நல்வரவு_()_


Friday 5 January 2018

உங்களிடம் சில வார்த்தைகள்:) கேட்டால் கேளுங்கள்:)

தலைப்பு இப்படித்தான் போடோணுமாம்:))
அட்வைஸ்கள் பற்றி தொடர்ப் பதிவாக எழுதச் சொல்லி  “அவர்கள் உண்மைகள்” புளொக் ஓனர்.. திருவாளர் ட்றுத்:) அவர்கள் அழைச்சிருக்கிறார்.

[[இந்தத் தொடர் பதிவு பற்றி, என் மனதில் ஒரு விசயத்தை நினைத்தபடி, அதை எழுதி தொடருக்கு கூப்பிடலாமே.. முன்னொரு காலத்தில் இருந்துதே, இப்போ யாரும் அப்படி தொடர்வதில்லையே என நினைச்சிருந்தேன்]]... ட்றுத் ஆரம்பிச்சிட்டார்ர்.. அதனாலே மகிழ்ச்சியுடன் இதனை தொடருகிறேன்.

அட்வைஸ் பற்றி எனக்குத் தெரியவில்லை, சிலநேரங்களில் என் மனம் போனபடி அலட்டுவது:) அட்வைஸ் போலாகியும் விடுகிறது:)) ஹா ஹா ஹா:)..

இது நான் ஏற்கனவே இங்கு எழுதியுள்ளவற்றை, அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து தொகுத்து இங்கு போட்டிருக்கிறேன்.[பாதி மீள் பதிவாக:)].

குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எனக்கு பெரிதாக ஏதும் அனுபவங்கள் இல்லை, ஆனா எனக்கு, என்னைச் சூழ உள்ளோர் சொன்ன அட்வைஸ்களை இங்கு பகிர்கிறேன், இது உங்களுக்கும் நல்லதெனப் பட்டால், நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றலாமே.

இலங்கையின் வடபகுதி, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருந்த, கொஞ்சக் காலத்தை அனுபவித்திருக்கிறேன். அந்தப் பாக்கியம் எல்லோருக்க்கும் கிடைக்காது, அந்நேரம் அங்கிருந்தோருக்கு மட்டுமே கிடைச்சிருக்கும். அது ஒரு அழகிய பொற்காலம்....:).

ஏன் அப்படிச் சொல்கிறேன் எனில், ஊரில் களவு என்ற சொல்லுக்கே அந்நேரம் இடமில்லை. ஒரு பொம்பிளைப் பிள்ளை எத்தனை மணிக்கும் வெளியே போய்வரக்கூடிய சுகந்திரம் இருந்தது. எந்த விதமான ஷேஸ்டைகள், தனகல்களே கிடையாது.. அவ்வளவு ஒரு கட்டுப்பாடான காலமாக அது இருந்தது.

ஆனா எந்தவித வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. தபால் தொடர்பு மட்டுமே இருந்தது. ரெலிபோன் எனில் கச்சேரியில் இருந்தது.. அது ஒன்றுதான் எனக்குத் தெரியும். போக்குவரத்துக்கூட துண்டித்திருந்தது, தரைப்பாதை இல்லை. இடையில் கடல்வழியேதான் தொடுக்கப் பட்டிருந்தது.

வெளி உணவுகள் , இங்கிலீசு மரக்கறி, சோப், இப்படியாக எதுவும் வாங்குவது கஸ்டம். ஆனாலும் கிடைக்கும்.. ஆனை விலை பூனை விலையில்:).. காசு இருப்போருக்கு பிரச்சனை பெரிதாக தெரியாது. கரண்ட் இல்லை ஆனாலும் ஜெனரேட்டர் பிடிச்சு புதுப்படங்கள் எல்லாம் பார்ப்போம். 

சைக்கிள் டைனமோவில் பாட்டுக் கேட்பார்கள், பனம்பழத்தில் சோப் உற்பத்தி நடந்துது... இப்படி பல புதுமைகள். பற்றரி வாங்கலாம் ஆனா விலைதான். மண் எண்ணெயிலயே வாகனங்கள் இயங்கின.

வீடுகளில் தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய் விளக்குகள்தான். ஆனால் ஜெனரேட்டர் பிடிச்சு, கோயில் திருவிளாக்கள், கல்யாணக் கொண்டாட்டம் எல்லாம் கோலாகலமாக நடக்கும்.. அதுக்கெல்லாம் குறையிருக்கவில்லை.

இப்படியான காலத்தில என் அளப்பரிய சொத்தாக ஒரு புது “லுமாலா லேடீஸ் பைக்” எனக்கிருந்தது. 
ஓரம்போங்கோ.. ஓரம்போங்கோ அதிராட லுமாலா
சைக்கிள் வருதூஊஊஊஊ:)
அதுக்கு கரியர், முன்னால கூடை எல்லாம் அழகாகப் போட்டு, என்னவெல்லாம் போட்டு அலங்கரிக்கோணுமோ அலங்கரிச்சு:), ஸ்டிக்கர் எல்லாம் அளவா+ அழகா ஒட்டி, எப்பவும் துடைச்சு துடைச்சு பளபளா என வைத்திருப்பேன். அந்நேரம் என்னைப் பார்த்தொருவர் சொன்னார், உங்களின் சைக்கிளைப் பார்த்தாலே தெரியுது, நீங்கள் எவ்வளவு சுத்தமாக இருப்பீங்களென, ஆனா இப்போ என் காரைப் பார்த்தால் அவர் என்ன சொல்லுவாரோ?:) ...ஙேஙேஙே.... சரி சரி அதெல்லாம் இப்ப எதுக்கு:).

இப்படியான காலப்பகுதியில், அப்பா வெளியூரில்தான் வேர்க் பண்ணிக்கொண்டிருந்தார்... அதனால் அவர் 3,4 மாதங்களுக்கொரு முறைதான் ஊருக்கு வந்து போவார். அப்பாவின் பிறந்த ஊர், பக்கத்து ஊர்தான், என் சைக்கிளில் 15, 20 நிமிடத்தில், நான் மாமி வீட்டில்(அப்பாவின் அக்கா) நிற்பேன். அப்பாவின் ஊரில்தான் அந்நேரம் என் வயதொத்த மச்சாள்மார் நிறைய இருந்தவை. எங்களூரில்  பெரிதாக எனக்கு குரூப் இல்லை..

அதனால நான் எப்பவும் அங்குதான் ஓடுவேன். அதிலும் ஒரு மாமிக்கு இரு மகள்மார். அவர்களோடுதான் நான் அதிகம் ஒட்டு. .

அம்மாவின் சட்டம், நீ போய்வா, ஆனா 3 மணிக்கு முன் போகக்கூடாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடோணும்... இதை எப்பவும் மீறமாட்டேன் நான், ஆனா எப்படியும் 6 மணிக்கு 10, 15 நிமிடம் தாமதமாகிடும் வந்து சேர.. ஏனெனில் என்னைக் காணவில்லை எனில், இன்னொரு ஆள் அனுப்பித்தான் தேடோணும், ஃபோன் வசதி இல்லையெல்லோ. அதுதான் பிரச்சனையே. அங்கு மாமி வீட்டு Gate இல் 5.45 க்கு சைக்கிளோடு வெளியே வருவேன், ஆனால் விடமாட்டினம், கேட்டில் நின்று கதைக்கவே நேரம் போயிடும்.. கதைச்சு முடியாது, பிறகு மின்னல் வேகத்தில் வீட்டுக்கு வந்திடுவேன்.

சில நாட்கள் திரும்பிவர விடாயினம், நில்லுங்கோ என மறிப்பினம், அப்படியெனில்... ஆரும் தம்பிமாரை கெஞ்சி, ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லிப்போட்டு வரும்படி அனுப்பி வைப்போம்.. இப்படியெல்லாம் செட்டப்புக்கள் நடக்கும்.

அப்படியான காலநேரத்தில் ஒரு தடவை, அப்பா லீவில் வந்து நிண்டவர். ஒருநாள் இரவு, என் ரூமில் நான் படுத்திருக்கிறேன், வெளியே ஹோலில் அப்பாவும் அம்மாவும் கதைச்சுக் கொண்டிருக்கினம், நான் நித்திரையாகவில்லை, அது அவர்களுக்கும் தெரியும் என்பது அப்போ எனக்கு புரியவில்லை:).

அப்போ அம்மா சொல்கிறா அப்பாவுக்கு.... “இஞ்ச பாருங்கோ, என்னால அதிராவைப் பார்க்க முடியாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடும்படி சொன்னால், நேரத்துக்கு வருவதில்லை, நானும் எத்தனை நாளைக்குத்தான் இப்படிப் பயப்பிடுவது தனியே, நீங்கள் நிண்டு கவனியுங்கோ” என. இதைக் கேட்டதும் எனக்கோ அப்பா ஏசுவாரோ என நெஞ்சு திக்கு திக்கு எண்ணுது...

ஆனா பாருங்கோ உடனே அப்பா என்ன சொன்னார் தெரியுமோ?:).. “அதிராவைப் பற்றியா சொல்றீங்க? என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியாதோ? சும்மா எல்லாம் சொல்லாதீங்க, அதிரா சொன்ன சொல் மீறாத பிள்ளை, அவள் நேரத்துக்குத்தான் வந்திருப்பாள், நீங்கதான் சும்மா சொல்றீங்க” என்றார்....

இதைக் கேட்ட எனக்கு நெஞ்செல்லாம் அடைக்கத் தொடங்கிட்டுது, கடவுளே அப்பா என்னில எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறார், இந்த நம்பிக்கையை எண்டைக்கும் நான் வீணடிச்சிடக்கூடாது, என மனதில் சபதம் எடுத்தேன். ஏனெனில் அப்போதிருந்த வயது சபலமான வயது, பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரம்:).. நாட்டிலும் பிரச்சனையான நேரம்.. ஆனால் அப்பாவின் அந்த ஒரு வசனம், என்னை உறுதியான ஒரு பெண்ணாக வளர வழிவகுத்தது.

பின்னர்தான் நான் ஓசிச்சுக் கண்டு பிடிச்சேன், எனக்குக் கேட்கட்டும் என்றுதான் அப்பா அப்படிச் சொல்லியிருப்பார் என. ஏனெனில் எப்பவுமே பிள்ளைகளை ஏசுவதை விட, இப்படிச் சொன்னால் அவர்கள் நல்லபடி வளர இதுவும் ஒரு முறையாம்.

சின்ன வயதிலிருந்தே அப்பா, ஒரே அட்வைஸ் பண்ணுவார், அப்போ சொல்லித் தருவார், ஆரும் ஏதும் சொன்னாலோ, கிண்டல் பண்ணினாலோ பயந்திடாதே.. உன்னைப் பார்த்து குரங்குபோல இருக்கே/பேய்போல இருக்கே[ஹா ஹா ஹா, ட்றுத் நகைச்சுவைக்குச்  சொன்னபோது, நான் மனதில், அப்பா அன்று சொன்னதை நினைத்துச் சிரித்தேன்:))] என ஒருவர் சொன்னால்கூட... கலங்கிடாதே..யாரும் எதுவும் சொல்லட்டும், எனக்குத் தெரியும் என்னைப்பற்றி என மனதில நினை... இப்படியான பிரச்சனைகள் வரும்போது மனதில் போட்டுக் குழம்பிடாதே, தூசுபோல தட்டிப்போட்டு உன் வேலையைக் கவனிக்கப்பழகு... [ஏனெனில் இப்போ நமக்கு மனம் ஓரளவுக்குப் பக்குவப்பட்டு விட்டது, சின்ன வயதில் இப்படியானவை எல்லாம் பெரிய விசயங்கள்:))]

இப்படி அட்வைஸ்கள் நீளும். அப்போ எழுந்து போக முடியாமல் பல்லைக் கடித்தபடி கேட்டுக்கொண்டிருப்போம், ஆனால் அவைகள்தான் எனக்கு மனதில் பல உறுதியையும் எல்லோரோடும் தயங்காமல் பழகும் தன்மையையும் கொடுத்ததெனலாம். ஆண்பிள்ளைகளோடு எப்படிப் பழகுவது என்றெல்லாம் கூச்சப்படாதே, ஆரோடும், பேசினால் பேசு, ஆனா பழகும்போது உனக்கு தெரியவரும், எப்படிப் பட்டவர்கள் என, உன் மனதுக்கு ஏதும் வித்தியாசமாகத் தோன்றினால் உடனேயே கட் பண்ணிடு தொடர்பை, அப்படிக் கற்றுக்கொள், அதை விடுத்து கதைக்காமல் ஒதுங்கிப் போகாதே என்றெல்லாம் சொல்லுவார்ர்...

அப்பாவோடு போகும்போதே என் ஆண் நண்பர்களோடெல்லாம் பேசுவேன், வீட்டில் அப்பா அம்மா எதுக்கும் தடையில்லை, அவர்கள் அப்படி நடந்தமையால், என் மனதில் உதித்த எண்ணம், என்னில் இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கினமே.. இந்த நம்பிக்கைக்கு எப்பவும் நான் துரோகம் செய்திடக்கூடாது என்பதே.

ஒருவரை, நீ கூடாது, படிக்க மாட்டாய், திருந்தமாட்டாய், கோபக்காரி இப்படித்திட்டினால், அப்பிள்ளை அப்படியேதான் வருமாம், நீ நல்லனி வல்லனீ தங்கம் கெட்டிக்காரி எனச் சொன்னால் அப்பிள்ளை அப்படி வந்திடுமாம், எனவே எப்பவும் யாரையும் கூடாமல் சொல்லிடாதீங்க, கோபம் வரும்போது முடிந்தவரை மெளனம் காத்திடல் நன்று... ஆனா சிலர் மெளனமாக இருக்கவும் விடாயினம் , எதையாவது சொல்லி சீண்டி சீண்டி எதிர்த்துப் பேசப் பண்ணிடுவார்கள்:).

திருமணமான காலத்திலிருந்து என் கணவர் என்னிடம் அடிக்கடி சொல்லும் சில வசனங்கள்... 
+ யூ ஹஃப் எ குட் ஹார்ட்:)[இதை முன்பும் சொன்னதுண்டு இங்கு:)]..

+ ஆ யூ ஹப்பி அதிரா???

+ என்னில உங்களுக்குப் பிடித்த விசயம் 2 சொல்லுங்கோ, பிடிக்காத விசயம் 2 சொல்லுங்கோ...:)


இன்னொன்று, வீட்டில் என்ன நல்ல விசயம் நடந்தாலும் உடனே சொல்லுவார், உங்களால்தான் இது நடந்தது, உங்கள் நல்ல மனதால்தான் நான் எக்ஸாம் பாஸ் பண்ணினேன்..., நீங்கள் சொல்வதுதான் சரி... இப்படிப் பல:),  இவை எல்லாம் காதில் கேட்கும்போது பிணைப்பு இன்னும் அதிகமாகும்.. ஒருநேரம் அவர் ஏதும் தப்பு செய்தாலும்.. அதெல்லாம் தப்பே இல்லையே எனும் மனநிலை நமக்கு வந்து விடுகிறது. [விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு அதிகமாகிறது].

என்னைப் பொறுத்து குழந்தைகள் கேட்கிறார்களோ இல்லையோ.. அவர்களின் காதுக்கு அட்வைஸ் போல பல கதைகள் சொல்லிக் குடுக்க வேண்டும்... அவர்களுக்கு போறிங் வந்திடாமல்.. வீட்டில் வைத்து ஏதும் சொல்ல வெளிக்கிட்டால் நைஸ் ஆ எழும்பிப் போயிடுவினம், எனவே காரில் ஏறியபின் கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல வருவதை சொல்லி முடிச்சிடுவோம்:).. இறங்கி ஓட முடியாதெல்லோ...

குருவே, ஓவரா அலட்டிக்கொண்டிருக்கிறேனோ எனப் பயமாக இருக்கு:) என்னைக் கொஞ்சம் காப்பாத்துங்கோ:))

பிளீஸ்ஸ் பிளீஸ்ஸ் நீங்களும் எல்லோரும் என் காரில ஏறி இருங்கோ:) நான் லொக் போட்டிட்டு இன்னொரு சம்பவம் சொல்லப்போறேன்:) அப்போதானே இறங்கி ஓட மாட்டீங்க:))

எனக்கு சின்ன வயது ஞாபகங்கள் அப்படியே பசுமரத்தாணிபோல மனதிலே இருக்கு. நான் முதன் முதலில் கடிதம் எழுதத் தொடங்கியது என் 6, 7 ஆவது வயதில் என நினைக்கிறேன்.

எமது ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவர், அப்போது யூனிவசிட்டியில் இருந்தார். அவர் எப்போதும் என்னோடு நன்கு பாசமாக இருப்பார். யூனி போனதும் அங்கிருந்து எனக்கு மட்டும் தனியாக ஒரு என்வலப்பில் என் பெயர்போட்டு முகவரி இட்டு மெயில் அனுப்புவார், வீட்டில் ஏனையோருக்கு ஒரு மெயில் அனுப்புவார். அந்த வயதில் என் பெயரில் முகவரியிட்டு மெயில் வருவது எனக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சியைக் கொடுக்கும். வீட்டில் அண்ணன், அக்கா எல்லோரும் என்னைக் கலைப்பார்கள் கடிதம் படிக்க, நான் ஏதாவது அவர்களிடம் பெற்றுக்கொண்டு (காசு, கன்டோஸ், மிட்டாய்... etc.,) படிக்கக் கொடுப்பேன்.

