நல்வரவு_()_


Saturday 20 October 2012

என்னா பெரிசூஊஊ!!!

இதன் நிறை 2.6 கிலோ:)
ஓடிவாங்கோ.. ஓடிவாங்கோ... இது எங்கட பக்கமாக்கும்:).. ஐ மீன் சமையல் பக்கம்.. அதுக்காக எதிர்ப் பாலார் வராமல் விடலாமோ? நோஓஓஓஒ.. இப்போ முக்கியமா வெளி நாடுகளில்.. பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் கிச்சினில் நிற்கிறார்களாம்:).. அதனால பெண்களை விட,  எம் எதிர்ப்பாலார் தானே முக்கியமா இப்பகுதியைப் படிக்கோணும்:)...
ஆனாலும் பாருங்கோ.. இதில அஞ்சு, கீரி, நான் எல்லாம் நல்ல அடக்கொடுக்கமாக:) எந்நேரமும் கிச்சினில் நின்று எல்லாம் சமைப்போம்ம்:).. ஆத்துக்காரருக்கு கஸ்டம் கொடுப்பதில்லை:), ஆனா எல்லோரும் அப்பூடியா?:))... ஹையோ கொஞ்சம் இருங்க.. அமெரிக்காவில, ஜேர்மனியில பாத்திரம் நொருங்கும் சத்தம் கேட்குதே ஜாமீ:))...

நில்லுங்க.. மடிரொப்:) ஐத் தூக்கிக் கொண்டு கட்டிலுக்குக் கீழ போய் சேஃப்ட்டியா இருந்து ரைப் பண்ணுறேன்ன்.. எங்கிட்டயேவா?:)).. சொல்ல வந்ததைச் சொல்லாமல் விடமாட்டமில்ல:))..

சொல்லிப் போட்டு அடி வாங்கினாலும் சரிதான்:).. இந்த இடத்தில உங்களுக்கு ஒரு கதை சொல்லியே ஆகணும்... சின்னனாக இருக்கும்போது விடுமுறை காலத்தில ஊருக்குப் போவது வழமை. வருடத்தில 2 தடவைகள்தான் போகக் கிடைக்கும், அப்படிப் போனால் அம்மம்மா வீடுதான் நம் வீடு. அப்பம்மா வீட்டுக்குப் போய்ப்போய் வருவோம்.

அப்பா தினமும் பின்னேரம் போய், 8,9 மணிக்கு திரும்புவார், எல்லோரும் இடைக்கிடை போவோம் தங்கி வருவோம். ஆனா அப்பா போகும்போது நானும் தொத்திக்கொண்டு போய் விடுவேன்.

அங்கு மாமியின் மகள்மாரோடு தான் நாம் நல்ல ஒட்டு. அங்கு போனால் பொழுதுபோவதே தெரியாது. ஆனால் அங்கு தங்க நெடுகவும் வீட்டில விடமாட்டினம், அப்பாவோடு திரும்ப வந்திடோணும், இல்லையெனில் இங்கிருப்போர் ஏசுவினம்(சித்தி, மாமா), எங்களோடு நிற்க உனக்கு ஆசையில்லையா.. அங்கு போனால் நின்று விடுகிறாயே என. அப்போ இரு பகுதியையும் சமாளித்து நடப்போம்.

அப்படித்தான் ஒருதடவை மாமி வீட்டுக்குப் போனேன் அப்பாவோடு, எனக்குப் பத்து வயதிருக்கும்.. போகும்போதே அம்மாவின் கட்டளை,  “அதிரா .. அப்பாவோடு திரும்பி வந்திடோணும்”...  “சரி அம்மா”.

போயாச்சு, அங்கு இரவு 9 மணி, அப்போ அப்பா போக வெளிக்கிடுகிறார், மாமியின் பிள்ளைகள் கையைப் பிடிச்சு இழுக்கினம், அதிரா இன்று நில்லுங்கோ... அப்பா சொன்னார்,  “இல்லை ஆச்சி!! அம்மா பேசுவா, நீ வா நாளைக்கு நாம் திரும்ப வருவோம்.. வேணுமெண்டால் இன்னும் கொஞ்சம் இருந்திட்டுப் போவோம்”.

அந்நேரம் மாமியின் மகன் கொழும்பால் வந்து நிற்கிறார்.. வயதில் பெரியவர்.. அவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார் (நகைச்சுவையாகத்தான்)... இங்க பாருங்கோ அதிரா... உங்களுக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்கெனில், அது தப்பில்லை எனில், போனால் போகுதெனச் செய்யுங்கோ.. பின்பு வீட்டில அடிச்சாலும் அடியை வாங்குங்கோ.. ஒரு சந்தோசத்துக்காக, பின்பு அடி வாங்கினாலும் தப்பில்லைத்தானே..  என்றார்... எனக்கு உஷார் வந்திட்டுது:))... ஒரு காலைத்தூக்கி நிலத்திலே துள்:ளித் துள்ளிச் சொன்னேன்... அப்பா பிளீஸ் அப்பா.. அம்மாவுக்குச் சொல்லுங்கோ.. நான் நாளைக்கு வருகிறேனே என, எல்லோருமாக அப்பாவைச் சமாளிச்சு அனுப்பி விட்டோம்.

அன்றிலிருந்து சின்னச் சின்ன விஷயங்களுக்கு நான் மாமியின் மகன் சொன்னதை மனதில் நினைச்சுக் கொள்வதுண்டு... அப்பூடித்தான் இப்பவும்.. சொல்ல வந்ததைச் சொல்லிட்டேன்:) இனி அமெரிக்காவில இருந்து எரிகுண்டு வந்தாலும் சமாளிச்சிடுவோம்:)).

இன்னொரு முக்கியமான கதை சொல்லோணும். பல பெண்களுக்கு தம் ஆத்துக்காரர் சமைச்சுத் தரோணும் என ஆசை இருக்கு. ஆனா என் ஆய்வின்படி:), இக்கரைக்கு அக்கரைப் பச்சைபோலவும் தெரியுது.

எனக்கு ஒரு இந்திய - கேரள நண்பி இருக்கிறா, அவவின் ஆத்துக்காரரும் டாக்டர். ஆனா அந்த டாக்டர் சூப்பராச் சமைப்பாராம். ஆனால் அந்த நண்பிக்கு அது விருப்பமில்லை, அப்படியென்றுமில்லை, திருப்தியில்லை காரணம்.

அவ சொல்லுவா, அவர் சமைப்பாராம், ஆனால் சமைத்து முடியக் கிச்சினுக்குள் போனால் தனக்கு விசர் வராத குறையாம்.. ஒரே பொருட்கள் சிந்தி, எடுத்த பொருள் எடுத்த இடத்தில் இப்படி இருக்குமாம், அதை ஒழுங்குபண்ணுவதிலேயே தனக்கு போதுமென்றாகிடுமாம், இதைவிட தான் சமைப்பது பெட்டர் என்பா. அத்தோடு அவருக்கு சமையல் தெரிந்தமையால், சில உணவுகள் இவ சமைப்பது அவருக்குப் பிடிக்காதாம், தான் தான் சமைக்கோணும் என்பாராம்.... இப்படிக் குட்டிக் குட்டிப் பிரச்சனைகள்.

அப்போ எனக்கு சொன்னா,   “அதிரா என்னைப்பொறுத்து ஆண்கள் சமைக்காமல் இருப்பதுதான் பெட்டர்”:) என்றா:)). 

விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:), உடனே நான் மாத்தி ஓசிச்சேன்:)... “தொட்டில் பழக்கம் உடுகாடு:) வரை” என்பினமெல்லோ.. அப்போ பழக்கும்போதே கரீக்டாப் பழக்கிட்டால் போச்சு:)....

சரி இப்ப அதுவோ முக்கியம், மேலே இருக்கும் கபேஜ்(கோவா) ஐப் பாருங்கோ... ஒரு கிழமைக்கு முன்பு சுப்பமார்கட் போனபோது, கொண்டு வந்து கொட்டியிருந்தார்கள், ஒவ்வொன்றும்.. 2.5, 2.6 கிலோ எடை, விலை என்ன தெரியுமோ, ஒன்று மட்டும்(each) 49 சென்ஸுகள். அதாவது பாதிப் பவுண்ட்டுகள். எனக்கு மனம் கேட்கவேயில்லை.. எதுக்கு எதுக்கு எனச் சொல்லச் சொல்ல:) ரெண்டைத்தூக்கி:) ட்ரொலியிலே வைத்து, காரில் ஏத்தி, வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்திட்டேன்:)... எங்கிட்டயேவா?:).. பத்துறாத்தல் கபேஜை எப்பூடிச் சாப்பிட்டு முடிப்பது சொல்லுங்கோ...

எனக்குச் சின்னனிலிருந்தே கபேஜ் பைத்தியம் இருக்கு. நம் வீட்டு ஃபிரிஜ்ஜில் கபேஜ் இல்லாமல் இருப்பின் அது வாழ்க்கையில் பெரிய அதிசயமே... நம்புவீங்களோ தெரியாது.. இப்பகூட ..இந்த கபேஜ், கோவாஇலை அதாவது கபேஜ் லீவ்ஸ், அடுத்து முட்டைக்கோவா எனப்படும், கல்லாக இருக்கும் உருண்டைக் கபேஜ்... இத்தனோடு பேஷில் ஸ்பிரவுட்ஸ் எனப்படும்.. குட்டிக் குட்டிக் கபேஜ்.. இவ்வளவும் இருக்கு?:))...  

டெய்லி.. சுண்டல், பருப்புப் போட்டுக் கறி, குஸ்குஸ் உடன் பிரட்டுவது... இப்படிச் செய்தும், ஒரு கிலோத்தான் செலவாகியிருக்கும் மீதி இருக்கு. அப்போ ரீவியில் ஒரு சமையல் குறிப்பு பார்த்தேன், கபேஜை மெல்லிதாக அரிந்து, கொஞ்சம் வெங்காயம், பச்சைமிளகாய் அரிந்து சேர்த்து, உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து, கடலை மாக் கொஞ்சம் போட்டுப் பிரட்டி, உருண்டைகளாக்கி பொரித்தெடுத்தினம்.

அப்படிச் செய்ய ஓசிச்சேன், கடலை மா வாங்க மறந்துட்டேன். நேற்று ஆசியா வீட்டுப் பக்கம் போனபோது...பார்த்தேன் மைதாவில் குறிப்பு... ஆஆ.. விடுவனோ நான்... நைட் செய்தேன்ன்..  குட்டி எலிகளுக்குப் பிடிக்காதோ எனப் பயந்தேன்... சுட்டு முடியமுன் எல்லாமே காலி.. கோவாவும் பாதி முடிஞ்சுது:).

நான் செய்தது மேலே சொல்லியிருக்கும் ரீ வீ யில் காட்டிய முறை, ஆனா சேர்த்தது மைதா மா.


CABBAGE ROTTI
தேவையானவை:
மைதா/கோதுமை மா -: 250 கிராம்
கபேஜ்/கோஸ் -:200 கிராம்
வெங்காயம் ஒன்று.
பச்சைமிளகாய்... விருப்பப்படி.. 3/4.
உப்பு ஒரு தேக்கரண்டி(tea spoon)
இப்பெல்லாம், கைரேகை பார்க்கினமாம்:) அதுதான்
நாங்க ரொம்ப விபரமில்ல:) கிளவுஸ் போட்டிட்டோம்:)
செய்முறை:
அனைத்தையும் குட்டியாக அரிந்தெடுத்து, மாவுடன் சேர்த்து உப்பும் சேர்த்து, மெல்லிய சுடுநீரில்... ரொட்டிப்பதமாகக் குழைத்து, எண்ணெயை சூடாக்கி, குட்டிக் குட்டி தட்டை வட்டமாக தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எப்பவும் நெருப்பை குறைவாக வைத்து பொரிக்கவும்.

எண்ணெய் பெரிதாக செலவாகவில்லை, அதனால் அடிக்கடி செய்யலாம் என ஓசிச்சிருக்கிறேன்:).. இங்கின ஆருக்கும் கோவா வேணுமா?:) றாத்தல் 12 பவுண்டுகள்:).. காசை இப்பவே என் எக்கவுண்டில போடுங்கோ..:).... ஆஆ.. ஓடதீங்கோ.. ஒழுங்கா மொய் எழுதுங்கோ பிளீஸ்ஸ் பொறகு பூஸ் குத்தமாகிடப்போகுதூஊஊ:) ஐ மீன் தெய்வக் குற்றம்:).

நிறையக் குறிப்பு போட வெளிக்கிட்டு, பாருங்கோ கதை சொன்னதிலேயே பெரிசாகிடுத்து, அதனால இத்தோடு நிறுத்திடுறேன்:).

ஊசி இணைப்பு:)..
இலை உதிர் காலம் ஆரம்பமாகிட்டுதெல்லோ.. சாலைகளின் அழகோ சொல்ல முடியாது கொள்ளை அயகு:)..

====================================================
 “மழைக்கால இருட்டானாலும், மந்தி கொப்பிழக்கப் பாயாதாம்”

என் குரு சொல்லித்தந்தவர்:).
====================================================

186 comments :

  1. வணக்கம் அதிரா அடிக்கடி என் அக்காள் தன் சமையல் பக்கம் என்னைவிடாமல் இருப்பது எடுத்த பொருள் எடுத்த இடத்தில் இருப்பதில்லை:)))

    ReplyDelete
  2. அடடா முதலில் ஒரு பால்க்கோப்பி பிளீஸ் :)))

    ReplyDelete
  3. அட நானும் ஏதோ ஒரு சமையல் காரன் தான் அஞ்சலின், இமா,அதிரா அளவுக்கு புகழ் இல்லை :)) .நானும் கட்டில் கீழ் ஒதுங்கப்போறன் இன்னும் சில மணித்தியாளத்தில் தொடர் வேலை:)) 

    ReplyDelete
  4. ஆஹா கோவா சமையல் ஆழகு புதுமை இனி முயல்கின்றேன்.நன்றி பகிர்வுக்கு 

    ReplyDelete
  5.  இனிய கார்காலம் தொடக்கம் இலையுதிர்காலம் போய் இருட்டு வரும் தனிமையில் ஆன்மீகம் வரும் அதன் வழியில் ஒரு சுகம் தரும் மரங்களுக்கு விதிப்பயம் இதுதான்!:))) என் குரு சொன்னது:)))

    ReplyDelete
  6. கர்ர்ர்ரர்ர்ர்ரர் மியாவ் :))) அது வேறு ஒருவரின் விருப்ப பாடல் )))உம கூட :)))
    இந்த பாடல் வெளியானபோது நானு கிரி எல்லாம் பிறக்கவேயில்லை
    :))) ஆனா இசையும் குரலும் சூப்பர் இனிமை


    பிறகு மீண்டும் வருவேன்

    ReplyDelete
  7. அதிரா நலமா? நான் இப்ப தான் மெல்ல ப்ளாக் பக்கம் வருகிறேன். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நல்ல ஒரு சமையல் குறிப்பு அதுவும் வாய்க்கு நல்ல மொறு மொறு வென்ற ஹெல்தி ரெசிப்பி. குட். அடுத்து கணவரகளின் சமையல் அட்டகாசங்கள். உண்மை தான் அதிரா.

    ReplyDelete
  8. வணக்கம் மேடம்!

    அந்த தட்டை ஏந்தி நிற்கும் கைகள் யாருடையவையோ? அந்த குயிட்டெக்ஸ் நல்ல அழகாம் எண்டு டொல்லி விடுங்கோ :))))

    ReplyDelete
  9. இம்முறை “நேயர் விருப்பப் பாடலாக:)” இப்பாடல் இனிக்கிறது காதுகளில்..//////

    என்ன கொடுமையா கிடக்கு! இனிப்புச் சுவையை நாக்கால :)) மட்டும் தானே உணர முடியும்?

    இது என்ன காதில இனிக்கும் எண்டு சொல்லுகினம்! ஒரு வேளை உவையளும் மாத்தியோசிக்கினமோ?

    ReplyDelete
  10. புதுப்புது சமையல் செய்து எம்மை எல்லாம் கட்டிலுக்குக் கீழயே இருக்க வைப்பவ:),//////

    அவா எண்டாலும் பரவாயில்லை! சிலர் சமையல் செய்து எம்மையெல்லாம் ஹொஸ்பிட்டல்ல எல்லோ இருக்க வைக்கினம் :))

    ReplyDelete
  11. செமையா அசத்திட்டீங்க...

    நன்றி...

    ReplyDelete

  12. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண் இருக்கிறா! யாழ்ப்பாணம் - இணுவில் ஆக்கள்! நல்ல சாதி! டீ செண்டான குடும்பம்! தேப்பன் அரசாங்க உத்தியோகமாம்! பேசாமல் அவாவையே பேசி முற்றாக்குவமோ? //

    நிஜம்மாவா !! ..இதோ கொஞ்ச நேரத்தில் வருவேன் ..அதை பற்றி பேச
    ஆனா ஒன்னு என் மகனை கண் கலங்காமல் பார்த்துக்கணும் சொலிட்டேன் :)))))

    ReplyDelete
  13. ஓடிவாங்கோ.. ஓடிவாங்கோ... இது எங்கட பக்கமாக்கும்:).. ஐ மீன் சமையல் பக்கம்.. அதுக்காக எதிர்ப் பாலார் வராமல் விடலாமோ? //////

    அதுசரி உந்த எதிர்ப்பாலார் எண்டு சொல்லுற ஆக்கள் ஆராம்? எங்களையோ சொல்லுகினம்? நாங்கள் தான் யாரையுமே எதிர்க்கிறதே இல்லையே? எல்லாரையும் “அரவணைச்சுக்கொண்டு” ( அன்பால தான் ) தானே போறனாங்கள்? :)))

    ReplyDelete
  14. நிஜம்மாவா !! ..இதோ கொஞ்ச நேரத்தில் வருவேன் ..அதை பற்றி பேச
    ஆனா ஒன்னு என் மகனை கண் கலங்காமல் பார்த்துக்கணும் சொலிட்டேன் :))))) //////

    அக்கா வாங்கோ வாங்கோ! ரொம்ப நாள் ஆச்சு உங்களோட பேசி! எப்படி நலமா இருக்கிறீங்களோ?

