நல்வரவு_()_


Tuesday 4 June 2019

💖என்றென்றும் 16 போலே...👸

இருப்பது எங்கள் நாடே:))
யா வாங்கோ அம்மா வாங்கோ பெரியக்கா வாங்கோ, சின்னக்கா வாங்கோ, அண்ணா வாங்கோ.. தம்பி வாங்கோ.. இங்கின எனக்கு தங்கைமார் ஆரும் இல்லையாக்கும்:)). வலதுகாலை வச்சு உள்ளே வாங்கோ.. வெளிநாட்டுப் படங்களைத்தான் இதுவரை போட்டேன், எங்கள் நாட்டுப் படம் ஒன்றுகூடப் போட்டதில்லை.. இது ச்ச்ச்சுமா ஒரு சாம்பிள்தான் பாருங்கோ.. :).. “உரலுக்குள் தலையைக் குடுத்திட்டீங்கள்:), இடிக்குப் பயந்தால் முடியுமோ?:)” படம் பார்க்கத்தான் வேணும்:), கொமெண்ட்ஸ் போடத்தான் வேணும்:)) தப்பி ஓட முடியாது:))
ங்கு ஸ்கொட்லாந்தில் அதிகமாக இருப்பது ஆறு, மலை தாண்டி.., பழைய அரண்மனைகளும் மியூசியங்களுமே அதிகம்., பார்க்க மெய் சிலிர்க்கும் அளவுக்கு அருமையாகப் பேணிப் பராமரித்து வருகின்றனர்... அங்கு ராஜா உலாவிய பாதை,  அவர் படகில் சென்று கடலினுள் இறங்கும் பாதை, ராஜாவின் அரண்மனையைப் பாதுகாப்பதற்காக, தூர மலையில் குட்டிக் கட்டிடம் இருக்கும்.. தூர இருந்து வரும் எதிரிகளைக் கண்காணிப்பதற்காக கட்டியதாம்.. இப்படி ஒவ்வொரு castle இலும் ஒவ்வொரு கதை உண்டு...

இது Stonehaven எனும் இடத்தில் அமைந்துள்ள காசில்.. இதன் பெயர்.. Dunnottar Castle.. விருப்பமிருப்போர் தேடி, வரலாறு படிக்கலாம். இங்கு சொன்னால், போஸ்ட் பெருத்துவிடும்...

இது எதிர் மலையில் ஏறி எடுத்தேன் படம்...சீகல்ஸ் பறக்கினம் தெரியுதோ மேலே?



ஆடுகள் மேய்வது தெரியுதோ?:)..

காசிலின் மலை அடிவாரம்








இது எவ்ளோ தூரத்தில் தெரியுது பாருங்கோ.. நேரில் பார்க்கும்போது பெரிய பள்ளத்தாக்கில் ஏறி இறங்குவது போலிருந்தது.. 


ஒரு 200 படிகளுக்கு கிட்ட இறங்கி பின்பு திரும்ப ஏறினால்தான் காசிலிருக்கும் மலைக்குப் போகலாம்..

காசில் அமைந்திருக்கும் மலையின் அடிப்பகுதியில் இது இருக்கு.. மலையைக் குடைந்து பாதை எதிரே கடலுக்குள் போகிறது.. வெள்ளை வட்டமாகத் தெரிவது எதிரே இருக்கும் கடல்..வீடியோவில் நன்கு தெரியுது.

 மலைப்பாறைகள்கூட ஒருவித அழகு...





இங்கு ஸ்கொட்லாந்தில் இருக்கும் அழகின் சீக்ரெட் என்னவெனில்.. காடு, வயல்வெளிகளில்கூட புல் பூண்டுகள் எல்லாம் விதம் விதமாகப் பூத்திருக்கும் ஏதோ பூங்கா போலவே இருக்கும் கண்ணுக்கு..

இது தரையாலே தண்ணி ஓடி வந்து[ஓடைபோல] இந்தப் பள்ளத்தாக்கில் பாய்வது மிக அழகு.. அந்த பாயும் இடத்திலும் ஏறிப்பார்க்கலாம், மக்கள் போவது தெரியுதோ.. இங்கு கிட்டத்தட்ட 3,4 மலைகள் குட்டிக் குட்டி இடைவெளியில் இருக்கு....


இது அங்கிருந்த அழகிய பிங் பூக்கள்.. ஆசையில் படமெடுத்திட்டேன்..

இதென்ன தெரியுதோ? இப்போ எங்கள் வீட்டில் நாம் வளர்க்கும் கூஸ்பெரி[வெளிநாட்டு நெல்லி].. இது காசிலுக்குப் போகும் பாதையில் காட்டுக்குள் நின்றதே நிறையக் காய்ச்சிருக்கு.. ஒருவேளை 13ம் நூற்றாண்டில் இக்காசிலில் வாழ்ந்த அரசன் வளர்த்ததாக இருக்குமோ?:)).. நான் ஜம்ப் பண்ணி பிடுங்க வெளிக்கிட்டேன்ன்ன்.. ஹையோ அது என்ன நச்சோ தெரியாது போகாதீங்கோ என  திரும்பவும் ஒரு “ஜிங்கத்தை” பாய விடாமல் கட்டிப் போட்டு விட்டனர் கர்ர்ர்ர்ர்ர்:))

இது அங்கு கிட்டவாக இருந்த ஒரு அழகிய கடற்கரை.. நன்கு நடக்க ஓட அழகாக பாதை அமைக்கப்பட்டிருக்கு... ஆனா அந்நேரம் ஒரே மழையும் காத்துமாக இருந்தது..

அஞ்சூஊஊஊ நீங்க காசிக்கு வராவிட்டால் பறவாயில்லை:), நான் அம்முலுவை அல்லது கீதாவைக் கூட்டிப் போகிறேன்:).. ஆனா அதுக்குப் பதில் இங்கு வாறீங்களோ?:) அதிராவோட சேர்ந்து கடல்ல குதிச்சுக் குதிச்சு வெளாடலாம்ம்:))

ஆஆஆஆஆ பொயிண்ட்டுக்கு வதாச்சு:) நேரமில்லை பிறகு பார்க்கிறேன் என[அதிராவைப்போல:)] சாட்டுச் சொல்லிட்டு ஆராவது பார்க்காமல் ஓடினால்...:) இரவிரவாக நித்திரை கொள்ள விடாமல் நுளம்பு மூக்கைக் கடிக்கும் அதுவும் தொடர்ந்து 30 நாட்களுக்கு சொல்லிட்டேன்ன்:).. யோசியுங்கோ, முப்பது நாட்களோ மூணு:) நிமிசமோ என?:))... ஹா ஹா ஹா:).. பாருங்கோ பிளீஸ் நல்லாயிருக்கு:).

இது, காசில் அமைந்திருக்கும் மலைக்கு எதிர்மலையில் நின்று எடுத்த வீடியோ..

இது காசில் மலையில் ஏறி, அதன் அருகாமையில் இருந்து எடுத்தது, கீழே கடற்கரை தெரிகிறது.. இங்கிருந்து இன்னும் இறங்க வேண்டும் கடல் அருகே போக.. என் இரு கையையும் பிடிச்சு.. போகாதீங்கோ போகாதீங்கோ என இழுக்கத் தொடங்கி விட்டனர்.. ஒரு சிங்கத்தை[சிங்கம் சிறுத்துத்தான் பூஸ் ஆனதாம்:))] அடக்கி விட்டனர் கடலருகில் போக விடாமல்:))



ஊசிஇணைப்பு:
இன்றைய ஊசிக்குறிப்பில் இடம்பெற இருப்பவர்.. படியுங்கோ புரியும்:)).. 

காசில் பார்த்துவிட்டுச் சாப்பிடுவதற்காக ஒரு இண்டியன் ரெஸ்ரோரண்ட் போனோம்... அங்கு பக்கத்து மேசையில் சாப்பிட வந்திருந்தவர்கள் ஒரு தமிழ்க் குடும்பம்.. காதில் தமிழ்ப் பாசை கேட்டதும் எனக்கு நாக்கு பரபரத்தது.. கைகள் துடித்தது.. கண்கள் ஆடியது.. ஆஆஆஆஆ தமிழ் தமிழ் எனச் சொன்னபடி சாப்பிட்டு முடித்ததும், பொறுக்க முடியாமல் பேச்சுக் கொடுத்தேன்.. அவர்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.. தமிழ்க் குரல் கேட்க எவ்ளோ சந்தோசமாக இருக்கு என்றனர்.. அவர்கள் அங்கு வந்து 2 வருடங்கள்தானாம்.. சரி வரலாறு இங்கு முக்கியமில்லை பொயிண்ட்டுக்கு வருவோம்.. எனக்குப் பாருங்கோ அலட்டுவது பிடிக்காது:)).

அந்தச் சோடியில் கணவர் தஞ்சாவூராம்.. எனக்கு தமிழ்நாடு முழுக்கலும் தெரிஞ்சமாதிரி ஒரு பில்டப்பூக் குடுக்க வெளிக்கிட்டு:).. துரை அண்ணனை விசாரிக்கலாம் எனில்.. அவரின் சரியான இடம் தெரியாமையால்:)).. சரி போகட்டும் என மனைவியைக் கேட்டபோது அவ சொன்னா “திருச்சி” என... ஆஆஆஆஆஆ திருச்சியில் எவடம் என்றேன்.. உச்சிப் பிள்ளையார் கோயில் வீதியிலதான் எங்கட வீடு என்றா.... ஆஆஆஆஆ கிட்ட நெருங்கிட்டா, நான் கதிரை நுனிக்கே வந்திட்டேன்:).. எங்கட “குண்டுக் கோபு அண்ணன்” :) இப்போ மாட்டி என நினைச்சுக் கேட்டேன்ன்.. முழுப்பெயர் சொல்லி... இல்ல எனக்குத் தெரியாது என்றிட்டா:)).. சே..சே.. சேம் ஆகிப்போச்ச்ச்ச்:))..

 இதுக்குத்தான் கோபு அண்ணனை எப்பவும் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்காமல்.. கோயில் வீதியில உலாவுங்கோ அப்போதானே ஊருக்குள் தெரியும் எனச் சொன்னால் அவர் எங்கே கேட்கிறார் இதை எல்லாம் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.


ஊசிக்குறிப்பு:
அதிராவின் படம் காட்டும் தொல்லைகள்:).. 
இப்படி அடிக்கடி டொடரும்:) நன்றி_()_
*****************************

212 comments :

  1. [im]https://media1.giphy.com/media/F1b6Tk9P78Llu/giphy.gif[/im]

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. இம்முறை ஸ்பீட்டா ஓடி வந்திட்டிங்க முதலாவதா:) வெல்கம்..:)

      [im] https://i.gifer.com/4nY8.gif [/im]

      Delete
    2. ஹலோ உங்கள் ஊர்ல் இப்படி பச்சை பசேலுன்னு நிறைய இடம் காலியாக இருக்கிறதே.... இங்கே வந்த கருத்து சொல்லுற எல்லோருக்கும் ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி தறது....... நான் சொல்லுறது சரிதானே ஸ்ரீராம் கில்லர்ஜி கீதா( எல்லாகீதாம்மாவும்) நெல்லைதமிழன் மற்ற அனைவரும்

      Delete
    3. vஆங்கோ ட்றுத் வாங்கோ.. இதுக்காகத்தான் ட்றம்ப் அங்கிள் இப்போ இங்கின வந்திருக்கிறார்ர் தம்பதிகளாக:)).. நாளைக்கு முடிவு தெரியும் குயின் அம்மம்மா எத்தனை எழுதிக் குடுக்கப்போறா என:) ஏக்கரிலதான் ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  2. பின்னாலிருந்து வரேன் :) அந்த ஊசிக்குறிப்பு செமையோ செமை :) என் வேலையே அது சம்பந்தப்பட்டது தானே இப்போ

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தன்னைத்தானே புகழப்பிடாதாக்கும்:)).. நீங்க அதிராவைப் புகழோ புகளெண்டு புளுகோணும்:)).. அதிரா அஞ்சுவைப் புகழோ புகளெண்டு புளுகோணும்:)) அதுதான் அழகாக்கும்.. ஹா ஹா ஹா ஹையொ ஹையோ:)).. இதை எல்லாம் நானே ஜொள்ளிக்குடுக்க வேண்டி இருக்கே ஜேசுவே..:)

      Delete
    2. ஹலோவ் மியாவ் நான் உங்களைத்தான் புழுக புகழோ புகழ்னு புழுக :) நினைச்சேன் ஆனா நெல்லைத்தமிழன் கண்டுபிடிச்சிடறார் :)

      Delete
    3. நெல்லைத்தமிழனுக்கு நுழம்பெண்டால் பயமோ பயம்:)) ஹா ஹா ஹா அதனால அவர் இம்முறை எப்பூடிப் புழுகினாலும் காக்கா போயிடுவார்ர்:))

      Delete
    4. "புழுக" - இதுக்கு அர்த்தம் புரியாமல் 'அப்பாவி' அதிரா அகமகிழ்ந்துகொண்டிருக்கிறார். அர்த்தத்தைச் சொல்லி 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' வாங்கிக் கட்டிக்கொள்ளாதீர்கள் அவரிடம்.

      Delete
    5. எனக்குத்தெரியுமே நெல்லைத்தமிழன் புகழ்தல், புளுகுதல் .. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியுமாக்கும் பிக்கோஸ் மீக்கு டமில்ல டீஈஈஈஈஈஈஈஈஈஈ:)ஹா ஹா ஹா

      Delete
    6. ஹாஹா நெல்லைத்தமிழன் சில நேரம் இந்த பூனை நாம் கிண்டல் செய்யறோம்னு அதாவது புழு(ளு )களை புகழ ல்னும் அறியாம புரிஞ்சிப்பாங்க அப்போ செம ஜாலியா இருக்கும் :))


      வஞ்சப்புகழ்ச்சிக்கும் வஞ்சகமில்லாம தேங்க்யூ சொல்ற ஒரே ஆள் அப்பாவி ஞானி தான்

      [im]https://media1.tenor.com/images/fcef9ebb8090ed1e66beb4decfeec2d3/tenor.gif?itemid=13828708[/im]

      Delete
    7. http://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20190411130806.jpg

      Delete
  3. ஹாஹா :) கோபு அண்ணன் பஜ்ஜி வாங்க வீட்டை விட்டு வெளியே போவார் :) அந்த பஜ்ஜிக்கடை பக்கம் பார்த்திருக்கிங்களான்னு கேட்டிருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. இப்போல்லாம் அவர், அந்த ஏசி ரூமை விட்டு வெளியிலேயே வருவதில்லை. எதுன்னாலும் ஃபோன் பண்ணி கொண்டுவரச் சொல்லிடுறார் போலிருக்கு.

      ஆனால், புது இடுகை போடறதுக்குத்தான் அவருக்கு நேரமில்லையாம். ஹாஹா

      Delete
    2. ஹா ஹா ஹா அஞ்சு.. நெல்லைத்தமிழன் சொன்னதைத்தான் நானும் சொல்ல நினைச்சிருந்தேன்.. அவராவது கடைக்குப் போவதாவது:))..

      ///ஆனால், புது இடுகை போடறதுக்குத்தான் அவருக்கு நேரமில்லையாம்//

      சாப்பாட்டை என்சோய் பண்ணுவதிலும் வட்ஸப்பில் மெசேஜ் அனுப்புவதிலுமே அவருக்கு ரைம் போயிடுதாம் என நேற்றுத்தான் ஃபோனில் பேசும்போது எனக்குச் சொன்னார்:)) ஹா ஹா ஹா:)..

