நல்வரவு_()_


Tuesday 1 November 2011

இசையும் பூஸும்:) (கதையும்)..



முன்பு ஊரில் இருந்தபோது, இலங்கை வானொலியில் “இசையும் கதையும்” என ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும், கிழமையில் ஒருநாள். அதைக் கேட்கத் தவறுவதில்லை.


அதன் நினைவாக... அப்போ தொடக்கமே நானும் ஒன்று அப்படி எழுதோணும் என ஆசை. அதைத்தான் என் கற்பனையில் உருவாக்கி ஒரு இனிமையான கற்பனைக் கதையாக இங்கே வடித்திருக்கிறேன்:)).
=====================================================
இது தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.... நேரம் நான்ன்ன்ன்கு மணி, முப்பது நிமிடங்கள்... இசையும் கதையும்.... இன்று தொகுத்து அனுப்பியிருப்பவர்...
வடமாகாணத்திலிருந்து...  “மியாவ்” அவர்கள்:))...

 வழங்குபவர் கே.எஸ்.ரஜாஆஆஆஆஆ(அவரின் ஸ்டைலே ஸ்டைல்தான்.. அதை ஆராலும் அவரைப்போல் உச்சரிக்கவே முடியாது:))..

டொட்ட டொயிங்...............
======================================================


ம்யா... எழும்பம்மா... வெய்யில் அறைக்குள்ள வந்தது கூடத் தெரியாமல் நித்திரை கொள்கிறாய்” என்ற அம்மாவின் குரல் கேட்டு, திடுக்கிட்டு விழிக்கிறேன்...

தொடர்ந்து .... ரம்யா! அப்பா உன்னை சுவாமி அறைக்குள் வரட்டாம்.. முகம் கழுவிக்கொண்டு கெதியாப்போ.. எல்லாம் நல்ல சேதிதான்... என ஒரு புன்னகையோடு சொன்ன அம்மாவைப் பார்த்ததும், சடாரென எழுந்துவிட்டேன், நல்ல சேதி எனில் அது நிட்சயம்... என் திருமணம் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும், என எண்ணியபடி பார்த்ரூமை நோக்கி ஓடுகிறேன்...

பேஸ்ட் போட்டுத் தீட்ட பொறுமை இருக்கவில்லை, போத்தலில் இருந்த  “அண்ணாபற்பொடி” யைத் தொட்டு, ஒரு தடவை பல்துலக்கிக்கொண்டு, கொஞ்சம் தண்ணியால முகத்தையும் கழுவிக்கொண்டு, வெளியே வந்தேன், அம்மம்மா நின்றா, அவவின் சேலைத்தலைப்பை இழுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு.. சுவாமி அறை நோக்கி ஓடினேன்:).

அங்கே அப்பா கும்பிட்டுக்கொண்டு நின்றவர் என்னைப் பார்த்ததும்...  “வாம்மா... இன்றுதான் மாப்பிள்ளை வீட்டிலிருந்து தகவல் வந்துது, அவர்களுக்கு உன்னையும், நமது குடும்பத்தையும் நன்கு பிடித்துவிட்டதாம், வருகிறமாதம் மாப்பிள்ளை ஊருக்கு வருவாராம், அப்பவே திருமணத்தை வைத்திடலாம் என்றார்கள்”... என்று சொல்லி தீர்க்க சுமங்கலியாக இரம்மா.. எனத் திருநீறு பூசிவிட்டார்.

நேரே என் அறைக்கு ஓடிவந்து கட்டிலில் விழுந்தேன்...


..

இது கனவா அல்லது உண்மையில் நிஜமா...  “மாப்பிள்ளை இவர்தான், பிடிச்சிருக்கோ” எனப் படம் காட்டியபோதே... அவரை நன்கு பிடித்திருந்தது..

இதை உடனே என் ஒரே ஒரு தோழி அதிராவிடம் சொல்லிட வேண்டும், அதிராவும் நானுமாகத்தான் அவரின் படம் பார்த்தோம். அதிரா சொன்னா.. உனக்கேற்ற ஜோடியாகவே சூப்பராக இருக்கிறார் என்று. இப்போ இதைக் கேட்டால், அதிரா மிகவும் சந்தோசப்படுவா. அதிராவுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை.

இப்போ அதிராவை விட்டு வெளிநாடு போகப்போவதை நினைக்க மனம் கலங்குது.

அவர் பக்கத்து ஊரவர்தான், சின்னவயதில் கோயிலில் சுவாமி காவும்போது பார்த்திருக்கிறேன் அவரை. ஆனால் பல்கலைக்கழகம் முடிந்ததும் நேரே வெளிநாடு போயிருந்தார். மிகவும் நல்லவர் என எல்லோரும் சொல்லியிருந்தார்கள். எப்படிப்பட்டவராயினும், கோபம் வராதவராக, அன்பானவராக இருந்திடவேண்டும் என மனம் வேண்டிக்கொண்டது.

காலையில் எதுவும் சாப்பிட முடியவில்லை எனக்கு. மீண்டும் அம்மா சொன்னா,  “இன்று மாலை 4 மணியுடன் ராகுகாலம் முடியுதாம், அதன்பின்னர் நல்ல நேரமாம், மாப்பிள்ளை உன்னோடு கதைக்கப்போகிறாராம் எங்கேயும் போயிடாமல் ஆயத்தமாக இரு ஃபோன் வரும்” என.

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... என்ன கதைப்பது? எப்படிக் கதைப்பது?... எதுவும் புரியவில்லை.. காத்திருந்தேன்.... சரியாக 4.30 க்கு ஃபோன் அலறியது..

எனக்கு கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்துக் கொட்டியது... ஒரு சொல்ல முடியாத இன்பப் படபடப்பு.... அப்பா ஃபோனை எடுத்தார் கதைப்பது கேட்குது...

அவரேதான், பின்பு அம்மாவும் நலம் விசாரித்தா... பின்னர் “ரம்யா”... அம்மாவில் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்... எனக்கு வார்த்தை வரவில்லை, கோட்லெஸ் ஃபோனைக் கொண்டு வந்து, ரூமிலே தந்துவிட்டு கதவைச் சாத்திவிட்டு அம்மா நகர்கிறா....

பக்கத்தில் ஆராவது நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என ஒருகணம் எண்ணினேன், மெதுவாக “ஹலோ” என்றேன், நாக்குக் குழைந்தது, கை ஃபோனைப் பிடிக்க முடியாமல் நடுங்கியது.... உச்சிமுதல் உள்ளங்கால் வரை என்னவோ செய்தது.... எதிர்ப்பக்கத்திலிருந்து.. “ஹலோ ரம்யா.... நான் முகில் பேசுகிறேன்”...

அப்படியே அக்குரல்.. காதில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது...ஆளைப் பிடித்ததுக்கு மேலாக குரலைப் பிடித்துப் போயிட்டுதெனக்கு.





என்னென்னவோ கேட்டார், சொன்னார்... நீங்கள் சிரிப்பது கேட்க இனிமையாக இருக்கிறது என்றார், எனக்கு எதுவும் பேச வரவில்லை, ஃபோனை வைத்தாயிற்று. அடிக்கடி எடுக்கிறேன், கதைக்கலாம் என்றார்.

இது என்ன பேசவே மாட்டாத பெண்ணோ, இதையெல்லாம் கட்டி நான் என்ன செய்யப்போகிறேன் என நினைத்திருப்பாரோ... நான் வாய் திறந்தால் மூட மாட்டேன் என்பது, வீட்டில் உள்ளோருக்கல்லவா தெரியும்:)).

ஃபோனிலும் மெயிலிலும் நாட்கள் நகர்ந்தன... ஊருக்கு வந்துவிட்டார். நாளை அவர் எங்கள் வீட்டுக்கு முதன் முதலில் வரப்போகிறார்.. அடுத்த கிழமை திருமணம்...  அனைத்துமே ஆரவாரமாக நடந்துகொண்டிருக்கு...

நான் அழகான சந்தனக் கலர் சேலை உடுத்து அவர் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.. அதோ கார் வந்து எம் கேட்டில் நிற்பது தெரிகிறது... முதலாவதாக அவர்தான் இறங்குகிறார்....

இதுதான் பாட்டு, கேட்டுப் பாருங்கோ

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), இதில ஒரு பூஸைப் போட்டுத் தந்திருக்கலாம், அதை விட்டுப்போட்டு பச்சை ரோசாவைப்போட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இருப்பினும் ஊஊஊ ரியூப்பில போட்டமைக்கு டாங்ஸ்ஸூஊஊ:))... விடமாட்டமில்ல:))).

ராஜாத்தி என்ன தேடி வருவாரே ராஜா ராஜா
ரோஜாப்பூ மாலை சூடி தொடுவாரே லேசா லேசா
ராஜாத்தி என்ன தேடி வருவாரே ராஜா ராஜா
ரோஜாப்பூ மாலை சூடி தொடுவாரே லேசா லேசா
முதல் சந்திப்பு..... வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பு... நிறையப் பேசினோம், உணவுண்டோம்... நாட்கள் கடுகதி வேகத்தில் பறந்தது... திருமணம் முடித்தாயிற்று. 


அவர் எனக்கு கணவராகிட்டார்... என் கழுத்திலே தாலி, அதைத் தொட்டுப் பார்க்கிறேன்... சொல்ல முடியாத ஒரு பூரிப்பு..., நாணம்...,  பெரீய பதவி உயர்வு கிடைத்ததைப் போன்ற பரவசம்...





அனைத்தும் நிறைவாகி... மாப்பிள்ளை வீட்டுக்குப் போக கார் தயாராக சோடனையோடு வாசலில் வந்து நிற்கிறது, அப்பா ஓடிவந்து கட்டியணைத்து அழுகிறார்.... 


வாழ்க்கையில் முதல் தடவையாக அப்பாவின் கண்ணிலே கண்ணீரைப் பார்க்கிறேன்... அம்மா என்னைப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி நிற்கிறா... தங்கை மெளனமாக அழுவது தெரிகிறது... அண்ணன் கண்கள் இரண்டும் சிகப்பாகி காரோடு நிற்கிறார்.... உறவுகள் எல்லோரும் வழியனுப்ப தயாராகி நிற்கிறார்கள்.. நான் அழுகிறேன்... 


புதுமணப் பெண் அழக்கூடாது... சந்தோசமாகப் புறப்பட்டுப் போகவேணும் எனச் சொல்கிறார்கள்.... என்னால் முடியவில்லை தேம்பித் தேம்பி அழுகிறேன்..... காரில் ஏற வரும்போது பார்க்கிறேன், பந்தலின் ஓரத்திலே அதிரா... மீண்டும் ஓடுகிறேன் அதிராவைக் கட்டியணைத்து ஓவென அழுதுவிட்டேன்... 


தன் கண்களைத்துடைத்தபடி, அதிரா... “எதற்காக அழுகிறாய், சந்தோஷமாகப் போய் வா” என வழியனுப்புகிறா... கார் புறப்பட்டுவிட்டது மாப்பிள்ளை வீடு நோக்கி...... 





======================================================
பின் இணைப்பு:

======================================================


குட்டி ஆசை இணைப்பு:
எனக்கு இதை தொடர் பதிவாக்கினால் என்ன என ஒரு குட்டி ஆசை, அதனால இமா, ஸாதிகா அக்கா, ஆசியா, இளைய தளபதி நிரூபன், எங்கட நகைச்சுவை மன்னன் மாயா... ஆகியோரை அன்போடு அழைக்கிறேன், உங்களால முடியும், நேரம் கிடைக்கும்போது, உங்களுக்கு பிடித்த தலைப்பில் எழுதுங்கோ, முடியாவிட்டாலும் ஓக்கை, கோபமில்லை.

இது உங்களுக்கு இல்லை:
கிரிஸ் அங்கிள்... பிளீஸ்ஸ், இமா சொல்லச் சொல்ல ரைப் பண்ணிக்கொடுங்கோ, உங்களுக்கு நான் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும், பைலட் அண்ணனிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறேன்:))

209 comments :

  1. அதீஸ்..சூப்பர்!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. அதீஸ்...பயபடாமல் உண்மையைச்சொல்லுங்கோ..ரம்யா ஆரு?அதீஸ்தானே?

    ReplyDelete
  3. கேரக்டர் மாறி வந்துடுச்சா ,மணப்பெண் அதிரா தானே

    அப்புறம் ஒரு சின்ன்ன்ன விஷயம் ,பூஜை ரூமில் மணப்பெண் அப்பா சொல்லும்பொழுது நமது குடும்பத்தையும் பிடித்துள்ளது (மஞ்சள் கலர் எழுத்து )
    என்று வந்தால் நன்றாக இருக்கும் .

    ReplyDelete
  4. ஆஹா அவசரத்துல சொல்ல மறந்துட்டேன் ,வணக்கம் தோழி

    ReplyDelete
  5. வாங்க ஸாதிகா அக்கா...

    இந்தாங்க சுடச்சுட பருப்பு வடை, புது முயற்சியாக கொஞ்சூண்டு பாலக்கீரை சேர்த்திருக்கு, சூப்பராக இருக்கு:)).

    என்ன இது கற்பனை எனச் சொல்லியும் ஆரும் நம்புறமாதிரி இல்லையே அவ்வ்வ்வ்வ்:)).

    இடையிடையே என் சொந்தக் கதையும் கலந்திருக்கு... மற்றும்படி எல்லாம் கற்பனையே..ஏஏஏஏஏஏஎ.:))).

    ReplyDelete
  6. பாதிதான் படிச்சிருக்கிறீங்கபோல, மீதி என்னாச்சு....? குட்டி ஆசை இணைப்பை படிச்சீங்களோன்னோ?:))) அவ்வ்வ்வ்வ்வ்:)).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  7. வாங்க கிரிஸ்டி...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. ஒரு கதை எழுதினா, எல்லோரும் உங்கட சொந்தக் கதையா எனக் கேட்கினம்:)), பொறுங்க பொறுங்க அடுத்த இசையும் கதையும்.... நான் இறந்துவிட்டேன் என எழுதப்போகிறேன், அப்போ என்ன கேட்கப்போகினம் எனப் பார்ப்போம்..... கிக்..கி...கீஈஈஈஈஈ:)))).

