நல்வரவு_()_


Sunday 28 June 2020

எங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 
பறிக்கலாம் வாங்கோ..

வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே!!!:).. நா ஒண்ணும் வாணாம் ஜொள்ளலியே:))..
ஆஆஆவ் எலியாரை இந்தக் கோலத்தில பார்த்ததும், இன்று பூஸார் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிட்டார்போலும்:) ஆளைக் காணம்:)) ஊசிக்குப் பயம் போலும்:)

இம்முறை வீடியோவாக அறுவடை:)).. பார்க்கலாம்.. விதைச்சு முடிஞ்சு, இப்போ அறுவடை மெதுவாக ஆரம்பமாகி விட்டது:)).. அதனால உங்களுக்கு தொல்லைகள் இன்னும் டொடரும்:))

எனக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காது:), அதனால ஸ்ரெயிட்டாக் கார்டினுக்குள் கூட்டிப்போறேன்ன்.. வாங்கோ வாங்கோ..

இப்போஸ்ட்டில் பெரிதாக ஒன்றும் இல்லை, படங்கள் பார்த்து மகிழுங்கோ....!!!!
இது கொஞ்சம், பழங்கள் முத்த முன்னர் எடுத்தது.. இதில் குட்டியாக இருக்குது, ஃபுல் ஸ்கிறீனில் பாருங்கோ வீடியோவை..

இது அறுவடையின்போது சூட் பண்ணியது:)),  முள்ளுக் குத்துது.. ஆனாப் பாருங்கோ நான் முழுவதையும் ஆயவில்லை, ஒரேயடியாகப் பிடுங்காமல், கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கி, ஸ்மூத்தியில் போடலாமே எனும் ஐடியாவாக்கும்:))

நடுவிலே என் பீற்றூட் வளருகினம் தெரியுதெல்லோ:)

இது இப்போ எங்கள் கார்டினில் பூக்கும் மஞ்சள் மலர்கள்.. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மலராக ஒவ்வொரு கலரில பூக்கும்.. இங்கு பொருட்பிழை வருகிறது:)- இந்த மரத்தில் பூக்கும் எனச் சொல்லவில்லை:), கார்டினில், இப்படித் தொடர்ந்து விதம் விதமாக ஒவ்வொரு கலரில ஒவ்வொரு மாதமும் பூக்கும் செடிகள் உள்ளன எனச் சொல்ல வந்தேனாக்கும் ஹா ஹா ஹா..

இவவும் எங்கள்வீட்டுப் பேப்பிள்க்கறுப்பி:))

ஆஆஆஆஆ கரிக்குருவிக்கும், தன் பிஞ்சுக் கரங்களால்:), கஞ்சிகாச்சி ஊத்தும், வள்ளல் பரம்பரை அதிரா:))[சரி சரி இப்போ அப்பூடி என்ன ஜொள்ளிட்டேன்ன்:)) ஏன் உங்களுக்கெல்லாம் முகம் சிவக்குது:))] இது ஊரில் கரிக்குருவி இனம் என்போம், ஒன்று கண்டால் பாட் லக், அதிகம் கண்டால் நல்லது நடக்கும், அதனால இதைப் பார்க்கும் உங்கள் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டுமே எனப் படம் போட்டிருக்கிறேன்.. Scottish Magpies எனப்படுபவை..

இன்று இடைவேளையில நாம் பார்க்க இருப்பது ஊர் வம்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா.. நெல்லைத்தமிழன் அப்பிள் மரம் பூவோடு காயோடு போடுங்கோ என்றார்:).. நான் எங்கின போவேன் ஜாமீஈஈ.. அதனால வோக் போகும்போது கண்ணில பட்டிச்சா லபக்கெனச் சூட் பண்ணிட்டேன்:))

இது பாருங்கோ, பல வருசமாக இப்படி இருந்திருக்குது, நாங்களும் இப்பக்கத்தாலதான் காரிலும் சரி நடையிலும் சரி அடிக்கடி போய் வருவோம், ஆனாலும் பாருங்கோ.. அதிரா ஒரு அச்சம் மடம் நாணம் பயிர்ப்புள்ள பிள்ளை என்பதனால:)).. குனிஞ்ச தலை நிமிராமல் நடக்கும்போது:), தலைக்கு மேலே இருக்கும் அப்பிளைப் பார்க்க முடியவில்லை:)).. இது தற்செயலாகப் பார்த்தால்....... அட அப்பிள் மரம்....... காய்களோடு அவ்வ்வ்வ்வ்வ்:))

 “இரவல் புடவையிலே.. இது நல்ல கொய்யகமாம்”:)

இது காடுபோல பகுதியில் தானாகப் பூத்திருக்குதே.. என்னா அழகு...

இதேபோலவே இந்த மஞ்சள் மலர்கள், பெரும்பாலான வீடுகளில் ரோட்டோரமெல்லாம் நட்டிருக்கினம், ஒரு பூண்டு வகைபோல இருக்கும்.
==========================

ஆஆஆ இவ எங்கட வீட்டு ஸ்ரோபெரி அக்கா:)!!

இது Radish , முதல்ப்படத்தில் பாருங்கோ, கிழங்கு சிவப்பாக மேலே தெரியுது, இதுதான் அறுவடை நேரம்... 2ம் படத்தில் இருப்பது இவற்றின் பூக்கள்.. நான்கு இதழ்கள் மட்டுமே...முறையான விளைச்சல் இல்லை, கொஞ்சம் முத்தியும் விட்டது, அத்துடன் இங்கு மழை அதிகம் என்பதால் வேர் பிடித்துவிடும், பாருங்கோ கிழங்கை விட வேர்கள்தான் குப்பையாக இருக்குது... 

உங்களுக்கு நல்ல மாம்பழமே கிடைக்கல்லியோ?:) போயும் போயும் இதையா வாங்கினீங்க எனச் சொல்லீனம் சிலர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இப்போ என் ஜொந்தக் கதை யோகக்கதையைக் கொஞ்சம் கேளுங்கோ...

சூப்பமார்கட்டில் எனில் வன் பவுண்டுக்கு வாங்கலாம் ஆனா அது பழமாகக் கிடைக்குது, இது காயாக வேணும், வத்தல் போட்டுப் பார்க்கலாம் என ஒரு சின்ன ஆசையில தமிழ்க் கடையில வாங்கினால்.. இதுதான் கிடைச்சது, இரண்டும் 6.79 பவுண்டுகள்... இப்படி வாங்கி வத்தல் போட முடியுமோ.. போனால் போகட்டும் என வெட்டினால் அது காயாகவும் இல்லை, பழமாகவும் இல்லை, இரண்டும் கலந்த கலவை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)


ஊசிக்குறிப்பு:)
ஹா ஹா ஹா...

ஊசி இணைப்பு
🌺🌺🌺🌺🌺🌺

என்ன கொமெண்ட்ஸ் வரப்போகுதோ?:)) 
எதுக்கும் உசாரா:) ரெடியா இருப்போம்:))

 “காற்றுக்கு எதிராகவே பட்டங்கள் எழுகின்றன, காற்றுடன் சேர்ந்து எழுவதில்லை”
இப்படிக்கு உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் பாத்திரமான - பு.பூஸானந்தா அவர்கள்:).
🙏🙏🙏🙏🙏🙏

154 comments :

  1. Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஉ அதுக்காக இப்பூடியா கர்ர்ர்ர்ர்:)).. நான் மொபைலில் பார்த்ததும், என் புளொக் டிசைன் மாறிவிட்டதாக்கும், அதனால ஃபொண்ட் எல்லாம் மாறிப்போச்சுதுபோல.. ஹையோ வைரவா என்ன பண்ணப்போகிறேன்ன்..:).. கொம்பியூட்டர் போய்ச் சரியோணுமாக்கும் என பல பல எண்ணங்கள் மனதில ஓடிச்சா.. அலறிப் பதறி ஓடி வந்தேன்.. ஹா ஹா ஹா... பார்த்தால் ட்றுத் இந்த வயசில போய் நேசறியில இருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete

  2. 1
    one 2
    two 3
    three 4
    four 5
    five 6
    six 7
    seven 8
    eight 9
    nine 10
    ten

    ReplyDelete
    Replies
    1. சரி சரி எண்ணிப்பழகியது போதும், கஸ்டப்பட்டு ரைப் பண்ணியிருக்கிறீங்களே என்பதால விட்டு வச்சிருக்கிறேன், கடசிக் கொமெண்ட் 100 வரை போனதுதான் ரொம்ப நீளமானதால டிலீட் பண்ணி விட்டேன் மன்னிச்சுக்கோங்ங்ங்ங்ங்:))

      Delete
  3. 11
    eleven 12
    twelve 13
    thirteen 14
    fourteen 15
    fifteen 16
    sixteen 17
    seventeen 18
    eighteen 19
    nineteen 20
    twenty

    ReplyDelete
  4. 21
    twenty-
    one 22
    twenty-
    two 23
    twenty-
    three 24
    twenty-
    four 25
    twenty-
    five 26
    twenty-
    six 27
    twenty-
    seven 28
    twenty-
    eight 29
    twenty-
    nine 30
    thirty

    ReplyDelete
  5. 31
    thirty-
    one 32
    thirty-
    two 33
    thirty-
    three 34
    thirty-
    four 35
    thirty-
    five 36
    thirty-
    six 37
    thirty-
    seven 38
    thirty-
    eight 39
    thirty-
    nine 40
    forty

    ReplyDelete
  6. 41
    forty-
    one 42
    forty-
    two 43
    forty-
    three 44
    forty-
    four 45
    forty-
    five 46
    forty-
    six 47
    forty-
    seven 48
    forty-
    eight 49
    forty-
    nine 50
    fifty

    ReplyDelete
    Replies
    1. நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணம் ட்றுத்:))... ஜாமத்தில வந்திருக்கிறீங்க அதனாலதான் இப்பூடி ஆச்சு:)) நயந்தாரா சே சே டங்கு ஸ்லிப்பாகுதே. நயகராப்பக்கம் போயிருப்பீங்க அங்கின காத்துக் கருப்புப் பிடிச்சிட்டுதோ எனப் பயம்மாக்கிடக்கெனக்கு:)) ஹா ஹா ஹா நன்றி ட்றுத்.

      Delete
    2. அவர் எண்ணுவது, பூரிக்கட்டையால் அடிவாங்கிக்கொண்டே எண்ணுவதாக இருக்குமோ? எதுக்கும் இன்னும் சில நாட்கள் பார்போம். புது இடுகை எதுவும் மதுரைத்தமிழன் போடலைனா, கன்ஃபர்ம்ட்...வீட்டில் மனைவி கையால் வாங்கிய பூரிக்கட்டை அடிகள் என்று.

      Delete
    3. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. கரீட்டாச் சொல்லிட்டீங்க:)) , கொஞ்சக்காலம் கொரோனாப் பிரச்சனை ஓடியதால பூரிக்கட்டை வெளியே தலை காட்டவில்லை.. மீண்டும் இப்போ ஆரம்பமாகிவிட்டதுபோலும்.. நான் ஓடிப்போய்க் கச்சான் வறுத்தெடுத்து வாறேன்ன்.. இல்ல இல்ல தமிழ்க்கடையில வாங்கின பச்சைக் கச்சான் ஊற விட்டிருக்கிறேன்.. அதை அவிச்சுக் கொண்டு வாறேன்ன்.. 100 உடன் நிறுத்திட்டார் ட்றுத்.. நாங்க தொடர்ந்து எண்ணுவோம்ம்... மாமி எத்தனை வரை போகிறா என நானும் பார்க்க ஆவலாக இருக்கேனாக்கும்..க்கும்..க்கும்..க்கும்... இது எக்கோ:))

      Delete
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. எங்களுடைய இந்த காலை நேரத்தில் கலர்கலரான அழகுள்ள மலர்களும், உங்கள் தோட்டத்தில், உங்கள் பராமரிப்பில் வளர்ந்து, உங்கள் கைகளினால் அறுவடை செய்த பழங்களும் பார்க்கவே மனதுக்கு ரம்யமாக உள்ளது. தன்னிடமுள்ள திறமைகள் எனும் பல முகங்களோடு, விவசாயி எனும் ஒரு முகம் கொண்ட அதிராவுக்கு என்றும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    எலியார் டாக்டர் கம்பீரந்தான்.👌 ஆனால் தைரியசாலியான பூசார் ஊசியைக் கண்டு பயந்து ஓடி ஒளியலாமோ ? இங்கேயே எங்கேனும் ஓரிடத்தில் "நானும் இருக்கிறேன்" என தலையேனும் காட்டியிருக்கலாம். ஹா.ஹா.

