நல்வரவு_()_


Tuesday 13 March 2018

நூறு வயசுவரை வாழ விருப்பமோ? ஈதர் ஆயியே:)

நீண்ட காலம் வாழோணும் என விருப்பமோ? வாங்கோ வாங்கோ நல்ல வழிமுறைகள் சொல்லித்தாறேன்:)... ஹெல்த்தியா இருக்க என்ன பண்ணோனும், எதை எதை எல்லாம் சாப்பிடோணும்.. என்பன போன்ற பற்பல அட்வைஸ்கள் நெட்டிலும், இதுக்கென புக்ஸ் உம் குவிந்து கிடக்கு:)..

அதனால அரைச்ச மாவையே திருப்பி அரைக்க நான் விரும்பவில்லை:).. நான் இங்கு சொல்லப்போகின்ற விசயமே சற்று மாறுபட்டது:).. அதுக்கு வரமுன், நல்ல விசயம் இரண்டு சொல்லிடுறேன்..

ஒரு 30..35 வயதை அடைந்திட்டால், அனைவரும் மல்ட்டி விட்டமின் பாவிப்பது மிக நல்லது. இதுவரை பாவிக்காதவர்கள் இனி ஆரம்பியுங்கள் நிறைய மாறுதல்கள் உங்களுக்கு தெரியும். உசாராக இருப்பீங்கள். அதிலயும் பிரித்தானியாவில் Boots  எனும் பாமசி இருக்கு, அங்கு கிடைக்கிறது சனரோஜன் மல்ட்டி விட்டமின். இது மிக தரமானது. நீங்கள் ஒன்று விட்ட ஒருநாள், ஒன்று எடுத்தாலே போதும்.  இது 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு என புறிம்பாகவும் கிடைக்கிறது. வெளிநாட்டவர்கள் ஓன் லைனிலும் வாங்கலாம். வேறு Brand லும் கிடைக்கிறது.
இது கூடுதல் நல்லது என்றேன், மற்றும்படி எந்த மல்ட்டி விட்டமினும் நல்லதுதான்.

அடுத்து ஒமேகா 3, ஃபிஸ் ஒயில் பாவிப்பதும் நல்லது. இதில் “ஃபிஸ் லிவர் ஒயில்” என இருக்கிறது, அது தலைமயிர் உதிரும் என்கிறார்கள், அதனால்,  “ஃபிஸ் ஒயில்” தேடி வாங்கிப் பாவியுங்கோ.

உணவுக்கட்டுப்பாடு அளவோடு இருப்பது முக்கியம்.. முடிந்தவரை ஜிம் க்குப் போங்கோ, சுவிமிங் போங்கோ. நடப்பது நல்ல பயிற்சியே ஆனா, நடப்பதோடு ஜிம் க்குப் போனால்தான் தசைகள் இறுகும்... இன்னொன்று ஜிம் போனால் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நல்ல புத்துணர்ச்சியாக இருக்கும், மனம் உற்சாகமடையும்.

இப்படி இருந்த எங்கள் வீடு.. 

இப்போ இப்பூடி ஆச்சு:)
இதில இருந்து என்ன புரியுது?:).. அதிரா ரொம்ப வயக்கெட்டுப் போயிட்டேன் ரெட்மில் ஓடி எனப் புரிஞ்சிருக்குமே:))


சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்... மட்டருக்கு வருவோம்:).

பிளீஸ் பிளீஸ்.. ஹொட்டா ரெண்டு கரண்டி சீனி போட்டு ஒரு நெஸ்ட்டமோல்ட் குடிச்சுக்கொண்டு மிகுதியை தொடருங்கோ:) நிறைய எழுதி விட்டேன்:))

மனித வாழ்க்கை என்பது நம் கையில் இல்லை. இன்று இருக்கிறோம் நாளை இருப்போம் என்பது நமக்கு தெரியாது. அதனால எப்பவும், எதிலும் ஓவராக இருக்கக்கூடாது.

அதாவது பணம் தேவைதான், அதுக்காக வாழ்க்கையை வாழாமல் பணம் சேர்க்கோணும் என அலையக்கூடாது. சிலர் சேர்த்துச் சேர்த்து வைத்துவிட்டு கண்ணை மூடி விட்டால் அதில் என்ன இருக்கிறது?.. ஆசைப்பட்டதை சாப்பிடோணும், ஆசைப்பட்டதை வாங்கோணும்.. ஓரளவுக்கு சேமிப்பு இருந்தால் போதும்... பிள்ளைகளை நன்கு படிப்பிச்சு விட்டால் போதும், பின்பு பேரப்பிள்ளைக்காகவும் சேர்க்கத் தேவையில்லை.. நாமும் எஞ் சோய் பண்ணோனும்..

ஒருவேளை நமக்கு நாளைக்குச் சா வந்தால்கூட, நன்கு அனுபவித்தார் பறவாயில்லை என நினைக்குமளவுக்கு இருக்கோணும்.  சிலர் இருக்கிறார்கள்.. ஆ அதில் கொலஸ்ரோல் சாப்பிடாதே,  இதில் சுகர், இதில் ஒயில்.. இப்படியே எதற்கும் ஒரு கதை சொல்லிக்கொண்டே இருப்பினம்..

“எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்”

அப்படி எல்லாம் பயந்து ஓவர் கொன்றோலா இருந்திடாதீங்கோ.. ஓரளவுக்கு கொன்றோல் இருந்தால் போதும், மற்றபடி ஆசைக்கு என்ன வேணுமெண்டாலும் செய்யுங்கோ. பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் குடுங்கோ... குழந்தையில் இருந்து ஒவ்வொரு வயதுக்கு ஒவ்வொன்று கேட்பார்கள் வளர வளர..., 5 வயதில் பொம்மை கேட்டால் வாங்கிக் குடுக்காமல், 20 வயதில் குடுப்பதில் என்ன இருக்கு?.. சில குடும்பங்களில் பணம் பணம் என பணமாக வைத்திருப்பினம் ஆனா பிள்ளைகளுக்கு ஆசைக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் குடுக்காயினம், ஒரு கடைச்சாப்பாடு குடுக்காயினம்.. கூடாது கூடாது என தடுப்பினம்... உடுப்புக்கள்கூட ஆசைக்கு வாங்காமல் எங்கே மலிவாக இருக்கு என தேடி வாங்குவது.. இதெல்லாம் எதுக்கு?...

வருத்தம் வராமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கோணும் தான், அதுக்காக ஓவர் கொன்றோலாக இருக்கக்கூடாது, எப்படி ஆயினும் நம் ஸ்டேசன் வந்திட்டால் இறங்கித்தானே ஆகோணும்.. அது 30 இலும் வரலாம் 50 இலும் வரலாம் 100 உம் ஆகலாம்... இப்போ எத்தனை எத்தனை விசயங்கள் அறிகிறோம்..

எமன் அங்கிள்:) பாசக்கயிற்ரோடு வரும்போது:) ஆஆஆ நான் டயட் பண்ணினேன்:), நான் ஒயில் உணவு சாப்பிடவில்லை.. நான் சரியான ஹெல்த்தியா இருக்கிறேன் இப்போ வரமாட்டேன் எனச் சொல்ல முடியுமோ?:).

எது நம்மை மகிழ்ச்சிப்படுத்துதோ.. எதனால் நாம் சந்தோசம் அடைகிறோமோ அதில் கூடுதல் கவனம் செலுத்தி நம்மை முடிந்தவரை ஹப்பியாக வைத்திருக்கோணும்... கடந்த காலத்தையும் நினைக்கக்கூடாது.. வருங்காலத்தையும் நினைக்கக்கூடாது.. இப்போதையதை நினைத்து ஹப்பியா இருக்கோணும்.

மனம் அதிகம் துன்பப்பட்டால் நம்மை நிறைய வருத்தங்கள் தொற்றிக் கொள்ளும், நம் இதயம் பாதிக்கப்பட்டு விடும், அதனால நம் இதயத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எதையும் நான் செய்யாமல் இருப்பதே மேல். 

சில விசயங்களில் தலையிடாமல் இருப்பது, சிலரோடு சேர்ந்தால் எப்பவுமே மனதுக்கு துன்பம் வந்து விடுகிறது எனில், அதை விட தனியே நிற்பது எவ்வளவோ மேலானது.

நமது சேர்க்கையைப் பொறுத்தே நமக்கு இன்பமும் துன்பமும் , ஏன் மரியாதைகூட அப்படியேதான், ... பன்றியோடு சேர்ந்த பசுவின் கதை போலானால் நமக்கு துன்பமே, அதனால முடிந்தவரை மனதை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய விசயங்களிலேயே ஒன்றியிருத்தல் நம் உடல் நலத்திற்கு மிக நல்லது. 

நெருப்பு சுடும்....., தண்ணீர் குளிரும்... அதுபோலவே தண்ணீர் போன்றோருடன் உறவை வளர்த்துக் கொண்டால் நம் வாழ்வும் குளிர்ச்சியாக இருக்கும்.

நமக்கு வயதாகிறது இனி என்ன மரணம்தானே என எண்ணக்கூடாது, போய் விட்ட காலம் திரும்ப வரப்போவதில்லை, அதனால அதை எண்ணி வருத்தப்படுவதில் எப்பயனும் இல்லை,  ஆனா இருக்கும் காலத்தை ஆவது மகிழ்வோடு கழிக்க முயற்சிக்கோணும்.

சில விசயங்கள் உண்மையில்லை, அப்படி எதுவுமே இல்லை எனச் சிலர் சொன்னாலும்..
எல்லாம் அவன் செயல்....., இதுவும் கடந்து போகும்..., எல்லாம் விதிப்படியேதான்...  

இப்படியான வார்த்தைகள் சரியோ தப்போ, ஆராட்சி பண்ணாமல் மனதில் அப்பப்ப சொல்லிக்கொண்டால், நம் மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது, அதன் மூலம் நம் மனது அமைதி பெறுகிறது, மன அமைதி கிடைத்தால் நம் இதயமும் உடலும் பாதுகாக்கப் படுகிறது...

எத்தனை துன்பம் வந்தாலும், மேற் சொன்ன வார்த்தைகளை உபயோகித்துப் பாருங்கள், சின்ன விசயத்துக்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வருமளவுக்கு யோசிக்காதீர்கள்.

கோபம் பொல்லாத ஒன்று, கோபத்தை அடக்கப் பழகுங்கோ.. நாம் டென்ஷனாகும்போதுதான் கோபம் வருகிறது.. இதனால் பிரசர் அதிகமாகி இதயக் கோளாறும் விரைவில் வந்திடும்.
முடிந்தவரை பல விசயங்களை சிரித்தபடி கடந்து விடுங்கள்.. ஒருவர் திட்டினாலோ, கேலி பண்ணினாலோ, தரக் குறைவாகப் பேசினாலோ இக்னோர் பண்ணி விடுங்கள்.. நியாயம் சொல்லவோ வாதிடவோ வேண்டாம்.. துரோகிகளாயினும் பேச்சை வளர்க்காமல் மன்னித்தபடி நகர்ந்திடோணும்.. அது நாம் கருணை வள்ளல் எனப் பெயரெடுக்கவோ, மகாத்மா ஆகவோ அல்ல.. நம் இதயத்தைப் பாதுகாப்பதற்கே என எண்ணுங்கோ.. அநாவசியமான வாதாட்டங்களினால், இதயம் பலவீனமாவது தவிர   எப்பயனும் வரப்போவதில்லை.

முக்கியமாக பேசித் தீர்க்க வேண்டிய, முக்கிய இடத்தில் மட்டும் நியாயம் பேசுங்கோ, மற்றும்படி புன்னகைத்தபடி நகர்ந்தால் நம் இதயத்தை நாம் பாதுகாக்கலாம்:).

எங்கள் குடும்ப பெண் ஒருவர், என்னை விட வயதில் குறைந்தவ, அவவிடம் பெரும்பாலும், ஆர்.. என்ன  குறை சொன்னாலும்.. திட்டினாலும்.. அவ ஒரு பெரிய சத்தமாக ஹா ஹா ஹா என சிரிப்பொன்று சிரிப்பா... அவ்வளவுதான்... அனைத்துக்கும் பதில் இருக்காது... ஒரு விதத்தில் அதுவும் நல்ல விசயம் என்றே நான் பலதடவை நினைப்பதுண்டு.

என்னைப்பொறுத்து “செய் அல்லது செத்துப்போ”, “செய்வன திருந்தச் செய்” என்பதை, மனதில் பதிய வைத்திருக்கிறேன், அதனால வாழ்ந்தால் முறையாக வாழோணும்.. இல்லை எனில் வாழ்க்கையே தேவையில்லை என எண்ணும் ரகம் நான்[ எதில் கால் வைத்தாலும் திறம்படச் செய்யோணும், இல்லை எனில் ஒதுங்கிடோணும்] அதனால மக்‌ஷிமம் எப்படி ஒரு நல்ல அம்மாவாக, மிக நல்ல மனைவியாக வாழ முடியுமோ அப்படித்தான் இதுவரை வாழ்ந்திருக்கிறேன், அதனால எனக்கு எப்பவும்.. என் முக்கிய கடமைகளில் இருந்து தவறி விட்டேனே என மரணத்தின் போது, என் மனதில் குறை வர வாய்ப்பில்லை:)).. ஹா ஹா ஹா:).

இதைப் படிச்சு இப்போ முக்கால் ஞானியாகி இருப்பீங்களே:).. ஆவ்வ்வ்வ் வெற்றீஈஈஈ வெற்றீஈஈஈஈஈ:))

ஊசிக் குறிப்பு:)

ஊசி இணைப்பு:)
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சு... கையைக் கையை வச்சுக்கொண்டு கீழே நிக்கக்கூடாது:).. மேலே ஏறி நடக்கோணும் அதிராவைப்போல:))
()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()&()

171 comments :

  1. ஒரே தத்துவ முத்துக்களாக இருக்கிறதே... சிந்திக்க வைத்தன...

    இதில் சில தவறுகள் நானும் செய்து விட்டேன் அதாவது பணம் சேர்த்து காண்பிக்க வேண்டும் என்ற வெறியில் என்னை வறுத்தி வாழ்ந்து விட்டேன்.
    (காரணம் இளவயதில் உறவுகள் கொடுத்த சாட்டையடி வார்த்தைகள்)

    ஆனால் குழந்தைகளுக்கோ, உறவுகளுக்கோ தாராளமாய், உயர்ரகமாய் செலவு செய்துள்ளேன் இன்றுவரை...

    இன்று ஆசைப்பட்டாலும் நல்ல உணவுகூட சாப்பிட இயலவில்லை.

    நான் துரோகிகளை மன்னிக்கிறேனோ... இல்லையோ... அந்த ஜடத்தை முழுமையாக மறந்து விட்டு கடக்கும் பழக்கம் எனது சிறிய அகவை முதலே உண்டு.
    (அதாவது நீ எள் வாழ்வில் இடம் பெறவில்லை)

    சரி உங்கள் எமன் அங்கிள் அனுஷ்கா ரசிகராமே ? அவர் நம்மிடம் வரும்போது அனுஷ்காவின் நல்ல பளபளப்பான ஃபோட்டோக்களை காண்பித்தால் ஏதாவது டிஸ்கவுண்ட் பண்ணுவாராமே... உண்மையா ?
    இதை நான் ஸ்ரீராம்ஜியிடம் கேட்கவில்லை உங்களிடம்தான் கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. முதலாவதா வந்த உங்களுக்கு.. இதோ ஒரு பரிசு:).. ஒரு மாதத்துக்கு ஜிம் இலவசம்:))..

      //ஒரே தத்துவ முத்துக்களாக இருக்கிறதே...///
      அது தானா வருது கில்லர்ஜி .. ஞானி ஆகிட்டேனெல்லோ:)...

      கடந்த காலத்தை நினைக்காதீங்கோ.. இனி எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என மட்டும் சிந்தியுங்கோ.

      //ஒரே தத்துவ முத்துக்களாக இருக்கிறதே...//
      இது உண்மைதான் இதைப் போஸ்ட்டில் சொல்ல நினைத்து மறந்து விட்டேன்... உண்ண முடியும் காலத்தில் நேரமில்லாமல் ஓடிவிட்டு... அமைதியாக இருந்து இனி சுவைக்கலாமே என எண்ணும்போது ஏதேனும் ஒவ்வாமை ஒட்டிக் கொண்டு விடுகிறது.. இதனாலதான் அவ்வப்போது செய்திடோணும்.

