நல்வரவு_()_


Tuesday 26 July 2011

வன்.. ரூஊஊ.. த்றீஈஈஈஈ... ந.. நோ நோ நொட்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

என்னையும்...தேன்ன்ன்ன்ன்ன்:)))


என்னை தொடர் பதிவு எழுத அழைத்த கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சலினுக்கு மிக்க நன்றி.
அத்தோடு, நான் அழைத்து:), ஓடிவந்து எழுந்தப்போகும் “அந்த ..... க்கும்” மிக்க நன்றி. ஹா...ஹா...ஹா.... இப்போ, கீழ போய்ப் பார்த்திடாதீங்க மக்கள்ஸ்ஸ்:), முழுவதையும் படிச்சிட்டு, அப்புறமா பாருங்க ஓக்கை:)).
--------------------------------------------------------------------------------------------
முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
--------------------------------------------------------------------------------------------


1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?          

1. குடும்பத்தோடு நீண்டதூரம் காரில் “றைவ்” போவது.

2. நல்ல சோவெண்ட மழை அல்லது ஸ்ஸ்ஸ்னோ நாளாக இருக்க வேண்டும், ஸ்கூல், வேர்க் எதுவும் இருக்கப்படாது:), விரதம் இல்லாத நாளாகவும் இருக்க வேண்டும், நல்ல வடிவா சமைத்துச் சாப்பிட்டுப்போட்டு, படம் பார்த்து... கூத்துப்போடுவது(வீட்டுக்குள்ளேயே) ரொம்பவும் பிடிக்கும்.

3. காலையில் பரபரப்பாக எழுந்து, ரீ, உணவு கொடுத்து, வெளிக்கிடப்பண்ணி டாட்டா சொல்லி அனைவரையும் அனுப்பியபின், ஒரு மயான அமைதி வீட்டில் நிலவும்,அப்போது ஒரு கப் ரீ ஊத்திக்கொண்டு, சோபாவில் இருந்து வெளியே ஆற்றைப்பார்த்துக்கொண்டு, மெல்லமாக பாடலை சிடியில் போட்டுக் கேட்டுக்கொண்டு ஒரு 15 நிமிடமாவது இருக்கும்போது..... அதுவும் பிடிக்கும்....

இன்னும் நிறையப் பிடிக்கும்... ஆனா வாணாமாம்:)), சொல்லப்பிடாதாம்:) 3 போதுமாமே.
--------------------------------------------------------------------------------------------
ஆகாயப் பந்தலிலே.. பொன்னூஞ்சல் ஆடுதம்மா 
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
--------------------------------------------------------------------------------------------
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.இழப்பு(எந்த இழப்பாயினும், உயிர், பணம், பதவி, பெயர், புகழ், நல்லபெயர்...). பிறந்ததிலிருந்து எதுவும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இருந்ததை இழந்திடக்கூடாது!!!!.

2. காரணமின்றி தொட்டதுக்கெல்லாம்,கோபித்து, முகத்தை உம் என வைத்திருப்பது..... பிடிக்கவே பிடிக்காது. நேரே கதைத்துப் பேசி கிளியராகிட வேண்டும், மனதில் வைத்துக் கடைந்து, பின் சாதிப்பது.

3.  “அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் தேனும்” என்பார்களே.... அப்படியானவர்களைப் பிடிக்காது, ஆனா அப்படியானவர்களை என்னால் உடனே கண்டு பிடிக்கவும் முடியாது:(. சரியோ தப்போ, நேரே வெளிப்படையாகப் பேசுவதே பிடிக்கும்.
--------------------------------------------------------------------------------------------
பறவையின் சிறகுகள் விரிந்தால்தான்  
வானத்தில் அது பறக்கும்
--------------------------------------------------------------------------------------------

3) பயப்படும் மூன்று விஷயங்கள்
1.பிறந்ததிலிருந்து இன்றுவரை முன்னுக்கு இருப்பது, “பயம்” தான். இருட்டென்றாலே பயம். இரவில் ஏதும் சத்தம் கேட்டால்.. இதயம்... புஸுக் பூஸ் என அடிக்காது:)... டொமார்:)... டொமார்:) என அடிக்கும்... காதில் அந்த ஒலி பலமாகக் கேட்கும்.

2. மது அருந்தியோர்.... அவர்களுக்கு வெறி இல்லையென்றாலும், மணம் அவர்களிலிருந்து வருகிறதென்றால் பயம். இங்கெல்லாம் அப்படிக் காணவில்லை. ஆனா இலங்கையில் ஆராவது குடித்துவிட்டு கொஞ்சம் தள்ளாடிக்கொண்டு வருவதுபோல தெரிந்தாலே பாதை மாத்தி ஓடிவிடுவேன். இங்கு ரோட்டோரங்களில்அடிக்கடி barஇருக்கும். அதன் வாசலில் சிலர் நின்று கதைப்பார்கள், அவர்களைக் கடக்கும்போது நெஞ்சு பக் பக் என அடிக்கும்(ஆனா அவர்கள் குடிக்காமலும் நிற்கக்கூடும், என் மனப்பயத்தை நீக்க முடியவில்லை).

3. ஊர்வனவற்றைப் பார்த்தால் பயம், ஏன் நினைக்கவே பயம்(மண்புழு, அனைத்து நெளியும் புழுக்களும்,மசுக்குட்டி, ஸ்லக்... இப்படியானவை). ரீவியில் காட்டினாலே கண்ணை மூடிவிடுவேன். இது தெரிந்தே என் மகன், என்னிடம் கேட்பார்.. அம்மா வன் மில்லியன் பவுண்ட்ஸ் தருகிறேன் என்றால் மண்புழுவைப் பிடிப்பீங்களோ என...:))).... அதைக் கேட்டாலே உடம்பெல்லாம் கூசும்.
--------------------------------------------------------------------------------------------
கடவுள் நினைத்தான் மணநாள் தொடுத்தான் வாழ்க்கை  உண்டானதே 
கண்ணே நீ வாழ்கவே!!! கலைமகளே நீ வாழ்கவே!!
--------------------------------------------------------------------------------------------

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
1. மரணம் ஏன் வரவேண்டும்? சரி ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், வயதாகி வரலாம்... சின்னச் சின்ன பிஞ்சுகளுக்கெல்லாம் ஏன் வரவேண்டும்?.

2. எம் பிறப்புக்கு முன் எப்படி இருந்தோம்? மரணித்த பின் எப்படி இருப்போம்? இப்போதுள்ள வாழ்க்கை மரணத்தின் பின்பும் எமக்குத் தெரியுமா? அங்கே என்ன நடக்கிறது?. இப்போ நடக்கும் நல்லது கெட்டதுக்கெல்லாம் விதி என்கிறோம். ஒரு தடவை இலங்கையிலே இலங்கை/இந்திய ராணுவம் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தவேளை, விசாரணை எனக் கூறி 35 ஆண்களை மட்டும் அழைத்துச் சென்று, ஒரு சுடலைக் காட்டிலே அத்தனை பேரையும் சுட்டு, எரித்தார்கள், அதில் கிட்டத்தட்ட 30 பேர் திருமணமானோராம், அப்போ ஒரே நேரத்திலே 30 குடும்பத்துக்கு தந்தை இல்லை கணவன் இல்லை.....

இதுவெல்லாம் விதியா? ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?. (சுனாமி... இப்படியெல்லாம் பல கதைகள் இருக்குதுதானே, ஆனா சின்னனில் நான் கேட்டு ரத்தம் உறந்துபோன கதைதான் நினைவில் இருக்கு.. எங்கள் வீட்டிலிருந்து ஒரு 10 மைல் தொலைவில் நடந்த சம்பவம்தான் அது).
    
3. நன்மை செய்வோர், நல்லவர்கள், கண் முன்னே துன்பம் அனுபவிக்கிறார்கள், கஸ்டப்படுகிறார்கள். ஆனால் பொல்லாதவர்கள், அடுத்தவருக்கு 5 சதம்கூட உதவி செய்யாதவர்கள், அடுத்தவர் குடும்பத்தை நாசமாக்கியோர்.. இவர்களெல்லாம் நல்லா இருக்கிறார்கள்... இது எப்படி?.

இவை எல்லாம் முற்பிறவிப் பயன் என்கிறார்கள். ஆனாமுற்பிறவி என்று ஒன்று இருந்ததென எப்படிச் சொல்ல முடியும், கொஞ்சமாவது எமக்கு முற்பிறப்பு நினைவிருக்கோ? இல்லையே?....

இதில் கொஞ்ச நஞ்சமல்ல... நிறையவே குழப்பங்கள் கேள்விகள் என்னிடம் இருக்கு. ஆராவது நல்ல பதில் சொல்லும்போது, விடை கிடைத்துவிட்டதுபோல இருக்கும்,

ஆனா மீண்டும் மனம் குழம்பிப்போய்க் கேள்விகள் கேட்கும்.
--------------------------------------------------------------------------------------------
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
--------------------------------------------------------------------------------------------

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

ஒவ்வொன்றுக்கும் என ஒவ்வொரு மேசை இருக்கிறது, அதற்குரிய பொருட்கள் தவிர்த்து, மேசையில் எதுவும் வைப்பது பிடிக்காது. கொம்பியூட்டர் மேசை எனில்,அதற்குரிய பொருட்களே இருக்க வேண்டும், ஹோலில், கிச்சினில் எனில் ஒரு அழகிய வாஸ் மட்டுமே வைப்பேன்.

எந்த வேலையாயினும், மேசையில் வைத்துச் செய்து முடித்ததும், அனைத்தையும் தூக்கி உள்ளே வைத்துவிட்டு மேசையை ஃபிரீயாக வைத்திருப்பதையே விரும்புவேன்... ஆனா அதையும் மீறி.. பென்சில் ரேசர்... கொப்பி, புத்தகம்.. etc..etc.. அப்பப்ப:) தென்படும்.

--------------------------------------------------------------------------------------------
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாயது காலங்களும் நேரங்களும்   கலைத்தாலும் கலையாதது
--------------------------------------------------------------------------------------------

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

எனக்கு + என் குடும்பத்துக்கு நகைச்சுவை என்றாலே.. அது யார் சொன்னாலென்ன... பிடிக்கும். வீட்டிலேயே மிகவும் நகைச்சுவையாளர் என் கணவர்தான். எதையாவது சொல்லி சிரிப்புக் காட்டிக்கொண்டே இருப்பார். எம்மிடம் வருவோர் சொல்வார்கள், உங்கள் வீட்டில் இருந்தால் நேரம் போனதே தெரியாமல் சிரித்துவிட்டோம் என...

நிறைய வாசிப்பார்... கேட்பார்(மீடியாக்கள்) பின் மறக்காமல் சொல்வார். அதனால் வீட்டில் ஒரு ஆசைக்குக்கூட கோபிக்க முடியாமல் இருக்கும்:), கோபம் வந்தால் (எனக்கு:)) எதையாவது சொல்லி சிரிப்பாக்கிடுவார்.

எங்களுக்கென குடும்பப் பழமொழி இயற்றி வைத்திருக்கிறோம்:).... அது “No வெட்கம் No ரோஷம்”:). ஆருக்காவது எமக்குக் கோபம் வந்தால், குடும்பப் பழமொழியை மறந்து கோபிக்கலாமோ எனக் கேட்டே சிரித்திடுவோம்.. ரோஷம் இருந்தால்தானே கோபம் வரும்?:)))). இப்பழமொழியால் வெளியாட்களோடு எமக்கு கொஞ்சம் கோபமாக வந்தாலும், எமக்குத்தான் நோ வெட்கம், நோ ரோஷமாச்சே, பிறகெதுக்கு கோபிக்கவேண்டும் என எமக்குள் நாமே சொல்லி மனதை மாற வைத்திடுவோம்:).

புளொக்குகளிலும் பல நகைச்சுவைப் பின்னூட்டங்கள், பல பதிவுகள் பார்த்து விழுந்தூஊஊஊஊஊ விழுந்தூஊஊ சிரிப்பதுண்டு... நல்லவேளை அடிகிடி எப்போதும் படவேயில்லை விழுந்ததால:))).
--------------------------------------------------------------------------------------------
காற்றினில் பிறந்தவளோ அதிலே கற்பனை வடித்தவளோ 
சேற்றில் மலர்ந்த  செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ
--------------------------------------------------------------------------------------------

7)தாங்கள் தற்போது செய்து கொண்டு  இருக்கும் மூன்று காரியங்கள்?
1. கோடை என்பதால் கார்டினிங்..
                                                                              
2. பெயிண்டிங் + பூப்போடும் வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கு.(தனிப்பதிவாக பின்பு படம் போடுகிறேன்).

3. மீன் தொட்டியில் மீன்கள் வளர்ப்பது(தண்ணி மாத்துவது, லைட் போடுவது, சாப்பாடு போடுவது அனைத்தும் என் வேலைதான்:)) . நான் வீட்டில் இல்லையெனில் அவை பட்டினிதான்:)).





--------------------------------------------------------------------------------------------
விழியே கதை எழுது  கண்ணீரில் எழுதாதே..
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி  
உனக்காகவே நான் வாழ்கிறேன்
--------------------------------------------------------------------------------------------


8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
வாழ்நாள் எப்ப முடியப்போகுதெண்டே தெரியாதே..2012 இல் உலகம் அழியப்போகுதாமே:)))... அதுக்குள் மனதில்/கைவசம் இருக்கும் பொக்கிஷங்களை புளொக்கில ஆவது எழுதிடோணும் என எதிர்பார்க்கிறேன் அவ்வ்வ்வ்வ்வ்:)).


ஒரு தடவையாவது, பிளேனில பைலட் சீட்ல இருந்து பயணம் செய்யோணும்(அதொன்றுதான் பார்க்காத சீட்).

நிறைவேற முடியாத ஆசை ஒன்றிருக்கு.... விண்வெளியில போய் நடக்க ஆசை:)). எனக்கு ஸ்பேஸ் புரோகிராம் எண்டால்... நித்திரைகொள்ளாமல் பார்ப்பேன்..

-------------------------------------------------------------------------------------------
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது 
பறந்தோடி இரை தேடி  பிள்ளைக்குக் கொடுக்கின்றது
--------------------------------------------------------------------------------------------

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

நிறையவே பயப்படுவேன், ஆனால் எந்த விஷயமாயினும் செய்து முடித்துவிடுவேன், முடியாதென பெரிதாக எதுவும் சொல்ல மாட்டேன், கண் பார்த்தால் கை செய்யும்.

சமையல், தையல், பூப் போடுதல், பெயிண்டிங், சில கைவினைப் பொருட்கள் செய்தல், பெட்டி,  பின்னுதல்(இப்போ கொஞ்சம் மறந்திருக்கிறேன்)... இவை எல்லாம் வகுப்புப் போய் பழகவில்லை, எல்லாம் பார்த்துக் கேட்டு அறிந்து செய்பவையே....

இன்னுமொன்று சூஊஊஊப்பராகப் பாடுவேனே நான்:)))))))))))))))))))...
சிந்து சிந்து நான் ஒரு சிந்து....
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓஓஓஓஓஓ மைனா ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ மைனா.... கேட்குதோஒ? நான் பாடுவது? சூப்பராக இருக்கில்ல?:)))... சரி சரி முறைக்காதீங்கோ கர்ர்ர்ர்ர்:)).
 
--------------------------------------------------------------------------------------------
மனதாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்  திருக்கோயிலே ஓடிவா
--------------------------------------------------------------------------------------------
 

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

 1. ஆராக இருப்பினும்... சிறியவரோ பெரியவரோ ... இறந்துவிட்ட செய்தி...         உடனே ஒருகணம் இதயம் டிக் என ஸ்தம்பித்து அடிக்கும்.
 2. வாய் கூசாமல், தேவையில்லாமல் சொல்லும் பொய்கள், சடாரென முகத்திலடிப்பதுபோல, அன்பில்லாதமாதிரி, அன்பாக இருப்போர் கூறினால் ..
 3. தேவையில்லாத:)))), நமக்கு உபயோகமே இல்லாத அடுத்தோரைப் பற்றிய   விடுப்ஸ்:) செய்திகள்.
--------------------------------------------------------------------------------------------
சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும்
பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன

--------------------------------------------------------------------------------------------


11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
 கற்றுக்கொள்ள நிறையவே இருக்கு, கற்றது கை மண் அளவுகூட இல்லையே, ஆனால் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை.
--------------------------------------------------------------------------------------------
மடியில் பிறந்த நதியை மலைகள்
மறைத்து வைப்பதும் இல்லை
செடியில் பிறந்த மலரைச் செடிகள்
சிறையில் வைப்பதும் இல்லை
--------------------------------------------------------------------------------------------


12) பிடிச்ச மூன்று உணவு வகை?
   
 1. சைனீஸ் உணவுகளே முதலிடத்தில் பிடிக்கும்.