    ஒருவேளை இங்கிருந்து முழுதாக தப்பித்து "அங்கு கஞ்சி கலயத்தை உருட்டி கொண்டிருப்பதும் அவர்தானோ?" என்ற சந்தேகம் இப்போது வருகிறது. ஹா. ஹா. எதற்கும் சந்தேகம் தீர மறுபடியும் ஒருமுறை நன்றாக பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ...

      ஆவ்வ்வ்வ்வ் இன்று 2 வதாக வந்திருக்கிறீங்க... எங்கட ஆயா உங்களுக்கே:)).. ஆயா பத்திரம் கமலாக்கா.. அவவுக்கு எந்த வாசனையும் இப்போ தெரியுதில்லையாம்.. ஒருவேளை கொரோனாவோ தெரியல்ல:)).. எதுக்கும் பத்திரமா ஏசிக் காரில கூட்டிப்போய் அப்பொலோவில ஒரு செக்கப் பண்ணிட்டு வீட்டுக்குக் கூட்டிப்போங்கோ கமலாக்கா.. ஆயாவின் வயசு 99.5, ராசி- கன்னி:)).

      ஆயாவுக்கு உங்கட கத்தரிக்காய் கறி, அந்த பருப்பு வகை அரைச்சுப் பிரட்டிப் பொரிச்சது.. சாப்பிட ரொம்ம்ம்ம்ம்ப ஆசையாம்ம்.. மறக்காமல் செய்து குடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).. என் கண்ணான கண் போன்ற ஆயாவை ஒப்படைக்கிறேன், அவட கண்ணில ஆஆஆஆஆஆஅனந்தக் கண்ணீரைத்தான் நான் பார்க்கோணும்... அடிக்கடி வட்சப்பில எனக்குக் காட்டுங்கோ ஆயாவை ஓகே:)).. ஹா ஹா ஹா.

      Delete
    2. //விவசாயி எனும் ஒரு முகம் கொண்ட அதிராவுக்கு என்றும் மனமார்ந்த வாழ்த்துகள்.//

      ஹா ஹா ஹா பல பட்டத்தில் விவசாயிப் பட்டமும் முக்கிய இடம் பிடிச்சிருக்குது.

      என் அவரை எல்லாம் பூத்துக் குலுங்கிப் பிஞ்சுகள் தொங்குது.. ஆனா இப்போ தொடர்ந்து கடும் மழையும் காத்தும்... இனி என்ன ஆகுமோ தெரியாது.. எங்கள் கோடை காலம் முடிஞ்சுவிட்டதுபோலவே இருக்குது மழையைப் பார்க்க கர்ர்:))

      //ஒருவேளை இங்கிருந்து முழுதாக தப்பித்து "அங்கு கஞ்சி கலயத்தை உருட்டி கொண்டிருப்பதும் அவர்தானோ?"//

      அதே அதே.. கரெக்ட்டாகக் கண்டு பிடிச்சிட்டீங்க:)).. கீதா பான் கழுவும் வேலை தந்திட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ...

      Delete
  8. வந்து நிதானமாப் பறிக்கிறேன். மோதி, ட்ரம்ப் "நகுமோமு" ஒரு வாரமாச் சுத்திட்டு இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      ஆவ்வ்வ்வ்வ் நான் நேற்றுத்தானே இந்தியாவில ஒருவருக்கு அனுப்பினேன்:) அதுக்குள் எப்படி நீங்க பார்த்தீங்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா சரி சரி இம்முறை எனக்குத்தான் லேட்டாக் கிடைச்சிருக்குது போலும்..

      வாங்கோ வாங்கோ .. ரைம் கிடைக்கும்போது வாங்கோ நன்றி கீசாக்கா.

      Delete
  9. வணக்கம் அதிரா சகோதரி

    காணொளிகள் நன்றாக இருக்கின்றன. அருகில் பெரிதாகி பார்க்கும் போது அந்த பழங்கள் நிறைய முட்கள். எப்படி அகற்றுவீர்கள்.? எனக்கு இதிலெல்லாம் கொஞ்சம் ஞானம் கம்மி.:) சரி.. பயிற்சிக்கு உங்கள் ஆசிரமத்திற்கு வரலாமென்றால், கொரோனா தடை விதிக்கிறது. ஹா ஹா.

    அந்த பர்பிள் மலர்கள் அழகு. அதைப் போய் கறு(ரு)ப்பி என்றால் அதற்கு கோபம் வராதோ? செல்லக் கொஞ்சல் என அதற்கு புரியுமோ?

    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கலரில் பூ பூக்கும் செடியை கண்டு வியந்தேன்.

    காடு போல் வளர்ந்திருக்கும் இடத்தில் எடுத்த நீண்ட பிங்க் கலர் மலர்கள், மஞ்சள் மலர்கள் கண்ணைப்பறிக்கும் கொள்ளை அழகு. ஆப்பிள் மரங்கள், இடையே "கொய்யாத கனி" என அனைத்துமே அழகாகத்தான் இருக்கிறது.

    கரிக்குருவிகள் நான்கையும் பார்த்து ரசித்தேன். இனி உங்கள வாக்கால் நம் அனைவருக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கட்டும். (அது சரி.. இங்கேயும் அதற்கு கஞ்சிதானா? இன்று நீங்களும், சகோதரி கீதா ரெங்கனும் பேசி வைத்து பதிவிட்டீர்களா? ஹா.ஹா.ஹா.)

    பெரிய பதிவா? உங்கள் சொல்படி ஒவ்வொன்றாக வருகிறேன். (பரவாயில்லையே..! ஆசிரமம் வராமலேயே இவர்களுக்கு ஞானமா? வியப்பது புரிகிறது ஹா. ஹா. ) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆ மீண்டும் கமலாக்கா...

      //அருகில் பெரிதாகி பார்க்கும் போது அந்த பழங்கள் நிறைய முட்கள். எப்படி அகற்றுவீர்கள்.?//
      இல்லை கமலாக்கா அது பழத்தில் முள் இல்லை, அது அதன் பற்றன் அப்படி, அப்படியே சாப்பிடுவதுதான் சொஃப்டாக இருக்கும். உள்ளே விதைகளும் அப்படியே, சொஃப்ட்டாக வாயில் கரைந்துவிடும், அதனால இப்பழத்தில் கழிவு என ஏதும் இல்லை....

      //அந்த பர்பிள் மலர்கள் அழகு. அதைப் போய் கறு(ரு)ப்பி என்றால் அதற்கு கோபம் வராதோ? செல்லக் கொஞ்சல் என அதற்கு புரியுமோ?///

      ஹா ஹா ஹா “கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு”.. பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும் என, இந்தப் பேப்பிள் பூ அக்காவுக்கும் தெரிஞ்சிருக்கும்:)).

      //ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கலரில் பூ பூக்கும் செடியை கண்டு வியந்தேன்.//
      ஹா ஹா ஹா ஹையோ அது பொருட் பிழையாகி விட்டது, இப்போ பார்த்துத் திருத்தி விட்டேன்..

      நான் ஜொள்ள வந்ததூஊஊஊஊஊ என்னெண்டால்ல்ல்ல்ல்ல்.. இப்பூடி மார்ச் இல் தொடங்கினால் ஓகஸ்ட் வரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவகைப் பூக்களாக, ஒவ்வொரு கலரில எங்கள் கார்டினில் வருது எனச் சொல்ல வந்தேன்... ஆனா இனி ஓகஸ்ட்டில் பூப்பவை எம்மிடம் இல்லை, ஒரு வகை குட்டிக் குலைக் குலையாக காய்கள் வரும்.. பல கலர்களில்... இங்கு முன்பு படம் போட்டிருக்கிறேன்.. அந்தக் காய் மரம் இப்போ பிஞ்சு பிடிச்சிருக்கு . அது ஒருவித செரி...

      https://gokisha.blogspot.com/2012/11/blog-post_16.html

      இங்கு என்பக்கத்தில் சைட் பார் இல்.. இயற்கை என்பதைக் கிளிக் பண்ணினால், இங்கத்தைய மலர்கள் காய்கள் நிறையப் போட்டு வச்சிருக்கிறேன் பார்க்கலாம், எனக்கே என்னுடையதை திரும்பிப் பார்க்க நேரம் வருவதில்லை.. ஹா ஹா ஹா.. அப்போ உங்களுக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கும்:)..

      Delete
    2. நம் நாட்டில்தான் மூட நம்பிக்கை போல ஒரு கரிக்குருவி கண்டால் கூடாது.. சின்னனில் அம்மா பாடுவா..
      வன் ஃபொர் சாட்.. 2 ஃபோ ஹப்பி த்றீ ஃபோ கேள்.. 4 ஃபோ போய்.. இப்படி..

      பின்பு இங்கு வந்து பார்த்தால், இதே நம்பிக்கை இந்த ஸ்கொட்டிஸ் மக்களிடமும் உண்டு.. பாட்டுடன்:)) வியப்பாக இருக்குதெல்லோ.. ஆனால் இவை எல்லாம் இந்த ஜெனரேசனுடன் முடிவுக்கு வந்துவிடும், இப்போதைய தலைமுறையினர் கெட்டுவிட்டனர் என... ஸ்கொட்டிஸ் ஆட்களே திட்டுகின்றனர்.

      ஏனெனில் ஸ்கொட்லாந்து மக்களும் கலாச்சாரத்தில் கொஞ்சம் நம்மைப்போலவே ஒழுக்கமாக இருப்பார்கள்.. பெற்றோரைக் கவனிப்பார்கள்.. அதனாலதான் இங்கு பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்க்க முடிகிறது.. ஆனா அது மாறிவிட்டது இப்போ என ஸ்கொட்டிஸ் உம் கவலைப்படுகின்றனர்...

      மிக்க நன்றிகள் கமலாக்கா...

      Delete
  10. பூக்கள் மனதை கொள்ளை கொண்டன...

    அறுவடை காணொளிகளும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ டிடி வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  11. பூக்களின் படங்கள் மிகவும் அழகு.
    ரோஸ் நிறப்பூ ஸூப்பர்.
    காணொளி ரசித்தேன்.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. மிக்க நன்றிகள்.

      Delete
  12. இதையும் செய்து பாருங்கள். 

    http://mykitchenflavors-bonappetit.blogspot.com/2011/10/caramelized-gooseberry.html

    முழுதாகப் போடுவதற்கு பதில் விதை நீக்கி துண்டுகளாக போடலாம். 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ.. போஸ்ட் போடும்போது, நீங்கள் வந்து திட்டப்போகிறீங்கள்:).. அதிகம் வீடியோக்கள் போட்டு விட்டேன் என என்று நினைத்துக் கொண்டே போட்டேனாக்கும் ஹா ஹா ஹா...

      ஓ கரமல் சேர்த்து சுவீட்டாக செய்திருக்கு.. பார்த்தேன்... செயலாம் தான், ஆனா ஜேகே ஐயா, இந்த வெளிநாட்டுக் கூஸ்பெரி, கடும்புளிப்பு இல்லை, அத்துடன் விதைகளும்.. அப்படியே வாயில கரைஞ்சுபோகும்.. கிட்டத்தட்ட சீட்லெஸ் என்றே சொல்லலாம்...

      மிக்க நன்றிகள்.

      Delete
  13. இன்றைக்கு படங்கள் ரொம்ப அழகா இருக்கு.

