நல்வரவு_()_


Sunday 11 June 2017

"அந்தப்... பத்து மணி நேரங்களில்....:("

நான் எழுதப்போவது “என்பக்கத்துக்குச்” சொந்தமானது அல்ல:), இது “நம்ம ஏரியாவுக்கானது” [<-----இதில் கையை வச்சு, போய்ப் படிச்சிட்டு வாங்கோ]. ......ஆரம்பம் “ரோஜா” கேட்டார் கெள அண்ணன்:), கொடுத்த ரோசா வாட முன்பே.. விவாகரத்துக்குக் கதை எழுதச் சொல்லிட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா:). எனக்கு எதையும் உடனுக்குடன் செய்து பார்க்கத்தான் ஆசை, அதனால இது எழுதியவுடன் சுடச்சுட வெளியிடலாம் என்பதால், தலைப்புத் தராமல் முடிவைச் சொன்னவுடன் எழுதிட்டேன்:) அதிராவோ கொக்கோ.. சரி சரி நான் பாருங்கோ ரொம்ப அமைதி.. அதிகம் அலட்டமாட்டன்:) அதனால ஸ்ரெயிட்டா ரெயினில ஏறுவோமா?:).

 “யாழ்ப்பாணம்” ஸ்டேசனிலிருந்து ரெயின் புறப்பட ஆயத்தமாகிறது... விசில் சத்தம் கேட்கிறது.. வேர்க்க விறுவிறுக்க என்றுமில்லாத மாதிரி இன்று ஏதோ ஒரு டென்ஷன் நெஞ்சை உறுத்த.. ரெண்டாம் வகுப்புப் பெட்டியில் தாவிஏறி, தன் சீட் நம்பரைத் தேடியவாறே ரெயினுள்ளே நடக்கிறார்  “சுரேஸ்”..:).

ஆ... இங்கே இருக்கிறது 24 ம் நம்பர் சீட்... லக்கேஜை தூக்கி மேலே வைக்க கொஞ்சம் சிரமப்பட்டபோது, சடாரென எழுந்து உதவுகிறார் எதிர் சீட்டிலிருந்த சாணக்கியன்,    “நான்  “சாணக்கியன்”:), இவ என் மனைவி “மதி”..” அறிமுகம் செய்து வைக்கிறார் சுரேஸ் க்கு.

தியை நிமிர்ந்து பார்த்துக் ஹலோ சொன்ன சுரேஸ் இன் நெஞ்சில், யாரோ ஈட்டியால் குத்துவதுபோல ஒரு உணர்வு... ஆஆஆ.... வசூஊஊஊஊ.. என் வசுமதி...:(...  வசூஊ என அழைக்க வாய் திறந்தவர், ஓ இப்போ நீ  “மதி”ஆகிவிட்டாயா என நினைத்து அடக்கிக் கொண்டார்.
&&&&&&&&&&&&&&&&&&&&

ப்படி இருக்கிறாய் வசூ?.. நீ கோபமாக இருப்பாய்.. என்னை திட்டித்திட்டி வெறுத்திருப்பாய்.. அதில் தப்பில்லை வசூ..., 20 வருடங்களுக்கும் மேலாகி விட்டதே நாம் பிரிந்து, கடசியாக வெள்ளவத்தைக் ஹை கோர்ட்டில்..... நான் ஒரு வெற்றிப் புன்னகையோடும், இறுமாப்போடும் தான் பிரிந்தேன், அன்று நான் எதிர்பார்த்தபடியே விவாகரத்துக் கிடைத்ததும், நான் வென்று விட்டேன் எனும் திமிரோடுதான் வீடு சென்றேன் வசூ.

னால் உன்னை இழந்த பின்னர்தான் என் சுயபுத்தி வேலை செய்யத் தொடங்கியது, அதுவரை நான் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருந்து விட்டேன். உன்னை விரும்பித் திருமணம் முடித்துப் பத்து வருடங்களாகியும் நமக்குக் குழந்தை கிடைக்கவில்லை, இருவரிலும் எக் குறைபாடும் இல்லை என உறுதிப்படுத்திய பின்னரும்.. விதி விளையாடி விட்டது வசூ:(.

தனைக் காரணம் காட்டியே, என் அம்மாவும் சொந்த பந்தமும் உன்னை ஏளனம் செய்தார்கள், அப்போதுகூட நாமிருவரும் ஒற்றுமையாகத்தான் இருந்தோம்.. நீ எனக்கு எக்குறையும் வைக்கவில்லை வசூ....... ஆனால் அனைவரதும் திட்டுக்களையும்  ஏளனத்தையும் பொறுத்து வந்த நீ,  நானும் என் அம்மாவுடன் சேர்ந்து உன்னை உதாசீனம் செய்ய ஆரம்பித்தபோது, உன்னால் பொறுக்க முடியவில்லை.

நீயும் என்னோடு சண்டை போடத் தொடங்கினாய், நிறைய வாய் காட்டினாய், பிரச்சனை அதிகமானது, என் அம்மாவின் தூண்டலுக்கு ஆளாகிய நான் விவாகரத்துக்கு முடிவெடுத்தேன்.. “அன்றிலிருந்து அணிலை மரமேற விட்டு விட்ட நாய் போலானேன்”:(.

னக்கு இன்னொரு திருமணம் முடித்து வைக்கும் எண்ணத்துடன் இருந்த அம்மாவும் திடீரென சுகயீனமாகி விட்டா. எனக்கோ உன்னைத் தவிர வேறு பெண்ணை கற்பனை பண்ணக்கூட முடியவில்லை, நீ என்னோடு இருந்த போது உன் அருமை தெரியவில்லை வசூ..:(.

0000000000000000000000000000000000இடைவேளை0000000000000000000000000000000000
டைவேளை விடோணும் நிட்சயம் என,சகோ நெல்லைத்தமிழன் சொல்லியிருக்கிறார்:).. அதனால இங்கு மட்டுமில்லை என் புளொக்குக்கும் இடைவேளை விடப்போகிறேன்ன் ஹா ஹா ஹா:)..
எங்களுக்கு இன்னும் இரண்டு கிழமையில் சமர் ஹொலிடேய்ஸ் ஆரம்பமாகிறது... அந்தாட்டிக்கா பயணமாகிறோம் என்பதனால்.. அநேகமாக இதுவேதான் இப்போதைய என் கடசிப் பதிவாக இருக்கும் என நினைக்கிறேன்ன்..[ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூ இதுக்கெல்லாம் அழக்கூடா ஓக்கே?:).. கண்ணைத் துடைங்கோ:)ஹா ஹா ஹா.]. சொல்லாமல் போனால் தேடுவீங்களெல்லோ அதனால்தான் சொல்கிறேன்.. பின்னர் முடியும்போது லிங் இணைத்திருப்போருக்கு வோட் போட மட்டுமாவது முயற்சிக்கிறேன்ன். இல்லையெனினும் குறையோ கோபமோ கொள்ளாதீங்கோ:).. 

அதிரா இல்லை.. கிளவி வெரி சோரி கேள்வி கேய்க்க ஆள் இல்லை எனும் தெகிரியத்தில் ஓவரா துள்ளப்பிடா ஜொள்ளிட்டேன்ன்ன்:).
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

முதன் முதலில் உன்னை நான் சந்தித்ததும் இந்த “யாழ்தேவி” இல் தான் [ரெயினின் பெயர்]. விவாகரத்தின் பின்னர், உன்னை ஒரு தடவையாவது பார்த்துவிட மாட்டேனா எனும் தவிப்பிலேயே பலநாள் இதில் பயணம் செய்திருக்கிறேன்.

 “றேஸ்.. றேஸ்ஸ்” என செல்லமாக அழைத்தபடி என்னையே சுற்றிச் சுற்றி வந்த உன்னை, நான் என் திமிராலும், அவசர புத்தியாலும் இழந்து விட்டேனே.

ன் கணவர் மிகவும் நல்லவராகத்தான் தெரிகிறார்.  உன்னைச் சந்தோசமாக வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. நீ கொஞ்சம் குண்டாகி விட்டாய் வசூ.. வயதாகியும் உன் தலைமயிர் நரைக்கவில்லையே... டை அடித்திருக்கிறாயோ?:)....

காட்டாற்று வெள்ளம் போல தறிகெட்டுப் பாய்ந்த என் கற்பனையைத் தட்டி நிறுத்தியது... “எங்கே போகிறீர்கள்?” எனும் சாணக்கியனின் கேள்வி. திடுக்கிட்டவர் போல நிமிர்ந்து, அவரோடு பேசத் தொடங்கினார் சுரேஸ்.
&&&&&&&&&&&&&&&&&&&&

சுமதி, பின் பக்கமாக சீற்றில் சாய்ந்து, நித்திரை போலக் கண்களை மூடிக் கொண்டா, ஆனா காதுகளை அகலத் திறந்திருந்தா.

நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்?..
ங்களை உயிராக நினைத்து நம்பி வந்த என்னை மிகவும் கேவலப்படுத்தி, விவாகரத்துத் தந்து அனுப்பி விட்டீர்களே!!.., இனி சாகும்வரை தப்பித்தவறிக்கூட உங்களை எங்கேயும் பார்த்திடக்கூடாது என இருந்தேனே.... திருமணமாகிக் குழந்தைகளோடு இருப்பீங்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்... இப்படி நரைத்த தலையும்... சோகமான முகமும்... வழிக்கப்படாத தாடியுடனும் இருப்பீங்கள் என நினைத்திருக்கவில்லை. நான் முன்பை விட அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் சுரேஸ்.
&&&&&&&&&&&&&&&&&&&&

சாணகியனுக்கு வசூவின் பழைய கதை தெரிந்திருக்கிறது ஆனால் என்னைத் தெரிய வாய்ப்பில்லை. நான் வசுவைக் காட்டிக் கொடுக்காமல் என் வாழ்க்கைக் கதையை சாணக்கியனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்...

சு என்னோடு எப்படி வாழ்ந்தா என்பதையும், வசுவின் குணங்களையும் சொல்லச் சொல்ல.... அவரும், “மதியும் அப்படித்தான் என ஒப்பிட்டுக் கொண்டிருந்தார்”... வசுதான் மதி என்பதை அறியாமல்:(.
&&&&&&&&&&&&&&&&&&&&

ன்றுவரை நான் நினைத்திருந்தேன், நீயும் என்னைப்போல தனியாளாகவே இருப்பாய் என, உனக்கு இப்போ இரு பெண் பிள்ளைகளாமே வசு, யூனிவசிட்டியில் படிக்கிறார்களாமே...  நான் அவசரம்பட்டு விட்டேன் வசூ.. அவசரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்பார்கள்.. நான் ஆத்திரக்காரனும் கூட.
 “அறுந்த பட்டமும் ஆத்திரக்காரனின் பேச்சும்...... ” ,- என்றார் கண்ணதாசன்.. என் முடிவோ விவாகரத்துக்கு வழி வகுத்து விட்டதே:(...
&&&&&&&&&&&&&&&&&&&&

ல்லாம் முடிந்து விட்டது சாணக்கியன், வசுவைத் தொலைத்தபோதே என் வாழ்க்கை இருண்டு விட்டது... இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வரக்கூடும் என் வாழ்க்கை.. எதுக்கும் விடியட்டும் எனக் கொஞ்ச எதிர்பார்ப்போடுதான் காத்திருந்தேன், ஆனா இனி விடியாது எனத் தெரிந்து விட்டது... இதோ என் ஸ்டேசன் வந்து கொண்டிருக்கிறது... இறங்கப் போகிறேன், இனிமேல் இந்த யாழ்தேவியில் நான் ஏறப்போவதில்லை:(...
ந்தப் பத்து மணி நேரப் பயணத்தில், உங்களோடு பேசக் கிடைத்தது, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத (துன்பமான) மகிழ்ச்சி..... “நான் விடை பெறுகிறேன்”... என்று சொல்லிக்கொண்டே ஒரு தடவை கடசியாக என் வசுவை... வெரி சோரி.. சாணக்கியனின் மதியை உற்று நோக்கினேன்...