  2. KFC சிக்கின்:)

 3. அவித்த கோழி முட்டை(ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ:))). சைவ உணவுகள் பிடிப்பது குறைவு:(, ஆனா நிறைய நாட்கள் சைவமாக இருப்போம்(கோயில்கள்,விரதங்கள்).

அசைவ உணவுகள்தான் பிடிக்கும் அதிலும் மட்டின்தான் அதிகம் பிடிக்கும்...
--------------------------------------------------------------------------------------------
கங்கைக் கரைக் கோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் 
கண்ணன் நடுவினிலே கண் திறந்து பார்த்தேன்  
கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே
--------------------------------------------------------------------------------------------
  
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

 அப்படியெல்லாம் முணுமுணுக்கமாட்டேன்:))). பிடித்த பாடல்கள் பல உண்டு.. குறிப்பிட்டு எதைச் சொல்வேன் எதை விடுவேன்....
10 வயதாக இருந்தபோது கேட்ட பாடல்கள்... சூப்பராக இருந்தன... இப்பவும்தான், அதேபோல 20 வயதாக இருந்தபோது வெளிவந்த பாடல்கள் அவையும் சூப்பரே... அதேஏஏஏஏஏபோல இப்போ சுவீட்16:) இல் இருக்கும்போது பல அருமையான பாடல்கள்.. பிடிச்சிருக்கு ... குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை... சில சம்பவங்களைப் பார்க்கும்போது என்னையறியாமலே, அதுக்குப் பொருத்தமான பாடல்வரிகள் என் வாயில் வந்துவிடுவதுண்டு.

--------------------------------------------------------------------------------------------
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே 
நிழலைப் பார்த்துப் பூமி சொன்னது என்னைத் தொடாதே
--------------------------------------------------------------------------------------------

14) பிடித்த மூன்று படங்கள்?

  1. ஆங்கிலம், 2.தமிழ் தவிர வேறு எந்த மொழிப்படமும் பார்த்ததில்லை. வாழ்க்கையிலே முதலும் கடைசியுமாக முழுவதுமாகப் பார்த்த 3.ஹிந்திப்படம் “அபிமான்”. பலபேர் பார்க்கச் சொல்லி வற்புறுத்தியமையால் பார்த்தேன்.

வீட்டிலும் பார்ப்போம், தியேட்டருக்கு வரும் ஆங்கிலப் படங்கள், நான் மறுத்தாலும் கணவர் விடமாட்டார், கழுத்திலே கயிறு போடாத குறையாக:)) என்னையும் கூட்டிப்போய் இருத்தினால்தான் நிம்மதி:). ரிவியூ பார்த்து, நல்லகதை எனில் போய்ப் பார்ப்போம். பல நல்ல படங்கள் பிடிச்சிருக்கு.. (Geisha..., மம்மா மியா, ........,).

எனக்கோ தியேட்டரைப் பார்த்தாலே நித்திரை வந்துவிடும், பறவாயில்லை வாங்கோ எனக் கூட்டிப்போவார்கள்,(சின்னவர்களின் படங்களுக்கும்) பெரியவர் சொல்வார் நான் பில்லோ கொண்டு வாறேன், நீங்கள் படுங்கோ என, சின்னவர் சொன்னார், காலை என் மடிமீது போட்டு நீங்க நித்திரை கொள்ளுங்கோ, அங்கு அவர்கள் ஏசமாட்டார்கள்:) என்று...இப்படியே தொடரும் என் தியேட்டர் கதை:).

  ரஜனியின் “சிவாஜி” வெளிவந்தபோது, கனடாவில் நின்றோம், கணவருக்கு ரஜனி என்றால் பிடிக்கும். சரி இதை நிட்சயம் பார்க்கவேண்டும் தியேட்டரில் என, ரொறொன்ரோவில் ஒரு பெரீஈஈய ஸ்கிரீன் உள்ளதாக ஒன்றுக்குப் போனோம்.... இருவரும் மட்டுமே போனோம், மெட்னிக்கு. போகப்போக எனக்கு காதில் ஒரே ஓதல்:)... நித்திரை கொண்டிடாதையுங்கோ நல்ல படமாம், முளுவதும் பார்க்கவேண்டும் எண்டெல்லாம்.. நான் நித்திரையாகாமலிருக்க, பேகர், பொப்கோர்ன்.... யூஸ் எல்லாம் வாங்கித்தந்து... உள்ளே போய் இருந்தோம், சூப்பரான புதுத் தியேட்டர்... படமும் சூப்பராகப் போனது.

இடையில் “இடைவேளை” வந்ததாக நினைவு, ரஜனியின் முகம் சிங்கம்போல மாறுவதாகப் பார்த்த நினைவு, அதன்பின் சண்டைப்படம்போல மாறியதுபோல ஒரு உணர்வு..... இடையிடையே ஆரோ:) தட்டிஎழுப்பியதாக:) கனவு...

கண்விழித்தேன் படம் முடிந்திருந்தது.... எவ்வ்ளோ ஹப்பியாக இருந்துது தெரியுமோ.... அப்பாடா படம் முடிஞ்சுபோச்ச்ச்ச்ச் எண்டு.

இதுக்கு மேலும் என்னிடம் படம் பற்றிக் கேட்க ஆசைப் படுறீங்களோ?:)))).
--------------------------------------------------------------------------------------------
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள்
நீரினிலே நெஞ்சிரண்டில் நினைவலைகள்

--------------------------------------------------------------------------------------------

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
  1. அன்பு
  2. அரவணைப்பு
  3. ஆறுதல்
(இவை இல்லையெனில் என்னால் தாக்குப் பிடிக்கவே முடியாது, துவண்டு போய்விடுவேன்) ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவைகளை அடுத்து, இவை    மூன்றும் கிடைத்தால் மட்டுமே(அது குடும்பத்திடமிருந்து, சொந்த பந்தத்திடமிருந்து, நட்புகளிடமிருந்து) என்னால் ஒரு மனிதனாக இருக்க முடியும்.

பணம், பதவி இல்லாமல்கூட இருந்திடலாம், ஆனா இந்த அன்பு, பாசம், ஆறுதல் கிடைக்கவில்லையெனில், எழுந்து நிற்கவே முடியாது, துவண்டு போகும் நேரத்தில் ஒருவரை தூக்கி நிறுத்துவது பணம் அல்ல, இவை மூன்றும்தான்.  இன்றுகூட ரீவியில் சொன்னார்கள், குழந்தைகள் இல்லத்துக்கு பணம் கொடுப்பது பெரிய உதவியல்ல...

ஒரு இரண்டு மணித்தியாலம் அங்குபோய் அக்குழந்தைகளைத் தடவிக் கொடுத்து கதை சொல்லி வாருங்கள், அதில்தான் அவர்களின் எதிர்காலமே மிளிரும் என.

ஒன்றைக் கொடுத்தால் பத்து மடங்காகத் திரும்பிக் கிடைப்பது.... இந்த அன்பு பாசம்தான். காசா பணமா? எதுக்கு யோசிக்க வேண்டும், தாராளமாகக் கொடுக்கலாமே.
  
--------------------------------------------------------------------------------------------
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு 

மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

--------------------------------------------------------------------------------------------

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
ஆஆஆஆஆஆஆஆ பொயிண்டுக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்:))).
எனக்கு மயிலுக்கு மேல மயில்கள்:)))) வந்து என் உள்பெட்டியே:)))(அதுதாங்க inbox:)) முட்டி வழியுது:). என்னவென்று கேட்கிறீங்களோ?:))). இனிமேலும் என்னைத் தொடர்ப்பதிவுக்கு அழைப்பீங்களோ?:))).. அழைத்தால் கொலை பண்ணிடுவேன்.. புளொக்கை டிலீட் :) பண்ணிடுவேன்... அப்பூடி இப்பூடியெண்டு அப்பப்பா சொல்லமுடியாத கடிதங்கள்:))).. என்னை மிரட்டீஈஈஈஈஈஈஈஈனம்:))).... அதால நான் இம்முறை அழைக்கப்போவது....

 இ..... இல்லை இல்ல... நான் ஒண்ணுமே சொல்லல்ல்லலலலலலல:), ஸா .அ ..கடவுளே... சும்மா உச்சரிக்கிறேன்...,  வா... ஆஆஆஆஆஆ வாயில வந்திட்டுதூஊஊஊ..., ம..... ஹையோ நான் என்ன பண்ணுவேன்...., ஜல்.அ.. என்னை விட்டிடுங்கோ நான் ஓடிடுன்ன்ன் ஜெ..... ஆஆஆ... சும்மா ஒரு ஆசையில சொல்லிப்பார்த்தேன் மீண்டும் தண்ணிக்குள்ள போயிட வாணாம்....

வெரி வெரி சொறி... நான் ஆரையுமே அழைக்கவில்லையே இம்முறை:), அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:) ஆறு வயசிலிருந்தே:))))) அவ்வ்வ்வ்வ்வ்.

--------------------------------------------------------------------------------------------
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன 
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
--------------------------------------------------------------------------------------------


பின்குறிப்பு:
பதிவுக்கும் பாடல் வரிகளுக்கும் சம்பந்தம் இல்லை... மனதுக்குப் பிடித்த வரிகளை அங்கின இணைத்திருக்கிறேன். முணுமுணுக்கும் பாடல் பற்றிக் கேட்டிருப்பதால் இப்பூடியெல்லாம் ஐடியா கிட்னியில் வந்துச்சா... எழுதிட்டேன். சே..சே.. சம்பந்தம் பற்றிப் பேசவைக்கிறாங்களே என்னை அடிக்கடி அவ்வ்வ்வ்வ்:))).


ஊசி இணைப்பு:
நீங்களே சொல்லுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:)) அன்பாக் கூப்பிட்டாச்சு:), பாசமாக் கூப்பிட்டாச்சு:), மிரட்டியும் கூப்பிட்டாச்சு:)).... இனி அதிரடித் தாக்குதல்தான்:)))... இனியாவது வருவினமோ பார்ப்பம்:)))


 ==========================================================
பெளணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போலே 
முன்னால் போனாள் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் 
பொண்ணு ஊருக்குப் புதுசோ என்றேன்
காலில் உள்ளது புதுசூஊஊஊ என்றாள் 
ஓ மேலே கேட்காதே..
==========================================================


162 comments :

  1. //டொமார்:)... டொமார்:) என அடிக்கும்... // what is this Vaans!!!!

    //சின்னச் சின்ன பிஞ்சுகளுக்கெல்லாம் ஏன் வரவேண்டும்?.// m.. ;(

    //பைலட் சீட்ல இருந்து பயணம் செய்யோணும்// Note this point Haish. ;)

    அ.கோ.மு மூன்றாவது இடம்தானோ!!

    படம் பார்த்த கதை சுப்பர். ;)

    ஏதோ எழுதினம் எண்டு இல்லாமல் கரிசனமாக ஒவ்வொரு கேள்விக்கும் டீடெய்லாக (உங்களுக்கு வடிவான வாலாமே!!) பதில் சொல்லி இருக்கிற அழகு... அழகுதான்.

    அதீஸ்... நான் கண்ணாடியைத் துலைச்சுப் போட்டன். ;))))

    ReplyDelete
  2. யம்மோய்..எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு பெரிய பதிவு.இருங்க.பொறுமையா படிச்சுட்டு அப்புறம் வர்ரேன்.

    ReplyDelete
  3. //.. இப்போ, கீழ போய்ப் பார்த்திடாதீங்க மக்கள்ஸ்ஸ்:), // முதல் வேலையா கீழே போய்தான் பார்த்தேன்.இப்ப்டி ஏமாத்திட்டீர்களே பூஸ்.கர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  4. //நன்மை செய்வோர், நல்லவர்கள், கண் முன்னே துன்பம் அனுபவிக்கிறார்கள், கஸ்டப்படுகிறார்கள். ஆனால் பொல்லாதவர்கள், அடுத்தவருக்கு 5 சதம்கூட உதவி செய்யாதவர்கள், அடுத்தவர் குடும்பத்தை நாசமாக்கியோர்.. இவர்களெல்லாம் நல்லா இருக்கிறார்கள்... இது எப்படி?.//


    நமக்கு அப்படித்தான் தெரியும். அநியாயம் செய்பவர்கள் அனுபவித்தே ஆகணும் . ஆங்கிலத்திலே ஒரு வாசகம் உண்டு " What goes around comes around" வினை விதைத்தவன் வினை அறுப்பான்" எனக்கு இதிலே ரொம்ப நம்பிக்கை உண்டு.


    இந்த பதிவினாலே உங்களை பத்தி நெறைய்ய்ய தெரிஞ்சுக்கிட்டோம் . இருந்தாலும் சினிமாவுல போய் தூங்குறதேல்லாம் வெரி வெரி bad !

    ReplyDelete
  5. ஆரம்பத்தில் போட்ட பாடல் “உன் கண்ணில் நீர் வடிந்தால்..”பாடலை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தால் மேற் கொண்டு உங்கட பதிவை படிக்க மனசே இல்லாமல் எங்கட ரங்ஸ் நினைப்பாக வருது பூஸ்.

    ReplyDelete
  6. //இன்னுமொன்று சூஊஊஊப்பராகப் பாடுவேனே நான்:)))))))))))))))))))...
    சிந்து சிந்து நான் ஒரு சிந்து....
    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓஓஓஓஓஓ மைனா ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ மைனா.... கேட்குதோஒ? நான் பாடுவது? சூப்பராக இருக்கில்ல?:)))... சரி சரி முறைக்காதீங்கோ கர்ர்ர்ர்ர்:)).//



    நீங்க நல்லா பாடுவீங்கன்னு நான் நம்புறேன் அதிரா.அடுத்த பதிவில உங்க பாடல ஆடியோ வா இணைச்சு விடுங்களேன். எப்பூடி என் ஐடியா (இதனாலே எத்தன பேரோட கொலை வெறி தாக்குதல சமாளிக்கனுமோ தெரியலையே?? )

    ReplyDelete
  7. //“No வெட்கம் No ரோஷம்”:). // நல்ல பாலிஸி.டிரை பண்ணத்தோன்றுகின்றது.

    ReplyDelete
  8. எனக்கு பிடிச்ச பாடல் + பாடல் வரிகள் ... உங்க சொந்த கதையை(ஹி...ஹி...)படிக்கவே இல்லை :-)

    ReplyDelete
  9. ////“No வெட்கம் No ரோஷம்”:).// இதனால்தான் எங்களுக்குள் அன்பு இன்னும் வளர்ந்துக்கொண்டே இருக்கிரது . 100 % கேரண்டியான பதில் :-)

    ReplyDelete
  10. இதில் 90 சதம் என்னோட பதிலாவே இருக்கே ..அப்படியே காப்பி பேஸ்ட் செய்யலாமா..? :-)

    தொடர் அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. அதிரா...கலக்குறிங்க....ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது...அதிலும் ஒவ்வொரு கேள்விக்கும் முன்பு பாடல் வரிகளினை இணைத்து இருப்பது சூப்பப்ர்...

    உங்களுக்கும் பிடித்த பாடல்கள் பல, எனக்கும் பிடித்தது தான்...

    உங்களுடைய வீட்டு பழமொழி ரொம்ப நல்லா இருக்கே...வீட்டில் இருக்கும் அனைவருக்குள்ளே மட்டுமெ இதனை பயன்படுத்தினால் ரொம்ப நல்லது...

    ReplyDelete
  12. வாங்கோ இமா... மட்டின் பிரியாணி வித் அ.கோ.மு வெரி சொறி நீங்க சைவமாமே... சமீபத்தில அறிஞ்சேன்:)). உருளைக்கிழங்குப் பிரட்டல் + கு.புட்டு உங்களுக்கேதான்ன்ன்.

    //இமா said... 1

    super high light Athiis. ;)))) tks. ;))//

    மியாவ் மியாவ்.

    //what is this Vaans!!!!
    // எதுக்கு இப்போ அவிங்களைக் கூப்பிடுறீங்க?:))).

    //Note this point Haish. ;)// சத்தமா இமா.. இன்னும் இன்னும் சத்தமாஆஆஆஆஆ சொல்லுங்கோ.. எப்பூடிக் கூப்பிட்டாலும் கேட்காதாக்கும்... காதில பஞ்சூஊஊஊஊஊஊ வச்சிருக்கினம்:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    //(உங்களுக்கு வடிவான வாலாமே!!)//
    வால் மட்டும்தான் வடிவெண்டு சொன்னவையோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).

    //அதீஸ்... நான் கண்ணாடியைத் துலைச்சுப் போட்டன். ;)))) //
    பறாவாயில்லை, என்ர கண்ணாடிய வடிவாக் கேசரால:) துடைச்சுப்போட்டுப் பார்த்தாலே போதும்... முதலாவதே நீங்கதான்:)))). மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    மியாவும் நன்றி இமா. நல்லிரவு. நாளைக்கும் வந்து குட் மோனிங் சொல்லுங்கோ ஓக்கை?:)))).

