நல்வரவு_()_


Sunday 29 March 2020

 “கொரொனா” மிக்ஸர்,  “கொரொனா” ரவ்வைப் பக்கோடா

ஹா ஹா ஹா என்ன தலைப்புப் பார்த்துப் பயந்திட்டீங்களோ?:)).. இருமினாலும் தும்மினாலும் இப்போ பயப்பிடுவதே எல்லோருக்கும் வேலையாப்போச்சு கர்ர்ர்ர்ர்:))... கொரொனா ஹொலிடேயில எல்லோரும் இருக்கும்போது, அடிக்கடி பசிக்கும் எல்லோ?:), அப்போ அதுக்காக இப்படி டக்குப் பக்கெனச் செய்யக்கூடிய ஸ்நக்ஸ், செய்து அசத்திட்டேன்[பின்ன நம்மள நாமளேதானே புகழோணும்:)]... சரி சரி இந்நேரத்தில ஓவராப் பேசப்பிடாது:))..
இப்பூடியே தொங்கிட்டால்:) நம்மளை கொரொனா 
நெருங்காதாக்கும்:)) பூஸோ கொக்கோ:))
இங்கின ஒரு விஷயம் சொல்லிடுறேன், மிக்ஸர் நீண்ட நாள் வைத்துச் சாப்பிடலாம் கூடச் செய்தால், ஆனா இந்தப் பக்கோடா, உடன் சாப்பிடத்தான் நல்லது, வைத்துச் சாப்பிட்டால் கடினமாகிடும்.

ஓகே இப்போ அதிராவின் கை வண்ணத்தில் உருவான அழகிய:), சுசியான:), கெல்த்தியான:), இன்ஸ்டன்ஸ் மிக்ஸர்...
தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் ஒரு கப் 
பொட்டுக்கடலை முக்கால் கப்
சோயாக் கடலை அரை கப் 
கச்சான் அரை கப், 
தேவைக்கு ஏற்ப சில்லி பவுடர், உப்பு, கறிவேப்பிலை, 2,3 பல்லு உள்ளி.

டுவில இருப்பது:) அது யும்ம்ம்ம்மா:))

ஒண்ணும் பண்ணத் தேவையில்லை, அப்படியே தனித்தனியே பக்குவமாகப் பொரிச்சு எடுங்கோ, பொரித்தெடுத்ததும், உடனே உடனே  அது..அதுக்கு மேலே சில்லிப் பவுடரையும் உப்பையும் கொஞ்சமாகப் போட்டு, பிரட்டி விடவும், இப்போ எண்ணெய் வடிவதற்கு என பேப்பர் ஏதும் போட வேண்டாம், அந்த எண்ணெய்ச் சூட்டில் கிளறும்போதுதான் மிளகாயின் காரத்தன்மை, பச்சைத்தன்மை போகும்.. இப்படி அனைத்தையும் பொரித்தெடுத்துப்போட்டு.. 
பின்பு அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நன்கு பிரட்டியபின்  எண்ணெய்த் தன்மை இருப்பின், இப்போ கொஞ்ச நேரம் கிச்சின் பேப்பரில் போட்டு விடவும்...


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஅ அதிராவின் சுவைமிக்க கொரோனா மிக்ஸர் ரெடீஈஈஈஈஈ:))..

=====================இடைவேளை===================
அப்பா... ஐயா.. லாஃபிங் புத்தாவே🙏.. சைனாவில இருந்து ஆரம்பிச்ச கொரொனாவிலிருந்து, நம் மக்கள் எல்லோரையும் காப்பாத்துங்கோ ஜாமீஈஈஈஈ.. எனக், கீரை வடை செய்து படைச்சிருக்கிறேனாக்கும்:))
சேப் சரியாக இல்லையே எனத்தானே ஓசிக்கிறீங்க:)) அது சுடச்சுடவே நல்ல நல்ல சேப் எல்லாம் போயிந்தி எலிகள் வருகையால:))
=================================

ஆங்ங்ங்ங்ங் அடுத்து அதிராவின் கொரோனாப் பக்கோடா பார்ப்போமா:)).. இது வந்து பாருங்கோ ஸ்பெஷல் பக்கோடாவாக்கும்.. ஈசியோ ஈசி, சுவையோ சுவை, நான் இதைச் செய்து போட்டு யும்மா இருப்பனோ?:)).. உலகமெல்லாம் அனுப்பினேனா:)), ரெசிப்பி சொல்லு என இன்று காலையில இருந்து ஒரே ஃபோன் கோல்தான் பாருங்கோ:)). எல்லோருக்கும், வீட்டில் நிற்பதால வாய் மசமச எண்டெல்லோ இருக்கும்:)), இப்பூடிச் செய்து படம் அனுப்பினால்ல்.. தாமாகவே தேம்ஸ்ல குதிச்சிடுவினம் ஹா ஹா ஹா:))

சரி எல்லோரும் வாய்க்கு:)) மாஸ்க் போட்டுக் கொண்டு வந்து நில்லுங்கோ ரெசிப்பி ஜொள்றேன்:)..
ரவ்வை ஒரு கப், பிளேன் ஃபிளவர் கால் கப், உப்பு, சில்லி ஃபிளேக்ஸ் இவ்ளோதான் மற்றர்:)).. 
எங்கும் அதிரா A:) எதிலும் அதிரா A:))

கொஞ்சமாக தண்ணி சேர்த்து நல்ல ரொட்டிபோல குழைச்செடுத்து.. உருண்டைகளாக்கி, சப்பாத்திபோல தட்டையாக உருட்டி எடுத்து, இப்பூடி கத்தியால ஸ்டைல் ஸ்டைலா வெட்டி எடுங்கோ..

இப்படி எடுத்து வைத்துப்போட்டு, அடுப்பில் எண்ணெயைக் கொதிக்க விட்டு, ஸ்லோ ஃபயரில பொரித்தெடுங்கோ... கட் பண்ணியபின், நீண்ட நேரம் விட்டால் காய்ந்துவிடும்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பாருங்கோ மொறு மொறு என எவ்ளோ யூப்பர்ர்... நடுவில் கொஞ்சம் உடைத்துப் பெரிதாக்கிக் காட்டியிருக்கிறேன், ஏனெனில் எவ்ளோ கிரிஸ்ப்பியாக இருக்குது என்பதைக் காட்டவே:))

இன்று ஒரு தகவல்:-
இந்த மேசைத்திருவலகை எத்தனைபேர் பாவிக்கிறீங்கள்?.. நான் பிறந்து, நினைவு தெரிஞ்சதிலிருந்து, இதைத்தான் பாவிக்கிறோம், இப்போ இங்கும் வைத்திருக்கிறேன், தேங்காய் வாங்கி வந்து, உடனேயே திருவி, ஃபிறீஸர் பாக்குகளில் போட்டு ஃபிறீஸ் பண்ணி விடுவேன்.
------------------------------------------------------------

அவன் வகுத்ததை நாம் மாற்ற முடியுமா?:)).. 
நமக்கு அளந்ததுதான் அளவு:))

ஊசி இணைப்பு:-
எல்லோரும் பெரும்பாலும் பார்த்திருப்பீங்கள், இருப்பினும் மீண்டும் பார்த்துச் சிரிச்சால் ஆயுள் கூடுமாம்ம்:)) ஹா ஹா ஹா..

ஊசிக்குறிப்பு

கொரொனா இணைப்பு:)
கில்லர்ஜி கேட்டிருந்தார்,  கொரொனா நிலைமை பற்றி எழுதலாமே என:)).. 
எல்லோரும் கொரொனா கொரொனா எனக் கேட்டுக் காது கண் எல்லாம் புளிச்சுப் போயிருப்பீங்கள்:)), அதனால அதுபற்றிப் பேசவில்லை நான்:)..
(((((((((((((((((_()_))))))))))))))))

143 comments :

  1. //சோயாக் கடலை அரை கப் //
    ஹையோ சாமீ ஆளை விடுங்க பேரை கேட்டாலே அதிருது :) இன்னிக்கு சமையல் எல்லாத்தையும் என்னைத்தவிர எல்லாருக்கும் கொடுங்க :)ட்ரூத்துக்கு மூணு போர்ஷன் ...தயவுடன் மன்னிக்க தொடர் பணி  மிகவும் டயர்ட் ஒரு 4 டேஸ்  தூங்க போறேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. என்ன இப்பூடிப் பதறிட்டீங்க ஹா ஹா ஹா உங்களுக்குக் குளூட்டன் ஃபிறீயில செய்து தரட்டோ?:)..

      மிக்க நன்றி.

      Delete
  2. கடந்த ஒரு வாராமாக படுக்கையில் நான்..எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இன்று Covid 19 டெஸ்ட் செய்து வந்திருக்கிறோம்.. ரிசல்ட் வர மூன்று நாட்கள் ஆகும். #அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்

    ReplyDelete
    Replies
    1. கவலை வேண்டாம் மதுரைத் தமிழன். இதெல்லாம் சட்னு கடந்துபோகும். தொடர்ந்து மோடியைக் கலாய்த்து பதிவுகள் போட்டீங்கன்னா, பொழுதும் போய்விடும். நலமே அடைவீர்கள் நீங்கள் எல்லோரும்....

      Delete
    2. வாங்கோ ட்றுத் வாங்கோ...
      நியூயோர்க்கில் கொரொனா இல்லாதவர்களே இருக்க முடியாது என்கின்றனர், ஆனா நமக்கும் இருக்கலாம், செக் பண்ணினால்தானே தெரியும்.

      இருப்பினும் உங்களுக்கு கொரொனா வர வாய்ப்பில்லை ட்றுத்:).. ஏன் தெரியுமோ... வி..., பிரெ... யைத் தொட்டுப் பார்த்தால் கொரொனா எரிஞ்சிடுமாம் எனவும் கேள்விப்பட்டேன்:)).. உண்மையில், வாய்ப்பகுதியில் கிருமி இருப்பின், எரிச்சுப் போடுமாம்.. ஆனா கொரொனா இருப்பின் அவற்றை எடுக்கக்கூடாது...

      எங்கள் பிறைம் மினிஸ்டர், சாள்ஸ் மாமா எல்லோருக்கும் கொரொனா தானே... தனிமையில் இருக்கினம்..

      எதுவாயினும் நலமே இருங்கோ வீட்டில் எல்லோரும் ட்றுத், நன்றி.

      Delete
    3. //இதெல்லாம் சட்னு கடந்துபோகும்//

      நெ தமிழன் சட்டென்றெல்லாம் கடக்காதாமே.. இங்கு எங்களுக்கு 6 மாதமாகலாம் என அறிவிச்சிருக்கினம், அமெரிக்கா அதைவிட அதிக காலமாகுமாம்... ஆனா இங்கு என்ன கொடுமை என்றால், மழை காத்து இருட்டு க்குள் கஸ்டப்பட்டு ஸ்கூல் போய் வந்தேன்:), இப்போ வெயிலோ வெயில் , படுக்கவும் முடியல்ல வெளியே போகவும் முடியல்ல கர்ர்ர்ர்:)).. ஆனா குளிர் இன்னும் குறையவில்லை, குறைஞ்சிட்டால் கார்டினில் குதிக்கலாம்:)) ஹா ஹா ஹா.

      Delete
    4. Avargal UnmaigalMonday, March 30, 2020 12:45:00 am

      நல்ல செய்தியாக வரும்.கவலைபடவேண்டாம். பாதுகாப்பாக,பத்திரமாக இருங்க எல்லாரும்.

