நல்வரவு_()_


Thursday, 27 October 2011

பெற்றால் மட்டும் போதுமோ?

என்னவோ மனதுக்குள் ஒரு பல்லி சொல்லிக்கொண்டே இருக்குது.... 2012 இல ஏதோ நடக்கப்போகுதென:))) (ஆரும் சிரிக்கப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அதுக்குள் மனதில் இருப்பதை எல்லாம் எழுதிடோணும் என ஒரு தவிப்பு இருந்தாலும்... அவசரமாக பதிவுகள் போட நேரம் இடங்கொடுப்பதில்லை.

ஒரு குழந்தையை எவ்வளவு கஸ்டப்பட்டுப் பெறுகிறோமோ... அந்தளவுக்கு அவர்களை வளர்த்து ஆளாக்குவதும் பெரும் பொறுப்புத்தான். ஒவ்வொரு குழந்தை ஒவ்வொருவிதமாக இருக்கும்.

பிள்ளைகளின் குறும்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.





எங்கள் மூத்தமகனில் ஒரு பழக்கம், கீழே என்ன இருந்தாலும் உடனே எடுத்து ஒரு செக்கனும் தாமதமில்லாமல் வாயில் வைப்பார். இதனால் அவரின் பின்னால் எப்பவுமே நாம் ஒருவர் திரிவது வழக்கம். 10 மாதத்திலேயே குடுகுடு என ஓடத் தொடங்கிட்டார். எங்கள் அப்பா அம்மாவும் அந்நேரம் எம்மோடு இருந்தமையால், சரியான செல்லம்.

ஒரு தடவை என் கணவரும் நானும் மகனுமாக ரெயினில் போய்க்கொண்டிருந்தோம். அப்போ மகனுக்கு 12,13 மாதங்கள் என நினைக்கிறேன். நான் கோனர் சீட்டில் இருந்து, மகனை மடியில் இருபக்கமும் கால்களைப் போட்டபடி, என்னைப்பார்கும்பக்கமாக, என் நெஞ்சிலே சாய்ந்து வைத்திருந்தேன். நான் நெஞ்சில் பட்டன்கள் போட்ட ரீ ஷேட் போட்டிருந்தேன். துடினமாக இருக்கும் மகன், மிகவும் அமைதியாக படுத்திருந்தார். அப்போ நான் குழப்பினால் பிழை என பேசாமல் விட்டிருந்தேன்.

ஏனெனில் என்னில் ஒரு பழக்கம், மகனை நித்திரையாக்கிப்போட்டு, பின்பு பக்கத்தில் இருந்து... காலைத்தொட்டு கையைத்தொட்டு பார்த்துக்கொண்டிருப்பேன், அப்போ என் கணவர் சொல்வார், கஸ்டப்பட்டு நித்திரையாக்கிப்போட்டு, உடனேயே தட்டி எழுப்பிடாமல், நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கோ என:)).

அதை எண்ணியே, அமைதியாக இருக்கிறார் என விட்டிருந்தேன்.  திடீரென ஒருவிதமாக மூச்சுத் திணறி, விக்கல் எடுத்து அவதிப்பட்டார். எனக்கு என்ன என்றே புரியவில்லை, பக்கத்தில் இருந்த கணவருக்குப் புரிந்துவிட்டது, உடனே சரித்துப் பிடித்துக்கொண்டு முதுகிலே ஒரு தட்டுத்தட்டினார், என் ரீ ஷேட்டில் இருந்த பட்டின், தொண்டையிலிருந்து கீழே விழுந்தது. இப்போ நினைத்தாலும் கைகால் எல்லாம் கூசுது எனக்கு. அந்நேரம் நான் தனியே என்றால் என்ன செய்திருப்பேனோ தெரியாது.

உடனே அழ மட்டும்தான் தெரியுமெனக்கு, கையும் ஓடாது காலும் ஓடாது.

எப்பவுமே, துடினமாக இருக்கும் குழந்தைகள், அமைதியாக இருக்கிறார்கள் எனில் கவனிக்க வேண்டும்.... எனும் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.

பின்பொருநாள், ஒரு திருமணவீட்டுக்குப் போய் வந்து, எம்மை வீட்டிலே விட்டுவிட்டு கணவர் டியூட்டிக்குப் போய்விட்டார். திருமணத்தில் இருந்து ஒரு அம்மம்மாக்குழல் கொண்டு வந்திருந்தார் மகன். அவருக்கு 1 1/2 வயதிருக்கலாம். அதை பலூனைக் கழட்டிப்போட்டு விழுங்கிவிட்டார் குழலை. அம்மா நின்றமையால் ஓடிவந்து கைவிட்டு இழுத்தெடுத்திட்டா.

