நல்வரவு_()_


Monday 14 May 2018

நாங் ரோட்டா போகிறோம்...

நீங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது..

இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்தேனே:).. இப்போ கையே நுழையுதில்ல:) கொஞ்ச நாளாக ஜிம் க்குப் போகாமல் குண்டாகிட்டமோ?:))
ப்போ நல்ல வெதர் வந்துவிட்டமையால்.. எங்கள் ஊர் அழகோ அழகு.. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களாக விரியும்.. ஊரைப் பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.. மனமும் சந்தோசமாக இருக்கு.. சரி சரி நான் ஓவராப் பேச மாட்டேன் வாங்கோ வீட்டில் இருந்து ஆரம்பிச்சு நடக்கலாம்.. போகப் போகப் படமும் எடுத்தேன்.. உங்களுக்கு படம் காட்டாமல் நடந்தேன் எனில் நம்ப மாட்டீங்களெல்லோ அதிராவை..

வெளியே பார்த்தால் நல்ல வெதர்.. இப்பூடி வெதர் எனில் வீட்டுக்குள் இருப்பதோ?:)



ஆஆஆ  எங்கட  பிங்கிராணி.. நான் பூவைச் சொன்னேன்:).. விண்டர் முடிஞ்சதும் இவதான் முன்னமுன்னம் பூத்திருக்கிறா..

இவ எங்க வீட்டு பாரிஜாக்கா:))

 இவ எதிர் வீட்டுச் சிவப்புச் சிங்காரி:) இன்னும் முழுசாப் பூத்து முடியவில்லை.. 

ஆங்ங் நம்ம ஏரியாவில் நடக்கத் தொடங்கியாச்சு.. பார்த்தீங்களோ மே ஃபிளவரின் அழகை....



  




வெள்ளையிலும் இருக்கே..

இந்தக் குறுக்குப் பாதையால் போயிடலாம், ஆ ரெயினுக்கு மேலே பாலத்தைக் கடப்போம்.. கடக்கும்போது ரெயின் வருவது தெரிஞ்சுதா.. 30 மைல் வேகத்தில் ஓடிப் பாலத்தில் ஏறினேன்:).. ரெயின் 60 மைல் வேகத்தில் போயிந்தி கர்ர்ர்ர்ர்:))

இது என்ன பாதை கடலுக்குள் இறங்குது? தெரியுமோ இதுதான் (Boat) போட் ஐ தள்ளிக்கொண்டு போகும் தண்டவாளம்.. அப்படியே ஆத்தில் இறங்கிடலாம்..

பல போட்கள் பார்க் பண்ணப் பட்டிருக்கு.. அதில் ஒன்று இது..

ஆஆஆ அதோ ஒருவர் குட்டித் தோணியில் போகிறார்...


ஆஹா தண்ணிக்கு நடுவே இருக்கும் மணல் பிட்டியில், சில கறுப்புப் புறாக்கள் துயில் கொள்கின்றன[ஆஅவ்வ்வ் என்னா டமில்.. என்னா டமில்:).. பின்ன அதிராவுக்கு டமில்ல டி எல்லோ?:) அதுதான் பின்னிப் பெடல் எடுக்கிறா:)]...[இவை புறாவோ வாத்தோ அல்லது நாரைகளோ தெரியல்ல, புறாவின் சைஸ் இல், கறுப்பு வெள்ளை நிறத்தில் கூட்டமாக இருக்கும்.. நன்கு பறக்கும்]
========================================

ஆங்ங் என் சுவான் தம்பதிகள்.. அவை தமக்குள்  பேசுவது எனக்குக் கேட்டுதே:)..
 “நாம் பொது இடத்தில் எவ்ளோ மரியாதையா நடந்து கொள்கிறோம்.. இந்த மனிதர்களைப்போல பப்புளிக்கில்:) தொட்டுத்தடவி லவ்வுவதில்லை:))), அழகா இடைவெளி விட்டு இருக்கிறோம்:)”

ஆஆ அதிராக்கா வாறா.. கெதியா ஓடிவாங்கோ ஏதும் சாப்பிடக் கொண்டு வந்திருப்பா:)


 “பிள்ளைகளை வளர்த்து, மணம் முடிச்சுக் குடுத்திட்டு, ஓடி ஓடி உளைச்சுக் களைச்சுப் போய்.. பென்சன் எடுத்துக் கொண்டு.. இனித்தான் மனைவியை ஆசையா அருமையா சுகந்திரமா கதை பேசி லவ்வு பண்ணலாம் என ஆத்தங் கரைக்குக் கூட்டி வந்தால்.. இங்கு வந்து குறட்டை விடுறாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மட்டின் றோல்ஸ் சாப்பிட்டிருப்பாவோ”:))

  “சரி நான் மட்டும் முழிச்சிருந்தா ஆபத்து.. தனியே ஆத்தோரம் இருந்து ஆரைப் பார்க்கிறீங்க?:) என்ன விடுப்ஸ் இந்த வயசில எனக் கேட்டாலும் கேட்பா:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) நானும் நித்திரையாகிட்டால் சண்டை இல்லை:)”

ஹா ஹா ஹா நிக்காதீங்க தொடர்ந்து நடக்கோணும் வாங்கோ ஸ்பீட்டா:).

அப்பாடா.. பார்க்கின் உள்ளே வந்தாச்சு.. இனி ஓடலாம்ம்ம்:)


பாருங்கோ பார்க்கில்.. ஒரு மரம் தறித்திருக்கிறார்கள்.. அந்த தறித்த இடத்தில்.. சோக் எடுத்து வந்து  “அதிரா” என எழுதிவிட வேண்டும் என ஆசையா இருக்கு..:)

உஸ்ஸ்ஸ்ஸ் ஸ்லோப் பண்ணாமல் ஸ்பீட்டா நடவுங்கோ:)

இது குழந்தைகள் ஏரியாவாம் அதாவது அண்டர் 15:).. போனவருடம் போனேன் உள்ளே:) இந்த வருடம் சுவீட் 16 ஆகிட்டுதெல்லோ:))..

நல்லவேளை.. இந்த பெஞ்சிலே பூங்கொத்து எதுவுமில்லை....

ஸ்ஸ்ஸ் கால் நோகுது.. இந்த ஓபின் ஜிம் இல் கொஞ்சம் சைக்கிள் ஓடிட்டு வாறேன்.. வெயிட் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்.....

ஆஆஆஆஆஆ டேஞ்சரஸ் ஏரியாவாமே:).. நான் கிட்டப் போக மாட்டேன் ஜாமீஈஈஈஈ... நேக்கு உசிரு:) முக்கியம்.. இந்த சுவீட் 16 லயே போயிட மாட்டேன்ன்:)) இன்னும் அனுபவிக்க எவ்ளோ இருக்கே:)).. வாணாம் மற்றப் பக்கம் திரும்பி நடக்கலாம்...

 நில்லுங்கோ நில்லுங்கோ. ஒருக்கால் இதில ஊஞ்சல் ஆடிட்டு வாறேன்ன்.. ஸ்ஸ்ஸ்ஸ் எவ்ளோ இதமா இருக்கு ஆற்றைப் பார்த்தபடி ஊஞ்சல் ஆடுவது.. அந்தநாள் ஞாபகம் கண்ணிலே:) வந்ததே....:))

 ஆங்ங் இது என்ன பூ தெரியுமோ? அப்பிள் மலர்கள்..
========================================================================
இன்று ஒரு தகவல்:-
இது என்ன தெரியுமோ? உப்பு. இப்படி ரோட்டுக் கரைகளில் அங்கங்கு உப்புக் கொட்டி வைத்திருப்பார்கள், இந்த உப்புத்தான் ஸ்னோவில் ஐஸ் இல் வழுக்காமல் போடுவது. இதை நாம் எடுத்து வந்து வீட்டில் வாசலுக்கெல்லாம் போட்டு விட்டால் வழுக்காது. போஸ்ட்மான் வழுக்கி விழுந்தால் அதன் பொறுப்பு வீட்டுக்காரருக்கே.. அதனால இப்படி உப்பெல்லாம் போட்டு கிளீனா வச்சிருக்கோணும் வாசலை. நான் இப்போ இதனை எடுத்து வந்து என் விபசாயத்துக்குப் பாவிக்கிறேன்:).. அதாவது செடிக்கு கிட்ட போடாமல், வரம்போரம் போட்டு விட்டால் ஸ்லக்.. நத்தை உள்ளே வரமாட்டினம்ம்ம்:)..
=======================================================================
ஊசி இணைப்பு:

இம்முறை படங்களாலேயே போஸ்ட் நீண்டு விட்டமையால், இத்தோடு நிறுத்தி விடுகிறேன்:)
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
முக்கிய இணைப்பு:
அஞ்சூஊஊஊ நீங்க கேட்டபடி பொற்கிழி:) [அவ்வ் கரெக்ட் ழி:)].. ரெடி பண்ணி.. ஸ்ரீராம் சொன்னபடி மொட்டைமாடியில் விட்டிட்டேன்..:) வெரி சோரி டங்கு ஸ்லிப் ஆச்சு:)) இறக்கிட்டேன்ன்ன்:)) உள்ளே என்ன இருக்குது என்று மட்டும் கேட்டிடாதீங்கோ:)).ஸ்ஸூ..ஸ்ஸ்ஸூ எனச் சத்தம் மட்டும் வருது:)

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
 “நாம் போகுமிடமெல்லாம், மனசும் கூடவே வராது
__()__

182 comments :

  1. வா...வ் கனநாளைக்கு பிறகு அதிரா வந்திருக்கா..வாங்கோ.. படங்கள் எல்லாம் அழகூஊஊ. பெட்டியும் அழகா இருக்கு எங்க சிவப்பு மரத்தை காணல. மத்தவைக்கு பிறகு வாறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆங்ங்ங் வாங்கோ அம்முலு வாங்கோ.. இம்முறை முதலாவதாக ஜம்ப் பண்ணிட்டீங்க.. அதுக்காக உங்களுக்குப் பொற்கிழி தரோணும்ம்ம்:)).. மேலே ஸ்ரீராமுக்குக் குடுத்ததைப்போலவே ஒரு அழகிய ஓலைப்பெட்டி உள்ளே அழகிய குட்டி அழகி இருக்கிறா.. இதோஓஓஓஓஓஓஓ கச்ச் இட்ட்ட்ட்ட்:))..

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் இருங்கோ இம்முறை என் ஆயா படு பயங்கரமா இருமுறா தும்முறா காச்சல் வேறு 98 இல் காயுது:)) எனவே அவவால சமைச்சுத்தர முடியாது:)) நான் புது யங்:) ஆயா வைக்கப்போறேன் ச்ச்ச்சோஓ என் புளொக் வழக்கப்படி 2 வதா வருபவரோடு ஆயாவை அனுப்பப்போறேன்ன்ன்ன்ன்:)).. இருங்கோ சத்து எட்டிப்பார்க்கிறேன் ஆரு 2 ந்ட் என:)) ஹாஆஆஆஆஆஆ ஹாஆஆஆஆஅ ஹாஆஆஆஆஆஅ ..:)) மீன் ஒன்று மாட்டிடிச்சீஈஈஈஈஈஈ ஆயாவுக்கு ஃபிஸ் ரொம்பப்பிடிக்கும் ஐ மீன் ஃபிஸ் ஃபிறை:))

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
    2. அவ்வ் :) கர்ர்ர்ர் அம்முலு என்னிக்குமில்லாம இன்னிக்கு 1 ஆஅ வந்திருக்காங்க அதனால அந்த அய்யவ சே சே ஆயாவை அம்முலுக்கே கொடுங்க அவங்க பொறுமையா பத்திரமா பார்ப்பாங்க :)

      Delete
    3. சொல்ல தவறிட்டேன் அம்முலு... அந்த சிவப்பு மரம் இன்னும் இலைகள் பெரிதாகவில்லை.. ரைம் இருக்கு..

      Delete
    4. //அதனால அந்த அய்யவ சே சே ஆயாவை அம்முலுக்கே கொடுங்க அவங்க பொறுமையா பத்திரமா பார்ப்பாங்க :)//

      நோ..நோ.... சன் மேற்கே உதிச்சாலும் உதிக்கலாம்[இது இங்கிலீசு சன்:))].. அதிரா சொன்ன வாக்கை மீற மாட்டேன்ன்ன்ன்... என் புளொக் வழக்கப்படி ஆயா.. அஞ்சுவுக்கே:)).. திரும்படியும் சொல்றேன்ன்ன்.. ஆயா பத்திரம்ம்ம்ம்ம்:))...பிரைவேட் ஹொஸ்பிட்டல்ல சேர்த்திடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

      [im] http://40.media.tumblr.com/66851c83d523989048c79c5513e412c2/tumblr_mv6qipC4wA1shf8zxo1_500.jpg [/im]

      Delete
  2. [im]http://ofunnygames.com/images/stories/2013/march/tomandjerry-fly-with-clouds.jpg[/im]

    இதோ வந்திட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கஞ்சு வாங்கோ.. உப்பூடி ஓவரா சிரிச்சா கூடவே துன்பம் வருமாமே:)).. பாருங்கோ கரெக்ட்டா என் ஆயாவைக் கூட்டிப் போக வந்திருக்கிறீங்க:))..

