்ப்ரா டிரெஸ் எல்லாம் ஸ்பான்ச் ஸ்கர்ட் தைத்து போட்டேன்
    ஆனால் என் தங்கைக்கு அந்த பொமமைய கண்டால் பேய் போல அலருவாள் , அதிக பயம் ஏன் தெரியல.

    அவள் பயப்படுகிறாள் என எங்க வீட்டில் பொம்மைவாங்குவதையே விட்டு விட்டோம்

    ReplyDelete
  29. பொம்மைகள் கிடைக்குமிடம் முதல் நல்ல உணவின் செய்முறை விளக்கம் வரை அனைத்தும் கோர்வையாய் தந்த விதம் சிறப்பு . பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  30. ஹைஷ் அண்ணன்,லதாஅக்காவுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

    இங்கு என்னதான் கிடைக்காது அதிரா.பூஸ்ஸூம், பப்பியும் அழகுஊஊஊ. எல்லாப்பொம்மைகளும் அழகாக இருக்கு.

    ஹிந்திப்பாட்டு சுத்தமாக புரியவில்லை. ஆனந்தம் படம் ரிவியில எப்பபோட்டாலும் பார்ப்பேன். பிடித்தமான படம்.
    ஆடிக்கூழ் ரெசிபியைப்பார்த்ததும் எனக்கு
    ""ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை
    ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே."
    இப்பாடல்தான் ஞாபகம் வந்திருச்சி.

    ReplyDelete
  31. வாங்கோ மாயா....

    //முத பொம்ம//
    நோஒ.. அதைத்தரமாட்டேன் கர்ர்ர்ர்:))).

    ஹா..ஹா..ஹா.. முதல உங்களையும் புடிச்சு இழுக்குதோ?.. இப்ப கடிக்க மறந்து போச்ச்ச்... இழுக்கப் பழகியிருக்குது, நல்ல முன்னேற்றம்.. ஒருவேளை பல்லைப் புடுங்கிவிட்டாரோ மாயா:))).

    என்னாது புஸ் வேணுமோ? ஆரு அமெரிக்க பழைய ஜனாதிபதியையா கேட்கிறீங்க:)) அவரைத் தூக்கிட்டுப் போங்க.. எனக்கு கண்ணிலையும் காட்டப்புடா அவரை:))).

    திருமண வாழ்த்து... போய்ச் சேர்ந்திருக்கும் உரிய இடத்தில்:)).

    மியாவும் நன்றி மாயா.

    இப்ப ரொம்ப பிசியாகிட்டீங்க கர்ர்ர்ர்ர்:)).

    மாயா...மாயா... எனக்கு சினிமால ஒரு சான்ஸ் தரமுடியுமோ?:) நான் நல்லா நடிப்பேனே..:))).

    ReplyDelete
  32. வாங்க அஞ்சலின்.

    அங்கு போட நீண்டு விட்டது, இதில் போட்டால் அனைவருக்கும் பயன்படும் என நினைத்துப் போட்டேன்.

    ஆண்குழந்தைகளைவிட, பெண்குழந்தைகளுக்குத்தானே பொம்மை விளையாட்டுப் பிடிக்கும். நான் கூட, ஒரு பேபி டோல், பார்த்ததும் ஆசையில் வாங்கி வைத்திருக்கிறேன்:))).

    //என் வீட்டு குட்டி எலி ரெண்டாவது விரலை தொட்டதால் ,இன்னிக்கு நோ
    spelling mistakes .//

    ஹா..ஹா..ஹா... திருந்திட்டமில்ல:)))..

    //அடுப்பை on செய்யணுமா வேண்டாமா !!!!!
    Good Night//

    ஆரியபவான் இருக்க, அடுப்பை ஏன் ஓன் பண்ண வேண்டும்?:), அது ஓவ் லயே இருக்கட்டும்?:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மியாவும் நன்றி அஞ்சலின். கூழ் குடிச்சு ஹப்பியா இருங்கோ.

    ReplyDelete
  33. மேலே போட்ட ரெண்டு பாட்டும் திறக்கல...அதனால நோ கமெண்ட்ஸ் :-)

    ReplyDelete
  34. //நோஓஓஓஓஓஓ... இவரைத் தரமாட்டேன்ன்ன்ன்ன்ன்:)))//

    இவர் வேணாம் ஆனா விரல ஒரு ரிங் தெரியுதே அதை மட்டும் தருவீங்களா ஹி.ஹி. ..:-)))
    நான் அதுக்கு பதிலா குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி தரேன் :-))))

    ReplyDelete
  35. ஓ... ஆசியா வாங்கோ வாங்கோ.. இடையில் மிஸ் பண்ணிட்டேன்.

    பூஸ் பப்பி வாணாமோ? நீங்க ரொம்ப நல்லவர், எனக்காக பூஸை விட்டுக் கொடுத்திட்டீங்க:)).

    ஒடியல்கூழ் இது சூப்பர் குடிக்க குடிக்க ஆசையாக இருக்கும், இதேபோல் ஒடியல் மாவுக்குப் பதிலாக மரவள்ளிக்கிழங்கை அரைத்தும் கூழ் செய்வார்கள், அது மரவள்ளிக்கிழங்கு கூழ். அது எங்கட மாமி அடிக்கடி செய்வா.

    நான் மனதில் இருந்ததை எழுதியமையால் அளவுகள் எழுதவில்லை. சமையல் ராணிகளுக்கு அளவெல்லாம் எதுக்கு, செய்முறை மட்டும் தெரிந்தால் போதுமே இல்லையா?:)).

    நாளைக்கு ஒடியல்கூழ் செய்து வீட்டிலுள்ளோருக்குக் கொடுங்கோ:)).

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  36. ஜெய்லானி said... 35
    மேலே போட்ட ரெண்டு பாட்டும் திறக்கல...அதனால நோ கமெண்ட்ஸ் :-/

    ஜெய்ய்ய்ய் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடி நழுவப்புடாது, ஹிந்திப்பாட்டை தமிழாக்கம் செய்ய உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்:)).

    ReplyDelete
  37. வாங்கோ இமா...

    நான் சோடிச்சால் எல்லாமே அழகுதான்ன்ன்ன்ன்:))).. ஸ்ஸ்ஸ்ஸ் முறைக்கப்பிடா:)).
    சோடிச்சு அங்கேயே வச்சிட்டு வந்திட்டேன்:(((.

    திருமண மாப்பிள்ளை:)) வாழ்த்தெல்லாம் படிச்சிட்டு, பிர்ர்ர்ர்ராணியும் சாப்பிட்டுப் போட்டு... இப்போ ஹப்பி அனுவசறியை என்சோய் பண்ணிக்கொண்டிருப்பார்... இங்கின வராமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    இல்ல அடுப்பை ஓவ்வ்வ்வ் பண்ணிட்டுத்தான் சமைக்கோணும், நெருப்பு சுடுமென்றுதான் 1ம் வகுப்பில ரீச்சர் சொல்லித்தந்தவ:))).

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  38. வாங்க வான்ஸ்ஸ்ஸ்...

    ஒவ்வொரு வயசில அவர்களுக்கு ஒவ்வொரு பைத்தியம்:)... இனி எங்கட வயசு வரேக்கை புளொக் பைத்தியம் வருமாக்கும்:)).

    எங்கட சின்னவர் கேட்பார், எப்போ எனக்கு புளொக் ஓபின் பண்ணித்தருவீங்க என:))). அவ்வ்வ்வ்வ்வ்:).

    சூப்பர் ஐடியா:)). ஆனா, ல ...பாவம்:), அதனால பிரச்சனையே இல்லை:)), ள வும் ழ வும்தான் கெட்டதூஊஊஊஊஉ:)) அவையிரண்டாலும் எப்பவுமே பிரச்சனைதான். அதைக் கண்டுபிடிச்சவரைத்தான் இப்போ தேடிட்டே இருக்கிறேன்:))).

    மியாவும் நன்றி வான்ஸ்.

    ReplyDelete
  39. வாங்கோ அந்நியன்..

    //என்ன கூழுனு சொல்லலியே...//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

    //வெட்டிங் பார்ட்டி அமர்களமாக இருந்தது நன்றி பகிர்ந்தமைக்கு.//

    மிக்க நன்றி. பேர்த்டே பார்ட்டியும்தானே?:)). இப்போ ஒரு தடவை அதை மீண்டும் பாருங்கோ:)).

    //தெரியத்தானே செய்யும் பேச தெரியாதுலே?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), எப்பூடிக் கரெக்டாக் கண்டுபிடிக்கிறீங்க?:))... எங்களுக்கும் பேசத் தெரியுமே... அச்சா...அச்சா....:))

    ////உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ...இந்த அந்நியனின் தொல்லை தாங்க முடியேல்லை மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:)).////

    :)))))) ரசிக்கக்கூடிய தொல்லைதான்:)). மியாவும் நன்றி அந்நியன்.

    ReplyDelete
  40. வாங்கோ ரமேஷ்.....

    //என்ன வெறும் போர்டு காமிச்சி கடைன்னு சொல்றீங்க
    //
    ஹா..ஹா..ஹா... கடை முட்ட சனமாக இருந்ததால், படமெடுக்க முடியாமல் போர்ட்டை மட்டும் எடுத்தேன்:)).

    //ரமேஷ் :- ஓ.கே...ஓ.கே
    வீட்டுக்கு வாங்கிட்டு வந்த பொம்மை மட்டும் தான் அழகா இருக்கு .ஓ.கே.வா .//

    அதுதானே பார்த்தேன் என்கிட்டயேவா?:)))).. செய்தது ஆரூஊஊ?:))).

