நல்வரவு_()_


Sunday, 29 July 2012

ஒட்ட...வா மியாவ்ஸ்:)

ஆஆஆஆஆ பொயிண்ட்டுக்கு வந்தாச்சு, ஏற்கனவே எங்கினயோ சொல்லியிருக்கிறேன் எல்லோ, கனடா தலைநகர் ஒட்டாவா பார்லிமெண்டில பூனைகள் வளர்க்கிறார்கள் என. முன்பு இருந்ததை விட அவர்களுக்கு இப்போ அழகான தொடர் வீடுகள்:) கட்டிக்கொடுத்து.. அவர்களைப் பராமரிக்கவும் இருவர் இருக்கினம் அங்கு.

புறப்பட்டு விட்டோம்.... மியாவ்!!! பார்க்க:)..

சூரியக் குளியல்?:)

நோ எனக்கு வெயில் ஒத்து வராது:)

இங்கின ஒருவருமில்லை  பேச்சுத் துணைக்கு:)

இதுதான் எங்கட வசந்த மாளிகை:)


இவர்களைப் பராமரிக்க, இருவர் பொறுப்பாக இருக்கிறார்கள்!

பிக்க..பூஊஊஊ:)

பூஸ் இஸ் ஹைடிங்:))

பிராண்டிப்போடுவம்:)

அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா?:)


பூஸுக்கு ஃபிரெஞ்சும் தெரியுமாக்கும்:)).. இல்லாட்டில் ஏன் இரு பாஷையில போர்ட் வச்சிருக்கினம்:))

இது ஒட்டாவாவில் இருக்கும், மேபிள் ஸிரப் தயாரிக்கும் பக்டரி, குளிர் காலமென்பதால் பூட்டப்பட்டிருந்தது, மேபிள் மரங்களிலிருந்து பால் எடுத்துத்தான் ஸிரப் தயாரிக்கிறார்கள், கிட்டத்தட்ட றப்பர் தயாரிப்பதைப்போல.
=======================================================
குட்டி இணைப்பு:
என் பக்கத்தில் இணைந்திருக்கும் ஃபலோவேஸை, எல்லோரையும்போல நானும் கவனித்து வருகிறேன், என் பக்கம் இணைந்திருக்கும் எல்லோருக்கும்  மியாவும் நன்றி. ஆனா இதுவரையில் இல்லாமல் ஒரு “குட்டி ஏஞ்சல்”,   Flowers Crafty Room இன் OWNERஇம்முறை என் ஃபலோவராக இணைந்ததை இங்கு சொல்லித்தானே ஆகோணும்..... 


Welcome SHARON!!!!
======================================================
சரி எல்லோரும் பூஸ் படம் பார்த்து உள்ளம் மலர்ந்து போயிருப்பீங்க:)), அந்த மலர்ச்சியோடு, அதைப்பற்றி 4,5 வசனம்:) சொன்னால் என்னவாம் எனக் கேள் கிளியே:))... இப்போ என் தூதுவர் கிளியார்தான்:).
======================================================
ஊசி இணைப்பு:
 “நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இது இப்படித்தான் இருக்குமென்றால், அதற்கேற்றபடி, நாம் வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்”

 “எமது உள்ளத்தில் ஒளி இருக்குமாயின், வாக்கில் ஒளி இருக்கும், உள்ளத்து ஒளியே, கைகளை வேலை செய்யத் தூண்டுகிறது”.
=============================================

152 comments :

  1. அரண்மனையில் சொகுசு வாழ்வு வாழும் பூனைக் குட்டிகளுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. ///4,5 வசனம்:) சொன்னால் என்னவாம்///

    1.அறம் செய்ய விரும்பு
    2.ஆறுவது சினம்
    3.இயல்வது கரவேல்
    4.ஈவது விலக்கேல்
    5.உடையது விளம்பேல்
    6.ஊக்கமது கைவிடேல்
    7.எ(ன்)ண்ணெழுத்திகழேல்

    இந்த வசனம் போதுமா, இன்னுங் கொஞ்சம் வேணுமா?! :)))))

    ReplyDelete
  3. அரண்மனையயும் விட்டு வைக்கேல்லையா? ஹூம், ஒண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணுமே சொல்றதுக்கில்லை. ;))))))

    வசந்த மாளிகை யூஊஊஊஊப்பர்;) க்யூட்டாக இருக்கு. அப்பவும் மாளிகையின் கூரைமேலேதான் உறங்குவேன் என்று அடம்பிடிக்கிறார் பூஸார்! கலிகாலமப்பா!

    பூனை பராமரிப்பு படை வீரரின்:) குதிரைவால்;)))) யூஊஊஊஊப்பர்! :))))

    ஆனாலும் இப்படி ஏழெட்டு போட்டோ மட்டிலும் போட்டு ஏமாத்திப்புட்டிகளே?!!

    உங்கட தூதுவரோட சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  4. சொல்ல மறந்துட்டேன் அதிராவ்...

    நன்றி,வணக்கம்! :)))))))

    ReplyDelete
  5. பூஸாரின் அலம்பலுக்கு அளவில்லாமல் போச்சு. பிரெஞ்சு தெரியும் பூஸாரிடம் நானும் கத்துக்கனும்.

    ReplyDelete
  6. சேரில் சூரியக்குளியல் எடுக்கும் பூஸார் ரசிக்க வைக்கிறார்.

    ReplyDelete
  7. வளைந்து கொடுப்பது பற்றி தனிப்பதிவே போட்டாச்சு... (ஹேமாதான் கடிச்சு விட்டுட்டாங்க)http://alaiyallasunami.blogspot.com/2012/05/blog-post_3922.html. சிலநேரங்களில் வளைந்துதான் ஆகவேண்டும்.

    ReplyDelete
  8. பூனைக்காக கட்டின வீடு சூப்பர்
    ம் பிறந்த பூசார் போல பிறக்கணும் ஹஹஹா

    ReplyDelete
  9. பூனைக்காக வீடா?அதைபராமரிக்க ஆளா?வியப்புத்தான்.படங்களும் வர்ணனையும் பிரமாதம்.

    ReplyDelete
  10. வித்தியாசமானதும் புதியதுமான படங்கள்.......நல்லா இருக்கு

    ReplyDelete
  11. “எமது உள்ளத்தில் ஒளி இருக்குமாயின்/////////
    என்னாது.ஒளியா அப்ப கரண்ட் கட்டானா எடுத்து யூஸ் பன்னிக்கலாமா...:0

    ReplyDelete
  12. ஊசி இணைப்பு கொஞ்சம் வளைந்த இணைப்புத்தான்.......

    ReplyDelete
  13. பூனைகளும் அவையின் வீடு அதைச்சுற்றி தோடம்டதுரவு அவைக்கு எடுபிடிக்கு ஆட்கள் எண்டு ஒட்டாவா பார்லிமென்ற் பூனைகளின் ராஜபோக வாழ்க்கை பார்க்க நல்லாதானிருக்கு:)
    அவைக்கு ஒரு குறையும் இல்லை என்பதை கொழுமொழுன்னு அவையை பார்க்கவே தெரியுது. எல்லாமே சூப்பர்!

    ”குட்டிஏஞ்சல்” ஷரோனை நானும் வரவேற்கிறேன். ஏஞ்சலின் ஏஞ்சல் மேலும் மேலும் சிறக்க அன்பான நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  14. தேடி தேடி பூஸார் வீடெல்லாம் படமெடுத்து போட்டு இருக்கீங்க//

    பூஸார் வீடு அதை பராமரிக்க இரு ஆட்கள் மிக வியப்பு

    ReplyDelete
  15. //நாம் வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்// வளைஞ்சு வளைஞ்சே வளையமாப்போனோம் எல்லோ. பிறகும் எப்பிடி வளையுறதாம்? அல்லாட்டி வளைஞ்சு நெளிகிறதொ? அதை ரசிக்கேலாது;)))

    என்னையும் கவந்த எனக்கும் பிடிக்கின்ற ஆரம்பப் பாடல்.
    அனைத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி அதிரா!!!

    எல்லோருக்கும் நல்ல காலமுண்டு நேரமுண்டு வாழ்விலே
    இல்லாருக்கும் நல்ல மாற்றமுண்டு ஏற்றமுண்டு உலகிலே..........

    ReplyDelete
  16. ..Garrrrrrrrrrr


    நான் தூங்கற நேரம் பார்த்து போஸ்ட் போட்டீங்களா மியாவ்வ் அவ்வவ்
    இப்ப கொஞ்சம் பிசி .பின்னேரம் வரேன் ஓகே

    ReplyDelete
  17. அதீஸ் இப்புடி சண் கிரீம் போடாமல் சூரிய குளியல் போடாதீங்க ஸ்கின் கான்செர் வருதாம் ஸோ உங்க தோஸ்த் போல நிழல்லே இருங்கோ:))

    பூஸின் ஹைடிங் பிளேஸ் கண்டு பிடிச்சிட்டோம் இல்லே இனிமே போட்டு தாக்கிர மாட்டோம் ?? ஏற்கனவே மகி வந்து தாக்கிட்டு போய் இருக்காங்க

    ReplyDelete
  18. //இங்கின ஒருவருமில்லை பேச்சுத் துணைக்கு:)//

    இருக்குற எல்லாரையும் கர்ர்ரர்ர்ர் சொல்லி வெரட்டி இருப்பீங்க அதுதான் எல்லாரும் எஸ்ஸ்ஸ்ஸ் ;))

    //இப்போ என் தூதுவர் கிளியார்தான்:)// ப்ளு கிராஸ் இல் கம்ப்ளைன் பண்ண வேண்டியதுதான் :))

    ReplyDelete
  19. நல்ல பாடல் அதீஸ். ஊஊசி குறிப்பும் அருமை. ஷரன் உக்கு வாழ்த்துக்கள் அண்ட் வருக வருக ன்னு வரவேற்கிறோம்

    ReplyDelete
  20. அதிரா....வணக்கம்.சுகம்தானே பூஸாரும் நீங்களும் இலண்டனும் பொலீஸாரும் ஒலிம்பிக்கும்....ஹாஹாஹா !

    வளைஞ்சு குடுக்க மனம் வளையவேணும்.ஆரிட்ட,எப்ப,ஏன் எண்டு தெரிஞ்சுகொண்டு வளைஞ்சு குடுக்கிறது மட்டுமே என்னால முடியும்.எல்லா இடத்திலயும் எல்லாரிட்டயும் வளைய மாட்டேன்.இது நான் !

    ReplyDelete
  21. என்ன அதிரா...ஞானம் பிறந்தமாதிரி தத்துவமெல்லாம் சொல்லத் தொடங்கிட்டீங்கள்.பாட்டுச் சொல்லுது கதை !

    ReplyDelete
  22. குடுத்து வச்ச பூஸார்கள்.நாயாராய்,பூஸாராய் அடுத்த பிறவி எண்டால் எனக்கு ஈரோப்லதான்.சொல்லிப்போட்டன் !

    ReplyDelete
  23. பூஸுக்கு ஃபிரெஞ்சும் தெரியுமாக்கும்:))..//

    ஆஆஹ்ங் அது எங்களுக்கும் தெரியும் .ஃபீஸ் அதான் டியூஷன் பீஸ் இன்னும் கொடுக்கலன்னு CBC நியூஸ்ல சொன்னாங்க :))
    (CAT BROADCAST )ROFL:))

    ReplyDelete
  24. பொறந்தாலும் பூஸா பிறக்கணும் .ராஜ வாழ்க்கை !!!

