நல்வரவு_()_


Wednesday 26 April 2017

ஒரு பென்சிலுக்குள் அடக்கி விட்டார்களே!....

அதிராவை:)
ஃபிரான்ஸ் போயிருந்த நேரம், பரிஸ் ஐபிள் டவர் பார்த்து விட்டு அதன் சுற்றுச் சூழலை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தோம்... அருகிலே சென்நதி வளைந்து நெளிந்து ஓடுகிறது.. அதன் கரையிலே அங்காங்கு இரு ஸ்டூல்களோடும் ஒரு bag  உடனும் சிலர் இருந்தார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து வரைந்து கொடுப்பவர்கள்.
தாம் ஒரு ஸ்டூலில் இருந்து, எதிரே நம்மை இன்னொரு ஸ்டூலில் இருக்கச் சொல்லிப்போட்டு.. ஒரு 5,6 நிமிடத்துள் கடகடவென கீறிக் கொடுக்கின்றனர்.. ஒருவரைக் கீறுவதற்கு 20 யூரோக்கள் கொடுத்ததாக நினைவு. 100 வீதம் இல்லை ஆனா 75 வீதம் சரியாக வரைந்து விடுகின்றனர்.

து மகனை வரையத் தொடங்குகிறார். ஃபோட்டோ எடுத்தவற்றைக்கூட காணவில்லை.. எங்கோ தொலைந்து விட்டது. வரைந்த கொடுத்த பேப்பரை சுருளாக சுருட்டி கையில் வைத்திருந்தேன் நாந்தான், எங்கோ அப்படியே ரோட்டில் நழுவ விட்டு விட்டேன்:(.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ஆங்ங்ங்ங் இப்போ அதிராவை ஸ்டூலில் இருக்கச் சொல்லிட்டார்ர்:)..


இது அதிராவாஆஆஆஆ?:) ஆண்டவா சொல்லுங்கோ இப்பூடியா நான்?:)

இம்முறை, நேரப் பற்றாக்குறை காரணத்தால்,  பதிவு ரொம்பக் குட்டியாக இருக்கிறது அஜீஸ் பண்ணுங்கோ:).
((((((((((((((((((((((((((((((((((((((((((((_()_))))))))))))))))))))))))))))))))))))))))))))))

குருவே இது என்ன கொடுமை.. விட்டிடுங்கோ விட்டிடுங்கோ நான் இப்போ சுத்த சைவத்துக்கு மாறிட்டேன்:)..

ஊசி இணைப்பு:
ஹா ஹா ஹா
======================================================================
 “ஒருவர், பிறர் தன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறாரோ, தானும் அப்படியேதான் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்திடக்கூடாது”
புலாலியூர்ப் பூஸானந்தா:)
======================================================================

83 comments :

  1. நானும் பார்த்து இருக்கிறேன் ஆளால் வரையவில்லை
    காரணம்...
    திருஷ்டி பட்டு விடும் அழகு குறைந்து விடும் என்று சொன்னார்கள்.
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜீ வாங்கோ.. இம்முறை வோட் பண்ணியதிலும், பின்னூட்டத்திலும் நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊ:).. அதனால அடுத்தமுறை உங்களை ஃபிரீயா வரைஞ்சு கொடுக்கச் சொல்லி அந்த சைனீஸ் காரரிடம் சொல்லி வைக்கிறேன்:).

      ///காரணம்...
      திருஷ்டி பட்டு விடும் அழகு குறைந்து விடும் என்று சொன்னார்கள்.///
      ஹா ஹா ஹா நிஜமாவா சொல்றீங்க?:) எனக்கு அப்பூடித் தெரியல்லியே:).. சரி விடுங்கோ:)..

      மிக்க நன்றிகள்.

      Delete
  2. அவர்கள் வரைந்துகொடுக்கும் பேப்பர், தொலைந்துவிடும் என்று முன்னமேயே யோசித்து வரைந்ததை புகைப்படமா எடுத்துக்கலயா?

    ஒரு ஓவியருக்கு, அவருடைய சூழலில் உள்ள, அவர்கள் நாட்டைச் சேர்ந்தவர்களைத்தான் சரியாக வரையமுடியும் என்பது என் எண்ணம். தாய்வானில் ஒரு ஓவியர், எங்கள் குடும்பத்தையே வரைந்தபோது, முகமெல்லாம் அவ்வளவு சரியாக வரவில்லை. இதன் காரணம், அவங்களுக்கு அவங்க நாட்டு முகம்தான் சர்வ சாதாரணமா வரையவரும். உங்களுக்கு அப்படித் தோணலையா?

    உங்கள் பெண்ணின் படம், எங்க, 'வரைஞ்சதுக்கு காசு எங்கிட்ட கேட்டுருவாங்களோ' என்று பயந்தமாதிரி இருக்கு.

    ஊசி இணைப்பு 'ஹா ஹா ஹா' - உங்கள் பாணியில் இந்த ஜோக் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      ///அவர்கள் வரைந்துகொடுக்கும் பேப்பர், தொலைந்துவிடும் என்று முன்னமேயே யோசித்து வரைந்ததை புகைப்படமா எடுத்துக்கலயா? //
      ஹா ஹா ஹா உண்மைதான், என்னைச் சுற்றி நின்று படமெடுத்தார்கள்.. அதிலும் அங்கு வந்து போனோர் பலர் ஏனோ தெரியவில்லை ஏசியன் என்றதாலோ என்னமோ எட்டி எட்டிப் பார்த்தார்கள் வரைவதை, எடுத்த படங்களைக்கூட காணல்லியே அதைத்தான் சொன்னேன்.. மகனின் மேலே போட்ட படம் மட்டுமே உள்ளது.

