நல்வரவு_()_


Showing posts with label நான் ரசித்த கவிதைகள். Show all posts
Showing posts with label நான் ரசித்த கவிதைகள். Show all posts

Thursday, 1 April 2010

ஜலீலா, ஸாதிகா அக்காஸ்`க்கு எசப்பாட்டு!!!




எப்போது விடியும்?..
துபாய் நாட்டினிலே..
வானத்து நிலவொளியில்
நள்ளிரவில் துணையின்றி
கார்களின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளைப் பார்த்தபடி
எங்கோ கேட்கும் ஏதோ
ஒலிகளை உணர்ந்தபடி...

தெரு விளக்குகளின்
பிரகாசத்தை ரசித்தபடி
சுத்தமான அகலத் தெருகளில்
நிமிர்ந்த நடையுடனும்
நேரான பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்..

விலைமதிப்பான பொருட்களுடனும்
விலைமதிப்பற்ற பெண்மையுடனும்
சின்ன ஒரு சீண்டலுக்கும்

சிக்காமல் வீடு திரும்பும்போது
இதயம் ஏங்கியது எப்போது விடியும்
என் தேசமும் இப்படியென்று????!!!

(எசப்பாட்டு எப்பூடி? ஸாதிகா அக்கா கண்ணை மூடுங்கோ..., மக்கள்ஸ்!! இது சொந்த “ரீ” அல்ல...:)).



இனிப்பு
யாருக்காவது வேலையில்
பிரமோஷன் கிடைத்தால்
இனிப்பை வழங்குவார்கள்

இனிப்பை எடுத்துக்கொண்டு நீ
சிரிப்பை வழங்குவாய்
வாங்கியதை திருப்பித் தருவதில்
உனக்கு நிகர் நீயே....

***** ***** ***** *****

காதல் என்பது???
காதலிக்கும்போது
புனிதமாய்த் தோன்றியது
தோல்வியானதும்
துரோகமாய்த் தோன்றியது
வாழ்வு புரிந்ததும்
விழையாட்டாய்த் தோன்றியது
அடுத்தவனின் காதல்
மடத்தனமாய்த் தோன்றியது
பிள்ளையின் காதல்
வெறுப்பை ஊட்டியது
அப்படியென்றால்
காதல் என்பது??


---------------------------------------------------------------------------------------------------

பூந்தோட்டத்திலே பூஸார்... ரொம்ப அழகு இல்ல?:)... இது அன்பு அம்முலு பூஸாருக்காக அனுப்பியது...

---------------------------------------------------------------------------------------------------

இது அன்புச் ஸாதிகா அக்கா, அதிராவின் பீலிங்ஸைப்போக்க அனுப்பிய மருந்து சே..சே.. பூஸ் பிக்ஸர்...
நாளை முதல் குடிக்க மாட்டேன்... இது சத்தியம் “கவிசிவா”(கவிசிவாவின் புளொக் பதிவு பார்த்ததன் எஃபெக்ட்:))







இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்
நினைத்துவாழ ஒன்று....
மறந்து வாழ ஒன்று....
*** *** *** *** *** *** *** *** *** ***** *** *** ***

பின் இணைப்பு:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஈஸ்ரர் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் "Happy Easter" சொல்கிறோம் எங்கட குண்டர் “மொப்பி” அண்ட் அதிரா...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“பேசுவதற்கு முன் ஒருமுறை யோசியுங்கள்
எழுதுவதற்கு முன் இருமுறை யோசியுங்கள்”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, 13 January 2010

நீயும் என்னைக் காதலித்தாயா??...

மெளன பூகம்பம்




தாடியையும் சோகத்தையும்
சரி விகிதத்தில்
வளர்த்துக்கொண்டு
வாழ்பவன் அவன்,
அவளின் ஞாபகங்களே
அவனுக்கு சுவாசம்!

ன்னிரண்டு பாலைவன
வருடங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க
நேருகிறது எங்கெனில்......
ஒரு ரயில் நிலையத்தில்

ப்போதெனில்.....
ஒரு நள்ளிரவில்
எதிரெதிர் திசையில்
செல்லும் ரயில்கள்
இளைப்பாறிக்கொள்ளும்
அந்த இடைவெளியில்

யில்களின் எதிரெதிர்
பெட்டிகளில் பழைய
கண்கள் நான்கு
பார்த்துக்கொள்கின்றன
அப்பொழுது - மனதில்
எத்தனை மெளன பூகம்பம்!!!

