உங்கள் ஆத்மா அமைதியடையவும், நிம்மதியான உறக்கம் கொள்ளவும் ...நாம் பிரார்த்திக்கிறோம்.
இமாவின் அம்மா , ஜெபா ஆன்ரி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் எனக் கேட்டதிலிருந்து பல பழைய நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது..
2008 ஆம் ஆண்டென நினைக்கிறேன், அறுசுவைத் தளத்தில், ஜெபா எனும் பெயரோடு ஒருவர் வந்து, இடைக்கிடை ஒரு வரிக் கொமென்ட்ஸ் போடுவார், என் எழுத்துக்களை ரசிப்பார், அப்போ நான் நினைச்சேன் குட்டிப் பெண்ணாக இருப்பா என, ஜெபா ஜெபா என அழைத்தேன்... பின்னர் சில காலங்களின் பின்புதான் தெரிந்தது அவ இமாவின் அம்மா என...
அன்றிலிருந்து மனம் சங்கடமாகி விட்டது இவ்வளவு பெரிய ஒருவரையா பெயர் சொல்லி அழைத்தேன் என, பின்பு ஜெபா ஆன்ரி எனக் கூப்பிடத் தொடங்கினேன்.
அவவும் ஒரு புளொக் வைத்திருந்தா, அங்கும் நாம் போய் அவ போடுவதை எல்லம் ஊக்கப்படுத்துவோம், 2010,11 இலிருந்து அவவுக்கு முடியாமல் போய் விட்டது எழுதுவதை நிறுத்தி விட்டா என நினைக்கிறேன்...
இப்போ இந்த மாதம் இமா புதுப் போஸ்ட் போட்டபோது, முதலாவதாக ஜெபா ஆன்ரி நலமோ எனத்தான் கேட்டேன், இல்லை அதிரா:(, இனி அவ நலமாவா எனச் சொல்ல முடியாது என்றா, சொல்லி ஒரு மாதம் கூட முடியவில்லை, ஜெபா ஆன்ரி மறைந்திட்டா...
ஜனனம் என்ற ஒன்று இருப்பின் மரணம் என்பதும் இருக்கும் தானே, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனத்தைரியத்தை அனைவரும் வளர்த்துக் கொள்வோம்..
ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...
"ஆண்டாண்டு தோறும், அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ?"
எனக்கு என்ன எழுதுவது எப்படி எழுதுவது என தெரியவில்லை, மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன், என் கொம்பியூட்டர் வேறு மூட் ஓவ் ஆகி இருக்கு , அதனால எழுதுவதும் கஸ்டமாக இருக்கு, இப்பதிவை தமிழ் மணத்தில் இணைக்கிறேன், ஆனால் யாரும் இம்முறை இப்போஸ்ட்டுக்கு வோட் போட வேண்டாம்...
நன்றி,
அதிரா.
இமாவின் அம்மா , ஜெபா ஆன்ரி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் எனக் கேட்டதிலிருந்து பல பழைய நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது..
2008 ஆம் ஆண்டென நினைக்கிறேன், அறுசுவைத் தளத்தில், ஜெபா எனும் பெயரோடு ஒருவர் வந்து, இடைக்கிடை ஒரு வரிக் கொமென்ட்ஸ் போடுவார், என் எழுத்துக்களை ரசிப்பார், அப்போ நான் நினைச்சேன் குட்டிப் பெண்ணாக இருப்பா என, ஜெபா ஜெபா என அழைத்தேன்... பின்னர் சில காலங்களின் பின்புதான் தெரிந்தது அவ இமாவின் அம்மா என...
அன்றிலிருந்து மனம் சங்கடமாகி விட்டது இவ்வளவு பெரிய ஒருவரையா பெயர் சொல்லி அழைத்தேன் என, பின்பு ஜெபா ஆன்ரி எனக் கூப்பிடத் தொடங்கினேன்.
அவவும் ஒரு புளொக் வைத்திருந்தா, அங்கும் நாம் போய் அவ போடுவதை எல்லம் ஊக்கப்படுத்துவோம், 2010,11 இலிருந்து அவவுக்கு முடியாமல் போய் விட்டது எழுதுவதை நிறுத்தி விட்டா என நினைக்கிறேன்...