      ஆயாவை ஆரிடம் ஒப்படைகலாம் என நெஞ்சு பக்குப் பக்கென இருந்துதா:)) இப்பத்தான் நிம்மதி:)).. நல்ல ஹொஸ்பிட்டலாப் பார்த்து முதல்ல அவவை அட்மிட் பண்ணி:)) ராப்ப்பகலா முழிச்சிருந்து அருகிலேயே இருந்து சூப்பு.. அப்பிள் சைடர் வினிகர்:) இதெல்லாம் குடுத்துக் காப்பாத்துங்கோ அஞ்சூஊஉ:))

      என் லங்ஸ் ஐயே உங்களிடம் ஒப்படைக்கிறேன்ன்ன்:))

      [im] http://www.wetcanvas.com/Community/images/01-Feb-2005/23460-Laughing_Cat.gif[/im]

      Delete
  3. // “நாம் போகுமிடமெல்லாம், மனசும் கூடவே வராது”//

    ம்க்கும் :) சரி அப்போ நெக்ஸ்ட் டைம் நகைக்கடைக்கு புடைவை கடைக்கு போகும்போது மனசை வீட்ல விட்டு போங்க :))

    சும்மா கலாய்ச்சேன் .உண்மைதான் மியாவ் பல இடங்களுக்கு செல்லும்போது சில சந்தர்ப்ப சூழல் காரணமா நானும் மனசில்லாம போவதுண்டு அது முள் மேல் அமர்ந்த ஃபீலிங்

    ReplyDelete
    Replies
    1. ///ம்க்கும் :) சரி அப்போ நெக்ஸ்ட் டைம் நகைக்கடைக்கு புடைவை கடைக்கு போகும்போது மனசை வீட்ல விட்டு போங்க :))//

      ஹா ஹா ஹா இங்கின டபு பண்றீங்க:)) அது நம் மனசு போகுமிடமாச்சே:)) நாம் தான் கூடவே போகோணும்:)).

      //உண்மைதான் மியாவ் பல இடங்களுக்கு செல்லும்போது சில சந்தர்ப்ப சூழல் காரணமா நானும் மனசில்லாம போவதுண்டு அது முள் மேல் அமர்ந்த ஃபீலிங் //

      அதேதான் அஞ்சு.. இன்னும் ஒன்று... நாம் போய்க் கொண்டிருப்போம் ஆனா மனமோ வேறு எங்கோ கற்பனையில் இருக்குமெல்லோ...

      நான் தனியே ட்றைவ் பண்ணும்போது பலதடவை.. மனது எங்கோ கற்பனையில் மிதக்கும்.. ஆனா கை கால் எல்லாம் ஒழுங்கா சிக்னல் போட்டு திருப்பி திருப்பி ஓடி வரும்... இடையில திடுக்கிடுவேன் வீடு வந்திட்டுதோ என:))

      Delete
  4. //ஸ்ரீராம் சொன்னபடி மொட்டைமாடியில் விட்டிட்டேன்..:)//

    ஹலோ மியாவ் எனக்கு ஸ்ஸ்ஸ் சத்தம் கேக்கலை டம டம சத்தமே கேக்குது .:) மரச்சொப்பு வச்சி விளையாட போறாரா ஸ்ரீராம் :))

    ReplyDelete
    Replies
    1. அவர் விளையாடுவதை வீடியோவா எடுத்து விரைவில் போடுவார் என நம்புறேன்ன்:)) ஹா ஹா ஹா.

      Delete
  5. ஊசி இணைப்பு ,,உண்மைதான் ...நிறையபேர் கொட்டிட்டு பொறுக்கமுடியாம அவஸ்தை படறாங்க கொட்டின வார்த்தைங்க மணியா சிதறி எல்லா இடமும் பரவிடும்

    ReplyDelete
    Replies
    1. அதேதான் அஞ்சு.. நோர்மலான நேரம் எல்லோரும் நல்லவர்களே.. ஒரு பிரச்சனை என வரும்போது ஒவ்வொருவரும் எப்படி ரியக்ட் பண்ணுகிறார்கள் என்பதை வச்சே உண்மையான குணம் தெரிய வரும்...

      Delete
  6. / / கொஞ்ச நாளாக ஜிம் க்குப் போகாமல் குண்டாகிட்டமோ?:))..,,//

    ஹா ஹாங் அதுதான் எனக்கு பூஸ் paws மட்டும் தெரியுதா :)
    பிங்கிராணியை தொடும்போது கையெல்லாம் வளையல் போட்டு படமெடுக்கணும் சொல்லிட்டேன் :)

    சிவப்பு சிங்காரி செம அழகு .இங்கேயும் செர்ரி ப்ளஸம்ஸ் போது குலுங்கறாங்க கூடவே மக்னோலியாவ்ம் எனக்குதான் மலர்கள் கிட்ட நெருங்கும்போதே அந்த மகரந்தம் என்னமோ பண்ணுது ஹெவி போலன் சீசன் இப்போ

    ReplyDelete
    Replies
    1. ///பிங்கிராணியை தொடும்போது கையெல்லாம் வளையல் போட்டு படமெடுக்கணும் சொல்லிட்டேன் :)///

      ம்ஹூம்ம்ம்:)) நான் நெம்ம்ம்பி லொக்கரால எடுத்து வந்து போட்டால் லபக்கெனப் பிடுங்கிட்டு ஓடும் ஐடியாப் போல இருக்கே:)) விடமாட்டேன்ன்ன் அப்பூடி நடக்க விடமாட்டேன்ன்ன்:)) மீ ரொம்ப உசாராக்கும்:))..

      //சிவப்பு சிங்காரி செம அழகு//
      எங்கள் வீட்டில் இதே மரம் வயலட் இருக்கு இன்னும் பூக்கவில்லை.. பக்கத்து வீட்டில் இதே மரம் பிங் இருக்கு அதுவும் இன்னும் பூக்கவில்லை எல்லாமே சூப்பர் அழகு.

      எனக்கு இந்த வெயில் தான் ஒத்துக்கொள்ளுதில்ல அஞ்சு.. நடந்து வீட்டுக்கு வந்தால் ஒரே மயக்கமா வருதே கர்ர்ர்ர்ர்ர்:)))

      Delete
    2. //வெயில் தான் ஒத்துக்கொள்ளுதில்ல அஞ்சு.. நடந்து வீட்டுக்கு வந்தால் ஒரே மயக்கமா வருதே கர்ர்ர்ர்ர்ர்:)))//


      வெளில போகும்போது சன்ஸ்க்ரீன் போட்டீங்களா ? அதுவும் சில பிராண்ட்ஸ் வேலை காட்டும்

      Delete
    3. எனக்கு சன்கிரீம் பூசுவது பிடிக்காது அஞ்சு ஆனா பார்ப்போர் என்ன வேணுமெண்டாலும் நினைக்கட்டும்:) என நடக்கும்போது மட்டும் கை முட்ட[மூடி] உடுப்பு போடுவேன்ன் மெல்லிசா.. ஹா ஹா ஹா

      Delete
  7. ஹலோ மியாவ் இதென்ன விபரீத விளையாட்டு ரெயில்வே லைனில் க்ராஸ் செய்றது ஆபத்து .இருங்க உங்கம்மா கிட்ட போட்டு கொடுக்கறேன் கர்ர்ர்


    // நாம் பொது இடத்தில் எவ்ளோ மரியாதையா நடந்து கொள்கிறோம்.. இந்த மனிதர்களைப்போல பப்புளிக்கில்:)//

    யாரு யாரு எப்போ எங்கே ??? :)

    அதெப்படி உங்க கண்ணுக்கு மட்டும் பட்டது நான் பார்க்கலியே

    ReplyDelete
    Replies
    1. ///ஹலோ மியாவ் இதென்ன விபரீத விளையாட்டு ரெயில்வே லைனில் க்ராஸ் செய்றது ஆபத்து //

      நீங்க சரியா படிக்கல்ல.. குறொஸ் பண்ணல்ல, மேலே பாலத்தில் ஏறிக் கடப்பதைச் சொன்னேன்:)...

      ///யாரு யாரு எப்போ எங்கே ??? :)

      அதெப்படி உங்க கண்ணுக்கு மட்டும் பட்டது நான் பார்க்கலியே///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா விடுப்ஸ்ஸ்ஸ்:)) என் தம்பியைச் சொன்னேன்ன்:) அதாவது குயின் அம்மம்மாவின் லாஸ்ட் பேரன்:)).. டயானாப் பெரியம்மாவின் மகன்:))) ஹையோ ஹையோ:))

      Delete
    2. //குறொஸ் பண்ணல்ல, மேலே பாலத்தில் ஏறிக் கடப்பதைச் சொன்னேன்:)...//
      ஆமா :) .அதான்னா பார்த்தேன் பூனையாவது லைன் க்ராஸ் பண்றதாவது

      Delete
    3. [im] https://i.ytimg.com/vi/1VnsH5Oaeac/hqdefault.jpg [/im]

      ஊசிக்குறிப்பு:).. நீங்க ஆரிடம் வேணுமெண்டாலும் போட்டுக்குடுங்கோ நேக்குப் பயமில்லே:) ஆனா அம்மாவிடம் மட்டும் மூச்ச்ச்ச்ச்ச்ச்:)) ஹையோ ஹையோ:))

      Delete
  8. / அதிரா” என எழுதிவிட வேண்டும் என ஆசையா இருக்கு..:)//
    ஓஹோ பேஷா செய்யலாமே ,இங்கே 60 -70 வயதான மரங்கள் அதுக்கும் மேலே வயதான மரங்களைத்தான் வெட்டுவாங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      [im] http://cf.ltkcdn.net/cats/images/std/189337-425x283-Kittens-Fighting.jpg[/im]

      Delete
  9. டேஞ்சரஸ் ஏரியாவாமே:)//
    எங்களுக்கு தெரியணும் அதனால் போய் பார்த்திட்டு வந்து சொல்லுங்க என்ன டேஞ்சரஸ்ன்னு

    ReplyDelete
    Replies
    1. அப்பூடின்னா என் வலது கையை இறுக்கிப் பிடிங்கோ.. நோஓ வாணாம் உங்களை நம்ப மாட்டேன்ன்.. நீங்க கையைத்தாங்கோ நான் இறுக்கிப் பிடிக்கிறேன்:))

      [im] http://d21p753pzfk62u.cloudfront.net/wp-content/uploads/2012/10/cat-paw-and-humand-hand.jpg [/im]

      Delete
  10. ஆப்பிள் மரத்துக்கு கீழே FORGET மீ NOTS பூக்களும் இருக்கு :)

    கர்ர்ர் இருங்க உங்க கவுன்சிலுக்கு உங்களைப்பற்றி INFO கொடுக்கறேன் கவர்ன்மென்ட் பொருளை சொந்த பயன்பாட்டுக்கு யூஸ் செய்வது குற்ரர்ர்ரம்

    ReplyDelete
    Replies
    1. அறிவியுங்கோ அறிவியுங்கோ வந்து பிடிச்சுக்கொண்டு போய் உள்ளே வைக்கட்டும்:)) ஆரு பெத்த பிள்ளையோ:)).. ஹா ஹா ஹா:) அது எங்கள் அப்பிள் மரமில்லை அஞ்சு.... வரும் வழியில் ஒரு வீட்டு மரம்:))..

      எங்கள் மரமும் பூத்திருக்கு பழம் வந்தால் படம் போடுறேன்.. இது கிட்டத்தட்ட 5,6 வருட மரம்.. எங்கள் மரம் ஒரு வயதுதான் ஆகிறது..

      Delete
  11. உங்க ஏரியா பசுமையா இருக்கு LAWN நிறைய .இங்கே மரங்கள் நிறைய இருக்கு அதான் மலர்களால் எனக்கு மூச்சு திணறுது .
    பாப்பிங்கள் எல்லாம் அழகு ஆனா ஊஞ்சலாடும் குண்டு பூஸ் எக்ஸர்சைஸ் செய்யும் குண்டு பூஸ் படங்கள் எங்கே ???

    ReplyDelete
    Replies
    1. பாப்பிங்கள் எல்லாம் அழகு//

      படங்கள் என்று படிக்கவும்

      Delete
    2. ///பாப்பிங்கள்//
      ஒரு செகண்ட் தலை சுத்தி விழப்பார்த்து நல்லவேளை சுவரைப் பிடிச்சு நின்றிட்டேன்ன்ன்.. எனக்குத் தெரியாத டமிலோ என:) கர்ர்:)).. குண்டுப்பூஸ்தான் மெலிஞ்சுபோய் கீதா செய்யும் எங்கள் புளொக் கிச்சினில் ஜதீஸ்வரம் பண்ணுதே தலையை ஆட்டி:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு.. நீங்களை மறுபடியும் எப்போ ஜந்திக்கலாம்ம்?:)))

      Delete
    3. ரிவர் தேம்ஸ் கரையில் விரைவில் சந்திப்போம்

      Delete
    4. நோஓஓஓஓஓஓஒ நா மாட்டேன்ன்ன் நீங்க ஏதோ ஜதி பண்ணப் போறீங்க கர்ர்ர்ர்ர்ர்:))

      [im] http://www.petcathealth.info/wp-content/uploads/2015/04/cat-485103_640.jpg[/im]

      Delete
  12. வசந்தகாலம் வந்தாலே விடுப்பு பார்ப்பதும் ,வேகாத வெயிலில் ஓடுவதும் பொழப்பாகப்போச்சு பலருக்கு))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ...

      விடுப்பு பார்க்க நேரமில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விண்டர் என்றால்தான் எங்கும் போகாமல் வீட்டிலிருந்து விடுப்ஸ் பார்க்கலாம் ஹா ஹா ஹா:)).. நேசனுக்குப் பொறாமை.. வேக் ல லீவு தருகினம் இல்லையே வெயிலை என்சோய் பண்ண என:))

      Delete
  13. நாரை போல இருக்கு துயில் கொள்ளும் கடல்த்திடலில்! படங்கள் அருமை பொறுமையாக பூ எல்லாம் பிடித்து இருக்கின்றீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. படம் எடுப்பது அவ்ளோ சந்தோசம் எனக்கு.. காரில் போகும்போது ஸ்ரியறிங்கில் பிடிச்சபடியே எடுத்திடுவேனே:))...

