நல்வரவு_()_


Sunday 29 January 2012

வாழ்க்கை வெறுத்துப்போச்ச்ச்ச்:))

நிஜமாத்தான் சொல்றீங்களோ?:)
வாழ்க்கை வெறுத்துப் போச்சுது
எனச் சொல்லிக்கொண்டு
இன்னும் உயிரோடிருப்போரை
எனக்குப் பிடிக்காது


வாழ்க்கை வெறுத்தால்
சாக வேண்டியதுதானே
சொல்லிச் சொல்லி
ஏன் இருக்க வேண்டும்?:)

இதை நான் சொல்லவில்லை, முன்பு நான் 10 வயதாக இருந்தபோது, அப்பாவின் ஒபிஷில் வேலை பார்த்த ஒருவர் கவிதைகள் எழுதுவார், அதில் ஒன்றுதான் இக்கவிதை, வரிகள் மறந்திருப்பேன், ஆனா இப்படித்தான் ஆரம்பமாகியது அக்கவிதை, எழுதி எல்லாம் வைக்கவில்லை,  என் மனதில் அப்பவே பதிஞ்சு போச்சுது.

சரி இனி பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு சங்கதிக்கு வருகிறேன்.

ஒரு பணக்காரன், ஒரு பசுவைக் கயிற்றால் கட்டி, கையில் பிடித்துக்கொண்டு போனார், அதைப் பார்த்த துறவி ஒருவர் சொன்னார்,
 “ஐயாவை மாடு கட்டியிழுத்துப் போகிறது” என.

இதைக் கேட்ட பணக்காரருக்கு கோபம் வந்துவிட்டது,
 “ஏய் துறவியே, நன்றாகப் பார், நான் தான் மாட்டைக் கட்டியிழுத்துப் போகிறேன்” என்றார்.

அதுக்கு துறவி கேட்டார்,
“ஏன் கட்டியிழுத்துப் போகிறீர்கள்” என்று.

“கையை விட்டால் பசு போய்விடும்” என்றார் பணக்காரன்.

 “அப்போ பசு, தனியே, தன் பாட்டில் போக ரெடி, ஆனால் உங்களால்தான் பசுவை விட முடியாமல் பின்னால் போகிறீர்கள், ஆனா ஏதோ பசுவுக்காகத்தான் நீங்கள் போகிறீர்கள் என்பதுபோல சொல்கிறீர்கள்” என்றார்.

இதன் கருத்து என்னவென்றால், ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு ஒவ்வொரு சாட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம், யாரும் தனக்காக வாழ்கிறேன், தனக்காக உழைக்கிறேன் என்று சொல்ல மாட்டார்களாம், என் பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறேன், என் குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறேன். இப்பவே இறந்துவிடுவேன் ஆனா, பிள்ளைகள் வருந்துவார்களே என்றுதான் இன்னும் உயிரோடிருக்கிறேன் என எப்பவும் சாட்டை அடுத்தவர்மேல் போடுவதே நம் மனிதருக்கு பழகிப்போச்சாம்.

நாம் இல்லாமல் போனாலும், ஏனையோர் உயிர் வாழத்தான் போகிறார்கள், ஆனா நமக்கொரு நினைப்பு, அவர்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம் என.

ஏன், எனக்காகத்தான் நான் உழைக்கிறேன், வாழ ஆசையாக இருக்கு அதனால்தான் இருக்கிறேன் எனச் சொன்னால் என்ன?

எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சு, ஆனா அவர்களுக்காகத்தான்- இவர்களுக்காகத்தான் இன்னும் உயிரோடிருக்கிறேன் எனச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும், எனக் கேட்டார் பூஸ் ரேடியோவில் பிரசங்கம் நடத்தியவர். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...



இனியும் ஆராவது வாழ்க்கை வெறுத்துப் போச்செனச் சொல்லுவினமோ?:))).

************************************************************************************
ஊசி இணைப்பு:
நான் முன்பு சொல்லியிருக்கிறேன் தானே மக் பை பறவைகள் பற்றி. சமீபத்தில் BRITISH BIRDS என்றொரு புத்தகம் பார்த்தேன், அதிலேயே மக் பையின் கீழே எழுதியிருக்கிறார்கள் ONE FOR SORROW, TWO FOR GLAD  என. அப்போ எனக்கு சந்தோசம் தாங்க முடியாமல் போச்சு, நம்மவர் மட்டுமில்லை, வெள்ளையர்களும் நம்புகிறார்கள் என்று.


பின்பு என் ஒரு வெள்ளை நண்பியை இதுபற்றிக் கேட்டேன், அவ 10 வரைக்கும் பாட்டுப் பாடிக் காட்டினா, நாங்க 4 வரையும்தானே பாடுவோம். 10 குருவிகள் கண்டால் "SURPRISE" எனச் சொன்னா.... எதிர்பாரா சந்தோசம் நிகழுமாம்.. அவ்வ்வ்வ்வ். 


ஆனா இது எனக்கு நிஜமாகவே நிகழுது. எங்கள் ஏரியாவில் எப்பவும் இவர்கள் இருப்பார்கள், ஒன்றைக் கண்டால், நான் கார் ஓடுவதையும் விட்டுவிட்டு மற்றது இருக்கோ எனத் தேடுவேன்:)).

இது பற்றிய பதிவுக்கு-----> எங்கட கார்டினும் மக்கு பையும்:).
************************************************************************************



218 comments :

  1. இனிய காலை வணக்கம் அக்கா,

    என்னது கிணத்துக்கை குதிக்கப் போறீங்களோ?

    வாழ்க்கை வெறுத்துப் போச்சோ?
    முதல்ல கிணத்துக் கட்டால கீழ இறங்குங்கோ! பேசித் தீத்துக்கலாம்!

    அப்புறமா, மிகுதிக் கருத்துடன் வாரேன்!

    ReplyDelete
  2. மீ ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)))

    ReplyDelete
  3. அட என்னோட ஆல்டைம் ஃபேரைட் சோங்...முழுசா கேட்டுட்டு வரேன் :-)))).சிவாஜி...டி எம் எஸ் ஏஏஏஏஏக பொருத்தம் .

    ReplyDelete
  4. //வாழ்க்கை வெறுத்துப் போச்சுது
    எனச் சொல்லிக்கொண்டு
    இன்னும் உயிரோடிருப்போரை
    எனக்குப் பிடிக்காது//

    நீங்க கழுத்தை பிடிங்க நான் காலை பிடிக்கிறேன் தேம்ஸுல தூக்கி போட்டுடுவோம் ஓகேவா...!!! ஹி...ஹி... :-)))

    ReplyDelete
  5. //வாழ்க்கை வெறுத்தால்
    சாக வேண்டியதுதானே //

    கரெக்ட்

    //சொல்லிச் சொல்லி
    ஏன் இருக்க வேண்டும்?:)//

    சாக பயமா இருக்கே...!!! அவ்வ்வ்வ் :-))))

    ReplyDelete
  6. //இதை நான் சொல்லவில்லை,//
    ஆனா தலைப்பு சொல்லுதே..!! :-)))

    ReplyDelete
  7. //ஒரு பணக்காரன், ஒரு பசுவைக் கயிற்றால் கட்டி, கையில் பிடித்துக்கொண்டு போனார்,//

    லாஜிக் நாட் ஃபவுண்ட் ... டிரை சம் எர்ரர் ....மிஷன் இம்பாசிபிள் ...

    :-)))))))

    ReplyDelete
  8. //என எப்பவும் சாட்டை அடுத்தவர்மேல் போடுவதே நம் மனிதருக்கு பழகிப்போச்சாம்.//

    மனுஷனுக்கு மட்டும்தானே பொய் சொல்ல தெரியும் . :-))

    ReplyDelete
  9. //என் பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறேன், என் குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறேன். இப்பவே இறந்துவிடுவேன் ஆனா, பிள்ளைகள் வருந்துவார்களே என்றுதான் இன்னும் உயிரோடிருக்கிறேன்//

    இது முக்கியமா...மகன் , மகள் ,மனைவி ,கணவன் இவற்களை மிரட்டும் முதல்நிலை பவர்ஃபுல் ஆயுதம் ...!!. இரெண்டாவது கண்ணீர் . :-) :-(

    ReplyDelete
  10. //நாம் இல்லாமல் போனாலும், ஏனையோர் உயிர் வாழத்தான் போகிறார்கள், ஆனா நமக்கொரு நினைப்பு, அவர்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம் என.//

    ’’பூஸ் கண்மூடினால் பூலோகமே இருட்டுன்னு நினைக்குமாம் ’’ நான் சொல்லல இது பலமொலி ஹி...ஹி...:-))))

    ReplyDelete
  11. //
    இனியும் ஆராவது வாழ்க்கை வெறுத்துப் போச்செனச் சொல்லுவினமோ?:))).//

    மேலிருந்து 4வது கமெண்டை பாருங்க :-)))

    ReplyDelete
  12. //10 குருவிகள் கண்டால் "SURPRISE" எனச் சொன்னா.... எதிர்பாரா சந்தோசம் நிகழுமாம்.. அவ்வ்வ்வ்வ். //

    அந்த 10ஐயும் பிடிச்சு வீட்டிலேயே வைச்சுக்கோங்க ....எப்பவும் சந்தோஷம் கிடைக்கும் :-))))

    ReplyDelete
  13. //நான் கார் ஓடுவதையும் விட்டுவிட்டு மற்றது இருக்கோ எனத் தேடுவேன்:)).//

    எதிரில் வரும் ஆள் காலி ..அவனுக்கு அன்னைக்கு என்ன பலன் போட்டிருந்துச்சோ தெரியல அவ்வ்வ்வ் :-))))))))))))))))))))))).

    ReplyDelete
  14. ஓகே , ஒரு ஸ்மால் தூக்கம் போட்டுவிட்டு பிறகு வரேன் ..:-))))

    ReplyDelete
  15. //கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)

    ஜெய்லானி (187)
    angelin (115) //

    ஹை ..இந்த டீல் பிடிச்சிருக்கே..!! :-)))))

    ReplyDelete
  16. இனியும் ஆராவது வாழ்க்கை வெறுத்துப் போச்செனச் சொல்லுவினமோ?:))).

    சிரிக்கவும், சிந்திகவும் சிறப்பாக செய்த பகிர்வு.. பாராட்டுக்கள்.

    படங்கள் அருமை..

    ReplyDelete
  17. மக் பை

    இந்த மக் பையை தபால்காரரின் எதிரி எனிறார்கள் ஆஸ்திரேலியாவில்..

    ReplyDelete
  18. ஆஆஆஆஆ... நிரூபன் வாங்கோ... இம்முறைதான் என்பக்கத்துக்கு முதலாவதாக வந்திருக்கிறீங்க... அதனால நிரூபனுக்கு இண்டைக்கு மட்டின் பிர்ர்ர்ர்ர்ர்ராணி வித் அ.கோ.முட்டை(ஒன்றுதான் தருவேன்).

    நீங்க பத்திரமாப் போட்டுப் பேந்து வாங்கோ கதைப்பம்... உண்ட களை தொண்டனுக்கும் இருக்கும்தானே... அதில பிரியாணி சாப்பிட்டால்.. மயக்கம் மயக்கமா வரும் அவ்வ்வ்வ்வ்:)).

    மியாவும் நன்றி நிரூபன்.

    ReplyDelete
  19. ஆஆஆஆ.. வாங்கோ ஜெய் வாங்கோ...

    // ஜெய்லானி said...
    மீ ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))//
    ஹா..ஹா..ஹா... என்னால சிரிப்பை அடக்கவே முடியேல்லை.. கரெக்ட்டாச் சொல்லிவச்சதுபோல 2வதா வந்திருக்கிறீங்க, ஆனா நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன், சொன்னால் ஓடிடுவீங்க அதனால.. இம்முறை எல்லாம் மாற்றப்பட்டுவிட்டது... 50 ஆவதுக்குத்தான் ஆயாவாம்...:)).

    ஜெய்க்கு.. புட்டும் ரால் பொரியல் அண்ட் மட்டின் பிரட்டல்:)).

    ReplyDelete
  20. பாட்டு.. உண்மையிலயே எவ்வளவு அர்த்தமான பாடல் ஜெய்.... கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. மிக்க நன்றி.

    //நீங்க கழுத்தை பிடிங்க நான் காலை பிடிக்கிறேன் தேம்ஸுல தூக்கி போட்டுடுவோம் ஓகேவா...!!! ஹி...ஹி... :-)))//

    ஹா..ஹா...ஹா... என்னைக் கழுத்தைப் பிடிங்க என்றால் நான் மாறிக்கீறி நசுச்சுப் போடுவன்..:)) பிறகு நானெல்லோ பிரித்தானியா ஜெயிலுக்குப் போகோணும்:)).. அஞ்சுதான் கார்ட் எல்லாம் செய்கிறவ அவ வடிவாப் பிடிப்பா கழுத்தை, நான் வேணுமெண்டால் ஒருகையைப் பிடிக்கிறன் மற்றக்கை மகிக்கு:))... யெல்ப்புக்கு கிரிசா:))..

    உண்மைதானே “திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்” உடனேயே தேம்ஸ்ல எறிஞ்சிடோணும்:))... உஸ்ஸ்ஸ் அப்பா.. இனிமேல் நாமளும் ஜாஆஆஆஆக்க்க்க்க்க்ர்தையாத்தான் கதைக்கோணும்:).

    ReplyDelete
  21. ஜெய்லானி said...
    //

    //சொல்லிச் சொல்லி
    ஏன் இருக்க வேண்டும்?:)//

    சாக பயமா இருக்கே...!!! அவ்வ்வ்வ் :-)))

    ///
    நீங்க கழுத்தை பிடிங்க நான் காலை பிடிக்கிறேன் தேம்ஸுல தூக்கி போட்டுடுவோம் ஓகேவா...!!! ஹி...ஹி... :-)))// ரிப்பீட்டு...

    யாமிருக்கப் பயமேன்.. ரெடி ஸ்ரெடி வன் ரூ.... விடமாட்டமில்ல:))

    ReplyDelete
  22. //லாஜிக் நாட் ஃபவுண்ட் ... டிரை சம் எர்ரர் ....மிஷன் இம்பாசிபிள் ...//

    ஒண்ணுமே புரியல்லயே எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்:)).
    ----------------
    //’’பூஸ் கண்மூடினால் பூலோகமே இருட்டுன்னு நினைக்குமாம் ’’ நான் சொல்லல இது பலமொலி ஹி...ஹி...:-))))///

    பலமொலி நல்லாத்தான் இருக்கு:)).. ஆனா இதைச் சொன்னவர் மட்டும் என் கைல மாட்டினார் அவ்ளோதான்:)).
    --------------------------------

    ///அந்த 10ஐயும் பிடிச்சு வீட்டிலேயே வைச்சுக்கோங்க ....எப்பவும் சந்தோஷம் கிடைக்கும் :-))))///

    அடடா இது சூப்பர் .. எனக்கு இப்படி ஒரு ஐடியா வரவே இல்லையே...:)) இதுவும் நல்லாத்தான் இருக்கு..

    போனவாரம், விடிய எழும்பிப்போய் கிச்சின் ஜன்னல் ஷட்டரை நீக்கினேன்... ஒரே ஒரு மக்பை கார்டினில் நின்றது... இது என்ன கொடுமை சாமி என விட்டுவிட்டேன்....

    ஒரு மணி நேரத்தில் ஃபோன் வந்துது உறவுமுறையில் மாமா ஒருவர் காலமாகிவிட்டார் என...(சுகயீனமாகத்தான் இருந்தவர், வயதானவர்).