இப்போ இந்த மாதம் இமா புதுப் போஸ்ட் போட்டபோது, முதலாவதாக ஜெபா ஆன்ரி நலமோ எனத்தான் கேட்டேன், இல்லை அதிரா:(, இனி அவ நலமாவா எனச் சொல்ல முடியாது என்றா, சொல்லி ஒரு மாதம் கூட முடியவில்லை, ஜெபா ஆன்ரி மறைந்திட்டா...
ஜனனம் என்ற ஒன்று இருப்பின் மரணம் என்பதும் இருக்கும் தானே, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனத்தைரியத்தை அனைவரும் வளர்த்துக் கொள்வோம்..
ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...
"ஆண்டாண்டு தோறும், அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ?"
எனக்கு என்ன எழுதுவது எப்படி எழுதுவது என தெரியவில்லை, மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன், என் கொம்பியூட்டர் வேறு மூட் ஓவ் ஆகி இருக்கு , அதனால எழுதுவதும் கஸ்டமாக இருக்கு, இப்பதிவை தமிழ் மணத்தில் இணைக்கிறேன், ஆனால் யாரும் இம்முறை இப்போஸ்ட்டுக்கு வோட் போட வேண்டாம்...
நன்றி,
அதிரா.
|
Tweet |
|
|||
//ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...//
ReplyDeleteநானும் பிரார்த்திக்கிறேன்.
நட்பின் பிரிவு வருத்தம்தான்.
அன்பு கோமதி,
Deleteஉங்கள் பிரார்த்தனை நிச்சயம் கேட்கப்பட்டிருக்கிறது. நான் அந்த மன அதிர்விலிருந்து மெதுவே வெளியே வர இரண்டு வருடங்கள் எடுத்திருக்கிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு என் அன்பு நன்றி சகோதரி. இறை ஆசீர் உங்களோடும் இருக்கட்டும். என் பிரார்த்தனைகள்.
அன்னாரின் ஆன்மா இறைபதம் அடைய பிரார்த்திப்போம் !
ReplyDeleteபிரிவால் துயருறும் இமாவுக்கும் அவர்களது உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
மன்னிக்கவும் பூஸ் முதலில் வாக்குப் போட்டு விட்டுத்தான் வாசிக்காத தொடங்கினேன் !
பறவாயில்லை மேஜரே... பழக்கதோசத்துக்கு நன்றி.
Deleteஉங்கள் பிரார்த்தனைகளுக்கும் இரங்கற் செய்திக்கும் மிக்க நன்றி சீராளன். வெகு காலம் தாமதித்துப் பதில் சொல்வதையிட்டு மன்னிக்க வேண்டும். உங்களுக்கு இறை ஆசீர் நிறையக் கிடைக்க என் பிரார்த்தனைகள்.
Deleteவருத்தமான செய்தி அவரின் ஆன்மா அமைதி பெற பிரார்த்தனைகள்.
ReplyDeleteத.ம.3
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி:)..
Deleteபிராத்தனைகட்கு என் அன்பு நன்றிகள் கில்லர்ஜி. இங்கு இருந்ததை விட நிச்சயம் அமைதியாக இருப்பார். கடைசிக் காலத்தில் நிறையக் கஷ்டப்பட்டுவிட்டார், பாவம்.
Deleteஅதிராவின் கர்ச்சனையைக் கண்டுகொள்ள வேண்டாம். ;-)
உங்களுக்கு இறை ஆசீர் நிறைவாகக் கிடைக்க என் அன்புப் பிரார்த்தனைகள்.