      Delete
    5. //priyasakiMonday, March 30, 2020 9:53:00 am
      Avargal UnmaigalMonday, March 30, 2020 12:45:00 am

      நல்ல செய்தியாக வரும்.கவலைபடவேண்டாம்.//

      நல்ல செய்தி எனில்.. பொஸிடிவான செய்திகள்:)) அப்போ ட்றுத்தின் றிசல்ட் பொஸிடிவ் என வரோணுமெனச் சொல்றீங்களோ அம்முலு:)) ஹா ஹா ஹா ஹையோ என்னால ஜத்தமாச் சிரிகவும் முடியுதில்லயே:))..

      ட்றுத் ஏற்கனவே ஒரு தடவை நம்மைக் கலங்கடிக்க வச்சு சொர்க்கம் பார்த்து வந்தவர், அவருக்கு இனி எல்லாமே நல்லதாகவே இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை...

      கொரொனா கொரொனா என, நாமும் பயந்து சீரியசாகி, முகத்தையும் சீரியசாக வைத்துக் கொண்டு, ஏனையோரையும் கலங்கடிக்காமல், கதைச்சுப் பேசி, சிரிச்சுக் கொண்டிருப்போம்... எல்லாம் நல்லதே நடக்கும்...

      ஆஆஆஆஆஆஆஆங் ஜொள்ள மறந்திட்டேன்ன்.. அம்முலு ரெடியாகுங்கோ பாரதக் கதை படிக்க:)) ஹா ஹா ஹா:))

      Delete
    6. /ட்றுத் ஏற்கனவே ஒரு தடவை நம்மைக் கலங்கடிக்க வச்சு சொர்க்கம் பார்த்து வந்தவர், அவருக்கு இனி எல்லாமே நல்லதாகவே இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை...//
      ஆ...மனம் என்ன பாடுபட்டது. இது எனக்கும் தெரியும்.

      பாரதக் கதை படிக்க:)) ஹா ஹா ஹா:)) ஆ....பாரதக்கதையோ.....கடவுளே இதென்ன ஜோதனை எங்களுக்கு. 🙄 🙄 ..எனக்கு கொரோனா பயமில்லை. இப்பதான் பயமாருக்கு... 🏃🏻‍♀️ 🏃🏻‍♀️ அஞ்சுவையும் காணேல்லை.

      Delete
    7. @அம்முலு
      கொரொனா அமளியால நீங்க எல்லோரும் கம்பியையும்:)) ஸ்டைலாச் சொன்னேன் ..கம்பராமாயணத்தை:)).. மகாபாரதத்தையும் மறந்திடப்போறீங்களே எண்டு நேக்கு நெஞ்சுக்குள் பக்கோ பக்கூ:)) அதனாலதான் ஞாபகப் படுத்திடப்போறேனாக்கும்:))..

      அஞ்சுவை 7 நாளைக்கு எங்கேயும் வரக்கூடா என மிரட்டி, அவோக்கு மூக்கில மாஸ்க்கும் கட்டிப்போட்டு, இப்பத்தான் வந்து சோப் போட்டு 2 நிமிடமாக தேய்ச்சுக் கை கழுவிப்போட்டு, பேர்ஃபியூமும் அடிச்சுக் கொண்டு:) கொம்பியூட்டர் வந்தேன்ன்:)).. பூஸோ கொக்கோ:))

      Delete
  3. பாட்டைக்கூட அளவாய் ரசிக்க வேண்டிய நிலையில் கொரோனா பயம்!  என்ன சொல்ல?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
      அப்போ வெள்ளிக்கிழமைப் பாடல் வெளிவராதோ?:)) ஹா ஹா ஹா..

      உண்மைதான் ஸ்ரீராம் கும்மி அடிக்கவும் இப்போதெல்லாம் மனம் விரும்புதில்லை.. இருப்பினும் என்ன பண்ணுவது, கும்பிடுவோம் நம் வேலையையும் பார்ப்போம் என நினைச்சு போஸ்ட் போட்டேன்.

      இலங்கையில் ஒரு காலத்தில் தினமும் மக்கள் இறக்கடிக்கப்பட்டபோது வெளிநாட்டில் ஆருக்கும் புரியவில்லை, இப்போ உலகமே கலங்கி நிற்கும்போதுதான் நிலைமை இங்குள்ளோருக்கும் புரிகிறது..

      என்னைப்பொறுத்துப் பயப்பட என்ன இருக்குது.. எல்லாம் நம் விதிப்படியே நடக்கும்...நல்லதே நடக்கட்டும் என எண்ண மட்டும்தானே நமக்கு உரிமை இருக்குது.

      Delete
    2. //எல்லாம் நம் விதிப்படியே நடக்கும்...நல்லதே நடக்கட்டும் என எண்ண மட்டும்தானே நமக்கு உரிமை இருக்குது.//

      ஆமாம் அதிரா.
      நல்லதே நடக்கட்டும்.

      Delete
    3. நல்லதே நடக்கும் மதுரை தமிழன். ரிசல்டில் கொரானா இல்லை என்று வரும் என்று ந்மபுங்கள். உங்கள் செல்லத்தை கொஞ்சம் தனிமை படுத்துங்கள்.

      Delete
    4. கோமதி அக்கா.. ரென்ஷனாக வேண்டாம், கொரொனா என்பது பெரிய பயங்கர வியாதி இல்லை, அது வந்தாலும் சுகமாகிடும் அதனால மனத் தைரியம் தான் இப்போ நமக்கு முக்கியம்.. செல்லங்களுக்கு தொத்தாதாம், செல்லங்களால் நமக்கும் தொத்தாதாமே கோமதி அக்கா...

      Delete
  4. தொங்கும் பூனையாரின் நிலைமையில்தான் அனைத்து மக்களும்...   அவரவருக்குத் தெரிந்த வைத்தியங்களை அள்ளி விடுகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. //அவரவருக்குத் தெரிந்த வைத்தியங்களை அள்ளி விடுகிறார்கள்!//

      ஹா ஹா ஹா இதுதான் கொரொனாவைவிட மோசமாக எரிச்சலைக் குடுக்குது..

      Delete
  5. மிக்ஸரை விட கீரை வடை நல்லாயிருக்கும் போல...    அந்த லாபிங் புத்தா எங்கள் வீட்டில் கையில் ஒரு விசிறி வைத்து விசிறிக்கொண்டே தலித் தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே இருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரும் சூப்பராக இருக்குது ஸ்ரீராம், நான் சேர்த்திருக்கும் பருப்புக்கள் அனைத்தும் சொஃப்ட்டாக வாயில கரையுது, கடிபடாமல், அத்தோடு அவல் பொரியும் சூப்பராக இருக்குது... எனக்கு பருப்பு வடைதான் பிடிக்கும், இல்லை உளுந்தெனில் கீரை போட்டால் வீட்டில எல்லோரும் சாப்பிடுவினம் ஆசையாக, வெறும் உளுந்துவடை எனில், ஆருக்கும் பெரிசாக பிடிப்பதில்லை வீட்டில்...

      நான் கீரை வடை+ பருப்புவடை ஸ்பெஷலிஸ்ட் ஆக்கும்:)) ஹா ஹா ஹா...

      எங்களிடமும் விதம் விதமாகவும், விதம் விதமாக சைஸ்லயும், உருவத்திலயும் இருக்கிறார் அவர்.. ஒவ்வொரு விதமான புத்தாவும் ஒவ்வொரு வகைக்காம் எனக் கேள்விப்பட்டேன்.. அதாவது ஒரு ஸ்டைல் புத்தா.. நோய் திர்க்க, இன்னொறு ஸ்டைல், பண வரவு, இன்னொன்று மகிழ்ச்சிக்காக.. இப்படி.

      Delete
  6. மாஸ்க்கா...   அதுதானே கிடைக்க மாட்டேன் என்கிறது!  எங்கே போக...   கர்சீப்தான்!  பெண்கள் துக்க சமயம் போல முந்தானையை எடுத்து வாய் மூடி சுற்றுகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. அதைவிட ஆபத்து.... ஸ்ரீராம்... இங்கு ரோடு முனைகளில் மாஸ்குகளை கையில் வைத்துக்கொண்டு விற்கிறார்கள். ஒன்று 20 ரூபாய் (அல்லது 10 ரூபாய்) இருக்கும்னு நினைக்கிறேன். இதுபோல இருவரைப் பார்த்தேன். எனக்கு, அவர்களிடமிருந்து கொரோனா வந்துவிடக்கூடாதே என்றுதான் தோன்றியது. அதுவும் ஓபன் ஆக கையில் 40-50 மாஸ்குகள் வைத்திருப்பது ஆபத்து என்றே நினைக்கிறேன்.

      அதுவும் தவிர இப்படி மாஸ்குகள் விற்பதை கட்டுப்படுத்தணும் (இங்க ஷாப்பில் மாஸ்க் இல்லாமல் கஸ்டமர்கள் வரக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்)

      Delete
    2. //பெண்கள் துக்க சமயம் போல முந்தானையை எடுத்து வாய் மூடி சுற்றுகிறார்கள்!//

      ஹா ஹா ஹா

      Delete
    3. @நெ தமிழன்
      //இங்கு ரோடு முனைகளில் மாஸ்குகளை கையில் வைத்துக்கொண்டு விற்கிறார்கள்.!///

      ஹா ஹா ஹா, இது கொரொனாவை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமனாச்சே..:)

      Delete
  7. மேசைத்திருவலகை எங்களிடம் இல்லை!  ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அத்தனையையும் ரசித்தேன்.

    ReplyDelete
  8. அருமையான விளக்கம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. நீண்ட நாட்களின் பின்பு வந்திருக்கிறீங்கள் மிக்க நன்றி.

      Delete
  9. பொட்டுக்கடலையை எண்ணையில் பொறிக்கக்கூடாது. அப்படியே உபயோகிக்கலாம். சோயா முழுதாக கிடைப்பது அரிது. சோயா எண்ணெய் எடுத்தபின் கிடைக்கும் சக்கை உருண்டைகளாக சோயா நுகட்ஸ்  என்ற பெயரில் இங்கு கிடைக்கும். மேக்கு பதிலாக உருளைக்கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்யலாம் (vegetarian mutton potato fry) அதிலும் குறுமிளகு பூண்டு சேர்த்த வறுவல் மிகவும் நன்றாக இருக்கும். . 

    பாணி பூரி மாவு உண்டாக்கி அதை டைமென்ட் பிஸ்கட்டுகளாக பொரித்து விட்டு liitle Jack Horner பாட்டில் வரும் "what a good boy am I" போல "what a good cook am I"  என்று குதிக்கக்கூடாது. 

    பின்னே கடைசியாக ஒரு தகவல்.. Chilli flakes, Chilli powder, Chilli paste என்ற மூன்றும் குணத்தால் மாறுபட்டவை. Chilli flakes பிட்ஸா, மெழுக்கு  வரட்டி போனற்வற்றிற்கும், சில்லி பவுடர் சாம்பார், குழம்பு போன்ற வகையறாக்களுக்கும், chilli paste சீன உணவுகள், வறுவல்களுக்கும் (மீன்) மற்றும் நம்முடைய சம்பல்களுக்கும் பயன்படுத்தப்படுவது. ஆகவே பக்கோடாவுக்கு பிளேக்ஸ் சேர்த்தது சரியில்லை. 
    கீரை வடை எல்லாம் ஏன் ஒரு பக்கம் கடித்து வைத்தது போல் உள்ளது? 
    கேட்காமல் அறிவுரை வழங்கியுள்ளேன். மன்னித்து கொள்ளவும்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

      //பொட்டுக்கடலையை எண்ணையில் பொறிக்கக்கூடாது. அப்படியே உபயோகிக்கலாம்.//
      சட்னிக்கெனில் ஓகே, ஆனா மிக்ஸருக்கு பொரிக்காட்டில் ஒருவித பச்சைபோல இருக்குமே.. சுவை இல்லை..

