நல்வரவு_()_


Tuesday 25 September 2018

ஒரு மட்டற்ற மகிழ்ச்சியான செய்தி.. :)

ன்ன இது அதிரா இருந்தாற்போல என்னமோ சொல்கிறாவே ஏதும் முசுப்பாத்திக் கதையாக இருக்குமோ எனவும் யோசிப்பீங்க:).. வாங்கோ வாங்கோ.. எங்கள் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அல்லோ.. எல்லோரும் நலம்தானே?:).


து என்ன மகிழ்ச்சியான செய்தி எனில், அப்பாவைப்போலவே.. மகனும் மெடிசின் படிக்க செலக்ட் ஆகி விட்டார். எங்கள் மூத்த மகனுக்கு மெடிசின் கிடைத்து, இந்த செப்டெம்பர் யூனிவசிட்டி ஆரம்பமாகி விட்டது.

உண்மையில் நமக்கு இரு குழந்தைகள் கிடைத்தபோது எவ்வளவு மகிழ்ந்தோமே,  அதேபோல இது 3 வது மகிழ்ச்சி.  “ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் குழந்தையை சான்றோன் எனக் கேட்ட பெற்றோர்”.. என்பதை உண்மையில் மகன் மெடிசினுக்கு செலக்ட் ஆகி விட்டார் எனக் கேட்டபோது அனுபவித்தோம்..

மன்னிக்கவும், தற்போதைய படம் போட அனுமதி இல்லை:).. இது குழந்தையில் எடுத்தது, இப்போ 5.11 அங்குல உயரம், முன்பு அப்பாவைப்போல் சபி:)).. இப்போ அம்மாவைப்போல மெல்லிசூஊஊ:))[கிடைக்கும் சைக்கிள் ஹப் இல மம்மியின் பெருமைகளையும் எடுத்து விட்டிடோணும்:) இல்லை எனில் ஒரு மீன்குஞ்சுகூட நம்மளை மதிக்காதே:)].



இங்கத்தைய கல்வி முறையைக் கொஞ்சம் சொல்லட்டோ?...

ஸ்கொட்லாந்தைப் பொறுத்தவரை, நேசறியில் ஆரம்பித்து யூனிவசிட்டி வரை படிப்பு இலவசம். இங்கு 13 ம் ஆண்டு வரை ஸ்கூல் படிப்பு இருக்கும்.

ஆனால் 11 ஆம் ஆண்டுதான் எங்கள் நாட்டு ஓ லெவலாக[+1] கருதப்படும்.. பின்பு 12 ஆம் ஆண்டு ஏ லெவல்[+2].. இந்த 12 ஆம் ஆண்டு முடிந்தவுடன், அந்த றிசல்ட்டை வைத்தே யூனிவசிட்டி அப்ளை பண்ண வேண்டும், நல்ல ரிசல்ட் எனில் அனைத்துத் துறைக்கும் முடிவு அறிவித்து விடுவார்கள், ஆனா இந்த மெடிசினுக்கு மட்டும் 13 ஆம் ஆண்டுப் பரீட்சையும் எடுத்துக் குடுக்க வேண்டும்.. அது கொஞ்சம் ஹர்ட் ஆக இருக்கும்... ஏ லெவலை விட கஸ்டமாக இருக்கும்.

இப்போ 12 ஆம் வகுப்பிலே நல்ல ரிசல்ட்  எடுத்தால் மட்டுமே மெடிசினுக்கு அப்ளை பண்ணலாம். அப்ளை பண்ண முன்பு UK CAT [இந்தியாவில் நீட்ஸ் எக்சாம்] எடுக்க வேண்டும்.. அதில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தால் மட்டுமே மெடிசின் அப்ளை பண்ண முடியும்.

அப்படி அப்ளை பண்ணும்போது.. பேசனல் ஸ்ரேட்மெண்ட் என ஒரு கட்டுரைபோல எழுதி அனுப்ப வேண்டும், அதுவும் அவர்கள் இத்தனை சொற்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவிப்பார்கள், அத்தனை சொல்லுக்குள் அடங்கும் விதமாகவும் அழகாகவும்.. எழுதி அனுப்புப்பட வேண்டும். அத்தோடு ஒவ்வொரு மாணவருக்கும் ஸ்கூலில் தனித்தனி ரீச்சர் குடுப்பார்கள், அந்த ரீச்சர்.. இவருக்காகவும் இவர் பற்றியும் நல்லவிதமாக ஒரு ஸ்ரேட்மெண்ட் எழுதி இதனோடு அட்டாச் பண்ணி அனுப்ப வேண்டும்.

இங்கு ரிசல்ட்டுடன் அதிக முக்கியத்துவம், இவர்கள் எவ்வளவு அதிகமாக வொலண்டியர் வேர்க் பண்ணியிருக்கிறார்கள் என்பதையும் பார்ப்பார்கள்.. எங்கள் மகன் 2 வருடமாக நிறைய இடங்களில் செய்திருந்தார், ஆனா அவை அனைத்தையும்  அதில் எழுத முடியவில்லை.. சொற்கள் போதவில்லை..

இப்படி ஒவ்வொரு யூனிவசிட்டிக்கும் கிட்டத்தட்ட 1700 - 2000 வரை அப்பிளிக்கேசன்ஸ் போகும்... அவற்றில் ஒரு 750-800 பேரை மட்டுமே செலக்ட் பண்ணி, இண்டவியூவிற்கு வரும்படி அழைப்பார்கள்.

அந்த 800 பேருக்குள்,  150-200 பேர் வரைதான் செலக்ட் பண்ணப்படுவார்கள் முடிவில்.

=======குட்டி இடைவேளையில கொஞ்சம் இளைப்பாறுவோமா?:)=====
=====================================================
இதிலும் ஒரு விசயம் இருக்கு என்னவெனில், இங்கு ஸ்கொட்லாந்தில் கல்வி இலவசம் என்பதனால், ஒவ்வொரு யூனியும் ஸ்கொட்லாந்திலிருந்து மூன்றில் ஒரு பங்கு பிள்ளைகளையும், வெளிநாட்டில் இருந்து மூன்றில் இரு பங்கையும் எடுக்கிறது... ஏனெனில் வெளிநாட்டுப் பிள்ளைகள் எனில் காசு கட்டித்தான் படிக்க வேண்டும்.. இந்த வெளிநாட்டுப் பிள்ளைகளுள்.. இங்கிலாந்தும் அடங்கும்:).

இதனாலேயே ஸ்கொட்டிஸ் பிள்ளைகளுக்கு, தகுதி இருந்தும்.. வாய்ப்புக் குறைகிறது என்பது கவலையான விசயம். 

அப்படி செலக்ட் பண்ணுப்பட்டதில் எங்கள் மகனும் ஒருவர்...

இங்கு மெடிசினுக்கான இண்டவியூ.. multi mini interview [MMI] என அழைக்கப்படுகிறது. 7 அறைகள் இருக்கும், ஒவ்வொரு அறையிலும் இண்டவியூவேர்ஸ் இருந்து கேள்விகள் கேட்பார்கள்.. அதில் ஒரு ரூமில் பேசண்ட் உம் வைத்திருப்பார்கள்.. இவர்கள், பேசண்ட்டுடன் கதைக்க வேண்டும்... எப்படிக் கதைக்கிறார்கள் என்பதை அவதானிப்பார்கள்.

இப்படி இண்டவியூ முடிந்ததும் அதிலிருந்து அதாவது 750-800 பேரிலிருந்து 180 பேரைத்தான் செலக்ட் பண்ணினார்கள், அதுவும்.. நீங்கள் செலக்ட் ஆகி விட்டீங்கள் ஆனா எங்களுக்கு 13 ம் வகுப்புச் சோதனை எடுத்து அதுக்கு இன்ன இன்ன பாடத்தில் இன்ன இன்ன ரிசல்ட் வேண்டும் என அறிவித்தார்கள்... இதை conditional offer என்பார்கள்.

முடிவில் அச்சோதனையிலும் அவர்கள் கேட்டபடி எடுத்துக் கொடுத்த பின்பே.. நீங்கள் செலக்ட் பண்ணப்பட்டு விட்டீங்கள்.. என முடிவு வரும்... அதுவரை எவ்வளவு ரென்ஷனாக இருக்கும்....  ஆனால் 12 ம் ஆண்டு ரிசல்ட்டுடன், மகனுக்கு Bio Medical Engineering  கிடைத்து விட்டது, அதனால ஒரு நிம்மதி இருந்தது.

அதுக்கு இன்னொரு காரணம், இங்கு ஏ லெவலில் சயன்ஸ் மட்டும் என்றில்லை, விரும்பிய 5 பாடங்கள் எடுக்கலாம், அதனால மகனுக்கு  மெடிசின்.. அல்லது..பிஸ்னஸ் அண்ட் எக்கவுண்டிங் அல்லது எஞ்சினியரிங் எதுவாயினும் செய்யக்கூடியவாறே பாடங்களை செலக்ட் பண்ணியிருந்தார்.. ஆனா யூனிவசிட்டி அப்ளை பண்ணும்போது மட்டும் ஏதாவது ஒரு துறையில் மட்டுமே பண்ண முடியும்.. அதாவது மெடிசினுக்கு போட்டால்.. எக்கவுண்டிங் போட முடியாது.. அப்படி.

ஆனா நான் மட்டும்தான் கொஞ்சம் ஓவர் ரென்சனானேன், மகன் கூலாகவே இருந்தார் எதுக்கும் ரெடி என்பதைப்போல, அதனால மனதைத் தேற்றிக் கொண்டிருந்தோம் முடிவு வரும்வரை. முடிவு நல்லவிதமாக அமைந்ததில் மகிழ்ச்சி.