May Her soul rest in peace .செபா ஆன்டியின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திப்போம் .இந்த கடினமான வேளையில் இறைவன் எல்லா ஆறுதலையும் இந்த துக்கத்தை தாங்க இமாவுக்கும் ஆன்ட்டியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தரவும் வேண்டுகிறேன்
ReplyDeleteஅன்பு ஏஞ்சல், அம்மாவைப் பொறுத்தவரை நிச்சயம் அமைதியான முடிவுதான். அவரது தாயார் இறந்த அதே தேதியைத் தெரிந்து போயிருக்கிறார். சில நாட்கள் கழித்தே தெரியவந்தது. எனக்கு... என்றுமே ஈடு செய்ய இயலாத இழப்பு தான். மனதை ஆற்றிக் கொள்ள முடிகிறது இப்போது.
Deleteஏஞ்சல் & குடும்பத்தாரை இறைவன் என்றும் நலமாக வைத்திருக்க என் அன்புப் பிரார்த்தனைகள்.
ஜெபா அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். இமாடீச்சர் இத்துயரில் இருந்து விடுபடவேண்டி பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteநேசன், உங்கள் பிரார்த்தனைகளுக்கு என் அன்பு நன்றிகள். இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் என்றும் அருள வேண்டி பிரார்த்திக்கிறேன்.
Deleteஅவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.
ReplyDeleteசகோதரர் ஶ்ரீராம், உங்கள் பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கு இறை ஆசீர் பூரணமாகக் கிடைக்க இறையை வேண்டுகிறேன்.
Deleteஜனனம் என்ற ஒன்று இருப்பின் மரணம் என்பதும் இருக்கும் தானே, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனத்தைரியத்தை அனைவரும் வளர்த்துக் கொள்வோம்..//
ReplyDeleteமிக மிக உண்மையான வரிகள் அதிரா.
//ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...//
எங்கள் பிரார்த்தனைகளையும் இணைத்துக் கொள்ளுங்கள்! ஆழ்ந்த அஞ்சலிகள். அக்குடும்பத்தாருக்குத் தாங்கும் சக்தியை இறைவன் நல்குவாராக.
எனக்கு என்ன எழுதுவது எப்படி எழுதுவது என தெரியவில்லை, மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன், என் கொம்பியூட்டர் வேறு மூட் ஓவ் ஆகி இருக்கு , அதனால எழுதுவதும் கஸ்டமாக இருக்கு, இப்பதிவை தமிழ் மணத்தில் இணைக்கிறேன், ஆனால் யாரும் இம்முறை இப்போஸ்ட்டுக்கு வோட் போட வேண்டாம்... //
நீங்கள் மிக அழகாக உங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உண்மையான உணர்வு.
நாங்கள் இது போன்ற அஞ்சலிப் பதிவுகளுக்கு என்றுமே ஓட்டுப் போடுவதில்லை அதிரா. அதை வழக்கமாகவே கொண்டுள்ளோம்.
மீண்டும் எங்களது அஞ்சலிகள் பிரார்த்தனைகள்.
மிக்க நன்றி துளசிதரன். அதிராவின் இந்த இடுகைக்கான ஒவ்வொருவர் பதிவும் எனக்கு ஆறுதலைக் கொடுக்கிறது. உங்கள் நலனுக்காவும் நிச்சயம் என் பிரார்த்தனைகள் இருக்கும்.
Deleteஅவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திபோம்....
ReplyDeleteமிக்க நன்றி மதுரைத்தமிழன். உங்களையும் இன்றைய என் பிரார்த்தனையின் போது நினைத்துக் கொள்வேன்.
Deleteநான் இறந்துட்டா மூட் அவுட்டாகிவிட்டது அதனால மதுரைத்தமிழனை பற்றி என்ன எழுதுவது என்று தெரியவில்லை என்று சொல்லி இப்படி சின்ன பதிவுகாக போட்டுடாதீங்க....
ReplyDeleteஎனக்கு எல்லாம் பெரிய பதிவா போடனுமாக்கும் அதனால இப்பவே எழுத ஆரம்பிச்சுடுங்க
அப்படி எழுதியதை எனக்கு காண்பிச்சுடுங்க இல்லைனா நான் இறந்தப்பிறகு நீங்க எழுதினதை என்னால் படிக்க முடியாது
கண்ணதாசன் இப்படி 'தான் இறந்த செய்தியை'ப் பரப்பி, எம்.எஸ்.விசுவனாதன் அடித்துப்பிடித்து வீட்டுக்கு வந்தபோது, உயிரோடு காட்சிகொடுத்தார். அந்த ஆசை உங்களுக்கு எதுக்கு?