      Delete
    3. ஹாஹா :) கோபு அண்ணா மினி பெட்டி கடை வச்சிருக்கார் அவர் ரூம்லயே :) ஒரு படம் முந்தி போட்டிருந்தார் அவர் பிளாகில் :)
      எவ்ளோ ஸ்நாக்ஸ் அம்மம்மா :) இப்போ பஜ்ஜியும் வீட்டுக்கே டோர் டெலிவரியா :)))

      Delete
    4. Angel Wednesday, June 05, 2019 6:12:00 pm

      ஹாஹா :) கோபு அண்ணா மினி பெட்டி கடை வச்சிருக்கார் அவர் ரூம்லயே :) ஒரு படம் முந்தி போட்டிருந்தார் அவர் பிளாகில் :) எவ்ளோ ஸ்நாக்ஸ் அம்மம்மா :) இப்போ பஜ்ஜியும் வீட்டுக்கே டோர் டெலிவரியா :)))//


      http://gopu1949.blogspot.com/2013/02/blog-post_5541.html

      (மினி பெட்டிக்கடைக்கான படம் மேற்படி பதிவினில் உள்ளது)

      Delete
  4. ஹாஹா தமிழ் குரல் கேட்டா நாடி நரம்பெல்லாம் துடிக்கும் :) இங்கே நிறையபேர் தமிழில் பேசிட்டு போவாங்க என்னை வேறு நாடுன்னு நினைச்சி :) தப்பு தவளை தஞ்சாவூர் மாப்பிள்ளை :) கீதாக்கா நினைவில் வரலியா உங்களுக்கு :)
    இந்த வார்த்தையை அதான் த .த .த .மா . காபி பேஸ்டி செர்ச் போட்டா அக்காவின் கமெண்ட்ஸ் எல்லாம் கூகிளில் காட்டுதே :) ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், அதிரடிக்கு என்னோட நினைப்பெல்லாம் வரவே வராது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! திருச்சினதுமே என்னோட நினைவு வந்திருக்கானு பார்த்தேன். எங்கே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    2. //தப்பு தவளை தஞ்சாவூர் மாப்பிள்ளை :) கீதாக்கா நினைவில் வரலியா உங்களுக்கு :)//

      //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! திருச்சினதுமே என்னோட நினைவு வந்திருக்கானு பார்த்தேன்//

      பாருங்கோ அஞ்சு.. ஒரு ஊரைச் சொன்னால் ஒத்துக்கொள்ளலாம்.. ஊரில் உள்ள ஊரெல்லாம் சொன்னால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு தெரியும் கீசாக்கா இருப்பது அம்மா மண்டபத்துக்குப் பக்கத்து பில்டிங்கில.. காவேரி ஆற்றுக்கு அருகாமையில.. ஸ்ரீரங்கத்தில... இது மட்டும்தான் நேக்குத் தெரியும்..

      Delete
  5. இது காசில் மலையில் ஏறி,//castle mountain

    / ஒரு சிங்கத்தை[சிங்கம் சிறுத்துத்தான் பூஸ் ஆனதாம்:))] அடக்கி விட்டனர் கடலருகில் போக விடாமல்:)//

    ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா மிடில .நான் அங்கிருந்திருக்கணும் மூட்டை கட்டி உருட்டி விட்டிருப்பேன் :) கடல் எங்காவது காசியில் கொண்டு விட்ருக்கும்

    ReplyDelete
    Replies
    1. //இது காசில் மலையில் ஏறி,//castle mountain //
      ஹா ஹா ஹா கர்ர்:))

      //ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா மிடில .நான் அங்கிருந்திருக்கணும் மூட்டை கட்டி உருட்டி விட்டிருப்பேன் :) கடல் எங்காவது காசியில் கொண்டு விட்ருக்கும் //
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் ஜொன்னனே நேக்கு எடிரி வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்:))

      http://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20190416162947.jpg

      Delete
  6. / ஆனா அதுக்குப் பதில் இங்கு வாறீங்களோ?:) அதிராவோட சேர்ந்து கடல்ல குதிச்சுக் குதிச்சு வெளாடலாம்ம்:))//

    ஹலோவ் சொல்லிட்டேன் :) என்னை கொலை செய்ய சதீ நடக்குது எல்லாரும் நோட் திஸ் பாயிண்ட் .

    படங்கள் மலைக்காட்சி எல்லாம் அழகு பார்க்கும்போதே சில்லுன்னு குளிர்ந்து :)இதுக்கு நீங்க maddy பட்டு பச்சை நிறமே பச்சை நிறமே போட்டிருக்கணும் :)

    ReplyDelete
    Replies
    1. //ஹலோவ் சொல்லிட்டேன் :) என்னை கொலை செய்ய சதீ நடக்குது எல்லாரும் நோட் திஸ் பாயிண்ட் .//

      வெளாடலாம் வாங்கோ என்றேன் .. கொலையாம் கொலை கர்ர்ர்:)) எனக்கென்ன கம்பி எண்ணி எண்ணி கம்புக்கூழ் குடிக்க ஆசையாக்கிடக்கெண்டோ நினைக்கிறீங்க:)) பயப்பூடாமல் வாங்கோ அஞ்சு:))..

      //இதுக்கு நீங்க maddy பட்டு பச்சை நிறமே பச்சை நிறமே போட்டிருக்கணும் :)//
      போட்டிருக்கலாம்.. எனக்கு இந்தப் பாட்டும் சூப்பராப் பிடிச்சுப்போச்சு.. இதுக்கு முன் கேட்டதில்லை.. அதனால ஆசையில் போட்டேன்.. இதிலும் இயற்கைதானே வருது.. அப்போ பொருத்தமாக இருக்கும் எனப் போட்டேன்...

      Delete
    2. ஆ......அ ஞ்சு நீங்க இதுக்கு பதில் எழுதினதால நான் நினைச்சேன் நீங்க பார்த்திட்டீங்க என்று. பார்த்திட்டு பேசாம போகமாட்டீங்களே எனவும் யோசித்தேன்.....இதில் பூஸ்தானே வாறார். நான் முதல்ல பார்த்திட்டேன். ஆனா க கா போ....

      Delete
    3. ஆமா பிரியா ..work போறதால ரொம்ப இருந்திச்சி அதுவும் ரிவர்ஸார்ட்டரில் வந்தேன்னா அந்த பாட்டு கூட வீடியோ படத்தை மட்டும் பார்த்தேன் கேக்கலை ஆனாலும் கொசு கடிக்கலையேஇ

      Delete
    4. ஆஆஆஆஆஆ இப்போதான் புரியுது அம்முலுவுக்கும் மோர் குடுக்கோணும் என:)).. ஹா ஹா ஹா இந்தாங்கோ இருவரும் மோர் குடியுங்கோ அப்போதான் அதிரா ஹிந்திக் ஹீரோயின் போல நடந்து வருவது கண்ணுக்குத் தெரியாதூஊஊஊ ஹா ஹா ஹா:))..

      செந்துரா... செந்தூரா. சேர்ந்தே செல்வோம் காசிக்கு:))

      Delete
  7. இங்கிருக்கும் எல்லா castle யிலும் உடைகள் ஒரு தொகை பே பண்ணி அணிந்து உலாவலாம் :) படமெடுக்கலாம் நீங்க செய்யலியா ??தூக்கம் வருது பை பை குட்நைட் :) ராஜா ராணி ட்ரீம்ஸ்

    ReplyDelete
    Replies
    1. [im] http://4.bp.blogspot.com/-9dr78tuGNDs/UCHEeUNMoZI/AAAAAAAAAiE/0iJfwYOHkZA/s640/11.gif [/im]

      Delete
    2. அதிரா... பொதுவெளில எதுக்கு உங்க போட்டோல்லாம் போடறீங்க... அதுமாதிரில்லாம் உங்க படத்தை ஷேர் பண்ணாதீங்க (உங்க வீட்டுல செக்யூரிட்டி கேமராலாம் அவசியமில்லை போலிருக்கே...உங்க கண்ணே பத்து செக்யூரிட்டி கேமரா மாதிரி இருக்கு ஹாஹா)

      Delete
    3. //இங்கிருக்கும் எல்லா castle யிலும் உடைகள் ஒரு தொகை பே பண்ணி அணிந்து உலாவலாம் :) படமெடுக்கலாம் நீங்க செய்யலியா//

      இதைப் பார்த்தால் உடை போட்டுக்கொண்டு உலாவும் நிலைமையிலோ இருக்குது ஹா ஹா ஹா.. அது சில காசில்கள் அப்படி உண்டு அஞ்சு.. அங்கெல்லாம் சன நடமாட்டம் அதிகம் இருக்கும்.. இது காட்டுப்பகுதிபோல இடம்.. அதிலும் கடற்கரை... உள்ளே போகவே பயமாயிருந்தது.. நான் வாசல்வரை போயிட்டு வேண்டாம் என வந்திட்டேன்ன்...

      இங்கு சில காசில்களில் இன்னமும் பழைய ராஜா,ராணியின் ஆவி இருக்குதாம்... ஒன்றில் எழுதியிருந்தார்கள்.. உள்ளே ஒரு கிரே லேடி இருக்கிறா.. மாலை 6 மணிக்குப் பின் உலாவுவா.. அதனால யாரும் உள்ளே போகக்கூடாது என.. இரவு 6 மணிக்கு அந்த எல்லை பூட்டப்பட்டு அனைவரும் ஒன்றாக வெளியே வந்திடுவார்கள். இப்படி ஒவ்வொன்றிலும் ஒரு கதை இருக்கு..

      Delete
    4. //நெல்லைத்தமிழன்Wednesday, June 05, 2019 6:09:00 am
      அதிரா... பொதுவெளில எதுக்கு உங்க போட்டோல்லாம் போடறீங்க... //

      ஹா ஹா ஹா குட்நைட் பூஸாரின் கண்ணுக்கோ இந்தப் பதில்:)).. நான் என் படத்தைத்தான் சூம்ம்:)) பண்ணிப்பார்த்துக் கண்டு பிடிச்சிட்டீங்களோ என நினைச்ச்சுப்புட்டேன்ன்ன்ன் ஹா ஹா ஹா..

      //(உங்க வீட்டுல செக்யூரிட்டி கேமராலாம் அவசியமில்லை போலிருக்கே...உங்க கண்ணே பத்து செக்யூரிட்டி கேமரா மாதிரி இருக்கு ஹாஹா)//
      இது உண்மைதான்:)).. தலையைத்திருப்பாமலேயே கண்டுபிடிச்சிடுவேனாக்கும்:)) எங்கிட்டயேவா:))

      Delete
  8. இரவிரவாக நித்திரை கொள்ள விடாமல் நுளம்பு மூக்கைக் கடிக்கும் அதுவும் தொடர்ந்து 30 நாட்களுக்கு சொல்லிட்டேன்ன்:).//
    ஹை ஹை :) நான் பாக்கல்லியே பார்க்கல்லியே இல்லியே லேயே :) எங்க ஏரியாவில் அந்த நுளம்பு இல்லியே இல்லியே என்னை மிரட்ட முடியாது ஹாஹாஆ

    ReplyDelete
    Replies
    1. அல்லோ மிஸ்டர் நுளம்பு இல்லாட்டில் என்ன.. அங்கின இப்போ இந்தக்கிழமை நியூசில வந்துது.. எங்கட ஊர் மசுக்குட்டி[toxic caterpillar] உருவாகியிருக்குதாம் கண்டு பிடிச்சிருக்கினம்.. ஜாக்க்க்க்ர்ர்ர்தை:))

      Delete
  9. ரொம்ப அழகாக இருக்கின்றன படங்கள், காட்சிகள் கண்களைப் பறிக்கின்றன. ஆனால் எனக்கெல்லாம் போக இயலாது! 200 படிகள் இறங்கி அப்புறமா மேலே ஏறணும்னா! சாமிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆளை விடுங்கனு சொல்லிடுவேன். (என்னமோ உடனே ஸ்காட்லான்டு போறாப்போல பில்ட் அப்னு யாரு அது கூவறது) சும்மா இப்படிச் சொல்லிக்க வேண்டியது தானே!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா உண்மைதான் மேலே நின்று பார்க பயங்கரமாக இருந்தது.. அம்மா கொஞ்சத்தூரம் வந்து பார்த்தா.. பயந்திட்டா:)).. தன்னால முடியாது எனச் சொல்லிட்டு காருக்குள் இருந்திட்டா... ஆனா பயந்தளாவுக்கு பெரிய கஸ்டமாக தெரியவில்லை.. நடக்கும்போது ஓகேயாக இருந்துது..

      Delete
  10. ஊசிக்குறிப்புப் பொன்மொழி அருமை! உண்மைதான். இப்போதைய கால கட்டத்தில் ஆறுதலாகப் பேசுபவர்கள் மிகக் குறைவு! வீடியோ எல்லாம் நன்றாக எடுத்திருக்கீங்க! நீங்க தான் எடுத்ததா? :P:P:P:P:P

    ReplyDelete
    Replies
    1. //இப்போதைய கால கட்டத்தில் ஆறுதலாகப் பேசுபவர்கள் மிகக் குறைவு!//

      ஆறுதல் சொல்வதைத்தாண்டி, அடுத்தவர் பிரச்சனையைக் காதுகுடுத்துக் கேட்கவே பலருக்கு நேரம் இல்லை இக்காலத்தில். இதில் எங்கே ஆறுதல் படுத்துவதாம்..

      //வீடியோ எல்லாம் நன்றாக எடுத்திருக்கீங்க! நீங்க தான் எடுத்ததா? :P:P:P:P:P///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மீயேதான்.. இது அந்த மலையிலிருக்கும் பிங் பூக்களின் மீது ஜத்தியம்... ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  11. சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை காட்சி படுத்தி விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. ஓ இன்று சுற்றுச்சூழல் தினமோ.. தெரியாது தானா அமைஞ்சுபோச்ச்:).. முன்பும் இப்படித்தான் ஒரு போஸ்ட் போட்டேன்ன் அதுவும் எதேச்சையாக அன்றைய தினத்துக்கு அமைஞ்சதென சொன்னதாக நினைவு... நன்றி.

      Delete
  12. காட்டுக்குள்ளே திருவிழா...இனிமையான பாடல். குளிர்க்கண்ணாடியை இறக்கி விட்டுத் திரும்பிப் பார்க்கும் பூனாச்சு அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. உண்மையில் மிக மிக இனிமை.. எனக்கு நன்கு பிடிச்சுப்போச்சு... மனதுக்கு புத்துணர்ச்சி தருது.. பலதடவைகள் கேட்டு விட்டேன்..

      பூனாச்ச்சின் ஸ்டைலைப் பார்த்தீங்களோ ஹா ஹா ஹா..

      Delete
  13. முதல் படம் அழகு. அங்கு வில்லனுடனான சண்டைக்கு காட்சியை வைக்கலாம்! கதாநாயகனை அந்த மலையுச்சியிலிருந்து வில்லன் தள்ளிவிடுவார். அவன் நுனியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே கீழே குனிந்து பார்ப்பான். பா......தா.....ளம்! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வந்து வில்லனைப் போட்டுப்புறத்தி எடுத்து தூக்கி அந்த பாதாளத்தில் ஏறுவான். வில்லன் ஆ....ஆஅ... என்கிற குறையும் கூக்குரலுடன் விழுவான்! எப்படி!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சூட்டிங் எப்போ ஆரம்பிக்கப் போறீங்க ஸ்ரீராம்?:).. ஹீரோயினுக்கு அலைய வேண்டிய தேவை இல்லை உங்களுக்கு:)).. அதுக்காகத்தான் ஒரு சாம்பிள் பிக்ஸர் போட்டிருக்கிறேன் ஹா ஹா ஹா..