    என்னது உங்கட மருமகள், உங்கள் மகனைக் கண்கலங்காமல் பார்க்கோணுமோ? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

    அதெல்லாம் ஓகே அவா நல்லா கவனிச்சு பார்ப்பா! ஆனா ஒரு பிரச்சனை, அவா தான் கண்கலங்க ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டா! :)))

    ReplyDelete

  15. தனிமரம் said...
    வணக்கம் அதிரா அடிக்கடி என் அக்காள் தன் சமையல் பக்கம் என்னைவிடாமல் இருப்பது எடுத்த பொருள் எடுத்த இடத்தில் இருப்பதில்லை:)))

    [co="dark purple"] வாங்கோ தனிமரம்... நீங்கதான் இம்முறை 1ஸ்ட்டூஉ.. அதனால உங்களுக்கு கபேஜ் ரொட்டி.. உம் பால் விட்ட:) கொஃபியும்.

    பார்த்தீங்களோ உண்மையைச் சொல்லிட்டீங்க.. அப்போ நான் சொன்னதில தப்பே இல்லை:))..[/co]

    ReplyDelete
  16. தனிமரம் said... 3
    அட நானும் ஏதோ ஒரு சமையல் காரன் தான் அஞ்சலின், இமா,அதிரா அளவுக்கு புகழ் இல்லை :)) .நானும் கட்டில் கீழ் ஒதுங்கப்போறன் இன்னும் சில மணித்தியாளத்தில் தொடர் வேலை:))
    [co=" purple"] ஆஹா.. அப்போ தனிமரத்துக்கும் சமைக்கத் தெரியுமோ?.. சூப்பர்ர்.. இனி சமையலோடு நான் சொன்ன ரிப்ஸ் ஐயும் கைப்பற்றுங்கோ.. பின்பு உங்கள் ஆத்துக்காரம்மாவிடமிருந்து புகழ்தான்:).

    மியாவும் நன்றி, மறக்காமல் கபேஜ் பஜ்ஜியையும் எடுத்துப் போங்கோ... இங்கின சில ஆட்கள்:) வைச்ச கண் வாங்காமல் பார்க்கினம்:)[/co]

    ReplyDelete
  17. angelin said... 6
    கர்ர்ர்ரர்ர்ர்ரர் மியாவ் :))) அது வேறு ஒருவரின் விருப்ப பாடல் )))உம கூட :)))
    இந்த பாடல் வெளியானபோது நானு கிரி எல்லாம் பிறக்கவேயில்லை
    :))) ஆனா இசையும் குரலும் சூப்பர் இனிமை
    [co=" purple"] ஆஆஆ.. அஞ்சூஊஊ அஞ்சூஊஊஊ வாங்கோ.. அஞ்சுவுக்கு கபேஜ் வாணாமோ?:)..


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்கப்பா குதிருக்குள் இல்லைக் கதைதான் போங்கோ:))
    எதுக்குப் பயப்படுறீங்க? விருப்பப் பாடல் என்பது எந்தக் காலத்தில் இருந்தால் என்ன?

    எனக்கு ஒளவையாரின் ஆத்திசூடி பிடிக்கும்.. அதுக்காக உடனே நான் ஒளவையார் காலத்து ஆள் என எல்லோரும் நினைக்கப் போகினமே எனப் பயப்படுவதோ?:)

    சரி நேற்று வந்த மாற்றான் படத்தில, முக்கியமா “நாணிக்கோணி” ப்பாடல் எனக்கு ரொம்பப் புய்கும், அதைச் சொன்னவுடன் இங்கிருப்போர் எல்லோரும்... ஆ.. அதிரா புதுப்பாடல் விரும்புறா, அப்போ அவவுக்கு இப்போ 10..15 வயசுதான் என எண்ணிடுவினமோ?:))..

    விரும்புவது, ரசிப்பதுக்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கோ.. இதுக்கெல்லாம் ஏன் பயப்புடுறீங்க?:)) அதிராவைப் பாருங்கோ..:))

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் எனக்கு நானே நீதிபதி... இதுதான் என்னோட பொலிஷி:))..

    அதனால்தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறேன்:))).. ஹையோ அதுக்காக ஆரும் அடிச்சுப் பார்க்க வெளிக்கிட்டிடாதையுங்கோ:).. பிறகு தாஆஆஆஆஆங்க மாட்டேன்ன்:)).

    மீ ஒரு “மண் உண்ணிப் பாம்பூஊஊ”.. அதாரது... வந்த வான்ஸ் திரும்பி ஓடுறது:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இது வேற பாம்பூ ஒடாதீங்கோ:)).[/co]

    ReplyDelete
  18. Vijiskitchencreations said... 7
    அதிரா நலமா? நான் இப்ப தான் மெல்ல ப்ளாக் பக்கம் வருகிறேன். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நல்ல ஒரு சமையல் குறிப்பு அதுவும் வாய்க்கு நல்ல மொறு மொறு வென்ற ஹெல்தி ரெசிப்பி. குட். அடுத்து கணவரகளின் சமையல் அட்டகாசங்கள். உண்மை தான் அதிரா.

    [co=" purple"] வாங்கோ விஜி.. நீண்ட காலத்துக்குப் பின் .. நலம்தானே?..

    ஓம் விஜி, குழந்தைகள் கபேஜ் விரும்ப மாட்டினம், அதனால இப்படிச் செய்து கொடுத்தால் உடம்பில் சேருமெனக் காட்டிச்சினம் ரீ வி யில். கபேஜ்ஜில் நிறைய விஷயம் இருக்காமே... உடல் மெலிவடைவதிலிருந்து கொலஸ்ரோல் கன்றோல் ஆக்குவது, இதயத்திற்கு பலம் கொடுப்பது என பல விஷயங்கள் இருக்காம்...

    மியாவும் நன்றி விஜி. நலமாக இருங்கோ.[/co]

    ReplyDelete
  19. மாத்தியோசி மணி மணி said... 8
    [co=" purple"]ஹையோ என்ன இது.. எல்லாம் டபிள் டபிளாத் தெரியுதே எனக்கு.... முருகா ஜாமீஈஈஈஈஈ.. என் கண்ணிலதான் கோளாறோ?:)) நானும் இனிக் கண்ணாடி போடவேண்டி வருமோ?:))

    அஞ்சூஊஊஊஊஉ ஜெல்ப் மீ.. உங்களுக்கும் டபிளாவோ தெரியுதூஊஊஊ?.. ஒருவேளை மணியம் கஃபேல இப்போ ரெண்டு ஓனரோ?:)).. சே..சே.. அப்பூடியும் இருக்காது:)... எனக்கு கொயப்பமா இருக்கே முருகா...:).. நான் ரெண்டு கபேஜ் வாங்கினமாதிரியோ?:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).. பிறகு அம்மம்மா பேசுவா:)..[/co]

    மாத்தியோசி மணி மணி said... 8
    வணக்கம் மேடம்!

    [co=" purple"] ஆஆஆ.... வாங்கோ வாங்கோ.. மணியம் கஃபே ஓனர்ர்.. நீங்க இண்டைக்கு ஜஸ்ட்டு மிஸ்ட்டூ.. ஆஆஆ ஓடாதீங்கோ நான் ஆயாவைச் சொல்லல்ல:) கபேஜ் பஜ்ஜிக்குச் சொன்னேன்:)[/co]

    ReplyDelete
  20. மாத்தியோசி மணி மணி said... 8
    வணக்கம் மேடம்!
    [co=" purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் மேட ராசி இல்லை:)) கன்னீஈஈஈஈஈஈ:)).. கன்னிக்குத்தான் இப்ப வெள்ளி துலாவிலயாம்:)).. இன்றைய ராசிப்பலனில சொல்லிச்சினம்:)[/co]

    அந்த தட்டை ஏந்தி நிற்கும் கைகள் யாருடையவையோ? அந்த குயிட்டெக்ஸ் நல்ல அழகாம் எண்டு டொல்லி விடுங்கோ :))))

    [co=" purple"]ஹா..ஹா..ஹா.. அது சத்தியமா ஆயாட இல்லை:)) [/co]

    என்ன கொடுமையா கிடக்கு! இனிப்புச் சுவையை நாக்கால :)) மட்டும் தானே உணர முடியும்?

    இது என்ன காதில இனிக்கும் எண்டு சொல்லுகினம்! ஒரு வேளை உவையளும் மாத்தியோசிக்கினமோ?
    [co=" purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சிலபேர்.. இப்ப கொஞ்சக் காலமாத்தான் மாத்தி ஓசிக்கினம்:) நாங்க பிறக்கும்போதே.. மாத்தி ஓசிச்சு.. காலால பிறந்தாட்களாக்கும்:).. எங்கிட்டயேவா?:)

    ஹையோ.. முருகா.. வள்ளிக்கு வைரத்தோடு கன்ஃபோம்:).. என்னைக் காப்பாத்துங்கோ:) என் வாய்தேன் நேக்கு எதிரி:)) “எண்ணம் அழகானால்.. காதிலயும் இனிக்கும்”.. எண்டு சொல்லிடு.. மண்புழுவே:).[/co]

    ReplyDelete
  21. மாத்தியோசி மணி மணி said... 10
    //////
    அவா எண்டாலும் பரவாயில்லை! சிலர் சமையல் செய்து எம்மையெல்லாம் ஹொஸ்பிட்டல்ல எல்லோ இருக்க வைக்கினம் :))////

    [co=" green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இண்டைக்கு மாட்டிச்சினமோ அவ்ளோதான்:) நிஜமாவே 4ம் வோர்ட்டிலதான் இருப்பினம் பிறகு:).[/co]

    [im]http://imgur.com/29GVd.jpg[/im]

    ReplyDelete
  22. திண்டுக்கல் தனபாலன் said... 12
    செமையா அசத்திட்டீங்க...

    நன்றி...
    [co=" dark green"] வாங்கோ... வாங்கோ என்ன இது ஒரு வரியில் பதில் சொல்லிட்டு ஓடிட்டீங்க:))).. மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  23. angelin said... 13
    //

    நிஜம்மாவா !! ..இதோ கொஞ்ச நேரத்தில் வருவேன் ..அதை பற்றி பேச
    ஆனா ஒன்னு என் மகனை கண் கலங்காமல் பார்த்துக்கணும் சொலிட்டேன் :)))))

    [co=" dark green"] ஹையோ அஞ்சு.. மண்குதிரையை நம்பீஈஈஈஈ சென்னியில இறங்கின:) கதையா முடியப்போகுதே.. முருகா:)).. அஞ்சுவுக்கு நான் எப்பூடிச் சொல்லுவேன்.. எப்பூடிப் புரிய வைப்பேன்ன்..:))..

    விடமாட்டேன்ன்ன்.. விடமாட்டேன்ன்.. நான் உண்ணாவிரதம் இருப்பேன் மணியம் கஃபே வாசலில:)).. ஒரு அப்பாஆஆஆஆவி எலிப்பிள்ளையின் வாழ்க்கையில விளையாட விடமாட்டேன்ன்ன்..:))

    அஞ்சுவுக்கு ஒண்ணுமே தெரியாது:)).. மருமகள் கிடைச்சால் போதுமென நினைக்கிறா:)).. அஞ்சூஊஊஊஊஉ கொஞ்சம் அவதிப்பட வாணாமாம் என “நிபி” இடம் சொல்லி வையுங்கோ.. நான் அந்த “ஸ்பெயின்” எலிக்குட்டியை எப்பூடியாவது தேடிக் கண்டு பிடிச்சு.. கூட்டி வாறேன்ன்ன்:))..

    ஹையோ எலிக்குட்டி.. எங்கிருந்தாலும் வரக்கூடாதாம்மா.. இங்கின நிலைமை கவலைக்கிடம்:))[/co]

    ReplyDelete
  24. மாத்தியோசி மணி மணி said... 14
    அதுசரி உந்த எதிர்ப்பாலார் எண்டு சொல்லுற ஆக்கள் ஆராம்? எங்களையோ சொல்லுகினம்? நாங்கள் தான் யாரையுமே எதிர்க்கிறதே இல்லையே? எல்லாரையும் “அரவணைச்சுக்கொண்டு” ( அன்பால தான் ) தானே போறனாங்கள்? :)))//

    [co=" green"] ஹா...ஹா..ஹா...:)
    பழநி ஆண்டவா.. நீ எதுக்காக ஆண்டியானாய்ய்ய்ய் என்பது அப்போ ஒளவைக்குப் புரியாட்டிலும்:)).. இப்போ எனக்குப் புரியுதப்பனே:))..

    வெளிநாட்டுக்கு நம்பி அனுப்ப:)) இங்கின எல்லோரையும் அணைச்சுக் கொண்டு திரிகினமாமே:)).. இதை அந்த ஆவரங்கால்ப் பொம்பிளை பார்த்தால்ல்.. என்னைச் ஷ பேலால:)) தான் அடிப்பா:)).. நான் லா ஷ பேலைச் சொல்லல்ல:))..

    இப்போ என்ன பண்ணுவேன் ஜாமீ:)) தெரியாமல் புரோக்கர் வேலையைத் தொடங்கி.. ஆப்பிழுத்த குரங்காச்சே என் நிலைமை:))..

    இனி எனக்கு எந்தத் தொழிலும் வாணாம்ம்ம்:).. திருப்பதி வாசல்ல போய் நிற்கப்போறேன்ன்:).. ஏன் எதுக்கென அரும் குரொஸ் குவெஷன் கேட்கப்பூடா சொல்லிட்டேன்ன்:)).. முடியல்ல முனியப்பா முடியல்ல:).[/co]

    ReplyDelete
  25. மாத்தியோசி மணி மணி said... 15
    அதெல்லாம் ஓகே அவா நல்லா கவனிச்சு பார்ப்பா! ஆனா ஒரு பிரச்சனை, அவா தான் கண்கலங்க ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டா! :)))////

    [co=" green"] ஹா...ஹா..ஹா...:)
    முடியல்ல முருகா.. வயிற்று நோ வந்திட்டபோல ஒரு பீலிங்ஸ்ஸா இருக்கெனக்கு சிரிச்சதில:))..

    அஞ்சூஊஊஊஊ... இனியும் உந்தப் பொம்பிளை உங்கட மகனுக்கு வேணுமோ?:))... வயசு ஏறினாலும் பறவாயில்லை அஞ்சு.. அவதிப்படாதையுங்கோ:))..நான் இப்பவே திருப்பதியில் மொட்டை அடிப்பதாக நேர்த்தி வச்சிட்டன்:)).. எனக்கல்ல:))... ஹா..ஹா..ஹா..

    மியாவும் நன்றி மணியம் கஃபே ஓனர்.. கபேஜ் பஜ்ஜி தேவையெனில் சொல்லுங்கோ.. ஓடருக்கு அனுப்பி வைக்கப்படும் மணியம் கஃபேக்கு:).[/co]

    ReplyDelete
  26. முன்பு இங்கும் இவ்வளவு பெரிய முட்டை கோஸ் ட்தான் இப்ப கட் பண்ணி விற்கிறார்கள்

    வடை பகோடா ஆரிய பவனில் கலை கட்டுது போங்கோஒ

    ReplyDelete
  27. இதில அஞ்சு, கீரி, நான் எல்லாம் நல்ல அடக்கொடுக்கமாக:) எந்நேரமும் கிச்சினில் நின்று எல்லாம் சமைப்போம்ம்:).. ஆத்துக்காரருக்கு கஸ்டம் கொடுப்பதில்லை:), //

    நல்ல பிள்ளை :)) இருங்க உடனே ஆனியன் சமோசா செய்து கொண்டாறேன் உங்களுக்கு

    ReplyDelete
  28. *Chennai Plaza - சென்னை ப்ளாசா* said... 28
    முன்பு இங்கும் இவ்வளவு பெரிய முட்டை கோஸ் ட்தான் இப்ப கட் பண்ணி விற்கிறார்கள்

    வடை பகோடா ஆரிய பவனில் கலை கட்டுது போங்கோ///

    [co=" dark green"]ஆஆஆஆ வாங்கோ ஜல் அக்கா வாங்கோ.. நான் போய்ப் பார்த்தேன், நீங்க சமையல் அட்டகாசத்திலயும் கான்ட் பாக் போட்டு வச்சிருந்தீங்க, நான் கொயம்பிட்டேன்:) ரெண்டையும் ஒண்டாக்கிட்டீங்களோ என:) இப்போ தெளிஞ்சுட்டேன்..:)..

    ஓ இதுக்குப் பேர் முட்டைக் கோஸ் என்ன? காலையில நினைச்சேன், பின்பு ஓசிச்சேன்.. ஹொலிபிளவரைத்தான் முட்டைக்கோஸ் என்பீங்களாக்கும் என:).

    ஆனா இதில் பலவகை உண்டு, கல்லானது போலவும் இருக்கு, இது நெழி விழுந்து ஷொவ்ட்டானது, இதைவிட இன்னும் டார்க் கிரீனில நெழி விழுந்து... கார்ட்டானதும் இருக்கு... பிரித்தானியாவில பலவகைக் கபேஜ் உண்டு... மனிஷரைப்போல:))..

    ஆரியபவானில இனி இனித்தான் புதுப்புது ஐட்டங்கள் வெளிவருது:)) வெயிட் அண்ட் சீயா:)..

    மியாவும் நன்றி ஜல் அக்கா.[/co]

    ReplyDelete
  29. angelin said... 29
    இதில அஞ்சு, கீரி, நான் எல்லாம் நல்ல அடக்கொடுக்கமாக:) எந்நேரமும் கிச்சினில் நின்று எல்லாம் சமைப்போம்ம்:).. ஆத்துக்காரருக்கு கஸ்டம் கொடுப்பதில்லை:), //

    நல்ல பிள்ளை :)) இருங்க உடனே ஆனியன் சமோசா செய்து கொண்டாறேன் உங்களுக்கு//

    [co=" dark green"]உஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊ:)) மெதுவாப் பேசப்பூடாதோ?:)... அமெரிக்காவில இருந்து “ரொனாடோ” கிளம்பிய சத்தம் கேட்குதே:))..