      கையில் வாங்கிய 5 நிமிடத்திலேயே சுருள் நழுவி விழுந்து தொலைந்து விட்டது:(.

      ///உங்கள் பெண்ணின் படம், எங்க, 'வரைஞ்சதுக்கு காசு எங்கிட்ட கேட்டுருவாங்களோ' என்று பயந்தமாதிரி இருக்கு.//
      ஹா ஹா ஹா மகனின் ஹெயார் ஸ்டைலைப் பார்த்துச் சொல்றீங்களோ? உண்மைதான் அவருக்கு எப்பவும் Dora hair style:) தான் வைத்திருந்தோம்:)..

      ஊசிக்குறிப்பு:
      என் படத்தைப் பார்த்து, என் பெண்ணின் படம் எனச் சொல்றீங்க எண்டெல்லோ ஒரு செக்கண்ட் ஆடிப்போயிட்டேன்:).. சரி சரி இது அஞ்சுவின் கண்ணில் படாமல் இருக்கக் கடவது:).

      ///ஊசி இணைப்பு 'ஹா ஹா ஹா' - உங்கள் பாணியில் இந்த ஜோக் இல்லை.//
      இதைப் படிச்சதால்தான் கிட்னியை ஊஸ் பண்ணிக் கண்டு பிடிச்சேன்.. பெண் யார் என்பதை:) ஹா ஹா ஹா.

      Delete
    2. ///இதன் காரணம், அவங்களுக்கு அவங்க நாட்டு முகம்தான் சர்வ சாதாரணமா வரையவரும். உங்களுக்கு அப்படித் தோணலையா?//

      உண்மைதான் நிங்க சொல்றது சரியாத்தான் இருக்கும். உருவம் சரியா எடுத்திடுறாங்க, கண் மூக்கு வாய் சரியா வருகுதில்லை. ஆனா எங்கள் மகனை வரைந்தது பார்க்க ஓரளவு சரியாகவே இருந்துது.. படத்தைக் காணல்லியே:).

      Delete
    3. மகனைப் பார்த்து பெண்பிள்ளை என்று சொல்லுவேனா? ஓவியருக்கு எதிரே இருந்த பெண், ரொம்ப சிறியவராகத் தெரிந்தார். (வயதானாலும், யாரையாவது பார்த்து, பார்க்கச் சின்னப் பெண்போலவே இருக்கீங்க என்றால் அவர்களுக்கு சந்தோஷம்தானே)

      ஓவியர், சிரிக்கக்கூடாது என்று சொன்னாரா?

      Delete
    4. ///(வயதானாலும், யாரையாவது பார்த்து, பார்க்கச் சின்னப் பெண்போலவே இருக்கீங்க என்றால் அவர்களுக்கு சந்தோஷம்தானே)//

      ஹா ஹா ஹா:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வயதானவர் எனச் சொன்னது அந்த ஓவியம் வரைபவரைப் பார்த்துத்தானே:) ஹா ஹா ஹா ஓம் அவருக்கு ஒரு 30 இருக்கும்:) மீக்கு சுவீட் 16 எல்லோ:).

      அது இடைக்கிடை சிரிச்சுக்கொண்டிருந்தேன், ஆனா அவரைப் பார்க்கும்போது மட்டும் முறைச்சேனாக்கும்:) அதனால அப்பூடி வந்திட்டுது அவருக்கு கீறும்போது:).. பொது இடத்தில எல்லோரும் புறுணம்:) வேறு பார்க்கிறாங்க என்னை:) அப்போ எப்பூடிச் சிரிச்சுக்கொண்டிருக்கலாம் சொல்லுங்கோ:) ஹா ஹா ஹா.

      Delete
  3. உங்களை அவர் வரைய டபுள் சார்ஜ் பண்ணி இருக்கணுமே?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. நலம்தானே?:).. டபிள் சார்ஜ்ஜா? கர்ர்:) என் முகத்தைப் பார்த்து பணமே வேண்டாம் என்றிட்டார்ர்:).. இல்ல இல்ல சரியில்லை என பொக்கட்டுக்குள் வைத்துவிட்டு வந்தோம் தெரியுமோ?:) ஹா ஹா ஹா:)

      Delete
  4. பேய் பிசாசுவை கூட அவர் அழகாக வரைவார் போலிருக்கே... ஹீஹ்ஹி நான் உங்களை பேய் பிசாசு மாதிரி இருக்கீங்க என்று சொல்லவில்லை.. அவர் அதை கூட அழகாக வரைவார் என்றுதான் சொல்லுகிறேன் உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஸ் அப்பாடா எப்படியோ சமாளிச்சிட்டோம்

    ReplyDelete
    Replies
    1. ஹையோ இவரை எதுக்காக இப்போ வோட்டில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணி விட்டாங்க:) அந்த டொக்டர் மட்டும் என் கைல கிடைச்சார்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      சே..சே.. இன்னும் ஒரு மாதம் வோட்லயே வச்சிருந்திருக்கலாமே:)

      Delete
    2. அதிரா. மதுரை ஆதி வாங்கியது உங்களுக்கு இன்னு. தெரியல போல....அங்க போய் பாருங்க....ஹஹஹ

      கீதா

      Delete
    3. என்ன கீதா? ஆதியை வாங்கிட்டாராஆஆஆஆஆஆஆஅ?:)..ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஙேஙே:)..