      Delete
  14. அடுத்த இரண்டு படங்களும் ஓகே... அழகு. இந்த மாதிரிக்காட்சி எல்லாம் கண்ணால் காணும் அழகை கேமிராவில் கொண்டுவர முடியாது!

    ReplyDelete
    Replies
    1. //இந்த மாதிரிக்காட்சி எல்லாம் கண்ணால் காணும் அழகை கேமிராவில் கொண்டுவர முடியாது!//

      இது அந்த அனுக்கா காதில போட்டிருக்கும் ஜிப்ஸி மேல் அடிச்சு சத்தியமான உண்மை.. நேரில் எனில் சாகலாம்போல ஒரு உடம்பெல்லாம் சிலிர்க்கும்.. ஆனா முக்கால்வாசியைத்தான் கமெராவுக்குள் அடக்க முடியுது.

      கொம்பியூட்டரில் சூம் பண்ணிப் பார்க்கும்போது நன்கு தெரியும் என நினைக்கிறேன், அதுபோல வீடியோவையும் ஃபுல் ஸ்கிரீனில் விட்டுப் பாருங்கோ ஸ்ரீராம்.

      Delete
  15. ஓ... அந்தக் கோட்டைக்குப் போக வழியே இல்லையா? சும்மா தூரத்திலிருந்து பார்த்து ரசிக்க மட்டுமா?

    ReplyDelete
    Replies
    1. 3ம் வீடியோ பாருங்கோ ஸ்ரீராம், அது கோட்டையின் அடியில்.. அருகில் நின்று எடுத்தது.. பாருங்கோ அதன் மேல் மாடியில் ஒருவர் நடப்பது தெரியுது.. ஒரு வயதான ஜோடி படியில் ஏறி அந்தக் கோட்டை வாசலுக்குள் போகிறார்கள்.

      காசில் அமைந்திருக்கும் அந்த மலையின் அடியிலேதான் அந்த ராசா தப்பிக் கடலினுள் ஓடும் பாதை தெரியுது[வட்ட ஒளிபோல].. அதன் கிட்டப் போக முடியாது.. ஒரு 10 அடி தூரத்தில் வேலி இருக்கு.. அங்கிருந்து எடுத்த படம்தான் அது.

      Delete
  16. கூஸ்பெரி... ஜிங்கம் அதைப் பறிச்சு க்ளோசப்பில் படமெடுத்துப் போட்டிருக்கலாம்! ஹா.. ஹா.. ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ ஜிங்கத்தை அ...ஜிங்கப்படுத்திப் போட்டினம் கிட்டப் போயிடாதே என:)) ஹா ஹா ஹா.... அது எனக்கு தெரியும் கூஸ்பெரியேதான்... பிடுங்க விட்டிருக்கலாம் என்னை கர்:))

      Delete
  17. காத்து, மழை... தண்ணீர்... சும்மா வெறுப்பேத்தாதீங்க அதிரா... எல்லாம் சென்னையிலும் நாங்கள் இதையெல்லாம் நிச்சயம் ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் பார்ப்போம்.. இது அந்த ஸ்காட் கடல் மேல சத்தியம்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இக்கரைக்கு அக்கரைப் பச்சை:)..

      //இது அந்த ஸ்காட் கடல் மேல சத்தியம்!//

      அச்சச்சோ கடல் கொந்தளிப்பதாக பிபிசில சொல்லிச்சினம் இன்று:))

      Delete
  18. தூரத்தில் நடந்து வருவது அதிராவோ... ஹிந்திப்பட ஹீரோயின் போல இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. ஆஅஆ !! இந்த அசம்பாவிதம் என் கண்ணில் படலையேன்னு நினைச்சேன் நோட்டிபிகேஷனில் ஸ்ரீராம் சொன்னபிறகே தெரிஞ்சது ஹையோ ஹையோ .ஸ்ரீராம் சொல்லாட்டி நான் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை :) நேத்து பயங்கர டயர்டில் தூங்க போய்ட்டேன்

      Delete
    2. //ஹிந்திப்பட ஹீரோயின் போல இருக்கு...///

      ஆஆஆஆஆஆஆஆஅ அஞ்சூஊஊஊஊஊ ஓடி வாங்கோ இந்தாங்கோ மோர் குடிங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) நெஞ்செரிச்சலைக் குறைக்குமாக்கும்:)) ஹா ஹா ஹா..
      [im] https://i.ytimg.com/vi/eU1TUJD7nyQ/hqdefault.jpg [/im]

      Delete
    3. ஹலோ மியாவ் உண்மை தெரிஞ்சா ஸ்ரீராமை அந்த மலை உச்சியில் இருந்து தள்ளிடுவீங்க .ஆனாலும் சொல்லிடறேன் .
      இதுக்குதான் அவசரப்பட்டு ஜம்ப கூடாது அவர் சொன்னது உங்களை ஹிந்தி நடிகைன்னு தானே சொன்னார் ஐஸுன்னா சொன்னார் :))))))))))))

      Delete
    4. [im]http://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20170202061512.jpg[/im]

      Delete
    5. //ஆஅஆ !! இந்த அசம்பாவிதம் என் கண்ணில் படலையேன்னு நினைச்சேன் நோட்டிபிகேஷனில் ஸ்ரீராம் சொன்னபிறகே தெரிஞ்சது //
      இதுக்குத்தான் சொல்றது கண்ணாஅடியைக் கழட்டாமல் போட்டிருங்கோ அஞ்சு என கேட்டால்தானே கர்ர்:)).. கொம்பியூட்டரில் ஒவ்வொரு படமா யூஊஊஊம் பண்ணிப் பாருங்கோ அப்போதான் அழகு தெரியும்.

      Delete
    6. ///இதுக்குதான் அவசரப்பட்டு ஜம்ப கூடாது அவர் சொன்னது உங்களை ஹிந்தி நடிகைன்னு தானே சொன்னார் ஐஸுன்னா சொன்னார் :))))))))))))//

      உங்களுக்கு வல்லாரை ஊஸ் குடிச்சும் மறதி வருது அஞ்சு:)) நெல்லைத்தமிழன் என்ன ஜொன்னார்ர்.. ஆமா என்ன சொன்னார்ர்ர்ர்:)). பொஸிடிவா திங் பண்ணோனும் எனச் சொன்னாரெல்லோ மறந்திட்டீங்க கர்:))..

      அதாவது ஐஸ் ஐச் சொன்னால்.. அவ .. “அத்தை சுட்ட நெத்தலி மீன் வத்தலு:).. ஆடை கட்டி என்னை வந்து சுத்துது” ஹா ஹா ஹா அப்பூடி இருப்பதால அதைச் சொல்லாமல் சொல்லிட்டார்:)).. அதாவது அதுக்கும்ம்ம் மேலயாம் ஹையோ ஹையோ..:)) நான் சொன்னது தப்பெனில்.. அனுக்காவின் கழுத்தில இருக்கும் இந்த டயமண்ட் அட்டியல்மேல் அடிச்சுச் சத்தியம் பண்ணச் சொல்லுங்கோ ஸ்ரீராமை:))... ஹா ஹா ஹா ஹையோ ஸ்ரீராம் திரும்பவும் காசி பஸ்ல ஏறுவதுபோல தெரியுதே:)..

      [im] https://stylesatlife.com/wp-content/uploads/2015/01/The-busy-black.jpg [/im]

      Delete
    7. நான் எப்போதும் எல்லாப் படத்தையும் ஜூம் பண்ணிப் பார்ப்பேன் (தவறு இருக்கான்னு பார்க்க). ஒரு பெண் நடந்துவரும் படத்தையும் பார்த்தேன். அதிராவாக இருக்குமோன்னு எண்ணம் வந்தது. ஆனால் தவறா இருந்தால் சொன்னது தவறாயிடும்னு எழுதலை.

      இன்னைக்கு ஸ்ரீராமுக்கு இவ்வளவு பெரிய ஐஸ் வைத்துவிட்டீங்களே, அனுஷ்கா முழுப் படம் போட்டு. அதுவும் ஒல்லியா...ஹாஹா

      Delete
    8. //நான் எப்போதும் எல்லாப் படத்தையும் ஜூம் பண்ணிப் பார்ப்பேன்//
      ஹா ஹா ஹா அதுதான் எங்களுக்குத் தெரியுமே:))..

      //(தவறு இருக்கான்னு பார்க்க).//
      அடக் கடவுளே கர்ர்ர்ர்ர்:))

      //அதிராவாக இருக்குமோன்னு எண்ணம் வந்தது//
      ஹா ஹா ஹா

      //இன்னைக்கு ஸ்ரீராமுக்கு இவ்வளவு பெரிய ஐஸ் வைத்துவிட்டீங்களே, அனுஷ்கா முழுப் படம் போட்டு. அதுவும் ஒல்லியா.//
      நெடுகவும் தேடித்தேடிக் குண்டாப் போடுவேன்:)) இம்முறை ஒரு மாற்றமாக அவரைக் குளிர்விக்கலாமே எனும் நல்லெண்ணத்தில்:)) ஹா ஹா ஹா

      Delete
    9. ஹிந்திப்பட ஹீரோயின்னு சொன்னேன். எந்த வருஷத்து ஹீரோயின்னு சொல்லவில்லை!

      Delete
  19. மௌனக்காணொளி பார்த்தேன். ஒரு வர்ணனை கொடுத்திருக்கலாம். "அதோ தெரிகிறதே... அதுதான் உள்ளே செல்ல முடியாத கோட்டை... இதோ இங்கே பள்ளத்தாக்கில் தெரிகிறதே...." என்றெல்லாம் பேசியிருக்கலாம்.

    எங்கள் ஊராய் இருக்கணும்.. இந்நேரம் குடிமகன்கள் அங்கு செல்ல வழி கண்டுபிடித்து இடம்போட்டு இரவுகளில் தண்ணியடித்திருப்பார்கள்!

    ReplyDelete
    Replies
    1. //மௌனக்காணொளி பார்த்தேன்.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) இங்குள்ளோர் திரும்பிப் பார்ப்பினமெல்லோ:) ஏதோ நான் வேறு பாஷையில சூட் பண்ணுகிறேன் என்று:))..

      //இந்நேரம் குடிமகன்கள் அங்கு செல்ல வழி கண்டுபிடித்து இடம்போட்டு இரவுகளில் தண்ணியடித்திருப்பார்கள்!//
      ஹா ஹா ஹா உண்மைதான் நம் மக்கள் கண்டுபிடிப்புக்களில் வல்லவர்கள்.

      உள்ளே போகலாம் ஸ்ரீராம்.. மேலே சொல்லியிருக்கிறேன் .

      Delete
  20. கோபு அண்ணனைத் தெரியவில்லையாமா? நான் நம்ப மாட்டேன். அவர்களுக்கு அவர்மேல் பொறாமையாய் இருந்திருக்கும் அதனால் தெரியாதது போல இருந்து விட்டனர். ரஜினி அங்கிள் போப் போல... அவர்களுக்கெல்லாம் கோபு அண்ணன் வீட்டுக்குப் பக்கத்திலேயே வடைக்கடைகள் இருப்பது பொறாமை.

    ReplyDelete
    Replies
    1. //கோபு அண்ணனைத் தெரியவில்லையாமா? நான் நம்ப மாட்டேன். அவர்களுக்கு அவர்மேல் பொறாமையாய் இருந்திருக்கும்//
      ஹா ஹா ஹா அப்பூடித்தான் இருக்கும்:)).. அதுவும் திரும்பவும் கேட்டேன்.. கோயில் வீதியில் இருக்கும் கட்டிடங்களில் ஒன்றிலா இருக்கிறீங்க என.. ஆமா என்றிட்டா:)) ஹா ஹா ஹா.. எப்பூடித்தெரியாமல் போச்சு.. அதுவும் இங்கு வந்து 2 வருடங்கள்தானாமே.. கனகாலமும் இல்லை...

      Delete
  21. ஜோக்குக்கு சிரித்தேன் (நிஜம்மா) ஊசிக்குறிப்பு ரசித்தேன். அப்பப்போ படம் காட்டுங்கள் தப்பில்லே...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நன்றி எனக்கும் சிரிப்பு வந்தமையாலேயே இங்கு போட்டேன்... படங்கள் காட்டிட்டால் போச்சு.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம் நன்கு ரசிச்சுப் பார்த்திருக்கிறீங்க படங்களை.

      Delete
  22. பாடல் போன் பதிவில் கமலா ஹரிஹ்ரன் குறிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
    தேடி எடுத்து பதிவு செய்து விட்டீர்கள். பச்சை பசேல் இயற்கை கண்ணை நிறைக்கிறது.
    அத்தனை படங்களும் மிக அழகு.
    இந்த அழகு கண்டால் தூக்கம் தோன்றாதுதான். (இந்த பாட்டில் வரும் வரி)

    ReplyDelete
    Replies
    1. அதேதான் கோமதி அக்கா, கமலாக்கா பாட்டைச் சொன்னா, ஆனா அம்முலு படமும் சொன்னதால தேட ஈசியாக இருந்தது. ஹா ஹா ஹா போகும்போது.. எதுக்கு இவ்ளோ தூரம் போகிறோம் என நினைச்சேன் ஆனா போன பின்பு மிகமிக ஹப்பியாக இருந்துது.. அவ்ளோ குளிர்ச்சி கண்ணுக்கும் மனதுக்கும்.

      Delete
  23. //இதுக்குத்தான் கோபு அண்ணனை எப்பவும் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்காமல்.. கோயில் வீதியில உலாவுங்கோ அப்போதானே ஊருக்குள் தெரியும் எனச் சொன்னால் அவர் எங்கே கேட்கிறார் இதை எல்லாம் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.//

    கோயில் கைகரியத்தில் தான் மூழுமூச்சாக இருக்கிறார் கோபு சார். உங்களிடம் பேசியவர் அந்த கோவில் போக மாட்டார் போலும்.

    நாம் பேசும் மொழியை பிறர் பேசும் போதும் அதை காதில் கேட்கும் போதும் மனதுக்கு மகிழ்ச்சிதான்.
    பாரதியார் காதில் தேன் வந்து பாயுது என்றார்.

    ReplyDelete
    Replies
    1. ///உங்களிடம் பேசியவர் அந்த கோவில் போக மாட்டார் போலும்.//

      கோபு அண்ணனின் படட்த்ஹைக் காட்டிக் கேட்டிருக்கோணுமோ?:) ஹா ஹா ஹா.

      Delete
  24. ஊசிக்குறிப்பு பிறரது துன்பத்தை தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசுவது மிகவும் சிறந்த தானம் தான்.

    //யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போது
    ஒரு கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே//

    திருமூலர் சொன்னதை ஞானி சொல்லும் போது மனம் மகிழ்ச்சிதான். அனைவருடன் இன்முகமாய் பேசினாலே ஆறுதல். அதை செய்து வரும், ஏஞ்சல் பணி வாழ்க!

    அதிராவும் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. //யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே//

      உண்மைதான் இன்னுரைக்கு காசா பணமோ.. மனம்தானே முக்கியம்.. அது அஞ்சுவிடம் நிறையவே இருக்கிறது. கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒருவரின் மனக் குறையைக் கேட்டாலே போதும்... ஆறுதல் சொல்லாவிட்டால்கூடப் பறவாயில்லை.. அப்படித்தான் நானும் நினைப்பேன்.

      Delete
  25. காணொளிகள் இரண்டும் மிக அருமை. நானும் உங்களுடன் பயணம் செய்து விட்டேன் , காசு செலவு இல்லாமல்.