துவரை ஆழ்ந்த உறக்கம்போல இருந்த வசுவின் கண்களில், கண்ணைத்திறக்காமலே ....கண்ணீர் வடிந்ததைப் பார்த்தேன்.....

ரு நண்பனைப் பிரியும் ஏக்கத்தோடு.. ஏனோ தெரியவில்லை சாணக்கியனின் கண்களும் ஈரமாகின.....
&&&&&&&&&&&&&&&&&&&&
நான் போகிறேன் வசு...
ண்களை மூடமுன் ஒரு தடவையாவது உன்னைப் பார்த்து விட வேண்டும் என எண்ணினேன்.. அது கிடைத்து விட்டது... இந்தப் பாவியை மன்னித்துவிடு.. என மனதில் எண்ணிக்கொண்டே, இரும்பாக்கிய இதயத்தோடும்... வற்றிய கண்களோடும்.. விடை பெற்றேன்.....
என் சோகம் பார்த்துப்  " பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள்." 

நன்றி..  இக் கற்பனைக் கதையை உங்களுக்காக ஒரு இரவினுள் எழுதியவர்.. பேராசிரியர்.. கதாசிரியர்.. இலக்கியவாதி அதிரா அவர்கள்:).. எதுக்கு இப்போ முறைக்கிறீங்க கர்:)

இங்கின ஒரு விசயம் சொல்லியே ஆகோணும்.. கெள அண்ணன் கதை எழுதச் சொல்லி முடிவு வசனம் சொன்னபோது, முடிவில் பொங்கிவரும் கண்ணீர் வசுமதிக்கும் சுரேஸ் க்கும் எனத்தானே எதிர்பார்த்தீங்க?:).. நான் சகோ ஸ்ரீராம் சொல்வதைப்போல முடிவில் ட்டுவிஸ்ட்[இப்பூடித்தான் சொல்லோணுமாம் நெ.தமிழன் சொல்லியிருக்கிறார்:)] வச்சிட்டனே:).....

ஊசிக்குறிப்பு:
மையல் ரெசிப்பி போடுவதில் செலவிடும் நேரத்தில் ஏதும் கதை எழுதலாமே, நீங்க நன்றாகக் கதை எழுதுறீங்க [எதுக்குப் புகையுது கிழக்கால வடக்கால எல்லாம் கர்:)] என சகோ நெல்லைத்தமிழன் ஒருநாள் கொமெண்ட் போட்டார்ர்... எழுதுவேன் என வாக்குக் கொடுத்திருந்தேன், ஆனா சந்தர்ப்பம் கிடைக்கவில்லை... எழுதாமலேயே இடைவேளை எடுத்து விடுவேனோ.. சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ எனக் கவலைப்பட்டேன்.. அக் கவலையைத் தீர்க்கும் முகமாக, கெள அண்ணன்  “முடிவு வசனம் கொடுத்ததும்”.. அவசரமாக எழுதி முடிச்சேன்ன்.. இப்போதான் மனதுக்கு நிம்மதியாகவும் இருக்கு.

ஊசி இணைப்பு:
================================================================================
டமில் மணத்தில் வோட் போட ஆவலோடு 
வந்து கொண்டிருக்கும் உங்களுக்காக 
================================================================================
கிடைச்சிட்டுதூஊஊஊஊஊ:).


164 comments :

  1. நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊ. வோட் போட முயற்சித்தேன், முடியலை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் நீங்கதான் இன்றும் 1ஸ்ட்டூஊஊஊ வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... உங்கள் கொமெண்ட்டின் பின்னர்தான் டமில்மணத்தில் இணைச்சேன்:).

      Delete
  2. முதல் வோட் போட்டுட்டேன். ஆனாக்க சுத்திக்கிடே இருக்குது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இன்று அதுக்கு தலை சுத்துதுதான்:) சுத்தட்டும் நீங்க பெரீய டாக்கி டவல்(உங்கட பாஷையில்..) எடுத்து வச்சுக்கொண்டு, கதையைப் படிங்கோ...கண் துடைச்சுச் துடைச்சு:).. சோகக் கதை எல்லோ எழுதி இருக்கிறேன்:).

      Delete
  3. ஆஹா சூப்பர் சூப்பர் கலக்கிட்டீங்க அதிரா! வெரி குட்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கெள அண்ணன் வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. மிக்க மகிழ்ச்சி மிக்க சந்தோசம்.. மிக்க நன்றி.

      என் புளொக் வழக்கப்படி 2 வதா வருவோருக்கு எங்கட சமையல் ஆயாவைப் பரிசாகக் கொடுப்பது வழக்கம்:). இம்முறை நாம் ஹொலிடே போக இருப்பதால்.. ஆயாவை யாரிடம் ஒப்படைக்கலாம் எனக் குழம்பியிருந்தேன்:) கரெக்ட்டா நீங்க வந்திருக்கிறீங்க.... ஆயாவைப் பத்திரமாகக் கூட்டிச் சென்று கவனமாப் பார்த்துக் கொள்ளுங்கோ கெள அண்ண்ன்.. நெம்ம்ம்ம்பி ஒப்படைக்கிறேன்ன்.. என்ன ஒன்று அவவுக்கு காது கேளாது:).. இருமல் காச்சல் வேறு.. ஏசி ஒத்துக்காது:) ஆயா பத்திரம்:)..

      ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றி கெளை அண்ணன்.

      Delete
    2. ஹா ஐயோ ஆயா ! நான் கட்டிலுக்கடியில் மறைந்துகொள்ள ஓடிகிட்டு இருக்கேன்!

      Delete
    3. haaaahaaaa :)

      //கெளை அண்ணன்//

      haiyo spelling mistake

      //

      Delete
    4. ஹா ஹா ஹா கெள அண்ணன்.. ஆயாவையும் கையோட கூட்டிக்கொண்டே ஓடுங்கோ:) அவ பாவம் என்ன பண்ணுவா?:)

      Delete
    5. ///AngelinSunday, June 11, 2017 4:11:00 pm
      haaaahaaaa :)

      //கெளை அண்ணன்//

      haiyo spelling mistake//

      ஹா ஹா ஹா கர்ர்:) அது எப்படியோ கெ ளை ஆகிடுது கர்ர்ர்:).

      Delete
  4. Replies
    1. யேச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:) என்ன தேம்ஸ்ல குதிச்சாச்சாஆஆஆஆஆ?:) தற்கொலை முயற்சியாஆஆஆஆஆஆஆ வாணாம் அஞ்சூஊஊஊஊ வாணாம்ம்ம்ம்ம்ம்... நான் இருக்கேன்ன்ன்ன்ன்ன்:) வந்திடுங்க:).. ஹா ஹா ஹா வாங்க அஞ்சு வாங்கோ:).

      Delete
  5. ஆங்காங்கே போட்டுள்ள நோட்டுக் குறிப்புகள் simply superb.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கெள அண்ணன், அந்த என்கலெக்‌ஷன் குறிப்புக்களை மனதில் கொண்டே, அதுக்கேற்றதுபோல எழுதி முடிச்சேன்.. மிக்க மிக்க நன்றிகள்... நீங்க இங்கு வரமாட்டீங்க.. கூப்பிட வேணும் என நினைச்சேன்ன்ன்...

      வந்திட்டீங்க மிக்க நன்றி.. அதுசரி வோட் போட்டனீங்களோ?:) சரி சரி பறவாயிலை இருக்கட்டும்:) ஹா ஹா ஹா:).

      Delete
  6. thamizmanam

    இடுகைத்தலைப்பு:
    "அந்தப்... பத்து மணி நேரங்களில்....:("

    மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.

    சன்னலை மூடு

    இதுவேறு இலவச இணைப்பாக ............... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்கள் வோட்ட் சேர்க்கப்பட்டு விட்டது கோபு அண்ணன்.. மிக்க நன்றி.

      ///இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

      VaiGopalakrishnan athiramiya cherubcrafts@gmail.com

      சன்னலை மூடு

      Delete
  7. அடியிலிருந்து மேலே போகலாமான்னு நினைச்சேன்.

    ஊசி இணைப்பு ஜோர் ஜோர் !

    கையில் கோலெடுத்தால் மட்டுமே குரங்கு ஆடுமோ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்கும் அஞ்சுவின் பயக்கம்:) ஒட்டிவிட்டதுபோலும்...

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பெண்ணைக் குரங்கென ஒப்பிட்டமைக்காக கோபு அண்ணனுக்கு எதிரா அனைத்துப் பெண்களும் பொயிங்கப் போகினம்:) எனக்கு வோட் பண்ணிய காரணத்தால் நான் காக்கா போயிடுறேன்:).

      Delete
    2. ஒரு பெண்ணைப் பார்த்து கண்ணடிப்பவனையும்,
      அதற்கு மயங்காத அவளைக் கட்டையை எடுத்து பலமாக அடித்து மயங்க வைப்பவனையும்,

      இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த துணிச்சல் இல்லாத அந்தப்பெண்ணையும்

      வேறு எப்படி ஒப்பிடுவதோ?

      Delete
    3. தாய்க்குலத்திற்கு தலை குனிவு ஏற்படுத்தும் இது போன்ற ஜோக்குகளை ஊசி இணைப்பாக இங்கு வெளியிட்டுள்ள தங்களுக்குக் கண்டனங்கள் தெரிவித்து, அனைத்துப் பெண்களுடனும் நானும் சேர்ந்து பொயிங்கிப்போய் கண்டிக்க இருக்கிறேன். ஜாக்கிரதை.

      Delete
    4. ஹா ஹா ஹா கோபு அண்ணன்.. பெண்கள் பொயிங்கப்போகினம் எனப் பயந்து சட்டுப்புட்டெனக் கட்சி மாறிட்டீங்க பாருங்கோ கர்ர்ர்:).. இதிலெங்கே இருக்கு தாய்க்குலத்துக்கு தலை குனிவு:)..

      இப்பூடி ஏதும் அநியாயம் அட்டூழியம் செய்தால் ஒளிய:)சே..சே.. ஒழிய:) நம்மை ஆரும் கண்ணை மூக்கைக் காட்டி மயக்கிட முடியாதூஊஊஊஊஊ தெரியுமோ?:).. பிழையாப் பிழையா விளங்கி வச்சிட்டுச் சண்டைக்கு வாறார்ர் கர்ர்ர்:)..

      Delete
  8. //இக் கற்பனைக் கதையை உங்களுக்காக ஒரு இரவினுள் எழுதியவர்.. பேராசிரியர்.. கதாசிரியர்.. இலக்கியவாதி அதிரா அவர்கள்:)//

    பேராசிரியர் .... கதாசிரியர் .... இலக்கியவாதி .... அதிரா அவர்களுக்கு என் மனம் நிறைய இனிய பாராட்டுகள். [முறைக்கலே .... உண்மையிலேயே மனம் திறந்து சொல்லியுள்ளேன்]

    ReplyDelete
    Replies
    1. [im]https://sep.yimg.com/ay/yhst-94387763560218/thank-you-from-the-cat-card-14.jpg[/im]

      Delete
  9. ஆங்காங்கே கதைக்குப் பொருத்தாகக் காட்டியுள்ள டைரி குறிப்புகள் எல்லாமே பிரமாதமாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. மியாவும் நன்றி கோபு அண்ணன்... அதனை படமெடுத்து கட் பண்ணி பெயர் போட்டு (இல்லாட்டில் களவெல்லோ போகுது கண்டநிண்டபடி) இங்க இணைக்கவே நிறைய நேரமாச்சு:)

      Delete
  10. யாழ்ப்பாணம் & JAFFNA இரண்டுமே ஒன்றுதான் என இந்தத்தங்களின் பதிவின் மூலம் மட்டுமே நான் தெரிந்துகொண்டேன்.