      நாரை என்றுதான் நான் நினைச்சேன் ஆனா ஊர்ப்புறாக்கள்போல நன்கு பறக்குதே.. கால் எல்லாம் புறாக்கள் போல இருக்கு..

      [im] http://www.rampantscotland.com/week/graphics/eider_duck_carnoustie01503a.jpg [/im]

      Delete
    2. miyaaw these EUROPEAN EIDER (Somateria mollissima mollissima)

      common name Eider duck

      எங்க ஏரியாவில் குட்டி கொண்டை மாதிரி இறகு வச்ச வாத்துகள் நிறைய இருக்கு tufted ducks

      Delete
    3. ஆஆஆஆ கண்டு பிடிச்சிட்டீங்களோ? அவைதான் அஞ்சு.. கூட்டம் கூட்டமாக பார்க்கில் சிலசமயம் புல்லு மேய்வினம்.

      Delete
  14. ஓலைபொட்டியில் இருப்பது ஓட்டியாணம் போல ?)))

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ஹையோ:).. ஒட்டியாணம்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸூஊஊ ஸ்ஸ்ஸூஊஊஊஊ எனவோ சத்தம் போடும்:)) நேக்குத்தெரியாது ஜாமீஈஈஈஈ அது பொற்கிழீஈஈஈஈஈ:))

      Delete
  15. அழகான பார்க் அதில் அந்த மரத்தை சாய்த்துவிட்டார்களே!))))

    ReplyDelete
    Replies
    1. அல்லது சாய்ந்த மரத்தை வெட்டினார்களோ.. தெரியவில்லை:).. நீண்ட காலமா அப்படித்தான் இருக்கு..

      Delete
  16. பல பதிவு எழுதலாம் ஒரேடியடியாக போட்டுவிட்டீர்கள்.ஊசிக்குறிப்பு அழகு.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு எல்லோரையும் அலற அடிப்பது பிடிக்காது நேசன்:) அதனால போட்டு முடிச்சிட்டேன்ன்.. சீசன் மாற மாற வேறு படங்களும் வருமெல்லோ.. அடுத்து நம்ம ஊரு சமர் உல்லாசக் கப்பல்கள் வரத்தொடங்கிட்டுது டெய்லி வருது... அதை எல்லாம் போடோணுமெல்லோ.. ச்ச்ச்சோஓஒ டோண்ட் வொறி.. என் தொல்லைகள் டொடரும்:))

      Delete
  17. உப்பு அள்ளிக்கொண்டு போக ஒரு வண்டி ரெடி பண்ணுவோம் திருடுவது மூலம் பணக்காரன் ஆகிவிடலாம்)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இந்த உப்பை அள்ளிப்போய் என்ன பண்ணுவீங்க? இது மண் உப்பு.. கையில் பட்டால் தோலை அரிச்சுப்போடும்... இதில பணக்காரனாகலாம் ஆனா பின்பு பணத்தை எண்ணீஈஈ எண்ணி அடுக்கக் கை இருக்காதே ஹா ஹா ஹா.. மிக்க நன்றி நேசன்.

      Delete
  18. "பூந்தென்றல்... " சித்ராவின் குரலில் இனிமையான பாடல். இந்த உள்ளம் கவர் கள்வன் பாடல்கள் எல்லாமே நன்றாயிருக்கும்.ஹிந்தி சிட்சோர் படத்தின் தமிழ். பாண்டியராஜன் அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமில்லாத தெரிவு என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஓ இம்முறை உங்களுக்குப் பிடிச்சிருக்குப் பாட்டு நன்றி. நான் வேறு ஒரு பாட்டு தேடப்போய் இது கிடைச்சது, என் போஸ்ட்டுக்குப் பொருந்துதே எனப் போட்டேன்... ஓம் எனக்கும் பிடிக்கவில்லை இதில் ஹீரோவும் ஹீரோயினும் இருவருக்குமே இப்பாட்டு 3 மச்:)).. அழகிய பாட்டு..

      Delete
  19. அங்கு நல்ல வெதர் வந்தாச்சா? இங்கு வெய்யில் கொளுத்...... த்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. இங்கு நல்ல வெதராக இருக்கு ஆனா மழை வந்து அப்பப்ப கெடுத்துவிடும் கர்ர்:).

      இங்கு எங்களிடத்தில் பெரும்பாலும்.. 20 சி க்கு மேல் போகாது வெப்பநிலை ஆனா அதுவே சுட்டெரிக்கும்.. ஏனெனில் நாம் சூரியனுக்கு கிட்ட இருக்கிறோம்ம்.. இங்கு சந்திரன் எல்லாம் எந்தாப் பெரிசா தெரியும் தெரியுமோ?..

      அதனாலேயே இங்குள்ளவர்களுக்கு.. குறிப்பா வெள்ளைகளுக்கு தோல் வருத்தம் அதிகம்.

      Delete
  20. வீட்டின் அருகில் நீர்நிலை இருந்தால் குளிர்ந்த காற்றுக்கு உத்தரவாதம்.

    ReplyDelete
    Replies
    1. கடவுளே எங்களுக்கு குளிர் காத்தே வாணாம்ம்ம்ம்ம்ம்ம்:))

      Delete
  21. நடக்கும்போதே புகைப்படங்களா? அதில் ஒருபடத்தை பார்த்தால் கார்க்கண்ணாடி வழியே எடுக்கப்பட்டது போலத் தோன்றுகிறதே! படங்கள் அழகு. ஆ... ஓட வேறு செய்வீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அந்தப் படத்தைக் கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிட்டீங்களே... அது அந்த இடமும் இதுக்குள் தான் அடக்கம் ஆனா காரில் போகும்போது எடுத்தேன்.

      நான் இடையிடை ஓடுவேன் பின்பு நடப்பேன்.. பொக்கட்டில் ஃபோன் இருக்கும் அது ஸ்ரெப்ஸ் கவுண்ட் பண்ணிக்கொண்டிருக்குமெல்லோ.. அப்போ ஓடிவிட்டுப் பார்க்க நிறைய எண்ணிக்கை காட்டும்.. அதுக்காகவே ஓடத்தோணும்.. ரோட்டில் ஓடுவதில்லை.. இப்படி பார்க்கில் அல்லது ஆற்றம் கரையில் நடைபாதையில்..

      பலரும் ஓடுவார்கள் அப்போ நானும் ஓடோணும் போல ஆசை வந்திடும்:))

      Delete
  22. ஊசி இணைப்பு அபாரம். நானும் உங்களுடனேயே காட்சிகளை பார்த்தபடி நடந்து, ஓடி வந்து விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. அதுக்காகத்தான் எம்மோடு, உங்களையும் நடந்து வரச் சொன்னேன்:)..

      Delete
  23. என் வீட்டு மொட்டைமாடிக்கு ஓடினேன். பொற்கிழி... ஆ.... ஆமாம். இருக்கே... திறந்து பார்த்தேன்.. ஆ.......... நத்தைகள்!!!

    ReplyDelete
    Replies
    1. //என் வீட்டு மொட்டைமாடிக்கு ஓடினேன்.//
      ஆவ்வ்வ்வ் நீங்க வீட்டுக்குள்ளேயே ஓடுறீங்க:)

      //திறந்து பார்த்தேன்.. ஆ.......... நத்தைகள்!!!//
      கர்ர்ர்ர்ர்ர்:)) லேடிப் பாம்பு எல்லோ வச்சேன்:)) எப்பூடி நத்தையா மாறிச்சு?:) ஏதும் மந்திரம் ஜொள்ளிப்போட்டுத் திறந்தீங்களோ?:)

      ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  24. படங்கள் அனைத்தும் அழகோ அழகு... ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ டிடி வாங்கோ.. மிக்க நன்றிகள். ஏன் நீங்க இப்போ போஸ்ட் போடுவதை நிறுத்தியிருக்கிறீங்க? தத்துவப் பாடல்கள் கேட்டு நீண்ட நாளாகுதே...

      Delete
  25. படங்கள் அனைத்தும் அழகு.
    கலகலப்மாக்கிய வர்ணனைகள் ஸூப்பர்.

    அடுத்து இதேபோல் மழை வரும்போது படம் எடுத்து போடவும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... மிக்க நன்றி.

      //அடுத்து இதேபோல் மழை வரும்போது படம் எடுத்து போடவும்.//

      ஹா ஹா ஹா ஆழமறியாமல் காலை விட்டிட்டீங்க:)).. நான் ஆல்ரெடி/ஓல்ரெடி போட்டு விட்டேன்ன்ன்:).. இப்போ போய்ப் பார்த்து பரவசமாகிட்டுச் சொல்லுங்கோ:)).. கேட்ட பாவத்துக்காக ஹா ஹா ஹா..

      http://gokisha.blogspot.com/2010/05/blog-post_15.html

      Delete
  26. அழகு
    படம் ஒவ்வொன்றும், அதற்கான பகிர்வும் அருமை அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ.. மிக்க நன்றிகள்.

      Delete
  27. படங்கள் எல்லாம் அழகு. அவை சொல்லும் கதைகள் அருமை.
    இன்று ஒரு தகவல் அருமை, பயனுள்ள குறிப்பு.
    ஊசி இணைப்பு மிக் மிக நல்ல இணைப்பு..
    ஒலைபெட்டிகள் வண்ணத்தில் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. மிக்க நன்றி மிக்க நன்றி..

      //ஒலைபெட்டிகள் வண்ணத்தில் அழகு.//
      ஹா ஹா ஹா அது ஸ்ரீராமுக்குப் பொற்கிழி குடுக்கச் சொல்லி அஞ்சு சொன்னவ:) அதுதான் பெட்டிக்குள் வச்சு மூடி[மூடாட்டில் ஓடிவிடுமெல்லோ:)] ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியில இறக்கிப்போட்டு வந்தேன்:).

      Delete
  28. பூதென்றல் பாடல் அருமை.
    உங்கள் பதிவுக்கு பொருத்தமாய் இருக்கிறது அதிரா.
    இயற்கை ஆராதனை போல் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா.. அதனால்தான் போட்டேன்ன்.. ஒரு உண்மை சொல்லட்டோ இந்தப் பாட்டை இன்னும் முழுமையாகக் கேட்கவில்லை நான்.. ஆரம்பம் அழகா இருந்துது அப்போ பிழைக்காது எனப் போட்டேன்ன்.. இனித்தான் கேட்கோணும்

      Delete
  29. மே பூக்கள் அழகு.
    இலை மறைத்து பூக்கும் காட்சி அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. சில காலங்களில் தொடர் மழை பெய்யும்.. அப்போ மொட்டோடு எல்லாம் விழுந்திடும்.. இம்முறை இன்னும் மழை இல்லை... இனி வந்தால் எல்லாப் பூக்களும் விழுந்திடும். இப்படித்தான் ஊரில் ஒரு மரமிருக்கு தெரியுமோ? இலங்கையில் கிழுவை மரம் அல்லது கிளிசறியா மரம் என்போம்.

      மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  30. அதிரா...


    அதிரா..


    படங்கள் எல்லாம் வெகு அதிரடி...செம்ம அழகு...


    ரயில், படகு, ரோடு ...எல்லாம் காட்டிடீங்க வாவ்..


    அந்த ஜிம் தான் சூப்பர் ஆசையாய் இருக்கு..மீ இன்னும் ஜிம் க்கு போனது இல்ல...


    பூக்களின் படங்களை ஒரு பூவே போட்டு இருக்கு ...

    அடாடா ஆச்சிரியகுறி..

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ வாங்கோ அனு வாங்கோ..

      //ரயில், படகு, ரோடு ...எல்லாம் காட்டிடீங்க வாவ்..//
      நன்றி நன்றி...

      //அந்த ஜிம் தான் சூப்பர் ஆசையாய் இருக்கு..மீ இன்னும் ஜிம் க்கு போனது இல்ல..//
      இது இங்கு பார்க்கில் இலவச ஜிம் போட்டிருக்கிறார்கள்.. வோட் போவோர் இடையில் செய்யட்டுமே என... ஆனா வெளியே மழை வெயிலில் இருப்பதால்.. ஜிம் பிளேஸ் போய் செய்வதைப்போல இருக்காது, இருப்பினும் ஓரளவுக்கு ஓகே..

      ஜிம் க்கு ஒரு தடவையாவது போய்ப் பாருங்கோ அனு.. பின்பு தொடர்ந்து போவீங்க...

      //பூக்களின் படங்களை ஒரு பூவே போட்டு இருக்கு ...///
      ஹையோ நேக்கு ஷை ஷையா வருதே:)) என் செக் ஏதும் ஐடியாச் சொல்லித்தந்தாவோ இப்பூடிச் சொல்லச் சொல்லி எண்டெல்லாம் கேய்க்க மாட்டேன்ன் ஹா ஹா ஹா.. மிக்க நன்றி அனு..

      //அடாடா ஆச்சிரியகுறி..///
      ஆஆஆஆஆஆ ஸ்ரீராம் ஓடியாங்கோ உங்கள் கொப்பிவலது இங்கே:)) ஹா ஹா ஹா:).

      Delete
  31. அதிரா நாங்க தூங்கினப்புறம் பதிவு போட்டா நாங்க எப்படி ஃபர்ஸ்ட்டோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ வரதாம்...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. அது லேட்டா வந்தாலும் பெரிசா சவுண்டூ விடோணும் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊ என அதிராவைப்போல ஹா ஹா ஹா...