      Delete
  5. ஹலோ எங்க வீட்டுல நடக்கிறதை எல்லாம் கேட்டுவிட்டு ஊசி இணைப்புல போடக் கூடாது...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நினைச்சேன் அது நீங்களாத்தான் இருக்குமென:).. அதனாலதான் ஃபுல்ஸ்ரொப்போட நிறுத்திட்டினம்:) பூரிக்கட்டைபற்றி தொடரல்லப்போல:)

      Delete
  6. //இது அதிராவாஆஆஆஆ?:) ஆண்டவா சொல்லுங்கோ இப்பூடியா நான்?:)///
    ஏன் இப்படி கூடவா நீங்கள் அழகாக இருக்க மாட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அய்ய்யய்ய்யோ மாமீஈஈஈஈ உங்கட உலக்கை அடி பத்தல்ல ட்றுத்துக்கு:)

      மிக்க நன்றிகள் ட்றுத்.

      Delete
    2. இதுக்கு எல்லாம் சேர்த்துதான் நல்லா வாங்கிருக்கார்..போய் நலம் விசாரிங்கோ..நான் விசாரிச்சுட்டுட்டேன்.ஹஹஹ

      கீதா

      Delete
  7. எப்பவும்போல ரிவர்ஸ் ஆர்டார்தான் நமக்கு சரி :)

    புலாலியூர் பூசானந்தாவின் புலி மொழிகள் ஜூப்பர் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ றிவேர்ஸ்ல வந்தால் சென் நதியில விழுந்திடப்போறீங்க:).

      புலி மொழிகள் இல்ல அது பூஸ் மொயிகள்:) ஹா ஹா ஹாஅ:)

      Delete
  8. ஹாங் ஹா :) எங்கேருந்து இந்த ஊசி இணைப்பு எடுக்கறீங்க :)
    அந்த உங்க குரு சேவலை கட்டிக்கிட்டு குறு குறுன்னு போட்டோக்கு பாஸ் கொடுக்கறார் :) தட்ஸ் ஆல் அதனால் நீங்க சைவமாவே இருங்க

    ReplyDelete
    Replies
    1. // எங்கேருந்து இந்த ஊசி இணைப்பு எடுக்கறீங்க :)//
      அது ட்றுத்தைத்தான் கேக்கோணும்:).

      ஹையோ அஞ்சு, மீ சைவத்துக்கு மாறிட்டேன் என்பதை குருவுக்கு சொல்ல மறந்திட்டேன்ன்:).. அவர் எனக்கு பிடிச்சுத் தந்து யெல்ப்:) பண்றாராமாம்ம்ம்ம்ம்:) ஹா ஹா ஹா:)..

      //தட்ஸ் ஆல் அதனால் நீங்க சைவமாவே இருங்க//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)பிறகு நான் வயக்கெட்ட்டுப்போயிட மாட்டேன்?????:)

      Delete
  9. ஹையோ ஹையோ :) அது சுவீடிஷ் பிரின்செஸ் விக்ட்டோரியா ..பணத்தை திருப்பி வாங்குங்க அந்த படத்தை வரைஞ்சவர் கிட்டருந்து :))))))

    ஆண்டவரை எதுக்கு டிஸ்டர்ப் செய்றீங்க அவருக்கு நிறைய வேலையிருக்கு நானே சொல்றேன் :) வரையரவர் ஸ்விடிஷ் இளவரசியாக்கி வரைஞ்சிருக்கார் உங்களை :)

    ஆனா அதுவும் அழகாத்தான் இருக்கு ..

    ReplyDelete
    Replies
    1. ///ஹையோ ஹையோ :) அது சுவீடிஷ் பிரின்செஸ் விக்ட்டோரியா//
      என்னைப் பார்த்தா அவருக்கு அப்பூடியா தெரிஞ்சிருக்கு?:)..

      நோஓஓஓஓஓ மீ பிரித்தானியாக் குயினின் பேத்தி எப்பூடி சுவீடிஷ் பிரின்ஸ்சஸ் ஆகிறது?:).. சரி சரி விட்டிடலாம்:) ஏனெனில் அவவும் அழகாத்தான் இருக்கிறா என்பதால ஐ அக்செப்ரெட்:)[நான் மடலினைச் சொன்னேன்] ஹா ஹா ஹா:)..[எதுக்கு எல்லோரும் கலைக்கினம்:)]
      [im]http://i0.wp.com/seldagoktas.com/wp-content/uploads/2014/01/princess-madeleine-7.jpg?resize=310%2C227[/im]

      Delete
  10. அதிரா நெல்லை தமிழன் சொன்னது சரிதான் வெளிநாட்டு ஓவியர்களுக்கு அவங்க முகங்கள் நல்லா வரும் ..படத்தில் உங்கள் அழகான குண்டு கண்களை சின்னதாக்கிட்டாங்க :) இவர்களுக்கு எள்ளுப்பூ மூக்கு குட்டிநாசி சின்ன சீரிய கூர்மையான கண்கள் தான் எல்லா முகத்திலும் வரும்

    ReplyDelete
    Replies
    1. ஓம் இதிலெல்லாம் வீரர் சைனீஸ் தானே.. அதனால கண், வாய் சரியா அமையல்ல:)

      Delete
  11. /ஆங்ங்ங்ங் இப்போ அதிராவை ஸ்டூலில் இருக்கச் சொல்லிட்டார்ர்:)..//
    ஹையோ ஹையோ இதுக்குதான் என்னைப்போல் உசரமா இருக்கணும் .

    ReplyDelete
    Replies
    1. என்னது உசரமாவா?:) எதுக்கு வேலிக்கு மேலால எட்டி விடுப்ஸ் பார்க்கவோ?:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)ஹா ஹா ஹா:).. அந்த குட்டி ஸ்டூலில் இருக்கப்பட்ட பாடு எனக்குத்தானே தெரியும்:).