    ReplyDelete
  23. // ஜெய்லானி said...
    ஓகே , ஒரு ஸ்மால் தூக்கம் போட்டுவிட்டு பிறகு வரேன் ..:-)))//

    என்னாது மோல்ல போய்த் தூங்கப்போறீங்களோ? கவனம் மக்பை தூக்கிட்டுப் போனாலும் போயிடும்:))).

    //ஹை ..இந்த டீல் பிடிச்சிருக்கே..!! :-)))))//

    உஸ்ஸ்ஸ் மெதுவா ஜெய், இப்போ பொரிவிளாங்காய் ரெடியாகியிருக்கும் உங்களுக்காக:)).

    மியாவும் நன்றி ஜெய்.

    ReplyDelete
  24. //ஹா..ஹா..ஹா... என்னால சிரிப்பை அடக்கவே முடியேல்லை.. கரெக்ட்டாச் சொல்லிவச்சதுபோல 2வதா வந்திருக்கிறீங்க, ஆனா நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன், சொன்னால் ஓடிடுவீங்க அதனால.. இம்முறை எல்லாம் மாற்றப்பட்டுவிட்டது... 50 ஆவதுக்குத்தான் ஆயாவாம்...:)).//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  25. இனி நான் அப்படி சொல்லவே மாட்டேன் அதிரா.

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று..
    பாடல் பகிர்வு அருமை.கொலைவெறி பாடலை உங்க புண்ணியத்தில் திரும்ப கேட்டாச்சு.உங்கட கார்டின் பகிர்வு இப்ப தான் பார்த்தேன்...

    ReplyDelete
  26. //ஜெய்க்கு.. புட்டும் ரால் பொரியல் அண்ட் மட்டின் பிரட்டல்:)).//
    புட்டுக்கு பதில் தோசை டிரிபிள் ஓகே :-)))

    ReplyDelete
  27. //ஹா..ஹா...ஹா... என்னைக் கழுத்தைப் பிடிங்க என்றால் நான் மாறிக்கீறி நசுச்சுப் போடுவன்..:)) //

    உங்களை பிடிக்க சொல்றதே அதுக்குதானே ஹா..ஹா.. சாகப்போற ஆளை எங்கே பிடிச்சா என்ன ஹி..ஹி...:-))))))

    ReplyDelete
  28. வாங்கோ ராஜேஸ்வரி வாங்கோ..

    நீங்க வந்திட்டு இடையில வராமலே விட்டுவிட்டீங்க, நான் கொஞ்ச நாட்கள் உங்களிடம் வந்தேன், நீங்கள் வராமல் விடவே சரி நானும் குழப்பக்கூடாது என விட்டிருந்தேன்.

    //இந்த மக் பையை தபால்காரரின் எதிரி எனிறார்கள் ஆஸ்திரேலியாவில்..//

    எதுக்காகவோ? நான் ஏதும் அறியவில்லை.

    மியாவும் நன்றி.

    இப்பவும் ஜன்னலால் வெளியே பார்க்கிறேன் ஒரே ஒரு மக்பை மரத்தில இருந்து என்னைப் பார்க்குது அவ்வ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  29. //ஒண்ணுமே புரியல்லயே எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்:)).//

    ஒரு பணக்காரன், ஒரு பசுவைக் கயிற்றால் கட்டி, கையில் பிடித்துக்கொண்டு போனார்:-)))

    ReplyDelete
  30. ஹா...ஹா..ஹா... ஜெய்க்குப் புட்டுப் பிடிக்காதோ? அவ்வ்வ்வ்வ்...

    சத்தியமா நேற்றுத்தான் தோசைக்க்கு வைத்திருக்கிறேன், இன்னும் 2 நாள் எடுக்கும் புளிக்க, ஆனா தோசை நல்லா வருவதற்கு நோ கரண்டி:)).. சுட்டால் வாயை மூடிக்கொண்டு, சிரிச்சபடி சாப்பிடோணும்:)) டீல் சரிதானே?:))).
    ------------------------------

    ///உங்களை பிடிக்க சொல்றதே அதுக்குதானே ஹா..ஹா.. சாகப்போற ஆளை எங்கே பிடிச்சா என்ன ஹி..ஹி...:-))))))//

    ஹா..ஹா..ஹா.. சிரிச்சு முடியல்ல சாமீஈஈஈஈஈ.. வை திஸ் கொலவெறி? ஹா..ஹா..ஹா... பாடல் சூப்பராப் பொருந்துதே:)).

    ReplyDelete
  31. வாங்கோ ஆசியா வாங்கோ....

    //Asiya Omar said...
    இனி நான் அப்படி சொல்லவே மாட்டேன் அதிரா//

    ஹா..ஹா..ஹா.. ரொம்பத்தான் திருந்திட்டீங்க:)), நானும் பூஸ் ரேடியோவில் கேட்டதிலிருந்து வாய்க்கு ஷட்டர் போட்டிட்டேன்:))).

    பாடல் தேடும்போது இந்தக் கொல வெறி பாட்டுக் கிடைச்சுது, முதன் முதலா கேட்க ஒரு சந்தோசமாக இருந்துது, மீண்டும் மீண்டும் பலதடவை கேட்டேன், அப்போதான் என் தலைப்புக்கும் இது பொருந்துதே என நினைத்து எடுத்துப் போட்டேன்:)).

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  32. //ஜெய்லானி said...
    //ஒண்ணுமே புரியல்லயே எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்:)).//

    ஒரு பணக்காரன், ஒரு பசுவைக் கயிற்றால் கட்டி, கையில் பிடித்துக்கொண்டு போனார்:-))//

    ஓ... பணக்காரன் பசுவோடு நடக்கமாட்டார் என்கிறீங்களோ? அதுவும் சரிதான், ஆனா ரேடியோவில் இப்படித்தான் சொன்னார்கள், ஒருவேளை.. ஒருவேளை ஏழை எனச் சொன்னால், ஏழைக்கு பெரிதாக வாழும் ஆசை இருக்காது, சாக ரெடி என்பதுபோல வெறுப்பாக இருக்கும் என எண்ணித்தான் இப்படிப் போட்டினமோ?.. அவ்வ்வ்வ்வ்... குழப்பமாத்தான் இருக்கெனக்கு.

    ReplyDelete
  33. //
    பாடல் தேடும்போது இந்தக் கொல வெறி பாட்டுக் கிடைச்சுது, முதன் முதலா கேட்க ஒரு சந்தோசமாக இருந்துது, மீண்டும் மீண்டும் பலதடவை கேட்டேன், அப்போதான் என் தலைப்புக்கும் இது பொருந்துதே என நினைத்து எடுத்துப் போட்டேன்:)).//

    http://www.youtube.com/watch?v=FopqL-2pDGY

    ReplyDelete
  34. கொலவெறி பாட்டு உலகமே ரசிச்சாலும் மனசு அதில் ஒட்டவில்லை :-/

    ReplyDelete
  35. சூப்பர் ஜெய்... இவ்வளவு நேரமும் மெய்மறந்து கேட்டேன் “யாழ்ப்பாணம் ரயிலேறி”.... ஆசையா இருக்கு, ரெயினும் ஸ்டேஷனும், புகையிலைக் கன்றுகள், வாழைத்தோட்டம்... ம்ஹூம்....

    ReplyDelete
  36. //ஜெய்லானி said...
    கொலவெறி பாட்டு உலகமே ரசிச்சாலும் மனசு அதில் ஒட்டவில்லை :-//

    எனக்கு இப்போ, இன்றுகாலைதான் கொலவெறிப்பாட்டு தெரிஞ்சுது ஜெய், மியூசிக் அடுத்து, அதில் தனுஸ், மனைவி எல்லோரையும் காட்டுவதால்தான் கொஞ்சம் பிடிச்சிருக்கு...

    மற்றும்படி அதில் ஒன்றுமே இல்லைத்தான். எனக்கு தனுஷைப் பெரிசாப் பிடிப்பதில்லை, அவரின் படங்களும் பிடிப்பதில்லை, ஆனா ”மயக்கமென்ன” படம் மட்டும் பறவாயில்லை நன்றாக இருந்துது.

    ReplyDelete
  37. நான் வருவதற்கு இடையில் சும்மா அந்த மாதிரி அடிச்சு ஆடுறாங்களே!
    அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  38. அக்காச்சி,
    அவிச்ச கோழி முட்டைக்குள்ள மஞ்சள் கருவை காணல்லை.. யாரோ ஒராள் திருடித் திண்டிட்டாங்க என்று நினைக்கிறேன்..

    புரியாணிக்கு உப்பு கொஞ்சம் கம்மி! இருந்தாலும் டேஸ்ட் சூப்பர்.

    வழமையாக நான் சாப்பிடுற செத்த கோழிப் புரியாணி தானே இந்த முறையும் செஞ்சிருக்கிறீங்க.

    ReplyDelete
  39. வாழ்க்கை வெறுத்துப் போச்சுது
    எனச் சொல்லிக்கொண்டு
    இன்னும் உயிரோடிருப்போரை
    எனக்குப் பிடிக்காது


    வாழ்க்கை வெறுத்தால்
    சாக வேண்டியதுதானே
    சொல்லிச் சொல்லி
    ஏன் இருக்க வேண்டும்?:)//

    கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி! ரொம்ப சூப்பரு!

    அது சும்மா வெருட்டலுக்குங்க.
    என்னைப் பொறுத்த வரை சாகப் போறன் என்று சொல்லுறவன் கண்டிப்பாகச் சாகவே மாட்டேன்!

    முன்னாடி இது தொடர்பாக ஓர் பதிவு எழுதியிருக்கேன்.

    அம்மா நான் போரடப் போறேன்..இயக்கத்திற்கு போக போறேன் என்று வெருட்டுறவை கடைசிவரைக்கும் போகவே மாட்டாங்க.

    ReplyDelete
  40. இதை நான் சொல்லவில்லை, முன்பு நான் 10 வயதாக இருந்தபோது, அப்பாவின் ஒபிஷில் வேலை பார்த்த ஒருவர் கவிதைகள் எழுதுவார், அதில் ஒன்றுதான் இக்கவிதை, வரிகள் மறந்திருப்பேன், //

    சத்தியமாச் சொல்லுறேன்.
    அது நான் இல்லை! இல்லை! இல்லை! இல்லை!

    எனக்கு அம்புட்டு வயசா என்ன?

    மீ 18

    ReplyDelete
  41. அப்போ பசு, தனியே, தன் பாட்டில் போக ரெடி, ஆனால் உங்களால்தான் பசுவை விட முடியாமல் பின்னால் போகிறீர்கள், ஆனா ஏதோ பசுவுக்காகத்தான் நீங்கள் போகிறீர்கள் என்பதுபோல சொல்கிறீர்கள்” //

    ஆகா..இது தான் இடக்கு முடக்கான இடத்தில மாட்டிக்குறதா?

    சும்மா கற்பனை பண்ணிப் பார்த்தேன்
    நம்ம பூசார், ஒரு பூஸை கட்டி இழுத்திட்டு போனா எப்பூடி இருக்கும் என்று?

    ஒரே சீப்பு சீப்பா வருதுங்க.

    ReplyDelete
  42. , யாரும் தனக்காக வாழ்கிறேன், தனக்காக உழைக்கிறேன் என்று சொல்ல மாட்டார்களாம், என் பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறேன், என் குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறேன். இப்பவே இறந்துவிடுவேன் ஆனா, பிள்ளைகள் வருந்துவார்களே என்றுதான் இன்னும் உயிரோடிருக்கிறேன் என எப்பவும் சாட்டை அடுத்தவர்மேல் போடுவதே நம் மனிதருக்கு பழகிப்போச்சாம்.//

    என்னுடைய குறுகிய கால அனுபவத்தில்,
    நான் பழகிய ஏனைய மனிதர்களின் அடிப்படையில்

    தமிழர்களும், இலங்கை இந்திய நாட்டவர்களும், சீனர்களும் தான் இப்படிச் சொல்லுவார்கள்!
    ஆனால் மேலைத்தேய நாட்டவர்கள்,
    ஐஞ்சு நாள் வேலை! ஆறாம் நாள் பப்பிலும், கிளப்பிலும் செலவழிப்பு, ஏழாம் நாள் பீச்சில வெய்யில் காய்வது! ஸோ...அவனோட லைப் முடிஞ்சுது!

    எம்மவர்க்குத் தான் ஹொலிடேயோ இல்லை லீவோ ஒன்னுமே வேணாம் என்று சொல்லிட்டு எந் நேரமும்,
    குடும்பம், குட்டி, செல்வத்தை சேமிக்கனும், செல்வத்தை பெருக்கனும் என்று மாடாய் உழைக்கிற பழக்கம் இருக்கும்!

    இறுதியில் பார்த்தா வீட்டில சந்தோசம் கிடையாது!

    ஆனால் வெள்ளையர்கள் ஹொலிடே கிடைக்குது என்றால் மூட்டை முடிச்சோட கட்டிக் கொண்டு போய் இன்னோர் ஊரில இருந்து அனுபவிச்சு, இயற்கையுடன் பொழுதை கழிச்சிட்டு வாறாங்க.

    நம்மாளுங்களும் இருக்காங்களே! மொதல்ல இந்த பழக்கத்தை தமிழ்க் குடியில இருந்து ஓட ஓட விரட்டனும்!

    தான் புள்ளைகளுக்கு உழைச்சுக் குடுத்திட்டு,
    பிறகு அதுகளின் காலத்தில அந்தப் பிள்ளைகளைக் கூட நிம்மதியா வாழ விடுறேல்லை..

    குட்டி போட்ட பூனை மாதிரி பின்னாலையும், முன்னாலையும் திரிஞ்சு,

    "ஐயோ! என்ர மகராசனில்லே! உன்னை உழைச்சு படிப்பிச்சு, டொக்டர் ஆக்கி விட்டது நான் தானே!
    நீ என்னை கவனிக்க மாட்டேன் என்றால் எங்கே போவேன்?" என்று கூப்பாடு போட்டு,
    புள்ளைங்களிடம் இருந்து வறுகுவது!

    இப்படி இப்படியே சந்ததி சந்ததியா எங்கட சனம் நாறுது!
    திருந்திறதைக் காணேல்லை!

    அதுக்காக பெற்றோரைப் பார்ப்பது தவறு என்று சொல்லவரலை! பெற்றோரையும் பார்க்கத் தான் வேண்டும்! இப்படி ஓவர் தொல்லை கொடுக்கும் பெற்றோரை கையாளத் தானே பல வழிகள் இருக்கும்!

    ReplyDelete
  43. அதிரா !!!!!!! பாவம் நிரூபன் ??????????? ஏன் அவருக்கு காக்கா பிரியாணி தந்தீங்க அவர் விளங்காம செத்த கோழின்னு சொல்றார்

    ReplyDelete
  44. ஏன், எனக்காகத்தான் நான் உழைக்கிறேன், வாழ ஆசையாக இருக்கு அதனால்தான் இருக்கிறேன் எனச் சொன்னால் என்ன?//

    இந்த கருத்தினை கண்டிக்கிறேன்.
    எப்படிங்க நம்ம தமிழனுக்கு வாழ மனம் வரும்?’
    சொத்தைக் கட்டிப்புடிச்சுக் கொண்டு தூங்கவே நேரம் சரியாகப் போயிடும்!

    கறுமம்! கறுமம்!

    ReplyDelete
  45. angelin said...
    அதிரா !!!!!!! பாவம் நிரூபன் ??????????? ஏன் அவருக்கு காக்கா பிரியாணி தந்தீங்க அவர் விளங்காம செத்த கோழின்னு சொல்றார்//

    ஏலேய் இங்கே என்னா நடக்குது?
    அவ்வ்வ்வ்வ்வ்
    ஏஞ்சலின் அக்கா, என்ன புதுப் பதிவுகள் ஒன்னையுமே காணலை

    ReplyDelete
  46. பாட்டு கேட்டு கொண்டிருக்கேன் ,

    ReplyDelete
  47. இனியும் ஆராவது வாழ்க்கை வெறுத்துப் போச்செனச் சொல்லுவினமோ?:))).
    //

    அவ்வ்வ்வ்

    இனிமே யாரும் சொல்லவே மாட்டீனம்.