    ReplyDelete
  25. Song selection superb Athees
    இது மறுபடியும் படப்பாடல் தானே .எங்கம்மா அடிக்கடி கேட்ட்க்கும் பாட்டு ..அப்ப அசாமிக்கு எனவே மறுபடியும் மறுபடியும் நானும் கேட்ட பார்த்த பாடல்

    ReplyDelete
  26. அந்த மலர்ச்சியோடு, அதைப்பற்றி 4,5 வசனம்:) சொன்னால் என்னவாம் //

    yes yes


    கண்டின்யூ செய்றேன் மகி விட்ட இடத்ல இருந்து

    ஏற்பது இகழ்ச்சி
    9. ஐயம் இட்டு உண்
    10. ஒப்பூரவு ஒழுகு
    11. ஓதுவது ஒழியேல்
    12. ஒளவியம் பேசேல்
    13. அ·கம் சுருக்கேல்

    ReplyDelete
  27. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
    ஆலயம் தொழுவது சாலவும் நன்று
    இல்லறம் அல்லது நல்லறம் அன்று
    ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
    உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
    ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
    எண்ணும் எழுத்தும் கண் எனத் தரும்
    ஏவா மக்கள் மூவா மருந்து
    ஐயம் புகினும் செய்வன செய்
    ஒருவனைப் பற்றி ஓரகத்திரு

    ReplyDelete
  28. எப்படியும் இதை படிச்சு முடிக்கறதுக்குள பூஸ் ஃபெய்ன்ட் :)))
    இது போதுமா இல்லை மனோகரா /வீரபாண்டியகட்டபொம்மன் வசனம் வேணுமா ஆ ஆ

    ReplyDelete
  29. hi அதிரா நலமா? விடுமுறை முடிந்ததா? எங்கு சென்றிங்க? முடிந்தால் படங்களும் அருமையான உங்க அழகிய தமிழில் இடம், பொருள், விளக்கத்தோட கொஞ்சம் எடுத்து போடலாமே. என்ன அதிர செய்விங்க இல்ல. நல்ல புள்ள.
    சரி எனக்கு இந்த பூனைக்கு நல்ல யோகம் அதை நல்ல பார்த்துக்கறத்துக்கு ஆள் வேற இருக்கு. லக்கி மியாவ்.
    இந்த காலத்தில் தாய், தகப்பனையே முதியோர் இல்லத்தில் விடுகிற நேரம். ஆனால் இங்கோ பூனைக்கு நல்ல யோகம். பாவம் வாயில்லை அதனால் தப்பித்தது.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  30. வாங்கோ அம்பாளடியாள்.. வாங்கோ..
    நீண்ட நாட்களுக்கப்புறம் வந்திருக்கிறீங்க நலம்தானே?.

    அதிலயும் முதலாவது நபர் நிங்கதான்... இன்று இருந்து விருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போகோணும் சொல்லிட்டேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  31. வாங்கோ மகி வாங்கோ..
    இது ஆத்தி சூடிதானே? எனக்கு ஆத்திசூடி விருப்பம், ஆனா ஒழுங்காச் சொல்ல வராது... மிகுதியை எங்கயோ நெட்டெல்லாம் ஓடி ஓடித்தேடி:)) அஞ்சு எழுதி முடிச்சிட்டா:)) ம்ஹூம்.. எங்கிட்டயேவா:)).

    பச்சைக்கிளியார்தான் என் தூதுவர், நீங்க அவருக்கு மஞ்சள் பெயிண்ட் அடிச்சியளோ?:) நோஓஓஓ இது அநீதி:) நான் ஒத்துக்க மாட்டேன்:)).

    ReplyDelete
  32. வணக்கம் அதிரா! பார்த்தீங்களோ பூனைக்கு கூட அரன்மனை இருக்கு இந்த தனிமரத்திற்கு அதுவும் இல்லை ஹீ ஆனால் அந்த பாதுகாப்பாளர் போட்டு இருக்கும் முடியில் மீயும் நோக்கும்!ஹீ

    ReplyDelete
  33. //ஆனாலும் இப்படி ஏழெட்டு போட்டோ மட்டிலும் போட்டு ஏமாத்திப்புட்டிகளே?!! //

    அதை ஏன் கேக்கிறீங்க மகி, சுற்றிவர, ஜெயில்போல கம்பி வேலி, அந்த இடைவெளிக்குள் கையை கொடுத்து கமெராவைப்பிடிச்சு, உள்ளுக்குள் மரங்கள், அதை நீகி, எவ்ளோ கஸ்டப்பட்டுத்தான் படங்கள் எடுத்தது, இப்ப யோசிக்கிறன் இன்னும் எடுத்திருக்கலாமோ என... சரி அடுத்தமுறை பர்ப்போம், விடமாட்டனில்ல.

    போனமுறை மகி வெப்பமரம் கேட்டீங்க, இம்முறை பூஸூஉ.... ஹையோ வரவர என் லிஸ்ட் நீழுதே சாமீஈஈஈஈ:).

    ReplyDelete
  34. கதிரையில் பூனை ஓய்யார உலா!ஹீ

    ReplyDelete
  35. Mahi said... 4
    சொல்ல மறந்துட்டேன் அதிராவ்...

    நன்றி,வணக்கம்! :)))))))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    படம் பார்த்ததும்... பச்சைக்கிளிகள் தோளோடு.. பூஸ் உறங்குது பாட்டு நினைவுக்கு வந்திட்டுது.... மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  36. மேபில் மரம் புதுமையான பெயராக இருக்கு!ம்ம் கணடா ஓசியில் பூசாரால் பார்க்கின்றேன்!

    ReplyDelete
  37. பூனைகளுக்கு எல்லாம் பால்க்கோப்பி கொடுப்பினமோ மீமீஈஈஈ ஒரு டவுட்டு!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  38. தேவையான விடயம் என்றால் வளைந்து கொடுக்கலாம் என்பது என் கருத்து!ம்ம் பூசார் எல்லாம் தேசிக்காய் சாத்திரம் கற்றபின் தத்துவம் மழையாக பொழிகின்றா!அவ்வ்கோஓஓஓஓஓஓஓஓஓஓஒ

    ReplyDelete
  39. வாங்கோ விசு.. சே..சே.. டப்பு டப்பா எழுதுறனே... வாங்கோ விச்சூஊஊஊ..

    // விச்சு said...
    பூஸாரின் அலம்பலுக்கு அளவில்லாமல் போச்சு. பிரெஞ்சு தெரியும் பூஸாரிடம் நானும் கத்துக்கனும்.//

    ஆஆஆஆஆஆஅவ்வ்வ் இப்பத்தான் என் வலையில சுறாமீன் மாட்டிடிச்சூஊஊஊஊ.. நான் ஃபிரெஞ் வகுப்பைச் சொன்னேன், வாங்கோ ஓன் லைன்ல சொல்லித்தாறன், ஆனா ஒரு கண்டிஷன், பீஸை இப்பவே அனுப்பிடோணும், அதில மட்டும் நான் வலை கவனம்:).

    ReplyDelete
  40. //விச்சு said... 7
    வளைந்து கொடுப்பது பற்றி தனிப்பதிவே போட்டாச்சு... //

    ஹையோ நான் இன்னும் எட்டிப்பார்க்கவில்லை, வருகிறேன், பின்ன வளையாட்டில், வளைக்காமல் விடமாட்டமில்ல:).. அது அந்தக்காலத்திலயே ராமன் அம்பை வளைச்சவரெல்லோ.. ஆருக்காக சீதைக்காகத்தானே.... அது இப்பவும் தொடருது....

    சரி சரி கனக்க கதைக்காதை என அம்மம்மா எனக்குச் சொல்லியிருக்கிறா, அதனால அடக்கி வாசிக்கிறன்.

    மியாவும் நன்றி விச்சு.

    ReplyDelete
  41. வாங்கோ சிவா வாங்கோ

    //Siva sankar said... 8
    பூனைக்காக கட்டின வீடு சூப்பர்
    ம் பிறந்த பூசார் போல பிறக்கணும் ஹஹ//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் என்ன சொன்னனான்? என சொன்னனான்.. குறைஞ்சது 4, 5 வரியாவது எழுதோணும் என, இது ஒருவரிப்பதில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... அஞ்சூஊஊஊஊ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.... பிங்கலரிலதான் வேணும்ம்ம்:)).

    மியாவும் நன்றி குட்டிச்சிங்கம் சிவா.

    ReplyDelete
  42. வாங்கோ ஸாதிகா அக்கா வாங்கோ...

    பூஸ் என்றால் சும்மாவோ?:)).. ஹையோ நான் மேலுள்ள பூஸாரைச் சொன்னேன்.
    மியாவும் நன்றி.

    ReplyDelete
  43. வாங்கோ சங்கவி, புதுசா வந்திருக்கிறீங்க, நல்வரவு, மிக்க சந்தோசம்.

    மிக்க நன்றி வரவுக்கு.

    ReplyDelete
  44. வாங்கோ சிட்டு வங்கோ..

    //சிட்டுக்குருவி said... 12
    “எமது உள்ளத்தில் ஒளி இருக்குமாயின்/////////
    என்னாது.ஒளியா அப்ப கரண்ட் கட்டானா எடுத்து யூஸ் பன்னிக்கலாமா..///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கரண்ட் கட்டானால் ஆளே இருக்காது, பிறகெதையாம் ஊஊஊஊஸ் பண்றது?:).

    //சிட்டுக்குருவி said... 13
    ஊசி இணைப்பு கொஞ்சம் வளைந்த இணைப்புத்தான்.//
    வளைஞ்சா இருக்கு?:) இல்லையே நேராத்தானே இருக்கு?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    சிட்டு மியாவும் நன்றி சிட்டு...வரும் பெளர்ணமி நிலவுக்கு டைக்பார் பீச்சுக்குப் போய் மரவள்ளிக்கிழங்கு துண்டு துண்டா பெரிய துண்டுகள் விற்குமெல்லோ சாப்பிட வாணாம் பார்த்துட்டு வரச் சொன்னேன்.:)))).

    ReplyDelete
  45. வாங்கோ யங்மூன் வாங்கோ...
    //அவைக்கு ஒரு குறையும் இல்லை என்பதை கொழுமொழுன்னு அவையை பார்க்கவே தெரியுது. எல்லாமே சூப்பர்!///

    ஹா..ஹா....ஹா... என்னாது கொழுமொழுவென இருந்தால் குறையிருக்காதோ?.. அவ்வ்வ்வ்வ் மக்களஸ் நோட் திஸ் பொயின்ட்:))

    ReplyDelete
  46. //
    இளமதி said... 16
    //நாம் வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்// வளைஞ்சு வளைஞ்சே வளையமாப்போனோம் எல்லோ. பிறகும் எப்பிடி வளையுறதாம்?///

    நோஓஓஓஒ உங்களுக்குப் புரியவில்லை யங்மூன்...:) காதைக் கொண்டுவாங்கோ கிட்ட, பயப்பூடாதீங்கோ எனக்கு தங்கம், வைரம் எல்லாம் அலர்ஜி... தொட மாட்டேன்ன்:)))...

    அதுவந்து வளையச்சொல்லி ஆர் சொன்னது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வளையுறமாதிரி நடிக்கோணும், ஆனா வளைஞ்சிடப்பூடா:)) ஹையோ.. எப்பூடி என் கிட்னியா:))) வெளியில சொல்லிடாதீங்கோ:)).. இப்போ வெக்கை என ஜன்னல் பூட்டாமல் படுக்கிறோம், கல்லுக்கில்லு வந்திடப்போகுது:).