      //(அதாவது நீ எள் வாழ்வில் இடம் பெறவில்லை)//

      ஹா ஹா ஹா இதுவும் நல்ல விசயம் தான்.. மனதில் காவிக்கொண்டு கஸ்டப்படாமல் தூக்கி வீசிவிட்டால் நம் மனம் ஃபிறீ ஆகிவிடும்.

      ///இதை நான் ஸ்ரீராம்ஜியிடம் கேட்கவில்லை உங்களிடம்தான் கேட்கிறேன்.///

      ஹா ஹா ஹா எமன் அங்கிளுக்கு அனுக்காவைப் பிடிக்காதாம்:)).. அதனால அனுக்கா ரசிகர்களுக்கு கிட்டப் போகவே பயப்படுவார்:))

      Delete
  2. சிவாதாமஸ்அலி-
    அடுத்த ஜென்மம் இருந்தால் கோபமே வராத எருமை மாடாக பிறத்தல் வேண்டும்.

    Chivas Regal சிவசம்போ-
    நீ இப்பவே கேட்டதுல பாதிதானே...

    சின்ன டவூட்ஸ்...
    பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்தால் போதும், பெயரன், பெயர்த்திகளுக்கு வேண்டாம்னு ஜொள்ளுறீங்களே இது எங்களுக்கு மட்டுமா ? இல்லை இந்திய அரசியல்வாதிகளுக்குமா ?

    அப்புறம் இன்னொன்னு...
    குழந்தையே இல்லாத மோடிஜி யாருக்கு சொத்து சேர்க்கணும் ?

    ReplyDelete
    Replies
    1. ///Chivas Regal சிவசம்போ-
      நீ இப்பவே கேட்டதுல பாதிதானே...//

      ஹா ஹா ஹா இதுக்கு எந்தக் கொமெண்ட்டும் என்னிடம் இல்லை:))..

      ///அப்புறம் இன்னொன்னு...
      குழந்தையே இல்லாத மோடிஜி யாருக்கு சொத்து சேர்க்கணும் ?///
      ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மோடி அங்கிளை அப்பூடி எல்லாம் கிளாவி ஹையோ கேய்வி.. சே..சே கேள்வி கேய்க்கக்கூடா:)) பிறகு கீசாக்கா பொயிங்குவா:) ஹா ஹா ஹா.. ஹையொ ஹையோ..:)

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  3. நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று இந்த இளங்கிளியே பாடல். எஸ் பி பியின் குரலும், ஸ்ரீதேவியின் குறும்பும் ரசிப்பேன். தி கிரேட் இளையராஜா! உங்களுக்கு இந்த பாடல் சம்பந்தமாக ஒரு புதிர். இதே போன்ற காட்சி அமைப்புடன் தமிழில் இன்னொரு பாடலும், ஹிந்தியில் ஒரு பாடலும் சொல்ல முடியுமா? ஹிந்தி கஷ்டம். தமிழாவது?!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      //நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று இந்த இளங்கிளியே பாடல்//
      ஆவ்வ்வ்வ் நான் நினைச்சேன் ஆருக்குமே பிடிக்காமல் போயிடுமோ என நன்றி நன்றி..

      ///உங்களுக்கு இந்த பாடல் சம்பந்தமாக ஒரு புதிர். இதே போன்ற காட்சி அமைப்புடன் தமிழில் இன்னொரு பாடலும், ஹிந்தியில் ஒரு பாடலும் சொல்ல முடியுமா?///

      ஹா ஹா ஹா என்னிடம் இப்பூடி எல்லாம் புதிர் கேட்டால்.. கேட்டதுக்காக நீங்கதான் ஷை ஆவீங்க:)..

      இது ஸ்ரீராம் வழமையாக சொல்லும் என் மாமியின் சிடி யில் இருந்த பாடல்.. காரில் ரிப்பீட்டில் போட்டு கேட்டிருக்கிறேன்.. மிக மிக பிடித்தது... அதனால இங்கு போடலாமே என, நேற்றுத்தான் தேடி முதன்முதலாக வீடியோப் பாடலாகப் பார்த்தேன்... அப்போ இதில இன்னொன்றை எப்பூடி நான் கண்டு பிடிப்பேன்.

      Delete
    2. 1. ராஜா திரைப்படத்தில் "இரண்டில் ஒன்று... நீ என்னிடம் சொல்லு..." பாடல்.
      https://www.youtube.com/watch?v=Ddujh97dfqw


      2. அதன் ஒரிஜினலான ஹிந்திப்படத்தில் அந்தக் காட்சிக்கான பாடல்.
      https://www.youtube.com/watch?v=00Kzvb2s7LE


      3. சரஸ் (charas) ஹிந்தித் திரைப்படத்தில் வரும்
      https://www.youtube.com/watch?v=8u81IIq1cq0

      Delete
    3. ஓ இரண்டில் ஒன்று பாட்டு பலதடவை கேட்டிருக்கிறேன்.. ஆனா வீடியோவா பார்த்ததில்லை... இப்போ பார்த்தேன் சூப்பரா இருக்கு.. அதே துள்ளலுடன் கூடிய செல்லக் கோபம் பார்க்க அருமை ஹா ஹா ஹா...

      ஹா ஹா ஹா ஹிந்திப் பாட்டு இன்னும் சூப்பர்.. சிரிச்சுக் கொண்டே வெளியே தள்ளிக் கதவைப் பூட்டுறா:))... ஹா ஹா ஹா இதுக்குத்தான் சொல்வார்கள்போல.. பெண்கள் ஒன்றை வேண்டாம் எனச் சொன்னால் வேணும் என அர்த்தமாகுமாம் என ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  4. சாமீ.... எனக்கு 100 வேணாம்... 99 போதும்!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 99 உம் 11 மாதங்களையுமோ கேட்கிறீங்க?:).. இங்கு 100 ஆவது பிறந்ததினம் வரை ஒருவர் இருந்தால், அந்த 100 ஆவது பேர்த்டே அன்று.. எங்கள் குயின் அம்மம்மாவின் கையெழுத்திட்டு ஒரு வாழ்த்துக் கிடைக்கும்:)).

      இதுபற்றி ஒரு குட்டிக் கதை என்னிடம் இருக்கு.. விரைவில் பகிர்கிறேன்.

      Delete
  5. வைட்டமின்களை மருந்தாக எடுக்காமல் உணவிலேயே எடுக்கலாமே... கிட்னி பிழைக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. இது ஓகேதான் இருப்பினும்.. 30..35 வயதைக் கடந்திட்டால்... உணவால் சேர்வது குறைவாகிடும்.. முக்கியமாக சின்ன வயது எனில் வெளியே வெயிலில் திரிவோம் ஓடி விளையாடுவோம்ம்.. அதனால இயற்கையாலயே அதிக விட்டமின்கள் உடலில் சேரும்..

      ஆனா இப்படி வயதாகிட்டால் வேலை வீடு என.. நம் உடம்பில் எத்தனை பேருக்கு வெயில் படுகிறது? இயற்கைக் காற்றுப் படுகிறது? அத்தோடு ஒழுங்காக உணவு உண்போர் எத்தனைபேர்?.. ஏதோ தென்பாக இருக்கவும். உயிர் வாழவும் என்றே இப்போ நம்மில் பலர் அவசரமாக எதையாவது உள்ளே தள்ளுகிறார்கள்.... இப்படி எல்லாம் பார்க்கையில் மல்ட்டி விற்றமின்கள் எடுப்பதே சிறந்தது.

      நீங்கள் அதிகம் வேண்டாம்.. உங்கள் வீட்டருகில் இருக்கும் “சரவணாஸ்” பார்மஸியில்:) ஒரு பத்து விட்டமின்கள் வாங்கி ஒரு கிழமைக்கு உபயோகித்துப் பாருங்கள்.. வித்தியாசம் தெரியும்..

      Delete
    2. என் வீட்டருகில் சரவணாஸ் பார்மஸி இல்லையே... ஜமீலா பார்மஸிதான் இருக்கு! ஸோ, வாங்கவில்லை!!!!

      Delete
    3. ///ஜமீலா பார்மஸிதான் ///

      ஹா ஹா ஹா உண்மையை வரவைக்கவே போட்டு வாங்கினேன்:) கூகிள் மப் மூலம் ரோட்டால நடந்து வந்தே கண்டுபிடிக்கிறேன் ஸ்ரீராம் வீட்டை:)).. ஹா ஹா ஹா:)..

      Delete
  6. வெஜிடேரியன்களுக்காக இந்த ஒமேகா 3 போன்றவை உதவும். சிறுவயதில் நான் ஷார்க்கோஃபெரால் என்கிற டானிக் குடித்திருக்கிறேன். மீன் எண்ணெயாம்! இதை எழுதும்போது கூட நாக்கு அந்த ருசியையும், மூக்கு அந்த மணத்தையும் நினைவுபடுத்துகிறது!

    ReplyDelete
    Replies
    1. ///மீன் எண்ணெயாம்! இதை எழுதும்போது கூட நாக்கு அந்த ருசியையும், மூக்கு அந்த மணத்தையும் நினைவுபடுத்துகிறது!//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) அப்போ ஸ்ரீராம் ஃபிஸ் சாப்பிட்டிருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஹா ஹா ஹா இது ஹார்ட்டுக்கு நல்லது . எண்ணெயாக எனில் விழுங்குவது கஸ்டம், இப்படி குளிசை எனில் அளவும் தெரியும்... மணம் குணம் இல்லாமல் உள்ளே போய் விடும்.

      Delete
    2. எங்கள் பரம்பரையும் கிட்டத்தட்ட சைவப் பரம்பரைதான், எங்கள் அம்மாவின் ஜெனரேஷன் தான் அசைவத்துக்கு மாறினார்கள்.. அம்மம்மா அம்மப்பா .. காலம் வரை எல்லோரும் சைவம்.. கோயில் குளம் திருவிளா பூஜை என கோயிலோடு ஒன்றி இருந்தவர்கள்தான். இப்போ கூட அம்மாவின் ஒரு சகோதரி சைவம்தான். ஏன் அந்தப் பரம்பரையாலோ என்னமோ எங்கள் அண்ணனும் இப்போ கிட்டத்தட்ட 8,9 வருடங்களாக சைவமாக மாறிட்டார்ர்... அண்ணனை நாங்கள் “ஐயர்” எனப் பகிடியாகச் சொல்லுவோம்.. போனவருடம் இங்கு வந்து நின்றபோது, சந்தனத்தில் குட்டிப் பிள்ளையார் பிடித்து வைத்தார்.. அதை இப்பவும் உடைந்து விடாமல் பாதுகாக்கிறோம்.

      எங்கள் மாமா[அம்மாவின் தம்பி] ஒருநாள்.. எல்லோருமாக சேர்ந்து அசைவம் சாப்பிடும்போது.. சொன்னார்... சாப்பிடும்போது .. ஏதோ அசைவம் உண்கிறொம் என நினைத்து சாப்பிட்டு விட்டால் ஓகே, மற்றும்படி இது இந்த உறுப்பு.. இது அது. இது என நினைத்தால் ஒரு வாய்கூடச் சாப்பிட முடியாது சைவத்துக்கே மாறிடுவோம் என... உண்மைதானே அதை நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

      அப்படித்தான், மீன் எண்ணெய்... இது எதில்? எப்படிச் செய்திருப்பினம்? என்றெல்லாம் நினைச்சால் தொடவே முடியாமல் இருக்கும்.. நமக்கு நல்லது அவ்வளவே என மட்டும் நினைக்கோணும்....:)

      Delete
    3. //அப்போ ஸ்ரீராம் ஃபிஸ் சாப்பிட்டிருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. //

      இல்லை, மீன் எண்ணெய் கலந்த டானிக் என்று சொல்லப்பட்ட மருந்தை!

      Delete
    4. ஹா ஹா ஹா எனக்குத் தெரியும்தானே சும்மா சவுண்டு விட்டேன்:) இப்பூடித்தான் அதிரா அடிகடி சவுண்டு விடுவேன்:) நீங்கதான் ஸ்ரெடியா நிக்கோணும்:)

      Delete
  7. சமீபத்தில் என் மாமியாரைப் பார்த்த 'டொக்டர்' சுகர் இருக்கு... "உணவுக்கட்டுப்பாடு அவசியம்தான்... ஆனால் வயதானவர்களுக்கு நான் அப்படிச் சொல்ல மாட்டேன்... என்ன சாப்பிட்டுவிடப் போகிறார்கள் இவர்கள்? ஓரிரு ஸ்பூன் சாப்பிடுவதால் தப்பில்லை!'" என்றார்.

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான், கட்டுப்பாடு தேவை.. ஓவர் கட்டுப்பாடு தேவையில்லை.

      இப்படித்தான் சிலர் பிரசர் வந்திட்டால்.. அச்சச்சோ எனக்குப் பிரசர் உப்பே தொடமாட்டேன் என உப்பே இல்லாமல் இருந்து.. உடம்பில் உப்புக் குறைந்துபோய் வேறு தொல்லையால் அவதிப்படுவோரும் உண்டு.

      எங்கள் ஒரு உறவுக்கார அக்கா.. ஒரு தடவை வீட்டுக்கு வந்தபோது வடை குடுத்தோம்... உப்பு நல்ல அளவுதான், ஆனா அவ சொன்னா கொஞ்சம் உப்பு தாங்கோ தொட்டுத் தொட்டுச் சாப்பிடவே எனக்கும் பிடிக்கும் என:).. இத்தனைக்கும் அவ பிரசருக்கு குளிசை எடுக்கிறாவாம் ஹா ஹா ஹா...

      Delete
  8. பாசக்கயிற்றோடு எமன் வந்தால், "ஐயோ.. பின் காட்டுல என்ர பாஸ் இருக்காங்க... கொஞ்சம் இருங்க சொல்லிக்கினு வந்துடறேன்' னு சொல்லிட்டு கொல்லைப்பக்கம் வழியா எஸ்கேப் ஆயிட வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஏன் தனியேப் போகப்பயத்தில பொஸ் ஐயும் அங்கும் துணைக்குக் கூட்டிப் போகும் பிளானோ?:)).. ஹா ஹா ஹா இதில் இரு கதை நினைவுக்கு வருது.. ஒன்று நகைச்சுவை..

      1.
      கணவர் நோயால் அவதிப்படுகிறார், அப்போ மனைவி அருகில் வந்து சொல்கிறா, என்னங்க நீங்க எதுக்கும் யோசிக்காதீங்க.. உங்களுக்கு ஒன்றெனில் நான் மட்டும் உயிரோடிருப்பேன் என்றா நினைக்கிறீங்க.. நானும் கூடவே வந்திடுவேன்..

      அதுக்கு கணவர்...

      சொன்னார்.. சொன்னார்ர்.... கோணாண்டி அப்பவே குறிபார்த்துச் சொன்னார்.. நீ செத்தாலும் உன்னைப் பிடிச்ச சனியன் தொலையாது கூடவே வந்திடும் எனச் சொன்னார்.. அது சரிதான் போல .. என:).. ஹா ஹா ஹா.

      Delete
    2. 2.
      மரணம் எப்ப வரும் என இருக்கோ .. அதை ஆராலும் வெல்ல முடியாது என்பதற்கு இது ஒரு குட்டிக் கதை.

      ஒரு திருமண வீட்டில் விருந்து நடக்கும்போது எமன் அங்கிள் அங்கு சாப்பிட உள்ளே வருகிறாராம்.. அப்போ வாசலில் ஒதுங்கி இருந்த ஒரு தவளையைப் பார்த்துக் கேக்கிறாராம்.. “ஓ நீ இங்கேயா இருக்கிறா, என் வேலை சுலபமாகிட்டுது.. இன்னும் சில மணியில் உன் உயிரை நான் எடுக்கும் நேரம் வந்துவிடது, இரு போய்ச் சாப்பிட்டு விடு வருகிறேன்” எனச் சொல்லி உள்ளே போய் விட்டாராம்.

      தவளைக்கோ காண்ட்ஸும் ஓடல்ல லெக்ஸும் ஆடல்ல:).. அது வெளியே தப்பி ஓடிச்சுதாம் ஓடிப்போய், வெளியே இருந்த கொக்கு ஒன்றைப் பார்த்து நடந்ததைச் சொல்லிக் கேட்டதாம், பிளீஸ் என்னை எமனிடம் இருந்து காப்பாத்து, என்னைத் தூக்கிப் போய் எங்காவது மலைப் பாறையில் இறக்கிவிடு, நான் பாறைக்குள் ஒளிந்திடுறேன் என.