    நான் முதல் கமெண்ட் போடும் போது, நீங்க வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டதாக
    புலம்புவதாக நினைத்து கமெண்ட் போட்டேன்.
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  48. angelin said...
    பாட்டு கேட்டு கொண்டிருக்கேன் ,//

    நான் தான் பாடலையே!

    கமெண்ட் எல்லே டைப் செஞ்சிட்டு இருக்கேன்.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  49. இதோ கொஞ்ச நேரம் கழிச்சி வரேன் .நிரூபன் சுட சுட வெஜ் சமோசா .அண்ட் சிக்கன் பஃப்ஸ் .பூசுக்கு தெரியாம ஒளிச்சு சாப்பிடுங்க

    ReplyDelete
  50. இந்த மக் பைஸ் ஆஸ்திரேலியாவிற்கு உரிய சிறப்பான பறவைகள்! ஆஸ்திரேலியாவில் அதிகமாக காணப்படும் என்று அறிந்தேன்.
    அதே போல ஆஸியில் உள்ள மிகப் புகழ் பெற்ற ஹாலிங்வூட் புட்போல் கிளப்பிற்கும் மக்பை தான் சிம்போல்.

    ReplyDelete
  51. angelin said...
    இதோ கொஞ்ச நேரம் கழிச்சி வரேன் .நிரூபன் சுட சுட வெஜ் சமோசா .அண்ட் சிக்கன் பஃப்ஸ் .பூசுக்கு தெரியாம ஒளிச்சு சாப்பிடுங்க//

    ஆளாளுக்கு இப்படிச் சாப்பாட்டைத் தந்து என்னோட உடம்பை ஊதப் பண்ணி,
    ஒருத்தரும் பொண்ணு குடுக்காத பண்ணி
    செய்றீங்களே!

    இது நியாயமா?

    ReplyDelete
  52. அட, ஏஞ்சலின் அக்கா, பதிவு போட்டிருக்கா,
    நான் தான் தவற விட்டு விட்டேன்.

    இதோ வந்திடுறேன்.

    ReplyDelete
  53. இனியும் ஆராவது வாழ்க்கை வெறுத்துப் போச்செனச் சொல்லுவினமோ?:))).//

    ஹா ஹா ஹா .படிச்சிட்டு சிப்பு சிப்பா வருது உண்மையான தத்துவம் அதிரா .

    ReplyDelete
  54. ஜெய்லானி said...
    கொலவெறி பாட்டு உலகமே ரசிச்சாலும் மனசு அதில் ஒட்டவில்லை :-/


    சேம் பின்ச்..ஆமாம் ஜெய் எனக்கும் அதே தான் ..ஆனா என்ன செய்ய
    உண்மைய சொன்னாலோ இல்ல சந்தேகத்த கேட்டாலோ கொல வெறியோட
    நம்ம பாக்கறாங்க அதனால் வெள்ளை காக்கா போகுதுன்னு சொன்னா ஆமாம் கூட ரெண்டு குட்டி காக்காவும் போகுதுன்னு தலைய ஆட்டிகிடனும்

    ReplyDelete
  55. //அஞ்சுதான் கார்ட் எல்லாம் செய்கிறவ அவ வடிவாப் பிடிப்பா கழுத்தை, நான் வேணுமெண்டால் ஒருகையைப் பிடிக்கிறன் மற்றக்கை மகிக்கு:))... யெல்ப்புக்கு கிரிசா:))..//

    இதெல்லாம் விட ஜெய்கிட்ட சொன்னா சத்தமில்லாம ஒரே ஒரு ரெசிப்பில
    கத்தியின்றி ரத்தமின்றி ..................ஹோ கயா..

    ReplyDelete
  56. helloooooooooooooooo i am herrrrrrrrrrrrrrrrrrr!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  57. சைனஸ் தலை வலி மண்டைய பொளக்குது போய் கொஞ்ச நேரம் கண் அசரலாமுன்னு போனா இங்கே என்ன ஒரே சத்தம் ??? யாரையோ போட்டு தள்ள என் ஜெல்ப் வேணுமுன்னு சத்தம் கேட்டுதே ??

    ReplyDelete
  58. ச்சே இந்த மாதிரி தூங்க விடாம பதிவு போட்டு ..... ஹும்ம்ம் நிம்மதியே இல்லே வாழ்க்கை வெறுத்து ஊஉ போச் ச்ச் ச் :))

    ReplyDelete
  59. Me 60th


    //நான் கார் ஓடுவதையும் விட்டுவிட்டு மற்றது இருக்கோ எனத் தேடுவேன்:)).//

    நல்ல வேளை நான் பூஸ் இருக்குற எடத்துல இருந்து ரொம்.............................ப தூரத்தில இருக்கேன் . ஒய் திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி பூஸ் ??

    ReplyDelete
  60. // கரெக்ட்டாச் சொல்லிவச்சதுபோல 2வதா வந்திருக்கிறீங்க,//

    எத்தனாவதா வந்தாலும் அவருக்கு ஆ..... தான் :))


    //திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்//

    ம்ம்ம்ம் சாக்கிரதை ஹீ ஹீ நானும் என்னைய சொன்னேன் . கொல கார கும்பலா இருக்கே என்ன பண்ணலாம் ???


    //யாமிருக்கப் பயமேன்.. ரெடி ஸ்ரெடி வன் ரூ.... விடமாட்டமில்ல:))//

    நீங்க இருக்குறதாலத்தான் பயமே இது தெரியாம :))

    ReplyDelete
  61. அடுத்தபடியா வீகெண்டிலே நான் வரமாட்டேன்னு தெரிஞ்சுகிட்டு அடுத்த போஸ்ட்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..என்சொய் மக்கள்ஸ்!

    ReplyDelete
  62. //நான் சொல்லல இது பலமொலி ஹி...ஹி...:-))))/////

    டீஈஈஈ ஈ ஈ ஈ ச் ச் ர்ர்ர் சீக்கிரம் வாங்க ஸ்பெல்லிங் ஸ்பெல்லிங் :))


    நான் இந்த மக்பை பத்தி உங்க பதிவுல தான் முதல் முதல் கேள்விப்பட்டேன். பொதுவா எதையும் நான் நம்ப மாட்டேன். நல்லது கேட்டதுக்கு லிங்க் கொடுக்க மாட்டேன். நாங்க இப்போ இருக்கும் வீடு வாங்க papers sign பண்ண போகும்போது ஒரு கறுபபு பூஸ் குறுக்கால ஓடிச்சு.


    ஊரில பூஸ் குறுக்கே போச்சுன்னா என்ன சொல்லுவாங்கன்னு தெரியும் இல்லே? ஒரு நிமிஷம் மனசுக்குள்ளே போகுற காரியம் நல்லபடியா முடியணுமுன்னு கடவுள வேண்டிக்கிட்டு கெளம்பிட்டோம். அதே போல நல்ல படியா வீடு வாங்கி இவ்ளோ நாளும் ஆண்டவன் அருளால நல்ல படியா இருக்கோம்.


    சகுனம் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சா அதுக்கு ஒரு முடிவே இருக்காது அப்படின்னு நானும் என் கணவரும் எதையும் நம்புவதில்லை கடவுளை தவிர !!

    ReplyDelete
  63. //அடுத்தபடியா வீகெண்டிலே நான் வரமாட்டேன்னு தெரிஞ்சுகிட்டு அடுத்த போஸ்ட்? //

    அதான் இப்ப வந்திட்டீங்களே ?? ஹீ ஹீ வரீங்களான்னு பார்க்க ஒரு தூண்டில் போட்டு இருக்காங்க பூஸ்

    ReplyDelete
  64. //ஜெய்லானி said...
    கொலவெறி பாட்டு உலகமே ரசிச்சாலும் மனசு அதில் ஒட்டவில்லை :-/


    சேம் பின்ச்..ஆமாம் ஜெய் எனக்கும் அதே தான் ..///


    சேம் சேம் பின்ச் எனக்கும் அந்த பாட்டில என்ன இருக்கோ தெரியல. நம்ம எல்லாம் இளையராஜா பாட்ட கேட்டு வளர்ந்தவங்க சோ இதெல்லாம் புடிக்காதுன்னு நெனைக்கிறேன்!

    ReplyDelete
  65. //எனக்கு இப்போ, இன்றுகாலைதான் கொலவெறிப்பாட்டு தெரிஞ்சுது //

    மகி நோட் திஸ் பாயிண்ட். நீங்க போடுற பாட்டெல்லாம் பூஸ் கேக்குறது இல்லே போல இருக்கு.


    பூஸ் மகி இந்த கொல வெறிய கொஞ்ச நாளைக்கு முன்னே போட்டாங்களே கேக்கலையா ஆஆ ??

    நாராயணா நாராயணா வந்த வேல முடிஞ்சது அப்புறம் வரேன் !!

    ReplyDelete
  66. நர்ஸ்தலையில் இரத்த காயம் உள்ள பேஷன்டிடம்
    -------------
    உங்கள் பெயர் ..... (யார் யாருக்கு யார் மேல கொல வெறியோ அவுக பேரை போட்டுக்கோங்க )

    பேஷன்ட் : ...........

    நர்ஸ் ... பிறந்த தேதி
    பேஷன்ட் :28/Feb/1975

    நர்ஸ் .: திருமணமாகி விட்டதா ?

    பேஷன்ட்: இல்ல இல்ல இது கார் ஆக்சிடன்ட்

    ReplyDelete
  67. வாழ்க்கை வெறுத்துப் போச்சுது
    எனச் சொல்லிக்கொண்டு
    இன்னும் உயிரோடிருப்போரை
    எனக்குப் பிடிக்காது


    வாழ்க்கை வெறுத்தால்
    சாக வேண்டியதுதானே
    சொல்லிச் சொல்லி
    ஏன் இருக்க வேண்டும்?:)//

    ஏன் இந்த கொலவெறி???

    ReplyDelete
  68. இன்னிக்கு பூஸுக்கு என்ன ஆச்சு?

    ReplyDelete
  69. இந்தக் கொல வெறி பாட்டுக் கிடைச்சுது, முதன் முதலா கேட்க ஒரு சந்தோசமாக இருந்துது, மீண்டும் மீண்டும் பலதடவை கேட்டேன், //

    சரிதான் இன்னிக்கு தங்கச்சிக்கு என்னமோ ஆச்சு:(

    ReplyDelete
  70. நிரூபன் ரிரேன்ஸ்ஸ்:)).. அதுதானே பார்த்தேன்..

    வராட்டில் அதே கதைதான்....
    கைல.. கால்ல.. கழுத்தில.... ஸ்ரெயிட்டா தேம்ஸ்ல:)) ஹா..ஹா..ஹா....:))).

    என்னாது எதைக் குறை சொன்னாலும் தாங்குவேன் என் அவித்த கோழி முட்டையிலமட்டும் குறை சொன்னீங்க நடக்கிறதே வேற:))..

    //அவிச்ச கோழி முட்டைக்குள்ள மஞ்சள் கருவை காணல்லை.//

    நம்மட டீலே அதுதானே:)).

    கொஞ்சம் இருங்க ஜெய்யிடம் கேட்டால், பறக்கிற சிக்கினில் எப்பூடி புரியாணி போடலாம் எனக் குறிப்புத்தருவார், அடுத்தமுறை என் தலைப்புக்கு 2 வது:) ஆளா வாங்கோ.. சுடச் சுடத்:) தாறேன் OK?.

    ReplyDelete
  71. //சத்தியமாச் சொல்லுறேன்.
    அது நான் இல்லை! இல்லை! இல்லை! இல்லை!//

    சே..சே..சே.. தொல்லை தாங்க முடியல்லப்பா:)).
    ---------------

    //சும்மா கற்பனை பண்ணிப் பார்த்தேன்
    நம்ம பூசார், ஒரு பூஸை கட்டி இழுத்திட்டு போனா எப்பூடி இருக்கும் என்று?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பூஸாரைக் கட்டி இழுப்பதோ? பல்லக்கில எல்லோ கூட்டிப்போகோணும் அவ்வ்வ்வ்:)) சும்மா சும்மா எல்லாம் முறைக்கப்படா:)).

    ReplyDelete
  72. //உண்மைய சொன்னாலோ இல்ல சந்தேகத்த கேட்டாலோ கொல வெறியோட
    நம்ம பாக்கறாங்க அதனால் வெள்ளை காக்கா போகுதுன்னு சொன்னா ஆமாம் கூட ரெண்டு குட்டி காக்காவும் போகுதுன்னு தலைய ஆட்டிகிடனும்//

    யார் அவங்க ..? அவங்களுக்கு என்னோட பிளாக் அட்ரஸை குடுங்க ..பீப்பீ அடோமேடிக்கா குறைஞ்சிடும் .அப்படி இல்லாட்டி உங்க பக்கமே தலை வச்சி படுக்க மாட்டாங்க ஹா..ஹா.. :-))))

    ReplyDelete
  73. //இப்படி இப்படியே சந்ததி சந்ததியா எங்கட சனம் நாறுது!
    திருந்திறதைக் காணேல்லை! //

    ஹா..ஹா..ஹா... உண்மைதான் நிரூபன், ஆனால் எங்கட முறையையும் குறைசொல்ல முடியவில்லை.. ஒருவிதத்தில அதுவும் நல்ல முறைதான்.

    வெள்ளையர்கள் 18 வயதானவுடன் பிள்ளைகள் வெளியே போய் விடுவர்/அனுப்பிவிடுவர், அல்லது அவர்களும் ஒருபங்கு பணம் கொடுக்க வேண்டுமாம், வீட்டில் இருப்பதாயின்.

    என்னோடு கொலீஜிலே ஒரு கேர்ள் படித்தா, அப்போ அவ சொன்னா, என் பேரன்ஸ்ச்சோடுதான் ஒரு ரூமில் இருக்கிறேன், எனக்கு எங்கும் வேர்க் கிடைக்குதில்லை, வீட்டுக்கு நான் பே பண்ணுவதில்லை, ஆனா என் சாப்பாட்டை நானேதான் பார்க்கிறேன் என.

    இதேபோல் இவர்கள் என்ன இல்லாவிட்டாலும் ஹொலிடேக்கு வெளியூர் போவதைமட்டும் விடமாட்டார்கள், போகாதுவிட்டால் பைத்தியம் பிடித்ததுபோலாகிவிடுவர்.

    இதனால் அவர்களிடம் சேமிப்பு என்பதெல்லாம் இருக்காது, ஒரு செயினும் ஒரு மோதிரமும் வைத்திருப்பதே அபூர்வம்.

    நம்மவர்கள் பார்க்க பிச்சைக்காரர்போல, ஆனால் பாங்கும், நகையும் நிரம்பி வழியும்.

    வெள்ளையர்கள் வாழும்வரை நன்கு அனுபவிக்கிறார்கள், நம்மவர்கள் பொத்திப்பொத்தி தின்னாமல் குடிக்காமல் சொத்து சேர்த்து வைத்து விட்டுப் போய்விடுகிறார்கள்.. என்ன சொல்வது.. சரிபிழை சொல்ல முடியவில்லை.

    ஆனா உண்மையில் எங்கட நாட்டுப் பெற்றோர் பாவம்தான்.. கஸ்டப்பட்டுச் சேர்த்து பிள்ளைகளிடம் கொடுத்து அவர்களை நல்லாக்கி வைத்துவிட்டு, பின்பு கையில ஏதுமில்லாமல் பிள்ளைகளை எதிர்பார்ப்பது... பிள்ளைகள் கவனிக்காமல் போவது... என்ன சொல்வது?...