ன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக் காணாமல்
போட்டுவிட்டன கண்கள்....
நீதானா?.. இல்லை,
வேறொருவன் கண்களால்
நான் பார்க்கின்றேனா?
மனதின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு பிரவாகம்

தயத்தின் ஆழத்தில் கிடந்த
உன்முகம்-- மிதந்து மிதந்து
மேலே வருகிறது....
ஓ... வருஷங்கள்
எத்தனையோ
கழிந்த பிறகும்
என் மார்பு தடவும்
அதே பார்வை.. அதே நீ.....

ன் பழையவளே!!!
என் கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே....
உன் நினைவுகளில்
நான் எத்தனையாவதாக
இருக்கிறேன்?.. அறிவாயா?
என் மீசைக்கும்
என் காதலுக்கும்
ஒரே வயதென்று அறிவாயா?
உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரைகூடத்
தோற்றுப்போனதே....

ஓ... நீ மாறியிருக்கிறாய்..
உன் புருவ அடர்த்தி
கொஞ்சம் குறைந்திருக்கிறது
உன் சிகப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன் இதழ்களில் மட்டும்
அதே பழைய பழச்சிவப்பு
இப்போதும் நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?
உன் நினைவுகள் - உன்
கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம் - ஆனால்
என் நினைவுகள்
உன்னைப்போலவே
விழித்திருக்கின்றன

... இந்த ரயில் வெளிச்சம்
நீ அழுவதாய் எனக்கு
அடையாளம் காட்டுகிறது
வேண்டாம்!!!!!
விழியில்ஒழுகும் வெந்நீரால்
மடியில் உறங்கும் உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!!!

தோ விசில் சத்தம் கேட்கிறது..
நம்மில் ஒரு வண்டி
நகரப்போகிறது
போய்வருகிறேன் அல்லது
போய் வா....!!!

விதியை விடவும்
நான் ரயிலை
நம்புகிறேன் - அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்
"நீயும் என்னைக் காதலித்தாயா???"


ரெயின் போய் விட்டது..



தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.. நான்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்...(ரெயின் போய் விட்டது..

~~~~~~~~ ~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~ ~~~~~~~~~~ ~~~~~~~~~



ஒகே ஓகே நான் சொல்கிறேன்...


அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..


இது சிலருக்கு மட்டும்:):)


இனிய பொங்கலுக்கு ~அடுத்த தின~ பொங்கல் வாழ்த்துக்கள்.

Monday, 14 December 2009

படித்ததில் பிடித்த கவிதைகள்(தொ- 1)


நூலகம்
எப்பவுமே
அமைதியாக இரு
எல்லாம் இருந்தும்
அமைதியாக இருக்கும்
நூலகத்தைப்போல

குப்பை
கறுத்த வளையல்களோடு
குனிந்து நிமிர்ந்து
குப்பை பெருக்கிச்
சென்றாள் ஒருத்தி
நிலமோ சுத்தமானது
என் மனமோ
குப்பையானது!!!

விழுது
ஆலமரமே
நீயும் தாடி
வளர்க்கிறாயே
உனக்கும் காதலில்
தோல்வியோ?

சீதனம்
மணமகளே
நீ ஏன் தலை
குனிந்து இருக்கிறாய்?
பணம் கொடுத்து
வாங்கியிருக்கிறாய்
மணமகனை
நீ நிமிர்ந்திரு
அவர் குனியட்டும்!!!

ஒட்டகம்
நீ சற்று உயரமாக
இருந்ததனால்
உன்னை ஒட்டகத்துக்கு
ஒப்பிட்டேன்
பலைவனத்தில்
என்னைத் தவிக்க
விட்டுப் போனவனே
ஒட்டகமேதான் நீ
தவறில்லை ஒப்புக்கொள்!!!

பல்லக்கு
இத்தனை ஆண்டுகளாய்
நான் சுமந்து வந்த
பல்லக்கை இடையில்
இறக்கி வைத்து
சற்று இளைப்பாறுகையில்
திரை கொஞ்சம் விலகியது
அப்போதுதான் தெரிந்தது
உள்ளே நீ இல்லை
என்ற உண்மை!!!

வாக்கு
அம்மாவின்
வார்த்தைகளே
வேதவாக்கானால்
நீ தொட்டிலிலே
கிடந்திருக்கலாம்
கட்டிலுக்கு வந்திருக்க
வேண்டியதில்லை!!!

கொடி
கொடி கட்டிக்
காயப்போட்டிருப்பது
குழந்தைகளின்
ஆடைகளும் கொடிகட்டிப்
பறந்த அவளின்
குதூகலங்களும்தான்

அழகு
உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும்வரை
நான் உணர்ந்ததில்லை
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்குமென்று!!!

காந்தம்
பெண்ணே!
நீ உன் இதயத்தை
இரும்பாக்கினாய்
நான்
காந்தமானேன்!!!

(இன்று இது போதுமல்லவோ....? தொடரும்...)