நல்வரவு_()_


Wednesday 1 March 2017

ந்தித்வேளை!!!

லைப்பே நன்றாக இருக்கிறதெல்லோ?.. உண்மையில் சில சமயம், உள்ளே இருக்கும் பொருட்கள் நல்லா இல்லாவிட்டாலும், வெளிப் பக்கட்டில் இருக்கும் டிசைனும் எழுத்தின் அழகும்.. ஒரு தடவை வாங்கித்தான் பார்ப்போமே என மனதை தூண்டும்....


தேபோல கதை நல்லாயில்லாட்டிலும் கதையின் தலைப்பும், முன் அட்டையின் அழகும் நம்மை அப்புத்தகத்தை வாங்க வைத்துவிடும்... இவை எல்லாமே பிஸ்னஸ் தந்திரங்களே... மக்கள் மனதை மயக்கும் தந்திரம்...

னாப் பாருங்கோ, இந்தப் படம், தலைப்புக்கேற்ப கதையும் அருமை. மினக்கெட்டுப் பார்க்கலாம், ச்ச்சேஏஏஏ நம் நேரத்தை வீணச்சிட்டமே என எண்ணத் தோணாது.

ங்கினதான் அந்தப் பழமொழி பொருந்தும்:)..அதாவது  உரலுக்குள் தலையைக் கொடுத்திட்டீங்க, இனி இடிக்குப் பயந்தால் முடியுமோ?:)”... என் சினிமா விமர்சனத்தையும் படிச்சேதான் ஆகணும்:).

டம் பற்றிப் பேசுவதற்கு முன்னர்... கொஞ்சம் எனக்குப் பிடித்த நடிகர்கள் பற்றிச் சொன்னால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். எனக்கு , சிவாஜி பிடிக்கும் அடுத்து பார்த்தீபன், மம்முட்டி, ஜயராம், பின்னர் ஜெயம்ரவி, விமல், விஜய்சேதுபதி... இப்படி நீழும் என் லிஸ்ட்... இது ஒரு செலக்டிவ் அம்னிசியா போல் சொல்லியிருக்கிறேன்.. ஹா ஹா ஹா அதாவது சிலது விடுபட்டுவிட்டது:).. எனக்கு நகைச்சுவை ததும்புபவர்களையே அதிகம் பிடிக்கும். ஆனா மொத்தத்தில் எல்லோரையும் பிடிக்கும்.

ந்த வகையில் இங்கே விடுபட்ட முக்கிய பாத்திரங்கள் எங்கட முத்துராமன் மாமாவும்.. அவரின் மூத்த மகன் கார்த்திக்குமே:).. கார்த்திக், பார்த்தீபன், விமல், விஜய் சேதுபதி இவர்களின் படமெனில் தேடிப் பார்ப்பது என் வழக்கம்.. அப்படித் தேடிய போது சமீபத்தில் கைக்குக் கிடைத்த படம்தான் இந்த .. “சந்தித்தவேளை”..

சரி எழுத்தோட்டத்துக்கு வந்திடலாம்... கிராமத்திலே சாதாரண குடும்பத்திலே, அப்பா அம்மாவுக்கு ஒரே மகன் கார்த்திக், அப்பாவாக விஜயகுமார் அம்மாவாக சுஜாதா வருகிறார். ஒரு குறிப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கு மட்டும் இரட்டை வேடத்தில் வருகிறார் கார்த்திக்.

இரு கதாநாயகிகள்.. ரோஜா, கெளசல்யா.

ளமையாக சொல்லப்படும் கதைபோல, அப்பா மகனை திட்டுவதும் அம்மா அணைப்பதும், வேலை தேடி அலைவதும், நண்பர்களோடு கார்த்திக் ஊர் சுத்தி நேரத்தை போக்காட்டுவதும் நடக்கிறது.. ஆனா அனைத்தும் ரசிக்கும் காட்சிகள். விவேக், சின்னி ஜயந் நகைச்சுவையை மெருகூட்டுகின்றனர்.

சிற்றியிலே அப்பாவோடு வளரும் வசதியான குடும்பப் பெண்ணாக ரோஜா இருக்கிறார். தற்செயலாக ரோஜா வீட்டுக்கு போய் தங்க நேரிடுகிறது கார்த்திக். கார்த்திக்குக்கு ரோஜாவில் விருப்பம், ஆனா ரோஜாவுக்கு விருப்பமில்லை. ரோஜாவின் அப்பாவும் கார்த்திக்கின் அப்பாவும் நண்பர்கள்.

