நல்வரவு_()_


Monday 15 May 2017

அந்தாட்டிக்காவில மனிசன் வாழ முடியாதாம்..!
பெண்டாட்டியோடு புருஷன் வாழ முடியாதாம்:)

டி வாங்கோ ஓடி வாங்கோ, தலைப்பைப் பார்த்ததும் அதிரா வீட்டில என்னமோ புறுணம் பார்க்கலாம் என நீங்க ஓடி வருவது தெரியுது:), அதுதான் இல்ல:).. இது ஒரு பட்டிமன்றத்தில் சொன்னார்கள், அதைப் பொறுக்கி வந்திட்டேன்.. என் போஸ்ட் படிச்சிட்டு முடிவில சொல்லுங்கோ தலைப்பு உண்மையா பொய்யா என்பதை:)..
ரி இப்போ விசயத்துக்கு வாறேன். ஐஸ் கேட்டிங் என ஒரு விளையாட்டு இருக்கிறதுதானே, அது இங்கு பெரும்பாலும் சில மோல்களில், சில சுவிமிங் ஃபூல்களில் இணைந்து இருக்கும். அப்படி எங்களுக்கும் அருகில் உண்டு[indoor]. இங்கு பிரைமறி ஸ்கூல் பிள்ளைகளை, இப்படி அனைத்துக் கேம்ஸ் களுக்கும் ஸ்கூலால் கூட்டிச் சென்று பழக்கி விடுவார்கள்.

அதுக்கு எங்கள் மூத்த மகன் ஸ்கூலால் பழகியபோது, நன்றாகச் செய்தார், அப்போ பிரைவேட்டாகவும் அவருக்கு வகுப்புக் கொடுக்கலாமே என இணைச்சோம், அந்நேரம் மற்றப் பக்கம் அடல்ட் வகுப்புக்களும் நடந்தன, அதைப் பார்த்ததும் எனக்கும் ஆசை அதிகமாகி, நானும் இணையப்போகிறேன் என இணைஞ்சிட்டேன். இப்படி கீழே பிளேட்போல இருக்கும் சூஸ் போட்டுக் கொண்டு, உன்னி உன்னி வழுக்க வேண்டும் ஐஸ்ல:)..
நான் வகுப்பில் இணைஞ்சு, கொஞ்சம் நன்றாகவே ஸ்கேட் பண்ணப் பழகிக்கொண்டு வந்தேன். அந்த ஸ்கேட்டிங் ஏரியா வட்டமாக இருக்கும், சுவர் முழுக்க கைப்பிடிக் கம்பிகள் பூட்டப்பட்டிருக்கும், முதலில் அதைப் பிடித்துக் கொண்டு, மெதுவாக வழுக்கி வழுக்கி சுற்றி வர வேண்டும், பின்னர் மெதுவாக கையை விட்டு விட்டு நடக்கச் சொல்வார்கள், அதன் பின்பு, ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு, பிடிக்காமல் குறுக்கே குறுக்கே போய் வரச் சொல்வார்கள்...

ழக்குபவர்கள், கைப்பிடிச்சு நடுவுக்கு இழுத்துக் கொண்டு போவார்கள்.. என்னைப்போல பயப்பிடுவோரை. நான் மட்டும்தானே ஏசியன்:), ஏனையோர் எல்லாம் இங்கு பிறந்ததிலிருந்தே ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பழகியிருப்பார்கள்.  இப்படி கிட்டத்தட்ட ஒரு மாத வகுப்புக்கள் முடிந்த நிலையில் எனக்கு பயங்கர நம்பிக்கை வந்துவிட்டது, நன்றாக ஸ்கேட் பண்ணித்திரிந்தேன் மெதுவாக. ஐஸ் பயம் போயிருந்தது.
===========================================================================
இங்கின கொஞ்சம் அதிரா வீட்டு விடுப்ஸ் கேட்போமா?:), தெரியுதே விடுப்ஸ் என்றதும் எல்லோர் காதுகளும் தானா நீளுதே கர்ர்[கரெக்ட் ளூ போட்டிட்டேன்.. எங்கிட்டயேவா?]..
இப்படித்தாங்க ஒருநாள், நான் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்[இங்கே அவர் என்றால் என் பெட்டர் ஹாஃப்] எனக்கு கண் குத்துறமாதிரி இருக்கு, இங்கே கொஞ்சம் வலிக்குது, இவ்விடத்தில நோகுது.. என,  ஒரு “ம்” கொட்டினாலே 4 வசனம் பேசுவேன்:), அவரோ.. அப்படியா அதிரா.. வேறு என்ன பண்ணுது?.. ஆ வேறு எங்கெல்லாம் வலிக்குது.. இப்படி வலு அக்கறையாக் கேட்டுக் கொண்டிருந்தாரா, அதனால நானும் சீரியசா மின்னி முழக்கிட்டிருந்தேன்...

முடிவில ஒரு வசனம் சொன்னார் பாருங்கோ:).. அதன் பின்பு வீட்டு நிலைமை எப்படி இருந்திருக்கும் என நீங்களே கன்னா பின்னா என கற்பனை பண்ணிக்கோங்க:) நான் குறுக்கே வரமாட்டேன்ன் உங்க கற்பனைக்கு:).

அவர் சொன்னது  “அதிரா , உங்களுக்கிருக்கும் வருத்தங்களைப் பார்த்தால்,  இதுக்கு நான் உங்களை நல்ல ஒரு "Vet" இடம் தான் கூட்டிப்போய்க் காட்ட வேணும்”
===========================================================================
ப்போ அடுத்தகிழமை வகுப்புக்குச் சென்றபோது, அந்த இன்ஸ்ரக்டர் ஒரு லேடிதான்,  அவ சொன்னா. இன்று, ஒரு காலைத்தூக்கிக் கொண்டு பழகலாம் என. ஆனா அவ்வகுப்பில் கிட்டத்தட்ட 20 பேர் வரையில் இருந்ததாக நினைவு.. ஆண்களும் பெண்களுமாக.

ன்னையும் இன்னொரு பெண்ணையும் மட்டும் சொன்னா, நீங்க இன்று ஒரு காலில் ஆரம்பிக்க வேண்டாம், நீங்க இரு காலிலேயே பிறக்டீஸ் பண்ணுங்கோ என.. கர்ர்ர்ர்ர்ர்ர்:).

ப்படிச் சொல்லிவிட்டு, அவ ஒரு காலில் ஏனையோருக்குப் பழக்கிக்கொண்டு, எதிர்ப்பக்கச் சுவருக்குப் போய் விட்டா. நானோ நன்றாகவே இரு காலில் செய்து கொண்டிருந்தேன், அதனால எனக்கு பயங்கர நம்பிக்கை வந்துவிட்டது, நான் நன்றாகச் செய்கிறேன் என... அப்போ மனதிலும் புழுக்ஸ்:) அதிகமாகி, போனாப்போகுது, ஒரு காலைத் தூக்கித்தான் பார்ப்பமே என.. தூக்கினேன்...[[என்னுடைய அனுபவம்/பலன், எந்த விசயத்திலாவது, பயங்கர நம்பிக்கையோடும் தெளிவாகவும் இருந்தேனென்றால்... கவிட்டுப்போடும், ஆனா பயந்து நடுங்கி, நம்பிக்கையே இல்லாததுபோல ஒரு அலுவலில் இறங்கினால் அது வெற்றியில் முடியும்.. இது நானா அமைக்க முடியாது, தானாக அப்படி நடக்கும்]]

து எப்படிச் செய்ய வேண்டுமெனில், இரு கால்களால் உன்னி ஸ்பீட் எடுத்ததும், சூஸ் தானாக வழுக்கிக் கொடுக்கும், அப்போது ஒரு காலைத் தூக்கிக் கொண்டு பலன்ஸ் இல் நிற்க வேண்டும்...

இங்கு என்னைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு: சின்ன வயதிலிருந்தே, என் கையில் நான் வலு கவனம் பாருங்கோ:).. கீழே விழும்போது எப்பவுமே வாழ்க்கையில் கை ஊன்றியதில்லை, கைகள் இரண்டையும் மேலே தூக்கிடுவேன், அது என்னை அறியாமல் நடக்கும். அதனால நாடி தான் நிலத்தில் அடித்து வெடிக்கும். இப்பவும் நாடியில் எனக்கு, உள்பக்கமாக வெடிச்ச அடையாளம் [சின்னவயசு அடையாளம்]சின்னதாக இருக்கு.

ப்படிப்பட்ட நான், ஒரு காலைத் தூக்கினேன் பாருங்கோ, அது கொஞ்சம் அதிகமாக முன் பக்கம் வளைஞ்சிட்டனோ என்னமோ, அப்படியே வழுக்கி விட்டுது, டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனப் பென்னாம் பெரிய சத்தம்.. அந்த ஸ்கேட்டிங் ஏரியாவே அதிர்ந்துது.. ஐஸ் இல் சத்தம் அதிகமாகக் கேட்கும். ஹா ஹா ஹா விழுந்தது எப்படி எனில், கைகளைத் தூக்கிட்டேன், கன்னத்தைக் காட்டி விழுந்தேன், நல்லவேளை நாடியைக் குத்தியிருந்தால் தெறிச்சிருக்கும்:),  அப்படியே கன்னம் போய் சப்பென ஐஸ் ல அடிச்சு.. சிவந்திட்டுது கர்ர்:)..

விழுந்ததுதான் தெரியும், அப்படியே மின்னல் வேகத்தில், அங்கிருந்த அனைத்து இன்ஸ்டக்ரேஸ் உம் வழுக்கிக்கொண்டு என்னிடம் வந்து, அப்படியே தூக்கி, கரைக்குக் கொண்டு வந்து , பெஞ் ல இருத்திப்போட்டு, ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவராக ஓடி, பெரிய குல்ட் கொண்டு வந்து போர்த்தார்கள், ஹொட் வோட்டர் bag எடுத்து வந்து கன்னத்தில் பிடிக்கிறார்கள், காலில் இருந்த சூஸ், சொக்ஸ் ஐக் கழட்டிப்போட்டு, உள்ளங்கால்களைத் தேய்த்து விடுகிறார்கள்...

நான் இத்தனைக்கும் சிரிச்சுக் கொண்டுதான் இருந்தேன். வழமையாக நானும் மூத்த மகனும் கிளாஸ்க்குப் போக, கணவர் சின்னவரோடு வீட்டில் இருப்பார், அன்றும் அப்படியே.    வகுப்புக்களில் சேரும்போது, எமேஜென்சி ஃபோன் நம்பர் வாங்கி வைத்திருப்பார்கள். அப்போ, ஓடிப் போய்க் கணவருக்கு கோல் பண்ணி, உடனே வரும்படி அழைத்ததும், பக்கத்தில் தான் 5,6 நிமிட ட்றைவிங்.. அவர் ஓடி வந்து, என்னைச் செக் பண்ணிப் பார்த்திட்டு, ஒன்றுமில்லை நான் வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன் என, ஃபோம்,  ஃபில் பண்ணி சைன் பண்ணிக் கொடுத்திட்டு, வீட்டுக்குக் கூட்டி வந்தார்.

வீட்டுக்கு வந்ததும் என் வலது பக்க சொக்கை(அடிபட்ட கன்னம்) புறிம்பாக வீங்கியிருந்தது.. அது வீக்கம் வற்ற ஒரு கிழமை ஆச்சு. ஆனா கடவுள் புண்ணியத்தில் வேறு எந்த நோவோ, வலியோ எதுவுமே இல்லை. என் வாய்க்கோ பேச்சுக்கோ எந்தக் களங்கமும் வராமல் வளமைபோல பேசிக்கொண்டிருந்தேன்:), ஆனா அன்றோடு அப்பக்கம் திரும்பிப் பார்த்தாலே கை கால் எல்லாம் ரைப் அடிக்குது:).
==================================================================================
Dancing on ice  எனும் போட்டி நிகழ்ச்சி, எல்லா இடத்திலும் நடக்கும், இங்கு பிரித்தானியாவிலும் ஒவ்வொரு வருடமும் நடக்கும்.. எங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. வீடியோவாக இணைத்தால் புளொக் ஸ்லோ வாகுமோ எனும் பயத்தில், லிங்கை மட்டும் தருகிறேன், விரும்புவர்கள் இதில் போய்ப் பார்க்கலாம்..DANCING ON ICE
=================================================================================
இதேபோல இன்னொரு கதையும் இருக்கு, இங்கு போட்டால் உங்களுக்கு கஸ்டம், அதனால... இது அடுத்த பகுதியில் “டொடரும்”:).

ஊசி இணைப்பு:
இதை நான் எங்கிருந்தும் களவாடி வரவில்லை என்பதனை, இந்த ஸ்கேட்டிங் சூஸ் மீது அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்:)... முக்கியமா சகோ வெங்கட் நாகராஜ் பக்கமிருந்து திருடவில்லை:).. மனதுக்கு பிடிச்சதை கெட்டித்தனமாக் களவெடுத்து வருவது ஒரு தப்பா?:).