    மியாவும் நன்றி கிரிஸ்டி.

    ReplyDelete
  8. வாங்க ரமேஸ்ஸ்....

    கேட்ட அறிந்த அண்ட் கொஞ்சூண்டு பூஸ் கதையின் மிக்ஸிங்:)).

    //அப்புறம் ஒரு சின்ன்ன்ன விஷயம் ,பூஜை ரூமில் மணப்பெண் அப்பா சொல்லும்பொழுது நமது குடும்பத்தையும் பிடித்துள்ளது (மஞ்சள் கலர் எழுத்து )
    என்று வந்தால் நன்றாக இருக்கும் .///

    இது புரியவில்லையே:(, நம் குடும்பத்தையும் என எழுதியிருக்கிறேனே....

    //ஆஹா அவசரத்துல சொல்ல மறந்துட்டேன் ,வணக்கம் தோழி//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இப்போ அவசத்தில போயிட்டு வாறேன் எனச் சொல்ல மறந்திட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  9. ரெடி ஸ்டார்ட் அட்டாக் ......................உப்பு சீடை புளிய மரத்தை நோக்கி ...........

    ஜெய் ஓடியாங்க ஓடியாங்க

    ReplyDelete
  10. அதீஸ் இது உங்க சொந்த கதைதான் .இத்தனை
    பாடல்கள் போட்டிருக்கீங்க .என்ன ஃபீலிங்க்ஸ் .ஓகே ஓகே

    ReplyDelete
  11. அப்படியே அக்குரல்.. காதில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது...ஆளைப் பிடித்ததுக்கு மேலாக குரலைப் பிடித்துப் போயிட்டுதெனக்கு.///////
    அடடடடடடா

    ReplyDelete
  12. அதை விட முக்கியமா இதுவரைக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்சே என் கண்ணுக்கு தெரியல

    ReplyDelete
  13. அதிரா... எதற்காக அழுகிறாய், சந்தோஷமாகப் போய் வா” என வழியனுப்புகிறா... கார் புறப்பட்டுவிட்டது மாப்பிள்ளை வீடு நோக்கி...... ///mmmmmm வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  14. //அவர்களுக்கு உன்னையும் எங்கள் குடும்பத்தையும் பிடித்துவிட்டதாம், //

    இது நமது குடும்பத்தையும் என்று வந்தால் //
    உன்னை அண்ட் எங்களை என்று எழுதும்போது இரண்டு வேறு குடும்பம் மாதிரி இருக்கு

    ReplyDelete
  15. குட்டி ஆசை இணைப்பினையும் பார்த்தேன்.மறைத்து வைத்து டீச்சரம்மா ஆத்துக்காரருக்கு அனுப்பிய மெசேஜும் பார்த்தேன்

    ReplyDelete
  16. இந்த முறை பொரிவிளங்கா உருண்டைஎடுத்து அடிச்சாதான் ஜெய் வருவார் போலிருக்கு ..சீக்கிரம் வாங்க சேர்ந்து கும்மியடிச்சாதான் பூஸ் உண்மைய ஒத்துக்கும்

    ReplyDelete
  17. அவர்களுக்கு உன்னையும் எங்கள் குடும்பத்தையும் பிடித்துவிட்டதாம், //

    இது நமது குடும்பத்தையும் என்று வந்தால் //
    உன்னை அண்ட் எங்களை என்று எழுதும்போது இரண்டு வேறு குடும்பம் மாதிரி இருக்கு/////


    அது வேறொன்றுமில்லை ஏஞ்சலின்.அதீஸ்...ஓஓஒ..சாரி...ரம்யா,இன்னொரு வீட்டுக்கு போகப்போறா//அப்ப அவள் அவங்கள் வீட்டு பொண்ணுதானே ?அதான் இத ,எங்கள், சரிதானே பூஸ்?

    ReplyDelete
  18. கே.எஸ்.ரஜாஆஆஆஆஆ(அவரின் ஸ்டைலே ஸ்டைல்தான்.. அதை ஆராலும் அவரைப்போல் உச்சரிக்கவே முடியாது:))..//
    நாங்க எங்க வீட்ல எல்லாருமா சேர்ந்து இவர் குரலுக்கே கேப்போம்

    ReplyDelete
  19. எங்கள் குடும்பத்தையும் பிடித்துள்ளது என்று வந்துள்ளதை தான் சொன்னேன் தோழி
    அதற்குள் நெட் பலி வாங்கி விட்டது

    ReplyDelete
  20. அது வேறொன்றுமில்லை ஏஞ்சலின்.அதீஸ்...ஓஓஒ..சாரி...ரம்யா,இன்னொரு வீட்டுக்கு போகப்போறா//அப்ப அவள் அவங்கள் வீட்டு பொண்ணுதானே ?அதான் இத ,எங்கள், சரிதானே பூஸ்?//
    ஓகே ஓகே இப்ப புரியுது .என்கேஜ்மன்ட் முடிஞ்சவுடன் பூஸ் புகுந்த வீட்டு பெண் ஆகிட்டாங்க

    ReplyDelete
  21. இடையிடையே என் சொந்தக் கதையும் கலந்திருக்கு... மற்றும்படி எல்லாம் கற்பனையே..ஏஏஏஏஏஏஎ.:))).///

    அதைதானே நாங்க இவ்ளோ நேரமா சொல்லிட்டிருக்கோம் ஹாஆ

    ReplyDelete
  22. ஏஞ்சலின்..கடைசி வரை விட மாட்டீங்க போல் இருக்க்கு.ரம்யாதான் பூஸ்..பூஸ்தான் ரம்யா என்று அடித்து சொல்லுவீர்கள் போலிருக்கு!

    ReplyDelete
  23. நெட் விட்டு விட்டு வருவதால் காலையில் வருகிறேன்
    பை

    ReplyDelete
  24. //ரம்யாதான் பூஸ்..பூஸ்தான் ரம்யா என்று அடித்து சொல்லுவீர்கள் போலிருக்கு!//

    பூசை டீஸ் பண்றதில ஒரு சின்ன பேரானந்தம்தான்
    ROFL ROFL ROFL

    ReplyDelete
  25. நான் வாய் திறந்தால் மூட மாட்டேன் என்பது, வீட்டில் உள்ளோருக்கல்லவா தெரியும்:)).//


    க்கிக் க்கிக் க்கிக் கீ கீ கீ கீ :D :D:))

    ReplyDelete
  26. வாஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... நல்ல தமிழ் சினிமாவில் இண்டரஸ்டிங்கான ஆறு, ஏழு காட்சிகளை பார்த்தது போல் இருந்தது... ஹா ஹா சூப்பர்

    ReplyDelete
  27. happy wedding என்று இருக்கிறது.. திருமண நாள் இனிய நல்வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  28. ஓ அப்போ இந்த சினிமாவுல பூஸார் கெஸ்ட் ரோலா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  29. ஸாதிகா said... 2
    அதீஸ்...பயபடாமல் உண்மையைச்சொல்லுங்கோ..ரம்யா ஆரு?அதீஸ்தானே?//

    இதே டவுட்டு தான் எனக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்...

    ReplyDelete
  30. happy wedding என்று இருக்கிறது.. திருமண நாள் இனிய நல்வாழ்த்துக்கள் ;-)//
    இதனால்தான் ராஜேஷ் எனக்கும் டவுட் வந்திச்சு

    ReplyDelete
  31. யப்பாடி என்னஒரு அனுபவப்பகிர்வு சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. கேட்டு மகிழ..http://www.divshare.com/download/14405876-d41

    இந்த கதைக்கு பொருத்தமான பின்னூட்டம்தானே?//

    அருமையான பின்னூட்ட பாடல் அக்கா

    ReplyDelete
  33. அடடா... உள்ளே புகுந்து அட்டாக் நடக்குதே... தெரியாமல் வெளில வந்திட்டனோ?:)) பேசாமல் கட்டிலுக்குக் கீழயே இருந்திருக்கலாம்போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))

    ReplyDelete
  34. ஓகே பூஸ் ஹீரோயின் ரம்யா உங்க தோழிதான் /இது கற்பனை தான் ஒத்துகிட்டேன்

    ReplyDelete
  35. ஆஆஆ.... அஞ்சு வாங்க..

    //angelin said... 10
    ரெடி ஸ்டார்ட் அட்டாக் ......................உப்பு சீடை புளிய மரத்தை நோக்கி ...........

    ஜெய் ஓடியாங்க ஓடியாங்///

    நோ... நோ.... அவர் இப்போ புளில இல்லை:))), நைட்தான் புளிக்குப் போகும் டைம்:))), இப்போ கடலுக்குக்கடியில் தலைகீழ் ஆசனத்தில் இருப்பார்.... ஆரோ கூப்பிடுவதுபோல காதில ஒலிக்கும், சே..சே.. எல்லாம் பிரமை என இறுக்கிக் கண்களை மூடிடுவார்...:)))).

    மாயாவைத்தான் அனுப்போணும் அடியில தேட:)))

    ReplyDelete
  36. //angelin said... 13
    அதை விட முக்கியமா இதுவரைக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்சே என் கண்ணுக்கு தெரியல்ல//

    ஹா..ஹா..ஹா.. பூஸோ கொக்கோ.. நாங்க திருந்திட்டமில்ல :)) எங்கிட்டயேவா?:))).

    //இது நமது குடும்பத்தையும் என்று வந்தால் //
    உன்னை அண்ட் எங்களை என்று எழுதும்போது இரண்டு வேறு குடும்பம் மாதிரி இருக்கு///

    ஓக்கை... இப்போ பத்திடிச்சி...பத்திடிச்சி...:)))).... மாத்துகிறேன்:))

    ReplyDelete
  37. மலர்கள் நனைந்தன பனியாலே
    என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
    மலர்கள் நனைந்தன பனியாலே
    என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
    பொழுதும் விடிந்தது கதிராலே
    பொழுதும் விடிந்தது கதிராலே
    சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
    மலர்கள் நனைந்தன பனியாலே
    என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

    கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
    இரு கன்னம் குழிவிழ நகை செய்தான்
    கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
    இரு கன்னம் குழிவிழ நகை செய்தான்
    என்னை நிலாவினில் துயர் செய்தான்
    என்னை நிலாவினில் துயர் செய்தான்
    அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
    சேர்ந்து மகிழ்ந்து போராடி
    தலை சீவி முடித்தேன் நீராடி
    சேர்ந்து மகிழ்ந்து போராடி
    தலை சீவி முடித்தேன் நீராடி
    கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
    கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
    பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
    மலர்கள் நனைந்தன பனியாலே
    என் மனதும் குளிர்ந்தது நிலவாலே



    மலர்கள் நனைந்தன பனியாலே
    என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
    பொழுதும் விடிந்தது கதிராலே
    சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
    மலர்கள் நனைந்தன பனியாலே
    என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

    கேட்டு மகிழ..http://www.divshare.com/download/14405876-d41

    இந்த கதைக்கு பொருத்தமான பின்னூட்டம்தானே?

    ReplyDelete
  38. ஆ... ஸாதிகா அக்கா..

    //ஸாதிகா said... 16
    குட்டி ஆசை இணைப்பினையும் பார்த்தேன்.மறைத்து வைத்து டீச்சரம்மா ஆத்துக்காரருக்கு அனுப்பிய மெசேஜும் பார்த்தேன்//

    நீங்க இப்போ ரொம்ம்ம்ம்ம்ப முன்னேறிட்டீங்க:))).

    //அது வேறொன்றுமில்லை ஏஞ்சலின்.அதீஸ்...ஓஓஒ..சாரி...ரம்யா,இன்னொரு வீட்டுக்கு போகப்போறா//அப்ப அவள் அவங்கள் வீட்டு பொண்ணுதானே ?அதான் இத ,எங்கள், சரிதானே பூஸ்?///


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)), ஸாதிகா அக்கா.. காதைக் கொண்டுவாங்கோ... மேலே கட்டாளங் காட்டுவழி... பாட்டிலேயே வருது.. பெண்களுக்குத்தான் ரெண்டு வீடாம்.. ஆண்களுக்கு ஒரே ஒரு வீடுதானாம்... க்கி...க்கி...க்கி.....:))).. இது எப்பூடி?:)).

    ReplyDelete
  39. ஓ... ரமேஸ்ஸ்ஸ்.. இப்போ எனக்குப் புரிஞ்சுபோசு மாத்துகிறேன்.

    //M.R said... 24
    நெட் விட்டு விட்டு வருவதால் காலையில் வருகிறேன்
    பை//

    சொல்லிட்டுப் போறதால நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). மீண்டும் சந்திப்போம், மியாவும் நன்றி.

    ReplyDelete
  40. //angelin said... 26
    நான் வாய் திறந்தால் மூட மாட்டேன் என்பது, வீட்டில் உள்ளோருக்கல்லவா தெரியும்:)).//


    க்கிக் க்கிக் க்கிக் கீ கீ கீ கீ :D :D:)//

    என்னாது சிரிப்பே ஒரு மாதிரி இருக்கே அவ்வ்வ்வ்வ்:))), வீட்டுக்குள்ள மட்டும் தெரிஞ்சது புளொக்குக்கெல்லாம் தெரிஞ்சிடுச்சா அவ்வ்வ்வ்வ்:))).

    //angelin said... 31
    happy wedding என்று இருக்கிறது.. திருமண நாள் இனிய நல்வாழ்த்துக்கள் ;-)//
    இதனால்தான் ராஜேஷ் எனக்கும் டவுட் வந்திச்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கதைக்குப் பொருத்தமாகத் தேடினேன்... பூஸ் தம்பதிகள் மாட்டுப்பட்டினம்... தூக்கி வந்திட்டேன்:))). அதுக்குள்ள ஏதோ ஒசாமா பில்லாடனைக் கண்டுபிடிச்சிட்ட மாதிரி:)) டவுட் வேற வந்திட்டுதாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  41. ஆ... மாயாஆஆஆஆஆ வாங்க வாங்க... அந்தப் பாதி மீ.... இல்லை இல்ல நான் ஒண்ணுமே சொல்லலே...

