நல்வரவு_()_


Tuesday 1 June 2010

இடைக்கிடைதான் கிடைக்குது:)

நான் அவோர்ட்டைச் சொன்னேன். இது மனோ அக்காவும், ஜலீலாக்காவும் அன்பாகத் தந்த அவோர்ட்ட்ட்ட்ட்.. மிக்க நன்றி மனோ அக்கா & ஜலீலாக்கா.





இதை நான் ஜீனோவையும், ஜெய்..லானியையும் பெற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன். (ஏன் எதுக்கு என்றெல்லாம் கேள்வி கேட்கப்பூடாது).

இப்பவெல்லாம் கஸ்டப்பட்டுப் படமெடுத்துப்போட்டாலும் அடிக்க வருகினம்:), இருந்தாலும் நாங்கள் தொடராமல் விட்டிடுவோமா?(முறைக்காமல் முழுவதும் படியுங்கோ, கடசியில நல்ல விஷயம் சொல்லிவிட்டுத்தான் போவேன்:).

......................................................................................................
ஒரு நியூஸ்..... கொரியாவில் ஒரு தம்பதியினர், சரியான நெற் பைத்தியமாம். எப்பவுமே இருவரும் இன்ரநெற்றிலெயே இருப்பார்களாம். அவர்களுக்கு ஒரு வயது நிரம்பாத ஒரு குழந்தை. திடீரென படுக்கையில் இறந்து கிடந்ததாம். மருத்துவப்பரிசோதனையில் தெரிய வந்தது, குழந்தைக்கு போதிய உணவு, நேரகாலத்துக்குக் கொடுக்கப்படாததால், உடல் உறுப்புக்கள் பலவீனமாகி குழந்தை இறந்துவிட்டது. குழந்தையைக்கூட ஒழுங்காக கவனிக்க முடியாமல் இன்ரநெற் அவர்களை மயக்கிவிட்டிருக்கிறது. கவனம் மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்....
......................................................................................................



மந்தையிலே இருந்து இரண்டு ஆடுகள், எங்கோ திசைமாறி வந்துவிட்டன.... இரண்டும் சந்தித்தபொழுது....... அவர்களால் பேசமுடியவில்லையே... ஏன்ன்ன்ன்ன்..... பசிதான் காரணம்... சாப்பாட்டுப் பிரியர்கள்:)..


நீங்கள் முன்பு பார்த்த பழைய ஜோடிதான், ஆனாலும் புதிதாக சூட்:) பண்ணப்பட்டவர்கள். வளர்ந்திருக்கிறார்களோ???


புறாவுக்கும் நம் கையாலேயே உணவூட்டும் பரம்பரை எங்கட பரம்பரைஈஈஈஈஈஈஈஈஈ









முத்துக்குளிக்க வாரீகளா??? வந்திட்டோம் இமாஆஆஆஆஆஆஆஆஅ



பின் இணைப்பு:
எங்கள் வீட்டு ரியூலிப்ஸ்.. பிங் டயமன்...(இப்போ பூத்திருக்கிறார்கள்)






எங்கள் "பமிலி பாபர்" வீட்டுச் செல்லம், ஜீனோவுக்கு ஃபிரெண்ட் ஆக்குவதற்காக கூட்டிவந்தேன்... புல் சேவ் பண்ணிக்கொண்டு நிற்கிறார்... சடைக்குட்டி.


முடிஞ்சால் பிடியுங்கோ.... என்னை யாரும் புய்க்க முடியாதே சீயா மீயா....

இது யார் அனுப்பியது, என்றெல்லாம் ஆரும் குறுக்குக் கேள்வி கேட்க வாணாம், பிறகு நான் என்னை மறந்து, தம்பி ஜீனோ அனுப்பினவர் எனச் சொல்லிப்போடுவேன்:).

30 comments :

  1. அருமை அதிரா அருமை.விஷயம் தெரியுமோ?நம்ம மக்கள்ஸ் நெட்டையும்,சமையற்கட்டையும் கட்டையும் ,பெட்டையும் ஒரே இடத்தில் வைத்திருப்பதால் நம்ம குழந்தைகளுக்கு ஒரு குறைவும் வராது.
    திசைமாறிய ஆடுகளும் குண்டாகத்தான் இருக்கு,ஓ அவைகளும் சாப்பாட்டு பிரியர்களோ?