தனால் கார்த்திக்கை நன்கு பிடித்துப் போய், மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் தந்தை. . பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க இருவரும் சம்மதிக்கின்றனர். ஆனா கார்த்திக் அம்மாவிடம் கேட்கிறார், பெண் சம்மதம் சொல்லிட்டாரா இதுக்கு என, ஆமாம் பெண்ணின் விருப்பப்படியேதான் திருமணம் நடக்கிறது என தாய் சொன்னதும் நம்பி விட்டார், சந்தோசமாகி விட்டார் கார்த்திக்.

திருமணத்தின் போது தாலி தவறி கீழே விழுகிறது, பின்னர் கட்டில் உடைந்து விழுகிறது.. இவை திக்குறிகள்போல காட்டப்படுகின்றன. எப்பவும்போல ஆரம்பம் முதல் துள்ளலும் குதூகலமுமாக இருக்கிறார் கார்த்திக்.

திருமணம் முடிந்ததும், ரோஜா சொல்கிறார், உங்களை எனக்குப் பிடிக்கவில்லை, அப்பாவின் கட்டாயத்திலேயே சம்மதித்தேன், என்னருகே வரக்கூடாது என... அப்படியே உடைந்து போய் விடுகிறார் கார்த்திக். கார்த்திக்கின் முகம் சோகம் தோய்ந்துவிடுகிறது, முகமாற்றத்தை மிக அழகாக காட்டுகிறார் படம் முழுவதும்.

திருமணம் முடிந்த அடுத்த நாள் காலை, எந்த சம்பவமும் நடக்காததுபோல மாமா மாமியை அனுசரித்து நல்லபடி நடக்கிறார் ரோஜா, வீட்டு வேலை எல்லாம் இழுத்துப் போட்டுச் செய்கிறார்.  கார்த்திக் தன் அம்மாவிடம், ரோஜாவை எப்படியெல்லாம் பத்திரமாக நல்லபடி நடத்தோணும் என கட்டளை போடுகிறார், அப்போ கார்த்திக்கின் அம்மா சொல்கிறார்... கார்த்திக் சொன்னான், உன்னைக் கொடுமைப்படுத்திடக்கூடாது என, என்னைப் பார்த்தால் கொடுமையான மாமி போலவா தெரிகிறது, நான் உன் அம்மா என எண்ணு என்கிறார்.

ன்னில் எக்கோபமுமில்லாமல் தன்னை நல்லபடி பார்க்கச் சொல்லியிருக்கிறாரே கார்த்திக் என மனம் இளகுகிறார் ரோஜா. அடுத்த நாள் கார்த்திக்கை தனியே சந்தித்து கேட்கிறார் ரோஜா... என்னில் கோபமில்லையா, எப்படி என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினீங்க என.. அதுக்கு கார்த்திக் சொல்கிறார்.. “நீ என் மனைவி ஆச்சே... எப்படி விட்டுக்கொடுக்க முடியும்” என... இந்த வசனத்தோடு அப்படியே , அனைத்துப் பெண்களைப்போல்:), உருகி மருண்டு போய் விடுகிறார்.

ந்தை, கார்த்திக்கை பேசுகிறார், இனியாவது வேலை தேடு, இல்லையேல் எங்காவது தண்டவாளத்தில் விழுந்து செத்துப்போ என. கார்த்திக் ரெயினில் புறப்பட்டுப் போகிறார் வேலை தேடி... ரோஜா அழுதபடி வழி அனுப்பி வைக்கிறார்...
===============================INTERVAL===================================
என்ன இது பழைய படத்தை, இப்ப போய் விமர்சனம் செய்கிறாவே அதிரா எனத்தானே ஓசிக்கிறீங்க?:), எப்பவும், எதிலயும் வித்தியாசமாக இருக்கோணும் எனத்தான் மீ யோசிப்பேன்:) அதுக்காக “லூஸ்” என முடிவு கட்டிடாதீங்கோ கர்ர்ர்ர்:)...

===========================முடிந்தது இடைவேளை========================
ரெயினை நோக்கிப் போகிறார்.. ரெயின் புறப்பட்டு விட்டது , தாவி ஏற முற்படும்போது ஒருவர் கை கொடுத்து ஏத்துகிறார், பார்த்தால் அவர் இன்னொரு கார்த்திக், மிகவும் பணக்காரக் குடும்பத்து வாலிபர், அவரின் மனைவி கெளசல்யா. அந்த கார்த்திக் சாகும் தறுவாயில் இருக்கிறார், அப்போ இந்த கார்த்திக்கிடம் கெஞ்சி சத்தியம் கேட்கிறார், நீ என்னைப்போலவே இருப்பதால், நான் இறப்பதை தெரியப்படுத்தாமல், நீ நானாக என் வீட்டுக்கு போகோணும் என.