என்னைப்பொறுத்து இதுக்கு.. படிப்பு + வொலண்டியர் வேர்க்ஸ் + ஸ்மாட்னெஸ் + லக்+ கடவுள்... இவ்வளவும் சரியாக அமைந்தால் தான் இது சாத்தியம்.

இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்வதற்கே நேரம் போதவில்லை, இன்று எப்படியும் முடித்திடோணும் போஸ்ட் எழுதி, என கங்கணம் கட்டி எழுதிட்டேன்ன்:)) பூசோ கொக்கோ?:).. ஓவரா அலட்டி விட்டேனோ?:).. நெல்லைத்தமிழன் சொன்னார் நிறைய எழுதுங்கோ என:).. அதனால ஒவ்வொரு வரியாகப் படிக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்:)).

ஊசி இணைப்பு:

ஊசிக் குறிப்பு
======பொறுமையுடன் படிச்ச அனைவருக்கும் நன்றி_()_======

146 comments :

  1. மிக்க மகிழ்ச்சியான சந்தோஷமான நியூஸை கொடுத்திருக்கிங்க மியாவ் :)
    அன்பு மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் இறைவனின் ஆசிகள்

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் அஞ்சு வாங்கோ வாங்கோ... எல்லோரது வாழ்த்துக்களும் ஆசியும் அவருக்கு கிடைக்கோணும் என்றே இப்போஸ்ட்... கூட்டுப் பிரார்த்தனையிலும், எல்லோரது வாழ்த்திலும் அதிக பவர் இருக்கிறதாம் என அறிஞ்சிருக்கிறேன்ன்.. மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  2. “ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் குழந்தையை சான்றோன் எனக் கேட்ட பெற்றோர்”.. //
    ஆமாம் அதிரா குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சியும் நமக்கு பிரமிப்பாவும் ஆச்சர்யமாவும் இருக்கு .
    அதுவும் வெளிநாட்டில் உயரம் மட்டும் கட்டுப்படுத்த முடியலை :) நல்லா வளர்த்தி ஆகிறாங்க பிள்ளைங்க .
    இப்போதான் கிண்டர்கார்டன்ல சேர்த்த போலிருக்கு அதுக்குள்ளே யூனிவர்சிட்டி :)

    ReplyDelete
    Replies
    1. அதேதான் அஞ்சு, இவர்களின் நேசறிக்காலம் பற்றி சில நிகழ்வுகளை பல நாளாக எழுத நினைச்சுக் கொண்டிருக்கிறேன்.. எப்போ நடக்குமோ அத வண்டிப் பிள்ளையாருக்கே வெளிச்சம்:))..

      முதலாம் வகுப்பின் முதல் நாள், என் கையைப் பிடிச்சுக் கொண்டுதான் வகுப்பில் இருந்தார்ர்.. பின்புதான் மெதுவா விட்டுவிட்டு வெளியேறினோம்... இப்போ கையைப் பிடிச்சாலே பப்ளிக்கில் உதறி விட்டிடுவினம் வெய்க்கமாம்ம்ம்ம் ஹா ஹா ஹா...

      Delete
  3. ஆஹா !! அந்த ஸ்டெத் மாட்டிய பிள்ளையார் செம அழகு குவில்லிங் இல் ஒன்னு செய்யுங்க .
    //தற்போதைய படம் போட அனுமதி இல்லை:).. இது குழந்தையில் எடுத்தது, //
    ஹாஹா அதேதான் டீனேஜர்ஸ் கிட்ட பெர்மிஷன் கேக்கணும் கேக்காமா போடவே முடியாது இங்கே வெளிநாடுகளில் .

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சூப்பரா இருக்கெல்லோ அது ஆவணிச் சதுர்த்தியில் எனக்கு வந்திருந்துதே.. குயிலிங் செய்யோணும்...

      தங்களைப் பற்றிய விசயம் தம்மோடு கன்சல்ட் பண்ணாமல் செய்யக்கூடாது என்பினம்.. ஆனா தமிழ் படிக்கத் தெரியாததால் பிரச்சனை இல்லை நமக்கு ஹா ஹா ஹா:)

      Delete
  4. / இப்போ அம்மாவைப்போல மெல்லிசூஊஊ:))//
    கர்ர்ர்ர்
    இதை பார்க்கவா நான் 6 கப் க்ரீன் டி குடிச்சி என் அலர்ஜியை துரத்தினேன் ..இப்போ போன அலர்ஜி திரும்பி அட்டாக் பண்ற மாதிரி இருக்கு எனக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹையோ என் போஸ்ட் வெளிவரமுன் அஞ்சுவுக்கு அலர்ஜி குணமாகிடோணும் என அஞ்சுலாம்புச் சந்தி வைரவருக்கு நேர்த்தி வச்சேன்:)).. போஸ்ட் போட்டு கொமெண்ட்ஸும் போட்டிட்டீங்க இனி ஓடிப்போய் சமோசா சாப்பிடுங்கோ ஆரு வாணம் என்றா?:))

      Delete
  5. ரெண்டு செல்லங்களும் sooo கியூட் ச்வீட் .அந்த சீக்ஸை கிள்ளணும்போலிருக்கு :)
    5.11 awwww !!
    உங்களுக்கு ஒரு சீக்ரட் சொல்லட்டா :) இப்போல்லாம் மகளுக்கு கோடு எடுக்க குட்டி ஸ்டூல் மேலேறி நிக்கறேன் நான் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சின்னவர் 6 க்கு வந்திட்டார்ர் இன்னும் கரெக்ட்டா அளந்து பார்க்கவில்லை:)....

      உங்களைப்போல தான் சனிக்கிழமையில் எண்ணெய் வைத்து விடுவேன் தோய்வதற்கு.. அதுக்கு கிச்சினில் ஒரு குட்டி ஸ்ரூல் இருக்கும்.. உங்களுக்குத்தான் தெரியுமே:)) முன்பு ஜெய் அதை வச்சே கொஞ்ச நாட்கள் என்னை ஓட்டினார்ர் ஹா ஹா ஹா.. அந்த ஸ்ரூலில் இருக்கச் சொல்லி விட்டே வைப்பேன்.... அங்கு நீங்க ஏறுறீங்க.. இங்கு இவர்களை இருத்துறேன் ஸ்ரூலில் ஹா ஹா ஹா..

      அதேபோல சின்னவருக்கு சாப்பாடு தீத்தும் போது, நான் சோஃபாவில இருந்து அவரை கீழே நிலத்தில இருக்கச் சொல்லுவேன்ன் ஹையோ ஹையோ:)..

      Delete
  6. இதே சிஸ்டம்தான் அதிரா யூ கேவிற்கும் .12 ஆம் வகுப்பில் ப்ரீடிக்டேட் க்ரெட்ஸ் கிடைச்சதும் அப்ளிகேஷன் போடணும் .
    நம்ம யூகே சிஸ்டம் பற்றி அழகா தெளிவா விளக்கியிருக்கிங்க ..வாலண்டியரிங் ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ்னு பிள்ளைங்க கடுமையா உழைக்கணும் .ஆனா இங்கே உழைத்தால் கஷ்டப்பட்டு படிச்சா நிச்சயம் பலனுண்டு .

    ReplyDelete
    Replies
    1. அதேதான் அஞ்சு மெடிகல் சம்பந்தப்பட்ட துறைகள் இங்கு கஸ்டம்தான், கடுமையாக கஸ்டப்படோணும்.. அதனாலேயே இங்கத்தைய பிள்ளைகள் விரும்புகிறார்கள் இல்லை.. எதுக்கு கஸ்டப்படோணும் என.. அது மட்டுமில்லை எங்கட மகனுக்கு ஃபிரண்ட்ஸ் எல்லாம் சொன்னார்கள்.. அது படிப்பு கஸ்டம் நீ எதுக்கு மெடிசினுக்குள் போகிறாய் என... அப்படி இருக்கு நிலைமை... என்னவாயினும் கைக்கு கிடைத்தது மகிழ்ச்சியே...

      ஒரு கட்டத்தில் நாம் கூட நினைத்தோம்ம், மகனின் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் 12 ம் வகுப்புடன் ஹாயா சுற்றித்திரிந்தார்கள்.. இவர் மட்டும் 13 ம் வருட சோதனைக்காக கடுமையாக படிச்சுக் கொண்டிருந்தார்.. பாவமாகவும் இருந்துது... ஆனா கஸ்டப்பட்டால்தானே பலன் கிடைக்கும்..

      Delete
  7. ஊசிக்குறிப்பு மகிழ்ச்சி //அதேதான் போஸ்டை பார்த்ததும் பெட்லருந்து எழும்பி வந்தேன் கமெண்ட் போட ..நாளைக்கு வரைக்கும் பொறுமையில்லை எனக்கு வாசிச்சிட்டா உடனே பதில் போட்டுடனும் :) அதுவும் மகிழ்வான விஷயங்களுக்கு டிலே பண்னவே கூடாதது .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கடமை உணர்வு பார்த்துப் புல்லாஆஆஆஆஆஆஆஆஆஅரிச்சுப் போகிறேன் யான்:)) ஹா ஹா ஹா நன்றி.

