நல்வரவு_()_


Sunday 7 October 2012

வைதேகி ஒரு லூஸு:)

காலையில் பத்திரிகையைக் கம்பிவழியே வீசிவிட்டுப் போகிறார் ஜெயில் காவலர்.எடுத்துத் திறந்தேன் முகப்பிலேயே தலைப்பு.. “பயங்கரக் கொலையாளி எனக் கைது செய்யப்பட்டு, 12 வருடங்களின் பின்பு, நிரபராதி எனத் தீர்பாகி, நாளை விடுதலையாகிறார் சாந்தன்”.

டித்ததுமே என்னால் நம்ப முடியவில்லை, நாளை எனக்கு விடுதலையா? 12 பாலைவன வருடங்களின் பின், நான் என் வைதேகியையும் மகனையும் சந்திக்கப் போகிறேனா?...

என் மனமோ பின்னோக்கிப் பறக்கிறது...நான் சின்னப் பையனாக வயல் வெளியில் சுற்றித் திரிந்தேன், அன்பு பாசம் என்றால் என்னவென எனக்குத் தெரியாது, என் வீட்டிலோ வெளியிலோ ஆருமே என்னில் அன்பு காட்டியதில்லை, ஏதோ உண்டேன், உறங்கினேன், படித்தேன்.... நண்பர்களோடுதான் என் வாழ்க்கை நகர்ந்தது.

நண்பர்களோடு சேர்ந்து நீதி, நியாயம், சட்டம் என ஊரைத் திருத்துவது, இதனால் இவன் உதவாக்கரை, உருப்படாதவன் எனும்  பட்டங்களையே மக்கள் எனக்குச் சூட்டினார்கள்.

ஆனால், என் மனமெனும் மூலஸ்தானத்திலும் ஒரு உள்ளம் இருக்கிறது, அது தூய்மையானது, அன்புக்காக ஏங்குகிறது என்பதை ஆருமே உணர்ந்து கொள்ளவில்லை.

அப்போதுதான் என் வாழ்வில் ஒரு தென்றலாக வைதேகி வந்தாள், அடுத்த தெருவில் வசிப்பவள், 
பெற்றோருக்கு ஒரே பிள்ளை.

எப்படி வைதேகி என்னுள் நீ வந்தாய்?ஒரு பூ மலர்வதை எப்படி பார்க்க முடியாதோ, அப்படித்தான் எமக்குள்ளும் அன்பு மலர்ந்தது. என் மூலஸ்தானம் எனும் அடி மனதில் இருந்து புறப்பட்ட அன்பை மட்டுமே அவள் பார்த்தாள், ஒரு துளி அன்புக்காக ஏங்கிய எனக்கு, குடம் குடமாக அன்பைக் கொட்டினாள். நான் பிறந்து வளர்ந்ததற்கு அப்படி ஒரு அன்பை ஆரிடமும் பெற்றதில்லை. திக்குமுக்காடிப் போனேன்.

நீ நிறையப் பேசுவாய் வைதேகி, உன் அன்பில் கட்டுண்ட நான், அந்த மழையிலிருந்து  நிமிர முடியாமல் மூழ்கிக் கிடந்தேன். பின்பு சில நாட்களில் எனக்கது பழகிவிட்டது, அன்பின் அருமை தெரியாதவனாகிவிட்டேன், நீ அதிகமாகக் காட்டிய அதீத அன்பும் அக்கறையும் எனக்கு மலிவாகிப் போனது.

எனக்கு அப்பொழுது வயது 22. இளமைத் துடிப்பு, இளரத்தம்.. வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தேன். நீ வாழ்க்கை முறைபற்றி அதிகம் சொல்லுவாய், கணவன் மனைவி உறவுபற்றி விலாவாரியாய் விபரிப்பாய், அப்போதெல்லாம் போதும் நிறுத்து என்பேன், உன்னோடு கோபிப்பேன் காரணமே இல்லாமல் திட்டுவேன்.

நீ அனைத்தையும் பொறுத்துக் கொண்டாய், எதிர்த்துப் பேச மாட்டாய், மெளனமாக அழுவாய், ஆனால் அன்பைச் சொரிவதை மட்டும், எப்போதும் நீ நிறுத்தியதில்லை. அது எப்படி வைதேகி, எப்பவுமே உன்னால் ஒரேமாதிரியே இருக்க முடிந்தது?.


எனக்கு நீ ஒரு பாட்டிபோல புத்திமதி சொல்வாய், நண்பர்களை விடு, எனக்கவர்களைப் பிடிக்கவில்லை, படித்து முன்னேறு, உன்னுள் இருக்கும் அதீத பவரைப் படிப்பில் காட்டு என்பாய், நான் தான் அன்று அதனைக் கேட்கத் தவறிவிட்டேன். நட்புத்தான் பெரிசு என்றேன்.  “நீ எனக்கு முக்கியமில்லை, நண்பர்கள்தான் முக்கியம்” என்றுகூடத் திட்டினேனே.. அதைக்கூடப் பொறுத்துக் கொண்டாயே வைதேகி? அது எப்படி உன்னால் முடிந்தது? அப்படி எதைத்தான் என்னிடம் கண்டாய்?

ஒரு சிறிய பிரச்சனையைக் காரணம் காட்டியே, எதிர்த்துச் சண்டை போட்டுப் பிரிந்து செல்லும் காதலிகள் மத்தியில், நீ இப்போ எனக்கு ஒரு சூரியனாகத் தெரிகிறாய். அதை அன்று உணரத் தவறி விட்டேனே.

நான் எது கேட்டாலும் மறுக்காமல் புன்னகையோடு செய்தாய். மொத்தத்தில் நீ என்னை நம்பி, மனதால ஏற்றுக் கொண்டிருந்தாய். அப்போதுதான் நான் உன்னை அடக்கி ஆள/ழ:) த் தொடங்கினேன்.

இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்றேன், நீ கதைப்பதைக் குறைத்து, நான் கதைப்பதைக் கூட்டினேன், என் கருத்துக்களையே நீ கேட்கும் சூழலை உருவாக்கினேன். எனக்குக் கிடைக்கும் நேரத்தில் நீயும் என்னோடு வந்து பேசவேண்டும் என்றேன்.

அதெப்படி வைதேகி அத்தனைக்கும் முகம் சுழிக்காமல் வளைந்து கொடுக்க உன்னால் முடிந்தது. பெற்றோர் ஊரார் உன்னைத்தான் திட்டினார்கள், சாந்தனைக் கைக்குள் போட்டுக்கொண்டுவிட்டாய்  என. அதை எல்லாம் எனக்காகப் பொறுத்துக் கொண்டாயே.

என் துன்பங்களிலெல்லாம் பங்கெடுத்தாய், இதமாக தடவிக் கொடுத்தாய். நல்ல காதலியாக, நண்பியாக, நல்ல ஒரு தாயாக மொத்தத்தில் ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டுமோ அதுக்கும் மேலாக நீ எனக்கு அமைந்திருந்தாய், உனக்காக வாழாமல் எனக்காகவே வாழப் பழகிக் கொண்டாய்.

ஊசிக்குறிப்பு: 
வானத்தில்... கடும் காத்து, மழை காரணமாக, தவிர்க்க முடியாமல்:). .. அடுத்த பாகம் வரை தொடர்ந்து, அத்தோடு நிறைவு பெறும் என்பதை மிகவும் ஏழ்மையாக...:)) ஹையோ இப்பவும் டங்:) ஸ்லிப்பாகுதே:.. தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்:).
==========================================
நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றாதே,
உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்..!!!
==========================================

108 comments :

  1. என்ன கொடுமை சற:))வணா? பொறுங்கோ கொஞ்ச நேரத்தால வாறன்!

    ஆ..... சொல்ல மறந்துட்டேன்! வணக்கம் பூஸாரி:)) அம்மா! ஸாரி பூஸம்மா:))

    கும்புடுறேனுங்கோ :))

    ReplyDelete
  2. இசையும் கதையும் எண்டுறது இதுதானோ?? :)))

    ReplyDelete




  3. அதீஸ் !!!!!! அற்புதமான எழுத்துக்கள் ...
    கிண்டல் கலாட்டா செய்யமுடியாதபடி கையை கட்டி போட்டுட்டீங்க

    ReplyDelete
  4. //நீ நிறையப் பேசுவாய் வைதேகி, உன் அன்பில் கட்டுண்ட நான், அந்த மழையிலிருந்து நிமிர முடியாமல் மூழ்கிக் கிடந்தேன். //

    giri come soon !!!!