    பசுமை, எங்கும் பசுமை. நீங்கள் போனபோது மழை பெய்து இருந்ததோ!
    தண்ணீர் தேங்க்கி இருக்கிறதே! ஒரு இடத்தில்.

    ReplyDelete
    Replies
    1. இங்கு எப்பவும் மழைதான் கோமதி அக்கா.. மழை எனில் எப்பவாவதுதான் கொட்டும், ஆனா எப்பவும் அனுங்கிக்கொண்டே[தூறல்] இருக்கும்... அதனால நிலம் எப்பவும் ஈரமாகவே இருக்கும். பசுமைக்கு இங்கு குறைவில்லை.. எங்கும் காய்ந்த இடம் எதுவும் காணவே முடியாது.

      தண்ணீர் எங்கும் தேங்கி இல்லையே கோமதி அக்கா. கடலும் நிர்வீழ்ச்சியும்தானே தெரியுது.

      Delete
    2. காணொளியில் ஒரு பெண் போட்டோ எடுக்கிறார், அவர் காலடியில் தண்ணீர் தேங்கி சிறு குட்டை போல் இருந்தது.

      Delete
    3. ஓ கோமதி அக்கா யேஸ் யேஸ்.. அது மழைத்தண்ணிதான்...

      Delete
  26. படம் காட்டும் தொல்லைகள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. மழையும், காத்தும் இருந்தது என்று போட்டு இருப்பதை படித்தேன்.
    இங்கு நேற்று காற்றும், மழையும் ஓரு மணி நேரம் கொட்டி தீர்த்தது, அப்புறம் நின்று நிதானமாய் மழை பெய்து எல்லோரையும் ஆனந்தபடுத்தி சென்றது.

    ReplyDelete
    Replies
    1. அங்கு உங்களுக்கு மழை எனில் கொண்டாட்டம்தானே.. முக்கியமாக பறவைகளுக்குக் குதூகலமாக இருந்திருக்கும்.

      Delete
  28. //ஒருவேளை 13ம் நூற்றாண்டில் இக்காசிலில் வாழ்ந்த அரசன் வளர்த்ததாக இருக்குமோ?:)).. நான் ஜம்ப் பண்ணி பிடுங்க வெளிக்கிட்டேன்ன்ன்.. ஹையோ அது என்ன நச்சோ தெரியாது போகாதீங்கோ என திரும்பவும் ஒரு “ஜிங்கத்தை” பாய விடாமல் கட்டிப் போட்டு விட்டனர் கர்ர்ர்ர்ர்ர்:))//

    இருக்கும் இருக்கும். சுற்றுலா போகும் போது ஜிங்கம் கை , காலை கட்டி தான் போட வேண்டும் சில இடங்களில் ஆபத்து ஒளிந்து இருக்கும்.
    சுற்றுலா துறையினர் விடும் எச்சரிக்கை விஷச்செடிகள் இருக்கும் அதனால் எதையும் தொடாமல் பார்க்க வேண்டும். எப்போதும் எதிலும் கவனமாய் இருக்கவேண்டும் என்பதே!

    ஆட்டு இடையன் காப்பி கொட்டை பழத்தை சாப்பிட்டு, அவன் ஆடும் சாப்பிட்டு அதனால் புத்துணர்ச்சி கிடைத்ததால்தான் காப்பி கிடைத்தது.

    அது போல் அதிரா அந்த மலை நெல்லிகனியை சாப்பிட்டு அதியமான் ஒளவைக்கு கொடுத்தது போல் பிறருக்கும் கொடுத்து எல்லோரையும் நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழ வைத்து இருப்பார் அது போச்சு கையை கட்டியதால்.

    ReplyDelete
    Replies
    1. ///இருக்கும் இருக்கும். சுற்றுலா போகும் போது ஜிங்கம் கை , காலை கட்டி தான் போட வேண்டும் சில இடங்களில் ஆபத்து ஒளிந்து இருக்கும்.///

      ஹா ஹா ஹா...

      //சுற்றுலா துறையினர் விடும் எச்சரிக்கை விஷச்செடிகள் இருக்கும் அதனால் எதையும் தொடாமல் பார்க்க வேண்டும். எப்போதும் எதிலும் கவனமாய் இருக்கவேண்டும் என்பதே!//
      உண்மைதான் ஆழம் அறியாமல் காலை விட்டிடக்கூடாதுதான் கோமதி அக்கா.

      //ஆட்டு இடையன் காப்பி கொட்டை பழத்தை சாப்பிட்டு, அவன் ஆடும் சாப்பிட்டு அதனால் புத்துணர்ச்சி கிடைத்ததால்தான் காப்பி கிடைத்தது///
      ஓ இது புதுக்கதை எனக்கு.

      //பிறருக்கும் கொடுத்து எல்லோரையும் நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழ வைத்து இருப்பார் அது போச்சு கையை கட்டியதால்.//

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  29. ஸ்கொட்லாந்தை சுத்தி பார்க்க போறேன் ...அதிரா போட்டோ மூலமா...


    ஸ்கொட்லாந்தை சுத்தி பார்க்க போறேன் ....

    அட என்ன அழகு ...

    மலை முகட்டில் உள்ள அரண்மனை அட்டகாசம் ...மங்களூர் மற்றும் கேரளா வில் இப்படி பட்ட இடங்கள் உண்டு அதிரா...

    எங்கும் பசுமை குளிர்ச்சி பார்க்கவே கண்ணுக்கு இனிமை ...இன்று சுற்றுசுழல் தினம் அதற்கு ஏற்ற பதிவு ....

    அந்த பள்ள தாக்கும் கடற்கரையும் ....ஆஹா ஆஹா ...

    ஊசிக் குறிப்பு அட்டகாசம் ....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.. சுத்திப் பார்க்கலாம் வாங்கோ..

      //அட என்ன அழகு ...
      //
      நடந்துவரும் அதிராவைப் பார்த்துத்தானே சொல்றீங்க?:)) ஆமா ஆமா.. ஹா ஹா ஹா.

      மிக்க நன்றிகள் அனு.

      Delete
  30. இடங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

    படங்கள் தெளிவு, காணொளி அருமை.

    எனது அடுத்த படத்தின் ஸூட்டிங் அங்கு வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      //எனது அடுத்த படத்தின் ஸூட்டிங் அங்கு வைக்கலாம் என்று நினைக்கிறேன்.//
      ஸ்ரீராம் கட்சியில் இணைஞ்சோ? இல்ல சுய கட்சியாகவோ? ஹா ஹா ஹா ஹீரொயின் தேவையே என யோசிச்சு கவலைப்பட்டிடாதீங்கோ:)).. அதெல்லாம் நான் ஏற்படுத்தித் தாறேன்:)

      மிக்க நன்றிகள் கில்லர்ஜி.

      Delete
  31. கோட்டை அமைந்த மலை, படங்கள் ஆகியவை மிக அருமையா எடுத்திருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு. ஆனா பாருங்க... முழு மனதோட பாராட்டுகள் வாங்கிடக்கூடாதுன்னு ஒரு புகைப்படத்துல உங்க விரல் கேமராவை மறைக்குது. அதுனால 90 மதிப்பெண்கள்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //கோட்டை அமைந்த மலை, படங்கள் ஆகியவை மிக அருமையா எடுத்திருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.//
      நன்றி நன்றி..

      //ஆனா பாருங்க... முழு மனதோட பாராட்டுகள் வாங்கிடக்கூடாதுன்னு ஒரு புகைப்படத்துல உங்க விரல் கேமராவை மறைக்குது. அதுனால 90 மதிப்பெண்கள்தான்.///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  32. மலையில் கதவுகளோடு கூடிய பகுதி, கோட்டையிலிருந்து மலையின் கீழ் வரும் சுரங்கப் பாதையா?

    ReplyDelete
    Replies
    1. உள்பகுதி தெரியவில்லை நெல்லைத்தமிழன், கிட்டப் போக முடியவில்லை ஒரு பத்தடி தூரத்தில் வேலி போட்டிருக்கிறார்கள், ஆனா கேட்டின் உள்ளே படிகள் போல போகுது..எதிரே கடல் தெரியுது.. மலை அவ்ளோ சரிவாக இருக்கென நினைக்கிறேன்ன்.. ஏனெனில் இந்தப் பக்கம் கேட் அருகே நாம் நின்றது உயரமான இடம்.

      Delete
  33. இடங்களை ரொம்ப அழகாக வைத்திருக்கின்றனர்.

    எல்லோரும் போய்ப் பார்க்கும்படியாகவும் அழகா இருக்கு.

    சேஃப்டி பிரச்சனை உங்க ஊர்ல இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. மிக அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கிறார்கள்.. பொதுவா இங்கு காசில்களை மிக அழகாகவே பேணுகின்றனர்.

      சேஃப்டி பிரச்சனை என எதைச் சொல்றீங்க எனப் புரியவில்லை.. இது பாதை சேஃப்டி இல்லாததுதான்.. அதனாலதான் அங்கங்கு டேஞ்சர்.. நோ அக்செஸ் எனப் போட்டிருக்கின்றனர்.. குழந்தைகளைக் கூட்டிப் போவதெனில் மிகக் கவனமாகத்தான் இருக்கோணும் சில இடங்களில்.

      Delete
    2. அதாவது திடீரென யாராவது வந்து கத்தியைக் காண்பித்து களவெடுப்பது, இல்லைனா பெண்களுக்குத் தொந்தரவு தருவது என்று... அதைத்தான் சேஃப்டின்னு சொன்னேன். எங்க ஊர்ல இந்த மாதிரி பிரச்சனை ரொம்பவே உண்டு.

      இந்த மாதிரி அத்துவானத்துல பாம்பு, மற்ற விலங்குகள் போன்ற பயமும் கிடையாதா?

      Delete
    3. //அதாவது திடீரென யாராவது வந்து கத்தியைக் காண்பித்து களவெடுப்பது, இல்லைனா பெண்களுக்குத் தொந்தரவு தருவது என்று//

      இல்ல இல்ல இப்படி இங்கு மிக மிகக் குறைவு.. ஆராவது ட்றக்ஸ் எடுப்போர்தான் அப்படி எங்காவது மிக அருமையாக நடத்தி அறிவதுண்டு.. அதுவும் சில குறிப்பிடும் ஏரியாக்களில்.. அதனாலதான் வீடு சரி ஸ்கூல்கள் சரி நல்ல ஏரியாகவாகப் பார்த்து வாங்க வேண்டும் வெளிநாடுகளில்.. இங்கு சில கூடாத ஏரியாக்களிலெல்லாம் பெரிய வீடுகள் மலிவு விலையில் கிடைக்கும் ஆனா இரவில் தனியே போய்வரப் பயம் என்பினம்...

      மற்றும்படி பொது இடங்களில் எந்தப் பயமும் இல்லை.. அதுவும் கத்தி காட்டிப்பறிபதெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை இங்கு ஸ்கொட்லாந்தில்.. லண்டன் பக்கம் கொஞ்சம் இருக்கு.

      //இந்த மாதிரி அத்துவானத்துல பாம்பு, மற்ற விலங்குகள் போன்ற பயமும் கிடையாதா?//

      இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.. ஸ்கொட்லாந்தில் பாம்புகளே இல்லையாம்.. மற்றும் விஷ ஜந்துக்கள் பூச்சிகளும் இல்லையாம்.. விஷமாக எதுவும் இல்லை இங்கு.. அதிரா உட்பட ஹா ஹா ஹா.

      சின்ன வயதில் எங்கள் பிள்ளைகள் சில பற்றைபோல இடங்களில் ஓடி ஒளிச்சு விளையாடுவார்கள் எனக்கு ஊர் நினைப்பில் திக்கெண்ணும்.. அதனால விடமாட்டேன், அப்போ கணவர் சொல்வார் சே..சே.. பயப்பிடாமல் விடுங்கொ அப்படி எந்த விசப்பூச்சியும் இங்கில்லை என.. இதுவரை அறிஞ்சதில்லை.

      தேனீக்கள் மட்டுமே கடிக்கும் அபாயம்.. விலங்குகளில் அபாயம் எனில் ஓநாய்தான் இருக்கு.. அதுவும் கடிக்காது ஓடிவிடும்... கோழி வளர்த்தால் மட்டும் வந்து கடிக்குமாம் கோழியை.. எனக்கு இங்கு கோழி வளர்க்க விருப்பம், ஆனா அருகில் கொல்ஃப் கிளப் இருக்கு அதன் பின் மலையில் மான் மரை ஓநாய்[சிறு இனம்.. பூனையை விடக் கொஞ்சம் பெரிசு] உண்டு.. அது மணத்துக்கு வந்திடுமாம் என வெருட்டினார் என்னை கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதனால வளர்க்காமல் இருக்கிறேன்:).. ஆனா இதுவரை ஆரையும் எதுவும் அட்டாக் பண்ணியதாகவோ கடிச்சதாகவோ அறியவில்லை..

      இப்போ பாருங்கோ சவுத் இங்கிலண்ட்டில மசுக்குட்டி வந்திருக்கு எனக் கண்டுபிடிச்சிருக்காம் என பெரிய நியூசாகப் போடுகின்றனர்.. இனி அதை தடுக்க வழி கண்டு பிடிச்சிடுவினம்.

      Delete
    4. இதில இங்கு இன்னொன்றும் இருக்குது, ஸ்கொட்லாந்துப் பொலீஸ் சொல்லியிருக்கினம், ஏதும் ஆபத்து எனில் உடனே மொபைலில் 111 அடிச்சு ஆபத்து எனச் சொல்லிப்போட்டு/சொல்லாமலோ.. பேச முடியாமல் போனால்கூட பறவாயில்லை, ஃபோனைக் கட் பண்ணாமல் வச்சிருங்கோ நாம் ஃபோனூடாக இடம் கண்டு பிடிச்சு உடனே வந்திடுவோம் என.. இது எந்தளவுதூரம் சாத்தியமாக இருக்குதெனத் தெரியவில்லை. ஆனாலும் பொலீஸை நம்பியே இங்கு வாழ்க்கை ஓடுது.. 5 நிமிடத்துள் போலீஸ் வந்துவிடும்.

      Delete
    5. //111 அடிச்சு ஆபத்து எனச் சொல்லிப்போட்டு/சொல்லாமலோ.. பேச முடியாமல் போனால்கூட பறவாயில்லை, ஃபோனைக் கட் பண்ணாமல் வச்சிருங்கோ நாம் ஃபோனூடாக இடம் கண்டு பிடிச்சு உடனே வந்திடுவோம் என..//

      அமேசான் பிரைமில் வெள்ளைப்பூக்கள் என்று ஒரு படம் இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தேன். விவேக் ஹீரோ. அதில் சார்லிஅப்படிதான் செய்கிறார். ஆனால் வேறு எண். ஏனெனில் அவர்கள் இருப்பது யு எஸ்.

      Delete
  34. காணொளில பார்க்கும்போதுதான் தெரியுது, அந்தக் கதவு, மலையைக் குடைந்து அந்தப் பக்கம் போவதற்கான பாதை என்று. மிக அருமையா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆ கண்டு பிடிச்சிட்டீங்க.. இது ஏதும் ஆபத்து வந்தால் ராஜாவைக் காப்பாற்ற இவ்வழியே கடலினுள் தப்[இ ஓட வைப்பினம் என நினைக்கிறேன், ஏனெனில் இப்படி முன்பு ஒரு காசிலில் இருந்துது.. அதுக்கு அப்படிச் சொன்னார்கள்.