    ReplyDelete
  74. //இதெல்லாம் விட ஜெய்கிட்ட சொன்னா சத்தமில்லாம ஒரே ஒரு ரெசிப்பில
    கத்தியின்றி ரத்தமின்றி ..................ஹோ கயா..//



    ஃபுட் யூனிவர்சிட்டி திறக்கலாமான்னு இருக்கேன் .யாரும் கிடைக்காட்டி நீங்க வறீங்களா..??? லெக்சரரா..!! ஹி..ஹி.... :-))))

    ReplyDelete
  75. //நர்ஸ் .: திருமணமாகி விட்டதா ?

    பேஷன்ட்: இல்ல இல்ல இது கார் ஆக்சிடன்ட்..//

    நர்ஸ் .: திருமணமாகி விட்டதா ?

    பேஷன்ட்: இன்னொரு ரத்த காயத்துக்கு நான் தயாரில்லை அவ்வ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  76. //இந்த கருத்தினை கண்டிக்கிறேன்.
    எப்படிங்க நம்ம தமிழனுக்கு வாழ மனம் வரும்?’
    சொத்தைக் கட்டிப்புடிச்சுக் கொண்டு தூங்கவே நேரம் சரியாகப் போயிடும்!

    கறுமம்! கறுமம்!//

    ஹா..ஹா... முதல்ல இந்தப் பழக்கத்தை மாத்தோணும்:)).
    ---------------------------------

    //நிரூபன் said...


    நான் முதல் கமெண்ட் போடும் போது, நீங்க வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டதாக
    புலம்புவதாக நினைத்து கமெண்ட் போட்டேன்.
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் நினைத்தேன் பின்பு பகிடியாக்கும் என பெரியமனது பண்ணி விட்டுவிட்டேன்:)).

    ----------------------------

    //ஆளாளுக்கு இப்படிச் சாப்பாட்டைத் தந்து என்னோட உடம்பை ஊதப் பண்ணி,
    ஒருத்தரும் பொண்ணு குடுக்காத பண்ணி
    செய்றீங்களே!

    இது நியாயமா?//

    உப்பூடித்தான் உப்பூடித்தான் மேசைக்குக் கீழால, அதிராவுக்குத் தெரியாமல் தந்தால் டக்கென வாங்கி பக்கென (ஜெய்யைப்போல:)) வாய்க்குள்ள போட்டிட்டு 2 நாளைக்கு போர்த்திட்டுப் படுக்காமல், மரியாதையா நோ தங்கியூ எனச் சொல்லோணும் ok?.. அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு:)).

    ஊசிக்குறிப்பு:
    ஜெய்யைக் காணேல்லை:), படிச்சதும் கிழிச்சு தேம்ஸ்ல போட்டிருங்க:).

    மியாவும் நன்றி நிரூபன்... நீங்கள் ஆருக்காக வாழ்கிறீங்கள்? அவ்வ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  77. //வெள்ளையர்கள் வாழும்வரை நன்கு அனுபவிக்கிறார்கள், நம்மவர்கள் பொத்திப்பொத்தி தின்னாமல் குடிக்காமல் சொத்து சேர்த்து வைத்து விட்டுப் போய்விடுகிறார்கள்.. என்ன சொல்வது.. சரிபிழை சொல்ல முடியவில்லை.

    ஆனா உண்மையில் எங்கட நாட்டுப் பெற்றோர் பாவம்தான்.. கஸ்டப்பட்டுச் சேர்த்து பிள்ளைகளிடம் கொடுத்து அவர்களை நல்லாக்கி வைத்துவிட்டு, பின்பு கையில ஏதுமில்லாமல் பிள்ளைகளை எதிர்பார்ப்பது... பிள்ளைகள் கவனிக்காமல் போவது... என்ன சொல்வது?...//


    பாசம் , கூட்டுக்குடும்பம் என்னன்னே அவங்களுக்கு தெரியாது ,ஆனா நாம அப்படியா..????? நாம் மெழுகுவர்த்திப்போல , நாம உருகி அடுத்தவங்களுக்கு வெளிச்சம் தருவோம் . :-)))

    ReplyDelete
  78. //உப்பூடித்தான் உப்பூடித்தான் மேசைக்குக் கீழால, அதிராவுக்குத் தெரியாமல் தந்தால் டக்கென வாங்கி பக்கென (ஜெய்யைப்போல:)) வாய்க்குள்ள போட்டிட்டு 2 நாளைக்கு போர்த்திட்டுப் படுக்காமல், மரியாதையா நோ தங்கியூ எனச் சொல்லோணும் ok?.. அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு:)).//

    எ கொ ச..நீங்க நல்லவரா கெட்டவரா..??? அவ்வ்வ்வ்வ்வ் :-))))))

    ReplyDelete
  79. அடடா ஜெய் இங்கினதான் இருக்கிறாரோ? தெரியாமல் போச்சே... தெரிஞ்சிருந்தால் நிரூபனின் பிரியாணியில கொஞ்சம் கொடுத்திருக்கலாம்:)))

    //ஜெய்லானி said...
    //

    யார் அவங்க ..? அவங்களுக்கு என்னோட பிளாக் அட்ரஸை குடுங்க ..பீப்பீ அடோமேடிக்கா குறைஞ்சிடும் .அப்படி இல்லாட்டி உங்க பக்கமே தலை வச்சி படுக்க மாட்டாங்க ஹா..ஹா.. :-)))//

    எதுக்கு இந்தக் கொலை வெறி?.. இதெல்லாம் எதுக்கு ஜெய்... அதுதான் இருக்கே.. கைல..கால்ல...கழுத்தில...தேம்ஸ்ல ஹையோ ஹையோ:)).
    --------------------------

    //ஃபுட் யூனிவர்சிட்டி திறக்கலாமான்னு இருக்கேன் .யாரும் கிடைக்காட்டி நீங்க வறீங்களா..??? லெக்சரரா..!! ஹி..ஹி.... :-))))//

    அஞ்சு பீ கெயார்ஃபுல்:)) இது அடுத்த கொலவெறி முயற்சி:))

    ReplyDelete
  80. //ஜெய்யைக் காணேல்லை:), படிச்சதும் கிழிச்சு தேம்ஸ்ல போட்டிருங்க:).//

    அட கொஞ்சம் கண் அசந்தா என்னைபிடிச்சு தேம்ஸுல வீசிடுவாங்கப்போலிருக்கே...இனி காலை ஆட்டிகிட்டே தான் தூங்கனும் ஹி..ஹி.. :-)))))

    ReplyDelete
  81. //அடடா ஜெய் இங்கினதான் இருக்கிறாரோ? தெரியாமல் போச்சே... தெரிஞ்சிருந்தால் நிரூபனின் பிரியாணியில கொஞ்சம் கொடுத்திருக்கலாம்:)))//

    ச்சே..ச்சே.. காக்கா பிரியாணி சாப்பிடுறதில்ல.. அதுங்க என்னிடம் சத்தியம் வாங்கி இருக்கு :-)))))))

    ReplyDelete
  82. // ஜெய்லானி said...


    எ கொ ச..நீங்க நல்லவரா கெட்டவரா..??? அவ்வ்வ்வ்வ்வ் :-)))))//

    நிரூபன்.. நிரூபன்... உங்களைத்தான் கேள்வி கேட்கிறார் ஜெய்.. பதில் சொல்லுங்கோ:))..

    நாமதான் 6 வயசிலிருந்தே ரொம்ப நல்ல பொண்ணாச்சே:)).. அவ்வ்வ் உஸ்ஸ்ஸ் வரவர நிலைமை மோசமாப்போயிடும்போல இருக்கே:)).

    ReplyDelete
  83. //அஞ்சு பீ கெயார்ஃபுல்:)) இது அடுத்த கொலவெறி முயற்சி:)) ///


    முதல்ல அவங்களுக்கு சுடுதண்ணி வைக்கிறது எப்படின்னுதான் கத்துகுடுக்கனும் .:-)))). லெக்சராருக்கு டிரைனிங் வேனாமா?? :-)))))

    ReplyDelete
  84. // ஜெய்லானி said...
    //
    அட கொஞ்சம் கண் அசந்தா என்னைபிடிச்சு தேம்ஸுல வீசிடுவாங்கப்போலிருக்கே...இனி காலை ஆட்டிகிட்டே தான் தூங்கனும் ஹி..ஹி.. :-)))))//

    கால் ஆடினால்தான் நல்ல(ஆழ்ந்த) நித்திரையாம்... சொன்னவுடன் குழந்தைகள் ஆட்டுவார்களெல்லோ?..

    பயப்பூடாதீங்க.. கழுத்திலதான் முதல்ல பிடிப்போம்... நீங்கதான் சொல்லித்தந்திருக்கிறீங்களே..:)) ஹையோ...ஹையோ....:)))
    -------------------------------

    //ச்சே..ச்சே.. காக்கா பிரியாணி சாப்பிடுறதில்ல.. அதுங்க என்னிடம் சத்தியம் வாங்கி இருக்கு :-)))))))//

    ஹா..ஹா..ஹா..பிரித்தானியக் காகத்திடமுமா சத்தியம் செய்திருக்கிறீங்க?:)).. அப்போ அமெரிக்காவுக்கு ஓடர் கொடுத்திடலாம்:))

    ReplyDelete
  85. //எதுக்கு இந்தக் கொலை வெறி?.. இதெல்லாம் எதுக்கு ஜெய்... அதுதான் இருக்கே.. கைல..கால்ல...கழுத்தில...தேம்ஸ்ல ஹையோ ஹையோ:)).//

    என் பிளாகை படிக்கும் போதே பாதி மயக்கம் வந்துடாதா..??? மீதி..மேலே சொன்ன டெக்னிக் :-))))

    ReplyDelete
  86. //ஜெய்லானி said...
    //அஞ்சு பீ கெயார்ஃபுல்:)) இது அடுத்த கொலவெறி முயற்சி:)) ///


    முதல்ல அவங்களுக்கு சுடுதண்ணி வைக்கிறது எப்படின்னுதான் கத்துகுடுக்கனும் .:-)))). லெக்சராருக்கு டிரைனிங் வேனாமா?? :-)))))//

    ஹா..ஹா..ஹா.. ஆனா அதைக் குடிச்சுப்பார்க்க ஜெய்க்குத்தான் அனுமதி:))... அஞ்சு கொலைமுயற்சியில ஜெய் குறியாத்தான் இருக்காக:)) உஷாராகிடுங்க... இல்லாவிட்டால் சட்டுப்புட்டென 10 பொரிவிளாங்காய் ரெடி பண்ணிடுங்க..:))

    ReplyDelete
  87. அஞ்சு வாங்கோ...
    //angelin said...
    இதோ கொஞ்ச நேரம் கழிச்சி வரேன் .நிரூபன் சுட சுட வெஜ் சமோசா .அண்ட் சிக்கன் பஃப்ஸ் .பூசுக்கு தெரியாம ஒளிச்சு சாப்பிடுங்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... சமோசாவை நிரூபனுக்கே குடுத்திடுங்க... ஆனா சிக்கின் பப்ஸ்ல மட்டும் ஆரும் கை வைக்கப்பூடா:)).

    ReplyDelete
  88. கரெக்ட்டாச் சொன்னீங்க அஞ்சு...
    //சேம் பின்ச்..ஆமாம் ஜெய் எனக்கும் அதே தான் ..ஆனா என்ன செய்ய
    உண்மைய சொன்னாலோ இல்ல சந்தேகத்த கேட்டாலோ கொல வெறியோட
    நம்ம பாக்கறாங்க அதனால் வெள்ளை காக்கா போகுதுன்னு சொன்னா ஆமாம் கூட ரெண்டு குட்டி காக்காவும் போகுதுன்னு தலைய ஆட்டிகிடனும்//

    வலையுலகில்கூட, எதிர்க்கருத்துச் சொன்னால் ஆருக்கும் பிடிக்குதில்லை... அப்போ நேரில சொன்னால் அவ்வ்வ்வ்:))))... பேசாம ஆமோதிச்சிட வேண்டியதுதான்...:))..

    ReplyDelete
  89. ஆரது ஹூலோச் சவுண்டோட வாறது... ஓ எங்கட கிரிசா:).. வாங்க கிரிஜா..

    //En Samaiyal said...
    சைனஸ் தலை வலி மண்டைய பொளக்குது போய் கொஞ்ச நேரம் கண் அசரலாமுன்னு போனா இங்கே என்ன ஒரே சத்தம் ??? யாரையோ போட்டு தள்ள என் ஜெல்ப் வேணுமுன்னு சத்தம் கேட்டுதே ?///

    என்னா ஒரு அக்கறை:) கொலைபண்ணக் கெல்ப் கேட்டா, தலையிடியையும் பாராமல் ஓடிவருகினமே... அவ்வ்வ்வ்வ்வ்:))).
    ------------------------

    //En Samaiyal said...
    ச்சே இந்த மாதிரி தூங்க விடாம பதிவு போட்டு ..... ஹும்ம்ம் நிம்மதியே இல்லே வாழ்க்கை வெறுத்து ஊஉ போச் ச்ச் ச் :))//

    என்னாது வாழ்க்கை வெறுத்துப் போச்சா... அவ்வ்வ்வ்வ்வ்:)) டோண்ட் வொரியா.. வன் மினிட் பிளீஸ்ஸ்ஸ்:))

    ஜெய், அஞ்சு, மகி... ஓடிவாங்க... நான் கழுத்தில..... ஸ்ரெயிட்டா தேம்ஸ்ல:)))...

    ஹையோ எனக்கிண்டைக்கு என்னமோ ஆகிப்போச்சு:))... நாளைக்கு ஒரு பிரியாணி செஞ்சால்தான் நோர்மலாகலாம்போல அவ்வ்வ்:))).

    ReplyDelete
  90. //நல்ல வேளை நான் பூஸ் இருக்குற எடத்துல இருந்து ரொம்.............................ப தூரத்தில இருக்கேன் . ஒய் திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி பூஸ் ??//

    என்ன கிரிஜா சாகப்பயமோ? லைவ் இன்ஸ்சூரன்ஸ் இன்னும் எடுக்கலியோ? ஹையோ.... இண்டைக்கு எனக்கு இருட்டடிதான் விழப்போகுது...:))).

    -------------------

    //எத்தனாவதா வந்தாலும் அவருக்கு ஆ..... தான் :))
    //
    ஜெய்ய்ய்ய்ய்ய் இப்பத்தானே தெரியுது நீங்க.. ஆஆஆஆஆஆ கதை ஏன் தந்தீங்க என:))).. ஹா..ஹா..ஹா.. கிரிஜா கரீட்டாக் கண்டு பிடிச்சிட்டா... அதுக்காக ஒரு வைர மோதிரம் தாறேன் கிரிஜா கொஞ்சம் தேம்ஸ்க்கு வாங்கோ:)).

    ReplyDelete
  91. //En Samaiyal said...
    /

    நீங்க இருக்குறதாலத்தான் பயமே இது தெரியாம :)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் இல்லாட்டில் உங்களுக்கெல்லாம் இப்பூடி நல்ல கதை ஆர் சொல்லுவினம்?:)))).

    -------------------------

    சகுனம் உண்மையில்லையாம், ஆனா இந்த மக் பை சகுனம் இல்லை, ஒருக்கால் எனக்காக ஒருதடவை பாருங்க...:)).

    இன்று காலை விடாமல் துரத்தி துரத்தி ஒரு மக்பை என் கண் முன்னால நின்றுது, என்னாகப்போகுதோ என நினைச்சேன்.. மறந்திட்டேன்.. மத்தியானத்தில இருந்து பின்னேரம் 6 மணிவரை நெட்டும் இல்லை, ஃபோன் லைனும் டெட்:).