    நான் இதுவரை கூஸ்பெர்ரி பார்த்ததில்லை. என் பெண்ணுக்குத்தான் இந்த பெர்ரி வகைகள் ரொம்பப் பிடிக்கும். கம்பளிப்பூச்சி மாதிரி ஆழ்ந்த மெரூன் நிறத்தில் இருக்கும் பெர்ரியையும் அவள் நான் அங்க இருக்கும்போது வாங்கித்தரச் சொல்லுவாள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      ஹா ஹா ஹா நன்றி நன்றி. என் பக்கத்தில் போன வருடமும் கூஸ்பெரிப் படங்கள் போட்டேன்..

      பெரியில பலவகை உண்டுதானே.. மொத்தத்தில அனைத்து பெரிகளும் நல்ல சுவையாகவும் அத்துடன் சத்தானதும்கூட.. புலூ பெரி சாப்பிட்டால்.. இதய சம்பந்தமான வருத்தங்கள் வராது என்பினம்.

      அங்கும் அனைத்து பெரிகளும் கிடைக்குமோ..

      //கம்பளிப்பூச்சி மாதிரி ஆழ்ந்த மெரூன் நிறத்தில் இருக்கும்//

      Raspberries ஐச் சொல்றீங்க.. எனக்கும் அது ரொம்பப் பிடிக்கும்... கொஞ்சம் சாப்பிட்டு அடங்காது அது நிறையச் சாப்பிடோணும் போல இருக்கும்.. அத்துடன் அவை டக்கெனப் பழுதாகியும் விடும்.. வைத்துச் சாப்பிட முடியாது...

      [im] http://healthyfoodhouse.com/wp-content/uploads/2013/06/health-benefits-of-berries-raspberries.jpg [/im]

      Delete
    2. [im]https://mk0ferndalegardpi3s1.kinstacdn.com/wp-content/uploads/2017/06/mulberry-morus-matsunaga-fruit.jpg[/im]

      எப்பவும் தப்பாவே சொல்லுங்க அநேகமா நெல்லைத்தமிழன் mean பண்ணினது மல்பெரியா இருக்கும் :)நீங்க போட்டது ராஸ்பெரி :)
      மேலதிக தகவல் ப்ளாக் கரெண்ட்சும் கொஞ்சம் மல்பெரி போல்தானிருக்கும் 

      Delete
    3. ஆமாம் ஏஞ்சலின். நேற்றுகூட அவள்ட கேட்டேன். மல்பெர்ரி என்று சொன்னா. ஆனா பஹ்ரைன்ல இன்னும் கொஞ்சம் நீளமா அதாவது 1 1/2-2 விரர்கடை நீளம். பெண்ணுக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறேன். அதை ஃப்ரிட்ஜில் வைக்கமுடியாது என்றும் சொன்னாள்.

      Delete
    4. ஆஆஆஆ இந்த பெரியா.. இதுதான் இங்கு காடு மேடெல்லாம் காய்ச்சுக் குலுங்கும் நெ தமிழன்... நான் ஆய்ந்த படங்கள் இங்கு முன்னர் போட்டிருக்கிறேன், தேடி லிங் தாறேன்ன் எங்கட வேலி ஓரமெல்லாம் முளைக்கும் வெட்டி விடுவோம்.. இப்பவும் வேலியால எட்டிப் பார்த்துப் பூத்திருக்குது, வெட்டாமல் விட்டிருக்கு பழம் வரட்டும் என..
      ஜூலையில மகளைக் கூட்டி வந்து விடுங்கோ.. ரோட்டோரம் நடந்து நடந்தே இந்த பெரீஸ் பிடுங்கி வரலாம்:).. ஹா ஹா ஹா..

      ஆனா இந்த மெல்பெரிப் பெயர் இப்போதான் அறிகிறேன்... இங்கு இதுக்கு ஸ்கொட்டிஸ் நேம் உண்டு பிரம்பிள் பெரி bramble berry என்பினம்.. மற்றும்படி இங்கு இதுக்குப் பொதுவான பெயர் பிளாக்பெரிதான்..

      Delete
    5. https://gokisha.blogspot.com/2012/11/blog-post_16.html

      நெல்லைத்தமிழன் இந்த லிங் ஓல்ரெடி உங்களுக்குத் தந்திட்டேன், நீங்கள் கொமெண்ட்டும் போட்டிருக்கிறீங்கள்..

      Delete
    6. 😸😸😸😸 grrrrr mulberry is different to the wild black berrys. Look at the leaves. The one around river side is black berry with thorns .mulberry is slightly slender and thin

      Delete
    7. ஒரு சின்ன தவறுக்காக..... பிஸி பிஸி என்று பிலிம் காட்டி எங்கயும் வராதவர், உங்க தப்பைச் சுட்டிக் காண்பிக்க மட்டும் டாண் ணு வந்திருக்காங்களே.....

      இவங்களை சும்மா விட்டுடாதீங்க அதிரா.... நினைவு வச்சுக்கோங்க. இன்றைக்கு இல்லாட்டயும் எப்பவாவது ஒரு இடுகை போடுவாங்க. அப்போ பாத்துக்கலாம்.

      Delete
    8. நீங்க சொல்வது ஊரில்தான் பார்த்திருக்கிறேன் அஞ்சு.. மசுக்குட்டிப்பழம் எனவும் சொல்வார்கள் ஹா ஹா ஹா.. அதை இங்கு நான் காணவில்லை..

      Delete
    9. //பிஸி பிஸி என்று பிலிம் காட்டி எங்கயும் வராதவர், உங்க தப்பைச் சுட்டிக் காண்பிக்க மட்டும் டாண் ணு வந்திருக்காங்களே.....//
      அதுதானே நெ தமிழன் பாருங்கோ.. அதிராவை அடிக்க எனில்.. அவவுக்கு அலர்ஜி கூட இருக்காது ஓடி வருவா கர்ர்ர்ர்:))..

      //இவங்களை சும்மா விட்டுடாதீங்க அதிரா.... நினைவு வச்சுக்கோங்க. இன்றைக்கு இல்லாட்டயும் எப்பவாவது ஒரு இடுகை போடுவாங்க. அப்போ பாத்துக்கலாம்.//
      அப்பூடியா சொல்றீங்க?:)) நல்லவேளை மீ ஒரு அப்பாவியாக இருந்திட்டேன்:)) சொல்லிட்டீங்க இல்ல.. இனி மறக்கவே மாட்டேன்ன்ன்ன்.. போஸ்ட் வரட்டும்...:) meeeeeeeeeeee readyyyyyyyyyy:)) haa haa haa....

      [im] http://wizbangblog.com/images/cat_holds_gun_375.jpg [/im]

      Delete
  14. ஆப்பிள் இன்னும் காய்த்து/பழுத்துக் குலுங்கவில்லை போலிருக்கு.

    அவங்க அந்தப் பழங்களைப் பறித்துக்கொள்ள அனுமதி தருவாங்களா? இல்லை ஆப்பிள் காய்த்து பழுத்து வீணாகப் போய்விடுமா?

    ReplyDelete
    Replies
    1. அப்பிளின் சீசன் யூலையில்தான் என நினைக்கிறேன் நெ தமிழன்.. எல்லா இடமும் இப்போதான் முத்தி வருது, ஆனா எங்கட பக்கத்து வீட்டில் நிற்கிறது என்றேனெல்லோ.. அவை நல்ல சிவப்பு பல்ப் பூட்டியதைப்போல இருக்குது படமெடுக்க முடியவில்லை கர்ர்ர்ர்ர்:))..

      இது சிவப்புடன் பச்சையாக இருக்கும் என நினைக்கிறேன்.

      //அவங்க அந்தப் பழங்களைப் பறித்துக்கொள்ள அனுமதி தருவாங்களா?//

      அது ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம் நெ தமிழன், இது ரோட்டொரம் தலைக்கு மேலே இருக்குது, ஆரும் பிடுங்கலாம் நினைச்சால்.. பிடுங்குவினமோ தெரியாது.

      சிலர் எல்லா அப்பிளையும் சேர்த்து ஜாம் செய்வார்கள். சிலர் கவனிக்க மாட்டினம், சாப்பிடக்கூட மாட்டினம் அப்படியே கொட்டிவிடும்... என் நண்பி வீட்டிலும் அப்படித்தான் காய்த்துச் சொரிஞ்சு கொட்டிக் கிடக்கும்.. துப்புரவாக்குவது கஸ்டம் என்பா.. அது சிவப்பு அப்பிள். அவர்களும் அதனை சாப்பிடுவதில்லை.

      இங்கு ஒரு பழக்கம், மருந்து அடிக்கவில்லையாயின் உள்ளே புழுப்பூச்சி இருக்கலாம் எனப் பயந்து எடுக்க மாட்டார்கள்.

      ஆனா நான் சில இடங்களில் பறித்திருக்கிறேன் அப்படிப் பூச்சி எதுவும் இருக்கவில்லை.

      இதில் காயாக பிடுங்கிச் சாப்பிட கிளிச்சொண்டு மாங்காய்போல நன்றாக இருகும்.

      Delete
    2. //இதில் காயாக பிடுங்கிச் சாப்பிட கிளிச்சொண்டு மாங்காய்போல நன்றாக இருகும்.// ஆவக்காய் மாதிரி ஊறுகாய் போடலாம். நன்றாகவே இருக்கும். அம்பேரிக்காவில் பொண்ணு மெம்பிஸில் இருக்கையில் போட்டு அனைவருக்கும் கொடுத்தோம்.

      Delete
    3. ஓ உப்புப் போட்டுக் காய விடுவதோ கீசாக்கா? நானும் யோசிப்பேன் அப்படி ஏதும் செய்து பார்க்கலாமே என.. கறிக்குள் போட்டேன் அது சரி வரவில்லை.. கறிக்கென அப்பிள் புளிப்பாக விற்கிறது.. அது சமைக்க மட்டுமே பயன்படும்.. அதை வாங்கி மாங்காய்போல உப்புத்தூள் சேர்த்துச் சாப்பிட்டுப் பார்த்தேன்.. நல்லா இருந்தது ஆனால் குளிர்க்குணம்போலும், நெஞ்சை அடைச்சு மூச்செடுக்க முடியாததுபோல வந்துது... அதனால பின்பு நிறுத்திட்டேன்...

      Delete
  15. மோடி (இல்லை இல்லை மோதி), டிரம்ப் பாடல் காட்சி எனக்கு சில நாட்கள் முன்னரேயே வந்துவிட்டது. மிகவும் ரசித்தேன்.

    அதைவிட, இப்படியெல்லாம் யோசிக்கும் மூளையை நினைத்து வியந்தேன். ரொம்ப க்ரியேட்டிவிட்டி இருந்தால்தான் இப்படியெல்லாம் மீம்ஸ் போட முடியும்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எனக்கு லேட்டாத்தான் கிடைச்சிருக்குது, அல்லது போஸ்ட் போட லேட்டாகிட்டுது:)..

      உண்மைதான் எப்படியெல்லாம் யோசிச்சுச் செய்கிறார்கள் நானும் வியப்பதுண்டு.. அதிலும் சிலருக்கு அந்த ஸ்பொட் ல கொமெடி வரும்.. சிரிக்காமல் சொல்லுவினம் நாம் விழுந்து விழுந்து சிரிப்போம்.. அதுவும் ஒரு கொடைதான்.

      Delete
  16. மாங்காய் - சீசன் முடிந்துவிட்டால் இப்படித்தான் காய்னு வாங்கினா உள்ள மஞ்சளாக இருந்துவிடும். நாம் இப்படி சில தடவை பஹ்ரைனில் வாங்கி ஏமாந்திருக்கேன். பொதுவா நான் கடைக்காரர் கவனிக்காதபோது மாங்காயின் காம்பை கட் பண்ணி, அதில் பால் வடிந்தால் அந்தப் பால் வாசனையை வைத்து மாங்காய் எப்படிப்பட்டது, ஊறுகாய் போட்டால் நன்றாக இருக்குமான்னு பார்த்து வாங்குவேன்.