    ReplyDelete
  47. //எல்லோருக்கும் நல்ல காலமுண்டு நேரமுண்டு வாழ்விலே
    இல்லாருக்கும் நல்ல மாற்றமுண்டு ஏற்றமுண்டு உலகிலே..........///

    யங்மூன், எனக்கு இப்பாட்டுத் தெரியாது, இங்கு போடும்போதுதான் தேடிய இடத்தில கிடைச்சுது, சூப்பராக இருந்துது வசனம், போட்ட நேரம் தொடங்கி பலதடவைகள் கேட்டுவிட்டேன்ன்...

    மியாவும் நன்றி யங்மூன்.

    ReplyDelete
  48. லக்ஸ்மி அக்கா வாங்கோ...

    //Lakshmi said... 17
    கொடுத்து வைத்த பூசார் .///

    லக்ஸ்மி அக்கா, இது அநீதி, அநியாயம், அக்கிரமம்.... இதை எல்லாம் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க மாடேன் பொயிங்கி எழும்புவேன்... :))

    ஒற்றைவரிப்பதில் போடப்பிடாது லக்ஸ்மி அக்கா, அது தெய்வக்குத்தமாகிடும்...:))

    நீங்க
    அஞ்சுட பக்கம்
    மகி பக்கம்
    வான்ஸ் பக்கம்
    கீரி பக்கம்
    எல்லாம் ஒற்றைவரிப்பதில், ஏன் ஒற்றைச் சொலில போட்டாலும் okay ஆனா, இங்கின மடும் போட்டால் தெய்வக்குத்தமாகிடும் சொல்லிட்டேன்:))).

    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  49. angelin said... 18
    ..Garrrrrrrrrrr


    நான் தூங்கற நேரம் பார்த்து போஸ்ட் போட்டீங்களா மியாவ்வ் அவ்வவ் //

    என்னாது மீன் தூங்குமா? என்ன இது புதுகதையாக்கிடக்கே சாமீஈஈஈஈஈஈ:))..

    காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!!!
    காலமிதைத் தவற விட்டால் கண்ணுறக்கம் ஏது?:)..
    பிபிசி ல சிட்டுவேஷன் சோங்....

    வாங்க அஞ்.. வாங்க.. பழகலாம் வாங்க!!!! மியாவும் நன்றி, நானும் பின்பு வாறேன், ச்ச்ச்சோஒ ரயெட்ட்ட்ட்ட்...

    ReplyDelete
  50. //பச்சைக்கிளியார்தான் என் தூதுவர், நீங்க அவருக்கு மஞ்சள் பெயிண்ட் அடிச்சியளோ?:)// கிக்கிக்...மஞ்சள் மை ஃபேவரிட் கலர் எல்லோ அதிரா? அதேன் மஞ்சக் கலர் அடிச்சேன்.;)

    /நோஓஓஓ இது அநீதி:) நான் ஒத்துக்க மாட்டேன்:))./ சரி,இந்தாங்கோ..உங்கட பச்சைக்கிளியார்...

    ReplyDelete
  51. அட,அட,அட! என்னே ஒரு நட்பு,அன்பு,பாசம்,பண்பு?!

    மியாவ் + கிளீஈஈஈஈ படங்கள் சில...







    ReplyDelete



  52. இதையப் பார்த்து நான் பெயின்ட்;) ஆகிட்டேன். ஆராவது என்னைக் காப்பாற்றுங்கோஓஓஓ! ;))))

    ReplyDelete


  53. வசனம் வசனம்:))))))))))
    ஊர்க்குருவி சிலநேரம் பருந்தாகலாம்
    கிளையும் கூட காகமாகலாம் :))))ஹா ஹா ஹா {ஹச்சும்)
    சே இந்த வைக்கோ காச்சல் சிரிக்க கூட விட மாட்டேங்குது கர்ர்ர்

    ReplyDelete
  54. கிளியும் கூட காகமாகலாம் :))))//
    MISTAKE CORRECTED OK

    ReplyDelete
  55. உங்க கமெண்டுக்கு பதில் போட்டிருக்கேன். கொஞ்சம் சரியான்னு பார்த்துச்சொல்லுங்க ..

    ReplyDelete
  56. நானும் ஒரு சீதைக்காகத்தான் வளைஞ்சு கொடுக்கும் பதிவைப்போட்டேன். சீதை நல்லா திட்டிவிட்ருச்சு.

    ReplyDelete
  57. நீஈஈஈஈஈஈஈஈண்ட நாட்களுக்குப் பிறகு பூஸாருக்கு இனிய காலை வணக்கம்ஸ்! கும்புடுறேனுங்கோ!:-))

    இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துங்கோ!:-))

    இன்றோடு ஜூலை மாசம் முடிய இருப்பதால் இனிய ஜூலை மாச வாழ்த்துங்கோ!:-))

    நாளை ஆகஸ்ட் மாதம் பிறக்க இருப்பதால், அட்வான்ஸ் ஆகஸ்ட் மாத வாழ்த்துங்கோ!:-))

    சரி வாழ்த்துக்கள் ஒருபக்கம் இருக்கட்டும்! டீ ஆறப் போவுது, எடுத்துக் குடியுங்கோ!:-))

    போன முறை என்னைக் காணேலை எண்டு தேடினதா, என்னோட அஸிஸ்டெண்ட்:-)) நிரூபன் சொன்னாருங்கோ! மெர்ஷி புக்குங்கோ! - தேடினதுக்கு!:-))

    அது ஏன் நான் கொஞ்ச நாளா, வெளியால தலைக் கறுப்புக் :-)) காட்டேலை எண்டா, எங்கட “மணியம் கஃபே” எரிஞ்சு போய்ச்சுது! ( ஹி ஹி ஹி ஹி இன்சூரன்ஸ்ல காசு எடுக்கலாம் எண்டு :-)) நாங்கள் தான் எரிச்சனாங்கள் ) பிறகு இன்சூரன்ஸ்ல 40 000 ஆயிரம் யூரோ எடுத்து, கடை திருத்தி........ அட அது ஒரு பெரிய கதையுங்கோ!:-))

    அதெல்லாம் இருக்கட்டும், நீங்கள் சுகமா:-)) இருக்கிறீங்களோ?

    மற்றது எனக்குப் பொம்பிளை பார்க்கச் சொல்லி, குறிப்புத் தந்து ”9 மாசம்”:-)) ஆகுது! ( குறிப்புத் தந்துதான் )இன்னும் பொம்பிளையையும் காணேலை! கலியாணத்தையும் காணேல!:-))

    இன்னும் எவ்வளவு காலம் தான் வெயிட் பண்ணோணும் எண்டு கேட்டுச் சொல் கிளியே:-))....!:-))

    ReplyDelete
  58. ஆஆஆஆஆஆ இன்னுமொண்டு சொல்ல மறந்துட்டேன்! சும்மாவே “லண்டன்” காரருக்கு :-))) ஒரு எடுப்பாம் எண்டு ஆக்கள் சொல்லுறவை! இப்ப ஒலிம்பிக் வேற நடக்குது! அதால இன்னும் “எடுப்பு”:-))) கூடியிருக்கும்! எண்டாலும் இனிய ஒலிம்பிக் வாழ்த்துக்கள்!



    ஒலிம்பிக்கில் நிறைய பதக்கங்கள் வெல்லோணும் எண்டு வாழ்த்துகிறேன்! - ஹி ஹி ஹி ஹி நான் ஃபிரான்ஸை வாழ்த்தினேன் :-)))

    ReplyDelete
  59. ஒட்ட...வா மியாவ்ஸ்:)

    போன முறையும் ஒட்ட வா எண்டு ஆரையோ:-)) கூப்பிட்ட மாதிரி கிடந்தது! இந்த முறையும் கூப்புட்டுக் கிடக்கு! ஹா ஹா ஹா ஹா எனக்கும் ஒட்டுறதுக்கு ஒரு :-)) ஆள் தேவை! - ஹா ஹா ஹா லா ஷப்பேலில் மணியம் கஃபே விளம்பர போஸ்டர் ஒட்டுறதுக்கு:-))! ஹவ் இஸ் இட்?

    ReplyDelete
  60. ஏற்கனவே எங்கினயோ சொல்லியிருக்கிறேன் எல்லோ, கனடா தலைநகர் ஒட்டாவா பார்லிமெண்டில பூனைகள் வளர்க்கிறார்கள் என. ////////

    என்ன அதுக்கிடேலை மறந்திட்டீங்களோ? எலிஸ்பெத் மஹா ராணியின் 60 ம் கலியாண விழாவில, வரவேற்புரை நிகழ்த்தேக்குள்ள நீங்கள் தானே சொன்னீங்கள்! நாங்கள் வீட்டில இருந்து டீ வி யில பார்த்தனாங்கள்!

    ReplyDelete
  61. அந்த சூரிய குளியல்:-)) எடுக்கும் பூஸார் குண்டாக:-)) இருக்கிறார்! குண்டா:-)) இருந்தால் நாளைக்கு கலியாணம், காட்சி:-)) எண்டு வரேக்குள்ள ஒரு மாதிரி எல்லோ இருக்கும்! அதால அந்த பூஸாரை “வோக்கிங்”:-)) போகச் சொல்லுங்கோ! அல்லது “ஜிம்மு”:-))க்குப் போகச் சொல்லுங்கோ - கொஞ்சம் ஸ்லிம்மா வரட்டும்!:-))

    ReplyDelete
  62. பூஸுக்கு ஃபிரெஞ்சும் தெரியுமாக்கும்:)).. இல்லாட்டில் ஏன் இரு பாஷையில போர்ட் வச்சிருக்கினம்:))///////

    ஹா ஹா ஹா அது பூஸ் படிக்கிறதுக்கு இல்லை! பொது மக்கள் படிக்கிறதுக்கு! இனி பூஸுக்கு ஃபிரெஞ்சு தெரிஞ்சுதான் என்ன பிரியோசனம்??? - ஹா ஹா ஹா அதுக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே? அதைச் சொன்னேன்!

    ReplyDelete
  63. ஆஆஹ்ங் அது எங்களுக்கும் தெரியும் .ஃபீஸ் அதான் டியூஷன் பீஸ் இன்னும் கொடுக்கலன்னு CBC நியூஸ்ல சொன்னாங்க :))
    (CAT BROADCAST )ROFL:))//////

    அக்கா, இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்கோ! தாறன் எண்டு சொல்லிப் போட்டு கடைசியில ஏமாத்திப் போட்டினம்! - ஹா ஹா ஹா நான் டியூஸன் பீஸைச் சொன்னேன்

    ReplyDelete
  64. சரி எல்லோரும் பூஸ் படம் பார்த்து உள்ளம் மலர்ந்து போயிருப்பீங்க:)), அந்த மலர்ச்சியோடு, அதைப்பற்றி 4,5 வசனம்:) சொன்னால் என்னவாம் எனக் கேள் கிளியே:))... //////

    ஹா ஹா ஹா மேல ஃபிரெண்ட்ஸும் சொல்லி இருக்கினம்! சரி நானும் என்னோட பங்குக்குச் சொல்றன். கேளுங்கோ...!

    01.நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க, கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு
    சொல்லுவாங்க,
    பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

    02. .டீ மாஸ்டர் டீ போடுரார்
    பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுரார்
    மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்
    ஹெட் மாஸ்டரால மண்டைய போட முடியுமா?

    03. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
    கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

    04. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...

    1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

    1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

    ஆனா.....
    ஆனா.......
    ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....

    இவ்வளவு வசனமும் போதுமா, பூஸாரே??