    மொபைலுக்கு கோல்கள் வரத்தொடங்கிட்டுது:)).. பிறகு சரியாக்கியாச்சு:)).

    ReplyDelete
  92. //பூஸ் மகி இந்த கொல வெறிய கொஞ்ச நாளைக்கு முன்னே போட்டாங்களே கேக்கலையா ஆஆ ??

    நாராயணா நாராயணா வந்த வேல முடிஞ்சது அப்புறம் வரேன் !!//

    உண்மையாகவோ? நான் பார்க்கவே இல்லையே.. பார்த்திருந்தால் நான் போட்டிருக்க மாட்டேன்.

    2 நாட்களுக்கு முன்பு ராஜ்ஜின் பக்கத்தில் ஒரு கவிதைக்கு தலைப்பு “ஏன் இந்தக் கொலை வெறி டி” எனப் போட்டிருந்தார், என்ன தலைப்பு இது, ஏன் இப்படி பப்ளிக்கில டி என்றெல்லாம் எழுதுறார் என நினைத்துவிட்டு, கேட்கவில்லை, பின்னூட்டம் போட்டுவிட்டேன், இன்றுதானே அதன் உண்மை தெரிஞ்சுது அவ்வ்வ்வ்:))).

    அதுசரி எதுக்கு கொலைவெறிக்கும் நாராயணருக்கும் முடிச்சுப் போடுறீங்க?:))) அவ்வ்வ்வ்வ் கோர்த்துவிட்டாச்சு, இனி நாராயணர் பார்ப்பார்.. எங்கிட்டயேவா அவ்வ்வ்வ்:))..

    மியாவும் நன்றி கிரிஜா.

    ReplyDelete
  93. வாங்கோ மகி.... நாங்க தூணிலும் இருப்போம் துரும்பிலும் இருப்போம்...:)) ஐ மீன்... திங்களிலும் தலைப்புவரும், சனி ஞாயிறிலும் தலைப்பு வரும், ஆனா நீங்க ஒயுங்கா பிரசண்ட் ஆகிடோணும்.... அப்பூடின்னு மிமிமிமிமிரட்ட மாட்டேன்:), ஏனெண்டால், நான் ஜெய் மாதிரி இல்லை:))).. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு:))) ஹையோ யூம் பண்ணீனம், படிச்சதும் கிழிச்சிடுங்க மகி....

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  94. //நர்ஸ் ... பிறந்த தேதி
    பேஷன்ட் :28/Feb/1975//

    அஞ்சு ஒரு பிழை விட்டிட்டீங்க.. நிரூபன் பிறந்தது 29 பெப்ரவரி:)) ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    இண்டைக்கு எனக்கென்னமோ ஆகிப்போச்ச்ச்ச்ச்ச்:)))..

    மியாவும் நன்றி அஞ்சு.

    ReplyDelete
  95. வாங்க ஸாதிகா அக்கா..

    //ஸாதிகா said...
    இன்னிக்கு பூஸுக்கு என்ன ஆச்சு///

    அவ்வ்வ்வ்வ்வ்வ் எவ்ளோ நல்ல விஷயம் சொல்லியிருக்கிறேன்... ஏன் எல்லோரும் திட்டுறீங்க அவ்வ்வ்வ்வ்:)))..

    உஸ்ஸ்ஸ்ஸ் எனக்கே டவுட் டவுட்டா வருதே.. உண்மையிலயே என்னமோ ஆகிடிச்சோ?:) எதுக்கும் ஒருக்கால் கைப்புடி யோசியரைச் சந்திச்சால்தான் நல்லது அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  96. ஜெய் சொல்ல மறந்திட்டேன், தண்ணி காயக் காய ஃபோன் வேர்க் பண்ணுது, ஆனா பிரச்சனை என்னவென்றால்... ஓன் பண்ணும் பட்டின் பழுதாகிட்டுதுபோல, கட்டில்ல கண்டபடி எறிஞ்சு:), அடிச்சு:), உடைச்சு:), ஆக்கினை கொடுத்தால் படாரென ஓன் ஆச்சுது, ஃபோன் நம்பர் கொஞ்சம் எழுதி எடுத்திட்டேன், நெட் வேர்க் பண்ணுது, கமெரா வேர்க் பண்ணுது, மகிட படமெல்லாம் இருக்கு, ஆனா பட்டென ஓவ் ஆகிட்டுது, பின்பு ஓன் ஆகுதில்லை, சாஜ் எல்லாம் ஏறுது.

    எதுக்கும் நாளைக்கு ஃபிரீ பெயிட் என்வலப் வரும் , அதில அனுப்பினால் திருத்தி அனுப்புவார்கள். அதிகம் செலவாகுமெனில் சொல்வார்கள் விரும்பினால் மேற்கொண்டு திருத்தலாமாம்.

    ReplyDelete
  97. எப்பவுமே தன்னைப்பற்றி தற்பெருமை பேசும் தந்தையிடம் மகன்:

    அப்பா உங்களுக்கு இருட்டில கண்ணு தெரியுமா?:))

    தந்தை: பகல்லயே ஒழுங்காக் கண் தெரியாதென்ற உண்மையைச் சொன்னால் நம்மைக் குறைவாக எண்ணிடுவானோ என மனதில எண்ணிக்கொண்டே.....

    எனக்கா? சூப்பராத் தெரியுமே...

    மகன்:
    அப்போ இங்க வாங்க என ரூமுக்குள் கூட்டிப்போய், லைட் எல்லாம் ஓவ் பண்ணி இருட்டாக்கிப்போட்டு...

    இந்தாங்கப்பா என் ஸ்கூல் ரிப்போர்ட், டக்கென சைன் பண்ணுங்க:))..

    தந்தை: ஙேஙேஙேஙேஙேஙேஙே....:))

    ReplyDelete
  98. ஐ..... 100 ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:))) மட்டின் பிரியாணி வித் அவித்த “சிக்கின்” முட்டை எனக்கே எனக்கா.... உஸ்ஸ்ஸ் கண்ணால மின்னல் எல்லாம் அடிக்குதே....:)))

    ReplyDelete
  99. mmm என்ன்ன செய்வது
    எப்ப பார்த்தாலும் க்டைசியில் வருவதால்

    முட்டையும் கிடைப்பதில்லை, வடையும் போச்சு, பிரியாணியும் கிடைப்பதில்ல

    ReplyDelete
  100. வாழ்க்கை வெறுத்து போச்சு இது
    ஏதாவது கஷ்டம் வந்தால் எல்லோரும் ஸ்டைலா சொல்ல்;லி கொள்வது தாஅன்

    பேஷனாக்கும்...

    ReplyDelete
  101. வொய் திஸ் கொலவெறி பாட்டு

    வந்த்தில் இருந்து

    எல்லோருக்கும் திட்ட இப்ப ஏதும் வார்த்தை கிடைப்பதில்லையாம்


    வொய் திஸ் கொலவெறின்னு மட்டும் தான் திட்டு கிறார்களாம்
    அதிலேயே

    மண்ட காய்ந்து போய் விடுதாம்

    ReplyDelete
  102. அதிரா என்னாச்சும்மா? நான் ஒருவாரம் பதிவுலகத்துக்கு லீவு விட்டுட்டு போயி திரும்பவந்து பாத்தா நீங்க வாழ்க்கையே வெறுத்து போச்சுங்குரீங்க. பூசாரும் நீங்களும் என்னையக்காணோமேன்னு தேடினீங்களா? ( ஆமான்னு சொல்லுங்க)

    ReplyDelete
  103. வணக்கம் பொம்பிளை!அருமையா இருந்திச்சு!கொலவெறி பாட்டு யாழ்ப்பாணத்துப் பொடியின்ரை கிடைக்கல்லையோ?மற்றது,மூண்டு புள்ளையள வெளிநாட்டில பெத்துப் போட்டன்!ஒண்டும் கரை சேரல்ல,இல்லாட்டி சிவனேஎண்டு எப்பவோ போய்ச் சேந்திருப்பன்!ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  104. வாழ்க்கையே வெறுத்து போச்சுன்னு யாராவது சொன்னா இனி அடிதான்.

    சிந்திக்கவைத்த கருத்துகள். நன்றி அதிரா.

    ReplyDelete
  105. எங்கே காணலியே என்று கேட்டினமோ? கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தவுக வந்துட்டாஹலா?

    ReplyDelete
  106. // ஜெய்க்கு.. புட்டும் ரால் பொரியல் அண்ட் மட்டின் பிரட்டல்:)). //

    எனக்கு ??? (முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமையா ??) சரி சரி யோசிக்காதீங்க... எதுவானாலும் தனியா எடுத்து வைங்க. அப்புறமா வர்றேன்.

    ReplyDelete
  107. // புட்டுக்கு பதில் தோசை டிரிபிள் ஓகே :-))) //

    கிடைக்கிறதே ஓசி. இதுல இப்படியெல்லாம் கூட,,,,, நான் அதுக்கு மேல சொல்லமாட்டேன்

    ReplyDelete
  108. //தோசை நல்லா வருவதற்கு நோ கரண்டி:)).. சுட்டால் வாயை மூடிக்கொண்டு, சிரிச்சபடி சாப்பிடோணும்:)) டீல் சரிதானே?:))).//

    இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு அவ்வவ்வ்வ்வ்..

    ReplyDelete
  109. //ஒண்ணுமே புரியல்லயே எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்:)). குழப்பமாத்தான் இருக்கெனக்கு.//

    இதிலென்ன குழப்பம். குழம்பினாத்தான் தெளிவு பிறக்கும். ஆமா இப்ப நான் என்ன சொன்னேன். எனக்கே பிரியலையே!! க்கி.. க்கி..

    ReplyDelete
  110. ஜெய்லானி said...

    // கொலவெறி பாட்டு உலகமே ரசிச்சாலும் மனசு அதில் ஒட்டவில்லை :-/ //

    தூரமா நின்னு கேட்டாலும் அப்படி தான் மனசு ஒட்டாது. எதுக்கும் கிட்ட நின்னு ஒருமுறை... அவ்வ்வ்வ் (இருங்க நான் எட்ட நின்னுக்கிறேன்)

    ReplyDelete
  111. ஜெய்லானி said...

    // யார் அவங்க..? அவங்களுக்கு என்னோட பிளாக் அட்ரஸை குடுங்க ..பீப்பீ அடோமேடிக்கா குறைஞ்சிடும் .அப்படி இல்லாட்டி உங்க பக்கமே தலை வச்சி படுக்க மாட்டாங்க ஹா..ஹா.. :-)))) //

    எதுக்கும் ஒரு (சந்தேக) பீப்பீ பதிவு ஒன்னு போட்டுடவேண்டியது தானே!! அங்கன எப்படி வசதி பாஸூ?? (இல்லாக்காட்டி நான் போட்டுடுவேன்) அவ்வ்வ்வ்...!!

    ReplyDelete
  112. ஜெய்லானி (195)
    angelin (107)//


    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது அஆனந்த சிரிப்பு ஊஊஊ

    ReplyDelete
  113. //ஜெய், அஞ்சு, மகி... ஓடிவாங்க... நான் கழுத்தில..... ஸ்ரெயிட்டா தேம்ஸ்ல:)))...//


    என்னாது ஊஊ ஊ ஊ என்னையே தேம்சுலையா ஆ ஆ ஆ ஆ பூஸ் கொல வெறியோட திரிஞ்சு கிட்டு இருக்கீங்களா ? பாவம் நானே சிக் லீவுல இருக்கேன்

    ReplyDelete
  114. //
    என்னாது ஊஊ ஊ ஊ என்னையே தேம்சுலையா ஆ ஆ ஆ ஆ பூஸ் கொல வெறியோட திரிஞ்சு கிட்டு இருக்கீங்களா ? பாவம் நானே சிக் லீவுல இருக்கேன் //

    என்ன சிக்குன்னு சொன்னா வைத்தியம் நான் சொல்றேனே ஹி..ஹி... :-))

    ReplyDelete
  115. //அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது அஆனந்த சிரிப்பு ஊஊஊ//

    :-/ :-/ :-/ :-)

    ReplyDelete
  116. //லைவ் இன்ஸ்சூரன்ஸ் இன்னும் எடுக்கலியோ?//

    இன்னும் இல்லே ஆனா சீக்கிரம் எடுக்கணும் போல இருக்கே ????


    //அதுக்காக ஒரு வைர மோதிரம் தாறேன் கிரிஜா கொஞ்சம் தேம்ஸ்க்கு வாங்கோ:)).///

    ஐ அஸ்கு புஸ்கு அப்புடியே எல்லா ......ரும் சேர்ந்து என்ன புடிச்சு தள்ளி விட தானே. நோ சான்ஸ் நான் நூறு வருஷம் வரைக்கும் இருந்து எல்லார் உயிரையும் எடுக்கணும்: ))

    ReplyDelete
  117. //என்ன சிக்குன்னு சொன்னா வைத்தியம் நான் சொல்றேனே ஹி..ஹி... :-))//

    ஆகா வந்திட்டாரையா சித்த வைத்தியர் எனக்கு இப்போ நல்லா ஆயிடுச்சு ஜெய் ஹீ ஹீ . கேசரி சாப்பிட்டு வந்திட்டீங்களா ??

    ReplyDelete
  118. /me the 101...:)//

    எங்கேயோ கேட்ட குரல் சிவா சிவா ஊருல இருந்து வந்திட்டீங்களா? அத்தை பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா

    ReplyDelete
  119. //ஆகா வந்திட்டாரையா சித்த வைத்தியர் எனக்கு இப்போ நல்லா ஆயிடுச்சு ஜெய் ஹீ ஹீ . //

    வடைப்போச்சே....அவ்வ்வ்வ் :-))))))))

    ReplyDelete
  120. athira and all /// கொஞ்ச காலம் வலைப்பக்கம் வர மாட்டேன் எல்லாரும் கேசரி சாப்பிட்டு ஜாலியா இருங்க .bye bye

    ReplyDelete
  121. //athira and all /// கொஞ்ச காலம் வலைப்பக்கம் வர மாட்டேன் எல்லாரும் கேசரி சாப்பிட்டு ஜாலியா இருங்க .bye bye//

    அஞ்சு ஒய் ஒய் ? யாருடைய சதி இது? இருந்தாலும் ஜெய் போட்ட கேசரி இப்புடி வேல செய்ய கூடாது:))

    சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வாங்க. பூஸ் அஞ்சு இல்லேன்னு நீங்களும் எஸ்கேப் ஆயிடாதேங்க ....

    ReplyDelete
  122. ஆ... பொன்னியின் செல்வன் சிவா ரிடேன்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    வாங்கோ சிவா வாங்கோ... ஊரில் அனைவரும் நலம்தானே?... ஹோம்சிக்ல இருப்பீங்களென நினைக்கிறேன்.. மெதுவா வாங்கோ...

    மிக்க நன்றி சிவா.

    ReplyDelete
  123. ஜலீலாக்கா வாங்கோ... உங்களைக் கண்டால்தான் உங்கள் புதிய தலைப்பு வந்திருக்கோ எனப் பார்க்கும் நினைப்பு வருகிறது குறை நினைச்சிடாதையுங்கோ...

    எல்லோருக்கும் தெரிஞ்ச பாட்டு, எனக்கு டேட்டாத்தான் தெரிஞ்சிருக்கு அவ்வ்வ்வ்:))... மியாவும் நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  124. வாங்கோ லக்ஸ்மி அக்கா வாங்கோ...

    நீங்க பதிவை முழுமையாகப் படிக்கவில்லைப்போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வாழ்க்கை வெறுத்துவிட்டதென யாரும் சொல்லிப்போட்டு, உயிரோடிருக்கப்படா எனச் சட்டம் போட்டு விட்டு, நான் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிட்டேன் அவ்வ்வ்வ்:)).