    ReplyDelete
  13. வாங்கோ ஸாதிகா அக்காஆஆஆஆ...
    //முதல் வேலையா கீழே போய்தான் பார்த்தேன்.இப்ப்டி ஏமாத்திட்டீர்களே பூஸ்.கர்ர்ர்ர்ர்ர் //

    ஏமாத்துவதோ? நானோ? நான் தான் சொன்னதைச் செய்வேனே:))))... என் கண்ணாடில தூசு ஸாதிகா அக்கா:)))... வடிவாத் துடைச்சிட்டுப் பாருங்கோவன்:)).

    ReplyDelete
  14. ஒவ்வொரு பதிலுக்கும் சிரிச்சேன்........

    கலக்கல்!!!

    ReplyDelete
  15. வாங்கோ கிரிஜா...

    //" What goes around comes around" வினை விதைத்தவன் வினை அறுப்பான்" எனக்கு இதிலே ரொம்ப நம்பிக்கை உண்டு.
    // உண்மைதான், அதுக்காகத்தானே பயந்து வாழ்கிறோம். ஆனாலும்.. நல்லவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.. அதுதான் என்னெனப் புரியவில்லை.

    //இருந்தாலும் சினிமாவுல போய் தூங்குறதேல்லாம் வெரி வெரி bad ! //

    ஹா..ஹா..ஹா.. எனக்கு ஒரு 5 வயதாக இருக்கும். அப்பா அம்மா அக்காவோடு தியேட்டர் போனோம், படம் பார்க்கப்போவதென்றால் முதல் சந்தோசம் போனதும் அப்பா, எலிபண்ட் பிராண்ட் நெக்ட்டோ வும்(சோடா, இப்பவும் நா ஊறுகிறது, சூப்பராக இருக்கும்), வறுத்த கச்சான் சுருளும் வாங்கித்தருவார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    6 மணி ஷோ. தனிக்கதிரையில் இருந்தேன், படம் ஆரம்பமானது... நித்திரை தூக்கியடித்தது, மெதுவாக அப்பா தூக்கி தன் மடியில் வைத்திருந்தார், ஏனெனில் நித்திரையாகிவிட்டால் தூக்கிப் போவது கஸ்டமென, தூங்க விடாமல் தட்டிக்கொண்டிருந்தார்:), என்னால் முடியவில்லை, எழுந்து அப்பாவின் கதிரையோடு(வரிசையின் ஆரம்பத்தில் இருந்தார்) சாய்ந்துகொண்டு நின்றேன். அப்பாவின் கதிரைக்கு முன் கதிரையில் இருந்த ஒரு அங்கிள் திரும்பிப் பார்த்து, தன் மடியில் வந்திருக்கும்படி அழைத்தார்(அவர் அப்பாவின் ஒபீஷில் கிளார் ஆக இருந்தார்), அப்பாவைப் பார்த்தேன், போய் இருக்கச் சொன்னார்.

    அந்த அங்கிளின் மடியில் ஏறி இருந்து சூஊஊஊஊஊப்பர் நித்திரை:)), படம் முடிந்ததும் எழும்பிட்டேன் அழாமல்:)))).

    ReplyDelete
  16. //ஒரு தடவையாவது, பிளேனில பைலட் சீட்ல இருந்து பயணம் செய்யோணும்(அதொன்றுதான் பார்க்காத சீட்).//இதை மாத்திரம் எப்போ என்றைக்கு என்று, நோட் திஸ் பாயிண்ட் //எனக்கு மட்டும் சொல்லிடுங்க அதிரா // அந்த நாளன்று நான் space walk போய்விடுகிறேன் .

    ReplyDelete
  17. எல்லா பதில்களும் கலக்கலா இருந்திச்சு அதிரா .நல்லா சிரிச்சேன் .நாங்க எல்லாம்குறிப்பா ரஜனி படத்துக்கு போனா தூங்க மாட்டோம் .ரசிகர்கள் நிறைய காசு சாக்லேட் எல்லாம் வீசுவாங்க .அதை பொறுக்கி எடுத்துட்டுதான் படம் பார்ப்போம் .

    ReplyDelete
  18. //எங்களுக்கென குடும்பப் பழமொழி இயற்றி வைத்திருக்கிறோம்:).... அது “No வெட்கம் No ரோஷம்”:). //

    சூப்பர்


    நல்ல பதிவு !!

    ReplyDelete
  19. //பாடலை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தால் மேற் கொண்டு உங்கட பதிவை படிக்க மனசே இல்லாமல் எங்கட ரங்ஸ் நினைப்பாக வருது பூஸ். //

    ஸாதிகா அக்கா... இன்னும் தனியே இருக்கும் பலருக்கும், இப்பாடல் ஒரு கவலையை உருவாக்கியிருக்கும்... எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதனால் போட்டேன்...

    ஆனாலும் ஸாதிகா அக்கா... டக்கெண்டு இந்த லிங்கை கொப்பி பேஸ்ட் ஆக அனுப்பிடுங்கோ அங்கின:). இப்பதிலைப் பார்த்ததும் பாருங்கோவன் உடனே ரிக்கெட் வந்தாலும் வரலாம்ம்ம்ம்ம்ம்:, அதிராவால ஸாதிகா அக்காவும் ஒரு ட்ரிப் ரெடீஈஈஈஈஈஈஈ:)).

    நோ வெக்கம், நோ ரோஷம்.... ஸ்ராட் மீஈஈஈஈஈஈஇசிக்..... இண்டைக்கே ஆரம்பியுங்கோ ஸாதிகா அக்கா, கோபம் வாறமாதிரி இருந்தால் அதிராவை நினையுங்கோ.. ஓக்கை:)))).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  20. //நீங்க நல்லா பாடுவீங்கன்னு நான் நம்புறேன்//

    பு...வ...ஹாஆஆஆஆஆ... கையில இருந்த ரீ கீழே கொட்டிப்போட்டுது இதைப் படிச்சதும்ம்ம்ம்ம்ம்:))).


    //அதிரா.அடுத்த பதிவில உங்க பாடல ஆடியோ வா இணைச்சு விடுங்களேன். எப்பூடி என் ஐடியா (இதனாலே எத்தன பேரோட கொலை வெறி தாக்குதல சமாளிக்கனுமோ தெரியலையே?? )///

    ஏற்கனவே நான் பயத்தில கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருக்கிறேன்:))), இனி இது வேறயா?:)), இதைப் படிச்சதும் துப்பாக்கி உங்கட பக்கமும் திரும்பலாம் எதுக்கும் ஓடிப்போய் ஒளியுங்க:)))).

    மியாவும் நன்றி கிரிஜா.

    ReplyDelete
  21. வாங்க ஜெய்...

    //ஜெய்லானி said... 9

    எனக்கு பிடிச்ச பாடல் + பாடல் வரிகள் ... உங்க சொந்த கதையை(ஹி...ஹி...)படிக்கவே இல்லை :-)//

    பாடல் போடும்போதே நினைத்தேன், உங்களுக்கு நிட்சயம் பிடிக்குமென.

    சொந்தக்கதையோ?:)) ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ககக?:))))))))).

    உண்மைதானே.... உள் வீட்டுக்குள் ஒருவரை ஒருவர் நம்பித்தானே ஒன்றாக குடும்பம் நடத்தத் தொடங்குறோம்... ஒன்றுக்குள் ஒன்றான பின், எதுக்கு ரோஷம், ஈகோ எல்லாம்.

    //இதில் 90 சதம் என்னோட பதிலாவே இருக்கே ..அப்படியே காப்பி பேஸ்ட் செய்யலாமா..? :-)

    தொடர் அவ்வ்வ்வ்வ்வ்வ் ///

    இப்பூடி எதையாவது சொல்லிச்சொல்லியே மடக்கிப்போடுவது தொழிலாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்:)).

    மியாவும் நன்றி ஜெய்.

    ReplyDelete
  22. எங்க ஊரில் கிட்டத்தட்ட 50 பேரை லைபிரரியில் bomb வைத்துக் கொன்றார்கள். அதில் என் மாமாவும் அடக்கம் ( கல்யாணமாகி 6 மாசம் ). இது போல நிறைய நடந்திருக்கு. இது விதி அல்ல. கொலைவெறி. இப்ப நோர்வேயில் நடந்ததும் அப்படித் தான்.

    நீங்க ப்ளேனிலை ட்ரைவர் ஷீட்டில் இருக்கப் போவும் நாளை சொல்லுங்கோ நான் எங்காவது சேப் ஆஆஆஆ பதுங்கி இருக்கிறன். எனக்கு ப்ளேனிலை என் ஷீட்டில் இருக்கவே பயம். எப்படா இந்த தொல்லை கீழே இறங்கும் என்று இருக்கும். தரையை தொட்டதும் ஒரு பெருமூச்சு விடுவன். அடுத்த முறை பாடி ரெக்கார்ட் பண்ணிப் போடுங்கோ. நல்லா டான்ஸ் ஆடுவீங்கள் என்றால் அதையும் போடுங்கோ சரியா..
    என்னையும் இந்த தொடர்பதிவுக்கு அழைத்து இருக்கிறார்கள். இந்தக் கேள்விகளை நான் அப்படியே தூக்கிட்டு போறேன். ஓக்கை.

    ReplyDelete
  23. வாங்க கீதா...

    எனக்குப் பாடல்கள் முளுமையாகப் பிடிக்காவிட்டாலும்... அதில் வரும் வரிகள் மனதிலே பதிந்துவிடும், சிலவேளை, அவ் வரிகள் என்ன பாட்டில் இருக்கென்பது தெரியாமல் இருக்கும்:)).

    எங்கட குடும்பப் பழமொழி, எல்லோரையும் கவர்ந்திருக்கென்பது, பின்னூட்டங்கள் மூலம் அறிந்ததும், கண்ணே கலங்கிப்போச்ச்ச்ச்ச்ச்ச்ச்..

    உண்மைதான், ஏன் நட்புக்குள்ளும் இதனைக் கையாளலாமே...

    என்னை எத்தனை பேர் திட்டினார்களோ தெரியாதே:)))... “பார்.. வெட்கம், ரோஷம் இல்லாமல் ஓடி வந்து பின்னூட்டம் போடுவதை” என:)))).... ஹா...ஹா....ஹா....

    மியாவும் நன்றி கீதா.

    ReplyDelete
  24. வான்ஸ்ஸ்..

    //அடுத்த முறை பாடி ரெக்கார்ட் பண்ணிப் போடுங்கோ// பாடி என்பதை body இன் டமிலாக்கம்:) ஆக்கும் என எண்ணிப் பயந்திட்டேன்ன்ன்ன் கிக்..கிக்..கீஈஈஈஈ:)).

    ReplyDelete
  25. வாங்கோ ஆமினா...

    கொஞ்ச நாட்கள் இடையில நீங்க பிசியாகிட்டதுபோல தெரிந்ததும்..உங்கட புதுப் பதிவுகள் எதையும் காணவில்லை, அத்தோடு கொஞ்சம் “டச்சு” விட்டுப்போயிருந்துது:))).. இப்போ டச் பண்ணாச்சூஊஊஊஊ:))).

    மியாவும் நன்றி ஆமினா.

    ReplyDelete
  26. 1. சைனீஸ் உணவுகளே முதலிடத்தில் பிடிக்கும்.


    சைனீஸ் உணவு என்றால் இந்த பாம்பு சூப்பு,தவளை பொறியல்,நட்டுவாக்கலி வருவல்... இதா...சகோ?

    கபம் புராணத்தில் இதற்க்கு வரி விலக்கும் உண்டு.

    அருமையான பகிர்வு நன்றி!

    ReplyDelete
  27. வாங்க அஞ்சலின்..

    //இதை மாத்திரம் எப்போ என்றைக்கு என்று, நோட் திஸ் பாயிண்ட் //எனக்கு மட்டும் சொல்லிடுங்க அதிரா // அந்த நாளன்று நான் space walk போய்விடுகிறேன் . //.

    அடக் கடவுளே...:)), எவ்ளோ ஆசையாக... உன் கடைசி 3 ஆசையைச் சொல்:)) எனக் கேட்ட இடத்தில.....

    நானும், இப்பூடிப் பப்ளிக்கில சொன்னால், இதை ஆராவது “<..நல்ல..> மனமுள்ள பைலட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”(நோட் திஸ்<> பொயிண்ட் மக்கள்ஸ்ஸ்:))) படிச்சால்.. ஓடிவந்து கூட்டிப் போய்க் காட்டினாலும் காட்டுவினம் எனச் சொன்னால்...:))).இப்பூடிக் கவிழ்க்கினமே என்னைப் போய்:))...

    பாருங்கோவன் ஒருநாளைக்கு, அதிரா, பைலட் சீட்ல இருந்து ஜன்னலைத் திறந்து:), வெளியில, என் பச்சைக்கல்லு வச்ச மோதிரக்கையால:) டாட்டா காட்ட, நீங்களெல்லோரும் நாடியில:) விரல் வச்சுப் பார்க்கப்போறீங்க:)))).

    //நாங்க எல்லாம்குறிப்பா ரஜனி படத்துக்கு போனா தூங்க மாட்டோம் .ரசிகர்கள் நிறைய காசு சாக்லேட் எல்லாம் வீசுவாங்க .அதை பொறுக்கி எடுத்துட்டுதான் படம் பார்ப்போம் . //

    உண்மையாகவோ சொக்கலேட் காசா? நான் இதை முதன் முதலாகக் கேள்விப்படுறேன்.

    தமிழ்ப் படம், தியேட்டரில் எனில் எனக்கு நித்திரை வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஆனா பல ஆங்கிலப் படங்கள் மட்டும் நித்திரை கொள்ளாமல்(உஸ்ஸ்ஸ் கின்னஸ்ல பதியோணும்:))) பார்த்திருக்கிறேன், காரணம் அது 2 மணித்தியாலத்துக்குள் பெரும்பாலும் முடிஞ்சிடுமே.

    மியாவும் நன்றி அஞ்சலின்.

    ReplyDelete
  28. வாங்க கவிக்கா...

    //(*_*) said...// இது சூஊஊஊப்பர்:))).

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிடாதீங்க நான் வருவேன்.... ”டச்சு” விட்டுப்போனதுபோல...:).. அங்கின வர முடியேல்லை:((.

    மியாவும் நன்றி கவிக்கா.

    ReplyDelete
  29. வாங்க வான்ஸ்ஸ்..

    //அதில் என் மாமாவும் அடக்கம் ( கல்யாணமாகி 6 மாசம் ). இது போல நிறைய நடந்திருக்கு. இது விதி அல்ல. கொலைவெறி. இப்ப நோர்வேயில் நடந்ததும் அப்படித் தான்.//

    உண்மைதான், இப்படி நிறையச் சம்பவங்கள்.. கேட்டாலே மனம் எல்லாம் என்னவோ செய்யும். ஓம்..நோர்வேயில 85 பேர் ஒரே நேரத்தில்:((...

    //நீங்க ப்ளேனிலை ட்ரைவர் ஷீட்டில் இருக்கப் போவும் நாளை சொல்லுங்கோ நான் எங்காவது சேப் ஆஆஆஆ பதுங்கி இருக்கிறன்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என்னை நம்புங்கோ.. நியூப்:)) பக்கம்தான் என் “கன்னி ஓட்டம்” த்தை நடாத்த யோசிக்கிறேன்...:)))) மீஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    இடைப்பதில் மேல இருக்கு.

    //என்னையும் இந்த தொடர்பதிவுக்கு அழைத்து இருக்கிறார்கள். இந்தக் கேள்விகளை நான் அப்படியே தூக்கிட்டு போறேன். ஓக்கை//

    ஓ.. வேறிடத்திலும் அழைப்பு வந்திருக்கோ? எனக்குத் தெரியாது... அப்போ நிட்சயம் எழுதியே ஆக வேண்டும், தொடருங்கோஓஓஓஓஒ.

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.

    ReplyDelete
  30. வாங்க அந்நியன்ன்ன்...

    உங்கள் பெயரைப் பார்த்தவுடன் எனக்கு, விக்ரமும், தலைமயிரை முன்னாலே தொங்கவிட்டுப்போட்டு பார்க்கும் பார்வையும்தான் கண்ணிலே தோன்றும்:))).

    //சைனீஸ் உணவு என்றால் இந்த பாம்பு சூப்பு,தவளை பொறியல்,நட்டுவாக்கலி வருவல்... இதா...சகோ?

    கபம் புராணத்தில் இதற்க்கு வரி விலக்கும் உண்டு.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஜெய் இடம் ரியூசனுக்குப் போனனீங்களோ?:)))). நான் சயன்ஸ் படிக்காமல் விட்டதே.. இந்தத் தவளையெல்லாம் வெட்டிப் பார்க்கோணும் எனச் சொன்னதாலதான்:)))).