    ReplyDelete
  65. இதுக்கப்புறமும் ஆராச்சும் வசனம் கேப்பாங்க ஹாஆஅ ஹா ஹா :):))))))))
    thanks mani i was about to say few verses of adukku mozhi rhyming actor ..
    poos escaped :))

    ReplyDelete
  66. எல்லோருக்கும் வணக்கம்,
    எல்லோரும் எப்படிச் சுகமாய் இருக்கிறீங்களே?
    எல்லோருக்கும் என்னை நினைவிருக்கோ?
    என்னோட பொஸ்...மணியம் கபே ஓனர் இங்கால நிற்கிறார் என்று அறிஞ்சன்,
    உண்மையாமோ?

    ReplyDelete
  67. வணக்கம் அதிரா அக்கா, நலமா இருக்கிறீங்களா?
    பூஸார் கனடா எல்லாம் போயிருக்கா போல இருக்கு?
    மீண்டும் லண்டன் வரும் போது, சுங்க திணைக்கள அதிகாரிகள் உங்களின் bag ஐ சோதிக்கவில்லையோ?
    ஏன்னா ஒட்டாவாவில நாலு பூனையை காணவில்லையாம்?

    ReplyDelete
  68. படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு, அப்புறமா எங்கட பொஸ், அவர் தான் மணியம் கபே ஓனர் இன்சூரன்ஸில எனக்கும் பங்கு தரலாம் என்று சொல்லித் தான் தீயைப் பத்த வைக்க சொன்னவர், நானும் சும்மா ஆளே... பத்த வைச்சிட்டனில்லே...
    கனக்க செலவாகவில்லை.
    ஒரு லீட்டர் பெற்றோலும், ஒரு தீப்பெட்டில இருந்து ஒரு தீக்குச்சியும் தான் செலவாச்சு..
    லண்டனில ஏதும் உதவி தேவையென்றால் சொல்லுங்க.
    ப்ளைட் டிக்கட் புக் பண்ணினால் ஓசில வந்திறங்கி தீயை பத்த வைச்சிட மாட்டமில்லே..

    ReplyDelete
  69. படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு, அப்புறமா எங்கட பொஸ், அவர் தான் மணியம் கபே ஓனர் இன்சூரன்ஸில எனக்கும் பங்கு தரலாம் என்று சொல்லித் தான் தீயைப் பத்த வைக்க சொன்னவர், நானும் சும்மா ஆளே... பத்த வைச்சிட்டனில்லே...
    கனக்க செலவாகவில்லை.
    ஒரு லீட்டர் பெற்றோலும், ஒரு தீப்பெட்டில இருந்து ஒரு தீக்குச்சியும் தான் செலவாச்சு..
    லண்டனில ஏதும் உதவி தேவையென்றால் சொல்லுங்க.
    ப்ளைட் டிக்கட் புக் பண்ணினால் ஓசில வந்திறங்கி தீயை பத்த வைச்சிட மாட்டமில்லே..

    ReplyDelete
  70. என் பக்கத்தில் இணைந்திருக்கும் ஃபலோவேஸை, எல்லோரையும்போல நானும் கவனித்து வருகிறேன், என் பக்கம் இணைந்திருக்கும் எல்லோருக்கும் மியாவும் நன்றி.//

    ஐயோ..ஐயோ..அநீதி..அநீதி..
    நானும் இங்க இருக்கேன். என்னையை கவனிக்கலையே..
    பசியில வயிறெல்லாம் பொருமுது.
    ஒரு சூடான டீயும், ஸ்டோபரி சீஸ் கேக்கும் கொடுங்க.. அப்புறமா பேசுவோம்.

    ReplyDelete
  71. படங்கள் எல்லாம் அருமையா இருக்கு. கலக்குங்க. அப்புறமா வாறன்.

    ReplyDelete
  72. ..ஙேஙேஙேஙேஙேஙேஙேஙே... நேக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்லேஏஏஏஏஏஏஏஏஏஏ ... ஏன் எதுக்கென ஆரும் குறுக்கு குவெஷன் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    விடுங்கோ நான் கொஞ்ச நேரம் யோகா செய்து, என் தலைச்சுத்தை நேரக்கிக்கொண்டு வந்துதான், மேல இருந்து கீழ வருவன், ஐ மீன்.. பதில்களுக்கு:)...


    ReplyDelete






  73. ஹாஹாஹ்ஹாஹா! :D
    :D :D :D
    :D :D
    :D

    ReplyDelete
  74. மக்கள்ஸ்..இப்பப் பாருங்கோ, மிஸ்.ம்யாவ் என்ன வேகமாப் பாஆஆஆஆய்ஞ்சு வாறாங்க பதில் சொல்ல..- என்று!

    ReplyDelete
  75. குறுக்கு க்வெஷின் வாணாம், ஸ்ரெய்ட் க்வெஷினாவே கேக்கிறேன்..என்ன காரணம் அதிராவ்,'கையும் ஓடல்ல காலும் ஓடல்லேஏஏஏஏஏஏஏஏஏஏ ...' ?????


    ...ஙேஙேஙேஙேஙேஙேஙேஙே...be careful! தலைச்சுத்தை நேரக்கிக்கொண்டு வாறன் எண்டு தலை கீழா நடந்து வாராதீங்கோ! :))))))

    ReplyDelete
  76. ஆஆஆஆஆஆஆஆஆஆ குருவே வணக்கம் ,,,,நலமா இருக்கீங்களா ,,,,ரொம்ப நாள் ஆச்சி கும்மி அடிச்சி மீண்டும் கும்மி அடிக்கணும் ஆசையா கிடக்கு ...ஆனால் முடியுமோ தெரியலை ...படங்கள் எல்லாம் அழகு அக்கா ...

    ReplyDelete
  77. அஞ்சு அக்கா கிரி அக்கா நலமா ...ஆஆஆஆஆஆஆஆஆ ஜெய் அக்கா வ கேக்க மறந்துட்டனே ...ஜெய் அக்கா நீங்களும் நலமா ,,,,

    ReplyDelete
  78. ஆரணி அக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆ எவ்வளவு நாளாச்சி இப்படி கூப்பிடு இது தான் அயகா இருக்கு ....



    ரைமிங் உங்களையும் பாடப் படுத்துதுன்னு நினைகிணன் ,,,,பழைய காலம் மீண்டும் வருமோ ...

    ReplyDelete
  79. அதிரா நலமா? அட ஒலிம்பிக் லைட் ஏற்றுவதற்கிடையில நீங்க லைட்டை ஏற்றிட்டீங்களேஏஏஏ.மெர்சி.

    ReplyDelete
  80. படங்கள் மிக அழகாக இருக்கு அதிரா.நல்ல வெயில் போல.
    எங்குபோனாலும் பூஸாருக்கு கொண்டாட்டம்தான்.நான் ஒட்டாவா பூஸ்ஸைச்சொன்னேன்.

    ReplyDelete
  81. // “நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இது இப்படித்தான் இருக்குமென்றால், அதற்கேற்றபடி, நாம் வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்”//வளைஞ்சாச்சு.

    //“எமது உள்ளத்தில் ஒளி இருக்குமாயின், வாக்கில் ஒளி இருக்கும், உள்ளத்து ஒளியே, கைகளை வேலை செய்யத் தூண்டுகிறது”//.ரெம்ப சரியா இருக்கு....

    ReplyDelete
  82. ஜல் அக்கா வாங்கோ... தொடர்ந்து வாங்கோ பதிவுகள் போடுங்கோ... நீங்களெல்லாம் சோர்ந்துவிட்டதைப்போல ஒரு ஃபீலிங்காக இருக்கு...:(.

    மியாவும் நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  83. வாங்கோ கீரி.. எங்கின விட்டேன் என்றுகூடத் தெரியேல்லையே சாமீஈஈஈ:).

    //En Samaiyal said... 19
    அதீஸ் இப்புடி சண் கிரீம் போடாமல் சூரிய குளியல் போடாதீங்க///

    அவ்வ்வ்வ்வ் கிரீம் வாணாம் அது அலர்ஜி:))... எப்பூடித்தான் சூரியன் நம்மமேல பட்டாலும் நாமதான் கறுக்க மாட்டமே:))..

    ஏனென்ண்டால்
    “இந்தச் “சூரியன்”(பூஸ்) எண்டைக்குமே கறுக்காதாம்”...
    ஹையோ ஏன் முறைக்கீனம்?:)) நான் அப்பூடி என்ன தப்பாச் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)).

    ReplyDelete
  84. //n Samaiyal said... 20
    //இங்கின ஒருவருமில்லை பேச்சுத் துணைக்கு:)//

    இருக்குற எல்லாரையும் கர்ர்ரர்ர்ர் சொல்லி வெரட்டி இருப்பீங்க அதுதான் எல்லாரும் எஸ்ஸ்ஸ்ஸ் ;))//

    ஹா..ஹா...ஹா...:)). கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னாலும் ஆரும் கோபிக்கிறாங்க இல்ல:)).

    ReplyDelete
  85. En Samaiyal said... 20
    //
    //இப்போ என் தூதுவர் கிளியார்தான்:)// ப்ளு கிராஸ் இல் கம்ப்ளைன் பண்ண வேண்டியதுதான் :))///

    நோஓஓஓஓ... அப்பூடியெல்லம் சொல்லப்பிடாதாம் எனச், சொல் கிளியே கீரியிடம்:)).

    மியாவும் நன்றி கீரி.
    ஊ.கு:
    நாளைக்கு பிரித்தானிய நேரம் பகல் 12 மணிச்சாமத்திற்கு:) அதிராவின் அடுத்த”அதிரடி” த் தலைப்பு, வெளியாக உள்ளது என்பதனை மிகவும் தாழ்மையுடன், முன்கூடியே அறிவிச்சுக் கொள்கிறேன், இப்பவே எல்லோரும் சமைச்சு, சாப்பிட்டு ரெடியா இருங்கோஓஓஓஓஓஓஓ எதுக்கோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின்னூட்டம் போடத்தான்.:).

    ReplyDelete
  86. வாங்கோ ஹேமா.... எங்க கொஞ்சகாலம் ஆளைக் காணவே முடியேல்லையே இங்கின, ஆனா அங்கின இருக்கிறீங்கள் என, சுவரில மோதித்திரும்பிய தேசிக்காய் சொல்லிச்சுது:)).

    //
    ஹேமா said... 23
    என்ன அதிரா...ஞானம் பிறந்தமாதிரி தத்துவமெல்லாம் சொல்லத் தொடங்கிட்டீங்கள்.பாட்டுச் சொல்லுது கதை //

    ஹையோ ஹேமா எனக்கு ஞானம் பிறந்தது என் ஆறு வயசிலயாக்கும்...:))

    ReplyDelete
  87. பிரித்தானிய கோர்ட்ல ஒரு கேஸ் உங்க மேல இன்னும் முடிவுக்கு வரல்ல .அதான் அ. சாமி படம் போடாம பாட்டை மட்டும் போட்டதுக்கு :))
    எப்பூடி அதுக்குள்ளே அடுத்த போஸ்டை போடுவீங்க ...கர்ர்ரர்ர்ர்

    ReplyDelete
  88. //ஹேமா said... 24
    குடுத்து வச்ச பூஸார்கள்.நாயாராய்,பூஸாராய் அடுத்த பிறவி எண்டால் எனக்கு ஈரோப்லதான்.சொல்லிப்போட்டன் !///

    ஹா..ஹா..ஹா... இல்ல ஹேமா, பிறக்கிறது எங்க வேணுமெண்டாலும் பிறக்கலாம், ஆனா தலை எழுத்து/விதி நல்லதாக இருக்கோணும் என வேண்டுவோம். மியாவும் நன்றி ஹேமா.