      Delete
  8. /ஆனா யூனிவசிட்டி அப்ளை பண்ணும்போது மட்டும் ஏதாவது ஒரு துறையில் மட்டுமே பண்ண முடியும்.. அதாவது மெடிசினுக்கு போட்டால்.. எக்கவுண்டிங் போட முடியாது.. அப்படி.//
    அதேதான் அதிரா இங்கே எனக்கு பிடிக்காத ஒரே ஒரு விஷயம் .இந்தியாவில் எந்த க்ரூப்பும் அப்பளை செய்யலாம் ஆனா யூகே சிஸ்டம் வித்தியாசம்

    //ஆனா நான் மட்டும்தான் கொஞ்சம் ஓவர் ரென்சனானேன், மகன் கூலாகவே இருந்தார் எதுக்கும் ரெடி//

    ஹாஹா நாம்தானே டென்சன் பட்டு குழந்தைகளையும் டென்ஷாநோக்குவோம்:) பிள்ளைங்க தெளிவா யிருக்காங்க .அது பெரிய பிளெஸ்ஸிங் நமக்கு

    ReplyDelete
    Replies
    1. இலங்கையில் ஏ லெவலில் பாடங்களை மிக்ஸ் பண்ணி எடுக்க முடியாது அஞ்சு, அங்கு.. ஒ லெவலுடன் டிசைட் பண்ணிடோணும் என்ன படிக்கப் போகிறோம் என.. அதன்படியே பாடங்கள் எடுக்க முடியும்... ஆனா இங்கு அப்படி இல்லாமல் பாடங்களை எடுக்க முடிவது மகிழ்ச்சி ஆனா அப்ளை பண்ணும்போது மட்டும் ஒரு துறை மட்டுமே.. அதுக்கு முக்கிய காரணம், அந்த பேசனல் ஸ்ரேட்மெண்ட் ஒன்றுதான் எழுத முடியும்.. அப்போ எனக்கு மெடிசினும் விருப்பம் எஞ்சினியரிங் உம் விருப்பம் என எழுத முடியாது.. அப்படி எழுதினால்ல் உடனேயே ரிஜெக்ட் பண்ணி விடுவார்கள்:)..

      உண்மை அஞ்சு மூத்தவரும் கணவரும் ஒரே மாதிரி.. டென்சனும் ஆக மாட்டினம் கோபமும் வராது... :))

      Delete
    2. என் பொண்ணு அப்டியே அம்மாவை கொண்டு வந்திருக்கா :) ஆனா பொதுவாவே ஆண் பிள்ளைகள் கவலைப்படமாட்டாங்க கூலா இருப்பாங்க கேர்ள்ஸ் தான் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிருவாங்க .

      அதே தான் பெர்சனல் ஸ்டேட்மென்ட் பெஸ்ட்டா இருக்கணும் அது காபி அடிக்கப்பட்டோ அல்லது சொந்த சுயவிஷயங்களை மட்டுமே மேற்கோள் காட்டியோ இருக்க கூடாது .

      Delete
    3. ஹா ஹா ஹா இன்னொரு ஜூனியர் அஞ்சுவோ... அது உண்மைதான் எங்கள் வீட்டில் பதட்டப்படுவது நான் மட்டும்தான்.. பஸ்க்கு.. ஃபிளைட்டுக்கு எல்லாம் பதட்டப்படுவேன்.. அதேபோல இன்னும் உடுப்பு அடுக்கவில்லையே நாள் போதாதே என பதறுவேன்ன்.. ஆனா எல்லோரும் கூலா இருப்பார்கள்.. அதிலும் மூத்தவர்.. லாஸ்ட் மினிட் வரை கூலா இருந்திட்டு, ஆனா கடகடவென ரைமுக்கு எல்லாம் முடிச்சிடுவார்.

      ///அதே தான் பெர்சனல் ஸ்டேட்மென்ட் பெஸ்ட்டா இருக்கணும்//

      உண்மை அஞ்சு... படிக்கும் அவர்களை அது கவரோணும் ஹா ஹா ஹா.. எங்கள் மகன் நிறைய எழுதி பின்பு, முடிஞ்ச வரை வெட்டி வெட்டிக் குறைக்கவேண்டியதாப்போச்சு[எழுதும்போது மனம் கேட்காதெல்லோ]... நம்மை எல்லாம் எழுத விட்டால் பந்தி பந்தியா எழுதுவோமெல்லோ:).. அதுக்காகத்தான் குறிப்பிட்ட சொற்களுக்குள் நச்சென எழுதோணும் என கட்டளை போட்டிருக்கிறார்கள் ஹா ஹா ஹா.

      Delete
  9. படிப்பு + வொலண்டியர் வேர்க்ஸ் + ஸ்மாட்னெஸ் + லக்+ கடவுள்... இவ்வளவும் சரியாக அமைந்தால் தான் இது சாத்தியம்.//
    மிக சரியா சொன்னிங்க எல்லாமே கூடி வருவது கடவுள் கிருபை .
    ஹாஹா :) ஊசி இணைப்பு மாதிரி நாமளும் இருந்தா ஜாலிதான் .

    ReplyDelete
    Replies
    1. உண்மை அஞ்சு ஏனெனில் இவை அனைத்தும் இருந்தும் சிலருக்கு முடிவில் ரிஜெக்ட் என அனுப்பியிருக்கிறார்கள்.. அப்போ கடவுளும் கூட இருக்கோணும் என நான் நம்புறேன்.

      Delete
    2. ஆமாம் அதிரா இவங்க இன்டெர்வியூல பதில் சொல்வது ,WORK EXPERIENCE கூட காரணியா அமையும் .

      Delete
    3. ஓம் அஞ்சு வேர்க்கிங் எக்ஸ்பீரியன்ஸ் ஐ வச்சும் கேள்வி கேட்பார்கள்.. ரீம் வேர்க் பற்றிக் கேட்பார்கள்.. அதுக்கு வேர்க்கிங் எக்ஸ்பீரியன்ஸைக் காரணம் காட்டித்தான் மின்னி முழக்கோணுமாம்.. ஹா ஹா ஹா.

      Delete
  10. மீண்டும் ஒருமுறை மகனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிக்கொண்டு தூங்க செல்கிறேன் :)
    குட்நைட் :)

    ReplyDelete
    Replies
    1. [im]https://tse1.mm.bing.net/th?id=OIP.kg-NsGSVJYoccR8WDK_1IwAAAA&pid=15.1&P=0&w=300&h=300[/im]

      Delete
    2. அல்லோ மிஸ்டர்.. வெயில் போயீஈஈஈஈ குளிர் ஆரம்பிச்சுடுத்தூஊஊஊ இனி உந்தக் கறுப்புக் கண்ணாடியைக் கழட்டலாமெல்லோ:))

      Delete
    3. என்ன அஞ்சலின் அம்மாளின் பிளாக் இன்னும் தூக்கத்தில் இருக்கு?))) கூகில் ஆண்டவர் அப்படி ஒரு வலைப்பதிவர் இல்லை என்று சொல்லும் மாயம் நான் அறியேன்!)))

      Delete
  11. வாவ் மார்னிங் ஒரு நல்ல சந்தோஷமான செய்தியோடு துவங்குதே மகிழ்ச்சி:)))

    உங்களுக்கும் - மகனுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் வாங்கோ தம்பி மகேஷ் நலம்தானே? நீண்ட இடைவெளியின் பின்பு பார்க்கிறேன் மகிழ்ச்சி.. மிக்க நன்றி மிக்க நன்றி..

      Delete
  12. scotland கல்வி முறை பற்றி அழகாக விளக்கியதர்க்கு
    நன்றி அக்கா.

    இங்கெல்லாம் parents ஓட ஒட்டுமொத்த சம்பாத்தியமும் குழந்தைகலோட
    படிப்புக்கே செலவாகிடுது அதை பார்த்தாள்தான் பயமாக இருக்கு.
    இலவச கல்வி வந்தால் நல்லா இருக்குமோனு எதிர்பாக்க ஆரம்பிச்சிடுதேஏஏஏ:)))

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் எங்களுக்கு இலங்கையிலும் யூனிவசிட்டி முடிக்கும் வரை கல்வி இலவசம்... ஆனா அங்கிருக்கும் குறை என்னவெனில்.. மார்க்ஸ் போதாதெனில்.. ஒண்ணும் பண்ண முடியாது காசு கட்டியும் படிக்க முடியாது:(...

      Delete
  13. ஒரு உற்சாகமான பாடல் கொக்கு பற பற... நயன், ஜோ எல்லோரையும் ரசிக்க முடியும்.

    கேட்கும்போதே உற்சாகமான பாடல் என்று மட்டும் எழுதி விட்டேன். பதிவைப் படித்தபின் உற்சாகத்துக்கான காரணம் தெரிந்தது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.... ஹா ஹா ஹா இந்தப் பாடல் கொஞ்ச நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டிருந்துது ஆனா அதுக்கேற்ற போஸ்ட் வராததால் போடாமல் இருந்தேன்.. இம்முறைகூட எனக்கு ஏதும் பக்திப்பாடல் போடவே மனம் விரும்பியது இருப்பினும் புளொக்ஸ் க்குள் சமயத்தைக் கொண்டு வர விரும்பவில்லை அதனால இப்பாடலைப் போட்டேன்ன். மிக்க நன்றி.

      Delete
  14. அடடே.. மகனுக்கு எங்கள் இனிய வாழ்த்துகள். அங்கு தேர்வாக நிறைய சோதனைப் படிகள் இருப்பது தெரிகிறது. அத்தனையிலும் வெற்றிகண்ட உங்கள் மகனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். உண்மையிலேயே இது போன்ற தருணங்கள்தான் வாழ்வை இனிதாக்குகின்றன. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்தான்...

    ReplyDelete
    Replies
    1. உண்மையேதான் ஸ்ரீராம் அந்த நொடியை அனுபவிக்கும்போதுதான் அது புரிந்தது..