      //சோயா முழுதாக கிடைப்பது அரிது//
      இங்கு தாராளமாகக் கிடைக்கிறது, வறுத்த கொண்டைக்கடலைபோலவும் கிடைக்குது வறுத்து.

      //சோயா எண்ணெய் எடுத்தபின் கிடைக்கும் சக்கை உருண்டைகளாக சோயா நுகட்ஸ் என்ற பெயரில் இங்கு கிடைக்கும்//
      எண்ணெய் அனைத்துக்கும் எடுப்பினமோ தெரியவில்லையே, ஆனா சோயாமீற் என இலங்கையில் அது பேமஸ், நான் குழந்தையாக இருந்த காலம் முதல் இந்த சோயாமீற் சாப்பிட்டிருக்கிறேன்... எல்ல்லோருக்கும் பொதுவா பிடிக்கும்.

      நாம் விதம் விதமாக சமைப்போம், சும்மா தண்ணியில் ஊறவிட்டு பிளிந்தெடுத்துப்போட்டு உப்பும் தூளும் பிரட்டி டீப் ஃபிறை செய்வோம் சூப்பராக இருக்கும்...

      Delete
    2. //"what a good cook am I" என்று குதிக்கக்கூடாது. //

      ஹா ஹா ஹா என்னை நானேதானே இங்கின புகழோணும் ஜேகே ஐயா:)) பின்ன அஞ்சுவோ நெல்லைத்தமிழனோ வந்து புகழப்போகினமோ ஜொள்ளுங்கோ:))..

      //ஆகவே பக்கோடாவுக்கு பிளேக்ஸ் சேர்த்தது சரியில்லை.//
      ஹா ஹா ஹா அப்போ என்ன சேர்க்கோணும் எனச் சொல்லவே இல்லையே நீங்க? செத்தல் மிளகாய் கட் பண்ணிப்போடலாம், ஆனா அது இப்படி கட் பண்ணுபவற்றுக்குப் பாவிக்க முடியாதெல்லோ.. பவுடரும் போட முடியாது.. அப்போ பிளேக்ஸ் தானே கைகண்ட....:))

      //கீரை வடை எல்லாம் ஏன் ஒரு பக்கம் கடித்து வைத்தது போல் உள்ளது? //
      ஹா ஹா ஹா அவற்றுக்கும் கொரொனா வந்திருக்குமோ என்னமோ:))

      //கேட்காமல் அறிவுரை வழங்கியுள்ளேன். மன்னித்து கொள்ளவும்.//
      சே..சே... இது என்ன இது புதுசாச் சொல்றீங்க... ஜேகே ஐயா எனில் இப்படித்தான் இருப்பார் என ஒரு பிம்பம்[ஐ கரெக்ட்டா எழுதிட்டேன்:)] மனதில் உண்டு, அப்படியே பழக்கப்பட்டு விட்டது:)... அதனால நீங்க இப்படி எல்லாம் யோசிச்சு மனிப்பெல்லாம் கேட்காமல், தாராளமாக அள்ளி வழங்குங்கோ.. அறிவுரைக்குச் சொன்னேன் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் ஜேகே ஐயா.

      Delete
    3. பகோராவுக்கு இஞ்சி பூண்டு மிளகாய் விழுது (பச்சை அல்லது சிவப்பு) + கறிவேப்பிலை தான் சேர்க்கலாம். நீங்கள் செய்தது பகோரா அல்ல. நெ த அவர்கள் சொன்னபடி இது துக்கடா அல்லது பிஸ்கேட் எனப்படும். நீங்கள் உண்டாக்கிய மாவு கோல்கப்பா அல்லது பாணி பூரி செய்யும் மாவு. பாணி பூரி என்று கூகிள் செய்து பாருங்கள். 

      Delete
    4. ஜேகே ஐயா.. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:)).. விழுது சேர்த்தால் மொறுமொறுப்பாக வராது.. அது சொஃப்ட்டாகிடும், இது முறுக்கு வகைபோல மொறுமொறுப்பாகச் செய்தேன்...

      இன்னொன்று, நான் செய்யும் ரெசிப்பிகளை அப்படியே உள்வாங்கிச் செய்யோணுமே தவிர:)).. இது இப்படிச் செய்வதில்லை.. அது சேர்ப்பதில்லை எண்டெல்லாம் ஜொள்ளப்படாதாக்கும்.:)).. சுவை தானே முக்கியம்:)).. மற்றும் என் சில ரெசிப்பிகளின் பெயர்பார்த்துப் பயப்பூடக்கூடா:)).. ஏனெனில் எனக்கு அப்போது மனதில என்ன பெயர் தோணுதோ:)) அதை வைப்பேனாக்கும்:))..

      நான் சொல்லியிருக்கிறேனெல்லோ.. எங்கட சின்னவருக்கு, வாயில் வரும் பெயர் சொல்லியே இப்பவும் ரைஸ் அண்ட் கறி கொடுக்கிறேன்:)).. வட் இஸ் த லஞ் என்பார்ர்.. ரைஸ் அண்ட் கறி என்றால்ல்ல்.. ஐ டோண்ட் வோண்ட், ஹங்றி இல்லை என்பார்ர்..:)) கர்:)) அதனால பிசியோலாபாத், சிக்கிமுக்கி, டங்குலு டுமிக்கி:)) இப்பூடி எதையாவது சிரிக்காமல் சொல்லி சாப்பிட ஆரம்பிக்க வைப்பேன், ஆரம்பிச்சிட்டால் சாப்பிட்டு முடிப்பார்ர்.. அம்மா ஏதோ புதுசு ட்றை பண்ணியிருக்கிறாபோல என ஹையோ ஹையோ.. நான் வீட்டில் பண்ணும் அட்டகாசங்கள் சொல்லி முடியாது ஹா ஹா ஹா:))..

      Delete
    5. //என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:)).. விழுது சேர்த்தால் மொறுமொறுப்பாக வராது.. அது சொஃப்ட்டாகிடும், இது முறுக்கு வகைபோல மொறுமொறுப்பாகச் செய்தேன்...//

      ஆஆ ஓஓஓஓ இப்போ கை பரப்பறக்குதே :) குழலப்பம் செய்து காட்ட  பேய்க்காட்ட இருங்க வரேன் செஞ்சிட்டு சொல்றேன் உங்களுக்கு 

      Delete
    6. ஆஆஆஆ என்னாது குழலப்பமோ கர்ர்ர்:) அது தேன்குழலாக்கும்:)).. அது செரி:)) ஆரு அஞ்சுவைத் துயிலெழுப்பி விட்டது:))... தேம்ஸ்ல தள்ளிடுவேன்:))

      Delete
    7. ///ஆஆ ஓஓஓஓ இப்போ கை பரப்பறக்குதே :)//

      ஆஆஆஆஆஆஆஆ நெ தமிழன் ஓடி வாங்கோ:)) நான் ஜொன்னா நெம்ப மாட்டீங்க:)) அஞ்சுவுக்கு ர/ற வில புரொப்பிலம்:)) ஹா ஹா ஹா

      Delete
    8. //குழலப்பம் செய்து காட்ட பேய்க்காட்ட இருங்க வரேன் //

      ஐயோ பாவம் அவர்.... ஒரு வாரம் லீவு விட்டாங்கன்னா நிம்மதியா இருக்க விடுறதேயில்லை வீட்டம்மா... எதையாவது ஆரம்பித்து சரியா வராமல், வேலையை ஹஸ்பண்ட் கிட்ட தள்ளிடறாங்க.

      முதல் செட் குழலப்பம், காலாஜாமூன் மாதிரி காலாகுழலப்பமா வந்தது, பிறகு கணவர் செய்தது அசல் குழலப்பமா வந்தது என்றெல்லாம் இடுகை போடப்போறாங்க...

      Delete
    9. Grrrrrr nellai thamizhan😂😂😂😂😂😂😂😂😂😂

      Delete
    10. ///ஐயோ பாவம் அவர்.... ஒரு வாரம் லீவு விட்டாங்கன்னா நிம்மதியா இருக்க விடுறதேயில்லை வீட்டம்மா... எதையாவது ஆரம்பித்து சரியா வராமல், வேலையை ஹஸ்பண்ட் கிட்ட தள்ளிடறாங்க.//


      அவ்வ் :) என் கணவர் லீவிலிருக்கார்னு உங்களுக்கு எப்படி தெரியும் :))))))))))))))))))))) இந்த பூனைதான் போட்டு கொடுத்திருக்கும்:)))ஒரு புது ரெசிப்பி செய்ய விட மாட்டேங்கிறாங்களே என்னை :)))))

      Delete
    11. AngelTuesday, March 31, 2020 11:15:00 am
      //அவ்வ் :) என் கணவர் லீவிலிருக்கார்னு உங்களுக்கு எப்படி தெரியும் :))))))))))))))))))))) இந்த பூனைதான் போட்டு கொடுத்திருக்கும்:))////

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது என்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊ:)) ஏதோ அஞ்சுட ஹஸ் இன் வட்சப் நம்பர் என்னிடம் இருப்பதைப்போலவே ஜொள்ளுறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு பிஞ்சுக் கண்மணியைப் பார்த்து[நன்றி வல்லிம்மா:)].. ஹா ஹா ஹா:))

      Delete
  10. கொரானாவுக்கும் மார்கெட் இல்லாத வடிவேலுதான் தேவைப்படுது.

    இன்று
    உலக இட்லி தினம் (இங்கு மிக்சர் தினம் போல)
    மற்றும்
    உலக மருத்துவர்கள் தினம்
    மருத்துவர்களை வணங்குவோம் உலகை காக்க....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      ஹா ஹா ஹா இப்போ எதுக்கு வடிவேல் அங்கிளையும் திட்டுறீங்க.. இந்த வீட்டுக்குள் அடங்கி இருக்கும் காலத்தில் , எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுவோரில் வடிவேல் அங்கிளுக்கும் முக்கிய பங்குண்டாக்கும்:)).. கொமெடி பார்த்துச் சிரிப்பதிலும், மீம்ஸ் பார்ப்பதிலும் பாதி நேரம் போயிடுது:))..

      ///உலக இட்லி தினம் (இங்கு மிக்சர் தினம் போல)//

      ஆஆஆ பறவாயில்லையே, கரெக்ட்டா உணவுப்போஸ்ட் போட்டு விட்டேனே தெரியாமலேயே:))..

      மிக்க நன்றிகள் கில்லர்ஜி.

      Delete
  11. கொரொனா மிக்சரா
    ஆகா
    அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன், யேஸ் கொரொனா மிக்ஸர் ஹா ஹா ஹா நன்றி.

      Delete
  12. அவல் மிக்சர் ரொம்ப நல்லா வந்திருக்கு. வாசனையாவும் இருக்கும். பொதுவா இதில் பூண்டு சேர்ப்பதில்லை. பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெ தமிழன் வாங்கோ..

      ஆஆஆஆஆவ்வ்வ்வ் நெ தமிழன் அதிராவைப் பாராட்டிப்போட்டார்ர்ர்.. ஹையோ இப்போ பார்த்து என் செக் ஒளிச்சிட்டா கர்ர்ர்ர்ர்:)) இப்பூடி பாராட்டிடப்போறார் என்றுதான் ஒளிச்சிருப்பா அவ கர்ர்ர்ர்:))..

      பக்கோடாவுக்குத்தான் பூண்டு சேர்ப்போம் நெ தமிழன், ஆனா இது கொஞ்சமாக செய்தேன் அதனால இப்போதைய கொரொனாவையும் நினைச்சு பூண்டு சேர்த்தேன், ஆனா நல்ல வாசமாக இருக்குது.. சுவையும் உண்மையில் சூப்பர்..

