ஆஆஆ இதுதான் விரதம் பிடிச்சதன் பலனோ:))
ஆஆஆவ்வ்வ் டும் டும் டும்... இதுதானா.. இதுதானா.. எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா:)) என் கந்தசஷ்டி பாலும் பழமும் விரதம் இனிதே நிறைவேறி, பாரணையும் முடிச்சு விட்டேன். இன்று போஸ்ட் போடும் ஐடியாவே இருக்கவில்லை, ஆனா அது என்னமோ விரதம் முடிஞ்சுபோச்சு என்றதும் ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சியும், அதே நேரம் கவலையுமாக இருக்கு... முடிஞ்சுபோச்சே என.. விரத காலங்கள் உண்மையில் மிக மகிழ்ச்சியானதாகவே இருக்கும் எமக்கு எப்பவும்.
இன்று சாப்பிடவே முடியவில்லை, வயிறு ஏற்றுக்கொள்ளவே இல்லை:), கொஞ்சம் சாஸ்திரப்படிக்கே சாப்பிட்டேன். மிகவும் பயந்தபடியேதான் பால் பழத்தை ஆரம்பித்தேன் ஆனா 6 நாட்களும் கொஞ்சம் ஸ்லோவாகவே, இருப்பினும் நல்லபடி நிறைவேறிவிட்டது.
வாங்கோ பாரணைச் சாப்பாடு சாப்பிடலாம்..
நடுவில் தேசிக்காய் ஊறுகாய், தயிர், கீழே நான் செய்த மோர் மிளகாய் மற்றும் பப்படம், பொட்டாடோப் பப்படம், மிகுதிக்குப் பெயர் எழுதப்பட்டிருக்கு. இன்னும் இரு கறிகள் செய்ய நினைச்சு[என் லிஸ்ட்டில் போட்டிருந்தேன்:)] விட்டுவிட்டேன்..
அது சேப்பங்கிழங்குதானோ தெரியாதெனக்கு:), அஞ்சுவுக்குப் படம் அனுப்பிக் கேட்டேன் அவதான் அப்படிச் சொன்னா:)[நான் ஒரு அப்பாவி என்பதனால நம்பிட்டேன்:)].. இஞ்சிக்கிழங்குபோல இருக்கும், வாழ்க்கையில் முதன்முதலாக சேப்பங்கிழங்கு வறுவல் செய்தேன், அவித்து தோலை உரிச்சுப்போட்டு ரோஸ்ட் பண்ணினேன்...தூள் சேர்த்து, ஆனா எனக்கு அந்த ரேஸ்ட் பிடிக்கவில்லை:(
இம்முறை சுவாமிக்குப் படைச்சதைப் படமெடுக்கவில்லை, நீங்கள் பார்த்துப் பார்த்து அலுத்திருக்கும் என்பதனால்:))
ஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சீனி அரியதரம்.. இதோ மேடை ஏற இருக்கிறது:)) என்னா சுசி:) என்னா சுசி:))) ஹா ஹா ஹா... செய்து சாப்பிட்டவுடன் எங்கள் புளொக்கிற்கு அனுப்பி வைக்கவும்:).
சிவப்புப்பச்சை அரிசியைக் கழுவி எடுத்து, ஓவர் நைட் காயவிட்டேன், காலையில் அரைத்து, பெரிய கண்ணுள்ள அரிதட்டில், அதாவது மாவுடன் குருனலும் சேர்ந்து விழுவதுபோல அரித்தெடுத்து , நம் அளவுக்கு சீனி சேர்த்துக் குழைச்சேன், தண்ணி தேவைப்படாது, கொஞ்ச நேரம் ஊறவிடவும், அல்லது, சீனியை பிளெண்டரில் மாவாக்கியும் போடலாம். இல்லை எனில், சிறு துளி தண்ணி தெளிச்சுக் குழைக்கலாம், உடனேயே சுட்டு விட வேண்டும், பிந்தினால் எல்லாம் தண்ணி போலாகிடும்.
இன்று ஒரு தகவல்
வழங்குபவர், உங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய:) “புலாலியூர்ப் பூஸானந்தா”:).