    //அது சரி ஆனா..... எப்ப சமைக்க ஆரம்பிச்சொம்னு
    சொல்லவேயில்லையே........ஹா ஹா ஹா//

    ஹா..ஹா..ஹா... அது, சமைக்க ஆரம்பிச்ச பின்னாடிதானே சொல்ல முடியும்:))))) என்கிட்டயேவா?:)))))))).

    ReplyDelete
  41. //கூழானாலும் குளித்து குடி

    இதுவும் பழமொழி இங்கே ....எப்பூடி ...//

    ஓம் எனக்கும் தெரியும்:)), அதெதுக்கு குளித்துக் குடிக்கச் சொல்கிறார்கள்... அவ்வ்வ்வ்வ்வ்:)).

    //ஏன் ,பொம்மை மேலே மருந்து வாடை அடிக்குமா !
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    நீங்க பாடுங்க ரமேஸ் பாடுங்க... ஒரு லோட் கொட்டினுக்குச் சொல்லிட்டேன், இனி ஆரும் திட்ட மாட்டாங்க... காதில வச்சால் கேட்காதில்ல:)))).

    மியாவும் நன்றி ரமேஸ்.

    ReplyDelete
  42. மாயாஆஆஆஆஆ... இண்டைக்கு நேரமே கிடைக்காமல் போச்சே... வருகிறேன் மியாவும் நன்றி. முதலை தன்னையும் கூட்டிப் போகட்டாம், காலைப்பிடிச்சிழுக்குது:)) என்ன செய்ய? கூட்டி வந்து வலைச்சரத்தில விடட்டோ?:))))).

    ReplyDelete
  43. வாங்க ஜலீலாக்கா...

    ஹிந்தி சீரியல் எல்லாம் பார்ப்பீங்களோ? நீங்க எங்கேயோ போயிட்டீங்க:)). எனக்கும் இப்போ ஹிந்தி படிக்கும் ஆசை அதிகமாகுது... பாதி படிச்சிட்டேன் இன்னும் கொஞ்சூண்டுதான் மீதி இருக்கு:)))). 2012க்குள் அதையும் முடிச்சிடுவேன்:)).

    //முதல் பாட்டு, மியுசிக் டைரெக்டர் என் கோ சிஸ்டரின் மச்சான் தான்.. இயற்றியது.//

    ஓ.. சூப்பர். படமும் சூப்பர்.

    எங்கட மூத்தவர் குழந்தையாக இருக்கும்போது, ஒரு தவழும் குழந்தை, சுவிட்சைப்போட்டால்... மம்மி..டாடி...மம்மி..டாடி எனச் சொல்லிக்கொண்டு தவழ்ந்து வரும். அதை ஓன் பண்ணினதுதான் தாமதம்... மகன் அழத்தொடங்கி, எம்மால் நிறுத்த முடியாமல் காரில் ஏத்திக்கொண்டு கொஞ்சத்தூரம் ஓடினோம்... அத்தோடு அப்பொம்மைக்கும் டாட்டா சொல்லியாச்சு:)).

    மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  44. ஆஹா..முக்கியமா ம.பொ.ர அண்ணணை வாழ்த்தாம போயிட்டேனே அவ்வ்வ் :-))

    இந்த நாள் மட்டும் இனிய நாள் இல்லாமல் வாழ்வில் வரக்கூடிய எல்லா நாளும் இனிய நாளாக அமைய என் மனப்பூர்வமான நல் வாழ்த்துக்கள் விஷ் யூ எ ஹேப்பி மேரீட் லைஃப் :-)


    ஒரே ஒரு சந்தேகம் அதிஸ் இது இவருக்கு 60ம் கல்யாணம் தானே ஹி..ஹி.. :-)

    ReplyDelete
  45. வாங்கோ பனித்துளி சங்கர்....

    உங்கட பெயரே ஒரு அழகைக் கொடுக்குது.

    முதன்முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு, மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  46. http://www.youtube.com/watch?v=TgPZ9e0Guxc&feature=fvsr
    இந்த பாட்டில சொன்ன மாதிரி இனை பிரியா வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. வாங்கோ அம்முலூஊஊ....

    //இங்கு என்னதான் கிடைக்காது அதிரா//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முருங்கை இலையும் குறிஞ்சாவும், மணித்தக்காளியும் கிடைக்குதேயில்லை. அம்மா சொன்னா! “கனடவில ஒரு கடையில `மணித்தக்காளி கிடைக்கும்` என போர்ட் போட்டிருந்துது, உன்னை நினைச்சு உள்ளே போய்ப் பார்த்தால், முடிஞ்சுதாம்:((((, இனிக் கிடைத்தால் வாங்கி அனுப்புறோம்” என.... அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    நீங்க சொன்னது வேறதான் அம்முலு:)) என்னதான் கிடைக்காது கரீட்டு:)).

    //ஹிந்திப்பாட்டு சுத்தமாக புரியவில்லை//

    ஒரு ரோசாமாஸ்ரர் இருக்கிறார்:)).. ஒழுங்கு செய்துவிடவோ ஓன்லைன்ல ஹிந்தி படிக்க?:)). பீஸை என் பெயருக்கு இப்பவே அனுப்பிடுங்க ஓக்கை:)).

    //ஆடிக்கூழ் ரெசிபியைப்பார்த்ததும் //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), இது ஆடிக்கூழுக்கு செய்வதில்லை. ஆடிப்பிறப்புக்கு பனங்கட்டிக் கூழ்தானே செய்து படத்துக்கு வைப்போம்?:))).

    ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே...
    கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே.....

    2ம் வகுப்பு தமிழ்ப்புத்தகப் பாட்டூஊஊஊஊஊஉ:))).

    மியாவும் நன்றி அம்முலூஊஊஊ... தி.வாழ்த்துக்கு, நான் நன்றி சொல்ல மாட்டேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  48. ஆஆஆ ஜெய் வாங்க... புளியமரத்தில ஒளிச்சிருந்த மாதிரி இருந்துதே:)))...

    மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் மீண்டும் ஒருக்கால் ஜெய்லானி புளொக்கை ஓபின் பண்ணுங்கோ... அடம் பிடிக்கிறார்... புளியமரத்தைவிட்டு வரமாட்டாராம்:))).

    //நான் அதுக்கு பதிலா குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி தரேன் :-))))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தங்கம் விலை ஏறின கதையை, ஸாதிகா அக்காவின்ர சிறுகதையில படிச்சிட்டு:)), குச்சி ரொட்டி தந்து பறிக்கப்பார்க்கிறார் என் மோதிரத்தை அவ்வ்வ்வ்வ்:))), பின்னூட்டம் பார்த்ததும், ஓடிப்போய் லொக்கரில வச்சுப் பூட்டிப் போட்டு, திறப்பை தலையணைக்குக் கீழ வச்சிட்டனே:))).

    ஆங்ங்ங்ங்ங்ங் வாய்மாறிச் சொல்லிட்டனே.. திறப்பு வச்ச இடத்தை:))... படிச்சதும் கிழிச்சிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:))).

    ReplyDelete
  49. //ஜெய்லானி said... 46
    ஆஹா..முக்கியமா ம.பொ.ர அண்ணணை வாழ்த்தாம போயிட்டேனே அவ்வ்வ் :-))//

    பார்த்ததும் அதையேதான் நானும் நினைத்தேன்.... கிட்னி மெதுவாத்தான் வேர்க்பண்ணுதூஊஊ:))).

    //ஒரே ஒரு சந்தேகம் அதிஸ் இது இவருக்கு 60ம் கல்யாணம் தானே ஹி..ஹி.. :-)//

    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா ஜெய்:)) பாம்புக் காது:)) கேட்டிட்டால் அவ்ளோதான்:))). எதுக்கும் புளியங்கொப்பை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டிருங்கோ:)). அவர் மட்டின் பிர்ர்ர்ர்ராஆஆஆணி சாப்பிடுவதில சீரியசாக இருப்பார்:)), இதைக் கவனிக்க மாட்டார்:)).

    ஹைஷ் அண்ணன்ன்ன் நான் ஒண்ணுமே சொல்லல்லே நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))).

    ReplyDelete
  50. http://www.youtube.com/watch?v=TgPZ9e0Guxc&feature=fvsr//

    ஆரம்பம் மறந்தாலும் சூப்பர் பாட்டோட வாழ்த்திட்டீங்க ஜெய்... எனக்கே பீலிங்ஸாப் போட்டுது பாட்டுப் பார்த்து.. நல்ல மியூசிக்.

    மியாவும் நன்றி ஜெய்

    ReplyDelete
  51. அன்பு தங்கை அதிராவுக்கு, உணர்வுகளுக்கு அளவீடு இல்லை அதனால் என் நன்றியை எழுத்துகளின் மூலம் வரையறுக்க விரும்பவில்லை என்றாலும் தமிழில் நன்றியை தவிறவும் வார்த்தைகள் இல்லையே!

    முதல் பாட்டு மிகவும் அருமை.