    இதுவரை அங்கு நான் போனதே இல்லை. மிகப்பெரிய சைஸ் யாழ்ப்பாணம் தேங்காய்கள்
    என்றால் மிகவும் பிரபலம் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓ இன்றுதான் தெரியுமே... இன்னொரு பெயரும் இருக்கு.. அது சிங்களப் பெயர்.. யாபனய:).. அதுதான் முதலாவதாக சிங்கள எழுத்துக்களில் இருக்கு.

      நானும் எங்கோ கேள்விப்பட்டதாக நினைவு.

      Delete
  11. தலைப்பும், கதையும், கதையின் கருவும், அதனைத் தாங்கள் எழுதியுள்ள எழுத்து நடையும் மிகவும் சூப்பரோ சூப்பராக உள்ளன.

    மிகவும் உணர்ச்சி வசப்பட்டு படித்தேன். கண் கலங்கித்தான் போச்சுது.

    வசுமதியைப்போய், வசுவாகவும் மதியாகவும் இப்படி அக்கக்காக இரண்டாக டாராகக் கிழித்து, சுரேஸும், சாணக்கியனும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டு மகிழ்ந்துள்ளனர் போலிருக்குது.

    சாணக்கியனின் சாணக்கியத்தனம் தெரியும்படி எழுதியுள்ளதில் தங்களின் சாணக்கியத்தனத்தினை என்னால் நன்கு உணரமுடிந்தது. சபாஷ் !

    ReplyDelete
    Replies
    1. ///மிகவும் உணர்ச்சி வசப்பட்டு படித்தேன். கண் கலங்கித்தான் போச்சுது.///

      ஹா ஹா ஹா மிக்க நன்றி, உண்மையைச் சொன்னாலென்ன.. நானே எழுதிப்போட்டு.. பின்பு நானே படிச்சு அழுகிறேன்ன்ன் ஹா ஹா ஹா:) அவ்ளோ லூஸு நான்:).

      அனைத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்.

      Delete
    2. //ஹா ஹா ஹா மிக்க நன்றி, உண்மையைச் சொன்னாலென்ன.. நானே எழுதிப்போட்டு.. பின்பு நானே படிச்சு அழுகிறேன்ன்ன் ஹா ஹா ஹா:) அவ்ளோ லூஸு நான்:).//

      அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ அதிரா.

      நீங்க உண்மையிலேயே இந்தக் கதையை மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.

      உங்களிடம் எழுதுவதற்கு நிறைய ஸ்பெஷல் டேலண்ட்ஸ் உள்ளன. அதனை இந்தக்கதையின் மூலம் மட்டுமே முதன்முதலாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

      தொடர்ந்து இதுபோல யோசித்து நிறைய சிறுகதைகள் எழுதுங்கோ, ப்ளீஸ்ஸ்.

      மன மகிழ்ச்சியுடன், மனம் திறந்து, நான் சொல்லியுள்ளேன்.

      என்றும் அன்புடன் கோபு அண்ணன்

      Delete
    3. //உன் கணவர் மிகவும் நல்லவராகத்தான் தெரிகிறார். உன்னைச் சந்தோசமாக வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. நீ கொஞ்சம் குண்டாகி விட்டாய் வசூ.. வயதாகியும் உன் தலைமயிர் நரைக்கவில்லையே... டை அடித்திருக்கிறாயோ?:)....//

      இதனைக்குறிப்பிட்டு நான் மிக விஸ்தாரமாகப் பாராட்ட நினைத்தேன்.

      ஏனோ அவசரத்தில் விட்டுப்போய் விட்டது.

      இந்த வரிகளில் தான் இயல்பான நகைச்சுவையுடன் கூடிய கதாசிரியர் .... பேராசியர் .... இலக்கியவாதி .... அதிரா அவர்கள் நிமிர்ந்து ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆக நிற்கிறார்.

      என் ஸ்பெஷல் பாராட்டுகள் ..... அதிரா !

      Delete
    4. //உங்களிடம் எழுதுவதற்கு நிறைய ஸ்பெஷல் டேலண்ட்ஸ் உள்ளன. அதனை இந்தக்கதையின் மூலம் மட்டுமே முதன்முதலாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ///

      வாங்கோ கோபு அண்ணன்... இதுக்கு முன்னரும் நான் சில கதைகள் இங்கு எழுதியிருக்கிறேனே.. நான் எழுதும் கதைகள் எனும் லேபலில்.. [இங்கு வலது பக்கம் பார்த்தால் கிடைக்கும்] சிலது எழுதியிருக்கிறேன்ன்.. மற்றும் இசையும் பூஸும் எனும் லேபலிலும் எழுதியுள்ளேன்ன்..

      மிக்க நன்றி.

      Delete
    5. /இந்த வரிகளில் தான் இயல்பான நகைச்சுவையுடன் கூடிய கதாசிரியர் .... பேராசியர் .... இலக்கியவாதி .... அதிரா அவர்கள் நிமிர்ந்து ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆக நிற்கிறார்.

      என் ஸ்பெஷல் பாராட்டுகள் ..... அதிரா !///

      ஆங்ங்... பார்த்தீங்களோ இன்றுதான் நீங்க உண்மையை ஒத்துக் கொண்டிட்டீங்க சுவீட் 16 எனும்:)... ஆனாலும் நீங்க இதைச் சொல்ல்ல ரொம்ப ரைம் எடுத்திட்டீங்க:).. உடனேயே சொல்லியிருந்தால்ல்.. இதை அஞ்சு படிச்சு தேம்ஸ்ல குதிச்சிருப்பாவெல்லோ:).. இப்ப பாருங்கோ.. படிச்சாவோ இல்லையோ எனக்கூட மீக்குத் தெரியாமல் போயிடப்போகுதே:).. ஹா ஹா ஹா:).. மியாவும் நன்றி கோபு அண்ணன்.

      எனக்கு என்னை ஆரும் புகழ்ந்தால் “சந்தோசம்”..:),
      திட்டினால்ல்.... “அதைவிடச் சந்தோசம்”...:) ஹா ஹா ஹா இது என் கணவரின் ரேட் மார்க் வசனமாக்கும்:)...

      கணவர் அடிக்கடி சொல்லிச் சிரிப்பார்ர்ர்ர்... ஆரையாவது வீட்டுக்கு பார்ட்டிக்கு அழைக்கும்போது சொல்லோணுமாம்... “நீங்க வந்தால் சந்தோசம்... வராவிட்டால் அதைவிடச் சந்தோசம் “ என ஹா ஹா ஹா:).

      Delete
    6. ///வசுமதி, பின் பக்கமாக சீற்றில் சாய்ந்து, நித்திரை போலக் கண்களை மூடிக் கொண்டா, ஆனா காதுகளை அகலத் திறந்திருந்தா.//

      இந்த வரிகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அதனைப் புகழ்ந்து நான் சொல்ல நினைக்கும் முன்பு நம் அஞ்சுவே சொல்லிட்டாங்கோ. :)))))

      Delete
    7. Garrrrr நான் எதனையும் படிக்க வில்லை

      Delete
    8. ///வை.கோபாலகிருஷ்ணன்Wednesday, June 14, 2017 12:28:00 pm
      ///

      இந்த வரிகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அதனைப் புகழ்ந்து நான் சொல்ல நினைக்கும் முன்பு நம் அஞ்சுவே சொல்லிட்டாங்கோ. :)))))///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க 1ஸ்ட்டா வந்திருந்தாலும்.. 1ஸ்ட்டாச் சொல்ல முடியல்லயே உங்களால:) ஹா ஹா ஹா:).

      Delete
    9. AngelinWednesday, June 14, 2017 12:30:00 pm
      Garrrrr நான் எதனையும் படிக்க வில்லை
      /////////

      haa haa haa:)

      [im]http://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20170217094318.jpg[/im]

      Delete
  12. வாய்விட்டுச் சிரிக்கும்படி எழுதும் பூஜாப் பெண்ணே, மனம் கரைந்து உருகும்படியாகவும் எழுதுகிறாயே!

    எழுது...எழுதிக்கொண்டே இரு. ஒரு நாள் உச்சம் தொடுவாய்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசி ஜி வாங்கோ. போஸ்ட் பார்த்தவுடன் ஓடி வந்து, வந்த வேகத்தில் வோட்டும் போட்டமைக்கு முதலில் மிக்க நன்றி.

      //வாய்விட்டுச் சிரிக்கும்படி எழுதும் பூஜாப் பெண்ணே, மனம் கரைந்து உருகும்படியாகவும் எழுதுகிறாயே!//

      ஹா ஹா ஹா உண்மைதான் எனக்கும் ஒருமாதிரி இருந்துது.. ஓவர் சோகம் ஆகிடுமோ என.. :)..

      அனைத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  13. கதை ஸூப்பர். முதல் ஆளாக வேகமாக எழுதி விட்டீர்கள். சபாஸு!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...
      உண்மைதான் நேற்று நைட்டே எழுதிவிட்டேன் சூட்டோடு சூடாக.. அதில் இன்னொரு விசயம் இருக்கு என்னவெனில்.. எழுதி அனுப்பி விட்டுக் காத்திருப்பதாயின் இவ்ளோ வேகம் எடுத்திருக்க மாட்டேன்ன்.. எழுதுவமே என விட்டிருப்பேன்.

      இது என் பக்கம் போடலாம் எனச் சொன்னமையால் சூட்டோடு சூடாகப் போட எழுதிவிட்டேன்..

      Delete
  14. ட்ட்ட்டுவிஸ்ட் பார்த்து திகைத்தே போனேன். நிசம்மா.... நம்புங்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எப்பூடி எனக்கும் ட்டுவிஸ்ட்:) வச்சு எழுத வருகிறதே.. ஆனா முதலில் கதையை மனதில் கற்பனை பண்ணினேன், பண்ணும்போது இப்படி ட்டுவிஸ்ட் வரவில்லை.. ஆனா ரைப் பண்ணும்போதுதான் சடாரெனத் தோன்றியது வச்சிட்டேன்ன்ன் ட்டுவிஸ்ட்:) ஹா ஹா ஹா:).

      Delete
  15. கதை படிக்கும் சுவாரஸ்யத்தில் நடுநடுவே வந்த குறிப்புகளைக் கூட முதலில் கவனிக்கவில்லை. அப்புறம் தனியாக வாசித்தேன். ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான், அதனால்தான் இடைவேளையைப் போடும்போதும் யோசித்தேன், படிக்கும் ஃபுளோவை மாத்திடுமோ என:).. மிக்க நன்றி.

      Delete
  16. முதல்முறையாக கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை வைத்து மொபைலிலிருந்து தமிழ்மணம் வாக்களித்தேன். எவ்வளவு ஈஸி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், ஆனா ஒரு ரகசியம் சொல்லட்டோ?:).. சரி வாணாம்ம்......

      ஹா ஹா ஹா உண்மைதானே.. எவ்ளோ ஈசி..மிக்க நன்றி.