    இங்க சீசன் நேரத்தையெல்லாம் விட்டுவிட்டு, இப்போ என் பெண் மாங்காய் வாங்கிவரணும், ஆவக்காய் போடணும் என்று சொல்கிறாள். ரொம்ப தூரத்துக்குப் போய், ஆந்திரா மாங்காய் பார்த்தேன். கிலோ 120 ரூபாய், ஆனால் வெட்டி வைத்தவற்றில் சில மஞ்சளாக இருந்தன. காயும் கெட்டியாக இல்லை. அதனால் வாங்கலை.

    நீங்க வாங்கின மாங்காயும் அப்படித்தான். இதனை அவியல் தவிர வேறு எதற்கும் உபயோகிக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

      இந்த மாதிரி மாங்காயை அவியலிலும், போடலாம். ஆனால் மாங்காய் பச்சடி (இனிப்பு.. வெல்லம் போட்டு) பண்ணலாமே..! உங்களுக்குத்தான் இனிப்பு பிடிக்குமே..!ஒரு வேளை வெல்லம் சேர்த்தது பிடிக்காதோ? இங்கு நாங்களும் நேற்று ஊறுகாய்க்கு என மாங்காய் வாங்கி அது காயாகவும், பழமாகவும், இல்லாமல் போகவே இப்படித்தான் மாங்காய் பச்சடி செய்து சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் எனக்கு ரொம்ப பிடித்தமானது இந்தப் பச்சடி. இந்த மாதிரி காய் அமையும் போதுதான் எனக்கும் இது அமையும். அதனாலேயே எல்லோரும் கடுப்பாகி விட்டனர். ஹா ஹா ஹா. நன்றி.

      Delete
    2. இப்போ மாங்காய் சீசன் முடிஞ்சுபோச்சோ? நான் நினைச்சேன்.. ஐப்பசி கார்த்திகை வரை இருக்கும் என.. இனித்தானே நல்ல வெயில் காலம்.. யூலை ஓகஸ்டில்..

      ஓ மூள் ஒடிச்சுப் பார்த்து வாங்குவது.. அது முத்தலுக்குப் பால் வராது என்ன.. ஆனா வாடினாலும் பால் வராது என நினைக்கிறேன்... இந்த நாட்டில் இப்படிக் கிடைப்பதற்கே பாராட்ட வேண்டும்.

      முருங்கை இலைக் கட்டுகூட கிசைச்சது.. ஒரு கட்டு 5 பவுண்டுகள், ஆனா கொஞ்சம் அவிஞ்சுபோச்சு பொலித்தீன் பாக்கில் இருந்தமையால, மொத்தத்தில பாதிதான் எடுத்திருக்கிறேன் சுண்டலுக்கு என.

      // கிலோ 120 ரூபாய், //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா இந்த நாட்டில் பொருள் கிடைப்பதுதான் எங்களுக்குப் பெரிசு..என நினைக்கோணும்.

      ஒரு மாங்காய் சும்மாவே சாப்பிட்டாச்சு.. மற்றையதை இன்று ஏதும் சமைக்கோணும்.. இல்லை எனில் அவ்வளவு காசு கொடுத்ததுக்குப் பிரயோசனம் இல்லை:))

      Delete
    3. கமலாக்கா, இஞ்சியும் சேர்த்துப் பச்சடி செய்வேன் ஆனா அது காயில்தானே.. இதிலும் செய்யலாமோ? கிரேப்பரில் துருவ முடியுமோ தெரியவில்லை.. இன்று முயற்சிக்கிறேன்ன் சின்ன வெங்காயமும் சேர்த்துச் செய்ய நன்றாக இருக்கும்.. நன்றி கமலாக்கா.

      Delete
    4. நானும் இப்படி மாங்காய் அபூர்வமாக அரைக்காயாக இருக்கையில் வாங்கினால் எனக்குனு பச்சடி செய்துப்பேன். அதிரடி போல் இஞ்சி எல்லாம் சேர்ப்பதில்லை. துருவவும் மாட்டேன். தோலைச் சீவிட்டுத் துண்டங்களாக எடுத்துக் கொண்டு கொஞ்சம் உப்புச் சேர்த்து வேகவைத்துக் கொண்டு வெல்லம் போட்டுக் கரைந்து வெல்ல வாசனை போனபின்னர் அரிசி மாவு கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த் தூள் சேர்ப்பேன்.

      Delete
    5. அதிரடி, ஐப்பசி, கார்த்திகையிலும் மாங்காய் வரும். அதைக் "கார்"மாங்காய் என்பார்கள். எங்க அம்பத்தூர் வீட்டில் ஒரு மரம் கோடையிலும் காய்க்கும், ஐப்பசி, கார்த்திகையிலும் காய்க்கும்.

      Delete
    6. கமலா ஹரிஹரன் மேடம்... எங்க வீட்டுல மாங்காய் பச்சிடி என்பது வருடத்தில் அந்த ஒரு நாளில் மட்டும்தான். அன்றும் நான் மட்டும்தான் சாப்பிடுவேன் (மற்றபடி ச்ராத்தத்தின்போதும் பண்ணுவாங்க). அதனால் மாங்காய் பச்சிடியைக் குறிப்பிடவில்லை.

      அதுசரி..மாங்காய் பச்சடிக்கு வேப்பம்பூ போடுவீங்களா மாட்டீங்களா?

      என் பெண், நான் சாப்பிடுவதற்காக வாங்கியிருந்த மாம்பழத்தில் ஒன்றை எடுத்து ஜீனிலாம் போட்டு ஜாம் செய்துவைத்திருக்கிறாள். ரொம்ப நல்லா செய்திருக்கிறாள். அதை ப்ரெட்டில் தோய்த்து பசங்க இருவரும் சாப்பிட்டாங்க.

      முன்னால நான் ஆந்திராவில் கிடைக்கும் மேங்கோ ஜெல்லி (அதாவது ஜீனி போட்டு நன்கு கிளறி, பட்டையான ஷேப்பில் பாக்கெட்டில் கிடைப்பது) சாப்பிட்டிருக்கேன். அப்புறம் அதில் ஷுகர் கண்டெண்ட் ரொம்ப அதிகம் என்று தெரிந்ததும் அதில் விருப்பம் போய்விட்டது.

      Delete
    7. கீசாக்கா, நான் மற்ற மாங்காயில பச்சையாக கிரேப் பண்ணி, சின்ன வெங்காயம் மிளகாய் போட்டு பச்சடி ஆக்கினேன்.. அதை யான் மட்டுமே உண்டேன் ஹா ஹா ஹா:)).. கனிஞ்சுபோச்சு.. அதனால ஆருக்கும் பிடிக்கவில்லையாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஓம் கீசாக்கா, சீசன் பற்றி தெரியவில்லை ஆனா இங்கு ஏசியன் கடையில எல்லாக் காலத்திலும் விதம் விதமான மாங்காய் கிடைக்கும்.. விலைதான் அதிகம்..

      Delete
    8. நெல்லைத்தமிழன், எந்தப் பழத்திலும் ஜாம் செய்தால் சூப்பராக இருக்கும்.. புளிப்புப்பழம்கூட, ஆனா அதுக்கு சீனி அதிகம் தேவைப்படும். எங்கள் புளொக்குக்கு நான் ஒரு ஜாம் ரெசிப்பி அனுப்பினேனெல்லோ முந்தி.. மறந்திருப்பீங்கள்..

      //நான் சாப்பிடுவதற்காக வாங்கியிருந்த மாம்பழத்தில்//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதென்ன நான்.....:)).., நாங்க சாப்பிட வாங்கிய எனச் சொல்லோணுமாக்கும்:)) ஹா ஹா ஹா

      Delete
    9. @நெ தமிழன்
      ///அதுசரி..மாங்காய் பச்சடிக்கு வேப்பம்பூ போடுவீங்களா மாட்டீங்களா?///
      ஆவ்வ்வ்வ் இதென்ன இதூஊஊஊ? ஹையோ ஆண்டவா, நான் வேப்பம்பூ வச்சிருக்கிறேன் ரசத்துக்கு மட்டுமே சேர்ப்பேன்..

      நீங்கள் சொல்வது உடன் பிடுங்கிய வெள்ளைப்பூவாக இருக்குமோ? என்னிடம் இருப்பது நன்கு காய்ந்த பூ.

      Delete
    10. தமிழர் மரபுன்னு நினைக்கிறேன். வருடப்பிறப்பு அன்று மாங்காய் பச்சிடியில் வேப்பம்பூ வறுத்துச் சேர்ப்பது (அப்போதான் வேப்பம்பூ நிறைந்து பூத்திருக்கும்).

      காய்ந்த வேப்பம்பூவை நெய்யில் வறுத்து (கருகக்கூடாது), சுட சாதத்தில் நெய், சிறிது உப்பு போட்டுக்கொண்டு, வேப்பம்பூ வறுத்ததைப் போட்டுச் சாப்பிட்டால், உடலுக்கு மிக நல்லது. (இப்படியே சுண்டை வற்றலையும் சாப்பிடுவார்கள்)

      Delete
    11. //வருடப்பிறப்பு அன்று மாங்காய் பச்சிடியில் வேப்பம்பூ வறுத்துச் சேர்ப்பது //
      ஓ இது நான் கேள்விப்படவில்லை.. சில ஊர் வழக்கமாக இருக்குமோ.

      ஓ சாதத்துடன்.. ம்ஹூம் அது இங்கு சரிவராதென்றே நினைக்கிறேன்... சுண்டங்காய் வத்தலை பொரிச்சால்.. புட்டோடு சாப்பிட.. ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ .. மோர் மிளகாய்போல இருக்கும்:)).. கெளரி விரத காலத்தில் சாப்பிட என வைத்திருக்கிறேன்:)..

      Delete
  17. பெரூசா ரேடிஷ் என்று முள்ளங்கி படம் போட்டிருக்கீங்களே... சின்ன சைஸ் பீட்ரூட் மாதிரி விளைந்திருக்கு. முள்ளங்கி நீளமா இருக்கவேண்டாமோ?

    இந்த ஊர்ல முள்ளங்கி, கிலோ 10 ரூபாய், 20 ரூபாய்னு விக்கறாங்க. (கொஞ்சம் காதுல புகை வரவழைப்போமே)

    எனக்கு அதில் சாம்பார் மட்டும்தான் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்ல நெல்லைட்த்ஹமிழன் இது இப்படித்தான் இருக்கும் சலாட் வகை... படம் பாருங்கோ..

      [im] https://cdn.shopify.com/s/files/1/1537/5553/products/11702_grande.jpg?v=1486445537 [/im]

      இவை குட்டி இனம்தான், ஆனா எங்களுக்கு சரியாக வளரவிலை.. அல்லது நான் வாங்கிய கன்று சரியில்லையோ என்னமோ தெரியவில்லை.

      //இந்த ஊர்ல முள்ளங்கி, கிலோ 10 ரூபாய், 20 ரூபாய்னு விக்கறாங்க. (கொஞ்சம் காதுல புகை வரவழைப்போமே)//

      ஹா ஹா ஹா இப்போதான் உருண்டை முள்ளங்கி எங்கட சுப்பமார்கட்டில் கிடைக்குது, வடாம் செய்ய எடுத்துப் படம் போட்டேனே பேபிளும் வெள்ளையும் கலந்தது.. அது ஓரளாவு பெரிய காய்.. ஒன்று 50 சதம்.. இப்படியான வகைகள் மலிவு விலையில் கிடைக்கும்.. உள்ளூர் உற்பத்தி என்பதனால.. நான் பிரட்டல்போல அல்லது வெள்ளைக்கறியாகவும் செய்வேன்...

      Delete
    2. இந்த ராடிஷ் இன முள்ளங்கி(?) பெரிசாக நீளமாக வராது. அம்பேரிக்காவிலும் நான் பார்த்தவரையில் இவைச் சின்ன சைஸ் பீட்ரூட் மாதிரித் தான் இருக்கும். அதுக்கு மேல் வந்து பார்த்ததில்லை. மதுரையில் கொடைக்கானலில் இருந்து சிவப்பு முள்ளங்கி என்றே வரும். அது தோல் சிவப்பு நிறமாக வெள்ளை முள்ளங்கி அளவுக்குப் பெரிதாகவும் கீரை கிட்டத்தட்ட அதே போலும் இருக்கும். ராடிஷ் என்பது சின்னதாகத் தான் இருக்கு.