      இங்கத்தைய இன்னொரு முறையையும் சொல்கிறேன். இங்கு ரிசல்ட் வெளியாவது எப்பவும் ஹொலிடே நேரத்தில்தான்.. போஸ்ட்டில் வீட்டுக்கு ஒரு 10 -11 மணிக்குள் வந்துவிடும். ஆனா எங்களுக்கு அதற்கு முன் தேவை எனில், ஸ்கூலில் பிள்ளைகளிடமே கேட்பார்கள், உங்களுக்கு 9 மணிக்கே ரிசல்ட் அனுப்புவோம்.. விரும்பினால் உங்கள் அல்லது பெற்றோரின் ஃபோன் நம்பர் தாங்கோ என...

      சில பிள்ளைகள் பயத்தில ஃபோன் நம்பர் கொடுப்பதில்லை.. அது போஸ்ட்டிலேயே வரட்டும் என... ஹா ஹா ஹா.

      எங்கள் மகன் தன் நம்பரைக் குடுத்திருந்தார்.. அப்போ 9 மணிக்கு ரிசல்ட் மெசேஜ் ஆக வரப்போகுது எனத் தெரியும்.. அந்நேரம் எவ்வளவு ரென்சன் தெரியுமோ.. இத்தனை தடைகளையும் தாண்டியாச்சு.. முடிவும் நல்லதாக அமையோணும் என வேண்டிக் கொண்டிருந்தேன் நான்:) வெளியே காட்டவில்லை என் ரென்சனை:))

      அப்போ ரிசல்ட் வந்துவிட்டது.. ஓக்கே மகிழ்ச்சி என நினைச்சாலும் யூனிவசிட்டி அறிவிக்கும் உனக்கு இடம் தருகிறோம் என.. அந்த அறிவிப்புத்தான் பயங்கர ரென்சன்... அந்த அறிவுப்பு, ரிசல்ட் வந்து ஒரு 20 நிமிடத்தால் வந்துது.. மகன் ஓடிவந்தார்ர். அம்மாஆஆஆ ஐ கொட் மெடிசின்ன்ன்ன்ன் என.. அப்போ அவரைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து நான் அழுதே விட்டேன்ன்ன்ன் அவ்ளோ ரென்சனான நேரம் அது ஹா ஹா ஹா:))..

      நான் படிக்கும்போது என் நண்பியின் அண்ணாவுக்கு மெடிசின் கிடைச்சிருந்தது.. அச்செய்தியை.. ரோட்டில் நின்ற அவரின் அப்பாவுக்குச் சொன்னபோது அவர் அதில் வச்சே மகனைத் தூக்கி விட்டாராம்ம்ம்... அப்போ அந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டதென அன்று புரியவில்லை.. இப்போ நேரில் பார்த்தபோதுதான் நமக்கும் புரிந்தது.

      ஏனெனில் இவரைப்போலவே அனைத்திலும் பாடுபட்டு நன்கு செய்த சில பிள்ளைகளுக்கு முடிவில் ரிஜெக்ட் பண்ணியிருக்கு என வந்திருக்கு.. அதனால முடிவுவரை எதையும் நம்ப முடியாது.

      இப்போ 10 பேர் ஒரே மாதிரித் தகுதியுடன் இருந்தால்ல்.. ஓ லெவல் ரிசல்ட்டைக்கூடக் கிளறி எடுத்துப் பார்ப்பார்களாம், அதனால ஆரம்பம் இருந்தே நல்ல ரிசல்ட் எடுத்திருக்கோணும்.. நம் நாட்டில் ஏ லெவலை மட்டும் தானே கருத்தில் எடுப்பார்கள்.. ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா.

      இதேபோல இங்கு இன்னொரு முறையும் இருக்கு.. ரிசல்ட் வந்தவுடன், அதற்குப் பொறுப்பான ரீச்சேர்ஸ் ஸ்கூலுக்கு வருவார்கள்.. ஸ்கூல் ஓபின் பண்ணுவார்கள்.. பண்ணி, ரிசல்ட்டை செக் பண்ணி.. ஒவ்வொரு பிள்ளைக்கும்... ஒருவேளை நல்ல ரிசல்ட் எடுத்தோருக்கு மட்டுமா இல்ல பாஸான எல்லோருக்குமேயா தெரியவில்லை... ஒவ்வொரு வீட்டுக்கும் ஃபோன் பண்ணி பிள்ளைக்கு விஸ் பண்ணுவார்கள்.

      ஓவரா சொல்லி விட்டேனோ தெரியவில்லை.. மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
    2. புரிந்து கொள்ள முடிகிறது அதிரா. எங்கள் வீட்டில் இரண்டு மகன்களுக்குமே பாஸ்தான் விழித்திருந்து ரிசல்ட்டுக்காய் டென்ஷனாய் காத்திருப்பார். இந்த உணர்வுகள் வீட்டில் நிறைய அனுபவித்ததுண்டு. இதே கண்ணீரும் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பெரும்பாலும் நிச்சலனமாய் இருந்தே வழக்கம். திட்டும் வாங்கி கொள்வேன். நொடிக்கு நொடி உணர்வுகளை வர்ணித்திருக்கிறீர்கள்.

      Delete
    3. //எங்கள் வீட்டில் இரண்டு மகன்களுக்குமே பாஸ்தான்//

      ஹா ஹா ஹா இப்போ புரியுதோ நான் ஏன் பொஸ்:) என எழுதுகிறேன் என:)) இங்கு பொருட்பிழையாகிறது ஹா ஹா ஹா.. தெரியாதோருக்குப் புரியாது:)).

      உண்மைதானே ஒவ்வொரு வீட்டிலும் இது நிகழும்.. ஆனா வெளியே சொன்னால்தான் நமக்குத் தெரிகிறது..

      //ஆனால் நான் பெரும்பாலும் நிச்சலனமாய் இருந்தே வழக்கம். திட்டும் வாங்கி கொள்வேன்.//

      ஹா ஹா ஹா :)) நீயா நானாவில் ஒரு தடவை அப்பாக்களும் மகள்களும் என்பதில்.. சில பிள்ளைகள் ஏசினார்கள்.. என்ன சொன்னாலும் அப்பா அப்படியே இருப்பார்ர்ர் விழிச்சு சொல்ல மாட்டார் என.. அதுக்கு கோபிநாத் கூப்பிட்டு சொல்ல வச்சார்ர்.. மகள் சொல்லச் சொன்னா அப்பாவை.. ஓஓஓ வாவ்வ்வ்வ்வ்வ் இப்படி சொல்லுங்கோ என.. ஹா ஹா ஹா கொமெடியாக இருந்துது. உண்மைதான் சிலர் வெளிக்காட்டுவதில்லை உணர்வுகளை.

      என் கணவர் சொல்வார்ர்.. அதிரா நான் எங்காவது ஓவராகப் பேசினால் என்னைக் கொஞ்சம் முறைச்சுப் பாருங்கோ, அப்போ நான் குறைச்சுப்போடுவேன் பேச்சை என ஹா ஹா ஹா:))..

      மிக்க நன்றி.. மிக்க நன்றி.

      Delete
  15. வடிவேல் பிள்ளையார் வடிவாக இருக்கிறார்.

    ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு இரண்டையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்பே என்பதுபோல, எனக்கு போஸ்ட்டை ரெடி பண்ண முன்பே பிள்ளையாரின் இப்படிப் படங்கள் கைக்கு கிடைத்தன அதனால இப்போஸ்ட்டுக்கு பொருத்தமாகி விட்டது அவை...:).

      Delete
  16. இளைய மகனும் அவர் விரும்பிய பாடத்தைத் தெரிவு செய்ய எங்கள் வாழ்த்துகள் அதிரா..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ரொம்ப ஃபோவேர்ட்டா விஸ் பண்றீங்க மிக்க மகிழ்ச்சி.. அவருக்கு இன்னும் காலம் இருக்கு.. இன்னும் ஓ லெவலே எடுக்கவில்லை அவர்:)) மிக்க நன்றி மிக்க நன்றி.

      Delete
  17. Replies
    1. எங்கள் ப்ளாக் கேள்விக்கான பதிலை இங்கே தந்து விட்டார் கீதாக்கா... அதிரா.. அந்த பெஞ்ச்சை கொண்டு வாங்க.. ஏறி நிற்கச் சொல்லுவோம்!!

      :))))

      Delete
    2. ஆஆங்ங்ன் அதேதான்.. நான் மொபைல் மூலம் கடகடவென பப்ளிஸ் பண்ணியதால் படிக்கவில்லை கொமெண்ட்ஸ் ஐ.. பின்புதான் படிச்சேன்ன்..

      அதிராவுக்கு அடுத்த புதன்கிழமை கெள அண்ணன் பரிசு தரும்வரை பெஞ்சை விட்டு இறங்கக்கூடா கீசாக்கா ஜொள்ளிட்டேன்ன்ன்:)).. ஸ்ரீராம் அடிக்கடி செக் பண்ணுவார்.. இறங்காமல் இருக்கிறீங்களோ என்பதை:) ஹா ஹா ஹா.

      Delete
  18. இத்தனை கடுமையான சோதனையில் தேறி வந்த உங்கள் மகன் நிச்சயம் மருத்துவராகச் சிறப்பான பணி ஆற்றுவார். ஆனால் இங்கே வெறும் "நீட்" தேர்வுக்கே மக்கள் இத்தனை போராட்டங்கள் நடத்துகின்றனர். மருத்துவப் பணியின் சிறப்பைப் பற்றிக் கொஞ்சமும் ஆழ்ந்த அறிவு எல்லாம் இல்லை. எத்தனை சோதனைகள் நடத்திக் கடைசியில் உங்கள் மகன் தேர்வாகி இருக்கார்! உண்மையிலேயே போற்றத் தக்கது. என்னைக் கேட்டால் இந்தத் தேர்வு முறையை அப்படியே பிட் நோட்டீஸாக அடித்து இங்கே விநியோகிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இங்கே கல்வி எனில் பணம் பண்ணுவது தான்! :(

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. உண்மைதான் எவ்ளோ கஸ்டப்பட்டுப் பட்டம் வாங்குகிறார்கள் இந் நாடுகளில் பிள்ளைகள். இங்கெல்லாம் பணம் குடுத்து எதையும் சாதிக்க முடியாது..