    ReplyDelete



  5. நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றாதே,
    உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்..!!!//

    தெய்வமே !!!!!!!!!! தத்துவம் சூப்பர்

    ReplyDelete
  6. என்னால் பொறுக்க முடியாது!!! உடனே அடுத்த பாகம் பப்ளிஷ் செய்யுங்க

    ReplyDelete
  7. அன்பின் அருமை தெரியாதவனாகிவிட்டேன், நீ அதிகமாகக் காட்டிய அதீத அன்பும் அக்கறையும் எனக்கு மலிவாகிப் போனது.//

    இததான் சொல்வாங்க அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

    ReplyDelete
  8. முருகா.. மருதமலையானே என்ன இது என் இசையும் கதைக்கும் வந்திருக்கும் ஜோதனை:)).... இப்ப நான் வெளில வரலாமோ கூடாதோ?:)...

    நாராயணா என் கையில புடிச்சு தைரியத்தைத் தாங்கோ:)... நான் வெள்ளை முத்துமாலை கன்ஃபோமாப் போடுவேன்:)...

    அஞ்சூ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)) இசையும் கதையும் படிச்சனா ஒரே பீலிங்சாக் கிடக்கு... பதில்போடக் கூட முடியாமல் கண்ணீர் முட்டுது கண்ணிலதான்:)).. இருங்க முதலாவது ஆயாவைத் தூக்க ஆர் வந்திருக்கினம் எனப் பார்ப்பம்:)).. கண் மங்குதே:)..

    [im]https://ckm.osu.edu/sitetool/sites/indoorpetpublic/images/cats/Hidden1(1).jpg[/im]

    ReplyDelete
  9. பெரிய கிரவுன் போட்டுக்கிட்டு ஒரு அங்கிள் இருக்காரே அவர் யாரு
    அப்புறம் இன்னொரு படத்தில் ஒரு அங்கிள் இருக்காரே பாரலல்ஸ் மாதிரி பேன்ட் போட்டு அவர் யாரு ..???எங்களுக்கு எல்லாம் இவங்க யாருன்னே தெரியாது நாங்கெல்லாம் அப்ப பிறக்கவேயில்லை ..அதீஸ் :))

    ReplyDelete
  10. ஆ..... சொல்ல மறந்துட்டேன்! வணக்கம் பூஸாரி:)) அம்மா! ஸாரி பூஸம்மா:))//

    [co="green"]வாங்கோ மணியம் கஃபே ஓனர் வாங்கோ:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லவும் முடியேல்லை என்னால:)..சிரிக்க மறந்து ஒரு மணி நேரமாகுது.. ஐ மீன் இசையும் பூஸும் வெளியானத்தில இருந்து:)

    அஞ்சு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:) பிங் கலரிலதான் வாணும்:).. [/co]

    மாத்தியோசி - மணி said... 2
    இசையும் கதையும் எண்டுறது இதுதானோ?? :)))

    [co="green"]இல்ல இல்ல இது வேற அது வேஏஏஏஏஏஏற:)) ரெண்டையும் ஒண்டெனப் போட்டுக் கொழப்பிடாதீங்க:)) டவுட்டு தீர்ந்துதோ? இல்ல இன்னும் கொயப்பிடனோ.. உஸ்ஸ்ஸ்ஸாப்ப்பாஆஆஆஅ முடியல்ல:))..

    அஞ்சூஊஊஊஊஊ பகுதி 2 எழுதுறதோ வாணாமோ?:) ஏற்கனவே அகர் அகர்.. சிரிக்குது கிச்சினில இருந்து.. இண்டைக்குத்தான் கலர் வாங்கி வந்திருக்கிறன்...

    சரி இப்ப அதெல்லாம் எதுக்கு.. உங்கட பொன்னான நேரத்தை என் இசையும் கதைக்காகவும் ஒதுக்கியமைக்கும்.. உடன் வருகைக்கும் மியாவும் நன்றி... [/co]

    ReplyDelete
  11. angelin said...
    ஹையா !!! பத்து..

    [co="green"]வாங்க அஞ்சு என்னாச்சு “பத்து”போட்டீங்கள்:ஓ?:)) ஓ அண்டைக்கு விழுந்தூஊஊஊஊஊ விழுந்து சிரிச்சதுக்கு இண்டைக்குப் பத்துப் போட்டனீங்களாக்கும்:)).. கவனம் தண்ணி பட்டிடக்கூடாது..:)))

    அதாரது சீரியசாப் பேசும்போது கர்ர்ர்ர்ர்ர் சொல்றது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) [/co]

    ReplyDelete
  12. என்னால் பொறுக்க முடியாது!!! உடனே அடுத்த பாகம் பப்ளிஷ் செய்யுங்க
    உடனே பகுதி இரண்டு வேணும் ..அதீச்ஸ் ரொம்ப நல்ல எழுதறீங்க

    எப்பவுமே கிண்டல் கேலியா செய்திட்டு ஒண்ணுமே கலாட்டா செய்யலேன்னா எப்பூடி அதான் கொஞ்சம் அங்கிள்ஸ் பற்றி கிண்டல் ஓகே

    ReplyDelete
  13. அதீஸ் நான் முன்பு பேப்பரில்படிசேன் ஒரு பெரியவர் பல வருஷங்கள் இலங்கை ஜெயிலில் இருந்திருக்கார் ..வெளி வரும்போது வயது எழுபத்தஞ்சு ..:((( ..வாழ்க்கையே தொலைந்து போச்சு இல்லையா ..
    எத்தனை பேர் இப்படி பொய் வழக்கில் நிரபராதிகள் மாட்டுபட்டிருப்பாங்க ..பாவம்

    ReplyDelete
  14. அகர் அகர்.. சிரிக்குது கிச்சினில இருந்து.. இண்டைக்குத்தான் கலர் வாங்கி வந்திருக்கிறன்...//

    கோகோனட் வாட்டரில் செய்யும்போது கலர் வேணாம் /அன்ட் நீங்க ரோஸ் சிரப் சேர்த்தாலும் அந்த கலர் வரும் ..

    ReplyDelete
  15. goodnight (:)
    c u later alligator :))always smile crocodile :)))))))))))))

    ReplyDelete
  16. angelin said...

    அதீஸ் !!!!!! அற்புதமான எழுத்துக்கள் ...
    கிண்டல் கலாட்டா செய்யமுடியாதபடி கையை கட்டி போட்டுட்டீங்க/

    [co="green"]அது அஞ்சு இசையும் பூஸும் என தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு லேபல் போட்டு வச்சிருக்கிறேன், அதில ஒன்றுமட்டும்தான் எழுதியிருக்கிறேன், இன்னும் எழுதோணும் என ஆசை:))..

    போன கிழமை ஒருநாள்... சோவென மழை....
    வீட்டில நான் தனியே... இருக்கிறேன்ன்:))..
    குளிர் ஒருபுறம்... கொம்பியூட்டர் ஓன் பண்ணவும் மனம் வரேல்லை... சரி என குல்ட்டுக்குள் படுத்தேன்ன்.. சே.. நித்திரை வரேல்லை... ஜன்னல் கேர்ட்டின் மூடி இருட்டாக்கி இருந்தன்... திடீரென என் உள்ளே தூங்கும் “அனிமல்”:) முழிச்சுது:))

    சும்மா படுத்திருக்கிறயே.. இந்த நேரத்தில ஒரு இசையும் கதையும் எழுதினால் என்ன எனக் கேட்டிச்சா... எழும்பி கொம்பியூட்டரை ஓன் பண்ணி எழுத மனம் வரேல்லை...

    அதனால எட்டி எடுத்தேன் ஒரு கொப்பியும் பென்னும்... எங்கட கண்ணதாசனுக்கு கவிதை வருவதுபோல(என்னா ஒரு ஒப்பீடு எனச் சொல்வது கேட்குது.. அஜீஸ் பண்ணிடுங்க.. அதிராதானே?:)).. மளமளவென தலையணையில வச்சே.. இருட்டிலேயே ஒரு இசையும் கதையும் எழுதினேன்..