ஹா ஹா ஹா என்ன கொடுமை சாமீஈஈஈ:)
==========================================================================
அறிவாளிகளுக்கு “அறிவு” அதிகம் - ஆனால்
முட்டாள்களுக்கு “அனுபவம்” அதிகம்.
இது கண்ணதாசன் அங்கிள் சொன்னது:)
அதிராவுக்கு “அனுபவம் அதிகம்”:) இதைச் சொல்பவர் :
உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்.
===================================__( )__==================================
யாரும் அதிராவிடம் தப்ப முடியாது:), இங்கின கிளிக் பண்ணி வோட் போட்டால்தான், திரும்பிப் போகலாம், இல்லை எனில் இன்று நைட் கெட்ட கெட்ட கனவாக் கண்டு கத்திக் கொண்டு கட்டிலால விழுவீங்க சொல்லிட்டேன்:)
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

148 comments :

  1. 'காபில சக்கரை....' - மனதை நெகிழ வைத்தது. உண்மையை எவ்வளவு இலகுவா சொல்லியிருக்காங்க....

    உங்க பனிச் சறுக்கு விளையாட்டு - சுவாரசியமாத்தான் இருந்தது. எதையும் கற்றுக்கொள்வோம் என்று நினைப்பதே வாழ்க்கையை சுவாரசியமாக்கும். விழுந்தால் என்ன.. அதுவும் அனுபவம்தானே. நல்லவேளை.. சாதாரண அடிதான்.

    வெட். மருத்துவரிடம் காண்பித்தீர்களா? உங்கள் வருத்தங்களில் பாதியாவது சரியானதா...

    இன்னொன்று... ஈழத் தமிழர்கள் எழுத்தில் அவர்கள் மற்றவர்களை (அது கணவனானாலும் சரி, மனைவி ஆனாலும் சரி, இல்லை குழந்தைகளானாலும் சரி) நீங்க என்று பன்மையாகத்தான் விளிக்கிறார்கள். பொதுவா தமிழகத்தில், அம்மாவை, குழந்தைகள் 'நீ' என்று அழைக்கும். பசங்களை அப்பா, நீ, வாடா, வாடீ என்றுதான் பேசுவார்கள். பசங்களுக்குள்ளேயே, எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் 'நீ'தான். பொதுவா, ஆண்களை (அப்பா, தாத்தா...) நீங்கள் என்றுதான் அழைப்பார்கள். 'மனைவி', கணவனை, மூன்றாம் மனிதரிடத்தில் 'பெயர்' சொல்லுவதுகூட, பலரிடத்தில் புருவத்தை உயர்த்தும் (அப்படீன்னா.. அட.. கணவன் பெயரைச் சொல்றாளேன்னு). கணவரை பெயர் சொல்லி அழைப்பது அபூர்வம், அது மரியாதைக்குறைவாகக் கருதப்படுகிறது (என் தலைமுறை வரையில்). (உடனே ப்ரான்ஸ் அதிபர்/மனைவியை உதாரணம் காட்டாதீர்கள். பொதுவா, மனைவி கணவரை விட கொஞ்சம் வயது குறைவுதான்)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. இம்முறை இங்கேயும் நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊ:).

      நீங்களும் இப்போ கீழே இருந்து மேலே படிக்கத் தொடங்கிட்டீங்களோ?:) இதுகுத்தான் சொல்றது அஞ்சுவோடு சேராதீங்க என:)..ஹா ஹா ஹா..

      ///விழுந்தால் என்ன.. அதுவும் அனுபவம்தானே. நல்லவேளை.. சாதாரண அடிதான்./// ஆவ்வ்வ்வ் அப்போ என் அடுத்த ஸ்டோரியையும் விரைவில் எடுத்து விடுறேன்ன்:) [டொரர்].

      //வெட். மருத்துவரிடம் காண்பித்தீர்களா? உங்கள் வருத்தங்களில் பாதியாவது சரியானதா...
      /// ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) அந்தச் சிரிப்போடயே எல்லாமே மறைந்தே விட்டது:).

      Delete
    2. உண்மைதான் நாங்கள் அப்பா அம்மாவை ஒரு போதும் நீ என அழைப்பதில்லை. அதிலும் எங்கள் வீட்டில் நம்மை யாரும் வாடி போடி, வாடா என்றெல்லாம் சகோதரங்களுக்குள் கூட அழைக்க மாட்டோம். பிள்ளைகளையும் வாங்கோ போங்கோ தான். என் மாமானார் மாமிகூட அதிரா வாங்கோ எனத்தான் அழைப்பினம்.. அதிலும் மாமி இன்னும் அன்பாக அதிரா வாங்கோடா, சாப்பிடுங்கோடா எனத்தான் இன்றுவரை அழைப்பா.

      எங்கள் ஊரிலும் பெரிதாக கணவனின் பெயர் சொல்லி அழைப்பதாக இல்லை, ஆனா வெளிநாட்டில் அனைவரும் பெரும்பாலும் பெயர் சொல்லியே அழைக்கிறோம்... அதுக்காக மரியாதைக் குறைவென்றில்லை ஒரு பெஸ்ட் ஃபிரெண்ட்போல இருக்கும்.

      இங்கு நம்மோடிருக்கும் இந்திய நண்பர்களும் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். ஒரே ஒரு தமிழ் சென்னை நண்பர்கள் இருக்கிறார்கள் அவ கணவரை பெயர் சொல்லி அழைப்பதில்லை.. ஏங்க கொஞ்சம் வாங்களேன் இப்படி அழைப்பா.. ஆனா நம்மோடு பேசும்போது பெயர் சொல்லிப் பேசுவா.

      // (என் தலைமுறை வரையில்). (உடனே ப்ரான்ஸ் அதிபர்/மனைவியை உதாரணம் காட்டாதீர்கள். பொதுவா, மனைவி கணவரை விட கொஞ்சம் வயது குறைவுதான்)///
      ஹா ஹா ஹா வெளிநாட்டில் குழந்தைகூட பெரியவர்களைப் பெயர் சொல்லித்தானே அழைக்கிறது. எங்கள் மகனின் நண்பன்.. என்னை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார்ர்.. பொதுவா மிஸிஸ் ..... என்பார்கள் ஆனா இவரோ பெயர் மட்டும்தான்... நெருக்கமாகிவிட்டால், பெயர் மட்டுமே சொல்வது வழக்கம்.

      ஸ்ஸ்ஸ் இதில் ஏதும் விடுபட்டிருந்தா என் செகரட்டரி தொடர்வா ஹா ஹா ஹா:).

      Delete
    3. நெல்லைத்தமிழன் :) ஹாஹாஹா இங்கே ஆன்ட்டி அங்கிள் னு கூட யாரும் கூப்பிட மாட்டாங்க :)) நண்டு சிண்டெல்லாம் நம்மை பெயர் சொல்லித்தான் அழைக்கும் :))

      Delete
    4. என் அக்காவின் மகன் கனடாவிலிருந்து முதல் தடவையாக இலங்கைக்கு வந்தபோது, 5 வயதிருக்கும், அப்போ நாம் வாங்கோ போங்கோ எனத்தான் அழைப்போம் அவரை...

      இடையிலே ஒருநாள் நான் செல்லமாக ... இங்கே வாடா குட்டி எனக் கூப்பிட்டேன், உடனே சொன்னார்... சித்தி!! Thief ஐ அல்லது bad people ஐத்தான் வாடா எனக் கூப்பிடுவார்கள் என்னை எதுக்கு அப்படிக் கூப்பிட்டீங்க என, நான் ஷொக்ட் ஆகிட்டேன்ன்ன் .. இப்படித்தான் இருக்கு நம் குழந்தைகள் நிலை:).

      அதேபோல்தான் இப்போ நம் பிள்ளைகளும் யாரையும் அவன் அவள் எனக்கதைப்பதில்லை... :)

      Delete
    5. வாவ்வ்வ்வ் மை பேசனல் செக்கரட்டறி லாண்டட்:).

      Delete
  2. "எந்த விசயத்திலாவது, பயங்கர நம்பிக்கையோடும் தெளிவாகவும் இருந்தேனென்றால்" - எனக்கும், நான் வழமையாகச் செய்வதை (காலைல 4 மணிக்கு எழுந்துகொள்வது போன்று) யாரிடமாவது சொன்னால், அடுத்த நாள் அப்படிச் செய்யமுடியாமல் போகும். (அதாவது எதையுமே பெருமைப்படுமாறு மனதில் தோன்றினாலே, அடுத்தமுறை அதனைச் செய்ய இயலாது). இன்னைக்கு அட்டஹாசமாக இதைப் பண்ணுகிறேன் என்று கிச்சனில் புகுந்தால் அது சரியாக வராது.. இதுக்கெல்லாம் நான் நினைப்பது, 'நீ செய்வது நீ செய்வதல்ல' என்று படைத்தவன் சொல்வதுபோல் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. /// (காலைல 4 மணிக்கு எழுந்துகொள்வது போன்று) யாரிடமாவது சொன்னால், அடுத்த நாள் அப்படிச் செய்யமுடியாமல் போகும்.///
      இது இன்னொரு விதம் நெல்லைத்தமிழன்.. அதாவது கண்ணூறு எனச் சொல்வார்களே.. அதை முன்பு நான் நம்புவதில்லை, ஆனா கண்ணூறு என்பது உண்மையாம்..

      //இன்னைக்கு அட்டஹாசமாக இதைப் பண்ணுகிறேன் என்று கிச்சனில் புகுந்தால் அது சரியாக வராது.. இதுக்கெல்லாம் நான் நினைப்பது, 'நீ செய்வது நீ செய்வதல்ல' என்று படைத்தவன் சொல்வதுபோல் இருக்கும்.///

      இதைத்தான் நான் சொன்னேன், சில புது இடத்துக்குப் போகும்போது/ இண்டவியூவுக்குப் போகும்போது, எப்படிப் போவது எப்படிப் பேசுவது என எம்மை அறியாமல் கை கால் ரைப் அடித்து வியர்த்தால்.. அது சக்ஸஸ் ஆகும்...

      இதென்ன பெரிய விசயமா, எனக்கு எல்லாம் தெரியுமே என நினைச்சுக்கொண்டு போனனோ.. கவிட்டுப் போடும்... ஆனா இவை எல்லாம் நாம் நினைச்சு வருவதல்ல... தானாக நடக்கும்போது இப்படி ஆகிறது..

      Delete
  3. முகப்பு படம் சூப்பர் அதிரா.....

    என் வாய்க்கோ பேச்சுக்கோ எந்தக் களங்கமும் வராமல் வளமைபோல பேசிக்கொண்டிருந்தேன்:...


    இந்த ரணகளத்திலும் உங்க புலமை...ஆஹா..

    ஒவ்வொரு அனுபவமும் ...ஒவ்வொரு சுவைதான்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.. ஊர் போய் ஹப்பி மூட்ல இருப்பீங்க ...

      ///இந்த ரணகளத்திலும் உங்க புலமை...ஆஹா..///
      ஹா ஹா ஹா இந்த ரணகளத்திலும் ஒரு கிலுகிலுப்புக் கேட்குது அதுதானே?:) ஹா ஹா ஹா..

      அனைத்துக்கும் மிக்க நன்றி அனு.

      Delete
    2. இல்லை தப்பு தப்பூ அது கிலு கிலுப்பு என்றால் ராட்டில் ஸ்நேக் வாலில் இருப்பது ளு ளு ")கிளு கிளு

      Delete
    3. ///AngelinMonday, May 15, 2017 4:12:00 pm
      இல்லை தப்பு தப்பூ அது கிலு கிலுப்பு என்றால் ராட்டில் ஸ்நேக் வாலில் இருப்பது ளு ளு ")கிளு கிளு///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:).. என்னிடம் பிழை பிடிப்பதற்காகவே இந்த ஃபிஸ்ஸு எப்பவும் டிக்‌ஷனறியும் கையுமாவே திரிகிறாபோல இருக்கே ஹா ஹா ஹா:).

      Delete
  4. கண்ணதாசன் அங்கிளா? - இப்படியா உங்கள் வயதை வெளிப்படையாகச் சொல்வது? என் வயசை கண்ணதாசன் (இப்போது இருந்தால்) அவர்களோட வயசோடு ஒப்பிட்டால், கண்ணதாசனுக்கு என் தாத்தா வயதாச்சே..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹாஆ :)

      Delete
    2. //கண்ணதாசன் அங்கிளா? - //

      நெல்லை... பிரபலங்களுக்கு வயதேது?!!

      Delete
    3. ஸ்ரீராம் ... இங்கு நீங்க பிரபலம் என அழைத்தது நெல்லைய்ஹ் தமிழனைத்தானே? ஹா ஹா ஹா அவரின் வயதுதான் நேக்குத் தெரியுமே:).