த்தியத்தைக் காப்பாற்ற, கெளசல்யா வீட்டுக்குப் போய் அவர்களின் பெரிய பக்டரியை பொறுப்பெடுக்கிறார். ரோஜாவின் கார்த்திக் இறந்துவிட்டதாக, உடல் ரோஜா வீட்டுக்குப் போகிறது, ரோஜாவுக்கு சடங்குகள் நடந்து, வெள்ளைச் சேலை உடுத்துகிறார், கார்த்திக்கின் தாய்(Sujatha), சோகம் தாங்காமல் இறந்துவிடுகிறார். இதனால் ஊரைவிட்டே வெளியேறுகின்றனர் கார்த்திக்கின் தந்தையும் மனைவி ரோஜாவும்.

முடிவில் கார்த்திக் தன் மனைவியுடன் வந்து சேர்கிறாரா இல்லை, சொகுசு வாழ்க்கையை விரும்பி கெளசல்யாவுடன் குடும்பம் நடத்துகிறாரா என்பதை.. திரையில் கண்டு.. சொறி டங்கு ஸ்லிப் ஆச்சு:) பார்த்து மகிழுங்கள்.. டொட்..ட..டொயிங்:)), ஒரு வித்தியாசமான அனைத்து சுவையும் கலந்த ஒரு படம்.    _()_ நன்றி, வயக்கம்:).


ஊசி இணைப்பு:
ஓகே அப்பாடா தப்பித்தோம் என எழும்பி ஓடிட விட்டிடுவேனா... மொய் எழுதிட்டுப் போங்கோ:)).. ஓசியில் படக்கதை கேட்டிட்டோம் என நினைச்சீங்களோ?:) பூஸோ கொக்கோ...  மொய் வச்சால் மட்டுமே தியேட்டர் வெளியே போக அனுமதி கிடைக்கும்.. இல்லையெனில் டமால் டுமீல் :) தான்:) ஹையோ அது மரியாதை வேட்டைச் சொன்னேன்:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“குழந்தை அழறதைக் கூட கவனிக்காமல் ஏன்டி
சீரியல் பார்த்துக்கிட்டிருக்க?”
 “சும்மா புரியாமல் பேசாதீங்க… குழந்தையும்
சீரியல் பார்த்துத்தான் அழுதுக் கிட்டிருக்கு”
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

31 comments :

  1. ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ! இந்தப்படம் கொழும்பில் கெயிட்டி இப்ப அது இடிச்சாச்சு இங்கே தான் சினேஹா அறிமுகம் என்னவளே பார்த்தேன்[[!மீ முதல்க்காப்பி போலும்[[

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ... ஹா ஹா ஹா .. நாம் அதிகமாக எதை விரும்புகிறோமோ அது நமக்கு கிடைக்குமாமே:).. அந்த வகையில் சினேகா அக்கா:) நேசனுக்குத்தான்ன்ன்ன்ன்:))... பிரசன்னாவோடு கொஞ்சம் பிரச்சனையாமே:)) அதைச் சாட்டா வச்சே ஊதிப் பெரிசாக்கி.. பிரிச்சுக்கொண்டு பிரான்ஸ்சுக்கு கூட்டி வந்திடலாம்:) ஹா ஹா ஹா:).

      Delete
  2. http://nesan-kalaisiva.blogspot.fr/2017/03/blog-post.html/சினேஹாவுக்கு யாரோ சூனியம் வைத்த நிலையில் தனிமரம் இப்போது எப்போதும் போல நேசன் முகவரியில்[[ படித்த பின் கிழிக்க[[

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் மிக்க நன்றி நேசன்... என்ன இது விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சூஊஊஊ இன்னும் நேசனின் பதிவுகள் எதுவும் வரல்ல்லியே என யோசிச்சேன்ன்ன்.. மிக்க சந்தோசம், நல்லவேளை தெரியப்படுத்தினீங்க.. மிக்க நன்றி நேசன்.

      Delete
  3. விமர்சனம் நல்லாயிருக்கு சகோ...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  4. பார்த்த படம் தான்...சந்தித்த வேளை!!!...ஒரு நாவல் படிக்கிற மாதரி இருக்கும்...

    ஓசி ...இல்ல.. இல்ல.. ஊசி இணைப்பு:.....செம்ம..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு... ஓ பார்த்திட்டீங்களோ.. மகிழ்ச்சி... மறக்காமல் மொய்ய்ய்ய் வச்சிட்டீங்க.. மிக்க நன்றி அனு.