    //மாய உலகம் said... 28
    happy wedding என்று இருக்கிறது.. திருமண நாள் இனிய நல்வாழ்த்துக்கள் ;-)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அடிவாங்கப்போறீங்க...:)) இதைப் பார்த்திட்டு பின்னால வருவோரெல்லாம் வாழ்த்தப்போகினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ஒரு கற்பனை பண்ணக்கூட விடமாட்டேங்கிறாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))... விடுங்க நான் தெம்ஸ்ல குதிக்கப்போறேன்:))).

    ReplyDelete
  42. //மாய உலகம் said... 30
    ஸாதிகா said... 2
    அதீஸ்...பயபடாமல் உண்மையைச்சொல்லுங்கோ..ரம்யா ஆரு?அதீஸ்தானே?//

    இதே டவுட்டு தான் எனக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்..//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி மாயா... அனைத்துக்கும்.

    ReplyDelete
  43. வாங்க லக்ஸ்மி அக்கா...

    அது அனுபவம் இல்லை, சிலநேரம் எனக்கு உப்படித்தான், ஏதாவது கற்பனை உதித்தால் அது நிஜம் போலவே இருக்கும். இதில் பாதி என் கதை, பாதி கற்பனை:)))).

    சின்ன வயதில் ஒரு கதை ஸ்கூலில் எழுதினேன், புரொஜக்ச் வேர்க்குக்காக, அதை ரீச்சர் பார்த்திட்டு நம்பவேயில்லை, ஆரைக் கேட்டு எழுதினனீங்க எனக் கேட்டுவிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  44. //angelin said... 35
    ஓகே பூஸ் ஹீரோயின் ரம்யா உங்க தோழிதான் /இது கற்பனை தான் ஒத்துகிட்டே//

    அது..அது. அது... ... ஹா..ஹா..ஹா...

    மியாவும் நன்றி அஞ்சு.. ஸ்கூல் ரைம் வருகுது:).

    ReplyDelete
  45. ஃபிரண்ட்ஸ் வந்துருக்காங்க பிறகு வாறேன்... மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  46. //இந்த கதைக்கு பொருத்தமான பின்னூட்டம்தானே?//

    ஸாதிகா அக்கா சூப்பர். இப்பாட்டைத்தான் மேலே.. பனித்துளிக்குப் பதிலாக போட நினைத்து விட்டுவிட்டேன்...

    என்னிடம் ஒரு சூப்பர் பாட்டு சிடியில் இருந்தது... அதைத்தான் அந்த இடத்துக்குப் பொருத்தம் என நினைத்து தேடினால் கிடைக்கவேயில்லை...

    பட்டாம் பூசி ரெக்கை கட்டி பறக்குது கண்ணா..
    அது சூரியனைத் தொட்டுவிடத் துடிக்குது கண்ணா.. எனும் பாடல்.. சூப்பராக இருக்கும்.

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா. அப்போ உங்கள் இசையும் கதையையும் விரைவில் எதிர்பார்க்கிறேன் ஓக்கை?:))

    ReplyDelete
  47. மாயா...மாயா... இந்தாங்க ஆரியபவான் அனியன் பஜ்ஜி... எடுத்துப் போய், பிளேன் ரீயும் கொடுத்து ஃபிரெண்ஸ்ஸோடு சாப்பிட்டு, பின்பு வாங்க பேசலாம்.... சொன்னமைக்கு நன்றி மாயா.

    ReplyDelete
  48. ஆஹா ஒரு கமேண்ட காணோம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ;-)

    ReplyDelete
  49. இல்லை மாயா... நான் எதிலும் கை வைக்கவில்லையே... கடவுள் மீது ஆனை சே..சே.. என்னப்பா இது ஆணை.

    ஸாதிகா அக்கா 2 கொமெண்ட் அழிச்சிருந்தா அதை மட்டுமே நீக்கிவிட்டேன், மற்றும்படி எதையும் தொடவில்லை...ல்லை...ல்லை...

    ReplyDelete
  50. இசையும் கதையும் ஓரு காலத்தில் மறக்கமுடியாத நிகழ்ச்சி மீண்டும் உங்கள் பதிவில் ஞாபகப்படுத்தியுள்ளீர்கள் அற்புதம்...

    ReplyDelete
  51. ////கே.எஸ்.ரஜாஆஆஆஆஆ(அவரின் ஸ்டைலே ஸ்டைல்தான்.. அதை ஆராலும் அவரைப்போல் உச்சரிக்கவே முடியாது:))../////

    என்னைச்சொல்லுறீங்க என்று நினைச்சுட்டன்...ஹி.ஹி.ஹி.ஹி.........

    ஓரு திறமையான வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா

    ReplyDelete
  52. இசையும் கதையும் நகை ச்சுவையுமாய் ..ஆழகாய் வந்திருக்கு ...இன்னும் ஒருஆள் அழுதததே

    (உங்க பூசார்.......கண்ணை மூடிக்கொண்டு ..மீ............யாவ் ...)...

    ReplyDelete
  53. வாங்கோ ராஜ்.... இசையும் கதையும் நிகழ்ச்சியை ஆராலும் மறக்கவே முடியாதே.

    //K.s.s.Rajh said... 52
    ////கே.எஸ்.ரஜாஆஆஆஆஆ(அவரின் ஸ்டைலே ஸ்டைல்தான்.. அதை ஆராலும் அவரைப்போல் உச்சரிக்கவே முடியாது:))../////

    என்னைச்சொல்லுறீங்க என்று நினைச்சுட்டன்...ஹி.ஹி.ஹி.ஹி.///

    ஹா..ஹா..ஹா... அதுவும் சரியாத்தான் பொருந்துது.

    மியாவும் நன்றி ராஜ்.

    ReplyDelete
  54. வாங்கோ நிலாமதி...

    //இன்னும் ஒருஆள் அழுதததே

    (உங்க பூசார்.......கண்ணை மூடிக்கொண்டு ..மீ............யாவ் ...)...///

    ஹா..ஹா..ஹா.. இல்லை அவருக்குப் புழுகம்:)), தானும் வந்து மாப்பிள்ளை வீட்டையும் பார்க்கலாமெல்லோ அதனால:)).

    மியாவும் நன்றி நிலாமதி.

    ReplyDelete
  55. //மாய உலகம் said... 46
    ஃபிரண்ட்ஸ் வந்துருக்காங்க பிறகு வாறேன்... மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    மாயா.. சாமமாகிட்டுது ஏன் இன்னும் ஃபிரெண்ஸ்சை அனுப்பாமல் வைத்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    அஞ்சு.... இனி எடுங்கோ அந்த புள்ளட்டை... இம்முறை குறி தவறிடப்புடா..:)))

    கொஞ்சம் பொறுங்கோ எதுக்கெடுத்தாலும் அவசரம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), நான் காதிலை கொட்டினை வச்சுப்போடு சைகை காட்டுறன் ஓக்கை:)))....

    ரெடி.. ஸ்ரெடி.... வைங்க வைங்க....:))))... யூம் பண்ணீனமாம் யூம் மேல இருந்து எங்கிட்டயேவா:))))

    ReplyDelete
  56. இப்பதான் தூக்கி போட்டேன் பொரிவிளங்கா உருண்டையை

    ReplyDelete
  57. திசை மாறி உங்க வீட்டு பக்கம் போகுதோ பொரிவிளங்கா உருண்டை

    ReplyDelete
  58. எதுக்கும் விண்கல ட்ரஸ்ஸ போட்டுக்கோங்க அதிரா

    ReplyDelete
  59. 60 th பொரிவிளங்கா உருண்டை

    ReplyDelete
  60. பூசுக்கு ஜேசுதாஸ் பாடல்னா ரொம்ப விருப்பமா ??

    ReplyDelete
  61. அதிரா இருங்க நான் சப்பாத்தி சுடும்போதுதான் வருவார் .போய் சுட்டுட்டு வர்றேன்

    ReplyDelete
  62. சின்ன வயதிலிருந்தே எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்..... //
    ஆறு வயசுக்கு முன்னாடி இருந்தா இல்ல பின்னாடி இருந்தா ????ஹா ஹா ஹா :D)

    ReplyDelete
  63. angelin (207)
    மாய உலகம் (187)
    :D) :D) :D) :D)

    ReplyDelete
  64. ஹா...ஹா...ஹா... இல்ல அஞ்சு... அது “சீடன்” சரியான ஸ்ரோங்கான ஆள்போல:)), ஆசானை அசைய விட்டால்தானே அவ்வ்வ்வ்:))).

    //ஆறு வயசுக்கு முன்னாடி இருந்தா இல்ல பின்னாடி இருந்தா ????ஹா ஹா ஹா :D)//

    ஆறு வயசில இருந்தே:))))).. அதனாலதான் நான் ரொம்ப நல்ல பொண்ணு:))).

    எனக்கு ஜேசுதாஸ் குரல் ம்ப..ம்ம்ப பிடிக்கும்.., அதே நேரம் அவரின் பாடல்களும் சூப்பர், வசனங்கள் நன்றாக இருக்கும்.. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க அஞ்சு:))... பாம்புக் காது கழுகுக் கண்ணோட எல்லாம் திரிகினம் ஆட்கள்:))).

    இளையராஜா & ஜேசுதாஸ் ... இருவர் பாடல்களும் மீண்ண்டும் ...ண்டும்..ண்டும்... அலுக்காமல் கேட்பேன்:))... நான் தேடும்ம்ம்ம் செவ்வந்திப் பூவிது...

    ReplyDelete
  65. //angelin said... 59
    எதுக்கும் விண்கல ட்ரஸ்ஸ போட்டுக்கோங்க அதிரா//

    என்னாது பீதியைக் கிளப்புறீங்க:)) தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்” என்றதுபோல, வைக்கச் சொன்ன வெடி இங்கயே வருதா?:))...

    ஆஆஆ.. கட்சி மாறுறாங்கப்பா... ஆரையுமே நான் இனி நம்பமாட்டேன்ன்...ட்டேன்ன்...ட்டேன்ன்ன்...

    அஞ்சு...அஞ்சு... சுட்டுட்டீங்களோ?:))).. நான் சப்பாத்தியைக் கேட்டேனாக்கும்:))).

    புளியமரம் ஆடுதே:)))... இது வேற ஆட்டம்:)).

    ஓக்கை நாளை சந்திக்கலாம்.. நல்லிரவு.. கீரைவடை ட்ரீம்ம்ம்ம்ம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    ReplyDelete
  66. நித்திரை கொள்ளமுன்னர் கணக்கைச் செய்திடுவம்:))... இண்டைக்கு ஆரெல்லாம் வந்தவை.... ஓக்கே கிரீன் கோடு.

    வராதாட்களுக்கு ஓக்கை ரெட் லைன் போட்டாச்சு:))

    [im]http://2.bp.blogspot.com/_P_3ZXXQMMlg/S-u3U2P5DaI/AAAAAAAAAho/woQZARfj5g8/s320/CatWriting.jpg[/im]

    இது கணக்குத்தானே ஆரும் பயந்திடப்புடா:))

    ReplyDelete
  67. எங்க வீட்ல அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் அவர் பாட்டு .
    இப்ப என் அம்மா நினைவு வந்துடிச்சு அழுகாச்சியா வருது .குட்நைட் .

    ReplyDelete
  68. இனிய காலை வணக்கம் நேயர்களே,
    சாரி ஒரு ப்ளோவில வந்திட்டு,

    இனிய காலை வணக்கம் அதிரா அக்கா,
    மற்றும் அவையோரோ,
    அடியேனும் ஒரு முன்னாள் வானொலி அறிவிப்பாளர் தான்.
    ஹி...ஹி..
    பண்பலை 98 இல் ஊரில ஒரு ரேடியோ இருந்தது.
    கேட்டிருப்பீங்க தானே..
    முந்தியக் காலத்தில
    அதுல கடைசிக் காலம் வரைக்கும் அடியேனும் வேலை செய்திருக்கிறேன்.
    அதிரா அக்கா என்ன ரேடியோ சொல்லுங்கோ பார்ப்போம்..
    காலையில் குரல் என்று வரும்,
    மாலையில் .........வானொலி என்று வரும்......

    ReplyDelete
  69. http://madhurakkural.blogspot.com/

    அறிவிப்பாளார் கே.எஸ்.ராஜா அவர்களின் மதுரக் குரலினை தாங்கள் நேரம் இருக்கும் போது இந்த இணைப்பில் சென்று கேட்கலாம்..

    பழைய ஒலிப்பதிவுகளை அறிவிப்பாளர் யாழ் சுதாகர் அவர்கள் தேடி எடுத்து தூசு தட்டி வைத்திருக்கார்.
    http://madhurakkural.blogspot.com/

    ReplyDelete
  70. முன்பு ஊரில் இருந்தபோது, இலங்கை வானொலியில் “இசையும் கதையும்” என ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும், கிழமையில் ஒருநாள். அதைக் கேட்கத் தவறுவதில்லை.//

    அதெல்லாம் ஒரு காலம்.
    நான் நினைக்கிறேன் 2000ம் ஆண்டு வரை இசையும் கதையும் நிகழ்ச்சி வழக்கத்திலிருந்தது என்று.
    இப்போது எல்லாம் வர்த்தக விளம்பர நிகழ்ச்சிகள் காரணமாக இசையும் கதையும் கேட்க முடியாது போய் விட்டது.