    ஆனா அதை கணணியில் ஏத்தத்தான் நீண்ட காலமாச்சு:)... .. எப்பூடி இசையும் கதையிலுமே ஒரு இசையோடு கதை ஹையோ ஹையோ:)))[/co]

    ReplyDelete
  17. angelin said... 4
    //நீ நிறையப் பேசுவாய் வைதேகி, உன் அன்பில் கட்டுண்ட நான், அந்த மழையிலிருந்து நிமிர முடியாமல் மூழ்கிக் கிடந்தேன். //

    giri come soon !!!!

    [co="green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதுக்கு இப்போ நித்திரை கொள்ற கீரியைக் கூப்பிடுறா..
    என்னாஆஆஆஆ இது?
    சின்னப் புள்ளத் தனமாஆஆஅ இல்ல இருக்குதூஊஊஊஊஊஊஊ:))

    ஏதும் ஸ்பெல்லிங்கு மிசுரேக்கு விட்டிருப்பமோ?:) செ..சே.. ஈக்க்காது அப்படி எதுவும் ஈக்காது ஈக்கவும் கூடாது:)) நாமதான் இப்ப ஃபிரெஞ் படிக்கிறமில்ல:)).. பிறகெப்பூடி டமில்ல எழுத்துப் பிழை வரும்?:)) [/co]

    ReplyDelete
  18. angelin said... 5
    நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றாதே,
    உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்..!!!//

    தெய்வமே !!!!!!!!!! தத்துவம் சூப்பர்
    [co="dark green"] ஓ தெய்வத்தையோ கூப்பிட்டீங்க? அவசரத்தில தெய்வானையைக் கூப்பிடுறீங்களோ என நினைச்சுடேன்ன்.. நான் வள்ளிக்கு வைர நெக்லஸ் போடுவதைச் சொல்லிக்கொடுக்கவாக்கும் என நேக்கு லெக்கும் ஆடல்ல... டங்கும்:) ஆடல்ல:). [/co]

    ReplyDelete
  19. angelin said... 6
    என்னால் பொறுக்க முடியாது!!! உடனே அடுத்த பாகம் பப்ளிஷ் செய்யுங்க//

    [co="dark green"]என்னாலயும் தான் முடியல்ல:))

    மொத்தமும் ரெடி, ஆனா முழுசாப் போட்டால் பதிவு பெரிசாகிடுது.. எனக்கும் பிரிச்சுப் போடப் பிடிக்கவில்ல... ஆனா முடியல்ல:).. [/co]

    ReplyDelete
  20. கதை நல்லா இருக்கு! அருமையான எழுத்தோட்டம்!! ஆனால் சோகமா இருக்கு! உங்களிடம் எப்போது நகைச்சுவையை மட்டுமே பார்த்துப் பழகிய எம்மால் சோகத்தைத் தாங்கவே முடியவில்லை/

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்கள் பாவிக்கும் அந்த பிங் கலர் டிஷ்யூ இப்ப எங்களுக்கும் எல்லோ தேவைப்படுது!

    ஹா ஹா அதுசரி ஏன் சாந்தன் அண்ணை ஜெயிலுக்குள்ள போனவர்? ஏதாவது மிருகத்தைக் கொன்றாரா? :))

    ReplyDelete
  21. அப்போதுதான் என் வாழ்வில் ஒரு தென்றலாக வைதேகி வந்தாள், ///

    நோஓஓஓஓஓ இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி? வைதேகி பற்றி நல்ல அழகா / விலாவாரியா / சூப்பரா / வரிணிச்சு எல்லோ சொல்லவேணும்?

    அவ மூக்கு எப்படி இருக்கும்? கண்கள் எப்படி இருக்கும்? காது எப்படி இருக்கும்? இதெல்லாம் சொன்னால் தானே படிக்கிற எங்களுக்கு அவ மனசில பதிவா?

    ReplyDelete
  22. ஆ.ஆ..அதிராஆ!!! இசையும் கதையுமோ?
    பள்ளிவயசில் நானும் இ.ஒ. கூ. வர்த்தக சேவையில் ஓயாமல் இசையும் கதையும். பாட்டும் பதமும் இப்பிடி நிகழ்ச்சிகளுக்கு எழுதிப்போட்டதுதான் ஞாபகம் வருகுது. அதுவும் ஒரு கனாக்காலம்.:)))

    நீங்களும் சொல்லியிருக்கிற கதை ஆரம்பமே சஸ்பென்ஸா இருக்கு.
    இவர் சாந்தன் ஏன் ஜெயிலுக்கு வந்தார்? வைதேகிக்கு என்ன ஆச்சு? 12 வருஷம் களி சாப்பிடுற அளவுக்கு அப்பிடி என்னசெய்தவர்?
    கெதியாய் அடுத்த பகுதியையும் தாங்கோ. பார்த்து தெரிஞ்சுகொள்ள:)))

    ReplyDelete

  23. எப்படி வைதேகி என்னுள் நீ வந்தாய்?ஒரு பூ மலர்வதை எப்படி பார்க்க முடியாதோ, அப்படித்தான் எமக்குள்ளும் அன்பு மலர்ந்தது. //////

    நோஓஓஓஓஓஓஓஓ பூ மலர்வதைப் பார்க்கலாம்! யூ டியூப்ல போட்டிருக்கினம்! இந்த லிங்கிலை பாருங்கோ!

    http://www.youtube.com/watch?v=MI3WBAEyL-4

    பார்த்தீங்களே? மணியம் கஃபேல மாவாட்டினாலும் எங்களுக்கும் கிட்னி இஸ் வேர்க்கிங் :)))

    ReplyDelete
  24. பாடல்கள் அருமையா இருக்கு. அதிலும் உள்ளத்தில் நல்ல உள்ளம் என் மனதைக்கவர்ந்த பாடல். சீர்காழியின் கணீரென்ற குரல் எப்பொழுதும் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
    கதையில் வரும் இப்பாடலைக் கவனிக்கும் போது கதாநாயகன் சாந்தன் நண்பர்களினால் ஏதோ அவலப்பட்டு சிறைக்கு போயிருக்காரோ:(
    தொடரட்டும் கதை.
    வாழ்த்துக்கள் அதிரா!

    ReplyDelete
  25. நீ நிறையப் பேசுவாய் வைதேகி, உன் அன்பில் கட்டுண்ட நான், அந்த மழையிலிருந்து நிமிர முடியாமல் மூழ்கிக் கிடந்தேன். ////

    ஏன் சாந்தன் அண்ணைக்கு நாரிப் பிடிப்போ?

    ReplyDelete
  26. இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்றேன், நீ கதைப்பதைக் குறைத்து, நான் கதைப்பதைக் கூட்டினேன், என் கருத்துக்களையே நீ கேட்கும் சூழலை உருவாக்கினேன். எனக்குக் கிடைக்கும் நேரத்தில் நீயும் என்னோடு வந்து பேசவேண்டும் என்றேன். //////

    உந்த ஆம்பளைகளே உப்படித்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் !!!

    # ஐயோ இதை நான் சொல்லேல! சில பொம்பிளை ஆக்கள் சொல்லக் கேட்டிருக்கிறன்/ :)))))

    ReplyDelete
  27. [co="green"]ஓகே ஆங்கிலக் கால்வாய் ஓனர் அவர்களே!

    ஸ்வானுகு வழி விட்ட பாரி வள்ளல் பரம்பரையே,

    இலங்கைப் பொருட்களை கனடாவில் இருந்து காவி வரும், பிரபல காவியாவே,

    பத்தாயிரம் முறை தேம்ஸுக்குச் சென்றும் ஒருவாட்டியும் குதிக்காத வீராங்கனையே,

    ஆறு வயசில் இருந்து நல்ல பெண்ணாகவும், அதற்கு முன்னர் அதை விட நல்ல பெண்ணாகவும் இருக்கும் பூஸாரே,

    எனக்கு நித்திரை வருது! அதோட நேர காலத்துக்கு படுக்கச் சொல்லி அம்மம்மா சொன்னவ! அதால குட் நைட்! பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய் !!