    ஹையோ மீ கட்டிலுக்குக் கீழ இருக்கிறேன்ன்.. தொட்டூஊஊஊஊஊ தொட்டுச் சாப்புட:)) சில்லி ஷோஸும் கொண்டாங்கோ:))[/co]

    ReplyDelete
  30. //அங்கு போனால் நின்று விடுகிறாயே என. அப்போ இரு பகுதியையும் சமாளித்து நடப்போம்.//

    ஆமாம் அதிரா ..உங்க மாமா மகன் சொன்னது முற்றிலும் சரியே
    நமக்கு பிடித்திருந்து செய்துவிட்டு அடி வாங்குவதில் தவறில்லை ..


    //செய்யவில்லையே // !!!! என்று பிறகு புலம்புவதை விட இது எவ்ளோ மேல் :))

    ஆமாம் அடி கிடைசுதான்னு சொல்லவேயில்லையே நீங்க :))

    ReplyDelete
  31. அதீஸ் :)) ஆனாலும்ம் டாக்டர் பாவம் இப்படி இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தா அவர் என்ன செய்வார் :))

    ReplyDelete
  32. கேரளா நண்பியின் கணவர் அப்படியே எங்க அப்பா மாதிரின்னு நினைக்கிறேன் :))))
    எங்க வீட்டில் அப்பாதான் கிரேட் குக் ...ஆனா ரொம்ப nonvej சமைப்பார் அது எனக்கு பிடிக்காது

    ReplyDelete
  33. ஆனியன் பஜ்ஜி நல்லா வந்திருக்கு !!!! ..
    எங்க வீட்டில் சாலட் ,மாங்கா பச்சடி மீன் கட்லெட் இதெல்லாம் செய்வார் ..

    ReplyDelete
  34. angelin said... 32
    //அங்கு போனால் நின்று விடுகிறாயே என. அப்போ இரு பகுதியையும் சமாளித்து நடப்போம்.//

    ஆமாம் அதிரா ..உங்க மாமா மகன் சொன்னது முற்றிலும் சரியே
    நமக்கு பிடித்திருந்து செய்துவிட்டு அடி வாங்குவதில் தவறில்லை ..


    //செய்யவில்லையே // !!!! என்று பிறகு புலம்புவதை விட இது எவ்ளோ மேல் :))
    [co=" dark green"]உண்மைதான் அஞ்சு.. தப்பான செயலெனில் செய்யக்கூடாது, மற்றும்படி துணிய வேண்டியதுதான்.. பின்பு சமாளிச்சிட வேண்டியதுதான்.. ஹையோ ஹையோ..[/co]

    ஆமாம் அடி கிடைசுதான்னு சொல்லவேயில்லையே நீங்க :))//

    [co=" dark green"]ஹா..ஹா... அம்மா அடிச்சாலும் அப்பா விடமாட்டார்ர்.. நான் ஒரு தடவை எண்டாலும் அப்பாவிடம் வாங்கியதேயில்லை அடி:).. அம்மாதான்.. எதிர்பாராமல் சடார்:) என தருவா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).[/co]

    ReplyDelete
  35. காபெஜ் வடை அருமையா இருக்கே ,,,நானும் ட்ரை செய்றேன்.

    அதீஸ் நீங்க சுண்டல் என்று சொல்றீங்களே அதுமாரி செய்து சப்பாத்தி யில் இட்டு சுட்டு சாப்பிடுங்க ..கரிரொட்டி போல ரொம்ப டேஸ்டியா இருக்கும் .

    ReplyDelete
  36. angelin said... 33
    அதீஸ் :)) ஆனாலும்ம் டாக்டர் பாவம் இப்படி இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தா அவர் என்ன செய்வார் :))///

    [co=" dark green"]ஹா..ஹா... ஹா.. அஞ்சில வளையாட்டில் அம்பதில வளைக்கேலாதெல்லோ:))... எனக்கு என்ன செஞ்சாலும் அழகா, நீட்டா செய்திருக்கோணும்:)).. அலுவல் முடிஞ்சா போதுமெனச் செய்வது பிடிக்காது.[/co]

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. angelin said... 34
    கேரளா நண்பியின் கணவர் அப்படியே எங்க அப்பா மாதிரின்னு நினைக்கிறேன் :))))
    எங்க வீட்டில் அப்பாதான் கிரேட் குக் ...ஆனா ரொம்ப nonvej சமைப்பார் அது எனக்கு பிடிக்காது//

    [co=" dark green"]இவரும் நன்கு பிரியாணிகள் செய்வாராம். ஆனா சப்பாத்தி எனில், அவ சுடக்கூடாதாம், அவர் செய்து கொடுக்க கொடுக்க அவ அடுப்பில போடோணுமாம்.. அவ செய்வது மொத்தமாகிடுதாம்:))..

    ஹையோ முருகா அப்போ என் சப்பாத்தியைப் பார்த்தால்ல்ல்:))[/co]

    ReplyDelete
  39. ஹையா !!! மணி தம்பிக்கு ஸ்பெஷல் வெஜ் சமோசா ரெடி செய்றேன் ....

    ReplyDelete
  40. angelin said... 35
    ஆனியன் பஜ்ஜி நல்லா வந்திருக்கு !!!! ..
    எங்க வீட்டில் சாலட் ,மாங்கா பச்சடி மீன் கட்லெட் இதெல்லாம் செய்வார் ..//

    [co=" dark green"]ஆவ்வ்வ்வ்.. நைஸ்!![/co]

    ReplyDelete
  41. angelin said... 37
    காபெஜ் வடை அருமையா இருக்கே ,,,நானும் ட்ரை செய்றேன்.

    அதீஸ் நீங்க சுண்டல் என்று சொல்றீங்களே அதுமாரி செய்து சப்பாத்தி யில் இட்டு சுட்டு சாப்பிடுங்க ..கரிரொட்டி போல ரொம்ப டேஸ்டியா இருக்கும்
    [co=" dark green"]ஓம் சூப்பர் அஞ்சு, நானும் இப்படி நன்றாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை, அனியன் பஜ்ஜி போலவே இருந்துது. கபேஜ் என சொல்லாயினம், நல்ல மெல்லிசா கட் பண்ணுங்கோ.

    ஆனா சுண்டல் சாப்பிடுவினம் றைஸுடன். ரொட்டியில் வைத்தால் நான் நினைக்கவில்லை, பிடிக்குமென.[/co]

    ReplyDelete
  42. அதெல்லாம் ஓகே அவா நல்லா கவனிச்சு பார்ப்பா! ஆனா ஒரு பிரச்சனை, அவா தான் கண்கலங்க ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டா! :)))//

    nooooo!!!!!நீங்க பாரிஸ் இல்லன்னா இங்கே ஐரோப்பா பக்கம் பாருங்க:)))))

    ReplyDelete
  43. ரொட்டின்னு சொல்றது மெலிதா வீச்சு ரொட்டி போல தட்டி செய்து பாருங்க மைதா மாவில் ...ருசி அபாரம்

    ReplyDelete
  44. இரண்டு வகை சமோசா செய்ய போறேன் ...மீண்டும் பிறகு வரேன் :)))))))
    சமோசா ட்ரீம்ஸ் 4அதிரா

    ReplyDelete
  45. angelin said... 41
    ஹையா !!! மணி தம்பிக்கு ஸ்பெஷல் வெஜ் சமோசா ரெடி செய்றேன் ....

    [co=" dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்களை எல்லாம் தெரியேல்லையாக்கும்:)).. கீரீஈஈஈஈஈஈ.. கீரீஈஈஈஈஈஈஈ.. கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு அஞ்சுவைக் கூட்டியாங்கோ..:))..

    புரோக்கருக்குப் பஜ்ஜி கொடுத்து கமிஷனைக் குறைக்கச் சொல்லவோ:)).. விடமாட்டேன்ன்.. தீக்குளிப்பேன்ன்:)).. ஃபயர் எஞ்சினுக்கு அடியுங்கோ.. தேம்ஸ் கரைக்கு என, மறவாமல் அட்ரஸையும் சொல்லிடுங்கோ:)).. லேட்டா வந்து துலைச்சிடப்போகினமே முருகா:))[/co]

    ReplyDelete
  46. அதனால்தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறேன்:))).. ஹையோ அதுக்காக ஆரும் அடிச்சுப் பார்க்க வெளிக்கிட்டிடாதையுங்கோ:).. //


    சே :) சே )) நான் அடிக்கலாம் மாட்டேன் அப்படியே குண்டு கட்டா கோணிப்பையில் போட்டு தேம்சில் வீசிடுவேன் :))))))

    ReplyDelete
  47. angelin said... 44
    அதெல்லாம் ஓகே அவா நல்லா கவனிச்சு பார்ப்பா! ஆனா ஒரு பிரச்சனை, அவா தான் கண்கலங்க ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டா! :)))//

    nooooo!!!!!நீங்க பாரிஸ் இல்லன்னா இங்கே ஐரோப்பா பக்கம் பாருங்க:)))))//

    [co=" dark green"]ஹையோ பழநி ஆண்டாவா.. விடிய விடிய இராமாயணம் சொல்லியும் காலையில சீதைக்கு ராமர் சித்தப்பா எனும் முறையாச்சே என் நிலைமை:))..

    வீட்டில கிடந்த பட்டர், நெய் எல்லாம் போனாப்போகுதென அள்ளிப்பூசி:)) தடவித் தடவிச் சொன்னேனே:)) எல்லாம் காத்தில எரிச்ச கற்பூரம்போல ஆச்சே:))).. இனி இதை எப்பூடி டீல் பண்ணலாம்ம்ம்:)..

    புளியடி வைரவா:)).. எனக்கு நல்ல ஒரு ஐடியாத் தாப்பா... நான் திருப்பதி வாசல்ல பிச்சை எடுத்தெண்டாலும் உனக்கு... வைரத்தில முடி சாத்துறேன்:)))... இது அந்த திருப்பதி உண்டியல் - பணக்குவியலின் மேல கைவச்சுச்:) சத்தியம் பண்ணுறேன்:).[/co]

    ReplyDelete
  48. அதிரா......
    அருமையான பாடலோடு ஆரம்பம். மல்லிகைக்கு மயக்குது........:)))
    எனக்கும் புடிக்க்கும் பாட்டுத்தான். முதல்ல அதுக்கு நன்றி!

    கோவாஆஆஆ.... அதிலையும் விதவிதமா எத்தனையோ செய்யலாம்.
    நல்லா இருக்கும். நானும் இங்கின உப்பிடி பார்த்திருக்கிறன்.
    ஆனா குளிர் காலம் வந்தாப்பிறகு வாங்குறதுக்கு கொஞ்சம்ம் ஓசனை;)
    நிறையப்பேர் அங்கினை ஒழிஞ்சிருப்பினம்ம்ம்ம்ம்:))))

    ReplyDelete
  49. வீட்டுகளில ஆத்துக்காரர் சமைப்பதே பெரிய விஷயமா இருக்கேக்கை அது அப்பிடி இது இப்பிடி எண்டுறதெல்லாம் ஓவர். சிலருக்கு டிப்டொப்பா அதுஅது கிடந்த இடத்தைல வைச்சு பழக்கம். சிலர் அப்புடி இல்லைத்தான். ஆனா சொன்னா கேப்பினம்தானே:))) பாருங்கோ நீங்க சொல்லி அவர்ர்ர்ர்ர் கேட்டார் தானே:)))))

    அதுசரி லாப் எலி எண்டுறீங்கள். உங்களின் சமையலை சாப்பிட்டு எலி இன்னும் உலாவுதானே.
    ஐ மீன் உங்களின் லாப் எலி.;))

    அப்ப அவர் அனியன் பஜ்ஜி செய்தப்போ நீங்கதான் லாப்எலியோ:)))))))

    ReplyDelete
  50. angelin said... 46
    இரண்டு வகை சமோசா செய்ய போறேன் ...மீண்டும் பிறகு வரேன் :)))))))
    சமோசா ட்ரீம்ஸ் 4அதிரா//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRKUSF5aWdBGdnh7b06UQmdPclocK6sFEHKK7hM5qVYGDVIXHZjdDVjve0Rvw[/im]

    ReplyDelete
  51. எண்டாலும் காபேஜ் போண்டாவா அனியன் பஜ்ஜியா எண்டு பார்த்தா அனியன் பஜ்ஜிதான் முன் வரிசைல நிக்குதுஊஉஉஉஉ.........;))))))

    உங்க லாப் எலியாருக்குதான் இந்தமுறை அதிக மதிப்பெண்கள்..........;))

    ஹையோ பூஸ் முறைக்குது....:))))

    ReplyDelete
  52. இளமதி said...
    அதிரா......
    அருமையான பாடலோடு ஆரம்பம். மல்லிகைக்கு மயக்குது........:)))
    எனக்கும் புடிக்க்கும் பாட்டுத்தான். முதல்ல அதுக்கு நன்றி!//

    [co=" dark green"]ஆ.... யங்மூன் வாங்கோ வாங்கோ....... மல்லிகையை வச்சு வச்சே எல்லோரும் மயக்கினம்:)) நான் பாடலைச் சொன்னேன்:).[/co]

    ReplyDelete
  53. ஓ இங்கினதான் நிக்குறீங்களோ---:))

    ReplyDelete
  54. அஞ்சு வீட்டிலயும் இப்ப நிறைய லாப் எலிகள் இருக்கினம் போல:))))))

    ReplyDelete
  55. நான் பின்னூட்டம் போடேக்கை கணக்கா கட்டிலுக்கு கீழ இருந்து பூஸ் என்னை முறைக்கிரதை சொன்னன்:)))

    ReplyDelete
  56. அதிரா அஞ்சுகிட்ட சொல்லுங்கோ நிபிக்கு பொண்ணுதேடி கவலைப்பட வேணாம் எண்டு. எங்கட வீடில ஒரு ஆள் இருக்கிறா. அட அவ புறோக்கர்ர்ர்ர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருதரா ’கொண்டு’ வந்து கொண்டுபோவா.
    பிரச்சனை தீர்ந்திடும்...:)))))

    ReplyDelete
  57. [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTBflyAYo6x-85Gn7xWSKnTtk2jjSdtvgJHMsumsyryizgfeee_[/im]

    ஆஆ athiraa:)) நீங்க தானா .அது ..திருமலையல் தேடறாங்க உங்கள

    ReplyDelete
  58. ஹையா !!! மணி தம்பிக்கு ஸ்பெஷல் வெஜ் சமோசா ரெடி செய்றேன் ....//////

    ஐ..... அக்கா எண்டா அக்காதான்! பாருங்கோ தம்பி மேல அக்காவுக்கு எவ்வளவு பாசம் எண்டு! அக்கா, உங்கள் மகனுக்கு நான் பொம்பிளை பார்க்கிறது பார்க்கிறதுதான்! பிறகு ஈஃபில் டவர் 2 ம் மாடியில மண்டபம் எடுத்து ஜாம் ஜாம் எண்டு கலியாணம் நடத்திறம்! ஓகே :)

    ReplyDelete
  59. நல்ல பகிர்வு.கடலை மாவு வாங்க மறந்தது நல்லதாக போய்விட்டது,
    இல்லையெனில் மைதா மாவு வைத்து முயற்சித்து இருக்கமாட்டீர்கள்..
    கடலைமாவு வயிற்றை கொஞ்சம் பிசையும் மைதா மாவு கொஞ்சம் பரவாயில்லை.சூப்பரூ சூப்பரூ...

    முட்டை கோஸ் பிரியர் எங்க வீட்டிலும் உண்டு எப்பவும் என் ஃப்ரிட்ஜில் தவறாமல் இருக்கும்.சூப்பில்,சாலட்டில்,கூட்டில்,பொரியலில்,நூடுல்ஸ்,பாஸ்தா,ஃப்ரைட் ரைஸ் என்று முட்டைகோஸ் முக்கிய அங்கம் வகிக்கும்..

    ReplyDelete
  60. அஞ்சு அக்கா, உங்கள் மகனுக்கும், நான் பார்க்கப் போற பொம்பிளைக்கும். கலியாணம் நடக்க இருக்கும் மண்டபத்தைப் பாருங்கோ அக்கா! எப்படி மின்னுது எண்டு! - ஹா ஹா ஹா சில பேருக்கு மனசுக்குள்ள ஒரே ஃபயர் வேர்க்ஸாம் :)))

    [im]http://travelhotelsholidays.com/wp-content/uploads/2012/05/Menara-Eiffel-dan-Sungai-Seine.jpg[/im]

    ReplyDelete
  61. சமைக்கத் தெரியாத ஆக்களுக்கு 'பழக்கலாம்':) அதிராவ்! ஆனா முன்பே சமைச்சுப் பழகினாக்கள் எல்லாரும் உங்க தோழி கணவர் கதைதான்! அவ்வ்வ்வ்வ்வ்...

    எங்க வீட்டில் இது இப்படி இருந்திருக்கணும் என்றெல்லாம் குறை சொல்லமாட்டார்! :)

    உங்க வீட்டு ஆனியன் பஜ்ஜி சூப்பரு! முட்டைக்கோஸ் எங்க வீட்டிலும் ஃபேவரிட் வெஜிடபிள். முட்டைக்கோஸ் பொடியாக அரிந்து, மசாலா போட்டு வதக்கி, கோதுமைமாவில் போட்டு பிசைந்து சப்பாத்தி செய்யுங்கோ. முட்டைக்கோஸ் கோஃப்தா கறி செய்யுங்கோ. ரெசிப்பிக்கா குறைச்சல்? கலக்குங்க. :)

    இளமதிக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லாப் பதிவும் படிச்சேன், கருத்துப் போட முடியலை.ப்ளீஸ் அஜீஸ்! ;) :)

    ReplyDelete
  62. சமைக்குறதும், சாப்பிடுவதுமா நீங்க நடத்துங்க.... ஒலகம் அழிய இன்னும் 2 மாதம் தான் இருக்கு...