      அப்போ கொக்கும் சம்மதித்து .. என் கால்களை இறுக்கிப் பிடி நான் காவிப்போகிறேன் என தூக்கிக்கொண்டு பறந்துதான்.. மலைப்பாறை மீது பறந்தபோது, தவளைக்கு கை விறைத்து, தவறி பாறைமேல் விழுந்து அதிலேயே இறந்து விட்டதாம்:))..

      ஹா ஹா ஹா ஸ்டேஷன் வந்துவிட்டது என்பது இதுதானாக்கும்:))

      Delete
  9. //நமக்கு வயதாகிறது இனி என்ன மரணம்தானே என எண்ணக்கூடாது, போய் விட்ட காலம் திரும்ப வரப்போவதில்லை, அதனால அதை எண்ணி வருத்தப்ப//

    ஆஹா... புரிகிறது... புரிகிறது... இந்தப்பதிவின் காரணம் புரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. 'அதனால அதை எண்ணி வருத்தப்படுவதில் எப்பயனும் இல்லை என எங்கட ஆயா அடிக்கடி என்னிடம் சொல்லும்' என்றுதானே அதிரா (16) எழுதியிருக்காங்க. உங்களுக்கு மட்டும் 'எங்கட ஆயா அடிக்கடி என்னிடம் சொல்லும்' என்ற வார்த்தைகள் கண்ணில் படவில்லையா?

      Delete
    2. ///ஆஹா... புரிகிறது... புரிகிறது... இந்தப்பதிவின் காரணம் புரிகிறது!///

      ஹா ஹா ஹா என் போஸ்ட் படிச்சு ஞானி ஆகினமோ இல்லையோ:) கரீட்டா.. அதிராவைக் கவிழ்ப்பது எப்படி என மட்டும் பிடிச்சிடுறாங்க:).. எப்பூடித்தான் மல்ட்டி விட்டமின் போடாமலே இப்பூடிக் கண்டு பிடிச்சால்:)).. போடத்தொடங்கிட்டால் என் கதி அதோகதிதான் போல:)..

      இதைத்தான் ஜொந்தச் செலவிலயே சூனியம் வைப்பது என்பினமோ:)).. ஹா ஹா ஹா மல்ட்டி விட்டமின் பற்றிச் சொல்லாமலேயே இருந்திருக்கலாமொ:)) ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:)

      Delete
    3. ///ஆயா அடிக்கடி என்னிடம் சொல்லும்' என்றுதானே அதிரா (16) எழுதியிருக்காங்க. உங்களுக்கு மட்டும் 'எங்கட ஆயா அடிக்கடி என்னிடம் சொல்லும்' என்ற வார்த்தைகள் கண்ணில் படவில்லையா?//

      ஹா ஹா ஹா என்னா ஸ்பீட்டா ஓடியாந்து ஸ்ரீராமுக்கு ஜெல்ப் பண்றாராமாம்ம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்:))

      அது ஆயா இல்ல:) குயின் அம்மம்மாவாக்கும்:)).. இருந்தாலும் உங்கள் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு நெ.தமிழன்:). பிரக்கெட்டில 16 என மறக்காமல் போட்டிட்டீங்க:) இல்லை எனில் ஸ்ரீராம் மறந்துபோய் 66 என எண்ணியிருப்பாரே:).. ஹா ஹா ஹா:)..

      Delete
  10. அறிவுரைகள் நமக்கே தெரியும்தானே. தக்க சமயத்தில் கடைப்பிடிக்கத்தான் முடிவதில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்தினால் ஹார்ட் அட்டாக்தான்! கோபமே வராமல் இருந்தால்தான் நல்லது!! நானும் அனாவசியமாக பேசுவதில்லை. நகர்ந்து சென்று விடுவேன். நாம் என்ன அவர்களுக்குச் சொல்வது? தத்தம் கருமமே கட்டளைக்கல்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், சிலரில் ஒரு குணம் இருக்கு.. திருப்பி ஏசிச் சண்டைப்பிடிக்கும் வரை விட மாட்டினம்:)).. நாம் அமைதியானால் அது அவர்களுக்கு கெளரவக் குறைச்சல் போலாகிடுமோ என்னமோ ஹா ஹா ஹா:)..

      Delete
  11. அன்னை தெரசாவின் இந்த அறிவுரை எனக்கும் பிடிக்கும். இரவும் வரும் பகலும் வரும், பள்ளமும் வந்தால் மேடும் வரும் என்பது போல ஊசி இணைப்பு சிரிக்க வைத்தது! ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் பூனை அதிலிருந்து எப்படி வெளியே வந்திருக்கும்? சொந்தக்காரர் அந்த இயந்திரத்தை நிறுத்திய பிறகா? முன்னரேவா? ஓ.... இதெல்லாம் தேவை இல்லாத கவலைகள்... இதெல்லாம் பட்டால் 100 வயது... இல்லையில்லை 99 வயது வாழ முடியாது!

    ReplyDelete
    Replies
    1. ///அந்தப் பூனை அதிலிருந்து எப்படி வெளியே வந்திருக்கும்? சொந்தக்காரர் அந்த இயந்திரத்தை நிறுத்திய பிறகா? முன்னரேவா? ஓ.... இதெல்லாம் தேவை இல்லாத கவலைகள்... இதெல்லாம் பட்டால் 100 வயது... இல்லையில்லை 99 வயது வாழ முடியாது!///

      கற்பூரம் மாதிரி:) கர்க்ட்டாப் பிடிச்சிட்டீங்க விசயத்தை:) இனி ஸ்ரீராமுக்கு ஆய்சு 100 தேன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா:)

      Delete
  12. 105 வயதுவரை வாழ்ந்து சென்ற வருடம் மறைந்த என் பாட்டி, அவரிடம் ஆசீர்வாதம் கேட்க நமஸ்கரிக்கும்போது சொல்வார்..." 100 வயசு இருங்கோன்னு சொல்ல மாட்டேன்... அந்தக் கஷ்டம் எனக்குதான் தெரியும். இருக்கறவரை சந்தோஷமா இருங்கோ" என்பார்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து ஸ்ரீராம். என் ரிலேடிவ் ஒருவர், கோபம் வந்தபோது, வசவாக, 'நீண்ட ஆயுளோட இருக்கணும்' அப்படின்னு சொல்லுவார். நீண்ட ஆயுள் (ஆரோக்கியமோ இல்லையோ) என்பது மிகக் கடினமானது. மனது நினைப்பதுபோல் உடலால் இயங்கமுடியாது என எல்லோரும் சொல்கிறார்கள். என்ன இருந்தாலும், நமக்கு என்று இருக்கும் ஸ்டேஷன் வரும்வரை கஷ்டமோ நஷ்டமோ டிரெயினில் உட்கார்ந்திருக்கவேண்டியதுதான்.

      Delete
    2. //100 வயசு இருங்கோன்னு சொல்ல மாட்டேன்... அந்தக் கஷ்டம் எனக்குதான் தெரியும்///

      ஸ்ரீராம்.. ஒரு தத்துவ வசனம் மேலே எழுத நினைத்து தவறி விட்டேன், இப்போ சேர்த்து விட்டேன் அது இதுதான்....

      /“எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்”/...

      உண்மைதான் வயதில் என்ன இருக்கு.. கொஞ்சக் காலமோ அதிக காலமோ மகிழ்வோடும் நலமோடும் வாந்தால் ஓகே.. முக்கியமா எனைப் பொறுத்து .. கிட்னி[ம்ய்ய்ளை:)] மாறிடக்கூடாது எப்பவும்...

      உங்கள் பாட்டி அனுபவித்துச் சொல்கிறா.. அதில்தான் உண்மை இருக்கும்.

      அனைத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
    3. @ நெ.த
      //என் ரிலேடிவ் ஒருவர், கோபம் வந்தபோது, வசவாக, 'நீண்ட ஆயுளோட இருக்கணும்' அப்படின்னு சொல்லுவார்.///
      ஹா ஹா ஹா இதுதான் வஞ்சகப் புகழ்ச்சியோ?:)... இது சபிப்பதுக்குச் சமன் தானே?:).

      /மனது நினைப்பதுபோல் உடலால் இயங்கமுடியாது என எல்லோரும் சொல்கிறார்கள்.//

      அப்படிச் சொல்ல முடியாது நெல்லைத்தமிழன்... என் கணவரின் நண்பரின் மனைவியின் அப்பா... 99 வயதிலும்.. ஹை வேயில் கார் ஓடி வருவாராம் அவர்கள் வீட்டுக்கு... அவரின் ஹெல்த் சரியில்லை எனில் லைசென்ஸ் விட்டு வைக்க மாட்டார்கள் இங்கு.

      மிக்க நன்றி.

      மிகுதி அனைத்துப் பதில்களுக்கும் ஈவினிங் வருகிறேன்.. அதுவரை ஆரும் குறை நினைத்திட வேண்டாம்...பிளீஸ்ஸ் _()_.

      Delete
    4. மெதுவா ஆபரேஷனை முடித்துவிட்டே வாங்க டாக்டர் அதிரா. ஸ்ரீதேவி அம்மாவுக்கு நடந்தமாதிரி, மறதியில், கால் வலின்னு வந்தவருக்கு மூளை ஆபரேஷனும், வயத்துவலின்னு வந்தவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும் பண்ணாம இருந்தாச் சரிதான்.

      Delete
    5. //மெதுவா ஆபரேஷனை முடித்துவிட்டே வாங்க டாக்டர் அதிரா.//

      ஹா ஹா ஹா நீங்கதான் கரீட்டா உச்சரிக்கிறீங்க.. அஞ்சுவுக்கும் கில்லர்ஜி க்கும் சொல்லவே தெரியல்ல கர்ர்ர்ர்ர்:))..

      //மறதியில், கால் வலின்னு வந்தவருக்கு மூளை ஆபரேஷனும், வயத்துவலின்னு வந்தவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும் பண்ணாம இருந்தாச் சரிதான்.///
      ஹா ஹா ஹா கர்ர்ர்:) ஞானி ஆக வெளிக்கிட்டால் மானைக் கொல்லப்போறியோ மரநில்ழல் தேவையோ என மிரட்டீனமே என டக்குப் பக்கென டொக்டருக்குப் படிச்சு இரவோடிரவாப் பட்டம் வாங்கினால்:) போலி எனச் சொல்லுறாங்க:)) கர்:) இனி பைலட்டுக்குப் படிக்கப் போறேன்ன் என்னை வாழ்த்து வழியனுப்புங்கோ எல்லோரும்:))

      Delete
  13. நல்லா எழுதறீங்க. உங்க டைப் இடுகைக்கு கொஞ்சம் நாளெடுத்து எழுதணும். இல்லைனா நிறைய பிரயாணிகள் வருவதற்குள்ள வண்டி புறப்பட்டமாதிரி ஆயிடுது. இடுகை கன்டென்டுக்கு பிறகு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெ.தமிழன் வாங்கோ..

      ///நல்லா எழுதறீங்க//

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சு கீதா அம்முலு ஓடி வாங்கோ.. இதைப் பத்துத்தரம் எழுத்துக் கூட்டிப் படிங்கோ:)).

      //உங்க டைப் இடுகைக்கு கொஞ்சம் நாளெடுத்து எழுதணும். //

      ஹா ஹா ஹா ரெயின் 3,4 நாட்களால தானே பொதுவா புறப்படும்:) அதனால ரைம் எடுத்து எழுதுங்கோ:).

      இதில இன்னும் நிறைய என் மைண்ட் ல சேகரித்திருந்தேன்.. ஆனா போஸ்ட் பெருத்துக் கொண்டே போகுது என் கற்பனையோ கன்னா பின்னா என நிளுதே என நிறுத்திட்டேன்:).

      இந்த போஸ்ட் படிச்சே அஞ்சு 2 நாளா பெட் றெஸ்ட் ஆம்ம்:) இன்னும் எழுதியிருந்தா? என்ன ஆகியிருக்கும்?:)..

      Delete
  14. புத்தரின் பொன்மொழி மிக அருமை. அதிரா அதை 25 வருஷத்துக்கு முன்னால் எனக்குச் சொல்லியிருந்தால் இன்னும் உபயோகமாக இருந்திருக்கும். சரி சரி இப்பவாவது சொன்னீங்களே

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அப்படியோ சங்கதி? ஆனா எங்கேயும் நீங்க பொயிங்கி:) நாங்க பார்த்ததில்லையே:).. ஹையோ அப்போ அண்ணியிடம் தான் கேட்டுப் பார்க்கோணும்:).... இனிமேல் கோபம் வரும்போது வலது கையைக் ஹார்ட் மேல வச்சு சொல்லுங்கோ.. எனக்கு ஹார்ட்தான் முக்கியம் கோபம் வாணாம் என:).. ஹா ஹா ஹா..

      Delete
  15. அருமையான பதிவு
    அனைவரும் பின்பற்றத் தகுந்த வரிகள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் மிக்க நன்றி.

      Delete
  16. வயதானலே அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ன ஆரம்பிச்சிடுறாங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ..

      //வயதானலே////
      ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சுவை அப்பூடி எல்லாம் ஜொள்ளக்குடா:).. அவ என்னைப்போல ஸ்ரெடி இல்லை:)) இப்பூடி வசனம் எல்லாம் கேட்டா ஓடிப்போய்த் தேம்ஸ்ல குதிச்சிடுவா:).. பிறகு சந்தேகத்தின் பெயரில நான் தான் தள்ளினேன் என பொலீஸ் எனக்குக் கைக்குச் சங்கிலி போட்டிடுவினம்:)..

      Delete
  17. அதுவும் சீனியர் சிட்டிசன் ஆனால் சொல்லவா வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இது ஆரைச் சொல்லுறாரோ?:) ஒருவேளை கீதாவையோ?:) இல்ல கில்லர்ஜியையோ.. ஹையோ ஒருவேளை ஸ்ரீராம் ஐ?:)) சே..சே.. அபோ நெ.தமிழனை?:)... பெயர் சொல்லி ஜொள்ளியிருக்கலாமெல்லோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பாருங்கோ இது ஆராக இருக்கும் என ஓசிச்சே எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திடப்போகுதே:))

      Delete
  18. ஆமாம் என்றும் பதினாறாக இருக்கும் எனக்கு என்ன மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்று அட்வைஸ் ஒன்னும் பண்ணலையே

    ReplyDelete
    Replies
    1. ///ஆமாம் என்றும் பதினாறாக///

      ம்ஹூம்... அது இனி உங்களுக்கு அடுத்த பிறவியிலதேன்ன்:)).. அதுவும் எந்த வீட்டில்.. எந்த நாட்டில்.. என்று நடக்குமோ அந்த அசம்பாவிதம்:)) ஹா ஹா ஹா:)).. எங்கின பிறந்தாலும் இங்கின தகவல் ஜொள்ளி அனுப்புங்கோ ட்றுத்:)).. நாங்க உங்களுக்கு ஒரு புளொக் திறந்து தருவோம்.. ஏனெனில் நீங்க பேபியாக எல்லோ இருப்பீங்க:)) ஹையோ ஹையோ:))

      Delete
  19. //“செய்வன திருந்தச் செய்” என்பதை, மனதில் பதிய வைத்திருக்கிறேன்,//

    இதை படித்ததும் நீங்கள் கத்தரிக்காயை வைத்து ஏதோ ஒண்ரு செய்தது ஞாபகம் எனக்கு வருகிறேதே

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதை எப்பூடி மறந்தீங்க?:) அது தொக்கூஊஊஊஊ:) அன்றிலிருந்துதேன் எனக்கு சமையல் இளவரசிப் பட்டம் கிடைச்சுதே:))

      Delete
  20. கடைசி படத்தில் உள்ளது அதிராவா இப்ப புரிய்து அதிரா தேம்ஸ் நதியில் குதிக்கப் போகிறேன் என்று டிரெட்மில்லில் ஏறி ஒடுவது இதில் ஏறி ஒட்டினால் என்று தேம்ஸ் நதிக்கு போய் சேருவது ஹும்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. ஷ் ஷ் ஷ் ஷ்.. கண் போட்டிடாதையுங்கோ....:) எவ்ளோ ஸ்பீட்டா.. கியூட்டா ஓடுறேன் பாருங்கோ...:)

      அஞ்சுவைப் பாருங்கோ.. சமைக்கிறேன் எனச் சொல்லி கிச்சினுக்குள் போகாமல் பேய்க்காட்ட்டுவா.. புளொக் எழுதுறேன் என வெளிக்கிட்டு பிஸி எனப் பேய்க்காட்டுவா:).. இப்போ ட்ரெட்மில் இலும் கையால நடந்து காட்டிப் பேய்க்காட்டுறா:)).. நான் பின்னால ஏறி ஓடுறா என நெம்பி எல்லோ.. என்னை முந்திடப் போறா எனஸ்பீட் எடுத்து ஓடுறேன்ன்:))

      இப்பவாவாது புரியுதோ மீ ஒரு அப்பாஆஆஆஆஆவி:)) ஹா ஹா ஹா .. மிக்க நன்றி ட்றுத்... மல்ட்டி விட்டமின் வாங்குங்கோ விரைவில் சுவீட் 16 ஆகிடுவீங்க..