    இனிய சாந்தன் அண்ணை கனவுகள்! - ஐயோ உங்களுக்கு இல்ல! - வைதேகிக்கு :)))))[/co]

    ReplyDelete
  28. Nice story. Waiting for the next part.

    ReplyDelete
  29. நல்ல கதை,தொடருங்கள்.சாந்தன் விடுதலையாகி வந்த பொழுது வைதேகி காத்திருந்தாளா? என்னா பில்டப்பு! அம்மாடி...
    வைதேகி வந்து வசந்தத்தை தந்தது இருக்கட்டும்...
    ஒன்றும் அறியாதோ பெண்ணோ!
    உள்ளத்தில் நல்ல உள்ளம் பகிர்வு அருமை..

    ReplyDelete
  30. Participate in My First Event - Feast of Sacrifice Event
    http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

    ReplyDelete
  31. அதிரா நா இன்னும் உன்ன 6 வயசு அறியாபொண்ணாதான் நினச்சிருந்தேன் நீ சூப்பரா கதையெல்லாம் கூட சொல்லுரே நெக்ஸ்ட் எப்போ. வெயிட்டிங்கு

    ReplyDelete
  32. கதை அருமை.அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்கள் பூஸ்.

    ReplyDelete
  33. காலை வணக்கம்,அதிரா!!!அருமையாக ஆரம்பித்து அருமையாக................!அதிராவா எழுதியது?/எழுதுவது?ஒரு கணம் ஆடிப் போய் விட்டேன்,நான்!வாழ்த்துக்கள்!இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து...............

    ReplyDelete
  34. மேலே உள்ள படமும், வசனமும் மிக அருமை.அந்த வாசகம் true.

    நல்லதொரு தலைப்பு. "வைதேகி லூஸு".கதையும் நல்ல சுவாரஸ்யமாக போகுது.பாகம் 2க்கிபோட்டீங்க.அடுத்தபோஸ்ட் எப்ப போடுவீங்க.என் காதில் மட்டும் ரகசியமாய்....

    ReplyDelete
  35. 1வது பாட்டு நான் கேட்டதாய் ஞாபகமில்லை.
    2வது பாட்டு சூஊஊஊஊஊஊப்பர் பாட்டு.எப்ப கேட்டாலும் அலு(சலி)க்காது.
    3வது பாட்டு எனக்கு பிடித்தமான MGR பாட்டில் இதுவும் ஒன்று.
    //""என் துன்பங்களிலெல்லாம் பங்கெடுத்தாய், இதமாக தடவிக் கொடுத்தாய்..."//எழுதிய இந்த கடைசிபந்திக்கு மிகப்பொருத்தமான பாட்டு.

    ReplyDelete
  36. அந்த மழையிலிருந்து நிமிர முடியாமல் மூழ்கிக் கிடந்தேன். ////

    ஏன் சாந்தன் அண்ணைக்கு நாரிப் பிடிப்போ?//

    ஹாஆஆஆஆஆ :))))) விழுந்தது கல் மழை !!!

    ReplyDelete
  37. aaaaaaaaaaaaaaaaaaaaaaaaa .....


    என்னாலா முடியலா ...எத்தனை தரம் போட்டாலும் கமெண்ட் வாரதில்லை .///என்னிடம் தான் ப்ரோம்ப்லம் ....அவ்வ்வ்வ் ...

    ReplyDelete
  38. giri come soon !!!!

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதுக்கு இப்போ நித்திரை கொள்ற கீரியைக் கூப்பிடுறா..
    என்னாஆஆஆஆ இது?//

    அஆங் அது ஒரு ஃப்ளோவில் வந்திருச்சி ...எப்பவுமே எனக்கு ரைட் (இது வேற ரைட் )எப்பூடி :))ஹான்ட் கிரிதானே அதான்

    ReplyDelete
  39. vanathy said...
    //Nice story. Waiting for the next part.//




    ஆஆ ..அது வான்சா???? நலமா வானதி ...யாரும் இல்லாம எனாக்கு போரடிக்குது சீக்கிரம் வாங்க வந்து பூஸாரை உருட்டணும்

    ReplyDelete
  40. ஆஆஆஆஆஅ அம்மமாரி கோக்கி கட்சி எல்லாம் கிளியர் பண்ணி பொட்டினான் ...


    குருவே கதை சூப்பர் ஆஆஆஆஅ இருக்கு ..\நான் ஒரு ஜூப்பர் ஐடியா வைச்சி இறுக்கினான் ...கதை விம்பர்சனம் பண்ணிட்டு வந்து சொல்லுறன் ...

    ReplyDelete
  41. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அஞ்சு அக்கா இஞ்ச தான் மறைஞ்சி மறைஞ்சி நிக்குரியலா ...எப்புரி இக்குரிங்க அக்கா ...குட்டிஸ் எப்படி இருக்கா ....

    ReplyDelete
  42. ...
    கிண்டல் கலாட்டா செய்யமுடியாதபடி கையை கட்டி போட்டுட்டீங்க///

    .என்ன போட்டாலும் கோல் போடுற அஞ்சு அக்கா ட்ட இறுந்து மீ எதிர்பார்க்கலையே ....

    ReplyDelete
  43. குருவே இது காதல் கதையோ ...நல்லா இருக்கு ...நீங்க எழுதின மாறியே இல்லை ;...உங்க எழுத்து நடை உடை எதுமே இதிலிளியே ,,,ஆனாலும் அழகா இருக்கு ....

    முதல் பாகத்தின் முடிவா விமர்சனம் என்ன சொல்லுதின்னா பையன் ஒரு சோமாரி.... பொண்ணு ஒரு தேவதை .அத தான் அதிரா அக்கா சொல்ல வர்றாங்கன்னு நினைக்கேன் . ..


    ReplyDelete
  44. நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றாதே,
    உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்..!!!//

    தெய்வமே !!!!!!!!!! தத்துவம் சூப்பர் ////


    அஞ்சு அக்கா சேம் சேம் ஸ்வீட் ....

    ReplyDelete
  45. co="green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதுக்கு இப்போ நித்திரை கொள்ற கீரியைக் கூப்பிடுறா..
    என்னாஆஆஆஆ இது?
    சின்னப் புள்ளத் தனமாஆஆஅ இல்ல இருக்குதூஊஊஊஊஊஊஊ:))

    ஏதும் ஸ்பெல்லிங்கு மிசுரேக்கு விட்டிருப்பமோ?:) செ..சே.. ஈக்க்காது அப்படி எதுவும் ஈக்காது ஈக்கவும் கூடாது:)) நாமதான் இப்ப ஃபிரெஞ் படிக்கிறமில்ல:)).. பிறகெப்பூடி டமில்ல எழுத்துப் பிழை வரும்?:)) [/co]
    முடியல அக்கா ....இதுலயும் ஒரு ரெல்லிங் மிஸ்டேக் யும் இயவே இய ... ...
    'ரீச்சர் உங்களை பார்க்கல போல ..

    ReplyDelete
  46. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அஞ்சு அக்கா இஞ்ச தான் மறைஞ்சி மறைஞ்சி நிக்குரியலா ...எப்புரி இக்குரிங்க அக்கா ...குட்டிஸ் எப்படி இருக்கா ...//

    ஹா ஹா :))
    நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் ..நீங்க கலை .
    ஆனா கடைசிலா கோல் போட்டேன் உங்க குரு கவனிக்கலை
    அதான் அந்த அங்கிள்ஸ் :)) யாருன்னு கேட்டேன்

    ReplyDelete
  47. அக்கா என்நிலதோணின சூப்பர் ஐடியா இதன் ...இந்த கதைய நாம ஏன் படமா எடுக்க கூடாது ..;;;


    அதிலிருக்க வைதேகி கேரக்டர் க்கு அப்புறியே மேட்ச் ஆற ஒரு அக்காள் நம்மளிடமே இருக்கிறாங்க .....

    ReplyDelete
  48. ஆஆஆஆஆஆஆஆஅ அம்பது ஊஊஊ அம்பது ஊஊ

    ReplyDelete
  49. சரி அக்கா ஒபீசில் இருந்து கும்மி அடிக்கிறேன் ...கிளம்புறேன் ...மீண்டும் ரைம் கிடைக்கும்போது வாரினன்ன் ...