      Delete
    4. ஹையோ ஹையோ :) ஸ்ரீராம் என்னிக்கும் பொய் சொல்ல மாட்டார் அவர் பிரபலம்னு சொன்னது நாலு கால் பூனை பதிவராகிய உங்களைத்தான்

      Delete
    5. ///நெல்லைத் தமிழன்Monday, May 15, 2017 7:50:00 am
      கண்ணதாசன் அங்கிளா? - இப்படியா உங்கள் வயதை வெளிப்படையாகச் சொல்வது? ///

      ஹா ஹா ஹா நீங்களும் ஒரு முடிவோடதான் இருக்கிறீங்கபோல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஒருவ்ரது வாழ்க்கை முடியும்போது.. அவர் என்ன வயதில் இருந்தாரோ.. அதுதானே நம் மனதில் பதிந்து நிக்குது எப்பவும்... இந்த வரிசையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அங்கிள்:).. முத்துராமன் மாமா:).. ஹா ஹா ஹா இப்பூடி நிறைய லிஸ்ட் இருக்கு என்னிடம்:).

      ///என் வயசை கண்ணதாசன் (இப்போது இருந்தால்)/// ஹா ஹா ஹா ரொம்பத் தெளிவாத்தான் இருக்கிறீங்க:) இருப்பினும் என்னிடம்தான் உங்கட வகுப்பு/ஆண்டு லிஸ்ட்டே இருக்கே:).. ஹா ஹா ஹாசரி சரி விட்டிடலாம்:).. முதல் வருகைக்கும் அனைத்துக்கும் மிக்க நன்றி நெ.த.

      Delete
    6. ///AngelinMonday, May 15, 2017 1:35:00 pm
      ஹையோ ஹையோ :) ஸ்ரீராம் என்னிக்கும் பொய் சொல்ல மாட்டார் அவர் பிரபலம்னு சொன்னது நாலு கால் பூனை பதிவராகிய உங்களைத்தான்//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அமைதியா இருக்கும் குட்டையில் கல்லெறிஞ்சுபோட்டுக் காணாமல் போயிட்டார் ஸ்ரீராம்:)

      Delete
  5. முத்தான மூன்றாம் வோட் எனது :)
    ஆமா கண்ணதாசன் தாத்தா சரியா சொல்லியிருக்கார் :))
    ஹாஹா :) அந்த டால்மேஷன் கிட்டிஸ் sooo கியூட்

    ReplyDelete
    Replies
    1. முத்துக்கு நன்றி:)..

      //ஆமா கண்ணதாசன் தாத்தா சரியா சொல்லியிருக்கார் :))//
      ரொம்பத் தெளிவா தாத்தா எனச் சொல்லிட்டீங்க கர்:) எங்கே அந்த தாத்தா படத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கோ:) ஹா ஹா..

      யேஸ் எனக்கும் பார்த்ததும் பிடிச்சுப்போச்ச்ச்ச்:)

      Delete
  6. முடிந்தால் இயலாதது ஒன்றுமில்லை முயற்சி வெற்றி தரும்.

    கண்ணதாசன் உங்கள் அங்கிளா ?
    அப்படீனாக்கா... நீங்களும் தேவகோட்டை ஏரியாவா ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... உண்மைதான் முயற்சி வெற்றி தரும், ஆனா மனம் விரும்புவதில் மட்டும்தானே முயற்சி எடுக்க முடிகிறது எம்மால், விருப்பமில்லாவிடில் முயற்சிக்கவே மாட்டோம்.

      ///கண்ணதாசன் உங்கள் அங்கிளா ?
      அப்படீனாக்கா... நீங்களும் தேவகோட்டை ஏரியாவா ?///
      ஹா ஹா ஹா... பகவான் ஜீ .. தமனாக்கு ஆள் சேர்ப்பதைப்போல:).. மீ டமில் மைண்ட்டுக்கு ஆள் சேர்ப்பதைப்போல:).. நீங்க தேவகோட்டைக்கு ஆள் சேர்க்கிறீங்களோ? ஹா ஹா ஹா...

      கண்ணதாசன் அங்கிள் இப்போ இருந்திருந்தால், நான் நிட்சயம் போய் அவரோடு சேர்ந்து நின்று ஒரு செல்வி ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே செல்ஃபி எடுத்திருப்பேன்ன்:)... அவரின் எழுத்துக்களைப் படிக்க தொடங்கியபோது, அவரைச் சந்திக்க முடியாமல் வெள்ளனவே போயிட்டாரே என எண்ணி கவலைப்படுவேன்ன்.. ஆனா இதைப்போல இன்றுவரை எந்தப் பிரபல்யத்தையாவது சந்திக்கோணும் என எண்ணியதே இல்லை.. அப்படி ஒரு ஈர்ப்பு அவரில்... ஏனோ தெரியவில்லை.

      மனதில் சின்ன சங்கடம் வந்தால்கூட உடனே அவரின் அர்த்தமுள்ள இந்துமதம் படிச்சால்ல்ல்ல் எல்லாம் நோர்மலாகிடும் எனக்கு:). அவருக்கும் எனக்கும் இடையில் அப்படி ஒரு தொப்புள்கொடி உறவுபோல விருப்பம்... போன ஜென்ம பந்தமாக இருக்குமோ? ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  7. களவாடினாலும் நல்லதைத்தான் செஞ்சிருக்கீங்க ..மனசை என்னமோ செய்தது ..
    ஊசி இணைப்பு /உனக்கு பிறகான நாட்கள் /// வெரி டச்சிங்

    நானும் வெங்கட் சகோ பக்கமிருந்து ஒண்ணை சுட்டு வச்சிருக்கேன் :) மூன்று வருஷமாச்சு விரைவில் வெளியிடுவேன் :))அவர்கிட்ட சொல்லிடாதீங்க :))

    ReplyDelete
    Replies
    1. அதேதான் அஞ்சு... இளமையில் எதுவும் ஓகே, ஆனா வயதான காலத்தில் மனைவியை முன்னுக்கு இழப்பது கொடுமையானதுதான், ஆனா என்ன பண்ணுவது.. விதிப்படிதானே அனைத்தும்..
      விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது....

      Delete
    2. //நானும் வெங்கட் சகோ பக்கமிருந்து ஒண்ணை சுட்டு வச்சிருக்கேன் :) மூன்று வருஷமாச்சு விரைவில் வெளியிடுவேன் :))அவர்கிட்ட சொல்லிடாதீங்க :))///

      ஹா ஹா ஹா அப்படியா? கர்ர்ர்:).. அது சிலரைப் பார்த்தால் ஒரு வார்த்தை பேசோணும்போல தோணும்..:) சிலரைப் பார்த்தால்.. நுள்ளோனும் போல தோணும்:)....சிலரைப் பார்த்தால் வம்புக்கு இழுக்கோணும்போல தோணும்.. சிலரைப் பார்த்தால் ஒதுங்கிடோணும் எனத்தோணும்... ஆனா சகோ வெங்கட் பக்கம் எதுக்கு எல்லோருக்கும் களவெடுக்கோணும் எனத் தோணுது ஹா ஹா ஹா:)

      Delete
  8. //என் வாய்க்கோ பேச்சுக்கோ எந்தக் களங்கமும் வராமல் வளமைபோல பேசிக்கொண்டிருந்தேன்:)//ரணகளத்திலும் என்ன ஒரு சந்தோசம் பாருங்க இந்த குண்டு பூனைக்கு :)

    //விழுந்ததுதான் தெரியும், அப்படியே மின்னல் வேகத்தில், அங்கிருந்த அனைத்து இன்ஸ்டக்ரேஸ் உம் வழுக்கிக்கொண்டு என்னிடம் வந்து,//

    அங்கே சிசிடிவி இருந்துதான்னு கொஞ்சம் பாருங்க :)ஒண்ணுமில்ல சும்மாதான் கேட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ///ரணகளத்திலும் என்ன ஒரு சந்தோசம் பாருங்க இந்த குண்டு பூனைக்கு :)//
      ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு சின்ன திருத்தம்:) உங்கள் எழுத்தில் கருத்துப் பிழை இருக்கிறது அது “குண்டு” அல்ல வயக்கெட்ட என வரோணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா.

      //அங்கே சிசிடிவி இருந்துதான்னு கொஞ்சம் பாருங்க :)ஒண்ணுமில்ல சும்மாதான் கேட்டேன் //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிபிசி க்கு அனுப்பவோ?:).

      Delete
  9. /இப்பவும் நாடியில் எனக்கு, உள்பக்கமாக வெடிச்ச அடையாளம் [சின்னவயசு அடையாளம்]சின்னதாக இருக்கு.//
    நாட்டி கேட் :)எனக்கெல்லாம் விழுப்புண்களே இல்லை ஏன்னா நான் எப்பவுமே நிலத்துக்கு வலிக்காம நடப்பேன் :)
    /பென்னாம் பெரிய சத்தம்.. அந்த ஸ்கேட்டிங் ஏரியாவே அதிர்ந்துது..//

    ஹையோ உடைஞ்சிடுச்சா ஐஸ் flooring எல்லாம் ????

    ReplyDelete
    Replies
    1. நான் சின்ன வயதில் போடாத கூத்தில்லை ஆனா சைக்கிலால் கூட விழுந்ததில்லை... ஆனா தடக்கி வீட்டுக்குள் விழுந்திருக்கிறேன்.. அதனால பல தடவைகள் நாடி வெடிச்சிருக்குது குட்டியா கர்ர்:).

      ///ஹையோ உடைஞ்சிடுச்சா ஐஸ் flooring எல்லாம் ????///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா அக்கறை:) இங்க ஒரு சுவீட் 16 எவ்ளோ கவலையா அந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறன் ஃபுளோர் ஆம்ம் ஃபுளோர்ர் கர்:).. அந்த சம்பவத்தால.. பிரித்தானிய “டான்சிங் ஒன் ஐஸ்” ல டான்ஸ் ஆட அழைப்பு வந்தும் மறுத்திட்டேன் தெரியுமோ?:).

      Delete
  10. என்னையும் இன்னொரு பெண்ணையும் மட்டும் சொன்னா, நீங்க இன்று ஒரு காலில் ஆரம்பிக்க வேண்டாம், நீங்க இரு காலிலேயே பிறக்டீஸ் பண்ணுங்கோ என.. கர்ர்ர்ர்ர்ர்ர்:).//

    ஹையோ ஹையோ தப்பா சொல்லிட்டார் நாலு காலிலும் பிராக்டிஸ் என்றுதானே சொல்லியிருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. [im]http://rs188.pbsrc.com/albums/z133/teach071960/laugh/laughingcat.jpg~c200[/im]

      Delete
    2. ஆமாம் ஏஞ்சல் அப்படித்தான் அவங்க சொன்னாங்க நம்ம பூஸார் தான் ஸ்டைலாக இப்படி எல்லாம் செய்தது...பூஸார் உனக்கென்ன மேலே நின்றாய் பாடலை ஆடிப் பார்த்திருக்கிறார்... அது சிம்லா ஸ்பெஷல் பாட்டாச்சே ஹிஹிஹி

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா அது என்ன சிட்டுவேசன் சோங் ஆ கீதா?:) கர்ர்:)

      Delete
  11. /எந்த விசயத்திலாவது, பயங்கர நம்பிக்கையோடும் தெளிவாகவும் இருந்தேனென்றால்... கவிட்டுப்போடும், //
    உண்மை அதிரா இந்த ஓவர் கான்பிடன்ஸ் என்னை அடிக்கடி வழுக்கி விழ வச்சிருக்கு உங்களை மாதிரி ஐஸில் இல்ல ஆனா வேற விஷயங்களில் ..நான் ஒரே ஒருமுறைதான் ஐஸில் வழுக்கினேன் அது ஸ்னோவில் நடக்கும்போது கீழே பிளாஸ்டிக்தாள் இருந்தது தெரியாம காலை வச்சி தொம் :) அடியெல்லாம் படல ஏன்னா நான் குளிருக்கு அதுவும் ஸ்நோக்கு ஆல்ட்ரின் ஆர்ம்ஸ்ட்ராங் மாதிரிதான் டிரஸ் பின்னி நடப்பேன் :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இப்படி விசயங்களைக் கதைக்கக்கூடப் பயம்.. இதிலெல்லாம் வீரம் பேசக்கூடாது என நினைச்சு பகிடிகூட விடமாட்டேன் அஞ்சு.. இதுவரை வழுக்கி விழுந்ததில்லை... நினைச்சாலே நடுங்குது ஸ்னோவையும், பிளாக் ஐஸ் ஐயும்:).