      Delete
  5. படத்தை இன்னும் பார்கவில்லை விமர்சனம் அருமையாக உள்ளது நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட், என் விமர்சனம் பிடிச்சிருக்கோ? போரிங்காக இருந்திடுமோ என நினைச்சேன், மிக்க நன்றி, நேரம் கிடைக்கும்போது பாருங்கோ.

      Delete
  6. விஜய் சேதுபதி நான் கூட ரசிப்பேன். அவரின் நானும் ரௌடிதான் அருமை!

    இந்தப்படம் இப்போதான் அங்கே ரிலீஸா! நீனால் சொல்லியிருக்கும் கதையைப் படிக்கும்போதே சக்கரவர்த்தியோ ஏதோ இன்னொரு கார்த்திக் படம், நான் ஏன் பிறந்தேன்?, ஊருக்கு உழைப்பவன் என்று பல படங்கள் நினைவில் ஆடுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோதரர் ஸ்ரீராம் வாங்கோ.. ஓம் நாங்களும் பார்த்திட்டோம் சுடச்சுட.. கடசியா வந்த அவரின் சகல படங்களும் சூப்பர்.

      2015 இல் வந்தது என நினைக்கிறேன்.. “ஒரேஞ் மிட்டாய்” பார்க்காது விட்டால் பாருங்கோ.. கதை எதுவுமில்லை ஆனா ஒரே சிரிப்புத்தான்...

      ///இந்தப்படம் இப்போதான் அங்கே ரிலீஸா!//////

      [im]http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg[/im]

      Delete
  7. சந்தித்தவேளை என்கிற தலைப்பு பழைய டி எம் எஸ் பாடலையும் நண்பர் வெங்கட் நாகராஜ் தளத்தையும் (சந்தித்ததும் சிந்தித்ததும்) நினைவு படுத்துகிறது!

    தம வாக்கிட்டாச்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சந்தித்த வேளை... என்பது.. எத்தனையோ அண்டவாளம் தண்டவாளங்களை எல்லாம் நினைவு படுத்துதே... ஆவ்வ்வ்வ்வ் தமிழ் மணம்... வோட் பண்ணி மொய் உம் எழுதிட்டீங்க.. மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  8. அக்யாங்க் ஆங் அய்யயே ...மீ க்ரையிங் :)
    ஆமா யாரை எப்போ எங்கே சந்திச்சிங்க அதை விளக்கமாக சொல்லவும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அஞ்சு வாங்கோ.. எதுக்கு இப்போ ச்ச்ச்சும்மா இருந்த நீங்க.. :) பக்கென அழுறீங்க கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. அதுவா அது தேம்ஸ் கரையில வச்சு நாங்க முன்ன முன்னம் சந்திச்சமே:) அதை நினைவு படுத்துதே:))...

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதுக்கு மேல திரும்ப திரும்ப 3 தடவை கேட்டிடாதீங்க:) பிறகு நான் எல்லாத்தையும் சொல்லிப்போடுவன்:) கர்ர்ர்:).

      Delete
  9. எங்கிருந்து புடிக்கிறீங்க அந்த பூச்சா கிட்டி படம் பார்க்கும் குட்டி பூஸ் செம கியூட் ..
    நேற்றே வோட் பண்ணிட்டேன் அந்த டாலர்ஸை உடனே அனுப்பி வைக்கவும் எனக்கு ..

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் சூப்பர் என்ன அஞ்சு... இடையில இருப்பது pokemon பூஸ்ஸ்ஸ்ஸ்:).

      ///நேற்றே வோட் பண்ணிட்டேன் அந்த டாலர்ஸை உடனே அனுப்பி வைக்கவும் ///

      இதென்ன இது புது வம்பாக்கிடக்கூஊஊஊஊ:).. நானே வைர நெக்லெஸ் வள்ளிக்கு போட காசு போதாதே என இப்பூடி எல்லாம் ஐடியாப் போட்டு கலெக்ட் பண்றேன்ன்ன்:)..

      Delete
  10. எனக்கும் விஜய் சேதுபதியின் படங்கள் ரொம்ப பிடிக்கும் .நானும் ரவுடிதான் பார்த்திங்களா ?
    ஆங் அப்புறம் அடுத்த படம் அஜித்தின் விவேகம் ரிவ்யூவை சுடசுட வெளியிடனும் சொல்லிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. அது சுடச்சுடப் பார்த்திட்டேன்ன்ன்... தர்மதுரை சூப்பர் மூவி.