    ஒரு மறுபிறப்புக் கதை நினைவுக்கு வந்துது...


    ஒரு ஊரில ஒரு தந்தை இறக்கும் தறுவாயில் இருந்தாராம், அப்போ அவருக்கு தெரிந்ததாம், தான் அடுத்த பிறவியில், ஒரு பன்றிக்கூட்டத்தில் இருக்கும் பன்றிகளுக்குள், ஒரு பன்றியின், 12 ஆவது குட்டியாகப் பிறக்கப்போகிறார் என.

    பன்றி கடைசிக் குட்டிக்குப் பால் குடுக்காதாம்(அப்படிச் சொன்னார்கள்). அப்போ இத்தந்தை சொன்னாராம், மகனே எனக்கு அந்தப் பன்றி வாழ்க்கை வேண்டாம், நான் பிறந்த அடுத்த நிமிடமே நீ என்னைக் கொன்றுவிடு, அதுதான் நீ எனக்காகச் செய்ய வேண்டும், இது என் ஆசை எனக் கேட்டாராம், அதுக்கு மகனும், அப்படியே செய்கிறேன் அப்பா, கவலைப்படாதீங்கோ எனச் சொன்னாராம்.

    சொல்லியதுபோல் தந்தை இறந்து 3ம் நாள், அதே பன்றிக் கூட்டத்தில் 12 ஆவது குட்டியாகப் பிறந்தாராம். உடனே மகன், தந்தையின் ஆசையை நிறைவேற்ற, ஒரு பொல்லோடு போனாராம் அடித்துக் கொல்ல.

    அப்போ அந்த தந்தையாகிய பன்றிக்குட்டி சொல்லியதாம், மகனே என்னைக் கொன்று விடாதே, நான் மனிதனாக இருக்கும்போதுதான்
    அப்படிச் சொன்னேன், ஆனா இங்கு பிறந்ததும், எனக்கு இந்த சேற்று வாழ்க்கை நன்கு பிடித்து விட்டது, எனவே நான் வாழப்போகிறேன் என.

    பார்த்தீங்களோ.. அந்த அந்த இடத்தில் இருக்கும் போதுதான் அது அது புரியும்.

    ReplyDelete
  89. // angelin said...
    பிரித்தானிய கோர்ட்ல ஒரு கேஸ் உங்க மேல இன்னும் முடிவுக்கு வரல்ல .அதான் அ. சாமி படம் போடாம பாட்டை மட்டும் போட்டதுக்கு :))
    எப்பூடி அதுக்குள்ளே அடுத்த போஸ்டை போடுவீங்க ...கர்ர்ரர்ர்ர்///

    ஹா...ஹா..ஹா.....
    அடாது மீன் கொத்தினாலும் விடாது தலைப்புப் போடுவோம்ம்ம்:). பூஸ் ஒன்று புறப்படுதே:)).. மின்னலாக:).

    பொறுத்தது போதும் பொயிங்கி எழு என அம்மம்மா சொல்லிப்போட்டா:))

    ReplyDelete
  90. //Thanks Aunty:D//

    Ohhhhh.. Sharon Bunny, WELCOME and thank u so much.

    ReplyDelete
  91. //angelin said... 26
    பூஸுக்கு ஃபிரெஞ்சும் தெரியுமாக்கும்:))..//

    ஆஆஹ்ங் அது எங்களுக்கும் தெரியும் .ஃபீஸ் அதான் டியூஷன் பீஸ் இன்னும் கொடுக்கலன்னு CBC நியூஸ்ல சொன்னாங்க :))
    (CAT BROADCAST )ROFL:))//

    ஹா...ஹா..ஹா.....
    அதெல்லாம் ஒரு கெட்டித்தனம்தான் அஞ்சு, ஃபீஸைக் கொடுத்திட்டால், மாஸ்டர் காணாமல் போயிடுவார், இது பீஸை வாங்குமட்டும், அவர் எனக்கு பின்னூட்டம் போட்டே ஆகோணும்:)) எப்பூடி என் கிட்னியா?:)).

    ReplyDelete
  92. angelin said... 28
    Song selection superb Athees
    இது மறுபடியும் படப்பாடல் தானே .எங்கம்மா அடிக்கடி கேட்ட்க்கும் பாட்டு ..அப்ப அசாமிக்கு எனவே மறுபடியும் மறுபடியும் நானும் கேட்ட பார்த்த பாடல்///


    ஓ மியாவும் நன்றி அஞ்சு. வாழ்க்கையில் முதேல்ல் தடவையாக இங்கின போடும்போதுதான் நான் கேட்டேன், ஏதோ ஆதிகாலப் பாட்டாக்கும், எல்லோரும் ஏசப்போகினம், இருப்பினும் பறவாயில்லை, வசனங்கள் அழகா இருக்கே என நினைத்தேன்.

    ReplyDelete
  93. angelin said... 29
    அந்த மலர்ச்சியோடு, அதைப்பற்றி 4,5 வசனம்:) சொன்னால் என்னவாம் //

    yes yes

    கண்டின்யூ செய்றேன் மகி விட்ட இடத்ல இருந்து ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. எனக்கு இதன் கருத்தும் வேணும்:).

    //உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு///

    இதில் உண்டி என்றால் வயிறோ? சிலர் சொன்னார்கள், கால் குதியாம் என, எனகேதும் புரியவில்லை, கருத்துப் புரியாவிட்டால், வசனம் புரியாது, பாட்டுக்களும் அப்படித்தானே, வசனங்கள் புரிந்தால்தான், எனக்கு அப் பாட்டையே பிடிக்கும்.

    ReplyDelete
  94. //நாளைக்கு பிரித்தானிய நேரம் பகல் 12 மணிச்சாமத்திற்கு:) // சொல்லுறத தெளிவா சொல்லுறாங்களா இந்த பூஸ். பகல் பன்னிரண்டு மணி அப்புறம் சாமம் ன்னா இரவா பகலா சொல்லுங்க பூஸ் :))

    எதுக்கும் நான் காலையில் வந்து எட்டி பார்க்கிறேன். பார்ப்போம் பூஸ் பக்கத்தில் முதல் கமெண்ட் போட முடியுமான்னு :))

    ReplyDelete
  95. //இப்பவே எல்லோரும் சமைச்சு, சாப்பிட்டு ரெடியா இருங்கோஓஓஓஓஓஓஓ //

    இப்போ மணி நைட் 11:28 pm இப்பவே சமைச்சு இப்பவே நாளைக்கும் சேர்த்து சாப்பிட்டு இருக்கேன் பூஸ் பதிவுக்காக. நாளைக்கு பன்னிரண்டு மணிக்கு ஒரு நிமிஷம் லேட் ஆனாலும் ஒரு பூஸ் இன் நிலைமை கவலைக்கிடமாகிடும் சொல்லிட்டேன் :))

    ReplyDelete
  96. வாங்கோ விஜி வாங்கோ, நீண்ட கால இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறீங்க.


    //முடிந்தால் படங்களும் அருமையான உங்க அழகிய தமிழில் இடம், பொருள், விளக்கத்தோட கொஞ்சம் எடுத்து போடலாமே.//

    ஹையோ மெதுவாக் கதையுங்கோ, ஏற்கனவே நான் படம் படமாப் போடுறேன் எனச் சொல்லி, கட்டிலுக்குக் கீழயே வேர்க்க வேர்க்க இருக்கிறேன், அது புரியாமல் நீங்க வேற:).



    ////லக்கி மியாவ்.////
    அவ்வ்வ்வ்வ்வ்வ் என்னை எங்கயோ கொண்டு போயிட்டீங்க....


    மியாவும் நன்றி விஜி.

    ReplyDelete
  97. //பொறுத்தது போதும் பொயிங்கி எழு என அம்மம்மா சொல்லிப்போட்டா:))[///

    இப்போ எல்லாரும் உங்களை தேடுறத விட்டிட்டு அம்மம்மாவ தான் தேடுறாங்க. அம்மம்மாவ முருங்கையில கைய பிடிச்சு ஏத்தி விடுங்க பத்திரமா:))

    ReplyDelete
  98. சதம் அடிச்ச கிரிக்கு பூஸ் என்ன கொடுக்க போறீங்க ????? யாரும் இல்லே சட்டு புட்டுன்னு கழுத்துல போட்டு இருக்குற ஒன்பது பவுன் செயின மேசைக்கு கீழே கொடுங்கோ பார்ப்போம். அஞ்சு கொர்ர்ர்ரர் மகி வாக்கிங் போய் இருப்பாங்க:))

    ReplyDelete
  99. En Samaiyal said...


    எதுக்கும் நான் காலையில் வந்து எட்டி பார்க்கிறேன். பார்ப்போம் பூஸ் பக்கத்தில் முதல் கமெண்ட் போட முடியுமான்னு :))///

    ஹா...ஹா..ஹா.. என் நாரதர் வேலை வேர்கவுட் ஆகும்போல இருக்கே:)) இப்பூடி அடிக்கடி சொல்லிச் சொல்லியே எல்லோரையும் டெய்லி வர வைக்கோணும்:))... எங்கிட்டயேவா, இப்படி ஏதும் சொன்னால்தானே எட்டிப் பார்க்கினம்:)).. விடமாட்டனில்ல:)). நாளைக்கும் சொல்லுவன்.. நாளைக்கென:))

    ReplyDelete
  100. En Samaiyal said...
    //பொறுத்தது போதும் பொயிங்கி எழு என அம்மம்மா சொல்லிப்போட்டா:))[///

    இப்போ எல்லாரும் உங்களை தேடுறத விட்டிட்டு அம்மம்மாவ தான் தேடுறாங்க. அம்மம்மாவ முருங்கையில கைய பிடிச்சு ஏத்தி விடுங்க பத்திரமா:))///

    ஹா...ஹா..ஹா.. கீரி.. எதுக்கும் இன்று மட்டுமாவது குல்ட்க்குள்ளயே போய்ப் படுங்க, என்னைப்போல:)).. பிறகு அம்மம்மா கையைச் சுரண்டினா, காலைச் சுரண்டினா எனக் கத்திடப்பூடா சமத்தில சொல்லிட்டேன் ஆமா:))

    ReplyDelete
  101. //இதில் உண்டி என்றால் வயிறோ?//

    உண்டி ன்னா வயிறே தான் அதீஸ். பொம்பளைங்க வாய கட்டி :)) கம்மியா சாப்பிட்டா நம்மள (என்னையும் உங்களையும் )மாதிரி :)) அயகா இருப்பாங்க ன்னு அப்பவே பெரியவங்க சொல்லி இருக்காங்க. இத படிச்சதும் கியிச்சுடுங்ங் ங்ங்:))

    ReplyDelete
  102. En Samaiyal said...
    சதம் அடிச்ச கிரிக்கு பூஸ் என்ன கொடுக்க போறீங்க ????? யாரும் இல்லே சட்டு புட்டுன்னு கழுத்துல போட்டு இருக்குற ஒன்பது பவுன் செயின மேசைக்கு கீழே கொடுங்கோ பார்ப்போம். அஞ்சு கொர்ர்ர்ரர் மகி வாக்கிங் போய் இருப்பாங்க:))///

    //சே..சே.. என்னா பெரிய 9 பவுண் பற்றிப் பேசுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), உங்களுக்காக வைர நெக்லஸ் ஓடர் பண்ணிட்டேன், நாளைக்கு மதியச்சாமம் 12:) மணிக்கு கரீட்டா, காசைக் கட்டிட்டு, எடுத்து வந்து உங்களுக்கு அஞ்சு தருவா.