பின், அம் மெயிலை என்னிடமிருந்த அந்த குட்டி சூட்கேஷில் பத்திரமாக அடுக்கி வைப்பேன். அவரின் எழுத்து முத்து முத்தாக இருக்கும். எனக்குப் புரியவேண்டும் என்பதற்காக, இன்னும் அழகாக அச்சிட்டதுபோல எழுதுவார். எழுதும் பேப்பரிலும் கோடுகள் வரைந்து அழகாக்கி அனுப்புவார். நான் எப்பவும் எனக்குப் பிடித்தவர்களை என் ரோல் மொடலாக எடுத்துக்கொள்வது வழக்கம், அவர்களின் நடை உடை பாவனைக்கு நானும் மாற முயற்சிப்பேன்(இப்பவும்தான்). அதுபோல் அவரின் எழுத்துக்களை பார்த்துப் பார்த்து நானும் அழகாக்கி எழுதப்பழகுவேன்.

எனக்கு கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள்.... ஏன் கண்ணதாசனில்கூட ஆர்வம் உருவாக வித்திட்டவர் அவரென்றே சொல்லலாம். அந்தளவுக்கு கடிதத்தில் எப்படியும், ஒரு பொன்மொழியோ பழமொழியோ அல்லது தத்துவமோ எனக்குப் புரியக்கூடிய வகையிலே எழுதுவார். அவரது கடிதம், கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் புத்திமதியாக, நல்ல அன்பாக, ஒரு குழந்தைக்கு எது நல்லதோ அவ்வகையில் அமைந்திருக்கும். இரு பக்கங்களாவது எழுதுவார், நானும் அப்படியே ஸ்கூல் நியூசிலிருந்து வீட்டு நியூசெல்லாம் கொடுப்பேன் பெரிய பதிலாக.

அப்போது எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம், அவரது கடிதம் வந்த மறுநாளே நான் போட்டுவிடுவேன், ஸ்கூலால் வந்ததும் கடிதம் வந்திருப்பின் வாசித்த கையோடு, மேசையில் எல்லாம் இருக்கமாட்டேன், நடுக் ஹோலிலே, நிலத்திலே படுத்திருந்துதான் எழுதுவேன், பின்புதான் சாப்பிடப்போவேன். அதேபோல என் கடிதம் கிடைத்ததும், என்ன படிப்பென்றாலும் பதில் போட்டுவிடுவார்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், எனக்கு அட்ரஸ் எழுதவெல்லாம் தெரியாது, எனவே கடிதத்தை எழுதி அப்பாவிடம் கொடுத்துவிடுவேன், அவர் ஒபீஸ் போகும்போது/வரும்போது போஸ்ட் பண்ணிவிடுவார்.. அப்பாதான் எனக்கு அப்போ தபால்காரர்:).

ஒரு தடவை கடிதம் எழுதி அப்பாவிடம் கொடுத்தேன், எத்தனை நாளில் பதில் வருமெனத் தெரியும், ஆனால் பதில் வரவில்லை, மீண்டும் இன்னொரு கடிதம் எழுதினேன், அப்பாவிடம் கொடுத்தேன், பதில் இல்லை. 

மூன்று கடிதங்கள் போட்டுவிட்டேன் பதில் இல்லை. எனக்கு கோபம்தான் வந்தது, அப்படிப் பதில்போட முடியாமல் போய்விட்டதே அவரால், ஒருவேளை மறந்து போய்விட்டாரோ என்றெல்லாம் அந்தக் குட்டி மனதில் கோபம் வந்துவிட்டது:).

உடனே அதேபோல குப்புறக்கிடந்து இன்னொருமடல், என் கடிதத்துக்கு ஏன் பதில் போடவில்லை என கோபமாக என்ன எழுதினேனோ நினைவில்லை எழுதி, மீண்டும் என் மதிப்புக்குரிய, நம்பிக்கைக்குரிய தபால்காரரான அப்பாவிடம் கொடுத்து, கொடுக்கும்போது, அப்பாவுக்கும் ஏசினேன், பாருங்கள் அப்பா எத்தனை நாளாகிவிட்டது, நானும் மூன்று கடிதங்கள் போட்டுவிட்டேன் பதில் இன்னும் வரவில்லையே எனச் சொல்லியபடி கொடுத்தேன். அப்பா ஒரு புன் முறுவலோடு, கடிதத்தை வாங்கி, அப்படியா ஆச்சி? என சொல்லிக்கொண்டு பொக்கட்டில் வைத்துக்கொண்டு போய் விட்டார்.

மீண்டும் பழையகணக்குப்படி சரியான நாளில் பதில் வந்திருந்தது. இம்முறை பெரிய கடிதமாக பல பக்கங்களில் பதில் வந்திருந்தது. அவர் எழுதித்தான் எனக்கு உண்மை தெரியவந்தது. நடந்தது என்னவென்றால்...

நான் கடிதத்தை எழுதி அப்பாவிடம் கொடுக்க, அப்பாவுக்கு அந்நேரம் ஒபீஷில் ஏதோ கடும் வேலைபோலும், அதனால் என் கடிதங்களை ஒபீஷ் ரேபிள் லாச்சியில் போட்டு வைத்திருக்கிறார், அனுப்பவில்லை.

நாலாவது கடிதம் கொடுத்தபோது நான் ஏசினேன் தானே, அதன்பின்புதான் போஸ்ட் பண்ணவில்லை என நினைவு வந்து, அப்பா தானும் ஒரு கடிதம் எழுதி, தான் தான் மறந்துவிட்டேன் என, எல்லாக் கடிதத்தையும் ஒரு என்வலப்பிலே வைத்து அனுப்பியிருக்கிறார்.

அப்போதான் அவர் எழுதியிருந்தார், உங்கள் பதில் பார்த்து மிகவும் கவலையடைந்துவிட்டேன். ஏன் என்னோடு கோபித்தீங்கள்? தவறு என்னில் இல்லை, நீங்கள் எப்படி என்னைத் தவறாக நினைத்தீங்கள், என் பதில் வராவிட்டாலும்கூட, நான் பதில் அனுப்பவில்லையே என தப்பான முடிவுக்கு வரக்கூடாது. எனக்கும் எக்ஸாம் நேரமாகவும் இருந்தது, உங்களிடமிருந்தும் பதில் வரவில்லை எனவேதான், எக்ஸாம் முடியட்டும் என விட்டிருந்தேன். 

எமக்கு கோபம் வந்து, அக்கோபத்தோடு ஒரு கடிதம் எழுதும்போது, அந் நேரம் அது எமக்கு சரிபோலத்தான் தெரியும். ஆனால், எப்பவுமே நாம் ஒரு கடிதமோ, பதிலோ அடுத்தவருக்கு அனுப்பும்போது, எழுதுபவராக மட்டும் இருக்கக்கூடாது, வாசிப்பவராகவும் இருந்து, அந் நேரம் வாசிப்பவரின் மனநிலை எப்படி இருக்குமென்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

“அன்பற்ற இடத்திலிருந்து வரும்
மலையளவு எதிர்ப்பையும்
தாங்குகிற இதயம்,
அன்புள்ள இடத்திலிருந்து வரும்
கடுகளவு எதிர்ப்பைக்கூட
ஏற்க மறுக்கிறதே”

இப்படியெல்லாம் இன்னும் ஏதேதோ... (இப்ப இருந்திருந்தால் அக் கடிதத்தையே ஸ்கான் பண்ணிப்போட்டிருக்கலாம், இடம்பெயர்வுகளோடு அந்த குட்டி சூட்கேஷும் தொலைந்துவிட்டது) எழுதி, முடிவிலே இதை எழுதியிருந்தார்...

“இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய் கவர்ந்தற்கு”

அவர் இதுக்கு மட்டும் கருத்துக்கூறவில்லை, கண்டுபிடியுங்கள் என்றுதான் எழுதியிருந்தார். அத்துடன் அப்பிரச்சனை முடிந்து கடித எழுத்துக்கள் தொடர்ந்தது. எனக்கு அது திருக்குறள் எனத் தெரியாது, ஏதோ பழமொழி என நினைத்துவிட்டேன். ஏன் அப்பா அம்மாவிடம்கூட விளக்கம் கேட்காமல் விட்டேன் எனவும் நினைவில்லை.

ஆனால் சின்ன வயதென்பதால், அதெல்லாம் பசுமரத்தாணிபோல மனதிலே பசுமையாக படிந்துவிட்டிருந்தது. அதனால் இன்றுவரை, ஒரு மெயில் எழுதும்போதுகூட அது நினைவுக்கு வரும். இருப்பினும் என்னதான் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் விதி தவறாகி, கண்ணை மறைத்து,  வேண்டுமன்றல்ல, யோசிக்காமல் மெயில் அனுப்பி விடுவதுமுண்டு. அது தவறுதான். எழுதிப் போஸ்ட் பண்ணியபின், ரேசர் போட்டு அழிக்கவா முடியும்?:).

இக்கடிதம் உணர்த்தும்(எனக்கு உணர்த்தியிருக்கும்) இரு உண்மைகள் என்னவென்றால். குழந்தைப்பிள்ளைதானே என அலட்சியம் கொள்ளாமல், முடிந்தவரை அதுக்கும் புத்திமதிகள், அறிவுரைகளை அன்பாக சொல்லிக்கொடுக்கோணும்... நிட்சயம், அது அப்போ புரியாதுவிட்டாலும் மனதில் பதியும், வளர வளர அர்த்தம் புரிந்துகொள்ளும். எமது குழந்தையென்றல்ல, எமக்கு பிடித்த யாரின் குழந்தையானாலும் சரி.. அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறலாம்.

எனக்கு இப்பூடியே பல சம்பவங்கள் அருவியாக் கொட்டுது:) ஆனா ட்றுத் எதை எதிர்பார்க்கிறாரோ அதை சரியாக எழுத முடியவில்லை என்னால என்றுதான் நினைக்கிறேன்:)..

உலகிலேயே விலை கொடுக்காமல் கிடைக்கக்கூடியது இந்த அட்வைஸ்தானாம்:), அதனாலதான் நம் எழுத்தும், பெரிய பெரிய போஸ்ட்டாகிடுது:)...

அட்வைஸ் சொல்லச் சொன்னால், கதை எழுதியிருக்கிறேன் என நினைப்பீங்க:).. வாழ்வில் நடந்த கதைதானே அனுபவமாகிப் பின் அட்வைஸ் ஆகிறது:)..

இன்னும் கொஞ்சம் ஜொள்ளட்டோ?:).. சரி விடுங்கோ.. அஞ்சுவைப்போல என் அருமை பெருமைகளையும் அவிழ்த்து விடலாம் என நினைச்சேன்:)).. பத்தல பத்தல சாக்குப் பத்தல:)) ஹா ஹா ஹா:)..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹையோ புறுணம்:) பார்க்காமல் எழும்பிநிண்டு அமத்துங்கோ ஆக்‌ஷிலரேட்டரை:).. கூட்டமாக் கலைக்கினம்.. கூட்டத்தில தலைவி அஞ்சுபோலத் தெரியுதே:). இதுதான் கூட இருந்தே குழி பறிக்கிறதோ:).. அப்பூடி நான் என்ன ஜொள்ளிட்டேன்:)..

இதனை தொடர நான் அழைப்பது...
ஜி எம் பி ஐயா
நெல்லைத்தமிழன்
வெங்கட் நாகராஜ்
இளமதி
அம்முலு
அழைத்தோர்தான் எழுதோணும் எண்டில்லையே.. என்பக்கம் வருவோர் எல்லோரும் எழுதுங்கோ படிக்க ஆவலாக இருக்கிறேன்... 
இத்தோடு என்னும் ஒருவரை அழைக்கிறேனே:)) இம்முறை அவர் சூப்பர் மாட்டி:) அதாவது கீதாவைச் சந்திச்ச மதுரைத்தமிழனின் டூப்:).. அந்த டூப் அங்கிளையும் தொடர் எழுத அழைக்கிறேன்:)..
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
ஊசிக்குறிப்பு:-
 “நான் வற்றிப் போனபின் தான் தெரிந்து கொண்டேன், என்னை
எத்தனைபேர் குடி நீராகப் பாவித்தார்கள் என்பதை”..
இப்படிக்கு:) தேம்ஸ்:)...
 இதனைக் காவிவந்து இங்கே தருபவர்:) உங்கள் பெருமதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:).
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
தமனாக்காவை இங்கின டச்சு பண்ணுங்கோ:).. பீஸ்ஸ்ஸ்:))
நன்றீஈஈஈஈ தங்கூஊஊ

இந்த போஸ்ட் க்குக் கிடைச்ச வியூஸ்ஸ்ஸ்:)) ஆவ்வ்வ்வ்:))

__________----------___________()__________---------___________

196 comments :

  1. Firstttttttttttttttttttttttttttttttttttt

    ReplyDelete
    Replies
    1. யேஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) லுமாலா உங்களுக்கே:) வாங்கோ அஞ்சு வாங்கோ...

      Delete

  2. மியாவ் தொடர்பதிவை வாசிக்க ஓடோடி வந்தேன் :)
    ஹையா எனக்கும் உங்க லுமாலா மாதிரி bsa slr இருந்ததே அதுக்கு கரியர், முன்னால குடை//குடை எதுக்கு காரியருக்கு கூடையா

    ReplyDelete
    Replies
    1. ///மியாவ் தொடர்பதிவை வாசிக்க ஓடோடி வந்தேன் :)///

      இந்தாங்கோ.. இந்தாங்கோ மோர்..மோர்ர்.. இது ஹொட் மோர்:).. இல்லை எனில் ஸ்ரீராம் பேசுவார்:) குளிருக்கு எதுக்கு கோல்ட் மோர் என:) அதனால ஹீட் பண்ணிட்டேன்:)..

      அது கூடை அஞ்சு.. மாத்திட்டேன்:)...

      Delete
    2. /அதனால ஹீட் பண்ணிட்டேன்:)..//
      ஹீட் பண்ணின மோரை கொழுமோர் என்று சொல்லுவோம். அதை எதற்கு கொடுப்போம் தெரியுமா? எதையாவது பார்த்து (படித்து?!!) பயந்துபோனவர்களுக்கு. அஞ்சு இதைப் பார்த்து / படித்து பயந்திருக்கிறார்?!!!

      Delete
    3. கடைசி வரியில் இதைப்பார்த்து இல்லை எதைப்பார்த்து என்று இருக்கவேண்டும். ஐயோ ஆறு மணியாகப் போகுதே... எங்கள் பிளாக்குக்கு ஓடவேண்டுமே...

      Delete
    4. ///ஹீட் பண்ணின மோரை கொழுமோர் என்று சொல்லுவோம். அதை எதற்கு கொடுப்போம் தெரியுமா?//

      ஓ அப்படியும் ஒரு பெயர் இருக்கோ.. இப்போதான் அறிகிறேன்... இப்பூடித்தான் ச்சும்மா எதையாவது உளறுவேன்.. ஆனா அதிலிருந்து நல்ல விசயம் கிடைச்சிடும் எனக்கு பல சமயம்:)...

      பயந்து போனவர்களுக்கு:))??.. ஹஅ ஹா ஹா அதுக்கு வேப்பங்குழை
      அடி வைத்தியம்தான் நல்லது:) அதுவும் தேம்ஸ் கரையில் வச்சுக் குடுத்தால் உடனே குணமாகிடும்:))... ஆமா நான் என் படமேதும் இங்கு போடவில்லையே:) பிறகு எதைப்பார்த்துப் பயந்தாக?:))

      Delete
    5. //கடைசி வரியில்//

      என்னால கண்டு பிடிக்க முடியுதில்லையே:)..

      ////ஐயோ ஆறு மணியாகப் போகுதே...///
      ஹா ஹா ஹா நீங்க கீதாக்காவை டைவேர்ட் பண்ணியதைப்போல:) இங்கு பேசிக்கொண்டே அங்கு பப்ளிஸ் பண்ணுவிங்க எனத் தெரியும்:) அதனால மீ இதில வலு உசாராக்கும் ஜம்ப் பண்ணிட்டேன்ன்ன்:)) 1ஸ்ட்ட்டா:).. ஹா ஹா ஹா..

      Delete
    6. ஸ்ரீராம் - எதையாவது பார்த்து (படித்து?!!) பயந்துபோனவர்களுக்கு. - இதனைப் படித்தபோது எனக்கு நேர்ந்த அனுபவம் நினைவுக்கு வந்துவிட்டது. நான் ஒரு பெண்ணிற்கு (என்னைவிட 5 வயது பெரியவர், வீட்டிற்கு மாலை 5.30-6 மணிக்கு பெரிய கிணறில் எங்களுக்கு நீர் எடுத்துவரப்போனவர்) உதவுவதற்காகச் சென்று ராட்டையை மாட்டிக்கொடுத்தேன். அது சரியாக மாட்டாததால், கீழே விழும்போது (கிணற்றின் நடுவில் இருப்பது) 6ம் வகுப்புப் படித்த என்னையும் கீழே இழுத்துவிட்டது. அது அகலமான கிணறு. உள்ளே 4 அடி தண்ணீர், 30 அடி கீழ் இருப்பது. தலைகீழாக விழுந்தேன். அதைப் பார்த்த அந்தப் பெண், பயத்தில் மூர்ச்சையாகிவிட்டார். சத்தம் கேட்டு வந்தவர்கள், என் வீட்டிலும் சொல்லி... கடைசியில் உயிருடன் வெளியே கயறு கட்டி, ஆளுடன் என்னை வெளியே இழுத்தார்கள். எனக்கு அப்போது, மோரைக் கொதிக்கவைத்து, அதில் இரும்பு கம்பியையும் போட்டு, குடிக்கக் கொடுத்தார்கள். (வெறும் சுடு மோர் இல்லை, அதில் இரும்பும் சேரணுமாம்.... பேய் அடிக்காமல் இருக்க)

      Delete
    7. ///அதைப் பார்த்த அந்தப் பெண், பயத்தில் மூர்ச்சையாகிவிட்டார்.///
      ஹா ஹா ஹா:)

      ///கடைசியில் உயிருடன் வெளியே கயறு கட்டி, ஆளுடன் என்னை வெளியே இழுத்தார்கள்//
      அதென்ன உயிருடன்:)) ஹா ஹா ஹா:)) நல்லவேளை சுவரில் மோதுப்படவில்லை:))..

