ஆவ்வ்வ்வ் என்னா இது இப்பூடிக் கிரவுட்டாக் கிடக்கே...:)).. உஸ்ஸ்ஸ்.. இவ்ளோ பேருக்கும் துன்பமா?:) சரி சரி எல்லோருக்குமே விடுதலை கிடைக்கும்:).. முதல்ல கியூ வரிசையா:) நில்லுங்கோ:).. அதாரது இடிக்கிறது?.. அக்கா அக்கா அந்தக் குட்டித் தம்பியை இடிக்காதையுங்கோ:).. அண்ணா.. உங்களைத்தான்.. கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ:)..ஹையோ ஆச்சி.. ஏன் இடையில நுழையுறீங்கள்..:) எல்லோருக்கும் விடுதலை வாங்கித் தருவன்:).. துன்பங்களில் இருந்துதான்ன்.. நம்புங்கோ அதிராவை:))
சரி இனி விஷயத்துக்கு வருவோம்ம்.. துன்பங்கள் எதனால் வருகின்றன? அதற்குப் பல காரணங்கள் உண்டுதானே. பல காரணங்களாலும் வரும் துன்பங்கள் நிவர்த்தி செய்யப்படக்கூடியவை.. ஆனா இந்த “நோயால்” வரும் துன்பம் இருக்கே... அது பூரண மருந்துகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டாலும்.. நோய் ஒன்று வந்துவிட்டதென்றாலே துன்பம்தானே, மனம் சோர்ந்து விடுகிறார்கள்.
அப்போ இத் துன்பத்தை போக்க நாம் “வருமுன் காப்போனாக” இருப்பது நல்லதல்லவா?.. அதையும் தாண்டி ஏற்படுமாயின்.. அதுகுத்தான் ஒரு பெயர் வைத்திருக்கிறோம் அது “விதி”... “அதனை மாற்ற முடியாதே” என, விதியில் பழியைப் போட்டு, எம் மனதுக்கு நிம்மதி வாங்கிக் கொடுக்கிறோம்.
அதுசரி, இப்போ வருமுன் காப்போனாக இருக்க என்ன பண்ணோணும் என்றுதானே கேட்கிறீங்க?:)) ச்ச்சோஓஒ ஈசி:).. அதிராவின் சமையலைச் சாப்பிடுங்கோ:))(ஹையோ ஏன் உந்த முறைப்பூஊஊஊ?:)).
அதிராவின் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்:)..
அதிராவின் சனிக்கிழமை ஸ்பெஷல்:)
எனக்கு இலை வகைகளில் வறை செய்து சாப்பிட ரொம்பவும் பிடிக்கும், ஆரம்பம் கரட் இலைகள் பார்த்தபோது, கரடுமுரடாக இருக்கே என நினைத்து பயப்பிட்டேன்ன், இமா றீச்சர் தான் சொன்னா வறை செய்யலாம் என, அப்போ என் கிட்னியை ஊஸ் பண்ணிய இடத்தில், வறையை சொஃப்ட் ஆக்க, கரட்டையும் சேர்த்தேன், சூப்பரோ சூப்பர்.
அதாவது, ஓரிடத்தில் இருக்க வேண்டாமாம். உடம்பை எப்பவும் அசைத்து ஆட்டி எதாவது செய்யட்டாம்.
ஸ்ஸ்ஸ் தியானத்தில் இருக்கும்போது டிஸ்ரேப் பண்ணப்பூடாது:) .. இப்போ நான் பேஷனலாப் பேசுகிறேன்ன்.. ஆண்டவனோடு:)) |
அப்போ இத் துன்பத்தை போக்க நாம் “வருமுன் காப்போனாக” இருப்பது நல்லதல்லவா?.. அதையும் தாண்டி ஏற்படுமாயின்.. அதுகுத்தான் ஒரு பெயர் வைத்திருக்கிறோம் அது “விதி”... “அதனை மாற்ற முடியாதே” என, விதியில் பழியைப் போட்டு, எம் மனதுக்கு நிம்மதி வாங்கிக் கொடுக்கிறோம்.
அதுசரி, இப்போ வருமுன் காப்போனாக இருக்க என்ன பண்ணோணும் என்றுதானே கேட்கிறீங்க?:)) ச்ச்சோஓஒ ஈசி:).. அதிராவின் சமையலைச் சாப்பிடுங்கோ:))(ஹையோ ஏன் உந்த முறைப்பூஊஊஊ?:)).
அதிராவின் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்:)..
வரகரிசிக் கஞ்சி.
ஒரு கப் வரகை, கழுவி, குக்கரில் அவியவிட்டு, அதனோடு நிறையச் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டிப் போட்டு் விடோணும். பாதி வெந்ததும் ஒரு பூண்டு உள்ளியை முழுதாக உரித்துப் போடோணும். அளவுக்கு உப்பும் போட்டு, இறக்கும் தறுவாயில் ஸ்பினாஜ் கீரை குட்டியாக அரிந்து போட்டு, கொஞ்சம் பால் சேர்த்தேன்.. ஓவ் பண்ணியதும்.. பாதி தேசிக்காய் பிளிந்து விட்டுக் குடிக்க, சூப்பர் சுவையாக இருக்கும்.அதிராவின் சனிக்கிழமை ஸ்பெஷல்:)
கரட் இலை சுண்டல்..