    ReplyDelete
  63. நல்ல பதிவு.
    அருமை

    பாராட்டுக்கள்
    வாழ்த்துகள்
    பகிர்வுக்கு நன்றிகள்

    பிரியமுள்ள
    கோபு அண்ணா





    என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகத்தான் நினைத்தேன். இருப்பினும்
    மனசு கேட்கவில்லை. அதனால்

    தொடரும்....

    ReplyDelete
  64. புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின்

    ”ம ல் லி கை ........
    எ ன்
    ம ன் ன ன்
    ம ய ங் கு ம்
    பொ ன் னா ன
    ம ல ர்
    அ ல் ல வோ !


    பாட்டு சூப்பரோ சூப்பர்.

    எல்லோரையுமே மயக்கும் பாடல் தான். காட்சிகளும் அதுபோலவே.

    இனிமை இனிமை இனிமை. ;)))))

    ReplyDelete
  65. என்னா பெரிசூஊஊ!!! க்கு
    காட்டியுள்ளதைப்பிடிக்க ஒரு கை பத்தாது பொலிருக்கே. அம்மாம் பெரிசுதான்,

    ReplyDelete
  66. அடுத்ததிலே ஜோடியா ரெண்டூஊஊஊ

    ஒவ்வொண்ணும் ரெண்டரைக்கிலோவா

    அடேங்கப்பா ! ;)


    லெஃப்டிலே உள்ளது நாட்டுக்கோஸ் போலவும்

    ரைட்டிலே உள்ளது ஊட்டி கோஸ் போலவும் தெரியுது.

    அது என்னா, இது என்னான்னு தானே கேட்கிறீங்க>>>>>>>

    சொல்றேன் சொல்றேன் சொல்றேன்

    தொடரும்......

    ReplyDelete
  67. எங்க ஊரிலே இதை
    கோஸ்
    அல்லது
    முட்டக்கோஸ்
    அல்லது
    முட்டைக்கோஸ்ன்னு
    சொல்லுவோம்.

    இதுலே நாட்டு முட்டக்கோஸ்
    ஊட்டி முட்டக்கோஸ் ரெண்டு
    வகை உண்டு.

    நாட்டு முட்டக்கோஸ் என்பது
    தலை நரைத்துப்போன கியவி
    தன் தலைமுடியை அள்ளி முடிஞ்சாப்போல இருக்கும்.

    பொதபொதன்னு பொலபொலன்னு இருக்கும். பார்க்கப்பெரிசா இருக்குமே தவிர வெயிட்டே இருக்காது. ஒருவித அடர்த்தியே இருக்காது. இது ருசிப்படாது.

    ஊட்டி முட்டக்கோஸ் என்பது
    குமரிப்பொண்ணு சீவிமுடிச்சு சிங்காரிச்சு
    கிண்ணுனு கொண்டைபோட்டது போல அடர்த்தியா அழகாக கெட்டியா ஜிம்மினு இருக்கும்.

    தொடரும்......

    ReplyDelete
  68. ஹி ஹி ஹி.....
    மல்லிகை என் மன்னனா...ஆவ்வ்வ்
    ஜூப்பர் ஜோங்குதேன்

    ReplyDelete
  69. வெளி நாடுகளில்.. பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் கிச்சினில் நிற்கிறார்களாம்:)..
    ????????????????????????????????

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    எங்க வீட்ட அடிக்கடி நான் நிற்கிறேனே அப்போ எங்க வீடும் வெளிநாடா..இல்லியே எங்க அப்பத்தா அப்பிடி சொல்லித் தரல்லியே....

    ReplyDelete
  70. எனக்குச் சின்னனிலிருந்தே கபேஜ் பைத்தியம் இருக்கு
    ////////////////////////////////////

    ஆமா இங்கிலீசி கா(க)பேஜ் என்னு வேறத்த சொல்லுவாங்களே அப்போ நீங்க அந்த மாதிரி ஆளா அவ்வ்வ்வ்வ்
    இது தெரியாமப் போச்சே

    ReplyDelete
  71. இப்பெல்லாம், கைரேகை பார்க்கினமாம்:) அதுதான்
    நாங்க ரொம்ப விபரமில்ல:) கிளவுஸ் போட்டிட்டோம்:)
    //////////////////////////////////

    நான் பறந்து வந்தேனே....
    ரொம்ப குளிரா இருந்திச்சு இது சரிப்பட்டு வராது என்னு நம்ம ஊருக்கே கிளம்ப்பிட்டேன்....

    ReplyDelete
  72. நம்ம கத்திய கொண்டுபோய் ரெண்டுலேயுமே நான் வெச்சுப்பார்த்திருக்கிறேன்.

    காய்கறி வாங்கி வருவதும் அதிலே கத்திய வெச்சு வெட்டித்தருவதும் தினமும் என் வேலைகள் அல்லவோ!

    நாட்டு முட்டகோஸின் வண்டவாளம் நறுக்கும்போதே தெரிஞ்சு போய்விடும்.

    தலைமுடி சீவும் போது தலைமுடி உதிருவதுபோல, வெட்ட வெட்ட பெப்பரப்பேன்னு கட்டாகி விழும். கட்டுக்கே அடங்காது. வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

    நம்மாளு ஊட்டி முட்டைக்கோஸ் அப்படி அல்ல. கத்தியப்போடப்போட சும்மா கிண்ணுன்னு எதிர்த்து நின்னு, நம்மக்கத்தியையே அசர வெச்சுடும்.

    அது நல்ல பச்சை நிறமாக இருக்கும்.
    உருண்டு திரண்டு ரெளண்ட் ஷேப்பிலே இருக்கும். வெட்டவெட்ட சும்மா அடர்த்தியா வரும். பொலபொலன்னு உதிராது. அதன் இலைகளெல்லாம் ஒறுமையாக சேர்ந்து ஒன்றொடொன்று ஒட்டி உறவாடிக்கிட்டு இருக்கும்.

    நறுக்கவே ஆசையாக இருக்கும்.

    தூக்கிக் கையிலே புடிச்சா சும்மா கிண்ணுனு வெயிட்டா இருக்கும், இந்த ஊட்டி உருண்டை கோஸ்.

    நறுக்கினா நிறைய இருக்கும். நிறைவா இருக்கும். ருசியா இருக்கும்.

    தொடரும்......

    ReplyDelete
  73. “மழைக்கால இருட்டானாலும், மந்தி கொப்பிழக்கப் பாயாதாம்”
    ////////////////////////////////

    மந்தி என்னு யாரை சொல்லுறீங்க இருக்கோ ஒரு கம்லைண்ட் போட்டுட்டு வாரேன்
    யாரப் பார்த்து என்ன வார்த்த சொன்னீங்க
    கண்ணத்துல போட்டுக்கோங்க

    ReplyDelete
  74. ஆண்கள் கிச்சன் வேலைகள் செய்வது இன்று நேற்று அல்ல காலம் காலமாக உள்ளக்க்தை தாங்க.

    நளன் என்பவனை வைத்து நளபாகம்னே சொல்க்றார்களே, புராணங்க்களில்.

    தமய்ந்தி பாகம்ன்னு எவனாவது சொல்றானா?

    தொடரும்.....

    ReplyDelete
  75. அதுமட்டுமில்லீங்கோ, பெண்கள் பொதுவாக வீட்டில் உள்ள ஒரு 3-4 பேர்களுக்குன்னா சமைப்பாங்க.

    பெரும்படியான ஹோட்டல் சமையல், கல்யாண சமையல் எல்லாமே ஆண்கள் தானே செய்யுறாங்க.


    தொடரும்.....

    ReplyDelete
  76. //“மழைக்கால இருட்டானாலும், மந்தி கொப்பிழக்கப் பாயாதாம்”//

    என்னவோ பழமொழியெல்லாம் எடுத்து உடறீங்க. அதற்கு அர்த்தமும் எழுதினால் நல்லா விளங்குமோல்யோ!

    மொத்தத்தில் நல்ல பதிவூஊஊஊஊஊ

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிவுகள் வெளியிடும் போது, மெயில் மூலம் லிங்க் கொடுத்து தகவல் கொடுத்தால் உடனே ஆஜராக வசதியாக இருக்கும்.

    நான் என் டேஷ் போர்டு பக்கமெல்லாம் போவதே கிடையாது. இன்றைக்கு என் பின்னூட்டத்தில் தாங்கள் சொன்னதால் வந்து பார்க்க முடிந்தது.

    தாங்கள் நேரிடையாகத் தரமுடியாவிட்டாலும் நம் தோழிகள் யார் மூலமாவது [இது வேற மூலம்]
    தெரிவித்தால் நல்லதூஊஊஊஊஊ.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  77. - ஹா ஹா ஹா சில பேருக்கு மனசுக்குள்ள ஒரே ஃபயர் வேர்க்ஸாம் :)))//

    ஹாஆஅ :)))))))) .....அதீஸ் நல்லா பாருங்க மண்டபத்தை

    ReplyDelete
  78. இளமதி said... 50

    ஆனா குளிர் காலம் வந்தாப்பிறகு வாங்குறதுக்கு கொஞ்சம்ம் ஓசனை;)
    நிறையப்பேர் அங்கினை ஒழிஞ்சிருப்பினம்ம்ம்ம்ம்:))))

    [co=" dark green"]இல்ல.... யங்மூன் எங்கள் ஏசியன் கடைகளெனில் பயம்தான், ஆனா இங்கத்தைய சூப்ப மார்க்கட்டுகளில்.. இருக்கவே முடியாது... ஒரு குட்டிப் பூச்சிகூட இருக்காது, இருந்தால் அவ்ளோதான்:).[/co]

    ReplyDelete
  79. இளமதி said... 51
    அப்ப அவர் அனியன் பஜ்ஜி செய்தப்போ நீங்கதான் லாப்எலியோ:)))))))
    [co=" dark green"]ஹா..ஹா..ஹா.. ரொம்ப விபரமாத்தான் இருக்கிறீங்க:).[/co]

    ReplyDelete
  80. இளமதி said... 53
    எண்டாலும் காபேஜ் போண்டாவா அனியன் பஜ்ஜியா எண்டு பார்த்தா அனியன் பஜ்ஜிதான் முன் வரிசைல நிக்குதுஊஉஉஉஉ.........;))))))

    உங்க லாப் எலியாருக்குதான் இந்தமுறை அதிக மதிப்பெண்கள்..........;))

    ஹையோ பூஸ் முறைக்குது....:))))
    [co=" dark green"]தன் மாணவர் முதலிடம் பெற்றால், சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்குப் பெருமைதானே:)) எங்கிட்டயேவா:))[/co]

    ReplyDelete
  81. அதிரா அஞ்சுகிட்ட சொல்லுங்கோ நிபிக்கு பொண்ணுதேடி கவலைப்பட வேணாம் எண்டு. எங்கட வீடில ஒரு ஆள் இருக்கிறா. அட அவ புறோக்கர்ர்ர்ர். ///



    young moon வேணாம் :)) அந்த பூசார் மியாவ் ப்ரோக்கர் லபக்னு விழுங்கிடுவா அவ்வ்வ்வவ் ..
    [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQNeCaAkLdhwdJKgYV4t-vNBRPRtDqCZ_AN7_XAVogi4M09FClFGg[/im]

    ReplyDelete
  82. இளமதி said... 57
    நான் பின்னூட்டம் போடேக்கை கணக்கா கட்டிலுக்கு கீழ இருந்து பூஸ் என்னை முறைக்கிரதை சொன்னன்:)))
    [co=" dark green"]அவ்வ்வ்வ்வ்வ்:)) அது கோபம் வராட்டிலும்:) இடைக்கிடை முறைக்கோணும்:) அப்பூடியெண்டால்தான் பயப்புடீனம்:))..இல்லாட்டில் வால்ல ஏறி உளக்கிக் கொண்டு [போகப்பார்க்கினம்:)) விட்டிடுவமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... ஆ.. யங்மூன் பயந்து ஓடப்போறா:)) நான் உப்பூடித்தான் பயந்திடாதீங்கோ:).[/co]

    ReplyDelete
  83. angelin said...

    young moon வேணாம் :)) அந்த பூசார் மியாவ் ப்ரோக்கர் லபக்னு விழுங்கிடுவா அவ்வ்வ்வவ் ..

    [co=" dark green"]ஏன் அஞ்சு அப்பூடியெண்டால்ல். அந்தப் புரோக்கர் மியாவையே(யங்மூனின்:)) பேசிப் பொருத்தி விட்டால் என்ன?:)) நிபிக்கு வாழ்க்கையில எதிரிப்:) பயமே இருக்காதெல்லோ?:)) எப்பூடி என் கிட்னியா?:))[/co]

    ReplyDelete
  84. angelin said... 59
    ஆஆ athiraa:)) நீங்க தானா .அது ..திருமலையல் தேடறாங்க உங்கள

    [co=" dark green"]உதென்ன உது கபேஜ் ஒட்டி சுட்ட களைப்போ?:)) நாக்கெல்லம் வெளில வந்திருக்கே:)).. கொஞ்சம் ஐஸ் வோட்டர் அடிச்சு எழுப்பிப் பாருங்கோ:))[/co]

    ReplyDelete
  85. மாத்தியோசி மணி மணி said... 60
    ஹையா !!! மணி தம்பிக்கு ஸ்பெஷல் வெஜ் சமோசா ரெடி செய்றேன் ....//////

    ஐ..... அக்கா எண்டா அக்காதான்! பாருங்கோ தம்பி மேல அக்காவுக்கு எவ்வளவு பாசம் எண்டு! அக்கா, உங்கள் மகனுக்கு நான் பொம்பிளை பார்க்கிறது பார்க்கிறதுதான்! பிறகு ஈஃபில் டவர் 2 ம் மாடியில மண்டபம் எடுத்து ஜாம் ஜாம் எண்டு கலியாணம் நடத்திறம்! ஓகே :)//

    [co=" green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் இப்பவே மணியம் கஃபே வாசல்ல தீக்குளிக்கிறது குளிக்கிறதுதான்:).. வெள்ளைப்பேப்பரில கை எழுத்துப் போட்டு, 15 பக்கமாவது.. அடியிலிருந்து என் 5 பவுண் சங்கிலி போனதிலிருந்து:) அத்தனையையும் எழுதி வச்சிட்டுத்தான் தீயில வலது காலைத் தூக்கி வைப்பன்:)..

    ஆவரங்கால்ல அந்தப் பிள்ளை உவர் எப்ப வருவார், எப்ப கூட்டிப்போவார் எனக் காத்திருக்க:)) இங்கின என்னடாவெண்டால்ல்.. ஈபிள் டவரில கல்யாணமாம்:)).. அதுக்கு தான் புரோக்கராம்:)) கர்ர்ர்ர்ர்ர்:)..

    அஞ்சூஊஊஊ.. நான் வேணுமெண்டால்ல்.. வள்ளிக்கெனச் சொல்லியிருக்கும் வைரத்தோட்டைப் போட்டு:) எலிக்குட்டியைக் கண்டு பிடிச்சுக் கட்டி வைப்பன் நிபிக்கு:)) அவசரப்படாதையுங்கோ..:))..

    என் பேச்சை ஆர்தான் கேட்கினம்.. ஹையோ முருகா இந்தக் காலத்தில நன்மைக்கே காலமில்லைச் சாமீஈஈஈஈஈ...

    ஆசை காட்டி ஈபிள் டவரில ஏத்தி:) சென்னியில தள்ளிவிடும் ஐடியாவாக்கும்:)) எனக்கெதுக்கு ஊர் வம்பு:)).. ஆஆஆஆ நெஞ்சு பொறுக்குதில்லையே.. இருந்தாலும் விடமாட்டேன்ன்ன்.. ஃபயர் எஞ்சினுக்குச் சொல்லி விடுங்கோ உடனே:)))[/co]

    ReplyDelete
  86. [co=" dark green"]வாங்கோ ஆசியா...உண்மைதான் கடலை மாவை விட மைதாதான் சூப்பர் என நினைக்கிறேன்...

    மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  87. மாத்தியோசி மணி மணி said... 62
    அஞ்சு அக்கா, உங்கள் மகனுக்கும், நான் பார்க்கப் போற பொம்பிளைக்கும். கலியாணம் நடக்க இருக்கும் மண்டபத்தைப் பாருங்கோ அக்கா! எப்படி மின்னுது எண்டு! - ஹா ஹா ஹா சில பேருக்கு மனசுக்குள்ள ஒரே ஃபயர் வேர்க்ஸாம் :)))

    [co=" dark green"]ஹையோ முருகா உந்தக் கொடுமையைக் கேட்க ஆருமே இல்லையோ:)).. இன்னும் பொண்ணு பார்த்து முற்றாகவில்லை:)) அதுக்குள் மண்டபம் புக் பண்ணிட்டாராமே:)))...

    ஓவர் ஸ்பீட்டைப் பார்த்தால்ல்ல்..

    இது நல்லதுக்கில்ல அஞ்சு:)) சொன்னால் கேட்கோணும் சொல்லிட்டன்:))..

    ஹையோ.. இது கன்ஃபோமா.. நிபியின் அம்மாவுக்கு:) ஆரோ சூனியம் செஞ்சிட்டினம்:)).. அதுதான் டக்கெனப் பெயரையும் டபிளாக்கி:)).. போட்டோவையும் மாத்தியாச்சு:))... எங்கிட்டயேவா:))..

    நோஓஒ நான் மாத்தி ஓசிச்சிட்டேன்:)) தீக்குளிக்கப் போவதில்லை:).. ஹை கோர்ட்டுக்குப் போறேன்ன் இப்பவே:))[/co]

    ReplyDelete
  88. அமெரிக்காவில, ஜேர்மனியில பாத்திரம் நொருங்கும் சத்தம் கேட்குதே ஜாமீ// karrrrr..... Ithellem romba overnnu enga Mahi madam solla sonnanga.
    Nice recipe atheese. I will try this ver soon.

    ReplyDelete
  89. அருமையான பாடல் அது அதீஸ்.

    ம்.. கோவா பிடிச்சிருக்கிற கை... !! டௌட்டா இருக்கே!!

    ஆஹா! நல்லாத்தான் பழக்கி இருக்கிறீங்கள் அதீஸ். பா...வம். ;))

    ரெண்டு பஜ்ஜியும் சுப்பரா வந்திருக்கு.