      Delete
  13. கீரை வடை ஷேப்பில் குறையில்லை. பார்க்க மொறு மொறுவென அழகாக இருக்கு. கீரைக்குப் பதில் சின்ன வெங்காயம் போட்டுச் செய்தால் குளிருக்கு அட்டஹாசமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //கீரை வடை ஷேப்பில் குறையில்லை.//
      ஹா ஹா ஹா இல்ல நான் இன்னும் அழகா வட்டமாக சுடுவேன், இது கொஞ்சம் தண்ணித் தன்மையாகிட்டுது, அதனால வட்டம் போட முடியவில்லை.

      //கீரைக்குப் பதில் சின்ன வெங்காயம் போட்டுச் செய்தால்//
      பொதுவா வடைகளுக்கு நிறைய வெங்காயம் சேர்ப்பேன், இதிலும் சேர்த்திருக்கிறேன், ஆனா பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இங்கு தமிழ்க்கடையில் மட்டும்தான் கிடைக்கும்.

      Delete
  14. அது பக்கோடாவா? என் வீட்டில் துக்கடா என்று சொல்வார்கள். ரொம்ப நல்லா வந்திருக்கு. சந்தேகமே இல்லை. சாப்பிடவும் சுவையாக இருந்திருக்கும்.

    மாவு, ரவையில் ஏன் பிரமிட்டை வரைந்திருக்கிறீர்கள்? அது ஏதேனும் வேண்டுதலா?

    ReplyDelete
    Replies
    1. //அது பக்கோடாவா?//

      ஹா ஹா ஹா அது நான் வச்ச பெயர்:)).. இப்படி தனிக்கோதுமையில்.. பிளேன் ஃபிளவரில் செய்வோம்.. அதனை சிப்பி.. சோகி என்போம்...

      மொறு மொறு என சூப்பராக வந்திருந்தது, உறைப்புப் போதவில்லை எனச் சொல்லலாம்...

      Delete
    2. @ நெ தமிழன்
      //மாவு, ரவையில் ஏன் பிரமிட்டை வரைந்திருக்கிறீர்கள்? அது ஏதேனும் வேண்டுதலா?///

      [im] https://media.giphy.com/media/zvOdogKQFEwda/giphy.gif [/im]

      Delete
  15. மேசை தேங்காய் திருவலகை - அஞ்சலி என்ற பிராண்டில் உண்டு. அவ்வளவு ஸ்டிராங்காக மேசையில் நிற்பதில்லை. அதனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. உங்களுடையது இன்னும் ஸ்ட்ராங்க் ஆக மேசையில் பொருந்தியிருக்கு என்று நினைக்கிறேன். தேங்காய் துருவுவதை சுலபமாக்கும்.

    நான் பொதுவா தேங்காய் சில்லுகளை கொஞ்சம் சிறியதாக வெட்டிக்கொண்டு மிக்சியில் போட்டுவிடுவேன். தேங்காய் பர்பி போன்றவை செய்யணும்னா, வேலையற்றவன்போல, சில்லுகளை எடுத்து அதன் பிரவுன் சைடை மெதுவாக கட் பண்ணிவிடுவேன் (இல்லைனா தேங்காய் துருவல் வெள்ளை வெளேர் என்று இருக்காது).

    பஹ்ரைனில் ஒரு தேங்காய் துருவ (தேங்காயோடு சேர்த்து விலை) 50 ரூபாய். அவ்ளோதான். நான் வார இறுதியில் இரண்டு தேங்காய்களை துருவி வாங்கிக்கொண்டுவந்துவிடுவேன். ஃப்ரீசரில் வைத்துவிட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. //மேசை தேங்காய் திருவலகை - அஞ்சலி என்ற பிராண்டில் உண்டு.//
      இது மேசையில் ஒட்டி விட்டுத் திருவும் வகை எல்லோ, சில்வரில் வந்தது.. அது உதவவே உதவாது.. நாங்களும் இடையில் வாங்கினோம் எறிஞ்சாச்சு.

      இது இரும்பில் செய்வது, இப்படி மேசை விளிம்பில் பூட்டிப்போட்டுத் திருவுவது, நல்ல ஸ்ரோங்காக இருக்கும், பின்பு கழட்டி வைத்து விடுவேன்.

      எங்கள் சமையலில் அதிகம் பூத்தான் உபயோகிப்போம், அதனால எப்பவும் திருவியே வைப்போம், கட் பண்ணி வைப்பதில்லை..

      மரக்கறி சுண்டல்கள், மற்றும் புட்டுக்கு..

      ஓமோம் சில தமிழ்க் கடைகளில் வெளிநாட்டிலும் அப்படித் திருவிக் கொடுக்கினம் கடையிலேயே..

      Delete
  16. பலாப்பழம் - ஹா ஹா... இப்படி எனக்கு நேர்ந்திருந்தால் ரொம்பவே ஏமாற்றமாக இருந்திருக்கும்.

    பலாப்பழ காம்பைச் சுற்றியுள்ள முற்களின் எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கி, 5 ஆல் வகுத்தால் பழத்தின் உள்ளே எவ்வளவு சுளைகள் உள்ளன என்பது தெரிந்துவிடும். இந்தக் கணக்கைக் கேள்விப்பட்டிருக்கீங்களா?

    நான் நுங்கு, பலா, மாங்காய் ரசிகன். காம்பை ஒடித்து அதன் வாசனையை வைத்து மாங்காயின் தரம் கண்டுபிடிப்பேன். அதுபோல பலாப்பழத்தைப் பார்த்து (மேலே முள் தோல்) அதன் தரத்தை ஓரளவு கண்டுபிடிக்கத் தெரியும். முட்கள் கொஞ்சம் விலகி விலகி இருந்தால் உள்ளே சுளை ரொம்பவும் தரமானதாக இருக்கும். (இதெல்லாம் உங்கள்ட சொல்லி உபயோகம் இல்லை. Beggers are not choosers என்பதுபோல, அந்த ஊரிலெல்லாம் பலாப்பழம் வருவதே கனவு மாதிரி. அதில் எப்படி தேர்ந்தெடுக்க முடியும்? இதே இலங்கையில் என்றால் நிறைய பலாப்பழங்கள் கிடைக்கும், எங்கள் பண்ருட்டி, நாகர்கோவில் போல)

    ReplyDelete
    Replies
    1. //பலாப்பழம் - ஹா ஹா... இப்படி எனக்கு நேர்ந்திருந்தால் ரொம்பவே ஏமாற்றமாக இருந்திருக்கும்.
      ///

      வெட்டிப் பார்க்காமல் வாங்குவது ஆபத்துதான் போலும்:))..

      //இந்தக் கணக்கைக் கேள்விப்பட்டிருக்கீங்களா?//

      கேள்விப்பட்டிருக்கிறேன், கணக்கு சரியாக நினைவில்லை, ஆனா டொக்டர் சிவராமனோ ஆரோ சொல்லியிருக்கினம் ஸ்பீச் இல் என நினைக்கிறேன்.

      இந்த வம்பே வேண்டாம் என துண்டுதான் வாங்குவோம்ம்.. இங்கு தமிழ்க் கடையில் ஒரு பழத்தை வைத்து வெட்டி வெட்டிக் குடுப்பினம், ஆனா கனடா போனால் அங்கு பழமாக வாங்குவார்கள்.. நாமும் போயிருப்பதால் எல்லோரும் சாப்பிட என.... பலாப்பழம் குளிர்க்குணம் என்பதனால் அதிகம் சாப்பிடப் பயம், மூச்செடுப்பது கஸ்டம் போல வரும் சிலசமயம்... உண்மைதான் சிலர் பழத்தைப் பார்த்தே கண்டு பிடிச்சிடுவினம்..

      நுங்கு எனக்கும் பிடிக்கும்... எனக்கு மட்டும் பிடிக்கும் வீட்டில் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் நெ தமிழன்.

      Delete
  17. ஹலோ அதிரா எபி திங்க பதிவுக்குப் போட்டியா இங்கும் திங்கவா!!!!!ஹா ஹா ஹா அப்ப இப்ப ஸ்ரெப்ஸ் வாக்கிங்க் ஜிம் எல்லாம் இல்லையோ....கொரொனா வெயிட் போடவும் வைக்குதோ!!!

    ஆனா கண்டிப்பா இந்த ஷட் டவுன் பலரையும் வீட்டிலிருந்து தின்ன வைக்குது என்பது உண்மைதான்...ஹா ஹா ஹா

    பழமுதிர்ச் சோலை மிக மிக பிடித்த பாடல்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ..

      //ஹலோ அதிரா எபி திங்க பதிவுக்குப் போட்டியா இங்கும் திங்கவா!!//
      ஹா ஹா ஹா வீட்டுக்குள்ளேயே இருப்பதால், ஆருடனாவது தனகோணும் போல இருந்துதா.. அஞ்சுவையும் காணேல்லை தேம்ஸ்ல தள்ள:)) அதனால எங்கள் புளொக்குக்குப் போட்டியாகக் களம் இறங்கிட்டேன்ன்:)) அது டப்பா கீதா?:) ஹா ஹா ஹா..

      இப்போதான் டயட் கொன்றோல் முக்கியம்.. என்ன நடந்தாலும் நான் என் டயட்டையும் யோகாவையும் விடுவதாக இல்லை:)).. நெ தமிழன் பீச்ச்ச் நோட் திஸ் பொயிண்ட்:))..

      நன்றி கீதா:))

      Delete
    2. ஹாஹா ஹா அது அதே.பூஸாரா கொக்கா!!!

      .இங்கும் டயட் தான்...மொட்டை மாடியில் எட்டு போட்டு நடை...ஒரு 40 மினிட்ஸ். யோகா...குறிப்பா மூச்சுப் பயிற்சி!!

      கீதாவா கொக்கான்னேன் ஹா ஹா ஹ

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா ஆவ்வ் கீதா.. விடாதீங்கோ.. நானும் அப்பூடித்தான் நல்லவேளை இந்நேரம் ட்ரெட் மில் கை கொடுக்குது, கொஞ்ச நாளாக ஜிம்முக்கு ஓடியதால், ட்ரெட் மில் க்கு ஓய்வு.. இப்போ எல்லோரும் அதில எல்லோ ஏறீனம் நம் வீட்டில ஹா ஹா ஹா.

      Delete
  18. 2000களில், பஹ்ரைனில், பலாப்பழம், 1 கிலோ கிட்டத்தட்ட 60 ரூபாய். நான் 6 கிலோ அளவுக்கு கிட்டத்தட்ட முழு பலாப்பழம் வாங்குவேன் (எனக்கு பலாவின் தரம் தெரியும் என்பதால் தைரியமாக வாங்குவேன்). 2011க்கு அப்புறம், அதுவே கிலோ 140 ரூபாய் ஆகிவிட்டது. அப்புறம் வாங்குவதில்லை. என் அலுவலக நண்பர்கள் தமிழகம்/கேரளா வந்தால் எனக்காக பலாப்பழம் வாங்கி வருவர்.