Deleteபூரிக்கட்டை சுவற்றில் பட்டு கீழே விழுவதாக ஒரு கார்டூன் போட்டால் பத்தாதா?
;) இறுக்கமாக இருந்த மனதை இலகுவாக்கிற்று உங்கள் இருவரது பதிவுகளும். மிக்க நன்றி சகோதரர்களே!
Deleteஆன்மா அமைதி பெற பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteபிரார்த்தனைக்கு நன்றி சகோதரர் மொகமட். உங்களை இன்றைய என் பிரார்த்தனையின் போது நினைத்துக்கொள்வேன். இறை ஆசீர் உங்களோடு இருக்கட்டும்.
Delete>>> ஜனனம் என்ற ஒன்று இருப்பின் மரணம் என்பதும் இருக்கும் தானே, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனத்தைரியத்தை அனைவரும் வளர்த்துக் கொள்வோம்..<<<
ReplyDeleteஇறைநிழலில் ஆன்மா சாந்தியடையட்டும்..
மிக்க நன்றி சகோதரர் துரை செல்வராஜு. பலர் பிரார்த்திக்கும் போது கிடைக்கும் பலன் அதிகம். உங்கள் பிரார்த்தனைகளையும் எங்களுக்காக இணைத்துக் கொண்டீர்கள். என் மனமார்ந்த நன்றி. உங்களுக்கு இறைவனது ஆசீர் பரிபூரணமாகக் கிடைக்க என் பிரார்த்தனைகள்.
Deleteவருத்தம்... இறைவனடி அடைந்திருப்பார் நலமாய் நம்புவோம்... வேண்டிக்கொள்வோம்
ReplyDeleteநன்றி பூவிழி. இன்றைய என் பிரார்த்தனையில் உங்கள் பெயரும் நிச்சயம் இருக்கும்.
Delete
ReplyDelete///ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...///
எங்களின் பிராத்தனைகளும்.....
நன்றி அனுராதா. என் பிரார்த்தனைப் பொழுதில் உங்கள் நலனுக்காக வேண்டிக் கொள்வேன்.
Deleteஇமாவிற்கு செபாஅம்மாவின் இழப்பு ஈடு செய்யமுடியாதது. தாங்கும் சக்தியை இறைவன் அவாவுக்கும்,குடும்பத்தினருக்கும் கொடுக்கவேண்டும். செபா அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஉண்மை ப்ரியா. யாருக்குத்தான் தாயின் இழப்பு பெரிதில்லை. என் பிள்ளைகளுக்கும் என் கணவருக்கும் கூட அவர் இழப்பு இன்று வரை அதிர்ச்சியாகவே இருக்கிறது. உங்கள் அன்புப் பிரார்த்தனைகளுக்கு என் நன்றிகள் ப்ரியா. உங்கள் குடும்ப நலனுக்காக என் பிரார்த்தனைகள் என்றும் இருக்கும்.
Deleteஎனக்கு ரெம்ப பிடிச்ச அம்மா மகளை பிரிச்சு கடவுள் எடுத்துக்கொண்டது மிக வருத்தமே .கடந்த சில நாட்களாக எனக்கு பேஸ்புக் போகவே பிடிக்கவில்லை .அங்கு போவதே இம்ஸ் ம் இன்னும் வெகு சிலருடன் பேசுவதற்குத்தான்.செபாம்மா இம்ஸ் ,க்ரிஸ் அங்கிள் எல்லோருக்கும் என் அன்பு .இம்ஸ் ஐ மறுபடி பார்க்கும்போது இறுக கட்டி ஒரு முத்தம் வைப்பேன்
ReplyDelete;( என்ன செய்வது சுரேஜினி! இதுதான் வாழ்க்கை. மலர்களுடன் கூடிய உங்கள் தனிப்பட்ட இரங்கற்செய்தி எம் குடும்பத்தினரால் என்றும் மறக்கப்படாது. உங்களை எங்கும் காணக் கிடைப்பதில்லை. நலமாக இருப்பதாக நம்புகிறேன். இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உங்களைச் சந்திக்கக் கிடைக்கும். அது வரை காத்திராமல் இப்போதே... xxx ooo :-) உங்கள் குடும்பத்தினர் அனைவருக்காகவும் என் அன்புப் பிரார்த்தனைகள் என்றும் இருக்கும்.