ஒரு இரண்டரை வயதானபோது, ஒருநாள். கணவர் ஹோலில் இருந்து பேப்பர் வேர்க்ஸ் செய்துகொண்டிருந்தார். நானும் அதிலிருந்து ரீவி பார்த்துக்கொண்டிருந்தேன், மகன் விளையாடிக்கொண்டிருந்தார். நாம் கவனிக்கவில்லை, தானே சொன்னார்...  “அப்பா கிளிப் வச்சிட்டேன்” என....  ஏதோ பெரிய சாதனையாளர்போல:)). எமக்குப் புரியவில்லை. பின் தானே மூக்கைக் காட்டினார், உள்ளே வெள்ளைக்கப்பி தெரிந்தது. பேப்பர் கிளிப். ஒருமாதிரி எடுத்துவிட்டார் கணவர்.

உடனே தான் ஏதோ சாதனையை நிலைநாட்டிவிட்டேன் என்பதுபோல, அப்பப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்கோ, அம்மப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்கோ.. மாமாவுக்கு... என இப்படி ஒவ்வொருவராக கேட்க கேட்க நாமும் ஃபோன் பண்ணிக் கொடுத்தோம். உடனே.. “நான் கிளிப் வச்சேன், அப்பா எடுத்திட்டார்” என எல்லோருக்கும் தன் சாதனையைச் சொன்னார். ஒரு வயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக நன்கு கதைக்கத் தொடங்கிட்டார்.

இப்படி அவரை வளர்க்க சரியான கஸ்டப்பட்டோம். ஆனா இப்போ அதற்கு எதிர்... அமைதியான பிள்ளையாக மாறியிருக்கிறார்:)))(என்னைப்போலவே ஹா..ஹா..ஹா..:)).





சின்னவர் அதுக்கு எதிர்.. குழப்படி குறைவு. வாயில் எதுவும் வைக்கமாட்டார். நம்பி எதையும் கொடுக்கலாம் விளையாடுவார். ஆனால் மூத்தவரால் பயந்திருந்தமையால், நாம் மிகவும் கவனம்.

நான் ஏதும் கொண்டுபோய் வாயில் தீத்தினால், என் கணவரும் மூத்தவரும் என்ன ஏதெனக் கேட்காமல் ஆஆஆ...வென வாங்கிச் சாப்பிடுவார்கள் (அவ்ளோ நம்பிக்கை என்னில்:))), ஆனா சின்னன் மட்டும் கடசிவரை வாய் திறக்க மாட்டார்... வட் இஸ் தட்? ஷோ மீ.... எனக் கேட்டு, காட்டிய பின்பே வாய் திறப்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).





ஒரு தடவை கனடா போயிருந்தபோது, ஒரு வேலைநாளில், எங்கட ஆன்ரி லஞ்க்கு வரும்படி சொல்லியிருந்தா. வேலை நாள் என்பதால் காரில் ஏற்றிப்போக யாரும் இருக்கவில்லை. ஆனால் அங்கு நல்ல பஸ், ரெயின் வசதி இருக்கிறது... வீட்டு முன்னாலே ஏறி, வீட்டு வாசலிலே இறங்கிடலாம். ஆனால் என் கணவருக்கு பொது வாகனங்களில் ஏறப் பிடிக்காது. எவ்வளவு செலவானாலும் ரக்‌ஷி பிடிப்பாரே தவிர. லோக்கல் பஸ், ரெயினில் ஏறியதே கிடையாது.

ஆன்ரி வீடு ஒரு மணிநேரம் ஹைவேயில் ஓட வேண்டும். ரக்‌ஷி பிடித்து ஏறிவிட்டோம். பின்னால் நான், பக்கத்திலே மூத்தவர், (பக்கத்தில்)அடுத்த கோனரிலே... எங்கட அப்பா மடியிலே சின்னவரை இருத்தி, பெல்ட்டும் போட்டபடி வைத்திருந்தார். சின்னவர் அப்பாவின் நெஞ்சிலே சாய்ந்து படுத்திருந்துகொண்டு, கதவின் லொக்கிலே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

ஹைவேயில் ஓடிக்கொண்டிருக்கும்போது படார் என கார் டோர் திறந்துவிட்டது.... எனக்கு ஒருகணம் என்ன நடந்ததென்றே தெரியாது.... நல்லவேளை, ரைவர் காரை நிறுத்திவிட்டார்.

அன்று தப்பியது என்னவோ புண்ணியம்தான், இல்லையெனில் வெளியே தூக்கி வீசியிருக்கும் அந்த வேகம்.

இதுக்காகத்தான் நாம் நெடுகவும் காருக்கு child lock என இருக்கிறது அதை எப்பவுமே போட்டிருப்போம். மூத்தவருக்கு 8 வயதானபோதுகூட சொன்னார், நான் வளர்ந்துவிட்டேன், என்பக்க லொக்கை எடுத்துவிடுங்கோ என:)). ஆனால் பல பேருக்கு இப்படி ஒரு லொக் இருப்பதே தெரியாது. இந்த லொக் அனைத்து வாகனங்களுக்கும் உண்டு, இதன் கொன்ரோல் ரைவரிடம் இருக்கும். இதை எப்பவுமே போட்டிருந்தால் பயம் குறைவு.