      Delete
  35. எங்க ஊரா இருந்தால், இந்நேரம் அந்த இடம் முழுவதும் கடைகளைப் போட்டு, பிளாஸ்டிக் குப்பைகளைப் போட்டு, கடல் அருகில் மீன் வறுத்து, பஜ்ஜிக் கடை போட்டு, பலூன் கடை போட்டு இடத்தை நாறடித்துவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான் கடை போட்டால் நல்ல பிஸ்னஸ் நடக்கும்.. ஒன்றும் தேவை இல்லை ஒரு ரீ கஃபே போதும்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.

      Delete
    2. நெல்லைத்தமிழன் நிறைய எழுத எனக்கு மனசு துடிக்குது ஸ்கொட்லான்ட் அவங்க விருப்பப்படி தனியா போகட்டும் அப்புறம் சொல்றேன் :)

      sample
      இங்கே .ஆறுகளில் /canal களில் மீனை பிடித்து மீண்டும் ஆற்றில் விடணும் ஒரு குறிப்பிட்ட சைசுக்கு கீழிருந்தா ..ஆனா அதைக்கூட கூடையில் போட்டு எடுத்து போறாங்க .இந்த ஆண்டு வாத்துகள் எண்ணிக்கை குறைவு ஆனால் இறகுகள் மட்டும் ஆற்றோரம் பிய்த்த நிலையில் கூடையாய் எடுத்ததாக வைல்ட் லைஃப் வார்டன்ஸ் சொன்னது :( இப்படி அழகிய நாட்டை அலங்கோலமாகிட்டாங்க

      Delete
    3. அச்சச்சோ இதனாலதான் நாங்கள் பிரிந்து போகிறோம் என்றால் விடுகினம் இல்லை கர்ர்ர்ர்:))..

      //இந்த ஆண்டு வாத்துகள் எண்ணிக்கை குறைவு ஆனால் இறகுகள் மட்டும் ஆற்றோரம் பிய்த்த நிலையில் கூடையாய் எடுத்ததாக வைல்ட் லைஃப் வார்டன்ஸ் சொன்னது//
      ஓ உண்மையா அஞ்சு?... என்ன கொடுமை.. இதெல்லாம் இந்நாட்டவர் செய்ய மாட்டினம்... வெளிநாட்டினரின் வேலையாகத்தான் இருக்கும்.

      Delete
    4. பங்களாதேசி போன்றவர்கள் செய்யக்கூடியது இது. ஒன்று செலவில்லாத உணவு, திருட்டுத்தனம்...ஹாஹா

      Delete
  36. ஓ....இதுதான் நீங்க அடிக்கடி காசிக்கு போகனும் போகனும் என சொன்ன இடமோ...அவ்வ்வ். நான் வேறென்னமோ நினைச்சிட்டன்.
    வா...வ் சூப்பரா இருக்கு படங்கள் எல்லாமே பூஸ். அழகான castle. இங்கு இயற்கையை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அதுவும் மலையும்,கடலும் சேர்ந்தால் சொல்லத்தேவையில்லை. நீங்க எடுத்திருக்கும் அத்தனை படங்களும் அழகா இருக்கு. ஒரு புறுணம் தெரியுமோ.. எனக்கு உங்க போட்டோஸ் ஒன்னுமே ஓபன் ஆகல. வீடியோதான் வந்தது. படங்கள் ஓபன் ஆகும் வரை 3வீடியோவும் பார்த்தாயிற்று. அதனால எனக்கு நுளம்பு கடிக்காது.
    மலைப்பாறை அழகு, இங்கு வீட்டில் வளர்க்கும் பூக்களை விட காட்டுப்பூக்கள்,மலைபூக்கள் அழகாக வண்ணங்களில் இருக்கும். ரசித்துக்கொண்டே இருக்கலாம். பொப்பி பூக்கள் வீட்டில் வளர்வதைக்காட்டிலும் வெளிகளில்,மலைகளில் நிறைய வரும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //ஓ....இதுதான் நீங்க அடிக்கடி காசிக்கு போகனும் போகனும் என சொன்ன இடமோ...அவ்வ்வ். நான் வேறென்னமோ நினைச்சிட்டன்//

      சே..சே..சே கொயம்பாதீங்கோ அம்முலு அது உண்மையான காசிதான் சொல்லுவேன்ன்:)) ஹா ஹா ஹா வாறீங்களோ போகலாம்?:).

      //நீங்க எடுத்திருக்கும் அத்தனை படங்களும் அழகா இருக்கு//

      ஆவ்வ்வ் மியாவும் நன்றி..

      //ஒரு புறுணம் தெரியுமோ.//
      ஹா ஹா ஹா..

      //படங்கள் ஓபன் ஆகும் வரை 3வீடியோவும் பார்த்தாயிற்று. அதனால எனக்கு நுளம்பு கடிக்காது.//
      ஹா ஹா ஹா தப்பிட்டீங்க:) வெளிநாட்டில் இருப்போருக்கு நுளம்பு இல்லை:)) மசுக்குட்டியாக்கும்:))

      Delete
  37. கண்டபடி எதையும் பிடுங்கி சாப்பிடக்கூடாது பூஸ். பார்க்க சிலது சாப்பிடசொல்லும் அளவில் அழகா இருக்கும். ஆனா கூடுதலா வேறா இருக்கும். எங்க பக்கத்தில் ஒரு வீட்டில் நடைபாதை வேலியோரம் நீங்க சொன்ன கூஸ்பெரி மாதிரி இருக்கு. நான் நினைச்சேன் அந்த வீட்டினர் வளர்க்கிறாங்க என. அதற்க்கு அவங்க இது அதில்லை. வெட்டியெறியவேணும். நேரமில்லை என்றாங்க. இப்ப அந்த செடியே இல்லை. அச்சுஅசல் கூஸ்பெரி மாதிரி. ஆனபடியால் கவனம்.

    இந்த இடத்துக்கு நல்ல வெதர் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். வானத்தில் நீலநிறமே காணலை. பார்க்கவே குளிரா இருந்திருக்கும்போல. அதுவும் காத்து என்றால கேட்கவே வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா என்னமோ தெரியவில்லை எங்கட வீட்டில் கூஸ்பெரி இருப்பதால்.. அதேபோலவே இருந்துது.. ஆனா அக்காட்டுப் பகுதியில் எப்படி வளர்ந்திருக்கும்... பிளாக்பெரீஸ் நிறைய இருந்துது அங்கு பார்க்குமிடமெல்லாம்.. படத்திலும் கொடிகள் தெரியுதெல்லோ.

      வெதர் நல்லாயிருக்கவில்லை.. தூவானமாகவே இருந்தது ஆனாலும் பெரிய குளிர் இல்லை அதனால நன்றாக இருந்துது..

      Delete
  38. படங்களில் இராவணன் வெட்டு மாதிரி இருக்கும் படமும்,சின்னநூலுழையாக ஓடை ஓடும் படமும் மிகவும் அழகா இருக்கு..👍👍டத்தில் சின்னதா குகைக்கூடாக கடல் தெரியுது. அதுக்குள்ளாக போகலாமா?. கேட் போட்டிருக்கு. இங்கு சின்ன சின்ன அழகான விடயங்கள் இப்படியானது காணலாம்.
    நல்ல பாட்டு எல்லோ.ஆனா இதுக்கு நீங்க பொருத்தம் என எழுதினது பொருந்தேல்லை. அஞ்சு சொன்னமாதிரி,அல்லது வேறு போட்டிருக்கோனும். ஆனாலும் எனக்கு இந்த பாட்டு பிடித்திருக்கூ...
    ஊசிகுறிப்பு செம.. மறதி என்பது சிலநேரம் நல்லதுதான். அது இல்லாவிட்டால் பிரச்சனைகள் அதிகமாகிவிடும்..
    முதல் பட குண்டு பூஸார் ப்யூட்டிபுல். தலைப்புக்கும்,போஸ்ட்டுக்கும் என்ன தொடர்பு ஜொள்ளுங்கோ....

    ReplyDelete
    Replies
    1. //சின்னதா குகைக்கூடாக கடல் தெரியுது. அதுக்குள்ளாக போகலாமா?. கேட் போட்டிருக்கு//
      இல்லை அந்த ஏரியா மூடப்பட்டிருக்குது.

      / ஆனாலும் எனக்கு இந்த பாட்டு பிடித்திருக்கூ...//
      எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்ச்ச்:)..

      //தலைப்புக்கும்,போஸ்ட்டுக்கும் என்ன தொடர்பு ஜொள்ளுங்கோ....//

      ஹா ஹா ஹா போஸ்ட்டில் அதிரா நிற்கிறேனெல்லோ:) அப்போ சம்பந்தம் இருக்குதுதானே ஹையோ எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கூ:))

      Delete
  39. ஆ.....மசுகுட்டியோஓஓ உங்க இடத்திலா... அம்மாடியோவ் ஊரில இம்முறை அட்டைக்கு போட்டியா இவங்க அட்டகாசம் தாங்க முடியவில்லை. மேலே மசுகுட்டி தொங்குதா என பார்க்கிறதா,கீழே அட்டை போகுதா என பார்க்கிறாதா என ஓரே பயப்பாடு. அதுவும் கம்பளி மசுக்குட்டி.. முள் முருங்கையில எக்கச்சக்கமா இருக்கும். அப்பா அந்த கொப்பையே வெட்டி நெருப்பு வைக்கிறது,கையிலோ,எங்காவது பட்டாலோ கடிக்கும்,பின் சாம்பல் பூசிவிடுவினம் நினைவில் ஞாபகம் வருது. நினைத்தாலே என்னவோ செய்யுது....

    ReplyDelete
    Replies
    1. //ஆ.....மசுகுட்டியோஓஓ உங்க இடத்திலா//
      இல்ல அம்முலு.. தெற்கு இங்கிலாந்தில் என நியூசில் வந்துது இந்தக்கிழமை.. கண்டு பிடித்திருக்கிறார்களாம்.

      //அம்மாடியோவ் ஊரில இம்முறை அட்டைக்கு போட்டியா இவங்க அட்டகாசம் தாங்க முடியவில்லை//
      ஹையோ இவற்றால்தான் ஊரை நினைக்கவே பயம்.. அதுவும் நீங்க நின்றது மழைக்காலம் எல்லோ...

      எனக்கும்தான் நினைத்தாலே கூசுது.

      எனக்குத் தெரிஞ்ச அண்ணன் ஒருவர் மோட்டபைக்கில் போகும்போது மரட்த்ஹில் இருந்து தொங்கி கண்ணுக்குள் அடிபட்ட்டு, மயிர் கண்ணில ஒட்டியாம் பின்பு தியேட்டருக்குள் கொண்டுபோய் மயிரை எடுத்தார்களாம் ஹையோ கடவுளே...

      மிக்க நன்றிகள் அம்முலு அனைத்துக்கும்.

      Delete
  40. இன்றைக்கென்ன அருமையான 'காட்டுக்குள்ளே திருவிழா' பாடலைப் போட்டிருக்கீங்க? நன்றாக ரசிக்கக்கூடிய பாடல்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஅ நன்றி நன்றி... அப்போ ஸ்ரீராமை விட அதிராதான் நல்ல நல்ல பாட்டுக்கள் போடுகிறா அப்பூடித்தானே?:)) ஹா ஹா ஹா கோர்த்து விட்டிட்டேன்ன்ன்:) என் நாரதர் வேலை ஆரம்பமாகிட்டுது:).

      Delete
    2. உண்மைதான் என்று சொல்ல எண்ணம். ஸ்ரீராம் எப்படி எடுத்துக்குவார்னு தெரியலையே. அதுனால சொல்லாமப் போறேன்.

      Delete
    3. இப்படியெல்லாம் என்னைப் பேய்க்காட்ட முடியாது!!! ஹா... ஹா... ஹா...

      Delete
    4. //நெல்லைத்தமிழன்Thursday, June 06, 2019 5:27:00 am
      உண்மைதான் என்று சொல்ல எண்ணம்.//

      ஹா ஹா ஹா :).. ஸ்ரீராம் சிரிப்பதைப் பார்த்தால் ஆமோதிக்கிறாரா இல்ல:) எங்கட உறவுக்காரப் பெண்ணைப்போல பலமாகச் சிரிச்சுப்போட்டுச் செல்கிறாரா எனப் புரியவில்லை ஹா ஹா ஹா:))

      Delete
  41. கடைசி காணொளியைப் பார்த்தா, அந்தப் படிகள் இருக்கும் இடத்திலிருந்து எதிர் ஈட்டியை எறிவதாகவும், கோட்டையின் மேல் (வலது பக்கம்) காவல் காத்துக்கொண்டிருப்பவன் நெஞ்சில் பட்டு அவன் 'ஐயோ' என்று அலறி கீழே விழுவதாகவும் தோணுது. ஒருவேளை பாகுபலி மாதிரி படங்கள் நிறைய பார்த்துட்டேனோ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா படங்கள் பார்த்திட்டு எல்லோரும் கன்னாபின்னா எனக் கதை எழுதுறீங்க:)) எனக்கு பீஸ்ஸ் வேணும்:))

      Delete
  42. ஹலோ ப்ரெண்ட்ஸ் நான் டெஸ்ட் செஞ்சி பார்த்துட்டேன் .நேத்து பாதிக்கு மேலே படம் அப்புறம் காணொளி இதெல்லாம் பாக்கல நான் ஆனாலும் எதுவும் என்னை கடிக்கல்லை .இனிமே அதிரா பூச்சாண்டிக்கு பயப்படவேணாம் யாரும் ஹாஹீ ஹாஹ்ஹா

    ReplyDelete
    Replies
    1. அல்லோ மிஸ்டர்.. நான் சொன்ன 30 நாளில ஒருநாள்தான் தப்ப்பியிருக்கிறீங்க:) இன்னும் 29 நாள் இருக்கு:)).. அதுக்குள் பார்த்து முடிச்சிடுங்கோ:)) உங்களுக்கு நுளம்பு இல்லை, மசுக்குட்டி:)) ஹா ஹா ஹா...

      Delete
  43. புகைப்படங்களையும், காணொளியையும் பார்க்க எனக்கு R L Stevension எழுதிய Kidnapped என்ற கதை நினைவுக்கு வந்தது. இந்த புத்தகம் பள்ளியில் பத்தாம் வகுப்பில் துணைப்பாடம் ஆக இருந்தது. புகைப்படங்களும் காணொளிகளும் துல்லியமாக இருக்கின்றன.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ.. கொஞ்ச நாட்கள் உங்களைக் காணவில்லையே.. நலம்தானே.. படங்கள் பார்த்ததும் வந்து கொமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றிகள்.

      Delete
  44. காட்டுக்குள்ளே திருவிழா ....

    கன்னிப்பொண்ணு (ஸ்வீட் சிக்ஸ்டீன்) மனவிழா ....

    பாடல் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. காட்டுக்குள்ளே திருவிழா ....

      கன்னிப்பொண்ணு (ஸ்வீட் சிக்ஸ்டீன்) மனவிழா .... அல்ல.

      ’மண விழா’ என்று இருக்கணும்.

      மனதுக்குப் பிடித்தமான மண விழா என்ற வகையில் ’மன விழா’ என்றும்கூட வைத்துக்கொள்ளலாம்.