      Delete
  21. >>> எது நம்மை மகிழ்ச்சிப்படுத்துதோ.. எதனால் நாம் சந்தோசம் அடைகிறோமோ அதில் கூடுதல் கவனம் செலுத்தி நம்மை முடிந்தவரை ஹப்பியாக வைத்திருக்கோணும்... கடந்த காலத்தையும் நினைக்கக்கூடாது.. வருங்காலத்தையும் நினைக்கக்கூடாது.. இப்போதையதை நினைத்து ஹப்பியா இருக்கோணும்...<<<

    ஆகா!... மிக மிக அன்பான வார்த்தைகள்...

    இப்படியொரு குருஜி கிடைப்பதற்குக் கொடுத்து வெச்சிருக்கோணும்!...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ...

      ///இப்படியொரு குருஜி கிடைப்பதற்குக்//
      ஆவ்வ்வ்வ்வ்வ்வ் இதில ஒரு குட்டித் திருத்தம்.. டொக்டர் குருஜி:)) ஹையோ எதுக்கு இப்போ மாங்கொப்பை முறிக்கிறீங்க?:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  22. அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அனாயாசமாகப் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. பயந்து பயந்து எழுதினேன்.. இப்போ எல்லோரும் நல்லதாகச் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கு.

      Delete
  23. மிக சரியான வார்த்தைகள் அதிரா...

    நிறைய நானும் இதுபோல் இருக்கவே விரும்புகிறேன்...

    எதுவும் மிதமாக இருக்க வேண்டும்...உணவோ..பணமோ...அளவுக்கு அதிகமாக இருந்தாலும்...அதிக கட்டுப்பாடாக இருந்தாலுமே கஷ்டம்..

    அம்மாவுக்கு சுகர் ஸ்வீட் சாப்பிட கூடாது..ஆனாலும் நாங்க சாப்பிடும் போது சிறு பகுதி குடுப்போம் அப்படி இருந்தால் அவங்களும் இயல்பாக இருக்க முடியும் நாமலும் மகிழ்வாக இருக்க முடியும்..


    அடுத்து....வார்த்தைகள் அதிகம் விடக்கூடாது..அதை திரும்ப எடுக்க முடியாது..சோ சண்டை வந்தால் முடிந்த வரை மவுனமாக கடந்து விடுவேன்..

    மிக நல்ல பதிவு அதிரா ..மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ...

      உண்மையேதான் ஆகவும் இறுக்கவும் கூடாது.. ஆகவும் லூஸ் பண்ணவும் கூடாது நடுநிலையாக இருந்திட்டால் நல்லதே..

      ஏதாவது சுகயீனம் என வந்திட்டால் பின்பு கொஞ்சம் கட்டுப் பாடாக இருப்பது நல்லதே.. அதுக்காக ஓவர் கொன்றோல் எதுக்கு.. நீங்க செய்வது சரியானதே உங்கட அம்மாவுக்கு.

      உண்மைதான் சண்டை சின்னதாக இருக்கும்.. விரைவில சண்டை வந்துதோ எனவும் மறந்திருப்போம்.. ஆனா அந்நேரம் பாவிக்கும் வார்த்தைகள்தானே கடசிவரை மனதில மறக்க முடியாத வேதனையை உருவாக்கிடும்.. அதனால மெளனம் சிறந்ததே..

      மிக்க நன்றி அனு.

      Delete
  24. நேற்று என்பது கையில் இல்லை...
    நாளை என்பது பையில் இல்லை...
    இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ டிடி வாங்கோ.. உண்மைதானே.. மிக்க நன்றி.

      Delete
  25. வணக்கம் பூஸ்.

    என்னது நூறு வயதுவரை வாழ வழி காட்டுறீங்களா
    ஐம்பது கடக்க முதலே கெளம்ப ஐடியா தேடிட்டு இருக்கும் நமக்கு இது சரியா வருமா
    பூஸ். எதுக்கும் இரவைக்கு. வந்து பதிவை முழுதாகப்படிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.. என்ன இடையில் காணாமல் போயிட்டீங்க நெ.தமிழனும் தேடினார்.. இருப்பினும் முடியும்போது வாறீங்க மிக்க மகிழ்ச்சி.

      //என்னது நூறு வயதுவரை வாழ வழி காட்டுறீங்களா//

      ஹா ஹா ஹா அது ஆரம்பம் அப்பூடித்தான் ஆரம்பிப்பேன்.. பின்புதானே இருக்கு விசயம்.. உங்களுக்கும் பயன்படும்:).. கொஞ்சம் முழுக்க படிச்சிட்டு ஜொள்ளுங்கோ..

      மிக்க நன்றி...

      Delete
  26. மிக அருமையான யோசனைகள் அதிரா.

    வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள்.

    வேதாத்திரி மகரிஷியிடம் மனவளகலையை படித்தேன். ஆசிரியராகவும் இருந்தேன்.

    என்ன படித்தாலும் வாழ்க்கையில் கடைபிடித்தால் தான் நலமாக இருக்கலாம்.

    'எண்ணம் ஆராய்தல்' படித்தேன்.
    நல்ல எண்ணங்க்களை போட்டுக் கொண்டே தான் இருக்கிறேன்.


    'கவலை ஒழித்தல்' பாடமாய் படித்தேன். அதை எடுத்து அடிக்கடி படித்து
    என் கவலைகளை புறந்தள்ளி இந்த நிமிட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    "ஆசை சீரமைத்தல்" படித்தேன் பாடமாய்

    போதுமென்ற மனம், இது தேவையா இது இல்லாமல் வாழ முடியாதா என்ற யோசிக்கும் சக்தியை இறைவனும் படித்த பாடமும் கொடுத்து கொண்டு இருக்கிறது.

    கோபம் குறைக்க பாடமாக படித்த 'சினம் தவிர்த்தலை' அடிக்கடி எடுத்துப் படித்துக் கொள்வேன்.

    நாம் இறங்கும் இடம் வரும் வரை போய் சேரும் காலம் வரை வாழ்வோம்.

    நம்பிக்கை . சந்தோஷ பகிர்வு அருமை.

    அன்னைதெரசா சொன்னது போல் காலம் ஒருநாள் மாறும் கவலைகள் எல்லாம் தீரும்.
    எதுவும் நிரந்தரம் இல்லைதான்.

    அதிராவை போல் தானும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சி படுத்தி என்றும் அன்புடன் இருப்போம்.
    அழகான அறிவான பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    தத்துவ முத்து அதிரா வாழ்க!




    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      ஓ நீங்கள் வேதாந்திரிமகரிஷி இடம் போயிருக்கிறீங்களோ.. எனக்குத் தெரிஞ்ச சிலரும் போயிருக்கிறார்கள்..

      /வேதாத்திரி மகரிஷியிடம் மனவளகலையை படித்தேன். ஆசிரியராகவும் இருந்தேன்.//
      ஓ அங்கு படிப்பித்தும் இருக்கிறீங்க... நல்ல விசயம்.. அப்போ யோகாவும் படிச்சிருப்பீங்களே.. அங்கு நிறைய வகுப்புக்களுக்குச் சென்றிருக்கிறீங்க...

      //நாம் இறங்கும் இடம் வரும் வரை போய் சேரும் காலம் வரை வாழ்வோம்.//
      அதேதான் சந்தோசமாக வாழோணும்..

      ஹா ஹா ஹா வாழ்த்து மழைக்கு மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  27. எல்லாவற்றிலும் அளவு முறை வேண்டும் தான்.
    உடல் நலத்தில் கவனம் வேண்டியதுதான்.
    உணவு கட்டுபாடு, எளிதான் உடற்பயிற்சி செய்து உடல் காக்க வேண்டும் தான்.
    புத்தரின் பொன் மொழி அருமை.
    ஸ்ரீராம் சொல்வது போல் உணவில் இல்லாத சத்தா ?
    நாங்கள் இருவரும் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொளவது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. //ஸ்ரீராம் சொல்வது போல் உணவில் இல்லாத சத்தா ?
      நாங்கள் இருவரும் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொளவது இல்லை///

      உண்மைதான், ஊரில் இருப்போருக்கு இது பெரிதாகத் தேவை இல்லைத்தான் ஆனாலும்.. நமக்கு தெரியாது எது உடலில் குறைஞ்சிருக்குது என.. அதனால இடைக்கிடை ஆவது இந்த மல்ட்டி விட்டமின் மட்டும் பாவித்தால் நல்லதே.. மற்றும்படி சத்து மாத்திரை என எதையும் எடுக்கக்கூடாது...

      மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  28. [im]https://t00.deviantart.net/9ZCbnr0KNxKAwiog0UIJttNHrlQ=/fit-in/700x350/filters:fixed_height(100,100):origin()/pre00/64d1/th/pre/f/2008/306/f/2/jerry_by_shojojim.png[/im]

    என்னாச்சு பூனைக்கு :)
    நான் அப்புறம் வரேன் :)
    இப்போ சர்ச்சுக்கு ரெடியாகிட்டிருக்கேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஏன் இவ்ளோ லேட்டூஊஊஊஉ கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா சரி சரி முறைக்காதீங்க:) நீங்க இருந்திருந்தா என்னை டொக்டர் ஆக விட்டிருக்க மாட்டீங்க:)).. பிஸி எண்டு நினைச்செல்லோ போஸ்ட் போட்டேன்ன்:))..

      ஹையோ ஜெரியைக் கீறிப்போட்டினம்:)).. இது வேற கீறுறது:))

      Delete
  29. ஆரோக்கியமாய் இருந்தால், நம் வேலைகளை நாமே செய்து கொண்டு இருந்தால் 100 வயது வரை வாழலாம், அடுத்தவர் கையை எதிர்ப்பார்த்து வாழும் 100 வயது வாழ்க்கை வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. இது 100 வீதம் உண்மைதான் கோமதி அக்கா.. ஆனா இதுவும் நம் கையில் இல்லையே.. எவ்வளவு தான் கவனமாக நடந்தாலும் மிக பத்திரமா இருந்தாலும் சிலருக்கு நோய் வந்து விடுகிறதே.. அதேபோல சிலரைப் பாருங்கோ.. எதையும் கவனிக்க மாட்டினம்.. எல்லாம் சாப்பிடுவினம் ஆனா அவர்களை நோய் அண்டாது..

      அப்போ இப்படியானவற்றைத்தானே விதி என நினைக்கிறோம்.

      இதனால்தான் நான் இப்போஸ்ட் எழுதியதே.. அதாவது ஓவராக கவனமாக இருந்து சாப்பிடாமல் எதையும் அனுபவிக்காமல் இருப்பதைக் காட்டிலும் ஓரளவுக்கு அனுபவிக்கோணும்...

      ஏனெனில் எதுவும் நம் கையில் இல்லையே... வருத்தம் வந்து எத்தனையோ ஒபரேசன் செய்தோர் கூட சிலர் அதிக நாள் இருக்கினம்.. நல்ல ஹெல்த்தியான ஒருவர் ரோட்டால் போகும்போது அக்‌ஷிடெண்டில் இறந்திடுறார்.. அப்போ இதை எல்லாம் என்ன எனச் சொல்லுவது...

      Delete
  30. // இதில இருந்து என்ன புரியுது?:).//

    ம்ம்ம் :) ஆரம்பத்தில் வீட்டுக்குள்ள சைக்கிள் ஓட்டினீங்க இப்போ வீட்டுக்குள்ளேயே நடக்கறீங்க :)
    ஹையோ ஹையோ நானா அப்புறம் வந்து கலாய்ச்சுக்கறேன்

    ReplyDelete
    Replies
    1. அஞ்சூஊஊஊஊஊஉ நீங்க பின்னால ஓடுறீங்க என மீ ஸ்பீட்டா ஓடுறேன்:) நீங்க என்னடான்னா.. கையால உருட்டுறீங்க கர்ர்:)).. ஸ்னோவுக்குள் எல்லாம் மீ 4000.. 5000 என நடந்தேன் தெரியுமோ:)).. ஆஆஆஆஆஆஆ என்னாது எரியுதோ எரியுதோ இந்தாங்கோ கோல்ட் மோர்:)) குடிங்:) கோ:)) ஹா ஹா ஹா:)

      Delete
  31. ஞானி அதிராவின் தத்துவ முத்துக்கள்..
    ஏற்கனவே உங்க பதிவுகளை வாசிச்சு ஞானி ஆக்கியாச்சு. எங்களை ஞானியாக்காமல் விடமாட்டேன் என ஒரு தலைப்பில் எழுதினீங்கள்ல்லோ அந்த தலைப்பு இதற்கு தான் பொருந்தும். வைத்திருக்கலாம் இப்பதிவுக்கு.
    எனக்கு 100 வரை ஆசையில்லை. இருக்கும் வரை ஹெல்தியா இருந்தால் சரி. மற்றவர்களுடன் அன்பாக நடக்கவேணுமென ஆசை.
    /இன்னொன்று ஜிம் போனால் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நல்ல புத்துணர்ச்சியாக இருக்கும், மனம் உற்சாகமடையும்.// உண்மைதான். அன்றைய நாள் உற்சாகமாகவும்,புத்துணர்வாகவும் இருக்கும். ஏதோசாதிச்ச மாதிரி..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //ஞானி அதிராவின் தத்துவ முத்துக்கள்..//

      ஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ மீ ஞானி என ஒத்துக் கொண்டிட்டீங்க எல்லோரும்:)).

      //ஏற்கனவே உங்க பதிவுகளை வாசிச்சு ஞானி ஆக்கியாச்சு.///

      ஹா ஹா ஹா இல்லாட்டில் விடமாட்டேனெல்லோ தேம்ஸ்ல முக்கி எடுத்தாவது ஞாஆஆஆஆஆஆனி ஆக்கிடுவேன்:))..

      உண்மைதான் மனதுக்கு ஏதும் சங்கடம் கஸ்டமாக இருக்கும்போது ஜிம் போனால் ஏதோ புதுப்பிறவி எடுத்ததைப்போல, எந்த பிரச்சனையுமே இல்லாததுபோல வெளில வருவோம் உற்சாகமாக.

      Delete
  32. நல்ல கருத்துகள் அடங்கிய போஸ்ட் அதிரா!!! முழுவதும் வாசித்து விட்டேன்...முடிந்த வரை கருத்து இடுகிறேன்....இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்க வீட்டுக்கு போய்விடுவேன்..அப்புறம் நோ நெட்...அதான்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. உங்களையும் நெட்டையும் நினைக்க கவலையாக இருக்கு.. இது வேறு வழி ஏதும் இல்லையோ?.. சுத்தமா நெட் வேண்டாம் என சொல்லி, பின்பு மீண்டும் புக் பண்ணி புதுசா ஜொயின் ஆகிப் பார்க்கலாமே..

      பதில்களைக்கூட நீங்க படிக்கிறீங்களோ தெரியாதே...

      இருப்பினும் இவ்ளோ கஸ்டத்திலும் விடாமுயற்சி பண்ணி வந்திடுறீங்க மிக்க நன்றி கீதா.

      Delete
  33. சைக்கிளை ஓட்டி ஓட்டி அது நசுங்கி டிரெட்மில்லாக ஆகிவிட்டதா? இந்த சந்தேகத்தை யார் தீர்ப்பார்கள்? அனேகமா ஏஞ்சலின் சொல்லணும்.

    ReplyDelete
    Replies
    1. ///சைக்கிளை ஓட்டி ஓட்டி அது நசுங்கி டிரெட்மில்லாக ஆகிவிட்டதா?//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. மீ 32 கிலோவெல்லோ:))..