    மெஷினில் பஞ்சடைக்கும் போதே காதிலும் அடைத்து விட்டது என நினைக்கிறேன் அதேன் இரண்டாவது பாட்டு சத்தம் குறைவாக கேட்க்குதோ:)

    //பூஸ் வேணுமோ?:) பப்பி வேணுமோ?:)// ரெண்டும் வேணும்- இன்று மறுக்க முடியாதே:)

    //பாழாய்ப்போன ள,ழ வால மனிசனுக்கு நிம்மதியே போச்ச்ச்:))// கீக் கீக் கீக்க்க்க் முடியவே... இல்ல. ;)))// எனக்கும்தான்:))). இந்த ள, ழ ”வால” இல்ல இந்த பூஸ் வாலாலதான் மனுஷனுக்கு நிம்மதி போய் இருக்கும்:)))

    ஒடியல் கூழ் இன்றுதான் முதன் முதலில் கேள்விபடுகிறேன்.

    எறக்குறைய ஒரு வருட இடைவெளி இருந்தும் இன்னும் மறக்காமல் வாழ்த்து பதிவு போட்ட என் அன்பு தங்கைக்கு மனமார்ந்த நன்றிகள்!

    வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் மிகவும் நன்றி.

    //திருமண மாப்பிள்ளை:)) வாழ்த்தெல்லாம் படிச்சிட்டு, பிர்ர்ர்ர்ராணியும் சாப்பிட்டுப் போட்டு... இப்போ ஹப்பி அனுவசறியை என்சோய் பண்ணிக்கொண்டிருப்பார்... இங்கின வராமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).//

    பி.கு: பிரம்மபுரத்தில் இருந்து வெளியேறிய பின் வேலையின் பளு மற்றும் முக்கியத்துவம் காரணமாக நெட் பக்கம் வர அனுமதி இல்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றும் அறுசுவை உறவின் தொலைபேசி வாழ்த்தின் போது சொன்னதால் எட்டி பார்த்தேன். அப்பாடா இவ்ளோ பெரிய பார்ட்டியா? எனக்கே எனக்கா??? :))) தாங்கூஊ

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  52. அன்பு சகோதரி ஆசியா உமர் வாழ்த்துக்கு மிகவும் நன்றி அனைவரும் நலமோடும் வளமோடும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  53. மாய உலகத்து அன்பு தம்பி ராஜேஷ் தங்களின் அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி.
    வாழ்க வளமுடன்

    பி.கு:

    //மாயா...மாயா... எனக்கு சினிமால ஒரு சான்ஸ் தரமுடியுமோ?:) நான் நல்லா நடிப்பேனே..:))).//*2

    வடிவேலு கூட ஏதாவது நடிக்க சான்ஸ் இருந்தா பீளிஸ் கொடுங்களேன்:)))))

    ReplyDelete
  54. அன்பு சகோதரி ஏஞ்சலின் தங்களின் அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    பி.கு:

    //அடுப்பை on செய்யணுமா வேண்டாமா !!!!!
    Good Night//

    கண்டிப்பா குட் நைட்டுக்கு முன்னால அடுப்பை on செய்யவேண்டும். மறந்து போய் தூங்கிடாதீங்கோ :)))

    ReplyDelete
  55. அன்பு சகோதரி இமா தங்களின் அன்பு நிறைந்த வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

    பி.கு: @}->-- க்கும் நன்றி:)

    ReplyDelete
  56. அன்பு தம்பி அயூப் வெட்டிங் பார்டியில நல்லா அமர்களமா சாப்பிட்டு போட்டு மொய் எழுதாம போனா எப்பூடி:)))

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  57. அன்பு சகோதரி ஜலீலா பானு தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அனைவரின் நலனுக்காகவும் இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

    பி.கு: பெரியவர் அலஹாபாதில் எப்படி இருக்கிறார்?

    ReplyDelete
  58. அன்பு சகோதரி அம்முலு தங்களின் இனிய வாழ்த்துக்கு மிகவும் நன்றி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  59. அன்பு தம்பி ஜெய்லானி மனபூர்வமான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. பாட்டூ சூப்பர் மிகவும் நன்றி!

    பி.கு: பக்கத்து ஊர் பரங்க்கிபேட்டை தம்பி ‘0’ க்கு எதும் மதிப்பில்லையே

    //ஒரே ஒரு சந்தேகம் அதிஸ் இது இவருக்கு 60ம் கல்யாணம் தானே ஹி..ஹி.. :-)//

    அதனாலே அதீஸ் எப்பூடி 6 வயசில் இருந்து நல்லபெண்ணோ அது போல் இது எனக்கு 60ம் இல்ல 6ம் கல்யாணம்தான்:)))

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  60. ஆஆஆஆஆஆஆ நம்பமுடியவில்லை...
    நம்பமுடியவில்லை...
    நம்பமுடியவில்லை...
    நம்பமுடியவில்லை...
    நம்பமுடியவில்லை...
    நம்பமுடியவில்லை...
    நம்பமுடியவில்லை...ஐஐஐஐஐஐஐஐ.... ஹைஷ் அண்ணனா இதூஊஊஊஊஊஊஊ...

    நல்வரவு... நில்லுங்க ஒண்ணொண்ணாப் படிக்கிறேன்.... வந்தமைக்கும் அனைவரையும் கடைக்கண்பார்வை பார்த்தமைக்கும் மியாவும் நன்றி ஹைஷ் அண்ணன்.

    ReplyDelete
  61. ரீச்சர் ஓடிவாங்கோ..... ஹஷ் அண்ணன் எழுத்துப் பிழை விடுறார்:))). கடவுளே கன காலத்துக்குப் பிறகு வந்தவரைப்போய்.. இப்பூடிச் சொல்லப்பூடா... ஓக்கை நான் ஒண்ணுமே சொல்லல்லே நான் காக்கா போகிறேன்...

    அவருக்கு ஹிந்திதான் தெரியும், டமில் மறந்து போச்ச்ச்ச்ச்ச் போல:)))).

    //இந்த ள, ழ ”வால” இல்ல இந்த பூஸ் வாலாலதான் மனுஷனுக்கு நிம்மதி போய் இருக்கும்:)))
    //

    ஹா....ஹா....ஹா.... ஏன் பூஸ் வால் மூக்கிலபட்டு தும்மல் வருதோ?:)).

    ///எறக்குறைய ஒரு வருட இடைவெளி இருந்தும் இன்னும் மறக்காமல் வாழ்த்து பதிவு போட்ட என் அன்பு தங்கைக்கு மனமார்ந்த நன்றிகள்!///

    எப்பூடி மறப்போம்.... 2012 இலயும் மறறறறறக்காமல் கூட்டிக்கொண்டுதான் போவோம், விட்டிட்டெல்லாம் போக மாட்டோம்:))).

    //அப்பாடா இவ்ளோ பெரிய பார்ட்டியா? எனக்கே எனக்கா??? :))) தாங்கூஊ
    //
    உங்களுக்கே உங்களுக்குத்தான்... தங்கூஊஊஊஊஊ.

    ReplyDelete
  62. ஹைஷ்126 said
    //பி.கு:

    //மாயா...மாயா... எனக்கு சினிமால ஒரு சான்ஸ் தரமுடியுமோ?:) நான் நல்லா நடிப்பேனே..:))).//*2

    வடிவேலு கூட ஏதாவது நடிக்க சான்ஸ் இருந்தா பீளிஸ் கொடுங்களேன்:)))))////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வடிவேலோட வாணாம்... அது பார்த்தீபன் அங்கிள்தான் பொருத்தம்... தமனாவோட, ஸ்ரேயாவோட அப்பூடித்தாங்கோ மாயா:))).

    ReplyDelete
  63. ஹைஷ்126 said
    //பி.கு:

    //அடுப்பை on செய்யணுமா வேண்டாமா !!!!!
    Good Night//

    கண்டிப்பா குட் நைட்டுக்கு முன்னால அடுப்பை on செய்யவேண்டும். மறந்து போய் தூங்கிடாதீங்கோ :)))
    //

    ஹா...ஹா..ஹா.... விழுந்து விழுந்தூஊஊ சிரித்திட்டேன்.... குசும்பு இன்னும் குறையவேயில்லை:))).

    //அன்பு தம்பி அயூப் வெட்டிங் பார்டியில நல்லா அமர்களமா சாப்பிட்டு போட்டு மொய் எழுதாம போனா எப்பூடி:)))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் இங்கு நிறையப் பேர் மொய் எழுதவில்லை:))))).

    //அதனாலே அதீஸ் எப்பூடி 6 வயசில் இருந்து நல்லபெண்ணோ அது போல் இது எனக்கு 60ம் இல்ல 6ம் கல்யாணம்தான்:)))///

    என்னாது 6வது கல்யாணமோ? ஓடிவாங்கோ ஓடிவாங்கோ எல்லோரும் ஓடிவாங்கோ:))))).... இது என்ன நடக்குது இங்க?:)))))).

    கடவுளே நான் ஒண்ணுமே சொல்லல்லே.... நான் சிக்ஸ் வயசிலிருந்தே ரொம்பாஆஆஆஆஆஆ நல்ல பொண்ணு:)).

    மியாவும் மியாவும் நன்றி ஹைஷ் அண்ணன்... எல்லா நாளுமே இனிய நாளாகட்டும்.

    ReplyDelete
  64. வாவ்...ரொம்ப சூப்பர்ப்..

    இங்கேயும் அதே கடை இருக்கின்றது...இரண்டு பொம்மைகளுமே அருமை...