      Delete
  12. ஹஆஹாஆ :)நான் கற்பனைலாம் செய்யலை இதிலென்ன ஆச்சர்யம் அவர் சரியா சொல்லியிருக்கார் :) vet கிட்ட போறதை சொன்னேன்

    ReplyDelete
    Replies
    1. என்ன கொடுமை ஜாமீஈஈஈ:) வழி விடுங்கோ வழி விடுங்கோ..:)
      [im]http://www.bigodino.it/wp-content/uploads/2017/03/v-1-640x356.jpg[/im]

      Delete
  13. இங்கே எல்லாம் நண்டு சிண்டெல்லாம் காலில் சக்கரம் கட்டின ரோலர் ஸ்கேட்ஸ் ஷூ போட்டு போவாங்க அவங்களுக்கு பயமே இல்லை :) நல்லா அனுபவம் தான் ..நெக்ஸ்ட் டைம் நானும் வரேன் ரெண்டு பேரும் கைபிடிச்சிட்டே ஸ்கேட் செய்வோம்:)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நொ நோ .. இனி வாழ்க்கையில் நோ ஸ்கேட்டிங்:) இது யூடு:) கண்ட பூனையாக்கும்:).. இதன் அடுத்த பகுதி வருது பாருங்கோ.. அப்போ நீங்க நிஜமா ஆத்தில குதிச்சிடுவீங்க:) ஹா ஹா ஹா.. மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  14. அடடா... ஆனாலும் துணிச்சல் உங்களுக்கு. தைரியமாக ஸ்கேட்டிங் பழகியிருக்கிறீர்களே..

    தம வாக்குப் போட்டாச்..

    வெங்கட் நாகராஜ் பக்கத்திலிருந்து எடுக்காத அந்த படம்நெகிழ்த்தியது.

    அடுத்த படமும் புன்னகைக்க வைத்தது!

    கணவர் மனைவியை நீங்க வாங்க போங்க என்று விளிப்பது வியப்பு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஸ்கேட்டிங் மட்டுமோ?:) அடுத்த பகுதியில் பாருங்கோ என் தைரியத்தை:) அப்பூடியே வியந்துபோய் நிற்பீங்க:) ஹா ஹா ஹா:).

      //தம வாக்குப் போட்டாச்..//
      அப்பாடா போட்டாச்சா?:) நிம்மதியா நித்திரை கொள்ளுங்கோ.. கெட்ட கனவும் வராது:) தவறி விழவும் மாட்டீங்க கட்டிலில் இருந்து..:).

      //வெங்கட் நாகராஜ் பக்கத்திலிருந்து எடுக்காத அந்த படம்நெகிழ்த்தியது.///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).. இவர்தான் மாப்பிள்ளை, ஆனா போட்டிருக்கும் ட்ரெஸ் என்னோடதில்ல என்பதைப்போலவே இது இருக்கே:) இதைப் படிப்போருக்கு நான் ஏதோ களவெடுத்திட்டனோ எனும் சந்தேகம் வந்திடப்போகுதே:).

      Delete
    2. //கணவர் மனைவியை நீங்க வாங்க போங்க என்று விளிப்பது வியப்பு.//

      இல்ல ஸ்ரீராம் நீங்க இலங்கையர்களைக் கவனிச்சுப் பாருங்கோ.. முக்கால்வாசிக்கும் மேற்பட்ட கணவன்மார் வாங்கோ போங்கோ எனத்தான் அழைப்பார்கள். அது பழக்கத்தில் வந்து விட்டது. இலங்கையில் குறிப்பா வடபகுதி யாழ்ப்பாணத்தில் இன்னொரு சொல்லும் இருக்கு:) தெனாலியில் கமல் பேசியிருக்கிறார் என நினைக்கிறேன்.. அதாவது... வாரும்[வா/வாங்கோ], இரும்[இரு/இருங்கோ], உமக்கு[உனக்கு/உங்களுக்கு].. தாரும்[தா/தாங்கோ] இது ஒருமைக்கு மட்டுமே பாவிப்பார்கள்...

      அதாவது இலங்கையில் சின்னப்பிள்ளையாக இருந்தாலும் வாங்கோ போங்கோ எனத்தான் அழைப்போம்.. அடுத்த பிள்ளைகளையும்.. ஆனா சிலருக்கு கொஞ்சம் தடிப்புக் குணம் அதிகம்:) அதாவது லெவல்.. ஏதோ ஒன்று.. அப்படியானோர்.. வாங்கோ எனும் சொல் ஓவர் மரியாதை என எண்ணியோ என்னவோ.. வாரும் எனச் சொல்வார்கள்.. வா எனச் சொன்னால் மரியாதைக் குறைவாக அழைச்சதுபோல அர்த்தமாகிடும். வா.. க்கும் வாங்கோ வுக்கும்.. இடைப்பட்டதே இந்த வாரும்:) ஹா ஹா ஹா:).

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      அதுபோல அவள், இவள் அவன் இவன் என்பதும் வீட்டுக்குள், நண்பர்களுக்குள் பேசினாலும் பப்ளிக்கில் பேசுவதைக் குறைப்பார்கள். மிகவும் வயதானோர் மட்டும் எங்கும் பாவிப்பார்கள். அது பரம்பரையாக பழக்கத்தில் வந்துவிட்டது...

      ஆனா அனைத்தும் ஊருக்கு ஊர் மாறுபடும்:).

      Delete
    3. ஸ்ரீராம் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அனைவரையும் நீங்க வாங்க என்றுதான் சொல்லுவார்கள். குழந்தைகளையும். கணவன் மனைவி எல்லோரையும்...அங்கிருந்த போது என்னையும் அப்படித்தான் எல்லோரும் சொல்லுவார்கள்.

      கீதா

      Delete
    4. கீதா.. சகோ ஸ்ரீராமை ஒரு தடவை இலைங்கைக்குப் போய் வரச் சொல்லுவோமா? ஹா ஹா ஹா:).

      Delete
  15. ஆறாவது வோட் என்னோடதாக்கும். நினைவில் இருக்கட்டும். இப்போ நான் படு பிஸி. ஆனால் அப்புறமா மீண்டும் வருவேனாக்கும். ஜாக்கிரதை. :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ:)... நீங்க வோட் பண்ணியதால் சேவ்வ்:).. கட்டிலால் கெட்டகனவு கண்டு விழ மாட்டீங்க:) அப்பாடா திருச்சியில் நடக்கவிருந்த ஒரு நிலநடுக்கம்:) ஒத்தி வைக்கப் பட்டுள்ளது:) ஹா ஹா ஹாஅ:). மீண்டு வாங்கோ பிசி இலிருந்து:)..

      ///ஜாக்கிரதை. :)//
      இப்பூடிப்போட்டால்.. பிறக்கட்டில் ... இது எனக்குச் சொன்னேன் எனப் போடோணுமாக்கும் கர்:) இதையும் நானே ஜொல்லிக் கொடுக்க வேண்டிக்கிடக்கே:) ஹா ஹா ஹா இருப்பினும் பிஸியான நேரத்திலும் ஓடிவந்து வோட் போட்டமைக்கு மிக்க நன்றி.

      சிலர் நான் வர்களுக்குப் போட்டாலும், இங்கு வந்து போடமாட்டேன் எனக் காக்கா போயிடுறாங்க:(.

      Delete
  16. முதலில் காட்டியுள்ள .... CAT 'CAT'CHING CAT .... ANIMATION SUPERB.

    என் வழக்கப்படி அதனை களவாடி என்னிடம் சேமித்துக்கொண்டு விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ///என் வழக்கப்படி அதனை களவாடி என்னிடம் சேமித்துக்கொண்டு விட்டேன்.///
      ஹா ஹா ஹா கர்ர்ர்:) இந்தக் களவாடும் பயக்கத்தை:) யாரிடம் இருந்து கற்றீங்க?:)

      Delete
  17. இப்போதும் ஸ்கேடிங் போகிறீர்களா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஐயா வாங்கோ.. நீங்க என் போஸ்ட்டைப் படிக்கவில்லை என்பது தெரிஞ்சுபோச்ச்ச்:)... போறிங்காக இருந்ததோ?:) சரி இல்லை இப்போ நான் போவதில்லை.. மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
  18. //பெண்டாட்டியோடு புருஷன் வாழ முடியாதாம்:)//

    கரீட்டூஊஊஊஊ. அவனுக்குக் காது கேட்காமல் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என நினைக்கிறேன்.

    எதுக்கும் பதிவை முழுவதுமாகப் படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வருகிறேன். பொறுங்கோ. பொறுங்கோ.

    அதற்குள் என் பெண்டாட்டி ஏதோ சத்தம்போட்டு என்னை அழைக்கிறாள். கர்ர்ர்ர்ர் :(

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஏன் மனைவிக்கு காதுகேட்காட்டிலும் வாழலாம் எல்லோ:).

      ///அழைக்கிறாள்//
      ஒரு மாபெரும் சபையில்.. மணித்தியாலத்துக்குப் பத்தாயிரம் பேர் வந்து பார்த்து படிச்சு மகிழ்ந்து போகும் இடத்தில்{என் பக்கத்தைச் சொன்னேன்}... வைத்து ஆன்ரியை இப்படிச் சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறேன்ன்... அழைக்கிறா .. எனத்தான் சொல்லோணும்:).

      Delete
    2. // அழைக்கிறா .. எனத்தான் சொல்லோணும்:).//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! உங்களை என் வலைப்பக்கம் ’அழைக்கிறா’ உங்கட ஆன்ரி .... போதுமா?

      Delete
    3. ஆஆஆங்ங்ங்ங் அது அது... ஆன்ரி அழைச்சால் வராமல் இருப்பேனோ.. வருகிறேன்.

      Delete
  19. //இப்படி கிட்டத்தட்ட ஒரு மாத வகுப்புக்கள் முடிந்த நிலையில் எனக்கு பயங்கர நம்பிக்கை வந்துவிட்டது, நன்றாக ஸ்கேட் பண்ணித்திரிந்தேன் மெதுவாக. ஐஸ் பயம் போயிருந்தது.//

    இதெல்லாம் சுத்த கதை மட்டுமே என எனக்குத் தெரிந்திருந்தும், இதனை நான் துளியும் நம்பாவிட்டாலும், நீங்கள் ஐஸ் சறுக்கி விளையாடுவது போல சும்மா கற்பனை செய்து பார்த்து, அதில் தொபக்கடீர்ர்ன்னு நீங்க விழுந்ததைப் பார்த்து குபீர்ரென்று சிரித்து விட்டேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    ஏன் எதற்கு இந்த விஷப் பரிட்சை ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கற்பனை செய்யும்போதே நடுங்குமே... எனக்கும்தான் இப்போ நினைக்கவே நடுங்குது:).. ஆனா பழகும்போது பயமிருக்கவில்லை.

      வாழ்க்கையில், எப்பவும் எதுவும் நேராகப் போய்க்கொண்டிருக்கும்போது எதுவும் புரியாது, ஆனா எங்காவது சறுக்கினால் தானே பயம் வந்திடுது:).

      Delete
  20. // போனாப்போகுது, ஒரு காலைத் தூக்கித்தான் பார்ப்பமே என.. தூக்கினேன்...//

    நல்லாவே கதை வுடுறீங்கோ. தூக்கினதுதான் தூக்கினீங்கோ. இரண்டு கால்களையுமே தூக்கினேன் எனச் சொல்லியிருந்தால் கதை இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) நான் தான் ரொம்ப சார்ப் ஆச்சே:) என்னில நான் வலு கவனம்:).

      Delete
  21. ஒரு டாக்டரே தன் பெட் அனிமல் போன்ற இளம் ஸ்வீட் சிக்ஸ்டீன் மனைவியைப்போய் ஒரு வெட் டாக்டரிடம் கூட்டிப் போக நினைத்துள்ளதால் மேட்டர் ஏதோ சீரியஸ் ஆகவே இருக்கும் போலத் தெரியுது.

    எனக்கோர் ஒரு டவுட்டு .... வெட் என்பவர் வருவோரையெல்லாம் தன்னைப் பார்க்க விடாமல் ’வெட்’டி விடுபவராக இருப்பாரோ .... அல்லது .... வருவோரின் உறுப்புக்களில் ஏதாவது ஒன்றை ’வெட்’டித் தள்பவராக இருப்பாரோ .... அல்லது .... வருவோருக்கெல்லாம் ‘வெட்’டிங் செய்து விடுபவராக இருப்பாரோ .... அவரிடம் போன உங்களை அவர் என்ன செய்தார்? சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  22. //விழுந்ததுதான் தெரியும் .......//

    ஆஹா இந்த அரியக் காட்சியினைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே எங்களுக்கு.

    //வீட்டுக்கு வந்ததும் என் வலது பக்க சொக்கை(அடிபட்ட கன்னம்) புறிம்பாக வீங்கியிருந்தது..//

    உடல் வீக்கத்துடன், அந்தக் கன்னமும் வீங்கிய போட்டோவையாவது இங்கு காட்டியிருந்தால் கொஞ்சம் நம்பும் படியாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எப்ப பார்த்தாலும் படம் பார்ப்பதிலேயே குறியா இருக்கிறீங்களே கர்:)..

      Delete
  23. //ஊசிக்குறிப்பு
    மனதுக்கு பிடிச்சதை கெட்டித்தனமாக் களவெடுத்து வருவது ஒரு தப்பா?:).//

    இதில் தப்பே இல்லை. யாரோ மிகவும் அருமையான உணர்ந்து பார்த்து எழுதியுள்ளார்கள். அதனை யார் ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும் எல்லோருமே களவாடி தங்கள் தங்கள் பதிவுகளில் வெளியிட்டால் நல்லது என்பேன்.