      /// அனேகமா ஏஞ்சலின் சொல்லணும்.//

      ஹையோ ஹையோ கோமதி அக்காவைக் கேட்டிருக்கக்கூடாதா?:) அவதான் அதிராவை விட்டுக் குடுக்காமல் பதில் சொல்லுவா:)).. எதுக்கு இப்போ பிஸியாக இருக்கும் ஒரு பிள்ளையை(அஞ்சு) டிசுரேப்பு பண்ணீங்க பாவம் எல்லோ:)).. அதிலயும் லெண்ட்[lent] ரைம் இல் ஏதும் ஒரு சபதம் போல எடுப்பினம் எல்லோ:) அஞ்சுவிடம் ஜொள்ளி வச்சேன்:).. அதிராவை எப்பவும் புகழ்ந்து தள்ளுவேன் என விரதம் இருங்கோ என:)) அதனாலதான் அடடடடக்கி வாசிக்கிறா ஹையோ ஹையோ:))

      Delete
    2. [im]https://i.imgur.com/OEX4dMA.jpg[/im]

      ஆங் வந்திட்டேன் நெல்லை தமிழன் ..இதோ இப்படி தான் மியாவ் எக்ஸர்சைஸ் செய்றாங்க :)
      சைக்கிளில் சைடால சாப்பிட முடியலையாம் :)

      Delete
  34. அதிரா ரொம்ப வயக்கெட்டுப் போயிட்டேன் ரெட்மில் ஓடி எனப் புரிஞ்சிருக்குமே:)) - இப்படி டிரெட்மில்ல ஓடினீங்கன்னா, உங்கவீட்டுக் கூரைமேல் இருந்த ஐஸ்கள் எல்லாம் உதிர்ந்திருக்கணுமே. ஆனால் நீங்க ஐஸ் கத்திகள் நிறைய படம் போட்டிருந்தீங்களே. நீங்களும் டிரெட் மில்லை, துணி காயப்போடுவதற்குத்தான் உபயோகிக்கிறீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான் பல வீடுகளில் துணிதான் காயுதாம்:).. நல்லவேளையா எங்கள் வீட்டில் எல்லோரும் அப்பப்ப எண்டாலும் செய்வதுண்டு...

      பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போதும் ஒன்று வைத்திருந்தோம்.. அப்போ ஆருமே நடப்பதில்லை.. அதனால இடம் பிடிக்குதே சும்மா .. என அதனை சரட்டி ஷொப் க்கு சும்மா கொடுத்தோம்.. இங்கு வாங்குவது ஈசி ஆனா பின்பு விற்க முடியாதே.. சும்மாதான் குடுக்கோணும்..

      பெரிய எக்சசைஸ் சைக்கிளும் இருந்துது.. அதையும் சும்மா குடுத்தோம்.. இப்போ திரும்ப சைக்கிளில் இருந்து ரெட்மில்லும் வாங்கியாச்சு.. இருப்பினும் நான் ஜிம் இலும் மெம்பர்தான்... மாதம் 20 பவுண்ட்ஸ் டிரெக்ட் டெபிட் ஆல் போய்க்கொண்டே இருக்கும்.

      ஆனா நேரம் கிடைக்கும்போது அங்கும் போவேன். இனி சமர் வந்தால் அடிக்கடி போகலாம். ரோட்டிலும் நடக்கலாம்.

      Delete
  35. தண்ணீர் குளிரும்.. - அதனால்தான் மதுரைத் தமிழன் இதை தவறாகப் புரிந்துகொண்டு குளிர்ந்த பீர் அடிக்கிறேன் என்று பல தடவை சொல்லிக்கொண்டிருக்கிறாரோ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எப்பூடி இப்படி எல்லாம் ஐடியாவா வருது உங்களுக்கு?:).. அந்த குளிர் தண்ணியாலதான் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்குது போல:))

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
  36. /எது நம்மை மகிழ்ச்சிப்படுத்துதோ.. எதனால் நாம் சந்தோசம் அடைகிறோமோ அதில் கூடுதல் கவனம் செலுத்தி நம்மை முடிந்தவரை ஹப்பியாக வைத்திருக்கோணும்... கடந்த காலத்தையும் நினைக்கக்கூடாது.. வருங்காலத்தையும் நினைக்கக்கூடாது.. இப்போதையதை நினைத்து ஹப்பியா இருக்கோணும்.// இதை பார்த்ததும் படித்த ஓஷோவின் மொழிதான் ஞாபகம் வருது., நாளை என்று ஒன்று கிடையாது... ‘இன்றே’ நிஜம் என்பதுதான் அது.

    //சில விசயங்களில் தலையிடாமல் இருப்பது, சிலரோடு சேர்ந்தால் எப்பவுமே மனதுக்கு துன்பம் வந்து விடுகிறது எனில், அதை விட தனியே நிற்பது எவ்வளவோ மேலானது.

    நமது சேர்க்கையைப் பொறுத்தே நமக்கு இன்பமும் துன்பமும் , ஏன் மரியாதைகூட அப்படியேதான்,.....///
    உண்மைதான் அதிரா. அனுபவபட்டால் பிறகுதானே புத்தி வருது. இந்த மாதிரி அனுபவங்கள்தான் மனத்தையும் பக்குவப்படுத்துகிறது. எத்தனை விதமான,பலவிதகுணமுள்ளவர்களோடு பழக,வாழ நேரிடுகிறது. ஒரு சூழலில் நாமாக சுதாகரித்து வெளியே வந்துவிடுவது நல்லது. இல்லையெனில் கஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. ///உண்மைதான் அதிரா. அனுபவபட்டால் பிறகுதானே புத்தி வருது//

      அனுபவம் தானே வாழ்க்கை. அதனாலதானே கண்ணதாசன் அங்கிள் சொல்றார்.. நான் எல்லாத்திலும் அனுபவப்பட்டிருக்கிறேன்.. அதனால எது நல்லது எது கெட்டது என அட்வைஸ் பண்ணும் திறமை என்னிடம் இருக்கு என.

      எதுவும் பழகிய பின்னர்தானே தெரிகிறது. அதனால தான் கொஞ்சக் காலம் மேலோட்டமாகவே ஆரோடும் பழகோணும்.. பின்புதான் நெருங்கிப் பழகோணும் என கண்ணதாசன் அங்கிள் ஜொள்றார்:)).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி அம்முலு.

      Delete
  37. ஓரளவுக்கு சேமிப்பு இருந்தால் போதும்... - அதிரா... இதுதான் மிகத் தெளிவில்லாத வரி. எது அந்த 'ஓரளவு'? நாளைக்கு நமக்கு உடம்பு சரியில்லாமல் பெரிய பிரச்சனை வந்தால், அதற்கான மருத்துவச் செலவுக்கு என்ன செய்வது ( நமக்கோ மனைவிக்கோ). ஒருவேளை நீ நீ நீண்ட ஆயுள் இருந்துவிட்டால், பென்ஷன் இல்லாதவர்கள் என்ன செய்வது? இதனால்தான் அர்த்தமே இல்லாமல், இலக்கே இல்லாமல் நிறையபேர் பணம் சேர்க்க முனைகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விகள் நியாயமானதுதான்.. அதுக்கேற்ப சேமிப்பும் வேண்டும்தான், ஆகவும் ஊதாரிகளாகவும் இருந்திடக்கூடாது, ஆனா சிலர் கையில் வருவதை எல்லாமே சேமிக்கோணும் என எண்ணுகிறார்களே அப்படியானவர்களைத்தான் சொன்னேன்.

      ஒருபகுதியை சேமிப்பில் போட்டு விட்டு, நாங்களும் கொஞ்சம் எஞ் சோய் பண்ணோனும்... நம் நாடுகளில் எத்தனை குடும்பங்கள் சுற்ருலா போகிறார்கள்? சிலர் வீட்டை விட்டு வெளிக்கிடுவதே இல்லையே ஏன்?.. பணம் இல்லாததாலா? பணம் பாங்கில் இருக்கும் செலவழிக்கப் பயப்பிடுவினம்... பின்பு பார்க்கலாம் என குழந்தைகளையும் எங்கும் கூட்டிப் போக மாட்டினம். சரி நம் நாடுகளை விட்டாலும்..

      வெளிநாட்டுக்கு வந்த நம்மவர்களும் இதைத்தானே செய்கிறார்கள்.. தகுதிக்கு மீறி.. வருமானத்துக்கு மீறி லெவலுக்காக பெரிய வீடு, லக்‌ஷறி கார் வாங்கிப் போட்டு உண்ணாமல் உறங்காமல் கணவன் மனைவி சந்தித்துப் பேச நேரமில்லாமல், பிரிஜ்ஜில் எழுதி ஒட்டி வைத்து விட்டுப் போகிறார்களாம் வேர்க்குக்கு.. இது தேவையா?.. வெளிநாட்டில் அதுவும் நம்மிடத்தில் மருந்து ஃபிரீ அனைவருக்கும்.. கல்வி ஃபிரீ யூனிவசிட்டி வரை.. வயதானால் பயப்படத் தேவையில்லை சீனிய ஹோம் இருக்கும்:).. இப்படி இருந்தும் நம் மக்கள் ஏன் ஒரு நேரம் க்டையில் உணவு வாங்க கணக்குப் பார்க்கினம் கர்ர்:)..

      எங்கள் உறவுக்காரர் ஒரு குடும்பம், அமெரிக்காவில் சொவ்ட்வெயார் எஞ்சினியர்.. மிகவும் பணக்காரர்.. கனடாவில் வீடு அமெரிக்காவில் வீடு இருக்கு.. கனடா வீட்டிலும் கார் இருக்கு அமெரிக்காவில்... எக்ஸ்ட்டாவா ஒரு கார் என 3 வாகனம் இருக்கு.. இத்தனையும் இருந்து என்ன.. அவர் பகலில் சூப்தான் குடிப்பாராம்.. அப்போ தான் மட்டும் எப்படி சாப்பிடுவது என மனைவியும் பட்டினிதானாம்.. குழந்தைகளுக்கு ஒரு மக்டொனால்ட் ஃபூட் கூட வாங்கிக் குடுப்பதில்லை.. மனைவிதான் எங்கள் உறவு.. முன்பு நல்ல குளுகுளுவா இருந்த பிள்ளை இப்போ மெலிஞ்சு காய்ஞ்சு போய் இருக்கிறா... மலிவான உடுப்புக்களே தேடி வாங்குவா.

      இதில் புதினம் என்னவெனில்.. இப்போ மனைவிக்கு ஒரு கார் ஓடர் கொடுத்து 2 வருடமாக செய்து எடுத்துக் குடுத்திருக்கிறாராம்.. காரின் விலை என்ன தெரியுமோ?.. over 200 thousand american dollars[2லட்சம்] ஆம்ம்ம்.. இதில் என்ன இருக்கு? இது பெருமைக்காகத்தானே..

      சந்தோசமான வழிமுறைகளைத்தானே நாட வேண்டும். சரி அது அவரவர் விருப்பம்.. சிலருக்குத்தேவை பணம் புகழ்.. நமக்குத் தேவை.. கொஞ்சம் பணம் கொஞ்சம் செலவு அதிக ஹப்பி:))..ஹா ஹா ஹா.

      Delete
    2. //அவர் பகலில் சூப்தான் குடிப்பாராம்..// - பொதுவா நம்ம கிட்ட என்ன பழக்கம் என்றால், வங்கில 1 லட்சம் சேமிப்பு இருந்தால், 'எனக்கு 10 லட்சம் இருந்தா போதும். ரிடையர் ஆகிடுவேன்' என்ற நினைப்பு வரும். அது 10 லட்சமா ஆகும்போது, 1 கோடி போதும், வாழ்க்கையை நல்லா வாழ்ந்துடலாம்னு தோணும். அப்புறம் அதைவிட அதிகமாக. இந்த எண்ணம் இல்லைனா, 3000 கோடி ரூபாய், பத்தாயிரம் கோடி ரூபாய்னு ஏன் சேர்க்கிறாங்க?

      'உடம்புல ஒட்டறதுதான் ஒட்டும்' என்பார்கள். அவனவனுக்கு விதிச்சதைத்தான் அவன் எஞ்சாய் பண்ணமுடியும். 50 வயசாச்சுன்னா, டாக்டரே இதைச் சாப்பிடக்கூடாது, அது கூடாது என்பார்கள். அந்த சாஃப்ட்வேர் எஞ்சினீயர், 'கண் கெட்டபிறகுதான் சூரிய நமஸ்காரத்தைப் பற்றி சிந்திப்பார்னு தோணுது.

      வெளி நாட்டுக் காரங்க, உண்மையிலேயே லைஃபை எஞ்சாய் பண்ணுகிறார்கள். பசங்களுக்கு 18 வயசாச்சா, அப்புறம் தாங்கள் முழுமையா எஞ்சாய் பண்றாங்க. வருஷா வருஷமோ அல்லது இரண்டு வருஷத்துக்கு ஒரு முறையோ, நெடிய சுற்றுலா போறாங்க. அதேபோல், நம்ம ஊரைப்போல், கணவனுக்காக மனைவி தியாகம் பண்ணறது, மனைவிக்காக கணவன் என்று தங்கள் வாழ்க்கையை இழப்பதில்லை. அதுவும் நல்ல வாழ்க்கைமுறை என்றுதான் தோணுது.

      எனக்கு எப்போதுமே 'தேவைக்கு அதிகமா' எதிலும் செலவழிப்பது பிடிக்காது. கார் என்றால், சௌகரியமாக, டயோட்டா கேம்ரி போன்றது போதாதோ? எதற்கு பிஎம்டபிள்யூ என்பது என் எண்ணம்.

      Delete
    3. //அப்புறம் அதைவிட அதிகமாக. இந்த எண்ணம் இல்லைனா, 3000 கோடி ரூபாய், பத்தாயிரம் கோடி ரூபாய்னு ஏன் சேர்க்கிறாங்க?//

      மிக சரியா சொல்றீங்க.. ஆசை அடங்காது...

      //'உடம்புல ஒட்டறதுதான் ஒட்டும்' என்பார்கள். அவனவனுக்கு விதிச்சதைத்தான் அவன் எஞ்சாய் பண்ணமுடியும்.//
      இதுவும் 100 வீதம் உண்மையே ஆனா ஆசை கண்ணை மறைச்சிடுது பலருக்கு...

      //அந்த சாஃப்ட்வேர் எஞ்சினீயர், 'கண் கெட்டபிறகுதான் சூரிய நமஸ்காரத்தைப் பற்றி சிந்திப்பார்னு தோணுது.///

      ஹா ஹா ஹா நான் எல்லாம் கதையையும் எழுதவில்லை:) கண்கெடும்படியான ஒரு பெரிய சீரியஸ் சம்பவம் நடந்த பின்பே மனைவிக்கு இக்காரைப் பரிசளித்தார்:))

      Delete
    4. ///வெளி நாட்டுக் காரங்க, உண்மையிலேயே லைஃபை எஞ்சாய் பண்ணுகிறார்கள்.//

      நீங்க பல நாடுகளுக்கும் போய் வந்தமையால் உண்மையை ஒத்துக் கொள்றீங்க. உண்மைதானே அடுத்தபிறவி இருக்கு என்கிறார்கள்.. இல்லை என்கிறார்கள்.. அது இருந்தென்ன விட்டென்ன நமக்கு என்ன தெரியப் போகிறது அதனால இப்பிறவியில் தானே சந்தோசமாக எதையும் அனுபவிக்க முடியும்.

      இதில் இன்னொரு பக்கமும் இருக்கு. 18 வயதோடு பிள்ளைகளைக் கைவிட்டு விடுவதால், பெற்றோருக்கு மட்டுமல்ல பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சிதானே.. சின்ன வயதிலேயெ தாமும் என் சோய் பண்ணத் தொடங்கி விடுகிறார்கள்.. நம் நாட்டில் பிள்ளைகளை இறுக்கிப் பிடிப்பதால் அவர்கள் அனுபவிக்க பெற்றோரிடம் பெர்மிசன் கேட்க வேண்டி இருக்கே கர்ர்:)).