    ReplyDelete
  65. ஹ்ம்ம்ம்..கடைசி பொம்மை எனக்குத்தான்

    ReplyDelete
  66. லேட்டாகி போச்சு பூஸ்.ஸாதிகா அக்காவை வழி மேல் விழி வைத்து பார்த்து பார்த்து கண்கள் பூத்துப்போச்சா பூஸுக்கு?வேறொன்றும்,இல்லை.பொழுது போகாமல் சும்மா ரவுண்ட் வந்துட்டேன்.அதான் இணையம் பக்கம் வரமுடியலே,

    ReplyDelete
  67. அந்த பெரீஈஈஈஈஈஈய டெடி பியர் பொம்மையை இப்படி நகர்த்தி விட்டு தரிசனம் தந்து இருக்கலாமில்லை...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  68. //எல்லா வகையான பொம்மைகளும், தைத்தபடி மட்டும் இருக்கும். அங்கு போய், விருப்பமானதை தெரிவு செய்து, பின் மெஷினில் பஞ்சு இருக்கும், அங்கிருக்கும் ஒரு பட்டினை அமத்தி, குழாயில் பொம்மையைப் பிடிக்க நன்கு பஞ்சு அடையும், எம் விருப்பப்படி, இறுக்கமாகவோ, அல்லது மென்மையாகவோ பஞ்சை உள்ளடைத்துக் கொடுக்க, அந்த இடைவெளியை தைத்துத் தருவார்கள்.//

    ஆஹா..சுவாரஸ்யமாக உள்ளதே..?இங்கே எப்போ அதனை காப்பி அடித்து காசு பார்க்கப்போறாங்களோ.ஊரில் செட்டில் ஆனால் என்ன பண்ணலாம் என்று யோசிப்போர் சங்தத்தலைவருக்கு நல்லதொரு ஐடியா இது.

    ReplyDelete
  69. பூஸ் எனக்கு ஒடியல்மா வெல்லாம் வேணாம்.அந்த நீல டிராயர் போட்ட பொம்மை வேணும்.

    ReplyDelete
  70. வணக்கம், வந்தனம், நமஸ்தே, ஆயுபோவான், Good Morning,அக்காச்சி!

    வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
    ஸோ அதாலை பதிவை மிஸ்ட் பண்ணிட்ட்டேன்..

    இதோ வந்திட்டேனில்லே.

    ReplyDelete
  71. ட்ரெயிலரில கலியாண வாழ்த்துப் பாட்டு.

    ஒரு வேளை சூசகமா உங்களின் கல்யாண நாள் இன்றைக்குத் தான் என்று சொல்ல வாறீங்களோ..

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  72. அதையும் பிள்ளைகளே நிரப்பி, தாம் செலக்ட் பண்ணியதுக்கு பெயரும் சூட்டினால், அப்பெயரோடு பேர்த் சேர்டிபிகேட்டும் சேர்த்து, பில் போட்டுத் தருவார்கள்.//

    ஹே...ஹே....

    பொம்மை துலைஞ்சாலும் தேடி எடுக்கலாம் என்ன....

    ReplyDelete
  73. அதுக்குப் PANDY எனப் பெயர் வைத்திருக்கிறார்.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
    you mean பண்டி!

    ReplyDelete
  74. நாங்களெல்லாம் 6 வயசிலயே சமையல் குறிப்பு படிச்சனாங்கள் தெரியுமோ?:))). சரி சரி குறிப்புக்கு வருவோம்.//

    அவ்...

    நல்ல வேளை நீங்க சொல்லவில்லை,

    நாம எல்லாம் மூன்று வயதிலிருந்தே,
    மண் விளையாடும் போது சமையல் செய்திருக்கிறோம் என்று...
    அவ்...........

    ReplyDelete
  75. கூழ் ரெசிப்பி அருமை.
    நானும் இந்த ரெசிப்பியை எழுத வேண்டும் என்று ப்ளான் பண்ணியிருந்தேன்.

    பூசார் அருமையாக எழுதியிருக்கார்..

    முக்கியமான ஒரு விடயத்தை நீங்கள் சொல்லவில்லை.

    அதாவது கூழ் குடித்த உடனே தண்ணீர் குடிக்க கூடாது என்று அம்மம்மா அடிக்கடி சொல்லுவா..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  76. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
    you mean பண்டி!//
    .ஹா ஹா அது பாண்டி

    ReplyDelete
  77. இன்னிக்கு டிக் டக் டூ போட்டப்ப எலி முதல் விரலை தொட்டிச்சு
    ஆகவே .......

    ReplyDelete
  78. மிஸ்டேக்ஸ் ஒன்றுமில்லை .

    ReplyDelete
  79. வாங்க கீதா.

    யோசிச்சு யோசிச்சுத்தான் கால் வைக்கிறீங்க:).
    மிக்க நன்றி.

    ReplyDelete
  80. வாங்க ஸாதிகா அக்கா...

    //பொழுது போகாமல் சும்மா ரவுண்ட் வந்துட்டேன்.அதான் இணையம் பக்கம் வரமுடியலே,//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).... எங்கிட்டயேவா?:)).

    //அந்த பெரீஈஈஈஈஈஈய டெடி பியர் பொம்மையை இப்படி நகர்த்தி விட்டு தரிசனம் தந்து இருக்கலாமில்லை//

    போனமுறை நடு ரோட்டில நிண்டன்.. ஓடிவந்து காப்பாத்தாமல் விட்டுப்போட்டு, இப்ப தரிசனமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    //ஊரில் செட்டில் ஆனால் என்ன பண்ணலாம் என்று யோசிப்போர் சங்தத்தலைவருக்கு நல்லதொரு ஐடியா இது.//

    அப்பூடியே பூஸுக்கு மேக்கப் பண்ண ஆள் தேவைப்பட்டால், என் அட்ரசைக் கொடுங்கோஓஓ:)).

    //அந்த நீல டிராயர் போட்ட பொம்மை வேணும்.//
    அதூஊஊஊஊஉ ஸ்கேட்டூஊஊஊஊஊ ப் போட்டிருக்கு பூஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  81. வாங்கோ தம்பி நிரூபன்....

    //வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
    ஸோ அதாலை பதிவை மிஸ்ட் பண்ணிட்ட்டேன்..
    //
    எங்கிட்டயேவா?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    //ஒரு வேளை சூசகமா உங்களின் கல்யாண நாள் இன்றைக்குத் தான் என்று சொல்ல வாறீங்களோ..
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஆரையெண்டாலும், வாழ்த்துத்தானே... வாழ்த்தினால் என்னவாம்:))).

    எல்லாத்துக்கும் நியாயம் கேட்பினம், ஒரு வாழ்த்துச் சொல்ல மனம் வரேல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    //பொம்மை துலைஞ்சாலும் தேடி எடுக்கலாம் என்ன....//

    கிக்..கிக்...கிக்.. அதனால்தான் லொக்கரில வச்சுப் பூட்டியாச்சு:)), நான் பேர்த் சேர்ட்டிபிகேட்டைச் சொன்னேனாக்கும்:)).

    //you mean பண்டி!//

    சே..சே..சே.... இது “மீன் பண்டி” இல்லை:))... இது “Beயார் பண்டி:))” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  82. //நல்ல வேளை நீங்க சொல்லவில்லை,
    நாம எல்லாம் மூன்று வயதிலிருந்தே,
    மண் விளையாடும் போது சமையல் செய்திருக்கிறோம் என்று...//

    அதுதான்... என் ஊரில்... சொல்லிட்டனே கொழுக்கட்டை, வடை, மோதகம் எல்லாம் செய்தனான் எண்டு ஙேஙேஙேஙேஙேஙேஙேஙே..:))).

    //கூழ் ரெசிப்பி அருமை.
    நானும் இந்த ரெசிப்பியை எழுத வேண்டும் என்று ப்ளான் பண்ணியிருந்தேன்.//

    என்னாது சமையல் குறிபும் எழுதுற பிளான் இருக்கோ? ஆங்ங்ங்ங்ங்ங்ங்... நிரூபன் .... தம்பி நிரூபன்... இந்தாங்கோ .. யோசிக்காதையுங்கோ இந்தாங்கோ பிடியுங்கோ கறண்டியை...:)), நீங்கள் சமையல் குறிப்பெழுதுங்கோ:)).. அரசியலை எங்கட கையில தாங்கோ:)))... நாங்கள் ஒழுங்கா நடத்துறம்...:))......... மேஏஏஏஏஏஏஏஏ:)))).

    உங்களுக்கும் அம்மம்மாதான் எல்லாம் சொல்றவவோ? அவ்வ்வ்வ்வ்வ்:))).

    மியாவும் நன்றி நிரூபன்.

    ReplyDelete
  83. ஆஹா.... அங்சலின்ன்ன்ன் அஞ்சலின்..:)), உந்த எலியை ஒருக்கா இங்கின அனுப்பி வைக்க முடியுமோ?:)).

    ReplyDelete
  84. மாயாவைக் காணேல்லை....

    இப்போ அவருக்கு பப்புளிக்குட்டி கிடைச்சிட்டுதுபோல:))), அதுதான் ரொம்ப பிஸியாகிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).... மாயா.... ம்ம்ம்யாஆஆஆஆ:)))).

    ReplyDelete
  85. ஒரு வேளை சூசகமா உங்களின் கல்யாண நாள் இன்றைக்குத் தான் என்று சொல்ல வாறீங்களோ.//அவரே கல்யாணம் ஆகவில்லை என்று விரக்தியில் இருக்கிறார். இதிலை கல்யாண நாளாம்????? வெந்த புண்ணிலை வேலை பாச்சாதீங்கோ, அதீஸ்.

    ReplyDelete
  86. மியாவும் நன்றி மாயா.

