நல்வரவு_()_


Saturday 29 August 2020

 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு💗 

எங்கட பிளாக்பெரீஸ்🍒🍒

பிறந்தநாள் அன்றே போஸ்ட் ரெடி பண்ணினேன், ஆனால் தவிர்க்க முடியாத நிகழ்வால், போட முடியாமல் போய் விட்டது, அதனால தாமதமாக இன்று போஸ்ட்டைப் போடுகிறேன். 

Sunday 23 August 2020

வி சது வாழ்த்துக்களோடு🙏, பயற்றம் பணியாரம்

ல்லோரும் நலமே இருக்கிறீங்கள் என்பது தெரியும், மீயும்தேன்:)... எங்களுக்கு இங்கு ஸ்கூல் தொடங்கி விட்டது, அதனால நானும் பழையபடி உழைக்க ஆரம்பித்து விட்டேனாக்கும்:), கொரோனா நேரம் நல்ல ஒய்யாரமாக ரெஸ்ட் எடுத்தமையால, இப்போ ஒரு வேலை செய்தால் இன்னொரு வேலை செய்ய மனம் இடம் கொடுக்க மறுக்குது கர்ர்:)).. அதனால புளொக் பக்கம் வருவது குறையப் பார்க்குது, இருப்பினும் முடிஞ்சவரை வரவே முயற்சிக்கிறேன்.

எனக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காதென்பது உங்களுக்குத் தெரியுமெல்லோ?:) அதனால ஸ்ரெயிட்டா களம் குதிப்போமா?:))..

எப்படியாவது ஒரு போஸ்ட் போட்டிட வேணும் என்பதாலயே, சமையல் குறிப்பைப் போடுகிறேன்.. இது ஈசி எல்லோ:)), நிறைய எழுத அலுப்பாக இருக்குது:)..

இலங்கைப் பயற்றம் பணியாரம்...
ஆஆஆஆஆ எந்தாப் பெரீஈஈஈசு.. நான் அப்பளத்தைச் சொன்னேன்:)...

இதற்கு தேவையானவை[உங்களுக்குப் பிடித்த ஒரு கப் ஐ எடுத்துக் கொள்ளுங்கோ அளவுக்கு:)]
*வறுத்து அரைச்சு அரித்தெடுத்த பயற்றம் மா - 1 கப்
*வறுத்த அரிசிமா - 2 கப்புக்கு கொஞ்சம் குறைவாக எடுக்கோணும்..
*சக்கரை - முக்கால் கப்
*சீனி[சுகர்]- முக்கால் கப்
*உடனே திருவி, நன்கு வறுத்த தேங்காப்பூ - முக்கால் கப்
*இதனோடு கொஞ்சம் வாசனைக்காகவும், கொஞ்சம் காரத்தன்மைக்காகவும்.. ஒரு முக்கால் தேக்கரண்டு வறுத்து அரைச்ச மிளகு +சீரகம்[சிலருக்கு இவ்வாசம் பிடிக்காதெனில்.. தவிர்க்கலாம்]

இவ்வளவும்தான் முடிஞ்சுபோச்ச்ச்ச்ச்:)).. இத்தனை பொருட்களையும் ரெடி பண்ணுவதுதான் இதில் வேலை.. இனி பெரிசாப் புதுசா ஏதுமில்லை...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இடைவேளை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இடைவேளையில குண்டுப்பிள்ளையாரை [சே சே டங்கு ஸ்லிப்பாகுதே அவருக்குக் கோள்வம்:) வந்திடப்போகுதே வைரவா:))].. குட்டிப் பிள்ளையாரை எனச் சொல்ல வந்தேனாக்கும்:)) வணங்கிக் கொண்டு தொடர்வோமோ?:))

வழமையாக பூங் கொத்து வாங்கி வைத்திருப்போமெல்லோ ஹோலில்.. முன்பு படங்கள் போட்டேனெல்லோ... அது எப்பவும் வாங்குவோம், ஆனா கொரோனா ஆரம்பிச்சதிலிருந்து வாங்குவதில்லை, அதனால சதுர்த்திக்கு பூ இல்லையே எனக் கவலைப்பட்டபடி.. ச்சும்மா வெளியே எட்டிப் பார்த்தேனா, என் ஊசி மல்லிகை பூத்திருந்தது[கொஞ்சமாக], அப்போ தான் நினைச்சேன் நம் கார்டின் மலர்கள் இருக்கக் கவலை எதுக்கு என.. இப்போ பூத்திருக்கும் மலர்களைப் பிடுங்கி வந்து, பிள்ளையாரைக் குளிர்விச்சேனாக்கும்...
இம்முறை நான் கற்கண்டுப் புக்கை, கடலைச் சுண்டல், பருப்புவடைதான் அவருக்குக் கொடுத்தேன், கொழுக்கட்டை வேண்டாம்.. கோமதி அக்காவும் நெல்லைத்தமிழனும் தருவார்கள் எனச் சொல்லிட்டார்:))
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஓகே ஓகே பிள்ளையாரிடம் நேர்த்தி வச்சது போதும்:)).. வாங்கோ கிச்சினுக்குள் தொடர்வோம்:))
மேலே சொன்ன அனைத்தையும் ஒன்றாகக் கொட்டிக் கலக்கவும்...
கொஞ்சம் வென்நீரை மெதுவாக தெளிச்சால் போதும், சகரை, சீனி, தேங்காய்ப்பூ எல்லாம் சேர்ந்து இளகி விடும்... இப்படி குழைத்து எடுத்துக் கொண்டு....

உங்களுக்கு விரும்பிய சைஸ் இல் உருண்டையாக உருட்டவும்.. உருட்டும்போது, ஏனோ தானோ என உருட்டாமல், அதிராவைப்போல நன்கு அழுத்தி, இறுக்கமான உருண்டையாக உருட்டோணுமாக்கும்.. அப்போதான் உடையாமல் வரும்..

உருட்டிய உருண்டைகளை, நீண்ட நேரம் வைத்திருக்காமல் பொரிப்பது நல்லது... அதற்கு பச்சை கோதுமை மாவை, கொஞ்சம் கெட்டியாகக் குழைத்தெடுத்து... அதில் உருண்டையை ஒவ்வொன்றாக தோய்த்து எடுத்து, போண்டா பொரிப்பதைப்போல பொரித்தெடுக்கவும்...

இந்தாங்கோ ஒராளுக்கு ஒன்றுதான் தருவேன்.. பந்திக்கு முந்தோணும்:))

இது ஸ்கொட்டிஸ் குணுக்காக்கும்:)).. நானே செஞ்சது:), அஞ்சு முருங்கை இலை போடவில்லையாக்கும்.. மீ போட்டனே.. என்னா சுசி:) என்னா சுசி:)).. ரெசிப்பி இங்கே

ஊசிக்குறிப்பு 

ஊசி இணைப்பு
💢💢💢💢💢💢💢💢💢💢