    10 றாத்தல்!!! ஹ்ம்! ஏதாவது ஐடியா கிடைச்சால் திரும்ப வாறன்.

    மந்தி ரெண்டும் மரத்தில இருக்கிற மாதிரியே தெரியேல்ல அதீஸ். !!!

    ReplyDelete
  90. முட்டக்கோஸ் பற்றிய பதிவு.
    அதை நறுக்க கத்தி தேவை.
    நறுக்க நல்ல அனுபவமும் தேவை.
    இவற்றுடன் ரசனையும் தேவை என்பேன்.

    அதாவது கோஸ் கெட்டியாக வெயிட்டாக கிண்ணென்று ஜெம்மென்று உருண்டு திரண்டு ஊட்டி கோஸ்போலவே வட்ட வடிவில் சூப்பராக உள்ளது.

    கத்தியும் புத்தம்புதியதாக பளபளப்பாக பதம் பார்க்கத் தகுந்ததாக உள்ளது.

    நறுக்கிடும் எனக்கோ எதிலும் ஓர் ரசனை உண்டு. என் கத்தியை உபயோகிப்பதிலும் தான்.

    அவசரப்படாமல் பொறுமையாக மிகவும் நிதானமாக கலை உணர்ச்சியுடன் அதை [கத்தியை] பயன் படுத்துவேன்.

    வெட்டப்படும் முட்டகோஸ் முழுவதும், சதசதவென்று இல்லாமல், அப்படியே சின்னச்சின்ன டைமன் கற்கண்டுகள் போல அழகாகத் துண்டாகி அற்புதமாகக் காட்சியளிக்கும்.

    அந்த என் கத்தியே பேசுவதாக் ஓர் கவிதை எழுதினேன். ப்ளாக்கில் அதை சோதனைப்பதிவென முதன்முதலாக வெளியிட்டேன்.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2010/10/blog-post.html

    முதல் அனுபவம் பற்றி இதோ இக்கே:

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html

    நீங்க அவசியம் இது ரெண்டையும் படிக்கோணும். இந்தத்தங்களின் கோஸ் பதிவுடன் சம்பந்தப்பட்டவை, என் கத்தியுடனும்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  91. //எனக்கு ஒரு இந்திய - கேரள நண்பி இருக்கிறா, அவவின் ஆத்துக்காரரும் டாக்டர். //

    அப்போ !!!!!!!!! ;))))))) OK OK

    GOOD NEWS; GLAD NEWS.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  92. Mahi said... 63
    [co=" purple"]வாங்கோ மகி வாங்கோ.. ஜெட்லாக்கா இருக்கோ இன்னமும்?.. நன்கு ரெஸ்ட் எடுங்க...[/co]

    சமைக்கத் தெரியாத ஆக்களுக்கு 'பழக்கலாம்':) அதிராவ்! ஆனா முன்பே சமைச்சுப் பழகினாக்கள் எல்லாரும் உங்க தோழி கணவர் கதைதான்! அவ்வ்வ்வ்வ்வ்...

    [co=" purple"]அது உண்மைதான் மகி. ஆனா இன்னுமொன்று அவர்கள் சமைக்கும்போது நாம் கூட இருந்து கிளீனிங்கையும் செய்யலாமே... ஆடிப்பாடிக் கதைச்சு வேலை செய்யும்போது களைப்பும் இருக்காது குறையும் வராமல் போயிடும்:))...

    அவர் சமைக்கட்டும் என்றிட்டு நாம ரீவி பார்த்தால் அப்பூடித்தானே ஆகும்.. அதனால ஆரையும் குறையும் சொல்ல முடியாது.. அது அவரவர் மனதைப் பொறுத்தது.
    “எண்ணம் அழகானால் எலாம் அழகாகும்”:).[/co]

    ReplyDelete
  93. Mahi said... 63

    [co=" purple"]ஹா..ஹா... டெய்லி கபேஜ் சமைச்சு அலுப்படைய வச்சிடப்படா என்பதில் ஜாக்கிரதையாக இருக்கிறேன். அதிலயும், சைவமாச்சே. அசைவ நாட்களெனில்.. முட்டை போட்டு, றால் போட்டுச் சமைத்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

    நன்கு, பேப்பரில் சுத்தி, பொலித்தீனில் போட்டு வைத்திருக்கிறேன், அப்படியே ஃபிரெஷாக இருக்கிறார். [/co]

    இளமதிக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லாப் பதிவும் படிச்சேன், கருத்துப் போட முடியலை.ப்ளீஸ் அஜீஸ்! ;) :)
    [co=" purple"]தெரியும் மகி, ஊரிலிருந்து இடையிடையாவது எட்டிப் பார்த்ததே பெரிய விஷயம்...

    இளமதிக்கு ஒரு வைர மூக்குத்தி கொடுக்கோணும் பேர்த்டே பரிசாக(கோபு அண்ணன் சொன்னவர்:)) அதுதான் இப்போ கடுமையா உளைக்கிறேன்:)).

    மியாவும் நன்றி மகி.[/co]

    ReplyDelete
  94. *anishj* said... 64
    சமைக்குறதும், சாப்பிடுவதுமா நீங்க நடத்துங்க.... ஒலகம் அழிய இன்னும் 2 மாதம் தான் இருக்கு...

    [co=" purple"]வாங்க கவிக்கா வாங்க...

    கடவுளே!!! நான் மறந்தாலும்.. 2012 டிஷம்பரை அப்பப்ப ஆராவது ஞாபகப் படுத்திக்கொண்டே இருக்கினமே இறைவா!!!.. இதுக்குத்தான் சொல்லுவினம், மா விதை போட்டா.. புளியமரமா முளைக்கும் என:))).. அப்பூடி ஆச்சே என் நிலைமை:))

    அடிக்கடி காணாமல் போகக்கூடா கவிக்கா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    மியாவும் நன்றி. இண்டைக்கு எங்க பப்பியைக் காணேல்லை:).[/co]

    ReplyDelete
  95. வை.கோபாலகிருஷ்ணன் said... 65
    என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகத்தான் நினைத்தேன். இருப்பினும்
    மனசு கேட்கவில்லை. அதனால்

    தொடரும்....
    [co=" purple"]வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. அதெப்பூடி நீங்க எஸ்கேப் ஆகலாம்:)) ஆக விட்டிடுவமோ நாங்க?:).. இப்போ ஆப்பிழுத்த குரங்காரின் நிலையாச்சே கோபு அண்ணனின் நிலைமை:).

    [/co]

    ReplyDelete
  96. வை.கோபாலகிருஷ்ணன் said... 68
    அடுத்ததிலே ஜோடியா ரெண்டூஊஊஊ

    ஒவ்வொண்ணும் ரெண்டரைக்கிலோவா

    அடேங்கப்பா ! ;)
    லெஃப்டிலே உள்ளது நாட்டுக்கோஸ் போலவும்
    ரைட்டிலே உள்ளது ஊட்டி கோஸ் போலவும் தெரியுது

    [co=" purple"]நாட்டுக் கோஸ் ஊட்டிக்கோஸ் சூப்பர் பெயர்கள்...
    இரண்டுக்குமான விளக்கம் அருமை... விரிவுரையாளராக இருப்பீங்களோ எனும் சந்தேகம் வருது.. அவ்ளோ தெட்டத் தெளிவாக ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுக்கிறீங்க.... அஞ்சுவின் பக்கத்திலும் அவதானித்தேன். மிக்க நன்றி.

    ஆனாலும் கோபு அண்ணன்.. நீங்க சொன்ன ஊட்டிக்கோஸ் அல்ல இது, அந்த கிழவியின் தலை முடித்த:) நாட்டுக்கோஸ்தான் இது.

    ஊரில ஊ.கோஸ் சுவைதான். ஆனா இங்கு என்னவோ அதில் சுவை இல்லை, உரம் போட்டு வளருகிறமையாலோ என்னவோ..கல்லுப்போல இருக்கும், வெட்டுவதும் கடினம், வறைக்கும் சரிவராது. வருடக்கணக்கில் பிரிஜ்ஜில் இருந்தாலும் பழுதாகாது:))(ஒரு கதைக்குச் சொன்னேன்:)).

    ஆனா இது, நீங்க சொன்ன நாட்டுக்கோஸ், சொவ்ட்டாக இருக்கும், வெட்ட இலகு, எல்லாத்துக்கும் வளைந்து கொடுக்கும்... அதாவது இலகுவில் அவியும், ஒரு வெக்கை போதும் உடனே வெந்திடும்.. சுவையும் இங்கு நன்று.

    இலங்கையில் “கோவா” என்றுதான் இதனை அழைப்போம். ஏன் இப்பெயர் வந்ததெனத் தெரியவில்லை. ஒருவேளை இது முன்ன முன்னம் பயிரிடப்பட்ட இடம். கோவா ஆக இருக்குமோ?:).

    ஏனெனில், மஞ்சள் பருப்பை(டால், லெண்டில்ஸ்) நாம் “மைசூர் பருப்பு” என்றுதான் இலங்கையில் அழைப்போம்.[/co]

    ReplyDelete
  97. வை.கோபாலகிருஷ்ணன் said... 74
    நம்ம கத்திய கொண்டுபோய் ரெண்டுலேயுமே நான் வெச்சுப்பார்த்திருக்கிறேன்.

    காய்கறி வாங்கி வருவதும் அதிலே கத்திய வெச்சு வெட்டித்தருவதும் தினமும் என் வேலைகள் அல்லவோ!
    [co=" purple"]ஆஹா நம் நாடுகளில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இதுதான் நடக்குதுபோல, எங்கட வீட்டிலும், அப்பாவுக்குச் சமைக்கத் தெரியாது, ஆனா மெல்லிதாக வெட்டிக் கொடுக்கும் வேலைகள் எல்லாம் அவரிடம்தான் ஒப்படைக்கப்படும்(விடுமுறை நாட்களில்:)).. வாழைப்பொத்தி கெத்திடுவதிலிருந்து:))..[/co]

    வை.கோபாலகிருஷ்ணன் said... 76
    ஆண்கள் கிச்சன் வேலைகள் செய்வது இன்று நேற்று அல்ல காலம் காலமாக உள்ளக்க்தை தாங்க.

    [co=" purple"]சும்மா சொல்லாதீங்கோ கோபு அண்ணன்.. இப்பத்தைய ஜெனரேஷந்தான் மாறி வருகிறார்கள்.. முன்னைய ஆட்கள் எங்கே கிச்சினுக்குள் போனார்கள்? மிக அருமையாக சில குடும்பங்களில் மட்டும்தானே?

    பெண்கள்தான் கிச்சின் வேலை செய்ய வேண்டும், பெண்கள்தான் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும், ஆண்கள் உழைப்பது மட்டும்தான் எனும் கொள்கை தானே இருந்துது.

    ஆண்களுக்கு சமைத்து பரிமாற வேண்டும், தேநீரைக் கூட.. கொண்டுபோய்க் கையில் கொடுக்கோணும் இப்படித்தானே ஆண்களின் வளர்ப்பு இருந்துது. எனக்கு அது கொஞ்சமும் பிடிப்பதில்லை.

    ஏன் இப்பகூட
    என் இன்னொரு ஒரு இந்திய நண்பியின் கணவர் நன்கு சமைப்பார்... அவர்கள் இருவரும் டாக்டர்கள். கணவரின் பெற்றோர் வந்து நின்றபோது, கணவருக்கு கிச்சினுக்குள் போக தயக்கமாம், ஏனெனில் அவரின் தந்தை பேசுவாராம், நான் சமைக்கவில்லை, இப்போ உன்னைச் சமைக்க வைக்கிறாரா உன் மனைவி என்பதுபோல:).

    எம் வயதை ஒத்த இன்னொரு டாக்டர் குடும்பம், அவர்கள் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள். என் கணவரின் இன்னொரு நண்பர், இலங்கையர்.. அவர்கள் வீட்டுக்கு போயிருந்தபோது டின்னர் கொடுத்தார்களாம்,(நன்கு பழகிய ஃபமிலி).

    அப்போ சாப்பிட்டு முடிந்ததும், நண்பர் பிளேட்டை எடுத்துக் கழுவப் போனராம்.. அப்போ அந்த சூடான் டாக்டர் சொன்னாராம்ம்.. வை வை.. அதெல்லாம் பெண்களின் வேலை என.

    இதைக் கேட்டு, கணவரின் நண்பர் வந்து பேசிக்கொண்டிருந்தார், இந்தக் காலத்திலும் அவர் இப்படி இருக்கிறாரே... அது பாவமில்லையா என.

    இப்படி நிறையவே சொல்லலாம். ஆனா இக்காலம் நிறையவே மாறிவிட்டது.. சமைக்கத் தெரியாவிட்டாலும் நிறையப் புரிந்துணர்வு இருக்கிறது.. அதுதானே முக்கியம். [/co]

    ReplyDelete
  98. [co=" dark green"]ஐ..ஐ... இமுறை மீதான் 100 ஊஊஊஊஊஉ.. பரிசு எனக்கேஏஏஏஏஏஏ:))

    [/co]

    [im]http://www.hotimg.com/direct/ZNjfj9Z.gif[/im]

    ReplyDelete
  99. ஆஆ ரெண்டு நாள் லேட் சாரி பூஸ் மிஸ் பெஞ்ச் மேல ஏறி நிக்க சொல்லாதீங்க :))

    இந்த பாட்டு ரொம்ம்ம்மம்ம்ம்ப புடிக்கும் அதுவும் வாணி ஜெயராம் குரல் ரொம்ப இனிமை. இந்த பாட்டும் ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல் பாட்டும் மை ஆள் டைம் பேவரிட்.

    ReplyDelete
  100. //இதில அஞ்சு, கீரி, நான் எல்லாம் நல்ல அடக்கொடுக்கமாக:)எந்நேரமும் கிச்சினில் நின்று எல்லாம் சமைப்போம்ம்:).. //

    வெல் said பூசாரே. தைரியமா சொல்லிட்டு அப்புறம் எதுக்கு கட்டிலுக்கு கீழே போய் ஒளிஞ்சுக்குறீங்க?

    அமெரிக்க ஜெர்மனி நியுசீலாந்து ன்னு எங்கே இருந்து தாக்குதல் வந்தாலும் நம்ம சமாளிச்சிட மாட்டோம் அஞ்சுவின் ரவா லட்டு இருக்கும் பொது ஒய் வொர்ரி :)) அஞ்சு சாரி எவ்ளோ நாளைக்குத்தான் பூஸார உருட்டுறது சோ செம் சைட் கோல் போட்டுட்டேன் :)))

    ReplyDelete
  101. உங்க சின்ன வயது அனுபவங்கள் படிக்க நல்லா இருந்திச்சு பூஸ்

    உங்க லாப் எலியார் பண்ணின ஆனியன் பஜ்ஜி சூப்பர். எங்க வீட்டு லாப் எலியார் திருமணத்துக்கு முன்னே சமையல் செஞ்சதுடன் அப்ப்புறம் கிச்செனுக்கு முழுக்கு போட்டுட்டார். ப்ரெட் மசாலா ன்னு ப்ரெட் வெங்காயம் முட்டை போட்டு ஒரு டிபன் மட்டும் இப்பவும் பண்ணுவார் . அதுக்கே என் பையன் என் நண்பி பொண்ணு எல்லாம் அவர் சமையல புகழ்ந்து என் சமையல காறி :)) துப்பிட்டு இருக்காங்க:)) அவர் முழு சமையலும் பண்ண ஆரம்பிச்சா ......:))

    ReplyDelete
  102. எனக்கும் காபேஜ் ரொம்ப புடிக்கும். எங்க அம்மா உளுந்து வடை பண்ணும் போது வெங்காயம் போட மாட்டாங்க. காபேஜ் தான் சின்னதா நறுக்கி போடுவாங்க. வடையும் நல்லா இருக்கும். நான் நூட்லஸ் இல் மீதி காயுடன் காபேஜ் முட்டை எல்லாம் போட்டு தான் லஞ்ச பாக்ஸ் க்கு பண்ணி கொடுப்பேன்.

    ReplyDelete
  103. அந்த காபேஜ் வடை தட்டை பிடித்திருக்கும் ஆயாவின் கை :)) அண்ட் நைல் பாலிஷ் ரொம்ம்ம்மம்ம்ம்ப அயகா இருக்கு ன்னு ஆயாகிட்டே சொல்லிடுங்கோ . அந்த க்லவுசும் நல்லா இருக்கு

    ReplyDelete
  104. //எங்களை எல்லாம் தெரியேல்லையாக்கும்:)).. கீரீஈஈஈஈஈஈ.. கீரீஈஈஈஈஈஈஈ.. கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு அஞ்சுவைக் கூட்டியாங்கோ..:))..//

    பூஸ் அது ஒன்னும் இல்லே அஞ்சுவுக்கு நம்ம மேல ரெம்ம்ம்மம்ப பாசம் முதல்ல மணியம் கஃபே ஒனேருக்கு கொடுத்து பார்த்து அவர் வார்ட் இல் அட்மிட் ஆகலேன்னா அப்புறம் நமக்கு கொடுப்பாங்க சாப்புட. இது தெரியாம நீங்க போய் அஞ்சுவ கூட்டி வர சொன்னா பாவம் அஞ்சு :))

    ஊ.குறிப்பு : அஞ்சு நீங்க சொன்ன படியே சொல்லிட்டேன் ஓகே வா :))

    ReplyDelete
  105. //ஹையோ.. முருகா.. வள்ளிக்கு வைரத்தோடு கன்ஃபோம்:).. //

    எனக்கு இப்போ இப்போ இப்பவே ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்னிக்குத்தான் இந்த வைர தோடு நேர்த்தி முடியுமுன்னு.