    இப்ப ரொம்ப பிசியாகிட்டீங்க கர்ர்ர்ர்ர்:)).

    மாயா...மாயா... எனக்கு சினிமால ஒரு சான்ஸ் தரமுடியுமோ?:) நான் நல்லா நடிப்பேனே..:))).//

    மியாவுக்கு மேக்கப்ப் போட்டு உடுங்கோஓஓஓஓஓஓ.... ஒகெ ரெடி ஸ்டார்ட்ட்ட் கேஏஏஏஏஏஏஏஏமராஆஆஆஆஆஆஆ ஆஆக்ஸ்ஸன்ன்ன்......

    எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்... அய்யோ அது உங்க டைலாக் இல்ல.... முதல்ல ஓடி போயி தேம்ஸ்ல இருக்குற முதல மேல பத்துவாட்டி குதிங்க.... முதல மியாவ் மியாவ் ன்னு கத்தனும்... இத இன்னைக்கு முத சாட்

    ReplyDelete
  87. ஹைஷ்126 said... 55
    மாய உலகத்து அன்பு தம்பி ராஜேஷ் தங்களின் அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி.
    வாழ்க வளமுடன்

    பி.கு:

    //மாயா...மாயா... எனக்கு சினிமால ஒரு சான்ஸ் தரமுடியுமோ?:) நான் நல்லா நடிப்பேனே..:))).//*2

    வடிவேலு கூட ஏதாவது நடிக்க சான்ஸ் இருந்தா பீளிஸ் கொடுங்களேன்:)))))//

    அண்ணே... வாழ்த்துக்களண்ணே! நீங்க ஏன் வடிவேல் கூட நடிக்கிறீங்க.. அமேரிக்க மாப்பிள்ளை செகண்ட்ட் ஹீரோ கூட வேண்டாம்... ஸ்ட்ரைட்டாஅ ஹீரோ.. சிம் பிம்.. அப்படி நீங்க பிம் ஆனவுடன் மியாவை காணவில்லை என மணு கொடுப்பேன்... நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...

    ReplyDelete
  88. athira said... 86
    மாயாவைக் காணேல்லை....

    இப்போ அவருக்கு பப்புளிக்குட்டி கிடைச்சிட்டுதுபோல:))), அதுதான் ரொம்ப பிஸியாகிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).... மாயா.... ம்ம்ம்யாஆஆஆஆ:)))).//

    ஆதிஸ்ஸ்ஸ்ஸ் முதல வையித்துல ஆருக்கும் தெரியாம ரெஸ்ட் எடுத்துட்ட்ருந்தேன் சத்தம் போட்டு காட்டி கொடுத்துருவீங்க போல....... முதல முதல ஆயா பாடுன பாட்டு பாடு... மாயா கொஞ்சம் தூங்கர்றேன்ன்ன்ன்ன்ன் ஆதிஸ்ஸ் : வந்ததே லேட்ட் இதல தூக்கமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    மாயா : கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (கொரட்டை)

    ReplyDelete
  89. athira said... 33
    வாங்கோ மாயா....

    //முத பொம்ம//
    நோஒ.. அதைத்தரமாட்டேன் கர்ர்ர்ர்:))).

    ஹா..ஹா..ஹா.. முதல உங்களையும் புடிச்சு இழுக்குதோ?.. இப்ப கடிக்க மறந்து போச்ச்ச்... இழுக்கப் பழகியிருக்குது, நல்ல முன்னேற்றம்.. ஒருவேளை பல்லைப் புடுங்கிவிட்டாரோ மாயா:))).//

    முதல குருவி ரொட்டி டீலுக்கு ஒத்துக்குச்சு.... நானும் முதலையும் உயிர் நண்பர்கள்... முதலை : மாயா நீ ஏன் நண்பண்டா ..... பாத்தியா ஆதிஸ்ஸ்ஸ் தேம்ஸ் பக்கம் போயிராத சொல்லிவச்சிருக்கேன்... வந்தா விடாதேன்னு

    ReplyDelete
  90. நிரூபன் said... 76
    நாங்களெல்லாம் 6 வயசிலயே சமையல் குறிப்பு படிச்சனாங்கள் தெரியுமோ?:))). சரி சரி குறிப்புக்கு வருவோம்.//

    அவ்...

    நல்ல வேளை நீங்க சொல்லவில்லை,

    நாம எல்லாம் மூன்று வயதிலிருந்தே,
    மண் விளையாடும் போது சமையல் செய்திருக்கிறோம் என்று...
    அவ்...........//

    பாஸ்ஸூ நாங்களேல்லாம் 1 வயசுலயே விளையாட்ட வேடிக்க பாத்துருக்கோம்... ஆஆனனன்ன

    ReplyDelete
  91. திருமண வாழ்த்து... போய்ச் சேர்ந்திருக்கும் உரிய இடத்தில்:)).//

    ஆஹா வாழ்த்து என் சார்பா போயிடுச்சு... என் சார்பா அப்படியே மொய் வச்சிருங்கோ....

    ReplyDelete
  92. மியாவும் நன்றி மாயா.

    இப்ப ரொம்ப பிசியாகிட்டீங்க கர்ர்ர்ர்ர்:)).//

    முதல பாரு முதல அதிஸ்ஸ்ஸ் என்ன ரொம்ப ஓட்ராங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... உங்க கட்சி டூ

    ReplyDelete
  93. எங்கட சின்னவர் கேட்பார், எப்போ எனக்கு புளொக் ஓபின் பண்ணித்தருவீங்க என:))). அவ்வ்வ்வ்வ்வ்:).//

    என்னது இன்னொரு மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆ முருங்க மரம் ஏற்கனவே ஹவுஸ்புல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

    ReplyDelete
  94. ஜெய்லானி said... 36
    //நோஓஓஓஓஓஓ... இவரைத் தரமாட்டேன்ன்ன்ன்ன்ன்:)))//

    இவர் வேணாம் ஆனா விரல ஒரு ரிங் தெரியுதே அதை மட்டும் தருவீங்களா ஹி.ஹி. ..:-)))
    நான் அதுக்கு பதிலா குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி தரேன் :-))))//

    அதானே பாத்தேன்... எங்கடா முதலைக்கு வச்சிருந்த குச்சிமிட்டாயும், குருவி ரொட்டியும் காணோம்மேன்னு பாத்தேன்...

    ReplyDelete
  95. athira said... 44
    மாயாஆஆஆஆஆ... இண்டைக்கு நேரமே கிடைக்காமல் போச்சே... வருகிறேன் மியாவும் நன்றி. முதலை தன்னையும் கூட்டிப் போகட்டாம், காலைப்பிடிச்சிழுக்குது:)) என்ன செய்ய? கூட்டி வந்து வலைச்சரத்தில விடட்டோ?:))))).//

    வலைச்சரத்துல மாய இருக்குறத காட்டிக்கொடுத்த மியாவுக்கு.... ஒரு பழைய ஆட்டுக்கால் பாயா.. பார்சல்

    ReplyDelete
  96. //ஸ்கேட்டூஊஊஊஊஊ// ;))))))))

    //என்னாது சமையல் குறிப்பும் எழுதுற பிளான் இருக்கோ?// ;))) அவங்கள் எழுதினால்... "தூள்" என்று சொல்லுற மாதிரி இருக்கும். ;))))

    ReplyDelete
  97. 100 வது கூழ் எனக்கே எனக்கு

    ReplyDelete
  98. அதீஸ்... வந்துவிட்டினம் ஆட்கள். ;) ஆனால் மயில் வரேல்ல. ;)

    ReplyDelete
  99. வாங்க வான்ஸ்.. கர்ர்ர்ர்ர்ர்:)) அதைச் சொன்னதும் தம்பி நிரூபன் தான்...:))).

    //அவரே கல்யாணம் ஆகவில்லை என்று விரக்தியில் இருக்கிறார்///

    அப்பூடியோ சங்கதி?:)).. நாமெல்லாம் இருக்கப் பயமேன்:))), இண்டைக்கே ஆரம்பிப்போம்.. அதுதாங்க சம்பந்தம் பேசுவோம் நிரூபனுக்காக:)))...

    ஹையோ இதுவேறையா!!!!, எனக் கலைக்க முதல், படிச்சதும் கிழீஈஈஈஈஈச்சிடுங்க:))).

    ReplyDelete
  100. //மியாவுக்கு மேக்கப்ப் போட்டு உடுங்கோஓஓஓஓஓஓ.... ஒகெ ரெடி ஸ்டார்ட்ட்ட் கேஏஏஏஏஏஏஏஏமராஆஆஆஆஆஆஆ ஆஆக்ஸ்ஸன்ன்ன்...... //

    :))), டைரக்ரரே உப்பூடி ஓஓஓஓ ...ஆஆஆஆஆஆஅ.. எண்டு கத்தினால்:)... படம் எப்பூடி இருக்கும்.. ஒருகணம், ஒரு கண்ணை மட்டும்:)) மூடி திங் பண்ணினேன்:)))))))

    // முதல மியாவ் மியாவ் ன்னு கத்தனும்... இத இன்னைக்கு முத சாட்//

    ஹா..ஹா..ஹா... கிழிஞ்சிது போங்கோ:))))

    ReplyDelete
  101. //ஸ்ட்ரைட்டாஅ ஹீரோ.. சிம் பிம்.. //

    ஹா..ஹா..ஹா... மாயா... கார் கோன் சவுண்ட் மாதிரி இருக்கே அவ்வ்வ்வ்வ்:)).