    அதிரா புறாவிற்கும் ப்ரெட்டா? கொஞ்சம் தானியவகை கொடுங்கோ ! பிரித்தானிய புறா ப்ரெட் தான் சாப்பிடுமா?

    புத்தம் புதிய தாராக்கள், டூலிப்ஸ் சூப்பர்.இந்த சடைக்குட்டி ,ஜினோ,சன்னியை விட சூப்பர்.கண்ணை அவரை விட்டு எடுக்க முடியலை.

    கடைசி பூஸார் பாவம்,காப்பாத்துங்கோவேன்.

    ReplyDelete
  2. அன்பான விருதிற்கு வாழ்த்துக்கள்.கதாசிரியர் ஜினோ,ஜெய்லானிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அதிரா, வாழ்த்துக்கள். அழகான படங்கள்.

    உந்த ஆடுகளைப் பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்டதுகள் போல இல்லை. இப்படி காஞ்சு போன ப்ரெட் புறாக்கு குடுக்க கூடாது. பாவம். விக்கல் வரும்.
    கொரியா தம்பதிகள் நியூஸ் நானும் பார்த்தேன். மனசு கனத்துப் போய் விட்டது படித்ததும்.

    ஜெய்லானி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அதிரா, வாழ்த்துக்கள்!

    ஜெய்லானிக்கும், ஜீனோவுக்கும் வாழ்த்துக்கள்!

    அதிரா,
    எனக்கு அந்தப் பூக்கள் வேணாம், அந்த செடி வேணும்;)

    ReplyDelete
  5. @@@asiya omar--//.கதாசிரியர் ஜினோ, ஜெய்லானிக்கும் வாழ்த்துக்கள்.//

    கிண்டலுக்கு அளவில்லாம போச்சே!! நான் கதாசிரியரா ?..அவ்வ்வ்வ்வ்

    மக்கள்ஸ் இருங்க நா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப வரேன்..

    ReplyDelete
  6. விருதுக்கு வாழ்த்துக்கள் !!! வாழ்த்துக்கள் !!!

    // (ஏன் எதுக்கு என்றெல்லாம் கேள்வி கேட்கப்பூடாது).//

    கேள்விகேட்டா திருப்பி பிடிங்கிப்பீங்களாஆஆஆஹ்.

    //இப்பவெல்லாம் கஸ்டப்பட்டுப் படமெடுத்துப்போட்டாலும் அடிக்க வருகினம்:),//

    பேர மட்டும் சொல்லுங்க அவங்களுக்கு ஜெய்லானி டிவில ஸ்பெஷல் ஜுஸ் இல்ல பாட்டு எழுதிடலாம் . ( இப்ப தான் நா கதாசிரியராச்சே இனி ஒரு பய கேக்க முடியாது )

    ReplyDelete
  7. எட்டாவது போட்டோவில ஒரு தாராவுக்கு தலைய கானோமே ஒரு வேளை வீட்டில வச்சிட்டு வந்திருக்குமோ ?

    படங்கள் அழகா இருக்கு...!!

    ReplyDelete
  8. விருது பெற்றமைக்குப் பாராட்டுகள் அதிரா.
    படங்கள் எல்லாம் கலக்கல். மேல வைங்கோ.

    கதாசிரியர் ஜெய்லானிக்கும், கதை விடுற பப்பிக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். ;))

    ReplyDelete
  9. ஆசியா மிக்க நன்றி.
    //நம்ம மக்கள்ஸ் நெட்டையும்,சமையற்கட்டையும் கட்டையும் ,பெட்டையும் ஒரே இடத்தில் வைத்திருப்பதால் நம்ம குழந்தைகளுக்கு ஒரு குறைவும் வராது.// அப்பூடியெண்டால் ஓக்கை..

    //பிரித்தானிய புறா ப்ரெட் தான் சாப்பிடுமா?// அவை பாஸ்ட் ஃபூட்தான் கேட்கினம்... தானியம் எல்லாம் ஓல்ட் ஃபாசனாம்:).

    //இந்த சடைக்குட்டி ,ஜினோ,சன்னியை விட சூப்பர்.கண்ணை அவரை விட்டு எடுக்க முடியலை.\\ உஸ் ஆசியா மெதுவாக் கதையுங்கோ.. ஜீனோவுக்கு பாம்புக்காது:)..