      Delete
    3. இங்கும் ஊட்டி முள்ளங்கி என்று சிவப்பு முள்ளங்கி (நீளமானது) வருகிறது. நான் இன்னும் வாங்கலை. அதற்கு ஒரே உபயோகம் சாம்பார்தான். ஒரு நாள் சாம்பார் பண்ணியாச்சுன்னா திரும்பவும் சாம்பார் பண்ண ஒரு வாரம் ஆகும். ரசம், துவையல், பருப்பு சாதம், வெந்தயக் குழம்பு என்று வித விதமா ஆனால் ஒன்றே ஒன்று தினம் வரும். அதனால் ஒரு தடவை முள்ளங்கி சாம்பார் செய்தாச்சுன்னா, திரும்பவும் வர ஒரு மாதமாவது ஆகிடும்.

      Delete
    4. முள்ளங்கியில் நிறைய வகைகள் சேப் புகள் இருக்குதெல்லோ.. எனக்கென்னமோ வெள்ளை உருண்டையான முள்ள்ங்கி மட்டுமே பிடிக்கும், ஏனையதில் ஒரு மணம் வருவதைப்போல இருக்கும்...

      இந்த ரடிஷ் உம் பெரிதாகப் பிடிக்காது வீட்டில் ஆருக்குமே.. இது பச்சையாக சலாட்டுடன் கலந்து கிரீம் போட்டுச் சாப்பிட ஓகே.. கறி வகைகளுக்கு சரிவராது..

      //என்று சிவப்பு முள்ளங்கி (நீளமானது) //
      இப்படி நான் பார்த்ததில்லை நெ தமிழன்..

      Delete
  18. காணொளி ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் resolution அதிகம் என்பதால் load ஆக ரொம்ப நேரமெடுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஓ.. நான் ஒன்றும் பண்ணவில்லை நெ தமிழன்.. ஃபோனில் எடுத்து அப்படியே அப்லொட் பண்ணியிருக்கிறேன்.. மிக்க நன்றிகள் நெ தமிழன்...

      Delete
  19. //இது இப்போ எங்கள் கார்டினில் பூக்கும் மஞ்சள் மலர்கள்.. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மலராக ஒவ்வொரு கலரில் பூக்கும்//

    அதிசயம்! இயற்கையானதா, உருவாக்கப்பட்டதா?



    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ...

      ஹா ஹா ஹா ஹையோ அது பொருட்பிழை வந்துவிட்டது.. இப்போ போஸ்ட்டில் திருத்தி விட்டேன்..

      அது சொல்ல வந்தது என்னவெனில்.. என் முந்தைய போஸ்ட்டுகளில் ஒவ்வொரு கலராக எங்கட கார்டின் பூக்கள் படம் போட்டிருப்பேன். அப்படித்தான் இந்த மாதம் மஞ்சள்.. பேபிள் பூத்திருக்குது.. இப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகைப் பூக்கள் இங்கு வரும் எனச் சொல்ல வந்தேன்ன்.

      ஒரு செடியில் அல்ல:)) ஹா ஹா ஹா..

      Delete
  20. //இது ஊரில் கரிக்குருவி இனம் என்போம், ஒன்று கண்டால் பாட் லக், அதிகம் கண்டால் நல்லது நடக்கும், அதனால இதைப் பார்க்கும் உங்கள் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டுமே எனப் படம் போட்டிருக்கிறேன்//

    படத்தை நகல் எடுத்து வீட்டுச் சுவரில் ஒட்டிட்டேன். தினம் ஒருமுறையாவது பார்க்கணும்னு இல்லக்கிழத்தி[கிழவி]க்கும் உத்தரவு போட்டுட்டேன்.

    அதிராவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதுசரி அதெப்படிக் கிழவி ஆக்கிட்டீங்க கர்ர்ர்ர்:))

      மிக்க நன்றிகள் அறிவுப்பசிஜி.

      Delete
  21. கடைசில உள்ள GIF எனக்கென்னவோ அந்தப் பெண் உங்க வத்தலை வாய்ல போட்டுக் கடிச்சுட்டு சிரமப் படுவதுபோல தோணுது.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆ இல்ல நெல்லைத்தமிழன் அது அஞ்சுவைத் திட்டுறேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி.. சொல்லிடாதையுங்கோ அஞ்சுவுக்கு:))

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்........இப்பவே நான் சொல்லிவிடுறேன் அஞ்சுவிடம்.

      Delete
    3. @ammulu

      [im] http://4.bp.blogspot.com/-94cTfDVOSfc/UEXP7pZ6CcI/AAAAAAAABJs/KP9oUU8_uYg/s320/RunningCat.jpg[/im]

      Delete
    4. தாங்க்ஸ் ப்ரியா :)ஹலோ ஞான பல்லி இருங்க கோவிட் டெஸ்ட் கிட்டோட வரேன் உங்களைத்தேடி :)

      Delete
    5. @anju
      [im] https://scitechdaily.com/images/Cat-COVID-19-Mask-260x146.jpg[/im]

      Delete
  22. Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..
      மிக்க நன்றி.

      Delete
  23. ஹா ஹா ஹா ஹா எலியாரைப் பார்த்து பயந்து போன பூஸார் எங்கிட்டு வந்திருக்கார்னு நேக்குத் தெரியுமே அங்கிட்டு எபி கிச்சன்ல ரொம்ப சமர்த்துப் பிள்ளையா வந்து பாத்திரத்தைக் கழுவிக் கொண்டிருக்கிறாரே!! ஹா ஹா ஹா ஹா

    கமலாக்கா அங்கு எபியில் இதைத்தான் காலையில் சொன்னாங்களாக்கும்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ..

      ஹா ஹா ஹா அதேதான்... கொடுமை கொடுமை எண்டு கோயிலுக்குப் போனால், அங்கொரு கொடுமை காத்திருந்த கதையா முடிஞ்சு போச்சே:)).. இங்கின ஊசிக்குப் பயந்து அங்க ஓடினா:)) அங்கு பாத்திரம் கழுவிக் குடுக்க வேண்டியதாப்போச்சு:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இன்று நரி முகத்தில முழிச்சிருப்பேனோ:))

      Delete
  24. முதல் வீடியோவில் டெய்சிப் பிள்ளை ரொம்பவே அழகா இருக்காளே. வெட்டிங்க் ரிங்க் போட்டாச்சு போல!! பார்த்தா அப்ப்டித் தெரிகிறாளே.

    கூஸ்பெர்ரி நல்லா காச்சுருக்கு. எங்க ஊர் கூஸ்பெர்ரி விட அங்கு கொஞ்ச்ம வித்தியாசமா இருக்கு. ஆனா கூஸ் பெர்ரினா நெல்லிக்காய்னு தானே சொல்லுவாங்க உங்க வெரைட்டி காயின் மேல் கொஞ்சம் முடி எல்லாம் இருப்பது போல் இருக்கு. அதன் ஒரு ரகம் போல. எல்லா பெர்ரிஸ்ஸுமே விட்டமின் சி நிறைய உள்ளது/. ரொம்ப நல்லது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //வெட்டிங்க் ரிங்க் போட்டாச்சு போல!! பார்த்தா அப்ப்டித் தெரிகிறாளே.//

      ஹா ஹா ஹா கல்யாணக் களை தெரியுதோ ஹா ஹா ஹா:)).. என்னை விட்டு விலத்தவே மாட்டா கீதா.... அதிலும் கார்டினுக்குள் என் குரல் கேட்டால் போதும் எங்கிருந்தாலும் பறந்து வந்து என்னோடு சுத்திக் கொண்டே இருப்பா.

      போன கிழமையில் ஒருநாள் நான் கார்டினில் நின்றேன், இவவும் நின்றா என்னுடன், அப்போ மழை தூறத்தொடங்கி விட்டது.. அவவை வீட்டுக்குள் போகச்சொல்லிக் கொண்டு வந்து விட்டேன், உள்ளே போனவ திரும்பிப் பார்த்தா நான் வரவில்லை, திரும்ப என்னோடு வெளியே மழைத்தூறலில் சுத்திப்போட்டு, மழை கூடியதும் நான் ஓடிவர தானும் ஓடி வந்தா..

      எங்களைக் கவனிக்காமல் மகன் கதைவைப் பூட்டி விட்டார், அப்போ நான் டோரைத் தட்டினேன்.. இவ எனக்கு முன்னால நின்று டோரில முன்னங்கால் ரெண்டையும் தூக்கி வச்சுத் தள்ளுறா.. திறக்கட்டாம் என ஹா ஹா ஹா.. ஒரு குழந்தைதான்.. நாம் வளர்ப்பதும் பிள்ளைபோல என்பதாலோ என்னமோ அவவும் அப்படியே இருக்கிறா.

      Delete
    2. எங்கள் ஊர் நெல்லி, புளிப்பு அதிகம், கொஞ்சம் ஹார்ட்டா எல்லோ இருக்கும்.. விதையும் ஒன்று பெரிசாக இருக்கும்... இது குட்டிக்குட்டிப் பருப்புக்கள், புளிப்புத்தான் ஆனா கொஞ்சம் இனிமையான புளிப்பாகவும் சொஃப்ட்டானதாகவும் இருக்கும் கீதா..

      நெல்லிக்காய்தான் கீதா... இந்நாட்டு வெரைட்டி.. நான் நினைக்கிறேன் இதுக்கு குளிர் தேவை, பனிக்காலத்திலும் அப்படியே இலையுடன் படாமல் நிற்குது.

      சூப்பர்மார்கட்டில் கூஸ்பெரி யோகட் விக்குது, எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. இடைக்கிடை வாங்குவேன் அடிக்கடி வாங்குவதிலை, இனிப்பு அதிகம் போட்டிருப்பார்கள்.. உண்மைதான் நம்மூர் முழு நெல்லிபோல சி சத்து அதிகமாம்.

      Delete
  25. தேன் நெல்லி போட்டீங்களோ?

    நெல்லிக்காயின் ஒரு வேரைட்டியேதான். நான் பார்த்திருக்கிறேன் ஆனால் சுவைத்தது இல்லை. உறவினர் முன்பு கொண்டு வந்த போது. இங்குள்ள வீடியோ பார்க்கறப்ப அது தெரியுது.

    பூக்கள் மிக அழகாக இருக்கின்றன அதிரா ஒவ்வொரு நிறமும்.

    கரிக்குருவிகள் இங்கு கருங்குருவி என்று சொல்வதுண்டு. ஆனால் மைனா, காக்காய்க்குத்தான் நீங்க சொல்லும் அந்த ஜோஸ்யம் ஹா ஹா. மைனா ஒன்று கண்டால் நல்லதில்லை 2 கண்டால் நல்லது 3,4 கண்டா ரொம்பவே நல்லது என்று...காக்காயில் அண்டங்காக்கா ஒன்று கண்டால் நல்லதில்லை ரெண்டுகண்டா நல்லதுன்னு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்த ரெசிப்பிதான் மேலே ஜேகே ஐயா தந்திருக்கிறார் கீதா.. இல்லை அது பெரிதாகப் பிடிக்கும்போல இல்லை.. இது சும்மா சாப்பிட, ஸ்மூத்தி செய்ய ஓகே.

      ஆஆஆஆ மைனாவுக்கு இந்த ஜோசியமோ கீதா, அப்படி நான் கேள்விப்பட்டதில்லை..

      காகத்தில் அண்டங்காக்கா கத்தினால் நல்ல சேதி வரும், விருந்தினர் வருவர் என்பினம்.. ஆனா பெண் காகம் கத்தினால்.. கூடாது, வருத்தம் துன்பம் வரும் என்பினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. //அண்டங்காக்கா ஒன்று கண்டால் நல்லதில்லை ரெண்டுகண்டா நல்லதுன்னு// - லண்டன் டவரில் (அந்த வளாகத்தில்) ஒரு இடத்தில் அண்டங்காக்கைகள் உண்டு. சும்மா கும்முன்னு ரொம்ப தடியா இருக்கும். ஐந்து ஆறு காக்கைகள். அவை எப்போதும் லண்டன் டவரில்தான் இருக்குமாம் (சில நூறு ஆண்டுகளாக). அதுதான் அந்த டவருக்கு ராசியாம். இப்போவும் அங்க இருக்கு. ஒரு தடவை அந்தப் படத்தை எபியில் போடச் சொல்றேன்.