    //ஆதிஸ்ஸ்ஸ்ஸ் முதல வையித்துல ஆருக்கும் தெரியாம ரெஸ்ட் எடுத்துட்ட்ருந்தேன் சத்தம் போட்டு காட்டி கொடுத்துருவீங்க போல....//

    ஓ... இதுவா சங்கதி?:)), முதலையின் வயிறு அதுக்குள் இப்பூடிப் பெருத்திருக்கே.... ஏதும் பெரிய நீர்யானையை:)) முழுங்கிட்டுதோ எனக், கண்ட நிண்டபடி எல்லாம் ஒரு அப்பாவி முதலையைக் கற்பனை பண்ணிட்டேன்...:))))

    /// நானும் முதலையும் உயிர் நண்பர்கள்..///

    ஹா..ஹா...ஹா.. முதலைக்கு உயிர் இருக்குதுதானே?:)))))).

    //என்னது இன்னொரு மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆ முருங்க மரம் ஏற்கனவே ஹவுஸ்புல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்//

    ஓம்.. ஓம்.... அத்தோடு முந்தநாள் அடிச்ச காத்தால.. ஒரு பக்கம் சரிஞ்சுபோய் நிற்குதே:))))

    ReplyDelete
  102. //அதானே பாத்தேன்... எங்கடா முதலைக்கு வச்சிருந்த குச்சிமிட்டாயும், குருவி ரொட்டியும் காணோம்மேன்னு பாத்தேன்...//

    ஹா..ஹா...கிக்...கீஈஈஈஈஈ உதுவோ சங்கதி?:)), நான் நினைச்சேன்.., ஜெய்..., நாகைக்கு ஓட்டோ பிடிச்சுப் போய் வாங்கி வந்தெல்லோ லெவலாக் கதைக்கிறார் என அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    //வலைச்சரத்துல மாய இருக்குறத காட்டிக்கொடுத்த மியாவுக்கு.... ஒரு பழைய ஆட்டுக்கால் பாயா.. பார்சல்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஆட்டுக்கால் வாணாம்... மட்டின் பிர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆணிதான்ன்ன்ன்ன்:))))).

    மியாவும் நன்றி மாயா.

    ஊ.கு:

    அப்போ படத்தில சான்ஸ்ஸ்ஸ், மறந்திடாதீங்க என்ன?:))).

    ReplyDelete
  103. இமா said... 98

    //என்னாது சமையல் குறிப்பும் எழுதுற பிளான் இருக்கோ?// ;))) அவங்கள் எழுதினால்... "தூள்" என்று சொல்லுற மாதிரி இருக்கும். ;)))///


    ஓம்..இமா... ஓமோம்... அவிங்க சமைச்சால்... சட்டி, பானை, அகப்பை, சிங்கூஊஊஊ(இது வேற சிங்கூஉ:)), கிச்சின் எல்லாமே தூஊஊஊஊஊள்தான்... அவ்வ்வ்வ்வ்:))).

    என் கேரளா நண்பி சொன்னா, தன் கணவர் நல்ல அழகா பிரியாணி, சப்பாத்தி எல்லாம் செய்வாராம், ஆனா சமைச்சு முடிஞ்சால் கிச்சினுக்குள் கால் வைக்க முடியாதாம், தனக்கு கெட்ட கோபமாக வருமாம் என:)).

    நான் சொன்னேன், மாத்தி யோசியுங்க, அந்தர அவசரத்துக்கு சமைக்கிறாரே அது போதும்தானே என, அவவும் சொன்னா, அதனாலதான் நான் ஒண்ணுமே சொல்றதில்லை என:))).. அவரும் ஊசி:)) போடுற ஆள்தான்:))(காச்சலுக்கு:)) ஹா..ஹா...ஹா...

    ReplyDelete
  104. angelin said... 99
    99
    20 September 2011 09:42
    angelin said... 100
    100 வது கூழ் எனக்கே எனக்////

    அம்மாஆஆஆஆஆஆஆஆ.... அம்ம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.... நான் 100 ஆவது சந்திர மண்டலத்தில ஆச்சி சுடுற வடையை அமுக்கிடோணும் எனக் காத்திருந்தேன்... ஒரு சமோசா சாப்பிட்டுப்போட்டு வாறதுக்குள்ள.... ஆஆஆஆஆங்சலின் எடுத்திட்டாஆஆஆஆஆ.... அம்ம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆ:)))).

    ஓக்கே விட்டுக்கொடுக்கோணுமாம் ஸாதிகா அக்கா சொல்லியிருக்கிறா:)))... அஞ்சு...அஞ்சூஊஊஊஊ அஞ்சலினூஊஊஊஊஊஉ உங்களுக்குத்தான் எடுத்துக்கோங்க... சூடுகாட்டிச் சாப்பிடுங்கோ என்ன?:))).

    ReplyDelete
  105. இமாஆஆஆஆஆ என்னாது வந்திட்டினமோஓஓஒ?:))) எங்ங்ங்ங்ஙேஏஏஏஏஏஏ:))).

    பிளேன் மட்டும்தானே ஒரே ஒரு தடவை மட்டும் டச்சூஊஊஊஊ (இது வேற டச்சு, ரச்சூஊஊ:))) பண்ணிச்சூஊஊஊஊஊ?:)))).

    மயில் வதன புத்தகத்தில, நடனமாடுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    ReplyDelete
  106. //மாய உலகம் said... 89

    அண்ணே... வாழ்த்துக்களண்ணே///

    உது இருக்கட்டும்:)),முதல்ல மொய் எழுதிட்டுப் பிறகு சாப்பிட உட்காருங்கோ:)))))

    ReplyDelete
  107. நோஓஓஓஓஓஓ... இவரைத் தரமாட்டேன்ன்ன்ன்ன்ன்:)))//

    முதல அந்த பப்பி பொம்ம வேணும்னு கேட்டியே.. தரமாட்டேன்னு அடம்புடிக்கிறாங்க... போய் புடி.. ஆஹா முதல அதிஸ்ஸ்ஸ்ஸ துரத்த ஆரம்ப்பிச்சுடுச்சு... நம்ம எஸ்ஸ்ஸாயிட வேண்டியதான்... ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

    ReplyDelete
  108. angelin said... 100
    100 வது கூழ் எனக்கே எனக்கு//

    ஆடி மாசம் திருவிழாவுக்கு வந்துட்டாங்களா.... எதுக்கும் நாமளும் கியூவுல நிப்போம் யோவ் தள்ளாதிங்கப்பா... நான் தோழிக்கு முன்னால நின்னேன்

    ReplyDelete
  109. athira said... 110
    //மாய உலகம் said... 89

    அண்ணே... வாழ்த்துக்களண்ணே///

    உது இருக்கட்டும்:)),முதல்ல மொய் எழுதிட்டுப் பிறகு சாப்பிட உட்காருங்கோ:)))))//

    அண்ணனுக்கு நூறு ரூபாஆஆ மொய் மாயா பேர்ல எழுதுங்கோ ங்கோ ..நூறு ரூபா போச்சே... யாருக்கும் தெரியாம சாப்பிட்டு எஸ்ஸாகலாம்னு பாத்தா... காட்டிக்கொடுத்த அதிஸ்ஸோட கிஃப்ட்ட களவாடிட வேண்டியுது தான்.... அப்பாடா அதிஸ்ஸ்ஸ்ஸோட கிஃப்ட்ட தூக்கிட்டு வந்தாச்சு என்ன இருக்குன்னு பாப்போம்... ஆஹா 10 ரூபாய்க்கு விக்கிற மியாவ் பொம்மைகளை வாங்கி வச்சு இவ்ளோ பெரிய பார்சல் வேற செஞ்சி வச்சி ஏமாத்திருக்காங்க.. தான் பெரிய கிஃப்ட் பார்சல் கொண்டுவந்த பில்டப் செஞ்சி கேமரா முன்னாடி இங்கிட்டும் அங்கிட்டும் நடந்துட்டுருந்தாங்க.... ம்ம்ம்ம் இந்த மியாவே இப்படி தான்.....

    ReplyDelete
  110. அவருக்கு ஹிட்டார் பிடிக்கும், அதனால ஹிட்டாரும் வாங்கிக் கொழுவிக்கிடக்கூஊஊ:)).//

    இளைய நிலா பொழிகிறதே....

    ReplyDelete
  111. அசைவக்கூழுக்கு... நிறைய மீன் பொரித்துப் போடவேணும், இரால், நண்டு, மீன் அவித்துச் சேர்க்கவேண்டும்.//

    அப்பறம் நண்டு வாக்குலிய மறந்துட்டீங்க, பூரான் இன்னும் தேவன்னா நம்ம ஜெய் அண்ணங்கிட்ட வாடகைக்கு எடுத்தக்கலாம்.. ஜெய் அண்ணே.. ஆர்டர் புடிச்சு கொடுத்த்ட்டேன்... எஸ்ஸாவாமா கமிசன வெட்டிரனும்..

    ReplyDelete
  112. ஆரையும் காணோம் தனியா நின்னு ஏண்டா பொழம்பிக்கிட்டுருக்க....kansas லருந்து தேம்ஸ்க்கு குதிச்சர்றா... முதல பாராசூட்ல வருது.. பறந்தாலும் விட மாட்டேன்...