என்னிடம் இருந்த றைஸ் குக்கர் கொஞ்சம் பழுதாகிவிட்டது, அப்போ மினக்கெடாமல் உடனேயே காபேஜ் அடிச்சு விட்டேன், பின்பு வாங்க தேடிக்கொண்டிருந்தேன், எனக்கு சாதாரண றைஸ் குக்கர் எதுவுமே பிடிக்கவில்லை, உங்களுக்குத்தான் தெரியுமே எனக்கு எப்பவும் வித்தியாசமானதே பிடிக்கும். அதனால வாங்காமலே இருந்தேன். சமீபத்தில் தான் என் கண்ணில் இது பட்டது, உடனேயே விழுந்து விழுந்து ஆராட்சி செய்து, வாங்கியாச்சு. என்னா சூப்பர் தெரியுமோ.
பிறஸர் குக்கர் சேர்ந்த றைஸ் குக்கர். பசுமதி அரிசி எனில் ஒரு கப்புக்கு 1.5 கப் தண்ணி சேர்த்து வெறும் 12 நிமிடங்களில் சோறு. boiled rice எனில் 2 கப் தண்ணி சேர்த்து, 15 நிமிடங்கள். எந்தப் புகையுமில்லை, ஒரு கபேர்ட்டில் வச்சு மூடிப்போட்டுக்கூட ஓன் பண்ணலாம், சத்தமில்லை, புகை இல்லை, எல்லாம் நேரக் கணக்கு மட்டுமே.
சைவம், அசைவம் எது வேணுமெண்டாலும் செய்யலாம், ஆனா நான் எப்பவும் சைவம் -அசைவம் கலப்பதில்லை, வேறு வேறு பாத்திரங்களே பாவிப்பேன் என்பதனால் சைவமாகவே வச்சிருக்க விருப்பம், ஆனால் இதன் உள் பேசின் மட்டும் 10 பவுண்டுகளுக்கு அமேசனில் கிடைக்குது, அப்போ அதில் ஒன்று வாங்கினால் அசைவத்துக்கு வச்சிருக்கலாம் எனும் ஐடியா இருக்குது.[PRESSURE KING PRO PRESSURE COOKER]
இதில் பாருங்கோ, சிவப்பு கலரில் இருப்பதுதான் அந்த பிரசர் பட்டின், இது உள்ளே போனால்தான் ஓபின் பண்ணலாம், அருகில் இருப்பதுதான் ஆவியை வெளியேற்றுபவர், ஆனா இவரின் கொன்றோல் நம் கையில்.. அதாவது இப்படி நேராக விட்டு விட வேண்டும், அப்போ எந்த ஆவியும், ஒரு துளிகூட வெளியே வராது, நமக்கு உடனடியாக மூடியைத் திறக்க வேண்டுமெனில், இந்த பட்டினை வலப்பக்கம் திருப்பி விட்டால் போதும்.. குபீரென ஆவி முழுதும் வெளியே வரும், 2 நிமிடத்தில் மூடியை திறந்திடலாம்
=============================
ஸ்ரீலங்கன் வல்லாரை சம்பல்
இது செய்வதற்கு, வல்லாரையை நன்கு துப்பரவாக்கிப்போட்டு, கழுவி எடுக்க வேண்டும், எடுத்து இப்படி கட்டாகவே பிடித்துக் கொண்டு, முத்தலாக இருக்கும் பகுதியை மட்டும் வெட்டி எறிஞ்சால் போதும், மிகுதி அனைத்தையும் இப்படிக் குட்டியாக அரிந்து எடுக்க வேண்டும்.
பின்னர் இதனுள் உடன் திருவிய தேங்காய்ப்பூ, தேசிக்காய்ப்பிளி, உப்பு, சின்ன வெங்காயம், விரும்பினால் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கையால் பிசைந்து எடுக்க வேண்டும். நான் சுவையை கூட்டுவதற்காக 2,3 கரண்டி முதல்பால் அல்லது ஃபுல் கிரீம் மில்க் சேர்ப்பேன்.
ஆஹா என்ன சுவை தெரியுமோ:)) இப்பூடிச் சாப்பிட்டால் சத்து வீணாகாது, எதனையும் வாழ்க்கையில் மறக்கவே மாட்டீங்க:)
ஊசி இணைப்பு
ஊசிக்குறிப்பு
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊ உண்டகளை புளொக் எழுதும் அதிராவுக்கும் உண்டெல்லோ:), மசக்கம் மசக்கமா:)) வருதூஊஊஊ கொஞ்சம் டோல் குடுங்கோ:)), இப்போ நான் ரொம்ம்ம்ம்ம்பவயக்கெட்டிட்டேன்ன்:))


💓💓💓💃💓💓💓
|
|
Tweet |
|
|||