    //பூசாரும் நீங்களும் என்னையக்காணோமேன்னு தேடினீங்களா? ( ஆமான்னு சொல்லுங்க)//

    2 நாட்களுக்கு ஒருக்காலாவது பதிவு போடும் உங்களைக் காணவில்லை, அதுதான் பூஸார் + பூஸார் தேடினோம்:))

    மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  125. வாங்கோ யோகா அண்ணன்...

    நான் கஸ்டப்பட்டு இமேஜ் டமேஜ் ஆகிடாமல் பாதுகாக்கிறன்:) நீங்க என்னடாவெண்டால்.. பொம்பிளை எனச் சொல்லி டமேஜ் ஆக்கப்பார்க்கிறீங்கள் அவ்வ்வ்வ்:)).

    எங்கட நாட்டில குட்டிப் பெண்களை பொம்பிளை எனச் செல்லமா அழைப்பார்கள், ஆனா தமிழ் நாட்டில நினைக்கப்போகினம்.... சந்தையில சாமான் விக்கிற பொம்பிளை என ஹையோ ஹையோ...:))).

    சரி அது போகட்டும்..இப்ப அதுவா முக்கியம்:))... நான் இப் பாட்டு முதல் தடவையா கேட்டதும், கொல வெறியோட:) உடனே தூக்கி வந்து இங்கின பொட்டு விட்டேன், பின்புதான் பார்க்கிறேன் கனக்க ரீமிக்ஸ் வந்திருக்கு.

    இன்றுகாலை யாழ் ஒளி டிவி சனலில், பாட்டுக் கேட்டல் நேரடி ஒலிபரப்பு நடந்துது, இப்பாட்டை ஆராவது கேட்டால் நல்லதென நினைச்சு முடியேல்லை,,,,,

    ஒரு அம்மம்மா யாழ்ப்பாணத்தில இருந்து ஃபோன் பண்ணிக் கேட்டா, தன்ர பேரனுக்காக இப்பாட்டைப் போடுங்கோ என... உடனே போட்டார்கள். இப்படி எப்பவாவது அத்தி பூத்தாற்போல, நான் நினைப்பதும் நடந்துவிடுது அவ்வ்வ்வ்வ்:))).

    ///Yoga.S.FR said...
    மற்றது,மூண்டு புள்ளையள வெளிநாட்டில பெத்துப் போட்டன்!ஒண்டும் கரை சேரல்ல,இல்லாட்டி சிவனேஎண்டு எப்பவோ போய்ச் சேந்திருப்பன்!ஹி!ஹி!ஹி!!!!///

    ஹா..ஹா..ஹா.. உங்களுக்கு ஒண்டும் சொல்ல மாட்டான்:)), இனி ஆராவது இப்படிக் கதைச்சால், ஒருக்கால் அவயளைத் தேம்ஸ்க்கு வரச் சொல்லுங்கோ:))).

    மிக்க நன்றி யோகா அண்ணன்.

    ReplyDelete
  126. வாங்கோ மின்மினி... முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு, மிக்க மகிழ்ழ்சி.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  127. ஆஆஆஆஆ... அப்துல் கதர் வந்திட்டார்... ஜெய் ஓடிவாங்கோ... ஒரு பீஸ் கேசரி எடுத்து வாங்கோ.. நான் ரீ ஊத்துறேன்:)).

    பாட்சாவைத் தேடினால்.. அ.கா வந்திருக்கிறார் அவ்வ்வ்வ்வ்:)).. வாங்கோ வாங்கோ...

    //எனக்கு ??? (முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமையா ??) சரி சரி யோசிக்காதீங்க... எதுவானாலும் தனியா எடுத்து வைங்க. அப்புறமா வர்றேன்.//

    இப்பவே 2 நாள் லேட்டான பிரியாணிதான் இருக்கு, இதில அப்புறமா வாறீங்களோ? அவ்வ்வ்வ்வ்:)) பழுதானா நான் பொறுப்பல்ல:))).

    ReplyDelete
  128. //எம் அப்துல் காதர் said...
    // புட்டுக்கு பதில் தோசை டிரிபிள் ஓகே :-))) //

    கிடைக்கிறதே ஓசி. இதுல இப்படியெல்லாம் கூட,,,,, நான் அதுக்கு மேல சொல்லமாட்டேன்//

    ஹா..ஹா..ஹா.... இந்த ஐடியா எனக்குத் தோணவில்லையே அவ்வ்வ்வ்:)) லேட்டா வந்தாலும் கேட்டீங்க ஒரு கேள்வி உங்கட “பாஸ்” ஐப்பார்த்து... அவர் அதோட நித்திரையாகிட்டார் களைச்சுப்போய்:)).. நானும் இதுக்குமேல ஒண்ணும் சொல்ல மாட்டேன் சாமீஈஈஈஈஈஈஈ:))

    ReplyDelete
  129. //எம் அப்துல் காதர் said...
    ஜெய்லானி said...

    // கொலவெறி பாட்டு உலகமே ரசிச்சாலும் மனசு அதில் ஒட்டவில்லை :-/ //

    தூரமா நின்னு கேட்டாலும் அப்படி தான் மனசு ஒட்டாது. எதுக்கும் கிட்ட நின்னு ஒருமுறை... அவ்வ்வ்வ் (இருங்க நான் எட்ட நின்னுக்கிறேன்)
    ///

    ஹா..ஹா...ஹா... உஸ்ஸ்ஸ்ஸ் அவர் “பாஸ்” என்கிறதை அடிக்கடி மறக்கிறீங்க பாட்ஷா:)).

    //எதுக்கும் ஒரு (சந்தேக) பீப்பீ பதிவு ஒன்னு போட்டுடவேண்டியது தானே!! அங்கன எப்படி வசதி பாஸூ?? (இல்லாக்காட்டி நான் போட்டுடுவேன்) அவ்வ்வ்வ்...!!//

    அதுதான் கேசரிப் பதிவு போட்டிருக்கிறர் அவ்வ்வ்வ்வ்வ்:))).

    மியாவும் நன்றி அப்துல்காதர்.

    ReplyDelete
  130. ஆஆஆ.. அஞ்சூஊஊஊ.. ஆசைக்கு ஒரு ஆலுப்பரோட்டா சுட்டுப்போட்டு வருவதற்குள் என்னென்னமோ ஆகிப்போச்சு இங்கு:).

    //angelin said...
    ஜெய்லானி (195)
    angelin (107)//


    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது அஆனந்த சிரிப்பு ஊஊ//

    இது...இது.....இது... இதுதான் ஞானம் பிறந்திட்டுதென்பது... அதாவது துறவு நிலை அடைந்தாச்சு... என்ன நடந்தா என்ன... எல்லாம் நன்மைக்கே எனும் மனப்பக்குவம் வந்தாச்சு:))

    என்பக்கம் வரும் எல்லோருக்குமே கிட்டத்தட்ட துறவுநிலை வந்திடும்:)) வராட்டிலும் வர வச்சிடுவமில்ல:))).

    திடீரென ஊர் அறிவித்தல் விட்டிருக்கிறீங்க அஞ்சு... மனம் கவலையானாலும்... அம்மாவைப் பார்க்கத்தானே போய்க் கெதியா வாங்கோ, இப்போ ஸ்கூல் ஹொலிடேயும் இல்லை, இங்கு பெப்ரவரியில், வன் வீக் ஹொலிடே வருது.

    ReplyDelete
  131. //En Samaiyal said...
    //ஜெய், அஞ்சு, மகி... ஓடிவாங்க... நான் கழுத்தில..... ஸ்ரெயிட்டா தேம்ஸ்ல:)))...//


    என்னாது ஊஊ ஊ ஊ என்னையே தேம்சுலையா ஆ ஆ ஆ ஆ பூஸ் கொல வெறியோட திரிஞ்சு கிட்டு இருக்கீங்களா ? பாவம் நானே சிக் லீவுல இருக்கேன்
    2:45 PM //

    ஹா..ஹா..ஹா...,OK.. அப்போ சிக் லீவு முடியட்டும்... மீ வெயிட்டிங்யா:)))

    ReplyDelete
  132. //ஜெய்லானி said...
    //
    என்னாது ஊஊ ஊ ஊ என்னையே தேம்சுலையா ஆ ஆ ஆ ஆ பூஸ் கொல வெறியோட திரிஞ்சு கிட்டு இருக்கீங்களா ? பாவம் நானே சிக் லீவுல இருக்கேன் //

    என்ன சிக்குன்னு சொன்னா வைத்தியம் நான் சொல்றேனே ஹி..ஹி... :-))//

    அடக் கடவுளே... வாணாம் கிரிஜா வாணாம்... என்ன சிக்கெண்டாலும் பறவாயில்லை, நீங்க கான்ஷல் பண்ணிட்டு வேலைக்குப் போயிடுங்க:)).. இந்த வைத்தியத்தைவிட வேலைக்குப் போவது எவ்ளோ பெட்டர்:))... இனியும் நான் பொறுக்கமாட்டேன்:)))

    ReplyDelete
  133. En Samaiyal said.//

    ஐ அஸ்கு புஸ்கு அப்புடியே எல்லா ......ரும் சேர்ந்து என்ன புடிச்சு தள்ளி விட தானே. நோ சான்ஸ் நான் நூறு வருஷம் வரைக்கும் இருந்து எல்லார் உயிரையும் எடுக்கணும்: ))
    2:49 PM //

    அப்பூடி எண்டால்.. ஒரு ரூபா சித்த வைத்தியரிடம்தான் போகோணும்:)) சே..சே.. இது தெரியாமல் அவதிப்பட்டுத் திட்டிட்டேன்:)) படிச்சதும் கிழிச்சிடுங்க கிரிசா:)).
    ---------------------

    //எங்கேயோ கேட்ட குரல் சிவா சிவா ஊருல இருந்து வந்திட்டீங்களா? அத்தை பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா//

    ஹா..ஹா...ஹா... சிவா தெரியாமல் பொன்னியைச் சொல்லிட்டர் இப்போ... சிவாவின் நிலைமை கவலைக்கிடம்:)))

    ReplyDelete
  134. தத்துவப் பதிவு(!) சூப்பருங்க பூஸ்! என்னதான் சொல்லுங்க, நமக்காகத்தான் செய்துக்கறோம்னு எதையுமே யாருமே பப்ளிக்காச் சொல்லிக்கமாட்டாங்க. தான் சுயலநலவாதின்னு சொல்லிக்க கூச்சமா இருக்குமில்ல?;)

    ஒண்ணு சொல்லும்போது மறைபொருளா இன்னொரு அர்த்தம் இருக்கும்,கேட்பவர்களுக்கு அந்த அர்த்தம் புரிஞ்சாலும், புரியாத மாதிரி,தெரியாதமாதிரி அப்பாவியா முகத்தை வைச்சுகிட்டு சொல்பவரின் பேச்சைக் கேட்டுக்கணும்,சரீங்களா? :)))))))

    கொலவெறி பாட்டை நீங்க என் ப்ளாக்ல பார்க்கலையா? ம்ம்...முடிந்தா தேடிப்பிடிச்சுப் பாருங்க அதிரா,நான் போட்டது ஒரு குட்டிப்பையன் பாடும் வர்ஷன்.ஒரிஜினல விட எனக்கு அதான் பிடிச்சது. :)

    ReplyDelete
  135. ஜனரஞ்சமாக எழுதப்பட்டுள்ள பதிவு. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  136. பூஸ் நீங்க கொல வெறி பாட்ட கேக்கலேன்னு உங்களுக்கு ரெண்டு தடவ சொல்லி இருக்காங்க மகி:))

    ReplyDelete
  137. ஏன் என் பதிவு மட்டும் மேலே வரல
    யாராவது பிலாக் ஜீனியஸ் கிட்ட கேளுங்களேன்.

    ReplyDelete
  138. அஞ்சு, உங்கள் தகவலை நானே நீக்கிவிடலாம் என நினைத்திருந்தேன், பப்ளிக்கில் எதுக்கு விபரமெல்லாம் சொல்லவேணும் என நினைத்து, நல்லவேளை நீங்களே நீக்கிட்டீங்க. நலமே போய் வாங்கோ.

    ReplyDelete
  139. மகி... //கொலவெறி பாட்டை நீங்க என் ப்ளாக்ல பார்க்கலையா? ம்ம்...முடிந்தா தேடிப்பிடிச்சுப் பாருங்க அதிரா,//

    பார்க்கிறேன், நான் பார்க்கவில்லை முன்பு .

    ReplyDelete
  140. //En Samaiyal said...
    பூஸ் நீங்க கொல வெறி பாட்ட கேக்கலேன்னு உங்களுக்கு ரெண்டு தடவ சொல்லி இருக்காங்க மகி:)//

    அவிங்க சும்மா சொல்லல்ல “கொலை வெறியோடதான்” சொல்லியிருக்காங்க... உஸ்ஸ்ஸ் அப்பா முடியல்ல சாமீஈஈஈஈ.. எமனைக் கூப்பிடுங்க.. எமனைக் கூப்பிடுங்க...:)))) அவ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  141. வாங்க ஜலீலாக்கா...

    //
    Jaleela Kamal said...
    ஏன் என் பதிவு மட்டும் மேலே வரல
    யாராவது பிலாக் ஜீனியஸ் கிட்ட கேளுங்களேன்//

    யாமிருக்க பிளாக் ஜீனியஸா? முடியல்ல சாமி.. எமனைக் கூப்பிடுங்க.. எமனைக் கூப்பிடுங்க...:))) அவ்வ்வ்வ்வ்:)).

    எனக்கிந்த அறிவு இதுவரை வரல்லியே... ஆராவது.. இதுபற்றித் தெரிஞ்சாச் சொல்லுங்கோவன், பலமுறை டிலீட் பண்ணிப் போட்டுப் பார்த்திட்டேன், மேலே வரவே மாட்டுதாம்.

    ReplyDelete
  142. /அவிங்க சும்மா சொல்லல்ல “கொலை வெறியோடதான்” சொல்லியிருக்காங்க... உஸ்ஸ்ஸ் அப்பா முடியல்ல சாமீஈஈஈஈ.. எமனைக் கூப்பிடுங்க.. எமனைக் கூப்பிடுங்க...:)))) அவ்வ்வ்வ்வ்:)) / avvvvvvvv!! ஒரு அப்பாவீ;) வந்து அப்பாவீ;)யா ஒரு கருத்தைச் சொல்லீட்டு அப்பாவீ;)யாப் போயிருக்கு,அதையப் போயி ////"கொலைவெறியோடதான்" சொல்லிருக்காங்க //// எண்டு சொல்லிப்போட்டீங்களே???

    என்னாலையும் முடியல்ல சாமீஈஈஈஈ...அதே எமனைக் கூப்பிடுங்கோ.அமேரிக்கா வாராறா இல்ல ஐ.....ரோப்பா போறாரா பாப்பம்!! ;)))))))))

    ReplyDelete
  143. ஹா...ஹா..ஹா... முடியல்ல சாமீஈஈஈஈ... எமனைக் கூப்பிடுங்க.. எமனைக் கூப்பிடுங்க... அவருக்கு ஆரில அதிகம் லவ் இருக்கோ அங்கின வரட்டும்...:))
    எமனைக் கூப்பிடுங்க எமனைக் கூப்பிடுங்க:))..