      //எனக்கு எப்போதுமே 'தேவைக்கு அதிகமா' எதிலும் செலவழிப்பது பிடிக்காது. கார் என்றால், சௌகரியமாக, டயோட்டா கேம்ரி போன்றது போதாதோ? எதற்கு பிஎம்டபிள்யூ என்பது என் எண்ணம்.//

      இதுவும் உண்மையிலும் உண்மை, ஆனா சிலருக்கு சிலதில் ஆசை வரும்.. வருவதில் தப்பில்லை.. பணம் இருந்தால் வாங்கலாம்..அதைவிட்டு. கடன்பட்டு கஸ்டப்பட்டு.. எதையும் அனுப்பவிக்காமல் உண்ணாமல் உறங்காமல் வாங்கி,.. தம்மை வருத்திப் பிறருக்கு ஷோ காட்டுவதில் என்ன இருக்கு.. ஆனா ஏன் பலரும் இதனைப் புரிஞ்சு கொள்வதில்லை.. தம்மை அடுத்தவர்கள் தரக்குறைவாக எண்ணிவிடுவினமோ எனும் தாழ்வு மனப்பான்மைதான் காரணமோ என நினைகிறேன்.

      Delete
  38. /முக்கியமாக பேசித் தீர்க்க வேண்டிய, முக்கிய இடத்தில் மட்டும் நியாயம் பேசுங்கோ, மற்றும்படி புன்னகைத்தபடி நகர்ந்தால் நம் இதயத்தை நாம் பாதுகாக்கலாம்:).// இதை நானும் செய்கிறேன். மற்றபடி கூடுதலா பேசுவதை தவிர்த்து, முடிந்தளவு அளவோடு நடந்து கொள்வதுதான். மற்றபடி முடிந்தவரை மனதை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய விசயங்களிலேயே
    கவனத்தை செலுத்துவது.
    நிறைய விடயங்களை அத்தனை அருமையான, உண்மையான, (தேவையானதும் கூட) விடயங்களை தந்திருக்கிறீங்க. எல்லாமே அனுபவங்கள்தான்.
    அன்னை தெரசாவின் அறிவுரை அருமை ஊசி இணைப்பு சூப்ப்ப்ப்ப்பர்... பொருத்தமான படம். ஆனா அஞ்சு இப்படி கையை வைச்சுக்கொண்டு நிற்கமாட்டாவே.......
    பாடல் கேட்டிருக்கேன். Rare song ஒலிபரப்புவது குறைவு ரேடியோக்களில்..

    //இதைப் படிச்சு இப்போ முக்கால் ஞானியாகி இருப்பீங்களே:).. ஆவ்வ்வ்வ் வெற்றீஈஈஈ வெற்றீஈஈஈஈஈ:))// எங்களை ஏற்கனவே ஆக்கிட்டீங்க... இப்ப புதுசா ஆகாதவைதான் ஆகனும்.

    ReplyDelete
    Replies
    1. //பாடல் கேட்டிருக்கேன். Rare song ஒலிபரப்புவது குறைவு ரேடியோக்களில்.// ஓம் நானும் இது ரேடியோவில் கேட்டதாக இல்லை, என்னிடம் இருக்கும் சிடியில்தான் கேட்டேன். காதுக்கு இனிமையா இருக்கு.. கண்ணுக்கும்தேன்ன்:)..

      //எங்களை ஏற்கனவே ஆக்கிட்டீங்க... இப்ப புதுசா ஆகாதவைதான் ஆகனும்.///

      ஹா ஹா ஹா .. அப்போ புதுசா ஆட்களை இணைக்கோணும் நம் ஆச்சிரமத்துக்கு..:).

      Delete
  39. ///// 😳 😳 😳 athiraa MBBS,MRC...Consulant .. 😳 ஆ....நான் உண்மையிலே எங்கட இடத்தில இருக்கிற பிகசேயிலே குதிக்கப்போரேஏஏஏன்... இது ரெம்ப ஓஓஒவரா இருக்கு.

    ஆ..அஞ்சு அஞ்சூஊஊஊஊ கெதியாக வாங்கோஓஓஓ.... நீங்க இல்லாமல் இந்த பூஸ் படும் (படுத்தும்)பாடு தாங்க முடியல.. 😩

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது அம்முலு...
      என் செக்:) பிஸி:) என்பதை தெரிஞ்சுதானே இவ்ளோ கூத்துப் போடுறேன்:) இல்லை எனில் என்ன ஆவுறது என் கெதி:))..
      அஞ்சுவுக்கு லெண்ட் ஸ்ரார்ட்[தவக்காலம்] ஆகிட்டமையால சேர்ஜ் இல் பிஸி:)).. லெண்ட் முடியும் வரை என்பாடு கொண்டாட்டம்தேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. athiraa MBBS,MRC... Consulant ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே.....

      Delete
    3. //ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே.....//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜி:) எவ்ளோ கஸ்டப்பட்டு
      “ரெண்டுநாளா” நித்திரை கொள்ளாமல் உண்ணாமல் உறங்காமல் பட்டம் வாங்கி வந்திருக்கிறேன்.. என்னைப் புகழ்ந்து 4 வார்த்தை பேசாமல் இப்பூடிச் சொல்லிட்டீங்க:) விடுங்கோ மீ 2ம் தடவையா ஞானி ஆகிறேன்ன்ன்ன்:))

      Delete
  40. ஆனாலும் செக் இல்லாமல் ப்ளாக் பொலிவில்லாமல் இருக்கு. எங்கே இருந்தாலும் கெதியா கூட்டிவாங்கோ பூஸ்.
    அஞ்சு கெதியா வாங்கோ 😔

    ReplyDelete
    Replies
    1. [im]https://i.pinimg.com/originals/7f/68/10/7f6810e18df7a17d61784d72bf1cec1c.gif[/im]

      இதோ வந்துட்டேன் அம்முலு :)

      Delete
    2. ஆ..வந்திட்டீங்களா அஞ்சு. கேளுங்கோ கேளுங்கோ....இப்பதான் மூச்சு வந்தது..

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அம்முலு எதுக்கு இப்போ சும்மா இருக்கும் அஞ்சுவை அழைக்கிறீங்க:))..

      //https://i.pinimg.com/originals/7f/68/10/7f6810e18df7a17d61784d72bf1cec1c.gif//
      ஜெறி எதுக்கு இப்போ வாய் துடைக்குது?:) சமோசா சாப்பிட்டிருக்குமோ?:)..

      //ஆ..வந்திட்டீங்களா அஞ்சு. கேளுங்கோ கேளுங்கோ....இப்பதான் மூச்சு வந்தது..///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))

      Delete
  41. அதிரா ஞானியாகிட்டீங்க!! ஹா ஹா ஹா...இல்லை இல்லை நல்ல பாயின்ட்ஸ்...

    நான் சத்து மாத்திரைகளோ, டானிக்குகளோ எடுத்துக் கொள்(ல்)வதில்லை அதிரா...ஏனென்றால் அவை நம் கிட்னிக்கு (அதிரா சொல்லும் கிட்னி அல்ல ஹிஹிஹிஹி) நிஜ கிட்னிக்கு நல்லதல்ல....என்பான் என் மகன். எல்லாமே நம் உணவில் இருக்கு. உணவே மருந்து...அளவோடு உண்டு நல்ல பயிற்சிகள் செய்தால் நல்லது இல்லையா அதிரா....மற்றொன்று ஒருவருக்கு நல்லது எனப்படுவது மற்றொருவருக்கு நல்லதல்லா என்றாகிவிடுகிறதே....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா, நீங்க நெட் கஸ்டமெனில் கஸ்டப்பட வேண்டாம்.. படிச்சேன் என ஒரு கொமெண்ட் போட்டாலே மகிழ்ச்சிதான்.. படிக்கவில்லையோ என நினைக்கும்போதுதான் கூப்பிடத் தோணும்:).

      உங்களைப்போல எப்பவும் அக்டிவ்வா இருப்போருக்கு எதுவும் தேவைப்படாது கீதா.. கண்டபடி சத்துக்கு என எதுவும் எடுக்கக்கூடாதுதான்.. அதெல்லாம் எதுக்கு.. அனைத்தையும் நம்பவும் கூடாது அது கிட்னிக்கு கூடாதுதான்.

      ஆனா தரமான மல்ட்டி விட்டமின் அனைவருக்கும் நல்லதுதான் கீதா... வயதாக வயதாக வரும் நிறையப் பிரசனைகளுக்கு இதில் தீர்விருக்கும்.. வருமுன் காப்போன் போல:))

      Delete
  42. தூய அன்பிருந்தால் நம்பிக்கை தானாகவே வந்துவிடும். அந்த நம்பிக்கையில் ஆட்டம் கண்டால் நம் அன்பும் ஆட்டம் கொள்கிறது என்று அர்த்தம்...ஆனால் இப்பாடம் கற்று நம் மனம் பக்குவப் படுவதென்பது ரொம்பவே கடினம்...

    நானும் எதையும் தலைக்குள் போட்டுக் கொள்ள மாட்டேன்...ஐ மீன் யார் என்ன சொன்னாலும் கடந்து சென்றுவிடுவேன்....இரவு படுத்தால் நிலம் முகர்ந்தால் அப்படியே கண் அயர்ந்துவிடுவேன். மனதில் இருந்தால் அதான் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தால் நித்திரா தேவிக்கு நம்மைப் பிடிக்காது...ஆனால் நானும் நித்திரா தேவியும் செம க்ளோஸ் தெரியுமா அதிரா...பயங்கர ஃப்ரென்ட்ஸ்!! ஹா ஹா ஹா ஹா...

    எனக்கு நகைச்சுவையாக எழுதத் தெரியாது வரவில்லை என்றாலும் நான் மிகவும் ரசிப்பது நகைச்சுவை...எப்போதும் சிரித்துக் கொண்டு இருப்பேன்...சிறிய நகைச்சுவைக்கும் சிரிப்பேன்...அது பரப்பும் பாஸிட்டிவ் வைப்ரேஷன் தனிதான் இல்லையா அதிரா....!!

    கோபம் வராது என்று சொல்வதற்கில்லை....பொயிங்குவது இல்லை....பல விஷயங்களையும் புறம் தள்ளிவிடுவதுண்டு...இல்லையே அமிக்கபிள் சொல்யூஷனை யோசிப்பதுண்டு...பெரும்பாலும் கோபம் அடங்கிவிடும் ஆனால் அது சில சமயம் கண்ணீராய் வரும்...ஹா ஹா ஹாஅ..உடனே ப்ரேயர் தான் என் ஒரே வழி....காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க....என்று முருகனை அழைத்துவிடுவேன்....

    இந்த நிமிடங்களை வாழ்வோம்!! நல்லதாகவே நினைத்து எல்லோரையும் மகிழ்வித்து இருப்போம்...இல்லையா....

    ஏஞ்சல் வந்து கலாய்க்கும் போது நான் வர இயலாது போய்விடும்...ஹும்....வைரவா கும்மி அடிக்கவேண்டும் என்பதற்காகவாவது இந்த நெட்டை சரியாக்கு....ஹா ஹா ஹா ஹா

    ஊசிக்குறிப்பு மதர் தெரஸா ஆம் இது வாசித்ததுண்டு....நல்ல குறிப்பு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //தூய அன்பிருந்தால் நம்பிக்கை தானாகவே வந்துவிடும். அந்த நம்பிக்கையில் ஆட்டம் கண்டால் நம் அன்பும் ஆட்டம் கொள்கிறது என்று அர்த்தம்.///

      உண்மை கீதா, ஒரு தடவை நம்பிக்கையை இழந்திட்டால்.. அதைத் திரும்பக் கட்டி எழுப்புவது மிகவும் கஸ்டமே..

      //ஆனால் நானும் நித்திரா தேவியும் செம க்ளோஸ் தெரியுமா அதிரா...பயங்கர ஃப்ரென்ட்ஸ்!! ஹா ஹா ஹா ஹா...//

      ஹையோ இந்த விசயத்தில் நீங்க குடுத்து வச்சனீங்க கீதா... எனக்கும் நித்திரைக்கும் எட்டாப் பொருத்தம்..கர்:)).. ஒரு குட்டிச் சத்தம் கேட்டால் டக்கென முழிச்சிடுவேன்.. பின்பு நித்திரை வரவே வராது... 9 க்குப் படுத்தால் 2,3 க்கு முழிப்பு வந்திடும்.. அதனால இழுத்தடித்து 11 க்கு கிட்டத்தான் நித்திரைக்கு ரெடி ஆவேன்.. அதிலும் ஈவினிங் படுத்திட்டால் நைட் சிவராத்திரிதான் ஹையோ ஹையோ:))

      //சிறிய நகைச்சுவைக்கும் சிரிப்பேன்//

      ஹா ஹா ஹா அதுதான் எங்களுக்கும் தெரியுமே:).. கிச்சுக்கிச்சு மூட்டத் தேவையில்லை:))

      Delete
    2. //கோபம் வராது என்று சொல்வதற்கில்லை....பொயிங்குவது இல்லை..//

      மனிதர் எனில் கோபம் வரத்தான் செய்யும்.. ஆனா பொயிங்காமைதான் முக்கியம்:)).

      //பெரும்பாலும் கோபம் அடங்கிவிடும் ஆனால் அது சில சமயம் கண்ணீராய் வரும்//
      உண்மை.. கோபத்தை அடக்கினால் அது ஏதோ ஒரு வழியில் வெளியே போகத்தானே வேண்டும்.. இதற்காகத்தான் கோபம் வந்தால், மூச்சை நன்கு உள்ளே இழுத்து வெளியே விடச் சொல்கிறார்கள் அண்ட் நிறைய தண்ணி குடிச்சாலும் அடங்கும் என்கிறார்கள்..

      பறவாயில்லை கீதா, முடியும்போது வந்து போங்கோ..

      Delete
  43. அதிரா மகாபாரதத்தில் நிறைய நல்ல மாரல் கருத்துகள் உண்டு...அதுவும் யுதிஷ்ட்ரர் யக்ஷ்னின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவது மிகவும் அருமை..

    அது போன்று யுதிஷ்ட்ரர் அடிக்கடி சொல்வதாக வருவது..."க்ஷமா ஹி ஸத்ய ஹை" தமிழில்...சொல்வதென்றால்... மன்னிப்பதே தர்மம்.....மறப்போம் மன்னிப்போம்...மன்னித்தல் வந்துவிட்டால் நம் மனம் மிகவும் லேசாகி...மகிழ்வுடன் இருக்கும் நம் வாழ்நாளை அதிகரிக்குதோ இல்லையோ...வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்.....நான் இங்க கேப்டனின் வசனத்தைச் சொல்ல மாட்டேன் "தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு!!" ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது கீதா, மன்னிக்கோணும் எனத் தெரிந்திருந்தாலும்.. மனம் பக்குவப் படும் நிலை வரும்வரை மன்னிப்பது கஸ்டம்... சிலருக்கு இயற்கையிலேயே கோபம் பெரிதாக வருவதில்லை, ஆனா சிலருக்கு தொட்டதுக்கெல்லாம் கோபம் வரும் பின்பு கவலைப்படுவார்கள்.. அது பிறப்பில்.. ஜீன்ஸ் இல் ஊறியதாக இருக்கும்.

      Delete

    2. //ஜீன்ஸ் இல் ஊறியதாக இருக்கும்//

      எச்சூஸ் மீ :)ஒரு டவுட் ..ஜீன்ஸ்னா டெனிம் ஆ இல்லை corduroy ஆ இல்லை ஸ்டோன் வாஷா ??