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்போ நீங்கள் எங்கட அப்பாவைப்போல பலாப்பழப் பிரியர்.. ஊருக்குப் போனால், சொந்த பந்தம் எல்லாம் வீட்டுப் பலாப்பழம் கொண்டு வந்து குடுப்பார்கள் அப்பாவுக்கு.. ஒரு தடவை ஓவராகச் சாப்பிட்டுக் குளிர்க்குணம்போலாக்கி ஹொஸ்பிட்டலும் போய் வந்தார் ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))

      Delete
  19. கொரோனா - தேவையானதுக்கு மேலேயே மிக அதிகமாக செய்திகளும் அறிவுரைகளும் வருவதால், அந்த சப்ஜெக்ட் பற்றி பேசவே பிடிக்கலை. ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. அதேதான் நெ தமிழன், இப்போ கிட்டத்தட்ட மக்கள் நியூஸ் பார்ப்பதையே விட்டு விட்டார்கள், ஆனா ஒன்று ஒழுங்கா ட்றாமாப் பார்த்தோர் கதி அதோகதியாகிப்போச்சாமே:)).. சீரியல் எல்லாம் நின்றிட்டுதாம், சன் ரிவியில பாரதம், கம்பராமாயணம் போடீனமாம்ம்ம் ஹா ஹா ஹா என்னா கொடுமை சைனீஸ் புத்தாவே:))

      Delete
  20. பூசார் அழகு. எட்டிப் பார்க்கிறார் போல ஹையோ இந்த கொரொனா நம்ம ஏரியாவை டச்ச்சு பண்ணிருச்சோ? ன்னு

    இந்த அவல் மிக்ஸர் சோயா போடாமல் செய்வதுண்டு. சோயா போட்டதில்லை. போட்டுப் பார்த்தா போச்சு ஆனா கொரோனா போனதுக்கு அப்புறம் தான் வாங்க முடியும் ஹா ஹா....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் தனியே இருந்த பூஸ் பப்பீஸ் களுக்கெல்லாம் ஹப்பியோ ஹபி, இப்போ எந்நேரமும் மக்கள் வீட்டிலிருப்பதால்.

      சோயா கட்டாயமில்லையே கீதா, மிக்ஸர் எனில் எந்தப் பருப்பு, நட்ஸ் வகையும் சேர்க்கலாம், ஆனா பருப்பு வகைகள் எனில் ஊறவிட்டுப் பொரிக்கோணும், இதில் நான் சேர்த்திருப்பவை, டக் டிக் டோஸ் என.. உடனே செய்து சாப்பிட இலகுவான ஐட்டங்கள்..

      Delete
    2. ஹையோ அதே எங்கள் கண்ணழகிக்கும் அதே வெளியே போகாமல் இருப்பதால் ஒரே ஹாப்பி...

      ஆமாம் பருப்பு என்றால் ஊற வைத்துப் பொரிக்கணும். ஆமாம் நட்ஸ் சேர்க்கலாம் நம் விருப்பம் தானே....

      கீதா

      Delete
  21. கொரோனா மிக்ஸர் செமையா இருக்கு பார்க்க...ரொம்ப ரொம்ப யும்மி...

    கீர வடையும் நல்லாத்தான் இருக்கு

    இருங்க வீட்டில் கொஞ்சம் வேலை முடித்துவிட்டு வரேன். னெட் இருக்கணும் சாமீயீயீயீயீயீயீ..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நெட் இருக்கும் கீதா, கவலை வேண்டாம்ம்ம்ம்...

      மிக்க நன்றி .

      Delete
  22. இரண்டையும் அருமையாகவும் அழகாகவும் செய்துள்ளீர்கள்...

    காணொளி மீண்டும் இங்கு கண்டேன்...

    கலைஞன் வடிவேலு இல்லாமல் ஏதுமில்லை என்றாகி விட்டது...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ டிடி வாங்கோ..

      மிக்க நன்றி .. அதுதானே வடிவேல் அங்கிளாலதான் தமிழினம் இப்போ கொஞ்சம் கவலை மறந்து சிரிக்குது:))

      Delete
  23. புதுசு கண்ணா புதுசு. சும்மாவே கோக்கு,மாக்கா யோசித்து இருக்கிறதெல்லாம் போட்டு ஏதோ ரெசிபி செய்வீங்க. இப்ப கொரோனா வேறயா, வீட்டில இருந்து புதுசு புதுசா யோசிக்கிறீங்க. வந்த அஞ்சுவும் ஓடிட்டா.
    எனக்கு பூஸாரை பிடித்து போச்சு. நானும் பள்ளி நாட்களில் இப்படி தொங்கி ஆடியிருக்கிறேன். ஆனா பூஸார் தொங்குறமாதிரி இல்லையே..
    உங்க கொரோனா ஸ்நாக்ஸ் பார்க்க நல்லாயிருக்கு. சோயா பொறிக்க க்ரிஸ்பா வருதா. ஊறவைச்சு பொறிச்சீங்களா. சும்மாவே பொறிச்சீங்களா. ரவை பகோடா எனக்கு கோதுமை பிஸ்கட் மாதிரி இருக்கு. இதை செய்துபார்க்கலாம். இங்கு சாப்பிடுவார்கள்.
    மேசைத்திருவலகை, இருந்து துருவும் திருவலகையும் இருக்கு என நான் சொல்லமாட்டேன்.
    ஊசி இணைப்பு, ஊசிகுறிப்பு அருமை. வீடியோ பார்த்து சிரித்தாயிற்று. டிடி அண்ணா சொன்ன மாதிரிதான். கலைஞன் வடிவேலு இல்லாமல் ஏதுமில்லை என்றாகி விட்டது.

    ஆண்டவன் நினைப்பதை யாராலும் அறியமுடியாது.

    எங்கும்,எதிலும் இந்த பேச்சாக இருப்பதால் டிவி பார்ப்பதும் இல்லை. ஒரு மாதிரியா இருக்கு கேட்க. இங்கும் எல்லாரும் வீட்டில்தான், வெளியில் நல்ல வெயில் ஆனால் சரியான குளிர். அதனால் வெளிவேலை கூட செய்ய இயலாத நிலை.

    நீங்களும், குடும்பத்தினரும் வீட்டில் பத்திரமா,பாதுகாப்பா இருங்கோ அதிரா. இறைவன் சித்தம். நம் கையில் ஒன்றும் இல்லை. நல்லதை நினைப்போம்.Take care.

    ReplyDelete
    Replies
    1. ஆ.. கீரைவடை நான் செய்திருக்கிறேனே. நல்லாயிருக்கும். நான் 2,3 பேர் வீட்டில் பார்த்தேன். பெரிய புத்தா வைத்திருக்கினம். குட்டியா என்னிடம் இருக்கு.

      Delete
    2. வாங்கோ அம்முலு வாங்கோ

      //புதுசு கண்ணா புதுசு. சும்மாவே கோக்கு,மாக்கா யோசித்து இருக்கிறதெல்லாம் போட்டு ஏதோ ரெசிபி செய்வீங்க. இப்ப கொரோனா வேறயா,///

      ஹா ஹா ஹா அதிராவை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்:)) இது புரியாமல்தான் ஜேகே ஐயாவுக்கு அடிக்கடி என்னோடு குழப்பம் வருது ஹா ஹா ஹா:))..
      நிலைமைக்கு ஏற்ப புழைக்கத் தெரியோணுமெல்லோ:)..

      //நானும் பள்ளி நாட்களில் இப்படி தொங்கி ஆடியிருக்கிறேன்.//
      ஹா ஹா ஹா நானும் அப்போ எங்கட வீட்டு சன்செட்டில் எட்டிப்பிடித்து தொங்கி ஆடுவேன்:).. இப்போ ஜிம் ல:)) ஹையோ ஹையோ..

      //சோயா பொறிக்க க்ரிஸ்பா வருதா. ஊறவைச்சு பொறிச்சீங்களா.//

      ஆஆஆஆஆஆஆஅ அது ரி ஆ? றி ஆ? பொரித்தல் என்றெல்லோ வரோணும்?:)).. ஊறவிடத் தேவையே இல்லை, கிட்டத்தட்ட கச்சான் பொரிச்சால் எப்படி இருக்குமோ அப்படி இருக்குது.

      //ரவை பகோடா எனக்கு கோதுமை பிஸ்கட் மாதிரி இருக்கு//

      ஊரில செய்வோமெல்லோ அம்முலு வெறும் கோதுமைக்கு உப்பு சேர்த்து, இப்படி குழைச்சு வெட்டிப் பொரிச்சு, பின்பு மிளகாய்த்தூள் பிரட்டுவதாக நினைவு.. அப்படித்தான் இதுவும் ஆனா சுடச்சுட சாப்பிட நல்ல மொறுமொறு:)).. மற்ற நாள் ஆனால் கொஞ்சம் ஹார்ட் ஆகிடுது.

      Delete
    3. //வெளியில் நல்ல வெயில் ஆனால் சரியான குளிர். அதனால் வெளிவேலை கூட செய்ய இயலாத நிலை//

      அப்படித்தான் இருந்தது இங்கும் ஆனா இன்று நல்ல வெதர், கார்டினில் கிளீன் பண்ணலாம் என நினைச்சேன், ஆனால் வீட்டில் கொஞ்சம் வேலை இருந்ததால விட்டிட்டேன்...

      எல்ல்லோருமே கவனமாக இருப்போம்... நல்லதே நடக்கட்டும்... செப்டெம்பர் உடன் தான் இங்கு நிலைமை வழமைக்கு திரும்பும் என்கின்றனர், அதுவரை இப்படித்தான் இருக்கப்போகுது போலும்.

      எங்களிடம் கொஞ்சம் புத்தாஸ் இருக்கினம் அம்முலு, சிலது கிஃப்ட் ஆக கிடைச்சது, கொஞ்சம் பெரிய பெரிய சைஸ்லயும் இருக்கு.

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
    4. பொறித்தல். தவறாக எழுதிவிட்டேன்.கைபேசி எனில் எனக்கு சில பிழை வந்துவிடும்.
      பொரித்தல் தான் சரி. சொறி.

      Delete
    5. அதுதானே பார்த்தேன்ன் அதிராவிடம் ஆரும் தப்பவே முடியாது.. இல்லை எனில் நான் டமிலில் டி எடுத்தும் என்ன பயன்ன்ன்ன்ன்ன்ன்?:))

      Delete
  24. மிக்ஸர் நன்றாக இருக்கிறது. கீரை வடை நன்றாக இருக்கிறது, நாங்கள் துக்கடா என்றுதான் சொல்வோம். மைதாவில் காரதுக்கடா, இனிப்பு துக்கடா அடிக்கடி செய்து முன்பு கொடுப்போம்.
    இப்போது மைதா சேர்க்க வேண்டாம் என்கிறார்கள், நீங்கள் செய்த முறையில் செய்து கொடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      அதேதான் நானும் வீட்டில் எப்பொதாவது பற்றிஸ்/ ரோல்ஸ் இப்படிச் செய்யவே பிளேன் ஃபிளவர் பாவிப்பேன்... இது ரவ்வை தான் அதிகம், குழைப்பதற்கு ஈசியாக இருக்க மட்டும் கொஞ்சமாக மா சேர்ப்பதால் நல்லது.

      Delete
  25. காணொளி அருமை சிரித்தேன் நானும்.( ஊசி இணப்பு)
    ஊசிக்குறிப்பு சொல்வது முற்றிலும் உண்மை.

    //கொமெடி பார்த்துச் சிரிப்பதிலும், மீம்ஸ் பார்ப்பதிலும் பாதி நேரம் போயிடுது:))..//

    கொரானா இணைப்பு அருமை. வடிவேலு துக்கத்திலும் சிரிக்கனும், துணிவுடனே நடக்கனும் என்று சொல்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அதேதான் கோமதி அக்கா, சிரிச்சால் மனப்பாரம் குறையும் கார்ட் அட்டாக் வராது:) ரென்ஷன் ஆக மாட்டோம், கவலை குறையும்:)).. அதனால சிரிச்சுக்கொண்டிருப்போம்.. மிகுதி இறைவன் விட்ட வழி...

      Delete
  26. பலா சொல்லும் நீதி அருமை.

    ReplyDelete
  27. // மேசைத்திருவலகை எத்தனைபேர் பாவிக்கிறீங்கள்?.//
    நான் பாவிப்பது இல்லை.
    ஆனால் என் அரிவாள்மனையை மேஜை மேல் வைத்து திருகிவிடுவேன் தேங்காயை.