      Delete
  32. இவ்வளவு நாள் போஸ்ட் இல்லைனு எல்லாத்தையும் ஒரே யடியா போட்டுட்டீங்க போல் ஹா ஹா ஹா ஹா ஹா
    உங்க செக் என்ன பண்ணறாங்க ஏஞ்சல் இதைக் கேக்கலியா? சரி சரி இருங்க வரேன் ஒவ்வொண்ணா பாத்து ஜொள்ள!!
    கீதா

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கொஞ்சமா போட்டா.. ஏதோ நான் போட போஸ்ட் இல்லாமல் இழுத்தடிக்கிறேன் எனவும் சொல்லுவாங்கோ.. வாழ்ந்தாலும் பேசும்.. தாழ்ந்தாலும் பேசும்.. ஹையோ ஒரே தத்துவமா வருதே நேக்கூஊஊஊஊ.. ஹா ஹா ஹா.. எனக்கு மொத்தமா போட்டு அலுவலை முடிப்பதுதான் பிடிக்குது கீதா:)).. அத்தோடு இது வீட்டிலிருந்து வெளிக்கிட்டு திரும்ப வீடு வரும்வரை ஒரு கதைபோல தொகுத்தேன்:))

      இப்போ எதுக்கு என் செக் ஐக் கூப்பிடுறீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பாருங்கோ நீங்க கூப்பிட்டும் வராதவ:) சீராளன் கூப்பிடாமலே ஓடியாந்து கும்மியடிச்சிட்டுப் போயிருக்கிறா கர்ர்ர்:)) அதிராவை எங்கின தாக்கலாம் என எல்லோரும் விளக்கெண்ணெய் விட்டபடி திரிகினமே சாமீஈஈஈஈஈ:)).. மீ இப்போ கிரீஸ் புசிக்கொண்டெல்லோ திரிகிறேன்ன்:) முடிஞ்சாப் பிடிச்சுப் பாருங்கோ.. ம்ஹூம்ம் பூஸோ கொக்கோ:)..

      Delete
  33. பொற்கிழியா ஏஞ்சல் வாட்ஸ் தட்...ஏஞ்சல் பொற் கிழி இல்லை அது ஓலைப் பொட்டி பாருங்க...உள்ளே என்ன இருக்கோ...ஸ்ரீராமுக்கே வெளிச்சம்.. ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா கீதா அது இத்தினி நாளும் மேடம் நினைச்சாங்க பொன் +கிளி =பொற்கிளி
      அதான் தமிழில் டீ குடிச்சவங்களாச்சே :) இப்போதான் துரை அண்ணா கற்றுக்கொடுத்தார் இனிமே நாம் அதை படத்தோட விளக்கணும் :)

      Delete
    2. ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் அப்ப்டிப் போடுங்க!!! ஓ அப்ப அது டி இல்லையா டீ யா..ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா கீதா பொற்கிழி எனில். ஒரு முடிச்சு:) அல்லது ஒரு ஓலைப்பெட்டி:))) உள்ளே இப்படித்தான் இருக்கோணும் என ஆருமே ஜொள்ளலியே:)) அதனால உள்ளே ஸ்ரீராமுக்குப் பிடிச்சதா வச்சேன்ன்:)).. அது ஸ்ஸ்ஸு.. ஸ்ஸ்ஸூ எனச் சத்தம் போடுது:)..

      Delete
    4. ///அதான் தமிழில் டீ குடிச்சவங்களாச்சே :) இப்போதான் துரை அண்ணா கற்றுக்கொடுத்தார் இனிமே நாம் அதை படத்தோட விளக்கணும் :)//

      மீ இப்போ சுவீட் 16 தானே ..:) உங்களைப்போல வயசான:)) ஆன்ரிக்கள்[ஹையோ இருங்கோ சிரிச்சிட்டு வாறேன்ன்ன்ன்:)] அனுபவசாலிகள் சொன்னால்தானே தெரியும்:))

      -----------------------------
      //ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் அப்ப்டிப் போடுங்க!!!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  34. ஊசி இணைப்பு அருமை நல்ல வரிகள்...

    ஊஹிக் குறிபு தகவல்...ஆமாம் உப்பு போடுவதுண்டு ஸ்னோவில்....அதுவும் தனிவீட்டிலுள்ளோர் போட்டு வைக்கணும் இல்லை என்றால் அவ்வளவுதான்...கேஸாகிப் போகும்...வெளிநாடுகளில்...

    நத்தைக்கு மட்டுமில்லை அதிரா ஒரு அட்டை உண்டே ரத்தம் உறிஞ்சும் அட்டை அதற்கும் உப்புத் தண்ணீர் தெளித்தால் போய்விடும். காட்டில் நடக்கும் போது நாங்கள் உப்பு கையில் வைத்துக் கொண்டுதான் நடப்போம் குறிப்பாக மழைக்காலத்தில் அந்த அட்டை காலில் ஏறிவிட்டால் ரத்தத்தை உறிஞ்சிவிடும். மேற்குத் தொடர்சிமலைகளில் நிறைய உண்டு. இந்த அட்டை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஊசி இணைப்பு அருமை நல்ல வரிகள்...//
      மியாவும் நன்றி கீதா..

      //ஒரு அட்டை உண்டே ரத்தம் உறிஞ்சும் அட்டை அதற்கும் உப்புத் தண்ணீர் தெளித்தால் போய்விடும். //
      இது கேள்விப்பட்டிருக்கிறேன் கீதா பார்த்ததில்லை.. நீர்நிலைகளில்தானே இருக்கும் என அறிஞ்சேன்ன்..

      //மழைக்காலத்தில் அந்த அட்டை காலில் ஏறிவிட்டால் ரத்தத்தை உறிஞ்சிவிடும். மேற்குத் தொடர்சிமலைகளில் நிறைய உண்டு.//
      ஓ தெரிந்திருப்பது நல்லதே.. பூட்ஸ் போட்டுக்கொண்டுதான் அப்படி இடங்களுக்குப் போகோணும்.

      Delete
  35. ஹான் ஒன்று சொல்லவிட்டுப் போச்சு...ஸ்னோவில் போடும் உப்பல்ல நாம் அட்டைக்குக் கொண்டு போவது. நாம் பயன்படுத்தும் வெள்ளை உப்பு.

    நத்தைக்கும் இங்கு வெள்ளை உப்பையும் போடுவதுண்டு. இங்கு மண் உப்பு ஸ்னோ உப்பு தேவையில்லையே!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்கத்தைய மண் உப்பு அங்கு நம் இடங்களில் கிடைக்காதுதானே? இந்த உப்பு கடலில் இருந்து அள்ளி வருவார்களோ தெரியல்ல.. இன்னும் அதுபற்றி ஆராய நினைக்கவில்லை.

      ஓம் கீதா.. அவசரத்துக்கு நான் சமையல் உப்பையும் போட்டு விடுவேன்.

      Delete
  36. விபசாயத்துக்குப்//

    ஹையொ அதிரா முதலில் இதை வாசிக்கும் போது கண்ணில் வேறு ஏதோ ஒரு வார்த்தை தென்பட்டது அப்புறம் கூர்ந்து பார்த்து தெரிந்து கொண்டேன்...இன்று அதே போல கில்லர்ஜியின் பதிவுலும் அப்படித்தான் எமராத்தியன் என்று அவர் சொல்லியிருந்தது ஏமாத்தியன் என்று பட்டது....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சிலசமயம் அப்படித்தான் ஸ்பீட்டாகப் படிக்கும்போது மாறிக்கீறி எல்லாம் தெரியும்..:)

      Delete
  37. ஓ அதிரா மீண்டும் பேக் டு ஸ்கொயர் ஒன்றா..ஹா ஹா ஹா அப்ப அடுத்த எபி கிச்சன் ஷோவில் கிச்சனின் இடத்தைக் கூட்டி ப் போடச் சொல்லணும்…இல்லை என்றால் எல்லாரும் தள்ளுங்கோ எனக்கு இடம் வேண்டும் என்று சொல்லி நீங்கள் வருவீங்க…ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஹா ஹா ஹா அப்ப அடுத்த எபி கிச்சன் ஷோவில் கிச்சனின் இடத்தைக் கூட்டி ப் போடச் சொல்லணும்//

      ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ அஞ்சுவும் நெல்லைத்தமிழனும்.. கண்ணில விளக்கெண்ணெயோடு உலாவருகீனம்:)).... இப்போ வெயில் வந்திட்டுதெல்லோ.. ஓடியே வயக்கெட்டுப் போனேன்ன் தெரியுமோ:)).. இன்று காலையில் 8000 ஸ்ரெப்ஸ் நடந்திட்டேன்ன்.. பின்பு நடக்க முடியல்ல சரியான வெயில்.. இனி ரெட்மில்லில் தான் நடக்கலாம் மிகுதியை..

      ஆனா அஞ்சுவுக்கு ஒரு பெரீஈஈஈஈஈய செயார் போட்டு வையுங்கோ கீதா:))

      Delete
  38. பிங்கி ராணி அழகாக இருக்கிறாள்…….அதிரா பாரிஜாக்கா வா? அதுவா பெயர்?
    எதிர்வீட்டு சிவப்புச் சிங்காரி அயகோ அயகு…

    மே ஃப்ளவர் டக்கென்று கண்ணுக்குத் தெரியவில்லை…..பின்னார் தெரிந்தது என்ன கலர் இல்லையா….ரோட் அழகாக இருக்கிறது. இந்த வெதர் சூப்பர் வெதராச்சே…நடக்க மிகவும் நன்றாக இருக்கும்….

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //பிங்கி ராணி அழகாக இருக்கிறாள்…….அதிரா பாரிஜாக்கா வா? அதுவா பெயர்?
      எதிர்வீட்டு சிவப்புச் சிங்காரி அயகோ அயகு…
      //

      நன்றி நன்றி... அவட பெயர் “பாரிஜாதம்” கீதா. ஊரில் இருக்குதே.

      கண்ணுக்கு எங்கு பார்த்தாலும் மலர்கள் ஆசையா இருக்கு.. ஒரு பூங்காவனத்தில் நடப்பதைப்போல இருக்கும்.. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவகை மலர்களாக பூக்கும்.. இங்குள்ளவர்களும் முற்றமெல்லாம் ஒரே பூக்கன்றாகவே வைப்பார்கள்..

      Delete
  39. 30 மைல் வேகத்தில் ஓடிப் போய் ஏறினேன்// ஹா ஹா ஹா ஓட்டப் பந்தய வீராங்கனை பூஸாரா இப்படிச் சொல்லுவது……எப்படி 60 மைல் வேகத்தில் போகும் ரெயினை ஃபோட்டோ புடிக்க முடியும் ஹா ஹா ஹா……இப்ப தெரியுது நேற்று ஜி எம்பி சார் சொன்னது சரிதான் என்று…ஏஞ்சல் சரிதானே…!!??

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஏஞ்சல் சரிதானே…!!??//

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்போ எதுக்கு அவவை டிசுரேப்புப் பண்றீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அது சத்தம் கேட்டுதா.. படமெடுக்கலாம் என ஓடிப்போய்ப் பாலத்தில் ஏறினேன்:)) ரெயின் போயிந்தி கர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  40. உங்கள் ஊர் ரெயில் லைனும் அதன் கரையும் அருகிலும் இங்கு போலத்தான் இருக்கு……அதன் கீழே உள்ள போட் பாதை அதான் தள்ளும் தண்டவாளம்… பார்த்திருக்கேன். அந்த ஃபோட்டோ அழகு…குட்டித் தோணி போகும் படமும் ரொம்ப அழகா இருக்கு…

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இலங்கை இந்தியாவில் ரெயின்.. ஸ்டேஷன் எல்லாமே பிரிட்டிஸ் காரர் கட்டியதுதானே... அதே ஸ்டைல் கட்டிடங்களே அப்படியே இங்கும் இருக்கு... பழமையைப் பாதுகாக்க என அப்படியே வச்சிருக்கினம்... இங்கு கட்டடங்கள் தண்டவாளங்கள் எல்லாம் பெரும்பாலும் 200..300 வருடம் பழமை வாய்ந்தவை.

      உண்மை கீதா.. ஆற்றங்கரையிலேயே அந்த இதமான காற்றில் இருந்து புதினம் பார்த்தால் வீட்டுக்கு வர மனம் வராது.

      Delete
  41. அவை வாத்து போல இருக்கின்றன அதிரா……அழகா இருக்கு இந்த ப் படமும்…தூரத்தே ரெண்டு தோணி அழகு…

    ஸ்வான் தம்பதியர் அழகுதான்……ஆனால் அது தேம்ஸ் நதியோ அல்லது லேக்கோ……எங்கள் ஊர் குளக்கரை போல இருக்கே…ஓரமெல்லாம் எதோ தேங்கியிருக்கு….ஸ்காட்லேன்ட் ரொம்ப அழகு என்று கேட்டிருக்கேன்…ஒரு வேளை ஃபோட்டோவில் அப்படித் தெரிக்றதோ…

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///ஆனால் அது தேம்ஸ் நதியோ அல்லது லேக்கோ……எங்கள் ஊர் குளக்கரை போல இருக்கே…ஓரமெல்லாம் எதோ தேங்கியிருக்கு….//

      இது தேம்ஸ் உம் அல்ல லேக்கும் அல்ல.. இங்கிருக்கும் பல பிரசித்தி பெற்ற ஆறுகளில் இதுவும் ஒன்று.. சின்ன ஆறு அல்ல.. கடல்போல இருக்கும்.. அதனாலதானே உல்லாசக் கப்பல்கள்.. நீர்மூழ்கி எல்லாம் வந்து போகுது..

      அது சுவான் தம்பதி இருப்பது ஆற்றின் ஒரு பகுதி.. மக்களின் குடியிருப்பு ஓரமாக வந்து போகுது.. அங்கால பாருங்கோ பார்க் தெரியுது.. தண்ணி கரைவரை வரும்.. சிலசமயம் கரையை விட்டு உள்ளே போயிருக்கும்.. அப்போ பாசி தெரியும்.. அது பாசியும்.. சீ வீட்ஸ் உம்தான் அப்படி தெரியுது.