      Delete
  12. haaaaaahaaa :))))))))))))))))) ஹாஆ ஹாங் :) நானும் பார்த்திட்டேன் :)
    ரொம்பப்ப்ப்பா ஆசை குண்டு பூனைக்கு :)நெல்லை தமிழனின் கமெண்டை சொன்னேன் என் கண்ல பட்ருச்சே

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னா சந்தோசம் பாருங்கோ:)

      Delete
  13. அதிரா காணம்போட்ட பூனை கர்ர்ர்ர் ..குழந்தை படத்தை கவனமா கொண்டு வராம எப்படி காணாம போட்டிங்க ..

    ReplyDelete
    Replies
    1. என்னோடதும் சேர்த்துத்தான் அஞ்சு மிஸ்ஸிங்.. சரியான கவலையாத்தான் இருந்துது, சரி ஏதோ துலைய வேண்டிய காலம்போல என விட்டிட்டோம்.

      Delete
  14. அந்த பென்சில் தத்துவம் சூப்பர் .. பிரச்னைகள் வரும் போகும் அதுக்காக வாழ்வே போச்சுன்னு இருக்கக்கூடாது அதிலிருந்து எவ்வழியிலாவது வெளி வரணும் ..இதெல்லாம் ரீசைக்ளிங் செய்ற நமக்கு சொல்லவே வேணாம் :)

    ReplyDelete
    Replies
    1. அதேதான்.. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை....

      Delete
  15. ஆங் இப்போ வரேன் முக்கியமான விஷயத்துக்கு அந்த பென்சில் பூனையை நீங்க விரைவில் quilling செய்யணும் இது எனது ஹோம்ஒர்க் உங்களுக்கு :)

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ இது என்ன புது வம்பாக்கிடக்கூஊஊ:) இப்போதானே பிக் படிச்சு ஒரு ஹோம் வேர்க் முடிச்சு போஸ்ட் போட்டேன்:) திரும்படியுமோ?:) சரி சரி முதலில் ஃபீஸ் ஐ அனுப்பி வையுங்கோ?:) பின்ன பேப்பர் ஸ்றெடர் வாங்க வாணாம்ம்?:). ஹா ஹா ஹா.

      Delete
  16. பூனை என்னா குத்தாட்டம் :) பாட்டும் ஆட்டமும் நைஸ் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான் பார்க்க பார்க்க அலுப்பதில்லை எனக்கு... பாட்டும் கேக கேட்க அலுக்காது.

      மிக்க நன்றி அஞ்சு அனைத்துக்கும்.

      Delete
  17. என் வோட் எண்: அஞ்சூஊஊஊஊ (அதாவது ஐந்து)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. போனதடவையும் உங்களுக்கு இதே நம்பர்தான் கிடைத்ததா நினைவு:).

      Delete
  18. //ஆங்ங்ங்ங் இப்போ அதிராவை ஸ்டூலில் இருக்கச் சொல்லிட்டார்ர்:)..//

    மேற்படி வரிகளின் கீழே காட்டப்பட்டுள்ள முதல் இரண்டு படங்களிலும் 90 to 95% Perfection கொடுத்து தத்ரூபமாகவே வரைய ஆரம்பித்துள்ளார். அதுவும் அந்த இரண்டாவது படத்தில் 100% Perfection வந்துள்ளது.

    Finished Photo வை மட்டும் கொஞ்சம் சொதப்பிட்டார் போல எனக்குத் தெரிகிறது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது சரிதான், ஆரம்பம் நல்லாத்தான் தொடங்கியிருக்கிறார் முடிவில் அவசரப்பட்டிட்டார்ர்.. முகத்தை ஒடுக்கிட்டார்.

      Delete
  19. சீவிய முழுப்பென்சில், உடைந்து போன பென்சில், பிறகு இரண்டு சீவிய குட்டிப்பென்சில்கள் .... இவற்றில் எழுதப்பட்டுள்ள தத்துவங்கள் மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஓம் வாழ்க்கைத்தத்துவம்.. மிக்க நன்றி.

      Delete
  20. குரங்காரும் எப்போதுமே சைவம் தானே .... ஏதோவொரு பிரியத்தில் தன் அன்பைக்காட்ட ஹக் என்ற கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறாரோ என நான் நினைக்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்கதான் கர்க்ட்டாக் கண்டு பிடிச்சிட்டீங்க கோபு அண்ணன், இல்லையெனில் சேவலின் முகத்தில் பயம் தெரியும்.. இது பயப்படாமல் இருக்கிறார்.. அப்போ நிட்சயம் இது கட்டிப்புடி வைத்தியம்தேன்ன்:) ஹா ஹா ஹா..

      நான் ஏதோ என் குரு ஆச்சே.. எனக்குப் பிடிச்சுத்தாறாராக்கும் என நினைச்சேன் வாணாம் என்றேன்:)..

      Delete
  21. ஊசி இணைப்பும், புலாலியூர்ப் பூஸானந்தா பொன்மொழிகளும் வழக்கம்போல் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் கோபு அண்ணன், நீங்க 2 நாளா கொமெண்ட்ஸ் போட்டே ரயேட் ஆகியிருப்பீங்க றெஸ்ட் எடுங்கோ...

      Delete
  22. பூசானந்தா வார்த்தைகள் அட்சர லட்சம்!

    படம் உங்கள் முகம் போலத்தான் இருக்கிறது. படத்தில் உங்கள் கண்களில் இருக்கும் சிரிப்பு மிஸ்ஸிங்! அபாரத் திறமை. நொடிகளுக்குள் வரைவதென்றால்...

    ஜோக்கை கோபத்தோடு ரசித்தேன். (தப்பு இல்ல...!!)

    இதை ரைப் பண்ணி முடிக்கச் சொல்ல தம வாக்கு விழுந்து விட்டது!