      Delete
  17. ஓ.... லீவுல போறீயளா? எம்புட்டு நாள்? எப்ப திரும்பி வருவீக?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இம்மாதக் கடசி வெளிக்கிட்டு.. ஓகஸ்ட்டில் திரும்பிடுவோம்:)..

      அனைத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  18. //அதிரா இல்லை.. கிளவி வெரி சோரி கேள்வி கேய்க்க ஆள் இல்லை எனும் தெகிரியத்தில் ஓவரா துள்ளப்பிடா ஜொள்ளிட்டேன்ன்ன்:)//

    டங்க் ஸ்லிப்பானாலும் அவ்வப்போது உண்மைகள் வெளிப்படத்தான் செய்கிறது. :)

    ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ என்பது 'கிளவி’யானதை நான் சொல்றேனாக்கும் என தயவுசெய்து நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. haaaahaaaaaaaaaaaaa :)
      welldone keep it up annaa

      Delete
    2. ///’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ என்பது 'கிளவி’யானதை நான் சொல்றேனாக்கும் என தயவுசெய்து நினைக்க வேண்டாம்.///

      சே..சே..சே கோபு அண்ணன் உங்களைப்போய்த் தப்பா நினைப்பேனோ?:).. அந்த வைரம் முழுவதையும் வாங்கி முடிகும் வரை:) உங்களோடு சண்டையே போடமாட்டேன்ன்ன்:)..

      ///AngelinSunday, June 11, 2017 4:13:00 pm
      haaaahaaaaaaaaaaaaa :)
      welldone keep it up annaa///
      பாருங்கோ கீப் இட் மேலயாம்:) உங்களுக்கும் சப்போர்ட்டுக்கு ஆட்கள் இருக்கினம் என்பது, இப்பூடி என் டங்கு ஸ்லிப் ஆகுவதனால்தான் கண்டு பிடிக்க முடியுது கர்ர்ர்:)

      Delete
  19. த ம போட்டாச்சு. கதை ரொம்ப விரைவா எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். நானும் கதை எழுத ஆரம்பிச்சு, பாதி வந்திருக்கேன்.

    1. ஏழனம் - ஏளனம்
    2. யாழ்தேவி - 10 மணி நேரப் பிரயாணமா?
    3. வசுமதியின் இரு பெண்களும் பல்கலைக்கழகத்தில் படிப்பது இவருக்கு எப்படித் தெரிந்தது?

    ரொம்ப நாளைக்குக் காணாமல் போகாதீங்க. உங்க மிஸ்டேக்லாம் பார்த்துத்தானே தமிழை மறக்காமல் இருக்க முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நான் கொஞ்சம் பிசியா இருந்தேன் ஆனாலும் தாங்ஸ் :) நெல்லை தமிழன்

      Delete
    2. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ... உண்மைதான், நேற்று முழுக்க அஞ்சு திட்டிக்கொண்டிருந்தா, நான் புளொக் எழுதுவதைக் குறைக்கிறேனாம் என... :) கர்ர்:)..

      அப்போ கெள அண்ணனின் ககககா கதை படிச்சதும் .. உடனே என் டயறிக் குறிப்புக்களும் நினைவு வர, சூட்டோடு சூடாக எழுதிட்டேன்:).

      நீங்க எழுதுறேன் எனச் சொல்லியே இப்போ 2 மாதத்துக்கும் மேலாகிட்டுது:) விரை எழுதி அனுப்பிடுங்கோ:) சீதை ராமனை மன்னிச்சதைப் பற்றித்தானே சொல்றீங்க? இல்ல நேற்று எழுதத் தொடங்கினனீங்களோ? அப்படியாயின் விரைவில் அனுப்புங்கோ..

      Delete
    3. ///1. ஏழனம் - ஏளனம்//

      ஹையோ ஆண்டவா... அது உந்த ள போட்டுப் பார்த்தேன்ன் ஊஹூம் பொருந்துவதுபோல கண்ணுக்கு தெரியல்ல அதனால ழ போட்டேன்ன்.. ஆனா ஸ்ரீராம் காக்கா போயிட்டார்:).. அப்போ நினைச்சேன்ன் மீ போட்டது கரிட்டுத்தான் என ஹா ஹா ஹா:).. இனி மாத்தி விடுறேன்:).

      Delete
    4. ///2. யாழ்தேவி - 10 மணி நேரப் பிரயாணமா? //

      ஹா ஹா ஹா ஹையோ அது எப்பூடி உங்களுக்குத் தெரியும்?:) இலங்கையில் வேர்க் பண்ணியிருக்கிறீங்களோ?..

      அது எப்படி எனில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் போவதுதான் யாழ்தேவி ரெயின். ஆனா அதன் கடசி 2,3 கொம்பாட்மெண்ட்கள் என நினைக்கிறேன்.. அவை கிழக்கு மாகாணம் போகும். அப்போ இந்த யாழ்தேவி என்ன பண்ணுமெனில், புறப்பட்டுப் போய், ”மாகோ” என ஒரு பெரிய ரெயின் சந்தி இருக்கு.. பெரும்பாலும் அனைத்து ரெயின்களும் அங்கு போய்த்தான் .. போகும்.

      அந்த சந்திக்குப் போய் ஒரு மணித்தியாலம் மட்டில் நிக்கும் ரெயின். அப்போ கொம்பாட்மெண்ட் மாறி ஏறியோர் எல்லாம், மாறிக்கொள்ளலாம். கிழக்கே போகவெனில்...சரியான கடசி 3 கொம்பாட்மெண்ட்களில் ஏறியோர் நிம்மதியாக அப்படியே நித்திரை கொள்ளலாம்.

      இந்த யாழ்தேவி என்ன செய்யுமெனில், அந்த கடசி 3 கொம்பாட்மென்ட்களை.. அப்படியே மாகோவில் கழட்டி விட்டிட்டுக் கொழும்புக்குப் போய் விடும்.

      பின்னர் கொழும்பில் இருந்து ஒரு ரெயின் கிழக்கு நோக்கி வரும் அதுக்குப் பெயர் “கிஜ்றா” என நினைக்கிறேன்.. அது மாகோவுக்கு வந்து, இவ கழட்டி விட்டிட்டுப் போன:) இந்த 3 பெட்டிகளையும் கொழுவிக்கொண்டு.. கிழக்கே போகும்:)

      அப்போ யாழ் தேவியில் ஏறிய ஒருவர்.. வீடு போய்ச் சேர மொத்தம் 12,14 மணித்தியாலங்கள்கூட ஆகும்:)...

      ஹா ஹா ஹா எப்பூடி என் கணக்கு:).

      Delete
    5. //3. வசுமதியின் இரு பெண்களும் பல்கலைக்கழகத்தில் படிப்பது இவருக்கு எப்படித் தெரிந்தது?//

      ஆங்ங்ங் அதுதான் மேலே சொல்லிட்டனே... சுரேஸ் இன் சிந்தனையைக் கலைத்து, இடையே சாணக்கியனும் சுரேஸும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அப்போ வசுமதி கண்ணை மூடிக் காதைத்திறந்து வைத்திருக்கிறா என.. அப்போதான் அனைத்தையும் சொல்லிட்டார் சுரேஸ் க்கு:)

      அவர்கள்[சுரேஸ்+சாணக்கியன்] இருவரது சம்பாசனையையும் போட நினைச்சேன், ஆனா கதை பெருத்து விடும்.. அதனால மெளன மொழியிலேயே நகர்த்திட்டேன்:).

      ஹா ஹா ஹா நானும் ரொம்ப நாட்கள் காணாமல் போனால்ல்ல். இப்போ படிச்ச தமிழை எல்லாம் மறந்திடுவேன்:) திரும்படியும் ஆரம்பிக்கோணும் “அ” ல இருந்து:) ஹாஅ ஹா ஹா:)..

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.. அனைத்துக்கும்.

      Delete
    6. ///AngelinSunday, June 11, 2017 4:14:00 pm
      நான் கொஞ்சம் பிசியா இருந்தேன் ஆனாலும் தாங்ஸ் :) நெல்லை தமிழன்///

      பாத்தீங்களோ பாத்தீங்களோ.. ஃபிஸ் எவ்ளோ பிஸியானாலும்.. இதுக்கு தங்கூ சொல்ல பின் நிற்பதே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
  20. //ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூ இதுக்கெல்லாம் அழக்கூடா ஓக்கே?:).. கண்ணைத் துடைங்கோ:)ஹா ஹா ஹா.//


    ஆவ்வ்வ் சேம் பின்ச் நாங்களும் போறோம் நீங்களும் அழக்கூடாது :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நாமக்காக தேம்ஸ் தான் அழப்போகுதூஊஊஊ:)..

      Delete
  21. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் // நீ கொஞ்சம் குண்டாகி விட்டாய் வசூ.. வயதாகியும் உன் தலைமயிர் நரைக்கவில்லையே... டை அடித்திருக்கிறாயோ?:)....//
    இப்போ ரொம்ப முக்கியம் சுரேஷுக்கு :)

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... அஞ்சூ

      Delete
    2. ///இப்போ ரொம்ப முக்கியம் சுரேஷுக்கு :)///

      ஹா ஹா ஹா அஞ்சு நினைவு வருதோ?:) இந்த ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்புக் கேட்குது:) ஐய்ய்ய்ய்ய் கரெக்ட் ளி.

      இல்ல அஞ்சு, நமக்குப் பிடிச்ச...எங்கட வாகனத்தை அல்லது வளர்த்த ஒரு செல்லப் பிராணியை.. இன்னொருவருக்குக் கொடுத்த பின், திடீரென ஒருநாள் அதைக் கண்டால்... அது இன்னொருவருடைய சொத்து என்பதை மறந்து... ஓடிப்போய்த் தடவிப்போட்டுத் திடுக்கிடுவமே.. ஹையோ இது நமக்கானது இல்லையே என:) அப்படி ஒரு நிலைமையை நினைச்சு எழுதினேன்:)..

      அம்முலுவும் சிரிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
  22. வாவ் :)செம்ம இட்டுவிஸ்ட் அதிரராவ் :) கதை மிக அருமையா வந்திருக்கு ,,நானும் இன்னும் சீதை ராமனைனு ஒரு வரி யோட நிற்கிறேன் கர்ர்ர்ர் எனக்கு

    ReplyDelete
    Replies
    1. //இட்டுவிஸ்ட் //

      நெல்லைத்தமிழன் ஓடி வாங்க... நானே கஸ்டப்பட்டு ட்டுவிஸ்ட் என அயகா எழுதுறேன்[ இல்லாட்டில் ருவிஸ்ட் எண்டுதான் எழுதியிருப்பேன்ன்:)].. இப்போ அஞ்சு வந்து முன்னால இ போட்டு எழுதுறா:) டமிலை வளர்க்கிறாவாமாம்ம்ம்ம்ம்ம்:).. ஹா ஹா ஹா.

      எழுதுங்கோ அஞ்சு எழுதுங்கோ...சீதையின் கால்ல கீல்ல விழுந்தாவது ராமனை மன்னிக்கச் சொல்லிடுங்கோ:)... எனக்கும் மனதில் பல கோணம் தோணுது. எதுக்கும் ஹொலிடே முடியட்டும்.

      ட்டுவிஸ்ட்:) ஐ ரசித்தமைக்கு நன்றி.

      Delete
  23. இன்னிக்கு உங்க டைரி குறிப்புக்கள் எல்லாமே சூப்பர் கலக்கல் கதைக்கு பொருத்தமா அமைஞ்சிருக்கு

    ReplyDelete
    Replies
    1. ///கதைக்கு பொருத்தமா அமைஞ்சிருக்கு//

      ஹா ஹா ஹா இதை மாத்திச் சொல்லோணும் அஞ்சு:).. என் டயறிக் குறிப்புக்களுக்குப் பொருந்தும்படியாகவே கதையை நகர்த்தினேன்:)..