    ReplyDelete
  50. அதிலிருக்க வைதேகி கேரக்டர் க்கு அப்புறியே மேட்ச் ஆற ஒரு அக்காள் நம்மளிடமே இருக்கிறாங்க .//

    ஞே :))ங்கே :))

    who ???

    ReplyDelete
  51. angelin said... 9
    பெரிய கிரவுன் போட்டுக்கிட்டு ஒரு அங்கிள் இருக்காரே அவர் யாரு
    அப்புறம் இன்னொரு படத்தில் ஒரு அங்கிள் இருக்காரே பாரலல்ஸ் மாதிரி பேன்ட் போட்டு அவர் யாரு ..???எங்களுக்கு எல்லாம் இவங்க யாருன்னே தெரியாது நாங்கெல்லாம் அப்ப பிறக்கவேயில்லை ..அதீஸ் :))////

    [co="dark green"] நீங்க பொறந்திருக்க மாட்டீங்கதான்:) ஆனா அப்பாட்டுக்கெல்லாம்.. வசனம் எழுதினதே நாந்தேன்ன்ன்ன்:)... சூப்பரா இருக்கில்ல... ஆனா வேற பெயரில:) [/co]

    ReplyDelete
  52. மாத்தியோசி - மணி said... 21
    கதை நல்லா இருக்கு! அருமையான எழுத்தோட்டம்!! ஆனால் சோகமா இருக்கு! உங்களிடம் எப்போது நகைச்சுவையை மட்டுமே பார்த்துப் பழகிய எம்மால் சோகத்தைத் தாங்கவே முடியவில்லை/

    [co="dark green"] ஓ... சூனியனிடமிருந்து வெப்பத்தையே பெற்றுப் பழகிக் கொண்டோம்.. சந்திரனிடமிருந்து... குளிர்மையையும்.. அழகையும் மட்டுமே ரசிச்சுப் பழகிக்கொண்டோம்.. அதுபோல எதிர்பார்க்கிறீங்க:)).. என்ன செய்தாலும் மனிஷர் எல்லோ.. எல்லாவிதமும் இருகத்தான் செய்யும். [/co]

    ஹா ஹா அதுசரி ஏன் சாந்தன் அண்ணை ஜெயிலுக்குள்ள போனவர்? ஏதாவது மிருகத்தைக் கொன்றாரா? :))

    [co="dark green"]என்னாது சாந்தன் அண்ணையோ?:) முடியல்ல ஜாமீஈஈஈஈ.. அஞ்சூஊஊஊஊ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)).. எப்பூடியாவது தாஅங்கள் சின்னனாகிடோணும் எனத்தான் எல்லோருக்கும் ஆசை... நான் வயசைச் சொன்னேன்:).

    அவர் மிருகத்தைக் கொன்றிட்டார்ர்:)... ஆனா அது நடந்தது ஜெயிலுக்குப் போன பின்புதான்ன்...:))
    அதனாலதான் இவ்ளோ பீலிங்ஸூ அவருக்கு:).[/co]

    ReplyDelete
  53. மாத்தியோசி - மணி said... 22
    அவ மூக்கு எப்படி இருக்கும்? கண்கள் எப்படி இருக்கும்? காது எப்படி இருக்கும்? இதெல்லாம் சொன்னால் தானே படிக்கிற எங்களுக்கு அவ மனசில பதிவா?

    [co=" green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பாருங்கோவன் கேட்கிற கேள்வியை:) அவ எதுக்கு உங்கட மனசில எல்லாம் பதியோணும்:)) அவ சாந்தனின் மனதில மட்டும்தேன் பதியோணும்..[/co]

    ReplyDelete
  54. மாத்தியோசி - மணி said... 24

    நோஓஓஓஓஓஓஓஓ பூ மலர்வதைப் பார்க்கலாம்! யூ டியூப்ல போட்டிருக்கினம்! இந்த லிங்கிலை பாருங்கோ!

    [co=" green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பழம் தானாகக் கனியோணும், தடியால் அடிச்சுக் கனிய வைக்கக் கூடாது.. அப்பூடி தானகக் கனியும் பழத்தை.. பூக்கும் பூவை.. இயற்கையாப் பார்த்தால் தெரியாது:))... ஊஊஊ ரியூப்ல.. காட்டுறது வேற.. நான் ஜொல்லுறது வேற:))..

    ஹையோ அஞ்சூஊஊஊஊஊ:)).. ஜெல்ப் மீஈஈஈஈஈ.. குரொஸ் குவெஷ்ஷனெல்லாம் கேக்கினம்:)) மீ சுவீட் 16 எல்லோ ரொம்ப ஷையா வருது:)). [/co]

    பார்த்தீங்களே? மணியம் கஃபேல மாவாட்டினாலும் எங்களுக்கும் கிட்னி இஸ் வேர்க்கிங் :)))

    [co=" green"]சொன்னாத்தான் தெரியுதூ:)).. ஹையோ மஞ்சவனப்பதி கந்தா.. என்னைக் காப்பாத்துங்கோ:).. [/co]

    ReplyDelete
  55. மாத்தியோசி - மணி said... 27

    உந்த ஆம்பளைகளே உப்படித்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் !!!

    # ஐயோ இதை நான் சொல்லேல! சில பொம்பிளை ஆக்கள் சொல்லக் கேட்டிருக்கிறன்/ :)))))

    [co=" green"]இப்ப எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈ:)) இது எங்கே எப்போது ஆரால் ஆருக்குக் கூறப்பட்டதென:).. மணியம் கஃபே ஓனர் சூப்பர் மாட்டீஈஈஈஈ:)).. [/co]

    ReplyDelete


  56. இளமதி said... 23

    நீங்களும் சொல்லியிருக்கிற கதை ஆரம்பமே சஸ்பென்ஸா இருக்கு.
    இவர் சாந்தன் ஏன் ஜெயிலுக்கு வந்தார்? வைதேகிக்கு என்ன ஆச்சு? 12 வருஷம் களி சாப்பிடுற அளவுக்கு அப்பிடி என்னசெய்தவர்?
    கெதியாய் அடுத்த பகுதியையும் தாங்கோ. பார்த்து தெரிஞ்சுகொள்ள:))//

    [co="dark green"]

    ஆஆ வாங்கோ யங்மூன்..... இலங்கை வானொலி இசையும் கதையையும் ஆராலும் மறக்கேலாது..
    பகுதி 2 இலதான் விபரம் இருக்கு.. விரைவில வெளிவரும்.. மறக்காமல் வந்திடுங்கோ.[/co]

    ReplyDelete
  57. [co="dark green"]பாடல்கள் என்னும் இனியவைதான்.. ஆனா முதலாவதும் 3வதுமான பாடல் சமீபத்தில்தான் முன்ன முன்னம் கேட்டேன்ன்..

    மியாவும் நன்றி யங்மூன்.[/co]

    ReplyDelete
  58. [co="dark green"]வாங்கோ வான்ஸ் வாங்கோ.. என்ன இப்பவும் காணாமலே போயிடுறீங்க என்னாச்சு? மகியையும் கணேல்லை.. அமெரிக்காவில உஷார் குறைஞ்சு போச்சோ.. ஹையோ ஒரு ஃபுளோல வந்திட்டுது:) மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  59. [co="dark green"]வாங்கோ ஆசியா.. பில்டப்பூ பலமா இருந்தால்தானே:) என்னையும் ஒரு “கதாசிரியர்” என அங்கீகரிப்பீங்க:))..

    ஆங்கில புளொக் பார்த்தேன்ன்ன்... still I am thinking:).

    மியாவும் நன்றி ஆசியா.[/co]

    ReplyDelete
  60. Lakshmi said... 32
    அதிரா நா இன்னும் உன்ன 6 வயசு அறியாபொண்ணாதான் நினச்சிருந்தேன் நீ சூப்பரா கதையெல்லாம் கூட சொல்லுரே நெக்ஸ்ட் எப்போ. வெயிட்டிங்கு

    [co="dark green"]வாங்கோ லக்ஸ்மி அக்கா.. இல்ல லக்ஸ்மி அக்கா ஆறுக்கு முன்னால ஒண்டு போடுங்கோ:)).. அப்பூடியெண்டால் சூப்பராக் கதை வருமெல்லோ..