    சப்போஸ் தராட்டில், உடனே ஸ்கொட்லண்ட்யாட் போலீசில புகார் பண்ணிடுங்க, நானும் பிபிசிக்கு தகவல் சொல்றேன், வைர நெக்லசோடு அஞ்சு தலைமறைவென:))..
    சரி சரி வேலைக்கு நேரமாச்சு:)) ஓடிப்போய் படுங்கோ, ரிமெம்பர் ..குல்ட்க்குள்ளே:))..

    நல்லிரவு கீரி....
    //

    ReplyDelete
  103. //நாளைக்கும் சொல்லுவன்.. நாளைக்கென:))// இது ரொம்ப வில்லத்தனம் சொல்லிட்டேன். இப்போ டைப் பண்ண ஆரம்பிச்சா கூட நாளைக்கு என்ன இன்னிக்கு நைட் பன்னிரண்டு மணிக்கே பதிவு போடலாம். நாளைக்கு மட்டும் பதிவு வரலேன்னா பன்னிரண்டு மணிக்கு கிரிசாவின் இன்னொரு முகத்த இந்த உலகம் பார்க்க வேண்டியது இருக்கும் சாக்கிரதை :))

    ReplyDelete
  104. En Samaiyal said...
    //இதில் உண்டி என்றால் வயிறோ?//

    உண்டி ன்னா வயிறே தான் அதீஸ். பொம்பளைங்க வாய கட்டி :)) கம்மியா சாப்பிட்டா நம்மள (என்னையும் உங்களையும் )மாதிரி :)) அயகா இருப்பாங்க ன்னு அப்பவே பெரியவங்க சொல்லி இருக்காங்க. இத படிச்சதும் கியிச்சுடுங்ங் ங்ங்:))////

    ஹா..ஹா..ஹா... படிச்ச உடனேயே கிழிச்சுட்டேன்ன்ன்ன் நான் ஆத்திசூடியைச் சொன்னேன்:))...

    நோ... நாம என்ன வாயைக் கட்டியா வச்சிருக்கிறோம்:)) வாய்க்கும் வயிற்றுக்கும் வஞ்சகம் செய்யப்பூடாதென அம்மம்மா சொல்றவ:))..

    ஆனாலும் “உண்டி” சுருங்கித்தான் இருக்கு, இப்படி இருக்கவும் கொடுப்பனவு வேணுமெல்லோ.... அவ்வ்வ்வ்வ் ஏன் ஊரெல்லாம் புகைக்குது... அது இண்டைக்கு வெள்ளிக்கிழமையெல்லோ.. அதுதான் சாப்பிராஆஆஆஆஆணி போடீனமாக்கும்:)).
    //

    ReplyDelete
  105. //சரி சரி வேலைக்கு நேரமாச்சு:)) ஓடிப்போய் படுங்கோ, ரிமெம்பர் ..குல்ட்க்குள்ளே:))..//

    நாளைக்கு வேலை இருந்தா நான் ஏன் இப்போ முழிச்சு இருக்கேன் ஐ ஆம் ஒன லீவ் ஓகே நல்லிரவு பூஸ்

    ReplyDelete
  106. En Samaiyal said...
    நாளைக்கு மட்டும் பதிவு வரலேன்னா பன்னிரண்டு மணிக்கு கிரிசாவின் இன்னொரு முகத்த இந்த உலகம் பார்க்க வேண்டியது இருக்கும் சாக்கிரதை :))///

    அவ்வ்வ்வ்வ்... ஹா..ஹா..ஹா... ஆப்பிழுத்த பூசாச்சே என் நிலைமை:)...

    உப்பூடியெல்லாம் மிரட்டினா, நான் மகியைப்போல, குறைமாதக் குழந்தையா:)) என் பெயிண்டிங் பூவைப் பாதியில் போட்டு.... டொடரும்... எண்டும் போடுவன் சொல்லிட்டேன்ன்ன்ன்:))...
    //

    ReplyDelete
  107. En Samaiyal said...
    //சரி சரி வேலைக்கு நேரமாச்சு:)) ஓடிப்போய் படுங்கோ, ரிமெம்பர் ..குல்ட்க்குள்ளே:))..//

    நாளைக்கு வேலை இருந்தா நான் ஏன் இப்போ முழிச்சு இருக்கேன் ஐ ஆம் ஒன லீவ் ஓகே நல்லிரவு பூஸ்////

    ஆஆஆஆ அப்போ கீரி சிக் லீவு:)).. அவ்வ்வ்வ்வ்வ்:)) நாங்க வேலை இருந்தாலும் முழிச்சிருப்பமில்ல... எங்கட ...... ..... ...... ப்போல:))

    ReplyDelete
  108. /வாங்கோ தனிமரம் நேசன்ன்ன்ன்
    //

    ///பூனைக்கு கூட அரன்மனை இருக்கு இந்த தனிமரத்திற்கு அதுவும் இல்லை///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பூடியே சொல்லிட்டிருந்தால், எப்பத்தான் தோப்பாகிறதாம், உடனே இறங்குங்கோ அதிரடியாக:)
    //

    //தனிமரம் said... 39
    மேபில் மரம் புதுமையான பெயராக இருக்கு!ம்ம் கணடா ஓசியில் பூசாரால் பார்க்கின்றேன்!///

    மேபிள் ஸ்ரப் அநேகமாக எல்லா நாடுகளுலும் கிடைக்கிறது. ஆர் சொன்னது ஓசியில் காட்டுறேன் என, எல்லாம் போட்டு முடிய, வீட்டுக்கு பில் வரும் ரெடியா இருங்கோ:))
    /

    ReplyDelete
  109. தனிமரம் said... 40
    பூனைகளுக்கு எல்லாம் பால்க்கோப்பி கொடுப்பினமோ மீமீஈஈஈ ஒரு டவுட்டு!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    ஹா..ஹா..ஹா... அவர்களுக்கு பால் ஒத்துவராது, சோ மில்க் கோப்பிதான்:)) எப்பூடி என் கிட்னியா:)
    /

    //பூசார் எல்லாம் தேசிக்காய் சாத்திரம் கற்றபின் தத்துவம் மழையாக பொழிகின்றா!///

    ஹா..ஹா..ஹா... நீங்களும் இன்னும் தேசிக்காயை மறக்கவில்லைப்போலும், அது இடைக்கிடை, தேசிக்காய் மாறிக்கீறி அங்கின புளொக்கிலயும் விழுகுதுபோல:)) அதனால “சிலரின்” புளொக்குகள் தூசு தட்டாமல் இருக்கு:))..

    மிக்க நன்றி நேசன்... மீண்டும் வாங்கோ, நாளைக்கு நடுச்சாமம் 12 மணிக்கு:)) என் புதிய தலைப்பு வெளி வருமாம்:).
    /

    ReplyDelete
  110. Mahi said... 53
    //பச்சைக்கிளியார்தான் என் தூதுவர், நீங்க அவருக்கு மஞ்சள் பெயிண்ட் அடிச்சியளோ?:)// கிக்கிக்...மஞ்சள் மை ஃபேவரிட் கலர் எல்லோ அதிரா? அதேன் மஞ்சக் கலர் அடிச்சேன்.;)

    /நோஓஓஓ இது அநீதி:) நான் ஒத்துக்க மாட்டேன்:))./ சரி,இந்தாங்கோ..உங்கட பச்சைக்கிளியார்...///


    ரொம்ப டாங்ஸூ மகி....

    அந்த, பூஸ் ப.கிளிப் படங்கள் முன்பு எனக்கும் ஈமெயிலில் வந்தன. எங்கட குருவுக்குக்கூட தூதுவர் கிளியாரேதான்ன்..பபபச்சைக்கிளியார்:)

    ReplyDelete
  111. ஆஆஆ விச்சு, பதிலில் கொஞ்சம் தவறிருக்கிறது:)) கர்ர்:)) குழம்பிடாதீங்க, நான் இப்பூடித்தான்:).

    //விச்சு said... 59
    நானும் ஒரு சீதைக்காகத்தான் வளைஞ்சு கொடுக்கும் பதிவைப்போட்டேன். சீதை நல்லா திட்டிவிட்ருச்சு.///

    ஹா..ஹா..ஹா... அது நீங்க வளைஞ்சு கொடுத்தது போதாதாக்கும்:)).. எங்கடபாலாரைக் குறைய விடுவமோ நாங்க:).
    /

    ReplyDelete
  112. அவ்வ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சூ...:).

    ஆஆஆஆ எங்கேயோ கேட்ட
    அதே குரல்ல்ல்....
    அதே கண்ணாடி.....
    அதே.. கும்பிடுதல்...
    அதே ரீஈஈஈஈஈ...
    ஆஆஆஆ.. சந்தேகமே இல்லை, இவர் அவரேதான்ன்... வாங்கோ வாங்கோ... கண்பட்டுப் போச்சுதாக்கும் என நினைச்சேன்ன்.. படேல்லை:))

    உந்தக்காவுக்கும் பொன் மெர்க்ரடி:))
    /

    ///சரி வாழ்த்துக்கள் ஒருபக்கம் இருக்கட்டும்! டீ ஆறப் போவுது, எடுத்துக் குடியுங்கோ!:-)) ///

    நோஓஓஓஓஓ மீக்கு உந்த ரீ வாணாம், இண்டைக்கு செவ்வாய்க்கிழமையும் அதுவுமா, உதைப் பார்த்தால் ஆட்டுக்கால் பாயா போல இருக்கே சாமீஈஈஈஈ... சத்தியமா உப்பூடி ரீயை நான் இதுவரை கண்டதில்லை, இது புஸ்பா அங்கிள் கடைக் கற்பூரத்தின் மேல சத்தியம்.. எங்கிட்டயேவா:))
    /

    //போன முறை என்னைக் காணேலை எண்டு தேடினதா, என்னோட அஸிஸ்டெண்ட்:-)) நிரூபன் சொன்னாருங்கோ! மெர்ஷி புக்குங்கோ! - தேடினதுக்கு!:-))///

    என்னாது நான் தேடியதை மட்டுமா சொன்னார் அவர்?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ என் வைர மோதிரக்கதையையும் கேட்கச் சொன்னனே?:)) அதை விட்டுவிட்டாரோ? வரட்டும் அவர்:))... பொறுங்கோ எஃப் எம் முக்குள்ளாலயே ஆளைப் பிடிச்சுக் கேட்கிறேன்ன்ன் எங்கிட்டயேவா?:))
    /

    ReplyDelete
  113. மாத்தியோசி - மணி said
    //அதெல்லாம் இருக்கட்டும், நீங்கள் சுகமா:-)) இருக்கிறீங்களோ? ///

    அவ்வ்வ்வ்வ்வ்:) அஞ்சு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))) இது ஆ.கண்ணீர் துடைக்க:)) பிங் கலரில ஒன்று போதும்:)).. லேட்டா வந்தாலும் எவ்ளோ ஒழுங்கா பாடமாக்கி வந்து கேட்கிறார் பருங்கோ:))...
    /

    //மற்றது எனக்குப் பொம்பிளை பார்க்கச் சொல்லி, குறிப்புத் தந்து ”9 மாசம்”:-)) ஆகுது! ( குறிப்புத் தந்துதான் )இன்னும் பொம்பிளையையும் காணேலை! கலியாணத்தையும் காணேல!:-))///

    என்னதூஊஊஊ.... கொஞ்சம் இருங்கோ மக்கள்ஸ்ஸ்.. நான் அவசரமா ஒருக்கால் ஆவரங்கால்ப் பொம்பிளையிடம் போட்டு வாறன்:))..