      Delete
  24. /வசுமதி, பின் பக்கமாக சீற்றில் சாய்ந்து, நித்திரை போலக் கண்களை மூடிக் கொண்டா, ஆனா காதுகளை அகலத் திறந்திருந்தா.//

    ஹாஹ்ஹாஹ்ஹா :) எங்கேடா பூனை அதன் ஒரு குணத்தையும் காட்டலையேன்னு நினைச்சேன் :) யூ ப்ரூவ்ட் தட் யூ ஆர் எ cat

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் வழி விடுங்கோ வழிவிடுங்கோ.. பொயிண்டைப் பிடிச்சிட்டா :).. ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு அனைத்துக்கும்.

      Delete
  25. ஆஹா.. கதை செம..! மிக அருமையா எழுதியிருக்கிங்க அதிரா. முடிவு சூப்பர். இடையில் வரும் சின்ன சின்ன குறிப்புகள் அஞ்சு சொன்ன மாதிரி கதைக்கு பொருத்தமா அமைந்திருக்கு. சந்தோஷமான பயணமாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ அம்முலு வாங்கோ... உங்கள் தொடர் வருகை மனதுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

      என்னுடைய தொல்லை + கூக்குரல் கொஞ்சக்காலத்துக்கு இருக்காது:) ஹா ஹா ஹா அனைவரும் நிம்மதியாக இருக்கலாம்:)..

      மிக்க மிக்க நன்றிகள் அம்முலு.. வோட்டுக்கும்.

      Delete
  26. ஆவ்வ்வ்..கொர்கொர்,விடிந்ததும் வாசிக்கிறேன் ,வாக்களித்து விட்டேன் ,நாளைய மகுடம் உங்களுக்கே :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. அர்த்த ஜாமத்திலயும் கரீட்டா ஓடிவந்து வோட் போட்ட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் கில்லர்ஜி யும் வோட் போட்டார் ஆனா அவர் மொபைலில் இருந்து கொமெண்ட் போட மாட்டாராமே:)..

      ///நாளைய மகுடம் உங்களுக்கே :)///
      ஹா ஹா ஹா நீங்க சொன்னா பலிக்கும்:).. ஆனா ஒன்று இம்முறை மகுடம் கிடைச்சால்ல்ல் நான் அதைக் கொண்டு ஹொலிடே போய் விடுவேன்ன்:) ஹா ஹா ஹா:).. ஞாயிற்றுக்கிழமை போஸ்ட் என்பதால் பலர் பார்வையாளராக மட்டுமே நிற்கினம்:).

      மிக்க நன்றி பகவான் ஜீ. நாளைக்கு வந்து கதை படிச்சு.. சரி பிழை சொல்லுங்கோ ஓகே?:).

      Delete
    2. இன்னொன்று டெல்ல மறந்திட்டேன் பகவான் ஜீ:).. நான் உங்களுக்கு கிழமைக்கு 7 வோட்ஸ் போடுறேனே:) அதில பாதியையாவது நீங்க திருப்பித்தரக்கூடாதோ?:).. கோபு அண்ணனை விடக் கடனாளியாக இருக்கிறீங்க என்னிடம் ஹா ஹா ஹா:).

      Delete
    3. ///Bagawanjee KAMonday,
      :) ///

      ஹா ஹா ஹா பகவான் ஜீ யின் இந்த ஸ்மைல் க்கு என்ன அர்த்தம்?:) யாராவது ஸ்மைலி சாத்திரம் தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுங்கோவன் பீஸ்ஸ்ஸ்ஸ்:)

      Delete
  27. அருமையான கதை! அது சரி, இது நம்ம ஏரியா பக்கம் திறந்துச்சா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதாக்கா வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

      இல்ல கீதாக்கா மேலே ஆரம்பம் நம்ம ஏரியா லிங் கொடுக்கச் சொன்னார் கெள அண்ண்ண்... அவ்ளோதான்.. மற்றும்படி, இங்கு போடாவிட்டால்தான் அங்கு போடுவார்.

      மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  28. ஆகா
    திரைப்படங்கள் போல், பதிவிலும் இளைவேளையா,ரசித்தேன் சகோதரியாரே
    தம+1

    ReplyDelete
  29. ஆகா திரைப்படங்கள் போல், பதிவிலும் இடைவேளையா ரசித்தேன் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. பிழை திருத்திவிட்டீங்க மிக்க நன்றி:).

      Delete
  30. அதிரா நலமா...

    விடுமுறை முடிந்தது இப்போதான் ப்ளாக் பக்கம் வரேன் ...நீங்க என்னன்னா லீவ் விடூறீங்க...
    சரி...சரி ..நல்லா என்ஜாய் செஞ்சுட்டு வாங்க..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ... ஓ நீங்க இப்போதான் திரும்பியிருக்கிறீங்களோ? நீங்க போஸ்ட் போடுவதைப் பார்த்து, ஹொலிடே முடிச்சு வந்திட்டீங்க என நினைச்சேன்..

      எங்களுக்கு இனித்தானே ஹொலிடே ஆரம்பம்.. இங்கத்தைய மேலை நாடுகளில்.

      Delete
  31. அந்தப்... பத்து மணி நேரங்களில்....:(....

    கதை நல்லா இருக்கு...காதலையும் ரயிலை போல தவறவிட்டுட்டார் சுரேஷ்...

    ரொம்ப சூப்பரா எழுதுறீங்க...வாழ்த்துக்கள்...இது போல் மேலும் நிறைய எழுதுங்க...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அனு...ரயிலை தவற விட்டிட்டாரா?:) எங்ங்னேஙேஙேஙேஙே?:)..

      Delete
    2. ஒரு ப்ளோல ரயிலயும் தவறவிட்டுடார் னு சொல்லிட்டேன்...

      ஹி,..ஹி......

      Delete
    3. ஹா ஹா ஹா... உண்மைதான் சிலநேரங்களில்.. மெய் மறந்து கொமெண்ட்ஸ் போடும்போது இப்பூடி ஒரு ஃபுளோல எனக்கும் நடந்திடுது:)

      Delete
  32. எல்லா உசிக்குறிப்பும் சூப்பர்...ஆன கதையை படிச்சுட்டு ...தனிதனியா வாசிச்சேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. உண்மைதான்.. ஊசிக்குறிப்பு பொருத்தமாக இருந்தாலும், கதையை தனியே படிக்கும்போதுதான் சுவாரஷ்யமாக இருக்கு.. மிக்க நன்றி அனு அனைத்துக்கும்.

      Delete
  33. கதையை சொல்லிய விதம் அழகு இடையிடையே தங்களது கையெழுத்தோடு சொன்னது அருமை.
    முடிவில் மனம் கனத்து விட்டது உண்மையே.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி[ஸ்ஸ்ஸ் கரெக்ட்டாப் பெயர் போட்டிட்டேன்ன்ன்ன்:)]வாங்கோ. மிக்க நன்றி...
      விவாகரத்து.. பிரிவு.. எதுவென்றாலும் முடிவு கவலைதானே.. ஏதோ ஒரு திமிரில், அல்லது வாழ்க்கையை சரிவர நடத்தத்தெரியாமை.. அல்லது என்னை விட்டால்ல் இவருக்கு/இவவுக்கு வேறு கதி இல்லை எப்படியும் என்னைத்தேடித் திரும்ப வரட்டும் எனும் ஆணவம்.. இப்படி ஏதோ ஒன்றில் சடாரென முடிவெடுத்து விடுகிறார்கள்.. பின்பு நாளாக ஆக த்தான் தவறு செய்து விட்டோமோ என வருந்தத்தொடங்குகின்றனர்.

      உண்மையிலேயே நிதானமாக.. நின்று சரி பிழைகளை அலசி ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுப்போர் பின்னர் கலங்க மாட்டார்கள்... இவற்றை மனதில் வைத்தே கதையை எழுதினேன்.

      கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்...
      “ஒரு முடிவென்பது, அதை நீ நன்கு சிந்தித்து எடுத்தபின், உன்னை அது பாதிக்காததாக இருக்க வேண்டும்” என. அவர் சொல்ல வந்தது என்னவெனில்.. எதுக்கும் அவசரப்படாமல் நன்கு நிதானமாக யோசித்து முடிவை எடுங்கள் என்பதே.

      இக்காலம் அப்படியா இருக்கிறது.. இருமினாலும் பிரிவு தும்மினாலும் பிரிவு... அந்நேரம் அதன் சீரியஸ்நெஸ் புரிவதில்லை.. பின்புதான் யோசிக்கிறார்கள். மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  34. அருமையான கதை. இடையில் வரும் பெட்டி குறிப்புகள் மிக அருமை.
    ஊசிகுறிப்பு சிரிப்பு. முதலில் கதை எழுதியத்ற்கு வாழ்த்துக்கள்.
    விடுமுறை நாளை சிறப்பாக அனுபவித்து வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. அனைத்தையும் படித்து ரசித்திருக்கிறீங்க.. மிக்க நன்றி.. மிக்க நன்றி.

      Delete
  35. ஒரு கதை எழுதும்போது, அந்த மாந்தர்களோடே, கதையினோடே நாமும் பயணிப்பதுபோல் இருக்கும். சோகம்னா, நம்ம மூடும் அதுக்கேத்தமாதிரியும், சந்தோஷம்னா அதுக்கேத்தமாதிரியும் இருக்கும். இது எனக்கு மட்டும்தானா இல்லை (நான் எழுத்தாளன் இல்லை) ப்ரொஃபஷனல் எழுத்தாளர்களுக்கு உண்டா என்று எனக்கு சந்தேகம்.

    பாலகுமாரன், ஒருதடவை, ராஜராஜ சோழன் நாவல் முடிக்கும்போது, ராஜராஜன் இறக்கும் கட்டம் எழுதியபோது தாங்கமுடியாமல் அழுதேன் என்று சொல்லியிருந்தார்.

    இதை யாரேனும் எழுத்தாளர்கிட்ட கேட்கணும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெ. தமிழன்.. மீள் வருகைக்கு நன்றி... நீங்க சொல்வது உண்மையேதான்.. காலையில் ஒரு சோகக் கதை படிச்சால் அந்த நாள் முழுக்க மைண்ட் ஓஃப் ஆனது மாதிரி ஆகிடும்.

      அதேபோல, நானே எழுதிவிட்டு, பின்னர் நானே படித்து உருண்டு பிரண்டு சிரிப்பதும், சோகமெனில் நானே அழுது கண்ணைத்துடைச்சு விடுவதும் வழமையான ஒன்று:).

      ///இதை யாரேனும் எழுத்தாளர்கிட்ட கேட்கணும்.// ஹா ஹா ஹா.. அப்போ அஞ்சுவிடம் கேட்டிடலாம்ம்ம்ம்ம்ம்:).. மிக்க நன்றி.

      Delete
  36. அருமையான கதை
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ.. மிக்க நன்றிகள் அனைத்துக்கும்.

      Delete
  37. ஆவ்வ்வ்வ்வ்வ் மகுடத்தைப் பறிச்சிட்டேன்ன்ன்:).. மீக்கு மகுடம் கிடைச்சிட்டுதூஊஊஊஊஉ:)... இதை போட்டுக்கொண்டேதான் அந்தாட்டிக்கா போகப்போறேன்:). இப்போ 2,3 நாட்களாக வோட்ஸ் குறைவாகவே இருக்கு மகுடங்களுக்கு:)..