      Delete
    3. https://www.youtube.com/watch?v=yKG6YRG0s_8

      Delete
    4. //சும்மா கும்முன்னு ரொம்ப தடியா இருக்கும்//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏதோ ஹன்ஷிகாவைச் சொன்னதைப்போலவேஏஏஏஏஏ ஜொள்றீங்க எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))..

      இங்கும் பெரிய காகம் சின்னக் காகம் வருவினம் நெ தமிழன். புரட்டாசிச் சனிக்கிழமைகளில் வெதர் நல்லா இருந்தால் வந்து சாப்பிடுவார்கள். ஆனா இந்த மக்பை களும் சீகல் களும் அவற்றை விடாது.

      ரெண்டு கிழமைக்கு முன்பு ஒருநாள்.. ஓயாமல் ஒரு அண்டங்காகம் எங்கட கிச்சின் விண்டோப்பக்கமாக இருந்து கத்திக் கொண்டிருந்துதா... இடைக்கிடை கூட்டமாகவும் சேர்ந்து கத்தினார்கள்.. என்ன என எட்டிப் பார்த்தால்...

      ஒரு காகக் குஞ்சு.. அதன் நீளச் சொண்டை வைத்துத்தான் கண்டு பிடிச்சோம் அது காகக்குஞ்சென... அது பறக்கத் தெரியாமல்.. தெத்தி தெத்தி நடைபழகுது... அதைக் கூட்டிப் போக முடியாமல்.. இவர்கள் கூட்டமாக செக்குறிட்டி வேலை நடக்குது.. என்ன கொடுமை பாருங்கோ.. எங்கட வீட்டிலதானே ஒரு பொல்லாத வேட்டைக்காரி இருக்கிறா.. அதுக்காகவே வந்ததைப்போல எங்கள் வளவிலேயே குஞ்சு தத்தி தத்தி நடக்குது...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      அப்போ இந்த வேட்டைக்கார டெய்சிப்பிள்ளை வெளில போனாவா... காகங்கள் என்ன ஒற்றுமை பாருங்கோ.. குஞ்சுக்கு இவ குறி வைக்க.. எல்லாக் காகமும் மேலே இருந்து .. என்ர ஐயோஓஓ என்ர ஐயோ என குளற.. இவ பயத்தில றிவேஸ்ல வந்து .. தூரத்தில இருந்து வோச்சிங்:))..

      அது ஒரு மைனாக்குஞ்சோ குயில்க் குஞ்சோ எனில், ஒரே ஜம்ப்பில பிடிச்சிருப்பா.. இது இவவை கிட்ட நெருங்க காகங்கள் விடவே இல்லை. அப்பாடா என் வேலை மிச்சம் என விட்டு விட்டேன்.. இவவும் தூர இருந்து குறிபார்த்தபடி இருந்தா, ஆனா 2,3 நாட்களாக இந்த எல்லையிலேயே குஞ்சைப் பாதுகாத்து, கூட்டிப் போய் விட்டுதுகள் பாருங்கோ.. இப்போ காகங்களைக் காணவில்லை...

      எ.புளொக் அனுப்புங்கோ நெ தமிழன், மகளின் ரெசிப்பியோடு...

      பாருங்கோ என் செக் இவ்ளோ பிசியிலும் லிங் கொண்டு வந்து தந்திருக்கிறா எனச் சொல்லேல்லையாக்கும் நான்:)) ஹா ஹா ஹா..

      Delete
  26. கப்பு கப்பா அழகா ஒரு வயலெட் பூ கொத்து கொத்தாகப் பூத்திருக்குதே ஹையோ மனதைக் கொள்ளை கொள்ளுதே...அடுக்கு மாடி கட்டிடம் போல!!

    மஞ்சள் கொத்தும் மிக அழகாக இருக்கின்றன.அழகோ அழகு! மஞ்சளழகி போல!!

    ஆஅ ஆ ஆ ஆ ஸ்ட்ரா பெர்ரி ரொம்பப் பிடிக்குமே இங்கு. அழகா இருக்கே ஏன் தொட்டிய்ல் வைச்சீங்க? தோட்டத்தில் நிலத்தில் இருந்தா நல்லாருக்கும் இல்லையா..

    மாங்காயை பாதி பழுத்தது என்றால் மாங்காய்ப் பச்சடி செய்துவிடலாமே. அல்லது சோர் அண்ட் ஸ்வீட் ஜாம் செய்யலாமே.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அடுக்கு மாடி கட்டிடம் போல!!//
      ஹா ஹா ஹா அதேதான் கீதா, இவை இங்கு பார்க் ஓரங்களில் காட்டுப் பகுதிகளில் தானாக வளரும்.. இவற்றில் வெள்ளையும் உண்டு. கிட்டத்தட்ட நம் எள்ளுப்பூக்கள் இப்படி எல்லோ...

      //ஏன் தொட்டிய்ல் வைச்சீங்க? தோட்டத்தில் நிலத்தில் இருந்தா நல்லாருக்கும் இல்லையா..//
      நிலத்தில் எனில் பூச்சி புழு விடாது கீதா, இனிப்பெல்ல்லோ, அப்படியே ஓட்டை போட்டுவிடும், இது கிச்சின் வாசல் சீமெண்ட்டில் வைத்திருக்கிறேன்.

      ஹா ஹா ஹா... பச்சடி செய்து சாப்பிட்டு முடிச்சாச்சு கீதா:))

      Delete
  27. மோதி ட்ரம்ப் டான்ஸ் செம முன்னாடியே பார்த்தாச்சு அதிரா. ரொம்ப நல்லா யோசிச்சு அழகா சிங்க் செஞ்ச்ருக்காங்க! திறமை...

    ஊஇ செம மிகவும் ரசித்தேன் உண்மைதானே!! நல்லதை மட்டுமே பார்ப்போம்.

    கர்ர்ர்ர் கமென்ட்ஸ் என்ன வருதோன்னு எதுக்கு இப்படி நற நறன்னு பல்லைக் கடிக்கணும் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் ட்ரம்ப் அங்கிள் பாடுவதைப் பார்த்திட்டீங்க இம்முறை ஹா ஹா ஹா..

      நன்றி கீதா.

      Delete
  28. மழைத்துளி பாட்டு மிகவும் பிடிக்கும்! மீண்டும் கேட்டேன். ஹரிஹரன் வாய்ஸ் ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாட்டெல்லோ.. ஆனா வீடியோவுடன் போட முடியாது, அது பார்க்க ஒரு மாதிரி இருக்கு...

      இன்னொரு நியூஸ் கீதா.. அடுத்து வர இருப்பது... இருப்பது .. துளசி அண்ணனின் கேரளா.. கோழிக்கூடு... ஆவ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா இப்போ சொல்ல மாட்டனே:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதா நன்றி.

      Delete
  29. அஞ்சு வந்தாப்பிறகு வாறேன்...

    ReplyDelete
    Replies
    1. நான் வந்திட்டேன் ப்ரியா பயப்படாம வாங்க .ஞானபல்லி  மிரட்டினாரா :) இருங்க கோவிட் டெஸ்ட் கிட்டோட வரேன் பூனை ஓடிடும் 

      Delete
    2. அப்பாடா வந்தீங்க.தாங்ஸ் அஞ்சு. உங்களுக்கு பின்னாடிதான் வந்தேன்..

      Delete
    3. வாங்கோ அம்முலு வாங்கோ..... அஞ்சு வந்திட்டா வாங்கோ.. ஓ இப்போதான் புரியுது, லொக்டவுனால அஞ்சு குண்டானதால, அஞ்சுவுக்குப் பின்னால ஒளிச்சு ஒளிச்சு வரலாம் எனும் ஐடியாத்தானே ஹா ஹா ஹா...

      Delete
  30. இடையில் எம் எஸ் வி எனக்கு அந்தப் பாகமும் ரொம்பப் பிடிக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆ நன்றி கீதா ரசித்தமைக்கும் அனைத்துக்கும்.

      Delete
  31. தோட்டம் இருந்தாலே மனதுக்கு நிறைவு, மகிழ்ச்சி! அதிலும் நம் தோட்டத்தில் நாம் அறுவடை செய்வது போல் சந்தோஷமான விஷயம் வேறே ஏதும் இல்லை. கூஸ்பெரி நன்றாக வந்திருக்கின்றது. கூஸ்பெரி சாறு எடுத்து தினம் சாப்பிடுங்க! உடலுக்கு நல்லது. அம்பேரிக்காவில் கிடைப்பதில்லைனு நினைக்கிறேன். பையர் ஃப்ரோசன் வாங்கி வந்தார். சுமாராகத் தான் இருந்தது. மற்ற ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி எல்லாம் சாப்பிட்டிருக்கேன். ஸ்ட்ராபெரியை விட ப்ளூ பெரி பிடிக்கும். ராடிஷ் இந்த அளவுக்குத் தான் அம்பேரிக்காவில் அங்கேயும் வருது. பெரிதாக நீளமாகவெல்லாம் வருவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை கீசாக்கா, இப்போ பீன்ஸ் எல்லாம் காச்சுத் தொங்குது... பார்க்கப் பார்க்க பிடுங்க மனமில்லை ஹா ஹா ஹா முத்திடப்போகுது பிடுங்கோணும்..

      கூஸ்பெரி ஸ்மூத்தியில் போடுகிறேன் கீசாக்கா.. எனக்கு நெல்லிக்காய் சரியான விருப்பம், அது இங்கு கிடைக்காமையாலேயே[தமிழ்க் கடையில் மட்டும் கிடைக்கும்].. இதனை வாங்கி நட்டோம்.. நட்ட நேரம் தொடங்கி ஒவ்வொரு வருடமும் நன்கு காய்க்குது வஞ்சகமில்லாமல்:))..

      ஃபுரோஷன் புருட்ஸ் கீசாக்கா ஸ்மூத்திக்கு மட்டுமே நல்லா இருக்கும் மற்றும்படி சாப்பிட சுவை இல்லை. இந்த ரடிஷ் இதே சைஸ்தான் கீசாக்கா.. இது ஒரு வகை.. ஒரு முழுநெல்லி சைஸ்தான், அதைவிடப் பெருக்காது..

      Delete
  32. மோதி - ட்ரம்ப் காணொளி 3 நாளாகச் சுத்தோ சுத்துனு சுத்திட்டு இருக்கு! யார் தயாரிச்சாங்களோ அவங்க நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவங்க.

    அது என்ன உங்க பூசார் தோட்டத்திலே உங்களோட உலாத்திட்டிருக்காரா? கொஞ்சம் குண்டாய் ஆகிட்டாரோ? கடைசியில் அந்தப் பெண்ணுக்கு என்ன சாப்பிடக் கொடுத்தீங்க? சூயிங் கம்மா? வாயிலே ஒட்டிக்கிட்டதோ?

    ReplyDelete
    Replies
    1. பூஸ் பிள்ளை என்னுடனேயே ஒட்டியபடி உலாத்துவா.. படம் எடுக்கும்போது குறுக்க குறுக்க வருவா, அவவை விலத்தி விலத்தித்தான் படங்கள் எடுப்போம் ஹா ஹா ஹா..

      அது கீசாக்கா அந்தக்காவுக்கு சுவிங்கம் கொடுத்து திட்டச் சொன்னேன் .. ஹா ஹா ஹா ஆரை எனக் கேட்ககூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  33. இந்தக் கருப்புக்குருவி, சிறகில் வெள்ளை கலந்தது இங்கேயும் வருது. ஓமப்பொடின்னா ரொம்பப் பிடிக்கிறது இதுங்களுக்கு! சாதம் வைத்தால் சாப்பிடாதுங்க! இரண்டு வீடியோவும் பார்த்தேன். நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இது குருவி எனச் சொன்னாலும் சைஸ், காகத்தின் சைஸ், ஆனா நல்ல அழகான ஒரு கறுப்புடன் கருநீலம் கலந்த சைனிங்கான கலர், ஆனா இவை பொல்லாத பறவை, ஏனையவற்றின் கூட்டில் போய் முட்டை எல்லாம் குடிக்குமாம்.