    ஓ நீங்க குறிப்புத் தந்ததைச் சொல்றீங்களோ... நேக்குக் கையும் ஓடல்ல, ரைட் லெக்கும் ஆடல்ல:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பூஜை ஆகுமுன்னம் சன்னதம் கொள்ளப்பூடாதென அம்மம்மா சொல்லுறவ.

    முதல்ல உந்தக் கண்ணாடியைக் கழட்டிப்போடு ஒரு ஒழுங்கான படம் எடுத்துத் தாங்கோ...

    ஆவணிக்குப் படம் தந்தால்,
    ஐப்பசியில் பந்தல் போட்டு, கார்த்திகையில பொன்னுருக்கி, தையில மேளம் கொட்டிடலாம்ம்... ..இது எப்பூடி?:))
    /

    ReplyDelete
  114. மாத்தியோசி - மணி said... 61
    ஆஆஆஆஆஆ இன்னுமொண்டு சொல்ல மறந்துட்டேன்! சும்மாவே “லண்டன்” காரருக்கு :-))) ஒரு எடுப்பாம் எண்டு ஆக்கள் சொல்லுறவை!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே... கீழ தள்ளிப்போடுவினம்:), ஐ மீன் ஒலிம்பிக்கைச் சொன்னேன்ன்ன்
    /

    ///ஒலிம்பிக்கில் நிறைய பதக்கங்கள் வெல்லோணும் எண்டு வாழ்த்துகிறேன்! - ஹி ஹி ஹி ஹி நான் ஃபிரான்ஸை வாழ்த்தினேன் :-)))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளருமாம், என அம்மம்மா சொல்றவ:)) நான் வாழ்த்துக்குச் சொன்னேன்ன்ன்...
    -----------------------
    ஊரார் பிள்ளையை “ஊட்டி” வளர்த்தால், தன் பிள்ளையை என்ன, “கோடைக்கானலோ” வளர்க்கும்... என ஒரு நகைச்சுவை படித்தேன். அது நேஏஏஏஏஏஏஏனவுக்கு வந்திடுச்சி:)
    /

    ReplyDelete
  115. மாத்தியோசி - மணி said... 62
    ஒட்ட...வா மியாவ்ஸ்:)

    போன முறையும் ஒட்ட வா எண்டு ஆரையோ:-)) கூப்பிட்ட மாதிரி கிடந்தது! இந்த முறையும் கூப்புட்டுக் கிடக்கு!///

    ஆஆஆஆஆஆஆ எல்லாமே நினைவில இருக்கு... அப்போ என் கிட்னியில் கொஞ்சம் காணமல் போனமாதிரி ஒரு ஃபீலிங்சா இருந்துது, அது இப்போ எங்கின இருக்கென கன்ஃபோம் ஆச்சூஊஊஊ:))... ஹையோ என் கிட்னி.... கிளியே யெல்ப் மீ பிளீஸ்ஸ்ஸ்:))
    /

    ReplyDelete
  116. மாத்தியோசி - மணி said... 63

    என்ன அதுக்கிடேலை மறந்திட்டீங்களோ? எலிஸ்பெத் மஹா ராணியின் 60 ம் கலியாண விழாவில, வரவேற்புரை நிகழ்த்தேக்குள்ள நீங்கள் தானே சொன்னீங்கள்! நாங்கள் வீட்டில இருந்து டீ வி யில பார்த்தனாங்கள்!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் ஜனாதிபதியானால்.... முதல்ல உந்த ஓசியில ரீவி பார்க்கிற:)) ரீவிக்குத் தடை விதிப்பேன்ன்ன்:).. வேற எதுக்கெல்லாம் விதிப்பீங்க என குறொஸ் குவெஷ்சன் கேட்கப்பூடா:)... முதல்ல நான் ஜனாதிபதி ஆகோணும்:).
    /

    ReplyDelete
  117. மாத்தியோசி - மணி said... 64
    அந்த சூரிய குளியல்:-)) எடுக்கும் பூஸார் குண்டாக:-)) இருக்கிறார்! குண்டா:-)) இருந்தால் நாளைக்கு கலியாணம், காட்சி:-)) எண்டு வரேக்குள்ள ஒரு மாதிரி எல்லோ இருக்கும்!

    அச்சச்சோ... இந்தக் கொடுமையைக் கேட்க ஆருமே இல்லையோ?:)) ஆடு நனையுதென ஓநாய் அழுத கதையாவெல்லோ இருக்கு சாமீ:))

    எங்கட யங்மூன் மேல சொல்லிட்டா... கொழுகொழு, குழுகுழு என இருந்தால், குறை ஏதும் இருக்காதாமே.. அவ்வ்வ்வ்வ்வ்:)).. பூஸ் குண்டா இருந்தால்தான் பார்க்க அழகூஊஊஊஊ.. அதனாலதான்ன்.. அந்தப் பூஸுக்கெல்லாம் வணாம் வாணாம் எனச் சொல்லச் சொல்ல “சீரியல்” கொடுக்கினம்..:).
    /

    ReplyDelete
  118. மாத்தியோசி - மணி said... 65
    இனி பூஸுக்கு ஃபிரெஞ்சு தெரிஞ்சுதான் என்ன பிரியோசனம்??? -///

    புக்குவா?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... உப்பூடிச் சொல்லி டியூஷன் வகுப்பைக் கட் பண்ணிட்டு, அங்கின வதனப் புத்தகத்துக்குள், முழுநேரமும் நுழையலாம் எனச் சிலர் யோசிக்கினமாக்கும்:), உது சரிப்பட்டு வராதெனச் சொல் கிளியே...:)))..

    கீழ போட்ட தேசிக்காயைத் திரும்பவும் எடுக்க வைக்கப்பூடாதெனவும் சொல்லிடுங்க கிளியே:).

    ReplyDelete
  119. மாத்தியோசி - மணி said... 67

    ஹா ஹா ஹா மேல ஃபிரெண்ட்ஸும் சொல்லி இருக்கினம்! சரி நானும் என்னோட பங்குக்குச் சொல்றன். கேளுங்கோ...!///

    நோஓஓஓஓ.. இது அநீதி, அழிச்சாட்டியம்(அப்பூடியெண்டால் என்னவெனக் கேட்டிடப்பூடா, சத்தியமா எனக்குத் தெரியாது:)), செல்லாது, நான் ஹை கோர்ட்டுக்குப் போறேன்ன்ன்ன்.. இது கொப்பி பேஸ்ட் பதிவு.... சொந்தச் சரக்காக இருக்கோணும்... நான் 4,5 வசனத்துக்குச் சொன்னேன்:)).. எங்கிட்டயேவா:)) விடமாட்டமில்ல:).
    /

    ReplyDelete
  120. மாத்தியோசி - மணி said... 67

    இவ்வளவு வசனமும் போதுமா, பூஸாரே??///

    மியாவும் நன்றி, புல்லாஆஆஆஆஆ அரிச்சுட்டேன்ன்ன் பின்னூட்டம் பார்த்து, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    அடுத்தமுறை, முதலாவது ஆளாக வாங்கோ.. ஹையோ நான் ஆயாவுக்காகச் சொல்லேலை:))))... எசி பூட்டின டக்‌ஷி இன்னமும் இருக்கெல்லோ?:)) இல்ல ச்ச்சும்மதான் கேட்டேன்:))..
    /

    உஸ்ஸ்ஸ்ஸ் இன்று எப்படியாவது பின்னூட்டங்களுக்குப் பதில் போட்டே தீருவதெனக் கங்கணம் கட்டி இருந்தும், முழுவதையும் முடிக்க முடியேல்லை, மீதிக்கு நாளைக்கு வாறேன்ன்ன்.. பொறுத்தருளோணும் எல்லோரும், ரொம்ப லேட்டாகிட்டுது....

    அனைவருக்கும் நல்லிரவு, பொன் நுய்ய்ய்ய்ய்ய்.. இனிய இனிய கனவுகள்!!!!


    /

    ReplyDelete
  121. /உப்பூடியெல்லாம் மிரட்டினா, நான் மகியைப்போல, குறைமாதக் குழந்தையா:)) என் பெயிண்டிங் பூவைப் பாதியில் போட்டு.... டொடரும்... எண்டும் போடுவன் சொல்லிட்டேன்ன்ன்ன்:))...
    ////////



    ஊசிக்குறிப்பு: பயப்புடாதீங்க அதிராவ்..இவரும் பூனைக் குடும்பம்தாஆஆஆஆஆஆஆஆனாம்! ;) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  122. பூனைப் படங்கள், இடுகை, 2வது மற்றும் இதன் நேர் மேலே இருக்கும் கருத்து அனைத்தையும் ரசித்தேன். ;)) சூப்பர் அதீஸ்.

    குட்டி ஏஞ்சலுக்கு என் வாழ்த்துக்கள்.

    சூரியக்குளியல் பூசார் அழகாக இருக்கிறார்.

    ReplyDelete
  123. Lovely blog and love loved ur creativity... Glad to follow u as well.....
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  124. காலை வணக்கம் அதீஸ். இன்னும் கரீக்டா ரெண்டு மணி நேரம் இருக்கு பன்னிரண்டு மணிக்கு. பதிவு மட்டும் வரலே........அப்புறம் நடக்கும் அசம்பாவிதத்துக்கு நான் பொறுப்பு இல்லே சொல்லிட்டேன் :))

    ReplyDelete
  125. கலை இப்போதான் உங்க கமெண்ட் பார்த்தேன். நலமா இருக்கேன் உங்க புண்ணியத்துல. நீங்க இப்பெல்லாம் ரெம்ப பிசி போல இருக்கு ??? அப்புடி என்ன பண்ணி பிசியா இருக்கீங்கன்னு சொல்ல சொல்லி பூஸ் கேட்டாங்க :))

    ReplyDelete
  126. En Samaiyal said... 127
    காலை வணக்கம் அதீஸ். இன்னும் கரீக்டா ரெண்டு மணி நேரம் இருக்கு பன்னிரண்டு மணிக்கு. பதிவு மட்டும் வரலே........அப்புறம் நடக்கும் அசம்பாவிதத்துக்கு நான் பொறுப்பு இல்லே சொல்லிட்டேன் :))


    ReplyDelete
  127. watch out Giri miyaav is up to mischief LOL:)))


    ReplyDelete


  128. இப்புடி எல்லாம் சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க முடியாது பூஸ். நான் ரொம்ம்மம்ம்ம்ப கோவமா இருக்கேன் ஆமா :)) நான் முதல் கமெண்ட் போட கூடாதுன்னே பூஸ் சதி செய்யுறாங்க :))

    ReplyDelete
  129. முதல்ல இந்த தலை கீழ் ஆசனத்தில் இருந்து இறங்குங்கோ பூஸ். ஒழுங்கா பதிவ டைப் பண்ணி இன்னிக்கு சாமம் பன்னிரண்டு மணிக்கு போடுங்கோ பார்ப்போம். நான் நாளைக்கும் லீவு தான் இனிமே யாராச்சும் கீரி சிக் லீவ் ன்னு சவுண்டு கொடுப்பீங்க ????என்கிட்டேயேவா இது எப்படி இருக்கு பூஸ் டயலாக் பூசுக்கே :))

    ReplyDelete
  130. இப்புடி டைப் பண்ணி எப்பத்தான் பதிவு வர போகுதோ ஆண்டவா ????

    ReplyDelete



  131. அப்புடித்தான் பூஸ் நல்லா பார்த்து பதிவ வெளியிடுங்கோ.