    இன்று ஒரு தகவல் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஓ மேசையில் வைத்துத் திருவினால் ஸ்ரோங்காக இருக்குமோ?. எனக்கு திருவலகை ஆடக்கூடாது ஆடினால் எரிச்சல் வரும் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  28. அன்பு அதிரா, தாமதமாக வருகிறேன்.
    கண்ணில் எரிச்சல் கூடிவிட்டது. எல்லாம் இந்த ஹீட்டர் செய்யும் தொல்லை.
    உங்கள் பதிவு முழுவதும்
    ரசித்து ருசித்தேன். கீரை வடை ,பொரி ஃப்ரை, துக்கடா எல்லாமே கண்ணுக்கு விருந்து.
    அதிலும் பூனையார் படம் வெரி ஸ்வீட்.

    வடிவேலு காமெடி இப்ப ரொம்பத் தேவை.
    நானும் பாடல்களும், நகைச்சுவையும்
    கண்மூடிக் கேட்கிறேன்.

    ஊசிக்குறிப்பும், பலாச்சுளையும் அருமை.
    கொரோனா பற்றி அஞ்சாமல் பொறுமை காக்க வேண்டும்.
    காலம் தான் இதற்குப் பதில் சொல்லணும்,.

    பத்திரமாக இருங்கள் ஆரோக்கியத்தில் நம்பிக்கை வையுங்கள்.
    எல்லாம் நல்ல படியாகும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வல்லிம்மா வாங்கோ..

      ஓ ஹீட்டர் என்றாலே தொல்லைதான்.. உங்கள் றூமுக்குள் ஒரு பேசின் இல் கொஞ்சம் பச்சைத்தண்ணி வச்சி விடுங்கோ வல்லிம்மா... சென்ரல் ஹீட்டிங் ஒன்றும் பண்ணாது, எக்ஸ்ரா ஹீட்டர் பாவிச்சால்தான் தொல்லை. எங்கட அம்மாவும் எக்ஸ்ரா ஹீட்டர் பாவிப்பா பின்பு ஒவ்வொரு வருத்தம் சொல்லுவா ஹா ஹா ஹா.

      //வடிவேலு காமெடி இப்ப ரொம்பத் தேவை.
      நானும் பாடல்களும், நகைச்சுவையும்
      கண்மூடிக் கேட்கிறேன்.//

      அதேதான் வல்லிம்மா... மனதை இலேசாக்கும் விசயங்களில் செலுத்துவோம்... இப்போ இருக்கும் ஹொலிடேயை எஞ்சோய் பண்ணுவோம்ம்.. இனி நம் வாழ்க்கையில் இப்படி ஒரு ஹொலிடே வருமோ தெரியாதெல்லோ ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி வல்லிம்மா, எல்லோரும் நலம் வாழ நம் பிரார்த்தனைகள்.

      Delete
  29. வணக்கம் அதிரா சகோதரி

    பதிவு அருமை. பூசார் தொங்குவது போன்ற படம் அருமை. பூசாரை கண்டதும் இங்கு தினமும் பயத்தில் சாவதை விட நாமும் இப்படி தொங்கி விடலாமா என்ற எண்ணம் லேசாக வந்த போது, உங்களின் மிக்ஸர் போன்ற படசணங்கள் படங்களை பார்த்ததும், தொங்கும் ஆசை போய் "தங்கும் ஆசை" வந்து விட்டது. ஹா.ஹா.ஹா.

    முதலில் தலைப்பை பார்த்ததும் கொரோனா மிக்ஸர், பக்கோடா என்று அதன் பெயரில் அனைத்தும் இருக்கவும், ஒரு வேளை இப்படியெல்லாம் செய்து கொடுத்து, அந்த கொரோனாவை விரட்டலாமோ என நினைத்து விட்டேன். ஹா.ஹா.ஹா. அதன் பின்தான் அதன் பிடியை பற்றிய பயம் விரட்ட நாம் செய்து சாப்பிடலாம் என்பதை புரிந்து கொண்டேன்.

    மிக்ஸரும், கீ.வடை, பக்கோடா படங்கள் அருமையிலும், அருமையாக உள்ளது. முதலில் ஒரு கை அனைத்தையும் சாப்பிட்டு விட்டு பிறகு அனைத்தையும் பார்க்க வருகிறேன். கீ. வடை எடுத்தால் புத்தர் கோபித்து கொள்வாரோ..? அவருக்கே அங்கு மூணு எண்ணம்தான் உள்ளது. ஆமாம் மாஸ்கை எடுத்து விட்டுதானே சாப்பிட வேண்டும். ஒரு வேளை எங்களுக்கு கொடுக்கும் நோக்கமில்லாததால்தான் மாஸ்குடன் வரச்சொன்னீர்களோ? ஆண்டவா.. ஒன்னும் புரியவில்லையே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ...

      அட 3ர்ட் கிளாஸ்ல ஓடி வந்து ஏறிட்டீங்கள் இம்முறை:).. அஞ்சு கார்ட் பெட்டியில மாட்டிக்கொண்டா ஹா ஹா ஹா.

      //பூசாரை கண்டதும் இங்கு தினமும் பயத்தில் சாவதை விட நாமும் இப்படி தொங்கி விடலாமா என்ற எண்ணம் லேசாக வந்த போது, உங்களின் மிக்ஸர் போன்ற படசணங்கள் படங்களை பார்த்ததும், தொங்கும் ஆசை போய் "தங்கும் ஆசை" வந்து விட்டது. ஹா.ஹா.ஹா.//

      ஹா ஹா ஹா அதுதானே.. முதலில் சாப்பிடுவோம் பின்பு போயிருந்து கொரொனா பற்ற்றிக் கவலைப்படலாம்:))..

      //ஒரு வேளை இப்படியெல்லாம் செய்து கொடுத்து, அந்த கொரோனாவை விரட்டலாமோ என நினைத்து விட்டேன்//

      ஆஹா. ஹா ஹா ஹா இதை நான் மறந்துவிட்டேனே:)).. புரளியைக் கிளப்பி விட்டிருக்கலாம் சே சே ஜஸ்ட்டூஊஊஊ மிஸ்ட்டூஊஊஊஊ:))

      //கீ. வடை எடுத்தால் புத்தர் கோபித்து கொள்வாரோ..? அவருக்கே அங்கு மூணு எண்ணம்தான் உள்ளது. //
      அவர் கோபிக்க மாட்டார்.. அதற்கும் சிரிப்பார்ர்.. அது ஒற்றை எண்ணில வச்சேன்ன்:)).

      //ஆமாம் மாஸ்கை எடுத்து விட்டுதானே சாப்பிட வேண்டும்//

      அது கிட்ட வந்து மிக்ஸரை வடையை எடுத்துக் கொண்டு,..4 அடி தள்ளிப்போய் நிண்டு மாஸ்க்கைக் கழட்டிப்போட்டுச் சாப்பிடலாம்:)).. ஹையோ ஆண்டவா இதை எல்லாம் என்னைச் சொல்ல வைக்கிறியே லாபிங் புட்டாஆஆஆவே:)).. ஹா ஹா ஹா..

      Delete
  30. வணக்கம் அதிரா சகோதரி.

    இந்த "மேசைத்திருவலகை" என் அண்ணன் வீட்டிலிருக்கிறது. உங்களுடையது மிக அழகாக உள்ளது.

    என்னிடம் உள்ள அரிவாள்மனையிலேயே மேல் பகுதி துருவியில் தேங்காய் துருவிக் கொள்வேன். தேங்காய் துருவி எனவும் தனியாக உள்ளது. துருவுவதற்கு சோம்பல் உள்ள பொழுதில், தேங்காயை துண்டுகளாக்கி மிக்ஸியில் ஒரே அரை... அவ்வளவுதான்..

    பலாப்பழம் உங்கள் வீட்டில் காய்த்ததா? நன்றாக உள்ளது. நானென்னவோ பலாப்பழம் அதிகமாகவே சாப்பிட்டதில்லை. ஊசி இணைப்பும், ஊசிக்குறிப்பும் வழக்கம் போல் அருமை. எப்போதோ வந்த நடிகர் வடிவேலு நகைச்சுவை இப்போதுள்ள கொரோனாவை அடையாளம் படுத்துபடியாகவே வந்திருக்கிறது. காமெடி இப்போது மன ஆறுதலுக்கு தேவையாக உள்ளது. எல்லோருமே கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. அனைவரும் அனைவருக்காகவும் பிரார்த்தித்து கொண்டேயிருப்போம். இப்படியான பதிவுகளை படிக்கும் போது சற்று கவலை மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மேசைத்திருவலகை அரிவாளோடு சேர்ந்திருப்பதை இந்தியாவில பார்க்கிறேன், பார்க்கப் பயமாக இருக்கும்...

      நாங்கள் ஒரு காலட்த்ஹிலும் தேங்காயை உடைத்து, சொட்டுக்களாகப் பாவிப்பது கிடையாது,
      தேங்காய், சிரட்டையை விட்டுக் கழண்டிட்டால் கூட, அதைக் கஸ்டப்பட்டுத் திருவி எடுத்திடுவோம்ம்.. அதுவும் முடியாத பட்சத்தில் சட்னிக்கு பாவிப்பதுண்டு.

      //இப்படியான பதிவுகளை படிக்கும் போது சற்று கவலை மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். //
      மிக்க நன்றி.. மிக்க நன்றி கமலாக்கா.

      Delete
    2. //பலாப்பழம் உங்கள் வீட்டில் காய்த்ததா? நன்றாக உள்ளது. நானென்னவோ பலாப்பழம் அதிகமாகவே சாப்பிட்டதில்லை// - இவங்க அதிராவைப் பாராட்டறாங்களா இல்லை கிண்டல் பண்ணறாங்களா?

      Delete
    3. @ நெ தமிழன்
      //இவங்க அதிராவைப் பாராட்டறாங்களா இல்லை கிண்டல் பண்ணறாங்களா?///

      ஓ அப்பூடியா நெ தமிழன்?:)).. சே சே தெளிஞ்ச நீரோடையா இருந்தேனா.. இப்போ மெதுவாக் கலக்கி விட்டிட்டாரே:)) ஹா ஹா ஹா..

      Delete
    4. ஒரு முழு பலாப்பழத்தில் ஒரே ஒரு சுளைதான் இருப்பதுபோல படம் போட்டிருக்கீங்க..... அது சூப்பர்னு எழுதினா சந்தேகம் வருமா வராதா?

      Delete
    5. வணக்கம் சகோதரி

      ஆகா..! சகோதரர் நெல்லை தமிழர் பலாப்பழத்தை திருப்பி போட்டு... சே.. சே. (உங்களை மாதிரியே எனக்கும் டங்கு ஸ்லிப்பாகுது.) பிளேட்டை திருப்பி போட்டு விட்டார் போலும். ஹா. ஹா. ஹா.

      எனக்கு பலாப்பழம் சிறு வயதில் சாப்பிட ஆசை. ஆனால் அவ்வளவாக கிடைத்ததில்லை. எங்கள் அம்மா பலாப்பழம் அவ்வளவாக சாப்பிட கூடாதென தடை போடுவார். இப்போது சீசன் உள்ள போதும், சாப்பிட முடியவில்லை. அது வாயு, சளி பிரச்சனைகளை அதிகமாக்குகிறது. அதைத்தான் குறிப்பிட்டேன்.

      நேற்று வரை தெளிந்த நீரோடையாக என் கண்களுக்கு தெரிந்த அதிராவின் அழகு மனம் இன்று கொஞ்சம் கலங்கிய குட்டையாகத்தான் தெரிகிறது..! இப்பதிலை படித்தவுடன் மீண்டும் தெளிந்த நீரோடையாக மாறுங்கள். ஹா ஹா ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    6. உங்கள நெம்ம்ம்ம்பி.. இப்போ தெளிஞ்சிட்டேன்ன் கமலாக்கா:).