இதைப் படிக்கும் உங்களுக்கும்... பழைய ஞாபகங்கள் வருமே?:).

***********************************************************************

பின் இணைப்பு:


ஆருமே எனக்குப் பயப்புடுறமாதிரித் தெரியேல்லை.... கலவீன் வேஷம் போட்டுப் பார்ப்பம்:)))...

***********************************************************************

உஸ்ஸ்ஸ்..... ஆரோ வருகினம்... பின்னூட்டம்போடப்போல:))).. சத்தம்போட்டுக் குழப்பிடப்புடா:))

************************************************************************
மீனின்றி நீர் வாழும், ஆனால் நீரின்றி மீன் வாழாது
************************************************************************

Sunday, 23 October 2011

இதில ஒண்டுமே இல்லை:))

ஆண்டவா எல்லோரையும் காப்பாத்தூஊஊ... என்னையும்....தேன்ன்ன்:)))
ஹா..ஹா..ஹா.... அதுதான் தலைப்பிலேயே சொல்லிட்டனே இதில ஒண்டுமே இல்லை:) என்று, பிறகேன் ஓடிவந்து முறைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:)))).

சரி வந்திட்டீங்கள்... நான் கேட்ட பூஸ் ரேடியோவிலிருந்து ஒரு நெயில்சுவை... அதுதான் நக(கை)ச்சுவை:)))....

ஒரு ஊரில் பிரபலமான ஒரு பிக்பொக்கட் காரர் இருந்தார். அந்த ஊரில் அவரைப்போல் ஆராலேயுமே அவரை வெல்ல முடியாது, அவ்வளவு திறமைசாலி.

ஒருமுறை அவர் பக்கத்து ஊருக்குப் போயிருக்கிறார், அங்கு போய்க் கொஞ்ச நேரத்தில் பார்க்கிறார், அவரது பொக்கட்டில் இருந்த பேர்ஸைக் காணவில்லை, அதை ஆரோ களவெடுத்திட்டினம்.

அப்போ அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தன்னிடமே களவெடுத்தவரென்றால் அவர் எவ்வளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் என நினைத்து, அங்கிருந்தோரை விசாரித்திருக்கிறார்.

அவர்கள் சொன்னார்கள், அது அந்த ஊரில் இருக்கும் ஒரு பெண் தான், இதில் அவ மிகவும் கெட்டிக்காரி என்று.

இவருக்கு உடனே யோசனை தோன்றிட்டு, அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, அவவையே திருமணம் செய்துகொண்டால்... எவ்வளவு நல்லது என எண்ணி, அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, திருமணம் முடித்து விட்டாராம்.

அவர்களுக்கு ஒரு குழந்தை கிடைத்தது, ஹொஸ்பிஸ்டலில் குழந்தை கையை இறுக்கிப் பொத்திப்பிடித்தபடி இருந்ததாம்.... எல்லோரும் அதைப் பார்த்து, கஸ்டப்பட்டு கையை திறந்தார்களாம்.... அங்கே பிரசவம் பார்த்த ஒரு நேர்ஸின் மோதிரம் குழந்தையின் கைகளில் இருந்ததாம்:)))))(பிறக்கும்போதே பிக்பொக்கட்:))))....  

ஹா..ஹா..ஹா... இது எப்பூடி????..  இரு திறமைசாலிக்குப் பிறந்த, திறமைசாலி:))))).

குட்டியூண்டு இணைப்பு:)).
இதுவும் ஒருவிதப் புய்ப்பம்:). இங்கு ஓகஸ்ட் மாதம் தொடங்கி... அநேகமாக எல்லா வீட்டிலும் ரோட்டிலும் நிற்குது, நிறையப் பூக்கும் அழகாக இருக்கு. 2,3 நிறங்களில் கண்டேன்... அதிகம் பிங்தான்... குட்டியாகவும் இருக்கு, பெரியதாகவும் இருக்கு, அழகான புய்ப்பம்:)).

இவை குட்டி...



இவை பெரியவை..