    ReplyDelete
  113. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.//

    ராஜேஷேஏஏஏஏ அதான் மெருகேறிட்டே வரியாடா.... எண்ணத்த அழகு படுத்த எந்த பியூட்டி பார்லருக்கு அழைச்சுட்டு போணும்... எண்ணம் வா போலாம்

    ReplyDelete
  114. //ஆடி மாசம் திருவிழாவுக்கு வந்துட்டாங்களா.... எதுக்கும் நாமளும் கியூவுல நிப்போம் யோவ் தள்ளாதிங்கப்பா... நான் தோழிக்கு முன்னால நின்னேன்//

    ஹா.....ஹா..ஹா...

    பந்திக்கு முந்துவதில, மாயாவை முந்த ஆளில்லை:))

    ReplyDelete
  115. //மாய உலகம் said... 116
    ஆரையும் காணோம் தனியா நின்னு ஏண்டா பொழம்பிக்கிட்டுருக்க.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)), இதென்ன புதுசா மாயாவுக்கு...:)))) முதலையும் விட்டுப்போட்டுப் போயிட்டுதோ?:))).

    ReplyDelete
  116. //அப்பறம் நண்டு வாக்குலிய மறந்துட்டீங்க, பூரான் இன்னும் தேவன்னா நம்ம ஜெய் அண்ணங்கிட்ட வாடகைக்கு எடுத்தக்கலாம்.. ஜெய் அண்ணே.. ஆர்டர் புடிச்சு கொடுத்த்ட்டேன்... எஸ்ஸாவாமா கமிசன வெட்டிரனும்..//

    கிக்..கிக்..கிக்.... அவர் அதெல்லாம் புடிக்கத்தான் பாலைவனம் போயிருக்கிறாராம்... பிபிசில சொன்னாங்கோ:)).

    அது நட்டுவாக்காலியா? ,மாயா நண்டு வாக்குலியா? ஹா..ஹா...ஹா... எங்கின தேடிப்புடிக்கிறீங்க பெயரெல்லாம்?:)))

    ReplyDelete
  117. ஒடியல் கூழ்...என்றால் என்ன?

    சிறு குறிப்பு தருக (புரியும் வகையில் )

    செத்த மிளகாய் (காய்ந்த மிளகாய் ??)

    ReplyDelete
  118. கொஞ்சம் தாமதம்

    ஹைஸ் அண்ணாவுக்கு எனது அன்பான வாழ்த்துக்களும்

    வணக்கங்களும்

    ReplyDelete
  119. பிறகு பதிவு படித்து முடிப்பதற்கு இன்னும் நாட்கள் தேவைப்படும் என்பதால் மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
  120. எனக்கு அந்த பூசரோட கண்ணாடி வேணும்

    கொடுக்காட்டி அடம் பிடிப்பேன்

    ReplyDelete
  121. தேம்ஸ்ல ஆரையும் கணொம்....முதல கூட காணோம்... என்னடா இது தேம்ஸ்க்கு வந்த சோதனை...... சரி பாட்டு பாடிக்கிட்டே பொடி நடையா கிளம்புவோம்ம்ம்ம்ம்..... அதோ அந்த நதியோரம் ...லாலாலா....

    ReplyDelete
  122. வாங்க சிவா வாங்க டாக்டர்!!!

    பனம் பழம் பழுத்து சாப்பிட்டபின், அதில் 3 கொட்டைகள் கிடைக்கும் அதை மண்ணிலே புதைத்துவிட்டால்... அதிலிருந்து 3 கிழங்குகள் வரும், அக்கிழங்கின் தோலை உரித்து உள் கிழங்கை வெய்யிலிலே காயவைத்து, மெஷினில் அரைத்து மாவாக்கி எடுத்தால், அதுதான் “ஒடியல் மா”.

    அந்த மாவை வைத்து செய்யும் கூழ்தான் இந்த ஒடியல்கூழ். இதை ஒருமுறை குடித்தால் அனைவருக்கும் பிடிக்கும்... உறைப்பு உணவுகளை அதிகம் விரும்புவோருக்கு அதிகம் பிடிக்கும்.

    உடம்புக்கு மிகவும் நல்லதாம். உடலை மெலிய வைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.

    ReplyDelete
  123. தாமதமாக வந்தாலும் வாழ்த்துச் சொல்லிட்டீங்க. ஹைஷ் அண்ணன் தான் வரமுடியாத காரணத்தை மேலே சொல்லியிருக்கிறார், அதனால்... வாழ்த்துச் சொன்ன சிவாவுக்கு மிக்க நன்றி.

    அடத்தை எல்லாம் பிடிக்கப்பட சிவா:))), கண் நாடி தானே வேணும், இப்போதைக்கு உங்க்ட கண்ணையும் நாடியையும் தொட்டுக்கொண்டிருங்கோ.. மாயாவிடம் கொடுத்திட்டேன், அவர் பத்திரமாகக் கொண்டுவந்து தருவார் ஓக்கை...


    மியாவும் நன்றி சிவா.

    மாயா ஓடுறார் பிடியுங்கோ...

    ReplyDelete
  124. ஆஆஆ அதாரது தேம்ஸ்ல ஆரையும் காணேல்லை என்ற தைரியத்தில என் பேப்பிள் ரோசாவை பிடுங்கிட்டு ஓடுறது......

    நான் ஒரு மாறுதலுக்காக இந்தப்பக்கம் வந்து யோகாச் செய்கிறேன்....அதைக் கவனிக்காமல் கர்ர்ர்ர்:)))).


    ஸ்கொட்லண்ட்யாட் போலீஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிடிங்க பிடிங்க மாயாவைப் பிடிங்க.... பூவைப் பிடிங்கினதுமில்லாமல் என் யோகாவையும் குழப்பியமைக்காக... இன்னும் 6 மாதத்துக்கு “சங்கிலி” போட்டுவிடுங்கோ:)))).

    ReplyDelete
  125. ஐ..... இண்டைக்கு டக்கு டிக்கு போட்ட எலி:) என் முதேல் விரலைத் தொட்டிச்சாம்... சோஓஓஓஓஒ எ”லு”த்துப் பிலை:) இல்லியாம்:)))).


    இங்க மழை கொட்டோகொட்டெனக் கொட்டுது அதுதான் சோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ:))).

    ReplyDelete
  126. செத்த மிளகாய் (காய்ந்த மிளகாய் ??)//
    dead(red) chillie

    ReplyDelete
  127. ////அப்பறம் நண்டு வாக்குலிய மறந்துட்டீங்க, பூரான் இன்னும் தேவன்னா நம்ம ஜெய் அண்ணங்கிட்ட வாடகைக்கு எடுத்தக்கலாம்.. ஜெய் அண்ணே.. ஆர்டர் புடிச்சு கொடுத்த்ட்டேன்... எஸ்ஸாவாமா கமிசன வெட்டிரனும்..//

    கிக்..கிக்..கிக்.... அவர் அதெல்லாம் புடிக்கத்தான் பாலைவனம் போயிருக்கிறாராம்... பிபிசில சொன்னாங்கோ:)).

    அது நட்டுவாக்காலியா? ,மாயா நண்டு வாக்குலியா? ஹா..ஹா...ஹா... எங்கின தேடிப்புடிக்கிறீங்க பெயரெல்லாம்?:))) //

    நண்டு மாதிரி இருப்பதால் நண்டுவாக்குலிதான் ..ஆனா பேசும் போது நட்டுவாக்கலி.. எது எப்படியோ கடித்தால் சில நிமிடங்களில் முதலுதவி செய்தே ஆகனும் .லேட்டானால் .உடம்பின் ஒரு பக்கம் செயலிழந்துப்போகும் .

    இங்கே பாலைவணத்தில் ரொம்ப்ப்ப்ப் அதிகம் . இருட்டு நேரத்தில்தான் வெளியே வரும் :-))


    மொத்த ஆர்டருக்கு 30 % சிறப்பு தள்ளு படி ஹி..ஹி... :-)))

    ReplyDelete
  128. //
    உது இருக்கட்டும்:)),முதல்ல மொய் எழுதிட்டுப் பிறகு சாப்பிட உட்காருங்கோ:))))) //

    ம்ம்ம்ம்ம் அதானே கவர் வாங்க ஒரு ஆள் வெயிட்டிங்க இருக்கும் போது கர்ர்ர்ர்ர்ர்ர் :-))))

    ReplyDelete
  129. //
    //ஊரில் செட்டில் ஆனால் என்ன பண்ணலாம் என்று யோசிப்போர் சங்தத்தலைவருக்கு நல்லதொரு ஐடியா இது.//
    ஆனா இது கொஞ்சம் காஸ்லி மேட்டரா இருக்கும் போலிருக்கே :-)))))
    அப்பூடியே பூஸுக்கு மேக்கப் பண்ண ஆள் தேவைப்பட்டால், என் அட்ரசைக் கொடுங்கோஓஓ:)). //

    என்னாதூஊஊஊஊ பூஸுக்கு மேக்கப்பாஆஆஆஆ..கொடுமைடா சாமியோவ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  130. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது செத்த இல்லை, “செத்தல்” மிளகாய்... அவ்வ்வ்வ்வ்... :)))

    ReplyDelete
  131. ஓ... அது நண்டு வாக்காலியா?:)) எனக்குத் தெரியாது?... மாயா யூ ஆ கரீட்டூஊஊஊஊ:)).

    //மொத்த ஆர்டருக்கு 30 % சிறப்பு தள்ளு படி ஹி..ஹி... :-)))//

    உடனடியா ஒரு ஆயிரம் தேவையாயிருக்கு.... தேம்ஸ்ல விட, சோ .ஓ... உயிரோட வாணும்:))).