    எங்கட பக்கத்து வீட்டு வெள்ளையர்கள், சைப்பிரஸ் போய் வந்து சொன்னார்கள், தாங்கள் அங்கு நத்தை சாப்பிட்டார்களாம், நன்றாக இருந்ததென.... ஆஆஆஆஆஆஆஆ என்ன கொடுமை இது?... என்னை விடுங்கோ நான் ஓடப்போறேன்:))))... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    மியாவும் நன்றி அயூப்.

    ReplyDelete
  31. சைனீஸ் ஐட்டம் ரொம்பவும் பிடிக்குமா..? ஹி..ஹி.. என்னிடம் ஸ்பெஷல் ரெஸிபி இருக்கு தரட்டுமா.????

    23ம் புலிக்க்கேசி ஸ்டைலில் முதலில் மண்புழு விலிருந்துதான் ஆரம்பிக்கோனும் :-)) ரெடியா ?

    ReplyDelete
  32. கடவுளே!!கடவுளே!!கடவுளே!!கடவுளே!!கடவுளே!!கடவுளே!!கடவுளே!!கடவுளே!!கடவுளே!!:)))).

    ஜெய் க்குப் புடிச்ச ஐட்டமாச்சே அந்நியன் சொன்ன ஐட்டங்கள் என நினைத்தேன்:)).. நினைச்ச கையோடு... ரெசிப்பியாமேஏஏஏஏஏஏ......

    கடவுளே இதைவிட தண்ணிக்குள்ளயே இருக்க விட்டிருக்கலாம்.... அப்பூடியெண்டெல்லாம் சொல்ல மாட்டேன்...ஹா..ஹ...ஹ..ஹ்..

    ReplyDelete
  33. ஆஹா லேட்டோ..
    ஆதிரா said : ஏன் லேட் ( நர நர... பல்லை கடிப்பது)
    என்ன சொல்லி சமாளிக்கலாம் ..ஆன் நெட் கனைக்டாவுலய்ங்க ... பெஞ்ச் மேல நிக்க வச்சுராதீங்க ... இதோ படிச்சுட்டு வந்தர்றேன்....

    ReplyDelete
  34. குடும்பத்தோடு நீண்டதூரம் காரில் “றைவ்” போவது.

    எனக்கு மாட்டு வண்டியில போவது ... ஹாய் ஹாய் டுர் டுர்ர்ர் டுர்ர்ர்ர்

    ReplyDelete
  35. நம்மள பாத்தா யாரும் பயப்பட மாட்றாய்ங்க்ய ... இப்ப ஒருத்தர பயப்பட வைக்கறன் பார் டேய் அந்த பட்ட சாராய்த்த எடுத்து வோட்காவோட மிக்ஸ் பண்ணி காக்டெய்லா கொடு..... வ்வாவ் வ்வாவ்.. குடிச்சுட்டு தெம்பா போலாம்னு பாத்தா ... வாமிட் பண்ணிட்டனே.. இனி பயப்பட மாட்டாய்ங்க்ய சிரிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க்ய குனிஞ்சிட்டே போயிரவேண்டியதான்....

    ReplyDelete
  36. ஆஹா கலக்கீட்டீங்க .. ( இப்படியாவது பொய் சொல்லி சந்தோசபடுத்துவோம்...) ஹி ஹி ஹி

    ReplyDelete
  37. கலக்கலா பதில் சொல்லிருக்கீங்க,ரசித்தேன் அதிரா!!

    ReplyDelete
  38. இல்லைங்க உண்மையிலயே கலக்கிட்டீங்க... அசத்தலான பதிவுக்கு வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்.. இதே போல் எப்பவும் சிரித்தவாறே நகைச்சுவை உணர்வுடன் சந்தோசமாக இருக்க ஆண்டவன் உங்களுக்கு அருள் புரியட்டும்...

    ReplyDelete
  39. ம்யாவ்..ம்யாவ்..மியாவ்!

    மியாவ்..மியாஆவ்..மியாஆவ்!

    ம்மியாஆஆவ்..ம்மிமீயாவ்..ம்ம்ம்ம்ம்ம்ய்யாஆஆஆவ்!

    ஹிஹி,ஒண்ணுமில்ல, மியாவின் வால் கட்டில்கால்ல மாட்டிகிச்சாம்,அதான் கத்துது! நான் வாலைப் பிடித்து தூக்கி வீசப்போறேன்னு நினைச்சு எல்லாம் கத்தலை.;) எனக்கு பூனைன்னா ரெம்ப பிடிக்கும். அதனால உப்புடியெல்லாம் பண்ணமாட்டேன்.ஹிஹிஹி!

    ReplyDelete
  40. சம்பந்தமில்லாம கமென்ட் போட்டிருக்கனேன்னுதானே அல்லாரும் மண்டையப் பிச்சுக்கறீங்க? வெறிகுட்! :)

    இனிமேல் எல்லாப் பக்கமும் இப்பூடி சம்பந்தாசம்பந்தமில்லாம கிறுக்கறதுன்னு முடிவு பண்ணிருக்கன்,அதான்!
    :))))))))))

    ReplyDelete
  41. பத்து ரூபா நோட்ஸ் ,காசு ,சாக்லேட்எல்லாமே ( முதல் கமெண்ட்ல கமாவ மறந்துட்டேன் )அதெல்லாம் எங்க சென்னை திரை அரங்கில் தான் விழும் .

    ReplyDelete
  42. அதிரா, இனிமேலும் கேப்பீங்க/எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?../என்று??!!!! ஹாஹாஹா!

    இப்ப கொஞ்சம் கடி மூட்ல இருக்கேன்,அதான் இப்படி கடிக்கிறேன். மெதுவா வந்து வன்..ரூ..த்றீ-யப் படிச்சு கமென்ட் போடறேன்,ஓக்கை? :) ;)

    ReplyDelete
  43. / பத்து ரூபா நோட்ஸ் ,காசு ,சாக்லேட்எல்லாமே ( முதல் கமெண்ட்ல கமாவ மறந்துட்டேன் )அதெல்லாம் எங்க சென்னை திரை அரங்கில் தான் விழும்./ ஜெர்மனியிலயும் சாக்லேட்-காசெல்லாம் வீசுவாங்களோன்னு சந்தேகப்பட்டேன்..அதான? ;)

    ReplyDelete
  44. வன்.. ரூஊஊ.. த்றீஈஈஈஈ... ந.. நோ நோ நொட்ஸ்ஸ்ஸ்ஸ்:))//
    ஆகா...ஒரு டெரர் தனமான தலைப்போடு கிளம்பியிருக்காவே அக்காச்சி, இருங்க படிப்போம்.

    ReplyDelete
  45. முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக//

    நீங்கள் 90 வயசு ஆளுங்க என்பதை, இப்படிக் காலத்தால் அழியாத கானங்களைப் போட்டுக் காட்டியா, நாம புரிஞ்சுக்கனும்?

    ReplyDelete
  46. வித்தியாசமான தலைப்பின் கீழ், சுவாராஸ்யமான பகிர்வாக உங்கள் ரசனைகளைப் பகிர்ந்திருக்கிறீங்க. கலக்கல் பதிவு.

    ReplyDelete
  47. இது இரண்டாவது வட்டம்... குட் மோனிங் அதீஸ்.

    1. நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. அது மயில்தான், மயில்தான், மயில்தான். (எப்புடீ!!) ;))))

    2. முக்கிய செய்தி... 2012க்கு முதல்... டெய்லி நியூ வானத்தில பூமிநடுக்கமாம். ;)

    3. நான் வேதம்.

    4. 0-- குறிப்புக்கு பதில் ஏதும் வந்துதோ அதீஸ்!!
    ~~~~~~~~~~~~~~~~~~~
    @ --
    4 a. //நான் வாலைப் பிடித்து தூக்கி வீசப்போறேன்னு நினைச்சு எல்லாம் கத்தலை./ ஹிக் ;)

    4 b. //சம்பந்தமில்லாம கமென்ட் போட்டிருக்கனேன்னுதானே அல்லாரும் மண்டையப் பிச்சுக்கறீங்க? // இல்லியே! இருக்கே! பம்மல் சம்பந்தம். ;)

    4 c. //எல்லாப் பக்கமும் இப்பூடி சம்பந்தாசம்பந்தமில்லாம கிறுக்கறதுன்னு// ம்... பக்கம்.. ஓகே. நோ உலகம்.

    4 d. மீ நோ கமண்ட் அபவுட் யுவர் 'மூட்' ;)
    ~~~~~~~~~~~~~~~~
    @ ஏஞ்சல்
    5. //( முதல் கமெண்ட்ல கமாவ மறந்துட்டேன் )// இது கயித்துக்குக் கீழ 'கானா'வா!

    “உன் கண்ணில் நீர் வடிந்தால்..” ஹும்! ஹும்! ;( டிஷ்யூ ப்ளீஸ்..

    ReplyDelete
  48. ஹையா ஹையா எனேக்கே ஐம்பதாவது கமென்ட் கட்லெட்

    ReplyDelete
  49. வெஜிடபிள் கட்லெட்

    ReplyDelete
  50. கடவுளே!!!.. தேம்ஸ்ஸ்ஸ் வெயார் ஆ யூஊஊஊஊ?:)). மகியின் கமெண்ட் படிச்சேனா.. இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் இழந்தாய் போற்றி ஆகிட்டேன்:)))... அது போதாமைக்கு இமா ரீச்சர் வேற ஏ.. பி எல்லாம் போட்டு வச்சிருக்கிறா.... பொறுங்க முதல்ல இருந்து வந்தால்தான் எனக்கு எழுதுற மூடேஏஏஏஏஏ வரும்...:)).

    அதுக்குள் 50 ஆவது வடெயாமே... இருங்க சுட்டிட்டு ஓடிவாறேன் அஞ்சலின்:)). 49 ஆவதுதான் இப்போ அடுப்பில பொரியுதூஊஊஊஊஉ:)) நான் வடையைச் சொன்னேன்.

    மாயாவையும் காணேல்லை, நிரூபனையும் காணேல்லை.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  51. ஆ..... மாயா.. வாங்கோ..

    //ஆதிரா said : ஏன் லேட் ( நர நர... பல்லை கடிப்பது)//

    ஆ இல்ல மாயா.... அது “அ” ஓக்கை?:). பல்லுக்கடிக்கிறது முணுமுக்கிறதெல்லாம்... என்கிட்ட இல்லை:)), ஸ்ரெயிட்டாப் பிராஆஆஆண்டல்தான்:)). பயப்பூடாதீங்க ”சேவல் வால்” குடிக்கிறவங்களையெல்லாம் பிராண்டிட மாட்டேன்:))))).

    //என்ன சொல்லி சமாளிக்கலாம் ..ஆன் நெட் கனைக்டாவுலய்ங்க ... பெஞ்ச் மேல நிக்க வச்சுராதீங்க .../// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பகல் முளுவதும் கம்பிமேல நிண்டுபோட்டு... கனெக்ட்டு ஆகல்லியோ?:)).. சரி சரி அது போகட்டும்..

    //எனக்கு மாட்டு வண்டியில போவது ... ஹாய் ஹாய் டுர் டுர்ர்ர் டுர்ர்ர்ர் //

    சிரிச்சு முடியேல்லை மாயா... மாட்டு வண்டியும் சூப்பர் சவாரிதானே... கார் எங்க வேணுமெண்டாலும் கிடைக்கும், ஆனா மாட்டு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்காதே... சோஓஓ அது விலைமதிப்பற்ற சவாரிதான்.

    ReplyDelete
  52. தேம்ஸ் பக்கத்திலதானே ஓடுது! ;)

    ReplyDelete
  53. //நம்மள பாத்தா யாரும் பயப்பட மாட்றாய்ங்க்ய// ஆர் சொன்னது?:), நீங்க சிரிச்சாலே பயமா இருக்கே... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    //இனி பயப்பட மாட்டாய்ங்க்ய சிரிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க்ய குனிஞ்சிட்டே போயிரவேண்டியதான்....// ஹா..ஹா...ஹா... எப்பூடி இப்பூடியெல்லாம் குடிக்கிறீங்க சொறி/சாரி.. எழுதுறீங்க?:))).

    அங்கின மாய உலகத்தில ஆரோ:), சொல்லிச்சினம் அதிரா “பிராஞ்” ஓபின் பண்ணப்போறா என:) அதைக் கேட்டுப் பயந்திட்டீங்களோ என நினைச்சேன்:)). பயப்புடாதீங்க 2012 க்கு அப்புறம்தான் அங்க மூவ் பண்ணுவம்:))).

    மியாவும் நன்றி மாயா.

    ReplyDelete
  54. /இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் இழந்தாய் போற்றி ஆகிட்டேன்:)))..// :P :P

    மதுரைக்கு வழி வாயிலே என்று பளமொளி:) சொல்வாங்க அதிரா..அதே மாதிரி தேம்ஸெங்கே-ன்னு கேக்க ஆரமிச்சுட்டீங்க,வழி கிடைச்சிரும்,டோன்ட் வொரி!

    நீங்க ஓட்டிட்டு வார ப்ளைட் டைமிங் சொல்லுங்க,எனக்கு பச்சைக்கல்லு ரொம்ப ராசியான கல்லுன்னு ஜோஸீயர் சொல்லிருக்காங்க,நீங்க ஜன்னல் வழியா டாட்டா சொல்லும்போது நைஸா மோதிரத்த அபேஸ் பண்ணிடலாம்னு இருக்கேன்.;)

    ReplyDelete
  55. //இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் இழந்தாய் போற்றி ஆகிட்டேன்:)))..// :P :P
    // கிக் கிக் கிக்

    இண்டைக்கு எனக்கு நாள் நல்லாப் போகும் போல இருக்கே. ;))

    ReplyDelete
  56. //இமா said... 53

    தேம்ஸ் பக்கத்திலதானே ஓடுது! ;)//

    நான் இப்போ ரொம்பத் தெளிவா இருக்கிறேன்:), ஸ்ரெடியா இருக்கிறேன்:), என்னைக் குழப்பி இடையில பதில் போடாமல் மிஸ் பண்ண வைக்க சதி எல்லாம் நடக்குது:))).

    எல்லோருக்கும் பகல் கனவூ ஊஊஊ, அதிரா தேம்ஸ்ல குதிக்கப்போறா... தொல்லை ஒளியப்போகுதென கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதுதான் நடக்காது அதிராவோ கொக்கோ:)).. ஸ்ராட் மீஈஈஈசிக் வன்.. ரூஊஊ.. த்றீஈஈஈஈ.... நான் யோகா செய்றேன்ன்ன்ன்ன்ன்... தேம்சின் கரையில குளுகுளு குளிர்காத்தில:)))))).

    ReplyDelete
  57. மகி நீங்க us இலிருந்து வர்றதுக்குள்ள நான் உள் நாட்லருந்து அபேஸ் பண்ணிடுவேனே !!பச்சை கல் மோதிரத்தை

    ReplyDelete
  58. கடவுளே!!!! கூட்டுச் சதி நடக்குது:))))....

    மனச்சாட்சி: அதிரா இப்பத்தான் ஸ்ரெடியாஆஆஆஆஆ இருக்கோணும்..

    அதிரா: நான் ரொம்பத் தெளிவா, ஸ்ரெடியா இருக்கிறேன்.. ஆஆஆ எங்கின விட்டேன்... இதோ தொடர்றேன்..

    ReplyDelete
  59. /நான் உள் நாட்லருந்து அபேஸ் பண்ணிடுவேனே !!பச்சை கல் மோதிரத்தை /உங்களுக்கும் பச்சைக்கல்ராசியா ஏஞ்சலின்? ஹும்,ச்சீ,ச்சீ,இந்தப் பழம் புளிக்கும் கதையா விடோணும் போலருக்கே?!

    அதிரா வேற என்ன நகையெல்லாம் போட்டுட்டு ப்ளேன் ஓட்டப்போறீங்கன்னு சொன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்! ;)

    /இண்டைக்கு எனக்கு நாள் நல்லாப் போகும் போல இருக்கே. ;)) /நீங்க 1,2.3,4a,4b,4c-ன்னு வரிசைப்படுத்தி போட்ட கமென்ட்டைப் புரிந்துக்கவே ஒரு நாள் போதாது போலருக்கே இமா?!!

    ReplyDelete
  60. ஆரதூஊஊஊஉ என் வாலைப் பிடிக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ஆஆஆஆ வாங்க மகி.

    உள்ளத்திலயே அழகானது வால்தானாம்:)) மேல:) சொல்லிச்சினம்:)).. அதைப்போய்ப் பிடிக்கிறீங்களே...

    ஒரு பிளாஸ்பக்:)).

    ரியூசன் வகுப்பில, ஒரு கேர்ள், எப்பவும் ஹங்கியால வாயைப் பொத்திக்கொண்டுதான் எழுதுவா(அது ஒரு பழக்கம்), ஒருநாள் மாஸ்டர் சொன்னார்(அவர் பொல்லாத ஜோக்கர்) “பிள்ளை, உன்னில அழகான பகுதியே அந்த வாய்தான், அதை ஏன் மறைச்சுப்பிடிக்கிறாய்” எண்டு:)).