      Delete
    3. //எச்சூஸ் மீ :)ஒரு டவுட் //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடி டவுட் வருமெனத் தெரிஞ்சுதான்.. முதலில் ஜீன்ஸ் என எழுதிப்போட்டு பின்னர் அதன் முன்னால் பிறப்பில் எனப் போட்டேன்:) நானெல்லாம் இதில வலு உசாராக்கும்:))..

      https://uk.video.search.yahoo.com/search/video;_ylt=AwrEzeIv0qpayhYAkiF2BQx.;_ylu=X3oDMTBncGdyMzQ0BHNlYwNzZWFyY2gEdnRpZAM-;_ylc=X1MDMjExNDcxNzA0NgRfcgMyBGFjdG4DY2xrBGJjawNmNGlpcW1oY3Z1dHYxJTI2YiUzRDMlMjZzJTNENWkEY3NyY3B2aWQDZE9PQWpERXdMakh5U2xxMFdmOTM0UUNsTnprdU53QUFBQUFGc21wYgRmcgNtY2FmZWUEZnIyA3NhLWdwBGdwcmlkAzZHYUZIRlIwVDAyVW1nU0xXcG5KckEEbXRlc3RpZANJTkZSQSUzREI1NTM0BG5fcnNsdAM2MARuX3N1Z2cDNARvcmlnaW4DdWsudmlkZW8uc2VhcmNoLnlhaG9vLmNvbQRwb3MDMARwcXN0cgMEcHFzdHJsAwRxc3RybAMyNgRxdWVyeQNhIGNhdCBpcyBzY29sZGluZyB0byBhIHJhdAR0X3N0bXADMTUyMTE0NDMwNgR2dGVzdGlkA251bGw-?gprid=6GaFHFR0T02UmgSLWpnJrA&pvid=dOOAjDEwLjHySlq0Wf934QClNzkuNwAAAAAFsmpb&p=a+cat+is+scolding+to+a+rat&ei=UTF-8&fr2=p%3As%2Cv%3Av%2Cm%3Asa&fr=mcafee#id=9&vid=ae65dd1a314617e694c0f3a4fb49a6d9&action=view

      Delete
  44. ஊசி இணைப்பில் ஏஞ்சலுக்குப் பின்னால் நிற்பது நான் தானே அதிரா??!! சொல்லவே இல்லை??!! வெயிட்டிங்க் நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் முடிச்சுப்போட்டு வாங்கோ...நான் ஏறி நடக்கோணூம்...ஹான் ...ஆனா நீங்க ரெண்டு பேரும் எனக்கு வெயிட் செய்யணும்...சொல்லிப்புட்டேன்....ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் ரொம்ப வயக்கெட்டு இருக்கிறேன் கீதா:) அதனால நீங்க எனக்குப் பக்கத்திலேயே நடக்கலாம்.. இடம் இருக்கும்:).. அஞ்சுவுக்குத்தான் பக்கத்தில் இடமிருக்காது:) ஹா ஹா ஹா:)).. அவ ஏறவே முடியாமல் கையால உருட்டுறா கர்ர்ர்ர்ர்:))

      Delete
  45. ஹை ஏஞ்சல் ஜெர்ரி படம் போட்ட்டுருக்காங்கோ...மீ ட்டு ஜெர்ரி பூஸார் பூஸானந்தாவாகி இன்று ...உங்களுக்கு தூப, தீப, விபூதி குங்கும வாசனை வருதா ஏஞ்சல்....எனக்கு இங்க வரை வருது!!!! ஆஸ்ரமம் தொடங்கிட்டாங்களோ?!!! ஹா ஹா ஹா ஹா ஹா...தேம்ஸ்ல குதிக்கப் போறேனு சொல்றவங்க இப்ப அங்க ஆஸ்ரம்ம் தொடங்கிட்டதா பேச்சு அடிபடுது...ஹா ஹா ஹா ஹா..பூஸாரை காவி உடையில் நினைச்சுப் பார்த்தேன் சிரிச்சுட்டேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. [im]https://scontent-mxp1-1.cdninstagram.com/vp/cf3811f9755be46ea02282875a606355/5B27D45F/t51.2885-15/e35/28158716_222923838276853_5259752233561489408_n.jpg[/im]

      கீதா :) எனக்கு ஸ்னாப்சாட்டில் பூஸ் அனுப்பினாங்க :)

      சாது ஆகிய மியாவ் மியாவ்

      Delete
    2. ஹா..ஹா.... செம. பூஸார்.. எனக்கு சிரிச்சு முடியல. 😂 😂 😂

      Delete
    3. 'உருத்திராட்சப் பூனை' என்று சொல்வது, ஆள் கள்ளம், ஆனால் நல்லவன்போல் நடிக்கிறான் என்பதற்காகத்தானே சொல்வார்கள். நீங்கள் போட்டுள்ள படம் இதைச் சொல்கிறதோ ஏஞ்சலின்?

      Delete
    4. [im]https://78.media.tumblr.com/065cb9b0fce84eb1e97ff71a24a17871/tumblr_oqkxdlVH031vfbqwco1_400.gif[/im]

      அவ்வ்வ்வ் ஹையோ

      Delete
    5. ///.பூஸாரை காவி உடையில் நினைச்சுப் பார்த்தேன் சிரிச்சுட்டேன்...//
      ஹா ஹா ஹா கீதா:) விரைவில் பூஸானந்தாவின் தரிசனம் உங்களுக்கு கிடைக்க இருக்கு:) வெயிட் அண்ட் சீ:))

      --------------
      //கீதா :) எனக்கு ஸ்னாப்சாட்டில் பூஸ் அனுப்பினாங்க :)

      சாது ஆகிய மியாவ் மியாவ்//

      ஹா ஹா ஹா கர்ர்:)) ஒரிஜினல் ஜாமியாரேதேன்ன்ன்ன்:))

      Delete
    6. ///நெ.த.Wednesday, March 14, 2018 3:12:00 pm
      'உருத்திராட்சப் பூனை' என்று சொல்வது, ஆள் கள்ளம், ஆனால் நல்லவன்போல் நடிக்கிறான் என்பதற்காகத்தானே சொல்வார்கள்.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) அது உருட்திராட்சம் இல்லை:) டயமண்ட் நெக்லெஸ் ஆக்கும்:)) ஹையோ ஹையோ சாமியார் ஆகவும் விடாயினம் டொக்டர் ஆகவும் விடாயினமாமே கர்ர்ர்ர்:)).. இனிப் பைலட் ஆகிட வேண்டியதுதான்:))

      Delete
    7. priyasakiWednesday, March 14, 2018 3:07:00 pm
      ஹா..ஹா.... செம. பூஸார்.. எனக்கு சிரிச்சு முடியல.

      [im]https://78.media.tumblr.com/065cb9b0fce84eb1e97ff71a24a17871/tumblr_oqkxdlVH031vfbqwco1_400.gif[/im]

      ------------------>
      இனி என், காவி உடைப் பொக்கட்டில் இருக்கும்:)) ஆயுதத்தைத் தூக்கிட வேண்டியதுதேன்...:) அப்பொதான் எல்லோரும் பயப்புடுவினம்:))

      [im]http://www.ndcabins.com/CatShootingPheasant.gif[/im]

      Delete
  46. ஜிம்பிள் லைஃப்!!! அது நம் மனதின் அடிநாதமாய் இருந்துவிட்டால் எப்பவும் ஹார்மொனிதான்!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மை கீதா..

      மேலே உங்கள் பதில்களுக்கும், ஸ்ரீராமுக்கும் இன்னும் குடுக்க இருக்கு மிகுதி அனைத்துக்கும் நாளை வருகிறேன்ன்.. அதுவரை இந்தாங்கோ இதைச் சாப்பிடுங்கோ:)) பீஸ்ஸ்ஸ்ஸ்:) கோச்சுக்காமல்:)).

      ஊசிக்குறிப்பு:
      கீதா.. முக்கியமா.. அஞ்சு ..அம்முலு.. நெ.தமிழன்.. கில்லர்ஜி க்கு குடுத்திடாதீங்க:)) ஏனெனில் அவர்களுக்கு சுகர்:)) இருக்காமே:)).. அதனால சாப்பிடக்கூடாது எனும் நல்லெண்ணத்திலேயே ஜொள்றேன்:))[புரளியைக் கிளப்பிடோணும் இல்லாட்டில் நமக்குத்தான் ஆபத்து:))].. ஆச்சிரமத்துக்கே நெருப்பு வச்சாலும் வச்சிடுவினம் கர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..

      [im]http://media-cache-ak0.pinimg.com/736x/2a/a2/1b/2aa21bd1ac1185dd69470f92972f552f.jpg[/im]

      Delete
    2. ஷுகர் இருக்குன்னு எப்போப்பார்த்தாலும் சொல்றது நம்ம கீதா ரங்கன். எனக்கு ஷுகர் இருக்குன்னு யார் சொன்னா? நார்மல் ரீடிங் 5.7. என்னவோ தோன்றியது. இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் (2 மாசமா)

      ஏஞ்சலின், இது நீங்க பண்ணியதில்லை, கடையில் வாங்கினது என்று சொன்னதால், நான் ரெண்டு மூணு எடுத்துக்கொண்டேன்.

      Delete
    3. //எனக்கு ஷுகர் இருக்குன்னு யார் சொன்னா?//

      ஹா ஹா ஹா அதுதானே ஆர் அப்படிச் சொன்னது?:)).

      //என்னவோ தோன்றியது. இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் (2 மாசமா)//

      ஓ உண்மையாகவோ நல்ல விசயம்.. அடியோடு நிறுத்தத் தேவையில்லை அப்பப்ப ஆசை வந்தால் சாப்பிடலாம்.

      நானும் கோதுமை மா, ஆட்டா மாவை அடியோடு விடு விட்டேன் இப்போ.. அது இல்லாமல் புட்டு இடியப்பம் செய்ய முடியாதே என இருந்த காலம் போய் இப்போ பார்த்தாலே வெறுப்பாகிடுது.. ஏனைய நம் அரிசிமா மற்றும்.. குரக்கன்.. தினை சாமை கலப்புக்களில்தான் இப்போ புட்டு. எல்லாமே பழக்கத்தில் வருவதுதானே.

      ///ஏஞ்சலின், இது நீங்க பண்ணியதில்லை, கடையில் வாங்கினது என்று சொன்னதால், நான் ரெண்டு மூணு எடுத்துக்கொண்டேன்.//

      [im]http://2.bp.blogspot.com/-EMWjGqk5tuA/UIcSITu-ddI/AAAAAAAAAhU/8mNPlqxCzAM/s1600/lol_cat1+(1).jpeg[/im]

      Delete
  47. நெட் கிடைக்கும் சமயத்தில் உங்களின் முந்தைய பதிவு....அப்புறம் வேறு நிறைய இருக்கு அதிரா....முடிலப்பா.....உங்களைப் போல பாஞ்சு பாஞ்சு என்னால ஓட முடியலையே!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்க அதிகம் கஸ்டப்பட வேண்டாம் கீதா நெட் இல்லாமல், படிச்சிட்டேன் என ஒரு கொமெண்ட் போட்டால் சந்தோசமாக இருக்கும்.

      மிக்க நன்றி கீதா அனைத்துக்கும்.

      Delete
  48. ஏஞ்சல் பாத்தீங்களா இன்றைய அவதாரங்களை....டொக்டர் பூசார்....தத்துவ ஞானி/சாமியார் பூசார்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பார்த்தீங்களோ எனக்கு மட்டும்தான் ஒரு பிறப்பிலேயே பல அவதாரங்கள்:).

      Delete
  49. //athiraa MBBS,MRC... Consulant //

    அம்முலு ,கில்லர்ஜி ,கீதா எல்லாருக்கும் தாங்க்ஸ் .இப்படித்தான் இப்படித்தான் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கணும்

    நீல் பாஸு அங்கிள் கிட்ட இந்த போலி டொக்டர் பத்தி கம்ப்ளெயிண்ட் கொடுத்தாச்சு :)

    ஹஆஹாஆ :) நீல் பாசு ஸ்கொட்ட்லாண்ட் யார்ட் போலீஸ்கார் இந்தியர்தான் :)
    உடனே ஆக்ஷன் எடுப்பார்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. என்ன இண்டைக்கு நீங்க 2 லேட்ட்டு:)) கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      //நீல் பாஸு அங்கிள் கிட்ட இந்த போலி டொக்டர் பத்தி கம்ப்ளெயிண்ட் கொடுத்தாச்சு :)//

      அதாரூஊஊஊஊஊ அந்தப் போலி டாக்டர்:)).. அதிரா ஒரிஜினல் இருக்க:) போலிகளும் வந்து விட்டினமோ?:) விடக்கூடா அஞ்சு இப்பவே அறிவியுங்கோ.. மீயும் சுப்பையா அங்கிள் கோர்ட் படி ஏறுறேன்ன்:)) நேக்கு கோலி.. வெரி சோரி டங்கு ஸ்லிப்ட்:) போலி எண்டாலே பிடிக்காது:)..

      //ஹஆஹாஆ :) நீல் பாசு ஸ்கொட்ட்லாண்ட் யார்ட் போலீஸ்கார் இந்தியர்தான் :)
      உடனே ஆக்ஷன் எடுப்பார்//

      நான் இப்பவே மோடி அங்கிளுக்குப் போன் பண்றேன்ன்:)).. எதுக்கும் விசயம் நமக்குள் இருக்கட்ட்டும்:).

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா.. முளையிலேயே கிள்ளிடோணும்:))

      Delete
  50. ஹலோவ் மியாவ் :) நான் இல்லாத நேரம் போஸ்டை போட்டு வச்சிருக்கீங்க கர்ர் :)#
    ஆனாலும் லேட்டானாலும் வந்து அடிப்பேன் :)

    //நூறு வயசுவரை வாழ விருப்பமோ? ஈதர் ஆயியே:)//
    கர்ர்ர் :) நாமெல்லாம் 100 வரைக்கும் இருந்தா பின்னால் வரவங்களுக்கு இடம் வேணுமில்லையா :)
    அதான் ஒரு யோசனை வந்து சாமீ எல்லாரையும் ஒரே நேரம் எடுத்துக்கோங்க :) அப்படின்னு வேண்டிட்டு வரேன்

    ReplyDelete
    Replies
    1. //ஆனாலும் லேட்டானாலும் வந்து அடிப்பேன் :) //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊ:))

      [im]http://www.kimballstock.com/pix/CAT/02/CAT-02-KH0342-01P.JPG[/im]

      ///ஈதர் ஆயியே:)///

      அதுசரி எல்லோரும் பாசை புரிஞ்சவங்கபோல சமாளிச்சு சிரிச்சுப்போட்டுப் போயிட்டினம்.. இது என்ன பாஷை என ஆரும் கேய்க்கவுமில்லை ஜொள்ளவுமில்லை கர்ர்ர்ர்:))..

      ///அதான் ஒரு யோசனை வந்து சாமீ எல்லாரையும் ஒரே நேரம் எடுத்துக்கோங்க :) அப்படின்னு வேண்டிட்டு வரேன் ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் கையை விடுங்கோ.. மீ மாட்டேன்:) மீக்கு இப்போதானே சுவீட் 16:) இன்னும் அனுபவிக்க எவ்ளோ இருக்கூஊஊ:))..

      காசிக்கு போவதென்றால் மட்டும்தேன் நான் கையைப் பிடிப்பேன்:))

      Delete
    2. /ஈதர் ஆயியே:)/
      idhar aao
      எங்க எல்லாருக்குமே தெரியுமே //come here //இக்கட சூடு



      Delete
    3. அந்த மரத்துக்கு ஏதாச்சும் ஆகட்டும் :) அவ்ளோதான் நீங்க

      Delete
    4. ///எங்க எல்லாருக்குமே தெரியுமே //come here //இக்கட சூடு //

      ஹா ஹா ஹா ஓ ஆனா அம்முலுவுக்குத் தெரியாதே:)) ஹா ஹா ஹா.

      இன்னொன்று அஞ்சு.. இக்கடச்சூடு எனில் இங்க வாங்கோ எனத்தான் நானும் அறிஞ்சேன் ஆனா அதுவல்லவாமே மீனிங்????