      ///பேய் அடிக்காமல் இருக்க)///
      ஹா ஹா ஹா ஹையோ முருகா முடியல்ல என்னால:))

      Delete
  3. உங்க அப்பாவும் வெளியூரா மியாவ் .எங்கப்பாவும் அப்படிதான் .மாசம் ஒருவாட்டிதான் வருவார் கவர்ன்மெண்ட் வேலை


    //அப்பாவும் அம்மாவும் கதைச்சுக் கொண்டிருக்கினம், நான் நித்திரையாகவில்லை, அது அவர்களுக்கும் தெரியும் என்பது அப்போ எனக்கு புரியவில்லை:).//
    ஹாஹாஹா உங்களுக்கு தெரியுமா மியாவ் இந்த அப்பா அம்மாங்களே இப்படித்தான் :) நமக்கு கேட்கணும்னே சத்தமா பேசி நமக்கு அட்வைஸை ஏற்றி விடுவாங்க வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறப்போல

    ReplyDelete
    Replies
    1. நாங்கதான்.. ஆர் சொன்னாலும் நம்பிடுவோமே:) அப்போ அப்பா அம்மா ஜொன்னா மட்டும் நம்பமாட்டமோ?:).. ஹா ஹா ஹா:)..

      Delete
  4. இருங்க ஒரு நிமிஷம் கோனார் நோட்ஸ் குடுக்கணும் ஸ்ரீராமுக்கும் நெல்லைத்தமிழனுக்கும்
    கச்சேரி ..கவர்ன்மென்ட் ஆஃபீஸ்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இதுக்குத்தான் கு கு என்பேன்:)).. அவர்களுக்கு டமில் தெரியுதோ என செக் பண்ணியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்:))

      Delete
    2. ஹா.... ஹா... ஹா... ஏஞ்சல்.. அது தெரியுமே எனக்கு!

      Delete
    3. மேடம் அவங்களுக்கு tamil தெரியும் ஆனா நீங்க எழுதறது damil .நீங்கதான் தமிழில் D எடுத்த ஆளாச்சே

      Delete
    4. ஒபீஷ் ரேபிள் லாச்சியில்//table drawer

      Delete
    5. //ஸ்ரீராம்.Saturday, January 06, 2018 12:21:00 am
      ஹா.... ஹா... ஹா... ஏஞ்சல்.. அது தெரியுமே எனக்கு!//

      ஹா ஹா ஹா அப்ப்பாடா ஸ்ரீராமுக்கு டமில் புரியுது:))

      ///PaperCrafts AngelSaturday, January 06, 2018 12:26:00 am
      மேடம் அவங்களுக்கு tamil தெரியும் ஆனா நீங்க எழுதறது damil .நீங்கதான் தமிழில் D எடுத்த ஆளாச்சே///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னுடையது பசுநெய் போன்ற :) யுத்தத்தமிழ்:).. ஹையோ டங்கு ஸ்லிப்ட்:) சுத்த டமில்:) ஆக்கும்:))

      Delete
    6. ///
      PaperCrafts AngelSaturday, January 06, 2018 12:34:00 am
      ஒபீஷ் ரேபிள் லாச்சியில்//table drawer//

      ஹா ஹா ஹா கிரிஸ்மஸ் க்கு போனஸ் குடுத்தது எவ்ளோ அழகா வேர்க் ஆகுதூஊஊஊஊஊ:))..

      Delete
  5. அதிரா நானும் சொல்றேன் யூ ஹவ் எ குட் ஹார்ட் ..இப்போ உடனே உங்களுக்கு அந்த நெக்லஸை எனக்கு தரதோணுமே வெய்ட் வெய்ட் மேட்சிங்கா கம்மலோட சேர்த்தே குடுங்க :)))
    அதிரா உண்மையில் கணவன் மனைவிக்குள் இப்படி அன்பான உரையாடல்கள் புரிந்துணர்வு தேவை .இதை வாசிக்கும் பலருக்கு பயன்படும் .

    ReplyDelete
    Replies
    1. ///அதிரா நானும் சொல்றேன் யூ ஹவ் எ குட் ஹார்ட் ..இப்போ உடனே உங்களுக்கு அந்த நெக்லஸை எனக்கு தரதோணுமே வெய்ட் வெய்ட் மேட்சிங்கா கம்மலோட சேர்த்தே குடுங்க :)))///

      ஹா ஹா ஹா இப்பூடிச் சொன்னா என் கார்க் கீயைக்கூடத் தந்திட்டு நடந்தே போயிடுவேன்:)).. நெக்லெஸ் தானே தேம்ஸ் கரைக்கு வரவும்:))..

      //இதை வாசிக்கும் பலருக்கு பயன்படும் .//

      மிக்க நன்றி அஞ்சு:)) சிலதை சொல்லலாமா விடலாமா என பலமா ஓசிச்சுப் போட்டும் எழுதியிருக்கிறேன்... பயன்படுமெனில் சந்தோசம்தானே...

      அஞ்சு என் பச்சைக் கல்லு மோதிரம் உங்களுக்கே:)..

      Delete
    2. இதுக்கெல்லாம் தயங்காம என்கிட்டே அட்வைஸ் கேக்கணும் மியாவ் ..:)

      Delete
    3. ///இதுக்கெல்லாம் தயங்காம என்கிட்டே அட்வைஸ் கேக்கணும் மியாவ் ..:)///

      சும்மா ரோட்டில நடக்கும்போதே:) தடக்கி விழாமல் இருக்க என்ன பண்ணோணும் அஞ்சு?:)) ஹா ஹா ஹா அட்வைஸ் ஜொள்ளுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))..

      Delete
    4. [im]http://animalsfoto.com/photo/bd/bd7eb82849ce4a29bd93168d9bddd816.jpg[/im]

      Delete
    5. அஆவ் பறக்கமுன் சொல்லிடுங்க :) சோலார் பேனல் இன்சூரன்ஸை ரினியூ பண்ணனும் :)

      Delete
    6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்போ சோலார் பனலா முக்கியம்:) உங்க வீட்டருகில் இருக்கும் உயரமான மரங்களை எல்லாம் வெட்டிடுங்கோ:)).. மீக்கு கீறிடப்போகுது:))

      Delete
  6. //தலைப்பு இப்படித்தான் போடோணுமாம்:))//

    எப்படி? இப்படி கலர் கலராகவா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. இன்று கண் முழிப்பதே என் பக்கத்திலதான்போல:) ஆண்டவா இந்நாள் இனிய நாளாகட்டும் :))

      //எப்படி? இப்படி கலர் கலராகவா?///
      ஹையோ ஆண்டவா இப்படியும் அர்த்தம் இருக்கோ:))

      Delete
  7. சந்திரபாபுவின் இந்தப் பாடலும், டான்ஸும் எனக்கு நிரம்பவும் பிடிக்கும். எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும். ஆமாம். உண்மை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அட்வைஸ் க்கு ஏற்ற பாடல் தேடினேன்.. இது கிடைச்சுது.. இதுவும் நல்லாத்தானே இருக்கு.. ஒருவிதத்தில படிப்பினை கூறுது எனப் போட்டேன்..

      மிக்க நன்றி ஸ்ரீராம்.. நாம் பார்க்கும் விதத்திலதானே எல்லாம் இருக்கு...

      தப்பை தப்பாப் பார்த்தால் தப்பாவே தெரியுமாம்:)
      தப்பைக்கூட நேராப் பார்த்தால் நேராவே தெரியுமாம்:)..
      இது அனைத்துக்கும் பொருந்தாது, ஆனா பல சமயங்களுக்கு நல்லது..

      Delete
  8. தொடர்பதிவு மீண்டும் ஆரம்பித்திருப்பது பழைய நினைவுகளை கொசுவர்த்தி சுற்றி வரவழைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. உண்மை, அத்தோடு ஆரம்பகாலத்தில் நாம் எழுதிய தொடர்பதிவுகளையும்.. இப்போபோல அந்நேரம் ஓடிவந்து கும்மி போட்டவர்களையும் மீண்டும் நினைக்க வைக்குது..:(.. சிலர் மட்டுமே இப்பவும் இருக்கின்றனர்.. பலர் நீண்ட தூரம் ஒதுங்கிப் போய் விட்டனர்..

      Delete
  9. //குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எனக்கு பெரிதாக ஏதும் அனுபவங்கள் இல்லை,//

    எனக்கும்.. நான் என்ன செய்யப் போகிறேனோ? மருதமலை முருகன்தான் என்னைக் காக்கவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா திருத்தணி முருகனையும் துணைக்கு வச்சுக்கொண்டு ஸ்ராட் மூசிக்க்க்க்க்க்:))

      Delete
  10. //ஊரில் களவு என்ற சொல்லுக்கே அந்நேரம் இடமில்லை. ஒரு பொம்பிளைப் பிள்ளை எத்தனை மணிக்கும் வெளியே போய்வரக்கூடிய சுகந்திரம் இருந்தது. எந்த விதமான ஷேஸ்டைகள், தனகல்களே கிடையாது.. அவ்வளவு ஒரு கட்டுப்பாடான காலமாக அது இருந்தது.//

    கனவுப்பிரதேசம்! அப்படிக் கூட இருக்க முடியுமா? அட... அந்த அனுபவம் இனி இல்லாமல் போகப்போகிறது என்பதால் அப்படி நல்ல இடமாக இருந்ததோ... வருத்தம்

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான் ஸ்ரீராம், நம் ஊர் - ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காலம் அது... களவு என்பதே கேள்விப்பட்டதில்லை.. நகைகளோடு பயமில்லாமல் உலாவியிருக்கிறோம்... இப்போ எல்லாமே மாறிவிட்டது.. களவு.. பயம்... அதிகரித்து விட்டது.

      Delete
  11. பாவம், அந்தப் பூனை... சைக்கிள் ஏறிட்டு, இறங்கத் தெரியாமல், அல்லது முடியாமல் போய்க்கொண்டே................. இருக்கிறது! என்னிடமும் ஒரு சைக்கிள் இருந்தது. நானும் அப்படி துடைத்து எல்லாம் சுத்தமாக வைத்திருப்பேன். ஆனால் என்னை அப்படி யாரும் சொன்னதில்லை (ஒருவேளை இப்போ என்னிடம் கார் இல்லை என்பதால் இருக்குமோ!!!)

    ReplyDelete
    Replies
    1. அது அந்தப் பூஸார் ஏதோ அலுவலாக தேம்ஸ்க்குப் போகிறார்போலும்:) ஒருவேளை குதிக்கப்போறாரோ:)) ஹா ஹா ஹா:)..

      //நானும் அப்படி துடைத்து எல்லாம் சுத்தமாக வைத்திருப்பேன். ஆனால் என்னை அப்படி யாரும் சொன்னதில்லை//

      ஹா ஹா ஹா அது உங்களில் பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராண்மையில சொல்லாமல் விட்டிருப்பினம்:).. எதுக்கும் ஒரு படம் இருந்தால் போடுங்கோ.. நாங்க பார்த்துச் சொல்றோம்:))

      Delete
  12. // நீ போய்வா, ஆனா 3 மணிக்கு முன் போகக்கூடாது, 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடோணும்... //

    இது எப்படி இருக்குன்னா, புதுத்துணி எடுக்கும்போது எங்கப்பா சொல்வார் "எந்தத்துணி வேணும்னாலும் எடு, எவ்வளவுக்கு வேணும்னாலும் எடு 500 ரூபாய்க்குள்"

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அப்போ இதுவும் ஒருவித தெக்கினிக்கிதான் போல:)).. ஆனா இதே முறையத்தான் நான் இப்போ பிள்ளைகளுக்கு கையாள்கிறேன்:)).. நல்லா வேர்க் ஆகுது:)).. ஏனெனில் நோ சொல்வதை விட, ஒரு ரைம்/மணி/ எல்லை/ வரையறை கொடுக்கும்போது அவர்களுக்கும் ஹப்பி, கட்டுப்பாடும் இருக்கும்:)...

      Delete
  13. வாவ் 6/7 வயதிலேயே எழுத ஆரம்பிச்சிட்டிங்களா கிரேட் .
    கர்ர்ர் லெட்டர் படிக்க லஞ்சம் :)

    அந்த அண்ணாவோடு இன்னும் காண்டாக்ட்ஸ் இருக்கா மியாவ் .நல்ல ஒரு மென்டர் கிடைச்சிருக்கார் அப்போ உங்களுக்கு ..ஹாஹாஹா அப்பாங்களே இப்படித்தான் :) ஆனால் பாவம்
    வேலைப்பளுவின் காரணமா செஞ்சிட்டார் விடுங்க ..
    ..ஆனால் இறுதி வரி மனசுக்கு கஷ்டமாப்போச்சு மியாவ் எத்தனையோ டைரி லெட்டர்ஸை பத்திரமா வச்சிருந்திங்க இந்த சூட்கேஸை எப்படி தவிர விட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. ஓம் அஞ்சு, நான் ஸ்கூலுக்குப் போக முன்னமே நல்லா எழுதப் படிக்கப் பழகிட்டேன், 1ம் வகுப்பில் சேர்ந்தபோது, புத்தகம் பார்க்காமல் கதைகள் படிப்பேன்[பாடப்புத்தகத்தில்] ஏனெனில் வீட்டிலேயே அனைத்தும் படிச்சிட்டேன்.. அதனால என்னை நேரடியாக 2ம் வகுப்பேற்றி விட்டார்கள் தெரியுமோ...

      அத்தோடு டயறி எழுதும் பழக்கமும் அப்போ தொடக்கம் ஆரம்பமாச்சு.. அது அப்பாவாலதான்... நிறைய விசயங்கள் என் வாழ்வில் அப்பாவாலதான் நடந்துது... அம்மா பேசப் பேச... இப்போ எதுக்கு என, அப்பாதான் கூட்டிப்போய் ட்றைவிங் லைசென்ஸ் பழக்கி எடுக்கப்பண்ணினார்..

      கொண்டக்ட் இருக்கு அஞ்சு.

      யேஸ் அது தான் போன புறாப் போஸ்ட்டில் சொன்னேனே சூட்கேஸ் வீட்டில் இருந்துது, நான் ஹொஸ்டலில் இருந்தேன், திடீரென அப்பா அம்மா போட்ட உடுப்போடு வெளிக்கிட்டு விட்டினம் என... என்னோடு வச்சிருந்தால் விட்டிருக்க மாட்டேன்:(.. நான் பதில் போடும் அக்கறை பார்த்து என் சித்தப்பா, மாமா எல்லாம் எனக்கென போஸ்ட் கார்ட், தீபாவளி கார்ட் இப்படி அனுப்புவினம்.. அதை எல்லாம் சேர்த்து வைச்சிருந்தேன்..

      //வேலைப்பளுவின் காரணமா செஞ்சிட்டார் விடுங்க ..//
      ஹா ஹா ஹா இப்போ புரியுது பட் அப்போ அது பெரிய விசயம்:) ஏனெனில் நான் புகழுக்காக சொல்லவில்லை என்னைப்பொறுத்து சின்ன வயதிலிருந்தே நல்ல ஒழுங்கு.. உடனுக்க்குடன் பதில் போட்டு எல்லாம் ரிப்ரொப் ஆகச் செய்வேன்:).. அதனாலேயே கோபமாச்சு:))

      Delete
  14. அப்பாவும் அம்மாவும் எப்பவும் சிறந்த ராஜதந்திரிகள்தான்! குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்று தெரிந்து வைத்திருந்திருக்கிறார்கள்! குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் நேரடியாக அட்வைஸ் என்று செய்வது பிடிப்பதில்லை. மறைமுகமாகத்தான் சொல்லவேண்டியிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஸ்ரீராம்.. அத்தோடு அப்பா அம்மாவின் வளர்ப்பைத்தானெ இப்போ நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம்.. இனி இதை அவர்கள் வருங்காலத்தில் கடைப்பிடிப்பார்கள் என நினைக்கிறேன்.

      அத்தோடு இன்னொரு விசயம்.. அப்பா அம்மாவில் எனக்குப் பிடிக்காத விசயத்தை, நான் மனதில் போட்டு வச்சேன்.. இது எனக்குப் பிடிக்கவில்லை அதனால இதை ஒருபோதும் என் பிள்ளைகளுக்கு நான் செய்யக்கூடாது இப்படி:)) ஹா ஹா ஹா.. அனைத்தையும் நான் அனுபவமாக்கி விடுவேன்:)..