பின் இணைப்பு::
ஆசைகுப் படம் படமாப் போட்டு, ஆசை தீர வெளயாடியாச்சு:)))... அதனால இம்முறை படம் போடும் பசளிக்குட்டியை:)) நீக்கியிருக்கிறேன்(அதுதாங்க. ..facility:)). என்னாது... ஜெய்!!! வாயில கைவச்சுச் சிரிக்கிறமாதிரித் தெரியுது:)))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

 என் கணவர் சொல்வார், ஆராவது எம் இடத்தில் ஏதும் புதுசா ரெஸ்ரோரண்ட், ரேக் எவே ஷொப் ஓபின் பண்ணியிருக்கு... அதில் அந்தச் சாப்பாடு ரேஸ்ட் இந்தச் சாப்பாடு ரேஸ்ட்... எனச் சொன்னால்... அப்பூடியா..... தெரியாதே என விளிக்கப்படாது:))... கேள்விப்படுவதெல்லாம் சாப்பிட்டுப் பார்க்கோணும் என(எல்லாம் ஒரு சாட்டுத்தான்:))... புதிதாக என்ன உணவுப்பெயர் கேள்விப்பட்டாலும் விடமாட்டார்... பெரும்பாலும் நாம் போகாத ரெஸ்ரோரண்ட், புஃபே இல்லை எனலாம்... இங்கு:)).

அதுபோலத்தான்... புளொக்கில் படம் போடலாமே என்றால்...ஙேஙேஙேஙேஙேஙேஙே...:)) என விளிக்காமல், மாயா புண்ணியத்தில் போட்டு, அஞ்சுவின்  உதவியோடு  ருசிச்சு,ருசிச்சு.. அனுபவித்திட்டோம்.... அலுத்தே விட்டது,  இனியும் ஆசை மீண்டும் வரும்போது, மீண்டும் போடுகிறேன்.

ஊசி இணைப்பு:
ஆரைப் பார்த்தாலும் அடிக்க வருகினம்:))).. இதுதான் இப்போதைக்குப் பாதுகாப்பான இடம்.
பட்டப் படிப்பு படிக்க வந்தேன், பரம்பரையை உயர்த்த வந்தேன் மியாவ்வ்வ்:)))
இது.... மாயாவுக்காக.. ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்ஸ்ஸ் உடன், நானே படம் பிடித்த  ரோஜாக்கூட்டம்..
============================================
 “உண்மையான வீரன் யார் என்றால், 
எதிரிகளை அதிகமாகத்தாக்கும்
 உடல் வலிமை பெற்றவர் அல்ல, 
தனக்கு வரும் கோபத்தை
 அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரன்”
============================================

Thursday, 20 October 2011

கடாபியும் Guard பெட்டியும்...



கடாபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி கேட்ட நேரம் தொடங்கி என் மனதில்.... பல பழைய நினைவுகள் மலரத் தொடங்கி விட்டன.

இன்று வெளியே போய் வந்து கதவைத் திறந்தோம், மூத்தமகன் ஓடிவந்து சொன்னார்.... கடாபியை சூட் பண்ணிவிட்டார்கள்... அதுதான் நியூஸ் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என.

அவருக்கு 11 வயதுதான், ஆனா இப்படியான விஷயங்களில் ஆர்வம் அதிகம், தேடித்தேடி நெட்டிலே நியூசெல்லாம் பார்ப்பார்... அதுக்கு முக்கிய காரணம் அவர்களது கிளாஸ் ரீச்சர் என நினைக்கிறேன்.

கடாபி ஒளித்திட்டார் என்றதும், நான் கவலைப்பட்டேன் அவரையும் பிடிக்கப்போகினமோ என, ஏனம்மா உங்களுக்கு அவரைப் பிடிக்குமோ எனக் கேட்டார், நானும் எனக்கு சரியான விருப்பம் எனச் சொல்லிட்டேன்.

அதிலிருந்து என்னிடம் அடிக்கடி கேட்டபடி, ஏன் அவரை உங்களுக்குப் பிடிக்கும், அவர் bad person பல ஆட்களைக் கில் பண்ணியிருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்.

இன்று சூட் பண்ணியாச்சு என்றதும், எனக்குக் கவலையாக இருக்கு எனச் சொன்னேன்.  எதுக்குக் கவலைப் படுறீங்கள், ஆட்கள் எல்லோரும் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள், ரீவியை வந்து பாருங்கோ எனச் சொன்னார். நான் சொன்னேன், நல்லவரோ கெட்டவரோ.. அது எதுவும் எனக்குத் தெரியாது, ஆனா அவரும் ஒரு man தானே என.

சரி இனி விஷயத்துக்கு வாறேன்.  நான் பேபியாக:) இருந்த காலத்தில், இடைக்கிடை வீட்டிலும் ஒவ்வொருவர்பற்றிக் கதைக்கும்போதும், கடாபியின் கதையும் வரும்.  பெயரும் ஒரு வித்தியாசமான பெயர் என்பதாலோ என்னவோ, என் மனதில் கடாபி பதிந்திட்டார். ஆனா அவர் யார், எங்கிருக்கிறார் என்ற விபரமேதும் தெரியாது, கேட்டுத் தெரிந்துகொள்ளவும் முற்படவில்லை அப்போ.

எங்கள் ரோட்டிலே ஒரு குட்டிக் கோயில் இருக்கு. அதில் சித்திரை மாதத்தில் சித்திரைக் கஞ்சி காய்ச்சுவார்கள். அங்கிருக்கும் அயலவர்கள் எல்லோரும் சேர்ந்து.