      //ஸ்காட்லேன்ட் ரொம்ப அழகு என்று கேட்டிருக்கேன்//
      அதேதான் கீதா.. மலைகளை மட்டுமே புறிம்பா ரசிக்கலாம்.. விதம் விதமான மலைகள்.. ஒவ்வொரு சீசனுக்கும் மர இலைகளின் கலர் மாறியிருப்பது மலையில் கொள்ளை அழகு..

      அப்படி ஆறுகளும் ஒருவித அழகு..ஆற்றங்கரைகளில் சில இடங்களில் பழங்கள்கூட பழுத்திருக்கும்..
      மலர்கள் சொல்ல முடியாத அழகு.. அதைவிட.. மான் ..மரை முயல்கள் என ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு அழகு...

      Delete
    2. இந்த ஆறு அப்படியே ஓடி சமுத்திரத்தில் இரண்டறக்:) கலக்குது கீதா ஹா ஹா ஹா.. அதனால ஆற்றுத்தண்ணியில் சற்று உப்புத்தன்மை இருக்கும்.

      Delete
  42. “பிள்ளைகளை வளர்த்து, மணம் முடிச்சுக் குடுத்திட்டு, ஓடி ஓடி உளைச்சுக் களைச்சுப் போய்.. பென்சன் எடுத்துக் கொண்டு.. இனித்தான் மனைவியை ஆசையா அருமையா சுகந்திரமா கதை பேசி லவ்வு பண்ணலாம் என ஆத்தங் கரைக்குக் கூட்டி வந்தால்.. இங்கு வந்து குறட்டை விடுறாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மட்டின் றோல்ஸ் சாப்பிட்டிருப்பாவோ”:))//

    ஹா ஹா ஹா ஹா…..பின்னே பெண்ணல்லோ…க்ளைப்பா இருக்காதோ பின்ன..அவள்தானே பிள்ளைக் குட்டிகளை எல்லாம் நல்லவண்ணம் பார்த்துக் கொண்டது இன்னும் இருக்குமே பேரன் பேத்திகள் என்று..…..ஆண் அவளை இறக்கையால் மூடிக் கொண்டு இதமாக இருக்கலாமே!! ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான் கீதா:) அவர் பப்புளிக்குப் பிளேசில டச்சு பண்ண மாட்டாராம்:) ஹையோ ஹையோ:))

      Delete
  43. ஓ ஆறுதானா? ஏன் ஓரம் எல்லாம் இப்படி இருக்கு..? ஹா ஹா ஹா ஆணும் நித்திரையாகிட்டார்…..ஆமாம் வம்பில்லை…சரி சரி பாவம் நாம் டிஸ்டர்பு செய்ய வேண்டாம்…

    நிறைய தோணிகள்/போட்கள் இருக்கும் படம் வாவ்!! ரொம்ப அழகா இருக்கு….ஸ்பீடா ஓடுங்கோ அதிரா சீக்கிரம் சீக்கிரம்….பார்க் மரம் எல்லாம் அழகு பாதையும் அழகு…..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் ஸ்பீட்டா ஓடித்தானே 1500 மீட்டரில் 2வதா வந்தேனாக்கும்:))

      Delete
  44. குழந்தைகள் எரியா அழகு…ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகா இருக்கு…அது சரி அங்கு 61 க்கு எல்லாம் அனுமதி இல்லையே…அப்படித்தானே!!

    அந்த பெஞ்ச் முன்பு நீங்கள் போட்ட கோஸ்ட் பெஞ்சை நினைவு படுத்தியது….ஆனால் அழகா இருக்கு!!! ரொம்பவே.. இந்த ஓபன் ஜிம் படமும் அந்த குழந்தைகள் ஏரியாவும் உங்கள் வீட்டருகில் என்று முன்பு போட்டிருந்தீங்களோ…பார்த்த நினைவு இருக்கு…

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அது சரி அங்கு 61 க்கு எல்லாம் அனுமதி இல்லையே…அப்படித்தானே!! //
      இல்ல இல்ல அங்கு அஞ்சுவை கேட்டில கூட நிக்க விடமாட்டினம் ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியில போட்டிடுங்கோ கீதா:)) அதனாலேயே பிளாஆஆஆன் பண்ணி அங்கு பாம்பு:)) குடுத்திருக்கிறேன்ன்:) எப்பூடி என் கிட்னியா?:))..

      இருக்கலாம் ஜிம் படம் அப்பப்ப போட்டதா நினைவு.. பேஸ்புக்கிலோ இங்கோ தெரியல்ல...

      Delete
  45. டேஞ்சரஸ் ஏரியா என்று போட்டிருந்தாலும் அழகாக இருக்கு ரொம்பவே….இதைத்தான் அழகில் ஆபத்துண்டு என்று சொல்லுகின்றார்களோ…

    ஊஞ்சல் எல்லாம் அழகு அழகு…அந்தப் படம் எடுத்த ஆங்கிள் சூப்பர்…நல்லாருக்கு…பேக்ரவுண்ட்….
    அப்பிள் பூக்கள் அழகா இருக்கே…பிங்கியாய்….

    எல்லா ஃபோட்டோஸும் ஜூப்பர் அதிரா….

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க மிக்க நன்றிகள் கீதா.. இம்முறைதான் நானும் உற்ரு அவதானிக்கிறேன்ன்.. இங்கிருக்கும் அனைத்து அப்பிள் பூக்களும் பிங்கி.. பெரும்பாலான வீடுகளில் இருக்கு..

      பெயார்ஸ் பூக்கள் வெள்ளை.. கொய்யாப்பூப்போல இருக்கும்.. கொய்யாவின் பாட்டி வழிதானே பெயார்ஸ்:))

      Delete
  46. ஸ்ரீராம் நான் ஏன் வேர்டில் அடிக்கறென் என்று தெரிகிறதா…இப்படி ஸ்க்ரோல் பண்ணி பண்ணி மேல போய் பார்த்து எல்லா கமென்ட்ஸையும் கடந்து வந்து கமென்ட் போட்டு போறதுக்குள்ள ஸ்பாஆஆஆஆஆஆஆஆ அதான்…..அங்க பதிவு மட்டும் பார்த்து..இப்படி அடிச்சு வைச்சுட்டா கமென்ட் காப்பி பண்ணி போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கலாம் ஹா ஹா ஹா ஹா……கை வலிச்சுப் போச்சு கொஞ்ச நேரம் ரெஸ்ட்….ஹா ஹா ஹா ஹா


    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா... நான் மட்டும் என்ன, இங்கு படிக்கப் படிக்க என் மெயில் பொட்டிக்குப் போய் உடனே கமெண்ட் டைப் பண்ணி வைத்துக் கொள்கிறேன்.. அதேதானே? (அய்யய்யோ... இதை எல்லாம் இங்கே சொல்லக் கூடாதோ!)

      Delete
    2. ///இப்படி ஸ்க்ரோல் பண்ணி பண்ணி மேல போய் பார்த்து எல்லா கமென்ட்ஸையும் கடந்து வந்து கமென்ட் போட்டு போறதுக்குள்ள ஸ்பாஆஆஆஆஆஆஆஆ//

      கீதா இதுக்கு எப்பவும் நான் பண்ணும் ஈசி வழி... இரண்டு தளமாகத் திறப்பேன்ன்.. அதாவது என்பக்கம் எனில் இரு விண்டோஸ் திறந்து வைத்திருப்பேன்ன்.. ஒன்றில் படித்துப் படித்து மற்றதில் கொமெண்ட்ஸ் போடுவேன்ன் அதனாலதான் ஸ்பீட்டாப் போட முடியுது...

      Delete
    3. ஹா ஹா ஹா ஸ்ரீராம் நித்திரைத்தூக்கத்தில் உண்மை எல்லாம் சொல்லிட்டாரோ:))

      ஏன் நீங்கள் யாரும் Nhm Writer வைத்திருக்கவில்லையோ?.. அதுதானே ஈசி.. நேரடியாகவே ரைப் பண்ணலாமே கொப்பி பேஸ்ட் எதுக்கு... இல்ல நான் புரியாமல் பேசுகிறேனோ தெரியவில்லை... என்னிடம் என் ஏச் எம் ட்ரைட்டர்தான் வைத்திருக்கிறேன்ன்... எங்கு வேணுமெண்டாலும் அப்படியே ரைப் பண்ணிடலாம்.

      Delete
    4. என் ஹெச் எம் ரைட்டர் நான் உபயோகிப்பதில்லை. கொஞ்ச நாள் வைத்திருந்தேன். அப்புறம் ஏதோ காரணத்தால் அது காணாமல் போக, அப்படியே விட்டு விட்டேன்!

      Delete
    5. அதை திரும்ப இன்ஸ்ரோல் பண்ணலாமே ஸ்ரீராம். அது ஈசியெல்லோ.

      Delete
  47. படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன அதிரா. ஊசி இணைப்பு அருமையான வார்த்தைகள்.

    ஓ! ஸ்னோவில் வழுக்காமல் இருக்க ஸ்னோ உப்பு இதுதானா..? கேள்விப்பட்டிருக்கிறேன் பார்த்ததில்லை.

    ஸ்வான் படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ...

      குளிர்காலநிலை இல்லாத நாடுகளில் இருப்போருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைச்சே போட்டேன் அந்த உப்புப் படம்..

      மிக்க நன்றி.

      Delete
  48. படம் காட்டாமல் நடந்தேன் எனில் நம்ப மாட்டீங்களெல்லோ அதிராவை.. - 6வது படம் அப்பட்டமா காண்பிச்சுக் கொடுத்துடுத்தே.. நீங்கள் கார்லேர்ந்து படம் எடுத்தீர்கள் என்று. எல்லாப் படங்களும் கார்லேர்ந்து எடுத்ததா என்று பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் “அண்ணா” வாங்கோ:)) ஹா ஹா ஹா எதுக்கு இப்போ ஓடுறார் ஓடாதீங்கோ:).. அண்ணா சொல்லாமல் விட்டதால ஒரு வயசு குறைந்த தம்பியாகிட்டீங்க:) அதனாலதான் மீ உசாராகிட்டேன்ன் ஹா ஹா ஹா:)..

      6 வது படம் ஹா ஹா ஹா இடையில ஒன்றை.., அது அழகா இருக்கே எனச் செருகினேன்.. சிலர் கண்டு பிடிக்கலாம் பார்ப்பொம் என நினைத்தேன்.. கரெக்ட்டா நீங்களும் ஸ்ரீராமும் கண்டு பிடிச்சிட்டீங்க:))

      Delete
  49. ஐயையோ... 'இலவசமாகக் கிடைக்கும் சொற்களை..... " - இந்த அறிவுரையை இப்போதானே படித்தேன். என் முந்தின பின்னூட்டத்தின் விளைவு என்னவாக இருக்கப் போகிறதோ...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  50. உங்க வீட்டுக்குப் போகும் வழியில் ஏன், 'டேஞ்சரஸ் ஏரியா... கீப் அவே' என்று அரசாங்கம் போர்ட் போட்டிருக்கு? ஏதாகிலும் செய்முறை செய்து அரசு அலுவலர்களுக்கு விருந்து வைத்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. அது அந்த அருகூட்டு தோசை வாழைப்பழ ரொட்டி செஞ்ச வாசனைக்கே :) wmd னு சஸ்பெக்ட் செஞ்சிருப்பாங்க

      Delete
    2. அச்சச்சோஒ மேலே எல்லோரையும் தாண்டி நெல்லைத்தமிழனிடம் வந்திருக்கிறேன்:) ஏனெனில் நேக்கு காண்ட்ஸ்சும் ஓடல்ல லெக்ஸும் ஆடல்ல... ஹையோ எனக்கு வந்த சொதனை இந்த புளொக் உலகில் ஆருக்குமே வந்திருக்காதே:)).. தெரியாம வாக்குக் குடுத்திட்டனே கர்ணன் பரம்பரை போல:))... இனி குடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் விட மாட்டேனே:)) அதனாலேயே இங்கின ஓடி வந்தேன்ன்.. 8 மணி ஆச்சுதோ என்னமோ நெல்லைத்தமிழன் நித்திரையாகி இருப்பார்ர்.. வைரவா இது என்ன இது தேம்ஸ் க்கு வந்த ஓதனை.. ஹையோ ஹையோ..:))

      Delete
    3. கீதாஆஆஆஆ நீங்களும் கொஞ்சம் இங்கின வாங்கோ.. என் ஜொந்தக் கதை யோகக்கதையைக் கேளுங்கோ:)) ஹையோ என் பக்கத்தில நிண்டே புலம்ப வச்சிட்டாவே என் செக்கூஊஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      நான் ரொம்ப நல்ல பிள்ளையா வாலைச் சுருட்டிக் கொண்டு:) என் பாட்டில இருந்தனா.. நேரம் கிடைக்கவில்லை அதனால எங்கள் புளொக் பார்க்கல்ல:))..

      அவசரமா எனக்கொரு மெயில் என் செக்கிடமிருந்து:)).. அதிரா எங்கள் புளொக் கொமெண்ட்ஸ் படிக்கல்லயா?:)..

      மீ ரொம்ப நல்ல பிள்ளையாச்சே...

      1.இல்ல அஞ்சு ரைம் இல்ல .. ஏன் ஏதும் விசேசமோ?

      2.இல்ல ஒண்ணும் இல்ல.. நெல்லைத்தமிழன் இன்று வந்திருக்கிறார்ர்..

      1. ஓ நேற்று அவர் பிசிபோல.. ஏன் ஏதும் கொமெண்ட்ஸ் கொமெடியா போட்டிருக்கிறாரோ?..