    //கடைசி பூஸார் பாவம்,காப்பாத்துங்கோவேன்// இல்லை ஆசியா, பின்னூட்டங்கள் சூடாக வந்தாலும் என, அவரை பேபிதாராக்கள் வேற நாட்டுக்குக் கூட்டிப்போகினம்... இவர்தான் “தாராப்பூஸ்ஸ்ஸ்ஸ்”.

    //கதாசிரியர் ஜினோ,ஜெய்லானிக்கும் வாழ்த்துக்கள்.//எச்சூச்சுமி..... ரீயை ஊத்திவிட்டேன் உடுப்பிலே... கொஞ்சம் இருங்கோ துடைச்சிட்டு வாறன்:)...

    ReplyDelete
  10. மிக்க நன்றி வாணி.

    \\இப்படி காஞ்சு போன ப்ரெட் புறாக்கு குடுக்க கூடாது. பாவம். விக்கல் வரும். // காதைக் கொண்டுவாங்கோ ஒரு கதை சொல்லட்டே.... உதுவும் சொந்த பிரெட் அல்ல:), இம்முறையும் எதிர்பாராத சந்திப்பு தாராக்களை. அதனால் பாண் எதுவும் கொண்டுபோகவில்லை. அங்கு ஒருவர் ஒரு ராத்தல் பாணை வைத்துப் போட்டுக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் You also give எனத் தந்திட்டுப் போய்விட்டார்(வாழ்க அவர்). ஓசி பிரெட்டோடு படமெடுத்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

    ReplyDelete
  11. செல்வியக்கா வாங்கோ மிக்க நன்றி.

    //எனக்கு அந்தப் பூக்கள் வேணாம், அந்த செடி வேணும்;)//எது? ரியூலிப்ஸ்தானே? அது கிழங்கில் வளரும் செல்வியக்கா.மேயிலே பூத்து மேயிலேயே வாடிவிடும். பின்பு அடுத்த வருடம்தான். இங்கே சந்திகள் ரோட்டோரமெல்லாம் பல வர்ணங்களில் வைத்திருப்பார்கள். நானும் முடிந்தளவு ஓடியோடி வாடமுன்பு படமெடுத்தேன், என் அல்பத்தில் போடுவேன் பாருங்கோ.... ஃபிறீ டெலிவரிக்கு ஆளிருந்தால் சொல்லுங்கோ நான் கிழங்கு கொடுத்துவிடுகிறேன்.

    ReplyDelete
  12. மிக்க நன்றி ஜெய்..லானி.

    //கிண்டலுக்கு அளவில்லாம போச்சே!! நான் கதாசிரியரா ?..அவ்வ்வ்வ்வ் /// உந்த அவ்வ்வ் இருக்கட்டும், கதாசிரியர் எனச் சொன்னதைக் காப்பாற்றியே தீரவேணும்.... களமிறங்கி கதையெழுதுங்கோ... ஆவலோடு ஜெய்..லானியின் கதை படிக்கக் காத்திருக்கும் வாசகி அதிரா.

    ReplyDelete
  13. ஆங்... ஜெய்..லானி...
    //இமா said...
    ;)// முதலாவது ஓட்டு(இது ஓட்டை அல்ல ஓட்டு:)) விழுந்திட்டுதூஊஊஊஊஉ ஆரம்பியுங்கோ கதையை...... என்ன அயகா நிலவைப் படமெடுத்த உங்களுகா கதை எழுத வராது??? ஓக்கை அதிரா காக்கா போகிறேன்... மே மே.. மன்னிக்கவும் ஆட்டைப் பார்த்ததினால் அப்பூடி வந்திட்டுது மீ.... எஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  14. பேர மட்டும் சொல்லுங்க அவங்களுக்கு ஜெய்லானி டிவில ஸ்பெஷல் ஜுஸ் இல்ல பாட்டு எழுதிடலாம் /// உஸ் ஜெய்..லானி மெதுவாக் கதையுங்கோ... கேட்டிடப்போகுதூஊஊ:).

    //இப்ப தான் நா கதாசிரியராச்சே இனி ஒரு பய கேக்க முடியாது // கிக்..கிக்..கீஈ இப்பவே துள்ளினா எப்பூடி? முதல்ல கதை எழுதுங்கோ..