      இங்கு எது போட்டாலும் ஓரளவுக்கு வந்து சாப்பிடுகினம், ஆனா போன தடவை ஒரு பெட்டி கோர்ன் ஃபிளெக்ஸ், கன நாளாகி விட்டதால அப்படியே கொட்டி வச்சேன்.. அது அவர்களுக்கு நல்லாப் பிடிச்சுப் போச்சு.. உடனேயே காலி பண்ணிவிட்டார்கள்..ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  34. பாடல் உங்கள் தோட்டத்திற்கு, மழைத்துளி உயிர்த்துளி கொடுத்த உற்சாகத்தில் பிறந்தது என்று நினைக்கிறேன். சூப்பர் ! பாடல் எனக்கு பிடிக்கும் கேட்டேன்.

    அறுவடை காணொளிகள் அருமை. டெய்சிபிள்ளை வெயிலில் குளிக்கிறார் போலும், உடற்பயிற்சி எல்லாம் செய்து விட்டு.

    வண்டு அழகு. மலர்கள் அழகு.
    கூஸ்பெரி பறிக்கும் அதிராவின் கை அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      ஆஆஆ பாட்டு உங்களுக்கும் பிடிச்சுப்போச்ச்ச்.. எனக்கும் ரொம்பப் பிடிக்கும், நான் நினைச்சேன் இது மனோ அவர்கள் பாடியது என, ஆனா இது ஹரிஹரன் அவர்கள். பாட்டு நல்ல பாட்டு கோமதி அக்கா, ஆனா வீடியோவாக பார்த்தால், ஆரம்பமே சோகமான காட்சிபோல இருந்துது, அதனால வீடியோ இல்லாப் பாட்டாகப் போட்டேன்.. இப்படம் பார்க்கவில்லை நான்.

      டெய்சிப்பிள்ளைக்கு நாமும் வெளியே போனால் ஹப்பியோ ஹப்பி, ஏனெனில் வெயில் எனில் அவ வீட்டுக்குள் வர மாட்டா பகல் முழுக்க.. ரெஸ்டோரண்ட் போல வந்து சாப்பிட்டுப்போட்டு வெளியில் போய் இருப்பா:))..

      ///வண்டு அழகு. மலர்கள் அழகு.
      கூஸ்பெரி பறிக்கும் அதிராவின் கை அழகு.//
      ஹா ஹா ஹா நன்றி கோமதி அககா.. இந்தக் கைக்கு ஒரு வைரக்காப்புத்தருவதாக அஞ்சு சொல்லியிருக்கிறா:))

      Delete
  35. மோதி ட்ரம்ப் டான்ஸ் ஒரு வாரத்திற்கு முன் வந்தது பார்த்தாச்சு அதிரா. சூப்பர் பாடல் தேர்வு.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் கோமதி அக்கா.. எல்லோரும் பார்த்துவிட்டீங்கள் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  36. //எங்கள் கார்டினில் பூக்கும் மஞ்சள் மலர்கள்.. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மலராக ஒவ்வொரு கலரில பூக்கும்.. இங்கு பொருட்பிழை வருகிறது:)- இந்த மரத்தில் பூக்கும் எனச் சொல்லவில்லை:), //

    அதிய தோட்டமாய் இருக்கே! என்று நினைத்தேன். ஒரே மரத்தில் பூக்கும் என்று சொல்லவில்லை என்ன ஒரு கலாய்ப்பு!

    //கார்டினில், இப்படித் தொடர்ந்து விதம் விதமாக ஒவ்வொரு கலரில ஒவ்வொரு மாதமும் பூக்கும் செடிகள் உள்ளன எனச் சொல்ல வந்தேனாக்கும் ஹா ஹா ஹா.//

    நானும் ரசித்து சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அது ஆரம்பம் நான் எழுதிய விதம் பார்த்து எல்லோரும், ஒரு கொடியில் பல கலர்களாஅ என மயங்கி விழாத குறை:)) ஹா ஹா ஹா அதனால மாத்தி எழுதினேன் விளக்கமாக.

      நன்றி நன்றி.

      Delete
  37. அதிகம் கண்டால் நல்லது நடக்கும், அதனால இதைப் பார்க்கும் உங்கள் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டுமே எனப் படம் போட்டிருக்கிறேன்//

    கரிக்குருவி அனைவர் வாழ்க்கையிலும் நல்லது கொண்டு வரட்டும். அதுவே இப்போது என் பிரார்த்தனை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கோமதி அக்கா.. ஒரு எல்லைக்கு மேல் அலுப்பாகி விட்டது, போதும் என்றாகி விட்டது, இங்கு ஓகஸ்ட்டுடன் எல்லாம் நோர்மலாகப் போகிறது என்கினம் பார்ப்போம்...

      இங்கிலண்டில் ஒரு சிட்டியில்.. நோர்மலாக எல்லாம் திறக்க, மீண்டும் பரவத் தொடங்கி, திரும்ப லொக்டவுண் போட்டிருக்கினம் நேற்றிலிருந்து...

      ஸ்கொட்லாந்து மக்கள் தொகை குறைவு.. கொஞ்சம் இப்போதைக்கு கவனமாக இருப்பதைப்போல இருக்கு, ஆனா பிள்ளைகளைக் கொன்றோல் பண்ண முடியவில்லை இப்போ.. எல்லோரும் வெளியே சுற்றத் தொடங்கி விட்டனர்.

      Delete
  38. தானாக பூத்த மலர், பாதையில் வேறு வீட்டில் பார்த்த ஆப்பிள் மரம், மஞ்சள் மலர் எல்லாம்
    அழகு. ஸ்ட்ராபெரி, சிவப்பு ராடிஷ் எல்லாம் அழகு.
    விவாசயம் செழித்து வளரட்டும் விவசாயி அதிரா மனம் குளிரட்டும் வாழ்க வளமுடன்.
    ஊசி இணைப்பு சொல்வது நன்றாக இருக்கிறது. பட்டம் பற்றி சொன்னதும் அருமை.
    பதிவை ரசித்தேன்.

    ReplyDelete
  39. இன்றைய பாடல் காட்சியை அதன் முன்னதான காட்சியுடன் இணைத்துப் பார்த்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. நான் தான் பதில் தர லேட்டாகிட்டேன்..

      ஓ அப்படியோ.. படம் பார்க்கவில்லை, பார்த்திட்டால் போச்சு..:)

      Delete
  40. முழுத்திரையில் பார்க்கும்போது முதல் காணொளியில் நானும் உங்கள் தோட்டத்துக்குள் இருபிப்பதுபோல உணர்ந்தேன்.  டெய்ஸி உங்களை விட்டுப் பிரியாது போலிருக்கு...   கூடவே வந்து மண்ணில் புரளுது!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஓ நன்றி.. டெய்சிப்பிள்ளை கார்டினில் நான் போனால்.. ஒட்டிக்கொண்டே சுத்துவா... என் அனைத்து வீடியோக்களிலும் இருப்பா ஹா ஹா ஹா.. பின்னொரு காலத்தில் இதைப் பார்க்க கவலையாக இருக்குமே என நினைக்க இப்பவே கவலையாகுது...

      Delete
  41. ஏதோ வேளாண்மைக் கல்லூரிக்குள் புகுந்த மாதிரி ஒரே தோட்டம், செடி, கொடி, மரம், பூ, காய் கனி...  இருந்தாலும் ரசித்தேன்.  பலவித வண்ண நிறங்களில் எல்லாமே அழகு.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு கார்டின் செய்யப் பிடிக்கும்தானே ஸ்ரீராம்.. நன்றி நன்றி.

      Delete
  42. ஊசிக்குறிப்பு காணொளி மிகவும் ரசித்தேன்.  திறமையாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.  அதே சமயம் அது என்ன மாதிரியான பாடல் தெரியுமா?  பாலமுரளி பாடும்போது இரண்டாவது சரணத்தில் என் கண்கள் கலங்கி விடும்...  மிக மிக மிக மிக பிடித்த பாடல் அது.  நீங்கள் போட்டிருக்கும் காணொளியில் வருவது ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் வரும் பாடல் என்று நினைவு.

    ReplyDelete
    Replies
    1. ஓ அந்தப் பாட்டில் இவ்ளோ இருக்கா.. நான் அர்ச்சுனன் மாதிரி:)) என் கண்ணுக்கு ட்றம்ப் அங்கிளும் மோடி அங்கிளும் மட்டுமே தெரிகிறார்கள் ஹா ஹா ஹா

      Delete
  43. ஊசி இணைப்பு சூப்பர்.  உடனே நான் என் புத்தகத்தைப் பார்க்கக் கிளம்பி விட்டேன்....  பிழைகள் இருக்காவென சோதிக்க!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  44. கடைசி காணொளி பார்க்க சிரிப்பும் வருகிறது  கடுப்பும் வருகிறதே ஏன்?  தத்துவம் என்னைத் திருத்தியது.

    ReplyDelete
    Replies
    1. //கடுப்பும் வருகிறதே ஏன்?//

      ஆஆஆஆ அந்தக்காவைப் பார்க்கவோ? ஏன் ஸ்ரீராம் ஏன்?:))

      என் தத்துவம் பார்த்துத் திருந்திட்டீங்களோ ஹா ஹா ஹா... இப்பூடி எனில் இனி அடிக்கடி தத்துவம் அள்ளி வீசுவார் பு.பூ:))

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  45. பசுமையான பதிவு அதிரா ..

    படங்கள் எல்லாம் புத்துணர்வு தரும் அழகில் இருக்கிறது ,....

    பழங்களில் நிறைய முட்கள் என எனக்கும் கமலா அக்கா எண்ணம் வந்தது ... பதில் அங்கு வாசித்து விட்டேன்

    ஊசி இணைப்பு சிறப்பு ....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      நீங்களும் இப்போதெல்லாம் அதிகம் பிசியாக இருப்பதைப்போல இருக்கு...

      மிக்க நன்றி அனு...

      Delete
  46. ஸ்ஸ்ஸ்ஸ் எப்பாஆ :) இருங்க எல்லாத்துக்கும் வணக்கம் சொல்லிக்கிறேன் :)  ஞான(வி)பல்லிக்கும் :) பணிவான வணக்கம் :))பாட்டு சங்கமம் படத்தில் எல்லாமே சூப்பரா இருக்கும் எனக்கு வராக நதிக்கரையோரம் பாட்டும் பிடிக்கும் :) ஒருகாலத்தில் தியாக்ஸ் அங்கிளின் மகனை லேசா சைட் அடிச்சோம்:))))))

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஏன் இவ்ளோ லேட்டூஊஊஉ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... என் கிரைண்டர் வந்ததும் நானும் பிசியாகிடுவேன் தெரியுமோ:))..

      //ஞான(வி)பல்லிக்கும் :) பணிவான வணக்கம்//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கொரோனா அங்கிள் இஸ் வோச்சிங்:))..

      //சங்கமம் படத்தில்///
      ஆஆஆஆஆஅ சங்கமமோ படப்பெயர்.. பார்க்கப்போறேன்ன்...

      //எனக்கு வராக நதிக்கரையோரம்//
      ஹையோ ஆண்டவா.. திருப்பழனியில் தெற்கே இருக்கும் வைரவா.. இப்பாட்டைத்தான் தேடப்போய்.. அப்பாட்டை எடுத்து வந்தேன்.. அது மனோ அங்கிள் பாடியதெல்லோ.. எனக்கு இதைவிட அதுதான் ரொம்பப் பிடிக்கும்.. அதைத்தான் தேடும்போது பெயர் மறந்து தடுமாறி இதில் விழுந்தேன்.. அப்போ இரண்டும் ஒரே படத்திலோ ஆஆஆஆஆ... ஒரு கல்லில் இரு மாங்காய்கள்...