    ReplyDelete
  38. அருமை சகோதரி...

    அங்கங்கே அருமையான குறிப்புகள்... புத்தகம் போடும் எண்ணம் இல்லையா...?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ டிடி வாங்கோ..

      /// புத்தகம் போடும் எண்ணம் இல்லையா...?/// ஹா ஹா ஹா உசுப்பி விட்டே புறுணம் பார்க்க ஆசைப்படுறீங்க:)..
      கதை எழுதினதுக்கே கீழே ஜி எம் பி ஐயா பொயிங்கியிருக்கிறார்:) இதில புத்தகமோ ஹா ஹா ஹா.. மிக்க நன்றி டிடி.

      Delete
  39. Aaaaaaaa.... kadhayaaaa? Aadhiraaa akka'vaaaaa? Just kidding :). Superaa eludhi irukkeenga, kalakunga

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் நம்ம அப்பாஆஆஆஆஆஆஆவித் தங்கமணியா?? வாங்கோ வாங்கோ.. இப்பவும் நீங்க அப்பாவியாத்தான் இருக்கிறீங்க:).

      மிக நீண்ட இடைவேளைக்குப் பின் வந்திருக்கிறீங்க.. மனதுக்கு மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.

      Delete
  40. இந்த சாணக்கியனுக்கு குடும்பம் நடத்தும் ஞானம் இல்லையோ :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ பகவான் ஜீ.. மீள் வருகைக்கு நன்றி.... சாணக்கியன் சுரேஸ் உடன் கதைத்ததுக்கா சொல்றீங்க... நம்பிக்கை[மனைவியில்/கணவனில்] தானே வாழ்க்கை.. கணவன் மனைவி உறவில் நல்ல விதமான ஃபிரெண்ட்ஷிப் இருப்பின்.... இதெல்லாம் பெரிய விசயமில்லையே.

      மிக்க நன்றி பகவான் ஜீ.. எனக்கு மகுடம் கிடைச்சிட்டுதே:) மேலே படம் இணைச்சிட்டனே மறக்காமல் பார்த்திடுங்கோ:)

      Delete
  41. athiraaaav :)
    [im]https://thumbs.dreamstime.com/z/cute-kitten-wearing-princess-crown-little-five-week-old-rhinestone-54731212.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு.. எந்தாப்ப்ப்ப்பெரிய கிரீடத்துடன் பூஸார்ர்ர்ர்:)..

      உங்களுக்கு ஒன்று சொல்லோணும் அஞ்சு:).. போன தடவை மகுடம் கிடைச்சபோது.. அந்த சந்தோசத்துடனேயே காணாமல் போயிடலாம்.. ஐ மீன் ஹொலிடே விட்டிடலாம் என நினைச்சேன்ன்.. ஆனாலும் இங்கு சொல்லவில்லையே என்பதால் இப்போஸ்ட் போட்டேன்ன்... ஆனா இதுக்கு மகுடம் கிடைக்காது போலிருக்கே... எனக் கொஞ்சம் கவலைப்பட்டேன்ன் கிடைச்சிட்டுதூஊஊஊ:).

      Delete
    2. டெல்ல மறந்திட்டேன் அஞ்சு... மேலே மகுடம் இணைச்சிட்டேன் பாருங்கோ பீஸ்ஸ்ஸ்:).

      Delete
  42. ஆளாளுக்கு கதை எழுதத் தொடங்கினால் படிப்பதற்கு என்றும் சிலர் வேண்டுமல்லவா யாரோசொன்னது நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. //G.M BalasubramaniamMonday, June 12, 2017 4:55:00 pm
      ஆளாளுக்கு கதை எழுதத் தொடங்கினால் படிப்பதற்கு என்றும் சிலர் வேண்டுமல்லவா யாரோசொன்னது நினைவுக்கு வருகிறது//

      வாங்கோ ஐயா ஜி எம் பி வாங்கோ... என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க:) நீங்க பெரியவர்.. ஊக்கம் தருவதை விட்டுப்போட்டு இப்பூடி முளையிலேயே கிள்ளுறீங்களே:).. யாரோ எதுக்கோ சொல்லியிருக்கலாம்.. அதை நீங்களும் சொல்லலாமோ?:).. ஹா ஹா ஹா சரி விடுங்கோ...

      ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் எனச் சொல்லுவினம்.. அப்பூடித்தான் இதுவும்..

      படிப்பவர்கள் இருக்கும்வரை எழுதுவோரும் இருக்கத்தான் செய்வார்கள்:). ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
    2. இதை நாந்தான் சொல்லியிருந்தேன். எல்லாரும் பிளாக் எழுத ஆரம்பித்தா அப்புறம் படிக்கறது யாரு? அதுனால நான் பிளாக் எழுதலைன்னு சொன்னேன். இருந்தாலும் இன்டெரெஸ்டிங் பதிவு/கதை/கவிதை எல்லாம் எல்லாரும் படிப்பார்கள். எழுதுங்க. (ஆனா, கிட்டத்தட்ட நான் பாதி எழுதிவச்சிருக்கும் கதை மாதிரி எழுதிட்டீங்க. இப்போ நான் எப்போ மாத்தி, எப்போ கதையை முடிக்கிறது :( )

      Delete
    3. //நெல்லைத் தமிழன்Wednesday, June 14, 2017 8:51:00 am
      இதை நாந்தான் சொல்லியிருந்தேன். எல்லாரும் பிளாக் எழுத ஆரம்பித்தா அப்புறம் படிக்கறது யாரு? அதுனால நான் பிளாக் எழுதலைன்னு சொன்னேன். //

      ஹா ஹா ஹா நீங்கதானா அந்த வில்லர்?:))) இல்ல நெ.தமிழன் நீங்கள் சொல்லியிருந்தாலும்.. அவர் உங்களைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்ர்..:) இது ஜி எம் பி ஐயா வேறு ஏதோ அரசியல் பின்னணி வச்சு சொல்றார்ர்ர்ர்.. ஹா ஹா.. அப்பூடித்தான் நினைக்கிறேன்.

      Delete
    4. /// எழுதுங்க. (ஆனா, கிட்டத்தட்ட நான் பாதி எழுதிவச்சிருக்கும் கதை மாதிரி எழுதிட்டீங்க. இப்போ நான் எப்போ மாத்தி, எப்போ கதையை முடிக்கிறது :( )///

      ஹா ஹா ஹா எதுக்கு நெல்லைத்தமிழனுக்கு மட்டும் இப்பூடி ஆகிடுது?:) ரோஜாவை அவுட்லைன் போட்டீங்க... வேறு யாரோ முடிச்சு அனுப்பிட்டினம்:) இப்போ கதையை எழுதினீங்க.. அதுக்குள் நான் அப்படி எழுதிட்டேன்ன்:).. ஒருவேளை 8ம் நம்பரில் பிறந்தவரா இருப்பீங்களோ?:)... கொட்டும் மழைக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உப்பு விக்கப் போனேன்ன்ன்ன்ன்ன்:).. காத்தடிக்கும் நேரம்ம்ம்ம்ம்ம்ம்ம் மாவு விக்கப் போனேன்ன்ன்ன்:)..

      அது சிட்டுவேஷன் சோங் பிபிசில போகுதே:).

      சட்டுப்பட்டென கதையை மாத்திடுங்கோ.. அதாவது அவதிப்பட்டு டிவோஸ் எடுத்தது வசுமதி.. இப்போ சாணக்கியனைக் கட்டி கொடுமைப்பட்டு.. சுரேஸ் ஐ நினைச்சு ஏங்குறா... அதனால சுரேஸ் இன் கண்ணும் வச்சூ வின் கண்களும் கலங்கின.. எப்பூடி?:) இப்படிக் கோணத்தில சிந்திச்சு:).. எழுதி விரைவில் அனுப்பிடுங்கோ:).. தாமதமானால்ல்ல்ல் உங்கள் கதையை மீ படிக்காஆஆஆஆஆஆஆஆஆமலே போயிடுவேன்ன் அந்.... ஆட்டிக்காவுக்கு:). ஹா ஹா ஹா.

      Delete
    5. //அதாவது அவதிப்பட்டு டிவோஸ் எடுத்தது வசுமதி.. இப்போ சாணக்கியனைக் கட்டி கொடுமைப்பட்டு.. சுரேஸ் ஐ நினைச்சு ஏங்குறா... அதனால சுரேஸ் இன் கண்ணும் வச்சூ வின் கண்களும் கலங்கின.. எப்பூடி?//

      அடப்பாவீ... கதை எழுதறதுக்காக எதிக்ஸ் இல்லாம சிந்தனை பண்ணியிருக்கீங்களே.. விட்டா, திருப்பியும் சுரேஸ் திருந்தலை என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் சாணக்கியனிடம் வந்து அழுதாள். அவள் கதையைக் கேட்டவுடன் இருவர் கண்களும் மீண்டும் கலங்கின என்று சொல்லுவினம் போலிருக்கே.

      Delete
    6. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் அது உங்களுக்கு மீ கதை வகுத்துக் கொடுத்தேன்ன்ன்.. கற்பனைதானே எப்பூடியும் முடிவை அப்பப்ப மாத்திடலாம்:) காசா பணமா?:)..

      /// என்று சொல்லுவினம் போலிருக்கே.////
      ஹா ஹா ஹா இதுதான் டாப்பூஊஊ:).

      Delete
  43. கடைசியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஜோக் .... சூப்பர் !

    I TOO LIKE IT :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி ரசித்தமைக்கும், மீள் மீள் வருகைகளுக்கும்.

      Delete
  44. மகுடம் சூட்டிய அதிரா அழகு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா.. மகுடத்துக்கு வாழ்த்துச் சொல்லவும் வாறீங்க... புல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஅ அரிச்சுப்போனேன்ன்ன்:).. மிக்க நன்றி:).

      Delete
  45. அது என்னவோ தெரியவில்லை. பின்னூட்டமெழுதும்போது ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்து எழுதியும்விட்டேன் அதைத் தவறாக எண்ண வேண்டாம் எழுதுங்கள் நன்றாக எழுதுங்கள் எனது ஊக்கமும் வாழ்த்தும் என்றும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ ஜி எம் பி ஐயா... நான் எதையும் தவறாக எடுக்க மாட்டேன்ன்.. மனதில் தோன்றுவதை சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருப்பேன்ன் அவ்ளோதான்ன்.. என்னை நீங்க தவறாகப் புரியாதிருந்தாலே போதும்:).

      அது ஏதோ உங்கள் புளொக் அரசியலுக்கு:)... என்னை ஊறுகாய் ஆக்கியிருக்கிறீங்க என மட்டும் புரிஞ்சு கொண்டேன் உடனேயே:).

      ஆனா ஒன்று நமக்கு எது பிடிக்கவில்லையோ.. அதை நாம் அடுத்தவருக்குச் செய்யக்கூடாதல்லவா?:).. சரி அதையும் விடுங்கோ ஐயா.. இதனாலென்ன:).

      உங்கள் அரசியலுக்கு ஊறுகாய் தேவை எனில் அஞ்சுவை ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பண்ணிடுங்கோ:).. என்னை விட்டிடுங்கோ மீ ஒரு அப்ப்ப்பாஆஆஆஆஆஆவி:).. ஹா ஹா ஹா மீள் வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
    2. ///AngelinWednesday, June 14, 2017 12:26:00 pm
      Garrrrr////

      haa haa haa,...