      2. இல்ல அதிரா அப்படி ஒண்ணும் இல்ல ஆனா நான் தெரியாத்தனமா சொல்லிட்டேன்ன்.. நீங்க எங்கள் புளொக் போகக்குடா இன்று:)..

      1. அவ்வ்வ்வ் ஏதும் சண்டை போகுதோ?.. நானில்லாமலா இதோ போகிறேன்ன்:)

      2. இல்ல அதிரா இல்ல இன்று நீங்க போகக்குடா சொல்லிட்டேன்ன் வாக்குக் குடுங்க:)).. போனாலும் கொமெண்ட் போடக்குடா:) நாளைக்கு வேணுமெண்டால் கொமெண்ட் போடுங்கோ:)..

      2. என் செக்:) ஆச்சே ஏதும் ஏடா கூடமான போஸ்ட் எனில் என்னை எப்பவும் எச்சரிப்பா:).. அப்பூடி இருக்குமோ.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).. நான் இப்போ போகல்ல:)) நைட் பார்க்கிறேன்..

      1. ஓகே குட் கேள்.. சொன்ன வாக்கை மீறக்குடா:). சொல்லிட்டேன்ன்:)
      2. இல்ல இல்ல நான் வாக்குக் குடுத்திட்டா மீறமாட்டேன்ன்.. பார்த்தாலும் கொமெண்ட் போடமாட்டேன்ன் ஓகேதானே..

      1. ஓகே:)

      அதுக்குப் பிறகுதான் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த நிலைமை ஆச்சு.. அப்பூடி என்னதான் அங்கு நடக்குதென எட்டிப் பார்த்தனா:)).. ஹூஊஊஊ ஹூஊஊஊஉ ஹூஊஊஊஉ ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஆஆ:)).. அங்குதானே கொமெண்ட் போடக்குடா:)).. தோஓஓஓஓஓஓ இங்கு இங்கு இருங்கோ ஏஞ்சல் ஆன்ரி:)) ஹையோ நெ.தமிழனுக்கே ஆன்ரியாஆஆஆஆஆஆஆஆஆஆஆ?:)).

      Delete
    4. //நெ.த. said...
      @ அதிரா - //கற்பனையில் அப்படியே கோமளி பழைய நடிகை ஜமுனா போல் தோன்றினார் .// - ஏஞ்சலின் ஆன்டி எழுதியிருக்கிற இந்த நடிகைலாம் யாரு? கேட்டுச் சொல்லுங்க. இப்படிக்கு உங்களை விட 1 வயசு குறைவான தம்பி...////

      ஆஆஆஆவ்வ்வ்வ் என்னை விட ஒரு வயசு குறைஞ்ச அம்பி:) எண்டதெல்லாம் என் கண்ணுக்குத் தெரியவே இல்ல:)).. ஆனா அஞ்சு ஆன்ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....

      நெல்லைத்தமிழன் இதோ உங்களுக்கு ஒரு பொற்கிழி.. என் சுவிஸ் எக்கவுண்டிலிருந்து:) ஸ்ரெயிட்டா வாங்கினேன்ன்ன்:))

      [im] https://img.auctiva.com/imgdata/1/4/9/3/5/3/0/webimg/960840343_tp.jpg [/im]

      Delete
    5. ஓகே ஓகே மீ நாட்டில இல்ல:) தோஓஓஓஓஓஓஒ பிளேனில கால் வச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன் பாய் பாய்ய்ய்ய் இது வேற பாய்ய்ய்ய்:))

      Delete
    6. [im]http://statici.behindthevoiceactors.com/behindthevoiceactors/_img/chars/jerry-tom-and-jerry-the-magic-ring-30.8.jpg[/im]

      Delete
    7. [im]https://img.memecdn.com/never-broke-a-pinkie-promise_o_736360.jpg[/im]

      Delete
    8. நான் அங்கே சொன்னேன் பூஸார் பொயிங்கி வருவாங்கனு...ஹா ஹா ஹா...ஆனா உங்க கிஃப்ட் போகாது..நீங்க ட்ரம்ப் அங்கிளுக்கு செக் அல்லஓ....அவர் ஏஞ்சலை ஆண்டீனு சொன்னதுநால நெல்லைக்கு உங்க கிஃப்ட் போகக் கூடாதுனு சொல்லிப்ப் போட்டார். அதுவுமில்லாமல் இப்பத்தான் ட்ரம்ப் அங்கிளுக்கு ரொம்ப கோபம் நீங்க அவரை அங்கிள்னு ஊர் முழுக்க டமாரம் அடிக்கறீங்களாம்...அது அவருக்குப் பிடிக்கலையான்..என் செக்குக்கே 81 வயது என்னை அங்கிள் நு சொல்லுறாங்கனு.....உங்க செக் வேலை போயிராம பாத்துக்கங்க ஹா ஹா ஹா ஹா

      இதோ நீங்க கூப்பிடதும் தாமதமானாலும் வந்துட்டேன்...பாத்தீங்களா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    9. ஏஞ்சல் எப்படி இப்படிப் படங்களை பின்னூட்டங்களில் போடுறீங்க நான் கூகுள்ல போய் பார்த்தேன் அது என்னென்னவோ சொல்லுது...ஹெடிஎம் எல் என்று எல்லாம் புரியலை...நீங்க ஜிம்பிளா மெயிலில் அனுப்ப முடியுமா ரைம் இருந்தா...ஹையோ அதிரா தளம் வந்தாலே அவங்க பாஷை வந்துருதூஊஊஊ.....டைம் இருந்தால்...நன்றிபா

      கீதா

      Delete
    10. ஆஷாபோஸ்லே அதிரா- நான் சிலரை ஆன்டி என்று சொன்னதுக்கு கன்னா பின்னா என்று திட்டி பின்னூட்டம் போட்டுட்டு, பிறகு போனால் போகிறது என்று அவங்க தன்னோட பின்னூட்டத்தை நீக்கியிருப்பதைப் பார்த்தீர்களோ?

      Delete
    11. கர்ர்ர் அது ரெண்டு தடவை ஒரே கமெண்டை போட்டு ஒண்ணுத்தை அழிச்சேன் :)

      Delete
    12. ///உங்க வீட்டுக்குப் போகும் வழியில் ஏன், 'டேஞ்சரஸ் ஏரியா... கீப் அவே' என்று அரசாங்கம் போர்ட் போட்டிருக்கு? ஏதாகிலும் செய்முறை செய்து அரசு அலுவலர்களுக்கு விருந்து வைத்தீர்களா?//

      ஹா ஹா ஹா பாருங்கோ இப்பூடியான டவுட்ஸ் க்கு விடையளிக்க:) என் செக் கையில பிளைட் ரிக்கட்டுடனேயே சுத்துறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அருகூட்டுத் தோசையாம் கர்:)) என் தோசை ரெசிப்பியைக் கொப்பி பண்ணி ஆரோ யூ ரியூப்பில் சத்துத்தோசை என செய்து காட்டியிருக்கினம் ஹா ஹா ஹா:))..

      Delete
    13. ஹா ஹா ஹா ஜெரி செய்வதறியாது திகைக்குதே:)).. நான் எங்கே பிரேஏஏஏஏக் பண்ணினேன் பிங்கி புரொமிஸ் ஐ ஹா ஹா ஹா.. சொன்ன வாகை மீறாமல் அங்கு கொமெண்ட் போடவில்லை எல்லோ.. வல்லிம்மா யோசிச்சிருப்பா அதிரா ஒவ்வொரு நாளும் கும்மி போடுவா இன்று ஓடிட்டாவே என:)) ஹையோ வாக்குக் குடுத்திட்டேன் என்பதை அவவுக்கு எப்பூடிச் சொல்வது:)) ஹா ஹா ஹா...

      Delete
    14. ///அதுவுமில்லாமல் இப்பத்தான் ட்ரம்ப் அங்கிளுக்கு ரொம்ப கோபம் நீங்க அவரை அங்கிள்னு ஊர் முழுக்க டமாரம் அடிக்கறீங்களாம்..///
      ஹா ஹா ஹா கீதா அவரை நான் தாத்தா எனக் கூப்பிடாமல் அங்கிள் என்கிறேனாம் என ஒரே குஷியில இருக்கிறார்:) நீங்க ச்சும்மா கலவரத்தை உருவாக்குறீங்க கர்ர்ர்ர்:))..

      கீதா முன்பும் பலதடவை இங்கு நீங்க கேட்டு நானும் அஞ்சுவும் விளக்கோ விளக்கென விளக்கிக் கொமெண்ட்ஸ் பொட்டோம்ம்.. நீங்க கேள்வி மட்டும் கேட்கிறீங்க ஆனா திரும்ப வந்து படிப்பதில்லை என மட்டும் புரியுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா இப்போதான் உங்கள் மெயிலுக்கு கொமெண்ட்ஸ் எல்லாம் வருமே இனி எதையும் மிஸ் பண்ண மாட்டீங்க.. மிக்க நன்றி கீதா...

      Delete
    15. ///நெ.த.Wednesday, May 16, 2018 1:37:00 pm
      ஆஷாபோஸ்லே அதிரா- நான் சிலரை ஆன்டி என்று சொன்னதுக்கு கன்னா பின்னா என்று திட்டி பின்னூட்டம் போட்டுட்டு, பிறகு போனால் போகிறது என்று அவங்க தன்னோட பின்னூட்டத்தை நீக்கியிருப்பதைப் பார்த்தீர்களோ?///

      பார்த்தேன் நெல்லைத்தமிழன்.. பார்த்தேன்.. அந்த அழிச்ச கொமெண்ட் மேல சத்தியமா பார்த்தேன்:)) அது என்ன தெரியுமோ? அஞ்சுவின் மைண்ட் வொயிஸ்:).. அது கொஞ்சம் சத்தமாக் கேட்டிடுச்சு ஹா ஹா ஹா அவவுக்கே தெரியல்ல பின்பு திடுக்கிட்டு அழிச்சிட்டா ஹா ஹா ஹா ஹையோ ஹையோ.. இண்டைக்கு அஞ்சுவின் நித்திரை போச்சே:))

      Delete
  51. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இடுகை போட்டிருக்கீங்க. படங்கள் எல்லாம் அருமையா இருந்தது. பூக்கள், தண்ணீரில் அன்னம் போன்றவை அருமை.. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. //ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இடுகை போட்டிருக்கீங்க.///

      [im]http://www.likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg[/im]

      மிக்க நன்றி மிக்க நன்றி...

      Delete
  52. ஸ்னோவில் வழுக்காமல் இருக்க உப்பு போடவேண்டுமா? இந்தச் செய்தி எனக்குப் புதிது. அப்போ உங்க வீட்டுக்கு வந்து பனில வழுக்கி விழுந்தால் உங்களிடம் காம்பன்சேஷன் கேட்கலாமா? அதுக்காகவே பனிக்காலத்தில் விசிட் அடிக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ///அப்போ உங்க வீட்டுக்கு வந்து பனில வழுக்கி விழுந்தால் உங்களிடம் காம்பன்சேஷன் கேட்கலாமா? அதுக்காகவே பனிக்காலத்தில் விசிட் அடிக்கணும்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இது உண்மைதான்.. இங்கு நடந்த ஒரு சம்பவம்.

      இங்கு பிரைமறி ஸ்கூலில் குழந்தைகள் தம் ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு, ஸ்கூல் விடப் போய் விளையாடி விட்டு, டின்னர் சாப்பிட்டு விட்டு பின்பு அவர்கள் கொண்டுவந்து விடுவினம் அல்லது நாம் போய்க் கூட்டி வருவோம்ம்.. இப்படி மாறி மாறிப் போய் வருவார்கள்.

      இப்படி அடுத்த வீட்டுக் குழந்தை நம் வீட்டில் இருக்கும்போது அதன் பொறுப்பு நாம் தானே.. அதனால நாம் எப்பவும் கண்காணிச்சுக் கொண்டே இருப்போம்..

      அந்ந்நேரம் நடந்த ஒரு விசயம்... ஒரு ஸ்கொட்டிஸ் குழதைக்கு பேர்த்டே பார்ட்டி என அவரின் ஃபிரெண்ட்ஸ் ஐ வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள்.

      அப்போ வீட்டுக் கார்டினில்.. Trumpoline [[[ [im]https://imageproxy.ifcdn.com/crop:x-20,resize:320x,crop:x800,quality:90x75/images/3a9d25799f51a477570af0995d197b71dbeda9d809385cfae27879eb5b2682a7_1.jpg[/im]

      இருந்திருக்கு.. இங்கு நம் கார்டினிலும் இருக்கு.. அதில் ஏறிக் குதித்து விளையாடிய இடத்தில் ஒரு குட்டி தவறி கீழே விழுந்து.. அது நோர்மல்தான் ஆனா கஸ்டகாலம் கால் உடைந்து விட்டதாம்.

      நல்ல குடும்பம் எனில் பேசாமல் விட்டிருப்பார்கள்.. ஆனா இது ஏதோ ஊத்தைக் குடும்பமாக்கும் உடனே கொம்பென்சேஷன் கேட்டு வழக்குப் போட்டு... அந்த பேர்த்டே கொண்டாடிய வீட்டு ஆட்கள்.. தம் வீட்டை விற்று நஸ்ட ஈடு கொடுத்தார்களாம்.. அதிலிருந்து ஒரே பயம் நமக்கும்.. அதுக்காக பிள்ளைகளின் விருப்பத்தைத் தடுத்திடக் கூடாதெல்லோ..

      இப்படியும் இங்கு நிலைமை இருக்கு. ஆனா அரசாங்கத்திடம் அல்லது ஏதும் கொம்பனிகள் எனில் நஸ்டஈடு கேட்பதில் தப்பில்லை... இப்படி ஒரு தனிப்பட்ட குடும்பம் எனில் பாவம் தானே...