    ReplyDelete
  71. இது தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.... நேரம் நான்ன்ன்ன்கு மணி, முப்பது நிமிடங்கள்... இசையும் கதையும்.... இன்று தொகுத்து அனுப்பியிருப்பவர்...
    வடமாகாணத்திலிருந்து... “மியாவ்” அவர்கள்:))...//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    இது எப்போ தொடங்கின ரேடியோ.
    ஆமா ரேடியோவிற்கு லைசென்ஸ் எங்களிடம் எடுத்தனீங்களா?
    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  72. “அண்ணாபற்பொடி” யைத் தொட்டு, ஒரு தடவை பல்துலக்கிக்கொண்டு, கொஞ்சம் தண்ணியால முகத்தையும் கழுவிக்கொண்டு, வெளியே வந்தேன், அம்மம்மா நின்றா,//

    அப்போ உங்க வீட்டில லாலா சோப் இல்லையே?

    அல்லது மில்க் வைற் சோப் தான் பாவிக்கிறனீங்களே?
    இது தானே முந்தி யாழ்ப்பாணத்தில பேமஸ்...

    ReplyDelete
  73. அதிராவுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை.//

    நான் சின்னப் பொடியன்....
    எனக்கு இந்தக் கட்டம் விளங்கேல்லை...

    ஹி...ஹி...

    ReplyDelete
  74. அவர் பக்கத்து ஊரவர்தான், சின்னவயதில் கோயிலில் சுவாமி காவும்போது பார்த்திருக்கிறேன் //

    எங்கேயோ உதைக்குதே...

    அடடா...
    இது தான் கோயில் சுவாமி காவும் போது குளிச்சு முழுகி நெற்றியில மூன்று பட்டை விபூதிக் குறி வைத்து,
    முறுக்குச் சங்கிலி போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லுவதன் அர்த்தமோ;-))))

    ReplyDelete
  75. அப்படியே அக்குரல்.. காதில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது...ஆளைப் பிடித்ததுக்கு மேலாக குரலைப் பிடித்துப் போயிட்டுதெனக்கு.
    //

    ஏன் அவர் ஒரு அறிவிப்பாளரோ?

    உங்கள் நண்பியிடம் கேளுங்கள்;-))))

    ReplyDelete
  76. கறுப்பான கையாலே பாட்டு...

    சூப்பர் சிட்டுவேசன் பாட்டு..

    இது தான் கதைக்கு மிகவும் பொருந்தி வருது,
    கொஞ்சம் காமெடியாகவும் இருக்கு...

    ReplyDelete
  77. ஆமா முடிவு என்னவென்று நாங்கள் பின் நவீனத்துவப் பாணியில் உட்கார்ந்து யோசிக்கனுமோ?

    அப்புறம் முடிவையும் சுபமாக சொல்லியிருக்கலாம் தானே..

    கார் போகிறது?
    மாப்பிளை காரை விட்டு போகும் வழியில் இறங்கி மணப் பொண்ணுக்கு குளிர்பானம் வாங்கி கொடுப்பாரா?
    இல்லே நேரே வீட்டுக்கு போவார்களா என்றெல்லாம் சொல்ல வேண்டியது தானே?

    ReplyDelete
  78. எனக்கு இதை தொடர் பதிவாக்கினால் என்ன என ஒரு குட்டி ஆசை, அதனால இமா, ஸாதிகா அக்கா, ஆசியா, இளைய தளபதி நிரூபன், எங்கட நகைச்சுவை மன்னன் மாயா... ஆகியோரை அன்போடு அழைக்கிறேன், //

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    அக்கா நான் இவ்ளோ நாளும் அவங்களுக்கு கொஞ்சம் பயந்து தான் பம்மிக்கிட்டிருந்தேன்.
    குரல் பதிவு போட்டால் என் வானொலிப் புனைபெயரைக் கண்டு பிடிச்சிடுவாங்களோ என்று செய்வினை வைக்க முடியுமா என்று கேட்டேனே...
    அவங்களுக்கு கொஞ்சம் பயம்,
    ஐ மீன் சிகப்பு சால்வை அங்கிள் ....

    ஸோ...உங்கள் விருபத்திற்கமைவாக ரியாலிட்டியான ஒரு இசையும் கதையுமாக போட்டிடுறேன்..

    இது எப்பூடி?

    ReplyDelete
  79. ஆமா குட்டி இணைப்பில் வரும் பாலக் காட்டுப் பக்கத்திலே..
    பாட்டு இமா அக்காவிற்குத் தானே டெட்டிக்கேசன்..

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  80. முடிவை வித்தியாசமாக பாடலினால் குட்டி இணைப்பு மூலமாக விளக்கியிருக்கிறீங்களே....

    ReplyDelete
  81. அஞ்சு.... இனி எடுங்கோ அந்த புள்ளட்டை... இம்முறை குறி தவறிடப்புடா..:)))//

    சுட்டுடாதீங்கோஓஓஓஓஓஓஓஒ.... வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன் ;-)

    ReplyDelete
  82. நிரூபன் said... 69
    இனிய காலை வணக்கம் நேயர்களே,
    சாரி ஒரு ப்ளோவில வந்திட்டு,

    இனிய காலை வணக்கம் அதிரா அக்கா,
    மற்றும் அவையோரோ,
    அடியேனும் ஒரு முன்னாள் வானொலி அறிவிப்பாளர் தான்.
    ஹி...ஹி..
    பண்பலை 98 இல் ஊரில ஒரு ரேடியோ இருந்தது.
    கேட்டிருப்பீங்க தானே..
    முந்தியக் காலத்தில
    அதுல கடைசிக் காலம் வரைக்கும் அடியேனும் வேலை செய்திருக்கிறேன்.
    அதிரா அக்கா என்ன ரேடியோ சொல்லுங்கோ பார்ப்போம்..
    காலையில் குரல் என்று வரும்,
    மாலையில் .........வானொலி என்று வரும்......//

    அப்போ எனது இந்த தொடர் பதிவில் எனது தளத்தில் நம்ம நாற்று நிரூபன் தான் வானோளி அறிவிப்பாளர் .... ;-)

    ReplyDelete
  83. நிரூபன் said... 72
    இது தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.... நேரம் நான்ன்ன்ன்கு மணி, முப்பது நிமிடங்கள்... இசையும் கதையும்.... இன்று தொகுத்து அனுப்பியிருப்பவர்...
    வடமாகாணத்திலிருந்து... “மியாவ்” அவர்கள்:))...//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    இது எப்போ தொடங்கின ரேடியோ.
    ஆமா ரேடியோவிற்கு லைசென்ஸ் எங்களிடம் எடுத்தனீங்களா?
    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    ஆமால்ல லைசென்ஸ் எடுக்க என்கிட்ட தான் ஃபார்ம் வாங்கியாகனும்... ஃபார்முக்கு எப்படியும் 199 ரூபா... அப்பறம் என்கிட்ட கையெழுத்து வாங்க 299 ரூபா... அப்பறம்... மேலிடத்த கவனிக்கனும் அதுக்கு .......... யோசிட்டு சொல்றேன் ஹி ஹி ஹி

    ReplyDelete
  84. angelin said... 57
    இப்பதான் தூக்கி போட்டேன் பொரிவிளங்கா உருண்டையை//

    அப்பாடா பொரிவிளங்கா உருண்டை கீழே விழுந்துருச்சு .. நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்...

    ReplyDelete
  85. இதென்ன இங்கே பெரிய கூத்தே நடந்திருக்கு,நான் எங்கே போய் விட்டேன்,ஆகா தொடர் தொடரப்போகுதுங்கோ..

    ReplyDelete
  86. நினைவாலே சிலை செய்து
    புல்வெளியில்
    பட்டாம்பூச்சி
    கருப்பான கையாலே
    வண்டிமாடு எட்டு வைத்து
    பாலக்காட்டு பக்கத்திலே அப்பாவி ராஜா
    பாடல்கள் அனைத்தும் கதையை விலாவரியாய் எடுத்து சொல்கிறது...

    நானும் கதை,பாடல்,டைரக்‌ஷன் என்று ஹைய்யோ! ஹையைய்யோ!

    ReplyDelete
  87. present மிஸ்.பூஷ்! :) நாக்கடியில் கற்கண்டாக இனிக்கும் நினைவுகளை அசைபோட்டிருக்கீங்க.நல்லா இருக்கு கதை(!). மற்றவர்களின் கதையையும் ஆஆஆஆவலா எதிர்பார்க்கிறேன். ;)

    கதையிலே அதிரா கேரக்டர் வராம இருந்திருந்தா இது ரம்யாவிண்ட கதையேஏஏஏஏஏஏதான்னு எல்லாரும் நம்பியிருப்பினம்.எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கற மாதிரி அதிரா கேரக்டரை ஏன் நுழைச்சீங்க மிஸ்.பூஷ்?! :))))))

    பாடல்கள் நல்லா இருக்குது. முதல் பாட்டு(நினைவாலே..) நானெல்லாம் பிறக்கறதுக்கும் பலப்பலப்பல வருஷங்கள் மிந்தி :) வந்திருக்கும் போலே..இப்பத்தேன் மொதமொதலாக் கேக்கறேன்.ஹிஹி!

    ReplyDelete
  88. மியாவ்வ்வவ்வ்வ் உங்க கதை சூப்பர் !........அத்தோடு கருத்து மழையும்
    அருமையா இருக்கு .இதில எனக்குப் பொறாமவேற வருதே நான் என்ன செய்வன்.இந்த வாசிக்குற பூனைக் குட்டிகளை தூக்கிக்கொண்டு ஓடப்போறன் ம்ம்ம்மம்மம்ம்ம்ம் .........வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க சகோ .நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  89. angelin said... 64
    angelin (207)
    மாய உலகம் (187)
    :D) :D) :D) :D)//

    என்ன மாயாவுக்கே மாயாஜாலமா.... மீண்டும் ஓடுறா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏஏ... :-)

    ReplyDelete
  90. athira said... 67
    நித்திரை கொள்ளமுன்னர் கணக்கைச் செய்திடுவம்:))... இண்டைக்கு ஆரெல்லாம் வந்தவை.... ஓக்கே கிரீன் கோடு.//

    ஒரு புளு கோடு ஒண்ணு போட்ருங்கோ.. ஹி ஹி நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ;-)

    ReplyDelete
  91. அஞ்சு.... ஞ்சு... அம்மா நினைவு வந்தால் உடனே ஒரு ஃபோன் பண்ணிக் கதையுங்கோ... தூர இருந்து வேறு என்னதான் பண்ண முடியும்...

    ஆஆஆ... மறந்தே போயிட்டனே... குட்டுமொன்னிங் அஞ்சு:)).

    //கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    angelin (216)
    மாய உலகம் (181)
    ஜெய்லானி (71)//

    haiyoo..haiyooo:))))

    ReplyDelete
  92. வாங்கோ இளைய தளபதி...

    //இனிய காலை வணக்கம் நேயர்களே,
    சாரி ஒரு ப்ளோவில வந்திட்டு///

    அவ்வ்வ்வ்வ்வ்வ் “அது” நீங்கதானா... அப்போ காலையில எழும்பிக் கண்முழிச்சதெல்லாம் உங்கட குரலிலா?:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) எனக்கிது தெரியாமல் போச்சே:)))

    //அதிரா அக்கா என்ன ரேடியோ சொல்லுங்கோ பார்ப்போம்..
    காலையில் குரல் என்று வரும்,
    மாலையில் .........வானொலி என்று வரும்......//

    புரிஞ்சு போச்ச்ச், ஆனா சொல்ல மாட்டனே:)).

    கே.எஸ் ராஜாவின் ஒலிப்பதிவைக் கண்டிப்பாகக் கேட்கிறேன், இப்போ நேரம் போதாது.

    //இப்போது எல்லாம் வர்த்தக விளம்பர நிகழ்ச்சிகள் காரணமாக இசையும் கதையும் கேட்க முடியாது போய் விட்டது.//

    இப்போ சக்தி எஃப் எம் மட்டும், இங்கின பூஸ் ரேடியோவில் வருகிறது, எங்கள் இரவு 8,9 க்குப்போட்டால் அங்கு சாமமெல்லோ.... அப்போ ஒரு நிகழ்ச்சி போகும், வெளியே சொல்ல முடியாத துயரங்களை, radiயோவினூடாகப் பகிர்ந்து கொள்கிறார்கள், சோகம் கலந்த ஒரு ஒலிபரப்பு.

    ReplyDelete
  93. //இது எப்போ தொடங்கின ரேடியோ.
    ஆமா ரேடியோவிற்கு லைசென்ஸ் எங்களிடம் எடுத்தனீங்களா?
    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    என்னாது லைசென்ஸ்சா? அது என்ன கலர் எஸன்ஸூஊஊஉ?:))), பூஸுக்கே லைசென்ஸ் இல்லாமல் இருக்கு:)) அதுக்குள் ரேடியோவுக்கு லைசென்ஸ்ஸாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), எங்கிட்டயேவா:))).

    //அப்போ உங்க வீட்டில லாலா சோப் இல்லையே?

    அல்லது மில்க் வைற் சோப் தான் பாவிக்கிறனீங்களே?
    இது தானே முந்தி யாழ்ப்பாணத்தில பேமஸ்...//

    லாலா சோப்போ இல்ல லைலா சோப்போ? அவ்வ்வ்வ்?:) அது நான் அறியவில்லை. மில்க்வைட் சோப் பிடிக்கவே பிடிக்காதெனக்கு, எப்போதாவது ஒண்டுமில்லையினில் உடுப்புத்தோய்க்க மட்டுமே:))).

    ReplyDelete
  94. ஆனா சோப் இல்லாத காலங்களிலும், நான் “லக்ஸ்” தான் எப்படியாவது கிடைத்திடும் எனக்கு.

    ஒரு கதை நினைவுக்கு வருகுது, யாழ்ப்பாணத்தில ஒரு பேமஸ்ஸான மாஸ்டர்(அவரைத் தெரியாதோர் இருக்க மாட்டார்கள், பெயரெல்லாம் வாணாம்:))).

