ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இந்த இடம்தான் இப்போ நமக்கு சேஃப்:).. கூண்டுக்குள் இருந்திட்டால், கல்லெறிகளில் இருந்து தப்பிடலாம்:)).. வரும் கல்லெல்லாம் கிளியார் மேல படட்டும்..பின்பு பிரியாணி ரெடி ஆக்கிடலாம்ம்.. அவ்வ்வ்வ் ஒரு கல்லில ரெண்டு மாங்காய் என்பது இதுவாத்தான் இருக்கும்போல:))
நீங்களும் எல்லோரும் பாவம்தான்:), ஆனாலும் என்ன பண்ண முடியும்? நட்பாகிட்டால் ஒண்ணும் பண்ண முடியாதே:).. நான் போடும் படங்களை எல்லாம் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திட முடியாதே:) பிக்கோஸ் நட்பாகிட்டீங்க:) அப்போ கொமெண்ட்ஸ்சும் போட்டுத்தானே ஆகோணும்:)).. அது காலைச் சுத்திய பாம்பு[என்னைச் சொன்னேன்:)] கடிக்கும்வரை விடாதாமே:)).. ச்சோஓஒ அதிராவின் தொல்லைகள் இன்னும் டொரரும்:)).. எதுக்கும் நீங்க தியானம், யோகா, இப்படிப்பண்ணிக் கோபத்தை, எரிச்சலை எப்படி அடக்குவதெனப் பயிற்சி எடுத்துக் கொண்டு வாங்கோ பிளீஸ்ஸ்:)).. இல்லை எனில் என் போஸ்ட் பார்த்து பிபி ஏறி மயக்கம் கூட வரலாம்:) அதுக்கெல்லாம் ஜத்தியமா மீ பொறுப்பல்ல:).
வழமையை விட இம்முறை சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஈடு கொடுக்க முடியல்ல, அதனாலேயே நடக்க நடக்க படங்கள் எடுத்து உங்களுக்குத் தொல்லை தருகிறேன்:), இருப்பினும் இது எங்கும் பார்க், பூங்காவில் எடுக்கப்படவில்லை.. எல்லாம் நம் ஊர்ப் பூக்கள் அதனால எனக்கும் பெருமைதானே?:).
நடக்கலாம் வாங்கோ, இம்முறை மற்றப்பக்க ஆற்றங்கரை:).. இந்த பெஞ்சில இருந்து கொண்டே, அதிரா வீட்டு அல்பம் பார்ப்போமா? நல்லவேளை இந்த பெஞ்சில் மட்டும் பூக்கள் இல்லை:).
ஆற்றருகே பற்றைக்குள் ரோஜா:).. பார்த்ததும் கவிதை வருதோ?:)..
“முட்கள் பற்றைகளின் நடுவேதான்
அழகான ரோஜா மலர்கிறது..
அதுபோலவேதான் வாழ்க்கையிலும்
பல துன்பங்களுக்கு மத்தியில்தான் இன்பம் மலரும்”
இது காட்டு ராஜா.. சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே:) ரோஜா.. நடுவில் இருக்கும் பூவில் தேனிப்பிள்ளை தேன் குடிக்கிறாராராம்”..உற்றுப் பாருங்கோ தெரியும்.. தேனியைச் சொன்னேன்.. இதைப்பற்றி மட்டுமே ஆராட்சி பண்ணி ஒரு பதிவு போட்டிருக்கிறேன் முன்பு.. நீங்கள் எல்லாம் கட்டாயம் பார்க்கோணும் இல்லை எனில் மூக்கிலும் காதிலும் நுளம்பு கடிக்கும் ஜொள்ளிட்டேன்.. அந்நேரம் அஞ்சுவை எனக்குத் தெரியாது ஹா ஹா ஹா:))
கீழே.. பாருங்கோ பாருங்கோ, இம்முறை நிறையப்பேர் நம்மை விட்டுப் போயிருக்கிறார்கள் எனப் புரியுதோ?... நிறைய வைக்கப்பட்டிருந்தன.. இவை ஒரு நாளில் எடுத்த படங்கள்.. ஒரு மைல் நீளத்துக்கு நடக்க நடக்க எடுத்தவை.. இதில கவனிச்சேன், சிலர் பூச்சாடிகள் கொண்டு வந்து அருகில் வைத்திருக்கிறார்கள்.. சிலர் பிளாஸ்டிக் பூக்கள் வச்சிருக்கினம்.. நாம் நடக்கும்போதே ஒருவர், ஆணி சுட்டியல் கொண்டு வந்து அழகாகக் கொழுவி [ஹங்] வச்சிட்டுப் போனார்...
இப்போ இந்த பெஞ் ஐயும் பூக்களையும் கண்டால், நெல்லைத்தமிழன் அண்ணாவின்[ஹா ஹா ஹா இருங்கோ சிரிச்சுப்போட்டுத் தொடர்கிறேன்:)] நினைவு வந்திடுது.. அவருக்குத்தான் இதை அறிவதில் ஆர்வம் அதிகம் என்பதால்:).