    இண்டைக்கு நித்திரையில நிட்சயம் வந்திடப்போறார்..அவ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  144. [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSvnKDnD1l4IlAOJ-lv22nKYn6dfDmZyQrT8cE0iTq2qlZ3US3A[/im]

    ReplyDelete
  145. எங்கிட்டயேவா.. பூஸோ கொக்கோ... எல்லோரும் ஓடிவந்து பாருங்கோ படம் இணைக்கும் வசதியை இண்டைக்கு ஓசை சாப்பிட்டதால திரும்ப பொறுமையாத் தேடிக் கொண்டு வந்திட்டேஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS4yqZ9GfhNchiEVD0XRvQDtVuKOAgqvVobqDnuMlcvpDldyG_-8w[/im]

    ReplyDelete
  146. [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTZLKJ7Ss_vdldwPkU_vqqsQrXOF4FxQnPce-C4-zx2RdpfS6Ox[/im]

    ReplyDelete
  147. [co="blue"]என் பக்கத்தில படங்கள் வருது.. எமனைக் கூப்பிடுங்க எமனைக் கூப்பிடுங்க...:))[/co]

    [im]http://i103.piczo.com/view/2/h/6/g/l/m/k/i/z/g/h/l/img/i175141752_57918_3.gif[/im]

    ReplyDelete
  148. சே..சே... இந்த நேரம் அஞ்சுவாலும் வர முடியாமல் போச்சே....:(
    [im]http://www.neleryokki.com/program/gifler/dancing_cats_animated.gif[/im]

    ReplyDelete
  149. [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcRDkvABwtOQOVXxXphH78Uu_f1JK63s-SooPmWyWejIB1qZPcLs[/im]

    ReplyDelete
  150. Good Job Cat! :)

    [im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcScd6Y9JG7LShHdbyqgjkT5h5Ysnskzy74cGgQJoeh8MMuI1iKDWg[/im]

    ReplyDelete
  151. [im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcR3VFSxzFsZbZ5SPkkz-sBcbgv7feoOnaSK6xGBeI4KwrBGjoltwg[/im]

    அவ்வ்வ்வ்...பூஸ் கோவமா இருக்கோ?? :)

    ReplyDelete
  152. /என் பக்கத்தில படங்கள் வருது.. எமனைக் கூப்பிடுங்க எமனைக் கூப்பிடுங்க...:))
    /அடேங்கப்பா..என்னா டான்ஸு,என்னா டான்ஸு??! :)
    [im]http://www.lovehorsepower.com/galleries/44269331/CheeseDS/album/slides/funny-pictures-dancing-cat.jpg[/im]

    அதிரா,பேசாமத் தூங்குங்கோவன், அவரைக் கூப்டுங்கோ,இவரைக் கூப்டுங்கோ எண்டு சொல்லாமல்!...அப்பறம் ஹைஷ் அண்ணனைக் கூப்பிட்டு விட்டுடுவேன்,அவர்தானே உங்களை "ஐயோ" சொல்லாமல் இருக்க வைத்தவர்? கர்ர்ர்ர்ர்...குட்டுநைட்டு!

    ReplyDelete
  153. உஸ்ஸ்ஸ் எமன் அங்கிள் நீங்க வரவாணாம் நோ.. தங்கூ:)). மகி பேசுறா எனக்கு.. ஹைஸ் அண்ணனைக் கூப்பிட்டு விட்டிடுவாவாம் மிரட்டுறா...:)) வாணாம் வாணாம்...

    எமன் அங்கிள்...அமெரிக்காவுக்கும் வரவாணாம் பிரித்தானியாவுக்கும் வாணாம்.. வேணுமெண்டால் நீங்க அங்கின...:)) நோஓஓஓ நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:))

    [im]http://www.msgr.ca/msgr-9/cat_snowman%20animated.gif[/im]

    ReplyDelete
  154. ஹா..ஹா...ஹா.. இண்டைக்கு 3 குருவி பார்த்தேன்... சிரிப்பை அடக்க முடியேல்லை...:)) நான் என்ன ஜெய்யைக் கூப்பிடுங்கோ என்ற சொன்னேன்... எதுக்கு இப்பூடி ஓடி ஒளிச்சிட்டார் அவ்வ்வ்வ்வ்:)).

    ஆயாவைக் கட்டிவிட்டுடுவாங்க என ஒரு கிழமையா ஒளிசிருந்து இப்பத்தானே வெளில வந்தார், இப்போ எமனைக் கூப்பிடுங்கோ என்றுதானே சொன்னேன்.. இவர் எதுக்கு ஒளிச்சிட்டார்:)))... [co="pink"]ஹா..ஹா..ஹா.. முடியல்ல சாமி...:)) நோ தங்கியூ.. எமனைக் கூப்பிட்டிடாதையுங்கோ:))..[/co]

    [im]http://28.media.tumblr.com/tumblr_ld15suGeY11qb63xno1_400.gif[/im]

    ReplyDelete
  155. //அவ்வ்வ்வ்...பூஸ் கோவமா இருக்கோ//
    பயப்படாதீங்க மகி பூசுக்கு கோவம் எல்லாம் வராது நீங்க நெறையா படம் போடுங்கோ ( இப்புடி ஏத்தி விட்டாதானே நாங்க எல்லாம் சந்தோஷமா இருக்கலாம் :))

    ReplyDelete
  156. //ஒரு அப்பாவீ;) வந்து அப்பாவீ;)யா ஒரு கருத்தைச் சொல்லீட்டு அப்பாவீ;)யாப் போயிருக்கு//

    மகி யார சொல்லுறாங்க ?? பூஸ் உங்களுக்கு ஏதாச்சும் பிரிஞ்சுது ?? ஒரு வேளை கனடா அப்பாவீய சொல்லுறாங்களோ:))

    ReplyDelete
  157. //அதே எமனைக் கூப்பிடுங்கோ.அமேரிக்கா வாராறா இல்ல ஐ.....ரோப்பா போறாரா பாப்பம்!! ;)))))))))//



    நீங்க ரெண்டு பேரும் இந்த ரெண்டு கண்டங்கள்ளையும்:)) இருக்குறதால அவர் மிடில் ஈஸ்ட் பக்கம் போயிட்டாராம்

    ப்ளீஸ் படிச்சதும் பீஸ் பீஸ் :))

    ReplyDelete
  158. //அடேங்கப்பா..என்னா டான்ஸு,என்னா டான்ஸு??! :)//

    சுட சுட உங்க வீட்டுல எடுத்த படமா மகி?? பூஸ் டான்ஸ் சூப்பர்

    பூஸ் இதுக்கெல்லாம் ஷை ஆயிட்டு கட்டிலுக்கு கீழே போயிடாதீங்க

    ReplyDelete
  159. //அதிரா,பேசாமத் தூங்குங்கோவன், அவரைக் கூப்டுங்கோ,இவரைக் கூப்டுங்கோ எண்டு சொல்லாமல்!...//



    ஏன் பூஸ் டான்சொட சேர்த்து பாட்டும் பாடி உங்கள தூங்க விடலையா மகி? நல்ல வேளை எனக்கு கேக்கல. 9.30 க்கேல்லாம் நான் போய் கொர் ர்ர் அப்புறம் நெறையா ரெஸ்ட் எடுத்தாதனே உடம்பு சீக்கிரம் குணம் ஆகும்?? இல்லேன்னா சித்த வைத்தியர் மாதிரி நீங்கெல்லாம் எனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க போட்டி போட்டுக்கிட்டு வர மாட்டீங்க ??

    ReplyDelete
  160. உஸ்ஸ் கிரிசா ரெஸ்ட்டூஊஊஉ எடுக்கப் போயிட்டா அவ்வ்வ்வ்:)) அவவை ஆரும் டிசுரேப்புப் பணிடாதீங்க...:)).


    // En Samaiyal said...
    //ஒரு அப்பாவீ;) வந்து அப்பாவீ;)யா ஒரு கருத்தைச் சொல்லீட்டு அப்பாவீ;)யாப் போயிருக்கு//

    மகி யார சொல்லுறாங்க ?? பூஸ் உங்களுக்கு ஏதாச்சும் பிரிஞ்சுது ?? ஒரு வேளை கனடா அப்பாவீய சொல்லுறாங்களோ:)//

    [co="red"]இல்ல இல்ல எனக்கு நல்லாப் பிரிஞ்சிடுச்சு:)).. அது.. பாட்ஷாவோட “பாஸ்” ஐச் சொல்றாங்கோ...ங்கோ..ங்கோ..[/co]

    கிரிசா.... கிரிசாஆஆஆஆஆ.. இப்ப நீங்களுக்குப் பிரிஞ்சிடுத்தோன்னோ?:))

    ReplyDelete
  161. En Samaiyal said...
    mee 160!!!

    [im]http://www.mobiletoones.com/downloads/wallpapers/animation_wallpapers/preview/18/p21143-1234758880.gif[/im]

    ReplyDelete
  162. //உஸ்ஸ் கிரிசா ரெஸ்ட்டூஊஊஉ எடுக்கப் போயிட்டா அவ்வ்வ்வ்:)) அவவை ஆரும் டிசுரேப்புப் பணிடாதீங்க...:)).//


    என்னமோ இமய மலைக்கு போன மாதிரி என்ன சவுண்டு ? நான் லஞ்ச் ப்ரேக் முடிஞ்சு போனேனாக்கும் !!


    உங்க ரோசுக்கு ரெம்ப ரெம்ப டான்க்சு. ஆனா அதை கொஞ்சம் சிரிச்சு கொண்டு கொடுத்திருக்கலாம் எல்லோ ? ஐ எனக்கும் உங்க தமிழ் வருது பாருங்க :))

    ReplyDelete
  163. //கிரிசாஆஆஆஆஆ.. இப்ப நீங்களுக்குப் பிரிஞ்சிடுத்தோன்னோ?:))//

    பூஸ் இது எந்தா ஊரு பாஷை??? என் பையன் சின்ன வயசில இந்த மாதிரி தான் கொழப்பமா நீங்களுக்கு ன்னு சொல்லுவான் அதை ஞாபக படுத்திட்டீங்க

    ReplyDelete
  164. [im]http://www.anorak.co.uk/wp-content/uploads/fire-cat1.jpg[/im]

    ஹா..ஹா..ஹா!இங்கை பாருங்கோ..கேட் இன் ஃபயர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஏஞ்சல் அக்கா ஊருக்குப் போனதாலை பக்கத்தாலை இருக்க கிரிசாவின் கையப் புடிச்சுக்கொண்டு பூஸார் மஞ்சமஞ்சேஏஏஏஏஏஏஏர்னு அயகா;) இருக்காங்கோ.

    ஆஃபீஸ் லன்ச்சில் ப்ளொக் பக்கம் உலவுவோருக்கெல்லாம் இப்ப "பக்கு-பக்கு"ங்குமே! பாத்து எல்லாக் கதவையும் பூட்டிட்டு பத்திரமா இருங்கோ கிரிஜா! :);)

    ReplyDelete
  165. [im]http://3.bp.blogspot.com/-Ph7UqvGMuoI/TchZ8NQDq7I/AAAAAAAAENA/nIGHNEr1aMc/s1600/061120223044_White_Cat_Looking_at_the_Rogue_River_LG.jpeg[/im]

    குதிப்போமா..வாணாமா?
    குதிப்போமா..வாணாமா?
    குதிப்போமா..வாணாமா?
    குதிப்போமா..வாணாமா?

    ------ பூஸ்,இப்பூடி தேம்ஸுக்கு பக்க்க்க்க்க்கத்தாலை உட்கார்ந்து டிங்க்;) பண்ணிட்டு இருந்தால் உங்கட ஆதரவாளர்கள் பின்னால இருந்து சப்போர்ட் பண்ணி ஆத்துக்குள்ளை தள்ளி விடுவினம்,ஜாக்ரதை!;))))))

    ReplyDelete
  166. மீ தி 170!!! :))))

    எனக்கெல்லாம் ஆரும் ரோசாப்பூ ;) குடுக்க மாட்டினம்.அதனாலே நானே பூஸுக்கு ஒரு பொட்டி நிறையப் புய்பம்;) அனுப்பிட்டேன். :D :D

    [im]http://www.pawcurious.com/images/uploads/funny-pictures-cat-happy-flowers-gift.jpg[/im]

    ReplyDelete
  167. En Samaiyal said...
    //உஸ்ஸ் கிரிசா ரெஸ்ட்டூஊஊஉ எடுக்கப் போயிட்டா அவ்வ்வ்வ்:)) அவவை ஆரும் டிசுரேப்புப் பணிடாதீங்க...:)).//


    என்னமோ இமய மலைக்கு போன மாதிரி என்ன சவுண்டு ? நான் லஞ்ச் ப்ரேக் முடிஞ்சு போனேனாக்கும் !!////

    [co="blue"]அவ்வ்வ்வ்வ் முடியல்ல சாமி.... என்னை விடுங்கோ நான் காசிக்குப் போறேன்:))[/co]


    உங்க ரோசுக்கு ரெம்ப ரெம்ப டான்க்சு. ஆனா அதை கொஞ்சம் சிரிச்சு கொண்டு கொடுத்திருக்கலாம் எல்லோ ? ஐ எனக்கும் உங்க தமிழ் வருது பாருங்க :))

    [co="blue"]மூக்கையும் காதையும் பார்த்தா தெரியல்ல... அடடடடக்கி வாசிக்கிறேன்.. பொம்பிளைப்பிள்ளைகள் சிரிக்கப்படாதாம், பப்ளிக்கில...:))எங்கட ஊரில ஒரு பயமொழி:) சொல்லுவினம், “புகையிலை விரிச்சாப் போச்சு, பொம்பிளை சிரிச்சாப் போச்சு” என:)) அதேன்ன்ன்ன்ன்[/co]

    ReplyDelete
  168. //பூஸ் இது எந்தா ஊரு பாஷை??? என் பையன் சின்ன வயசில இந்த மாதிரி தான் கொழப்பமா நீங்களுக்கு ன்னு சொல்லுவான் அதை ஞாபக படுத்திட்டீங்க//

    எங்கட வீட்டில இப்பவும் இதே பாசைதான் நடக்குது:)).. மூத்தவர் கொஞ்சம் மாறிட்டார்.. சின்னவர் இப்பவும் அதே.. ஆனா நாம் திருத்துவதில்லை, மழலைமொழி நெடுகவும் பேசமாட்டினமே... அதால முடிஞ்சவரை பேசட்டும் என விட்டிடுவேன்...

    நானுக்கு, நீங்களுக்கு.. இப்படித்தான் நடக்கும்:))

    ReplyDelete
  169. அடக் கடவுளே “கேட்”:) க்குப் ஃபயர் வச்சிட்டாங்கோ... சும்மா ஒரு கதைக்காக தீக்குளிப்பேன் எனச் சொன்னா.. நிஜமாவே தீக்குளிக்க வச்சிடுவாங்கபோல இருக்கே.... ஜாக்ர்ர்ர்ர்ர்தையாத்தான் இருக்கோணும்:))..

    இருப்பினும் தீக்குளிக்கும்போதும் பூஸார் ரொம்ப அழகாத்தான் இருக்கிறார் இல்லையா மகி?:)) அவ்வ்வ்வ்வ்வ்

    //குதிப்போமா..வாணாமா?
    குதிப்போமா..வாணாமா?//
    மகியோட குதிப்பமா இல்லை வாணாம் கிரிசாவோட குதிப்பமா?:))

    தேம்ஸ் தாங்குமோ நம்மளை?:)))

    [im]http://fatanimals.org/wp-content/uploads/2010/06/fat_cat.jpg[/im]

    ReplyDelete
  170. [im]http://www.google.com/imgres?hl=en&client=ubuntu&hs=t5e&sa=X&channel=fs&biw=1598&bih=656&tbm=isch&prmd=imvns&tbnid=2E2yjlg7C7o4QM:&imgrefurl=http://annarboranimalhospital.com/animalhospital/2011/06/do-you-own-a-fat-cat/&docid=uM2jGwhlbQ5_vM&imgurl=http://annarboranimalhospital.com/animalhospital/wp-content/uploads/2011/06/Obese-cat.jpg&w=480&h=426&ei=gXYpT8T0DcKA2wWqnPTFAg&zoom=1[/im]

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! பூஷ்..sizeeeeeeeee 0!!!