    //அதிரா, இனிமேலும் கேப்பீங்க/எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?../என்று??!!!! ஹாஹாஹா! //

    ரொம்பவும் சாரீஈஈஈஈஈஈஈஈ... இனிமேல் அப்பூடியெல்லாம் கேட்கவே மாட்டேனப்பா:)))) நீங்க பத்திரமா இருங்க:).

    //இப்ப கொஞ்சம் கடி மூட்ல இருக்கேன்,அதான் இப்படி கடிக்கிறேன். //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) கடிக்கிறதுக்கு இரும்முச் சுட்டியல், கோடாரி, பாறாங்கல்லு ஏதும் கிடைக்காமல்... அதிராதானோ அம்பிட்டேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்* அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))))).

    ம்ம்ம்மீஈஈஈஈஈயாஆஆஆஆஆஅவும் (மியாவும்) நன்றி மகி.

    ReplyDelete
  61. /நான் இப்போ ரொம்பத் தெளிவா இருக்கிறேன்:), ஸ்ரெடியா இருக்கிறேன்:), / ;) எப்பவுமே ஸ்டெடியாத் தெளிவா இருக்கிறவங்க இப்படியெல்லாம் சொல்லிக்க மாட்டாங்க. ஒரு மிதப்பில் இருக்கற குடிமகன்கள்தான் இப்பூடிச் சொல்வாங்கன்னு கேள்வி! ;):)
    இமா&ஏஞ்சல்,நீங்க இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? உங்க பொன்னான கருத்துக்களை மழையென பொழியுங்க,அதிராவின் கமென்ட் பொட்டிய திக்குமுக்காட வச்சிடலாம்,இன்னிக்கு!!!!
    B-) B-)

    ReplyDelete
  62. கடவுளே!!! பிளேன் தலையில விழுந்தாலும் பறவாயில்லை பச்சைக்கல்லை அபேஸ்:)) பண்ணிடோணும் என ஒரு கூட்டமே அலையுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)). தெரியாமல் உண்மையை உளறிட்டேன் வாபஸ் வாக்கிக்கொள்கிறேன்... பைலட் ஆகும் ஆசையை அல்ல:))... பச்சைக் கல்லுப் போடுவதை:)).

    அதிராவோ கொக்கோ... இனி இமிடேஷந்தான்ன்ன்ன்ன்ன்ன்:))).

    ReplyDelete
  63. ///நீங்க 1,2.3,4a,4b,4c-ன்னு வரிசைப்படுத்தி போட்ட கமென்ட்டைப் புரிந்துக்கவே ஒரு நாள் போதாது போலருக்கே இமா?!!// "சொன்னது நீ தானா???" ஒண்டும் இல்ல... அதிராட பாட்டெல்லாம் பார்க்க எனக்கும் பாட வேணும் மாதிரி வந்துட்டுது. ;))

    ReplyDelete
  64. //எப்பவுமே ஸ்டெடியாத் தெளிவா இருக்கிறவங்க இப்படியெல்லாம் சொல்லிக்க மாட்டாங்க. ஒரு மிதப்பில் இருக்கற குடிமகன்கள்தான் இப்பூடிச் சொல்வாங்கன்னு கேள்வி! ;):)///

    ஹா....ஹா...ஹா..... ஃபோர் எ சேஞ்..... புவஹாஆஆஆஆஆஆ.... புவஹாஆஆஆஆஆஆஆஆஆஅ... என்னால சிரிச்சு முடியேல்லை:)).. வடிவேல் ரேஞ்சில சொறி வடிவேல் அங்கிள்(மதுரைகாரராச்செ:)) ரெஞ்சுக்குப் போயிட்டமாதிரி ஒரு பீலிங்சூஊஊஊஊஊ(இது வேற சூஊஊஊஊ:)).

    ///இமா&ஏஞ்சல்,நீங்க இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?//

    அடக் கடவுளே.... இப்ப எதுக்கு உங்களுக்குப் பக்கவாத்தியமெல்லாம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  65. //கடிக்கிறதுக்கு இரும்முச் சுட்டியல், கோடாரி, பாறாங்கல்லு ஏதும் கிடைக்காமல்... அதிராதானோ அம்பிட்டேன்... அவ்வ்வ்வ்வ்//
    அதுதானே!!

    ReplyDelete
  66. //பிளேன் தலையில விழுந்தாலும் பறவாயில்லை // கர்ர்ர்ர்ர்! ஆரைப்பார்த்து இப்பூடி சொல்றீங்க? நான் இன்னொரு ப்ளேனை அட்வான்ஸ் புக் பண்ணி, உங்கள ஓவர்டேக் பண்ணும்போது ஹேன்ட் ஷேக் பண்ணற சாக்கில மோதிரத்தை எடுத்துக்கலாம்னு இருந்தேன். ஏஞ்சலுக்கு இந்த பிரச்சனையெல்லாம் இல்லையே, அவிங்களுக்குதான் றெக்கை இருக்குதே..பாரதிராஜா பட ஹீரோயின் மாதிரி ஒயிட் ட்ரெஸ்லே அயகாப் பறந்துவருவாங்க. :)))))))))

    எனிவேஸ்,இதெல்லாம் சொல்லாம செய்யணும்..இப்பத்தான் நீங்க உஷாராகிட்டீங்களே! ;)

    ReplyDelete
  67. //இமா&ஏஞ்சல்,நீங்க இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? // ;) வளிமொளிகிறேன்ன்ன்ன். ;)) இல்ல, இல்ல. ;) நான் அதை ஆமோதிக்கிறேன்.

    //உங்க பொன்னான கருத்துக்களை மழையென பொழியுங்க,// சோ!!!!!!!!!

    //அதிராவின் கமென்ட் பொட்டிய திக்குமுக்காட வச்சிடலாம்,இன்னிக்கு!!!!// ம். ஆகட்டும். ரெடி.. ஸ்டார்ட். ;)

    ReplyDelete
  68. //இப்ப எதுக்கு உங்களுக்குப் பக்கவாத்தியமெல்லாம்...// பாட்டு நல்லா இருக்க வேணும் எண்டால் பக்க வாத்தியம் நல்லா இருக்கிறது அவசியம்.

    ReplyDelete
  69. //வளிமொளிகிறேன்ன்ன்ன்.//ஹாஹ்ஹா! உங்ககிட்ட தமிள் துல்லி வி'ழை'யாடுதே இமா? வெரி குட்! மேலே வையுங்கோ! ;)

    இந்த மழையெல்லாம் பத்தாது..இடிமின்னல் எல்லாம் வரோணும்..தேவதை எங்கே? காணவில்லையே!!!

    ReplyDelete
  70. கடவுளேஏஏஏஏஏ எங்கின விட்டேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஓடர் மறந்து போச்ச்ச்ச்:)).. ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்... அஞ்சலின்ல:))....அதிராவோ கொக்கோ... நாங்க காரியத்தில கண்ணாக்கும்:)). காலைமை ஜெயாரீவி இன்றையநாள் இனிய நாள் சாத்திரத்தில சொன்னவை.... குழப்பன்ராசியாக் கிடக்கு:)) ஸ்ரெடியா இருங்கோ எண்டு:)).. அதுதான் நான் ரொம்ப ஸ்ரெடியா இருக்கிறேன்:)).

    வாங்க அஞ்சலின்... கட்லட் சுட்டுத்தறதே பெரும்பாடு அதுக்குள்ள மரக்கறி கட்லட் கேட்குதோ?:)).. இருந்தாலும் கேட்டிட்டீங்க.... கொஞ்சம் பொறுங்கோ “ஆனந்தபவனுக்கு” ஓடர் அனுப்பிட்டன்:)) இப்ப வந்திடும் பிளேன்ல:)).

    ReplyDelete
  71. //உங்ககிட்ட தமிள் துல்லி வி'ழை'யாடுதே இமா?// ம்.. என்ட தமிளோ!! அது பூஸ் தமிள். எல்லாம் சகவாச தோஷம். ;)

    //மேலே வையுங்கோ!// வைப்பன், ஆனால்.... எல்லாரும் "இமாவே!!" என்று ஏங்கிப் போவினம், பாவம். இதோட விடுவம்.

    இடி மின்னல். ம். /
    ~
    /

    ReplyDelete
  72. ;(( மின்னல் உடைஞ்சு போச்சுது. ;((

    ReplyDelete
  73. சரி..75உடன் நிறுத்திக்கலாம்னு இருக்கேன்! ;) பாவம் அதிரா,பிழைச்சுப்போங்க இன்னிக்கு! ;) ;)

    ReplyDelete
  74. //எனிவேஸ்,இதெல்லாம் சொல்லாம செய்யணும்..இப்பத்தான் நீங்க உஷாராகிட்டீங்களே! ;) //

    நான் அப்ப தொடக்கம் ரொம்ப தெளிவா, ஸ்ரெடிஆஆஆஆஆஆஆ இருக்கிறேன்..:)). ஆனா நான் என் முடிவை மாத்திட்டேன்:)).

    என் “கன்னிப்பிளேன் ஓட்டம்” நியூவை நோக்கியல்ல:)) ஆஆஆஆஆமெரிக்காவ நோக்கி:)).

    ///வளிமொளிகிறேன்ன்ன்ன்.//// ஐஐஐஐஐஐ நான் பார்த்ததும் கேட்க நினைச்சேன்..:)) சந்து ஓடிவாங்க.. ரீச்சரைப் பிடிச்சிட்டேன்...(மொழிப் படம் பார்த்ததால:) நான் ரொம்பத் தெளிவாஆஆஆஆஅ இருக்கிறேன்:)).

    //பாட்டு நல்லா இருக்க வேணும் எண்டால் பக்க வாத்தியம் நல்லா இருக்கிறது அவசியம். // ஆஆஆஆஆஆ தத்துவம்...... தத்துவம்..

    கடவுளே எங்கின விட்டேன்.. இதோ வருகிறேன்:))).

    ReplyDelete
  75. //காலைமை ஜெயாரீவி இன்றையநாள் இனிய நாள் சாத்திரத்தில சொன்னவை.... குழப்பன்ராசியாக் கிடக்கு:)) ஸ்ரெடியா இருங்கோ எண்டு:)).. அதுதான் நான் ரொம்ப ஸ்ரெடியா இருக்கிறேன்:)).//

    சிரிக்க வைக்கப் படாது. நான் சீரியஸா இருக்கிறன்.

    ReplyDelete
  76. //கடவுளே எங்கின விட்டேன்.. இதோ வருகிறேன்:))). // !! புடிச்சோ வச்சு இருந்தனீங்கள் அவரை!!

    ReplyDelete
  77. //சரி..80 உடன் நிறுத்திக்கலாம்னு இருக்கேன்! ;) பாவம் அதிரா,பிழைச்சுப்போங்க இன்னிக்கு! ;) ;)

    ReplyDelete
  78. //இந்த மழையெல்லாம் பத்தாது..இடிமின்னல் எல்லாம் வரோணும்..தேவதை எங்கே? காணவில்லையே!!! ///

    தேவதையா?:))) ஙேஙேஙேஙேஙேஙே...:) குனிஞ்சு பாருங்கோ... கட்டிலுக்குக் கீழ இருந்துதான் ரைப்பிங் யா.... எங்க இருந்தாலும் ரொம்பத் தெளிவாத்தான் இருக்கிறேன்...:)).

    //(( மின்னல் உடைஞ்சு போச்சுது. ;((//

    அதெல்லாம் பிழை வரும்போகும் இமா.... டோண்ட் வொரி>

    இன்னொரு பிளாஆஆஆஆஆஸ்பக்.

    அம்மா படித்தபோது ஹோம்சயன்ஸ் பாடப்பரீட்சையில ஒரு கேள்வியாம்...

    தோசை/வடை (ஏதோ ஒன்று) செய்யும்போது “மாப் பிழை” வந்தால் என்ன செய்வீங்க என. பாதிப்பேர் நினைச்சிட்டினமாம் (மாப்பிள்ளை) வந்தால் என்ன செய்வீங்க என:)).. பதில்கள் எப்பூடி இருந்திருக்கும்:)).

    //பாவம் அதிரா,பிழைச்சுப்போங்க இன்னிக்கு! ;) ;) // அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  79. //சிரிக்க வைக்கப் படாது. நான் சீரியஸா இருக்கிறன்.//
    புவஹாஆஆஆஆஆஆ புவ...ஹாஆஆஆஆஆ.. முடியேல்லை:)).. நல்லவேளை நாளைக்கு வெள்ளென எழும்பத் தேவையில்லை..... வடிவாச் சிரிச்சு ஆறுதலாப் படுக்கலாம்...:)).

    //புடிச்சோ வச்சு இருந்தனீங்கள் அவரை!! // முடியல்ல சாமீஈஈஈஈஈ:))).

    எங்க இமா, மெயின் சுவிட்சைக் காணேல்லை?:))))... தன்பாட்டில ஓவ் ஆகிட்டுதோ?:))))).

    //இமா said... 80

    //சரி..80 உடன் நிறுத்திக்கலாம்னு இருக்கேன்! ;) பாவம் அதிரா,பிழைச்சுப்போங்க இன்னிக்கு! ;) ;)//

    இருந்தாலும் ரொம்பப் பெரிய மனசு உங்களுக்கு:)))..

    நாளைக்கு வாங்கோ... எல்லோருக்கும் மரக்கறி கட்லட் ஃபிறீஈஈஈஈஈஈஈஈயாத் தாறன் ஓக்கை?:)).

    உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆ.. எங்கின சாமி விட்டேன்ன்ன்ன் அதிராவோ கொக்கோ... இதோ பிடிச்சிட்டேன்:)).

    ReplyDelete
  80. /அம்மா படித்தபோது ஹோம்சயன்ஸ் பாடப்பரீட்சையில ஒரு கேள்வியாம்...
    தோசை/வடை (ஏதோ ஒன்று) செய்யும்போது “மாப் பிழை” வந்தால் என்ன செய்வீங்க என. பாதிப்பேர் நினைச்சிட்டினமாம் (மாப்பிள்ளை) வந்தால் என்ன செய்வீங்க என:))../ம்ம்..இப்பப் புரியுது உங்க டமில் ஏன் தள்ளாடுதுன்னு! ;)


    /ஙேஙேஙேஙேஙே...:) குனிஞ்சு பாருங்கோ... கட்டிலுக்குக் கீழ இருந்துதான் ரைப்பிங் யா.... எங்க இருந்தாலும் ரொம்பத் தெளிவாத்தான் இருக்கிறேன்...:))./ ஐ..ஆசையப்பாரு!! :) :)

    நாஞ்சொன்னது உங்களையில்ல அதிரா! அஞ்சலின் அக்காவை அதிரா! ஏஞ்சலினுக்குத் தமி"ள்"ல தேவதைன்னு சொல்லுவாங்க!!;)

    போனாப்போகட்டும்னு விட்டாலும், நீங்களே சொந்தச் செலவில சூனியம் வச்சுக்கிறீங்களே? என்னான்னு சொல்ல? அவ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  81. //தேவதையா?:))) ஙேஙேஙேஙேஙேஙே...:) // கிக் கிக்

    //அதெல்லாம் பிழை வரும்போகும் இமா.... டோண்ட் வொரி// ஓகே. நீங்கள் இருக்கிறீங்கள் டிலீட் பண்ண. நன்றி.

    க.கா.போ எண்டால் விட மாட்டன் எண்டுறீங்கள். ;)

    ReplyDelete
  82. //மெயின் சுவிட்சைக் காணேல்லை?:))))...// இப்ப கண்டு இருப்பீங்களே!

    ReplyDelete
  83. ஓகே.. மீ டாட்டா. மீதிப் பெர் கமண்ட் போட இடம் வேணுமெல்லோ, நான் கிளம்புறன்.

    ReplyDelete
  84. உஸ் மெதுவா தலையை வெளியில நீட்டினனா... சனம் இன்னும் போகல்லே:))).... போறன் போறன் எண்டு சொல்லிச் சொல்லி:)) இங்கினதான் இருக்கினம்:)).

    எங்கட மாமா சரியான கொமெடியன்.....
    வந்திருந்திட்டு, வேணுமெண்டு திரும்பத் திரும்பச் சொல்லுவார் “ இஞ்ச விடு நான் போகப்போறன்” எண்டு. நாங்க கேட்பம்... கட்டியோ வச்சிருக்கிறம்... எழும்புங்கோ என:))).

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))..ஆரியபவான் கட்லட் ரெடீஈஈஈஈஈஈஈ.. வந்ததுதான் வந்தீங்க சாப்பிட்டிட்டுப் போங்கோவன்:)).