    மியாவும் நன்றி..[/co]

    ReplyDelete
  61. [co="dark green"]வாங்கோ ஸாதிகா அக்கா.. போயிட்டீங்களாக்கும் எண்டெல்லோ நினைச்சேன்ன்ன்... சத்தத்தைக் கணாமல் இருந்திச்சா.. அதேன்ன்ன்:))...

    அடுத்த பகுதி... பிரித்தானிய்ச் சந்திக்கு வந்திட்டுது.. ஆன இன்னமும் சிக்னல் விளேல்லை:) விழுந்ததும்.... வெளிவரும்.. மியாவும் நன்றி ஸாதிகா அக்கா[/co]

    ReplyDelete
  62. Yoga.S. said... 34
    காலை வணக்கம்,அதிரா!!!அருமையாக ஆரம்பித்து அருமையாக................!அதிராவா எழுதியது?/எழுதுவது?ஒரு கணம் ஆடிப் போய் விட்டேன்,நான்!வாழ்த்துக்கள்!இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து............

    [co="dark green"]வாங்கோ யோகா அண்ணன் குட்மோனிங்...

    பாருங்கோ உங்களால நம்ப முடியாமல் இருக்கெல்லோ.. அது தானா வருது யோகா அண்ணன்.. என்னிடம் ஆரும் ஒரு தலைப்புக் கொடுத்து இதில் கதை, கவிதை எழுதுங்கோ எண்டால் வராதெனக்கு... ஆனா இருந்தாற்போல டக்கெனக் கிட்னியில் உதிக்கும்.. உடனேயே எழுதிடுவேன்ன்ன்..

    மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  63. ammulu said... 35
    மேலே உள்ள படமும், வசனமும் மிக அருமை.அந்த வாசகம் true.

    நல்லதொரு தலைப்பு. "வைதேகி லூஸு".

    [co="dark purple"]வாங்கோஅம்முலு.. என்னைப் போலவேதான் வைதேகியும் ஒரு லூஸூஉ.. ஹா..ஹா...ஹா...
    என்னது காதில சொல்லோணுமோ? நோஓஓ சந்தன சோப் போட்டுக் கழுவிட்டு வந்தால் மட்டும்தேன்ன்ன் சொல்லுவன்:).

    முதலாவது பாட்டு.. சமீபத்தில் பூஸ் ரேடியோவில் கேட்டேன்ன்ன்.. அதை வச்சுத்தான் உடனேயே இதை எழுதலாமே எனும் எண்ணம் மனதில உதிச்சுது...

    மியாவும் நன்றி அம்முலு.[/co]

    ReplyDelete
  64. angelin said... 37
    அந்த மழையிலிருந்து நிமிர முடியாமல் மூழ்கிக் கிடந்தேன். ////

    ஏன் சாந்தன் அண்ணைக்கு நாரிப் பிடிப்போ?//

    ஹாஆஆஆஆஆ :))))) விழுந்தது கல் மழை !!!///

    [co="dark purple"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பாருங்கோவன் சப்போர்ட்டை:))

    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே....:))).. ஆஆஅவ்வ்வ்வ் சிட்டு:) வேஷன்:) சோங் பிபிசில போகுதே:).[/co]

    ReplyDelete
  65. [co="dark purple"]அவ்வ்வ்வ்வ் என் சிஷ்யையே வாங்க கலை வாங்க. என்ன முடியல்ல... என்ன புரொப்ளம்ம்.. ஓடிவாங்கோ உடனே போய் எங்கட கிரேட் குருவிடம் முறையிடலாம்:).

    என்னாது இம்முறையும் இதுக்கு சூப்பர் ஐடியாவோ? நினைவிருக்கோ என் போனமுறை இசையும் கதைக்கும், மாயா வந்து சொன்னவர், அதை அப்படியே படமாக்கப்போறன் என... ஆரார் நடிப்பது எண்டுகூடப் பேசிக்கொண்டிருந்தமே:((.[/co]

    ReplyDelete
  66. மாயா வந்து சொன்னவர், அதை அப்படியே படமாக்கப்போறன் என... ஆரார் நடிப்பது எண்டுகூடப் பேசிக்கொண்டிருந்தமே:((.//


    காலம் எவ்ளோ விரைவா ஓடுது ..
    நான் சமீபத்தில ரேஞ் சூப்பர் ஸ்டோர் போனேன் .சென்ற வருடம் ஹாலோவின் போட்டோ போட்டு உங்களை பயங்காட்டி வச்சது நினைவு வந்தது :(((

    ReplyDelete
  67. இல்ல லக்ஸ்மி அக்கா ஆறுக்கு முன்னால ஒண்டு போடுங்கோ:)).. அப்பூடியெண்டால் சூப்பராக் கதை வருமெல்லோ..//

    ஏன் மாற்றி சொல்றீங்க ஆறுக்கு பிறகு தான் ஒன்று வரும்
    61:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  68. Anju, me very busy. But will try to come whenever get time. I am taking few classes. Lots of homework, assignments, presentation, etc. also, searching for a job.
    Poosar, FYI- AMERICA is always super power. But now watching everyone quietly. Will attack anytime ( yar ange stone edukka kuniyirathu ). Seeya meeya.

    ReplyDelete
  69. கலை said... 45
    குருவே இது காதல் கதையோ ...நல்லா இருக்கு ...நீங்க எழுதின மாறியே இல்லை ;...உங்க எழுத்து நடை உடை எதுமே இதிலிளியே ,,,ஆனாலும் அழகா இருக்கு ...//

    [co="dark purple"]
    என்னாது நான் எழுதினமாதிரி இல்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுதான் பெருஇய அவமானம் அவமானத்திலயும்:))...

    சே.சே.. நாமதான் மண் உண்ணிப் பாம்பாச்சே:)) எவ்ளோ அடிச்சாலும் தாங்குவமாக்கும்:))... இதைக் கிரேட் குரு பார்த்தால் நிட்சயம் அழுவார்:).((.[/co]

    ReplyDelete
  70. முதல் பாகத்தின் முடிவா விமர்சனம் என்ன சொல்லுதின்னா பையன் ஒரு சோமாரி.... பொண்ணு ஒரு தேவதை .அத தான் அதிரா அக்கா சொல்ல வர்றாங்கன்னு நினைக்கேன் . ..//

    [co="dark purple"]
    ஹா..ஹா..ஹா.. இல்லை கலை... என் கற்பனைப்படி இருவருமே ஒரே மாதிரி ஆன ஆட்கள்தான்.. ஆனா பெண்ணுக்கு வெளிப்படுத்த தெரியுது.. ஹீரோவுக்கு.. சரியா வெளிப்படுத்த தெரியேல்லை..

    ஏனெண்டால் நண்பர்களோடு சேர்ந்து அடிபாடு சண்டை என ஊரில் சுற்றியமையால்ல்ல்... பெண்ணோடு பழகும்போதும் அதே முறையையே கையாள்கிறார்ர்.. ஆனா ஜெயிலுக்குப் போய் ஒரு தனிமை கிடைத்ததும்தான்ன்... அனைத்தையும் உணர்கிறார்ர்... பின்புதான் அவருள்ளிருக்கும் உண்மையான குணம் வெளிப்படுது. இதுதான் கதையின் கருத்து. ((.[/co]

    ReplyDelete
  71. 'ரீச்சர் உங்களை பார்க்கல போல ..//

    [co="dark purple"]
    றீச்சருக்கு எங்க கலை நேரம்.. இப்பவெல்லாம் மல்லிகையில மாலை தொடுக்கவே அவவுக்கு நேரம் சரியாயிடுதாம் பாருங்கோவன்:)..

    என்னாது அஞ்சு அக்கா(கலைட முறையில:) அங்கிள்ஸ் எனச் சொல்றா... ஆறா.. சே..சே.. ஆராயிருக்குமோ?:)) ((.[/co]

    ReplyDelete
  72. angelin said... 69
    இல்ல லக்ஸ்மி அக்கா ஆறுக்கு முன்னால ஒண்டு போடுங்கோ:)).. அப்பூடியெண்டால் சூப்பராக் கதை வருமெல்லோ..//

    ஏன் மாற்றி சொல்றீங்க ஆறுக்கு பிறகு தான் ஒன்று வரும்
    61:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நம்மள தேம்ஸ்ல தள்ளவெண்டே சிலர் காவல் இருக்கிறாங்கப்பா:)).. நாம மாட்ட மாட்டமே:)).. ஆறுக்குப் பிறகு ஒன்று வராது ஏழுதான் வரும் எங்கிட்டயேவா.... றீச்சார்ர்ர்ர்ர் ஓடிவாங்கோ அஞ்சுவுக்கு டமில்தான் சரியா வருகுதில்லை:) எனப் பார்த்தால்ல் கணக்கும் வருகுதில்லையே...