    அவர் தன் மனைவிக்காக எங்கோ பண்டத்தரிப்பிலே லக்ஸ் கிடைக்குதென ஆரோ சொன்னதும், மோட்டச்சைக்கிளில் போய் 120 ரூபா கொடுத்து, ஒன்று வாங்கி வந்து கொடுத்தாராம்.

    அடுத்தநாள் மனைவி குளிக்கும்போது, அது வழுக்கி லபக்கென கிணற்றுக்குள் விழுந்திட்டுதாம்:)), மாரிக்கால:) கிணறு, சோப்பை எடுக்கவும் முடியாதாம்.

    மனைவியைப் பார்க்க பாவமாக இருந்ததாம், சரி போனாப்போகுதென மீண்டும் போய் இன்னொரு லக்ஸ் வாங்கி வந்து கொடுத்தாராம்.

    அதைக் கண்டதும் அவர்களது 17 வயது மூத்தமகன் கேட்டாராம்.... “இது என்ன உடம்புக்குப் போடவா? இல்லை கிணற்றுக்குப் போடவா?” என்று, உடனே மனைவி அடிச்சுக் கலைத்தாவாம் மகனை:)).

    அந்த நேரம் சோப்புக்கு சம்போவுக்குப் பட்டபாடு எமக்குத்தான் தெரியும், ஆனாலும் பணமிருந்தால் மட்டும், எதையும் வாங்கக்கூடியசூழல் இருந்தது.

    ReplyDelete
  95. //நிரூபன் said... 74
    அதிராவுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை.//

    நான் சின்னப் பொடியன்....
    எனக்கு இந்தக் கட்டம் விளங்கேல்லை...
    ஹி...ஹி..///

    ஓ அப்பூடியோ? சின்னப்பிள்ளையெனில் விளங்காதுதான்:)))

    //நிரூபன் said... 81
    முடிவை வித்தியாசமாக பாடலினால் குட்டி இணைப்பு மூலமாக விளக்கியிருக்கிறீங்களே....///

    இப்போ பெரியாளாகிட்டீங்களாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).

    ReplyDelete
  96. //அடடா...
    இது தான் கோயில் சுவாமி காவும் போது குளிச்சு முழுகி நெற்றியில மூன்று பட்டை விபூதிக் குறி வைத்து,
    முறுக்குச் சங்கிலி போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லுவதன் அர்த்தமோ;-))))//

    ம்ம்ம்ம்ம்ம்ம்:)) சங்கிலியைத் தொங்க விடப்படாது:), அட்சரக்கூட்டை, ஒருபக்கத்தோளில தூக்கிப் போட்டிருக்கோணும்:))) அதுதான் பாஷன்:))).

    //நிரூபன் said... 76
    அப்படியே அக்குரல்.. காதில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது...ஆளைப் பிடித்ததுக்கு மேலாக குரலைப் பிடித்துப் போயிட்டுதெனக்கு.
    //

    ஏன் அவர் ஒரு அறிவிப்பாளரோ? உங்கள் நண்பியிடம் கேளுங்கள்;-)))////


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), “சுத்தியே சுத்தியும் சுப்பரின் கொல்லைக்குள்ளதானாம்”:)) எண்டதைப்போல, தானும் ஒரு அறிவிப்பாளர் என ஆரம்பம் சொல்லிப்போட்டு, இப்ப குரல் இனிதாம், அதைக் கேட்கும் நாங்கள்தான்(நேயர்தான்) முடிவு செய்யோணும் ஓக்கை:)))...

    எத்தனை அறிவிப்பாளர் இருந்தாலும் ஒருசிலரின் குரல்தானே மனதில பதியுது... பார்ப்போம் நிரூபனின் குரலையும்:)))... ஆரது ஓடுறது.... ஹையோ நிரூபன் ஓடிப்போய் ஒளிக்காதீங்கோ..... கேட்டபிறகு சொலுவம்தானே?:)) நான் குரலைச் சொன்னேன்:)))

    ReplyDelete
  97. //அப்புறம் முடிவையும் சுபமாக சொல்லியிருக்கலாம் தானே..

    கார் போகிறது?
    மாப்பிளை காரை விட்டு போகும் வழியில் இறங்கி மணப் பொண்ணுக்கு குளிர்பானம் வாங்கி கொடுப்பாரா?
    இல்லே நேரே வீட்டுக்கு போவார்களா என்றெல்லாம் சொல்ல வேண்டியது தானே?////

    பக்கத்தில இருக்கிற மாப்பிள்ளை வீட்டுக்குப் போவதுக்குள், மனைவிக்கு தொண்டை காய்ச்சிடும் என, கடையில மறிச்சு சோடாவாங்கிக் கொடுத்து ஆட்களுக்கு “ஷோ” காட்டுறதெல்லாம்... எமக்குப் பிடிக்காது தெரியுமோ:))))).

    இன்னும் நிறைய எழுத நினைத்தேன், ஆனா அது இரு பகுதியாகிவிடும், அத்துடன் அலட்டினாலும் படிப்போருக்கு போரிங்காகிடும் என்பதால் முடிந்தவரை குறுக்கிவிட்டேன்:)). இன்னுமொன்று என்னில ஒரு பழக்கம், எதுவாயினும் உடனே செய்து பார்த்திடோணும், பதிவை ரைப்பண்ணினால் உடனே வெளியிட்டுவிடவேணும், இருநாட்கள் பொறுத்து வெளியிடப் பொறுமை இருக்காது. அதுபோல ஒரு குழந்தைக்கோ, நண்பிக்கோ ஒரு பிரசெண்ட் கொடுத்தால் அதை அவர்கள் உடனே போட்டுப்பார்த்து, சரிபிழை சொல்லோணும் என எதிர்பார்ப்பேன், நெருங்கிய குழந்தையாயின், நானே போட்டுப் பார்த்து அழகுபார்த்துவிடுவேன்.

    அதனால்தான் நான், தொடராக ஏதும் எழுத பெரிதாக விரும்புவதில்லை:))).

    ReplyDelete
  98. //அக்கா நான் இவ்ளோ நாளும் அவங்களுக்கு கொஞ்சம் பயந்து தான் பம்மிக்கிட்டிருந்தேன்.
    குரல் பதிவு போட்டால் என் வானொலிப் புனைபெயரைக் கண்டு பிடிச்சிடுவாங்களோ என்று செய்வினை வைக்க முடியுமா என்று கேட்டேனே...
    அவங்களுக்கு கொஞ்சம் பயம்,
    ஐ மீன் சிகப்பு சால்வை அங்கிள் ....

    ஸோ...உங்கள் விருபத்திற்கமைவாக ரியாலிட்டியான ஒரு இசையும் கதையுமாக போட்டிடுறேன்..

    இது எப்பூடி?///

    எழுத சம்மதித்தமைக்கு முதலில் மியாவும் நன்றி நிரூபன்.

    குரலைக்காட்டோணும் என்றில்லை, அது உங்கட விருப்பம், பொல்லுக்கொடுத்து அடிவாங்கிடப்புடா, அதுக்கு நானும் காரணமாகிடக்கூடாது:))).. உங்கட கிட்னியை யோசிச்சு செய்யுங்க.

    ReplyDelete
  99. ஐ...... இம்முறை அதிராவுக்கே 100 ஆவது:)))).. ரொம்ப ரயேட்டாகிட்டேன் ஒரு பெரிய பெட்டி மங்கோ யூஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

    எல்லோருக்கும் புகைக்கிறமாதிரி இருக்கே:)))... இந்தாங்கோ இந்தாங்கோ வெங்காயமெல்லாம் போட்ட மோர், குடியுங்கோ... :))))).

    ஹையோ... குட்டி வாயை வச்சுக்கொண்டு சும்மா இருக்கேலாமல் இருக்கே எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

    ReplyDelete
  100. //நிரூபன் said... 80
    ஆமா குட்டி இணைப்பில் வரும் பாலக் காட்டுப் பக்கத்திலே..
    பாட்டு இமா அக்காவிற்குத் தானே டெட்டிக்கேசன்..

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///

    கடவுளே நானும் இமா அக்காவும் ஒட்டாக இருப்பது உங்களுக்குப் பொறுக்குதில்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), கை நோவோடும் இருட்டடி விள/ழ:)ப்போகுது, எதுக்கும் கொஞ்ச நாளைக்கு அம்மம்மாக்குப் பின்னாலயே ஒளிச்சிருங்கோ நிரூபன்:)))).

    மியாவும் நன்றி நிரூபன், ஊரில பக்கத்துவீட்டுக்காரரோட மதிலுக்கு மேலால கதைச்ச பீலிங்ஸாக்கிடக்கு... சந்தோசமாக இருக்கு. விரைவில் [co="purple"] “இசையும் நிரூபனின் கதையும்”:)))[/co] எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  101. //மாய உலகம் said... 82
    அஞ்சு.... இனி எடுங்கோ அந்த புள்ளட்டை... இம்முறை குறி தவறிடப்புடா..:)))//

    சுட்டுடாதீங்கோஓஓஓஓஓஓஓஒ.... வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன் ;-)//

    ஹா..ஹா..ஹா... இப்பத்தானே புரியுது சகோஸ் எல்லாருக்கும் துவக்கெண்டால் பயமென:))), இனி [co="yellow"]பூலாந்தேவியா[/co] மாறிட வேண்டியதுதான்:)))).

    எப்பூடியெல்லாம் மிரட்டிக் கூப்பிட வேண்டியிருக்கே என்பக்கத்துக்கு:))). இதுக்கே எக்ஸ்ரா எக்:)) சாப்பிடோணும் உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ...:)))..

    மிகுதிப் பதிலுக்கு கொஞ்சம் பொறுத்து வாறேன்... வேலை அழைக்கிறது...:).

    மாயாஆஆஆஆஆ ஃபிரெண்ட்ஸ் போயிட்டினமோ?:)), இனி மியாவ் வீட்டில நிண்டு கதைக்கேக்க, இடையில வந்து டிசுரேப்புப் பண்ணப்புடா என சொல்லிவையுங்க அவிங்களுக்கு:)))))கற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்.. சே..சே.. என்னப்பா இது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  102. அதீஸ், நானும் முன்பு இலங்கை வானொலியில் கேட்டதுண்டு. எங்க ஊரில் மாப்பிள்ளை வீட்டுக்கு பெண் போவதில்லையே. இதில் போவதாக எழுதி இருக்கிறீங்க. வெளிநாட்டுக்கு போவதை சொல்றீங்களோ?
    சூப்பர் கதை & பாட்டுக்கள்.

    ReplyDelete
  103. //மாய உலகம் said... 83
    //அப்போ எனது இந்த தொடர் பதிவில் எனது தளத்தில் நம்ம நாற்று நிரூபன் தான் வானோளி
    அறிவிப்பாளர் .... ;-)//

    //
    உது இருக்கட்டும், முதல்ல கதையை எழுதுங்க மாயா..

    முதலைக்கதை அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்::))

    //ஆமால்ல லைசென்ஸ் எடுக்க என்கிட்ட தான் ஃபார்ம் வாங்கியாகனும்... ஃபார்முக்கு எப்படியும் 199 ரூபா... அப்பறம் என்கிட்ட கையெழுத்து வாங்க 299 ரூபா... அப்பறம்... மேலிடத்த கவனிக்கனும் அதுக்கு ..........யோசிட்டு சொல்றேன் ஹி ஹி ஹி//

    அடடா இது சைட் பிஸ்னஸ்சோ?:)), எங்களுக்கு கையெழுத்து வாணாம், நாங்களே போட்டிடுவோம்:))).

    ReplyDelete
  104. //என்ன மாயாவுக்கே மாயாஜாலமா.... மீண்டும் ஓடுறா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏஏ... :-)//
    ஹா..ஹா..ஹா.. கொஞ்சம் பூஸ்ட் குடிச்சிட்டு ஓடுங்க மாயா:))

    //ஒரு புளு கோடு ஒண்ணு போட்ருங்கோ.. ஹி ஹி நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ;-)//
    என்னாது புளுவைப்பிடிச்சுக் கோடு போடுறதோ? அது நியூ ஆன்ரியிடம்தான் மண்புழு இருக்கு, என்னால அதெல்லாம் முடியாது சாமீஈஈஈஈஈ:))).
    மாயா இப்போ அடிக்கடி காணாமல் போறார், ஆரோ மருந்து வச்சிட்டினம்போல:)).

    ReplyDelete
  105. வாங்க ஆசியா....
    பாட்டுடன் சேர்ந்த கதைதான் இசையும் கதையும், அது நேரடியாகக் கேட்கும்போது சூப்பராக இருக்கும்.

    //நானும் கதை,பாடல்,டைரக்‌ஷன் என்று ஹைய்யோ! ஹையைய்யோ!//

    கதை எழுதுபவர்களாகப் பார்த்துத்தான் கூப்பிட்டிருக்கிறேன், விரும்பிய தலைப்பில் எழுதுங்க, வருங்காலத்தில மாயா பெரீய டைரக்ட்டராக வந்து, எம் கதைகளை படமாக்கினாலும் ஆக்குவார், எதுவுமே இப்போ சொல்றதுக்கில்ல:)).

    மியாவும் நன்றி ஆசியா, மிக்க நன்றி தொடருங்கோ.

    ReplyDelete
  106. வாங்கோ மகி..

    /// மிஸ்.பூஷ்?! :)))))) //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பூஸுக்கு தாலிகட்டிய கதை சொன்னபிறகும் மிஸ்ஸ் எண்டால்?:)))).

    //கதையிலே அதிரா கேரக்டர் வராம இருந்திருந்தா இது ரம்யாவிண்ட கதையேஏஏஏஏஏஏதான்னு எல்லாரும் நம்பியிருப்பினம்.எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கற மாதிரி அதிரா கேரக்டரை ஏன் நுழைச்சீங்க மிஸ்.பூஷ்?! :)))))) ///

    ஹா..ஹா..ஹா... இதைப் படிச்சிட்டு வெளில போனனா... காரில தனியே சிரிச்சுக்கொண்டே போனேன்....:)) இப்பூடியும் இருக்கா விஷயம்:)).

