எனக்கொரு டவுட்டூஊஊஊஉ என்னதான் கம்பராமாயணம் படிச்சு, கரைச்சுக் குடிச்சாலும் (என்னைச் சொன்னேன்:)), ராமர் கடசியில எப்படி இறந்தார் என டவுட்டாகவே இருக்கெனக்கு:).. இந்த டவுட் உங்களில் ஆருக்கும் வந்திருக்காதே:).. ஏனெண்டால் அதிராதான், என்னோட குட்டிக் கிட்னியை வச்சு இப்படி எல்லாம் ஓசிப்பேன்:)), உங்களுக்கு இதுக்கெல்லாம் எங்கின நேரமிருக்கப் போகுது:)).
சரி சரி முறைக்கக்கூடாது எனக்குப் பதில் வேணும்:), அதுக்காக இப்ப என்ன கம்பரைக் கூப்பிடவா முடியும், நாங்கதான் ஒரு முடிவுக்கு வரோணும்:)) ஹா ஹா ஹா.
பொன்னியிலன் செல்வன் படிச்சிட்டீங்களோ என எல்லோரும் கேய்க்கினம் கர்ர்ர்ர்ர்:)) ஆனா அதைவிட முக்கியம், ராமர் எப்படி இறந்தார் என்பதுதான்:), அதிராவுக்கு நட்பாக இருப்போருக்கு ராமாயணம் ஒழுங்காத் தெரியாதெனில், அதிராக்கு வெய்க்கம் வெய்க்கமா வருமெல்லோ:)).. ஹையோ இப்ப கீழ குனிஞ்சு என்ன தேடுறீங்கள்?... அதெல்லாம் எடுக்க வாணாம்ம்ம் மீ பாவம் இப்போ கம்பர் அங்கிளும் இல்லை [உடனே இப்ப ஒராள் கொடி தூக்குவா:), ஆ அவர் உங்களுக்கு அங்கிளோ, எனக்கு கொள்ளுத்தாத்தா என கர்ர்ர்ர்ர்ர்:)].
இந்தக்காலத்தில 90 வயசாக்களையும் அன்ரி, அங்கிள் எனக் கூப்பிட்டால்தான் சந்தோசமாகக் கதைக்கினம், இல்லை எனில் முறைக்கினம், அதால நான் எல்லோரையும் அங்கிள் என்றிடுவன், அடுத்தவர்களுக்கு எது சந்தோசத்தைக் கொடுக்குதோ அதைத்தானே நாம் செய்யோணும்.
ஹையோ ரெயின் ட்ரக் மாறிப்போகுதே:).. எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈ... ஆஆ கம்பர் அங்கிள் இருந்தால் விளக்கம் சொல்லுவார், இப்போ ஆரிடம் போய்க் கேய்ப்பேன், எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈ:), ராமபிரான் எப்படிக் காலமானார்???.. கவ்? கவ்? கவ்?:)...
அது கொலையா, தற்கொலையா? .. தற்கொலை எனில் அது தப்புத்தானே?, இதை , அதிராவைத்தவிர ஆருமே தட்டிக் கேய்க்க மாட்டீங்களோ?:)).
===========_____இடைவேளை_____===========
யார் யாரெல்லாம் கல்லெடுக்கப் போகினமோ தெரியேல்லையே கோவில்பட்டி முருகா!!!, எதுக்கும் ஒளிச்சிருந்துகொண்டே குரலை மட்டும் குடுப்போம்.. பூஸோ கொக்கோ:).. தண்ணியில் மீன்கள் மாட்டும் ஆனால் பூஸ் மாட்டுமோ ஹா ஹா ஹா
சரி இப்போ கதையைச் சொல்றன், முடிவில ஒரு முடிவுக்கு வருவம்:).