    ஹையோ நான் ஆருக்கெண்டுதான் படிப்பிக்கிறது:).. அதிலயும் தமிழ் சொல்லிக் கொடுப்பனோ.. பிரெஞ் சொல்லிக் கொடுப்பனோ இல்ல.. கணக்குச் சொல்லிக் கொடுப்பனோ:))

    ReplyDelete
  73. vanathy said... 70
    Anju, me very busy. But will try to come whenever get time. I am taking few classes. Lots of homework, assignments, presentation, etc. also, searching for a job.
    Poosar, FYI- AMERICA is always super power. But now watching everyone quietly. Will attack anytime ( yar ange stone edukka kuniyirathu ). Seeya meeya.//

    என்னாது பிசியாகிட்டாவோ வான்ஸ்ஸ்?:). நாமளும்தான் டாக்டருக்குப் படிக்கிறன்:)) அப்பூடி இருந்தும் ஆரையும் கைவிடேல்லையே:)) சரி சரி முறைக்க வாணாம்ம்:))..

    என்னாது அமெரிக்காவுக்கு சூப்பர் பவரிருக்காமோ?//

    எதில?:)))).. ஹையோ இருக்கட்டுமே... நா ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)).. என ஒபாமாவிடம் சொல்லிடுங்கோ:). சரி சரி புரியுது... நல்ல ஜொப் கிடைக்க வாழ்த்துக்கள். கிடைச்சால் எங்களுக்கும் ஏதும் உறைப்பாத் தாங்கோ:).. இனிப்பு வாணாம்:).

    ReplyDelete
  74. அஞ்சுவுக்கு டமில்தான் சரியா வருகுதில்லை:) எனப் பார்த்தால்ல் கணக்கும் வருகுதில்லையே... //

    Garrrrrrrrr:))
    நேற்று செய்த ரவா லட்டு வீசப்பட்டது :))) நங் டமார் ...அதீஸ் தலை போயே போச்சு போயிந்தே இட்ஸ் gone
    இப்ப பாருங்க உங்க தலை கீழ் ஆசானும் ஓடி வருவார் லட்டு அடி தாங்காம

    ReplyDelete
  75. என்னாது பிசியாகிட்டாவோ வான்ஸ்ஸ்?:). நாமளும்தான் டாக்டருக்குப் படிக்கிறன்:)) //
    இதற்க்கு அத்தனை லட்டுக்களும் வீசினாலும் தகும் :))

    ReplyDelete
  76. இல்ல லக்ஸ்மி அக்கா ஆறுக்கு முன்னால ஒண்டு போடுங்கோ:)).. அப்பூடியெண்டால் சூப்பராக் கதை வருமெல்லோ..//


    நா சொல்ல நினச்சதை நீ சொல்லிட்டே

    ReplyDelete
  77. வழக்கமான அதீஸைக் காணமுடியேல்ல. :)
    வடிவா எழுதி இருக்கிறீங்கள். பாடல் தெரிவும் அருமையா இருக்கு. பிடிச்சிருக்கு. அடுத்த பாகம் எப்போது வரும்??

    ReplyDelete
  78. வைதேகியின் தொடரை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் பூசாரே!:)))

    ReplyDelete
  79. இனிய பாடல்கள் அதிலும் நீ ஒன்றும் அறியாத பெண்ணோ இதயக்கனி பிடித்த பாடல்!

    ReplyDelete
  80. அதிராவிடம் மாற்றம் ஒரு நல்ல தொடரைத் தந்து இருக்கு சோகம் என்றாலும் சுவையாக நகர்கின்றது.

    ReplyDelete
  81. angelin said... 76

    Garrrrrrrrr:))
    நேற்று செய்த ரவா லட்டு வீசப்பட்டது :))) நங் டமார் ...அதீஸ் தலை போயே போச்சு போயிந்தே இட்ஸ் gone
    இப்ப பாருங்க உங்க தலை கீழ் ஆசானும் ஓடி வருவார் லட்டு அடி தாங்காம/
    [im]http://static.themetapicture.com/media/funny-cat-helmet-medieval-Skyrim.jpg [/im]

    ReplyDelete
  82. angelin said... 77
    என்னாது பிசியாகிட்டாவோ வான்ஸ்ஸ்?:). நாமளும்தான் டாக்டருக்குப் படிக்கிறன்:)) //
    இதற்க்கு அத்தனை லட்டுக்களும் வீசினாலும் தகும் :))//

    [im]http://f1.pepst.com/c/599D4B/19019/ssc3/home/052/x3.-fun-cats/lachende_katzen___laughing_cats_05.bmp_480_480_0_64000_0_1_0.gif[/im]

    haa..haa... பக்கத்து ஹொஸ்பிட்டல்ல வேகண்ட் இருந்தா சொல்லுங்கோ அஞ்சு:).. நான் இப்பவே அப்பிளிகேசன் போட்டு வைக்கப் போறன்:)... 2013 இல முடிச்சிடுவன்:)) படிச்சு..

    ReplyDelete
  83. Lakshmi said...
    இல்ல லக்ஸ்மி அக்கா ஆறுக்கு முன்னால ஒண்டு போடுங்கோ:)).. அப்பூடியெண்டால் சூப்பராக் கதை வருமெல்லோ..//


    நா சொல்ல நினச்சதை நீ சொல்லிட்டே//

    ஹா..ஹா..ஹா.. லக்ஸ்மி அக்காவை திரும்படியும் வர வச்சிட்டனே:)

    ReplyDelete
  84. இமா said... 79
    வழக்கமான அதீஸைக் காணமுடியேல்ல. :)
    வடிவா எழுதி இருக்கிறீங்கள். பாடல் தெரிவும் அருமையா இருக்கு. பிடிச்சிருக்கு. அடுத்த பாகம் எப்போது வரும்??///

    வாங்கோ இமா... எல்லோரும் நகைச்சுவையான அதிராவைத்தான் பார்த்துப் பழகிட்ட்டீங்கள்... ஆனா இதுவும் சோகம் அல்ல:). அடுத்த பாகம் நாளைக்கும் போடலாம்ம்.. ஆனா அடிப்பினமெல்லோ எல்லோரும் அடிக்கடி பதிவு போடுறா என:))

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  85. வாங்கோ தனிமரம் வாங்கோ.. அடுத்த பாகத்தோடு முடிஞ்சிடும்:).

    இதயக்கனி பாடல் சூப்பர்தான்ன்ன்.. நன்றி.

    // தனிமரம் said...
    அதிராவிடம் மாற்றம் ஒரு நல்ல தொடரைத் தந்து இருக்கு சோகம் என்றாலும் சுவையாக நகர்கின்றது.//
    எல்லோரும் சொல்லும்போதுதான் எனக்கே தெரியுது கதை சோகமாக இருப்பது...

    மியாவும் நன்றி நேசன்.

    ReplyDelete
  86. //haa..haa... பக்கத்து ஹொஸ்பிட்டல்ல வேகண்ட் இருந்தா சொல்லுங்கோ அஞ்சு:).. நான் இப்பவே அப்பிளிகேசன் போட்டு வைக்கப் போறன்:)... 2013 இல முடிச்சிடுவன்:)) படிச்சு..//



    Catchment area என்று சொல்லி ..நான் உங்ககிட்டேயே பேஷன்டா வரக்கூடிய சாத்தியம் இருப்பதால் ...................இப்பவே நாங்க கூடாரத்தை ஜெர்மனிக்கே மாத்துறோம் ......//

    கிரி என்னை காப்பாத்த வர மாட்டீங்களா ஆ ஆஅ ஆ ஆ <<<<:{

    ReplyDelete
  87. அதிரா தொடர்கதை எழுதறாங்களா???????