    அதிராவை அப்பூடிப் போட்டு, மக்களைத் திசை திருப்பிடலாம் என எண்ணினேன் தப்பாகிடுச்சே அவ்வ்வ்வ்வ்வ்:))).

    இருப்பினும் இது பாதி கற்பனையேதான், ஏனெண்டால் என் கணவர் 2 1/2 வயதிலிருந்தே வெளிநாடுகளில்தான் வளர்ந்தார், நான் 2 1/2 வயதிலிருந்து உள் நாட்டிலேதான் வளர்ந்தேன்... கிக்..கிக்..கீஈஈஈ:)).

    ReplyDelete
  107. //பாடல்கள் நல்லா இருக்குது. முதல் பாட்டு(நினைவாலே..) நானெல்லாம் பிறக்கறதுக்கும் பலப்பலப்பல வருஷங்கள் மிந்தி :) வந்திருக்கும் போலே..இப்பத்தேன் மொதமொதலாக் கேக்கறேன்.ஹிஹி!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பூடியெல்லாம் சொல்லி, நான் ரொம்பச் சின்னப்பிள்ளை எனத் தப்பப்பார்க்காதீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ஒரு ரீவி புரொக்கிராமில ஒரு 10 வயசுப் பெண்குழந்தை வந்து, அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா... எனும் பாட்டை எவ்ளோ ரசிச்சுப் பாடினா தெரியுமோ?:))).

    பூஸ் ரேடியோவில:), ஒரு ரேடியோ ஸ்ரேஷன் இருக்கு, ஒல்ட் இஸ் கோல்ட் என, அது முழுக்கப் பழைய பாடல்களேதான், கேட்கக் கேட்க இனிக்கும்.

    மியாவும் நன்றி மகி. இனி உங்களை மறுபடியும் எப்போ சந்திக்கலாம்?:))).

    ReplyDelete
  108. வாங்கோ சிவா...

    என்னாது நியூ ஆன்ரி பழக்கினவவோ உப்பூடிச் சிரிக்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?:)))).

    என்னதான் செய்தாலும், இனிமேல் கல்யாணம் ஆகப்போகும், இதைப்படிக்கும் எல்லோருக்கும், ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் அதிராவின் கதையும், பாடல்களும் வந்து தொலைக்கப்போவது நிஜம்... சிவ பூஜையில கரடி மாதிரி....:)))).... ஹையோ... .ங்ங்ங்ங்ங்யோ:))))).

    மியாவும் நன்றி சிவா. தூசு தட்டுங்கோவன் 2 கிழமையாகுது:)))).

    ReplyDelete
  109. வாங்கோ அம்பாள் அடியாள்...

    //இதில எனக்குப் பொறாமவேற வருதே நான் என்ன செய்வன்///

    அவ்வ்வ்வ்வ்வ் நான் ஒரு அப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆவி:))))), என்னில பொர்....ஆண்மை எல்லாம் பட்டிடாதையுங்கோ... ங்கோ...ங்கோ...

    பூஸ் குட்டிகளையா எங்ங்ங்ங்ங்ஙேஏஏஏ:)))))).....

    மியாவும் நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  110. வாங்கோ வான்ஸ்ஸ்...

    எங்கே உள்ளே இருந்து யூம் பண்ணிப்பார்க்கிறீங்க, எங்கட புளியமர ஆட்களபோல:))) இடையிடையே வெளில வாறீங்க ஒண்ணுமே பிரியல்ல எனக்கு. நலம்தானே?.

    //எங்க ஊரில் மாப்பிள்ளை வீட்டுக்கு பெண் போவதில்லையே. இதில் போவதாக எழுதி இருக்கிறீங்க. வெளிநாட்டுக்கு போவதை சொல்றீங்களோ? ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) எந்த ஊரைச் சொல்றீங்க நீங்க? எங்கட திருமணங்களெல்லாம், திருமணம் எங்கு நடந்தாலும்(மண்டபங்களில் அல்லது பெண் வீட்டில்), தாலிகட்டி, உணவெல்லாம் முடித்ததும், மண்டபத்தில் எனில் நேரே பெண் வீட்டுக்கு வந்து, அன்று பின்னேரமே மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் விடுவோமே. அன்று தங்குவது மாப்பிள்ளை வீட்டிலதானே, பின்பு 4ம் நாள்தான் “4ம் சடங்கு” என பெண் வீட்டுக்கு திரும்ப வந்து, அங்கு மீண்டும் பெரிய ரிஷப்ஷன் நடக்கும்.

    ஏன் உங்கள் ஊரில் அப்படி இல்லையோ? எனக்குப் புதுமையாக இருக்கு நீங்க இப்படிக் கேட்பது.

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.

    ReplyDelete
  111. angelin (216)
    மாய உலகம் (177)//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  112. திருக்கோவிலே ஓடிவாஆஆஆஆஆஆஆஆ...

    ReplyDelete
  113. athira said... 101
    ஐ...... இம்முறை அதிராவுக்கே 100 ஆவது:)))).. ரொம்ப ரயேட்டாகிட்டேன் ஒரு பெரிய பெட்டி மங்கோ யூஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).//

    குடுகுடுன்னு ஓடி வந்தனே... 100 எனக்கில்லையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  114. எப்பூடியெல்லாம் மிரட்டிக் கூப்பிட வேண்டியிருக்கே என்பக்கத்துக்கு:))). இதுக்கே எக்ஸ்ரா எக்:)) சாப்பிடோணும் உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ...:)))..
    //

    ஹா ஹா... வெஜிடபிள் பிரியாணி வேண்டாம்ம்ம்.. அது போன மாசம் செஞ்சதூஊஊஊஊஊஊ

    ReplyDelete
  115. முதல்ல கதையை எழுதுங்க மாயா..

    முதலைக்கதை அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்::))//

    அட இது நல்லாருக்கே... முதலை உன் கதை வேணாமாஆஆ..... தேம்ஸ் கரை பக்கம் வந்தா கவனிச்சிடுங்க... ;-)

    ReplyDelete
  116. அடடா இது சைட் பிஸ்னஸ்சோ?:)), எங்களுக்கு கையெழுத்து வாணாம், நாங்களே போட்டிடுவோம்:))).//

    (முதல்ல கதையை எழுதுங்க மாயா..
    முதலைக்கதை அல்ல)

    அப்ப லைசன்ஸ் வேண்டாம்ன்னுட்டாங்க அப்ப சைலன்ஸ் ஆகிடவேண்டியது தான்... ;-)

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  117. /
    என்னாது புளுவைப்பிடிச்சுக் கோடு போடுறதோ? அது நியூ ஆன்ரியிடம்தான் மண்புழு இருக்கு, என்னால அதெல்லாம் முடியாது சாமீஈஈஈஈஈ:))).//

    ஆஹா.. இப்படி ஒண்ணு இருக்குறத யோசிக்கல.. ராஜேஷேஏஏஏ.. கிட்னி வேலை செய்யல போலருக்கே... எங்கே பூஸ்ஸ்ஸ்... சாரி எங்கே பூஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்..... ;-)

    ReplyDelete
  118. கதை எழுதுபவர்களாகப் பார்த்துத்தான் கூப்பிட்டிருக்கிறேன், விரும்பிய தலைப்பில் எழுதுங்க, வருங்காலத்தில மாயா பெரீய டைரக்ட்டராக வந்து, எம் கதைகளை படமாக்கினாலும் ஆக்குவார், எதுவுமே இப்போ சொல்றதுக்கில்ல:)).//

    எதுக்கும் காப்பிரைட் போட்டுவச்சிருங்க... ரொம்ப நன்றி மியாவ் சந்தோசமா இருக்கு... ;-))))))

    ReplyDelete
  119. அதிராவை அப்பூடிப் போட்டு, மக்களைத் திசை திருப்பிடலாம் என எண்ணினேன் தப்பாகிடுச்சே அவ்வ்வ்வ்வ்வ்:))).//

    அப்பாடா உண்மை வெளிய வந்திருச்சு... இத வாங்குறதுக்குள்ள எவ்வளவு பாடு பட வேண்டியதிருக்கு... ;-)))))))))))

    ReplyDelete
  120. இருப்பினும் இது பாதி கற்பனையேதான், ஏனெண்டால் என் கணவர் 2 1/2 வயதிலிருந்தே வெளிநாடுகளில்தான் வளர்ந்தார், நான் 2 1/2 வயதிலிருந்து உள் நாட்டிலேதான் வளர்ந்தேன்... கிக்..கிக்..கீஈஈஈ:)).//

    ஹா ஹா இந்த கதையே 20 வது வயசுக்கு மேல தான் ஆரம்பிக்குதூஊஊஊ ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  121. நானும் முன்பு இலங்கை வானொலியில் கேட்டதுண்டு. எங்க ஊரில் மாப்பிள்ளை வீட்டுக்கு பெண் போவதில்லையே.//

    என்னது மாப்பிள்ளை வீட்டுக்கு போகமாட்டாங்களா????????????..... இது புதுசா இருக்கே...

    ReplyDelete
  122. எல்லாரும் எல்லாம் சொல்லிட்டாங்க அதிராம
    அதான் என்ன சொல்ல்றதுன்னு தெரிய வில்ல
    சிமிலி விட்டு சென்று விட்டேன்
    மிக உணர்வோட
    கூடவே பாடல்களும்
    கொஞ்சம் நகைச்சுவையும்
    நல்லவே இருக்கு
    வாழ்த்த வயதில்லை
    இருந்தாலும்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  123. இன்னுமா அந்த பூசாருக்கு கை சரியாகவில்லை ,கை கட்டை அவிழ்த்து விடுங்க ,பாவம் .

    நான் பூசாருக்கு உடம்பு சரியிலைன்னு ஆப்பிள் ,ஹார்லிக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தேன் ,வர வழியிலேயே பசிக்குதுன்னு......ஹி ஹி ஹி

    ReplyDelete
  124. //மாய உலகம் said... 114
    திருக்கோவிலே ஓடிவாஆஆஆஆஆஆஆஆ//

    அந்தப் பாட்டிலே எனக்கு மிக மிகப் பிடித்த வரியே இதுதான் மாயா...

    //அட இது நல்லாருக்கே... முதலை உன் கதை வேணாமாஆஆ..... தேம்ஸ் கரை பக்கம் வந்தா கவனிச்சிடுங்க... ;-)//

    அவ்வ்வ்வ்வ், முதலைக்குச் சொல்லிடாதீங்க, ஏற்கனவே கையில கட்டெனக்கு:)))

    //அப்ப லைசன்ஸ் வேண்டாம்ன்னுட்டாங்க அப்ப சைலன்ஸ் ஆகிடவேண்டியது தான்... ;-)
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்களுக்கு வாணாம் என்றேன், ஆனா உங்களுக்கு வேணும்... :)) விரைவில எதிர்பார்க்கிறேன்... மாயா ரேடியோவின் [co="red"]இசையும் முதலையும்:)))[/co]

    ReplyDelete
  125. //ஹா ஹா இந்த கதையே 20 வது வயசுக்கு மேல தான் ஆரம்பிக்குதூஊஊஊ ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    இல்ல மாயா நான் சொன்னது இரண்டரை வயதிலிருந்து.

    அடடா ஐடண்டிகார்ட்டைப் போட மறந்திட்டனே:)) குடிச்ச பூஸ்ட்டும் வேஸ்ட்டு:))) ஹா..ஹா..ஹா...

    கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    angelin (216)
    மாய உலகம் (185)
    ஜெய்லானி (71)

    ReplyDelete
  126. வாங்க சிவா...

    //siva said... 124
    எல்லாரும் எல்லாம் சொல்லிட்டாங்க அதிராம
    அதான் என்ன சொல்ல்றதுன்னு தெரிய வில்ல
    சிமிலி விட்டு சென்று விட்டே//

    தெரியும் புரிஞ்சுகொண்டேன்... இதுக்குத்தான் மீ ட 1ஸ்டாக இருக்கோணும்:))).

    125 க்குக்கெல்லாம் இப்போ பரிசு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்?:)))).

    மியாவ் மியாவ் சிவா.

    ReplyDelete
  127. //M.R said... 126
    இன்னுமா அந்த பூசாருக்கு கை சரியாகவில்லை ,கை கட்டை அவிழ்த்து விடுங்க ,பாவம் //

    [co="blue"]அது கல்யாணக் கனவு[/co] ரமேஸ்ஸ்ஸ்:)). எல்லோருக்கும் கால் கட்டுத்தான் போடுவதென்பார்கள், பூஸார் கொஞ்சம் துடினம் என்பதால் கூடவே கைக்கட்டும் போட்டாச்ச்ச்ச்ச்ச்:)))

    //நான் பூசாருக்கு உடம்பு சரியிலைன்னு ஆப்பிள் ,ஹார்லிக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தேன் ,வர வழியிலேயே பசிக்குதுன்னு......ஹி ஹி ஹி//

    karrrrrrrrrrrrrrrrr:)))).. இனிமேல் கையில கொண்டுவராதீங்க, பார்ஷலில் அனுப்பிட்டு நீங்க பின்னால வாங்க:)))).

    ReplyDelete
  128. அஞ்சுவைக் காணேல்லை:(( என்னாச்சோ ஏதாச்சோ? ரோட்டில எங்காவது மேல பார்த்துக்கொண்டுபோய் டமால் என:))) சே..சே... அப்பூடியெல்லாம் இருக்காது:))))

    கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    angelin (216)
    மாய உலகம் (185)
    ஜெய்லானி (71)///

    பச்சைப்பூவைப் பாலைவனத்துக்கு அனுப்பிட்டாங்கபோல:))))... அதிகம் துள்ளினா, உடனே புடிச்சு அங்கின அனுப்பிடுவாங்க:))) புழுப் பூச்சிக்கேல்லாம்.. இஞ்சி.. நீர் ஊத்திட்டு வரச்சொல்லி:)))) அதுதான் நடந்திருக்க்கு..:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  129. ஜெய்லானி (71)///அதீஸ், இப்பூடி ஜெய்லானியின் வயசை பப்ளிக்ல சொல்லப்படாது. அவர் ப்ரைம் மினிஸ்டர் ஆக ட்ரை பண்றார்.