    தேம்ஸ் தாங்குமாம்,ரெடி,வண்..றூ..ட்ரீ!

    ReplyDelete
  171. [im]http://annarboranimalhospital.com/animalhospital/wp-content/uploads/2011/06/Obese-cat.jpg[/im]

    ReplyDelete
  172. சமர்த்தா வெளாடுங்கோ..நான் போய் ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணிட்டு:) வரேன்.

    [im]http://cache.kotaku.com/assets/images/9/2007/02/medium_japanesecat3601.jpg[/im]

    ReplyDelete
  173. அவ்வ்வ்வ்வ் கே எஃப் சீ குடுத்தே குண்டாக்கிட்டாங்கப்பா... ஆனா இப்பூடி இருந்தால்தான் இப்போதைக்கு சேஃப்:) ஆரும் டமால் டிமால் எண்டு தூக்கி தேம்ஸ்ல வீசிட முடியாதே...... கீரி..கீரி... சே..கிரிசா வாறீங்களா வெளயாடலாம்... சூப்பமரியோ?:))).. மகி ஓசை சுடப்போறாவாம்:))).

    ReplyDelete
  174. /சுட சுட உங்க வீட்டுல எடுத்த படமா மகி?? /இல்லீங்கோ,கூகுள் இமேஜஸிலே எடுத்த படம். எங்கூட்டுல பூனையெல்லாம் வளத்தறதில்லே..என்னையத்தான் வளத்தறாங்க! ;))))))))

    [im]http://www.strangecosmos.com/images/content/138949.jpg[/im]

    ReplyDelete
  175. /மகி ஓசை சுடப்போறாவாம்:)))./ஓசையும் இல்லே,,ஒண்ணும் இல்லே..ஆராச்சும் ரெடிமேட் ஐட்டம் எதாச்சும் தந்தா சாப்புட நான் ரெடி! ;)

    [im]http://comicadze.com/thumbnails/large_very_hungry_cat_43965.jpeg[/im]

    சமைச்சு சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு இன்னும் இங்ஙனயேதான் திரிஞ்சிட்டு இருக்கேன் அதிரா! அவ்வ்வ்வ்.....

    ReplyDelete
  176. ம் படிச்சாச்சு... இனி சொல்லவே மாட்டோம் அந்த வார்த்தை... இனி வாழ்க்கைல வெறுக்க என்ன இருக்கு சொல்லுங்க...;) ஜஸ்ட் கிட்டிங்...:)

    ReplyDelete
  177. மகி, நாங்க ஊரில இருந்த காலம் மட்டும்தான் காலையில் சமைத்துச் சாப்பிடுவது, இங்கு வந்து... சீரியல், பிரெட் ரோஸ்ட்... இப்படித்தான்,

    விடுமுறை நாட்களில் மட்டும் இங்கிலீசு பிரேக் பாஸ்ட்(ரோஸ்ட், எக், சொசேஜ்....). வெளியே போனால் , மக்டொனால்ஸ்தான் அல்லது.... நல்ல நல்ல சான்விஜ் ஐட்டம் வாங்கலாம்(காலமைக்கு மட்டும்)...

    இப்போ போய் ஓட்ஸ் க்கு பாலும் போட்டு, சீனியும் போட்டு(நன்கு சூடாக்கிய பால்).. சாப்பிட்டுப்போட்டு வாங்கோ... தெம்பா பேசலாம்...:))

    ReplyDelete
  178. //தேம்ஸ் தாங்குமாம்,ரெடி,வண்..றூ..ட்ரீ!

    5:32 PM//

    அவ்வ்வ்வ்வ் ஏனிந்தக் கொல வெறி... விடுங்க நான் காசிக்குப் போறேன்...

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQhs_kt7uUJzLcsESWLnDcAdHUEXesDppqBSSTyOTu1QBXSAkQV6g[/im]

    ReplyDelete
  179. வாங்கோ அப்பாவித் தங்கமணி...

    //இனி வாழ்க்கைல வெறுக்க என்ன இருக்கு சொல்லுங்க...;//

    இதுவும் சரியேதான்... கொஞ்ச நஞ்சம் இருந்தாலும், 12 டிஷம்பருக்குள் சகலதையும் வெறுத்து ரெடியாகிடோணும்:)).

    மிக்க நன்றி.

    ReplyDelete
  180. /இப்போ போய் ஓட்ஸ் க்கு பாலும் போட்டு, சீனியும் போட்டு(நன்கு சூடாக்கிய பால்).. சாப்பிட்டுப்போட்டு வாங்கோ.../ம்ஹூம்!! நேக்கு ஓட்ஸ் போரிட்ஜ் புய்க்காது அதிரா! லன்ச்சுக்கு செய்திருந்த தேப்லா(ஹா..ஹா..பயப்புடாதீங்க..குஜராத்திக்காராங்க ரெசிப்பி.. மசாலா சப்பாத்தி)வையே சாப்ட்டுட்டு வந்திட்டேன். நீங்களும்வாங்கோ, தெம்பா பேசலாம்...:))

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTxSUCahY4G4BSg8bv12bVQ38yTZ8WnIt-xWx1_R6WPrRwnE6s_GtFTuUSx[/im]

    நான் ஜோடாக் குடிக்கேல்லை..
    நம்புங்கோஓஓஓ!!

    ReplyDelete
  181. அதே கட்சி:)).. எனக்கும் ஓட்ஸ் சாப்பிடும்படி எல்லோருமே சொல்லியாச்சு, ஆரம்பம் எனக்கதைப் பார்த்தாலே புடிக்காது, இப்போ சீனி போட்டபின் ரொம்பப் பிடிச்சிருக்கு, ஆனாலும் காலையில சீரியல் சாப்பிடப் புடிக்கவே புடிக்காது.. எங்காவது சட்னி, பொரியல் இருக்கோ எனத் தேடித்திரிவேன் பிரட்டுடன் சாப்பிட:)).

    புடிச்சிட்டேன்... புடிச்சிட்டேன்.. யீடாவைக் :) குடிச்சாளைப் புடிச்சிட்டேன்... ஓடிவாங்க... வழுக்கப்பார்க்குது... எங்கிட்டயேவா.. விடமாட்டனில்ல.. மகி யெல்ப்.. யெல்ப்..:))

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSllkOfEXX-V2JitbZjQbAeCg9UeasQfK9j0lEBFNK9acmWicDCIQ[/im]

    ReplyDelete
  182. [im]http://www.photogic.com/wp-content/uploads/funny-cats-mouse-photo.jpg[/im]

    நானும் யெல்ப்புக்கு வந்துட்டேன். :)

    [im]http://bp3.blogger.com/_qG2k4-mGycA/R4jK8pp3qoI/AAAAAAAAABM/h7RWiriQzgE/s320/good_night_cat.gif[/im]

    குட் நைட்..சீ யு டுமாரோ!

    ReplyDelete
  183. //குட் நைட்..சீ யு டுமாரோ!//

    ஹா..ஹா..ஹா.. டுமாரோ? அவ்வ்வ்வ்வ் என்னா தமிழாக்கம்..:))..

    நோஓஓஒ நான் படுக்க மாட்டேன்... எனக்கு நித்திரை வரேல்லை... மாட்டேன் மாட்டேன்... நெட் பார்க்கப்போறேன்.... ... சடார்.....படார்..... டும்..டம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    OK...OK...நான் சொல்லிடுறேன்... கு......ட்..... நை......ட்....... :((((((
    [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSW04QvsVzAOQHmuGJdp5FeTFbVanc6eFChicLkQi-zQ3ptCt6P[/im]

    ReplyDelete
  184. //ஆஃபீஸ் லன்ச்சில் ப்ளொக் பக்கம் உலவுவோருக்கெல்லாம் இப்ப "பக்கு-பக்கு"ங்குமே! பாத்து எல்லாக் கதவையும் பூட்டிட்டு பத்திரமாஇருங்கோ கிரிஜா! :);) //


    மகி யூ டூ ??? பூஸ் கூட சேர்ந்து ரெம்ப கெட்......ட்டு போயிட்டீங்க !! நானே ஏதோ லஞ்ச் ப்ரேக்ல கடமையே (!) கண்ணா கமெண்ட் போட்டு கிட்டு இருந்தா அதுக்கும் வேட்டு வெக்க பாக்குறீங்களே ?? இது நியாயமா ??


    சரி சீரியஸா ஒரு குவேச்டீன் எனக்கு வீட்டுல பார்க்கும் போது பூஸ் போடுற படம் எதுவும் தெரிய மாட்டேங்குது ஒவ்வொரு தடவையும் லிங்க் எ காபி பண்ணி வேற விண்டோ ல தான் பார்க்க முடியுது . உங்களுக்கும் அப்படியா இல்லே நான் தான் ஏதோ தப்பா பண்ணுறேனா

    ReplyDelete
  185. தேம்ஸ் தாங்குமாம்,ரெடி,வண்..றூ..ட்ரீ! // இதுக்கு தேம்சுல தண்ணி வத்தி போனாதான் தாங்குமாம்:))


    // கீரி..கீரி... சே..கிரிசா வாறீங்களா வெளயாடலாம்... சூப்பமரியோ?:)))//

    மகிய ஏதாச்சும் நொறுக்கு தீனி செஞ்சு கொண்டு வர சொல்லுங்கோ அப்பத்தான் நான் விளையாட வருவேன்.

    ReplyDelete
  186. //எங்கூட்டுல பூனையெல்லாம் வளத்தறதில்லே..என்னையத்தான் வளத்தறாங்க! ;))))))))

    ஆகா உங்க வீ.காரருக்கு எவ்ளோ பெரீ......யா மனசு ஹீ ஹீ :)


    //சமைச்சு சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு இன்னும் இங்ஙனயேதான் திரிஞ்சிட்டு இருக்கேன் அதிரா!//


    அப்போ உங்க வீ.காரருக்கு என்ன ப்ரேக்பாஸ்ட்? இல்லே அவர் faastingaa ??

    சாப்புடாமலே இவ்ளோ தெம்பா கமெண்ட் போட்ட மகிக்கு இந்த பூஸ் ஒரு மஞ்சள் போக்கே கொடுத்து இருக்கலாம் நாட்டி பூஸ் :))

    ReplyDelete
  187. //ம்ஹூம்!! நேக்கு ஓட்ஸ் போரிட்ஜ் புய்க்காது அதிரா!//

    மகி அடம்ம்ம் புடிக்காம ஓட்ஸ் சாப்பிட்டு வாங்க. எப்புடியாச்சும் பால் அண்ட் சர்க்கரை இல்லே தேன் போட்டு மைக்ரோவேவ் இல் ரெண்டு நிமிஷம் வெச்சிட்டு சாப்பிடுங்கோ பார்ப்போம். ரெம்ப ஹெல்தி. பூஸ் உங்களுக்கும் தான்!! ஏன்னா எனக்கு ஓட்ஸ் ரெம்ப ரெம்ப புடிக்கும் .


    //நீங்களும்வாங்கோ, தெம்பா பேசலாம்...:)) //


    கர்ர்ரர் ரர் ரர்ர்ர்ர் நான் வரும்போது எல்லாரும் கட்டிலுக்கு கீழே போயிடுராங்கப்பா:))

    ReplyDelete
  188. This comment has been removed by the author.

    ReplyDelete
  189. தூக்க கலக்கத்துல ரெண்டு தடவ ஒரே கம்மெண்ட போட்டு அப்புறம் நா..நே கண்டு பிடிச்சு டிலீட் பண்ணிட்டேன் :))

    மகி said



    //எனக்கெல்லாம் ஆரும் ரோசாப்பூ ;) குடுக்க மாட்டினம்.அதனாலே நானே பூஸுக்கு ஒரு பொட்டி நிறையப் புய்பம்;) அனுப்பிட்டேன்//


    அது என்னன்னா வேலையில இருந்தும் கண்ணும் கருத்துமா கமெண்ட் போடுறவுங்களுக்கு மட்டும் தான் பூஸ் ஸ்பெஷல் ரோஸ் கொடுப்பாங்க. இந்த மாதிரி காலையில மெதுவா எழுந்து என்ன சாப்புடலாமுன்னு யோசிக்குறவங்களுக்கு நத்திங் :))


    அது சரி அந்த பூஸ் ஏன் இப்புடி பொட்டி நெறையா புய்ப்பம் பார்த்த ஒடனே இப்புடி சிரிக்குது? இன்னிக்கு நைட் தூங்க முடியாது போல இருக்கே ??

    ReplyDelete
  190. [im]http://img1.123friendster.com/en/goodmorning/9.gif[/im]

    இது "மகி நல்ல பொண்ணு,நல்ல பொண்ணு" எப்பவுமே நாலு நல்லவார்த்தை பேசறவிங்களுக்கு!!

    ReplyDelete
  191. இது மத்தவிங்களுக்கு!!!:))))))

    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcRpihbr-jHZUgjBnzdtVygzgL8fQNHJc3Z0ArKHvl54rpIT08lq[im]

    யு.கே.நேரம்:3.42Am...இதான் பிரம்ம முஹூர்த்தமாம்..சீக்கிரம் எழும்புங்கோ அதிரா&கிரிசா! ;) சட்டுப்புட்டுன்னு ரெடியாகுங்கோ! ;))))))))

    ReplyDelete
  192. ///எனக்கு வீட்டுல பார்க்கும் போது பூஸ் போடுற படம் எதுவும் தெரிய மாட்டேங்குது ஒவ்வொரு தடவையும் லிங்க் எ காபி பண்ணி வேற விண்டோ ல தான் பார்க்க முடியுது . உங்களுக்கும் அப்படியா///இல்லையேங்க! லேப்டாப்ல போட்டோஸ் அப்படியே ஓபன் ஆகுதே..அதனாலதானே இம்பூட்டு அழகழகழகா;)ப் படம் போட்டுட்டு இருக்கேன். :)

    உங்களுக்கு ஏன் படம் வரமாட்டேன்னுதுன்னு தெரிலையே..எங்காத்துக்காரர்கிட்ட "போட்டோ வரமாட்டேன்னுது,எப்படி பார்க்கீறது?'ன்னு கேட்டா என்ன சொல்லுவாரு தெரிங்களா?? "கஷ்டப்பட்டு பாரு"ங்கறாரு மக்காஆஆஆ! :))))))

    [im]http://www.motifake.com/image/demotivational-poster/1005/what-cat-demotivational-poster-1272873319.jpg[/im]

    ஓக்கே,நோ டென்ஷேன்ன்ன்ன்ன்ன்ன்! எனக்கு ஐபேட்-ல போட்டோ வராது.லேப்டாபில போட்டோ வரும். உங்களுக்கு ஏன் வொர்க் ஆகலைன்னு எனக்குத்தெரிலைங்க..சாரி!

    ReplyDelete
  193. ஆங்...படமெதுவுமே வரலையே?? அவ்வ்வ்வ்வ்வ்....

    [im]http://www.motifake.com/image/demotivational-poster/1005/what-cat-demotivational-poster-1272873319.jpg[/im]

    ReplyDelete
  194. [im]/http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcS9SxiYMZTRuegsQieNrOb8-kJM9FexSEcwgO1k7OSUXnmNP20fu2ABpi6x[/im]

    ?
    ?
    ?
    ?
    ?

    ReplyDelete
  195. இரண்டாவது சதம் அடிச்சிட்டேன்..ஹாஹ்ஹா..இப்ப பாட்டு கேட்டுகிட்டே ஜாலியா சாப்புடலாம்.

    [im]http://musthavecute.files.wordpress.com/2012/01/cute-kawaii-stuff-dancing-kitty-friend.jpg[/im]

    பை பை..சீ யு.

    :)

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.