      பாடல் சூப்பர்

      Delete
    2. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... பாருங்கோ உங்களை இங்கு வரவைக்க.. நாங்க குடும்பத்தோடு இண்டியன் ரெஸ்ரோரண்ட் போய்ச் சாப்பிட வேண்டிக்கிடக்கூஊஉ:)).. ஏதோ அதிரா பக்கம் வருவதற்கு நடந்து மாட்டு வண்டில்ல ஏறி பஸ்ல ஏறி பிளேனில ஏறி வரும் பில்டப்பூக் குடுக்கிறீங்க ஹா ஹா ஹா..
      நானும் உங்கட முதல் கொமெண்ட்டில குழம்பிட்டேன் அது ..ன வோ இல்ல ..ணவோ எது சரி என...:)

      Delete
  45. ஸ்ரீராம். Wednesday, June 05, 2019 2:07:00 am

    //கோபு அண்ணனைத் தெரியவில்லையாமா? நான் நம்ப மாட்டேன். அவர்களுக்கு அவர்மேல் பொறாமையாய் இருந்திருக்கும் அதனால் தெரியாதது போல இருந்து விட்டனர். ரஜினி அங்கிள் போப் போல... அவர்களுக்கெல்லாம் கோபு அண்ணன் வீட்டுக்குப் பக்கத்திலேயே வடைக்கடைகள் இருப்பது பொறாமை.//

    ஆஹா .... அதே அதே சபாபதே !

    மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள் மை டியர் ’ஸ்ரீராம் ஜெயராம் ஜய ஜய ராம் !’

    ReplyDelete
    Replies
    1. http://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20190323175020.jpg

      Delete
    2. // "இதைப்பார்த்துட்டு யாருக்கும் எதுவும் ஆகக்கூடாது... கடவுளே..." //

      ஹா.... ஹா... ஹா...

      Delete
  46. //கோயில் கைங்கர்யத்தில் தான் மூழுமூச்சாக இருக்கிறார் கோபு சார். உங்களிடம் பேசியவர் அந்த கோவில் போக மாட்டார் போலும்.// - கோமதி அரசு மேடம்.

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! தங்கள் யூகம் சரியே. இருப்பினும் ஒரு சின்ன விஷயம் சொல்லிக்கொள்கிறேன். கடவுள் எங்கும் இருக்கிறார். எதிலும் இருக்கிறார். அதனால் ஊர் ஊராக கோயில் கோயிலாகச் செல்வதெல்லாம் வெட்டி வேலை என நான் (என் சோம்பேறித்தனத்தால்) நிறுத்திக்கொண்டு விட்டேன்.

    தினமும் மாலை 5.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஏதேனும் ஒரு ஒருமணி நேரம், அந்த எல்லாக்கடவுள்களையும் என் கட்டிலுக்கே வரவழைத்து, மானசீகமாக வணங்கி ‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்’ + வேறு ஒரு சில முக்கியமான ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து, புஷ்பம், பழம், துளசி, தீர்த்தம், பானகம் முதலியன படைத்து, எல்லோருடைய க்ஷேமங்களுக்காகவும் வேண்டிக்கொள்வதோடு சரி என வைத்துக்கொண்டுள்ளேன். :)

    ReplyDelete
    Replies
    1. உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

      வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

      தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

      கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு//

      திருமூலர் , பூசலார் எல்லாம் மனதில் வழிபட்டார்கள்.
      பெரிய ஞானிகளுக்கே கிட்டும் இப்பேறூ. நீங்களும் அது போல் இறைவனை கட்டிலுக்கே வரவழைத்து எல்லோருடைய நலத்துக்கும் வேண்டிக் கொள்வது நல்ல விஷ்யம். தொடருங்கள்.
      வாழ்த்துக்கள்.

      Delete
    2. //திருமூலர், பூசலார் எல்லாம் மனதில் வழிபட்டார்கள். பெரிய ஞானிகளுக்கே கிட்டும் இப்பேறூ. நீங்களும் அது போல் இறைவனை கட்டிலுக்கே வரவழைத்து எல்லோருடைய நலத்துக்கும் வேண்டிக் கொள்வது நல்ல விஷ்யம். தொடருங்கள். வாழ்த்துக்கள். //

      திருமூலர், பூசலார் எல்லாம் எப்பேர்ப்பட்ட மஹான்கள். அவர்களைப்போன்ற உன்னதமான நிலையை அடைய மிக மிகச் சாதாரணமான + ஆசாபாசங்களுக்கு அடிமையாகிப்போய் விட்ட அடியேனுக்கு, மேலும் பல்லாண்டுகள் ஆகலாம். இந்த ஜன்மாவே போதாமலும்கூட இருக்கலாம்.

      இறைவன் நம்மிடம், உள்ளத்தூய்மை + நம்பிக்கை + ஆழ்ந்த பக்தி தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பது இல்லை. மனதை ஒருநிலைப்படுத்தி, வேறு சிந்தனைகள் ஏதுமின்றி, பகவானிடம் பக்தி செலுத்தி, டோட்டல் சரணாகதி அடைந்து விட்டால், மற்ற அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார்.

      இதில் என் தற்போதைய முயற்சி ஒரு KG-1 படிக்கும் குழந்தையைப்போன்ற ஆரம்ப நிலை மட்டுமே. எந்த ஒரு செயலும் நம்மால் நடைபெறுவது இல்லை என்பது இப்போதுதான் நன்கு புரிய ஆரம்பித்துள்ளது.

      சமீபத்தில் இது சம்பந்தமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்லியிருந்த ஓர் அருமையான செய்தி படித்தேன். அதனைத் தேடிக் கண்டுபிடித்து, ஒருவேளை கிடைத்தால், இங்கேயே கீழே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

      நட்புடன் கோபு

      Delete
    3. ’படித்ததில் பிடித்தது’

      வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர்:-
      ======================================================

      "நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்; ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை. எது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள். உங்கள் உடலே உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!.

      உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்?. உடலை விடுங்கள். உங்களின் தலை முடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத்தான் பிடிக்கும்?. முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!.

      உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?. தெரியாது. உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்?. அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?. இல்லையே. இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப்பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.

      மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது! மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது! உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது!. நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கின்றன! நீங்கள்தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப்பிடிப்பவரோ!. உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை!

      எதுவுமே உங்கள் பொறுப்பில் இல்லை.

      அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை!. அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அதுவே அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.

      உங்களுக்கு ஏன் வீண் கவலை?!

      எதுவும் உங்கள் கையில் இல்லை. அமைதியாய் இருங்கள்.

      "நான்" என எண்ணி ஒரு போதும் பயன் இல்லை.

      அகம் பிரம்மம்🙏

      Delete
    4. ////தினமும் மாலை 5.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஏதேனும் ஒரு ஒருமணி நேரம், அந்த எல்லாக்கடவுள்களையும் என் கட்டிலுக்கே வரவழைத்து, மானசீகமாக வணங்கி///

      ஆஆஆஆஆஆஆ கோபு அண்ணன் நான் இதை நம்ப மாட்டேனாக்கும்:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஉ:)).. கோயிலுக்குப் போய், அங்கு கும்பிடாவிட்டாலும் உடம்பை அங்கு அசைச்சுச் சென்ற பலனாவது போனமைக்காக கிடைக்கும்:))

      ஆனா நீங்க கட்டிலில் இருந்தபடியே கண்ணை மூடிக்கொண்டு கடவுளைத்தான் நினைக்கிறீங்களோ இல்ல.. குண்டா சுவீட்ஸ் முடிஞ்சுதே..நெல்லைத்தமிழன் ஸ்வாமீ[உங்கட முறையில ஜொன்னேன்] இனி எப்போ வாங்கி வருவாரோ:)).. இனி அடுத்து வீட்டுக்கு யார் வருவினம் நல்ல நல்ல செல்வியா:) எடுத்து போஸ்ட் போடோணும்:)) எண்டு நினைக்கிறீங்களோ ஆரு கண்டா:) எல்லாம் அந்த உச்சிப் பிள்ளையாருக்கே வெளிச்சம்:)) ஹா ஹா ஹா

      Delete
    5. காஞ்சி மகா பெரியவாவின் மொழிகள் மிக மிக அருமை.

      Delete
    6. காஞ்சி மகா பெரியவாவின் (தெய்வத்தின் குரல்) மொழி அருமை.
      கோபுரம் தாங்கும் பொம்மைகள் என்று சொல்லுவார்கள்.
      என்னால், நம்மால் என்று நினைப்பது வீண்தான் எல்லாம் அவன் செயல்.
      அவன் இன்றி அணுவும் அசையாது.
      ஆட்டிவிக்கிறார், ஆடுகிறோம்.

      Delete
  47. // அந்தச் சோடியில் கணவர் தஞ்சாவூராம்.. எனக்கு தமிழ்நாடு முழுக்கலும் தெரிஞ்சமாதிரி ஒரு பில்டப்பூக் குடுக்க வெளிக்கிட்டு:).. துரை அண்ணனை விசாரிக்கலாம் எனில்.. அவரின் சரியான இடம் தெரியாமையால்:)).. சரி போகட்டும் என மனைவியைக் கேட்டபோது அவ சொன்னா “திருச்சி” என... ஆஆஆஆஆஆ திருச்சியில் எவடம் என்றேன்.. உச்சிப் பிள்ளையார் கோயில் வீதியிலதான் எங்கட வீடு என்றா.... ஆஆஆஆஆ கிட்ட நெருங்கிட்டா, நான் கதிரை நுனிக்கே வந்திட்டேன்:).. எங்கட “குண்டுக் கோபு அண்ணன்” :) இப்போ மாட்டி என நினைச்சுக் கேட்டேன்ன்.. முழுப்பெயர் சொல்லி... இல்ல எனக்குத் தெரியாது என்றிட்டா:)).. சே..சே.. சேம் ஆகிப்போச்ச்ச்ச்:))..//

    அந்த உச்சிப்பிள்ளையார் கோயில் வீதிப் பெண்ணை தஞ்சாவூர் காரருக்கு (முழுக்க முழுக்க என் செலவிலேயே) கல்யாணம் கட்டிக்கொடுத்ததே நானாகத்தான் இருக்கும். புருஷனுக்கு எதிரில் இதனை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்ல அந்தப்பொண்ணு வெட்கப்பட்டிருக்கும்.

    அந்தப் பெண்ணின் பெயர், விலாசம் முதலியன கேட்டு வாங்கியிருந்தீர்களானால் மேற்கொண்டு நாம் பஞ்சாயத்து செய்து உண்மையைக் கண்டு அறிந்திருக்கலாம்.

    சரி விடுங்கோ ..... இதுபோல எத்தனையோ பெண்களுக்கு நானே மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து கொடுத்துள்ளேன். புதுமண தம்பதியினர் எல்லோரும் ஆங்காங்கே ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு இருக்கட்டும். நமக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பெண்களில், உங்கள் வாழ்க்கையில் வந்த "அந்த" இரண்டு பெண்களும் உண்டா? ஒன்றை நீங்கள் ஆசைப்பட, இன்னொன்று உங்களை ஆசைப்பட............. இரண்டுபேர் நேரமும் முழுமையாக வீணாகும்படி, சொந்தத்திலேயே நீங்கள் திருமணம் செய்துகொள்ள....

      Delete
    2. சும்மா இருங்கோ ஸ்வாமீ. அவர்கள் இருவரும் மிகவும் நல்ல பெண்கள். [ஏதோவொரு விதத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் நல்லவர்களாக மட்டுமே இருக்க முடியும் என்பது ஒரு எழுதப்படாத விசித்திரமான விதியாகும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்].

      அவர்கள் இருவரும், அவரவர்கள் தலைவிதிப்படி, திருமணம் செய்துகொண்டு, செளக்யமாகவும் சந்தோஷமாகவும்தான் இருந்து வருகிறார்கள். அவர்களுக்காகவும், உங்களுக்காகவும், மற்ற எல்லோருக்காகவும் சேர்த்து நான்தான் தினமும் பிரார்த்தித்து வருகிறேனே. அதனால் யாருக்கும் எந்தக் கஷ்டமும் வரவே வராது, ஸ்வாமீஈஈஈஈ.

      என் கதையை (அதாவது நான் எழுதியதொரு கதையை) நான் மறந்தாலும் நீர் மறக்க மாட்டீர் போலிருக்குது. சபாஷ். மிக்க நன்றி.

      ‘மறக்க மனம் கூடுதில்லையே’ http://gopu1949.blogspot.com/2014/03/vgk-10.html

      Delete
    3. //அந்த உச்சிப்பிள்ளையார் கோயில் வீதிப் பெண்ணை தஞ்சாவூர் காரருக்கு (முழுக்க முழுக்க என் செலவிலேயே) கல்யாணம் கட்டிக்கொடுத்ததே நானாகத்தான் இருக்கும். //

      அந்தப் பெண் சொன்னா சொன்னா:)) தங்கட கல்யாணம் முடிச்சு வச்சவரைத்தான் தெடிக்கொண்டிருக்கிறேனென ஹா ஹா ஹா எதுக்கும் சேஃப் ஆ இருங்கோ கோபு அண்ணன்:)..

      //புதுமண தம்பதியினர் எல்லோரும் ஆங்காங்கே ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு இருக்கட்டும். நமக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்?//
      இவர்கள் புதுமணத்தம்பதிகள் அல்ல. 12 வயதில ஒரு மகன்.. அவரை மெடிசின் படிக்க வைக்க விருப்பமாம் அதனால எப்படிப் படிப்பிக்கோணும் என்ன என்ன எல்லாம் ரெடி பண்ணோனும் என ஒரே ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தா.

      Delete
    4. @நெல்லைத்தமிழன்
      ///ஒன்றை நீங்கள் ஆசைப்பட, இன்னொன்று உங்களை ஆசைப்பட............. இரண்டுபேர் நேரமும் முழுமையாக வீணாகும்படி, சொந்தத்திலேயே நீங்கள் திருமணம் செய்துகொள்ள...///

      ஹா ஹா ஹா சும்மா சிவனே என தன் பாட்ட்டில் இருந்த கோபு அண்ணனை ஊதிக் கெடுத்திட்டீங்க:)) ஹையோ இனி என்னாகுமோ:)) நினைத்தாலே நடுங்குது:)) ஹா ஹா ஹா

      Delete
  48. பதிவும், படங்களும், ஊசிக்குறிப்பு போன்றவைகளும் வழக்கம்போல அழகோ அழகாகத்தான் உள்ளன.

    இந்த இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரில் போய் வந்ததாகச் சொல்வதுதான் நம்பும்படியாகவே இல்லை. எனினும் ஓக்கே.

    எங்கிட்டயேவாஆஆஆஆஆஆ. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! :)

    ReplyDelete
    Replies
    1. ///இந்த இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரில் போய் வந்ததாகச் சொல்வதுதான் நம்பும்படியாகவே இல்லை///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா நீங்க நம்ப மாட்டீங்க எனத் தெரிஞ்சுதானே அதிரா கடற்கரையில நிற்கும் படம் போட்டிருக்கிறேன்ன் யூஊஊஊஊம் பண்ணிப் பாருங்கோ:))

      Delete
  49. //அதிராவின் படம் காட்டும் தொல்லைகள்:).. இப்படி அடிக்கடி டொடரும்:) நன்றி_()_//

    என்னைப்போன்ற பெரும்பாலானவர்கள் ’படம் காட்டும் அதிரா’வைப் பார்க்கத்தான் இங்கு வருகை தருகிறார்கள். யாரும் மேட்டர்களைப் படிப்பதே இல்லையாக்கும். அதனால் தொடர்ந்து இதுபோலப் படம் காட்டிக்கொண்டே இருங்கோ. வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கோபு அண்ணன் அனைத்துக்கும்...
      அமைதியாக இருந்த உங்களை கொஞ்சம் அங்கும் இங்கும் ஓட வைத்து, 2 கிலோவாவது:) மெலியப் பண்ணிய பெருமை அதிராவையே சேரும்:)) மிக்க நன்றி.