      //என்னைக் கேட்டால் இந்தத் தேர்வு முறையை அப்படியே பிட் நோட்டீஸாக அடித்து இங்கே விநியோகிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.//

      ஹா ஹா ஹா கீசாக்கா ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளியுங்கோ:) மோடி அங்கிள் தேடுறார் உங்களை:))

      Delete
  19. இப்போ மட்டுமல்ல எப்போவுமே எங்க குழந்தைங்க படத்தையோ அவங்க குழந்தைங்க படத்தையோ நாங்க பொது வெளியில் போடுவதில்லை. என்னோட படமே போடாமல் தான் இருந்தேன். ஒரு சிலர் பரவாயில்லை என்றதால் இப்போல்லாம் போடுவதற்கு மறுப்புச் சொல்வதில்லை. உங்க பையர் எவ்வளவு உயரம் என்பதை என்னால் மனக்கண்ணில் காண முடிகிறது. எங்க பையரும் இஞ்சினியரிங் படிக்கும்போது ஐந்து அடி பதினோரு அங்குலம் தான். மீண்டும் உங்கள் இருவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ///இப்போ மட்டுமல்ல எப்போவுமே எங்க குழந்தைங்க படத்தையோ அவங்க குழந்தைங்க படத்தையோ நாங்க பொது வெளியில் போடுவதில்லை.//

      இதை நானும் பல வருடங்கள் கடைப்பிடிச்சேன் கீசாக்கா.. நான் வலை உலகத்துள் நுழைந்த ஆரம்பம்.. என் கணவர் எனக்கு சொன்ன அட்வைஸ்.. பப்ளிக்கில் நீங்க ஆரொடும் பழகுங்கோ பேசுங்கோ ஆனா படம் போடுவது ஃபோன் நம்பர், வீட்டு அட்ரஸ்.. இப்படியானவை குடுத்திட வேண்டாம் என..

      ஆனா பேஸ் புக் போனதும் எல்லோருமே படம் போட்டார்கள் அப்போ கொஞ்சம் தைரியம் வந்துது.

      பின்பு எங்கள் புளொக்கில் கால் வைத்துக் கதை எழுதியபோது.. அஞ்சுதான் சொன்னா படம் அனுப்புங்கோ அதெல்லாம் ஓகே என.. அப்போதிருந்து.. பயம் கொஞ்சம் போய் விட்டது.. அத்தோடு ஆரம்பகாலம் பல பிழைகள் நடந்தன.. படத்தை எடுத்து வேறு விசயங்களுக்கு உபயோகப்படுத்துவது என.. ஆனா இப்போ எல்லாம் கொஞ்சம் சேஃப்ட்டியாக்கப் பட்டு விட்டது.. ஓ உங்கள் மகனும் உயரமோ... பிள்ளைகளின் வளர்ச்சி பார்க்க பயமாக இருக்கு.. அதிலும் பெண் குழந்தைகளும் இங்கு உயர்கிறார்கள்.. இங்கத்தைய உணவில் கல்சியம் அதிகமோ என்னமோ:)).

      எங்கட மகனின் ஃபிரெண்ட்ஸ் சிலர் 6 அடி தாண்டி விட்டனர்.. இப்பவே.

      மிக்க நன்றிகள் கீசாக்கா.

      Delete
  20. மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்களது மகனுக்கு இறைவன் ஆசி உண்டாகட்டும்.

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ. மிக்க நன்றிகள் வாழ்த்துக்கு.

      Delete
  21. மகிழ்ந்தேன் சகோதரியாரே
    தங்களுக்கும் தங்களின் அன்பு மகனுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ.. மிக்க சந்தோசம் மிக்க நன்றிகள்.

      Delete
  22. வா..வ்.!! உங்கள் மகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். இனிமேலும் நன்றாக படித்து, மருத்துவப்படிப்பை வெற்றிகரமாக முடித்து நல்லதொரு மருத்துவராக வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் அம்முலு இம்முறை ஏழி லாண்டிங்:)) வாங்கோ அம்முலு வாங்கோ.. மிக்க நன்றிகள்.

      Delete
  23. மேலும் பல நலங்களைப் பெற்றிட வேண்டும்...
    அன்பின் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. மிக்க சந்தோசம் மிக்க நன்றிகள்.

      Delete
  24. பதிவில் நல்ல விவரங்களைச் சொல்லியிருந்தீர்கள்..

    அருமை.. அருமை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. ஓ மிக்க சந்தோசம்.. சிலருக்கு அலட்டல் போல ஆகி விடுமோ எனவும் பயந்தேன்ன்.. அதனால அஞ்சுவிடமும் கேட்டேன்ன் எழுதியது ஓகேயோ என.. மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  25. பொதுவா மற்றைய பாடங்களில் படிக்க காத்திருக்க அவ்வளவு தேவையில்லை. மெடிசினுக்கு அப்படியில்லை.இங்கும் இப்படியான சில நடைமுறைகள் இருக்கு. நாட்டுக்கு நாடு வித்தியாசம் படிப்பு. இங்கும் வேர்க் எக்ஸ்பீரியனஸ் கட்டாயம்.

    என் மகனும் இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்திருக்கார்.. ஆன அவர் இப்போ dual study செய்கிறபடியால் யூனி போக இன்னும் 1 வருடம் இருக்கு.
    மெடிசினுக்கு இங்கு நல்ல ஸ்கோப் இருக்கு .6,7 வருட படிப்பை சரியான முறையில் செய்து முடித்தால், நல்லதொரு வேலை.

    /என்னைப்பொறுத்து இதுக்கு.. படிப்பு + வொலண்டியர் வேர்க்ஸ் + ஸ்மாட்னெஸ் + லக்+ கடவுள்... இவ்வளவும் சரியாக அமைந்தால் தான் இது சாத்தியம்.// உண்மைதான் அதிரா.
    //ஆனா நான் மட்டும்தான் கொஞ்சம் ஓவர் ரென்சனானேன், மகன் கூலாகவே இருந்தார் எதுக்கும் ரெடி என்பதைப்போல,// இந்த டென்சன் பெற்றாருக்குதான். அவையள் அதுபாட்டுக்கு இருப்பினம். எங்களையும் ஏசுவினம். ஏன் வீணா டென்சன் ஆகுறீங்க.நாங்கதானே எக்ஸாம் எழுதினம் என சொல்லுவினம்.

    சின்னபிள்ளையா இருக்கும்போது படங்கள் போடலாம். இப்போ போடமுடியாதே. உங்கள் 2குட்டீஸும் ரெம்ப அழகு. இப்ப இன்னும் அழகா இருப்பினம். கெதியா வளர்ந்திடுவாங்க. வருடம் இப்ப கெதியா ஓடிவிடுகிறது.

    உங்க நாட்டு படிப்பு முறையை பற்றி சூப்பரா விளங்கப்படுத்தியிருக்கிறீங்க அதிரா.
    அழகான பிள்ளையார் படங்கள். அஞ்சு நினைத்ததை நானும் நினைத்தேன்..க்விலிங்.
    ஊசிஇணைப்பு,ஊசிகுறிப்பு அருமை.
    ஒவ்வொரு வரியா படித்தாயிற்று...

    ReplyDelete
    Replies
    1. //பொதுவா மற்றைய பாடங்களில் படிக்க காத்திருக்க அவ்வளவு தேவையில்லை. //

      எந்தத் துறையுமே இங்கு கஸ்டம்தான் அம்முலு.. படிப்பு மட்டும் போதாது.. வொலண்டியர் வேர்க்ஸ் அனைத்து துறைக்கும் கேட்கிறார்கள்.. ஆனா இந்த மெடிகல் ஃபீல்ட்டுக்கு மட்டும் ஏனோ போட்டு வதைக்கிறார்கள்..

      ///என் மகனும் இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்திருக்கார்.//

      ஓ மிக்க மகிழ்ச்சி மிக்க சந்தோசம்.. வாழ்த்துக்கள் மகனுக்கு. நான் நினைச்சேன் உங்கள் மகனும் எங்கள் மகனின் அல்லது ஒன்றிரண்டு வயது கூடவாக இருக்கோணும் என... ஒவ்வொரு நாட்டு முறைகளும் ஒவ்வொரு மாதிரித்தானே.

      இப்போ கனடாவில் முதலில் லைஃப் சயன்ஸ் எனச் சொல்லப்படுது.. பயோ சயன்ஸ் மூன்று வருடங்கள் படிச்சு அது பாஸ் பண்ணினால் பின்புதான் மெடிசின் என அவர்கள் ஒரு முறை சொல்கிறார்கள்.. நாட்டுக்கு நாடு ஒவ்வொரு முறை.

      //மெடிசினுக்கு இங்கு நல்ல ஸ்கோப் இருக்கு .6,7 வருட படிப்பை சரியான முறையில் செய்து முடித்தால், நல்லதொரு வேலை.//
      இங்கு 5 வருடங்கள்தான் அம்முலு மெடிசின்.. அதனாலதான் உள்ளே எடுக்க முன்பே இப்படி ஆட்டிப் படைக்கிறார்கள்போலும் ஹா ஹா ஹா...

      Delete
    2. அம்மாக்களின் மனநிலைகள் எல்லாம் கிட்டத்தட்ட எபவும் ஒரேமாதிரித்தான் இருக்கும்.. ஹா ஹா ஹா நாமும் ரென்சனாகி.. கூட இருப்போரையும்.., அவர்கள் எவ்ளோ ஸ்ரெடியா இருந்தாலும் கவிட்டுப் போட்டிடுவோம் ஹா ஹா ஹா.