    பென்சில் குறிப்பு சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ..

      //பூசானந்தா வார்த்தைகள் அட்சர லட்சம்!// ஹா ஹா ஹா மிக்க நன்றி. நான் இதில் படு பயங்கரமாக இருப்பேன், அதாவது சிலர் தமக்கொரு சட்டம் நமக்கொரு சட்டம் இயற்றுவார்கள் அது பிடிக்காதெனக்கு... எனக்கு ஒரு விசயம் பிடிக்காதெனில்.. அதை நான் அடுத்தவர்களுக்கும் செய்யக்கூடாது... இன்னொரு பொன்மொழி இருக்கெல்லோ...

      “உனக்குச் சேராத தொப்பியை.. அடுத்த வீட்டுக்காரர் தலையில் போடாதே”:).

      //படம் உங்கள் முகம் போலத்தான் இருக்கிறது. படத்தில் உங்கள் கண்களில் இருக்கும் சிரிப்பு மிஸ்ஸிங்! அபாரத் திறமை. நொடிகளுக்குள் வரைவதென்றால்...//

      உண்மையேதான், நேரம் எடுத்தால் யாரும் பொறுமையோடும் இருக்க மாட்டோம் எல்லோ. மேலே அஞ்சு சொன்னதைப்போல கண்ணை கொஞ்சம் அமத்திக் கீறிட்டார்ர்.. வாயையும் என்னமோ பண்ணிட்டார்ர்ர்.. மற்றும்படி எடுத்திட்டார்ர் :).

      //ஜோக்கை கோபத்தோடு ரசித்தேன். (தப்பு இல்ல...!!)//
      ஹா ஹா ஹா.. நான் நினைக்கிறேன்.. அதை அவர் அப்படி சொன்னதே ஜோக்குக்காகத்தானே?:) உண்மையா அப்படி எனில் மனைவியிடம் சிம்பிளாக சொல்லியிருப்பாரோ?:) ஹா ஹா ஹா.

      தமன்னா வோட்டுக்கு ஹையோ சீராளனைப்பார்த்து எனக்கும் தடுமாறுது:).. தமிழ்மணத்துக்கு நன்றி:). அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள். இப்போ நீங்க எல்லாம் உடனுக்குடன் வருவது பார்த்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.

      கொசுமெயில் ரொம்ப லேட்டாகுது சில சமயம்.

      Delete
  23. #ஒரு பென்சிலுக்குள் அடக்கி விட்டார்களே!#
    இது உங்க மாமாவோட ஆதங்கமா :)

    #100 வீதம் இல்லை ஆனா 75 வீதம் சரியாக வரைந்து விடுகின்றனர்#
    பக்கத்திலே உங்க போட்டோவைப் போடுங்க ,எத்தனை வீதமென்று நான் சொல்றேன் :)

    பூசானந்தாவின் சிஷ்யன் ஆயிட்டேன் ,மடம் எங்கேயிருக்கு (cctv கேமராவோட போகலாம்னு இருக்கேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. நான் பென்சில் என நினைச்சுட்டேன்ன் அது ஒரு வித கரிச்சோக்..

      //பக்கத்திலே உங்க போட்டோவைப் போடுங்க ,எத்தனை வீதமென்று நான் சொல்றேன் :)//
      ஹா ஹா ஹா ரொம்ப விபரமாத்தான் இருக்கிறீங்க:).

      //பூசானந்தாவின் சிஷ்யன் ஆயிட்டேன்//
      ஆவ்வ்வ்வ்வ்வ்வ் இதென்ன புது வம்பாக்கிடக்கூஊஊ:) பூஸானந்தாவுக்கு மடம் எல்லாம் இல்ல:) தேம்ஸ் கரை மட்டும்தேன்ன்ன்:) .

      //மடம் எங்கேயிருக்கு (cctv கேமராவோட போகலாம்னு இருக்கேன் :)//
      ஹையோ வைரவா பிச்சையே வாணாம்ம் நாயைப் பிடிங்கோ கதையாக்கிடக்கே சாமீஈஈஈஈஈ:).. haa haa மிக்க நன்றி meeeeeeeeeeeeeee escapeeeeeeeeeeee
      [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRW7UUHyTbORTmwJpOG_mL4LYDc0KfuJgRPETRX95s9rVzSKMYq[/im]

      Delete
  24. ஐயோ ஐயோ நானும் இதுவரை நினைத்து இருந்தேன் பூசார் தமனா போல இருப்பாங்க என்று இப்படி பறவை முனிம்மா மாதிரி கிறுக்கி இருக்கானே............................ என்ற முண்டக்கண்ணி அம்மா இது என்ன சோதனை.....அவன் உங்களை வரையல்ல உங்களுக்கு பின்னால இருந்தவங்களை வரைந்து இருக்கான் போல ம்ம்ம் எது எப்படியோ ஒரு பதிவுக்கு காரனமாயிட்டான் அந்த ஓவியன் நல்லது !

    ஊசிக்குறிப்பு போல பரவலா நடக்குது சண்டை இப்போ ஆங் .....
    ஆமா கோழிக்கும் குரங்குக்கும் என்ன லவ்வா,,,,,,,,
    மீண்டும் அட்டகாசமான பதிவை எதிர்பார்த்து
    த ம னாவாக்கு 1

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சீராளன் வாங்கோ:).. என்னாது தமனா போலவா?:) சே..சே.. தமன்னால என்னதான் அழகிருக்கு சொல்லுங்கோ?:)..

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) பறவை முனியம்மாவாஆஆஆஆ?:).. ஒருவேளை நீங்க சொன்னதுபோல என் பின்னே ஆரையாவது பார்த்துக் கீறிட்டாரோ?:).. சரி சரி விடுங்கோ அடுத்தமுறை பார்ப்பம்.. நல்ல ஓவியராப் பிடிப்போம்:)..