    ReplyDelete
  106. சமையல்குறிப்பெல்லாம் சூப்பர்தா, ஆமா அதீஸ் உனக்கு சமையல் எல்லாம் கோட தெரியுமா இல்லே சும்ம கேட்டேன்

    ReplyDelete
  107. [co="dark purple"]பிளீஸ்ஸ்ஸ்ஸ்... எச்சூச்ச்மீஈஈஈஈ:)) மிகுதிப் பதில்களுக்கு நளைக்கு வாறேன்ன்ன்ன்.. மீக்கு காய்ச்சல் வந்தமாதிரி பீலிங்ஸா இருக்கே ஜாமீஈஈஈஈ.. குளிருது:).. வயிற்றைப் பிரட்டுது:)... கண் மங்குது:)...... .பசிக்கேல்லை:) வாய் கைக்குது:)

    அப்போ இது காச்சலுக்கான அறிகுறிதானே?:)).

    எல்லோரும் ஒரேஞ், ஆப்பிள், சாத்துக்குடி, ஸ்ரோபெரி, ரெட் கிரேப்ஸ்... அம்லா, அத்திப்பயம்:),எல்லாம் வாங்கி ரெடியா வையுங்கோ.. காய்ச்சல்தான் என்பதைக் கன்ஃபோம் பண்ணியதும்... கியூ வரிசையில வங்கோ..

    நான் இரவைக்கே ஃபிரிஜ்ஜைக் கிளீன் பண்ணி வைக்கிறன்:).. பிறகு பழங்கள் வைக்க இடம் வேணுமெல்லோ?.. சரி எல்லோருக்கும் நல்லிரவு.. பொன் நுய்.... கனவுகள் வராமல் இருக்கக் கடவது:))..

    சிக் லீவில நிக்கிற ஆக்களும் வந்திருக்கினம்:))[/co]

    ReplyDelete
  108. This comment has been removed by the author.

    ReplyDelete
  109. இது கோவா காய்ச்சல். கனக்க சாப்பிடாதைங்கோ. ;)

    ReplyDelete
  110. உங்களுக்கு ஒரு விசயம் பிடிச்சிருந்தா அது தப்பில்லையெனில் செய்யுங்கோ// நீங்க செய்யலாம். ஆனால் கஷ்டப்படுவது மத்தவங்கதானே (முக்கியமா உங்க ஆஆத்துக்காரர்தான்). என்னமோ(கோவா) செஞ்சிருக்கீங்களே.. அதை தயவுசெய்து எங்க அண்ணன்கிட்ட சாப்பிடச் சொல்லி வற்புறுத்தாதீங்க. உங்க கஷ்டம் உங்களோட இருக்கட்டுமே!.

    ReplyDelete
  111. மல்லிகை பாடலும் அருமைதான்.. கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

    ReplyDelete
  112. [co="dark green"] டொக்டரிடம் காட்டினேன் அவர் கையைப் புடிச்சூஊஊஊஊ நாடி பார்த்துச் சொன்னார்.. :) வெளிக்காய்ச்சல் இல்லையாம் உள்ளுக்குத்தேனாம்:).. புளொக்கில கொமெண்ட்ஸ்க்குப் பதில் போடலாமோ என்றேன்ன்.. ஓஓஓஓஓஓஒம் எண்டிட்டார்ர்..:))

    என்னவோ காய்ச்சல் இருக்கு.. ச்சோஓ வாங்கின ஃபுரூட்ஸ்சை மறக்காமல் கொண்டு வந்து தந்திடுங்கோ:))..[/co]

    [im]http://www.bandofcats.com/wp-content/uploads/2009/07/cat-in-bed.jpg[/im]

    ReplyDelete

  113. சிட்டுக்குருவி said... 70
    ஹி ஹி ஹி.....
    மல்லிகை என் மன்னனா...ஆவ்வ்வ்
    ஜூப்பர் ஜோங்குதேன்
    [co="dark green"] வாங்கோ ஜிட்டு வாங்கோ... இம்முறை “நேயர் விருப்பப் பாடல்” அனைவரும் விரும்பும் பாடலாகிப் போனதில் மிய்க்க மகிழ்ச்சி:).[/co]

    எங்க வீட்ட அடிக்கடி நான் நிற்கிறேனே அப்போ எங்க வீடும் வெளிநாடா..இல்லியே எங்க அப்பத்தா அப்பிடி சொல்லித் தரல்லியே....

    [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இங்கினதான் நீங்க டப்புக் கணக்குப் போடுறீங்க:).. டக்கென மாத்தி ஓசியுங்க.. அதாவது இப்போ பிரித்தானியாவில் இருக்கும் அதிராவுக்கு, ஜிட்டு இருக்கும் நாடு வெளிநாடுதானே?:)) எப்பூடி என் கிட்னியா?:))[/co]

    ReplyDelete
  114. சிட்டுக்குருவி said... 73
    [co="dark green"] என்னாது இங்கிலீஸு கபேஜோ?:)) புரியுதில்லை.. மீ சுவீட் 16 எல்லோ நேரடியாச் சொன்னா மட்டும்தேன் புய்யும்:)..[/co]

    நான் பறந்து வந்தேனே....
    ரொம்ப குளிரா இருந்திச்சு இது சரிப்பட்டு வராது என்னு நம்ம ஊருக்கே கிளம்ப்பிட்டேன்....

    [co="dark green"] நிலவுக்குப் பயந்து பரதேசம் போன கதைதான்.. எல்லாமே புதுசுக்கு கஸ்டம்.. பழகினால்.. பழகிடும்...:)

    மியாவும் நன்றி ஜிட்டு.[/co]

    ReplyDelete
  115. வை.கோபாலகிருஷ்ணன் said... 78
    //“மழைக்கால இருட்டானாலும், மந்தி கொப்பிழக்கப் பாயாதாம்”//

    என்னவோ பழமொழியெல்லாம் எடுத்து உடறீங்க. அதற்கு அர்த்தமும் எழுதினால் நல்லா விளங்குமோல்யோ!
    [co="dark green"] அது கோபு அண்ணன்.. எங்கட குரு பழமொயி மட்டும்தேன் சொன்னவர்:) கருத்து இன்னும் சொல்லேல்லை.. அவர் ஒரேயடியா அனைத்தையும் திணிக்க மாட்டார்ர்.. இப்போதைக்கு இதைப் பாடமாக்குங்கோ.. பிறகு விளக்கம் சொல்வேன் எண்டவர்.. அவர் சொன்னதும், நான் இங்கின எல்லோருக்கும் ஜொள்ளிடுவேன்:))ஹா..ஹ..ஹா..:)[/co]

    ReplyDelete
  116. வை.கோபாலகிருஷ்ணன் said... 78
    பதிவுகள் வெளியிடும் போது, மெயில் மூலம் லிங்க் கொடுத்து தகவல் கொடுத்தால் உடனே ஆஜராக வசதியாக இருக்கும்.

    நான் என் டேஷ் போர்டு பக்கமெல்லாம் போவதே கிடையாது. இன்றைக்கு என் பின்னூட்டத்தில் தாங்கள் சொன்னதால் வந்து பார்க்க முடிந்தது.

    [co="dark green"]கோபு அண்ணன், நானும் டாஸ் போர்ட் பக்கம் போவதில்லை. இப்படித்தான் அநேகமானோர் பார்க்கினம். நான் சொல்வதைக் கவனமாக் கேட்டுச் செய்யுங்கோ இப்பவே.

    முதலில் உங்கள் ஜிமெயிலை லொக்கின் பண்ணிடுங்கோ.

    பின்பு, கூகிள் பேஜை ஓபின் பண்ணி, அதன் மேல் மெனு பாரிலே பாருங்கோ... more என இருக்கும்.

    அதனை கிளிக் பண்ணுங்கோ... அதில் reader என இருக்கும், அதைக் கிளிக் பண்ணினால்....

    ஒரு பேஜ் வரும், அதில் இடது பக்கத்தில், நீங்கள் ஆரையெல்லாம் ஃபலோ பண்ணுறீங்களோ... அவர்களின் புளொக் தெரியும்.

    அதைவிட, உங்களுக்கு ஆருடைய புளொக் பார்க்க தேவையோ, அவர்களின் புளொக் லிங்கை கொப்பி பண்ணி வந்து,
    இங்கே

    இடது மேல் மூலையில்.. subscribe என இருக்கும், அதை கிளிக் பண்ணி.. இந்த லிங்கை அதில் அட் பண்ணிடுங்கோ.. அந்த லிஸ்டில் அது சேர்ந்து கொள்ளும்.

    படிக்கத் தேவையில்லை எனில், அந்த அந்த புளொக்கை அங்கே ஓபின் பண்ணி mark all as read, என மேலே இருப்பதைக் கிளிக் பண்ணிட்டால்.. புதிய தலைப்பு வெளியானால், ஒவ்வொரு வலைப்பூவின் பெயரில் (1)... இப்படிக் காட்டும், உடனே அங்கின ஓடலாம்:)).. அதாவது புதிய தலைப்பு வந்திருக்கிறது என்பதற்கு அடையாளம் அது.

    எப்போ நெட்டுக்கு வந்தாலும் முதலில் இதனை ஓபின் பண்ணுங்கோ.. அப்போ ஆரார் புதுத் தலைப்பு போட்டிருக்கினம் எனத் தெரியும்...

    இப்போ புரிஞ்சுதோ என் டமில்?:) இல்லைக் கொயப்பிட்டனோ?:)).. எனக்கும் ஒருவர் சொல்லித்தந்தே இதை நான் கற்றுக் கொண்டேன். [/co]

    ReplyDelete
  117. நீங்க அவசியம் இது ரெண்டையும் படிக்கோணும். இந்தத்தங்களின் கோஸ் பதிவுடன் சம்பந்தப்பட்டவை, என் கத்தியுடனும்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா
    [co="dark green"] சொல்லிட்டீங்க இல்ல, தாமதமானாலும் படிச்சுப் பின்னூட்டம் போடுறேன்.

    மிகப் பொறுமையாக, நிறைய விஷயங்களோடு, பின்னூடமிட்டு கலகலப்பாக்கியமைக்கு மியாவும் நன்றி. மீண்டும் வாங்கோ.[/co]

    ReplyDelete
  118. [co="dark green"] யங்மூனை இரண்டு நாட்களாகக் காணவில்லை:(, அவரை எங்கின, எந்த நாட்டில், எந்த வானில், என்று.. கண்டாலும், உடனடியாக புடிச்சு வந்து அதிராவின் “என் பக்கத்தில்” ஒப்படைக்கும்படி மிகவும் தாழ்மையாக வாண்டப்படுகிறீர்கள்.

    ஊ.கு:- தகுந்த சன்மானம் வயங்கப்படும்:)[/co]

    [im]http://vedicastrologycenter.net/videos/images/Phases%20of%20the%20Moon.jpg[/im]

    ReplyDelete
  119. vanathy said... 90
    அமெரிக்காவில, ஜேர்மனியில பாத்திரம் நொருங்கும் சத்தம் கேட்குதே ஜாமீ// karrrrr..... Ithellem romba overnnu enga Mahi madam solla sonnanga.
    Nice recipe atheese. I will try this ver soon.

    [co="dark green"] வாங்கோ வான்ஸ் வாங்கோ... மகி மடத்தால எழும்பி நிற்கவே முடியேல்லையாம்:), இன்னும் நித்திரைத் தூக்கத்தில இருந்து விடுபடேல்லையாம்:))).. அந்த தெகிரியத்திலதான் பயப்பூடாமல் சவுண்டு விட்டேன்:)..

    செய்து பாருங்கோ வான்ஸ்ஸ்.. யூப்பர். மியாவும் நன்றி varukaikku:)[/co]

    ReplyDelete
  120. [co="dark green"]வாங்கோ இமா வாங்கோ.[/co]
    ம்.. கோவா பிடிச்சிருக்கிற கை... !! டௌட்டா இருக்கே!!
    [co="dark green"]இதிலென்ன டவுட்டு கர்:)) அது மகனிடம் கொடுத்துப் பிடிக்கச் சொல்லிப் படமெடுத்தேன், ஏனெண்டால், மேசையில் வச்சுப் படமெடுக்கும்போது, சைஸ் தெரியுதில்லை, அவர் தூக்கியிருக்கும்போது பாருங்கோ.. ஆளின் உடம்பளவுக்கு நிற்குதெல்லோ:).[/co]

    10 றாத்தல்!!! ஹ்ம்! ஏதாவது ஐடியா கிடைச்சால் திரும்ப வாறன்.

    [co="dark green"]இப்பூடி ரொட்டியும், இடைக்கிடை சுண்டலும் செய்கிறேன், இவை இரண்டுக்கும்தான் இமா வீட்டில வரவேற்புக் கிடைச்சிருக்கு:).[/co]

    மந்தி ரெண்டும் மரத்தில இருக்கிற மாதிரியே தெரியேல்ல அதீஸ். !!!
    [co="dark green"]இல்ல அவயள் கீழ இருந்து கதைக்கினம், இனி மழைக்கால இருட்டு வந்ததும்:) கொப்பிழக்காமல் பாய்ஞ்சு காட்டுவினம்:)).. ஹா..ஹா..ஹா...

    மியாவும் நன்றி இமா.[/co]

    ReplyDelete
  121. எனது முதல் வருகை என்று நினைக்கிறேன்... இனி தொடருவேன் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  122. [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSL4GQ6YEpY16A9eaG-w7E-Wwo3cPpbR8t-gn4-SZYfdeLErmNaYQ[/im]

    இந்தாங்கோ! சரியா சுகமில்லை எண்டதால பயங்கள் வாங்க போயிருந்தன்.
    அதுக்குள்ள பிடிவிறாந்து அறிவிச்சிருக்கிறீங்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))))

    ReplyDelete
  123. // தகுந்த சன்மானம் வயங்கப்படும்:)//

    நானேஏஏ என்னை கண்டுபிடிச்சிட்டன்:)) ஆனபடியால் அந்தச் சன்மானத்தை எனக்கே தந்திடுங்கோ:)))))

    ReplyDelete
  124. மகீ! உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்:)))

    [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQPKWcNYeUICIKxxZEBFHQbreHrI7iENYk4JxzsD2Zs4kQqftutFA[/im]

    ReplyDelete
  125. En Samaiyal said... 101
    ஆஆ ரெண்டு நாள் லேட் சாரி பூஸ் மிஸ் பெஞ்ச் மேல ஏறி நிக்க சொல்லாதீங்க :))

    இந்த பாட்டு ரொம்ம்ம்மம்ம்ம்ப புடிக்கும் அதுவும் வாணி ஜெயராம் குரல் ரொம்ப இனிமை. இந்த பாட்டும் ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல் பாட்டும் மை ஆள் டைம் பேவரிட்.[co="dark green"]வாண்டோ கீரி வாண்டோ...

    ஆஹா அஞ்சு சொன்னது சரியாப் போச்ச்ச்ச்ச்:)) அதாவது உந்தப் பாடல் இயற்றிய காலத்திலதான், தானும் கீரியும் பிறந்ததாக அஞ்சு சென்னா:))).. பொய்யெண்டால்ல்.. மேலே பின்னூட்டம் பாருங்க:)).. 4...,5:).[/co]

    ReplyDelete
  126. //En Samaiyal said... 104
    எனக்கும் காபேஜ் ரொம்ப புடிக்கும். எங்க அம்மா உளுந்து வடை பண்ணும் போது வெங்காயம் போட மாட்டாங்க. காபேஜ் தான் சின்னதா நறுக்கி போடுவாங்க. வடையும் நல்லா இருக்கும்.//

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ் நீங்க சொன்னதும்தான் ஞாபகம் வந்திட்டுது... கிரைவடைக்கு கீரைக்குப் பதிலா இதைப் போடலாம்ம்ம்:)).. யேஸ்ஸ்.. அடுத்தது அதே.. அதே.. கனடாவில நான் வாங்கினது கீரைவடைதான் அதிகம் சூப்பரா இருந்துதே...:).

    En Samaiyal said... 105
    அந்த காபேஜ் வடை தட்டை பிடித்திருக்கும் ஆயாவின் கை :)) அண்ட் நைல் பாலிஷ் ரொம்ம்ம்மம்ம்ம்ப அயகா இருக்கு ன்னு ஆயாகிட்டே சொல்லிடுங்கோ . அந்த க்லவுசும் நல்லா இருக்கு///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
    [im]http://24.media.tumblr.com/tumblr_l2zao7Pkio1qzflk9o1_500.jpg[/im]

    ReplyDelete
  127. En Samaiyal said... 106

    பூஸ் அது ஒன்னும் இல்லே அஞ்சுவுக்கு நம்ம மேல ரெம்ம்ம்மம்ப பாசம் முதல்ல மணியம் கஃபே ஒனேருக்கு கொடுத்து பார்த்து அவர் வார்ட் இல் அட்மிட் ஆகலேன்னா அப்புறம் நமக்கு கொடுப்பாங்க சாப்புட///

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... உதுவோ சங்கதி?:)).. அதுதான் மணியம் கஃபே ஓனரையும் ரெண்டு நாளா இந்தப் பக்கத்தில காணேல்லை:)).. ஏதோ பொண்ணு பார்க்கிறன் மண்டபம் புக் பண்ணுறன் என சம்பந்தம் பேசினார் அஞ்சுவோட:)..

    அஞ்சுவின் சமோசாவோட.. ஆள் வோர்ட்டிலயாக்கும்:)).. சரி சரி நமக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)).[/co]

    ReplyDelete
  128. En Samaiyal said... 107
    //ஹையோ.. முருகா.. வள்ளிக்கு வைரத்தோடு கன்ஃபோம்:).. //

    எனக்கு இப்போ இப்போ இப்பவே ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்னிக்குத்தான் இந்த வைர தோடு நேர்த்தி முடியுமுன்னு.

    [co="dark green"]நா என்ன மாட்டேன் என்றா சொல்றேன்ன்.. ஆராவது தந்தால் டக்குப் பக்கென நேர்த்தியை முடிச்சிடுவேன்ன்.. தருகினமில்லையே:))..

    கோபு அண்ணன் தாறேன் என்றார்.. நானும் நமிப் போனேன்... பின்பு காதின் அளவைச் சொல்லட்டாம்ம்.. நான் எடுத்தேன் ஓட்டம்.. “பிச்சை வாணாம் நாயைப் பிடிங்கோ” என்றாகிப்போச்சு என் நிலைமை:))..