    அந்தக் கடைசி வரிகள் என்னை அப்படியே கண் கலங்க வைத்து விட்டன.

    யாருக்குமே .... உயிருடன் இருக்கும் வரை தன் ஜோடியின் அருமை பெருமைகள் புரியவே புரியாது .... போனபின் மட்டுமே அது தெரியும். இதனை நான் முதன்முதலாக உங்கள் பதிவினிலே மட்டுமே படித்துள்ளேன். களவாடியதற்கும், படிக்க வாய்ப்பு அளித்ததற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இன்றுதான் இதுபோல உறுப்படியான ஒருவிஷயம் செய்துள்ளீர்கள். :)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே, பலருக்கு, கையில் ஒரு பொருள் இருக்கும்போது அதன் அருமை புரிவதில்லை, அது கை விட்டுப் போனபின்புதான் அருமை புரியும். இது உறவானாலும் சரி, பொருளானாலும் சரி. அதிலும் ஒரு பெண்ணால் எக்காலத்திலும் தனிமையில் எப்படியோ வாழ்ந்திட முடியும், ஆனா ஒரு பெண் இன்றி[மனைவி/ மகள்/ சகோதரி], முக்கியமா வயதான காலத்தில் ஒரு ஆணால் வாழ்வதென்பது கஸ்டமான ஒன்றுதான்:(.

      எனக்கிதைப் பார்த்ததும் சிவாஜின் பாடல்தான் நினைவுக்கு வந்தது..

      https://www.youtube.com/watch?v=PAEHjNY2f1M

      Delete
    2. ///இன்றுதான் இதுபோல உறுப்படியான ஒருவிஷயம் செய்துள்ளீர்கள். :)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மிக்க நன்றி கோபு அண்ணன் அனைத்துக்கும்.

      Delete
    3. நாடி பற்றி என்னைப்போலவே பலருக்கும் இங்கு பலவித சந்தேகங்கள் வந்து எங்கள் நாடி நரம்பெல்லாம் புடைத்துப் போய் உள்ளன.

      முதன்முதலாக வைதீஸ்வரன் கோயிலில் ஆரம்பித்துள்ள நாடி ஜோஸ்யம் என்பது இன்று தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பரவியுள்ளது.

      தமிழ்நாட்டு கோயில்களையொட்டி தெருவுக்குத்தெரு நாலு நாடி ஜோஸ்யர்கள் முளைத்துள்ளனர்.

      ’சுகர் நாடி சக்திவேல் ஜோஸ்யர்’, ‘அகஸ்திய நாடி ஜோஸ்யர்’ போன்ற பல பெயர் பலகைகள் போட்டுக்கொண்டு தொழில் செய்து வருகிறார்கள்.

      அவர்களை நீங்கள் நாடிச் சென்றால், உங்களின் நாடி பிடித்தோ நாடி பிடிக்காமலேயோ உங்களைப்பற்றி விலாவரியாக (உண்மையான வயது உள்பட) அனைத்தையும் சொல்லி அசத்திவிடுவார்கள்.

      போன ஜென்மம், இந்த ஜென்மம், வரும் ஜென்மங்கள் என ஏதேதோ பிரித்துப் பிரித்து ஓலைச்சுவடிகளிலிருந்து ஒவ்வொன்றாகச் சொல்லுவார்கள்.

      ஐஸ் சறுக்கினில் அடி பட்டதற்கான காரணங்களும், அதற்கான பரிகாரங்களும் பக்கம் பக்கமாகச் சொல்லுவார்கள். ஆனால், எல்லாவற்றிற்கு தனித்தனியே ஃபீஸ் உண்டு.

      உங்களுக்கு ஒருவேளை ஃபீஸ் வாங்கிக்கொள்ளாமல், சலுகை கொடுத்துச் சொன்னாலும் சொல்லலாம். முயற்சி செய்து பாருங்கோ. வாழ்த்துகள்.

      Delete
  24. ஹலோ அதிரா நீங்க கிழே விழுந்தீங்க சரி ஆனால் ஸ்கேட்டிங்க் ப்ளோர் எந்த அளவிற்கு டேமேஜ் ஆச்சுன்னு சொல்லவே இல்லையே....கடவுளே அந்த ஸ்கேட்டிங்க் ப்ளோருக்கு ஒன்றும் ஆகி இருக்க கூடாது

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா :) விஷயம் தெரியாதா அங்கே இவங்க விழுந்ததில் இங்கே லண்டன் டியூப் சர்வீஸ் டிஸ்ட்ரப்டட் ..

      Delete
    2. ஓ அப்படியா அப்படின்னா இவரை தமிழகத்திற்கு அனுப்பின்னா செலவில்லாமல் டியூப் சர்வீஸ் ஆரம்பிச்சுவிடலாமே

      Delete
    3. vஆங்கோ ட்றுத் வாங்கோ..
      //.கடவுளே அந்த ஸ்கேட்டிங்க் ப்ளோருக்கு ஒன்றும் ஆகி இருக்க கூடாது///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா ஒரு அக்கறை:), இங்கு ஒரு சுவீட் 16 பிள்ளை விழுந்து கன்னமும் வீங்கிப்போச்சாம்ம்ம்.. அதப்பற்றிக் கவலையில்லாமல் என்னா கவலை வேண்டிக்கிடக்கு ஃபுளோர் ஆம் ஃபுளோர் கர்:).

      Delete
    4. ///AngelinMonday, May 15, 2017 4:28:00 pm
      ஹாஹா :) விஷயம் தெரியாதா அங்கே இவங்க விழுந்ததில் இங்கே லண்டன் டியூப் சர்வீஸ் டிஸ்ட்ரப்டட் ..//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) ஒருவேளை பிபிசி ல சொல்லியிருப்பினமோ?:).

      ////ஓ அப்படியா அப்படின்னா இவரை தமிழகத்திற்கு அனுப்பின்னா செலவில்லாமல் டியூப் சர்வீஸ் ஆரம்பிச்சுவிடலாமே///

      நீங்க வருங்காலத்தில பன்னீர் தேன்ன்ன்ன்:)[எந்தப் பன்னீர் எனக் கேட்கக்கூடா கர்ர்ர்ர்ர்ர்ர்:) தெளிப்பது எனச் சொல்லித் தப்பிடுவேன்ன்:)] ஹா ஹா ஹா என்னமா சிந்திக்கினம் ஒரு அப்பாவி சுவீட் 16 பிள்ளையை வச்சு:) கர்:)

      Delete
  25. # ஒரு “ம்” கொட்டினாலே 4 வசனம் பேசுவேன்:#
    அந்த பழக்கம் இப்போ கொமென்ட் போடுவதாகிப் போச்சோ :)
    #என் வலது பக்க சொக்கை(அடிபட்ட கன்னம்) புறிம்பாக வீங்கியிருந்தது.. #
    கன்னத்தில் என்னடி காயம் ...BBC சிச்சுவேசன் சாங் கேட்டிருக்குமே :)
    #முக்கியமா சகோ வெங்கட் நாகராஜ் பக்கமிருந்து திருடவில்லை:)..#
    அவரும் சுட்டதுதானே இது :)
    புலிக்கு பிறந்து பூனையாகுமா /ஆனால் இங்கே நாய்க்கு பிறந்தது பூனையா போச்சே :)
    #அறிவாளிகளுக்கு “அறிவு” அதிகம் - ஆனால்
    முட்டாள்களுக்கு “அனுபவம்” அதிகம்.. #
    இரண்டுமே இல்லாதவர்கள் தானே இங்கின அதிகம் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ..
      ///# ஒரு “ம்” கொட்டினாலே 4 வசனம் பேசுவேன்:#
      அந்த பழக்கம் இப்போ கொமென்ட் போடுவதாகிப் போச்சோ :)
      #என் வலது பக்க சொக்கை(அடிபட்ட கன்னம்) புறிம்பாக வீங்கியிருந்தது.. #
      கன்னத்தில் என்னடி காயம் ...BBC சிச்சுவேசன் சாங் கேட்டிருக்குமே :)///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் இப்படி அதிகம் பேசுவதினால்தான், மூட் ஓஃப் ல இருப்போரை சிரிக்க வச்சிருக்கிறேன், மனக் கவலையில் இருப்போரை ஆறுதல் படுத்தியிருக்கிறேன், அழுது அடம் பிடிக்கும் எந்தக் குழந்தையாயினும் நான் தூக்கி அழுகையை நிறுத்திடுவேன்:)..

      ஏன் இங்கின கூட சிலர் எப்பவும் ஒரு சொல்லு.. அல்லது ஒரு வரியில் பதில் போடுவார்கள்...:) சிலர் வாயே திறக்க மாட்டார்கள்:) அவர்களைகூட மாற்ற வைத்ததே.. இந்த பந்தி பந்தி எழுத்துக்கள்தான்... இப்போ உங்களைக்கூட சிட்டுவேசன் சோங் எழுத வச்சிட்டனே பார்த்தீங்களோ?:)..

      ஹா ஹா ஹா இதுக்கெல்லாம் நேக்குப் பொன்னாடை வாணாம்:) ஒரு மகுடம் போதும்:) அதுகூடத் தரமாட்டாய்க்களாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

      போனால் போகட்டும்..... ,
      இந்த பூமியில் நிலையாய்.. வாழ்ந்தவர்.....??? ஹா ஹா ஹா பிபிசில போகுதே இப்ப பார்த்து போடீனம்:)

      Delete
    2. ///#முக்கியமா சகோ வெங்கட் நாகராஜ் பக்கமிருந்து திருடவில்லை:)..#
      அவரும் சுட்டதுதானே இது :)///

      ஹா ஹா ஹா இருப்பினும் நான் உண்மையைச் சொல்லோணும் எல்லோ.. சொன்னால் அவருக்கும் சந்தோசம் தானே, பல படங்கள் கூகிளில் இருந்து அல்லது எனக்கு வருவன... அதனால சொல்ல முடிவதில்லை.. ஆனா இது நேரடியாகச் சுட்டதால் ஒப்புக்கொண்டேன்:).

      ///புலிக்கு பிறந்து பூனையாகுமா /ஆனால் இங்கே நாய்க்கு பிறந்தது பூனையா போச்சே :)///
      ஹா ஹா ஹா அதேதான், செய்யுறதையும் செய்து போட்டு இப்போ.. ஹனி பிளீஸ்ஸ் ஆம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா:)..

      ///இரண்டுமே இல்லாதவர்கள் தானே இங்கின அதிகம் :)//
      ஹா ஹா ஹா எதுக்கு இந்தக் கொலை வெறி:)... பார்த்தீங்களோ நீங்ககூட இப்போ அதிகம் எழுதுறீங்க:)... சந்தோசம் பொயிங்குதே...

      மிக்க நன்றி பகவான் ஜீ.

      Delete

  26. நல்ல வேளை நீங்க ஸ்கை டைவிங்க் பண்ண முயற்சிக்கல அப்படி முயற்ச்சித்து இருந்தால் ஸ்கையில் இருந்து கிழே விழுந்து பூமிக்கு மிகப் பெரிய டேமேஜ் உண்டு பண்ணியிருப்பிங்க என்று ஏஞ்சல் எனக்கு போன் பொட்டு சொல்லி சிரிக்கிறாங்க.... இப்படி நான் சொன்னேன்னு அவங்ககிட்ட சொல்லிடாதீங்க

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா :)) சொன்னதை முழுசா சொல்லணும் பாதியை விட்டுட்டீங்க :)
      நீங்களும் விழுந்து புரண்டு சிரிச்சீங்களே அதையும் சொல்லுங்க அதை பார்த்து சன்னியும் ஜம்ப் பண்ணானே அதையும் சொல்லுங்க ..




      Delete
    2. அதைத்தான் நீங்களே சொல்லீட்டீங்களே

      Delete
    3. ஹஹஹஹஹ்....அப்ப பூமில உண்டான பள்ளங்களுக்கெல்லாம் காரணம் அதிராதானா....அடடா இதுவரை ஸ்பேஸ் கற்கள்னு நினைச்சுருந்தேனே...ஹஹ்

      கீதா

      Delete
    4. ///பண்ணியிருப்பிங்க என்று ஏஞ்சல் எனக்கு போன் பொட்டு சொல்லி சிரிக்கிறாங்க.... இப்படி நான் சொன்னேன்னு அவங்ககிட்ட சொல்லிடாதீங்க///

      ஹா ஹா ஹா நல்லவேளை ஃபோன் ல சொன்னதா சொல்லிட்டீங்க:) வட்ஸப் ல சொன்னா எனச் சொல்லியிருந்தீங்க அவ்ளோதேன்ன்ன்ன்:) ஊரெல்லாம் புகைப் போயிருக்கும் ஹா ஹா ஹா:)..

      சே..சே..சே.. அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்ன்:) அதிராவோ கொக்கோ:) அப்பவே கிழிச்சு தேம்ஸ்ல புதைச்சிட்டேன்:).