      அது குரங்கார் சேவல்பிள்ளைக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறாராம்..

      ///ஐயோ ஐயோ/// ஹா ஹா ஹா உங்கட அலறல் கேட்டு, நான் பதறி அடிச்சு ஓடி வந்தேன்... மிக்க நன்றி மேஜரே.. அனைத்துக்கும் வரவுக்கும்.

      Delete

    2. சீராளன் தவளை என்று சொல்லுவதற்கு பதிலாக தப்பாக தமனா என்று டைப் பண்ணிட்டாரோ என்னவோ ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா சீராளன் அப்பூடி தப்பா எல்லாம் டெல்லமாட்டார்ர்:)..

      Delete
  25. ஐ...மீ லாண்டட் திஸ் டைம்!! ;) :D
    ஏதோ அதிசயம் நடந்து கமெண்ட் பாக்ஸு ஓபன் ஆகிட்டுது அதிராவ்!! :))))))

    // வரைந்த கொடுத்த பேப்பரை சுருளாக சுருட்டி கையில் வைத்திருந்தேன் நாந்தான், எங்கோ அப்படியே ரோட்டில் நழுவ விட்டு விட்டேன்:(./// கர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 1008!!

    உங்கட படம் (அது சத்தியமா ராதிஅ போல இல்ல்ல்ல்ல்ல்ல) மட்டும் எப்புடி பத்திரமா கிடைச்சது??!

    பென்சில் போட்டோ, குரு வித் கோழி போட்டோ, சோக்கு எல்லாமே நன்னாருக்கு...! இனி நாம அடிக்கடி சந்திப்போம்...அல்லது சந்திக்க முயற்சிப்போம்!! வரட்டா...டாட்டா!!!

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ்வ்வ்வ்வ் வாங்கோ மஞ்சள் பூ மகி வாங்கோ....

      //ஏதோ அதிசயம் நடந்து கமெண்ட் பாக்ஸு ஓபன் ஆகிட்டுது அதிராவ்!! :)))))) ///

      அது என்ன தெரியுமோ? மீ திருப்பதியில் இடது பக்கம் இருக்கும் முருகனுக்கு நேர்த்தி வச்சேன், கொமெண்ட் பொக்ஸ் ஐ திறந்து மகி பதில் போடும்படி செய்து கொடுத்தா, மகி:) 3 தடவை கோயிலை வெளிவீதி அங்கப் பிறதட்டை பண்ணுவா என:) அது நடந்திடுச்சூஊஊஊ:)..

      ///உங்கட படம் (அது சத்தியமா ராதிஅ போல இல்ல்ல்ல்ல்ல்ல) மட்டும் எப்புடி பத்திரமா கிடைச்சது??! ///
      ஹா ஹா ஹா உண்மைதான்:).. இல்ல என்னுடையதும் துலைஞ்சுபோச்சு... இங்கு போட்ட படம், அங்கு வரைந்த உடனேயே கமெராவில் எடுத்தது.

      மிக்க நன்றி மகி, மிக நீண்ட இடைவேளையின் பின் இங்கு பார்த்தது.

      முடியும்போது வாங்கோ.. மிக்க நன்றி மீண்டும்.

      Delete
  26. இந்தியாவிலும் இப்படி நிறைய இடங்களில் நம்மை வரைந்து கொடுக்க ஆட்கள் இருப்பார்கள். இதுவரை ஒரு முறை கூட முயற்சித்தது இல்லை! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

      ஒருதடவை முயற்சித்துப் பாருங்கோவன்.

      மிக்க நன்றி வருகைக்கும் வோட்டுக்கும்.

      Delete
  27. ஓவியத்தைப் பார்த்தேன். ரொம்ப நல்லா வரைந்திருக்கார். அதுவும் கரி பென்சிலைக்கொண்டு ரொம்ப நல்லா ஓவியம் தீட்டியிருக்கார் (நீங்க சொல்றதுபோல கீறுவது இல்லை). இதனைப் பார்க்கும்போது,

    எத்தனையோ ஓவியர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்களில் கொஞ்சம் பேரே, ஓவியத்தை வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். அதிலும் மிக மிகச் சிறிய அளவே புகழ் பெறுகிறார்கள். ரொம்ப ரொம்ப குறைந்த அளவே, நல்லா சம்பாதிக்கிறாங்க. திறமை பொருந்திய ஓவியர்கள் பெரும்பாலும், அவர்கள் மறைந்தபின்புதான் புகழ் எய்துகிறார்கள்.

    டாவின்சி போன்றோர், வாழ்ந்த காலத்தில் அவ்வளவு சம்பாதித்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுடைய ஒவ்வொரு ஓவியமும், அவர் வாழ்ந்தகாலத்தில் மொத்தமாகச் சம்பாதித்ததைவிட பல மடங்கு மதிப்புள்ளதாகிவிட்டது.

    ஐபில் டவரின் இந்தப் பகுதியை (சுவரில் படிகள்போல் இருப்பது, அதில் மக்கள் ஏறுவதை) நான் பார்த்ததில்லை. லுவ்ரி மியூசியம் பார்த்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. மீழ் வருகைக்கு மிக்க நன்றி நெ.த...
      /// (நீங்க சொல்றதுபோல கீறுவது இல்லை). ///

      ஹா ஹா ஹா வரைவதுதான் சரியான தமிழ், ஆனா நாங்கள் வரைதல் எனச் சொல்லாமல் கீறுவது என்றே பேச்சுத்தமிழில் பேசிப் பழகிட்டோம்:).