    ஆ ஆ ஆஆ ஆஆஆ!

    வெயிட்டிங் பார் தி நெக்ஸ்ட் பார்ட் யா.....! :)

    ReplyDelete
  88. Mahi said... 90
    அதிரா தொடர்கதை எழுதறாங்களா??????? //


    மகி :)) மியாவ் டாக்டரும் ஆகப்போறாங்களாம் அவ்வ்வ்வ்
    [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTI4HWLtDczJ48GTVpbzNPls1-6f7oOJ-atOpyFarhg4ekzEvTAFA[/im]

    ReplyDelete

  89. திண்டுக்கல் தனபாலன் said... 88
    அடுத்த பகிர்வு எப்போ...?//

    வாங்கோ வாங்கோ இன்னும் கொஞ்ச நேரத்தில வரும்... நிண்டு அதையும் படிச்சிட்டு பஸ் எடுங்கோ:)

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  90. Mahi said... 90
    அதிரா தொடர்கதை எழுதறாங்களா??????? //

    வாம்மா மகியம்மா.. இது பூஸுக்கடலம்மா... ஐமீன் கதை ...ன்னேன்:))..

    எப்பூடி மகி இருக்கிறீங்க? ஒபாமா உங்களையும் வான்ஸ்சையும் கலைச்சிட்டார் என ஒரு கதை அடிபடுது:)) அதால வான்ஸ்ஸும் இப்ப ஒளிச்சுத்தான் திரிறா:)).. ஹா..ஹா..ஹா..:)) கெதியா வாங்க மகி.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  91. angelin said... 91
    Mahi said... 90
    அதிரா தொடர்கதை எழுதறாங்களா??????? //


    மகி :)) மியாவ் டாக்டரும் ஆகப்போறாங்களாம் அவ்வ்வ்வ் ///

    ஹா..ஹா..ஹா.. முதல் பேஷண்ட் ராசியான பேஷண்ட்டா இருக்கோணும் என நேர்த்தி வச்சிருக்கிறேன்ன்.. சோ அஞ்சுக்குத்தான் முதலாவதா ஸ்ரெத் வைப்பேன் செக் பண்ண...:))

    3 வருடத்துக்கு முன், எலக்டோனிக் எஞ்சினியறிங் முடிச்சேன் வேர்க் கிடைக்கல்ல:) அதுதான் மாத்தி ஓசிச்சு.. டாக்டருக்குப் படிக்கிறென் இப்போ:)) எப்பூடி என் கிட்னியா?:))

    அதாரது மயங்கி விழுந்த மாதிரி ஒரு சவுண்ட்டு கேக்குதே:)) அஞ்சுவா இருக்குமோ:).

    ReplyDelete
  92. அதாரது மயங்கி விழுந்த மாதிரி ஒரு சவுண்ட்டு கேக்குதே:)) அஞ்சுவா இருக்குமோ:).//

    கர்ர் மியாவ் ???why why திஸ் கொலை வெறி :))
    மயங்கி விழுந்ததில்
    இப்ப நான் நொண்டி நொண்டி நடக்கிறேன்,,,i cant walk to my kitchen ஒழுங்கா வந்து எங்க வீட்டில் சமைச்சு கொடுத்திட்டு போங்க

    ReplyDelete
  93. உங்கட வீட்டார் நல்லா இருக்கிறது பிடிக்கேல்லயா அஞ்சூஸ்! இருந்திருந்து ஒரு பூனைட்டயா எலி ஆகப் போறீங்கள்!!

    ReplyDelete
  94. ஹா.. ஹா..ஹா.. அஞ்சூஊஊஊஊ.. இருக்கவே இருக்கு ஆரியபவான்:))... என்ன வேணும் சொல்லுங்கோ ஓடர் கொடுத்திடலாம்:) ஒரு கிழமைக்கு நொண்டி நொண்டியே நடவுங்கோ:)) அப்பத்தான் டெய்லி.. ஓட்டல் சாப்பாடு:)) பார்த்தீங்களோ அதிரா என்ன செய்தாலும் அது அஞ்சுட நன்மைக்குத்தேன்ன்:))).. அவ்வ்வ்வ் எதுக்கிப்போ... சப்பாத்திப் பொல்லைத் தூக்குறா:))

    ReplyDelete
  95. ஆ... மல்லி.. மல்லி.. மல்லிப்பூ.. சே..சே... டங்கு அடிக்கடி ஸ்லிப்பாகுது:) மல்லிகைப்பூ வாசம் வரேக்கையே நினைச்சேன்ன் றீச்சராத்தான் இருக்குமென:))... இமா எனகொரு எலி பன் செய்து தருவீங்களோ?... முந்தித் தந்ததுபோல:) நான் அஞ்சுவுக்குக் காட்டோணும் அதை:)..

    ஒரு கண்ணை மூடியபடி திங் பண்ணுறேன்... அஞ்சு நொண்டி நொண்டி கிச்சினுக்குள் போவதை:)) ஹையோ முடியல்ல நாராயணா:)

    ReplyDelete
  96. 100 ஐத் தொட்ட இமாவுக்காக... எங்கட கார்டினில் நேற்றுப் பூத்த றோசாஆஆஆஆஆஆ...
    [im]http://i744.photobucket.com/albums/xx90/aamir57/KittyRose11.jpg[/im]

    ReplyDelete
  97. [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSu07RQ0Ah7H6bPitMptRJAGcJXw1_WjZbPew25TKmihXkYkay89w[/im]


    karrrrr:)))miyaaaaav

    ReplyDelete
  98. என்ன ஜிது வித்தியாசமான முயற்சியா ஈக்குதே...... அடுத்த பாகமும் போட்டுட்டீங்க படிச்சிட்டு வாரேன்

    ReplyDelete
  99. 1. பூவுக்கு தாங்ஸ் பூஸ்.
    2. //'ரீச்சர் உங்களை பார்க்கல போல ..// நான் வர முன்னமே கதைத்திருக்கிறீங்கள்.
    3. //றீச்சருக்கு எங்க கலை நேரம்.. இப்பவெல்லாம் மல்லிகையில மாலை தொடுக்கவே அவவுக்கு நேரம் சரியாயிடுதாம் பாருங்கோவன்:)..// கர்ர் ;)))
    4. மியாவ் கேட்ட 'எலி பண்'
    http://imaasworld.blogspot.co.nz/2012/10/blog-post_8667.html

    ReplyDelete
  100. [co="dark red"]ஆஆஆஆஆஆஆ.. அஞ்சூஊஊஊஊ நான் உங்கட பக்கத்தில றீச்சரைப் பற்றிக் கதைச்சதை அவ பார்க்கேல்லைப்போல:) ஹையோ சொல்லிடாதீங்க.. இப்பவே கிழிச்சு தேம்ஸ்ல போட்டிடுங்க அஞ்சு.. பிறகு எலிபன் ஐக் கான்சலாக்கிடுவா:)))..

    இமா.. வந்துட்டேன் எலி சாப்பிட... பழையதை நினைவு படுத்திட்டீங்க.. எதுவும் மறக்காமல் எல்லாமே மனதில இருக்கு.. அங்கத்தைய உரையாடல்கள்.

    மிக்க நன்றி இமா.

    ஜிட்டு மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  101. //ஒரு துளி அன்புக்காக ஏங்கிய எனக்கு, குடம் குடமாக அன்பைக் கொட்டினாள். நான் பிறந்து வளர்ந்ததற்கு அப்படி ஒரு அன்பை ஆரிடமும் பெற்றதில்லை. திக்குமுக்காடிப் போனேன்.//

    சூப்பர் வரிகள். நல்ல படைப்பு. ரஸித்துப்படித்தேன். பாராட்டுக்கள்.

    இங்கும் நான் 108 + 1 = 109 ;(

    அன்புடன்
    கோபு

    ReplyDelete
  102. [co="dark red"]வாங்கோ கோபு அண்ணன்... 108 தேங்காய்தானே எல்லோரும் உடைப்பினம்:)).

    நீங்க 109 உடைச்சதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கலாம்:)
    1. கணக்கில வீக்கு:)
    2. காசு மிஞ்சிப்போச்ச்ச்ச்ச்ச்:))...

    ஹா..ஹா..ஹா.. மீ 110:)).

    மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.