      Delete
  15. //எமக்கு கோபம் வந்து, அக்கோபத்தோடு ஒரு கடிதம் எழுதும்போது, அந் நேரம் அது எமக்கு சரிபோலத்தான் தெரியும். ஆனால், எப்பவுமே நாம் ஒரு கடிதமோ, பதிலோ அடுத்தவருக்கு அனுப்பும்போது, எழுதுபவராக மட்டும் இருக்கக்கூடாது, வாசிப்பவராகவும் இருந்து, அந் நேரம் வாசிப்பவரின் மனநிலை எப்படி இருக்குமென்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.//

    புரிகிறது. ஆம், இதுவும் ஒரு பாடம்தான்... எப்போதும் கோபத்தில் அல்லது வருத்தத்தில் அல்லது உணர்ச்சி வசப்பட்டு இருக்கும்போது வார்த்தைகளை விடமாட்டேன். சிலசமயம் செய்திருக்கிறேன், பின்னர் வருந்தி இருக்கிறேன். சமீபத்தில் கூட!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான்... சில சமயம் வேணுமென்று செய்வதில்லை அவசரத்தில் செய்து விடுகிறோம்.... இதைத்தான் விதி என்பதாக்கும்:)).. இதைக் கிலர்ஜி உம் ஜி எம் பி ஐயாவும் பார்த்திடக்கூடாது:) அவர்களிருவரும் விதிக்கு எடிரி:) ஹா ஹா ஹா.

      Delete
    2. நான் இதை படிக்கவில்லை.

      Delete
    3. ///நான் இதை படிக்கவில்லை.///

      ஹா ஹா ஹா படிக்காட்டில்:) படிக்கவில்லை எனச் சொல்வதுதான் நல்ல பிள்ளைக்கு அழகாம்ம்ம்:)) ஹையோ ஹையோ:))

      Delete
  16. //சூட்கேஷும் //
    சூட்கேஸில் பணமும் வைத்திருந்தீர்களா!!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது ஸி யா?:).. பணம் நினைவில்லை.. அப்போ கொயின்ஸ்தான் இருந்தாலும் இருந்திருக்கும்..:)) தாள் இல்லை:)

      Delete
  17. //கனியிருப்பக் காய் கவர்ந்தற்கு”//

    காய் கவர்ந்தற்று.

    எனக்கும் சிறுவயதில் படித்த குறள்கள்தான் நினைவில் இருக்கின்றன!

    ReplyDelete
    Replies
    1. ஓ .... எனக்கு திருக்குறள்களே தெரியாது.. ஏதோ பத்து மட்டும் சிலபஸ் ல இருந்ததாக நினைவு.

      கவர்ந்ததற்காக... இப்படிக் கருத்தெடுத்தே அப்படிப் போட்டேன்:))

      Delete
  18. ஆண்டவா... தொடர்பதிவு என்றால் இவ்வளவு நீள நீளமாகத்தான் இருக்க வேண்டுமா என்று நினைத்தபொடி கீழே வந்தால் பூனையாரும் அதே எண்ணத்தில் இருக்கிறார் போலும்!!! "இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?" என்று ரோடை எட்டிப் பார்க்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. //என்று "நினைத்தபொடி" கீழே வந்தால் பூனையாரும் //

      கடவுளே... அவசரத்தில் தப்புத்தப்பாய் டைப் ஆவுதே... அது நினைத்தபடி!

      Delete
    2. ///கடவுளே... அவசரத்தில் தப்புத்தப்பாய் டைப் ஆவுதே.//
      ஹா ஹா ஹா என்னை நீங்கள் திட்டினால் அது கடவுளுக்கே பொறுப்பதில்லைப்போலும்:))... எனக்கும் கை கால் எல்லாம் ரைப் அடிச்சது.. ஹையோ இவ்ளோ பெரிசாச்சே என:)... என்ன பண்ணுவது.. அட்வைஸ் என்பதால்... கொட்டோ கொண்டெண்டு கொட்டுது:).. அஞ்சு பென்னாம் பெரிசாகப் போட்ட தெகிறியத்தில:) அப்பூடியே விட்டு விட்டேன்:))..

      நீங்களும் எழுதுங்கோ.
      மிக்க மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  19. @ஸ்ரீராம் அன்ட் நெல்லை தமிழன்

    லாச்சி = லாக்கர் ,cupboard

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா:)) இந்த ஜனவரியில் இருந்து சலரி “வன் பவுண்டால்” இன்கிறீஸ் ஆகுதூஊஊஊஊஊஊஊஊஊஊ:))

      Delete
  20. அங்கிருக்கும் 1 என்னும் தம நான் போட்டதாக்கும். இன்னும் அதிராவே வோட்டு போடவில்லை போலும்!

    ReplyDelete
  21. இப்போதான் வோட்டு 2 ஆகியிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஆராவது முதலில் போடட்டும் என வெயிட் பண்ணினேன்:)

      Delete
  22. மற்றத்துக்கு நாளைக்கு வரேன் தூக்கம் வருது

    ReplyDelete
    Replies
    1. ஓகே அஞ்சு நல்லிரவு.. இந்த சமூகமும்:) நித்திரைக்குப் புறப்படுகிறது..:) மிகுதி நாளைக்கு:)..

      Delete
  23. ஏஞ்சல் இந்த நீளமான பதிவை வரிவரியாய்ப் படித்து "தமிழ்படுத்தி"க் கொண்டிருக்கிறார் பாவம்... இன்று பார்த்து முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் நீளமான பதிவு!! லாங் வே டு கோ ஏஞ்சல்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எனக்கு செக்கரட்டறியாய் இருப்பது எவ்ளோ சிரமம் தெரியுமோ ஸ்ரீராம்ம்ம்:)) ஹா ஹா ஹா:))

      Delete
  24. ஆனால் செக்ரட்டரி உங்களைக் கேட்காமல் தூங்கப் போய்விட்டாரே... நாளைக்கு வந்ததும் மெமோ கொடுங்க!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதானே:)) சம்பளத்தில பாதியைப் பிடிச்சு வைக்கப்போறேன்ன்:))..

      Delete
  25. எல்லாருக்கும் புரியறாப்போல் அருஞ்சொற்பொருள் போடுங்க அதிராமியாவ்! எங்களுக்கெல்லாம் பழகி விட்டது!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...[நெல்லைத்தமிழன் வச்ச இந்தப்பெயர்தான் நேக்குப் புடிச்சிருக்கு:)]
      ஹா ஹா ஹா.. பொருள் போட்டால் படிப்பதோடு மறந்திடுவினம்:) போடா விட்டால்தான் தேடிக் கண்டுபிடிச்சு.. மனதில பாடமாக்கிடுவினம்:).. உங்களுக்குப் பாடமானதைப்போல:)..

      Delete
  26. அஞ்சு சொல்றாப்போல நீங்க எழுதறது Tamil இல்லை, Damil தான்! ஹிஹிஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் டமில் தான் ஒரிஜினல் டமிலாக்கும்:) மகாபாரத்தில கர்ணன்... அர்ச்சுனன் ஆட்கள் பேசிய டமில்:)) அதாலதான் மீக்கு டமில்ல டீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:))

      Delete
  27. உங்கட (ஹிஹி) அனுபவங்கள் நல்லா இருக்கு! உங்க கணவரின் வெளிப்படையான பாராட்டு உங்களுக்கு எத்தனை ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும்! ரொம்ப நல்ல குணம்.

    ReplyDelete
  28. இலங்கையின் வடக்கு மாகாணங்களில் பெண்கள் தைரியமா வெளியே சென்று வரலாம் என்பது கேட்க சந்தோஷமாயும், ஆச்சரியமாயும் இருக்கு! இங்கே இந்தியாவிலும் அந்த மாதிரி குஜராத்தில் போய் வரலாம். 20 வருஷம் முன்னாடியே நாங்க இருந்தப்போ எங்க பொண்ணும், அவள் சிநேகிதியும் ஜாம்நகரிலிருந்து தனியே அஹமதாபாத் போய் வருவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு கொஞ்சக்காலம் மட்டுமே அப்படி இருந்தது... ஆனா இப்பவும் பெரிதாகப் பயமில்லை.... பகலில் ஓகே என நினைக்கிறேன்.. அங்கு பாரதூரமான பயம் இல்லை.

      மிக்க நன்றி கீசாக்கா:)..

      Delete
  29. Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. உங்கட அழகான மாருதிக் காரில வாங்கோ ஹா ஹா ஹா:))..

      Delete
  30. பிறகு வருகிறேன். பாதி படித்துவிட்டேன். நன்றாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன், நீங்க ஊருக்குப் போயிருக்கும் தருணம் தெரியாமல் நாங்கள் எல்லோரும் இங்கு தொடர்ப்பதிவு போட்டு மின்னி முழங்குறோம்:))... அப்படி இருந்தும் வந்து கொமெண்ட் வோட் போட்டு விடுறீங்க மிக்க நன்றி... நீங்க என் ஜோய் பண்ணி வாங்கோ.

      Delete
  31. Replies
    1. மூன்றே எழுத்து பிரச்சனையே இல்லை.

      Delete
    2. //
      Nagendra BharathiSaturday, January 06, 2018 4:52:00 am
      அருமை//

      வாங்கோ வாங்கோ... மிக்க நன்றி.

      ///மூன்றே எழுத்து பிரச்சனையே இல்லை.//
      ஹா ஹா ஹா கில்லர்ஜி.. இவரின் கொமெண்ட் எனக்கு எப்பவும் டிடி ஐயே நினைவு படுத்தும்:).. ஏனெனில் அவரும் ஆரம்பம் எல்லா இடமும் வந்து போவார்.. இப்படி அருமை, நல்லாயிருக்கு என மட்டுமே கொமெண்ட் போடுவார்.

      Delete
  32. அதிரா கொஞ்சம் வாசித்தேன்...ராணுவக்கட்டுப்பாடு இருந்தப்ப உங்க வாழ்க்கை, அப்பா உங்களுக்கு மறைமுகமாகக் கொடுத்த அட்வைஸ்...பெண் பிள்ளைகள்..குறித்து....ஆமாம் அட்வைஸ் எல்லாம் குழந்தைகளுக்கு நேரடியாகக் கொடுக்கக் கூடாது...ஆனால் எனக்கெல்லாம் என் அனுபவம் வேறு ரொமப்வே வேறு....அதிலிருந்து நான் கற்றது என் மகனிடம் எப்படி ஒரு அம்மாவாக எப்படி இருக்கக் கூடாது என்று....

    பின்னர் வருகிறேன்...ஒரு விருந்துக்குப் போகணும்..போய்ட்டு வந்து கருத்து மீண்டும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ..

      ///அதிலிருந்து நான் கற்றது என் மகனிடம் எப்படி ஒரு அம்மாவாக எப்படி இருக்கக் கூடாது என்று....///

      இதுவும்தான் கீதா.. இதுவும் உண்மையே... எப்படி அம்மாவாக, மனைவியாக இருக்கக்கூடாது என்பதனையும்.. ஊரார் உறவினரின் பழக்கவழக்கம் பார்த்துத் தெரிஞ்சு கொண்டேன்..

      விருந்தில் ஒரு வெட்டு வெட்டிட்டு வாங்கோ:).. நாங்களும் இன்று ஒரு ஸ்கொட்டிஸ் விருந்துக்குப் போய் வந்தோம்... உண்டகளை அதிராவுக்கும் உண்டெல்லோ:))

      Delete
  33. நீன்ன்ன்ன்ன்ண்ட பதிவு !

    தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்தமைக்கு நன்றி. சகோ தில்லையகத்து கீதாவும் அழைத்திருக்கிறார்கள். இன்றும் அலுவலகம் செல்ல வேண்டும். மாலை வந்த பிறகு எழுதுகிறேன்.

    அனுபவங்கள் நமக்குச் சொல்லித் தரும் பாடங்கள் நிறையவே.

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    உங்கள் செக்ரட்டரி ஏஞ்சல் மூலம் புரியாத வார்த்தைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. நீங்க நேற்று போட்ட பதிவுகூட ஒரு அனுபவம்தானே... யேஸ் கீதாவுக்கும் எனக்கும் ஒரே மைண்ட் செட்டப் போல:)) இருவரும் இருவரை அழைச்சிருக்கிறோம்:) ..

      எழுதுங்கோ வருகிறோம்..

      ஹா ஹா ஹா என் செகரட்டறிக்கு நல்லா ரெயினிங் கொடுத்திருக்கிறேன்போல:).. அதனால இப்போ நான் எதுவும் சொல்வதில்லை தானாகவே முன்வந்து செய்துபோடுவா:)..

      மீ ஒபாமா அங்கிளுக்கு.. பின்பு இப்போ ட்றம்ப் அங்கிளின் பேசனல் செக்கரட்டரி என்பதனை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்...:)

      மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
  34. முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்...... உங்கள் பதிவை படிக்கும் போது ஒரு சிறு குழந்தை அழகாக எழுதியபோல இருக்கிறது.. ஆமாம் அது எப்படி உங்களுக்கு இவ்வளவு(61) வயதான பின்னரும் சிறு குழந்தை போல எழுதவருகிறது குட் நான் எஞ்சாய் பண்ணி படித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ...

      //முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்....//
      அவ்வ்வ்வ்வ் இது ட்றுத் ஆ .. இல்ல டூப் ஆ என்னைப் பாராட்டுவது?:)

      //ஆமாம் அது எப்படி உங்களுக்கு இவ்வளவு(61) வயதான //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்குத்தான் கண்ணாடியைக் கழட்டாதீங்கோ எனச் சொல்றது:) இப்ப பாருங்கோ என் வயசுகூட தலைகீழாகத் தெரியுது உங்களுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா எஞ் ஜோய் பண்ணியது மிக்க மகிழ்ச்சி.

      Delete
  35. //குரங்குபோல இருக்கே/பேய்போல இருக்கே[ஹா ஹா ஹா, ட்றுத் நகைச்சுவைக்குச் சொன்னபோது, நான் மனதில், அப்பா அன்று சொன்னதை நினைத்துச் சிரித்தேன்:))////


    அட ராமா ராமா நாம் உண்மையை சொன்னாலும் அதை நகைச்சுவையாக எடுத்து சிரிக்கிறாங்க... ஹும்ம்ம் ஏஞ்சல் நான் சொன்னது நகைச்சுவை இல்லைன்னு அதிராவிற்கு புரியவைங்க

    ReplyDelete
    Replies
    1. ///அட ராமா ராமா நாம் உண்மையை சொன்னாலும் அதை நகைச்சுவையாக எடுத்து சிரிக்கிறாங்க...//
      ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:)) உண்மை என்பது எனக்கும் உங்களுக்கும்தான் தெரியும்... ஆனா அதை என் அமெரிக்க வெள்ளைமாளிகை ரசிகர்கள் பார்த்தினமோ:) அவ்ளோதேன்ன்ன்ன்:)) உங்களை நயகராவில மிதக்க விட்டிடுவினம்:)).. ச்ச்சோஓஓஓஒ உங்களைக் காப்பாற்றவே அது நகைச்சுவை எண்டேன்ன்ன்ன்:))..

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பாஆஆஆஆஆ புளொக் எழுதுறதும் போதும் மீ படும் பாடும் போதும்:))

      ///ஹும்ம்ம் ஏஞ்சல் நான் சொன்னது நகைச்சுவை இல்லைன்னு அதிராவிற்கு புரியவைங்க//

      யூ மீன்ன்ன்(இது வேற மீன்:)).. ராமசேரி இட்லி அவிச்சோ?:)).. ஹா ஹா ஹா

      ட்றுத் மேலே என் இந்த போஸ்ட் இன்.. பேஜ் வியூஸ் போட்டோ வாக இணைச்சிருக்கிறேன் மயங்கி விழுந்திடாமல் பாருங்கோ ஹா ஹா ஹா:)..

      Delete
  36. //திருமணமான காலத்திலிருந்து என் கணவர் என்னிடம் அடிக்கடி சொல்லும் சில வசனங்கள். + யூ ஹஃப் எ குட் ஹார்ட்:///

    எல்லா ஆண்களும் புது மனைவியிடம் இப்படிதான் கதைப்பாங்க ....அதுக்கு அப்புறம் ஆரம்பத்தில் சொன்ன பொய்யை அப்படியே கடைசிகாலம் வரை மெய்ண்டைன் பண்னுவாங்க....அதிரா பாவம் பச்ச புள்ளையாட்டம் இருக்காங்க அடுத்தவங்க சொல்ல்ய்வதை எல்லாம் அப்படியே உண்மை என்று நம்பிடுறாங்க

    ReplyDelete
    Replies
    1. ஹலோ அந்த அட்வைஸ் உங்களுக்காகவே எழுதினேன்:)) இனியாவது பூரிக்கட்டை அடி வாங்காமல் மாமியிடமிருந்து தப்பிக்கட்டுமே என மறைமுக ஹிண்ட் கொடுத்தேன்... ம்ஹூஊஊம்ம் உங்க தலை விதியை ஆரால மாத்த முடியும் சொல்லுங்கோ:)..

      Delete
  37. அந்த காலத்தில் அப்பா அம்மாக்கள் குழந்தைகள் காதில் படுவது போல மறைமுகமாக அறிவுரையை சொல்லுவார்கள்... ஆனால் காலம் மாறி போச்சு இந்த காலத்தில் குழந்தைகள் தங்கள் நண்பர்களிடம் செல்போனில் பேசுவது போல நமக்கு மறைமுகமாக அட்வைஸ் பண்ணுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்ல ... எனக்கென்னமோ இக்காலத்தில் நாம் குழந்தைகளோடு நேரடியாகவே அனைத்தையும் பேசுகிறோம் எனத்தான் தோணுது, அதேபோல அவர்களுக்கும் பூரண சுகந்திரம் குடுத்திருக்கிறோம்.. தாம் நினைப்பதை பயப்பிடாமல் நம்மோடு பகிர்ந்து கொள்ளவும்.. பொதுவாக எங்கும் இக்காலத்தில் பிள்ளைகளுக்கு பேரன்ஸ்.. ஃபிர்ண்ட்ஸ் போலத்தானே இருக்கினம்... எங்காவது விதிவிலக்கு இருக்கலாம்..