      Delete
    2. அதிரா -//தம் வீட்டை விற்று நஸ்ட ஈடு கொடுத்தார்களாம்.// - என்ன அநியாயம். இப்படி அடுத்தவங்க வயித்தெரிச்சல்ல வாங்கும் பணம் செரிக்குமா? விபத்துக்கு, அதுவும் தன் குழந்தையால் நிகழ்ந்ததற்கு, பார்ட்டிக்கு அழைத்தவர்கள் என்ன செய்வார்கள்? கொஞ்சம்கூட மனிதாபிமானமோ அல்லது சென்ஸோ இல்லாத செய்கையாக இருக்கே.

      Delete
    3. அதேதான் இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்.. இங்கு பலருக்கு சமயம் இல்லை.. கடவுள் நம்பிக்கை இல்லை.

      Delete
  53. படங்கள் அனைத்தும் அழகு ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ மிக்க நன்றி..

      Delete
  54. மனதைக் கிறங்கடிக்கும் வகை வகையான வண்ண மலர்கள். பசிய புல்வெளிகளுக்கிடையே ஒய்யார நடை பயிலத் தூண்டும் நீண்ட நெடுஞ்சாலைகள். அடுக்கடுக்காய் வீடுகள். மேலே, பயணிக்கும் கருமேகங்கள். கீழே, பளிங்கு போல் காட்சியளிக்கும் பரந்து விரிந்த நீர்நிலைகள். பயணிக்கத் தூண்டும் படகுகள்.....

    மேற்கண்டவற்றை ஒன்றுவிடாமல் கண்டு ரசித்துக் களித்துக் குதூகலிக்கத் தூண்டியது அதிராவின் அசத்தலான நேர்முக வர்ணனை.

    அதராவின் கலையுணர்ச்சி வளர்ச்சி பெற்றிருக்கிறது. மொழி ஆளுமை மேலோங்கியிருக்கிறது.

    வாழ்த்துகள் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ.. கொமெண்ட்ஸ் போடாமல் இருந்த உங்களை இங்கே பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

      //மேற்கண்டவற்றை ஒன்றுவிடாமல் கண்டு ரசித்துக் களித்துக் குதூகலிக்கத் தூண்டியது அதிராவின் அசத்தலான நேர்முக வர்ணனை.//
      ஹா ஹா ஹா நன்றி.

      //அதராவின் கலையுணர்ச்சி வளர்ச்சி பெற்றிருக்கிறது. மொழி ஆளுமை மேலோங்கியிருக்கிறது.//
      ஓ அப்படியா ? அவதானிச்சிருக்கிறீங்க மிக்க நன்றி. தீட்டத் தீட்டத்தானே “வைரம்”:) துலங்குமாம்:)).. ஹையோ இதை என் செக் பார்த்திடக்கூடா:))

      மிக்க நன்றி அறிவுப்பசிஜி.

      Delete
  55. பிழை திருத்தம்:
    அதரா > அதிரா

    ReplyDelete
  56. வணக்கம் பூசாரே ! வந்தபாட்டுக்கு எதையாவது எழுதிட்டுப் போகிறேன்
    அடிக்கடி வர முயற்சிக்கிறேன் கோபிக்காதீங்கோ நன்றி !

    பறவையின் உறவுக் குள்ளும்
    படர்ந்திடும் அன்பின் மீதம்
    சிறப்புறச் சொன்னீர் நெஞ்சின்
    சிதைவுகள் ஒட்டிக் கொள்ள
    மறந்துநாம் போகா மண்ணின்
    மகிழ்வுகள் மீண்டும் வந்து
    நிறைந்துளம் பின்னு திங்கே
    நினைவுகள் எண்ணி எண்ணி !

    சேடலும் சிகையும் பின்னச்
    செழிப்புறும் மங்கை போல
    பாடலும் படமும் இந்தப்
    பதிவினை நிறைத்த போதும்
    தேடலும் தெளிவும் உள்ளே
    தேங்கிய இடங்கள் கண்டேன்
    ஆடலும் அழகும் மேடை
    அருகினில் மட்டும் தானே !

    //பின்ன அதிராவுக்கு டமில்ல டி எல்லோ?:) // இதை இத்தோடு முறை சொல்லிட்டீங்க அஞ்சுவும் இன்னும் கண்டுபிடிக்கல்ல போல ( டி ரேங் போட்ட காலம் எப்போ என்று தெரிந்தால் தங்கள் வயதினைக் கண்டு பிடித்திடுவாங்க சுவீட் சிக்ஸ்டீன் என்று சொல்ல முடியாமல் போகும் அவ்வவ் )

    வழக்கம் போல ஊசிக் குறிப்பு இதர இணைப்புகள் அருமை வாழ்க நலம்



    ReplyDelete
    Replies
    1. //
      //பின்ன அதிராவுக்கு டமில்ல டி எல்லோ?:) // இதை இத்தோடு முறை சொல்லிட்டீங்க அஞ்சுவும் இன்னும் கண்டுபிடிக்கல்ல போல ( டி ரேங் போட்ட காலம் எப்போ என்று தெரிந்தால் தங்கள் வயதினைக் கண்டு பிடித்திடுவாங்க ///ஆவ் ஹா ஹா நன்றி சீராlan

      Delete
    2. சீராளன்.. நாட்கள் கடந்து வந்தாலும் நயமான கவிதை படைத்துள்ளீர்கள். பாராட்டுகள்.

      சேடலும் சிகையும் பின்னச்
      செழிப்புறும் மங்கை போல - சீராளன் முத்திரையே அருமையான உவமை நயம்தான். வாழ்க

      பறவையின் உறவுக் குள்ளும் - சிறகுக் குள்ளும் என்று வந்திருந்தாலும் நல்லாத்தான் இருக்கும். குஞ்சுகளைச் சிறகுக்குள் பொத்தி வளர்ப்பதால்

      இந்தத் தடவை 16 வயது என்று சொல்லிக்கொள்பவரின் உண்மையான வயதைக் கண்டுபிடிக்கும் வழியைச் சொல்லி, நட்புக்குப் பங்கம் விளைவித்துக் கொண்டீர்களே. ஶ்ரீலங்கா அரசு எனக்கு எழுதிய பதில் கடித்த்தில் தமில் ‘டி ரேங்க்’ கொடுப்பது 1960லிருந்தே வழக்கத்தில் இல்லை என்று சொல்கிறதே.

      Delete
    3. [im]https://i.gifer.com/Y8ht.gif[/im]

      Delete
    4. வாங்கோ மேஜரே.. கவிஞரே வாங்கோ.. அடுத்த போஸ்ட்டுக்கு வருவேன் எனச் சொல்லிப் போனீங்க.. காணல்லியே என நினைச்சேன் கவிதையோடு வந்திருக்கிறீங்க நன்றி... இருங்கோ படிச்சிட்டு வாறேன்ன்...

      //தேடலும் தெளிவும் உள்ளே
      தேங்கிய இடங்கள் கண்டேன்
      ஆடலும் அழகும் மேடை
      அருகினில் மட்டும் தானே !///

      இது கொஞ்சம் புரியல்ல எனக்கு.. மற்றும்படி அழகுக் கவிதை.. நன்றி.

      Delete
    5. ///இதை இத்தோடு முறை சொல்லிட்டீங்க அஞ்சுவும் இன்னும் கண்டுபிடிக்கல்ல போல ( டி ரேங் போட்ட காலம் எப்போ என்று தெரிந்தால் தங்கள் வயதினைக் கண்டு பிடித்திடுவாங்க சுவீட் சிக்ஸ்டீன் என்று சொல்ல முடியாமல் போகும் அவ்வவ் )///

      கடவுளே கவிதை சொல்கிறேன் என வந்து கடசியில் கவிட்டுப்போட்டாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கவிதை சொன்னமா.. அடிராவை சே சே டங்கு ஸ்லிப்பாகுதே அதிராவை புகழ்ந்தோமா:) எனப் புறப்படாமல் முடிவில எதுக்கு நாரதர் வேலை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ இதைப் பார்த்ததும் ரொக்கெட் வேகத்தில என் செக் லாண்டிங் கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      ///
      வழக்கம் போல ஊசிக் குறிப்பு இதர இணைப்புகள் அருமை வாழ்க நலம் //
      மிக்க நன்றி சீராளன் மிக்க நன்றி.. என்னதான் அப்படி படுபயங்கர பிசி நீங்க எதுக்கு இப்படி? புரியல்ல கொஞ்சம் உங்களுக்காகவும் நேரம் ஒதுக்கி வாழப் பழகுங்கோ..

      Delete
    6. //ஆவ் ஹா ஹா நன்றி சீராlan//

      பாருங்கோ பாருங்கோ சந்தோசத்தில பெயரை எல்லாம் தமிங்கிலிஸ் ஆக்கிட்டா ஹையோ ஹையோ:))..

      அதில பல்லு விழுந்த வாயால சிரிப்பு வேற:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எலிப்பொறி வைப்பேனாக்கும்..ம்ம்க்கும்..:) ஹா ஹா ஹா..

      Delete
    7. ///ஶ்ரீலங்கா அரசு எனக்கு எழுதிய பதில் கடித்த்தில் தமில் ‘டி ரேங்க்’ கொடுப்பது 1960லிருந்தே வழக்கத்தில் இல்லை என்று சொல்கிறதே.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா ஒரு அக்கறை:)) சிறிலங்கா அரசுக்கு கடிதம் எல்லாம் எழுதிக் கேட்டிருக்கிறார் கர்:)) என் ஒடியல்கூழ் செய்திட்டுச் சொல்லுங்கோ என்றால்:) அதுக்கு நேரமில்லையாம்:)) ஹையோ வைரவா இதை எல்லாம் ஆரிடம் போய்ச் சொலுவேன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

      Delete
    8. அதிரா - என் ஒடியல்கூழ் செய்திட்டுச் சொல்லுங்கோ என்றால்:) - ஆஹா.. இதைவிட அருமையான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காது. எப்படியாவது சாதாரண வேலை கிடைத்தாலும் ஸ்காட்லாந்தில் அதிரா ஊருக்கு அருகில் செட்டிலாகி, உடனே ஒடியல் கூழ் செய்து, நஷ்டஈடுக்கு வழக்கு தொடுக்கலாமே... எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க. உங்க வீடு என்ன விலை? சொன்னீங்கன்னா அதே அமவுண்டுக்கு நஷ்ட ஈடு கேட்கலாம்.

      ஏஞ்சலின் - இந்த ஐடியா நல்லா இருக்கா? சொல்லுங்க. (சே..சே... உங்க ஆறிய பவனைப் பார்த்து ஏதேனும் செஞ்சு லண்டன்ல வழக்கு போட மாட்டேன். இது அந்த அதிராவின் ஒடியல் கேக்கின்மேல் சத்தியம்)

      Delete
    9. ஹா ஹா ஹா இதை எப்படி மிஸ் பண்ணினேன்:)) இப்போ ஒவ்வொன்றாகத்தேடிக்கண்டு பிடிச்சேன் இதை:))..

      ///என் ஒடியல்கூழ் செய்திட்டுச் சொல்லுங்கோ என்றால்:) - ஆஹா.. இதைவிட அருமையான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காது. எப்படியாவது சாதாரண வேலை கிடைத்தாலும் ஸ்காட்லாந்தில் அதிரா ஊருக்கு அருகில் செட்டிலாகி, உடனே ஒடியல் கூழ் செய்து, நஷ்டஈடுக்கு வழக்கு தொடுக்கலாமே.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹையோ அப்பூடி எனில் அஞ்சுவின் இட்லியையும் சேர்த்தே செய்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

      ///எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க. உங்க வீடு என்ன விலை? சொன்னீங்கன்னா அதே அமவுண்டுக்கு நஷ்ட ஈடு கேட்கலாம்//

      ஹையோ அஞ்சுவின் வீட்டு விலையையும் கேட்டு.. சேர்த்தே சொல்லிடுறேன்ன்ன்:)).. நேக்கு ரெண்டு கண்போனாலும்:)) அதே கதைதேன்ன்:)) பின்ன நான் மட்டும் வீடு வித்து இன்சூரன்ஸ் கட்ட:) அவ மட்டும் சொகுசா ஊஞ்சல் ஆட விட்டிடுவனோ:))

      ///ஏஞ்சலின் - இந்த ஐடியா நல்லா இருக்கா? சொல்லுங்க. (சே..சே... உங்க ஆறிய பவனைப் பார்த்து ஏதேனும் செஞ்சு லண்டன்ல வழக்கு போட மாட்டேன்.///

      ஹா ஹா ஹா அது நீங்க நினைச்சாலும் வழக்குப் போட முடியாதெல்லோ நெ.த?:) பிக்கோஸ் அஞ்சுவின் குறிப்பைச் செய்து சாப்பிட்டபின் ஆள் இருக்கோணுமே வழக்குப் போட ஹையோ ஹையோ:)) இது தெரியாம நீங்க வேற:)).

      //இது அந்த அதிராவின் ஒடியல் கேக்கின்மேல் சத்தியம்)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது கேக்கூஊஊஊஊஊ இல்லை கூழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்:)) ஹையோ வைரவா இந்த அழகில அஞ்சு வேற தனி புளொக் ஓபின் பண்ணிட்டா:)) இனி என்ன ஆகுமோ?:)) “உரலுக்குள் தலையைக் குடுத்திட்டா:)) இனி இடிக்குப் பயப்பிட முடியுமோ?:)”... ஹா ஹா ஹா நல்லவேளை மீ சேவ்வ்வ்வ்வ்வ்:))..

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.. மீள் மீள் வருகைகளுக்கு..._()_.