      Delete
    7. நம்பித்தான் ஆகவேண்டும். கொரோனா மிக்ஸர் என்று தெரிந்தும், உங்களை நம்பி நாங்க பார்க்கவும், சாப்பிடவும் வரவில்லையா? ஹா.ஹா.ஹா.ஹா.

      Delete
    8. அதானே.. என் மிக்ஸர் சாப்பிட்டோரைக் கொரோனா நெருங்காது!:)..

      Delete
    9. Rendum ondruthaan 😂😂😂😂😂😂

      Delete
  31. சுவையான குறிப்புகள். பகோடா செய்து பார்க்கலாம்!

    எப்போழுதும் போல ஊசிக் குறிப்புகள், இணைத்த பாடல் என அனைத்துமே ஸ்வாரஸ்யம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  32. ஸ்ஸ்ஸ் யப்பா டயர்ட் போயி :) அது தூங்கலாம்னு நினைச்சாலும் கண்ணுமூடினாலும் உங்க ரெசிப்பீஸ் இமையை திறக்குது :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      //அது தூங்கலாம்னு நினைச்சாலும் கண்ணுமூடினாலும் உங்க ரெசிப்பீஸ் இமையை திறக்குது :)//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் என்ன கொரொனா ஸ்பிறே அடிச்சா வச்சிருக்கிறேன்:)) ஹா ஹா ஹா..

      Delete
  33. அந்த மிச்சரில் :) கறுப்பா தீஞ்ச கலரில் இருக்கே அது என்ன ??? சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன் .நீங்களே சாப்பிடுங்க அதை :)

    ReplyDelete
    Replies
    1. //சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன்// உப்பூடி எல்லாம் கொஸ்ஸன் கேட்டால்.. பிறகு அந்த உ.. படத்தைப் பப்ளிஸ் பண்ணி விட்டிடுவேனாகும் சாக்கிர்ர்ர்ர்ர்ர்ர்தை:))

      //நீங்களே சாப்பிடுங்க அதை :)//

      ம்ஹூம்ம்.. கடசியா வந்து கார்ட் பெட்ட்டியில ஏறினால் அது எங்கே மிஞ்சி இருக்கப் போகுது உங்களுக்கு.. அம்முலுவே இம்முறை ஸ்பீட்டா ஓடிவந்து பாதியை அடிச்சிட்டா:)) ஹா ஹா ஹா..

      Delete
  34. பாவம் அந்த புத்தா :) அவர்பாட்டுக்கு சிரிச்சிட்டு இருப்பார் இனிமே அவர் சிரிப்பே போச்சு உங்க கீரை வடாவை பார்த்து :) laughing புத்தாக்கு வந்த ஜோதனை :)))))))) 

    ReplyDelete
    Replies
    1. அவர் சிரிப்பதே என் கீரை வடையைப் பார்த்த ஜந்தோஜத்தில ஆக்கும்:))

      Delete
  35. ஒரு டவுட் அந்த மிக்ஸரில்ப்பூண்டை தட்டி பொறிச்சி சேர்த்திங்களா ?? பார்க்க முழுசா பொரிச்ச மாதிரிலா இருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. ///தட்டி பொறிச்சி சேர்த்திங்களா ?? பார்க்க முழுசா பொரிச்ச மாதிரிலா இருக்கு :)//

      ஆங்ங்.. இங்கின எல்லோருமே மாட்டி.. அது பொரித்தல் எனத்தான் வரோணும்.. பொறிப்பது என்பது வேறு.. அச்சுப் பொறித்தல்.. ஆங்ங்ங் அதிராவுக்குத் தமிழ்ல டி ஆக்கும்.

      ஏனெனில் பலபேர் பொறிக்கிறது என்கினம்.. அது தப்பென நான் நினைக்கிறேன்...

      அது வாசனைக்காக மெதுவா தட்டித் தோலுடன் பொரிச்சேன் அஞ்சு.. சூப்பரா இருக்குது.

      Delete
    2. பொரித்தல்//

      ஹலோ  சின்ன ரி தான் கரெக்டு .இது அவசர டப்பிங்கில் பெரிய றி வந்ன்னு :) ஸ்ஸ்ஸ்ஸ் ரொம்பதான் பில்டப்பா இருக்கே :) ரி மேட்டரில் 

      Delete
    3. //AngelMonday, March 30, 2020 10:54:00 pm
      பொரித்தல்////

      ஹையோ ஆண்டவா தப்பை ஒத்துக்கொள்ளவே மாட்டாவாமே:)) கர்:)).. கூகிளில் தேடி வந்து ஜொள்றா.. நான் உங்களை வோச் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேனாக்கும்:)).. ரி என்பதுதான் கை மாறி அவசரத்தில வரும், ஆனா றி என்பது சிஃப்ட் பட்டினையும் சேர்த்து தட்டினால் மட்டும்தானாக்கும் வரும் இதிலெல்லாம் கை மாறி நடக்காது.. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது... சே..சே.. ஆருமே அதிரா சொன்னா நம்ப மாட்டினமாம்,,:)).. கையும் களவுமாப் பிடிச்சும் நழுவிட்டாவே:))

      Delete
  36. //ரவ்வை ஒரு கப், பிளேன் ஃபிளவர் கால் கப், உப்பு, சில்லி ஃபிளேக்ஸ் இவ்ளோதான் மற்றர்:)).//
    இதை பார்த்ததில் மீண்டும் தலை சுத்துது :))))))))))அதுவும் டயமண்ட் கட்ஸ்னு சொல்றதை :) பகோடாவாக்கிருக்கிங்க :) பகோடானா இதை பார்த்து அந்த பகோடாவே செத்துடும் 

    ReplyDelete
    Replies
    1. அதிராட ஸ்டைலே வேற ஆக்கும்:)).. என் வழீஈஈஈஈஈஈஈஈ தனீஈஈஈஈஈஈஈ வழீஈஈஈஈஈ:)).. அடுத்தவர்கள் ஜொள்ளும் பேரை எல்லாம் நான் கொப்பி பண்ணி வைக்கமாட்டேனாக்கும்:)) ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வழி விடுங்கோ மீ போகோணும்:))

      Delete
  37. /நடுவில் கொஞ்சம் உடைத்துப் பெரிதாக்கிக் காட்டியிருக்கிறேன், ஏனெனில் எவ்ளோ கிரிஸ்ப்பியாக இருக்குது என்பதைக் காட்டவே:))//
    ஹலோ அன்னிக்கு கிச்சன் hammer வாங்கினீங்களே இதுக்குதான் யூஸ் பண்ணிங்களோ :)

    ReplyDelete
    Replies
    1. இல்ல அது பத்திரமா இருக்குது.. ஆராவது ஸ்கொட்லாண்ட் வந்தால் உபயோகப்படக்கூடும் என:))

      Delete
  38. /மேசைத்திருவலகை//
    ஐ பேர் நல்லாருக்கே :) கொஞ்சம் உங்க பட்டப்பெயர் லிஸ்டில் வச்சிக்கோங்க இதையும் :)
    நாங்க இதை தேங்காய் திருவி னு சொல்வெம் .என்கிட்டயும் இருக்கு ஆனா கணவர் தான் திருவுவார் நான் தொட தடா  :)இது மட்டுமில்ல ஸ்கின் பீலர் கூட தொட தடா :) அன்னிக்கு 3 தேங்கா asda வில் வாங்கி திருவி வச்சாச்சு  

    ReplyDelete
    Replies
    1. திருவும்+பலகை = திருபலகை... என வந்திருக்கும் அது பேச்சு மொழியில் திருவலகை:))..

      Delete
    2. எங்கள் வீட்டிலும் திருவலகைனுதான் சொல்லுவோம் ஏஞ்சல்...

      கீதா

      Delete
    3. ஆஆ அப்படியோ கீதா... ஹை ஃபைவ்... நோஓஒ வாணாம்ம் வணக்கம்.. 4 அடி தள்ளி நிண்டு.

      Delete
  39. //நமக்கு அளந்ததுதான் அளவு:)) அடடா பலா வுக்கு இவ்ளோ பாதுகாப்பா :))
    மனிதன் ஆடிய ஆட்டமென்ன :) இப்போ நினைக்கும்போது சிரிப்பே வருது எல்லாம் அவனுக்கே வேணும்னு நினைச்சா இப்படித்தான் 

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே இப்போ பெற்றோல் விலைகூட இறங்கிவிட்டது ஹா ஹா ஹா.. அவ்ளோ அடக்கொடுக்கமாகிட்டினம் மக்கள்:))

      Delete
  40. ஹாஹா வடிவேலு ரியல் வெடிவேலு :) காணொளி ரசித்தேன் 

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அஞ்சு.. மகாபாரதக் கதை படிக்க ஓடோடி வந்திடுங்கோ:))

      Delete
    2. எண்ட தேவனே :) எங்களை இந்த கதை சொல்லிக்கிட்டருந்து மட்டும் காப்பாத்திடுங்க அந்த கொ கொ கொரோனவை நாங்களே டீல் பண்ணிக்கிறோம் :)என்ன சோதனை மஹாபாரதத்துக்கும் கம்பராமாயணத்துக்கும்  அச்சோ பிரியா கையை பிடிங்க நாம் ஓடிடலாம் 

      Delete
    3. //மகாபாரதக் கதை படிக்க ஓடோடி வந்திடுங்கோ:))// - கூடவே தலைசுற்றலுக்கு மருந்தும், இராமாயணப் புத்தகமும் கொண்டுவந்திடுங்கோ. அதிரா எழுதும் மகாபாரதப் பகுதி எங்க இருக்குன்னு இராமாயணப் புத்தகத்திலும் தேடிப்பார்க்கலாம். என்ன ஒண்ணு... திருதிராஷ்டிரன் சீதையைக் கல்யாணம் செய்துகொண்டான் என்று எழுதி, இது எந்தப் புத்தகத்தில் இருக்கும்னு நம்மைக் குழப்பிடுவாங்க.

      Delete
    4. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எதுக்கு எல்லோரும் இப்பூடிப் பதட்டப்படுறீங்க:)).. ஹா ஹா ஹா அதிராவாலதானே உங்களுக்குப் பல ராமாயண டவுட்ஸ் கிளியர் ஆனது:)) ஹா ஹா ஹா..

      Delete
    5. @நெல்லைத்தமிழன் 
      ஆழ்வார்களையும் நாயன்மார்களையும்  சேர்த்து இந்த பூனை குழப்பியதை மறக்க முட்டியும்ம்மா ??  :)அல்லது லவனையும் குசனையும் சீதைக்கு  தம்பி ஆட்களாக்கியத்தைத்தான் மறக்க முடியுமா ?? எதோ  எங்க மங்கை மிஸ் புண்ணியத்தால் என் தமிழறிவும் கொஞ்சம் புராண அறிவும் பிழைக்குது :))
      இவ்ளோ சொல்றது எதுக்குன்னா வரலாறு முக்கியம் அமைச்சரே :)))))))))

      Delete
    6. ஆரம்பத்திலேயே இப்படிலாம் நாம எழுதினோம்னா, இடுகை போடவே பயப்படுவாங்க. ரொம்ப என்கரேஜ் பண்ணற மாதிரி எழுதணும். அப்போதான் தைரியமா இடுகை போடுவாங்க. அதுக்கப்புறம் ஒவ்வொரு வாக்கியத்திலும் நிறைய மிஸ்டேக் கண்டுபிடிக்கலாம்.

      இப்போதைக்கு மஹாராமாயணம் அதிரா சூப்பரா எழுதப்போறாங்கன்னு சொல்லிவைப்போம்.