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  38. நல்லவேளை நான் தப்பிச்சன்..

    இருந்தாலும்
    பதிவு அருமை.. ஒரு குடும்பம் இப்படித் தான் கோயிலாகின்றது..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன்...

      நீங்க எங்கின தப்பிச்சீங்க?:) உங்களைத்தான் கில்லர்ஜி அழைச்சிட்டாரே:)).. மார்களிப் பதிவை முடிச்சிட்டு எழுதுங்கோ.. இன்னும் 8 நாட்கள்தான் இருக்கு..:))

      மிக்க நன்றி.

      Delete
    2. அச்சச்சோ அது ழி என வரும்போல:))

      Delete
  39. ///அதிராவைப் பற்றியா சொல்றீங்க ? என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியாதோ ? சும்மா எல்லாம் சொல்லாதீங்க, அதிரா சொன்ன சொல் மீறாத பிள்ளை, அவள் நேரத்துக்குத்தான் வந்திருப்பாள், நீங்கதான் சும்மா சொல்றீங்க///

    இதை நான் மட்டுமல்ல பதிவுலமே நம்பி விட்டதாக இப்பொழுதுதான் எனக்கு ஏஞ்சலிடமிருந்து மின்னஞ்சல் வந்தது.

    சிறு வயது நினைவலைகளை மீட்டிய விதம் அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ///இதை நான் மட்டுமல்ல பதிவுலமே நம்பி விட்டதாக இப்பொழுதுதான் எனக்கு ஏஞ்சலிடமிருந்து மின்னஞ்சல் வந்தது.///

      ஹா ஹா ஹா நம்பாட்டில் தேம்ஸ்ல தள்ளிடுவேன் எனப் பயம் எல்லோருக்கும்:))..

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  40. உங்கள் அனுபவங்கள் மிக மிக நன்றாக இருக்கிறது அதிரா. உங்கள் பெற்றோர், கணவர் , நட்பு என்று அனைத்தும் நல்லவைஅதனால்தான் உங்கள் மனமும் அப்படியே...உங்கள் அனுபவங்களே நல்ல பாடங்கள்...

    கீதா: உங்கள் அப்பா முன் ஆண்பிள்ளைகளிடம் பேசுவது, அப்பா அம்மா கொடுத்த ஃப்ரீடம் எல்லாம் மிகச் சிறப்பு அதிரா. அதான் நீங்கள் இத்தனைக் கான்ஃபிடென்ட்டா, தைரியாமா இருக்கீங்க. ஓபனாகவும்...

    உங்கள் நட்பு சகோதரர் கடிதங்கள் அருமை....அப்புறம் குழந்தைகளுக்கு அட்வைஸ் அட்வைஸாகக் கொடுக்காமல் விளையாட்டுப் போல, கதை போலச் சொல்ல வேண்டும் என்று சொன்னது அழ்கு...

    டாப் எங்கள் கணவர்!!!! அருமை அதிரா...பாராட்டுதல் அதுவும் கணவர் மனைவியைப் பாராட்டுதல் என்பது வெகு அபூர்வம்....அதில் உங்கள் கணவர் நிஜமாகவே ரொம்ப சமர்த்து!!! நல்ல மனிதர்...அது நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கிற்கு மிக மிக உதவும்...அருமை அருமை...அதிரா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன்.. ஸ்கூல் ஸ்ராட் ஆச்சு என அறிஞ்சேன் கீதா மூலம்.. மிக்க நன்றி.

      //அதான் நீங்கள் இத்தனைக் கான்ஃபிடென்ட்டா, தைரியாமா இருக்கீங்க. ஓபனாகவும்...
      ///

      ஹா ஹா ஹா இதில தைரியம் என்பதை மட்டும் நீக்கிடுங்கோ கீதா... :).. நெருங்கப் பயப்பிடுவேன், நெருங்கிப் பழகிட்டால்ல் பின்பு நம்முடையவர்கள்தானே என தைரியமாக மனதில் படுவதைச் சொல்லிடுவேன்.. ஆனா அது சில சமயம் பிழையாகவும் வாய்ப்பிருக்கு..

      ஓம் கீதா அத்தோடு என்னில ஒரு பழக்கம் ரோட்டில் எங்கு எந்த போய் ஃபிரெண்ட் பேசினாலும் உடனே வந்து அம்மாவிடம் சொலி விடுவேன்ன்.. இன்று இன்னாரைக் கண்டேன் கதைச்சேன் என... ஏனெனில் இன்னொருவர் வந்து சொன்னால் .. ஆ அப்படியா என அம்மா விளித்திடக் கூடாது.. அப்படி எனில்தான் தப்பாகிடும் என.. இதையேதான் இப்போ என் குடும்பத்திலும் சொல்லி வச்சிருக்கிறேன்.. வெளியே என்ன நடந்தாலும் எனக்கு சொல்லிடுங்கோ... அப்படி எனில் இன்னொருவர் வந்து தப்பாக சொன்னால்கூட , நான் அது தப்பில்லை எனக்குத் தெரியும் எனச் சொல்லுவேன் எல்லோ...

      மிக்க மிக்க நன்றிகள் கீதா..

      Delete
  41. 6, 7 வயதில் கடிதம் எழுதினீங்களா?? ஆஹா !!! வியப்பு!! நீங்க பெரிய ஆளுதான்..

    ஏஞ்சல் பூசார் எவ்வலவு ஜீனியஸ் பாருங்க..6, 7 வயதில் கடிதம் எல்லாம் எழுதியிருக்காராம்...நான் அப்போதான் எழுத்துக் கூட்டிப் படிக்கவே தொடங்கினேன்...

    பாராட்டுகள் அதிரா...அதான் இப்பவும் உங்களால் அழகாக எழுத முடிகிறது..பாராட்டுகள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா 6,7 வயதில் உண்மைதான் கீதா.. மேலே அஞ்சுவுக்கு இதுக்குப் பதில் குடுத்திட்டேன் ஒரு எட்டுப்போய்ப் படிங்கோ பீஸ்ஸ்:))..

      Delete
  42. பூஸார் படங்கள் அழகு!!!! ரசித்தேன்

    கீதா

    ReplyDelete
  43. நிங்கள் உங்கள் இலங்கை அனுபவத்தைச் சொல்லச் சொல்ல, இங்கு நாங்கள் குடியிருந்த
    பகுதியில் இருந்த, ஒரு இலங்கைத் தமிழர் குடும்பத்தின் பேச்சும் அவர்கள் சொன்ன அனுபவங்களும் நினைவுக்கு வந்தன.

    அப்பா பற்றிய அனுபவ வார்த்தைகள் 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்ற பழமொழியை நினைவு படுத்தின.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளங்கோ அண்ணன் வாங்கோ...

      ஓ நீங்களும் இலங்கைக் குடும்பத்தினரோடு பழகியிருக்கிறீங்க.. அப்போ என் பாஷை உங்களுக்கு இலகுவில் புரிஞ்சிடும்:)..

      உண்மைதான் அப்பா என்றால் அறிவு..

      மிக்க நன்றிகள்.

      Delete
  44. அருமை
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ.. இம்முறை உடனே வந்திட்டீங்க... ஏன் நீங்க பல நாட்களாகப் பதிவிடவில்லை.... இலங்கைப் படங்களாவது எடுத்து எடுத்துப் போடலாமே.. பார்க்க ஆசையாக இருக்கும் எல்லோருக்கும்.

      மிக்க நன்றிகள்.

      Delete
  45. அதிராவுக்கு தலைப்பே சரியில்லையே நான்சொல்வதைச் சொல்லுவேன் கேட்டால் கேளுங்கள் என்று இருக்கிறதே அன்சோலிசிடேடெட் அறிவுறை சரியில்ல்சையே மதூரைத்தமிழனின் பதிவிலே the best advice is not to advise others என்னும் ரீதியில் பின்னூட்டமெழுதி இருந்தேன் நான் சொல்வதைக் கேட்கும் நில்சையில் இல்லாதவர்க்கு நான் ஏன் எதுவும் சொல்ல வேண்டும் இருந்தாலும் என்னையும் மதித்து அழைத்திருக்கிறீர்கள் இது எனக்கு வந்த இரண்டாவது அழைப்பு சற்று தாமதமாகும் பரவாயில்லையா வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..

      தலைப்பு எனக்கும் பிடிக்கவில்லைத்தான் ஆனா அது கொப்பிரைட்:) தலைப்பு...

      நீங்களும் இத்தலைப்பைத்தான் பாவிச்சு எழுதோணும் தொடரை:))..

      ///நான் சொல்வதைக் கேட்கும் நில்சையில் இல்லாதவர்க்கு நான் ஏன் எதுவும் சொல்ல வேண்டும்///
      நீங்களாகவே ஏன் அப்படி நினைக்கிறீங்கள்.. இன்னொன்று நீங்கள் சொல்வதை எல்லோரும் கேட்கோணும் என நினைப்பதும் தப்பு... நமக்குத்தெரிஞ்சதைச் சொல்லுவோம்ம்... யாராருக்கு தேவையோ அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் அவ்வளவுதான்...

      இதுதான் உங்கள் முதலாவது அழைப்பு:)) ஹா ஹா ஹா தாமதம் பிரச்சனை இல்லை.. அதுக்காக ஆகவும் தாமதமாக்கினால் ஆறிய கஞ்சி போலாகிடும்..:)) ... முடியும்போது எழுதுங்கோ மிக்க நன்றி.

      Delete
    2. பதிவு வெளியிட்டபின்பும் புதிதாக இணைப்பீர்களா தலைப்பை பாவிச்சு எழுதும் போது தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதக் கூடாது என்று நினைக்கிறே கேட்டால் கேளுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்போருக்கு நான் ஏன் எழுத வேண்டும்

      Delete
    3. ///பதிவு வெளியிட்டபின்பும் புதிதாக இணைப்பீர்களா//

      ஆவ்வ்வ்வ் ஜி எம் பி ஐயா திரும்ப வந்திருக்கிறார்.. வசனம் முடியும்போது ஒரு கொமா போட்டு விடுங்கோ இல்லை எனில் கொயப்பமா இருக்கெனக்கு:))..

      போஸ்ட்டில் ஏதும் எழுத மாட்டேன், ஆரும் திரும்பப் படிக்காயினம் போஸ்ட்டை என்பதால். ஒவ்வொரு தடவையும் மகுடம் கிடைச்சால்.. அதை மட்ட்டும் பின்னர் எடிட் பண்ணி இணைப்பேன்...[மகுடம் இணைக்கும் பழக்கத்தைக் காட்டிக் குடுத்தவர் ஸ்ரீராம் தான்:)]

      ///கேட்டால் கேளுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்போருக்கு நான் ஏன் எழுத வேண்டும்//

      இப்போ உங்கள் பிரச்சனை என்ன?.. நீங்கள் எழுதுவதை நாங்கள் கேட்கோணும் அப்படித்தானே?:).. எங்கள் பெரியப்பா போல இருக்கிறீங்கள்.. நான் நிட்சயம் கேட்கிறேன் உங்கள் அட்வைஸ் ஐ.. அத்தோடு என் பக்கம் இங்கு வருவோரையும் முடிஞ்சவரை மிரட்டி கேட்க வைக்கிறேன்:)).. கீசாக்கா மட்டும்தான் கொஞ்சம் அடம் பிடிப்பா:)) வெருட்டிப் பார்க்கிறேன்:)) இப்போ எழுத நீங்க ரெடியோ?:)

      தொடர்பதிவு என்பதால் இதே தலைப்பை போட்டு விட்டு, கீழே நீங்கள் நினைக்கும் தலைப்பு எதுவேணுமெண்டாலும் வையுங்கோ, நா ஒண்ணும் வாணாம் ஜொள்ளலியே:)).. அடம் புய்க்காமல் எழுதுங்கோ ஐயா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஹா ஹா ஹா...

      Delete
    4. ஜி எம் சார் கேட்காதவர்களுக்காக நான் ஏன் எழுத வேண்டும் என்பதைவிட கேட்பவர்களுக்காக எழுதலாமே? சரி நீங்க வேண்டும் என்றால் கேட்டால் கேளுங்கள் என்பதற்கு பதிலாக கேட்கவிரும்புபவர்களே கேளுங்கள் என்று வைத்து கொள்ளுங்கள்... வெளித் தோற்றம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் உள்ளே இருப்பது சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவாங்க அது போல தலைப்பு எப்படி வேண்டுமானலும் கவர்ச்சியாக இருக்கலாம் ஆனால் உள்ளே நாம் சொல்லும் விஷயங்கள் நல்லதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் அவ்வளவுதான் சார்

      சரி இப்ப உங்கள் அனுபவத்தில் இருந்து மற்றவர்களுக்கு மிகவும் பயன்படக் கூடிய ஒரு பதிவை எழுதி வெளியிடுங்கள் அதன் பின் நம்ம அதிரா அதற்கு பரிசாக அவரின் வைர நெக்லஸை உங்களுக்கு பரிசாக அனுப்பி வைப்பார்.

      அதிரா உங்களுக்கு மிகவும் நல்ல மனசு என்று எனக்கு தெரியும் அதனால் பெரியவரான ஜி.எம் சாரிடம் நீங்கள் நெகலஸை பரிசாக கொடுத்து விடுங்கள்..

      இல்லையென்றால் என்ன நடக்கும் என்று சொல்ல மாட்டேன் அதை எம் பெருமான் முருகப் பெருமான் பார்த்து கொள்வான் ஓம் முருகா

      Delete
    5. ட்றுத், ஜி எம் பி ஐயா இதைப் பார்ப்பாரோ தெரியவில்லை.. பார்த்தாலும் உங்களுக்கு அடி விழும்:) எனக்கெதுக்கு அதிராவின் நெக்லெஸ்.... என் மனைவியிடம் ஏற்கனவே இருக்குது என்பார் ஹா ஹா ஹா:))

      Delete
  46. எங்கே விட்டேனோ நினைவில்லையே எதுக்கும் கன்டின்யூ பண்றேன் தூங்கி எழுந்ததில் எல்லாம் பத்தா தெரியுது கமெண்ட்ஸ் கூட 10 பத்தா தெரியுது மியாவ் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அஞ்சு... டக்குப் பக்கெனக் கண்ணாடியைப் போட்டிட்டுப் பாருங்கோ..

      ட்றுத்துக்கு தலைகீழா தெரியுது:) உங்களுக்குப் பத்தாத் தெரியுது கர்:)) எல்லாம் கண்ணாடியைக் கழட்டுவதால் எழும் பிரச்சனைதான் போல:)) ஹா ஹா ஹா:)..

      Delete
  47. /மெளனம் காத்திடல் நன்று... ஆனா சிலர் மெளனமாக இருக்கவும் விடாயினம் , எதையாவது சொல்லி சீண்டி சீண்டி எதிர்த்துப் பேசப் பண்ணிடுவார்கள்:).//

    ஹாஹாஹா :) ஆமாம் மியாவ் அதென்னமோ உண்மைதான் அது அவங்களோட பொல்லாத நேரம் நமக்கு மிக பொல்லாத நேரம் கண்ணுக்கு கண்ணாடி போல காதுக்கு ஏதாவது இருந்தா நல்லாருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மை அஞ்சு... அது நம் விதி என விட்டிட வேண்டியதுதான்...

      Delete
  48. இலங்கை யில் நீங்க வாழ்ந்த பகுதி பற்றி சொன்னது கேட்க சந்தோஷமா யிருக்கு .
    அது பொற்காலம்தான்னு நினைக்கிறன் .
    எந்த இடத்தில பெண்கள் தைரியமா இரவிலும் நடமாட கூடியதாக இருக்கோ அது கடவுளால் பாதுகாக்கப்பட்ட இடம் .எங்க மெட்ராஸைல் பல வருஷமுன் லேட்நைட் நடந்துபோனாலும் பயமே இருக்காது எங்க தெருவில் .வீட்டுமுன் வெற்றிலைபாக்கு போட்டு பாட்டு கேட்டுக்கொண்டு பலர் விழித்திருப்பாங்க பாதுகாப்பாக நடக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. அதே முறைதான் அஞ்சு அப்போ அங்கும் இருந்தது, ஊர் மக்கள் டெய்லி 3,4 பேர் ஒவ்வொரு சந்தியிலும் நிற்பார்கள்:)[பல ஊர்களில்].. இரவிரவாக:)..

      Delete
  49. எனக்கு இப்போதைய இலங்கை எங்கள் இந்திய சினிமா போன்ற விஷயங்களாலதான் நாசமாச்சோன்னு ஒரு சந்தேகம் .

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அப்படி இல்லை அஞ்சு.. எல்லோரிடம் ஓவர் பணம் இருக்கிறது... கிட்டத்தட்ட வெளிநாட்டில் ஒருவராவது இல்லாத ஒரு குடும்பமும் இருக்காது... பணம் அதிகமானமையால்தான்.. பல பிரச்சனைகள் உருவாகி விட்டது அத்தோடு ஆரையும் மதிக்கும் தன்மை குறைந்து விட்டது..

      முன்பு நாம் பழகிய பழக்கம்.. வயதில் மூத்த ஒருவரைக் கண்டால் உடனே எழுந்து நிற்போமெல்லோ.. மறக்க முடியாத ஒரு சம்பவம்... நானும் கணவரும் வெஸ்பாவில் போய்க் கொண்டிருந்தோம், அப்போ என் கொம்பனி பொஸ் எதிரே நின்று வழி மறிச்சார்ர் ஏதோ அட்வைஸ் கேட்க, உடனே நான் ஸ்கூட்டரை விட்டுக் கீழே இறங்கி விட்டேன், என் கணவரோ ஹெல்மெட்டைக் கழட்டி கையில் பிடிச்சபடி தானும் எழுந்து நிற்கிறார்... அது தொட்டில் பழக்கம்.. மரியாதை என்பது தானாக வர வேண்டும்.