      Delete
  57. //நாங்க ரோட்டால போகிறோம்...//
    நாங்க மட்டும் வனத்திலையா பாரக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. [im]https://thumbs.gfycat.com/PoliticalBlushingBedlingtonterrier-max-1mb.gif[/im]

      Delete
    2. ///நாங்க மட்டும் வனத்திலையா பாரக்கிறோம்//

      ஹா ஹா ஹா தம்பி நீங்க எதையோ சொல்ல வந்திருக்கிறீங்க:)) ஆனாலும் பாருங்கோ கடவுள் அதிராக்கா பக்கம்:))..

      அதனால ஒரு காலை எடுக்கப் பண்ணி.. “வனம்” ஆக்கிட்டார்ர் ஹா ஹா ஹா:)).. ரெண்டு நாளா யோசிச்சிருக்கிறீங்க எப்பூடிக் காலை வாரலாம் என ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நன்றி.

      Delete
    3. //https://thumbs.gfycat.com/PoliticalBlushingBedlingtonterrier-max-1mb.gif///

      ஓஓஓஓஓஓஒ அஞ்சு என்னையா ஜொன்னீங்க நன்னி நன்னி.. என் செக்குக்கு என்னில அம்புதேன்ன்.. ஹையோ டங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்.. அன்புதேன்:)) ஹா ஹா ஹா...

      Delete
    4. dank you, dank you angel அக்கா
      --சில பேருக்கு பொறாம--
      நான் சத்தியமா athira அக்கவா சொல்லல்ல

      Delete
    5. ///angel அக்கா//
      ஹலோ தம்பி.. அவ உங்களுக்கு அக்கா இல்ல ஆன்ரியாக்கும்:) நியாபகம் இருக்கட்டும்.. அதிரா மட்டும்தேன் அக்கா:).

      ///நான் சத்தியமா athira அக்கவா சொல்லல்ல//
      கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வர முடியுமோ தம்பி.. பயப்பூடாதிங்க ச்சும்மாதான்:)) ஹா ஹா ஹா

      Delete
  58. அதிராவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை வயசாச்சல்லோ

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. அது பறவாயில்லை.. முடியும்போது வந்து பாருங்கோ மிக்க நன்றி.

      Delete
  59. ஸ்ரீராமுக்குப் பிடிச்சதாவா? என்ன அநியாயம்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கொமெண்ட் மாறி இங்கு விழுந்து விட்டதே:)).. அது பிடிகாமலோ கலைச்சுக் கலைச்சு வீடியோ எடுத்தீங்க?:) ஹா ஹா ஹா..

      Delete
  60. இன்னும் 24 மணி நேரத்தில் ஒரு விபரீதம் நடக்க இருக்கு :) நான் ரெடி நீங்க ரெடியா ??

    ReplyDelete
    Replies
    1. கோயில் படம் வெளிவரப்போகுதோ?.. போடுங்கோ போடுங்கோ..:))

      இல்ல ஜிஞ்சர் ஏதும் குளப்படி பண்ராரா??:)) ஹா ஹா ஹா எதுகும் நான் பிளேனில ஏறிடுறேன்ன் ட்றம்ப் அங்கிள் அவசரமாக் கூப்பிடுறார்ர்:))

      Delete
    2. https://paperflowerskitchen.blogspot.co.uk/

      [im]https://seeklogo.com/images/J/jerry-logo-CC2BD85246-seeklogo.com.png[/im]

      Delete
    3. https://paperflowerskitchen.blogspot.co.uk/

      ஆவ்வ்வ்வ்வ்வ் eல்லோரும் ஓடுங்கோ ஓடுங்கோ எங்காவது செவ்வாய்க்கிரக ரிக்கெட் கிடைச்சா எனக்கும் தாங்கோ ஓடிப்போய் ஒளிச்சிடுறேன் நேக்கு உசிரு முக்கியம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா வாழ்த்துக்கள் அஞ்சு.

      நானும் சில வருடங்கள் முன்பு “ஆரியபவான் சமையல்” என ஒன்று திறந்து ஆருக்கும் காட்டாமல் கொஞ்சக் குறிப்புக்கள் போட்டேன்ன் பின்பு கைவிட்டதில் எல்லாமே மறந்து போச்சு.. இப்போ அது எங்கிருக்குதோ? எப்படிக் கண்டுபிடிப்பதோ என விட்டிட்டு இருக்கிறேன்.

      Delete
    4. நானும் உங்கள் 'ஆரிய பவன்' தலைப்பைப் பார்த்து ஆவலா ஒவ்வொரு இடுகையா படித்தால், எல்லாம் 'ஆறிய பவன்' போல் இருந்தது.

      விரைவில் சில பல உணவுப் பதிவுகள் போடுங்க. அதுக்காக, கேசரி கேக் செய்த மாதிரி, பாயச பர்பி, ரோஸ் மில்க் மைசூர் பாக் என்று ஆரம்பித்துவிடாதீர்கள்.

      இப்போ நுங்கு சீசன். உங்களுக்கு நுங்கு சாப்பிட்ட அனுபவம் நினைவில் இருக்கிறதா?

      Delete
    5. நெல்லைத்தமிழன் அது தேவதை கிச்சின் அஞ்சுவுடையது.

      //நானும் உங்கள் 'ஆரிய பவன்' தலைப்பைப் பார்த்து ஆவலா ஒவ்வொரு இடுகையா படித்தால், எல்லாம் 'ஆறிய பவன்' போல் இருந்தது.
      // ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நெடுகவும் சுட்டுக் கொண்டிருக்காதெல்லோ:)).

      //விரைவில் சில பல உணவுப் பதிவுகள் போடுங்க.//
      நான் குட்டிக் குட்டியா கொஞ்சக் கலெக்‌ஷன் படமெடுத்து வச்சிருக்கிறேன்ன் போடப் பயத்தில காலம் போகுது:)) உங்கள் பழகேசரி செய்தேனே.. மங்கோ பல்ப் சேர்த்து.. நல்ல சுவையாக வந்துது படம் போடுறேன் விரைவில் ஆனா பார்வையில் வித்தியாசம் இல்லை.

      //இப்போ நுங்கு சீசன். உங்களுக்கு நுங்கு சாப்பிட்ட அனுபவம் நினைவில் இருக்கிறதா?///

      என இப்பூடிக் கேட்டுப்புட்டீங்க:)) இலங்கையில் யாழ்ப்பாணம் என்றாலே பனைதானே... யாழ்ப்பாணத்து மக்களுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டு தெரியுமோ?:) ஹையோ இங்கு சொல்லலாமோ தெரியல்ல இருப்பினும் சொல்லிடுறேன் படிச்சதும் கிழிச்சு ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியில் வீசிடுங்கோ பிளீஸ்ஸ்:)).. அதாவது “பனங்காய் சூப்பிகள்” என வேணுமென்று சொல்வார்களாம் ஹா ஹா ஹா.

      எங்கள் வீட்டிலும் ஒரு மரம் இருந்தது.. நிறையக் காய்க்கும்... பழமோ கற்கண்டுபோல இனிக்கும்.. நெருப்பில் சுட்டு சாப்பிட சுவையோ சுவை.. அதன் பாணி எடுத்துக் காச்சி பனங்காய்ப் பணியாரம், பினாட்டு எல்லாம் செய்வினம்.. விதைகளை மண்ணில் புதைத்து.. கிழங்கு எடுத்து அதுதான் ஒடியல் கூழுக்கு மாவாக மற்றும் அவித்துக் காயவைத்து ஒடியலாக சாப்பிடலாம்.. மாவாக்க்கி சீனி தேங்காய்ப்பூப் போட்டு குழைத்தும் சாப்பிடலாம். இப்பவும் இலங்கைக் கடைகளில் கிடைக்கும்.

      எங்கள் தமிழ்கடைக்குப் போனவருடம் வந்திருந்துதே.. வாங்கி வந்தால் அது கொஞ்சம் முத்தி விட்டது.. முத்திய நொங்கின் தமிழ்ப்பெயர் என்ன தெரியுமோ? “சீக்காய்” என்பார்கள்.. நொட் சீயாக்காய்:).. தேங்காய்ச் சொட்டுப் போல இருக்கும் கடிச்சுத்தான் சாப்பிடலாம் எனக்கு எதுவாயினும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்..

      Delete
    6. இள நுங்கு மிக சுவையாக இருக்கும். இன்னும் இரண்டு வாரங்களில் சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் (அதுவரை சென்னையில் சீசன் இருந்தால்). சில வருடங்களுக்கு முன்பு, நுங்கில் கொஞ்சம் கட்டியான (முத்திய) நுங்கு விரும்புவேன். அதைத்தான் தோலை நீக்கி, துண்டுகளாக்கி புத்தகம் படித்துக்கொண்டே ஒவ்வொன்றாகச் சாப்பிடுவேன். இப்போல்லாம் வயிற்று வலி வருவதால் (அதை செரிக்க முடியாமல்) இள நுங்குதான் வாங்குகிறேன். சென்னையில் 10 நுங்கு (ஒரு நுங்குக் காயில் 3 நுங்கு இருக்கும்) 70 ரூபாய்.

      எங்கள் கிராமங்களில், முத்தின நுங்கு (தேங்காய் போல் உள்ளே இருக்கும்) வெட்டி, ஆடுகளுக்கு உணவாகப் போடுவார்கள். சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.

      Delete
    7. //இன்னும் இரண்டு வாரங்களில் சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் //
      ஓ நீங்கதான் இப்போ அனுமார் போல:) எங்க இருக்கிறீங்க என்றே புரியுதில்லை:). அப்போ இரு கிழமையில் நிரந்தர சென்னையோ.. நுளம்புக்கடியை அனுபவிக்கப் போறீங்க:)..

      //எங்கள் கிராமங்களில், முத்தின நுங்கு (தேங்காய் போல் உள்ளே இருக்கும்) //

      இதன் பெயர்தான் தெரியுமோ எனக் கேட்டேன்:)) பதில் சொல்லாமல் தப்பிட்டீங்க:).. ஆகவும் முத்தினால் ஒண்ணும் பண்ண முடியாது.. .. ஆனா கொஞ்சம் மொளு மொளு என இருப்பது எனக்குப் பிடிக்கும்:)).. நான் எப்பவுமே எதிலுமே ஒரு வித்தியாசம் பாருங்கோ ஹா ஹா ஹா:).

      Delete
  61. சும்மாவே லேட்டு! இப்போ 172 கருத்துக்களா? அம்மாடியோவ், இந்தக் கூட்டத்திலே நம்மை யார் கண்டுக்கப் போறாங்க? ஆனாலும் ஊசிக்குறிப்புவழக்கம் போல் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. உங்களால அதிராவைப்போல ஸ்பீட்டா ஓட முடியாது எனத் தெரியும்:)) இருப்பினும் ஓடி வந்திட்டீங்க:)..

      உங்களை எல்லோருமே பார்த்திட்டாங்க.. ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  62. ஸ்...ஸ்.....ஸ்ஸ் அம்மா, உங்களோட நடந்து ஓடி வந்ததில் மூச்சு வாங்குது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது செம..!

    பிரின்ஸ் ஹாரியின் திருமணத்திற்கு செல்லவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ. மிக நீண்ட இடைவெளியின் பின் என் பக்கம் எட்டிப் பார்த்திருக்கிறீங்க சந்தோசம்.

      //பிரின்ஸ் ஹாரியின் திருமணத்திற்கு செல்லவில்லையா?//

      நானில்லாமல் என் தம்பிக்குத் திருமணமோ?:).. முன் வரிசையில் இருக்கிறேனே பிங் தொப்பி போட்டுக்கொண்டு:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி பானுமதி அக்கா.

      Delete
  63. காலி பெஞ்ச் இருக்கும் ரோடு சேருமிடத்தில் உள்ள கட்டிடங்கள் தனித் தனி வீடுகளா இல்லை அடுக்குமாடிக் குடியிருப்புகளா?

    பெஞ்சில் இருந்த பூக்கள 'அவைகள்' எடுத்துச் சென்றிருக்குமோ? எதுக்கும் பார்த்து நடங்க. ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. //காலி பெஞ்ச் இருக்கும் ரோடு சேருமிடத்தில்// அது பார்க் நெல்லைத்தமிழன்.. பார்க்கின் கரையிலே புறிம்பாக ரோட் போகுது.. அது தொடர் மாடி எல்லாம் இல்லை.. பெரிதாக்கிப் பாருங்கோ.. அப்படியே மலைமேலே வீடுகள்.. அதனாலதான் டக்கெனப் பார்க்க தொடராகத் தெரியுது...

      தனித்தனி வீடுகள்தான் இங்கு அதிகம்.. சிலது 2, சிலது 4,.. சிலது மிகச் சிலதே ஒரு 8/10 வீடுகள் வரும் ஒன்றாக .

      //பெஞ்சில் இருந்த பூக்கள 'அவைகள்' எடுத்துச் சென்றிருக்குமோ? //
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பார்க் பெஞ்சுகளை விட.. சில ஆத்தோர நடைபாடை பெஞ்சுகளில்தான் பார்த்திருக்கிறேன்:)).

      //எதுக்கும் பார்த்து நடங்க. ஹா ஹா ஹா//
      அதனாலதான் தனியே பெஞ்சில் இருக்கப் பயமெனக்கு:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்..

      Delete
  64. அழகான தொகுப்பு. உங்களோடு நேரில் பயணித்தால் போல இருக்கிறது. சிறப்பாக தொகுத்தமைக்கு வாழ்த்துகள்.

    பயணங்கள் பலவிதம் - 03
    https://newsigaram.blogspot.com/2018/05/PAYANANGAL-PALAVIDHAM-03.html
    #சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellanka

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சிகரம் பாரதி வாங்கோ.. மிக நீண்ண்ண்ண்ண்ட இடைவெளியின் பின்பு வந்திருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.