    ReplyDelete
  130. ஆ... வான்ஸ்ஸ்ஸ்.. நான் ஜெய் ட வயசை எல்லாம் பப்ளிக்கில சொல்லுவனோ? எனக்கு என்ன அப்பூடி நாகரீகம் தெரியாத ஆளா நான்?:)))..

    அது ஜெய் பிறந்த ஆண்டைச் சொன்னேனாக்கும்... அவ்வ்வ்வ்வ்:))).

    பிரை மினிஸ்டர் ஆகப்போறாராமோ? என்ன பாலைவனத்துக்கோ??... ஆகட்டும் ஆகட்டும்... அவர் பிரை மினிஸ்டர் ஆனா என்ன... விண்வெளி மினிஸ்டர் ஆனா என்ன..... எங்களுக்கு எப்பவும் அதேபுளியமர ஜெய்..தான் க்கி..க்கி...க்கி...:)))).

    ReplyDelete
  131. ஜெய்யின் வயசோன்னு நினைச்சு பதறிப் போய்ட்டேன்.!!!!

    ReplyDelete
  132. இங்கேதான் இருக்கேன் :-):-):-):-)
    புது பராத்தா ஒன்னு செய்ற முயற்சில இருக்கேன் .புல்லட் வெர்க் செய்யல
    அதனால் இம்முறை பறக்கும் தட்டு இல்லன்னா டிஸ்கஸ் த்ரோ try பண்ணறேன் ,புளிய மரத்தை நோக்கி வீசத்தான் :-):-):-):-):-):-):-):-)

    ReplyDelete
  133. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்களுக்கு வாணாம் என்றேன், ஆனா உங்களுக்கு வேணும்... :)) விரைவில எதிர்பார்க்கிறேன்... மாயா ரேடியோவின் இசையும் முதலையும்:)))//

    விரைவில் அரங்கேறும்... இப்பொழுதே ரிசர்வ் செய்யுங்கள்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  134. கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    angelin (216)
    மாய உலகம் (185)//

    ஆஹா அப்பப்ப இத வேற காமிச்சு ஓட விடுறாங்களே... எனக்கு மட்டும் ஏன் ரிவர்ஸ்ல போகுது... வேகம் பத்துல ராஜேஷேஏஏஏஏஏ.. ;-)))

    ReplyDelete
  135. சரியாக 4.30 க்கு ஃபோன் அலறியது..//

    ராஜேஷ்குமார் நாவல் நிறைய படிப்பிங்கிளோ... ;-))))

    ReplyDelete
  136. 32 கருத்த தாண்டி போயிட்டாங்க... எப்படி அவ்ளோ ஸ்பீடா போறாங்க.......... கிட்னிக்கு வேளை கொடுத்து யோசிப்போம்... யோசிச்சிட்டு வந்து விண் பண்ணுவோம்.. திருக்கோவிலே ஓடி வா ஆஆஆஆஆ.. பாட்டு வேற மைண்டல ஓடுது எப்படி யோசிக்கிறது.... ;-)

    ReplyDelete
  137. அப்பாடா கிட்னிய யூஸ் செய்து 200 தாண்டியாச்சு... போயிட்டு வர்றதுக்குள்ள குறைஞ்சுரும்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... சரி திரும்ப வந்து விண் செஞ்சிருவோம்.......... டுமீல்... ஆஹா துப்பாக்கி சத்தம் கேக்குது எஸ்கேப்

    ReplyDelete
  138. இசையும் கதையும் ..எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி.

    ReplyDelete
  139. கனவு நன்வாக வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  140. //vanathy said... 134
    ஜெய்யின் வயசோன்னு நினைச்சு பதறிப் போய்ட்டேன்.!!!//

    71 க்கே இப்பூடிப் பதறினா:)) அவரின் உண்மையான வயசைக் கேட்டால்.... பெயிண்டூஊஊஉ பண்ணிடுவீங்கோ:))... வாணாம் விட்டிடுங்கோ நான் ரொம்ப நல்ல பொண்ணு:))

    ReplyDelete
  141. //கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    மாய உலகம் (210)
    angelin (210)
    ஜெய்லானி (68)//

    அட வரவர பருவமேறி இளமை திரும்புதே அவ்வ்வ்வ்:)) 71 ஆக இருந்தது இப்போ 68 அதெப்பூடி?:)))).

    ReplyDelete
  142. ஆ...அஞ்சு....

    /புது பராத்தா ஒன்னு செய்ற முயற்சில இருக்கேன் .புல்லட் வெர்க் செய்யல
    அதனால் இம்முறை பறக்கும் தட்டு இல்லன்னா டிஸ்கஸ் த்ரோ try பண்ணறேன் ,புளிய மரத்தை நோக்கி வீசத்தான் :-):-):-///

    இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே... அப்பூடியே புளியமரத்தை சுத்திச் சுத்தி தட்டுப் பறக்கிறமாதிரிச் செய்யுங்கோ.... இம்முறை தப்பக்கூடாது.. நான் தட்டைச் சொன்னேன்:)).

    ReplyDelete
  143. //விரைவில் அரங்கேறும்... இப்பொழுதே ரிசர்வ் செய்யுங்கள்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    மியாவும் நன்றி மாயா.. அவசரம் இல்லை, 2 மாதம் போனாலும் ஓக்கே... உங்கட வசதிப்படி எழுதுங்கோ.

    //200 தாண்டியாச்சு... போயிட்டு வர்றதுக்குள்ள குறைஞ்சுரும்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... சரி திரும்ப வந்து விண் செஞ்சிருவோம்.......... டுமீல்... ஆஹா துப்பாக்கி சத்தம் கேக்குது எஸ்கேப்///

    ஹா..ஹா..ஹா... எப்பூடித்தாண்டினாலும்.. வழுக்குமரம்தான்:))) 200 க்கு மேல ஏற விடாதுபோல:))).... டுமீல்....டமால்... ஓடுங்க மாயா ஓடுங்க:)))

    ReplyDelete
  144. வாங்க ராஜேஸ்வரி மிக்க நன்றி.

    ReplyDelete
  145. அதிரா நலமா? இசையும் கதையும் வாசித்துப்போட்டு வாறன்.

    ReplyDelete
  146. பூஸார் படங்கள் நல்லா இருக்குது.பாட்டு செலக்ஷனும் அருமை.
    அந்த நாட்களில் இசையும் கதையும், ஒலிச்சித்திரம்,தணியாத தாகம் நாடகம், மிக விரும்பிக்கேட்பேன். கே.எஸ்.ராஜா வின் திரைவிருந்து கேட்கத்தவறியதே இல்லை. பழைய நாட்களை மனக்கண்ணில் நிறுத்திவிட்டீங்க அதிரா நன்றி.

    ReplyDelete
  147. angelin (217)
    மாய உலகம் (209)//
    NO NO THIS IS NOT GOOD
    மாயா அக்கா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரேன் .

    ReplyDelete
  148. நீங்க இசையும் கதையும் நன்றாக எழுதியிருக்கீங்க அதிரா. எல்லாமே அழகூஊஊ
    ஊஊ!!!!!!!!

    ReplyDelete
  149. angelin said... 152
    angelin (217)
    மாய உலகம் (209)//
    NO NO THIS IS NOT GOOD
    மாயா அக்கா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரேன் .//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஓடுறா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  150. சீடன் : குருவே யாரோ உங்களை அழைக்கும் குரல் கேட்குதே..!!

    ஜெய் : யாருமில்லை சுத்த பிரம்மையாக இருக்கும்

    சீடன் : இல்லை குருவே அதுவும் பெண்குரல் போல தெரிகிறது ..!!

    ஜெய் : தலைக்கு கீழே பூமி ஆடியபோது நினைத்தேன் ..அதே அதிர்வலையாகத்தான் ஒருக்குமோவென ...

    சீடன் : அப்புறமென்ன ஆசனத்தை நிறுத்துங்கோ..

    ஜெய் :அது முடியவில்லை மகனே..!! ஆசன குளிகை மாறிப்போய் உறக்க குளிகையை முழுங்கிட்டேன் போல அதான் நெடிய உறக்கம் என்னை டிஸ்ரேப் செய்யாதே.!!கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    சீடன் : ச்சே...முதல்ல குருவை மாத்தோனும் (மனசுக்குள் )

    ஜெய் :ஐயோ....ஆரெது ...பொரிவிளங்காயை வச்சி அடிச்சது ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    சீடன் : இவரை எழுப்ப இதுதான் வழிப்போல இது தெரியாம போச்சே ..ஹி...ஹி.... :-)))

    ReplyDelete
  151. பிடிச்ச பாட்டாவே போட்டு வறீங்க சூப்பர் :-) நான் தலைப்பு பாட்டை சொன்னேன் :-)

    ReplyDelete
  152. எனக்கும் கே.எஸ்.ராஜாவைப் பிடிக்கும்.வானொலியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியவர்.
    நல்ல பகிர்வு

    ReplyDelete
  153. பொரிவிளங்கா உருண்டை டார்கிட்டை ரீச் செய்திருக்கு
    அப்போ ???? நான் வீசியடிச்ச பராத்தா பறக்கும் தட்டு எங்கே யார் தலைய
    பதம் பார்துச்சோ அச்சோ அச்சோ அச்சச்சோ

    ReplyDelete
  154. சீடன் : இவரை எழுப்ப இதுதான் வழிப்போல இது தெரியாம போச்சே ..ஹி...ஹி.... :-)))//
    சீடனுக்கு ரெண்டு பாக்கெட் பொரிவிளங்கா உருண்டை பார்சல் செய்யணும் :-))):-)))

    ReplyDelete
  155. அதிரா சுகமா ??
    hope you are keeping fine .

    ReplyDelete
  156. அதிரா சுகமா ??
    hope you are keeping fine .

    ReplyDelete
  157. Did anybody see Athiraaaaaaaaaaa???????

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSS9PuT3TzJZ_R_oa8aJ3dJ5Afiy98sD0ADMjwwEVla8Wkh7u4lJA[/im]

    ReplyDelete
  158. அஞ்சூஊ நான் லாண்டட்:)))).

    ஆராவது என்னைத் தேட முந்தி ஆஜராகிடோணும் என எவ்வளவோ ஸ்பீட்டா வந்தோம்:)), சந்திர மண்டலத்தால திரும்பி வரேக்கை, ஸ்பேசில வச்சு பிளேனிண்ட 2 சில்லுக்கும் காத்துப் போயிட்டுது, கொஞ்ச நேரம் ஸ்பேசில நடக்க சொல்லிப்போட்டு, பைலட் ரயருக்குக் காத்தடிச்சுட்டார், பின்புதான் வந்து சேர்ந்தோம் அதுதான் லேட்டு:))).

    ஆரும் குறை நினைச்சிடாதீங்கோ .. தோஓஓ... வருது பதிலெல்லாம்:)))).

    ReplyDelete
  159. வாங்கோ அம்முலூஊஊஉ..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), இம்முறை நீங்க ஒண்டும் சொல்லேல்லை:(((, ஏனோதானோ எனப் பின்னூட்டம் போட்டதுபோல இருக்கு.. அப்பூடியெண்டெல்லாம் சொல்ல வந்தேன், ஆனா சொல்லமாட்டேன்.. ஏணெண்டால்... சரி சரி வாணாம்:))).

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  160. //டிஸ்யூ ப்ளீஸ் எனக்கில்ல பிரியாக்காவுக்கு.... சாரி ஏஞ்சலின் அக்காவுக்க்கூஊஊஊஊஊ ;-))))))//

    என்னாது மாயாவுக்கு ஒரே கொயப்பமா இருக்கே:)) என்ன நடந்தது?:))

    இருப்பினும் இதைச் சொல்லாட்டில் நித்திரை வராதெனக்கு..

    //கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    மாய உலகம் (224)
    angelin (209)
    ஜெய்லானி (68)///

    மாயா குடிச்ச பூஸ்(ட்):)) நல்லாவே வேர்க் பண்ணுது:))..

    தலைகீழ் ஆசானந்தா:)) எப்பூடி முக்கினாலும் 70 ஐத் தாண்ட முடியேல்லை:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்... வந்ததும் வராததுமா வாயைக் கொடுத்து வம்பை வாங்கப்போறேன்:))).

    ReplyDelete
  161. ஜெய்லானி said... 156
    http://www.youtube.com/watch?v=3K7rKq6DLUU
    5 November 2011 05:38
    ////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கண் போனபின்பு சூரிய நமஸ்காரமாம்:))).

    தலைப்புப் போட்டுப் பழங்கதையுமானபின்பு, எங்கோ தியானம் எனச் சொல்லி:)))... காணாமல் போயிட்டு இப்ப வந்து ஊஊஊ ரியூப்பில பாட்டுப் போட்டுத் தந்திருக்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... எங்களுக்குப் பாட்டு வாணாம்...:)))), பூஸ் எண்டால் நோ வெட்கம், நோ ரோஷம் என நினைச்சிட்டினமாக்கும்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ஊ.கு:
    எங்கிட்டயேவா?:))), மேல இணைச்சிட்டமில்ல:)))... ஹையோ இதையும் படிச்சதும் கிழிச்சிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:))).

    ReplyDelete
  162. //ஜெய் :ஐயோ....ஆரெது ...பொரிவிளங்காயை வச்சி அடிச்சது ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    சீடன் : இவரை எழுப்ப இதுதான் வழிப்போல இது தெரியாம போச்சே ..ஹி...ஹி.... :-)))//

    ஹா...ஹா..ஹா..... உசிரே போனாலும் இனி உந்தச் சீடனை மாத்த விட்டிடப்புடா:))).