    ஏஞ்சல்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் அஞ்சலின் எண்டெல்லோ கூப்பிடுறன் அதுதான் பிளை/பிலை/பிழை ஏதோ ஒன்றை வசுக்கொள்ளுங்கோ:)) நடந்திட்டுது:)).

    //இமா said...நான் கிளம்புறன்// இது எப்ப தொடக்கம்:))).

    மெயின் சுவிஜ்ல கொஞ்சம் கறண்ட் மிச்சம் இருந்திருக்கு:)) அதுதான் மீண்டும் ஒரு உலுப்பல்:)). இப்ப தீர்ந்து போயிருக்கும்:)) நான் கரண்டைச் சொன்னேன்...

    ஆ... எங்கின விட்டேன்ன்ன்ன்ன்ன்:))

    ReplyDelete
  85. இமா said... 48

    இது இரண்டாவது வட்டம்... குட் மோனிங் அதீஸ்.

    1. நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. அது மயில்தான், மயில்தான், மயில்தான். (எப்புடீ!!) ;))))/// karrrrrrrrஅது இமா தான்:)).

    2. முக்கிய செய்தி... 2012க்கு முதல்... டெய்லி நியூ வானத்தில பூமிநடுக்கமாம். ;)//
    நியூ யோர்க், சிங்கப்பூர் எல்லாம் கடல்ல மூழ்கும் அபாயம் இருக்காம்:((, கனடாவை நோக்கி 6 மைல் நீளமான ஐஸ் கடி 20/30 மைல் வேகத்தில கடல்ல வந்திட்டிருக்குதாம்:)).... சோஓஓஓ இப்போதைக்கு நியூ அன் ஊக்கேதான் சேவ்:))))))).

    3. நான் வேதம்.// விலங்கு:)) உண்ணாத வேதமாமே?

    4. 0-- குறிப்புக்கு பதில் ஏதும் வந்துதோ அதீஸ்!!//
    பஞ்செண்டால் பதில் வரும்:)) இது வக்ஸ்ஸ்ஸ்:)) பிடிச்சிருக்கு:))) ...ஆதில:))..(கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க..:)).

    மியாவ் மியாவ் இமா:))

    ReplyDelete
  86. வாங்க நிரூபன்....

    //ஆகா...ஒரு டெரர் தனமான தலைப்போடு கிளம்பியிருக்காவே அக்காச்சி, இருங்க படிப்போம். //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ஒரு அப்பாஆஆஆஆவியைப் பார்த்து டெரர் எண்டெல்லாம் சொல்லலாமோ?:)))).

    நான் ரொம்ப ஜாக்கிரதை:)), அதுதான் மேலேயே சொல்லிட்டேன்... சிகப்ப்ப்பூஊஊஊஊ எழுத்தில “சுவீட்16” எண்டு:)).

    மியாவும் நன்றி நிரூபன்.

    ..............................................

    அதிராவோ கொக்கோ:)), இங்கின குழப்பீனம் எண்டு:)) ஓடிப்போய் நோட்பாட்ல தட்டி:) எடுத்திட்டு வந்தனான்... உஸ்ஸ்ஸ் அப்பா.... மழை விட்டமாதிரி இருக்கு:)))).

    ReplyDelete
  87. எதுக்கும் குடையைப் பக்கத்தில வைச்சுக் கொள்ளுங்கோ. மழை விட்டும் தூவானம் விட்ட பாடில்ல. ;))
    //ஓடிப்போய் நோட்பாட்ல தட்டி:)// ஓஹோ! அதுதான் காணேல்லயா? ;)

    ReplyDelete
  88. //அது மயில்தான், மயில்தான், மயில்தான்.// இல்லையா?? ஹும்! ;)

    ReplyDelete
  89. இருங்க போய்விடு படித்து விட்டு வந்து கமெண்ட் போடறேன்

    ReplyDelete
  90. அப்படி போடு போடு ஹையா எனக்குதான் நூறாவது வடை

    ReplyDelete
  91. அல்லாரும் அம்புட்டு கமென்ட் போட்டு இருக்காங்க நாம ஒரு 10 கமென்ட் போடவில்லை என்றால்...so 98

    ReplyDelete
  92. ஹே இன்னும் ஒரு ரன்

    ReplyDelete
  93. சிவா சதம் அடித்து விட்டார்
    ஹே நூறு நூறு
    நூறு வடை எனக்குத்தான்

    ReplyDelete
  94. உங்கள் குடும்ப பழமொழி ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு...

    ReplyDelete
  95. //1. நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. அது மயில்தான், மயில்தான், மயில்தான். (எப்புடீ!!) ;))))/// karrrrrrrrஅது இமா தான்:)).

    ஓகே... இமாதான். க்ர்ர்ர் வாங்கோ உலகத்துக்கு

    http://imaasworld.blogspot.com/2011/07/3-three.html

    ReplyDelete
  96. இந்த பதிவினாலே உங்களை பத்தி நெறைய்ய்ய தெரிஞ்சுக்கிட்டோம்.

    ReplyDelete
  97. ஐ... தொண்ணூத்தி ஒன்றோட தூவாரமும் நிண்டு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).

    ஒரு பயமொழி:)(விடுகதை) நினைவுக்கு வருது..

    “ ஆளக்(ழ போட்டு, அழிச்சுப்போட்டு ள போட்டிட்டன்:)) குழி தோண்டி, அதிலே ஓர் முட்டையிட்டு, பின் அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டைகளாம்” அது என்ன?:)).. பதில் தென்னை... இல்லையில்லை... அதிராவின் த்றீஈஈஈஈஈஈ ரொட்ஸ்ஸ்ஸ்:)).

    //ஓகே... இமாதான். க்ர்ர்ர் வாங்கோ உலகத்துக்கு//

    இன்று முழிச்சதே:) இமா உலகத்திலதான்... ஹப்பி டேயாகத்தான் இருக்கு. மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  98. ஆஆஆஆ... சதம் அடிக்கிறதிலயும் சிவாதான் firstuuuuuuuu:))).

    வாங்கோ சிவா...
    எங்கே காணாமல் போனனீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). பார்த்துப் பார்த்துக் கண்ணும் பூத்துப் போச்ச்ச்ச்ச்:)).

    //நூறு நூறு
    நூறு வடை எனக்குத்தான் //
    இந்த முறை கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க:)). மரக்கறி கட்லட் வாணாமோ?.

    //இமா said... 102

    குழப்படி சிவா. ;)//

    ஓம்..ஓம்.. சிவா மட்டும்தான்ன்ன்ன்ன்:)).

    மியாவும் நன்றி சிவா.

    ஊசிக்குறிப்பு:
    எங்கட அம்முலுவைக் காணவில்லை, கடேஏஏஏசியாகப் பார்த்தபோது, ஜேர்...ல, நீல ரீ ஷேர்ட் அண்ட் பிளாக்(இது வேற பிளாக்:)) ரைட்டும் போட்டிருந்தார்... இவரைக் கண்டவர்கள் என் பிளாக் (இதுவும் வேற பிளாக்..:)) க்குக் கூட்டி வரும்படி அன்போடு ஆணையிடுகிறேன்ன்ன்ன்:)).

    ReplyDelete
  99. வாங்கோ குமார்... (எங்கட வான்ஸ்ட டொமார்:) நினைவு வருது:)).

    புதுஷா வந்திருக்கிறீங்க நல்வரவு. மிக்க நன்றி.

    ஓடிப்போய் உங்கட பார்த்தேன்...

    //வயல்வெளியில் வசந்தத்தைத் தேடியவன்... இன்று மணல்வெளியில் பாரம் சுமப்பவன்.//

    வரிகள் பிடிச்சிருக்கு... படித்ததும் மனம் கனக்குது:((.

    மிக்க நன்றி குமார்.

    ReplyDelete
  100. //athira said... 105

    ஐ... தொண்ணூத்தி ஒன்றோட தூவாரமும் நிண்டு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).//

    இப்பவெல்லாம் கன்னாபின்னா வெண்டு எழுத்துப் பிழை(அல்ல)... தவறு வந்திடுது:)).

    அது தூவானம்ம்ம்ம்ம்ம்ம்:).

    ReplyDelete
  101. அதீஸ்... எடுங்கோ குடையை...

    //ஓம்..ஓம்.. சிவா மட்டும்தான்// :))

    //அம்முலு// கொஞ்சம் பிஸி. உங்கட பக்கம் மட்டும் தான் பார்க்கக் கிடைக்குது என்று சொன்னவா.
    சொல்லுறன்.

    //வாங்கோ குமார்... (எங்கட வான்ஸ்ட டொமார்:) நினைவு வருது:))//
    கூடவே லிங்க் போட்டால் விபரமா விளங்குமெல்லோ. இப்பிடி சஸ்பென்ஸ் வைச்சால்... பாவம். ;)
    ம்... இது குமாருக்காக கஷ்..டப்பட்டு தேடிக் கொண்டு வந்து இருக்கிறேன்.. ;)) http://vanathys.blogspot.com/2010/05/blog-post_07.html
    மீ எஸ்ஸ்ஸ் ;)))

    ReplyDelete
  102. பதிவுகள விட கமெண்ட்ஸ் கொடி கட்டி பறக்குதேங்க... திருஷ்டி சுத்தி போடுங்க மியாவ்

    ReplyDelete
  103. //பதிவுகள விட கமெண்ட்ஸ் கொடி கட்டி பறக்குதேங்க... திருஷ்டி சுத்தி போடுங்க மியாவ் //

    நேத்திக்கு காலையில தான் கமெண்ட் போட்டு 24 மணி நேரத்துக்குள்ளே அம்மா தலைய சுத்துதே.இந்த கமெண்ட் எல்லாம் என்னிக்கு நான் படிச்சு முடிக்கறது.

    மகி வேற ரொம்ப கோவமா இருக்காங்க(பூனைய துன்புறுத்துறதுக்கு ரெட் கிராஸ் ல இருந்து மகி ய தேடுறாங்களாம்:)) இமாவுக்கும்ம் என்னைய மாதிரியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் வருது. நீங்க வேற உங்கள பாட சொன்னதால துப்பாக்கி என் பக்கம் திரும்பும்ம் ன்னு எல்லாம் பூச்சாண்டி காமிக்கிறீங்க.

    போன வாரம் தேம்ஸ் பக்கம் போன போது ஒரு பூனை யோகா செஞ்சுக்கிட்டு இருந்திச்சு இப்போதானே தெரியுது அது நம்ம பூசானந்தா ன்னு ! அடுத்த தடவை ஆட்டோகிராப் எடுத்துக்கிட்டு வரேன்.
    உங்க தொடர் பதிவுக்கு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். வார்த்தை வார்த்தை தான் வரமாட்டேங்குது !! (எந்த தொடர் பதிவுன்னு தானே பார்க்கிறீங்க?? நட்பு பத்தி தாங்க. அத பத்தி எல்லாரும் மறந்ததும் பொறுமையா போடலாமுன்னு இருக்கேன். எப்போ எந்த வருஷமுன்னேல்லாம் சொல்ல மாட்டேனே !!

    ஓகே சீ யூஊஊஊஊஊஉ

    ReplyDelete
  104. ஆ..ஆ..அதிரா இது உங்க பக்கம்தானா??? நம்பமுடியவில்லை.இல்லை.நான் இப்ப எதற்கு இப்ப கொமன்ட்ஸூக்கு கொமன்ட் போடுவதாஆ, உங்க நீண்ண்ண்ட பதிவுக்கு கொமன்ட் போடுவதாஆ.ஒரே குயப்ப சீ குழப்பமா இருக்கு.
    முதலில் நான் thankyou சொல்லுறன் உங்களுக்கு.என்னை அன்பாய் தேடியிருக்கிறீங்க.
    ஓ.கே நீங்க கஸ்டப்பட்டு எழுதிய பதிவுக்குதான் முதல் கொமன்ட்.நீங்க எழுதியிருக்கும் பாடல் வரி(வர்ணம்)கள் சூப்பரோ சூப்பர். நான் அதைதான் முதலில் படித்தேன். மறந்திருந்த சில பாடல்களை ஞாபகப்படுத்தியிருக்கிறீங்க.
    ஆகாயப்பந்தலிலே,கடவுள் நினைத்தான், இளைய நிலா பொழிகிறதே(இது ஆல்டைம் பேவரிட்) ஒரு ஜீவன் தான் உன்பாடல்தான்(இது பேவரிட் நடிகைகாக நான் மிக விரும்பிக்கேட்கும்பாடல்) செந்தமிழ் தேன் மொழியாள், விழியே கதை எழுது (2ம் என்னவரின் பேவரிட்) மனதாலே சிலை செய்து(வாணி ஜெயராமின் குரலுக்காக)நிலவைப்பார்த்து வானம் சொன்னது,வச‌ந்தகால நதிகளிலே(ஸ்ரீதேவிக்காக) செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்(சூப்பர் பாட்டு)
    உன் கண்ணில் நீர் வழிந்தால்(இப்பாட்டுக்கு ஒரு கதையே இருக்கு.நான் என் கதையைச்சொன்னேன்.) பெளர்ணமி நேரம் (இப்பாட்டைப்பாடத போய்ஸ் இருக்கமுடியாது.நாங்கள் ரியூசனுக்கு போய்விட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வரும்பொழுது பின்னால் பாடிக்கொண்டுவருவார்கள்.ஞாபகப்படுத்தியதற்கு நன்றி நான் பாட்டைச்சொன்னேன். சில கருத்துக்குளும் இருக்கு.அதுவும் சோடை போகவில்லை அதிரா நன்றாக இருக்கிறது.
    //சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும்
    பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன// அருமை.

    ReplyDelete
  105. நீங்க இதில் உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விடயங்களை அறியத்தந்திருக்கிறீங்க அதிரா.மிக நன்றி. அதிலும் 9 வது விடயத்தில் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையை பாராட்டவேணும்.உங்களிடம் திறமைகள் நிறையவே இருக்கு அதிரா.
    உங்க ஆசை நிறைவே(றும்)ற என் வாழ்த்துக்கள்.(8)

    குடும்ப பழமொழியும் அருமை. கடைப்பிடிக்க வேண்டியதொன்று.(6)

    15வது வாழ்க்கைக்கு தேவையானது.மூன்று(ம்) முத்துக்கள்.

    நீங்க 4வதில் கூறியது எனக்குள்ளும் இருக்கும் கேள்விகள்தான்.
    ஆனா நீங்க கட்டாயம் இமாவை இப்பதிவுக்கு அழைத்திருக்கவேண்டும். அழையாததற்கு நான் "கர்ர்ர்ர்ர்ர்"
    அடுத்து இந்த இமாவுடன்(குழப்படி) மகி எப்படிச்சேர்ந்தா????
    நான் நினைத்தேன் என்பக்கம் (அதிராவின்)அரட்டைப்பக்கம் ஆகிட்டுதோ என்று.
    என்றாலும் பூஸார் தெளிவா, ஸ்ரெடியா இருக்கார்.

    சாம,தான,பேத,தண்டம் என இறங்கிட்டியள் போல. அதிரடி(அதிரா)தான் சரி. இப்படியாவது வருவினமோ பார்ப்பம். thanks athiraa.
    ஊசிக்குறிப்பு:‍‍:ஹொலிடெதானே அதிரா அதுதான் லேட்.மன்னிக்க.

    ReplyDelete
  106. /மகி வேற ரொம்ப கோவமா இருக்காங்க/கர்ர்ர்ர்ர்ர்ர்! தவறான புரளியக் கிளப்பிவிடும் கிரிஜாவை ப்ளூக்ராஸ்ல புடிச்சு குடுக்கப்போறேன்.;)
    /பூனைய துன்புறுத்துறதுக்கு/ எனக்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம்னு அதிராவுக்குத் தெரியும் கிரிஜா..அதூஊஊஊ கொஞ்சம் பழைய்ய கதை,உங்களுக்குத் தெரியாது! :)

    அதிரா,அரிதா (அட,அட,என்ன ஒரு எதுகை-மோனை?!:)) எனக்கு சிலசமயம் இப்படி மொக்கை போடும் குணம் வரும்,அப்படியான டைம்ல ப்ளாக்ல ஏதாச்சும் தட்டி எல்லாரையும் ஒரு வழி பண்ணுவேன்,நேத்து இங்கே வந்த நேரம்..கரெக்ட்டா ஜோரான பக்கவாத்தியம் கிடைச்சது, அதிராவும் மாட்டினாங்க, ஒரு மெகா கச்சேரி நடத்திட்டோம். :)

    உரலுக்கு ஒரு பக்கம் இடி-மத்தளத்துக்கு 2 பக்கம் இடின்னு சொல்லுவாங்க,அதிராவுக்கு பாவம்,நேத்து 3(யு.கே.,நியூஸி.& யு.எஸ்.) பக்கமும் இடி! சும்மா சொல்லக்குடாது,நல்லாவே சமாளிச்சீங்க அதிரா! :) என்ன சந்துவும் வான்ஸும் இருந்திருந்தா இன்னும் 2 கை கூடியிருக்கும்,மிஸ் ஆகிப்போச்!