ரோட்டால் போகும், கார், லொறி, வான்.... எதுவாயினும் மறித்து எல்லோருக்கும் கஞ்சி கொடுப்பது வழக்கம்.  அப்படித்தான் ஒருநாள், வாகனங்களை மறித்து கஞ்சி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாகனங்களைக் கை காட்டி மறிப்பது, எங்கட அண்ணனும், அவரின் ஃபிரெண்ட்டாகிய.. எங்கட பக்கத்து வீட்டு அண்ணனும்.

நான் பார்த்துக்கொண்டு நின்றேன். எங்கட பக்கத்து வீட்டு அண்ணன் சரியான ஜோக்கர். அவர் வாய் திறந்தாலே நகைச்சுவைதான்... இப்பவும் அப்படியேதான் இருக்கிறார்.

அவர் ஒரு லொறிக்கு கை காட்டி மறித்தார். லொறி ரைவர், தாடியும் வைத்து தொப்பியும் போட்டு மெல்லியவராக இருந்தார்(இஸ்லாமியர்), அவர் ஸ்லோப் பண்ணிவிட்டு, பின்பு நேரமில்லை என கை காட்டிக்கொண்டு போய் விட்டார் நிறுத்தாமல். பெரும்பாலும் எல்லா மதத்தவர்களும் நின்று குடித்து விட்டுப் போவார்கள். அவருக்கு அன்று நேரமில்லைப்போலும்.

அதைப் பார்த்த பக்கத்து வீட்டு அண்ணன் சொன்னார் “அங்கபார் கடாபியை, லொறியை நிறுத்தாமல் போகிறார்” என. எனக்கு அது நகைச்சுவை எனத் தெரியாது. நான் மனதில் எடுத்துக் கொண்டேன்.... “ஓ.. வீட்டில் கதைக்கும் கடாபி இவர்தானோ” என்று.

அது முடிந்து, ஒருநாள் நாம் எல்லோரும் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போயிருந்தோம். அங்கிருந்த தியேட்டரில், பின்னால் கடைசியாக ஒரு பாதிச் சுவர் கட்டப்பட்டு, ஒரு அறைபோல இருக்கும், அதனுள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள்தான் இருப்பார்கள். ஒருவேளை அவர்களுக்கெனத்தான் அது கட்டப்பட்டிருந்துதோ எனக்குத் தெரியாது.

அதுக்கு முன் வரிசையில் நாம் இருந்தோம். இடைவேளை வந்துது. லைட் போட்டார்கள்....

--------------------சரி இங்கும் ஒரு இடைவேளை--------------------
திருமணத்துக்கு முந்தின காலத்தில். எங்கு போனாலும் அப்பாவோடுதான் போவது வழக்கம். அப்பாவில் ஒரு பழக்கம், சாப்பாடில்லாமல் இருந்தாலும், வெளிக் கடையில் ஏதும் வாங்கித் தரமாட்டார்.  சைவக் கடையில் மட்டுமே சாப்பிடுவோம், அல்லது நல்ல ஹோட்டல்கள், அதுவும் அப்பாவுக்கு நம்பிக்கையானவர்கள் ஆராவது அறிமுகப்படுத்தியதாயின் மட்டும் அசைவம் சாப்பிடுவோம்.

 பிரயாணம் எனப் புறப்பட்டால், சோடா, கோதுக்கடலை... இப்படியான சமைக்காத உணவுகள் மட்டுமே வாங்க விடுவார், நாமும் பழகிவிட்டோம், கேட்க மாட்டோம். ஆனா திருமணத்தின் பின்பு, கணவர் டாக்டராக இருந்தாலும்... என்ன கேட்டாலும் வாங்கித் தந்திடுவார். திருமணத்தின் பின்புதான், ரெயினில் அவித்த சோளன், வடை, ரால் வடை.. கோல் ஃபேசில், கொத்துரொட்டி... etc, etc,  எல்லாமே ஆசைக்குச் சாப்பிட்டிருக்கிறேன். அதுவும் ஒன்று சொன்னால், மூன்று வாங்குவார்..  அளவுக்கு அதிகமாக வாங்கி சாப்பிட முடியாமல் சாப்பிட்டு முடிப்போம். ஆருடைய புண்ணியமோ எந்த உபாதைகளும் ஏற்பட்டதில்லை.
-------------- இனி அந்த இடை வேளைக்குப் போவோம்------------

அப்பா எழுந்து கச்சானும், சோடாவும் வாங்கி வரப் போய்விட்டார்:)...  நான் கொஞ்சம் கதிரையால எழும்பி நின்று அப்படியே பின்னால் பார்த்தேன்... அன்று லொறியில் கண்ட அதே ஆள்... தாடியோடும், தொப்பியும் போட்டுக் கொண்டு இருந்தார். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை... உடனே பக்கத்திலிருந்த அண்ணனைத் தட்டிச் சொன்னேன்... “அண்ணன், அங்கே பார்.. கடாபி கார்ட்(guard) பெட்டியில் இருக்கிறார்"... என.