      குயிலிங் உண்மைதான் அது ஈசிதானே.. ஆனா அந்த ஸ்டெத் ஐத்தைத்தான் எப்படிச் செய்வதென தெரியவில்லை.. நான் கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைச்சதும் செய்யப் போகிறேன்ன்.. இன்னும் ஒரு பிள்ளையாரையும் எடுத்து வச்சிருக்கிறேன் குயில் செய்ய:))..

      மிக்க மிக்க நன்றிகள் அம்முலு:)..

      Delete
    3. அ அம்முலு அ அதிரா அஞ்சு இப்போ வரிசையில் நிற்கிறேன் உங்க டென்சன் முடிஞ்சு இப்ப அடுத்தது என் முறை :)
      இந்த டென்சன் நம்மூர் அம்மாங்களுக்கே உரியது வெள்ளைக்காரங்க எதுக்கும் கவலையே படறதில்லை.

      Delete
    4. ஹா ஹா ஹா அஞ்சு, நாம் எவ்ளோதான் மனதில டென்சன் ஆகிடக்கூடாது ஸ்ரெடியா இருக்கோணும் என நினைச்சாலும்.. கடசியில ஸ்ரெடியா இருப்பது சரியான கஸ்டம் அஞ்சு.. நீங்க ரென்சன் ஆகாமல் இருங்கோ எல்லாம் நல்லதே நடக்கும்.. கடவுளை நம்புங்கோ.. எது வந்தாலும் ஓகே என மனதில கொஞ்சம் பாடமாக்கிக் கொண்டு இருந்தால் ரென்சன் கொஞ்சம் குறையும்.

      ஆனா பிள்ளைகள் எதை ஆழமாக விரும்புகிறார்களோ அது அவர்களுக்கு கிடைச்சிடோணும்..

      எமக்கு தெரிஞ்ச ஒரு பிள்ளை [ஸ்கொட்டிஸ்] அவ சொல்லிட்டா தான் மெடிசின் தவிர வேறேதும் படிக்கவே மாட்டென்ன் என.. ஆனா அதுக்கேற்றபடி நன்கு படிச்சவ.. அவவுக்கும் கிடைச்சிட்டுது... எனக்கு ஒரு இண்டவியூவில் அவவையும் சந்தித்தோம்ம்.. அப்போ அவவின் அம்மாதான் சொன்னா இப்படி சொல்கிறா என, அப்போ தொடங்கி மனதில அப்பிள்ளைக்காகவும் கும்பிட்டேன்.. கடவுளே அவவுக்கும் கிடைச்சிடோணும் என...

      எங்கள் மகன் எதுவாயினும் நான் படிக்கிறேன்.. மெடிசின் கிடைக்காட்டில், பயோ மெடிகல் எஞ்சினியரிங்கும் நல்ல துறை தான் என ரெடியாக இருந்தார்.

      Delete
    5. இல்லை அஞ்சு வெள்ளைகள் கவலைப்படுவதில்லை எனச் சொல்ல முடியாது, முக்கால்வாசியும் அப்படித்தான் ஆனா கால்வாசிப்பேர், பிள்ளை விரும்புவது கிடைக்கோணும் என சொல்ல்லிக் கொண்டிருப்பினம், அதேபோல யூனி கிடைச்சிட்டாலும் குதூகலப்படுவினம்..

      Delete
  26. வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்!!! இந்த வாழ்த்துகள் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்!!! அதிரா உங்கள் மகனுக்கு மெடிக்கல் கிடைத்தது மிக்க மிக்க சந்தோஷம். அது போலவே இரண்டாமவருக்கும் அவர் விரும்பும் பாடம் கிடைத்திட வாழ்த்துகள்.

    கீதா: எங்கள் இருவரின் அதே கருத்துடன்....அதிரா குழந்தை பிறக்கும் போது சந்தோஷம் எனில் அவர்களுக்கு விரும்பிய பாடம் கிடைத்து படித்து நல்ல நிலையில் வருவது அடுத்து சந்தோஷமான தருணம். ஸ்வீடு எடு கொண்டாடுதான்!!!

    நீங்க பகின்ர்டிருக்கும் பாடல் செம பாடல். கொக்கு பற பற ஆம் இப்ப பூஸார் க்ளவுட் 9 ல்....

    https://st4.depositphotos.com/17802068/20176/v/1600/depositphotos_201768026-stock-illustration-happy-cat-flying-clouds-balloons.jpg

    https://i0.wp.com/www.borneogeek.com/wp-content/uploads/2011/08/catmasutra-cloud9.jpg

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ...

      //வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்!!! இந்த வாழ்த்துகள் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்!!!//

      மிக்க மகிழ்ச்சி மிக்க சந்தோசம் மிக்க நன்றி... நிட்சயம் மகனுக்கு இந்த வாழ்த்துக்கள் எல்லாம் நல்ல பலனைக் குடுக்கும்.

      மிக்க நன்றி துளசி அண்ணன்.. சின்னவருக்கு இன்னும் ரைம் இருக்கு.

      Delete
    2. வாங்கோ கீதா வாங்கோ.. கீதா இப்போ எங்கள் பக்கம் வருவது குறைஞ்சு போச்சு.. அவவும் போஸ்ட் போடுவதில்லைத்தானே அதனால அனைத்தையும் குறைச்சிட்டாபோலும் என தேடினேன் மனதில்:)) ஹா ஹா ஹா கேட்டு விட்டதுபோலும்:)).. அவ்ளோ ஜத்தமாவா பேசினேன்?:).

      கிளவுட்டில் பறக்கும் பிங்கிப் பூஸாரும் அழகு.. அதிலேயே நித்திரை கொள்ளும் பூஸாரும் அழகு.. மேகம் கரையத் தொடங்கினால் அவ்ளோதேன்ன்:)) பூஸார் பூமியில் டமார் என வந்திறங்குவார் ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கீதா.

      நீங்க பூசணிச் சுண்டலுக்கும் பதில்கள் போட்டிருக்கிறீங்க.. இதுக்கு பதில் போட்டபின்பு அதுக்கு தருகிறேன்.

      Delete
  27. வாழ்த்துகள் அதிரா..

    உங்களுக்கும் , தம்பிக்கும்..

    கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி..

    அவர் நினைத்தது அனைத்தும் இறை அருளுடன் நிறைவேற எனது அன்பு வாழ்த்துக்களும்..


    நிறைய தகவல்கள்..இங்கெல்லாம் வேற மாதரி இந்த வலேண்டியர் வொர்க் எல்லாம் கிடையாது,,நிறைய மார்க்கும்...பணமும் மட்டும் தான்..வருத்தமான உண்மை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      //கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி..//
      அதனாலதான் இவ்ளோ அமளிப்படுகிறேன் ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் வாழ்த்துக்கு.

      உண்மைதான் இந்தியாவில் எல்லாம் பண மயமாகி விட்டது வருத்தத்துக்குரியதே...

      Delete
  28. எங்கே இருந்து முதல் பிள்ளையார் படத்தைப் பிடிச்சீங்க? போதும் வாயைப் பொத்து என்று சொல்வதற்கோ, shut up என்று சொல்வதற்கோதான் இடது கையினால் இப்படிக் காண்பிப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //எங்கே இருந்து முதல் பிள்ளையார் படத்தைப் பிடிச்சீங்க?//
      ஹையோ ஆண்டவா ஆரம்பமே அடிதடியா இருக்கும்போல இருக்கே:)) பிள்ளையாரப்பா இப்போ சாப்பாடோ முக்கியம் கர்ர்ர்ர்ர்ர்:)) உந்த வலக்கையில இருக்கும் மோதகத்தை எலியாரிடம் குடுத்துப் போட்டு டக்கெனக் கையை மாத்தி வலது கையைக் காட்டுங்கோ.. நெல்லைத்தமிழன் கலைக்கிறார்ர்ர் ஹா ஹா ஹா நானில்ல நானில்ல:))

      [im]http://1.bp.blogspot.com/_orZtZMfkcDI/SVSx_EHWxdI/AAAAAAAACG4/uEV2TFgfxMs/s400/cat-climbing-tree.jpg[/im]

      Delete
  29. உங்கள் மகனுக்கு வாழ்த்துகள் அதிரா.ஆசிகளுடனும்,அன்புடனும்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஅ காமாட்சி அம்மா வாங்கோ வாங்கோ.. மகிழ்ச்சியான செய்தி என்றதும் உடனே வந்து வாழ்த்துறீங்க.. மிக்க மகிழ்ச்சி மிக்க சந்தோசம்.. உங்கள் எல்லோரது ஆசிகளும் வாழ்த்துக்களும் மகனை நல்வழிப்படுத்தும்.. மிக்க நன்றி மிக்க நன்றி.

      Delete
  30. முதல்ல நல்ல செய்திக்கு வாழ்த்துக்களைச் சொல்லிடறேன். மெடிசின் ப்ரொஃபஷன் என்பது முற்றிலும் சர்வீஸ் ஒரியண்டட். சமூகத்துக்கான சேவை இது. உங்கள் மகன் இதில் வெற்றி பெற்று சமூகத்துக்கு உபயோகமாக, அதன் நலத்தின் அங்கமாக இருப்பதற்கு என் ப்ரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.