      Delete
    7. @அஞ்சு
      //இவ்ளோ சொல்றது எதுக்குன்னா வரலாறு முக்கியம் அமைச்சரே :)))))))))//

      ஹா ஹா ஹா வரலாறு மாற்றப்படலாமெல்லோ:))..

      //
      நெல்லைத் தமிழன்Wednesday, April 01, 2020 6:47:00 am
      ஆரம்பத்திலேயே இப்படிலாம் நாம எழுதினோம்னா, இடுகை போடவே பயப்படுவாங்க.//

      ஹா ஹா ஹா நான் எண்டைக்கும் முன்னே வச்ச காலைப் பின்னே வைக்க மாடேனாக்கும்:)) பிக்கோஸ்ஸ் என்னில எனக்கு அவ்ளோ நெம்பிக்கை:)) ஹா ஹா ஹா.. தோஓஓஓஓஓஓஓஓ வருது விரைவில் எதிர்பாருங்கோ.. கொஞ்சம் பெயர்த்தடுமாற்றம் இருக்குது:)).. துரியோதனன் ஆர் என்பதில:)) அதைக் கொன்ஃபோம் பண்ணியதும் போஸ்ட் எழுதிடுவனாக்கும்:)).. என் விருப்பம் நம் மக்களுக்கு கம்பராமாயணம்.. மகாபாரதம் எல்லாம் ஜொள்ளிக்குடுக்கோணும் என்பதே:)) அது டப்பா நெ தமிழன்?:)) ஹா ஹா ஹா..

      Delete
    8. @ நெல்லைத்தமிழன்  ஹையோ ஹயாயோ இதெல்லாம் பார்த்துமா   சும்மா இருக்கீங்க  //கொஞ்சம் பெயர்த்தடுமாற்றம் இருக்குது:)).. துரியோதனன் ஆர் என்பதில:))//

      Delete
    9. //ஹா ஹா ஹா நான் எண்டைக்கும் முன்னே வச்ச காலைப் பின்னே வைக்க மாடேனாக்கும்:)) பிக்கோஸ்ஸ் என்னில எனக்கு அவ்ளோ நெம்பிக்கை:)) //

      அதே அதே அந்தே அஃக்தே :) அந்த நம்பிக்கையை வச்சிதானே தகிரியமா நான் கலாய்ச்சேன் 

      Delete
    10. உங்க பதிவு ஸ்ட்ரோங்கா இருக்கணும் மியாவ் அது அதை பார்த்து covid 19 துண்டைக்காணோம் துணியக்காணோம்ன்னு ஓடணும் அப்டி ஒரு போஸ்டை போடுங்க :)))))))))))))))

      Delete
    11. ஹா ஹா ஹா சொல்லிட்டீங்களெல்லோ அஞ்சு:)) இனிக் கவலையை விடுங்கோ விரைவில் களம் இறங்குறேன்ன்:)).. ராமாயணம்.. சே..சே மகாபாரதம் சொல்லியே தீருவேன்:))..

      அது துரியோதனனின் சண்டையில ஒரு சிறு டவுட்:))).. ஹா ஹா ஹா..

      Delete
  41. அதிரா சொன்னேனே பகலில் நெட் ரொம்பப் படுத்தல் கணவருக்கும் காலேஜோடு பேச எல்லாம் இங்கு ஜூம் ஆப்பில் வீடியோ கான்ஃபெரன்ஸ் செய்கிறார்கள். ஸோ அவரும் சிரமப்படுகிறார். பகல் அவருக்குப் பெரும்பாலும் எனவே நானும் கிடைக்கும் நேரத்தில் நெட் வரும் போது எல்லாருக்கும் ஒரு அட்டெண்டன்ஸ் வைக்கோனுமல்லோ...அதான்..

    இப்ப நெட் நன்றாக வருது ஸோ மீதி கமென்ட்ஸ்கு இங்கு வந்துவிட்டேன். பின்ன உங்க பக்கோடாவைச் சாப்பிடாமல் போனா உங்களுக்கு ஃபீலிங்க் ஆகுமல்லோ...!!!!!!!

    அது சரி மாஸ்க் போட்டா எப்படிச் சாப்பிட முடியும் !!! மாஸ்க் போட்ட பிறகு மாஸ்கின் மேல் கை வைக்கக் கூடாதே ஆஹா இப்பத்தான் தெரியுது பூஸார் ஏன் எல்லாரையும் மாஸ்க் போட்டு வரச் சொன்னதுக்கு!!! ஹா ஹா ஹா ஹா ஹா.....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //பின்ன உங்க பக்கோடாவைச் சாப்பிடாமல் போனா உங்களுக்கு ஃபீலிங்க் ஆகுமல்லோ...!//
      அது.. அது கீதா:)) ஹா ஹா ஹா..

      Delete
  42. ஓ அதிரா இதை நாங்கள் மைதா கீரல் அல்லது மைதா சிப்ஸ் என்போம். மைதா டைமென்ட்ஸ் இப்படி..வெறும் மைதாவிலும் செய்வோம். கோதுமை மாவிலும் செய்வோம். மைதா கோதுமை மிக்ஸ் செய்தும்....மைதா ரவை சேர்த்தும் இந்த மூன்று காம்பினேஷனிலும் என்றும் செய்வதுண்டு. அரிசி மாவும் சேர்த்துச் செய்வதுண்டு.

    கொஞ்சம் பெருங்காயமும் சேர்த்துச் செய்வோம். காரத்திற்கு சில்லி அல்லது மிளகு கூடச் சேர்த்துச் செய்வதுண்டு. இதில் காரம் போடாமல் பொரித்துவிட்டு சுகர் சிரப்பில் தோய்த்தால் அதுவும் டேஸ்ட். காரம் போடாமல் மாவோடு சுகர் சேர்த்துப் பிசைந்தும் பொரித்துச் செய்வதுண்டு.

    உங்கள் கொ ப நல்லா வந்திருக்கு. எடுத்துச் சாப்பிட ஆசையா இருக்கு...கர்ர்ர்ர்ர்ர்ர் இப்படி மாஸ்க் போட்டால் எப்படிச் சாப்பிடுவது...நான் அப்படியே பௌலோடு எடுத்துப் போகிறேன் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இப்பூடிப் புதுசு புதுசா கண்டுபிடிச்சால்தானே கீதா, வருங்காலத்தில ஹோட்டேல்களில் டிஸ் கள் அதிகமாகும்:) ஆரோ கண்டு பிடிச்சமையாலதானே புதுப் புது டிஸ் எல்லாம் நமக்குக் கிடைக்குது இப்போ:)).. ச்ச்ச்ச்ச்சும்மா பழைசை மாத்தாமல் அப்பூடியே சமைச்சுக் கொண்டிருக்கலாமோ:)) ஹா ஹா ஹா...

      Delete
  43. ஹை ஹை இந்த மேசைத் திருவலகை என் வீட்டில் இருக்கிறதே....ஸ்க்ரூ ஜாக் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். திருவலாம். நன்றாக இருக்கிறது. நான் துளசி வீட்டிற்கு போயிருந்தப்போ கடையில் பார்த்து வாங்க் நினைச்சப்ப துளசியே வாங்கிக் கொடுத்துவிட்டார். ஆனால் என்னோடது இப்படிச் சுற்றுவதில்லை. கிச்சன் டாப்பில் ஜஸ்ட் மேடையோடு செருகி வைத்து அப்படியே திருவ வேண்டும். படம் போடுகிறேன். உங்கள் திருவலகை நன்றாக இருக்கு ஆனால் எனக்கு இப்படிச் சுற்றித் திருவ வருவதில்லை எப்போதும் போல செய்வதுதான் வருகிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இது நடு மேசை விளிம்பில், ச்சுமம பூட்டி, நட் இருக்கு, முறுக்கி விட்டால் ஸ்ரோங்காக இருக்கும் கீதா... நான் இதில் இரு கைகளையும் மாத்தி மாத்தித் திருவுவேன்.. ஒரு தடவை நான் திருவுவதைப் பார்த்த,வீட்டுக்கு வந்திருந்த ஹஸ் இன் நண்பர்[குடும்ப நண்பர்].... திகைச்சுப் போயிட்டார்ர்.. என்ன இது இரண்டு கைகளையும் மாத்தி மாத்தி அதுவும் ஸ்பீட்டாத் திருவுறீங்கள் எனக் கேட்டார்ர் ஹா ஹா ஹா..

      Delete
  44. பலாக்காய் சொல்லும் தத்துவம் அருமை. அதே மேன் ப்ரொப்போஸஸ் காட் டிஸ்போஸஸ்.

    பலாக்காய் பார்த்ததும் ஆஹா ...ஷட் டவுன் முன்பு வாங்கிச் சமைத்தோம். அதன் பின் இப்போது வாங்க முடியாதே....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இலங்கையில் சிங்கள மக்கள்தான் மிக அருமையாக பலாக்காய் கறி சமைப்பார்கள் கீதா.

      Delete
  45. அதிரா வடிவேலு அந்த காமெடி சூப்பர் அது வாட்சப்பில் வந்தது. கொரோனா கேட்டு கேட்டுப் புளித்துப் போய்விட்டது...நான் செய்திகள் ரொம்பப் பார்ப்பதே இல்லை. மகனும் சொல்லிருக்கிறார். அதிகம் பார்க்க வேண்டாம் என்று.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் இப்போ கொரொனாக் கதை குறைஞ்சுவிட்டது, மக்கள் கொரொனாவுக்கு அடிமையாகி விட்டனர்:)) ஹா ஹா ஹா...

      ஒரு பயமொயி இருக்குது தெரியுமோ?

      “புதுசுக்கு வண்ணார் வெள்ளை கட்டி வெளுத்தாராம்” என.. அதுதான் இதுக்கும் பொருந்தும்:)) ஹா ஹா ஹா..

      Delete
  46. scotland ல corona பாதிப்பு எப்படி இருக்கு அக்கா.

    இங்க 1,000 தாண்டிடுச்சு confirmed cases.
    confirmed deaths 30வந்திருக்கு.


    எப்ரல் 14 வரைக்கும் lockdown.

    அங்க இது மாதிரி ஏதாவது ஸ்டெப் எடுத்திருக்குராங்கலா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மகேஷ் வாங்கோ.. நீங்க நலமாக இருப்பது மகிழ்ச்சி, நலமோடு இருக்க என் பிரார்த்தனைகள்.

      ஸ்கொட்லாண்ட் என எடுத்தால் மிகக் குறைவுதான் மகேஷ், ஆனா பிரித்தானியா எனப் பார்க்கும்போது கூடிக்கொண்டேதான் வருது.. நேற்று மட்டும் 400 ஐத்தொட்டிருகுது மரணம்:(..

      இங்கும் இப்போ அனைத்தும் மூடப்பட்டு வீட்டுக்குள்தான் எல்லோரும், ஆனா ஊரடங்கு இல்லை, சுப்பமார்கட்டுக்கள் திறந்திருக்குது.. தேவைக்கு மக்சிமம் இருவர் போய் வரலாம்.. மற்றும்படி பார்க் களுக்கும் போய் எக்ஸஸைஸ் பண்ணலாம் எனவும் அனுமதி குடுத்திருக்குது அரசு., ஆனா மக்கள் நன்கு ஸ்கொட்லாண்டில் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள்.. அனைத்து வீடுகளிலும் கார்கள் அப்படியே பார்க் பண்ணியிருக்குது.. மக்கள் நடப்பதைக்கூட காண்பது குறைவா இருக்குது, பெற்றோல் விலையும் இறங்கிப்போச்ச்ச்ச் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி தம்பி மகேஷ்.

      மிக்க நன்றி மகேஸ்.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.