அண்ணனுக்கு வெட்கமாகிவிட்டது,  “அதிரா பேசாமல் இரு, சத்தம் போடாதே, அது கடாபி அல்ல”.... என்று என்னை அடக்கி விட்டார். வீட்டுக்கு வந்துதான் அதுபற்றிய விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அன்றிலிருந்து “கடாபி” என்பவர் என் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தார். என்னை அறியாமல் அவரில் என்னவோ எனக்கொரு பாசம் ஏற்பட்டிருந்தது... எனக்கு அவரது பெயர் கேட்டாலே ரொம்ப பிடிக்கும்.

ஆனால், இன்றுவரை அவரை நான் பார்த்ததில்லை, இன்று இறந்தபின்புதான், அவரின் படங்கள் பார்த்தேன். பிரித்தானியாவுக்கும் வந்து, முந்தின பிரதமர் ரொனி பிளேயரையும் சந்தித்துப் போயிருக்கிறார்... நான் என்னவோ பார்க்கத் தவறிவிட்டேன்.

அவர் நல்லவரோ கெட்டவரோ... அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் அவரது மரணம் கேட்டு என் மனம் கவலைப்பட்டது உண்மையே.

இப்படித்தான் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவர் பூட்டோ, அடுத்து சதாம் ஹூசைன்... அவரைத் தூக்குப் போடப்போகிறார்கள் என்ற நேரம் தொடங்கி என்னால் சாப்பிட முடியவில்லை, அதிலும் அடுத்த நாள் தூக்கியதையும் பார்த்துவிட்டேன்.... தாங்க முடியாமல் இருந்தது.

அதுபோல் முந்தின அமெரிக்க ஜனாதிபதி கிளிங்டனை ரொம்பப் பிடிக்கும். ஆனால் புஷ் ஐக் கண்ணில காட்டவே கூடாது:), ரீவியை விட்டு எழுந்துவிடுவேன், பாவம் அந்த மனிஷன் எனக்கொன்றும் செய்யவில்லை, ஆனால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.
இதனால்தானோ தெரியேல்லை:))


இங்கு நான் guard பெட்டி எனக் குறிப்பிட்டது பற்றி:)):
பிறந்ததிலிருந்து, நாம் ஒரே ரெயின் பிரயாணம் செய்வோம்... . எங்கள் மாமா ஒருவர் ரெயில்வே கார்ட் ஆக இருந்தவர். அப்போ அவர் எங்களைத்தூக்கிப் போய் எஞ்சினில் வைத்திருப்பார், guard's compartment இல் வைத்திருப்பார். அதனால் என்னைப் பொறுத்து கடைசியாக, பெட்டியாக இருந்தால்.... அது கார்ட் பெட்டி:)... என மனதில் பதிந்திருந்தது... அதனால் தியேட்டரில் கடைசியாக, பெட்டியாக கட்டப்பட்டிருந்தமையால்.... அதுவும் கார்ட் பெட்டி என மனதில் எண்ணியிருந்தேன்.....:)))

பார்த்தீங்களோ என் கற்பனைக்கு அளவேயில்லை:))).

ஊசி இணைப்பு:)

பேபி அதிரா, கையை எடுங்கோ, படிக்கிறவை எல்லோரும் பின்னூட்டம் போட்டுவிட்டுத்தான் போவினம், இல்லாட்டில் முதலை கடிச்சுப்போடுமெல்லோ:))).
======================================================
அப்பா: ஏண்டா பேப்பரில பரீட்சை முடிவு வந்திருக்கு, 
உன் பெயரைக் காணவில்லையே?...

மகன்: எனக்கு இந்த வீண் விளம்பரமெல்லாம் பிடிக்காதப்பா......:)).
======================================================

Sunday, 16 October 2011

நடுக்கடலில் போனாலும்....

நாய்க்கு நக்கல் தண்ணிதான்.... 

என ஒரு பயமொழி:) இருக்குது. அறிந்திருப்பீங்கள், கருத்தும் தெரிந்திருக்கும், இருப்பினும் நானும் ஒருக்கால் சொல்லுறன்... நாய்க்கு, சின்ன குட்டிக் கப்பில தண்ணி வைத்தாலும், நக்கித்தான் குடிக்கும், அதே நேரம் பரந்த கடல்ல கொண்டுபோய் விட்டாலும், நாக்கால நக்கித்தான் குடிக்குமே தவிர, செம்பில அள்ளியெல்லாம் குடிக்காதெல்லோ:))).



இதில இருந்து என்ன தெரியுது என்றால்... ஆராருக்கு என்ன அளந்திருக்கோ... அந்த அளவின்படிதான் எல்லாம் நடக்கும்... அளந்த அளவின்படிதான் எல்லாம் என்பார்கள்... 