      பாருங்கோ அம்மாவைப்போலவேதான் மகனும் சமூகத்துக்கு சேவை செய்யப்போகிறார்:)).. பின்ன... மீ சமையல் குறிப்பெல்லாம் இலவசமாகத்தானே தருகிறேன்ன்ன்:)) .. ஹா ஹா ஹா.. என்னை ஆருமே புகழீனம் இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நம்மளை நாமளே புகழ்ந்தால்தான் உண்டு:))

      Delete
    2. //என்னை ஆருமே புகழீனம் இல்லையே// - மறந்தும் கூட அப்படியெல்லாம் சொல்லாதீங்க அதிரா. மனசுக்கு வருத்தமா இருக்கு. இதோ பாருங்க, நீங்க குழை சாதம் செய்முறை போட்டு நான் செய்து, சாப்பிட்டு, பக்கத்துத் தெரு பார்மசிக்காரனுக்கு ஏகப்பட்ட பணம் மருந்துக்குச் செலவழித்தேனே. அவர் உங்களை ரொம்பவும் புகழ்ந்தார். இதுக்கு முன்னால கூட, ஒடியல் கூழ் செய்து சாப்பிட்டு, அப்புறம் என்னை குணப்படுத்திய மருத்துவர், உங்களை ரொம்பப் புகழ்ந்தார், அவருக்கு அவசியத் தேவைக்கு என்னை மாதிரி ஆட்களை பேஷண்டாக அனுப்பியதற்கு......

      Delete
    3. @நெ.தமிழன்
      ///மறந்தும் கூட அப்படியெல்லாம் சொல்லாதீங்க அதிரா. மனசுக்கு வருத்தமா இருக்கு.///
      ஆஆஆஆஆஆஆஆஆ இப்படிப்பேசுவது நெல்லைத்தமிழனோஓஓஓ மீ ஃபெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன்ன்ன்:)).

      ///அப்புறம் என்னை குணப்படுத்திய மருத்துவர், உங்களை ரொம்பப் புகழ்ந்தார், அவருக்கு அவசியத் தேவைக்கு என்னை மாதிரி ஆட்களை பேஷண்டாக அனுப்பியதற்கு......///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) கவிட்டுப்போட்டாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:)).. இருந்தாலும் நீங்க இன்னும் என் ஒரு ரெசிப்பிகூடச் செய்யல்ல:)) சரி ஓகே என் மோதக ரெசிப்பி பார்த்தபின் அதை நவராத்திரியில் ஒருநாள் செய்யூங்கோ டீல்ல்?:))

      Delete
  31. //அப்பாவைப்போல் சபி:)).. இப்போ அம்மாவைப்போல மெல்லிசூஊஊ:)// - உங்கள் மகனை இப்போதே ப்ரஷரைஸ் செய்து எம்.டி. படிக்கும்போது, 'கண் சம்பந்தமாத்தான்' படிக்கணும்னுலாம் சொல்லாதீங்க. உங்க தற்போதைய கண் பிரச்சனைக்கு நீங்களே வேறு மருத்துவரைப் பார்த்துக்கோங்க.

    இல்லை... ஏஞ்சலின் எனக்கு எழுதியிருப்பதைப்போல், நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ///உங்க தற்போதைய கண் பிரச்சனைக்கு நீங்களே வேறு மருத்துவரைப் பார்த்துக்கோங்க. //

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) ஒரு சுவீட் 16 ல இருக்கும் பிள்ளைக்கு[என்னைச் சொன்னேன்ன்:))] கண் பிரச்சனை எப்பூடி வரும்ம்ம்ம்ம்?:).. ஹையோ அது எங்கட வீட்டுக் கண்ணாடி காட்டுவதைச் சொன்னேன்ன்ன்ன் அது டப்பா?:) அப்போ ஊக்கேயில இருக்கும் கண்ணாடி எல்லாம் மாத்திக் காட்டுதெனில்.. மெல்லிசு எனச் சொல்லும் அஞ்சு உண்மையில் குண்டூஊஊஊஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா...

      ///இல்லை... ஏஞ்சலின் எனக்கு எழுதியிருப்பதைப்போல்///

      அலோஓஓஓஓஓஓஓ அவவை நம்பாதீங்க:)) இப்பொ கொஞ்சக்காலமா அலர்ஜியில மாத்தி மாத்திப் பேசுறா:)) ஹையோ இந்த அலர்ஜி இருப்பதனால நான் படும் பாடிருக்கே:)).. ரெம்பிரேச்சர் செக் பண்ணுவதைப்போல அவோக்கு அலர்ஜி இருக்கோ இல்ல நோர்மலா இருக்கிறாவோ எனச் செக் பண்ணிப்போட்டுத்தான் நான் போஸ்ட்டே போடுகிறேன் எனில் பார்த்துக்கோங்க என் நிலைமையை:)).. மீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்பப் பாவம்:)) ஹா ஹா ஹா ஹையோ கலைக்கக்கூடாது நெல்லைத்தமிழன்..இந்த வயசில லெக்கு காண்ட்டு சுழுக்கிடப்போகுது பிறகு கோபு அண்ணன் வந்தால்கூட சுழுக்கெடுக்க முடியாதூஊஊஊஊ ஹா ஹா ஹா:)).

      Delete
    2. [im]https://i.ytimg.com/vi/enVLm4bOKYg/mqdefault.jpg[/im]
      ஹலோ நான்தான் அலர்ஜி வந்தா போர்வை போத்தி தூங்கிடறேனே :) பேசலாம் முடியாது ஒன்லி கும்பகர்ணி தூக்கம் .அட் தி மொமண்ட் தனுஷ் சீன நினைச்சுக்கோங்க :) என்னை சுத்தி இருட்டா இருக்கு :)

      Delete
    3. அல்லோ மிஸ்டர்.. வேணுமெண்டே எதையாவது எடுத்துச் சாப்பிட்டுப்போட்டூ.. பிறகு எனக்கு அலர்ஜி என சொல்லுவது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒரு தடவை தேம்ஸ்ல குளிச்சு எழும்பினால் பின்பு அலர்ஜியே வராது:))

      Delete
  32. //ஒரு மீன்குஞ்சுகூட நம்மளை மதிக்காதே:)].// - ஆமாம்.. மீன்குஞ்சு நிச்சயம் மதிக்காது. அவங்க நிம்மதியைக் கெடுக்கற மாதிரி தேம்ஸ்ல விழப்போறேன்னு முன்னாலலாம் சொல்லிக்கிட்டே இருப்பீங்களே (அதுகளுக்கு எங்க தெரியப்போகுது... கு..க்கிற நாலுகால் கடிக்காது' என்று ஹாஹாஹா)

    ReplyDelete
    Replies
    1. நெல்லை இப்ப பூஸார் விரதமாக்கும்...புரட்டாசி மாசம்!! ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    2. மகன் மிக மிக நல்ல மருத்துவராக வர பிரார்த்தனைகள் வாழ்த்துகள் அதிரா

      Delete
    3. ///ஆமாம்.. மீன்குஞ்சு நிச்சயம் மதிக்காது. அவங்க நிம்மதியைக் கெடுக்கற மாதிரி தேம்ஸ்ல விழப்போறேன்னு முன்னாலலாம் சொல்லிக்கிட்டே இருப்பீங்களே///

      ஹா ஹா ஹா கரெக்க்க்ட்டாப் பிடிச்சிட்டீங்களே:)) அது ஹொட்டாக இருந்தபோது சவுண்டு விட்டேன்ன்:) இப்போ குளிர் ஆரம்பிச்சு விட்டமையால.. சவுண்டைக் குறைச்சிட்டேன்ன்:) பிறகு ஆராவது தள்ளி விட்டிட்டால்ல்ல்ல்:))

      Delete
    4. ஹா ஹா ஹா கீத்ஸ்.. மீ இப்போ அவிச்ச முட்டை கூடத் தொடுவதில்லையாக்கும்:))..

      மிக்க நன்றிகள் கீதா மிக்க நன்றிகள்.

      Delete
  33. ரொம்ப சந்தோஷம் அதிரா... மெடிசின் செலெக்‌ஷன் ப்ராசசே ரொம்ப கடினமா இருக்கு. உள்நாட்டு மாணவருக்கு மெடிசின் கிடைப்பது ரொம்ப கடினமாத்தான் தெரியுது. பையனுக்கு நல்ல வளமான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோர் வாழ்த்துக்களும் அவரை நல் வழிப்படுத்தும் மிக்க மிக்க நன்றிகள் நெ.தமிழன்..

      Delete
  34. பாதி எழுதிட்டு முடியாம நீங்க ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கும் காட்சியே உங்கள் "மெல்லிசூஊஊ:" என்பதன் அர்த்தத்தையும் எங்களுக்குச் சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்கும் குண்டுப்பிள்ளையாருக்கும் நடுவில ஏதோ சண்டை போல இருக்கே:))

      Delete
  35. என்னுடன் வேலை பார்த்த மட்டக்களப்பு பையன் (சின்னவர்தான். டிகிரி முடித்தவரை எங்கள் அலுவலகத்துக்கு வேலைக்கு எடுத்தேன் - இன்னொருவர் சிபாரிசால், தன் உறவினர் என்று சொன்னதால். ஆனால் வேலையில் படு கில்லாடி. ரொம்ப ஸ்மார்ட். மூன்று வருடங்களுக்குள்ளேயே சாலரியை இரண்டுமடங்குக்கும் அதிகமாக்கிட்டேன்). அவர் சொன்னார். அவர் மிக நன்றாகப் படிப்பவராம். ஆனால் கோட்டா விஷயத்தினால் அவருக்கு மெடிசின் சீட் ஈழத்தில் கிடைக்காமல் போய்விட்டது என்றார். மெடிசின் சீட் கிடைப்பதே பெரிய ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஓ பாவம்தான். எங்கள் இலங்கை முறை எப்படி எனில் நெ.தமிழன். ஏலெவலில் நல்ல மார்க்ஸ் வாங்கினால் யூனி போகலாம்.. அது எப்படி எனில் கட்டவுட் மார்க் என அறிவிப்பினம்.. அது ஒவ்வொரு வருடமும் மாறுபடும்...