      இதேபோல இங்கும் கொலீச் இல் படிச்சபோது வகுப்பில் ஆசிரியர் வர நான் எழும்பிட்டேன்.. அவர்.. பிளீஸ்ஸ் சிட் சிட் என அந்தரப்பட்டார்ர்:).. இங்கு எழும்புவதில்லைத்தானே வெள்ளைகள்:).. கொலீச் இல்கா, பிரேக் ரைமில் காலை மேசை மேல் போட்டபடி ரீச்சரிடம் டவுட்ஸ் கேட்பினம்[சில பிள்ளைகள்].. அதேபோல ஆசிரியரும் பிரேக் ரைமில் காலைத்தூக்கி மேசையில் போட்டுக் கொண்டிருப்பார்.. நாம் ஏதும் கேட்டால் அப்படியே இருந்துகொண்டு டவுட்டைக் கிளியர் பண்ணுவார்ர்.. படிப்பிக்கும்போது மட்டுமே மரியாதை..

      Delete
  50. /வாழ்வில் நடந்த கதைதானே அனுபவமாகிப் பின் அட்வைஸ் ஆகிறது:)..//

    உண்மைதான் அதிரா ஒவ்வொரு அனுபவமும் பிறர்க்கு பாடங்கள் .

    //
    எமக்கு பிடித்த யாரின் குழந்தையானாலும் சரி.. அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறலாம்.//
    ஆமாமா மியாவ் அந்த குட்டி குண்டுப்பையன் லூயிஸ் இப்போ மிகவும் அமைதியா இருக்கானே அவன்கிட்ட திட்டினாலோ மிரட்டினாலோ வேலைக்கு ஆகாதது :) இப்போ எந்த சேஷ்டை விஷமமும் காட்டுறதில்லை .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு.. நான் வாழ்வில் கண்ட உண்மை.. அன்பைக் கொடுத்தால் இரட்டிப்பாகப் பெறலாம்[ஆனா சில ஜென்மங்கள் அந்த நேரம் மட்டும்தான், பின்னர் மறந்து விடுவார்கள்.. நீ என்ன பண்ணினாய் எனக் கேட்போரும் உண்டு]..

      அதேபோல மரியதையைக் கொடுத்துத்தான் வாங்க வேண்டுமே ஒளிய.. கொடுக்காமல் எதிர்பார்க்க முடியாது.. சில பெரியவர்கள்.. தாம் ஆரையும் மதிக்க மாட்டினம் ஆனா தமக்கு சிறியவர்கள் மரியாதை தரவில்லை எனத் திட்டிக்கொண்டிருப்பினம்... அதெல்லாம் துரோணர் காலத்தோடு மலையேறி விட்டது...:)

      Delete
  51. //அஞ்சுவைப்போல என் அருமை பெருமைகளையும் அவிழ்த்து விடலாம் என நினைச்சேன்:)).. பத்தல பத்தல சாக்குப் பத்தல:)) ஹா ஹா ஹா:)..//

    ஹாஹாஹா நானே நம்ம சொந்த வட்டத்துக்கு பயந்து பல விஷயங்களை சொல்லாமா விட்டிருக்கேன் :) இன்னொன்று ரொம்பவும் சுயபுலம்பலாகவும் ஆகக்கூடாதுன்னு நிறைய அறிவுரைகளை கட் செஞ்சேன்

    ReplyDelete
    Replies
    1. ///இன்னொன்று ரொம்பவும் சுயபுலம்பலாகவும் ஆகக்கூடாதுன்னு நிறைய அறிவுரைகளை கட் செஞ்சேன்///
      ஹா ஹா ஹா அதே.. அதே... தேன்ன்ன்ன்:))

      Delete
  52. அதிரா இன்னொன்று கணவர் பற்றி சொன்னது ..நல்ல மகனாக அன்போடும் நற்குணங்களோடும் ஒழுக்கமுடனும் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் நல்ல சகோதரனாக நல்ல மகனாக நல்ல கணவனாக நல்ல அப்பாவாக இருப்பாங்க ..இதை பல இடங்களில் பார்த்தது .பெண்களை மதிக்க கற்றுக்கொடுத்த அந்த பிள்ளை நாளை நல்ல கணவனாகவும் தாயை மதிக்கும் மகனாகவும் இருப்பார் .நூற்றுக்குநூறு உண்மை .
    அதேபோல் பெண்குழந்தைக்கு பாசத்தை எளிமையை பெரியோரை மதிக்கும் குணங்களை கற்றுக்கொடுத்தால் அது பின்னாளில் வாழப்போகும் வீட்டில் வேலைசெய்யுமிடத்தில் வெளியிடங்களில் நற்பெயரெடுக்கும் .இதை நேரில் பார்த்திருக்கேன் .விவரங்கள் என் பதிவில் வரும் :)

    ReplyDelete
    Replies
    1. ///நல்ல மகனாக அன்போடும் நற்குணங்களோடும் ஒழுக்கமுடனும் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் நல்ல சகோதரனாக நல்ல மகனாக நல்ல கணவனாக நல்ல அப்பாவாக இருப்பாங்க//

      உண்மை அஞ்சு.. எங்கட மாமா[கணவரின் அப்பா] எப்பவும் எதாவது சொல்லிட்டு சொல்லுவார் மகனிடம்... அதிராவைக் கேட்டு அவவின் விருபப்படி முடிவெடுங்கோ என... நான் நினைப்பதுண்டு பெற்ரோரின் வளர்ப்பிலதான் முக்கிய பங்குண்டு...

      ///இதை நேரில் பார்த்திருக்கேன் .விவரங்கள் என் பதிவில் வரும் :)//

      எழுதுங்கோ எழுதுங்கோ படிப்போம்..

      Delete
  53. [im]https://s-media-cache-ak0.pinimg.com/originals/29/19/87/291987ec4dd0fbd9034ca3130af2e60f.jpg[/im]இந்தாங்க மியாவ் :) உங்களுக்கு க்ரவுன்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆவ்வ்வ்வ்வ் நன்றி அஞ்சூஊஊஊ, ...

      எல்லோரும் ஓடிவாங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அதிரா மயங்கி விழுறாஆஆஆஆஆ:) மசமசவென நிக்காமல் சுட்டாறிய தண்டி.. அதாவது வெந்நீர் அடிச்சு எழுப்புங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஏன் தெரியுமோ?:)) மகுடம் கிடைச்ச கையோடு தமிழ்மணத்தில 14 இல நிண்டது 7 இல் காட்டிச்சுதாஆஆஆ.. என்னாச்சு என செக் பண்ணினேன்ன்ன்ன்... 13,000 வியூஸ் ஐத் தாண்டிக்கொண்டிருக்கு என்னோட அட்வைஸ்ஸ்ஸ் அவ்வ்வ்வ்வ்:)).. ஆதாரம் மேலே படமாக இணைக்கிறேன் பாருங்கோ..

      இதுவரை 4000 ஐத் தாண்டியதில்லை என்பதனையும் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்ன்ன்:))... ஹா ஹா ஹா சனி மாற்றம் நல்லாத்தான் வேர்க் பண்ணுது:))

      [im]http://www.funnycatpix.com/_pics/Looks_Just_Like_Me.jpg[/im]

      Delete
    2. Congrats miyaav :)wait will come with special gift

      Delete
    3. //Congrats miyaav :)wait will come with special gift//

      யூ மீன்ன்ன்:) அச்சப்பம்?:) இல்ல ராமசேரி இட்லி?:)) ஹையோ அவை எல்லாம் நெல்லைத்தமிழனுக்கான ஸ்பெஷல் கிவ்ட்டாக் குடுங்கோ அஞ்சு:))

      Delete
    4. //ரசனையான படம்!/// இவரு எந்தப் படத்தைச் சொல்லுறாக?:)) ஹா ஹா ஹா கிரீடம் வச்சதைத்தானே?:)..

      Delete
  54. ..// அப்பா அம்மாவில் எனக்குப் பிடி/க்காத விசயத்தை, நான் மனதில் போட்டு வச்சேன்// ஆமா மியாவ் அதே தான் நானும் அன்னப்பறவை மாதிரி செலக்ட் செஞ்சி வச்சி சிலதை என் மகளுக்கு செய்ய மாட்டேன். அம்மா கொஞ்சம் ரொம்ப strict .ஆனா நான் ரொம்ப மகளை அப்படி நடத்தல

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேபோல எனக்கு இன்னொரு அனுபவமும் கிடைச்சது படிக்கும்போது, அதனை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.. அந்த அனுபவத்திலிருந்து நான் எடுத்த முடிவு.. எக்காரணம் கொண்டும் கணவனை சந்தேகப் படக்கூடாது என்பது... அதேபோல எப்பவுமே நான் சந்தேகம் பட்டதே இல்லை... படுமளவுக்கு அவர் விடுவதுமில்லை:).. குட்டிக் குட்டிக் கதைகள் கூட அப்படியே வந்து சொல்லிட்டால்தான் அவருக்கு நிம்மதி:))...

      எல்லாத்துக்குமா சேர்த்து ஒரு பெரீஈஈஈஈஈஈய நன்றி அஞ்சு:)...

      Delete
  55. சந்திரபாபுவின் இந்தப் பாடலும், டான்ஸும் எனக்கு நிரம்பவும் பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. ஆவ்வ்வ்வ் பிளேனில ஏறுவரை வருகிறீங்க நம்மிடம்.. மிக்க சந்தோசமாக இருக்கு... மிக்க நன்றி நேசன்...

      நீங்கள் பயணம் போகப்போறீங்க எனத் தெரிஞ்சே உங்களை தொடர அழைச்சு சங்கடப்படுத்த விரும்பவில்லை நான்.

      மிக்க நன்றி நேசன்...

      Delete
    2. இன்னும் பயணத்துக்கு காத்து இருக்கின்றேன் விசா வரும் வரைக்கும்!

      Delete
    3. ஓ.. எல்லாம் நல்லபடி அமியட்டும் நேசன்... எந்த நாட்டுக்கும் போய் விடலாம் ஆனா இந்தியாவுக்கு மட்டும் விசா எடுக்கோணும் அதுவும் உடனே கிடைக்காதாமே கர்ர்ர்ர்:))

      Delete
  56. [im]http://mewanty.net/assets/cat-scratch-turntable.jpg[/im]

    இந்தாங்க மியாவ் உங்களுக்குனு தேடிபிடிச்சி கொண்டாந்தேன் :) விளையாடுங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பழைய ரெகோர்ட் தானே:) இது இப்பவும் இங்கு சிலர் வச்சுப் பாட்டுக் கேட்கிறார்கள் அஞ்சு.. ஸ்கொட்டிஸ்.. என்னா பெரிய டிஸ்க் தெரியுமோ...

      மியாவும் நன்றி.

      Delete
    2. garrrr :) its scratch post for cats :))

      Delete
    3. ஹா ஹா ஹா ஓ ஸ்கிராச் போர்ட்டாஆஆஆஆ.. அதௌ பழைய ரெக்கோர்ட் சேப்ல இருக்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  57. அப்புறம் மியாவ் இனிமே நிறைய அட்வைஸ் மழையா பொழியணும் :) பாருங்க எத்தனை பேர் ஓடி வந்து பார்த்திருக்காங்க :) அவங்க எல்லாருக்கும் உங்க அட்வைஸ் பிடிச்சிருக்கு யூஸ் ஆகும் :) நம்மளால நாலுபேருக்கு நல்லது நடந்தா சந்தோஷம்தான் :)

    ReplyDelete
    Replies
    1. ஆமா தேம்ஸ் நதியில் பல தலைகள் மிதக்கும் போறவர்கள் கழுத்தில்/கையில்/பையில் இருப்பதை என்னிடம் தந்தால் மகிழ்ச்சியுடன் யாத்திரையில் சேர்த்துவிடலாம்)))

      Delete
    2. ///
      AngelSaturday, January 06, 2018 11:38:00 pm
      அப்புறம் மியாவ் இனிமே நிறைய அட்வைஸ் மழையா பொழியணும் :) பாருங்க எத்தனை பேர் ஓடி வந்து பார்த்திருக்காங்க :)////

      ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ அஞ்சு.. மீ கட்டிலுக்குக் கீழ இருந்துதான் இக்கொமெண்ட் போடுகிறேன்:) கீழே வியூஸ் க்கான நெல்லைத்தமிழனின் விளக்கம்:) படிச்சிட்டீங்களோ?:)) ஹா ஹா ஹா அந்தக் கதிர்காமக் கந்தன் மலையை விட்டு இறங்கி வந்தாக்கூட என்னைக் காப்பாற்ற முடியாதுபோல இருக்கே:))..

      இத்தனை வியூஸ் கிடச்சிருக்கே என ஒரு கேக் கட் பண்ணிக் கொண்டாட முடியுதா இங்கின:)).. சே..சே..சே... மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடியாமே:)) அப்பூடி ஆச்சே என் நிலைமை:))...

      ////அவங்க எல்லாருக்கும் உங்க அட்வைஸ் பிடிச்சிருக்கு யூஸ் ஆகும் :) ///

      ஹையோ ஆண்டவரே.. பரலோகத்தில் இருக்கின்ற பிதாவே.. இக் கொயந்தை ஏதோ தெரியாத்தனமா உளறிட்டா:) அவவை மன்னிச்சுக் காத்தருளுங்கோ கர்த்தரே:)).. ஹா ஹா ஹா இதுக்கு மேல என்னால முடியல்ல அஞ்சு:))

      Delete
    3. ///கையில்/பையில் இருப்பதை என்னிடம் தந்தால் மகிழ்ச்சியுடன் யாத்திரையில் சேர்த்துவிடலாம்)))///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஐயா நேசன் ஐயா:)).. வழித்தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைச்ச கதையாகுதே இக்கதை:))..

      எரியிற வீட்டில பிடுங்கிறது மிச்சமாமே....:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதில மகிழ்ச்சியுடன் சேர்ப்பாராமே:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

      Delete
  58. [im]https://i.pinimg.com/736x/16/22/8e/16228ed46c7932defc3387851b2e2b0a--cat-jewelry-animal-jewelry.jpg[/im]
    Swarovski brooch உம உங்களுக்கே :) வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ் இது யூப்பரூஊஊஊ:) அத்தனையும் வைரம்தானே அஞ்சு:) லொக்கரில் வச்சுப் பூட்டிக் கீயைத்தேம்ஸ்ல எறிஞ்சிட்டேன்ன்ன் எங்கிட்டயேவா?:)).. ஹா ஹா ஹா மியாவும் நன்றி.

      Delete
  59. உங்களின் எல்லாப் பதிவுகளுக்கும் இது போல அதிக வ்யூ கிடைக்க வாழ்த்துக்கள் அதிரா..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்... அதுக்கு முக்கிய காரணம் நீங்க வச்ச தலைப்பென்றே நினைக்கிறேன்.. அதுதான் விளக்கம் அஞ்சு பக்கம் சொன்னீங்களே..

      Delete
  60. நினைவலைகள் இனிமையானவை
    அருமை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் மிக்க நன்றி.

      Delete
  61. சூப்பர்...


    ஒவ்வொன்றும் முத்துக்கள்...நல்லா சொல்லி இருக்கீங்க அதிரா...

    அப்பாவுக்கு நல்ல பேரை வாங்கி கொடுக்கணும் ...நினைத்தால நாம் ரொம்ப நல்ல பிள்ளை ஆயிடுவோம்/.....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ...

      //அப்பாவுக்கு நல்ல பேரை வாங்கி கொடுக்கணும் ...நினைத்தால நாம் ரொம்ப நல்ல பிள்ளை ஆயிடுவோம்/.....
      //

      நிஜமான உண்மை.. அப்பா அம்மாவுக்கு...

      மிக்க நன்றி அனு.

      Delete
  62. அதிரா நலமா...மிக நீீீஈஈஈஈஈஈஈஈண்ட. பதிவு.... இப்பத்தைக்ககு ஒரு குட்டு மார்னிங்கு சொல்லிட்டு மீ எஸ்கேப்பு மறுபடியும் வருவேன்... 5.....வருஷம் கழிச்சு இல்ல...சீக்கிரமாகவே..

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் லக்ஸ்மி அக்காஆஆஆஆஆஆ வாண்டோ வாண்டோ... உண்மையைச் சொல்கிறேன் உங்களுக்கு இனி மரணமே வரப்போவதில்லை:))

      ஏன் தெரியுமோ.. தேடாத இடமெல்லாம் தேடி முடிவில் உங்களுக்கு என்னமோ ஆச்சு.. அதனாலதான் எங்கும் வரவில்லை என மனதில் முடிவு கட்டியிருந்தேனே... இது எனக்கு ஹார்ட் அட்டாக்க்க்க்:)

      அதே பழைய நகைச்சுவையாளராகவே அதிரடியாக வந்திருக்கிறீங்க..நாம் எல்லோரும் கூட்டமாத் தேடினோம்.. முடிவில் சாதிகா அக்கா சொன்னா, நீங்கள் கொஞ்சம் நலமில்லாமல் இருப்பதாக.. அத்த்தொடு உங்கள் பேச்சு வரவில்லை எங்கேயும்...