அதாவது இப்போ எல்லா இடமும் கரட், இலைகளோடு கிடைக்குது, அதனை எடுத்து நன்கு கழுவிவிட்டு, தண்டோடு, மிகவும் குட்டியாக அரிந்து, அதனோடு ஒன்றிரண்டு கரட்டை எடுத்து, ஸ்கிரேப் பண்ணி கொஞ்சம் தேங்காய்ப்பூ, மிளகாய்த்தூள்(கொஞ்சம்), உப்பு சேர்த்து பிசைந்து, வெங்காயம்,செத்தல் தாளித்து அதனுள் இதைக் கொட்டி மெல்லிய நெருப்பில் மூடி...பிரட்டி, மூடி அவிய விட்டு பிரட்டி இறக்கவும். ஒரு இனிப்போடு கூடிய சுவை கிடைக்கும்.எனக்கு இலை வகைகளில் வறை செய்து சாப்பிட ரொம்பவும் பிடிக்கும், ஆரம்பம் கரட் இலைகள் பார்த்தபோது, கரடுமுரடாக இருக்கே என நினைத்து பயப்பிட்டேன்ன், இமா றீச்சர் தான் சொன்னா வறை செய்யலாம் என, அப்போ என் கிட்னியை ஊஸ் பண்ணிய இடத்தில், வறையை சொஃப்ட் ஆக்க, கரட்டையும் சேர்த்தேன், சூப்பரோ சூப்பர்.
=======================இடைவேளை===========================
இடைவேளையில் ச்சும்மா இருக்காமல், இப்பூடி ஏதாவது உடற்பயிற்சிகள் செய்த வண்ணம் இருக்கோணும். சமீபத்தில் இங்கத்தைய ஒரு புரோகிராமில் சொல்லிச்சினம், உடம்பு மெலிவதற்கு, முதல் வேலையாக, நம்மை எப்பவுமே ஆக்டிவாக வைத்திருக்கட்டாம். இப்படி இருந்தாலே உடம்பு மெலியும் வாய்ப்பு அதிகமாம்.அதாவது, ஓரிடத்தில் இருக்க வேண்டாமாம். உடம்பை எப்பவும் அசைத்து ஆட்டி எதாவது செய்யட்டாம்.
============உஸ்ஸ்ஸ் இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்ச்:))===========
ஆங்ங்ங் இது அதிராவின் செவ்வாய்க்கிழமை ஸ்பெஷல்:)..
இஞ்சி மோர்..
எப்பவுமே சாப்பிட்டுக் கொண்டிருக்காமல், அடிக்கடி நீராகாரமும் உட்கொள்ளோணும்[(ஆவ்வ் எப்பூடி என் தமிழ்?:) அழகா இருக்கோ?:) இருக்காதா பின்ன:)) நாங்களெல்லாம் தமிழ்ல “டி” எடுத்த ஆட்களாக்கும்..க்கும்..க்கும்..:))]..
அதனால, இப்பூடியெல்லாம் விதம் விதமா செய்து குடிக்கோணும்:).இது ஒரு இஞ்சி சேர்த்த மோர். அதாவது ஒரு சின்ன துண்டு இஞ்சி, 4,5 சின்ன வெங்காயம், கொஞ்சூண்டு உப்பு,அத்தோடு தயிர் சேர்த்து அடித்து, முடிவில் கொஞ்சம் தேசிக்காய் சேர்த்துக் கொள்ளோணும். இதுவும் ஒருவித மருத்துவக் குறிப்புத்தான்.
உணவில் பழப்புளி சேர்ப்பது, உடம்புக்கு நல்லதல்லவாம்.. இது எனக்கொரு, “நாட்டு வைத்தியர்” சொன்னார். அதுக்குப் பதில் எலுமிச்சை சேர்ப்பது மிகவும் நல்லதாம். எலுமிச்சம் புளியை உணவில் அதிகம் சேர்த்தால்,நமது தோல் பழபழப்பாகுமாம்.
அடுத்து இஞ்சி உணவில் சேர்க்கும்போது, எப்பவும் நன்கு தோல் நீக்க வேண்டுமாம், அதன் தோலில் ஒருவித நச்சுத் தன்மை உள்ளதாம். தினமும் இஞ்சி சேர்த்து வந்தால் பல நோய்கள், தொல்லைகளிலிருந்து விடுபடலாமாம்.
இப்போ சொல்லுங்கோ.. இனி, துன்பங்களிலிருந்து விடுதலைதானே?:)).
ஊசி இணைப்பு:
வழமைபோல எம் இடத்தில் கிரான்பெரீஸ் எல்லாம் பூத்து, காய்த்து பழுத்து, தேடுவாரில்லாமல் உதிர்ந்து போகுது... என் கை சொல்லுக் கேட்கவில்லை, கொஞ்சம் ஆய்ந்து வந்தேன்...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குண்டூசி இணைப்பூ:)..
அக்கா பிளீச்ச்ச்ச்ச்ச்:)) வாறீங்களா ஓட்டுப் போட?:) வந்து தமிழ்மணத்தில, ரெண்டு ஓட்டுப் போட்டு:), அதிராவை “மகுடம் சூட்ட” வைக்கிறீங்களோ?:))
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Tweet |
|
|||