    ReplyDelete
  132. அஞ்சு பூஸ் என்ன mischief பண்ண ட்ரை பண்ணாலும் வா.... ஒ.... நறுக்கிட மாட்டோம் நம்ம எல்லாரும் ஸோ பாவம் அவங்க இந்த மாதிரி எல்லாம் ட்ரை பண்ண மாட்டாங்க தலை கீழா நின்னு டைப் பண்ணுறாங்களாம்:))

    ReplyDelete
  133. வாங்கோ நிரூபன்... காணாமல் போன நிரூபன் இப்போ வந்திருக்கிறார்ர்.. புரட்சியாக... மீண்டும் நல்வரவு.

    //என்னோட பொஸ்...மணியம் கபே ஓனர் இங்கால நிற்கிறார் என்று அறிஞ்சன்,///

    என்னாது, நீங்க புரட்சி எஃப் எம் க்கு பொஸ், உங்களுக்கு மணியம் கபே ஓனர் பொஸ்ஸோ?

    ஹையோ.. என்ன இது உணவுச் சங்கிலி போல நீழுதே? அவருக்கு ஆர் பொஸ்ஸோ?:))


    //ஏன்னா ஒட்டாவாவில நாலு பூனையை காணவில்லையாம்?///


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீண்ட நாட்களுக்குப் பின் வந்தால், அன்பா, பண்பா.., சாப்பிட்டீங்களோ? நெக்டோ குடிச்சீங்களோ? மட்டின் கொத்து சாப்பிட்டீங்களோ? அ.கோ.முட்டை சாப்பிட்டீங்களோ? எண்டு கேட்கிறதை விட்டுப்போட்டுப், பூஸாரைக் காணவில்லையாம் கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    ReplyDelete
  134. நிரூபன் said... 71
    படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு, அப்புறமா எங்கட பொஸ், அவர் தான் மணியம் கபே ஓனர் இன்சூரன்ஸில எனக்கும் பங்கு தரலாம் என்று சொல்லித் தான் தீயைப் பத்த வைக்க சொன்னவர், நானும் சும்மா ஆளே... பத்த வைச்சிட்டனில்லே...///

    பத்த வச்சிங்க சரி:), பங்கு கிடைச்சுதோ?:) உடனேயே மாத்தி யோசிச்சிருப்பாரே:))..

    அதுசரி கடை மட்டும்தானே எரிஞ்சது?:) ஏனெண்டால், அந்தக் கண்ணாடி சாடையா நெளிஞ்சமாதிரிக் கிடக்கு, அதுதான் எனக்கொரு டவுட், ஏனெண்டால் ஆவரங்கால்ல எல்லோ ஒரு பொம்பிளை முற்றாக்கியிருக்கிறன், அதுக்குக் கொடுக்க மடம் கேட்டால் தாறன் தாறன் எனச் சொல்றாரே தவிர தாறாரில்லை:)). சரி அதி விடுங்கோ...:)).

    என்னது மினக்கெட்டு ரிக்கெட் போட்டுக்கொண்டு வந்து, லண்டனில பத்த வைக்கப்போறீங்களோ?:)... ஏன் “லண்டன் கேழ்வரகுக் கூழ்” குடிக்க ஆசையாக இருக்கோ?:)).. என்னால அடிக்கடி ஒரேஞ், ஆப்பிள் எல்லாம் வாங்கிக்கொண்டு பார்க்க வரமுடியாது சொல்லிட்டன்:)).. எங்க ஏன் எதுக்கு என குறுக்கு குவெஷ்சன் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  135. நிரூபன் said... 131
    Akka, I'm. Still waiting for your response.

    நிரூபன், உங்களின் புரட்சி எஃப் எம் இடைக்கிடை கேட்கிறனான். நன்றாகப் போகுது, ஆரம்பம்தானே, போகப்போக நிகழ்ச்சிகளைக் கூட்டினால், இன்னும் நன்றாக இருக்கும்.

    அறிவிப்பாளர் ராகவன் நன்றாக நடத்துகிறார், அவருக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்கோ.

    இதைப் பற்றித்தானே கேட்கிறீங்க, மிகுதி அங்கும் அனுப்பியிருக்கிறேன்.

    எமக்குத் தெரிந்தோரின் பெயர் சொல்லி,அவர்கள் கேட்ட பாடல் என, ஒலிபரப்பாகும்போது ஒருவித சந்தோசம் எல்லை மீறுது.

    மிக்க நன்றி நிரூபன்... உங்கள் வானொலி மென்மேலும் சிறக்க எம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  136. மகி, உங்கட படங்கள் பார்த்து அந்த இண்டைக்கு லெஃப்ட்டு, நாளைக்கு ரைட்டு எனச் சொல்லிக்கொண்டு எக்ஸசைஸ் செய்யும் பூஸார்போல:)) லெஃப்ட்டூ ரைட்டூ என உருண்டு பிரண்டு சிரிக்கிறேன், ஆனா உடனுக்குடன் பதில் போடத்தான் நேரம் வரவில்லை..

    ReplyDelete
  137. வாங்கோ கலை வாங்கோ...

    நேற்றுப்போல் இன்று இல்லை..
    இன்று போல் நாளை இருக்காது...
    இதுதான் இயற்கையின் நியதி...

    அதனால கிடைக்கும் நேரத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக, ஒன்றாக, ஒற்றுமையாகப் பேசி மகிழ்வோம்ம்...

    எங்கோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருது...

    நாளைக்கும்
    காத்து வீசும்..
    பூக்கள் மலரும்..
    ஆனா
    நாமிருக்க மாட்டோம்..

    அதுபோல, நாளை நம் கையில் இல்லை, ஆனா இன்று என்பது இருக்கிறதே.. இதை சந்தோசமாக அனுபவிப்போம்ம்...

    என்ன தத்துவம் பேசுகிறேனோ?:) அது தானா வருது:))..

    மியாவும் நன்றி கலை.. நேரமுள்ளபோது வாங்கோ பழகலாம்.



    ReplyDelete
  138. வாங்கோ வாங்கோ புது வலைப்பூ ஓனர்:) பிரியசகியின் உரிமையளர்... அம்முலு...:)..

    இனிமேல் நீங்களும் மனதுக்குப் பிடித்தவறை எல்லாம் எழுதிக் கலக்குங்கோ... பின்னூட்டங்கள் அதிகமில்லையே என எண்ணி வருந்திடக்கூடாது...... இன்று போல் நாளை இருக்காதென்பதை மறக்க வேண்டாம்.

    மிக்க நன்றி அம்முலு.

    ReplyDelete
  139. Mahi said... 124
    /ஊசிக்குறிப்பு: பயப்புடாதீங்க அதிராவ்..இவரும் பூனைக் குடும்பம்தாஆஆஆஆஆஆஆஆனாம்! ;) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!////

    அவ்வ்வ்வ்வ்:)) இல்ல இல்ல உவர் பூனைக் குடும்பம் இல்லை:) உது ஆற்றையோ கட்டுக்கதை:)

    ReplyDelete
  140. வாங்கோ இமா.... மியாவும் நன்றி.

    ReplyDelete
  141. Sangeetha Nambi said... 126
    Lovely blog and love loved ur creativity... Glad to follow u as well.....
    http://recipe-excavator.blogspot.com

    வாங்கோ சங்கீதா, புதிதா வந்திருக்கிறீங்க, நல்வரவு மிக்க மகிழ்ச்சி... மியாவும் நன்றி.

    ReplyDelete
  142. நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!!!!!

    நாளைக்கு சரியாக பகல் 12 மணிச்சாமத்திற்கு, அதிராவின் புதிய தலைப்பு வெளிவர இருக்கிறது, அதனால அனைவரும், இப்பவே உண்டு, உறங்கி ரெடியாகியிருக்கும்படி, மிகவும் பணிவன்போடு, தாழ்மையுடன் வேண்டப்படுகிறீர்கள்:)..

    அப்பத்தானே ஓடி வந்து பின்னூட்டம் போடுவீங்கள்!!!:))..

    மியாவும் நன்றி...
    மியவும் நன்றி....
    மியாவும் நன்றி...

    அனைவருக்கும் நல்லிரவு, கலர்க்கனவுகள்.. பொன் நுய்ய்ய்.

    ஊ.கு:
    கீரி..கீரி.... நான் சொல்றதைத்தன் செய்வன், செய்வதைத்தான் சொல்லுவன்:)) நீங்களும் “நாளைக்கு” சிக் லீவில நின்று, பின்னூட்டம் போடும்படி வேண்டப்படுகிறீங்கள்....

    ReplyDelete
  143. அக்கா...பதில் வழங்கியதற்கு ரொம்ப நன்றி
    வெள்ளிக்கிழமை ஐ ஆம் பிசி.
    சனிக்கிழமை சந்திக்கிறேன்.

    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    அறிவிப்பாளர் ராகவனிடம் நீங்கள் சொல்லிய, தகவலையும், வாழ்த்தையும் பரிமாறிக் கொள்கின்றேன்

    ReplyDelete
  144. ஆ! பின்நூட்டப்பெட்டி வந்திட்டுது!!!

    அதிரா சுகமா இருக்கிறீங்களோ???
    இங்கை என்னென்னவோ எல்லாம் நடக்குது. உங்களின் ப்ளொக்கிலை நடக்கிற மாற்றங்களைச் சொன்னேன்.
    அதுதான் என்ன ஆச்செண்டு கேட்டேன்.
    நீங்க ஓய்வா இருந்து கொஞ்சம் றெஸ்ட் எடுக்கிறதுக்காக இப்பிடி எண்டால் அதுவும் சரிதான். மற்றும்படி உள உடல் நலம் நல்லா இருக்குதுதானே? அப்பிடிதான் நம்புறேன். இருக்கோணும் எண்டு வேண்டுறன்.
    விரைவில் வந்து தொடருங்கோ:)

    ReplyDelete
  145. // இளமதி said...
    ஆ! பின்நூட்டப்பெட்டி வந்திட்டுது!!!//

    ஆவ்வ்வ்வ்வ்.. athu, அஞ்சு தேம்ஸ்க்குப் போய்ச் சுழியோடித் தேடி எடுத்து வந்திட்டா:)...

    ~நானே நானா.... யாரோ தானா... மெல்ல மெல்ல மாறினேனா....~.. அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஉ

    ReplyDelete
  146. //அஞ்சு தேம்ஸ்க்குப் போய்ச் சுழியோடித் தேடி எடுத்து வந்திட்டா//
    அஞ்சு எண்டா அஞ்சுதேன்;)
    மிக்க நன்றி அஞ்சு!!!
    சுழியோடி தேடி எடுத்து களைச்சிருப்பீங்க. ஒரு கிளாஸ் மோர் குடிச்சிட்டு வாங்க. நல்ல தெம்பா வெய்யிலுக்கு இதமா இருக்கும்.
    வந்து அதிராவை என்னான்னு 4 கேய்வி கேளுங்கோ;)

    ReplyDelete
  147. ஓம்.. ஓம்... நல்லாச் சீனி போட்டுக் குடிக்கச் சொல்லுங்கோ யங்மூன்.. அப்பத்தான் களைப்பில்லாமல் இருக்கும்..:)

    ReplyDelete
  148. “எமது உள்ளத்தில் ஒளி இருக்குமாயின், வாக்கில் ஒளி இருக்கும், உள்ளத்து ஒளியே, கைகளை வேலை செய்யத் தூண்டுகிறது”.

    ஒளி நிறைந்த பகிர்வுகள் பாராட்டுக்கள்..

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.