    இப்போ நான் முடிவெடுத்திட்டேன்ன்ன்... திருப்பதி உண்டியல்தான் வேறு வழியில்லை:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு தேம்ஸ்ல வீசிடுங்க கீரி:).

    மியாவும் நன்றி கீரி.[/co]

    ReplyDelete
  129. Lakshmi said... 108
    சமையல்குறிப்பெல்லாம் சூப்பர்தா, ஆமா அதீஸ் உனக்கு சமையல் எல்லாம் கோட தெரியுமா இல்லே சும்ம கேட்டேன்//

    [co="dark green"]லக்ஸ்மி அக்கா வாங்கோ வாங்கோ... என்ன இப்பூடிக் கேட்டுப் புட்டீங்க?:)).. ஒபாமாவுக்கு டின்னர் மேக் பண்ண என்னைத்தான் வரச்சொல்லி சிங்கிள் கால்ல நிக்கினம்:), நான் ஒளிச்சுத் திரிகிறேன்ன்ன்:)).. நான் குயினுக்கு லஞ் செய்வதிலேயே பிசியாயிட்டேன்:)). பிறகெப்பூடி அங்கின போறதாம்ம்:)

    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.[/co]

    [co="dark green"].[/co]

    ReplyDelete
  130. angelin said... 110
    உடம்பு சரியில்லைன்னா ...பத்து நாள் உண்ணா விரதம் இருந்தா சரியாயிடும்னு ன்று பி பி சி ல சொன்னாங்க
    சோ :)))))))))))) சாபிடாதேங்கா வெறும் ப்ளூ கலர் தண்ணி மட்டும் குடிங்க பத்து நாளுக்கு
    நான் அடுத்த சாட்டர்டே வர்ர்ட்டா :)))))))))))
    [co="dark green"]என்னாது உண்ணா விரதமோ? அதுவும் பத்து நாளோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏற்கனவே வயக்கெட்டுப் போயிட்டன் என எல்லோரும் புலம்பினம்.. இதுக்குள்ள பத்து நாள் சாப்பிடாட்டில்.. குயினுக்கே கார்ட் அட்டாக் வந்திடும்:)) என்னைப் பார்க்க:)..

    என்னாது சட்ட டேயா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனக்குப் பழம் வாணாம்.. நான் கேக்க மாட்டன் நீங்க பயப்பூடாமல் வாங்க:)[/co]

    ReplyDelete
  131. இமா said... 111
    இது கோவா காய்ச்சல். கனக்க சாப்பிடாதைங்கோ. ;)

    [co="dark green"]நிஜமாவோ இமா? கோவாவில குளிர்த்தன்மை இருக்கோ?... சே...சே. நேற்று சரியாக் குளிரத்தொடங்கிட்டுது.. காச்சல் வந்திட்டுதாக்கும், போர்த்திட்டுப் படுக்கலாமே என சந்தோசப்பட்டேன்ன்.. காலையில பார்த்தால் நோர்மல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    உண்மையில எனக்கு காச்சல் வந்து அனுங்கிக் கொண்டு படுத்திருக்க விருப்பம்:)) ஹையோ வெளில சொல்லிடதீங்கோ அடிப்பினம்:).[/co]

    ReplyDelete
  132. விச்சு said... 112
    உங்களுக்கு ஒரு விசயம் பிடிச்சிருந்தா அது தப்பில்லையெனில் செய்யுங்கோ// நீங்க செய்யலாம். ஆனால் கஷ்டப்படுவது மத்தவங்கதானே (முக்கியமா உங்க ஆஆத்துக்காரர்தான்). என்னமோ(கோவா) செஞ்சிருக்கீங்களே.. அதை தயவுசெய்து எங்க அண்ணன்கிட்ட சாப்பிடச் சொல்லி வற்புறுத்தாதீங்க. உங்க கஷ்டம் உங்களோட இருக்கட்டுமே!.

    [co="dark green"]ஹா...ஹா..ஹா.. வாங்கோ விச்சு வாங்கோ.. கோவாச் செய்வது என் கஸ்டமில்லை:)) சந்தோசமெல்லோ:) அதுதான் அவருக்குக் கொடுக்கிறன்:))

    மல்லிகைப் பாட்டுக் கேட்கிறீங்களோ.. கேளுங்கோ கேளுங்கோ..

    மியாவும் நன்றி விச்சு.[/co]

    ReplyDelete
  133. இரவின் புன்னகை said... 123
    எனது முதல் வருகை என்று நினைக்கிறேன்... இனி தொடருவேன் என்று நம்புகிறேன்.

    [co="dark green"]வாங்கோ இரவின் புன்னகை வாங்கோ.. இல்ல இது ரெண்டாம் தடவை வந்திருக்கிறீங்க.. நான் தான் இன்னும் உங்களிடம் வரவில்லை.. வருவேன்..

    மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  134. இளமதி said... 124


    இந்தாங்கோ! சரியா சுகமில்லை எண்டதால பயங்கள் வாங்க போயிருந்தன்.
    அதுக்குள்ள பிடிவிறாந்து அறிவிச்சிருக்கிறீங்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))))//

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ் அப்பறலாங்காயும் இருக்கு.. எனக்கு அன்னாசி வாணாம்:).. மற்றதெல்லாம் வாணும்.. மியாவும் நன்றி யங்மூன்.. அஞ்சுவும் பழங்கள் வாங்கத்தான் போயிருப்பாபோல:) ஆளைக் கணேல்லை:)..

    இண்டைக்கு அப்பம் சுட்டனான்... அதுதான் உங்களுக்குத் தரப்போறன் பரிசா.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ.. பிசில போட்டிட்டு இங்கின ஏத்தி விடுறன்..[/co]

    ReplyDelete
  135. //காச்சல் வந்து அனுங்கிக் கொண்டு படுத்திருக்க விருப்பம்:))// ;) சிஷ்யையைப் போல குரு!! ;)

    ReplyDelete
  136. ஹா! மூன்றாவது கொமண்ட்... இப்பதானே என் கண்ணில பட்டுது! //இமா,அதிரா அளவுக்கு புகழ் இல்லை :)) // !!! பிறகு கிரியும் என்னவோ சொல்லி இருக்கிறா போல!! நித்திரையாக இருக்கிற ஆமையைத் தட்டி எழுப்ப வெளிக்கிடுகினம் எல்லாரும். ஹ்ம்! கஷ்டப்படப் போறீங்கள். ;D

    ReplyDelete
  137. [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTaxtK8lQIviuSxfC0kTobDslPwCXjRWQL65Tb9NjdYEyItGv44gg[/im]

    உஸ்ஸ்ஸ்.......எவ்வள நேரமா காத்துக்கொண்டிருக்கிறது;)

    ReplyDelete
  138. ரீச்சரும் இங்கைதான்:))

    சரி,அதிரா ஏதோ கொண்டரப்போறன் எண்டா. இருந்து வாங்கிக்கொண்டு போங்கோ;))))

    ReplyDelete
  139. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது; ஸ்க்றீன் அப்பம் பசிக்குதவாது. ;)

    ReplyDelete
  140. [co=" green"]ஆஆஆஆஆ அப்பம் அப்பம் அப்பம்... அதிரா சுட்ட ஆப்பம்...

    தொப்பை அப்பனைப் பாருங்கோ:).. எல்லாம் தனக்கு வேணும் என அடம் புடிக்கிறார்ர்.. இதில மேல இருப்பது மட்டும் யங்மூனுக்கு.. மற்றதெல்லாம் தொப்பை அப்பனுக்கே:))..[/co]

    [im]http://3.bp.blogspot.com/-EojRX60tfgc/UIWzbypiDQI/AAAAAAAACZo/zStMgIH2klw/s400/IMG_1396.JPG[/im]

    ReplyDelete
  141. ஓ! நன்றி. நன்றி.
    நல்ல வடிவா முழுமூனா பளிச்செண்டு இருக்கு:)

    ReplyDelete
  142. நான் அப்பவே சொன்னான். ரீச்சர்தான் நம்பேலை;)))

    ReplyDelete
  143. [co=" dark green"]karrrrrrrrrrr:)) அதாரது என் அப்பத்தைக் குறை சொல்றது?:)....... சரி சரி இமாவுக்கு ஒண்டு தரட்டே?:)[/co]

    ReplyDelete
  144. சூப்பரா வந்திருக்கு அதிரா:)

    ReplyDelete
  145. இளமதி said...
    நான் அப்பவே சொன்னான். ரீச்சர்தான் நம்பேலை;)))

    [co=" dark green"]என்னை ஆர்தான் நம்பீனம் பாருங்கோ..:)).. குலைக்கிற பூஸ் கடிக்காதென நினைக்கினம்போல:))... ஹா..ஹா..ஹா.. கடிக்காதுதான் ஆனா பிராண்டும் தெரியுமோ?:)[/co]

    ReplyDelete
  146. இல்லை இல்லை கடிக்கும்ம்ம்ம்;)))

    ReplyDelete
  147. சமையல் போட்டி வைக்கலாம் போல இருக்கு. எல்லாரும் அசத்துறீங்கள்;)))

    ReplyDelete
  148. இமா said...
    // !!! பிறகு கிரியும் என்னவோ சொல்லி இருக்கிறா போல!! நித்திரையாக இருக்கிற ஆமையைத் தட்டி எழுப்ப வெளிக்கிடுகினம் எல்லாரும். ஹ்ம்! கஷ்டப்படப் போறீங்கள். ;D//

    [co=" dark green"]ஆமையோ? பக்பக் ஒ இமா?.. எங்கட கார்டினில புல்லு வெட்டேக்கை அழகான புள்ளிகளோட ஒரு குட்டியூண்டு பக்பக்:).. உடன உங்கட ஞாபகத்தில படமெடுத்தனான்.. குட்டி என்பதால கிளியர் குறைவு.. இருப்பினும் ஒருநாளைக்குப் போடுவம் இங்கின என வைத்திருக்கிறன்.[/co]

    ReplyDelete
  149. ரீச்சர் எங்கை.....:)

    ReplyDelete
  150. இளமதி said...
    சமையல் போட்டி வைக்கலாம் போல இருக்கு. எல்லாரும் அசத்துறீங்கள்;)))///

    [co=" dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சொல்ல வந்ததை ஒழுங்காச் சொல்லோணும்:)) எங்க எல்லோரும் அசத்தீனம்?:)) நான் மட்டும்தேன் அசத்துறன்:)).. போட்டி வச்சால் ஒருத்தரும் வராயினம்:) ஏனெண்டால் ஒரு பூஸோட மோதப் பயம்:) ஐ மீன் சமையல்ல:))..

    ஹையோ.. வழிவிடுங்கோ என் முருங்ஸ் எங்கப்பா.. இங்கினதானே இருந்திச்சு:)).[/co]

    ReplyDelete
  151. // இளமதி said...
    ரீச்சர் எங்கை.....:)//

    [co=" dark green"]அவ அப்பத்துக்கு பிளேன் ரீ ஊத்தப் போயிட்டா...:)) நிறையச் சீனி போட்டு, நல்ல சாயம் போடுக் கொண்டு வாங்கோ றீச்சர்:)[/co]

    ReplyDelete
  152. அந்தாட்டிக்கா வெண்பனியிலே ஏன் உருகுது நெஞ்சம்?
    நீ பென்குயினா? பெண் டால்ஃபினா? ஏன் மயங்குது கொஞ்சம்?

    - ஐயையோ, இடம் பொருள் ஏவல், சேவல் பார்க்காமல் வாயில வந்ததைப் பாடிட்டனே? என்ர குரல்ல மயங்கி இன்னும் இன்னும் பாடச் சொல்லிக் கேட்கப் போயினமே?

    - சரி சரி இந்த தட்டில அப்பத்தைக் கொண்டு வந்து வைச்சா, இன்னும் சில பாட்டுக்கள் பாடுவமாக்கும் :)

    ReplyDelete
  153. அஞ்சூஊஊஊ கெதியா வாங்கோஓஒ:)))

    ReplyDelete
  154. இளமதி said...
    இல்லை இல்லை கடிக்கும்ம்ம்ம்;)))

    [im]http://3.bp.blogspot.com/-z3XNqHHnLYE/T8yt-P7R1iI/AAAAAAAABl4/Q_h43_M5a-g/s320/Cat+Playing+with+a+Bird.jpg[/im]

    ReplyDelete
  155. [co="dark green"]அச்சச்சோஒ.. அஞ்சுவைக் யெல்ப்புக்கு கெதியாக் கூப்பிடுங்கோ யங்மூன்ன்... மணியம் கஃபே ஓனரின் குரல் கேக்குதுபோல:)).. நேக்குக் கையும் ஓடல்ல லெக்கும் ஆடல்ல:)

    ஹையோ பார்த்துக்கொண்டு நிற்காமல்.. அப்பத்தை மேசைக்கு கீழ ஒளியுங்கோ...[/co]

    ReplyDelete
  156. அதிரா... இங்கினை ஆரோ பாட்டுக்கச்சேரி செய்யபோகினமாம்:)))

    ReplyDelete
  157. [im]http://2.bp.blogspot.com/_LiWeVtsgGBw/TTZuD7OR2dI/AAAAAAAADts/4QvhzQ7lCEY/s1600/DSC_0556.JPG[/im]

    இன்று மணியம் கஃபேயில ஸ்பெஷல் சாப்பாடு! இங்கின நிற்கும் எல்லோருக்கும்ம் கொண்டு வந்திருக்கிறேன்!

    - எல்லோரும் சந்தோசமா சாப்பிடுங்கோ -

    நீங்கள் பே பண்ணத் தேவையில்லை! ஆங்கிலக் கால்வாய் ஓனரம்மா, எல்லாத்தையும் பே பண்ணுவா! :)

    ReplyDelete
  158. நான் ஓடுறன்.......

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS95kizn6qE14k1n_sXchAcaalBiPg7KmOzahxys0ZdeQKPvy9L[/im]

    ReplyDelete
  159. மாத்தியோசி மணி மணி said...
    அந்தாட்டிக்கா வெண்பனியிலே ஏன் உருகுது நெஞ்சம்?
    நீ பென்குயினா? பெண் டால்ஃபினா? ஏன் மயங்குது கொஞ்சம்?

    - ஐயையோ, இடம் பொருள் ஏவல், சேவல் பார்க்காமல் வாயில வந்ததைப் பாடிட்டனே? என்ர குரல்ல மயங்கி இன்னும் இன்னும் பாடச் சொல்லிக் கேட்கப் போயினமே?

    - சரி சரி இந்த தட்டில அப்பத்தைக் கொண்டு வந்து வைச்சா, இன்னும் சில பாட்டுக்கள் பாடுவமாக்கும் :)

    [co="dark green"]ஹா..ஹா...ஹா.. நாங்க ரொம்ப விபரமானவங்க:) புதுப்பாட்டைப் பாடியவுடன் 12 வயசென எடை போடிட மாட்டமாக்கும்...:))

    சரி சரி வந்ததுதான் வந்திட்டீங்க.. நான் வஞ்சகம் செய்யாமல்.. நிறையச் சுட்டனான்.. நீங்க ஒன்று எடுங்கோ:)).. நான் அப்பத்தைச் சொன்னென்.. இப்போ ஒரு இடைக்காலப் பாட்டுப் பாடுங்கோவன்... கேட்பம்:)[/co]

    ReplyDelete
  160. அதிரா பாட்டு வேணுமெண்டா கேளுங்கோஓ..
    ஆனால் கொண்டந்தது வெடுகுண்டு மாதிரி கிடக்கு கவனம். அவ்வ்வ்வ்வ்வ்:))))

    நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்;)))

    ReplyDelete
  161. [co="dark green"]ஹா..ஹா...ஹா.. சூப்பர் போண்ட்டா.. அதுவும் பொரிச்ச பச்சமிளகாயுடன்...

    அதுசரி படமெல்லாம் என்னா பெரிசா வருதே உங்களுக்கு மட்ட்டும் அது ஏன்ன்ன்ன்?:)) பாருங்கோ பயத்தில குட்நைட் சொல்லிட்டு.. ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ இருக்கிறா யங்மூன்:))..
    யங்மூன்... அதிராவைப்போல ஸ்ரெடியா இருக்கோணும் சொல்லிட்டேன்ன்.. உப்பூடிப் பாதியில விட்டிட்டுப் பறக்கப்பூடா:))

    பாருங்கோ எனக்கு கை கால் நடுங்கேல்லை:)) நான் ஸ்ரெடியாத்தான் இருக்கிறன்:))..... முருகா வள்ளிக்கு வைர நெக்லஸ் கன்ஃபோம்ம்ம்.. இன்று மட்டும் என்னைக் காப்பாத்தப்பா:).[/co]

    ReplyDelete
  162. இளமதி said... 162
    அதிரா பாட்டு வேணுமெண்டா கேளுங்கோஓ..
    ஆனால் கொண்டந்தது வெடுகுண்டு மாதிரி கிடக்கு கவனம். அவ்வ்வ்வ்வ்வ்:))))

    நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்;)))//////

    முருகா.. வள்ளிமணாளா... வேலாயுதா, திருச்செந்தூர்க் குமரா....... உன்னை நம்பி என் கண்ணான புளொக்கையே ஒப்படைக்கிறேன்ன்:)).. ஏதோ வெடிகுண்டாம்ம்.. நேக்குப் பயமா இருக்கப்பனே... காப்பாத்தப்பா:))..

    [im]http://jeffpicard.com/blog/wp-content/plugins/image-shadow/cache/3cf6e2a031a229923ed49f0eec73f651.jpg[/im]

    ReplyDelete
  163. மல்லிகை பாடல் எனக்கும் பிடிக்கும். வாணிஜெயராம் அன்றும் ஒரு நிகழ்ச்சியில் இதைப்பாடினவா.ஏழுஸ்வரங்களும் பிடிக்கும்.
    ஹாய் அதிரா லேட்தான் பரவாயில்லை. ஆறுதலா எல்லாம் படித்தாயிற்று. கோவாவில செய்து நல்லாத்தான் அசத்திருக்கிறீங்க. கோவாவில எனக்கு ட்ரையா வறை வருவதேயில்லை.எப்படி நீங்க செய்றீங்க. நான் பருப்புபோட்டு செய்வேன்.