      Delete
    5. ///AngelinMonday, May 15, 2017 4:36:00 pm
      ஹாஹா :)) சொன்னதை முழுசா சொல்லணும் பாதியை விட்டுட்டீங்க :)
      நீங்களும் விழுந்து புரண்டு சிரிச்சீங்களே அதையும் சொல்லுங்க அதை பார்த்து சன்னியும் ஜம்ப் பண்ணானே அதையும் சொல்லுங்க ..///

      /////Avargal UnmaigalMonday, May 15, 2017 8:04:00 pm
      அதைத்தான் நீங்களே சொல்லீட்டீங்களே///

      ஹா ஹா ஹா என்னா ஒரு சகோதர ஒற்றுமை.. அடுத்தமுறை ஆஸ்கார் விருது உங்கள் இருவருக்கும்தேன்ன்ன்ன்:).. இப்பவே உடுப்புக்கள் ரெடி பண்ணிடுங்கோ:).


      பிறகு அதிராவுக்கு வோட் பண்ணாததால, நைட் சன்னி:) உதை உதை எண்டு உதைச்சுக் கட்டிலால விழுத்தின கதையையும் அஞ்சுதான் நேக்குச் சொன்னா:) அதைக் கேட்டுச் சிரிச்சதில என் கையிலிருந்த ரீ கப் தவறி கீ போர்ட் மேல விழுந்து... எழுத்தெல்லாம் அழிஞ்சு போச்சூ.. இப்போ நீங்கதான் எனக்கு நஸ்ட ஈடு தரோணும் டொல்லிட்டேன்ன்ன் விட மாட்டேன்ன்ன்:).

      Delete
    6. ///ஹஹஹஹஹ்....அப்ப பூமில உண்டான பள்ளங்களுக்கெல்லாம் காரணம் அதிராதானா....அடடா இதுவரை ஸ்பேஸ் கற்கள்னு நினைச்சுருந்தேனே...ஹஹ்

      கீதா///

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) அதிரா ச்ச்ச்ச்ச்சும்மா ஒருக்கால் ஐஸ் ஃபுளோரை ரச் பண்ணினதுக்கே:) இப்பூடிக் குதிக்கினமே கூட்டமாய்ச் சேர்ந்து:) அப்போ அதிரா தேம்ஸ்ல விழுந்தால்ல்ல்ல்ல்ல்?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
  27. ஹலோ எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் தமிழையும் மறக்க அடிக்க முயற்சி செய்றீங்களே அம்மா என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா? அந்தாட்டிக்காவில என்ற புது வார்த்தையை இப்பதான் நான் முதல் முறையாக கேள்வி படுகிறேன் எனக்கு அதன் அர்த்தம் புரியாத்தால் மதுரைக்கு போன் போட்டு தமிழை வள்ர்க்கும் தமிழ் சங்கத்திடம் இதற்கு அர்த்தம் என்னவென்று கேட்டேன் அதற்கு அவர்களுக்கும் பதி தெரியவில்லை என்ரு சொல்லிட்டாங்க....... சரி சரி உங்க தோழி ஏஞ்சலிடம் கேட்டுவிடுவோம் காரணம் உங்களைப் பற்றி நன் கு அறிந்தவர் எனப்தால் அவரிடம் கேட்டேன்


    அதற்கு அவர் சொன்னார் அந்தாட்டிக்காவில என்றால் அண்டார்டிக்கா என்று தமிழில் மொழி பெயர்த்து சொன்னார்... எம்மோவ் இப்படியெல்லாம் சுத்த தமிழில் எழுதாதீங்கம்மா


    மோல் என்றால் மலையாளித்தில் மகள் என்று சொல்லுவார்கள் ஆமாம் உங்களுக்கு மலையாளம் அறியுமோ ? ஆஹா இப்பதான் புரியது நீங்கள் மால் என்பதைதான் மோல் என்ரு சொல்லி இருக்கீங்க ஹீஹீஹீ

    ReplyDelete
    Replies
    1. பேசாம ஒரு டிக்ஸ்னரி வெளியிடலாம்னு இருக்கேன் :) ட்ரூத் நான்
      டாக்டர் ..டொக்டர்
      டைப் ..ரைப்
      டச் ..ரச்
      ஹார்ன் ...கோன்
      mall ..மோல்
      சொக்கை ..cheeks

      Delete
    2. இனிமேல் அதிராவின் பதிவை முதலில் வந்து படிப்பவர்கள் தம வோட்டு போடுகிறார்களோ இல்லையோ ஆனால் அவர்கள் நிச்சயம் அந்த பதிவில் வரும் புதிய வார்த்தைகளுக்கு டிக்ஸ்னரி போடவேண்டும் என்று அறிவித்துவிடலாம்

      Delete
    3. ஏஞ்சல் முதல்ல அதைச் செய்யுங்கப்பா..இப்போது பழகிவிட்டதுனாலும் சிலது புதுசா புதுசா ..வருது....ஹஹஹ்

      கீதா

      Delete
    4. ////அந்தாட்டிக்காவில என்ற புது வார்த்தையை இப்பதான் நான் முதல் முறையாக கேள்வி படுகிறேன் ///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ட்றுத்:).. இதுக்குத்தான் சொல்றது அதிரா பக்கம் ஒயுங்கா வந்திருக்கோணும் என:).. ஒபாமா அங்கிள் அதிபரான காலத்திலிருந்தே நான் அடிக்கடி அந்தாட்டிக்கா போவதுண்டு மீட்டிங்குக்காக:).. அவரின் பேசனல் செக்கரட்டறி ஆக இருந்தேனாக்கும்:)..

      இப்பவும் போகிறேனே.. பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்:).. ட்றம்ப் அங்கிளுக்கும் அப்படியே பேசனல் செக்கரட்டறி ஆக இருக்கச் சொல்லி ஒற்றைக் காலில நிண்டிட்டார்ர்.. மறுக்க முடியேல்லை:).. இதை எல்லாம் புரிய உங்களுக்கு இன்னும் பல வருசம் எடுக்கப் போகுது:)..

      ///மோல் என்றால் மலையாளித்தில் மகள் என்று சொல்லுவார்கள் ஆமாம் உங்களுக்கு மலையாளம் அறியுமோ ?///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர் கொஞ்சம் கொஞ்சம் யான் அறியும்:) ஹா ஹா ஹா:)..

      ஹலோ ட்றுத்.. ஆங்கிலத்தை நாம் எப்படிப் பேசுவோமோ அதை அப்படியே டமில்ல:) எழுதி விடுகிறேன் அது டப்பா?:)...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
    5. ///

      AngelinMonday, May 15, 2017 4:25:00 pm
      பேசாம ஒரு டிக்ஸ்னரி வெளியிடலாம்னு இருக்கேன் :) ட்ரூத் நான் //

      ஹா ஹா ஹா இதனால்தானே அஞ்சுவை என் பேசனல் செகரட்டறி ஆக நியமிச்சிருக்கிறேன்ன்:).. ஒன்றை விட்டிட்டீங்க அஞ்சூ...

      சொண்டு என்போம்.. உதட்டை:)
      அடுத்தது வண்டி இஸ் ஈகோல்ட்டு... வயிறு ஹா ஹா ஹா:).

      Delete
    6. ///Avargal UnmaigalMonday, May 15, 2017 8:07:00 pm
      இனிமேல் அதிராவின் பதிவை முதலில் வந்து படிப்பவர்கள் தம வோட்டு போடுகிறார்களோ இல்லையோ ஆனால் அவர்கள் நிச்சயம் அந்த பதிவில் வரும் புதிய வார்த்தைகளுக்கு டிக்ஸ்னரி போடவேண்டும் என்று அறிவித்துவிடலாம்///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), நான் பல தடவை கஸ்டப்பட்டே... என் பேச்சுத் தமிழில் எழுதாமல்.. அயகான தமிழில் எழுதுறனானாக்கும்:).. வோட் போடாத உங்களுக்காகவே இனி இப்பூடித் தமிழில் கதைச்சே.. நயகராவில் தள்ளிடப்போறேன்ன்ன்ன் ஜாக்ர்ர்ர்ர்தை{ஹையோ இது நேக்குச் சொன்னேன்ன்:)}

      Delete
    7. ///Thulasidharan V ThillaiakathuTuesday, May 16, 2017 7:15:00 am
      ஏஞ்சல் முதல்ல அதைச் செய்யுங்கப்பா..இப்போது பழகிவிட்டதுனாலும் சிலது புதுசா புதுசா ..வருது....ஹஹஹ்//
      ஹா ஹா ஹா கீதா, இப்போ எனக்கு நன்கு தெரிந்த ள, ழ வில கூடப் பிழை விடுவது அதிகமாகுது நான்:).. ஏனெனில் யோசிக்காமல் எழுதுவேன் முன்பு, இப்போ எல்லாம்.. இந்த ழ வா இல்ல இந்த ள வா எனக் கொயம்பியே தப்பா எழுதிவிட்டிடுறேன்ன் ஹா ஹா ஹா கர்:)

      Delete
  28. த..ம போ...............................................................................................................................................................................................................லை ஹீஹீ

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) போடாட்டில் பறவாயில்லை விடுங்கோ.... நீங்க போட்டிருந்தால் இப்போ மீ மகுடம் சூட்டியிருப்பேன்ன் .. உங்களுக்குப் பொறாமை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... சரி சரி அதனால ஒன்றுமில்லை... அது அவரவர் விருப்பம் ட்றுத்.
      தமிழ்மணம்.. இதெல்லாம் ச்சும்மா ஒரு இன்றஸ்றிங் தானே.. சின்னச் சின்ன சந்தோசங்கள் அவ்வளவே..

      மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
    2. தம 11 போட்டுட்டேன்..... நான் தம போடாதற்கு காரணம் அது சுற்று சுற்று என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது அதுதான் முக்கிய காரணம் அடுத்து ஒருத்தருக்கு போட்டு இன்னொருவருக்கு போடலைன்னா அது நன்றாக இருக்காது என்பதால்தான். உண்மையிலே உங்களுக்கு வோட்டு வேண்டுமென்றால் என் ஐடியையும் பாஸ்வோர்ட்டையும் அனுப்பி வைக்கிறேன் நீங்களே போட்டுக் கொள்கிறீர்களா?

      Delete
    3. அது சுத்திக்கொண்டேதான் இருக்கும் ட்றுத்.. அதைப்பற்றி எதுக்கு கவலை உங்களுக்கு.. லொக்கின் பண்ணிவிட்டால் போதும், நீங்க உங்க வேலையைப் பார்க்க வேண்டியதுதான் அது தானாக சேர்ந்திடும்.

      // என் ஐடியையும் பாஸ்வோர்ட்டையும் அனுப்பி வைக்கிறேன் நீங்களே போட்டுக் கொள்கிறீர்களா?//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு நெட்டிலிருந்து ஒரு வோட்தான் போட முடியுமெனத் தெரியாதோ உங்களுக்கு?:)...

      இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல ட்றுத்... மனதுக்கு எடுத்துப் போகாமல் விட்டிடுங்கோ.. போனாப்போகுது. நான் தொடர்ந்து புளொக் எழுதுவேனா என்றே எனக்கு சந்தேகமா இருக்குது.. இதில வோட் பற்றி நினைச்சு என்ன பண்ணப்போறேன்ன்... எதுக்குமே ரைம் கிடைக்குதில்லை கர்:).

      Delete
    4. ஹலோ என்னம்மா இப்படி ஷாக் செய்தி கொடுக்கிறீங்க எழுதுங்கம்மா வாரம் ஒண்று இல்லைன்னா மாதத்திற்கு இரண்டாவது எழுதுங்க.. உங்களை போல உள்ளவர்களை கலாய்க்கவில்லை என்றால் வாழ்க்கை டென்ஷனிலே போய்விடும் அப்புறம் இந்த தமிழன் டென்ஷானல் பீபீ ஏறி சிக்கிரம் செத்துவிடுவான்

      Delete
    5. ஹா ஹா ஹா .... உங்கள் பிபி யைக் குறைக்கவே இதோஓஓஓஓஒ பூஸ் ஒன்று புறப்படுதேஏ:)...

      Delete
  29. //யாரும் அதிராவிடம் தப்ப முடியாது:),//

    நல்லவேளையாக நான் தப்பிச்சேன் .... பிழைச்சேன் .... ஓட்டமாக ஓடிக்கொண்டு இருக்கிறேன். ஆஹ்ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    // இங்கின கிளிக் பண்ணி வோட் போட்டால்தான், திரும்பிப் போகலாம், இல்லை எனில் இன்று நைட் கெட்ட கெட்ட கனவாக் கண்டு கத்திக் கொண்டு கட்டிலால விழுவீங்க சொல்லிட்டேன்:)//

    அச்சச்சோ, கடைசியில் உள்ள இதனை கவனிக்காமல், இங்கன க்ளிக் பண்ணாமல் வேறு எங்கனையோ க்ளிக் பண்ணி வோட் போட்டு விட்டானே .... நான் என் செய்வேன். கட்டிலிலிருந்து நான் தொகக்கடீர்ன்னு விழாமல் இருக்கணும் ... சாமீஈஈஈஈஈஈஈஈஈ !