    ReplyDelete
  132. //ம்ம்ம்ம்ம் அதானே கவர் வாங்க ஒரு ஆள் வெயிட்டிங்க இருக்கும் போது கர்ர்ர்ர்ர்ர்ர் :-))))//

    ஹா.. ஹா..ஹா.. ஒரே மாதத்தில ரெண்டு பாட்டி... மொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் வாங்கியே என் காதெல்லாம் உய்ய்ய்ய்ய்ய்ய்ய் எண்டு சத்தம்....

    சே... எல்லோரும் சில்லறையாகவே மொய் எழுதுறாங்கப்பா இப்போ... ஒண்ணொண்ணா எண்ணியே நான் களைச்சுப்போயிட்டேன்... ஆருக்கும் உதவிக்கு வந்திருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).

    //என்னாதூஊஊஊஊ பூஸுக்கு மேக்கப்பாஆஆஆஆ..கொடுமைடா சாமியோவ்வ்வ்வ்வ்வ்...//

    என்னென்னத்துக்கோ எல்லாம் மேக்கப் போடும்போது:)), பூஸாருக்கு மட்டும் போடப்பிடாதோ? அவ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  133. மாயா ஓடுறார் பிடியுங்கோ...//

    athira said... 130
    ஆஆஆ அதாரது தேம்ஸ்ல ஆரையும் காணேல்லை என்ற தைரியத்தில என் பேப்பிள் ரோசாவை பிடுங்கிட்டு ஓடுறது......

    நான் ஒரு மாறுதலுக்காக இந்தப்பக்கம் வந்து யோகாச் செய்கிறேன்....அதைக் கவனிக்காமல் கர்ர்ர்ர்:)))).


    ஸ்கொட்லண்ட்யாட் போலீஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிடிங்க பிடிங்க மாயாவைப் பிடிங்க.... பூவைப் பிடிங்கினதுமில்லாமல் என் யோகாவையும் குழப்பியமைக்காக... இன்னும் 6 மாதத்துக்கு “சங்கிலி” போட்டுவிடுங்கோ:)))).//

    என்ன பிடிக்க முடியுமா... வாட்ட எ பிட்டி வாட்ட எ பிட்டி.... பக்கத்துவீட்டு பாப்பக்கிட்ட கடலை மிட்டாய பிடுங்கிட்டு ஓடும் போது அவிங்க வீட்டு நாய் பப்பி துரத்துனுச்சு... அந்த பப்பிக்கிட்டயே தப்பிச்சுட்டேன்... இவிங்கள்ளாம் பிஸ்கோத்து... ரோஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜாஆஆஆஆஆஆஆஆஅ ரோஜா ரோஜா ரோஜா.......ரோஜா ரோஜா... கண்டால் பின்னே... தானனானானா

    ReplyDelete
  134. இங்க மழை கொட்டோகொட்டெனக் கொட்டுது அதுதான் சோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ:))).//

    மழையா சொல்லவே இல்ல.... மழை வருது மழை வருது..... அந்தி மழை பொழிகிறது... வான் மேகம் பூ பூவாய் தூவும்...... தானனானானா...

    ReplyDelete
  135. athira said... 137
    ஓ... அது நண்டு வாக்காலியா?:)) எனக்குத் தெரியாது?... மாயா யூ ஆ கரீட்டூஊஊஊஊ:)).

    //மொத்த ஆர்டருக்கு 30 % சிறப்பு தள்ளு படி ஹி..ஹி... :-)))//

    உடனடியா ஒரு ஆயிரம் தேவையாயிருக்கு.... தேம்ஸ்ல விட, சோ .ஓ... உயிரோட வாணும்:))).//

    ஆஹா முதல... கிளம்பு நண்டு வாக்குலி தேம்ஸ்க்கு வருதாம்,,,,,, பாராசூட் ரெடி பண்ணு இந்தியாவுக்கு பறப்போம்....... பறந்தாலும் விட மாட்டேன்.... தனனாஅ தனா தானா

    ReplyDelete
  136. என்னென்னத்துக்கோ எல்லாம் மேக்கப் போடும்போது:)), பூஸாருக்கு மட்டும் போடப்பிடாதோ? அவ்வ்வ்வ்வ்:)))).//

    அந்த சிகப்பு ஜாயத்துக்கு புளியங்கொட்ட பவுடரும், கருப்பு ஜாயத்துக்கு கரிக்கொட்டையும் ரெடி பண்ண சொன்னனே மேக்கப்மேன் ரெடி பண்ணிட்டியா... மேடம் ஆல்ரெடி ரெடியாருக்காங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  137. வெற்றி வெற்றி .இன்னிக்கு ஒடியல் கூழ் செய்து சாப்பிட்டோம் அதிரா .
    அவர் ரொம்ப டேஸ்டா இருக்குன்னு சொன்னார் .
    நான் பலாகொட்டை கப்பகிழங்கு,முளைக்கீரை இதெல்லாம் சேர்த்து செய்தேன் ..மீண்டும் நன்றி

    ReplyDelete
  138. உடம்புக்கு மிகவும் நல்லதாம். உடலை மெலிய வைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.///

    அப்படியா சேதி நாளைக்கு வேய்ட் மெஷின்ல பார்ப்பேன் எடை குறைஞ்சில்லாட்டி நீங்க புளியமரத்த விட்டு இறங்கவே முடியாது

    ReplyDelete
  139. ஆடி மாசம் திருவிழாவுக்கு வந்துட்டாங்களா.... எதுக்கும் நாமளும் கியூவுல நிப்போம் யோவ் தள்ளாதிங்கப்பா... //
    கவலையே படாதீங்க ஒரு பார்சல் அனுப்பறேன் கடல் மார்க்கமா ஹா ஹா ஹா .

    ReplyDelete
  140. பக்கத்துவீட்டு பாப்பக்கிட்ட கடலை மிட்டாய பிடுங்கிட்டு ஓடும் போது///

    மாயாஆஆஆஆஅ.. ஷேம் ஷேம் பப்பி ஷேம்ம்ம்:)), போயும்போயும் ஒரு பேபியிடம் முட்டாயைப் பறிப்பதா? ஒரு வீரப்பன், ஒரு ஒசாமா அப்பூடிச் சொல்லாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    என்னாது அடிக்கடி “தனா” எனப் பாடிக்கேட்ட்குது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), தனா என் உறவுப் பெண்ணாக்கும்:))).

    //ஆஹா முதல... கிளம்பு நண்டு வாக்குலி தேம்ஸ்க்கு வருதாம்,,,,///

    ஹா..ஹா..ஹா.... புவஹா.... முடியல்ல மாயா...:)), இனி முதலை துரத்தினாலும், மாயா முதலையை விட்டுப் போகவே மாட்டார்ர்ர்ர்ர்போல அவ்வ்வ்வ்வ்:))), கூட்டிக்கொண்டுதான் போவார்:)))). முதல மாயாவுக்கு மருந்து போட்டிட்டுதூஊஊஊஊஊ:))))).

    மியாவும் நன்றி மாயாஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  141. ஆஆஆ... அஞ்சு... அஞ்சலின் கூழ் குடிச்சிட்டீங்களோ? நீங்க சைவமோ? அப்படியே ஸ்ரெப் பை ஸ்ரெப் படமெடுத்து, உங்கட புளொக்கில போட்டிருக்கலாமே...

    //அப்படியா சேதி நாளைக்கு வேய்ட் மெஷின்ல பார்ப்பேன் எடை குறைஞ்சில்லாட்டி நீங்க புளியமரத்த விட்டு இறங்கவே முடியாது///

    ஹா...ஹா..ஹா... இதைத்தான் சொல்றது, கெட்ட காலத்திலயும் ஒரு நல்ல காலமெண்டு:))), புளில இருப்பது ஜெய்:))). விடாதீங்க இறங்க விடாதீங்க... எறியக் கல்லு வேணுமெண்டால், தேம்ஸ்ல குதிச்சு பொறுக்கித்தாறேன்ன்ன்ன்:))).

    ஒரு சங்கதி தெரியுமோன்னோ... இக் கூழ் உடம்பிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்...:)) அதனால இரவில் அல்லது வெளியே போகும்போது குடிப்பதில்லை:))).

    மியாவும் நன்றி அஞ்சு..

    ReplyDelete
  142. //ஹா...ஹா..ஹா... இதைத்தான் சொல்றது, கெட்ட காலத்திலயும் ஒரு நல்ல காலமெண்டு:))), புளில இருப்பது ஜெய்:))). விடாதீங்க இறங்க விடாதீங்க... எறியக் கல்லு வேணுமெண்டால், தேம்ஸ்ல குதிச்சு பொறுக்கித்தாறேன்ன்ன்ன்:))).//


    எ.கொ.ச கல்லை ஒரு பக்கமா எறிஞ்சா அது வேற பக்கமா இல்ல வந்து விழுது ...அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  143. //எ.கொ.ச கல்லை ஒரு பக்கமா எறிஞ்சா அது வேற பக்கமா இல்ல வந்து விழுது ...அவ்வ்வ்வ்வ்//

    :)))))), என்ன திரும்பவும் தேம்ஸ்ல போய், மாயாக்கு மேல கரீஈஈஈஈஈஈஈட்டா விழுதோ?:)))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))). மாயாக்கு காலம் கூடாதுபோல... வியாழ(குரு)மாற்றமாக்கும்:)))

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.