ராமபிரானுக்கு ஒரு தம்பி, அதாவது அஞ்சுவுக்கு, நான்(அதிரா) ஒரு தங்கை இருப்பதைப்போல[ ஹா ஹா ஹா கொஞ்ச நேரம் நில்லுங்கோ, சிரிச்சு உருண்டு பிரண்டிட்டு வாறேன்:), இப்படிச் சந்தடி சாக்கில சொல்லிடோணும், இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் அமையுதோ இல்லையோ ஆரு கண்டா:) ஹா ஹா ஹா], லக்ஸுமனன் இருந்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிவதில்லையாம் [ஆரு கண்டா, கம்பர் அங்கிள் சொல்லியிருக்கிறார், சரி இருக்கட்டும்:)]. அப்போ ஒரு முனிவர் ராமரைச் சந்திக்கப்போகிறேன் என அவர்களின் கோட்டைக்கு வந்தாராம், வந்த முனிவர் சொன்னாராம், ராமரிடம், நான் உன்னோடு தனியே பேச வேண்டும், பேசும்போது யாரும் உள்ளே வரவும் கூடாது, பேசுவதை ஒட்டுக் கேட்கவும் கூடாது, அப்படி இதை மீறி ஆராவது செய்தால், அவர்களைக் கொல்ல வேண்டும், என.
இதற்கு ராமர் சம்மதித்து, தன் தம்பி, லட்சுமனனைக் கூப்பிட்டு, இதைச் சொல்லி, இந்தப் பொறுப்பை நீதான் ஏற்க வேண்டும் , யாரும் உள்ளே வராதபடி காவல் காத்துக்கொள் என, தம்பியும் அதற்குச் சம்மதித்து, அறைக்கு வெளியே காவல் காத்தாராம்.
உள்ளே வந்த முனிவர், கதவைச் சாத்தியதும், தன் வேசத்தைக் கலைத்தாராம், அவர் வேறு யாருமில்லை, எமன் அங்கிளாம்[கடவுளே பேரைச் சொல்லவே பயம்மாக் கிடக்கு], அப்போ அவர் ராமரிடம் சொன்னாராம், நீங்கள் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவிட்டீங்கள்[ இந்தக் காலத்தில 100 வயசைத் தொட்டாலே அவார்ட் எல்லாம் குடுக்கினம் ஹா ஹா ஹா இது பத்தாயிரமாமே], இனி உங்கள் காலம் முடிஞ்சுபோச்சு, நீங்கள் என்னோடு வரவேண்டும் என, இதைக் கேட்ட ராமர் ஷாக்க்க்க்க் ஆகி அமர்ந்திருந்தாராம், ஏனெனில் அவர்தான் ஆட்சியில் இருந்தார், அப்போ மனைவி பிள்ளைகள் காட்டிலாம்....
எனக்குப் பாருங்கோ இந்த இடத்தில கெட்ட கோபம்தான் வருது, மனைவி பிள்ளைகளைக் காட்டில விட்டுப்போட்டு, இவர் தம்பியோடு அரசாழ்வதானால், எதுக்கு காதலிச்சுத் திருமணம் பண்ணினார்ர்?.. இக்காலத்தில எனில் கண்டபடி கிளவி.. சே..சே பயத்தில டங்கு ஸ்லிப்பாகுதே:), அது சரித்திரக் கதைகள் எண்டாலே எனக்கு காண்ட்ஸும் ஓடாது லெக்ஸ்சும் ஆடாது பாருங்கோ:)..
சரி விட்ட இடத்துக்கு வாறன், கேள்வி கேட்பினம்... இதை எல்லாம் அறியும்போது, அக்காலத்தில நம் கடவுள்கள் பண்ணியதைத்தானே, இப்போ சில மக்கள் பண்ணுகிறார்கள், ஆனா இப்போ தவறு என்கிறோம்.. இது எந்த வகையில் ஞாயம்... எனக்குத் தேவை.. நீதி, நியாயம், கடமை நேர்மை எருமை:)).. ஆவ்வ்வ்வ் ஒரு ப்ளோவில வந்திட்டுத்து பெரிய மனசு பண்ணி விட்டிடுங்கோ:).