    பொரிவிளங்காய் உதவுவதுபோல அண்ணன் தம்பியே உதவாயினம் போல இருக்கே அவ்வ்வ்வ்வ்:)))).

    அஞ்சு இண்டைக்கும் ஒரு, 2 உருண்டை தேவையாக்கிடக்கூஊஊஊஊ... சார்ஜாப் பக்கம் ஒண்டு, அங்கின சென்னைப் பக்கம் ஒண்டு... ரெடி ஸ்ரெடி..... கொஞ்சம் பொறுங்கோ.... நான் கட்டிலுக்குக் கீழ போனபின்பு எறியலாம்:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  163. ///ஜெய்லானி said... 158
    பிடிச்ச பாட்டாவே போட்டு வறீங்க சூப்பர் :-) நான் தலைப்பு பாட்டை சொன்னேன் :-///

    ஜெய்.... எங்க காணாமல் போனீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  164. வாங்கோ சிவகுமாரன்......

    முதன்முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு மிக்க நன்றி.

    //சிவகுமாரன் said... 159
    எனக்கும் கே.எஸ்.ராஜாவைப் பிடிக்கும்.வானொலியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியவர்.
    நல்ல பகிர்வு///

    உண்மைதான், இலங்கையில் ஆராலுமே அவரை மறக்கமுடியாது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  165. என்ன இது ஒருவரையும் காணேல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))), கூப்பிட்ட அஞ்சுவையும் காணேல்லை...:)))

    [im]http://media1.break.com/dnet/media/2008/11/69%20Hiding%20Cat.jpg[/im]

    ReplyDelete
  166. athira said... 172
    என்ன இது ஒருவரையும் காணேல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))), கூப்பிட்ட அஞ்சுவையும் காணேல்லை...:)))
    //

    அட ஆமா ஆரையும் காணேல்லை... ;-))))

    ReplyDelete
  167. என்னது மியாவ காணோம்... முருங்க மரம் காணொம்... அன்சுவை காணோம்... முதலைய கானோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... சரி போயிட்டு பிறகு வருவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ;-)))))))))))

    ReplyDelete
  168. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் காலையில் தொடக்கம் தேம்ஸ்லதான் இருக்கிறேன்...:)))முருங்கை இலை எல்லாம் குளிருக்குக் கொட்டிட்டுது:))).

    போயிட்டு வருவம் எனப் போன மாயாவையும் காணேல்லை... சரி நானும் போயிட்டுப் பிறகு வருவம்.

    ReplyDelete
  169. இது கனவா அல்லது உண்மையில் நிஜமா... “மாப்பிள்ளை இவர்தான், பிடிச்சிருக்கோ” எனப் படம் காட்டியபோதே... அவரை நன்கு பிடித்திருந்தது..
    - ஏமாந்துராதீங்க படத்தைப்பார்த்து.

    ReplyDelete
  170. மை ஐ கம் இன் அக்கா,
    புதுப் பதிவு ஏதாச்சும் கிடைக்குமா?

    ReplyDelete
  171. வாங்கோ விச்சு, முதன்முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு மிக்க நன்றி.

    // ஏமாந்துராதீங்க படத்தைப்பார்த்து//

    நீங்க சொல்வது 100 வீதமும் உண்மையே. மின்னுவதெல்லாம் பொன்னல்லத்தான். புற அழகில் மயங்கிடக்கூடாது.

    ஆனா, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எவ்வளவு அழகானவர்களாக இருந்தாலும் எமக்கு, எல்லோரையும் பிடிப்பதில்லையே.

    அதுபோல, சிலரைப் பார்த்ததும்,அழகில் குறைவாயினும், மனதில் முகம் பதிந்துவிடுகிறது, ஒருவித விருப்பம் ஏற்பட்டுவிடுகிறது, எதிர்ப்பாலார் என்றல்ல நம்பாலாரோடும். அவை எல்லாம் என்ன.... அதுதான் ஏதோ பொருத்தம் என்பது.

    எண்ண அலைகள் ஒருமித்து வரும்போது, மனதில் விருப்பம், பிடிப்பு ஏற்பட்டுவிடுகிறது, மற்றும்படி அழகில் மயங்கியல்ல..... அதையே நான் இங்கு குறிப்பிட்டேன்.

    மிக்க நன்றி விச்சு... பெயரே வித்தியாசமாக இருக்கு, அதைவிட உங்க புளொக் தலைப்பு.. இன்னும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  172. அக்க அந்த நிகழ்ச்சி எனக்கும் ரொம்பப் பிடிக்கும் நான் கேட்கும் காலங்களில் பிற்பகல் 3.30 ற்கு அந்்த நிகழ்ச்சி போகும்..

    மீண்டும் அதே நினைவுகள்.. மிக்க நன்றி அக்கா..

    ReplyDelete
  173. கதைப்போக்கிற்கு ஏற்பான பாடல் தெரிவுகள்... அக்கா நீங்கள் ஒரு படம் எடுக்கலாம் போல இருக்கே..

    ReplyDelete
  174. ஆஹா... நிரூபனா.... வாங்கோ வாங்கோ கணவாய்ப்பிரட்டல் சமைக்கப்போகிறேன், இருந்து சாப்பிட்டுவிட்டுப் போகலாம்... இண்டைக்கு அம்மாட்டைச் சொல்லுங்கோ, உங்கட நீத்துப்பெட்டிப் புட்டு வாணாம் என:))).

    புதுத்தலைப்பு நேற்றுத்தொடக்கம் எழுத நினைக்கிறேன்.... முடியல்ல:(((, கிடைக்கும் நேரத்தில் எதத்தான் செய்வது.

    இப்பவும் வேளைக்கு முழிச்சிட்டேன், புதுப் பதிவை ரைப் பண்ணலாமே என்றுதான் எழும்பினேன், ஆனா பாருங்க... இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.. எல்லலாத்துக்கும் ரைம் என ஒன்று இருக்கெல்லோ... அது வரேக்கைதான் எல்லாம் நடக்கும்:))).

    ReplyDelete
  175. வாங்க மதிசுதா... நீங்க மீண்டும் வந்து பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க, நான் தான் உங்கள் பக்கம் வரத் தாமதாமகிட்டேன்போல, விரைவில் வருகிறேன்.

    //அக்க அந்த நிகழ்ச்சி எனக்கும் ரொம்பப் பிடிக்கும் நான் கேட்கும் காலங்களில் பிற்பகல் 3.30 ற்கு அந்்த நிகழ்ச்சி போகும்//

    ஓ... எனக்கு நேரம் நினைவில்லை.. சும்மா ஒரு கணிப்பில் 4.30 எனப் போட்டேன்:).

    //அக்கா நீங்கள் ஒரு படம் எடுக்கலாம் போல இருக்கே..//

    ஹா..ஹா..ஹா... எனக்கு இருட்டடி வாங்கித்தரப்போறீங்கபோல:))).

    இல்லை சுதா, இதுபோல, மிச்ச ஆட்களும் எழுதப்போகினம், அனைத்தையும், மாயா ரைடக்கராக வந்து, ஒருநாள் படமாக்குவார்.... 2012 க்குப் பின் தான் எதுவும் தெரியும்.

    எனக்குக் கரிநாக்காக்கும்... கரி நாக்கென்றால் சொல்றது பலிக்குமென்பார்கள்.

    நிரூபன் ஏதோ கண்ணூறு படுமெனச் சொன்னார்.. அப்படி நான் கேள்விப்படவில்லையே.

    மிக்க நன்றி மதிசுதா.

    ReplyDelete
  176. ஹா..ஹா..ஹா... எனக்கு இருட்டடி வாங்கித்தரப்போறீங்கபோல:))).

    இல்லை சுதா, இதுபோல, மிச்ச ஆட்களும் எழுதப்போகினம், அனைத்தையும், மாயா ரைடக்கராக வந்து, ஒருநாள் படமாக்குவார்.... 2012 க்குப் பின் தான் எதுவும் தெரியும்.

    எனக்குக் கரிநாக்காக்கும்... கரி நாக்கென்றால் சொல்றது பலிக்குமென்பார்கள்.//
    [im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/niz.png[/im]
    ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கப்பா... என்னம்மோ கருத்தை படிக்கும்போதே... பட்டாம்பூச்சிகள் பறக்கதுங்கோ... நட்சத்திரங்கள் மின்னுதுங்கோ... வெள்ளை கவுன் அனிந்த தேவதைகள் பின்னணியில் ஹம்மிங் பாடியபடியே ஆடிசெல்றாங்கோ... ஹய்யோ ஹய்யோ என்னால முடியலையே அவ்வ்வ்வ்
    [im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/nizhalgal.png[/im]
    இப்படியெல்லாம் கருத்தைப்போட்டு புல்லரிக்க வைக்காதிங்க.. இருப்பு கொள்ளல... அவ்வ்வ்வ்வ்
    மடை திறந்து தாவி வரும் நதி அலை நான்....
    [im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/nilal.png[/im]

    ReplyDelete
  177. வணக்கம் அதிரா..
    ஆகா அருமையா சொல்லி இருக்கீங்க இசையும் கதையும்.. நான் படலையில் அந்த ரேடியோ பெட்டிய கொலுவி வைச்சிட்டு சிவலயன குளிப்பாட்டிக்கொண்டு இசையும் கதையும் கேட்டது ஞாபகத்தில வருது.. அதுவும் ராஜாவின் குரல் இன்னும் என் காதுகளில்.. 

    ReplyDelete
  178. ஹா.ஹா..ஹா... என்னாச்சு மாயா?:))))... படம் பார்த்ததும் பாலைவனச் சோலைதான் நினைவுக்கு வருது...
    பட்டாம்பூச்சி எல்லாம் பறக்குதா, கண் மின்னுதா?:))) எனக்கும் கந்த சஷ்டி விரதமிருக்கேக்கை அப்பூடித்தான் மாயா மின்னும்:))) அது பெலயீனம்தான் காரணம் என அம்மம்மா சொல்லுவா... ஹையோ ஹையோ...

    முயற்சி திருவினையாக்கும்... மிக்க நன்றி மாயா... ஓல் த பெஸ்ட். எதுவும் நம் கையில் இல்லையே.

    ReplyDelete
  179. வாங்கோ காட்டான் வாங்கோ...

    இம்முறை நீங்க இன்னும் குழை போடவில்லையே என யோசித்தேன், கார்ட் பெட்டியில:))) ஏறிட்டீங்கள் சந்தோசம்.... இல்லையெனில் இந்த ரெயினை மிஸ் பண்ணியிருப்பீங்கள். இது போனாலென்ன அடுத்தது வரும்தானே:).

    //நான் படலையில் அந்த ரேடியோ பெட்டிய கொலுவி வைச்சிட்டு சிவலயன குளிப்பாட்டிக்கொண்டு இசையும் கதையும் கேட்டது ஞாபகத்தில வருது.. ///

    ஹா..ஹா..ஹா... சிவலயனுக்கு சம்போவும் போடுவீங்களோ?:)))... அதுசரி சிவலயனைக் குளிப்பாட்டுவதிலேயே உங்கட நேரம் போகுதுபோல, புளொக் தூசு தட்டாமல் இருக்குதே அவ்வ்வ்வ்வ்:)))).

    மியாவும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  180. என்னம்மா நான் பிளாக்க தூசு தட்டீட்டேனே பார்கலையா..?

    ReplyDelete
  181. athira said... 184
    ஹா.ஹா..ஹா... என்னாச்சு மாயா?:))))... படம் பார்த்ததும் பாலைவனச் சோலைதான் நினைவுக்கு வருது...//

    பாலைவனச்சோலை... இது நிழல்கள்... இசை இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவு சந்திரசேகருக்கு... ;-)))))))))))

    ReplyDelete
  182. பட்டாம்பூச்சி எல்லாம் பறக்குதா, கண் மின்னுதா?:))) எனக்கும் கந்த சஷ்டி விரதமிருக்கேக்கை அப்பூடித்தான் மாயா மின்னும்:))) அது பெலயீனம்தான் காரணம் என அம்மம்மா சொல்லுவா... ஹையோ ஹையோ...//

    உண்மையில் ஒரு வகை பலவீனம் தான்.. ஹா ஹா

    ReplyDelete
  183. மாய உலகம் (226)
    angelin (205)
    பரவாயில்ல தம்பிக்கு தான் ஃபர்ஸ்டு பிளேஸ் .

    ReplyDelete
  184. நிறைய ஆர்டர்ஸ் வந்திருக்கு ....பொரிவிளங்கா உருண்டைக்கு
    ஹா ஹா ஹா

    ReplyDelete
  185. ஆஹா... நிரூபனா.... வாங்கோ வாங்கோ கணவாய்ப்பிரட்டல் சமைக்கப்போகிறேன்//
    கர்ர்ர்ரர்ரர்ர்ர்ர் .அப்ப எனக்கு ?????????

    ReplyDelete
  186. மாயா ரைடக்கராக வந்து, ஒருநாள் படமாக்குவார்.//
    நாந்தேன் ப்ரடயுசர் படத்துக்கு

    ReplyDelete
  187. அமெரிக்க மியாவ் ஹீரோ
    ஆஸ்திரேலிய மியாவ் ஹீரோயின்

    ReplyDelete
  188. விண்வெளியில் ஷூட்டிங்

    ReplyDelete
  189. லொகேஷன் பாக்க ஒருத்தர் போயிருக்கார்

    ReplyDelete
  190. விளையாடல்ல ராஜேஷ் .நீங்க நிச்சயமா நல்ல ஒரு படம் எடுப்பீங்க
    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  191. :))) :))):))):)))
    197
    பொரிவிளங்கா உருண்டை

    ReplyDelete
  192. 198பொரிவிளங்கா உருண்டை

    ReplyDelete
  193. 199 பொரிவிளங்கா உருண்டை

    ReplyDelete
  194. வெற்றிகரமான 200 th பொரிவிளங்கா உருண்டை

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.