அதேபோல்தான்... நானும் இம்மாதம், கடசி கிழமைக்கு 2 தலைப்பாவது போட்டிடலாம் என நினைத்திருந்தேன்:)))... ஆனா ஒன்று போடுவதற்கே பெரிய திண்டாட்டமாகிவிட்டது நேரம்..... அளந்ததை மாற்ற முடியுங்களா?:))).. சரி இதை விட்டுப்போட்டு மிகுதிப் பயமொழிகளைத் தொடர்வோம்.

இதை ரைப்பண்ணவே நேரம் கிடைக்கேல்லையே:)))


31.அந்திமழை அழுதாலும் விடாது
32.அத்திப்பழத்தை பிட்டுப் பார்த்தால், அத்தனையும் புழு.
33.அதை, விட்டாலும் கதியில்லை, அப்புறம் போனாலும் விதியில்லை.
34.அணை கடந்த வெள்ளம், அழுதாலும் வராது.
35.அன்னம் இட்டவர் வீட்டில், கன்னமிடலாமா?

36.அன்னைக்கு உதவாதவன், ஆருக்கும் உதவான்.
37.அன்பு இருந்தால், ஆகாததும் ஆகும்.
38.அன்றாடம் குடிக்கத் தண்ணி இல்லை, ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
39.அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா?
40.அயலூரானுக்கு ஆத்தோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.

41.அயல்வீட்டானுக்குப் பரிந்துகொண்டு, ஆம்படையானை அடித்ததுபோல்.
42.அரசன் இல்லாத நாடு, அச்சில்லாத தேர்.
43.அரிசி அளக்கும் படிக்கு, அரிசியின் விலை தெரியுமோ?
44.அரிசி ஆளாக்கானாலும், அடுப்புக்கல் மூன்று வேண்டும்.
45.அரிசி பகையும் ஆம்படையான் பகையும் போல்(கணப்பொழுது)

46.அருக்காணி முத்து, கரிக்கோலமானதுபோல்.

47.ஆறு போவதே போக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு.
48.ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார்? நான் யார்?
49.ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
50.ஆறிய கஞ்சி, பழங் கஞ்சி.

51.ஆறாவது பெண்ணானால், ஆறாவது நீறாகிவிடும்.
52.ஆரியக் கூத்தாடினாலும், காரியத்தில் கண்ணாயிரு.
53.ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். எண்டால்.. அது இதுதானாக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))

54.ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும், ஒரு சந்திரன் ஆகாது.
55.ஆரால் கேடு, வாயால் கேடு.

இதில் எனக்கு 40,45,46,51,55 இவைக்கு மட்டும் அர்த்தம் புரியவில்லை, ஆருக்காவது புரிந்தால் சொல்லுங்கோ.

=================இடைவேளை================
ஸ்ஸ்ஸ் சுகமா இருக்குதெனக்கு...:)) டோண்ட் டிசுரேப்பு மீஈஈ (அண்ட் இ:)).

எங்கட அம்முலு கொசுமெயிலுக்கு அனுப்பியிருந்தவ..
========இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்:)========

பின் இணைப்பு:
ஒரு கை ஓசை ஒலி எழுப்பாது, நல்ல நட்பும், நாலுபேர் உறவும், எமக்கு என்றென்றும் தேவை.

 ஹா....ஹா...ஹா..... இது எப்பூடி இருக்கு?:))).
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Tuesday, 11 October 2011

நாங்க புறப்பட்டு விட்டோம்ம்ம்:)))


இமாவும் மியாவும்:))... சே..சே... என்னப்பா இது ஆரம்பமே குழப்பிடுவம்போல இருக்கே அவ்வ்வ்வ்:)), ஆமையும்:) பூஸாரும்:) புறப்பட்டு விட்டார்கள் காணாமல் போனோரைத்தேட:)).


இது “சுடச்சுட” இல்ஸ் அனுப்பிய படம்தான்:))

புதியவர்கள் வந்து எம்மோடிணையும்போது எவ்வளவு சந்தோசம் ஏற்படுதோ, அவ்வளவு கவலையாக இருக்கு பழையவர்கள் காணாமல் போகும்போது..:((((.

ஆரம்பம் முதல்(எமக்கு), நன்கு வலையுலகைக் கலக்கிக்கொண்டிருந்த ஹைஷ் அண்ணன், ஜீனோ.. காணாமல் போனார்கள், பின் சந்தனா, இலா.. இப்போ வான்ஸ்சும் என பெயரைப்போட்டு இன்று தலைப்பைப் பார்த்ததும் வான்ஸ்டதை நீக்கியாச்ச்ச்ச்ச்:))).