    /இந்த இமாவுடன்(குழப்படி) மகி எப்படிச்சேர்ந்தா????/ அதூ.../காலைமை ஜெயாரீவி இன்றையநாள் இனிய நாள் சாத்திரத்தில சொன்னவை.... குழப்பன்ராசியாக் கிடக்கு:)) /அதிராவிண்ட கெட்ட நேரமாம் அம்முலு! :) மகி சாதுவான பொண்ணுதேன்,சகவாஷதோஷம்தான் உப்புடியெல்லாம் பேசவைக்குது! :)

    ReplyDelete
  107. இமா... குடையை எடுத்ததும் தூறல் நிண்டு போச்ச்:))).

    நானும் லிங் போட நினைத்தேன் இமா, நம்புங்கோ உண்மையாகத்தான், ஆனா எப்பவும் அவசரமாக ஓடிவந்து அவசரமாகத் தட்டிப் பதில் போட்டுவிட்டு ஓடுவதால் தேட முடியாமல் போச்சு, எழுத்துப் பிழையும் வருது.

    மிக்க நன்றி இமா.. லிங்குக்கும்..., அம்..க்கும்.

    ReplyDelete
  108. //மாய உலகம் said... 110

    பதிவுகள விட கமெண்ட்ஸ் கொடி கட்டி பறக்குதேங்க... திருஷ்டி சுத்தி போடுங்க மியாவ்///

    மாயாஆஆஆஆஆ.. நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க:)), எனக்கு இது தோன்றவே இல்லை.

    உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் முதேல் வேலையா, பிரிஜ் லாச்சியெல்லாம் கிளறி:) நல்ல பழுத்த பழமிளகாயாக எடுத்து.... துடை துடையெண்டு, அமே...ப்பக்கம், நியூப்பக்கம், ஜேர்.. பக்கம் எல்லாம் துடைச்சுக் கொண்டுபோய், பக்கத்து வீட்டு மார்கிரட், வேலையால வந்து காணமுன், சந்தில போட்டிட்டு ஓடிவந்திட்டன்:)))..

    உஸ் அப்பாஆஆஆஆ மூச்சிறைக்குது, கொஞ்சம் பொறுங்கோ... ஒரு ஹொட் ரீ குடிச்சிட்டு வந்து மிச்சம் கதைப்பம். நன்றி மாயா.

    ReplyDelete
  109. அம்முலு,

    //கட்டாயம் இமாவை இப்பதிவுக்கு அழைத்திருக்கவேண்டும்.// லிஸ்ட்டில் முதலாவது என் பெயர்தான் "இ"ருக்கிறது. இன்னொரு ஆள் கவனிச்சு இருக்கிறா. மீதிப்பேர் காணேல்லயோ, இல்லாட்டி க.கா.போய்ட்டாங்களோ தெரியேல்ல. ;)

    //அடுத்து இந்த இமாவுடன்(குழப்படி) மகி எப்படிச்சேர்ந்தா????// உங்களைப் போல வான்வெளியில் தான். ;) இது... 'அங்க' இருந்து தொடர்கிற பந்தம். பாருங்கோ சொல்லி இருக்கிறதை //எனக்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம்னு அதிராவுக்குத் தெரியும் கிரிஜா..அதூஊஊஊ கொஞ்சம் பழைய்ய கதை,உங்களுக்குத் தெரியாது!//

    மஹீ... அம்முலு உங்களைக் குழப்படியாம், கவனியுங்கோ. ;))

    ReplyDelete
  110. //ஜோரான பக்கவாத்தியம்// ம்.. ம்.
    //ஒரு மெகா கச்சேரி // கிக் கிக் ;)))))))))))
    //2 கை கூடியிருக்கும்,மிஸ் ஆகிப்போச்!// ப்ச்! ;((
    //சகவாசதோஷம்தான் // வ்வ்வ்வ்!!! ;)

    ReplyDelete
  111. வாங்க கிரிஜா...

    முந்தியெண்டால் உஷாராக வருவீங்க:), இப்ப கொஞ்சம் பயப்பிடுறமாதிரித் தெரியுது:)... என் யோகாவையும் ஸ்ரெந்தையும் பார்த்துத்தானே?:)).. குபூ...குபூ...குபூஊஊஉ... அதொண்டுமில்லை சிரிச்சேன்:)).

    //இந்த கமெண்ட் எல்லாம் என்னிக்கு நான் படிச்சு முடிக்கறது. //

    2012க்கு முன் முடிச்சிடுங்க படிச்சு:)).

    //(பூனைய துன்புறுத்துறதுக்கு ரெட் கிராஸ் ல இருந்து மகி ய தேடுறாங்களாம்:))//

    ரெட் குரொஸ் வரைக்கும் விஷயம் போயிட்டுதோ?:)) இது அந்தப் பச்சைக்கல் விவகாரமாத்தானிருக்கும்:)).

    //இமாவுக்கும்ம் என்னைய மாதிரியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் வருது.//

    உஸ்ஸ்ஸ் இப்பூடியேல்லாம் தலைப்புச் செய்தில போட்டு, தூக்கித் தூக்கிக் காட்டப்பிடா:))))). (புளொக்கில பேமனண்ட் பதிவாப் போட்டு வைக்கலாமெண்டேன்:))))

    //இப்போதானே தெரியுது அது நம்ம பூசானந்தா ன்னு ! அடுத்த தடவை ஆட்டோகிராப் எடுத்துக்கிட்டு வரேன்.//

    உண்மையிலயே சிரிச்சு வயிறு நோகுது... எப்பூடி இப்பூடியெல்லாம்?:)))). ஆட்டோகிராப் வாங்கும்போது “மை” போத்திலையும் மறவாமல் எடுத்துப் போங்க:)))).

    //(எந்த தொடர் பதிவுன்னு தானே பார்க்கிறீங்க??//

    உண்மையிலயே யோஓஓசிச்சேன்:)).

    இங்கின எங்கட கூட்டம் எல்லோரும் வல்லாரைச் சம்பலும், அருகம்புல் யூசும் டெய்ய்ய்ய்ய்ய்ய்லி குடிக்கிறாக்கள்.... சோஓஓஒ மறக்க மாட்டம்... விரைவில போட்டிடுங்க.

    மியாவ் மியாவ் கிரிஜா.

    ReplyDelete
  112. வாங்க அம்முலு....

    தேடினேன்...., இமா பிடிச்சுத் தந்திட்டா.

    என் பாடல் வரிகளை அழகாக ரசிச்சு ரசிச்சுப் பார்த்திருக்கிறீங்க, அதுக்கு என் நன்றிகள்.

    இந்த ஆகாயப் பந்தலிலே... வாழ்க்கையிலேயே ஒரே ஒரு தடவைதான் கேட்டேன்... அந்த இரு வரி மட்டும்தான் தெரிந்திருக்கு. இன்னும் முளுமையாகப் பாடல் கிடைக்கவில்லை/தேடியதில்லை.

    எங்கள் வீட்டு முற்றத்திலே, பெரீஈஈஈஈய கறுத்தக்கொழும்பான் மாமரங்கள் 2 நின்றன. முற்றமெங்கும் வெய்யிலே படாது...( பட்டாலும் தெரிவதில்லை). இரவில், மா இலைகளினூடாக நிலவு நிலத்தில், பற்றன்போட்டதுபோல படும்போது.. அது ஒரு சொல்ல முடியாத அழகாக இருக்கும்(பால்போன்ற வெள்ளை மண் முற்றம்).

    அதற்கடுத்தாற்போல, வீட்டின் முன் பக்க மூலையில் ஒரு பெரீஈஈய உயர்ந்த வேப்பமரம். அந்த வேப்ப மரத்திலே பெரீஈஈஈய நீளக் கயிற்றிலே ஊஞ்சல் கட்டி, ஆடுவோம். நீளக் கயிறென்பதால்.... இரு பக்கமும் மேலே போகும்போது ஆகாயத்தைத் தொடுவதுபோல பீலிங்ஸ்சாக இருக்கும்...

    அப்படியான ஒருநாளில் நான் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கையில்... எங்கோ வானலையில் பழையபாடல் நிகழ்ச்சியிலோ என்னவோ இப்பாடல் கேட்டது.... எனக்கு அது மறக்க முடியாததாக மனதில் பதிந்துவிட்டது. (6 அ 7 வயதாக இருந்திருக்கலாம்).

    இதேபோல இன்னொரு பொங்கல் நாளில் ஒரு பாட்டு ரேடியோவில்..

    “தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே கல்யாணி வாடி தங்கம்போலே”.....

    சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் பல பாடல் வரிகள் மறக்கமுடியாததாகிவிட்டது..

    ReplyDelete
  113. //பூனைய துன்புறுத்துறதுக்கு/ எனக்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம்னு அதிராவுக்குத் தெரியும் கிரிஜா..அதூஊஊஊ கொஞ்சம் பழைய்ய கதை,உங்களுக்குத் தெரியாது! //

    என்னைய மாதிரி புச்சா வந்திருக்கறவங்களுக்கு ஒரு பதிவு அதூஉ என்ன கதையின்னு தான் யாராச்சும் சொல்லுங்களேன். இல்லேன்னா தூக்கமே வர மாட்டேங்குது..அதிரா இத பத்தி ஒரு பதிவு போடுங்களேன் ப்ளீஸ்ச்ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ்

    // தவறான புரளியக் கிளப்பிவிடும் கிரிஜாவை ப்ளூக்ராஸ்ல புடிச்சு குடுக்கப்போறேன்.;) //

    நோ நோ பேச்சு பேச்சோட இருக்கோணும். நானும் US பக்கம் வர மாட்டேன் நீங்களும் இந்த்த பக்கம் ப்ளூ கிராஸ் ரெட் கிராஸ் எல்லாத்தையும் அனுப்ப கூடாது ஓகே? இல்லேன்னா அழுதிடுவேன் உம்ம்ம்ம் உம்ம்ம்ம்

    //மகி சாதுவான பொண்ணுதேன்,சகவாஷதோஷம்தான் உப்புடியெல்லாம் பேசவைக்குது! :) // ஐயோ ஐயோ யாரு இந்த மாதிரி எல்லாம் கமெண்ட் போட்ட அப்புராணி ?? உலக நடப்பு ஒண்ணும் தெரிஞ்சுக்காம இருக்காங்களே?

    //உண்மையிலயே சிரிச்சு வயிறு நோகுது... எப்பூடி இப்பூடியெல்லாம்?:)))). // அதிரா வந்து என் பிரௌனிய சாப்பிட்டு போங்க வயித்து வலி போயே போச்ச் ! இந்த தடவ கூடவே விக்கல் வராம இருக்க டீ போட்டுக்கிட்டு வாங்க

    ReplyDelete
  114. அம்முலூ..

    ///ஆனா நீங்க கட்டாயம் இமாவை இப்பதிவுக்கு அழைத்திருக்கவேண்டும்.///

    தெரிஞ்சுதான் சொல்றீங்களென நினைக்கிறேன்:)))). 16 ஆவது பதிவில..... மறைக்கப்பட்ட பிரதேசத்தைத் துடைசுப்போட்டுப் பாருங்கோ:)))), எல்லோரும் உள்ளே இருக்கினம்:))).

    நான் யோகா, தியானம் எல்லாம் பண்ணிப் பண்ணியே நல்ல ஸ்ரெடியா இருக்கிறேன்:)), என் யோகாவைக் கலைக்கவே சதித்திட்டம் போடீனம் எல்லோரும்:)))).

    மியாவும் நன்றி அம்முலு.

    நித்திரை வருது... நாளைக்குத்தான் மிகுதிப்பதில்... ஏனெண்டால் இன்னும் கொஞ்சம் யோகா செய்து ஸ்ரோங்காகி வந்துதான் பதில் போடோணும்:))).

    ReplyDelete
  115. ஆஆஆஆஆஆஆஆஆ .வேல்ஸ் போய் இப்பதான் கொஞ்சம் முன்னால் வந்தேன் .நேத்து நிறுத்திய இடத்தில இருந்து கண்டின்யு செய்கிறேன் .

    ReplyDelete
  116. //அஞ்சலின் அக்காவை அதிரா! ஏஞ்சலினுக்குத் தமி"ள்"ல தேவதைன்னு சொல்லுவாங்க!!;) //அவ்வ்வ்வ்வவ்வ் !!!!!!!!!! மகி என்னை அக்கா என்று அன்போடு அழைத்ததால்
    எப்பாடு பட்டேனும் அந்த பச்சை கல் மோதிரத்தை உங்களுக்கு அபேஸ் செய்து தருகிறேன் .

    ReplyDelete
  117. பூசாரின் யோகாவை கலைக்க நான் ஒரு ஐடியா தரேன் .லாங் டிஸ்டன்ட்ல என் pet ஹம்ஸ்டேரை காட்டினா யோகா hogaiyaaaaa!!!!!!

    ReplyDelete
  118. 125 வது பட்டிஸ் எனக்குதான் (கண்டிப்பா இதுவும் வெஜிடபிள் )

    ReplyDelete
  119. very tired .தூங்க போறேன் .......good night

    ReplyDelete
  120. இந்த பதிவை படிக்கும் பொழுது தங்களின் மென்மையான மனம் தெரிகிறது . வாழ்த்துக்கள் தங்களின் நல்ல பதிவிற்கும் மனதிற்கும்

    ReplyDelete
  121. தங்களுக்கு நகைச்சுவை பிடிக்கும் என்று சொல்லியுள்ளீற்கள் .ஒய்விருந்தால் எனது தளத்திற்கு வாருங்கள் .இன்று நகைச்சுவை தான் பதிவு இட்டுள்ளேன். http://thulithuliyaai.blogspot.com/

    ReplyDelete
  122. மகி.... நீங்க உங்கட படத்தை(பூவை) மாத்தினதும், மந்திரம்போட்ட மாதிரி ரொம்ப மாறிட்டீங்க:))), அமைதியாகிட்டீங் ...... என்றேன்:)).

    //அதிரா,அரிதா (அட,அட,என்ன ஒரு எதுகை-மோனை?!:)) எனக்கு சிலசமயம் இப்படி மொக்கை போடும் குணம் வரும்,அப்படியான டைம்ல ப்ளாக்ல ஏதாச்சும் தட்டி எல்லாரையும் ஒரு வழி பண்ணுவேன்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கழுதை கெட்டாக் குட்டிச் சுவர் போல:))... மொக்கை குணம் வந்தால் மட்டும் அதிராட்ட வந்து.. பப்பா மரத்தில ஏத்தி விடுறது, பின்பு, அதிரா கடையைப் போட்டிட்டு மகியைக் காணேல்லை, இமாவைக் காணேல்லையே என:)) ஈ.. பூச்சி கலைச்சுக்கொண்டு காய்ந்துகொண்டிருக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).


    //என்ன சந்துவும் வான்ஸும் இருந்திருந்தா இன்னும் 2 கை கூடியிருக்கும்,மிஸ் ஆகிப்போச்! //
    அடப் பாவமே... இது போதாது, சந்துவும் வான்ஸ்சும் இருந்திருக்கோணும் என பகல்கனவு வேறையோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    //மகி சாதுவான பொண்ணுதேன்,சகவாஷதோஷம்தான் உப்புடியெல்லாம் பேசவைக்குது! :) //

    கடவுளே.... தவறிப்போய் தேம்ஸ்ல விழுந்திடுவன்போலகிடக்கே...:))) எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்... நான் பெய்ண்ட்:))(அதுதாங்க மயக்கத்துக்கு ஆங்கிலீஸ்):) பண்ணிக்கொண்டிருக்கிறேன்ன்ன்ன்ன்... போலீஸ் விசாரணை என வந்தால்.... பச்சைக்கல் மொதிர விவகாரட்த்தைப் பயப்பூடாமல் சொல்லிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:)).

    மியாவும் நன்றி மகி.... மகிழ்ச்சியாக இருக்கு, இப்படி எல்லோரும் ஒன்றாக, குதூகலித்து ரொம்ம்ம்ம்ம்ம்பக் காலமாகிட்டுது.