      Delete
  50. https://cdn.images.express.co.uk/img/dynamic/1/590x/secondary/Larry-the-cat-Donald-Trump-1900023.webp?r=1559655282088

    https://metro.co.uk/2019/06/04/larry-cat-gets-way-donald-trumps-visit-downing-street-9808651/

    haahaaa :)

    ReplyDelete
  51. வணக்கம் அதிரா சகோதரி

    பசுமையான மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் என அனைத்தும் மனதையும், கண்ணையும், குளிர்வித்த இடங்கள். பார்க்க பார்க்க இங்கெல்லாம் எப்போது போகப் போகிறோம் என பேராசை வருகிறது. முதல் படத்திலிருந்து இறுதி வரை அலுப்பு தட்டாத இடங்கள். காணொளியும் மிக நன்றாக இருக்கின்றன. மிகவும் அழகாக படங்களையும், காணொளிகளையும் எடுத்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

    முதலில் கண்ணாடி அணியும் பூசார் மிக அழகு. அவர் அணிந்து களையும் ஸ்டைல் மிக அழகாக உள்ளது.

    ஊசிக்குறிப்பின் அர்த்தம் மிகுந்த வாசகம் மனதை நிறைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. பாராட்டுக்கள் என் மனதைக் குளிர்விக்கிறது அந்தக் காசிலைப்போல:)... மிக்க நன்றிகள்.

      Delete
  52. வணக்கம் அதிரா சகோதரி

    மலையின் மேல் ஜாலியாக பறக்கும் பறவைகள், மலையில் குட்டியாய் ஒடை மாதிரி ஒரு நீர் வீழ்ச்சி. மலைப்பாறைகள். கீழே இறங்கும் படிகள், வளைந்து செல்லும் பாதை, மலைக்கு அழைத்துச் செல்லும் படிகள்.பிங்க் பூக்கள், என மலை முழுக்க நிறைவாய் சுற்றிக் காண்பித்தமைக்கு நன்றிகள்.

    அந்த கடல் மிக அழகு.அந்த அழகு காணொளியில் அலையுடன் சேர்ந்து கொஞ்சுகிறது. கடற்கரைப்பாதையில் அஞ்சுவுக்காக காத்திருப்பது எங்கள் அழகான அதிராதான் என சந்தேகத்துக்கு இடமின்றி நினைக்கிறேன்..!

    ஜோக் மிகவும் ரசித்தேன்.

    ஊசி இணைப்பில் பார்வையில் பட்ட வித்தியாசமான அறிமுகங்கள். சகோ கோபு அண்ணனை நினைவுக்கு கொண்டு வந்து அவரை சிறப்பித்த தங்களின் பாணி மிக அருமை. அவரை அனைவரும் மறந்தால்தானே நினைவுக்கு கொண்டு வர.. திருச்சி மலைக் கோட்டை என்றதுமே எனக்கு நினைவுக்கு வந்தவர்கள். சகோதரர் கோபு சார் அவர்களும், சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுந்தான்...

    நேற்றிரவு பதிவை படிக்கவில்லையானால், நுளம்பு சுற்றுமென கூறியிருக்கிறீர்கள். எனக்கு இன்று பயங்கர பிஸி. இன்று முழுவதும் என்னுடனே ஓய்வின்றி சுற்றிய நுளம்புகள் போர் அடித்து சற்று உறங்கியதும், நான் சோம்பல்படாது பதிவை படித்து கருத்திட்டு விட்டேன். நாளை கண் விழித்ததும் விபரம் அறிந்த நுளம்புகள் என்னைச் சுற்றாது பறந்து போய் விடும் அல்லவா?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. aனைத்தையும் அணுவணுவாக ரசித்திருக்கிறீங்க அதுக்கு நன்றி.

      //எங்கள் [[///அழகான///]] அதிராதான் என சந்தேகத்துக்கு இடமின்றி நினைக்கிறேன்..! ///

      ஆஆஆஆஆஆ அடைப்புக் குறிக்குள் இருப்பதை இன்னும் கொஞ்சம் சத்தமாகச் சொல்லுங்கோ கமலாக்கா:)) கிழக்கால மேற்கால எல்லாம் புகை வரட்டும்:)) நான் நிறைய மோர் கரைச்சு வச்சுவிட்டே போஸ்ட் போட்டேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

      //சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுந்தான்...//
      எனக்கிது தெரியாதே.. கீசாக்கா ஸ்ரீரங்கம் எனத்தான் நினைச்சுக் கொண்டிருக்கிறேன்.

      //நாளை கண் விழித்ததும் விபரம் அறிந்த நுளம்புகள் என்னைச் சுற்றாது பறந்து போய் விடும் அல்லவா?///

      ஓம் அநேகமாக கீசாக்கா வீட்டுக்குப் போய்விடும்:)) ஏனெனில் அவ வீடியோ பார்த்தமாதிரித் தெரியேல்லை:)) ஹா ஹா ஹா.

      Delete
  53. வணக்கம் அதிரா சகோதரி

    பசுமை, பசுமையான அழகிய படங்கள் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன். இந்த தொந்தரவுகள் எங்களை ஒன்றும் செய்யாது. எனவே தாங்களும் மீண்டும் பசுமையான படங்களால், எங்களை திருப்திப்படுத்துங்கள்.அதையே நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

    முகப்பு பாடல் மிக அருமையாக இருந்தது பி. சுசிலா அவர்களின் இனிமையான குரலும், சரோஜாதேவி அவர்களின் அழகும், நடிப்பும், அப்பாடலை மேலும் இனிமையாக்குகின்றன.

    என் பெயரையும், சகோதரி பிரியசகி பெயரையும், அங்கு நினைவுபடுத்தி குறிப்பிட்டிருந்தமைக்கு மிக்க நன்றிகள்.
    சென்ற பதிவின் போது அப்பாடல் இடம்பெற்ற படத்தின் பெயரைச்சொல்லி அப்பாடல் நன்றாக இருக்குமென பரிந்துரைத்த சகோதரி பிரியசகி அவர்களுக்கும் என் நன்றிகள். கேட்டு மகிழ்ந்தேன். எங்கள் விருப்பபடி பதிவுக் கேற்ற பாடலை பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  54. முகப்புப்பாடல் மிக அருமை.. நீங்க ஆரம்பிக்க அம்முலு அதை எடுக்க வழி சொன்னா.. அதனால என் புளொக்கில் அபடல் பிறந்தது.. மிக்க நன்றிகள் கமலாக்கா...

    ReplyDelete
  55. கீதாவுக்கு ஆராவது தகவல் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்.. தனக்குச் சொல்லோணும் எனச் சொன்னவ போனமுறை, ஆனா வருவா என நினைச்சென்.. காணவில்லைப்போலும் என் போஸ்ட்டை.

    அனைவருக்கும் மிக்க நன்றிகள்... Good Night....

    [im] https://i.pinimg.com/originals/e5/3f/3f/e53f3f26a568a4f8ec626804054c77c1.gif[/im]

    ReplyDelete
    Replies
    1. கீதாரெங்கன் ஊருக்கு போய் இருக்கிறார்கள். மச்சினர் பெண் திருமண வேலை.
      பிஸி பிஸி.

      Delete
    2. ஓ அப்படியோ .. மிக்க நன்றி கோமதி அக்கா தகவல் சொன்னமைக்கு. நான் இதுக்கு ஸ்ரீராம் பதில் தருவார் என நினைச்சேன் அவர் காக்கா போயிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெரி பாட்ட்ட்ட்ட்:)) ஹா ஹா ஹா.

      Delete
    3. எனக்குத் தெரிந்திருந்தால் நான் சொல்லியிருப்பேன்... கர்ர்ர்ர்.....!!

      Delete
  56. அழகான ஒரு வரவேற்புடன்
    அழகான பதிவு, உங்கள் ஊரை
    ரசித்தேன், புகைப்படங்கள் கண்ணை
    மட்டுமல்ல மனதையும் கவர்ந்தது...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூந்தோட்டக் கவிதைக்காரன் வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  57. ஹலோவ் மியாவ் .படங்கள் இவ்வளவு துல்லிய அழகான இயற்கை காட்சிகளை பகிரும்போது வாட்டர் மார்க் செய்யுங்க மற்றும் மூலையில் எண்களை குறிப்பிடுங்க .இதில் ஒரு படம் காலண்டர் போடும் அளவு அழகு ரிவர்ஸ் ஆர்டரில் வரும்போது பார்த்தோமா இஇல்லையானு என்னைப்போன்ற கு கு ளுக்கு தெரியாது :)))

    ReplyDelete
    Replies
    1. அதிரா.... ஓவர் ஐஸ் வைக்கிறவங்களை நம்பாதீங்க..... ரொம்ப ஆபத்து.

      ஒருவேளை டேவடை கிச்சன் தூசு தட்டப்படுதா? இல்லை, ஆடு, ஓநாய்க்கு, தேங்காய் எண்ணெய் தடவி, தலைவாரி பூச்சூடி டிரெஸ் போட்டுவிட்டேன் என்று ஏதேனும் புது இடுகை எழுதப்போறாங்களா?

      Delete
    2. ///இயற்கை காட்சிகளை பகிரும்போது வாட்டர் மார்க் செய்யுங்க மற்றும் மூலையில் எண்களை குறிப்பிடுங்க //

      அது உண்மைதான் அஞ்சு.. ஒவ்வொன்றாக மினக்கெட நிறைய நேரம் தேவை என்பதாலதான் பேசாமல் போட்டு விட்டிட்டேன்... போஸ்ட் போடவே பொறுமையாக இருக்க நேரம் வருகுதில்லையே...
      ======================================================================
      அது வேறொன்றுமில்லை நெல்லைத்தமிழன்:)).. மோர் குடுத்தனான் எல்லோ அந்த மோர் குடிக்கும் வரை நல்லதா 4 வரி புளுக வரேல்லையாக்கும் அவவுக்கு:)).. அதனாலதான் மோர் குடுத்தேன்ன்.. இப்போ கூலானதும்தான் இந்த எழுத்து ஹா ஹா ஹா:))..

      //ஆடு, ஓநாய்க்கு, தேங்காய் எண்ணெய் தடவி, தலைவாரி பூச்சூடி டிரெஸ் போட்டுவிட்டேன் என்று ஏதேனும் புது இடுகை எழுதப்போறாங்களா?//

      ஹா ஹா ஹா இது வந்தாலும் வரலாம்:))

      Delete
  58. ஆகா...! ம்ம்ம்ம்மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
  59. புகைப்படங்கள் எல்லாமே அழகு! இருந்தாலும் அந்த முதல் புகைப்படம்- அந்தக்குன்றின் மேலுள்ள அரண்மணை பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது!

    அதிரா! நானும் தஞ்சாவூர் தான்! அடுத்த முறை என்னையும் நினைத்துக்கொள்ளுங்கள்!

    அப்புறம் மேலே மிக அழகான அருமையான பாட்டை போட்டிருப்பதற்கு ஒரு தாங்க்ஸ்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. தூர இருந்து பார்க்க பயமாகத்தான் இருந்தது.. நான் முதலில் கிட்டப்போக வேண்டாம்ம் பாதாளம்போல இருக்கு திரும்பிடலாம் என்றேன்ன்.. இல்லைப் பயமில்லை எல்லோரும் கிட்டப் போகிறார்கள்.. நாங்களும் போகோணும் எனச் சொல்லிக் கூட்டிப் போனார்கள்.. நடக்கையில் பயம் தெரியவில்லை.

      Delete
    2. பாதியில் கை மாறி பப்ளிஸ் தட்டி விட்டிட்டேன் ஹா ஹா.. ஓ மனோ அக்காவும் தஞ்சாவூர்ர் தெரியுமெனக்கு... ஹா ஹா ஹா.. ஆனா பொதுவாகத்தான் எல்லோரையும் தெரியும்.. கோபு அண்ணனை மட்டும் தான் குறிப்பா இவ்விடம் எனச் சொல்லிக் கேட்குமளாவு தெரியும்:))..

      ஓ பாட்டை இம்முறை எல்லோரும் ரசித்தது மகிழ்ச்சி.. நன்றி .. மனோ அக்கா.

      Delete
  60. உங்க தங்கச்சி வந்திருக்கேன் (ஹிஹிஹிஹி) ஆனா லேட்டா....பல தளங்கள் ஓப்பன் ஆவதில்லை அதிரா பார்த்து பார்த்துதான் ஓப்பன் செய்ய வேண்டியிருக்கு. உங்கள் தளம் இப்போதும் நமேலே சைடில் எல்லாம் கலரே இல்லாமல், வீடியோ போட்டிருக்கீங்களோ மேலே? ஆனால் எனக்கு வரவில்லை வெரும் வெள்ளையாகப் பதிவு நல்லகாலம் அதன் படங்கள் கலரோடு வருது வருது ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. உங்களுக்கு யாராவது தூது விடட்டும்.. ஏனெனில் இப்போஸ்ட்டை நீங்க மிஸ்பண்ண விரும்ப மாட்டீங்க என நினைச்சே.. கொமெண்ட்டில் சொல்லியிருக்கிறேன் மேலே..

      //உங்க தங்கச்சி வந்திருக்கேன்//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மீ ரொமப உசாராக்கும்:)) அதனாலதான் நேக்கு இங்கின தங்கை ஆரும் இலை எனப் போட்டு விட்டேன் ஹா ஹா ஹா...

      நெற் ஸ்பீட் குறைவாக இருக்கும்போது கலரில்லாமல் கறுப்பாக வரும் கீதா..

      Delete
  61. ஆமாம் அதிரா ஸ்காட்லந்த் பற்றி என் சிஸ்டர் இன் லா சொல்லிருக்காங்க. அவங்க பயணம் செஞ்சுருக்காங்க...க்ரீன் க்ரீன் க்ரீன்...பழைய பேலஸ் கட்டிடங்கள் என்று சொல்லிருக்காங்க ரொம்ப நீட்டா இருக்கும்னும் படம் எல்லாம் காட்டினாங்க...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.. சுவிட்சலாண்ட்.. நியூசிலாண்ட், ஸ்கொட்லாண்ட் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு மாதிரி அழகு என்பார்கள்..
      ஊசிக்குறிப்பு:
      அஞ்சுவின் இடம் அப்பூடி இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ கீதா..

      Delete
  62. பூஸார் படம் அழகு என்றால் அந்த மலை முதல் படம் செம செம அட்டகாசம். சீகல்ஸ் தெரியுது அதிரா...படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்...ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு. எனக்கு இது போன்ற இடங்கள் மிகவும் பிடிக்கும். இயற்கை சூழ் இடங்களுக்குப் பயணிப்பது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பார்த்தீங்களோ எவ்ளோ உயரத்துக்கு சீகல் பறக்குது.. இயற்கை சூழலில் அமைதியும் இருக்கும்..

      Delete
  63. அதிரா இரண்டு மூன்றாவதுபடங்கள் வாவ்! பச்சை பசேல்...ஆடுகள் மேய்வது தெரியுதே!!தெரியுதே! எங்க ஊருக்கு இந்தப் பச்சைய அனுப்புங்கனு சொல்லவே மாட்டேனே...இதைப் பார்த்தா பலருக்கும் கை ஊறும்...வெட்டிச் சாய்த்து சிமென்ட் தீப்பெட்டியாக்கிடுவாங்க...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    மிக மிக ரசித்தேன் அதிரா...