இப்பதிவு பார்த்ததும் இலாவும் சந்துவும் ஆஜராகிட விட வேண்டுமென மிகவும் தாழ்மையாக, உருக்கமாக, அன்பாக கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால், இப்படி எல்லாம் கதைக்க மாட்டேன், ஆனால் நலமே இருக்கிறோம், விரைவில் வருவோம் எனச் சொல்லிச் சொல்லியே ஒளிச்சுப் பிடிச்சு விலை:) யாடீனம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

இன்னொருவரும் காணாமல்போக முயற்சிகள் பண்றார்போல புளியிலிருந்து:)) விடமாட்டமில்ல:)).

இலா இங்கு வராதுவிட்டால்... தேம்ஸ் கரையில டிவோஸ் பத்திரம் ரெடியாகுது:), கோட்டுக்கு வரும்படி மேன்மை தங்கிய, மதிப்பிற்கும் பாசத்துக்கும், பண்புக்கும் பாத்திரமான ஜனாதிபதி... சே..சே.. என்ன நடந்தது இண்டைக்கெனக்கு:)) பாத்திரமான நீதிபதி அவர்கள்:)) ஆணையிடுகிறார்கள்.

மாயா... என் பக்கம் சாதகமாக தீர்ப்பு அமைய, நீங்கதான் எனக்காக சாட்சிக் கூண்டில் ஏறி நிண்டு சாட்சி சொல்லோணும் ஓக்கை, டக்குப் பக்கென அந்த கோட்டுச் சூட்டைப் போட்டிட்டு வாங்க மாயா:)).
=====================================================

இது எங்கட வீட்டுக்குள் இருக்கும் கார்டின்:))





இவர்(கீழே) கனகாம்பரம், போனவருடம் நன்கு பூத்தார், இம்முறை பூக்கவில்லை:(.

இது பெரிய கதை பாருங்கோ.. கொஞ்சம் பொறுமையாகப் படிக்கோணும் ஓக்கை:)). அம்மா இங்கு நின்றபோது, ஒரு விதை வீட்டில் கண்டெடுத்து, ஒரு சாடியில் நட்டவ. நட்டதும் நல்ல பெரிய இலை விட்டு எழும்பி முளைச்சுதா.... அம்மாவுக்குச் சரியான சந்தோசம், இது ஏதோ நல்ல மரம்போல எனச் சொல்லிக் கொண்டு போய் விட்டா.

போனவவுக்கு இதே நினைவு, ஃபோனில எல்லாம் இதே கதை, இப்போ அந்த மரம் எப்படி இருக்கு?:), அது தோடையாக இருக்குமோ? இல்லாட்டில் தேசிமரமோ?. குளிர் தொடங்கியிருக்குமே அதை எடுத்து கிச்சின் ஜன்னலில் வைத்துவிடு... என்றெல்லாம் சொல்லச் சொல்ல, நாமதான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே 6 வயசிலிருந்தே:))) ஓக்கை நோ கர்ர்ர்ர் பிளீஸ். நானும் ஜன்னலில் வைத்தேன். ஊசிபோல எழும்பிச்சுது, நானும் நம்பிட்டேன் ஏதோ நல்ல வகைதான் என.

பிறகு சொன்னா, ஒருவேளை  “டுபாய்ப் பூசணி” யாக இருக்குமோ? ஏனெண்டால் அந்த விதைகளும் கிச்சினில் கண்டேனே என்று ஒரே ஆராய்ச்சி:)).



அது 4 நாட்களுக்கு முன் ஒரு குட்டி, ஆனா கொஞ்சம் பெரிய மொட்டு வந்துது, கிழிஞ்சுது போங்கோ....... இது ஏதோ பூண்டுதான் என நான் முடிவு பண்ணிட்டேன்...  ஆனாப் பாருங்கோ நேற்றுப் பூத்துதே.... குட்டியா ஒரு பூ... இது சூரிய காந்திதானே???? அவ்வ்வ்வ்வ்:))). தெரிஞ்சிருந்தால் வீட்டுக்குள் எடுத்திருக்க மாட்டேனே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

இப்போ ஃபோனில சொன்னேன்... அம்மா, நீங்க நட்டது சூரியகாந்தி, ஒரு குட்டிப் பூ வந்திருக்கென:)), விழுந்து விழுந்து சிரித்துப்போட்டுச் சொன்னா,  “அது சத்துக் காணாதாக்கும், நான் நேற்றுக்கூட இங்கு ஒரு மரத்தைக் காட்டிச் சொன்னேன், ஒருவேளை இப்படி மரம்தானோ தெரியேல்லை, நான் அதிரா வீட்டில நட்டுப்போட்டு வந்தேன் என”:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

======================================================
ஊசி இணைப்பு:))
காதல் தோல்வி
உன் கொலிசு ஒலி 
கேட்டபோதெல்லாம் 
சிலிர்த்தேன்
மெட்டி ஒலி கேட்டதும் 
மரித்தேன்
======================================================