Deleteஜெபா அன்ரி க்காக அஞ்சலி செலுத்தியும் பின்னூட்டங்கள் கொடுத்த அனைவருக்கும் அதிராவின் நன்றிகள்_()_
ReplyDeleteஇந்த போஸ்ட் இரண்டு வருடங்கள் கழித்து இன்று என் கவனத்திற்கு வந்திருக்கிறது. 25ம் தேதி தான அவரது இறுதிச் சடங்குப் பூசை நடந்தது. பிறகு அறையை ஒதுக்கிக் கொடுப்பது, கணக்கு வழக்குகளை முடிப்பது, இரவலாகக் கொடுக்கப்பட்டிருந்த ஒக்சிசன் மெஷின், வோக்கர் எல்லாம் திருப்புக் கொடுத்த வேலைகள் இருந்தது. முப்பத்தொன்று முடிந்து என் மனம் சரியாகி நான் இன்ட்ஹப் பக்கம் வரும் போது உங்கள் இந்தப் பதிவு என் கவனத்திற்கு வராத இடத்திற்குப் போயிருக்க வேண்டும். அதனால்தான் தாமதமான பதிவு அதிரா. இன்று கண்டதும் மிகவும் மனம் நெகிழ்ந்து போனேன். உங்கள் அன்புக்கு என் பிரியத்துடன் கூடிய நன்றிகள். 11ம் தேதி அம்மாவின் பிறந்தநாள் வந்து போயிற்று. கேக் இனிப்புகள் என்று எத்உவ்ம் செய்யாமல் இருப்பது பழக்கமில்லாத விடயமாக, பெரிய குறையாகத் தெரிந்தது. அதே சிந்தனையில் உறங்கியதால் போலிருக்க வேண்டும்... என் கனவில் வந்தார். நேரில் கண்டது போல் சந்தோஷமாக இருந்தது. அடுத்த முறை வருகிற போது அதிராவின் இந்தப் போஸ்ட்டைப் படிக்கச் சொல்லி அனுப்பி வைக்கிறேன். ;-)
ReplyDeleteஅழகான மலர்க்குருசு; அருமையான சின்ன இடுகை; நினைவாக த.ம ஓட்டு வேண்டாம் என்றமை என்று கவனம் எடுத்து இரங்கல் இடுகை பதிவிட்டிருக்கிறீர்கள் அதீஸ். எப்படி இத்தனை காலம் கவனியாதிருந்தேன்! எனக்கு ப்ரியா ஒரு சமயம் சுட்டிக்காட்டியதாகவும் நினைவுக்கு வருகிறது. அந்தச் சமயம் மிகவும் மனம் உடைந்திருந்தேன், பார்த்திருந்தும் படிக்கச் சிரமபட்டு தவிர்த்தேனோ தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த பலது என் நினைவில் இல்லை. என்னை மன்னிக்குமாறு மிக மனம் வருந்திக் கேட்டுக்கொள்கிறேன். ;(
ReplyDeleteசெபா இருக்கும் சமயம் அவரை எழுதத் தூண்டிய, ஊக்கம் கொடுத்த இணைய நட்புகளுள் முக்கியமானவர் நீங்கள். உங்கள் நட்பு அவருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லுவேன். சிரிக்க வைத்தீர்கள்; வயதை மறந்து குதூகலிக்க வைத்தீர்கள். உங்கள் அன்புக்கு என் நன்றி என்றும். அதிராவின் முழுக் குடும்பமும் என்றும் நன்றாக இருக்க இறைவன் ஆசீரை நிறைவாகக் கொடுக்க என் அன்புப் பிரார்த்தனைகள்.