    கீதா

    ReplyDelete
  64. அந்த பச்சைப் படங்கள் பார்த்ததும் ஆஹா வாவ்! ஏற்கனவே என் சிஸ்டர் இன் லா காட்டிய படங்களைப் பார்த்திருந்தாலும்....மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தோன்றும் இடங்கள்.

    எங்க ஊருக்கு உங்க பச்சைய கொஞ்சம் அனுப்புங்கன்னு ஜொல்லவே மாட்டேனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அனுப்பினீங்கனு வையுங்க...எங்க ஊர்ல ஒரு சிலருக்குக் கை ஊறும். உடனே இந்தப் பச்சைய எல்லாம் அழிச்சுப் போட்டு சிமென்ட் தீப்பெட்டிகள் பட்டிடுவாங்க....அதனால அதெல்லாம் உங்க ஊர்லியே இருக்கட்டும்!!!! இப்படி அப்பப்ப போட்டு எங்களை கூல் செய்யுங்க ஹா ஹா ஹா ஹா
    ஆடுகள் மேய்வது தெரியுதே...

    இந்தப் பச்சைய பார்த்ததும் நீங்க புல்வெளி புல்வெளி பாட்டு, பச்சை நிறமே நு பாடலியா அதிரா...!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்னும் நிறைய பாடல்கள் இருக்கு...
    அந்த காசிலின் கீழ் மலைஅடிவாரம் ஹையோ செம செம...பாருங்க இந்த கமென்ட் அடித்து பப்ளிஷ் பண்ணும் போது கரன்ட் போச்சு..அது வந்துச்சானு தெரியலை...ஸோ..இது...

    படங்களை மிக மிக ரசித்தேன் அதிரா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ கரண்டு கட்டானதுதான் காரணமோ அதுதான் யோசித்தேன் ஒரே விசயத்தை திரும்ப சொல்றீங்களே என... கவனம் இப்படி அடிக்கடி கரண்ட் போனால்.. எலக்றிக்,எலக்ரோனிக் பொருட்கள் பழுதாகிடுமெல்லோ..

      Delete
  65. அதிரா ஆஆஆஆஆ ஹா அந்தப் பள்ளத்தாக்கில் இறங்குவது போன்ற அந்தப் படம் தூரத்தில் கேசில் ஹோஓஓஓஓஓஓஓஓஓஓ வாவ்!! அழகான படம் செமையா இருக்கு....ரசித்து முடியலை...மீக்கு....சூபரா வந்திருக்கு படங்கள் அதிரா...

    படிகள் ஏறுவது அப்படமும் ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ கண்கள் மனம் எல்லாம் சொக்கி நிக்குதூஊஊஊஊஊஊஉ...

    அதைப் பார்த்து வியந்து நிற்கையில் அடுத்து கீழே கடலுக்குச் செல்லும் பாதை ஹையோ போங்க அதிரா இப்பூடி எல்லாமும் ஒரே பதிவுல போட்டு இங்கனயே நிக்க வைச்சா நான் எப்பூடி மத்த பதிவுகளுக்குப் போறதாம்?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா....ஸ்பெல் பௌன்ட்!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எனக்குத் தெரியும் கீதா.. நீங்க நன்கு அசிபீங்களென.. அதனாலதான் தேடினேன் இம்முறை... உண்மைதான், இது கொஞ்சம் உள் ரோட்டால் எல்லாம் கார் ஓடியது.. நான் சொன்னேன் எதுக்கு இவ்ளோ கஸ்டப்படுகிறோம் வேண்டம் திரும்பிடலாம் என.. இல்லை போவோம் என விடாமல் போனதால்.. போனதன் பலன்.. நானே திரும்ப சொன்னேன்.. வந்தது எவ்ளோ நல்லதாகிப்போச்சுது எவ்ளோ அழகு என...

      Delete
  66. அடுத்தாப்ல இன்னும் அந்தப் படிகள் ஏறி இறங்கி போகும் பாதை ஹியயோ...அங்கேயே நிக்க வைச்சுட்டீகளே.....என் சிஸ்டர் இன் லா இந்த இடத்தின் படங்களைக் காட்டினாலும் இப்படி ஆங்கிள் ஆங்கிளாக எதுவும் இல்லை ஜஸ்ட் அந்த கேசில், கொஞ்சம் பச்சை அம்புட்டுத்தான். ஆனா நீங்க எங்களுக்காக இப்படி வளைத்து வளைத்து எடுத்துப் போட்டதுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தீராது அதிரா. நேச்சர் நேச்சர்தான். சூப்பர். உங்கள் படங்களைப்ப் பார்த்ததும் மீயும் என் படங்களைப் போட்டே ஆகணும் என்று உத்வேகம் வந்திருச்சு... என் வைசாக் ஃபோட்டோஸ்...போடுறேன்...போடுறேன்....இந்தக் கணினி ஒத்துழைக்க வேண்டுமே...படங்களைக் கண்டாலே ஹேங்க் ஆகுது இது...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் படங்களைப்ப் பார்த்ததும் மீயும் என் படங்களைப் போட்டே ஆகணும் என்று உத்வேகம் வந்திருச்சு... என் வைசாக் ஃபோட்டோஸ்...போடுறேன்...போடுறேன்.//
      போடுங்கோ போடுங்கோ ஆனா எங்கட ஹொலிடே நெருங்குதே:))..

      //படங்களைக் கண்டாலே ஹேங்க் ஆகுது இது//
      நெல்லைத்தமிழனிடம் மந்திரிச்ச தேசிக்காய் இருக்குதெல்லோ:).. பாயாசம் காச்சிக் குடுத்திட்டு, ஒன்று கேட்டு வாங்கித் தொங்க விடுங்கோ ஸ்கிரீனில:) ஹா ஹா ஹா..

      Delete
  67. இங்கு ஸ்கொட்லாந்தில் இருக்கும் அழகின் சீக்ரெட் என்னவெனில்.. காடு, வயல்வெளிகளில்கூட புல் பூண்டுகள் எல்லாம் விதம் விதமாகப் பூத்திருக்கும் ஏதோ பூங்கா போலவே இருக்கும் கண்ணுக்கு..//

    அழகு என்றால் அழகு!!! அதிரா...பார்த்து பார்த்து முடியலை..

    இங்கும் இப்படி உண்டு அதிரா இந்தியாவிலும் அழகிய பிரதேசங்கள் நிறைய உண்டு. வெங்கட்ஜியின் ஃபோட்டோக்கள் சொல்லும். வட இந்திய மாநிலங்களில். தென்னிந்தியாவிலும் உண்டு ஆனால் நான் போன இடங்களைப் பிடிக்க என்னிடம் கேமரா இல்லை அப்போது.

    ஆனால் எங்கள் ஊரில் பச்சையை அழித்து வருகின்றனர் என்பதுதான் வேதனை..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் இந்தியாவிலும் அதுவும் கேரளாப்பகுதி மிக அழகெல்லோ...

      Delete
  68. இங்கு ஸ்கொட்லாந்தில் இருக்கும் அழகின் சீக்ரெட் என்னவெனில்.. காடு, வயல்வெளிகளில்கூட புல் பூண்டுகள் எல்லாம் விதம் விதமாகப் பூத்திருக்கும் ஏதோ பூங்கா போலவே இருக்கும் கண்ணுக்கு..//

    அதிரா இந்த வரிகளின் கீழ் இருக்கும் படத்தில் ஒரு சின்ன அருவயா வீழுது ஓஓஓஓஓஓஓஓ செமையா இருக்கு...இல்லை இறங்கும் ஒற்றையடிப் பாதையா?! பார்த்தால் நீர்வீழ்ச்சி போலத்தான் தெரியுது....

    அடுத்த படத்தில் சொல்லிட்டீங்க நீழ்வீச்சியேதான். நான் நினைத்ததை நீங்கள் எடுத்துப் போட்டுட்டீங்க...ஆமாம் மக்கள் தெரியறாங்களே...!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது கீதா, எங்கிருந்தோ நிலத்தில ஓடி வந்து இந்தப் பள்ளத்தாக்கில் விழுந்து கடலில் மூன்றறக்:) கலக்குது:) ஹா ஹா ஹா

      Delete
  69. ஹையோ அது என்ன நச்சோ தெரியாது போகாதீங்கோ என திரும்பவும் ஒரு “ஜிங்கத்தை” பாய விடாமல் கட்டிப் போட்டு விட்டனர் கர்ர்ர்ர்ர்ர்:))//

    ஹா ஹா ஹா ஹா பூஸார் எப்போ சிங்கம் ஆனது!!! ஆஹா அப்ப இனி உங்க பெயர் சிங்கம்னு அவதாராகிவிடுமோ!!!!!!!!! சிங்கம் ஒன்று புறப்பட்டதே!! ஆஹா ஆமாம்!!
    நீங்க சிங்கமானாலும் ஜெர்ரியும் நானும் உங்கள் வாலைப் பிடிக்காமல் இருக்க மாட்டோமாக்கும்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ச்ச்ச்ச்சும்மா இருக்கும் ஒரு ஜிங்கத்தை:)) ஜீண்டாதீங்கோ:)).. பிறகு என்ன நடக்குமென ஜிங்கத்துக்கே டெரியாது:))

      Delete
  70. கடற்கரை மிக மிக அழகாக இருக்கிறது அதற்குப் போகும் பாதையும் ஊஊ என்ன சுத்தம். அது சரி அந்தப் பாதையில்தான் நடக்கணுமோ மணலில் நடந்து தண்ணிக்குப் போக முடியாது போல அங்கு ரெட் சைன் போர்டு இருக்குதெ...

    அதிரா ப்ளீஸ் இனி இப்பூடி எல்லாப் படங்களும் ஒரே அடியா போடாதீங்கோ...ஹா ஹா ஹா ஹா என்னால் இங்கிருந்து நகர முடியலை....ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இல்ல கீதா தண்ணியில் இறங்கி கால் நனைக்கலாம்.. நடக்கலாம் ஓடலாம்.. ஆனா நாம் போன நேரம் சரியான காத்துடன் குளிரோடு தூறல் மழை.. அதனால அலை அதிகம் போல இருந்துது ஆட்களும் இல்லை.. பயத்தில கீழே இறங்கவில்லை.

      ஹா ஹா ஹா புறிச்சுப் போடலாம் கீதா, ஆனா ஒரே படங்களைத் திரும்ப போடுவதுபோல இருக்குமோ என பயத்தில ஒன்றாக முடிச்சிட்டேன்..

      Delete
  71. அஞ்சூஊஊஊ நீங்க காசிக்கு வராவிட்டால் பறவாயில்லை:), நான் அம்முலுவை அல்லது கீதாவைக் கூட்டிப் போகிறேன்:).. ஆனா அதுக்குப் பதில் இங்கு வாறீங்களோ?:) அதிராவோட சேர்ந்து கடல்ல குதிச்சுக் குதிச்சு வெளாடலாம்ம்:))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதென்னா மீ காசிக்கு?!!!!!! நான் காசிக்கு வரலை....உங்க இடத்துக்கே வரேன்..ஹா ஹா ஹாஹ் ஆ..நானும் வெள்ளாட வாரேன்...குதிச்சு குதிச்சு...ரொம்பப் பிடிக்குமாக்கும்...!!! ஏஞ்சல், அம்முலு எல்லாரும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //நான் காசிக்கு வரலை....உங்க இடத்துக்கே வரேன்.//
      ஹா ஹா ஹா.. எனக்கு காசிக்குப் போக ஆள் வேணுமெல்லோ:) அப்போ அஞ்சுவை ஓம் சொல்லச் சொல்லுங்கோ கீதா:))

      Delete
  72. அந்தப் பாதையில் நடப்பது நீங்கதானே அதிரா...!!!!!!?

    அழகான இடம்!! ரொம்பவே ரசித்தேன்.

    வீடியோ பார்க்க போனப்போ கணினி படுத்துவிட்டது. பாவம் அதன் நினைவுத்திறன் ரொம்பவே வீக் ஆகி வருது. அதான் மீண்டும் இப்பத்தான் வரேன்...வீடியோவிலேயே சுத்திக் காட்டிட்டீங்கள்!! சூப்பர்...

    ரொம்பவே ரசித்தேன் அதிரா...

    ஓ சிங்கம் சிறுத்துதான் பூஸ் ஆச்சோ!! ஹா ஹா ஹா ஹா அப்ப இப்ப பூஸார் சிங்கம் ஆக முயற்சியோ!!!! ஹா ஹா ஹா....

    ஹப்பா சுத்திப் பாத்து களைச்சுப் போய் பசிக்க ரெஸ்ட்டாரண்டுக்குள் நுழைந்தாச்சு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாருங்கோ கீதா கூஸ்பெரி எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஆனா அதைப் பிடுங்கிச் சாப்பிட விடேல்லை என்னை கர்ர்ர்ர்ர்:))..

      சிங்கம் ஜிங்கமாகி.. ஜிங்கம் சிறுத்தையாகி.. சிறுத்தை பூஸ் ஆச்சு ஹா ஹா ஹா..

      Delete
  73. ஊசிக் குறிப்பு ஆஹா அதே வெளியூரில் யாரேனும் தமிழில் பேசிட்டால் மகிழ்ச்சியாகிடும்.

    மறதிப் பிரச்சனை ஹா ஹா ஹா ஹா...ரசித்தேன்..

    கடைசி ஊ கு வும் சூப்பர். யெஸ் அதுவும் அருமையான தானம் தான். யாருக்கேனும் நாம் டயரி யாக இருந்தாலே அதூவ்ம் பெரிய விஷயம் தான் அதிரா...ஆறுதலாக நாலு வார்த்தைகள் சொன்னால் அது இன்னும் க்ரேட். அனுபவம்!!!!!! உண்டு இரண்டிலும்...கொடுப்பதிலும் பெறுவதிலும்..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் கீதா ரொம்ப ரொம்ப ரசிச்சுப் பார்த்திருக்கிறீங்க.. மகிழ்ச்சியாக இருக்கு.. உங்களுக்கு ஏதாவது தரோணுமே... நில்லுங்கோ வாறேன்ன்..

      இந்தாங்கோ கீதா இந்த பிள்ளையார் சுட்டி விளக்கு.. இரண்டும் உங்களுக்கே.. நான் எங்கயும்.. எங்கள்புளொக் எல்லாம் போய் இதனைச் சுடவில்லை என்பதனை அந்த மேலே பறக்கும் சீகல்லின் கால் நகத்தின் மீது அடிச்சு ஜத்தியம் செய்கிறேன்ன்ன்..

      http://3.bp.blogspot.com/-z-V0Veg1mCk/Tv-5FrSvnII/AAAAAAAADPg/0bbdTinFM3E/s1600/2011-11-03%2B08.20.52-709890.jpg

      Delete
  74. படங்கள் ஒவ்வொன்றும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன

    நானும் தஞ்சாவூர்தான்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன்.... ஓ நீங்களும் தஞ்சாவூரோ? அப்போ ஏன் கரந்தை ஜெயக்குமார்??... இங்கின அதிகமானோர் தஞ்சாவூராக இருக்கினம்..

      மிக்க நன்றிகள்.

      Delete
    2. கரந்தை என்பது தஞ்சாவூரில் இருக்கும் ஒரு இடம் அதிரா....

      நானும் தஞ்சையில் படித்தவன். எனது ஆரம்பிக்க கல்விகள் தஞ்சையில்தான்!

      Delete
  75. காணொளிகளை முழுத்திரையாக்கிப்பார்த்தேன்- நீங்கள் சொன்னபடி (அப்பாவும் பாதி திரைதான் வருகிறது!!!) ஆனாலும் நன்றாய் இருக்கிறது!

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.