      Delete
    5. ///அந்த மரத்துக்கு ஏதாச்சும் ஆகட்டும் :) அவ்ளோதான் நீங்க///

      [im]https://tse2.mm.bing.net/th?id=OIP.xBnMc865qt2WSUf5WUjv5QHaFj&pid=15.1&P=0&w=225&h=169[/im]

      Delete
    6. ரண்டி தான் வாங்க சூடு //பாருங்க நும் சொல்வாங்க
      ஒத்து னாலும் இல்லை காதுனாலும் இல்லை கொஞ்சம் குழப்பம்தான்

      Delete
  51. // அப்படி எல்லாம் பயந்து ஓவர் கொன்றோலா இருந்திடாதீங்கோ.. ஓரளவுக்கு கொன்றோல் இருந்தால் போதும், மற்றபடி ஆசைக்கு என்ன வேணுமெண்டாலும் செய்யுங்கோ.//

    சரி மருத்துவரம்மா :) இப்போ உடனே போய் இந்தியன் ரெஸ்டாரன்டிலதிகமில்லை 4 வெஜ் சமோசா சாப்பிட்டு வரட்டா ?
    இதுக்கு உடனே பதில் வந்தா நான் செய்ய ஏதுவாயிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ///இப்போ உடனே போய் இந்தியன் ரெஸ்டாரன்டிலதிகமில்லை 4 வெஜ் சமோசா சாப்பிட்டு வரட்டா ?///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இந்தப் போஸ்ட் போட்டது நோர்மல் கியூமன்ஸ் க்கு:)) அலெர்ஜி ஃபிஸ்க்கெல்லாம் இல்லை:)).. உங்களுக்கு வல்லாரை ஊஸ் போதும்:))

      Delete
  52. // எதனால் நாம் சந்தோசம் அடைகிறோமோ அதில் கூடுதல் கவனம் செலுத்தி நம்மை முடிந்தவரை ஹப்பியாக வைத்திருக்கோணும்...//
    ரைட்டு ரைட்டு :) அதனால்தான் நாங்க உங்க பச்சைக்கல் நெக்லஸில் கவனம் செலுத்தறோம் :)

    ReplyDelete
    Replies
    1. ///அதனால்தான் நாங்க உங்க பச்சைக்கல் நெக்லஸில் கவனம் செலுத்தறோம் :)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)).. அது லொக்கருக்குள் இருந்தே காத்துப் படாமல் கறுப்புகல்லாகப் போகுதே:))

      Delete
  53. // இதில் சுகர், இதில் ஒயில்.. இப்படியே எதற்கும் ஒரு கதை சொல்லிக்கொண்டே இருப்பினம்..//

    ஒரு விஷயத்தை யோசிக்கும்போது முந்தி 20,30 வருஷமுன் எங்கப்பா நல்லா சாப்பிடுவார் வாஸ்நாளில் பாதி வெளியூர்வாழ்க்கை பல நேரம் ஹோட்டல் உணவு .ஒரு தீய பழக்கமும் இல்லை .தொப்பை மட்டும் இருந்தது .மேலே போகும் வரை கொலஸ்ட்ரால் ப்ரெஷர் ஹார்ட் ப்ராப்ளம்ஸ் இல்லை .

    இப்போல்லாம் இந்த சோஷியல் மீடியா இதெல்லாம் வந்துதான் ஆளாளுக்கு டாக்டர் அவதார் எடுத்துகிட்டாங்க .
    உண்மையில் பயமில்லா வாழ்க்கை இப்போதைக்கு சாத்தியமில்ல ..நாம் விரும்பாததும் கண்ணில் பட்டு தொலைக்கும்

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு விஷயத்தை யோசிக்கும்போது முந்தி 20,30 வருஷமுன் எங்கப்பா நல்லா சாப்பிடுவார் வாஸ்நாளில் பாதி வெளியூர்வாழ்க்கை பல நேரம் ஹோட்டல் உணவு .ஒரு தீய பழக்கமும் இல்லை .தொப்பை மட்டும் இருந்தது////

      உண்மைதான் அஞ்சு.. அப்போ உணவில் கலப்படம் இல்லாத காலம் எல்லோ..உரம் கூட இயற்கை உரம் தானெ பாவித்திருப்பார்கள்.

      //இப்போல்லாம் இந்த சோஷியல் மீடியா இதெல்லாம் வந்துதான் ஆளாளுக்கு டாக்டர் அவதார் எடுத்துகிட்டாங்க .//

      அதேதான்.. அதுவும் யூ ரியூப்பில் நண்டு சிண்டெல்லாம் மருந்து சொல்லுதே ஹையோ ஹையோ.. அதைக் கவனிச்சால் அவ்ளோதான் நம்கதி.

      Delete
    2. ஏஞ்சலின், "டாக்டர் அவதாரம், நண்டு சிண்டு"னு உங்களை கலாய்க்கிறாங்க. அதை கவனிக்கலையா? உங்களுக்கு "அப்பாவி அதிரா" பட்டம்தான் சரிப்பட்டுவரும்.

      Delete
    3. இவரு அதிராவை உயர்த்திப் பேசுறாரா?:) இல்ல தேம்ஸ்ல தள்ளிவிடுவதுபோல பேசுறாரா?:) புரியுதே இல்லயே ஜாமீஈஈஈஈஈ:)).. எதுக்கும் பலமா சிரிச்சு வைப்போம்ம்.. ஹா ஹா ஹாஆஆஆஆஆஆஆஆஆ:))

      Delete
  54. ஹையோ COD லிவர் ஆயில் ,மீன் எண்ணெய் கேப்ஸ்யூல் எனக்கு சேர்க்கவே பிடிக்காது .

    அது உடைச்சி முகர்ந்து பார்த்தேன் ஒரு நாள் ஆர்வக்கோளாறில் :)
    பல வருஷம்கழிச்சி இங்கே வாங்கிட்டு வந்தார் இவர் ஆனாலும் எனக்கு சரிவரல்லை .
    சைவர்களுக்கு ஒரு வசதி இருக்கு ..இந்த மீன் எண்ணெய்களுக்கு பதில் தினம் ஓரு டீஸ்பூன் பொடித்த லின்சீட் .ஆளி விதை போடி சாப்பிடலாம் ,ரிச் இன் ஒமேகா 3 . an alternative to fish oil.
    கீதா ரெசிப்பி பாகற்காய் உப்புசார் செய்யும்போது அதில் கடைசியா அறைக்குமுன் ஒரு தேக்கரண்டி ஆளி விதை சேர்த்து அரைச்சேன் .செம ருசி

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதுதான் ஸ்ரீராமுக்கு மேலே சொன்னனே.. கண்ணை மூடிக்கொண்டு விழுங்கிடோணும்.. உடைச்சால் விழுங்க முடியாது.

      //ஆளி விதை போடி சாப்பிடலாம் ,ரிச் இன் ஒமேகா 3 . an alternative to fish oil.//

      உண்மைதான் ஆனா அதை செய்து சாப்பிடோணும்:).. செய்வதற்கும் ஆள் தேவை:))) இது டக்கு டிக்கு டோஸ்:)) ஹா ஹா ஹா.

      Delete
  55. //ஒரு கடைச்சாப்பாடு குடுக்காயினம்.. கூடாது கூடாது என தடுப்பினம்... உடுப்புக்கள்கூட ஆசைக்கு வாங்காமல் எங்கே மலிவாக இருக்கு என தேடி வாங்குவது.. இதெல்லாம் எதுக்கு?...//

    கடைச்சாப்பாடு ...இதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை மியாவ் ..பொரிச்சதையே மீண்டும் re fry செஞ்சி வைக்கிறாங்க பல ஆசிய ரெஸ்டாரண்ட்களில் .மெக்டொனால்ட்ஸ் அப்பிறம் உங்க kfc விதிவிலக்கு ஆனா எப்பவோ ப்ரிசெர்வ் செஞ்ச உணவை பிள்ளைங்களுக்கு தரத்துக்கு மனசு இடம்தராது .பிட்ஸா கூட வீட்டில செய்து தருவேன் நான் .

    உடை இன்னபிற சமாச்சாரம் மகள் விருப்பம்தான் :)

    ReplyDelete
    Replies
    1. ///கடைச்சாப்பாடு ...இதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை மியாவ் //
      கர்ர்ர்ர்ர்ர்:)) நல்ல ரெஸ்டோரண்ட்டாகப் பார்த்து வாங்குவதில் தப்பில்லை.. விரும்பினால் மட்டும்.. வீட்டில் ஆருக்கும் விருப்பமில்லை எனில் ஓகே, மற்றும்படி ஆசைப்பட்டுக் கேட்டால் எப்பவும் நோ சொல்லாமல் இடைக்கிடை குடுக்கோணும் வாங்கி.

      //பிட்ஸா கூட வீட்டில செய்து தருவேன் நான் .//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏ எஃப் சி கூட வீட்டில் செய்வேன் நான்.. ஆனாலும் ஒரிஜினலா வாங்கும் சுவையே தனிதான் அஞ்சு.

      எங்கள் சின்னவருக்கு டொமினோஸ் பிட்சாதான் விருப்பம். வேறு எந்தப் பிட்சாவும் வேண்டாம் என்பார்.. அதனால கிழமையில் ஒருநாள் டொமினோஸ் வாங்குவோம்.

      இன்னொன்று அஞ்சு.. இங்கெல்லாம் வெள்ளிக்கிழமைகளில்தானே ஸ்பெஷலா இருக்கும் கண்டீன்களில்.. மற்றும் வீடுகளிலும் ஸ்பெஷலா ஏதும் செய்யும் நாள் வெள்ளி இரவுதான். அதனால பெரும்பாலான வீடுகளில் வெள்ளி இரவு பிள்ளைகளின் விருப்பமாக விட்டு விடுகிறார்கள்.

      ஸ்கூலில் கதைப்பார்கள்.. இன்று மூத்தவருக்கு பிட்ஷா .. சின்ன மகளுக்கு ஃபிஸ் அண்ட் சிப்ஸ்.. இப்படிச் சொல்லுவினம்... அதுவும் ஒரு விதத்தில் நல்ல விசயம்தானே.. பிள்ளைகளின் ஆசைச்சாப்பாட்டுக்கென ஒருநாள் குடுக்கத்தான் வேணும்.. நெடுகவும் அடம் பிடிக்க மாட்டினம் தானே.. வளர வளர அவர்களாகவே புரிந்து டயட்டில் இறங்கிடுவார்கள்.. அதுவரை ஆசைப்பட்டதை நோ சொல்லாமல் வாங்கிக் குடுக்கோணும்.

      நாங்களும் செவ்வாய் அல்லது வியாளனில் இப்படி அவர்களின் விருப்பத்துக்கு விட்டுவிடுவதுண்டு.

      Delete
  56. அதிரா :) இதுவும் கடந்துபோகும் பேனர் பிடிச்சிருப்பது நீங்கதானே :)
    தொப்பை கொஞ்சம் அதாவது உங்க பாஷையில் வண்டி கொஞ்சம் பெரிசு :)ஓஹோ அதுக்குதான் வீட்டுக்குள் நடக்கறீங்களா :)))))))))))

    ReplyDelete
    Replies
    1. //வண்டி கொஞ்சம் பெரிசு :)//

      ஹா ஹா ஹா கர்:) அது கே எஃப் சி சிக்கின் உள்ளே இருக்குதுபோல:))

      Delete
  57. / நமது சேர்க்கையைப் பொறுத்தே நமக்கு இன்பமும் துன்பமும் , ஏன் மரியாதைகூட அப்படியேதான், ...//

    மிகவும் உண்மையான வார்த்தை .நான் அனுபவித்து பட்டு தெளிந்து விட்டு விடுதலையாகி இருக்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. //மிகவும் உண்மையான வார்த்தை .நான் அனுபவித்து பட்டு தெளிந்து விட்டு விடுதலையாகி இருக்கிறேன் :)///

      ஹா ஹா ஹா அதுதானே மீ உங்களுக்கு பொன்னாடி போர்த்திப் பட்டமளித்தேன்ன் “வந்தபின் காப்போன்” என:) ஹா ஹா ஹா... ஆனா மீயும் அப்படித்தான் இலகுவில் நம்பிடுவேன் அதனால பட்டுத்தானே தெளியோணும்:))

      Delete
    2. //பட்டுத்தானே //
      ஆமா !!காஞ்சிப்பட்டு ஆரணிப்பட்டு துஷார் பட்டு பனாரஸ் பட்டு எவ்ளோ இருக்கு :)
      ஹையோ இன்னிக்கு என்னை யாரோ அடிக்கப்போறாங்க

      Delete
    3. ///ஹையோ இன்னிக்கு என்னை யாரோ அடிக்கப்போறாங்க ///

      ஆரோ எல்லாம் இல்ல:))

      [im]http://fantasy-faction.com/wp-content/uploads/2013/07/2013-July-Rats-and-Cats-Rat-on-Cat-by-danfantom-300x241.jpg[/im]

      Delete
  58. ஹையோ, நேத்து வந்த பதிவுக்கு இத்தனை கருத்துகளா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பொறாமையா இருக்கு! :))))))) நல்ல தத்துப்பித்துவமா இருக்கே! இது என்ன கில்லர்ஜி பதிவுக்குப் போட்டியா? ஹிஹிஹி! நம்மால் ஆனது! நல்லது செய்வோமேனு தான்! இதுக்கு முன்னாடி யாரும் சொல்லி இருப்பாங்க! என்றாலும் நம்ம வாயை வைச்சுட்டுச் சும்மா இருக்கலாமோ! அதான்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...

      //நேத்து வந்த பதிவுக்கு இத்தனை கருத்துகளா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பொறாமையா இருக்கு! :)))))))//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அணையப்போகிற விளக்கு சுடர் விட்டு எரியுமாமே:) அப்பூடி இருக்குமோ?:) ஹா ஹா ஹா..

      ///இது என்ன கில்லர்ஜி பதிவுக்குப் போட்டியா? ///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நகமும் தசையுமா:) இருக்கிற சகோதரங்களைப் பிரிக்க ஜதி பண்றீங்க:)) ஆனா நாங்க ஜண்டைப் பிடிக்க மாட்டோம்:)) ஏனெனில் தேம்ஸ் எண்டாலே கில்லர்ஜிக்குப் பயம்:)) ஹா ஹா ஹா..


      //என்றாலும் நம்ம வாயை வைச்சுட்டுச் சும்மா இருக்கலாமோ! அதான்!///
      இதுக்கு நான் ட்றம்ப் அங்கிளின் உதவியைத்தான் நாடோணும்:)

      Delete
  59. மற்றக் கருத்துக்களை எல்லாம் படிக்கணும். எங்கே! மத்தியானங்களில் இப்போப் பத்து நாட்களாக மின்வெட்டு! நாலு மணிக்குத் தான் வருது! :(

    ReplyDelete
    Replies
    1. ரெயின் புறப்படமுன் வந்து படிச்சிடுங்கோ:)) அதென்ன புதுசா மின்வெட்டு.. இப்போ கொஞ்சக்காலமா இக்கதையே எங்கும் இல்லையே???..

      Delete
  60. //நமது சேர்க்கையைப் பொறுத்தே நமக்கு இன்பமும் துன்பமும் , ஏன் மரியாதைகூட அப்படியேதான், ...// ரொம்பச் சரி. இந்த விஷயத்தில் நிறைய அனுபவம் உண்டு. :(

    ReplyDelete
    Replies
    1. மீயும் அனுபவப்பட்டமையாலதான் அதிரா ஞானி ஆகிட்டேன் கீசாக்கா:))

      Delete
  61. //அதிரா :) இதுவும் கடந்துபோகும் பேனர் பிடிச்சிருப்பது நீங்கதானே :)// சந்தேகம் வேறேயா! :)

    ReplyDelete
    Replies
    1. [im]https://i.makeagif.com/media/12-08-2013/wpeQac.gif[/im]

      Delete
    2. //சந்தேகம் வேறேயா! :)//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா...

      கீசாக்காவுக்கு கரண்டைக் கட் பண்ண வேண்டாம் என அடுட்த்த மீட்டிங்கில் மோடி அங்கிளோடு பேசிட்டு வாறேன்:)..

      Delete
    3. //https://i.makeagif.com/media/12-08-2013/wpeQac.gif//

      ஹா ஹா ஹா அது என்ன ஜெரி சிரிக்கும்போது கறுப்பா ஏதோ மேலெ போகுதே ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:))

      Delete
  62. அருமையான அட்வைஸ் ஜானி athira MBBS, MRC...., Consultant
    இந்த பதவி எவன் கொடுத்தான் தெரியல்லையே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ...

      //இந்த பதவி எவன் கொடுத்தான் தெரியல்லையே ///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) உங்களுக்கும் அக்கா மேல ஜந்தேகம் வந்திட்டுதோ?:) இதுக்கெல்லாம் காரணம் அஞ்சுவும் அம்முலுவும்தேன் கர்ர்ர்ர்ர்:))

      ஹா ஹா ஹா மிக்க நன்றி மொகமட்.

      Delete
  63. செய்த முயற்சி பலித்தது. வலைப்பக்கம் திறந்தது!

    ReplyDelete
    Replies
    1. என்ன முயற்சி செய்தீங்க என சொல்லவே இல்லையே? பிறஃவ்சர் மாத்தி வந்தீங்களோ?.. browser..

      அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்..
      இப்படிக்கு ஞானி அதிரா:).

      Delete
  64. என்னது! ஸ்விமிங்குக்குப் போறதோ! அப்பிடியே தாண்டு மேல போயிருவன். முதலில ஸ்விமிங் க்ளாஸுக்குப் போக வேணும். ;)

    //ஒருவேளை நமக்கு நாளைக்குச் சா வந்தால்கூட, நன்கு அனுபவித்தார் பறவாயில்லை என நினைக்குமளவுக்கு இருக்கோணும்.// உண்மை அதிரா. இதை நான் நெடுக நினைக்கிறனான். நிச்சயமாக, “எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்”

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.