      ///திறமை பொருந்திய ஓவியர்கள் பெரும்பாலும், அவர்கள் மறைந்தபின்புதான் புகழ் எய்துகிறார்கள்.//
      உண்மைதான்.

      Delete
    2. ///ஐபில் டவரின் இந்தப் பகுதியை (சுவரில் படிகள்போல் இருப்பது, அதில் மக்கள் ஏறுவதை) நான் பார்த்ததில்லை. லுவ்ரி மியூசியம் பார்த்தீர்களா?//

      அது முன் பக்கம் என நினைக்கிறேன்.. அந்தப் படிகளால் இறங்கி வந்துதான், தேம்ஸ் றிவருக்கு வந்து, ஃபெரியில்[ferry) ஏற முடியும்.

      யேஸ் லூவர் மியூசியம்:) அந்த.. சொந்தக் கதை சோகக்கதையைக் கேளுங்கோ.. ரிக்கெட் எடுக்க கியூவில் நின்றே பாதி மயங்கிட்டோம்.. எந்தாப்பெரீய கியூ:)..

      ஒரு மாதிரி உள்ளே போய் நடக்கிறோம் நடக்கிறோம் முடியுதே இல்லை, ரிக்கெட் காசு போனாலும் பறவாயில்லை என திரும்பியிருப்போம், ஆனா மோனா லிசா வைப் பார்த்தே தீரோணும் எனும் வெறியில்:) நட நட என நடந்து முடிவுக்கு போனால்.. ஒரு அறையில் கூட்டம் இடிபடுது.. ஹையோ இங்குதான் அவ இருக்கிறா என உள்ளே போய் பார்க்க எதுவும் தெரியல்ல ஒரே கூட்டம், கையுக்குள்ளால காலுக்குள்ளால எல்லாம் புகுந்து முன்னே போய்ப் பார்த்தால்ல்ல். ஒரு குட்டி ஃபிரேமில் மோனாலிசா:) ...ஙேஙேஙேஙேஙே... இதுக்குத்தானா பாடுபட்டாய் “பிரேமக்குமாரி”:).. எனும் நிலைக்கு ஆளாகிட்டேன்ன்ன்:).. ஹா ஹா ஹா:)..

      மிக்க நன்றி.

      Delete
    3. ஹையோ அது தேம்ஸ் றிவர் என எழுதிட்டேன் பழக்க தோசம்:) அது சென் நதி:).

      Delete
    4. ஆமா பிரிக்க முடியாதது சேர்ந்தே இருப்பது அதிராவும் அவர் குதிப்பேன் என்று பில்டப் காட்டும் தேம்ஸ் நதியும் இது அண்ட சராசரத்துக்கும் தெரியுமே :))

      Delete
    5. ///AngelinFriday, April 28, 2017 4:38:00 pm
      ஆமா பிரிக்க முடியாதது சேர்ந்தே இருப்பது அதிராவும் அவர் குதிப்பேன் என்று பில்டப் காட்டும் தேம்ஸ் நதியும் இது அண்ட சராசரத்துக்கும் தெரியுமே :))//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
    6. நான் மூன்று தடவை லுவ்ரி மியூசியம் போயிருக்கிறேன்.

      காலைல 8.50க்கே போனால்தான், 9.45க்காவது உள்ள நுழையமுடியும். உள்ள நுழைஞ்ச உடனே, வேகவேகமா, முதலில் மோனாலிசா அறைக்குச் சென்றுவிட்டால்தான் சுலபமாகப் பார்த்து படம் எடுத்துக்கொள்ளலாம். அதுக்கு அப்புறம் ஒவ்வொரு அறையா, எல்லா ஓவியங்களையும் பார்க்கலாம். காலைல 9.30லிருந்து மதியம் 3 மணிவரை தொடர்ந்து நடந்து, இன்னும் பல இடங்களைப் பார்க்கமுடியாமல் (கால் வலி அவ்வளவு) திரும்பிவிட்டேன். முதல் முறை சென்றிருந்தபோது, ஈஜிப்ஷியன் மம்மி இருந்த அறையில் உள்ள வாசம் ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜி வந்துவிட்டது.

      அதுசரி... அதைப்பற்றி ஒரு இடுகையையும் காணோமே.. அப்போ படம்லாம் எடுக்கலையா?

      Delete
    7. ஹா ஹா ஹா எங்கட பிரச்சனை என்னவெனில், மியூசியம் பார்ப்பது பிடிக்காது.. முக்கியமா எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.. இது மோனாலிசா பார்க்கோணும் என்றே பல்லைக் கடிச்சு நடந்தேனாக்கும்:)... ஓ நீங்க போகாத நாடே இல்லைப்போல இருக்கே.. ஊக்கேயின் வடபகுதிக்கு வந்ததுண்டோ?:).

      பரிசில் போகாத இடமும் இல்லை, எடுக்காத படங்களும் இல்லை.. தொடரா பதிவு போட நினைப்பேன், பின்னர் விட்டு விடுவேன்.. நெப்போலியனின் சாப்பாட்டுத் தட்டு, படுத்த கட்டில், தலையணை என எப்படி எல்லாமும் படமெடுத்து வந்தேன்.. வக்ஸ் மியூசியம், ஃபிஸ் அக்குவாறியம்.. பார்ப்போம் போடோணும் எல்லாப் படங்களும். மிக்க நன்றி திரும்படியும் வந்தமைக்கு.

      Delete
  28. “ஒருவர், பிறர் தன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறாரோ, தானும் அப்படியேதான் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்திடக்கூடாது” அனைவரும் அவசியம்அறிந்து கொள்ள வேண்டிய குறிப்பு.
    ஒரு சிலர் மிக அருமையாகவே வரைந்துவிடுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஐயா விஜய்பதி வாங்கோ...