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... நீங்க தப்பாக் கரீட்டாப் போட்டதால தப்பிச்சிட்டீங்க:).

      Delete
  30. விழுந்து நாடி உடைத்த கதையைக் கூட சிரித்துக்கொண்டே நகைச்சுவையோடு சொல்கிறீர்களே? யூ ஆர் கிரேட்.

    சிரித்துக்கொண்டே படித்து முடித்தேன். கலகலப்பான பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெண்ணிறப் புரவி வாங்கோ...

      ///சிரித்துக்கொண்டே படித்து முடித்தேன்.//
      அப்போ அந்நேரம் யாரும் உங்களைப் பார்க்கவில்லைத்தானே?:) ஹா ஹா ஹா மிக்க நன்றி வரவுக்கு.. உங்களிடம் புளொக் இல்லையோ?.

      Delete
  31. // போனாப்போகுது, ஒரு காலைத் தூக்கித்தான் பார்ப்பமே என.. தூக்கினேன்...//
    க்கும் :) என்னமோ சிவதாண்டவம் ஆடுற நினைப்பில் இல்லன்னா தில்லானா ஆடுற நினைப்பில் தூக்கியிருப்பீங்க :)))))))))

    ReplyDelete
    Replies
    1. அதிரா பாலே டான்ஸர் என்பது உங்களுக்கு தெரியாதா சகோ

      Delete
    2. Athira all in all :) multi talented cat friend.:)

      Delete
    3. ////AngelinMonday, May 15, 2017 4:15:00 pm
      // போனாப்போகுது, ஒரு காலைத் தூக்கித்தான் பார்ப்பமே என.. தூக்கினேன்...//
      க்கும் :) என்னமோ சிவதாண்டவம் ஆடுற நினைப்பில் இல்லன்னா தில்லானா ஆடுற நினைப்பில் தூக்கியிருப்பீங்க :)))))))))///

      ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ பரத நாட்டிய மேதை... டான்ஸ் க்கு டி ஆக்கும் எனக்கு:).. நேக்கு தற்பெருமை புடிக்காதாக்கும்:)

      Delete
    4. Avargal UnmaigalMonday, May 15, 2017 8:09:00 pm
      அதிரா பாலே டான்ஸர் என்பது உங்களுக்கு தெரியாதா சகோ///


      குருவே பிளீஸ்ஸ்ஸ்ஸ் மீயும் உங்ககூட உச்சிக்கு வந்திடுறேன்ன்.. ஒரு காண்ட் கொடுத்து ஏத்தி விடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்:)

      [im]http://media.istockphoto.com/photos/climbing-chimpanzee-picture-id121194120?k=6&m=121194120&s=170667a&w=0&h=hJQFbdiAZWS272DSVffSZUhwph_jDhtdJlLvYjzzYDo=[/im]

      Delete
    5. ///AngelinTuesday, May 16, 2017 9:46:00 am
      Athira all in all :) multi talented cat friend.:)///

      இதன் அடுத்த பகுதியில் இது உண்மையாகிடும்:).. இன்னொன்றையும் ட்றுத்துக்கு... அந்த நேற்றுப் பேசிய அதே ஃபோனில் பேசும்போது:) சொல்லிடுங்கோ அஞ்சு.. அதிரா நல்லாப் பாடுவேன்ன்:) நேக்கு “ஆஷா போஸ்லே அதிரா” என்றொரு பெயரும் இருப்பதை:).. ஹா ஹா ஹா:).

      Delete
  32. நாடி நாடி னு சொல்றது முகவாய்க்கட்டையையா ?? ஐ மீன்மோவாய் CHIN >?

    நாங்க நாடி என்பதை WRIST மணிக்கட்டு அதைத்தான் சொல்வோம்
    அப்போ நாடித்துடிப்பை நீங்க என்ன சொல்வீங்க

    ReplyDelete
    Replies
    1. நாடி ஆம் முகவாய்க்கட்டை.... ஏஞ்சல். அப்படியும் சொல்வதுண்டு. நாடில அடிபட்டது என்று என் வீட்டில் சொல்லுவதுண்டு...

      நாடிப் பிடிப்பது என்று வ்ரிஸ்டையும் சொல்லுவதுதான்....

      கீதா

      Delete
    2. 'நாடிப் பிடிப்பது' - அதாவது அவளை நாடிப் பிடிப்பது. அர்த்தமே வேற. 'நாடி பார்ப்பது' என்றுதான் சொல்லுவினம். 'நாடி பிடித்துப் பாருங்க' என்றும் சொல்லுவினம். ஆனால், இடத்துக்கு மணிக்கட்டு என்றுதான் பெயர். மணிக்கட்டில்தான் நாடித் துடிப்பு சுலபமாக அறியமுடியும்.

      உங்களுக்குத் தெரிந்துகொள்வதற்காக: அந்தப்புறத்தில் இருக்கும் ராணிகளுக்கோ, அல்லது இளவரசிகளுக்கோ, மருத்துவர் கையைத் தொட்டு நாடி பார்க்கமுடியாது. அதற்காக, ஒரு திரை தொங்கவிடப்பட்டிருக்கும். அதில் உள்ள ஓட்டை வழியாக, அவர்கள் மணிக்கட்டில் கட்டப்பட்டிருக்கும் மெல்லிய நூல், இடையில் எதன்மீதும் இடிக்காமல் நேரடியாக வெளியே வரும். அதைத் தொட்டு உணர்ந்துதான் மருத்துவர் திரைக்கு அந்தப்பக்கம் இருப்பவருக்கு என்ன நோய் என்பதைக் கண்டுபிடிப்பாராம்.

      Delete
    3. ///AngelinMonday, May 15, 2017 4:58:00 pm
      நாடி நாடி னு சொல்றது முகவாய்க்கட்டையையா ?? ஐ மீன்மோவாய் CHIN >?

      நாங்க நாடி என்பதை WRIST மணிக்கட்டு அதைத்தான் சொல்வோம்
      அப்போ நாடித்துடிப்பை நீங்க என்ன சொல்வீங்க //

      ஹா ஹா ஹா நாடி எனில் சின்:) தான்.... முகவாய்க்கட்டைதானாக்கும்... ஆனா அஞ்சு நம் ஊர்ப் பாசையில்...
      மூஞ்சை/மூஞ்சி... முகவாய்க்கட்டை இதெல்லாம் கெட்ட வார்த்தைகள்:).... அதாவது ஒருவர் மேல் பயங்கரக் கோபம் வந்தால், சண்டைப்பிடிக்கும்போது மட்டுமே இச் சொற்களைப் பாவிப்பினம் சிலர்... அவரின் மூஞ்சியும்.. மோறைக்கட்டையும் எனத் திட்டுவினம் ஹா ஹா ஹா..

      மற்றும்படி.. முகம் கழுவுதல், முகத்துக்கு பூசுதல் இப்படி முகம் என்போம்.. அடுத்து நாடி எனத்தான் சொல்வோம்... எனக்குக்கூட இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும் முகவாய்க்கட்டை என்பது நாடி என... ஆனா இச்சொல்தான் மருவி.. மோறைக்கட்டை ஆனதுபோல, மோறைக்கட்டை என்றால்.. ஏதோ முகத்துக்கான ஒரு கெட்ட சொல் என நினைச்சிருந்தேன்:).

      ட்றிஸ்ட் ஐ.. மணிக்கட்டு எனத்தான் சொல்வோம். நாடித் துடிப்பு எனத்தான் சொல்வோம்... அது வேற நாடி.. இது வேற நாடி ஹா ஹா ஹா:).

      Delete
    4. கீதா நீங்க ஹால்ஃப் ஸ்ரீலங்கன்:) ஹா ஹா ஹா:).

      Delete
    5. ///நெல்லைத் தமிழன்Tuesday, May 16, 2017 10:27:00 am
      'நாடிப் பிடிப்பது' - அதாவது அவளை நாடிப் பிடிப்பது. அர்த்தமே வேற//

      ஹா ஹா ஹா ஓம் நெல்லைத்தமிழன்.. நாடுதல் என்றால் விரும்பிப் போதல் எனத்தானே அர்த்தம். நாடிப் பிடித்தல்.. விருப்பமாகப் பிடித்தல்?:).

      ///என்றுதான் சொல்லுவினம். ///
      // என்றும் சொல்லுவினம்.///
      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் இப்போ ஸ்ரீலங்காவுக்குள் கரெக்ட்டா நுழைஞ்சிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஸ்ரீராம் பயந்து வாபஸ் ஆகிட்டார்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹாஅ:)..

      //மருத்துவர் திரைக்கு அந்தப்பக்கம் இருப்பவருக்கு என்ன நோய் என்பதைக் கண்டுபிடிப்பாராம்.//
      ஓ ... அவ்ளோ கெட்டிக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் அக்காலத்தில்.

      நானும் கேள்விப்பட்டேன், அந்தக்காலத்தில் நாடித் துடிப்பை பார்த்தே அனைத்தையும் கண்டு பிடிப்பார்களாம்.

      Delete
    6. திரைக்குப் பின் என்றதும் நினைவு வந்தது... .. இலங்கையில் எழுத்து என நடக்கும், அதாவது Registation.. இதுதான் நிட்சயதார்த்தம்போல, திருமணத்துக்கு முன்பு சில மாதங்களுக்கு முன் வைப்பார்கள்.

      அம்மம்மாவின் அம்மாவின் காலத்தில், இப்படி எழுத்து எப்படி நடக்குமெனில், திரை போட்டு, மறைவில் பொம்பிளை இருப்பாவாம், திரைக்கு இங்காலே தான் மாப்பிள்ளை இருப்பாராம்... புத்தகங்களைக் கொடுத்து இருவரும் கையொப்பமிடுவினமாம்... முகம் பார்ப்பதிலையாம்.

      பின்னர் மணவறையில், பொம்பிளை நிமிர்ந்தே இருக்க மாட்டாவாம்ம்ம் கூச்சமாம்:).. பொம்பிளையின் தலை குனிந்து கீழே போய் விடுமாம், அருகில் நிற்கும் தோழி பிடிச்சுப் பிடிச்சு நிமிர்த்தி விட்டுக்கொண்டிருப்பாவாம்... தாலி கட்டும்போதுதான், முதன் முதலில் கணவர் பெண்ணின் முகம் பார்ப்பாராம், ஆனா அப்போகூட பொம்பிளையின் கண் கீழேதான் இருக்குமாம்ம்.. ஹையோ ஹையோ.... எல்லாம் முடிஞ்ச பின்னர் முகத்தைப் பார்த்து என்ன பண்ண முடியும் சொல்லுங்கோ ஹா ஹா ஹா:).

      Delete
    7. ஹையோ இப்போ உங்களுக்கு எங்கே அடிபட்டுச்சி :) chin or wrist

      Delete
    8. ///ஹையோ இப்போ உங்களுக்கு எங்கே அடிபட்டுச்சி :) chin or wrist///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடிய விடிய ராமாயணமாம்ம்.. விடிஞ்சதும் கேட்டால்ல். சீதைக்கு ராமன் கணவராம்:) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக் கதை ஹா ஹா ஹா.. தேம்ஸ்ல வோக் போகும்போது பிறக்டிகலா:) காட்டுறேன்:).

      Delete
    9. ஓ நெல்லைத் தமிழன் நாடி பக்கத்தில் ப் வந்து அர்த்தத்தையே மாற்றிவிட்டது...ஆமாம் நாடி பிடிப்பது....நாடிப் பிடிப்பது என்றால் நீங்கள் சொல்லும் அர்த்தம்...சில சமயாம் டைப்பும் போது இப்படி எலலம் வந்து கவனிக்காமல் போட்டு விடுகிறேன்...இனி பார்த்துதான் போடோணூம்..

      கீதா

      Delete
  33. ஸ்கேட்டிங்
    நல்ல அனுபவம்தான்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
  34. மனம் நெகிழ வைக்கும் (சுட்ட) புகைப்படம்...

    வலியான அனுபவம் - கலகலப்பாக விவரிப்பு...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ... ஹா ஹா ஹா துன்பம் வரும்போதெல்லாம் சிரிக்கச் சொல்லி பெரியவங்க சொல்லியிருக்கினம்:)..

      மிக்க நன்றி அனைத்துக்கும்..

      Delete
  35. அதிரா நான் தம போட்டுட்டேன் டுட்டேன்....டேன்.....ன்...

    கண்ணதாசன் அங்கிளா...ஹை அப்ப எங்களுக்கு க்ரேட் அங்கிள்...(அவர் க்ரேட்தான் எப்படியானாலும்!!!)....ஹஹஹ...

    அதிரா எப்படிப் பின்னூட்டத்தில் படம் போடுறீங்க....எனக்கு வர மாட்டேங்குதே....