      என்னாது அஜித்தின் விவேகம் ஆஆஆஆஆ?:) நோஓஒ புதுப்படத்துக்கு ஊரிப்பட்ட ரிவியூக்கள் வரும்.. அப்போ நான் எழுத மாட்டேன்ன்:).. ஊர் அடங்கியபின் தான் நான் எழுதுவேன்:)..

      Delete
  11. ஊசி இணைப்புக்குப் பின் உள்ள ஜோக் சிரிக்க வைத்தது! அதைச் சொல்ல மறந்து விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. பார்த்தீங்களோ நீங்க ரொரொரொரொம்ப நல்லவர்.. சிரிச்சதை சொல்லிட்டீங்க...

      இந்த அஞ்சுவைப் பாருங்கோ.. விழுந்து விழுந்து சிரிச்சு.. கீபோர்ட்ல தலை அடிபட்டு... ஒத்தணம் பிடிச்சவவாம் ஆனா... ஒரு வார்த்தை சிரிச்சதை சொல்லேல்ல பார்த்தீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      மிக்க நன்றி.. திரும்ப வந்தமைக்கு.

      Delete
  12. அதிரா..இந்த கார்த்திக் படங்கள்னா என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் :) இந்த படத்தை பார்த்து விட்டேன் ஆனா மீண்டும் ரிவ்யூ படிக்கும்போது இன்னொருறுமுறை பார்க்கணும்போலிருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஓ அவரும் ஒருவேளை 4ம் நம்பரா இருப்பாரோ?:) ஹா ஹா ஹா... கார்த்திக்கின், பார்த்தீபனின் படங்கள் நம்பிப் பார்க்கலாம்... முள்வேலி பார்த்தனீங்களோ? சூப்பர் படம்.

      மிக்க நன்றி அஞ்சு.

      Delete
    2. மாறி சொல்லிட்டேன் அது பூவேலி அடுத்து பொன்னுமணி,,, கிழக்குவாசல் இப்படி எல்லாமே சூப்பர்தான்.

      Delete
    3. அதுதானே பார்த்தேன் முள்வேலின்னு ஒரு படம் கேள்விபட்டமாதிரி இல்லையேன்னு ..கர்ர்ர்ர்
      பூவை முள்ளாக்கிட்டிங்களே பூனை

      Delete
    4. மவுன ராகத்தை 30/35 தடவைக்கும் மேலே என்னை பார்க்க வச்ச புண்ணியவான் :) my better half

      Delete
  13. ஆறாவது வோட் என்னோடது.

    நான் ஹனிமூன் போயிருந்ததால் இங்கு வருகைதர தாமதமாகி விட்டது.

    “சந்தித்தவேளை”.. கதை சூப்பர். நீங்க விவரித்த விதமும் அருமை.

    இடைவேளையில் தென்படும் மஞ்சள் பூனை ஜோராக்கீது .....

    //எப்பவும், எதிலயும் வித்தியாசமாக இருக்கோணும் எனத்தான் மீ யோசிப்பேன்:) அதுக்காக “லூஸ்” என முடிவு கட்டிடாதீங்கோ கர்ர்ர்ர்:)...//

    ’லூஸ்’ அல்லது ’டைட்’ என அஞ்சு சொன்னால் மட்டுமே நம்புவோமாக்கும்.

    ReplyDelete
  14. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.... முதலாவதா வந்திடுவீங்க காணல்லியே.... ஒருவேளை உடல் நலமில்லையோ எண்டெல்லாம் டப்பு டப்பாவே யோசிச்சனே...:),

    ஓ ஹனிமூனோ?:) எத்தனையாவதென சொல்லவே இல்ல:).

    ReplyDelete
    Replies
    1. ஓ விமர்சனம் பிடிச்சிருக்கோ? மிக்க நன்றி. உங்களுக்கும் படம் பார்க்கும் பழக்கம் இருக்கோ?.

      என்னாதூஊஊ அஞ்சு சொல்லோணுமோ... இருங்கோ முதல்ல அஞ்சுவை தேம்ஸ்ல தள்ளிட்டு வாறேன்ன்ன் ... ஹா ஹா ஹா மிக்க நன்றி கோபு அண்ணன், வோட் போட்டமைக்கும்.

      Delete
  15. அதிரா இந்தப் படம் பார்த்து பல வருஷங்களாச்சு. இப்போது உங்கள் விமர்சனம் வழியாக மீண்டும்!! ஜோக் செம!! கஹஹஹஹ்

    கீதா: பூசையார்கள் அனைவரும் கொள்ளை அழகு!!!

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.