      [im]https://pbs.twimg.com/media/CqzfNI5WcAAUEay.jpg[/im]

      Delete
  46. அன்பு அதிரா அக்காவுக்கு.வணக்கம்.நான் அருசுவை யில் இருந்து உங்கள் எழுத்துக்கு ரசிகை.ஆனால் பதில் எழுத தயக்கம்.ப்ளாக்கும் படிப்பேன் உங்கள் அழகிய தமிழுக்கு இனிய வாழ்ய்த்துக்கள்.தினமும் ரீ என்றுதான் சொல்லி ரீ போடுவேன் வீட்டில்.நான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.ஆனால் வசிப்பது ஓமானில்.இங்கு ராதிகா என்ற இலங்கை தமிழ் நண்பி உண்டு.5 வருடம் இருந்தவர் மீண்டும் நாட்டுக்கு போய் விட்டார்.அழகான் எழுத்து கைவேலை , சமையல் எல்லாவற்ரிலும் வலம் வ்ருகிறீர்கள் எனக்கு ஓரு மகள் உண்டு.வாழ்த்துக்களூடன்
    மீரா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மீரா வாங்கோ முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு.. மிக்க மகிழ்ச்சி...
      ///நான் அருசுவை யில் இருந்து உங்கள் எழுத்துக்கு ரசிகை.ஆனால் பதில் எழுத தயக்கம்.ப்ளாக்கும் படிப்பேன் உங்கள் அழகிய தமிழுக்கு இனிய வாழ்ய்த்துக்கள்.//

      ஓ அப்படியா? புளொக் படிப்பீங்களோ... எனக்கு பல பல நாடுகளில் இருந்து படிக்கிறார்கள் எனக் காட்டும்.. யாராக இருக்கும் என யோசிச்சுப்போட்டு விட்டு விடுவேன்.

      கொமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றி..... ஓ என் டமில்:) உங்கள் வீட்டிலும் வலம்வருவது கேட்டு மிக்க மகிழ்ச்சி:)..

      ஆனா ஒரு கவலை நான் இடவேளை விட நினைக்கையில் வந்திருக்கிறீங்களே... தொடர்ந்து இங்கு சந்திப்போமா?????:) பார்ப்போம்ம்..

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி மீரா.

      Delete
    2. அச்சச்சோஒ பதில் போட வருமுன் அழிச்சுப்போட்டாரே எதுக்கு அழிச்சீங்க நெல்லைத்தமிழன்?:) என் பதில் தாமதமாவதைப் பார்த்து.. தப்பா ஏதும் நினைச்சிட்டேனோ என எண்ணிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அழகான பதில் நினைச்சு எழுத ஓடி வந்தேன்ன் இப்பூடிப் பண்ணிட்டீங்களே:).. ஹா ஹா ஹா:)..

      இதுக்கெல்லாம் எதுவும் யோசிக்காதீங்க.. அனைத்தையும் நகைச்சுவையாவே எடுத்துக் கொள்வேன்:).. மிக்க நன்றி மீள் வருகைக்கு.

      Delete
    3. "அதிரா மெளனம் கலகாஸ்திரி”:)" - இதுவும் உங்களின் http://gokisha.blogspot.com/2017/05/blog-post_25.html ல் உள்ள கமென்ட் தான்.

      Delete
    4. என்னதூஊஊஊஊஊ ...... ’கலகாஸ்திரி’யா?

      அப்போ, ஸ்திரிகள் வரும் இடமெல்லாம் ஒரே கலகம்தான் ஏற்படுமோ?

      ’மெளனம் கலக நாஸ்தி’ என்றுதான் நான் கேள்விப் பட்டுள்ளேன்.

      அதாவது மெளனமாக இருந்தால் கலகம் நாஸ்தியாகும் (இல்லாமல் போகும்) என்று அர்த்தமாகும்.

      நம் அதிரா ...... கலகாஸ்திரீயே தான் என்பது இப்போது புரிகிறது. :)

      Delete
  47. துளசி: அதிரா சகோ...கதை ரொம்ப நல்லா எழுத்தறீங்க...சூப்பர்...வாழ்த்துகள்...பாராட்டுகள்....

    கீதா: சோ ரி அதிரா...லேட்டாகிடுச்சு...பயணம்....

    கதை ரொம்ப சூப்பர்...உங்கள் நோட்ஸ் குறிப்புகளுடன் அதற்கு ஏற்றார் போல்....

    சாரி கநாட் மேக் அ டெட் மேன் அலைவ்.....

    சூப்பர் அதிரா மேலும் எழுத்த்துங்கோ....ஹாப்பி ஹாலிடேஸ்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் கீதா வாங்கோ:)..

      //கீதா: சோ ரி அதிரா// ஹா ஹா ஹா இந்த சோரி யை:) மீ பகவான் ஜீ இடமிருந்து களவெடுத்தேன்ன்:) அதனால பகவான் ஜீ பெயரையும் சேர்த்துச் சொல்லிடுங்கோ டொல்லும்போது:) இல்லை எனில் ஸூ பண்ணிடப்போறார்ர்:).

      ///லேட்டாகிடுச்சு...பயணம்....//
      கவலைப்படாதீங்கோ இம்முறை ரெயின் லேட்டாத்தான் புறப்படும்:) அதுவரை நன்கு அரட்டை பண்ணலாம்:).

      மிக்க நன்றி கீதா, துளசி அண்ணன்.

      Delete
  48. வணக்கம் மியாவ் !

    கதை என்னமோ கதையாத்தான் இருக்கு ( சொந்தக் கதை இல்லை என்பதில் மகிழ்ச்சி )
    கற்பனைக் கதையானாலும் நடைமுறைக்குச் சாத்தியம் ஆனதுதான் அந்த யாழ் தேவிக்குத்தான் தெரியும் எத்தனை தேவிகளின் கதை இன்னும் இரயில் பயணங்களாய் இருப்பது நல்ல கதை தந்த அதிராவுக்கு வாழ்த்துகள் அடிக்கடி இப்படிக்ம்கதை எழுதுங்கள் இடைக்கிடை ஊசிக்குறிப்புகள் அசத்தலா இருக்கு ஐ லவ் யு டூ செம !

    வாக்கு இப்போதான் இட்டேன் மகுடத்திற்கு என் வாக்கு சேரவில்லை அதுக்கு நீங்கள் உடனே லிங்க் மெயில் பண்ணி இருக்கலையே ஹர்ர்ர்ரர்ர்ர்ர்

    தமன்னா பதினேழாவது ம்ம்கும்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜர் வாங்கோ... உங்கள் புளொக்கில் என் பக்கத்தை இணைச்ச பின்பும் இப்பூடி லேட்டா வரும் உங்களை என்ன பண்ணலாம் சொல்லுங்கோ?:)..
      //

      ///கதை என்னமோ கதையாத்தான் இருக்கு ( சொந்தக் கதை இல்லை என்பதில் மகிழ்ச்சி )//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டும்தான் அதுக்காக இப்பூடியா?:).. ஹா ஹா ஹா இப்படி ஆராவது கேட்டுப்போட்டாலும் எனும் பயத்திலதான் பலர்... கதை, கவிதை எழுதுவதே இல்லை:).

      //கற்பனைக் கதையானாலும் நடைமுறைக்குச் சாத்தியம் ஆனதுதான்//
      உண்மைதானே... இப்படி எத்தனையோ நிஜக் கதைகள் காதை வந்தடைகிறதே...

      // ஐ லவ் யு டூ செம !///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது கடசி ஊசிக்குறிப்புக்கானது எனச் சொல்லிட்டுச் சொல்லியிருக்க வாணாம்ம்??:)..

      ///வாக்கு இப்போதான் இட்டேன் மகுடத்திற்கு என் வாக்கு சேரவில்லை//
      இருங்கோ கண் துடைச்சிட்டு வாறேன்ன்:) உடனேயே வந்திருந்தால் என் தலை மகுடம் இன்னும் 10 மணிநேரம் அதிகமா இருந்திருக்குமெல்லோ:).. சரி விடுங்கோ... எல்லாம் ஒரு விளையாட்டும் மகிழ்ச்சியும்தான்...

      நீங்க இன்னும் என்பக்கத்தில் உங்கள் மயில் ஐடி கொடுத்து சப்ஸ்கிரைப் பண்ணி விடேல்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இப்பவே பண்ணிடுங்கோ.. எப்படியும் 4 -10 மணித்தியாலத்துக்குள் உங்களுக்கு கிடைச்சிடுமே.

      மிக்க நன்றி மேஜர் சீராளன்.

      Delete
  49. கதையும் இடையிடையே வரும்
    பெட்டிச் செய்திகளும் அருமை
    மிக மிக அருமையாக எழுத வருகிறது
    உங்களுக்கு
    தொடர்ந்தால் மகிழ்வோம்

    (உங்களாலும் வை.கோ சார்,ஜோக்காளி
    மற்றும் கில்லர்ஜி ஆகியோரால்தான்
    பதிவுலகம் கொஞ்சம் கலகலப்பாய்
    இருக்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரமணி அண்ணன் வாங்கோ...

      //மிக மிக அருமையாக எழுத வருகிறது
      உங்களுக்கு
      தொடர்ந்தால் மகிழ்வோம்//

      ஆவ்வ்வ்வ்வ் மிக்க மிக்க சந்தோசம்.. எனக்கு திடீரென நினைச்சால் ஏதும் எழுத வரும்.. ஆனா கதை எழுதுவோம்.. கவிதை எழுதுவோம் என நினைச்சால் எதுவும் வராது:).

      ///(உங்களாலும் வை.கோ சார்,ஜோக்காளி
      மற்றும் கில்லர்ஜி ஆகியோரால்தான்
      பதிவுலகம் கொஞ்சம் கலகலப்பாய்
      இருக்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?)///

      மிக்க மகிழ்ச்சி.. காசா பணமா.. எல்லோரோடும் சும்மா பேசி மகிழ்வதுதானே என நினைப்பேன்ன்.. அத்தோடு நான் எப்பவும் நினைப்பது “செய் அல்லது செத்துப்போ” எனும் காந்தி அடிகளின் வசனம் என நினைக்கிறேன்ன் அதைத்தான்... இருந்தால் கலகலப்பா சந்தோசமாக இருக்கோணும் இல்லையெனில் பேசாமல் ஒதுங்கிடோணும்.. அது எந்த விசயமானாலும் அப்படித்தான் நினைப்பேன்.

      மிக்க மிக்க நன்றி.

      Delete
  50. அதிரா எழுதிய கதையா ! அரண்டுபோய் உட்கார்ந்திருக்கிறேன். இன்னொரு காஃபி போட்டுக்கொண்டுவந்து நார்மலுக்கு வர முயற்சிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. //ஏகாந்தன் Aekaanthan !Monday, June 19, 2017 4:22:00 am//
      வாங்கோ வாங்கோ.. நான் எதிர்ப்பார்க்கவில்லை நீங்க இங்கு வருவீங்களென.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி..

      ///அதிரா எழுதிய கதையா ! அரண்டுபோய் உட்கார்ந்திருக்கிறேன். இன்னொரு காஃபி போட்டுக்கொண்டுவந்து நார்மலுக்கு வர முயற்சிக்கிறேன்..///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நல்லா இருக்கா இல்ல உதவாதோ?:) ஹையோ எப்படி எடுத்துக் கொள்வேன் நான் இதை?:)... உங்கள் வீட்டில் கேட்டுத்தான் தெரிஞ்சுகொள்ளோனும்.. நீங்க எதுக்கெல்லாம் 2ம் காபி குடிப்பீங்களென:)...

      ஹா ஹா ஹா மிக்க நன்றி மிக்க சந்தோசம்.