    எட்டாவது போட்டோவில ஒரு தாராவுக்கு தலைய கானோமே ஒரு வேளை வீட்டில வச்சிட்டு வந்திருக்குமோ ?// ஓம்.... ஜல(தல)தோசமாம்:).... அதுதான் கழட்டி ஆவிபிடிக்க வச்சிட்டு வந்திருக்கிறார்(இது வேற ஆவி:))

    படங்கள் அழகா இருக்கு...!! /// மிக்க நன்றி.

    ReplyDelete
  15. மிக்க நன்றி இமா.

    //கதை விடுற பப்பிக்கும்// இவ்வளவு நாளும் பப்பி, பட்டம்தான் விட்டுக்கொண்டிருக்கிறார் என்று நினைத்திருந்தேன்... இப்போ கதையும் விடுறாரோ?:) இது எப்ப தொடக்கம்ம்ம்ம்ம்?

    ReplyDelete
  16. அவோர்ட்டுக்கு வாழ்த்துக்கள். சிறுகதை எழுதும் உங்களுக்கும், எல்லா ப்ளாகிலும் பட்டையக் கிளப்பும் ஜெய்..லானி அண்ணேக்கும் அவோர்டு எனில் ஒரு அர்த்தமிருக்கு..ஆனால்..நீங்கள்...ஓக்கை, எதுவும் கேக்கப் படாது எண்டு சொல்லிட்டீங்கள். :)
    ஜீனோக்கும் அவோர்ட்டு தந்து கவுரவித்தமைக்கு நன்றி அதிராக்கா..மெனி மெனி டாங்க்ஸ்!

    அன்னங்கள் வயக்கம் போல அயகா இருக்கு..கபூத்தர் கூடோ சுந்தரா இருக்கு..இந்த ஊர்களில் தான் மனுஷர் முதற்கொண்டு மிருகம்,பறவைகள் எல்லாரும்:) ப்ரெட் உண்கிறார்கள்..கிக்..கிக்..கிக்!!!
    ஓசி பாண் கொடுத்து அதனை படமெடுத்து ப்ளோகிலே பப்லீஷும் செய்த அதிராக்கா வாள்க! வாள்க! வாள்க!

    / ஜீனோவுக்கு ஃபிரெண்ட் ஆக்குவதற்காக கூட்டிவந்தேன்... புல் சேவ் பண்ணிக்கொண்டு நிற்கிறார்... சடைக்குட்டி./ கர்ர்ர்..ர்ர்ர்..ர்ர்ர்! கிர்ர்..ர்ர்..ர்ர்! வவ்..வவ்.வ்வ்வ்வ்! ஜீனோக்கு ப்ரெண்டாக்க உங்கட வீட்டுப் பக்கத்திலை அயகான சின்னப் பெண்கள்;) இல்லையோ?

    /இந்த சடைக்குட்டி ,ஜினோ,சன்னியை விட சூப்பர்.கண்ணை அவரை விட்டு எடுக்க முடியலை./ யூ டூ ஆசியா சிஸ்டர்? திஸ் இஸ் வெறி பேட் யா..வவ்..வவ்..வ்வ்! வ்வ்வ்! கர்ர்..ர்ர்ர்x10000000001

    /கதை விடுற பப்பிக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். ;)) / கர்ர்..ர்ர்ர்x10000000001 & பாராட்டுக்கு டாங்க்ஸ் ஆன்ரீ.

    /இப்போ கதையும் விடுறாரோ?:) இது எப்ப தொடக்கம்ம்ம்ம்ம்? / கிக்..கிக்..கிக்!பக்..பக்..பக்!!

    ReplyDelete
  17. விருதுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. பிரெட் ச்சப்பிட்ட புறாவெல்லாம் தண்ணிய பாத்து போகுது? ஒரு வேளை காரமா இருந்ததோ? நல்ல ரசனை. :)

    ReplyDelete
  19. விருது பெற்ற அதிராவிற்கு வாழ்த்துக்கள்.

    உஙக்ளுக்கு நான் கொடுத்தது ரொமப் எனக்கு சந்தோஷம்., உஙக்ளை போல் நகைசுவை கலந்து சிரிப்பு படத்துடன், நல்ல மேட்டரோ, கதையோ என்னால் எழுத வராது,



    அன்னம் அருமை.என்ன பறவைகளும் இப்ப பாஸ்ட் புட் கேட்க்கின்றனவா?

    குழந்தை இறந்த செய்தி ரொம்ப மனவருத்தம்.