    ReplyDelete
  123. //En Samaiyal said... 121

    //பூனைய துன்புறுத்துறதுக்கு/ எனக்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம்னு அதிராவுக்குத் தெரியும் கிரிஜா..அதூஊஊஊ கொஞ்சம் பழைய்ய கதை,உங்களுக்குத் தெரியாது! ////

    இப்ப எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீஈஈஈஈ:)), அப்போ கிரிஜா ”அங்கின” இருந்த பழைய ஆள் இல்லையோ?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    //அதூஉ என்ன கதையின்னு தான் யாராச்சும் சொல்லுங்களேன். இல்லேன்னா தூக்கமே வர மாட்டேங்குது.///

    கொஞ்சம் பொறுமையாக இருங்கோ கிரிஜா:) எங்கட நாட்டு வைத்தியரை 2,3 நாளாகக் காணவில்லை, பூச்சி, சிலந்தி, தவளை:))... பிடிக்கப்போயிட்டார் என நினைக்கிறேன்(பயப்புடாதீங்க , மருந்துக்காகத்தான்:)). வந்ததும் அ, அவரிடம் கேட்டு தூக்கம் வர ஏதாவது காய்ச்சிய மருந்து வாங்கித்தாறேன்:))), அதுவரை அஜீஸ் பண்ணுங்கோ..:)))

    //ஐயோ ஐயோ யாரு இந்த மாதிரி எல்லாம் கமெண்ட் போட்ட அப்புராணி ?? உலக நடப்பு ஒண்ணும் தெரிஞ்சுக்காம இருக்காங்களே?//

    அதானே ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்:))).

    //அதிரா வந்து என் பிரௌனிய சாப்பிட்டு போங்க//

    விடிய எழும்பியதும் வந்து சாப்பிட்டேன்.... அதுக்குப் பிறகு இப்பத்தான் கொஞ்சம் கதிரையில் இருக்கக்கூடிய நிலைமையில இருக்கிறேன்:)))... திரும்பவும் ஞாபகப்படுத்துறீங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..:))))..

    மியாவும் நன்றி கிரிஜா...

    ReplyDelete
  124. வாங்க அக்கா.. அஞ்சலின் அக்கா:))(ஐ நாந்தான் அதிகம் அக்கா போட்டிருக்கிறேன்:)) அதால, மோதிரம் என்கிட்டயே இருக்கிறமாதிரிப் பார்த்துக்கொள்ளுங்க:))).

    //angelin said... 125

    பூசாரின் யோகாவை கலைக்க நான் ஒரு ஐடியா தரேன் .லாங் டிஸ்டன்ட்ல என் pet ஹம்ஸ்டேரை காட்டினா யோகா hogaiyaaaaa!!!!!!//

    நான் ரொம்ப ஸ்ரெடியா இருக்கிறேன்:)))... என் யோகால, நான் ரொம்ப ஸ்ரோங்காக இருக்கிறேன்....

    மனச்சாட்சி: எலியாஆஆஆஆஆஆஆஆஆஆ? ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:))).

    அடக் கடவுளே!!! மரக்கறி கட்லட் சாப்பிட்டாச்சு, இப்போ பற்றீஸ் கேட்குதோ பற்றீஸ்?:) ஒருக்கால் தேம்ஸ்ஸ் கரைக்கு வரமுடியுமோ?:)), பயப்பூடாமல் வாங்கோ:)).

    //very tired .தூங்க போறேன் .......good night//

    http://www.youtube.com/watch?v=yCjJyiqpAuU

    Thank you very much and "Good Night" Anjalin.

    ReplyDelete
  125. //கொஞ்சம் பொறுமையாக இருங்கோ கிரிஜா:) எங்கட நாட்டு வைத்தியரை 2,3 நாளாகக் காணவில்லை, பூச்சி, சிலந்தி, தவளை:))... பிடிக்கப்போயிட்டார் என நினைக்கிறேன்(பயப்புடாதீங்க , மருந்துக்காகத்தான்:)). வந்ததும் அ, அவரிடம் கேட்டு தூக்கம் வர ஏதாவது காய்ச்சிய மருந்து வாங்கித்தாறேன்:))), அதுவரை அஜீஸ் பண்ணுங்கோ..:)))//


    மூட்டை பூச்சி கால் -25
    நண்டு கொடுக்கு -3
    இறால் தலை --6
    மீன் வால் -1
    யூரியா -கால் கிலோ இதை நல்லா நிழழில் காய வச்சி அதை
    கொசு இரத்தம் 500 mlஊற்றி வெய்யிலில் 2 நாள் காய வச்சி அதை ஊமத்தம் பூ சேர்த்து நெய்யில் வதக்கி பிறகு கோமியம் கலந்து தினமும் தூங்கப்படுக்கும் போது சாப்பிட்டு வந்தால் நல்லா தூக்கம் வரும் -
    --அப்படின்னு சிரசாசன சித்தர் சொல்லி இருக்கார் .

    ReplyDelete
  126. வாங்கோ ரமேஷ்(மிஸ்டர்)...(MR என்றால் மிஸ்டர்தானே:)).

    முதல் வருகைக்கு நன்றி, நல்வரவு.

    உங்கள் தளம் வந்தேன், படித்தேன், சிரித்தேன்,... சிரித்துக்கொண்டிருக்கிறேன்,.. சிரிப்பேன்....

    ஃபலோவராக இணைய முடியவில்லை. ஏதோ ஒன்று நடக்குது என்னவெனத் தெரியவில்லை, இப்போ எங்கேயும் ஃபலோவராக என்னை அனுமதிக்கிறார்களில்லை... கண்டுபிடிக்கிறேன்... கெட்ட கிருமியை:))(கூகிளில் ஏதும் குளறுபடியோ தெரியாதே:)).

    மிக்க நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  127. கடவுளே ஜெய்ய்ய்ய்ய்:))... பொல்லுக்கொடுத்தெல்லோ அடி வாங்கின கதையாப்போச்சு என் கதை:))... ரீ குடிச்சாலும் இனி கொசு ரத்தம்தான் நினைவுக்கு வரப்போகுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    முதலாவது ஓக்கே..
    2ம் இடம் நண்டின் பாகம் பார்த்ததும் சிரிச்சதில வயிறு வலிக்குதூஊஊஊஊஊ:)))....

    //-அப்படின்னு சிரசாசன சித்தர் சொல்லி இருக்கார்// கிரிஜா... கொபியில நோட் பண்ணிடுங்க குறிப்பை இல்லாட்டில் மறந்திடுவீங்க:))).

    ஆசன சித்தர்.. பெயர்போனவர் கை வைத்தியத்தில:))).


    மியாவ் மியாவ் ஜெய்.

    ReplyDelete
  128. பாலோயிரா இனைய முடியவில்லை பொய்தானே.. ஹிஹி பொய்ங்குற உண்மைய கண்டுபுடிச்சுட்டேன்..சும்மா உல்லுலாயி

    ReplyDelete
  129. /மகிழ்ச்சியாக இருக்கு, இப்படி எல்லோரும் ஒன்றாக, குதூகலித்து ரொம்ம்ம்ம்ம்ம்பக் காலமாகிட்டுது./ஸேம் பின்ச் அதிரா! :)

    /விடிய எழும்பியதும் வந்து சாப்பிட்டேன்.... அதுக்குப் பிறகு இப்பத்தான் கொஞ்சம் கதிரையில் இருக்கக்கூடிய நிலைமையில இருக்கிறேன்:)))/ 8ப்ரவுனிய அமுக்கினப்பவே நினைச்சேன்!! அப்பாடா,க்ரேட் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்புடா சாமீ! :)

    ட்விங்கிள்-ட்விங்கிள் --சாங் சூப்பர்! அதைப் பார்த்து எனக்கு ப்ரூ-ரீ டைமிலயே தூக்கம் தூக்கமா வருது! ;)

    ஜெய்அண்ணா,வைத்தியர் மருத்துவம் ஜூப்பரு! நீங்க அதை சாப்பிட்டுத்தானே இம்புட்டு ஸ்ரெடியா..ஸ்ரெந்தா சிரசாசனம் பண்ணிட்டு இருக்கீங்கோ?? அதுவும் தண்ணிக்கடீல?!! :)))

    ReplyDelete
  130. //மாய உலகம் said... 136

    பாலோயிரா இனைய முடியவில்லை பொய்தானே.. ஹிஹி பொய்ங்குற உண்மைய கண்டுபுடிச்சுட்டேன்..சும்மா உல்லுலாயி//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    நான் தான் தேவையில்லாமல் பொய் சொல்லமாட்டேனே.. எத்தனையோ தடவை முயற்சித்துவிட்டேன், டக்கென சைன் அவுக் ஆகிறது:(((. இதே முறையிலதான் முன்பு எல்லா புளொக்கிலும் இணைந்தேன்... இப்போ ஏன் முடியவில்லை?.

    ட்ரை பண்ணிய புளொக்குகள்.... அஞ்சலின், என் சமையல், மாய உலகம், அடுத்து மிஸ்டர் ரமேஸின் அன்பு உலகம்...

    இதுக்கு மேல நான் என்ன பண்ணட்டும்??.. தேம்ஸ்ல குதிக்கட்டோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  131. மகி... தூங்கிடாதீங்க... இமாவின் உலகில.. மருதாணி போட்டாச்சூஊஊஊஊஊஊஊ.. ஏதோ விஷேஷம்போல..... நிண்டபடி ஓடிவராமல், அயகா வெளிக்கிட்டு போங்க அங்கின:)).

    ReplyDelete
  132. மகி மருதாணி வடை வாங்கி தன்ட ப்ளொக்ல போட்டு விட்டு நித்திரை கொள்ளப் போய் விட்டா அதீஸ்.

    உங்கட டாஷ்போட்ல போய் பின்தொடர.. அட் பண்ண ஏலாதோ அதிரா? ட்ரை பண்ணினனீங்களோ?

    ReplyDelete
  133. ஒவ்வொருவர் பக்கத்திலும் join this site என இருக்கும்தானே... அதில் போய்த்தான் வழமையாகச் செய்வேன்... இப்போவும் அப்படிச் செய்தேன், ஆனா டக்கெண்டு sign out ஆகிறது.

    என் பக்கத்தில் செய்தேன்... இதில மட்டும் accept பண்ணிடுது, என் ஐடி என்பதாலயாக்கும்...:)).

    சரி அது போகட்டும்.. மாயாவைக் கண்டால் உடனே எனக்கொரு ”மிஸ்” கோல் தாங்கோ, நான் 200 மைல் வேகத்தில பறந்து வந்திடுவேன்:)). ஏன் எதுக்கெண்டெல்லாம் குறுக்க கேள்வி கேட்டு, என் யோகா செய்யும் மூஊஊஊஊஊடைக் கெடுத்திடப்படா:)).

    ReplyDelete
  134. அதீஸ்...

    //கிரிஜா ”அங்கின” இருந்த பழைய ஆள் இல்லையோ?// இல்லை. ஏதோ அலைவரிசை ஒத்துப் போகுது. ;)

    //join this site என இருக்கும்தானே... அதில் போய்த்தான் வழமையாகச் செய்வேன்...// மயில் விடு தூது பார்த்தீங்களோ!

    //ஏதோ விஷேஷம்போல..... // ம். OOOOO ;)

    ReplyDelete
  135. இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  136. அப்பா அப்பாப்பா
    எல்லாம் சூப்பர்

    ReplyDelete
  137. இடையிடையே பாட்டு எல்லாமே எனக்கு ரொம்ப பிடித்த பாட்டுகள்.

    ReplyDelete
  138. அதிக மனக்கவலை யில் அதிராவின் பக்கம் வந்தால் போதும்
    எப்பா பதிவ படிக்கவே, இரண்டு டீ ஆச்சு

    இன்னும் கமெண்ட்களை படிக்க ஒரு நாள் கண் விழிகக்னும் போல இருக்கே?

    ReplyDelete
  139. தொடரை ஒரு வலியா (நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்) முடிச்சாச்சு :-)) ஹா..ஹா..

    http://kjailani.blogspot.com/2011/07/blog-post_8450.html

    ReplyDelete
  140. //இந்த ஆகாயப் பந்தலிலே... வாழ்க்கையிலேயே ஒரே ஒரு தடவைதான் கேட்டேன்... அந்த இரு வரி மட்டும்தான் தெரிந்திருக்கு. இன்னும் முளுமையாகப் பாடல் கிடைக்கவில்லை/தேடியதில்லை.//

    http://www.dailymotion.com/video/xfem7a_aagaya-panthalile-ponnoonjal_videogames

    ReplyDelete
  141. //ஏதோ அலைவரிசை ஒத்துப் போகுது. ;)//

    இமா... அப்போ இவிங்க new:) FM 98.5 ஆஆஆஆஆஆ?:)). தெரியாமல் போச்சசே.... இல்லாட்டில் ராக்கிங் எண்டு கொண்டாடியிருக்கலாம்:))அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

    மயிலுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    வாறன் மாயா வாறன்... அதுக்குள் தலைப்பை மாத்திடுவீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  142. மிக்க நன்றி ஜெய்... எல்லாத்தையும் பார்த்துவிட்டுத்தான், நித்திரை கொள்ளும் என் முடிவை மாத்தி, நித்திரைகொள்ளாமல் ரப்பிங் நடக்குது...

    பாட்டுக்கு மிக்க நன்றீஈஈஈஈஈஈஈ..


    நல்ல ஒரு சைட்டினையும் அறிமுகப்படுட்த்ஹியிருக்கிறீங்க, நான் யூ ரியூப்பில் மட்டுமே தடவுறனான்:)).

    மியாவ் ஜெய்.

    ReplyDelete
  143. ஜலீலாக்கா வாங்க..... புவஹா... எங்க?:)).

    ”சோகங்கள் எமக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே......”.

    மியாவ் மியாவ் ஜல் அக்கா.

    ReplyDelete
  144. அடக் கடவுளே... கரெக்டா... வந்து வடை, பற்றிஸ், கட்லட்.. இப்போ ஸ்பிரிங் ரோல் கேட்குதோ?... பிளைட்டில ஏறிடலாம், அதிரா எங்க துரத்திப்பிடிக்கிறது என்ற தைரியம்தானே..:)))).

    எங்கட மக்களிடம்:)வாகனங்களை:) வாடகைக்கு கேட்டிருக்கிறன் கிடைச்சதும் வாறன் ஸ்பிரிங் ரோல் உடன்....:))).

    நன்றி அஞ்சலின்.

    இமா... அதென்ன இருந்தாப்போல உங்கட உலகத்தில கொமெண்ட் எதையும் படிக்க முடியேல்லை, ஓபின் ஆகுதில்லை:(.

    வாகனம்: மயில், ஆமை:))

    ReplyDelete
  145. சூப்பருங்கோ

    ReplyDelete
  146. வாங்க ரியாஸ்ஸ்.. நல்வரவு, மிக்க நன்றி.

    ReplyDelete
  147. //நல்ல ஒரு சைட்டினையும் அறிமுகப்படுட்த்ஹியிருக்கிறீங்க, நான் யூ ரியூப்பில் மட்டுமே தடவுறனான்:)).//

    அதுக்குதான் மாத்தியோசிக்கனும் , ஒரு வேளை அங்கேயும் கிடைக்காட்டி இருக்கவே இருக்கு மீடியா ஃபையர் :-))

    ReplyDelete
  148. இருக்கவே இருக்கு மீடியா ஃபையர் :-)) //

    ஆஆஆஆஆஆஆஆஅ ஃப்பயராஆஆ... அங்கயுமோஓஓஓஒ??? என்னை விடுங்க நான் ஓடித் தப்போணும்...

    ஜெய் வாங்க ஜெய்.. நீங்க பாட்டு சைட் ஐச் சொன்னீங்களோ? மிக்க நன்றி. இனிமேல் தேடுறேன் பாருங்கோவன்...

    ReplyDelete
  149. அதிரா...என்னால் இன்றைய பதிவுக்கு கமெண்ட் போட முடியவில்லையே...

    ReplyDelete
  150. என்னாலும் கமன்ட் போட முடியவில்லை. சில இடங்களில் எழுத்துப் பிழைகள் இருக்கு. அதை போட்டுக் குடுக்க கூட முடியாமல் தவிச்சுட்டு கிடக்கிறேன் கர்ர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
  151. ஆரது கொமெண்ட் போடாமல் போவது?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. புளொக் ஓனர்.... மீ தான்:)), என்னையே அனுமதிக்குதில்லை கொமெண்ட் போட:)).

    பிள்ளையார் பிடிக்கப்போய்க் குரங்கா மாறின கதையாக்கிடக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    புதுசா புதுசா மாத்தியிருக்கினம்... hide/show மட்டும்தான் இருக்கு... show போட்டும் கொமெண்ட் பொக்ஸ் வருகுதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). வேறு ஏதாவது ஐடியா இருந்தா யெல்ப் மீ பிலீஸ்ஸ்ஸ்...

    ஆரோ கொலைவெறியாமே... நல்லவேளை கொமெண்ட் பொக்ஸ் இல்லாதது உஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ஜெய் மாமிக்கும் இதே பிரச்சனையோ தெரியேல்லையே... ஆஆஆ நாங்க இப்பவும் கட்டிலுக்குக் கீழதேன்ன்ன்ன்ன்ன்:)

    ReplyDelete
  152. இப்ப ட்ரை பண்ணுங்க. ;)

    மாமி நேற்று வீட்டைப் பூட்டிட்டு அவசரமா பயணம் போய்ட்டா. இப்ப திறந்தாச்சு.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.