      //ஒருகாலத்தில் தியாக்ஸ் அங்கிளின் மகனை லேசா சைட் அடிச்சோம்:))))))//
      ஆரு தியாகராஜன் மாமாவின் மகனையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்:)) மகனின் முதல் வெடிங்குக்கு, லண்டன் வந்து, தமிழ்ச்ஷனனில் நேரடியாக எல்லோரையும் வெடிங்குக்கு வரச்சொல்லி இன்ரவியூக் குடுத்தார்... நல்லவேளை நான் போகவில்லை... பாவம் மனிசன், எங்கட வீட்டுக்கு வரப்போகும் மஹா லக்ஸ்மி என நல்ல விதமாகப் பேசினார் மருமகளை.. ஆனா அது அப்படி ஏமாற்றி விட்டதே....

      Delete
  47. ////ஆஆவ் எலியாரை இந்தக் கோலத்தில பார்த்ததும், இன்று பூஸார் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிட்டார்போலும்:) ஆளைக் காணம்:)) ஊசிக்குப் பயம் போலும்:)//

    nono :) நான் ஊசி கொண்டுவர மாட்டேன் இப்போ கோவிட் டெஸ்ட் கிட்டோட வரேன் :) ஊசியே பரவாளன்ற அளவு இருக்கும் :)

    ReplyDelete
  48. ஹாஹா கூஸ்பெரி டெய்சி காணொளி sweeet ..டெய்சி என்ன செய்றான்னா அங்கிருக்கும் டெய்சி பூக்கள் மேல் உருள்ரா :) நீங்க கேட்டதும் குட்டி பாதங்களை மசாஜ் செய்றாப்ல செய்றது  பேரு biscuitting or kneading .ரொம்ப கன்டென்டடா இருந்தா சந்தோஷமா இருந்தா அப்படி செய்வங்க பூஸ் உங்களுக்கு தெரியாததா மியாவ் நீங்க செய்றத அவ செய்றா :)))))))) 

    ஸ்ஸ்ஸ் யப்பா மிடில :) தேன் பூச்சி தேன் குடிக்காம என்ன   உங்கள மாதிரி ஸ்மூத்தியா குடிக்கும் 

    ReplyDelete
    Replies
    1. இடையில கண் அடிச்சும் காட்டுறாவாம் ஹா ஹா ஹா..

      //ஸ்ஸ்ஸ் யப்பா மிடில :) தேன் பூச்சி தேன் குடிக்காம என்ன உங்கள மாதிரி ஸ்மூத்தியா குடிக்கும் //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா அந்தப்பூவுக்கு மட்டும் தேனீக்கள் அதிகமாக மொய்க்கும்...

      Delete
  49. //இது காடுபோல பகுதியில் தானாகப் பூத்திருக்குதே.. என்னா அழகு...//

    FOX GLOVES FLOWERS

    எங்க தோட்டத்தில் 4 வருஷம் முன் போட்டேன் பிறகு வளரலைன்னு விட்டேன் கடைசீல பார்த்தா விதை மழைக்கு பக்கத்துக்கு தோட்டம் போய் முளைச்சி பூத்திருந்தது :)மே பி இது உங்க பக்கத்து வீட்டார் போட்ட சீட்ஸா இருக்கும்:)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஓ அப்பூடியோ... இங்கு பல வீட்டுக் கார்டின்களில் இப்படி கூட்டமாக அழகாக இருக்குது அஞ்சு..

      Delete
    2. எது பிங் ஃபிளவேர்ஸ் ஐ சொல்றீங்களோ.. இல்ல அஞ்சு இது அருகில் வீடுகள் இல்லை கொல்ஃப் கிளப்தான் உண்டு.. இது மலைப்பகுதியின் அடியில் இருக்குது.. இது இங்கு நிறையக் காட்டுப்பகுதியில் உண்டு, திரும்ப திரும்ப முளைக்கும் என நினைக்கிறேஎன்..

      மேலே போட்ட கொமெண்ட்.. மஞ்சள் பூக்களைச் சொல்றீங்க என நினைச்சேன்..

      Delete
  50. https://www.youtube.com/watch?v=O3cEljuKJ64

    ஸ்டராபெரி செடியில் இருந்து க்ளைம்பெர்/RUNNER  வரும் பக்கத்தில் தொட்டியில் மண் நிரப்பி அதில் அந்த கொடிநுனியை  /RUNNER  நடுங்க புது செடியா முளைக்கும் .யூ டியூப் பாருங்க 

    ReplyDelete
    Replies
    1. ஓ.. ஆனா அதுக்குள் இங்கு குளிர் வந்துவிடும் என நினைக்கிறேன் பார்ப்போம்..

      Delete
  51. //இரண்டும் 6.79 பவுண்டுகள்... இப்படி வாங்கி வத்தல் போட முடியுமோ.. போனால் போகட்டும் என வெட்டினால் அது காயாகவும் இல்லை, பழமாகவும் இல்லை, இரண்டும் கலந்த கலவை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//உங்களுக்காகவே ஒரு பதிவு '   :))))

    https://paperflowerskitchen.blogspot.com/2019/10/mango-rasam.html

    ReplyDelete
    Replies
    1. ஓ மங்கோ ரசம், அதை முன்பே பார்த்துச் செய்யோணும் என ஆசைப்பட்டேன், அதன் கலர் பார்த்து ஆனா மறந்திட்டேன் இப்போ.. இனிக் கிடைக்கட்டும் செய்கிறேன்..

      Delete
  52. அந்த வெற்றிலை மேலும் பெண் :))))))))))) அவ்வ்வ்வ்வ்வ் மோடி அங்கிள் ட்ரம்ப் அங்கிள் பாட்டுக்குப்பாட்டு நல்லா இருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அஞ்சு... அடுத்து வரப்போவது கேரளா.. கோழிக்கூடு:)) ஹா ஹா ஹா விரைஞ்சு வரோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:))

      Delete
  53. சீ.சீ இந்தபழம் புளிக்கும் என்பது மாதிரி..மகனுக்கு பிடித்தமானது. அவர் வாங்கினால் கேட்பார் என்னை. ஆனா எனக்கு இந்த கூஸ்பெரி பிடிக்கவில்லை. மற்றைய பெர்ரீஸ் சாப்பிடுவேன்..அதனால் இதை மகிழ்வா சாப்பிடுவார்.ஏன் என்றா எனக்கு தரத்தேவையில்லை என. கர்ர்ர்ர்..
    வீடியோ நல்லாயிருக்கு பிஞ்சு கூஸ்பெரி அதிரா. டெய்ஸ் நல்லா போஸ் கொடுக்கிறா. பழகியிருக்கிறீங்க போல.

    பக்கத்துவீட்டு பவளகொடியோ அது... இப்படி வேலி போட்டு மரத்தை வைத்தால் அவைகளும் விடுப்பு பார்க்க அங்கால நுழைந்துவிடுவினம். எங்கட மரங்களும் உப்புடித்தான்.

    ReplyDelete
    Replies
    1. ///அதனால் இதை மகிழ்வா சாப்பிடுவார்.ஏன் என்றா எனக்கு தரத்தேவையில்லை என. கர்ர்ர்ர்..//

      ஹா ஹா ஹா இதே பழக்கம் என்னிடமும் உண்டு.. எங்கள் வீட்டிலும் புளிப்புப் பழங்கள் மற்றும் இனிப்புக்கள் சாப்பிட மாட்டினம். எனக்கு ஹொந்தாய் தான் ஹா ஹா ஹா:)).

      //பிஞ்சு கூஸ்பெரி அதிரா.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்:))..

      //டெய்ஸ் நல்லா போஸ் கொடுக்கிறா. பழகியிருக்கிறீங்க போல.//
      ஹா ஹா ஹா குழதைப்பிள்ளையைக் கதை கேட்பதைப்போல கேட்பேன் என் கண்ணை அப்படியே உற்றுப்பார்த்து இடைக்கிடை ஏதும் பதில் தருவா:)..

      //இப்படி வேலி போட்டு மரத்தை வைத்தால் அவைகளும் விடுப்பு பார்க்க அங்கால நுழைந்துவிடுவினம்.//
      ஹா ஹா ஹா இங்கு காற்று மழை அதிகம் என்பதால, இப்படி இடைவெளி அதிகம் விட்டே பலகை வேலி போட வேண்டுமாம், இல்லை எனில் காற்று வேலியைச் சரிச்சுப்போடும்..

      Delete
  54. ஆ.. எனக்கு மாங்காய்,மாம்பழம் எல்லாம் கிடைக்குது. இப்போ மாம்பழம் வருகிறது.இது செங்காய் எல்லோ. அவியலுக்கு போடலாம். இது கொஞ்சம் இனிப்பும்,புளிப்பும் சுவையா இருக்குமென நினைக்கிறேன்.இப்படி கிடைத்து நான் சொதியில் தக்காளியுடன் போட்டு,இடியப்பத்துக்கு சாப்பிட நல்லாயிருந்தது.இதே செங்காய்தான். உங்களுக்கு பிடிக்குமெனில் செய்துபாருங்கோ.
    உங்கட பதிவில் இந்த கடைசிபடம்தான் நல்லாயிருக்கு.ஹா..ஹா..ஹா.. ஏதோ நீங்க செய்ததை சாப்பிடமுடியாமல் சாப்பிடுறா..ஹா..ஹா..
    ஊசிகுறிப்பு சூப்பரா இருக்கு. ஊசி இணைப்பு சிரித்து முடியல. நான் இப்போதான் பார்க்கிறேன்.
    ஹா..ஹா..ஹா. எப்பூடி நான் சொன்னேனே.. அஞ்சு வந்திட்டாஆஆ.

    ReplyDelete
    Replies
    1. //ஆ.. எனக்கு மாங்காய்,மாம்பழம் எல்லாம் கிடைக்குது//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      //இது கொஞ்சம் இனிப்பும்,புளிப்பும் சுவையா இருக்குமென நினைக்கிறேன்//
      ஓம், இது சுப்பமார்கட்டில் வாங்கும் மாம்பழம் போலவே இருந்தது சுவை கர்:))..

      //ஊசிகுறிப்பு சூப்பரா இருக்கு. ஊசி இணைப்பு சிரித்து முடியல. நான் இப்போதான் பார்க்கிறேன்.///
      ஆஆஆஆஆஆஅ அப்பாடா இப்போதான் ஜந்தோசமா இருக்குது:)) ஹா ஹா ஹா..

      //எப்பூடி நான் சொன்னேனே.. அஞ்சு வந்திட்டாஆஆ//
      பின்ன சிசிரிவி கமெரா பூட்டினேன்.. பயந்து ஓடி வந்திட்டா ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.

      Delete
  55. பசுமை கண்ணுக்கு இனிமை.

    இன்றைய பதிவின் படங்களும் தகவல்களும் நன்று. பாடலும் கேட்டு ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  56. ஹலோ அதீஸ்... எப்பிடி இருக்கிறீங்கள்? நலம்தானே!
    கூஸ்பெரி சுவை எப்பிடி இருக்கும்? சாப்பிட்டதே இல்லை.

    ReplyDelete
  57. சாடியில் இருக்கும் பிரெஸ்பழத்தை சினேஹாவுக்கு பறித்துக்கொடுக்கின்றேன்.[[[

    ReplyDelete
  58. ஊசிக்குறிப்பு அருமை!

    ReplyDelete
  59. மின்நூலில் கில்லர்ஜி
    http://killergee.blogspot.com/2020/07/blog-post_83.html?m=1

    ReplyDelete
  60. மின்நூலில் "அதிராம்பட்டணம், அதிரடி அதிரா" கதையை படிக்கலாம்.

    அவசியம் பார்க்கவும்.

    ReplyDelete
  61. தோட்டம் அழகு. நட்பு பற்றிய பொன்மொழி அருமை :)

    ReplyDelete
  62. அருமை அக்கா, பல வருடங்களுக்கு பின்னர் வந்திருக்கிறேன். இப்படிக்கு யூஜின்

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.