    இதில் கண்டிப்ப்பாக விழிப்புணர்வு வேண்டும்.

    ReplyDelete
  20. வெல்கம் ஜீனோ.
    ///அதிராக்கா வாள்க! வாள்க! வாள்க!/// என்னைப் பார்த்து Bஆர்க் பண்ணவில்லையே?.

    //கர்ர்ர்..ர்ர்ர்..ர்ர்ர்! கிர்ர்..ர்ர்..ர்ர்! வவ்..வவ்.வ்வ்வ்வ்! ஜீனோக்கு ப்ரெண்டாக்க உங்கட வீட்டுப் பக்கத்திலை அயகான சின்னப் பெண்கள்;) இல்லையோ?// இருக்கினம் ஜீனோ... ஆனால் ரொம்ப கியூட்.. உங்களுக்கு சரிப்பட்டு வராது:):).... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

    வரவுக்கு மிக்க நன்றி ஜீனோ. அவார்ட்டைப் போட்டிடுங்கோ. சூரியனைப் படமெடுத்துப் போட்டமைக்காக இந்த அவார்ட் ஜீனோ ஓக்கை?.

    ReplyDelete
  21. மிக்க நன்றி கீதா ஆச்சல்.

    ReplyDelete
  22. பிரெட் ச்சப்பிட்ட புறாவெல்லாம் தண்ணிய பாத்து போகுது? ஒரு வேளை காரமா இருந்ததோ?//// கர்ர்ர்ர்ர்ர்ர்:), அது வயிறு முட்ட தீத்தி விட்டுவிட்டேன் அதுதான் தண்ணி குடிக்கினம்..:)..என்னைப்பார்த்துக் கர்ணன் பரம்பரை என, நீங்கள் சொல்வது கேட்குதுஊஊஊ மிக்க நன்றி:).

    மிக்க நன்றி அன்னு.

    ReplyDelete
  23. ஜலீலாக்கா இப்ப நீங்கள் சரியான மோசம் கர்ர்ர்ர்ர்ர்... ஒழுங்காக வருவதில்லை... ஓக்கை ஓக்கை கூல் டவுண் அதிரா கூல் டவுண்...

    ஜலீலாக்கா வீட்டிலுள்ள பிசிநேரத்திலும் வந்தமைக்கு மிக்க நன்றி.

    //அன்னம் அருமை.என்ன பறவைகளும் இப்ப பாஸ்ட் புட் கேட்க்கின்றனவா?// அதிராவைக் கண்டாலே எல்லோரும் பாஸ்ட் ஃபூட் தான் கேட்கினம்ம்ம்ம்ம்ம்.

    உண்மைதான் குழந்தை இறந்ததும் தாய் தந்தையை ஜெய்லில் போட வெளிக்கிட்டால், தாய் பிரெக்னண்டாம், அதனால் தந்தை மட்டும் ஜெயிலில். இனியாவது குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பு அவர்களுக்கு வரவேண்டும்.

    ReplyDelete
  24. நல்லாத்தான் போடோ புடிகிரீக

    ReplyDelete
  25. படம் எடுத்த விரல்களுக்கு ஒரு வைர மோதிரம்.பிடியுங்கோ அதிரா.விருது பெற்ற அதீஸ் மற்றும் அதீஸ் கொடுத்த விருதை வாங்கியோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. மங்குனி அமைச்சர் said...
    நல்லாத்தான் போடோ புடிகிரீக/// aa...MP நீங்க போட்டோவையோ சொன்னீங்க.... நான் என்னவோ ஏதோ எனப் பயந்திட்டேன்:).
    வரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  27. ஸாதிகா அக்கா வைர மோதிரமோ? மிக்க நன்றி... சொன்னபடி தந்திடுவீங்க இல்ல? அதுசரி என்ன படத்தை மாத்திவிட்டீங்கள்?

    ReplyDelete
  28. உண்மைதான் குழந்தை இறந்ததும் தாய் தந்தையை ஜெய்லில் போட வெளிக்கிட்டால், தாய் பிரெக்னண்டாம், அதனால் தந்தை மட்டும் ஜெயிலில். இனியாவது குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பு அவர்களுக்கு வரவேண்டும்.


    ///ரொமப் மனவருத்தம் இது போல் எத்தனி பெற்றோர்கள் இருக்கிறார்கலோ

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.