      இனி எஸ்கேப்பூ ஆகாமல் வந்திடுங்கோ.. மிக்க மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் இருக்கு.. சனிமாற்றம் தான் உங்களை இங்கு இழுத்து வந்திருக்கு... அஞ்சுவும் சமீபத்தில் உங்கள் புளொக் நேமை லிஸ்ட்டிலிருந்து நீக்கிடலாம என நினைச்சுப்போட்டு.. வேண்டாம் இன்னும் கொஞ்சநாள் பார்க்கலாம் என விட்டதாகச் சொன்னா... நம்பிக்கை வீண்போகவில்லை..

      நன்றி நன்றி தொடர்ந்து வாங்கோ.

      Delete
    2. லஷ்மி அம்மா உங்களின் வருகை மிக சந்தோஷமாக இருக்கிறது....பல பதிவர்களின் பதிவுகளில் லஷ்மி அம்மா என்று ஒருவர் எழுதிக் கொண்டிருந்தார் அவரை பற்றிய தகவல் ஏதும் உண்டா என்று......ப்லரும் தகவல் ஏதுமில்லை என்றுதான் சொன்னார்கள் ஆனால் இன்று உங்களை கண்டதும் மிக மகழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க வளமுடன்......மீண்டும் நேரம் கிடைத்தால் பதிவு எழுதி வெளியிடுங்கள்

      Delete
    3. அட, லக்ஷ்மி! எப்போ வந்தீங்க? நல்வரவு. உங்களைப் பற்றி அமைதிச் சாரல் சாந்தியிடம் விசாரித்தேன். நலம் என்று சொன்னார். ஆனால் அதுவும் 2 வருடங்கள் முன்னால். இப்போத் தான் அவர்கள் உண்மைகளின் கருத்தைப் பார்த்துட்டு நீங்கதானானு பார்க்க ஓடி வந்தேன். நலம் தானே!

      Delete
    4. லக்‌ஷ்மி அம்மாவுக்கு நல்வரவு. எவ்வளவு நாள்... இல்லை வருடங்களாச்சு? நலம்தானே?

      Delete
    5. லக்ஸ்மி அக்கா இதை எல்லாம் பார்க்கிறாவோ தெரியேல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  63. மதுரைத் தமிழனின் அட்வைஸ் கேட்டு நீங்கள் எழுதிய 'அட்வைஸ்' பதிவு நல்லாத்தான் இருந்தது. ஆனால் இவற்றில் உள்ளது எல்லாவற்றையும் முன்னமே வெவ்வேறு பதிவுகளில் (உங்களுடையது) படித்திருக்கிறேனே.

    ஆனால், நீங்கள் எழுதியுள்ள எழுத்து (சைக்கிளில் பக்கத்து ஊருக்குச் செல்வது), காட்சிபோல் மனதில் விரிகிறது. கிட்டத்தட்ட நீங்கள் எல்லோரும் கிராம வாழ்க்கையை அனுபவித்திருப்பீர்கள். அதிலும், அந்தப் பயணங்களில், அங்கிருந்த சூழல் காரணமாக, பயத்துக்குக் காரணமில்லை என்னும்போது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

    கவர்ந்தற்கு” - தமில் 'டி' அவர்களே, இது நீங்கள் எழுதிய குறளா? திருவள்ளுவர் எழுதியதில் 'கவர்ந்தற்று' என்று வரும். அதனால் கேட்டேன்.

    இந்த போஸ்டுக்கு கிடைச்ச வியூஸ் - இதை நீங்க பாஸிடிவா, பெருமையா நினைக்கறீங்க. மதுரைத் தமிழன் இதனைப் பார்த்து, 'உங்கள் இடுகையை ஒரு முறை படித்தால் ஒன்றும் புரியாததால், மீண்டும் மீண்டும் படித்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறாங்க போலிருக்கு. புரிஞ்சுக்கிட்டு பின்னூட்டம் போடலைனா உங்கள் கோபத்தை எதுக்கு அதிகமாக்கணும்னு நினைக்கறாங்க போலிருக்கு" என்று எழுதியிருப்பார். நான் அப்படியெல்லாம் எழுதமாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊஊ:))..

      ///ஆனால் இவற்றில் உள்ளது எல்லாவற்றையும் முன்னமே வெவ்வேறு பதிவுகளில் (உங்களுடையது) படித்திருக்கிறேனே.///

      யேஸ்ஸ் எனக்கும் இது தெரியும்:).. நானே மறந்துபோய்விட்ட சிலவற்றை நீங்க அப்பப்ப சுட்டிக் காட்டியிருக்கிறீங்க மீ திடுக்கிட்டிருக்கிறேன்ன் ஹா ஹா ஹா:)..

      ///கிட்டத்தட்ட நீங்கள் எல்லோரும் கிராம வாழ்க்கையை அனுபவித்திருப்பீர்கள். //

      இலங்கையைப் பொறுத்தவரை நெல்லைத்தமிழன்.. கொழும்பு மட்டும்தானே சிற்றி... மற்றபடி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை, கண்டி.... இப்படி எல்லாமே ரவுண் தானே? அதுக்குக் காரணம் சிங்கள ஆட்சி... இன்னொன்று தொடர் சண்டைகள்... மற்றும்படி சிட்டி எனச் சொல்லக்கூடிய அளவு வளர்ச்சியடைந்து விட்டது இருப்பினும் அப்பெயர் சூட்டப்படவில்லை இன்னமும்... சரியாகத்தான் சொல்கிறேனோ தெரியல்ல இல்லை எனில் அடி வாங்குவேன்:))..

      அப்போ அங்கிருக்கும் ஊர்கள் குறிப்பா யாழ்ப்பாணத்தில் ஒவ்வொன்றும் கிராமம் எனச் சொன்னாலும் அவை நாம் நினைக்கும் கிராமம் அல்ல:)).. சகல வசதியும் படைச்ச ஒவ்வொரு குட்டி ரவுண்கள்போலத்தான் இருக்கும்..

      Delete
    2. ///கவர்ந்தற்கு” - தமில் 'டி' அவர்களே, இது நீங்கள் எழுதிய குறளா? திருவள்ளுவர் எழுதியதில் 'கவர்ந்தற்று' என்று வரும். அதனால் கேட்டேன்.///

      ஹா ஹா ஹா இப்பூடி 14 ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டுச் செல்லும் ஒரு பப்பூளிக்குத் தளத்தில வச்சு மானபங்கப்படுத்தியமைக்கு என் வன்மையான கண்டனன்ங்கள்:)) அதுக்காக நான் நாளைக்குப் போட இருக்கும்:) என் சமையல் குறிப்பைச் செய்து பார்த்துச் சொல்லோணும் ஜொள்ளிட்டேன்ன்:)).. அல்லது அஞ்சுட அச்சப்பம் சுடோணும்:))..

      மேலே ஸ்ரீராமும் சுட்டிக் காட்டியிருக்கிறார்:).. நான் திருக்குறளில் மட்டும் ஸீரோ வாக்கும்:).. ஆஅனாலும் மீக்கு டமில்ல டி ஆக்கும்:))

      ///இந்த போஸ்டுக்கு கிடைச்ச வியூஸ் - இதை நீங்க பாஸிடிவா, பெருமையா நினைக்கறீங்க.///

      பின்ன.. ஏதோ சொல்வார்களே “எருமை மாட்டில மழை பெய்வதைப்போல”:) என ஹா ஹா ஹா.. அப்படி இருக்க மாட்டேன்ன் நான்ன்ன்ன்... சின்னச் சின்னச் சந்தோசத்தையும் ஆரவாரிச்சுக் கொண்டாடோணும்:)).. இதெல்லாம் பெரிய விசயமோ என சிலர் பேசினாலும்:)).. எனக்கிது பெரிசுதேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))... ஆனாலும்.. “இதுவும் கடந்து போகும்”.. ஹா ஹா ஹா:)..

      ///நான் அப்படியெல்லாம் எழுதமாட்டேன்.//

      ஹா ஹா ஹா ஓடுற மீனில நழுவுற மீனாகிட்டீங்க:))... நீங்க எழுத மாட்டீங்க என எங்களுக்கும் தெரியுமே:))..

      Delete
  64. அதிரா - என்னையும் எழுதுவதற்கு அழைத்தமைக்கு நன்றி. எனக்குத் தளம் இல்லை. இருந்தாலும் எழுதுங்கள் என்று சொன்னதற்கு உங்களுக்கு என்னுடைய நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன்.. உங்களுக்குத் தளமில்லை எனத் தெரிஞ்சுதானே அழைத்திருக்கிறேன்ன்.. காரணம்.. அஞ்சுவின் பக்கத்தில் இதுபற்றிக் கொமெண்ட்டில் பேசி விட்டோம்ம், அதனாலேயே இங்கு தெளிவாக விளக்கம் கொடுக்கவில்லை, நீங்க பிசியாக இருந்தமையால் அதைக் கவனிக்கவில்லைப்போலும்.

      அதாவது நீங்கள் சொல்ல விரும்புவதை கதைபோல எழுதி கேவாபோ பகுதிக்கு எங்கள் புளொக்குக்கு அனுப்புங்கோ.. அல்லது ஸ்ரீராம் வாக்குக் கொடுத்திட்டார்.. எழுதி அனுப்பினால் தான் அதை வெளியிடுவேன் என.. ஒருவேளை ஞாயிற்றுக் கிழமை பதிவு இனி முடிவுக்கு வந்திடும் என நம்புகிறேன்ன்ன்:)) அந்தப்பதிவின் ஜொந்தக்காரர்:)) ஊருக்குக் திரும்பிட்டார்ர் போல இருக்கு:)) ஹையோ இப்போ அஞ்சுக்கு மொட்ட்டை போட்டு என் நேர்த்தியை நிறைவுக்குக் கொண்டு வரோணும்:))..

      எப்படியாவது வெளியிடுவார் ஸ்ரீராம்.. அதனால நீங்க எழுதி அனுப்புங்கோ...

      அனைத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
    2. "நீங்க பிசியாக இருந்தமையால் அதைக் கவனிக்கவில்லைப்போலும்." - இன்னும் பின்னூட்டங்களை முழுமையா அங்கு படிக்கலை. இன்றைக்குத்தான் இடுகையே வாசித்து முடித்தேன் (உங்கள் கமென்ட் பார்த்த பிறகுதான் ஞாபகம் வந்தது. நன்றி)

      Delete
  65. இடைப்பட்ட யாழ்பாணவாழ்க்கை முறை போல காலம் இனி வராது அது ஒரு வசந்தகாலம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நேசன்.. இப்போ வெளிநாடு போலாகிவிட்டதாம்... பக்கத்து வீட்டினரோடு பேசுவதற்கே ஆருக்கும் நேரம் கிடைப்பதில்லையாம்ம்.. அவரவரும் தாமுண்டு தன் பாடுண்டு என இருக்கிறார்களாம்.. ஒரு தடவை போய் வரவேண்டும்...

      Delete
  66. லுமாலா சைக்கிள் போல ரல்லிசைக்கிளும் புகழ்)))

    ReplyDelete
    Replies
    1. ஓம் இப்போதான் நினைவு வருது அண்ணனிடம் இருந்தது ரலி பைக்:))

      Delete
  67. அட்வைஸ் அழகான பகிர்வு.

    ReplyDelete
  68. அப்பாவின் நம்பிக்கையை காப்பாற்றிய அதிரா வாழ்க .)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நன்றி நேசன்... எங்கள் அப்பாவிலுள்ள ஒரு நல்ல குணம் எப்பவுமே சந்தேகப்பட மாட்டார்ர்.. இத்தனைக்கும் அவர் 2 ம் நம்பர்:) பொதுவாக 2ம் நம்பர்காரர்கள் சந்தேகப் பேர்வழிகள் என்பினம்:)).. அப்பா ஒரு அப்பாவி.. ஊரில அவரை “பச்சத்தண்ணி” மனிசன் எனவும் சொல்லுவார்கள்.. அதாவது பச்சத்தண்ணியைப்போல சூது வாது ஏதும் இல்லாதவர் என.

      ஆனா அம்மா சரியான சார்ப்பூஊஊஊஊஊஊ:)).. ஓரளவுக்கு சந்தேகப்படுவா.. சந்தேகப்பட்டுக் கண்டுபிடிச்சிடுவா உண்மைகளை:)) அம்மாவிடம் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது:) இப்ப கூட:)) ஹா ஹா ஹா:))..

      எனக்கு அப்பாவிலோ என் கணவரிலோ பயமே இல்லை:) ஆனா அம்மாவுக்குப் பயம்:) இருப்பினும் அம்மாவையும் அப்பப்ப வெருட்டுவேன்:)).. ஆனா என்னில ஒரு குணம் பொறுமையாக அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்பேன்ன்.. டெய்லி குறைந்தது ஒரு மணிநேரம் ஃபோனில பேசுவேன் அம்மாவோடு, நல்ல பேச்சும் குடுப்பேன்:).. அதே நேரம் நல்ல ஆதரவாகவும் இருப்பேன் அதனால அம்மாவுக்கும் என்னில தான் அதிக விருப்பம்:)) ஹையோ இதை அண்ணனோ அக்காவோ பார்த்திடக்கூடாதூஊஊஊஊ:))..

      மிக்க நன்றிகள் நேசன்..

      Delete
  69. வணக்கம் அதிராவ்வ்வ்வ்வ்வ்..:)

    வந்திட்டேன்னு பின்னூட்டம் எழுத வந்து திகைச்சுப் போனேன்.
    அட்வைஸ் அதிரா!... கலக்கிப்போட்டீங்களே வலையுலகை!... அதிருது. :)))

    ஊற்றிடும் அருவி போல்மொழி பேசும்
    உளமுடையாய்! அன்புடையாய்! - தென்றற்

    காற்றினில் ஆடும் மல்லிகை போலே

    கவனத்தை ஈர்த்திடுவாய்!
    
நேற்றும் உற்றாய்! இன்றும் பெற்றாய்!

    நாளையும் நீயே கொள்வாய்! - மகுடம்

    ஏற்றிடும் அதிரா! சேர்த்தனை நற்புகழ்!

    பல்லாண்டு வாழியவே!

    2 நாள் நான் ஊரில் இல்லை. அதற்குள் பதிவும் போட்டு மகுடமும் வாங்கி...
    எங்கேயோ போயிட்டீங்க அதிரா!...:) சூப்பர்!
    இன்னும் பல மகுடங்களை உங்களதாக்கி வாசகர்களையும் பன்மடங்காக்கிட
    உளமார வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ் வாங்கோ இளமதி வாங்கோ...

      ///அட்வைஸ் அதிரா!... கலக்கிப்போட்டீங்களே வலையுலகை!... அதிருது. :)))///

      ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:)) கூட்டத்தோடு என்னைக் கலைக்கினம்.. அதெப்படி உனக்கு இந்த அட்வைஸ் க்கு 14 ஆயிரம் வியூஸ் வரலாம் என:)) நானே கட்டிலுக்குக்கீழ ஒளிச்சிருக்கிறேன்ன்ன்:))


      ///நேற்றும் உற்றாய்! இன்றும் பெற்றாய்!

      நாளையும் நீயே கொள்வாய்! - மகுடம்

      ஏற்றிடும் அதிரா!///

      ஹையோ ஹையோ இதைப் பார்த்திட்டு இப்போ நான் கட்டிலுக்குக் கீழ குல்ட்டால மூடிட்டு இருக்கிறேன்ன்ன்ன்:)).. ஒரு சந்தோசத்தைக் கொண்டாட முடியுதா இங்கின:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி இளமதி.. கவிதை மழையில் நனைகிறேன்ன்ன்...

      //2 நாள் நான் ஊரில் இல்லை//

      ஓ அதுதான் கொமெண்ட் போட்டுத் தேடினேன்...

      ///எங்கேயோ போயிட்டீங்க அதிரா!...:) சூப்பர்!///
      ஹையோ எங்கேயும் போக வழி தெரியாமல் கட்டிலுக்குக் கீழ எல்லோ ஒளிச்சிருக்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா நன்றி நன்றி..

      ///இன்னும் பல மகுடங்களை உங்களதாக்கி வாசகர்களையும் பன்மடங்காக்கிட
      உளமார வாழ்த்துகிறேன்!!!//
      படிப்போர் எல்லோரும் கொமெண்ட் போட மாட்டினமாமே:)) கர்ர்ர்:))..

      Delete
    2. இளமதி அவர்கள் - பாடல் மிக அருமையா வந்திருக்கு. தமிழ் கற்றவர்கள் எப்போதும் நற் சொற்களையே கோர்த்துச் சொல்லவேண்டும். அப்படி நீங்கள் அதிராவை வாழ்த்தியது மகிழ்ச்சியா இருக்கு. (தமிழ்ல அறச் சொல் சொல்லி பாடல் எழுதினா, அது அப்படியே நடந்துவிடும். அதனால்தான் பண்டைக் காலப் புலவர்கள் பிடிக்காதவர்களை 'அறம்' பாடி அழித்துவிடுவர், உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்)

      இது என்ன வகைப் 'பா' என்று சொல்லமுடியுமா? இதைப் போன்ற பாடல்களை நான் படித்த நினைவில்லை.

      சீராளன், நீங்கள்லாம் பாடல் எழுதும்போது நிச்சயம் பலர் படித்து இன்புறுவர். என்னைப்போல் பலர் பின்னூட்டம் இடாவிட்டாலும், அவர்களும் படிப்பர். தொடர்ந்து எழுதுங்கள்.

      Delete
    3. உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரர் நெல்லைத் தமிழன்! _()_

      இது என் மனதிற்குத் தோன்றியதை அப்படியே எழுதினேன். இதில் மரபு பார்த்தோ, இலக்கண விதிக்குட்படுத்தியோ எழுதவில்லை. எந்தப் பாவகைக்குள்ளும் இது இல்லை...:)
      மனதிற்கு மகிழ்வுதரும் வகையில் நினைவில் தோன்றியதைக் கோர்வையாக்கி எழுதினேன். அவ்வளவே!