    ReplyDelete
  164. .

    //உங்களுக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்கெனில், அது தப்பில்லை எனில், போனால் போகுதெனச் செய்யுங்கோ.. பின்பு வீட்டில அடிச்சாலும் அடியை வாங்குங்கோ.. ஒரு சந்தோசத்துக்காக, பின்பு அடி வாங்கினாலும் தப்பில்லைத்தானே// இது நானும் இப்படித்தான் செய்வேன். அடி கிடைக்காது. அடி என்றா அம்மாதான்.ஆனா நான் தான் ஓடிடுவேனே.

    ReplyDelete


  165. //ஆனாலும் பாருங்கோ.. இதில அஞ்சு, கீரி, நான் எல்லாம் நல்ல அடக்கொடுக்கமாக:) எந்நேரமும் கிச்சினில் நின்று எல்லாம் சமைப்போம்ம்:).. ஆத்துக்காரருக்கு கஸ்டம் கொடுப்பதில்லை:), ஆனா எல்லோரும் அப்பூடியா?:))... ஹையோ கொஞ்சம் இருங்க.. அமெரிக்காவில, ஜேர்மனியில பாத்திரம் நொருங்கும் சத்தம் கேட்குதே ஜாமீ:))..// கர்கர்கர்கர்கர்கர்

    ReplyDelete
  166. // “தொட்டில் பழக்கம் உடுகாடு:) வரை” என்பினமெல்லோ.. அப்போ பழக்கும்போதே கரீக்டாப் பழக்கிட்டால் போச்சு:)...//
    சமைத்தார் என்றால் எல்லாமே டிப்டொப்தான். சமைத்த அடையாளமே தெரியாமல் அழகா இருக்கும் கிச்சன். கற்றுக்கொள்ள‌ இருக்கு.

    ReplyDelete
  167. உங்க கோவா ரெசிபி செய்துடவேண்டியதுதான். குஸ்குஸ் செய்து அதற்கு விசிறியாகிட்டினம்.
    இலையுதிர்காலம் பார்க்க அழகாக இருக்கு. எங்களுக்கு ஸ்னோ எனச்சொல்லியிருக்கினம்.

    ReplyDelete
  168. //சமைத்த அடையாளமே தெரியாமல் அழகா இருக்கும் கிச்சன்.// அப்ப!! நீங்கள் திரும்பச் சமைச்சால்தான் உங்களுக்குச் சாப்பாடா அம்முலு!! ;))

    ReplyDelete
  169. கர்க‌ர்கர் இமா. எப்படி கண்டுபிடிச்சீங்க.??

    ReplyDelete
  170. அச்சச்சோஒ.. அஞ்சுவைக் யெல்ப்புக்கு கெதியாக் கூப்பிடுங்கோ யங்மூன்ன்... //

    Nope :)))))) நான் என் தம்பி பக்கம் தான் இருப்பேன் ..
    அதுவும் நேற்று இரவு வெண்கல தட்டு ஒன்ன்று நார்த் பக்கமிருந்து என் தலையில் விழுந்தது ..................கர்ர்ர் நீங்கதானே hoppers போட்டீங்க :))

    ReplyDelete
  171. Nope :)))))) நான் என் தம்பி பக்கம் தான் இருப்பேன் ..
    அதுவும் நேற்று இரவு வெண்கல தட்டு ஒன்ன்று நார்த் பக்கமிருந்து என் தலையில் விழுந்தது ........... ////

    [co="green"]பாருங்கோ அக்கா எண்டா அக்காதான்! என்னில அக்காவுக்கு எவ்வளவு பாசம் சொல்லுங்கோ பார்ப்பம்! அக்கா நீங்கள் ஒண்டுக்கும் கவலைப் படாதேங்கோ! தம்பி இருக்கப் பயம் ஏன்?[/co]

    ReplyDelete
  172. அட, இங்கின ஒரு சனத்தையும் காணேலை! பொறுங்கோ நல்ல சத்தமா ஒரு பாட்டு படிப்பம்! ஆக்கள் இல்லாத நேரத்திலதான் சுதந்திரமா பாட்டு படிக்க ஏலும்!

    “ ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..............”

    இது ”நம்மட” ”ஐ” ய தாசன் எழுதின பாட்டாக்கும்! நல்ல பாட்டு பாருங்கோ!!

    சரி சரி இந்த ப்ளாக் ஓனர் அவர்களுக்கு நான் ஒரு கிஃப்டு குடுக்கப் போறன்! 7 மலை 7 கடல் 7 சிட்டி 7 வில்லேஜ் 7 மாவட்டம் 7 மாகாணம் 7 வட்டம் 7 தாலுக்கா எல்லாம் தாண்டிப் போய் 7 அடி நீளத்தில ஒரு அன்பளிப்பு கொடுக்கப் போறன்!

    கிஃப்டு வாங்க ப்ளாக் ஓனர் ரெடியோ? :)

    ReplyDelete
  173. இந்தாங்கோ அந்த அரிய பரிசு :))

    Everybody claps :)))

    [im]http://www.herpnet.net/Iowa-Herpetology/images/stories/reptiles/snakes/Opheodrys_green_snake/smooth_greensnake_S2.jpg[/im]

    ReplyDelete
  174. [co="dark green"]ஓடியாங்கோ ஓடியாங்கோ... இது எனக்கு வந்த வடைத் தட்டு.. எனக்கு தனியா சாப்பிடப் புய்க்கல்ல:)).. அதனால இங்கின கொண்டு வந்தேன்ன்.. ஒவ்வொருவருக்கும் ஒண்ணுதான்ன்ன்:)).. எடுத்திடுங்க.. பந்திக்கு முந்தினால்தான் உண்டு:).. சாப்பிட்டவங்க ஒரு டாங்ஸ்ஸ் சொல்லிடோணும் சொல்லிட்டேன்ன்:).

    ஆனா ஒரு முக்கிய அறிவித்தல்... கோல்ட் பிஸ்க்கும்:)) அவகட தம்பியாகிய ம.க..ஓனருக்கும்:) நோ வடை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... எங்கிட்டயேவா.?:)...

    ஹையோ நேற்றுத் தெரியாமல் ஒரு அப்பத்தைக் கொடுத்திட்டேன்ன்ன்:)).. இப்பூடியெல்லாம் ஆகுமெண்டால் கொடுத்திருக்க மாட்டேன்ன் கெளரிஅம்மா:)... அக்காவாம்... தம்பியாம்ம்.. பாசமலராம்... பொபொபொபொபொறுக்கல்ல:)))..

    சரி சரி காதைக் கொண்டு வாங்கோ... இது எங்கட யங்மூன் வீட்டுத் தட்டு:)).. அவட வீட்டில பூஜை முடிஞ்சுதாம் என அனுப்பியிருந்தா.. நேங்கட வீட்டில நைட்தான் :))..

    இப்ப இதைப் பார்த்ததும் எங்கட இமா றீச்சர்ர்ர்ர்:)) தடியோட வரப்போறா..

    “இதுக்குத்தான் இளமதி ஆரையும் நம்பி நான் படம் அனுப்புறேல்லை:)) காட்டாதீங்க எனச் சொன்னாலும் உலகத்துக்கு காட்டிடுவினம்”/...

    ஹையோ நான் என்ன ய்ங்மூனின் முகத்தையா காட்டிட்டேன்ன் அவ சுட்ட வடையைத்தானே.... ஆஆஆ... நவராத்திரி.. ஆயுத பூஜையுமதுவுமா.. றீச்சர் கலைக்கிறாவே..... :)).. ஹையோ என்னா ஸ்பீட்டூஉ.. முருகா.. மயிலனுப்பப்பா என்னால ஓட முடியேல்லை.... உஸ்ஸ்ஸ்.. டட்..டிட்.. ஆஆஆஆ கட்டிலால விழுந்திட்டென்ன்ன்ன்.. ஓ இது கனவா?:)) இப்பூடி வியர்க்குது:).[/co]

    [im]http://3.bp.blogspot.com/-Tb8lAl5qf34/UIa6tbApxgI/AAAAAAAACaM/ujTbj1BhtLY/s400/ilayanila.jpg[/im]

    ReplyDelete
  175. ஹையோ அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ
    எனக்கு வாணாம்ம்ம்ம்ம்ம்
    பபபபபபபாஆஆஆஆஆஆஆஅம்ம்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
    இன்று “நீயா” படம் ரீவியில போட்டினம் பார்த்தனான்ன்:).....

    நேக்கு வாணாம்ம்.. இது திட்டமிடப்பட்ட சதி.. எடுத்துக்கொண்டு போயிடுங்கோ.. இல்லையெனில் நானே தேம்ஸ்ல போட்டிடுவேன்ன்.. எங்கட உளவுத்துறைப் போலீஷிடம் சொல்லி முருகா....

    பிளீஸ்ஸ்ஸ்ஸ் வாணாம்ம் எடுங்கோஓஓஓஓஓஓஓஓஒ

    ReplyDelete

  176. மாத்தியோசி மணி மணி said... 174

    கிஃப்டு வாங்க ப்ளாக் ஓனர் ரெடியோ? :)///

    [co="dark green"]வாணாம்ம்ம்.. வாணாம்ம்ம்.. நேக்கு கிஃப்ட்டு வாணாம்ம்ம்:)).. தெரியாமல் சொல்லிட்டேன்ன்.. நீங்க வட எடுங்கோ:)) உங்கட அக்காவையும் எடுக்கச் சொல்லுங்கோ:)).. நா ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)). ஐ மீன் வட எடுக்க வாணாமென:))...

    வேணுமெண்டால் புஷ்பா அங்கிள் கடைப், புகை வராத கற்பூரத்தில அடிச்சு சத்தியம் பண்ணட்டே?:))

    ஜாமீஈஈஈஈஈஈஈ இனி நான் ஒண்ணும் ஜொள்ள மாட்டேன்ன்ன்:).

    கடவுள் சத்தியமா, மத்தியானம் ஒரு கற்பனை பண்ணினேன்ன், மண் உண்ணிப் பாம்பு என ஒரு தலைப்பு போடோணும், ஆனா அப்படிப் போட்டால் ஆரும் நெட்டில தேடி படம் கொண்டுவந்து பின்னூட்டத்தில போட்டிடுவினம்.. பிறகு... பார்க்கேலாமல் இருக்கும், அப்போ முன்னறிவித்தலும் கொடுக்கோணும் அப்படிப் படம் போட்டிடாதையுங்கோ என.. எண்டெல்லாம் நினைச்சேன்ன்ன்ன்... அதெப்பூடி அந்தக் கையோட இப்பூடி ஆச்சு?:).. என்னையே என்னால நம்ப முடியேல்லை.. முருகா நீதான் எல்லோருக்கும் நல்ல கிட்னியைக் கொடுக்கோணும்:).[/co]

    ReplyDelete
  177. [ma]எல்லாருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்:)[/ma]

    ReplyDelete
  178. [co="dark green"]வாங்கோ அம்முலு வாங்கோ.. ஜேர்மன் ஃபிளைட் இப்பத்தான் லாண்ட் பண்ணியிருக்கு:).

    வறை செய்யும்போது குறைந்த நெருப்பில் போட்டு மூடி விடுங்கோ.. அது வேர்த்து தண்ணி வடிஞ்சு.. அதில அவியும்.. பின்பு திறந்து பிரட்டிப் பிரட்டி விட்டு இறக்கினால் சரியாகும். பக்கத்திலயே நிற்காட்டில்.. அடிப்பிடித்துவிடும்... இது என்னோட முறை:). [/co]

    ReplyDelete
  179. ஹாஆஆஆஆஆ :))
    ..என்னமோ தெரியல situation song >>
    பச்சை நிறமே பச்சை நிறமே .....ஸ்வீட் ட்ரீம்ஸ் அதிராஆவ்

    ReplyDelete
  180. [co="dark green"]அச்சச்சோ இந்தக் கொடுமையக் கேட்க ஆஎஉமே இல்லையோ:)).. என் புளொக்குக்க கால் வைக்க எனக்கே நடுங்குது ஜாமீஈஈஈஈ:)).. இப்பூடியுமா ஆரும் சூனியம் வைப்பாய்ங்க?:)))... [/co]
    [im]http://sadredearth.com/wordpress/wp-content/uploads/2010/04/i-ar-hiding.jpg[/im]

    //நீளத்தில ஒரு அன்பளிப்பு கொடுக்கப் போறன்! ///

    [co="dark green"]இத நா எதிர்பார்த்தன்:)) [/co]

    மாத்தியோசி மணி மணி said...
    இந்தாங்கோ அந்த அரிய பரிசு :))

    Everybody claps :)))
    [co="dark green"]இத நான் எதிர்பார்கல்ல:)):)))... [/co]

    ReplyDelete
  181. அஞ்சூஊஊஊஊஊ.. என்னால வெளில வர முடியேல்லை.. பயமாக்கிடக்கூஊஊஊஊஊ.. என்னமோ பச்சையாத் தெரியுது.. மேல இருந்து கீழ வரேக்கை.. அந்த இடத்தில:) ஜம் பண்ணிக் கீழ வாறன்:))) நான் பின்னூட்டத்தைச் சொன்னேன்:))))...

    ச்ச்சோஓ இண்டைக்குக் கட்டிலுக்குக் கீழ இருந்தே குட்நைட் சொல்லிடுறேன் பிளீச்ச்ச்ச்ச்ச்ச்:))... நல்லிரவு... பொன் நுய்.....

    அஞ்சுவுக்கும் அஞ்சுட தம்பிக்கும்(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மாத்திரம்.. பச்ச்ச்ச்சைக்...பாஆஆ...... பூ க்கனவுகள்(எங்கிட்டயேவா:)) இரவைக்கு கத்தப்போயினம்:)))

    .... மற்ற அல்லோருக்கும்.... இனிய மல்லிகைப்பூ வாசம் வீசும் கனவுகள்:).

    [im]http://f.funnymals.co/Medium/1344891534_50296a8ebed0a.jpg[/im]

    ReplyDelete
  182. [co="dark green"]சொல்ல மறந்திட்டேன்ன்.. அம்முலு வெரிசொறி.... மிகுதிப் பதிகள் நாளைக்குத் தறன் பொறுத்தருள்க.. அதுக்கு மீ காரணமில்லை:)) அந்த பபப... பபாஆஆஅ....பூஊஊஊ தான் காரணம்:))... முடிஞ்சால் ஆராவது சென்னியில தள்ளி விடுங்கோவன்:)).. ஹையோ நான் பா...பூஊஊஊஉ வைச் சொன்னேன்ன்..

    அவதிப்பட்டு மாறிக் கீறிச் செய்திடாதீங்கோஒ:) ஜாமீஈஈ:)..... பிறகு கடையை ஆராம் நடத்துறது:). முருகா கால் வச்ச எல்லோரையும் காப்பாத்து:)) [/co]

    ReplyDelete
  183. அச்சோ, அச்சோ, இங்கின ஆரோ பாம்பூ பாம்பூ எண்டு பயந்து, சாமத்தில ஒழும்பிக் கத்துகினம் எண்டு நியூஸ் வந்திச்சுது! அதான் அரக்கப் பரக்க ஓடி வந்தனான்! \\

    ச்சே, தெரியாமல் ஒரு அன்பளிப்பைக் கொடுக்க வெளிக்கிட்டு, ஒரு அப்பாவி “ஜீவனின்” நித்திரையைக் குழப்பிட்டனே எண்டு இரைப்பை உறுத்துது ( ஹி ஹி ஹி மனச்சாட்சியை மாடு மேய்ந்துவிட்டது )

    அதான் ஒரு மந்திரிச்ச தாயத்தைக் கட்டிவிடுவம் ( 4 அடி தள்ளி நிண்டுதான் ) எண்டு வந்தனான்! ஓடிப்போய் வலது கையைக் கழுவி, திருநீறு பூசிக்கொண்டு வாங்கோ! தாயத்துக் கட்டிவிடுவம்!!

    ( மறக்காமல் கூலியையும் பே பண்ணிடுங்கோ - பின்ன தாயத்துக் கட்டுறதெண்டா சும்ம்மாவே?? )

    [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQZNAHVOtUPLzVvYwT623fOTZ104irW6mBnsvogIggCh3MhSgS5[/im]

    ReplyDelete
  184. ammulu said... 168
    // “தொட்டில் பழக்கம் உடுகாடு:) வரை” என்பினமெல்லோ.. அப்போ பழக்கும்போதே கரீக்டாப் பழக்கிட்டால் போச்சு:)...//
    சமைத்தார் என்றால் எல்லாமே டிப்டொப்தான். சமைத்த அடையாளமே தெரியாமல் அழகா இருக்கும் கிச்சன். கற்றுக்கொள்ள‌ இருக்கு.//

    [co="dark green"]பிறகென்ன அம்முலு... அடிக்கடி காய்ச்சல் குணமாக இருக்கெனச் சொல்லிக் கொண்டிருங்கோ:))). [/co]

    ReplyDelete
  185. ammulu said... 169
    உங்க கோவா ரெசிபி செய்துடவேண்டியதுதான். குஸ்குஸ் செய்து அதற்கு விசிறியாகிட்டினம்.//

    [co="dark green"]கோவா ரொட்டி நிட்சயம் செய்யுங்க அம்முலு... எங்கட சின்னாட்களுக்கே பிடித்துவிட்டதெனில் பாருங்கோவன். நல்ல சுவை. வடையிலும் போட்டுச் செய்தேன், நன்றாகவே இருந்துது.

    மியாவும் நன்றி அம்முலு... [/co]

    ReplyDelete
  186. மாத்தியோசி மணி மணி said... 185


    அதான் ஒரு மந்திரிச்ச தாயத்தைக் கட்டிவிடுவம் ( 4 அடி தள்ளி நிண்டுதான் ) எண்டு வந்தனான்! ஓடிப்போய் வலது கையைக் கழுவி, திருநீறு பூசிக்கொண்டு வாங்கோ! தாயத்துக் கட்டிவிடுவம்!!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்குப் பதிலுக்கு... இங்கின வாண்டோ:))... மியாவும் நன்றி.

    http://gokisha.blogspot.co.uk/2012/10/blog-post_25.html

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.