      உண்மைதான், தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டும்.

      யேஸ் சிலர் மிக அருமையாக வரைகிறார்கள். ஒருவேளை ரம் எடுத்து வரைந்தால் வரையலாம், இது மிக மிக அவசரமாக வரைவதனால்தான் இப்படி.

      மிக்க நன்றி தேடி வந்து பின்னூட்டம் போட்டமைக்கு.

      Delete
    2. கடவுளே.... 'ரைம்' (Time). நான் புரிந்துகொண்டது, RUMஐ எடுத்துக்கொண்டால் எப்படி நன்றாக வரைய முடியும் என்று. ரொம்பத்தான் குழப்புகிறீர்கள். இதை எப்படி ஏஞ்சலின் பார்க்க மறந்துபோனார்?

      Delete
    3. //ஒருவேளை ரம் எடுத்து வரைந்தால் வரையலாம், இது மிக மிக அவசரமாக வரைவதனால்தான் இப்படி.//

      ஹாங் ஹா ஹ்ஹா :)) தாங்க்ஸு எப்படியோ உங்க கண்ணில் பட்டுச்சே நன்றி :) நெல்லைத்தமிழன் ..நன்றீஸ் ..

      Delete
    4. ஹா ஹா ஹா நெ.த....:) அது நித்திரைத் தூக்கத்தில் ரைப் பண்ணியிருப்பேன் போல:).. அஞ்சுவிடம் ட்ரெயிங் எடுத்திருக்கிறீங்க போல:) இனி என் பாடு ரொம்ப ஷார்ப்பாத்தான் இருக்கோணும் போல:)..

      Delete
    5. Angelin..///ஹாங் ஹா ஹ்ஹா :)) தாங்க்ஸு எப்படியோ உங்க கண்ணில் பட்டுச்சே நன்றி :) நெல்லைத்தமிழன் ..நன்றீஸ் ..////
      ஆவ்வ்வ்வ்வ் பாருங்கோவன் என்னா ஸ்பீட்ல ரன்(இது கரீட்டு:)) பண்ணி வந்திருக்கிறா:).. போஸ்ட் போடும்போதுகூட இவ்ளோ ஸ்பீட்ல வரமாட்டாவே கர்:)நல்ல வேளை தடக்கி விழல்ல:), விழுந்தால் என்னிடம் இன்சூரன்ஸ் உம் இல்ல சாமீஈஈஈஈஈ:).. நேக்கு டமில்ல டி ஆக்கும்..க்கும்..க்கும்..:).

      Delete
  29. அத்தனை படங்களும் அருமை

    ReplyDelete
  30. பதிவும் அருமை.

    அதிரா, கோபு அண்ணனுக்கு சரியான தங்கச்சி நீங்கதான்.
    அண்ணன மாதிரியே அனுமார் வால் மாதிரி பின்னூட்டம் வாங்கப் படிச்சிருக்கீங்க.

    எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க.

    உங்க தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கும் ஸ்பெஷல் வாழ்த்து.

    வாழ்க வளமுடன்
    ஜேமாமி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜே மாமி வாங்கோ.. ஹையோ இது எனக்கு இன்ப அதிர்ச்சி.. இப்படி மீண்டும் வருவிங்களென நான் எதிர்பார்க்கவில்லை.

      ///அதிரா, கோபு அண்ணனுக்கு சரியான தங்கச்சி நீங்கதான்.
      அண்ணன மாதிரியே அனுமார் வால் மாதிரி பின்னூட்டம் வாங்கப் படிச்சிருக்கீங்க.//
      ஹா ஹா ஹா பின்னூட்டம் மட்டுமில்லை, அவரோடு ஒட்டியிருந்து அப்பப்ப அவரை திட்டி + தட்டியும் கொடுப்போம்:).

      //எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க. ///
      ஹா ஹா ஹா உங்க பேத்திக் குட்டிகள் இருவரும் வளரட்டும் சொல்லித்தாறேன்:) இப்போ உங்களுக்கு ஏது நேரம்.. படத்தில் இரு குட்டீஸும் ரொம்ப அழகா, சுட்டியா இருக்கிறார்கள்.

      //உங்க தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கும் ஸ்பெஷல் வாழ்த்து.//
      மிக்க நன்றி ஜே மாமி.. பிடிச்சதனால்தானே 2008 இலிருந்து என்னை மறக்காமல் இருக்கிறீங்க.

      மிக்க மிக்க நன்றி ஜே மாமி.

      Delete
  31. //வாங்கோ ஜே மாமி வாங்கோ.. ஹையோ இது எனக்கு இன்ப அதிர்ச்சி.. இப்படி மீண்டும் வருவிங்களென நான் எதிர்பார்க்கவில்லை.//

    அருமையா பதிவு போடறீங்க அதிரா.
    கண்டிப்பாக முடிந்த போதெல்லாம் வருகிறேன்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கு மிக்க நன்றி ஜே மாமி.

      Delete
  32. நல்லாத்தான் வரைஞ்சிருக்கார்..

    பூசானந்தா சூப்பர்..பொன்மொழி.. ..ஜோக்கும் நல்லாருக்கு...மொபைல்...ஸோ ரொம்வ மேல போய் பார்த்து அடிக்க முடியல....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா, துளசி அண்ணன்.. மிக்க நன்றி, மொபைலில் அதிகம் ரைப் பண்ண முடியாதுதான். இருப்பினும் வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  33. பென்ஸில் தத்துவம் படங்கள் பதிவு..... பின்னூட்டங்கள்....ரிப்ளைபின்னுட்டங்கள் எல்லாமே அழகு..அமர்க்களம்...

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.