    சரி சரி வெங்கட்ஜிகிட்டருந்து சுடாத அந்தப் படத்தைப் பார்த்துட்டோம்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ... ஆவ்வ்வ்வ்வ் போனதடவை நீங்க போடல்ல.. ஆனா ட்றுத் போட்டார்ர்ர்ர்:) ஆனா இந்த தடவை நீங்க போட்டீங்க.. ட்றுத் விட்டுக்குடுத்திட்டார் போல உங்களுக்கு ஹா ஹா ஹா:).

      பின்னூட்டத்தில் படம் இங்கு போடுவது.

      கூகிளில் படத்தை செலக்ட் பண்ணிட்டு, அதன் மேல் கேசரை வச்சு, ரைட் கிளிக் பண்ணினால்ல்.. அதில் ஒரு தொகுதி எழுத்துக்கள் வரும்...

      அதில் copy image url என்பதை கிளிக் பண்ணுங்கோ.

      பின்பு இங்கு வந்து கொமெண்ட் பொக்ஸ் இல்... [im] இப்படி ரைப் பண்ணிட்டு... அந்த கொப்பி பண்ணிய லிங்கை, இங்கு திரும்பவும் ரைட் கிளிக் பண்ணினால் பேஸ்ட் என வரும் அதை கிளிக் பண்ணினால், அந்த லிங் இங்கு வந்திருக்கும்.. முடிவில் திரும்பவும் இப்படி ரைப் பண்ணி விடுங்கோ [/im] என. அவ்ளோதான்.

      [ma]00000000[/ma]

      Delete
  36. அட! அதிரா காலைத் தூக்கினீங்கள்ல அப்படியே உங்க கையை கொடுங்க....ஒன்னுமில்ல நானும் கீழ விழுந்தா எல்லாம் அழவே மாட்டேன் சிரிப்பேன்..அதுக்குத்தான் கையைக் கொடுங்கன்னு....ஹிஹிஹ்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா “வந்ததும் அது.. சிவன் தந்ததும் அது” என ஒரு பயமொயி இருக்குதெல்லோ.. அது நேக்குக் கரீட்டாப் பொருந்துது:) என்னோடு கூடவே வருவோர் எல்லோரும் என்னைப்போலவேதேன்ன்ன்ன்ன்:).

      Delete
  37. ஆமா சரிதானே உங்க கணவர் சொன்னது!!! வெட் கிட்டத்தான் போவாங்க பூஸார் எல்லாம்...சரி என் மகனிடம் சொல்லி வைக்கிறேன்....உனக்கு ஒரு பூஸார் ரெகுலர் க்ளையன்ட்னு...ஹஹ்ஹ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இதென்ன புது வம்பாக்க் கிடக்கூஊஊஊஊஊ:).. ஆனா ஒண்ணு என் வால்ல மட்டும் டச் பண்ணக்கூடா எனச் சொல்லிடுங்கோ கீதா:) நேக்கு அழகைக் கொடுப்பதே அந்த வால்தேன்ன்ன்:) ஹா ஹா ஹா...

      Delete
  38. ஏஞ்சல் மதுரைத்தழிழன் பூஸார் வெட் பார்த்ததும் ஓடுறத பார்த்தீங்களா....

    என் மகன் பூஸார் க்ளினிக்கில் தான் இருந்தார்...அவரைக் கண்டுப் பயப்பட வேண்டாம்...ஊசி எல்லாம் போட மாட்டார்.....பயப்படாமப் போங்கோ...

    கீதா

    ReplyDelete
  39. அந்தக் காட்டிலே மனுஷன் வாழ முடியாதாம் என்றுதான் முதலில்நினைத்தேன் ஹிஹீ..(புரிந்தது அண்டார்ட்டிகா என்று இருந்தாலும் இப்படித்தானெ அதிராவைக் கலாய்க்கோணூம்!!)

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ... இது அந்த ஆட்டிக்கா:).

      மிக்க நன்றி கீதா அனைத்துக்கும்..

      Delete
  40. [co="dark green"] இலங்கையிலே காலம் காலமா ஸ்கூல் சிலபஸ் ல, கம்பராமாயணம், பாரதச் சுருக்கம் இருந்தது, இப்போ சமீபத்தில்தான் நிறுத்தி விட்டார்கள் என அறிஞ்சேன். இதன் மூலமும் பல தமிழ்க் கலப்புக்கள் மற்றும் வித்தியாசமான தமிழ் சொற்கள் நமக்குள் வந்துவிட்டது.

    ஓம் எனும் சொல் கூட, பாரத்தப் போரிர்க் காலத்தில் பாவிக்கப்பட்டதாம், அதாவது ஒருவருக்கு வாக்குக் கொடுக்கும்போது.. ஓம் செய்கிறேன் எனச் சொன்னால் அதை மீற மாட்ட்டினமாம்... ஆனா பாரத யுத்தம் நடந்தது இந்தியாவில்... அதன் ஓம் எனும் சொல்லைப் பாவிப்பது இப்போ இலங்கையில்:).. ஹா ஹா ஹா...
    [/co]

    ReplyDelete
  41. akka summa ethe pathu pogalamnu thaan vanthen

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி வாங்கோ... உங்களுக்கு என்னோடு சரியான கோபமாக இருக்குமென நினைக்கிறேன், இருப்பினும் கோபம் இல்லாமல் எட்டிப் பார்த்திருக்கிறீங்க மிக்க நன்றி.

      Delete
  42. இதுக்குதான் கற்றுக்கொடுக்குற குரு சொன்னா கேட்க்கணும்னு சொல்றது. :-)
    இனிமே விழாதீங்க. விழுந்தாலும் கை ஊன்றி நிற்க பழகிக்கோங்க. & பகிர்ந்த கவிதை சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கவிக்கா வாங்கோ...

      //இதுக்குதான் கற்றுக்கொடுக்குற குரு சொன்னா கேட்க்கணும்னு சொல்றது. :-)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.. அங்கு மரமேதும் இருக்கவில்லையே:)..

      விழுந்தால் எப்படி கை ஊன்றி விழுவது எனச் சொல்லிக்குடுத்தார்கள், ஆனா அந்தக் கிளாஸ் க்கு மீ அப்செண்ட்:).

      மிக்க நன்றி கவிக்கா.

      Delete
  43. //“அதிரா , உங்களுக்கிருக்கும் வருத்தங்களைப் பார்த்தால், இதுக்கு நான் உங்களை நல்ல ஒரு "Vet" இடம் தான் கூட்டிப்போய்க் காட்ட வேணும்”//

    அதிரா, ஜாக்கிரதை, பூசாருக்கு பதிலா உங்கள கூப்பிட்டுட்டுப் போயிடப் போறார்.

    //என் வாய்க்கோ பேச்சுக்கோ எந்தக் களங்கமும் வராமல் வளமைபோல பேசிக்கொண்டிருந்தேன்:)//

    அதிராவா கொக்கா

    //, ஆனா அன்றோடு அப்பக்கம் திரும்பிப் பார்த்தாலே கை கால் எல்லாம் ரைப் அடிக்குது:).//

    நீங்க ஸ்கேட்டிங் பண்ணற அழகை நேர வந்து பார்க்கணும்ன்னு நினைச்சேனே.
    மீண்டும் ஸ்கேட்டிங் வகுப்புக்குப் போங்கோ. நமக்காச்சு, அதுக்காச்சு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜே மாமீ வாங்கோ..

      ///அதிரா, ஜாக்கிரதை, பூசாருக்கு பதிலா உங்கள கூப்பிட்டுட்டுப் போயிடப் போறார். // ஹா ஹா ஹா ஜே மாமிக்கும் குசும்பு கூடிட்டுதே:)..

      //அதிராவா கொக்கா//
      ஹா ஹா ஹா அப்பூடிச் சொல்லுங்கோ ஜே மாமி ஹா ஹா ஹா:).

      //மீண்டும் ஸ்கேட்டிங் வகுப்புக்குப் போங்கோ. நமக்காச்சு, அதுக்காச்சு//

      ஹா ஹா ஹா இது யூடு:) கண்ட பூனை:)..இனி அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பேன் எண்டா நினைக்கிறீங்க?:)

      Delete
  44. அதிரா நீங்க சுட்ட கவிதை சூப்பர்.

    அப்பட்டமான உண்மை. மனைவியை இழந்த ஆண்களின் உண்மை நிலை.

    ReplyDelete
    Replies
    1. உண்மையேதான் ஜேமாமி.. எனக்கு மனதை என்னமோ செய்துது அதனாலயே வெக்கம் ரோசம் பார்க்காமல் சுட்டிட்டு வந்திட்டேன்ன்.. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி வரவுக்கு.

      Delete
  45. சொன்னவிஷயம்
    மனதுக்கு வருத்தமளித்தாலும்
    சொல்லிச் சென்ற விதம் சுவாரஸ்யம்
    விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரமணி அண்ணன் வாங்கோ..

      இல்ல இது இப்போ நடக்கவில்லை கொஞ்சக்காலம் முன்பு நடந்த சம்பவம்.. மிக்க நன்றி.

      Delete
  46. வணக்கம் மியாவ் !

    கொஞ்சநாளா வலைப்பக்கம் வரல்ல ஆனா இங்கே பெரிய அக்கப்போரே நடந்திருக்கே அம்மாடியோவ் ....... அது இன்னாது வெளாட்டு பனிச்சறுக்கா ? சரி போனீங்க கத்துக் கொண்டீங்க போட்டியில் கலந்து விழுந்தீங்க ஆமா உண்மையில் நீங்கதானே கலந்துக்கிட்டீங்க ஏன்னா எனக்கு ஒரு டூட்டு ?

    /// டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனப் பென்னாம் பெரிய சத்தம்.. அந்த ஸ்கேட்டிங் ஏரியாவே அதிர்ந்துது..//

    யானை விழுந்த சத்தத்தை வர்ணிக்கிறமாதிரியே இருந்திச்சா அதுதான் டூட்டு வேறு ஒண்ணும் இல்ல ஒண்ணும் பயப்பிடாதேள் .......

    தமனா வோட் !ப்ளஸ் ஒன்று

    ReplyDelete
  47. வாங்கோ மேஜர் வாங்கோ.. எங்கோ நாடு காக்கப் போயிட்டீங்கள் என நினைச்சேன்.. கொடுத்த வாக்கை மீறி, வராமல் விட்டிட்டீங்க:).

    //யானை விழுந்த சத்தத்தை வர்ணிக்கிறமாதிரியே இருந்திச்சா அதுதான் டூட்டு//
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).

    உடனே வந்து வோட்டாவது போட்டால்தானே மீக்கு மகுடம் கிடைக்கும்.. 48 மணித்தியாலம் போனால்... மகுடத்தையும் பறிச்சு தள்ளி விழுத்திடுவினமாம் கர்ர்:).

    மிக்க நன்றி சீராளன்... தாமதமானாலும் வந்தமைக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மியாவ் ! நான் என்வலைப்பக்கமே போவதில்லை நேரம் கிடைப்பதில்லை ஆனால் என் மின்னஞ்சலுக்கு வரும் இணைப்புகளுக்கு கண்டிப்பா போய்டுவேன் உடனே ஏனெனில் அடிக்கடி மின்னஞ்சல் பார்ப்பேன் அதனால நல்ல பிள்ளையா எனக்கும் இணைப்பை அனுப்பிடுங்க பறந்து வருவேன்ல ஓகே வா !

      Delete
    2. ஆவ்வ்வ்வ்வ் மீண்டும் மேஜர்.. வாங்கோ... உங்களைப்போன்றோருக்காகத்தான் இங்கே வலது பக்கம் கொசு மெயில் இணைப்பு கொடுத்திருக்கிறேன், அதில் மெயிலை இணைச்சு விடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்:)... மயில் வந்ததும் பறந்து வாங்கோ.. ஹா ஹா ஹா மிக்க நன்றி சீராளன்:).

      Delete
  48. அடுத்த பகுதியில் “டொடர'' ஆவலுடன் காத்திருக்கிறேன்
    எங்களுக்கு அனுபவம் அதிகம் என்கிறீர்கள். நன்றி
    ஆம் பெயர் எப்போது மாறியது?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஐயா விஜபதி வாங்கோ... ஹா ஹா ஹா டொரருங்கோ சந்தோசம்.. மிக்க நன்றி:).

      Delete
  49. புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள் சொன்னது சரிதான் அதிராவிற்கு அனுபவம் அதிகம்தான்.
    நாடி அடி வீக்கத்துடன் போனது நல்லது ஆச்சு. பெரிய காயம் இல்லாமல் தப்பியதற்கு ஆண்டவனுக்கு நன்றி.
    சிறு வயதில் அதிக குறும்பு செய்யும் குழந்தைக்கு நாடியில் அடி படும் என்பார்கள் எனக்கும் நாடி அடி பட்டு இருக்கிறது.
    மகன் செய்யும் சாகசத்தை நீங்க்களும் செய்ய முற்பட்டதால் அடியா நாடியில் மீண்டும் பயிற்சி செல்கிறீர்கள் தானே?

    ஊசி குறிப்பு மிக அருமை. இப்படி ஒரு கணவர் பேசினால் அந்த வீட்டில் சாந்தி நிலவும் அன்பு வளரும்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.