ஆவ்வ்வ்வ் இம்முறையும் பாதிதான் தெரியுதே:), மற்றப்பாதியைத்தேடப் போகினம்:) நான் Car இன் Sunroof ஐச் சொன்னேனாக்கும்:)) ஹா ஹா ஹா:)
இது ஒருவகைப் பூத்தான் நிலத்திலே படர்ந்திருக்கு, ஆனா பூப்போல மென்மை இல்லை, இலைபோல சரியான ஸ்ரோங்.. நீண்ட நாட்கள் உயிர் வாழுது... நம் ஊர் வாடாமல்லிகையைப்போல எனவும் சொல்லலாம், ஆனா ரோஜாவைப்போல இருக்கு.
இதைப் பார்த்தால் எள்ளுப்பூக்கள் போலவெல்லோ இருக்குது, இங்கு காடு கரம்பை எல்லாம் பூத்துக் குலுங்குது.. வெள்ளையிலும் உண்டு.
வெள்ளைப்பூக்களும் கொள்ளை அழகு... ஒட்டு ரோஜா எனக் கேள்விப்பட்டதுண்டோ?.. ஒரு ரோஜாவில் இன்னொரு கலரை ஒட்டிப் பூக்கப் பண்ணுவினம், அப்படித்தான் போலும், மஞ்சளில் வெள்ளை ரோஜா.. அதிராவின் மனம் போலவேதேன்ன்ன்ன்:) ஹையோ இப்போ எதுக்கு கலைக்கிறீங்க?:) இன்னும் படங்கள் இருக்கு வெயிட்.. பிளீஸ்ஸ் உங்கட அங்கிறியைக் கொஞ்சம் கொன்றோல் பண்ணுங்கோ:))
இதுவும் ஆற்றங் கரையில்தான் பார்த்தேன், கூட்டமாக மைனாக்களோ இல்லை புலுனி என ஒரு இனம் உண்டெல்லோ.. அவர்களா தெரியவில்லை, பார்க்க ஆசையாக இருந்துது, சன் பாத் எடுத்தார்கள், நான் அவர்களை நோக்கி நடக்க நடக்க, அவர்களும் நகர்ந்து நகர்ந்து வேலி வரை போயிட்டினம்.. இனியும் அருகில் போனால் பறந்திடுவினம் என, யூம் பண்ணி எடுத்தேன் அதனால படம் தெளிவில்லை... இப்படிப் பறவைகள் பார்த்தால் கோமதி அக்காவின் நினைவு வந்திடுது, அவவாலதான் இப்படிப் பறவைக் கூட்டத்தைப் படமெடுக்கோணும் எனும் ஆவல் வந்துது...
=======================இண்டவல்ல்ல்ல்=====================
ஹையோ இப்போ முழுசாத் தெரியுதே:) நான் கண்ணாடியைச் சொன்னேன்:)).. ஆனா ஏன் எல்லோரும் சரியான குண்டாகத் தெரிகிறார்கள்?:).. ஒருவேளை பூதக் கண்ணாடியாக இருக்குமோ அவ்வ்வ்வ்வ்வ்:))
சரி சரி கூலா ஒரு மங்கோ ஊஸ் குடிச்சிட்டு வாங்கோ தென்பாத் தொடரலாம், இன்னும் படங்கள் இருக்குதெல்லோ:))
=======================================================
இவை வெவ்வேறு மலர்கள், ஆனா இரண்டுமே ஃபியூஸியாவா தெரியல்ல, ஸ்ரீராம் ஒருதடவை இப்படம் போட்டிருந்தார் ஞாயிறு ஒளி மழையில்:))
ஆங்ங் இவை கொடியிலே மல்லிகைப்பூ.... நான்கு இதழில் மட்டுமே ஒரு பூ.. பார்த்திருக்கிறீங்களோ?
இது என்ன தெரியுதோ? இங்கு பல இடங்களில் மதில்கள் கிட்டத்தட்ட 1000 வருடம் பழைமையானவைகூட இருக்கு, அவற்றில் வெடிப்புக்கள் இருக்கும், வெடிப்பில் “தானா முளைச்ச மரம்.. தனியாக நின்ற மரம்... ஏன் பூத்ததென்கிறீங்களோ?”:)
இது யும்மா:)) காட்டுப் பகுதிலும் ஒரே மலர்கள்தான்.. எனக்கே பார்த்து அலுத்துப் போச்சு.. உங்களுக்கு எப்படியோ?:)) ஸ்ஸ்ஸ் ரெம்ம்ம்ப ரயேட் ஆகிட்டேன் வில:)க்கம் ஜொல்லி:))
ஊசி இணைப்பு:-
நிஜத்தைச் சொல்லும் இணைப்பு:
===========================__()__=========================