      Delete
  51. கதை கூட எழுதுவீங்களா அதிரா! அருமை போங்கோ

    அதுவும் வித்தியாசமான முறையில். கதைக்கு நடுவில் இடைவெளி.

    அங்கங்கு இடைச்செருகலாக வாசகங்கள்.

    பின்னூட்டம் “மீ பஸ்ட்டுன்னு ஓடி வர” அதிராவின் பதிவிற்கு 133வது பின்னூட்டம் கொடுக்க ஓஓஓஓஓஒடி வந்துட்டேனே.

    ஆனா இந்தப் பொண்ணு மட்டும் மாமி வீட்டுக்கு வரவே மாட்டேங்குது.

    ReplyDelete
    Replies
    1. அடடா வாங்கோ ஜே மாமி வாங்கோ...

      ///கதை கூட எழுதுவீங்களா அதிரா! அருமை போங்கோ///
      என்ன இப்பூடிக் கேட்டுப்போட்டீங்க ?:) டிடி சொல்லிட்டார் மின்னூல் வெளியிடச்சொல்லி:) ஹாஅ ஹா ஹா:).

      ///பின்னூட்டம் “மீ பஸ்ட்டுன்னு ஓடி வர” அதிராவின் பதிவிற்கு 133வது பின்னூட்டம் கொடுக்க ஓஓஓஓஓஒடி வந்துட்டேனே.///’
      நீங்க பேரக்குழந்தைகளோடு பிசி எனத் தெரியும் மாமி.. இருப்பினும் இங்கு பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வருகை.

      ///ஆனா இந்தப் பொண்ணு மட்டும் மாமி வீட்டுக்கு வரவே மாட்டேங்குது. ///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) மாமி உங்களுக்கு மறதி அதிகம்:).. நீங்க கடசியாகப் போட்ட கோலத்துக்கு வந்தேன்ன்.. பின்பு பெரீஈஈஈஈய இடைவேளை விட்டிட்டீங்களே.. நேற்றுத்தானே புதுசு போட்டீங்க:).. என் பக்கத்தில் நோட்டிபிகேசன் காட்டும்படி செய்து வச்சிருக்கிறேனே:)..

      மிக்க நன்றி ஜே மாமி... எனக்கு சொந்தத்திலும் ஆன்ரி, சித்தியை விட.. மாமிமார்தான் அதிகம்:).

      Delete
  52. இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வர ஆசைதான். ஆனால் இன்னும் விடியவே இல்லையே! அதிரா - என்னாது... விடியலையா? மணி நடுப்பகல் 12 மணியாகுது. EYE MASKஐ கழட்டிப் போட்டு எந்திரிக்கற வழியைப் பாருங்க. தூங்க ஆரம்பிச்சு 2 நாளாகுது. இன்னும் எந்திரிக்கிற வழியைக் காணோம்.

    ReplyDelete
    Replies
    1. தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
      தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

      அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
      தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
      அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

      அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
      உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

      தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
      அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே


      காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
      அதைக் கண்களில் இங்கே எடுத்து வந்தேன்

      எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
      கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலே… கண்களிலே … கண்களிலே…

      தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
      அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

      மனமென்னும் மாளிகை திறந்திருக்க
      மையிட்ட கண்கள் சிவந்திருக்க

      இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
      தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…
      தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே


      தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
      அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
      அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
      உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

      -=-=-=-=-

      படம் : ஆலயமணி
      இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
      குரல் : ஜானகி
      பாடல் : கண்ணதாசன்

      Delete
    2. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்... வாங்கோ...

      இங்கு இப்போ நம்பமாட்டீங்க 11.30 க்குத்தான் இருளுது, அதிகாலை 3.30 க்கு விடிஞ்சிடுது.. 4 மணிக்கு சூரியன் வந்துடுது:)..

      அதிராவோ கொக்கோ.. விண்டோவுக்கெல்லாம் டபிள் கேட்டின் நல்ல திக்காப் போட்டு, றூமை இருட்டாக்கிடுவேன்... தப்பித்தவறி கேட்டின் ஒழுங்காக மூடப்படவில்லையாயின்.. அவ்ளோதான் 4 மணிக்கு சூரியன் கண்ணில அடிக்கும்.. அதோட நித்திரை போயிடும் கர்ர்ர்ர்:)..

      ஆனா என்ன புறுணமோ இன்று 4 மணிக்கு முழிச்சிட்டேன்ன்:) எழும்பி ஓடிப்போய் ஒரு ரீ ஊத்திட்டு ஆற்றைப் பார்த்டபடி இருக்க என்ன ஒரு அழகாக இருந்துது தெரியுமோ:).. இருப்பின்ம் விட்டிடுவேனா 5 மணிக்கு ஓடிப்போய் திரும்ப நித்திரையாகிட்டேன்ன்:).. ஹா ஹா ஹா சரி சரி இனிமேலும் என் நித்திரை பற்றிப் பேசுவீங்க???:))

      Delete
    3. பாருங்கோ நெ.தமிழன்.. உங்கள் கொமெண்ட் பார்த்துக் கோபு அண்ணனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப வந்திட்டுது:).. அவரும் 12 வருசத்துக்குப் பின்னர் ரெயினில சந்திச்சவராமெல்லோ:).. ஹையோ இதுக்கு மேல என்னை எதுவும் கேட்டிடாதீங்கோ.. மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊ:)..

      ஹா ஹா ஹா காலத்தால் அழியாத பாடல் கோபு அண்ணன்.

      Delete
    4. மலர்களைப் போல் தங்கை அதிரா உறங்குகிறாள்
      மலர்களைப் போல் தங்கை அதிரா உறங்குகிறாள் – அண்ணன் கோபு
      வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

      மலர்களைப் போல் தங்கை அதிரா உறங்குகிறாள் – அண்ணன் கோபு
      வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

      கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்
      கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

      கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்
      கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

      மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
      மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்

      மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
      மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்

      மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
      மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்

      மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்

      கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்
      கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

      ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
      அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்

      வாழிய கண்மணி வாழிய என்றான்
      வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்

      கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்
      கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

      பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
      பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்

      பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
      பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்

      மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
      மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்

      மலர்களைப் போல் தங்கை அதிரா உறங்குகிறாள் – அண்ணன் கோபு
      வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

      கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்
      கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

      -=-=-=-=-

      படம்: பாசமலர் (1961)
      பாடல் வரிகள்: கண்ணதாசன்
      பாடியவர்: டி.எம். செளந்தரராஜன்
      இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

      Delete
  53. Replies
    1. மிக்க அழகிய பாடல்.... மிக்க நன்றி கோபு அண்ணன்.

      Delete
  54. கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ஒத்து ஊதவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ...

    காமாட்சி மீனாட்சி பெரியம்மா
    நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா

    பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
    நான் தேடி வந்த மாப்பிள்ளை

    சீர் கொடுப்பேன் சிறையெடுப்பேன்
    என் தங்கச்சி முகத்தை சிரிக்க வைப்பேன்

    (கல்யாண)

    வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
    பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்

    காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
    ஊர் பேசும் பேச்சா இருக்கணும்


    புது மனையில் குடி வைப்பேன்
    முதல் இரவு முடிய விழித்திருப்பேன்

    (கல்யாண)

    பத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்
    பத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்
    பத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்
    பத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்
    பத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்
    பத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்
    பத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்
    பத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்
    பத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்
    பத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்

    நான் பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்

    மாமான்னு சொல்லணும்

    மழலை எல்லாம் கேட்கணும்

    முத்தமிட்டு மடியிலே கொஞ்சணும்

    பால் கொடுப்பேன் தேன் கொடுப்பேன்
    நான் பாட்டு பாடி தூங்க வைப்பேன்

    ஆராரோ ஆரிரரோ என் செல்வமே

    ஆராரோ ஆரிரரோ உலுஉலுலாயி

    ஆராரோ ஆரிரரோ என் செல்வமே

    ஆராரோ ஆரிரரோ

    (கல்யாண )

    கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ... ஒத்து ஊதவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ... ஒத்து ஊதவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    காமாட்சி மீனாட்சி பெரியம்மா
    நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா

    அம்மா.. காமாட்சி மீனாட்சி பெரியம்மா
    நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா

    பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
    பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
    நான் தேடி வந்த மாப்பிள்ளை

    சீர் கொடுப்பேன் சிறையெடுப்பேன்
    என் தங்கச்சி முகத்தை சிரிக்க வைப்பேன்

    கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ... ஒத்து ஊதவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
    பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்

    வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
    பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்

    காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
    (பா… பா……. ………………………)


    காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
    ஊர் பேசும் பேச்சா இருக்கணும்

    புது மனையில் குடி வைப்பேன்
    முதல் இரவு முடிய விழித்திருப்பேன்

    கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூட வா ஒத்து ஊதவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    இந்த ஊருக்கெல்லாம்
    பாக்கு வச்சி மேளம் கொட்டவா

    ooooooooooooooooooooooooooooooo


    http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

    ReplyDelete
  55. ooooooooooooooooooooooooooooooooo

    படம்: மேஜர் சந்திரகாந்த்

    இசை: வி. குமார்

    பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்

    ooooooooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  56. பாடலுக்கான வீடியோ இதோ இந்தப்பதிவினில் உள்ளது:

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/kalyana-saappadu-podava.html


    பாடல் காட்சியினைக் கண்டு களித்துவிட்டு, அவசியமாக அதில் உள்ள கமெண்ட்ஸ்களையும் படிச்சுப்பாருங்கோ. :)

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பாடல்களும் அருமை, மிக்க நன்றி கோபு அண்ணன்.

      Delete
  57. நான் இன்றுதான் இக்கதைைைப் படித்தேன். விஷயமே இன்றுதான் தெரியும். மஹிியின் பிளாக் மூலம் உங்களைத் தெரியும். கதை கச்சிதமாக மிகவும் அழகாக வந்திருக்கிறது. காமாட்சி ,மீனாட்சி பெரிம்மாவிற்கான அழைப்பும் இருக்கிறது. அழகான முறையில் கதை விரிகிறது. பாராட்டுகள் உங்களுக்கு. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ காமாட்சி அம்மா வாங்கோ, முதன் முதலா வந்திருக்கிறீங்க.. வலது காலை எடுத்து வச்சு வாங்கோ.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி.

      Delete
  58. ஆஹா! கதை சுப்பர்ப் அதீஸ்.

    உங்கள் அண்டாட்டிக்கா பயணம் இனியதாக‌ அமைய‌ என் அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இமா.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.. மிக்க நன்றி.. மீண்டும் வருக.

      Delete
  59. கதை மிகவும் யதார்த்தமாக இருக்கு .நல்ல முயற்ச்சி முடிவுக்கு கதை எழுதுவது.விடுமுறை கொண்டாடிவிட்டு விரைந்து வாங்க காத்து இருக்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நேசன்.. மன்னிச்சுக்கோங்க:) விடுமுறை முடிஞ்சு திரும்பி வந்துதான் பதில் போட மூட் வந்திருக்குதெனக்கு..

      Delete
  60. யாழ்தேவி இப்ப மிகவும் அழகாய் இருக்கு உங்க படத்தில்)))

    ReplyDelete
  61. ஆமா வெள்ளவத்தையில் நீதிமன்றம் இல்லையே)))கல்கில்சையில் தான் இருக்கு இப்படிக்கு கதையில் புரளி கிளப்புவோர்)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. மிக்க நன்றி நேசன் அனைத்துக்கும்.

      Delete
  62. கதையும் அருமை. பதில் கமெண்ட் டுகளும் அருமை

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.