      வாழ்த்தும்போது சொற்களில் கவனம் தேவை என்பதை எமது ஆசான் சொல்லித் தந்ததை இன்றுவரை கடைப்பிடிக்கின்றேன்.
      இந்த அறம் பாடுவது பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. அதில் உயர்வு நவிற்சியணிச் சொற்களும் இடம்பெறுமாம் என்றும் அறிந்துளேன்.
      இங்கு நான் பாடியதில் அப்படியேதும் தவறு வந்துள்ளதா சகோதரரே!..
      எனையறியாமல் அப்படி ஏதும் எழுதப்பட்டதாயின் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.
      திருத்திவிடுகிறேன். நான் ஒரு ஆர்வத்தில் எழுதுகிறேன் தவிர சகலகலா வல்லி இல்லை!..
      இன்னும் கற்பவளே! தவறுகள் வரும். திருத்த, திருந்த வேண்டும்!
      உங்களைப் போன்றோரின் உதவியுடன் என்னை மேலும் வளர்த்திட விரும்புகிறேன்.

      சங்கடப்படாமல் கூறுங்கள்! மிக்க நன்றி சகோதரரே!

      Delete
    4. நெல்லைத்தமிழன் நானும் பா எழுத ஓசிக்கிறேன்ன்:) இது பற்றி நீங்க என்ன ஓசிக்கிறீங்க என்பதனை:).. மெதுவா ஜொள்ளுங்கோ:) ஒண்ணும் அவசரமில்லையாக்கும் ஹா ஹா ஹா:)..

      Delete
    5. அதிரா - நீங்களும் எழுதுங்க. 'அப்பா', 'அப்பப்பா', 'தப்பா', 'தப்புப்பா' என்ற பா வகைகளை எழுதவேண்டியதுதானே.

      Jokes apart, முயற்சி எடுத்து எழுதுங்க. இளமதி அவர்களுக்குக் கிடைத்த மாதிரி Guide (புலவர் பாரதிதாசன் ஐயா) கிடைப்பார்களா என்பதுதான் தெரியலை. இல்லைனா, எது வருதோ அதை எழுதி, இதுதான் 'அந்தப் பா, இது டப்பா' என்று கேட்டுடுங்க.

      Delete
    6. //நெல்லைத் தமிழன்///

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. இளமதி எண்பா.. எழுதியிருக்கிறாவாம் அப்போ நான் தொண்ணூறுப்பா எழுதட்டோ?:))..

      எனக்கு என் கிரேட் குரு இருக்கிறார் எல்லோ:)) அவர்தான் எனக்கு குரு:)).. அது யாரெனப் புரியாட்டில் என் செக்:) ஐக் கேழுங்கோ புரிய வைப்பா.. மீ ரொம்ப பிஸி யூ நோ:))..

      நெல்லை டமிலன் டொல்லிட்டார்ர்
      அடிடாவையும் அயகா பா எழுதச்சொல்லி
      பாங்காக மீயும் பா எழுதப் புறப்படுறேன்
      டப்பேதும் இருப்பின்
      என் குருவே.. கொப்பை விட்டுக் கொஞ்சம்
      கீழிறங்கி வந்து மீயைக்
      காப்பாத்துங்கோ:))
      ஹா ஹா ஹா:))

      Delete
  70. அதிரா!... இதென்னதிது..
    கடைசில என்பெயரும் எழுதிக்கிடக்கூ.... கர்ர்ர்ர்ர்...:)
    நான் வரலை இந்த விளையாட்டுக்கூ... என்ன எழுதுறது..
    எனக்கு இப்படித் தொகுத்து எழுதத் தெரியாது..:(
    அச்சோ... நான் என்ன செய்வேன் இதுக்கு... சாமிதான் காப்பத்தணும் என்னை!!!

    இருங்கோ இன்னொருக்காப் பதிவை ஆறுதலா படிச்சிட்டு மீண்டும் வாறேன்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சின்ன வயதை நினைச்சுப் பாருங்கோ.. நீங்க லவ் பண்ணிய காலங்கள்:) அப்போ நிறைய அட்வைஸ் நிட்சயம் பண்ணியிருப்பினம் நம் மக்கள்ஸ்ஸ்ஸ்:)).. பழசை நினைவு படுத்துகிறேன் எனக் குறை நினைச்சிடதையுங்கோ.. கவலை எனினும் பழசை நினைப்பதிலும் ஒரு இனிமை இருக்கு:(..

      அப்படி ஏதும் எழுதுங்கோ .. அல்லது கவிதையில் அவிழ்த்து விடுங்கோ அப்படி எனில் உங்கள் பொங்குதமிழ் என்போன்றோருக்குப் புரியாது:)) அதனால சந்தேகம் கேட்க மாட்டோம்:))... ஹா ஹா ஹா:))..

      ///சாமிதான் காப்பத்தணும் என்னை!!!
      ///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிராவைப்போல கரெக்ட்டா எந்தச்சாமி எனச் சொல்லோணும்:) அப்போதானே சாமிக்கு தெரியும்.. இல்லை எனில் சாமிக்குள் போட்டி வந்து நீ போய்க் காப்பாத்து.. நான் எதுக்குப் போகோணும் என்னையா கூப்பிட்டா?:) எனக் கேட்டிட்டால்ல்ல்ல்?:)) ஹா ஹா ஹா..

      Delete
  71. அழகாக, அருமையாக உங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் கிடைத்த அட்வைஸ்களையும்
    தொகுத்துப் பதிவாக்கியிருக்கிறீங்கள்.

    //வாழ்வில் நடந்த கதைதானே அனுபவமாகிப் பின் அட்வைஸ் ஆகிறது:)..// நூறு வீதம் உண்மை அதிரா!
    நல்லதோ கெட்டதோ கிடைக்கப் பெறும் அனுபவங்கள்தான் இன்னொருவருக்குச்
    சொல்லும்போது அது அட்வைஸ் ஆகின்றது.
    சில அட்வைஸ்கள் ஊக்குவிப்பதற்காகவும் சிலது அவதானம் கொள்ளவும் வைக்கிறது!
    நாம் கொள்வதும் கொடுப்பதும் அதே!

    நீங்கள் நம்மூரில் வாழ்ந்த அந்தப் //அது ஒரு அழகிய பொற்காலம்.// பொற்கால வாழ்க்கை எனக்குக் கிடைக்கவில்லை.
    அதற்குள் நான் இங்கு வந்துவிட்டேன். நானும் அந்த வாழ்க்கைக் கால இனிய சம்பவங்களைப் பற்றி அறிந்திருக்கின்றேன்.
    உண்மையில் நீங்கள் நல்லபல சந்தற்பங்களையும் கண்டு அனுபவித்ததை அறிய மகிழ்வாயிருக்கிறது!

    இங்கு வந்து பின்னூட்டமிட்டவர்களைப் போலவே என் கருத்தும் இருக்கிறது அதிரா!
    ஒரே விடயத்தை நானும் எழுதி படிப்பவர்களுக்கு அலுப்புதட்டுமே என்பதால் அதிகம் எழுதவில்லை.
    சுருங்கச் சொன்னால் உங்கள் அனுபவம் அட்வைஸாக அசத்தலாக இருக்கிறது.
    நல்ல தொகுப்பு!

    ReplyDelete
    Replies
    1. ////
      நீங்கள் நம்மூரில் வாழ்ந்த அந்தப் //அது ஒரு அழகிய பொற்காலம்.// பொற்கால வாழ்க்கை எனக்குக் கிடைக்கவில்லை.///

      ஓஒ நீங்க ஜஸ்ட்டூஊ மிஸ்ட்டாஆஆ?:).. ஹையோ அதை அனுபவிச்சிருக்கோணும் நீங்க.. அதன் பிற்பகுதியில்... இடைக்கிடை செல்கள் வந்து விழும்:) பொம்பர் குண்டு போடும்.. உலகத்தில இல்லாத கடவுளை எல்லாம் கூப்பிடுவோம்ம்:)).. பின்பு சத்தம் நின்றபின் விழுந்து விழுந்து ஒவ்வொருவரும் எப்படி ஓடி ஒளிச்சவை எனச் சொல்லிச் சொல்லிச் சிரிப்போம்ம்:))... நிறைய அனுபவங்கள்..

      எங்கள் சித்தப்பா ஒருவர் இப்போ கனடாவில் இருக்கிறார்ர்.. அந்நேரம் அவருக்கு ஒரு 32..35 வயதிருக்கும்... பொம்பர்,ஷெல் எனில் பயமெண்டால் அப்படி ஒரு பயம் அவருக்கு:)) பங்கரை விட்டு சில நாட்கள் வெளியே வரவே மாட்டார்ர் ஹையோ ஹையோ:))

      Delete
  72. என்னையும் இத்தொடரைத் தொடரச் சொல்லியுள்ளீர்கள் நன்றி அதிரா!
    ஆனால் என்ன எழுதுவேன். என் வாழ்க்கையில் அனுபவம் நிறைய உள்ளது இல்லையென மாட்டேன்.
    ஆனால் அவை எல்லாம் அட்வைஸாக இருக்காது! தவிர சுயசரிதமாகிவிடும்.
    ஏற்கனவே அவ்வப்போது சொல்லியாச்சே...
    இரு வரிக் குறள்போல ஏதாயினும் சுருக்கமாக
    எழுதமுடியுமா என முயற்சி செய்கிறேன்...:)

    நன்றிகளுடன் வாழ்த்துக்கள் அதிரா!

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் மிக்க நன்றி இளமதி... சங்கடப்படாதீங்கோ இதில் கட்டாயம் ஏதுமில்லை... முடிஞ்சால் எழுதுங்கோ.. இன்னுமொன்று.. என்னால் முடியாது எனக்கு என்ன தெரியும் எனப் பலர் பின் வாங்குவார்கள்.. ஆனா அவர்களுக்கு ஊக்கம் கொடுத்துக் கட்டாயப் படுத்தி விட்டால்ல்.. அவர்கள் உள்ளிருக்கும் மிகப் பெரிய திறைமை எல்லாம் வெளியே வரும்...

      நீங்க ஆரம்பம் அப்படித்தானே புளொக் எழுத மாட்டேன்ன் எனவும் பின்பு பேஸ் புக் வரமாட்டேன் எனவும் பயந்தீங்க.. மிரட்டித்தானே கூட்டிப் போனேன்.. இப்போ கவிஞர் ஆகிட்டீங்க:) அப்படித்தான்:))...

      அதனால்தான் தொடர அழைப்பது...

      கட்டாயமில்லை இளமதி.. முடிஞ்சால் எழுதுங்கோ முடியாவிட்டல் விட்டுவிட்டு நீங்க தொடர்ந்து போஸ்ட் போடுங்கோ .. மிக்க நன்றிகள்.

      Delete
  73. வணக்கம் பூஸ் !

    அழகான நினைவுகளில் சேமிக்கபட்ட அப்பாவின் அன்பும் அம்மாவின் அன்பும் அண்ணனின் பாசமும் என்று அழகழகாச் சொல்லி இருக்கீங்க நான்தான் உடனே வர முடியாதவனாகிட்டேன் !பொறுத்தருள்க

    தமன்னாவை லேட்டா டச் பண்ணிட்டேன் ஆங் ....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.. என் பழைய போஸ்டில் உங்களைக் கேட்டிருந்தேன்.. ஊருக்குப் போயிட்டீங்களோ என...

      உங்களிடத்தில் கிரிஸ்மஸ், நியூ இயர் ஹொலிடே இல்லை என்பதால் பிசிபோல:)).. மிக்க நன்றிகள் சீராளன்... இனி ஏழியா டச்சுப் பண்ணுங்கோ தமனாக்காவை :).

      Delete
  74. பந்திக்கும் முந்தோனும்,பதிவுக்கும் முந்தோனும். இல்லாட்டில் இடமே போயிடும் போல. அதாவது நல்ல சாப்பாடும் கிடைக்காது. எழுத நினக்கிறதையெல்லாம் எழுதிபோடுவினம். நல்லகாலம் வோட் டை போட்டிட்டன். அதனால ஏச்சு கிடைக்காது..
    எனக்கு சந்திரபாபு பாட்டு ரெம்ப பிடிக்கும் அதிரா. அதுவே அட்வைஸ் ஆ இருக்கும். நல்ல தத்துவபாடலிலும் நல்ல கருத்துக்களை எடுக்கலாம். ஆனா ஒரு கை தட்டி ஓசை வருமோ...
    அந்த பொற்காலம் பற்றி பேசினால் அழுகைதான் வரும். எவ்வளவு சந்தோஷமா அந்த பயப்பிட்டகாலத்திலும் இருந்தனாங்கள். எனக்கு நல்ல ஞாபகம்சைகிளில் நல்லூரில் நடக்கும் கம்பன் விழாவுக்கு போனது. 6,7 கேர்ள்ஸ் க்கு 1 அண்ணா துணையா வருவார். சைகிளில் இரவு 12,1 மணியாகும் வீட்டை வர. பின்னால் வாறவையின் சைக்கிள் வெளிச்சத்தில முன்னால நாங்க (சைக்க்கிளில் லைட் இல்லை என்றாலும் )போகமுடியும். அவையளும் பாதுகாப்பா வருவினம். நல்ல மகிழ்ச்சியா இருந்திச்சு. இப்ப எல்லாம் தலைகீழ்..
    எங்கட வீட்டில நான் அப்பாசெல்லம். ஆனபடியால அப்பாவின் அன்பை இழக்ககூடாது என்பதிலும்,அவரின் நம்பிக்கையை கெடுக்ககூடாது என்பதிலும்கவனம். அதனால அம்மாவிடம்தான் எல்லாமே சொல்லிசெய்வன். அவாவும் எங்காவது போறதெண்டால் சொல்லுவா இத்தனை மணிக்கு வரவேணுமொண்டு. நானும் அந்த டைமுக்கு வந்திடுவன்.ஏனென்றா அவா பிறகு வாசலிலே பார்த்துக்கொண்டு நிற்பா. பிறக்கு அப்பா பார்த்தாரெண்டா கேட்பார். ஏன் இங்க நிற்கிறீர் என.. அம்மா அப்பாவி உண்மை சொல்லி விடுவா. பிறகு அப்பாவுக்கு என்னில வெறுப்பு,அல்லது கோபம் வந்திட்டாலும் என்ற பயத்திலே வந்திடுவன்.. எனக்கு அம்மாவும்,சித்தப்பாவுமே அட்வைஸ் சொல்லியிருக்கினம்.

    பல இடத்திலயும் நின்று, இருந்து, சாப்பிட்டு பேசினாலும் கூட அந்த வழிஅனுப்புற கேட்டில் நின்று கதைப்பது ஓரு சுவாரஸ்சியம் தான் அதிரா. அது மறக்கவேமுடியாது. இதை நினைச்சால் எனக்கு பழைய ஞாபகம் நிறைய வருது..
    இதால சிலநேரம் பிந்தி வந்திருக்கன் வீட்டுக்கு..
    அறிவுரைகள் நாம் பிறந்ததிலிருந்து இறப்பு வரை வந்துகொண்டேயிருக்கும். அப்படியான வாழ்வியலைதான் நாம் வாழ்கின்றோம். இது ஒரு வழிகாட்டியென்றே நான் நினைக்கிறேன்.
    என்கரேஜ் என்பது ஒரு உந்துசக்தியும்,எனர்ஜியும் கூட. என் கணவரும், மகனும் சொல்லுவினம்.
    கடைசில என்னையுமா... கண்டிப்பா எழுதுகிரேன் அதிரா. எழுத தூண்டுகோலா இருக்குமெல்லோ.நன்றி அதிஆ.
    வாழ்த்துக்கல் மகுடம் சூட்டியமைக்கும், பலபேர் வந்து பார்த்தமைக்கும்.
    கைக்கிள் பூசார் மறக்கமுடியாது. முதல் போட்டபோது கோபு அண்ணாவின் கருத்து ஞாபகம் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...

      ///பந்திக்கும் முந்தோனும்,பதிவுக்கும் முந்தோனும்.///
      ஹா ஹா ஹா இந்த பந்திக்கு முந்துவதில் நாங்க இருவரும் பெஸ்ட்டூஊஊஊ:)).. முதலாவதா போயிட்டல் டக்கென வீட்டுக்கு வந்திடலாம் என பந்திக்கு முந்திடுவோம் ஹா ஹா ஹா:)..

      //அந்த பொற்காலம் பற்றி பேசினால் அழுகைதான் வரும். ////

      இல்ல நாம் அதை அனுபவிக்கக் கொடுத்து வச்சோம் என சந்தோசப் படோணும்:)..

      //பல இடத்திலயும் நின்று, இருந்து, சாப்பிட்டு பேசினாலும் கூட அந்த வழிஅனுப்புற கேட்டில் நின்று கதைப்பது ஓரு சுவாரஸ்சியம் தான் அதிரா.///

      ஹா ஹா ஹா 100 வீதம் உண்மை...

      //கடைசில என்னையுமா... கண்டிப்பா எழுதுகிரேன் அதிரா. எழுத தூண்டுகோலா இருக்குமெல்லோ.//

      மிக்க சந்தோசம் நிட்சயம் எழுதுங்கோ.. எப்பூடியாவது உங்கள் புளொக்கை திரும்பவும் ஆரம்பிக்க வைக்கோணும் என்பதே என் ஆசை..

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
  75. அம்மாடியோவ். கதைபோல, மிகவும் அழகாக இருக்கு . உபயோகமானது. அறிவுபூர்வமானது. அன்புடன்

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.