அந்த நேரம் பார்த்து இன்னொரு முனிவர்[துருவாச முனிவர்] அங்கு வந்தாராம், வந்தவர், லட்சுமனனிடம், ராமரைச் சந்திக்கோணும் எனச் சொன்னாராம், அப்போ லட்சுமணன் எவ்வளவு சொல்லியும் அடம்பிடித்தாராம் முனிவர், அவர் மிகவும் கோபக்காரராம், சந்திக்க விடவில்லை எனில் அயோத்தி அழியோணும் எனச் சாபம் விட்டு விடுவேன் என மிரட்டினாராம், அதனால் பயந்துபோன லட்சுமனன், வேறுவழியின்றி, அண்ணாவைக் கூப்பிடுவமே என, கதவைத்திறந்து உள்ளே போனாராம், விதி விழையாடிவிட்டது... சொன்ன வாக்கை மீறி உள்ளே போய் விட்டதனால்,.
ராமர், முனிவராக வந்த எமதர்மருக்கு கொடுத்த வாக்கின்படி, தம்பியைக் கொல்ல வேணுமெல்லோ, இப்போ என்ன பண்ணுவது எப்படி அப்படிச் செய்ய முடியும், அதனால மனமுடைந்த ராமர், தம் ராஜ்ஜியத்தில் இருக்கும் முனிவரிடம் ஓடிச் சென்று ஆலோசனை கேட்ட இடத்தில, அவர் சொன்னாராம், உன்னை விட்டு விலகிச் செல்லச் சொல் லட்சுமனனிடம்.. அதுவே ஒருவித மரண தண்டனைதான் என...
ராமனும் வேறு வழியின்றி, தம்பியிடம் சென்று, இனிமேல் என் முகத்தில் முழிக்காதே, என்னை விட்டு விலகிச் சென்றுவிடு எனக் கூறினாராம், ஒரு கணமேனும் ராமனைப் பிரியாத லட்சுமணன், இந்த வார்த்தையைக் கேட்டதும், ஓடிப்போய் அயோத்தியில் இருக்கும் "சரயு நதியில்" குதிச்சு, மறைந்திட்டாராம்.
இதை அறிஞ்ச ராமர், உடனே தன் மகன்களை அயோத்திக்கு அழைத்து,
ஆனா, இது தற்கொலைக்குச் சமனாகிடும் என்பதால, கம்பன் அங்கிள் இதை நம்மிடம் மறைத்து, கதையை முன்கூட்டியே முடிச்சுப் போட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போ சொல்லுங்கோ, இந்த மரணத்தை எப்பூடி அழைப்பது?..
இன்னொரு விசயம் பாருங்கோ, சீதாப்பிராட்டி மறைஞ்சபோதுகூட, அசையாத ராமர், தன் தம்பியின் பிரிவு தாங்காமல் , தன்னை மாய்த்திட்டார்... எவ்ளோ விசயம் இந்த ராமாயணத்தில மறைஞ்சிருக்குது, இதெல்லாம் அதிரா கண்ணுக்குத்தான் தெரியுமாக்கும்:)...
நேக்கு.. நீதி வேணும், நியாயம் வேணும்.. நெஞ்சு பொறுக்குதில்லையே... ஆஆஆ ரெம்ம்ம்ப ஹொட்டா இருக்கு, ஒரு கப் ஐஸ் இல்லாத மோர் தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. அந்தர ஆபத்துக்கு இங்கின என் செக்:) ஐயும் காணம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)..
நீங்கள் யாராவது சரயு நதி பார்த்ததுண்டோ?.. எனக்கு இப்போ பார்க்கும் ஆவல் அதிகமாகிவிட்டது
**************************************************
ஊசிக்குறிப்பு:
எய்தவர் இருக்க அம்பை நோகப்பிடாதாம்:)), அதனால என் எழுத்தில என்ன தப்பிருந்தாலும் என்னோடு சண்டைக்கு வரக்கூடாதாக்கும் ஜொள்ளிட்டேன், ஏனெனில் என்னை இப்போஸ்ட் எழுதத் தூண்டியதே, கீழே இருக்கும் இந்த மீம்ஸ் தான்:)))
|
Tweet |
|
|||