      இப்போ மெடிசினுக்கு 360 கட்டவுட் என அறிவிச்சால்ல்.. 359 எடுத்த பிள்ளையின் நிலைமையை யோசிச்சுப் பாருங்கோ.. அவ்ளோதான்.:(. சிலவேளைகளில் மட்டும் வெயிட்டிங்கில் சிலருக்கு கிடைக்கலாம்.

      அங்கு பணம் குடுத்து உள்ளே போவதென்பதெல்லாம் இல்லவே இல்லை.. சிங்களப் பகுதிகளில் எங்காவது அரசியல் பதவியை பாவித்து ஏதும் உள்ளே அனுப்பினால் ஒழிய.. 99.9 வீதமும் பணம் குடுத்து எதையும் சாதிக்க முடியாது.. படிச்சு மார்க்ஸ் எடுத்தால் மட்டுமே...

      அனைத்துக் கல்வி முறையும் அரசாங்கக் கட்டுப்பாட்டிலேதான் இருக்கும். பிரைவேட் யூனிவசிட்டி என்பதெல்லாம் இல்லை.. அதனால அங்கும் படிப்புடன் லக்கும் இருக்க வேண்டும்.

      இதனால்தான் பணம் + துணிவு இருக்கும் சில பெற்றோர், வெளி நாட்டுக்கு அனுப்பிப் படிப்பிக்கிறார்கள்.

      அதுவும் ஒரு விதத்தில் கொடுமை எனத்தான் சொல்லோணும்.. பாருங்கொ 2,3 மார்க்ஸ்சுகளால் மெடிசின் எஞ்சினியறிங் எல்லாம் தவறவிட்டோர்ர்.. பிஸிகல் சயன்ஸ்தான் செய்தார்கள்.. பணம் இருந்தாலும் வேறு வழி அங்கில்லை.. அவ்ளோ கட்டுப்பாடு யுனிவசிட்டிகள் அங்கு.

      எங்கள் ஒரு ஊர்க்கார அண்ணா.. மிக கஸ்டப்பட்ட குடும்பம்.. அவர் கஸ்டப்பட்டு பாடுபட்டு படிச்சு.. முடிவில் எஞ்சினியரிங்க்கு 2 மார்க்குகள் கட்டவுட்டிலிருந்து குறைந்து விட்டது... அப்போ வெயிட்டிங் லிஸ்ட்டில் பெயர் இருக்கு என அறிவிச்சர்களாம்... ஆனா இவர் பயத்தில அதை நம்பமுடியாது என.. உடனேயே பிஸிகல் சயன்ஸ்க்கு பெயரைப் பதிஞ்சிட்டாராம்.. பின்னர் வருகிறதாம் உனக்கு எஞ்சினியரிங் கிடைச்சிருக்கு என... பெயரை ஏற்கனவே பதிவு செய்தமையால் மாற்ற முடியாமல் போய் விட்டது.. அவர் போனால் போகுதென டிக்றி முடிச்சு... பின்பு.. பி ஏச் டி இங்கு வந்து முடிச்சு இப்போ புரொபிசராக இருக்கிறார் யூனிவசிட்டியில்...

      அனைத்துக்கும் மிக்க நன்றிகள் நெ.தமிழன்.

      Delete
    2. இந்த கல்வி சிஸ்டத்துக்காக இலங்கை அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அங்கிருந்து வெளியே வருபவர்கள் நிச்சயம் குவாலிட்டியான மாணவர்கள்தாம்.

      இதுல ஒரு பிரச்சனை என்ன வென்றால், அந்த அந்த இடத்திலுள்ள மாணவர்கள் வெளிய் யூனியில் கம்பீட் செய்வதோ அல்லது அங்கு சென்று சேர்வதோ முடியாததுதான். இதிலும் அர்த்தம் இருக்கிறதா நான் நினைக்கிறேன்.

      இந்தியாவில், அதிலும் தமிழ்நாட்டில், மெஷின்கள்தாம் டிகிரி படித்தவர்களைத் தயார் செய்கிறது (என் எண்ணம், அதனால் குவாலிட்டி மிகவும் கம்மி)

      Delete
    3. மிகவும் சரி நெல்லைத்தமிழன் .வெறும் மார்க் மட்டுமே போதும்னு நினைக்கிறது நம்மூர் .ஆனா ரிசல்ட் வருமுன்னே ரெண்டு வருஷம் கூடவே 11 த் நம்மூர் sslc போல அதிலும் மார்க்ஸ் எடுக்கணும் அப்போதான் இந்த யூனிவெர்சிட்டிக்கு அப்பளை பண்ண தகுதியை நிர்ணயம் செய்வாங்க .அதை விட அந்த பெர்சனல் ஸ்டேட்மென்ட் இருக்கே அதுவும் பெரிய விஷயம் .நம்மூரில் யாரை கேட்டாலும் மெடிசின் படிக்கணும்னு சொல்றாங்க ஆனா எதுக்குன்னு கேக்கறாங்களா ? எல்லாவதுக்கும் மென்டலி ப்ரிப்பேர்ட் ஆகணும் இங்கே மார்க்ஸ் மட்டுமே சீட்டை நிர்ணயிப்பதில்லை

      Delete
    4. //நம்மூரில் யாரை கேட்டாலும் மெடிசின் படிக்கணும்னு சொல்றாங்க ஆனா எதுக்குன்னு கேக்கறாங்களா //

      உண்மை.. இங்கு இதுக்கு சரியான திருப்தியான பதில் குடுக்கோணும் பிள்ளைகள்.

      Delete
  36. //எங்கள் மூத்த மகனுக்கு மெடிசின் கிடைத்து, இந்த செப்டெம்பர் யூனிவசிட்டி ஆரம்பமாகி விட்டது.//

    வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு. வாழ்க வளமுடன்.
    சிறப்பாக படித்து தாய் தந்தையருக்கு பெருமை சேர்த்து சமுதாயத்தில் நல்ல மருத்துவர் என்று பேர் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள்..

      Delete
  37. அவர் 4-5 வருடத்துல, தான் ஒரு டாக்டர் என்று யூனியிலிருந்து வெளிவரும்போது உங்களுக்கு இன்னமும் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லாம் இறைவன் செயல்.

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான் நெல்லைத்தமிழன்.. ஆனா எங்களைப்பொறுத்து ஸ்கூலில் இருந்து யூனிவசிட்டிக்குள் அனுப்பிப்போட்டால் பின்பு அவர்கள் தம்மைக் கவனித்துக் கொள்வார்கள்.. நாம் முன்னே பின்னே திரிந்து பார்க்க வேண்டிய தேவை இருக்காது.. எப்படியும் பக்குவம் வந்துவிடும்.

      இது ஸ்கூலில் இருந்து யூனி போவது என்பது நெருப்பில் இருந்து தூக்கி வெளியே விடுவதைப்போல இருக்கு... ஏனெனில் ஸ்கூலில் ஃபிரெண்ட்ஸ் ஐப்பொறுத்து.. பழக்க வழக்கங்கள்கூட தவறாக வாய்ப்பிருக்கு.. இந்நாட்டில் ஈசியாக கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகலாம்.. அதனால அவற்றிலிருந்து பக்குவப்படுத்தி புத்திமதி சொல்லி கைக்குள் வச்சிருப்பதென்பது மிகவும் கஸ்டம்... இப்பொழுது இன்னொரு உலகம் போல.. அவர்களைப் பார்த்துக்கொளள அவர்களுக்குத் தெரிந்துவிடும்... மிக்க நன்றிகள்.

      Delete
  38. படிப்பு + வொலண்டியர் வேர்க்ஸ் + ஸ்மாட்னெஸ் + லக்+ கடவுள்... இவ்வளவும் சரியாக அமைந்தால் தான் இது சாத்தியம்.//

    உங்கள் ஆசிகள், கடவுளின் விருப்பம், மகனின் உழைப்பு இவைகள் எல்லாம் சேர்ந்து நல்லதே நடந்தது.
    மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. அதேதான் கோமதி அக்கா.. பலன் கிடைக்காமல் போயிருந்தால் கவலையாகத்தான் இருந்திருக்கும்..

      Delete
  39. உங்கள் மனது இப்போது மகிழ்ச்சியில் பறப்பது தெரிகிறது அதற்கேற்ற பாடல்.
    மிக அருமை.

    ReplyDelete
  40. குழந்தைகள் படம் மிக அழகு.
    குழந்தைகளுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும் என்றும்.
    பிள்ளையார் படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. மூத்தவருக்குப் பத்து வயதாகும்வரை ஜோடியாகவேதான் உடுப்புக்கள் போடுவேன்ன், சொக்ஸ் சூஸிலிருந்து அனைத்தும்.... அதனால இவர்களுக்கு கிவ்ட் குடுக்கும் சொந்த பந்தங்கள்கூட சோடியாகவே வாங்கித் தருவார்கள்.. பத்து வயதின் பின்பு மூத்தவர் அப்படி வேண்டாம் எனத் தொடங்கிட்டார்ர் ஹா ஹா ஹா அதனால விட்டாச்சு..:).

      பிள்ளையார் வண்டியுடன் குண்டராக இருந்தாலும் அவர் அழகுதான் ஹா ஹா ஹா மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  41. //நான் மட்டும்தான் கொஞ்சம் ஓவர் ரென்சனானேன், மகன் கூலாகவே இருந்தார் எதுக்கும் ரெடி என்பதைப்போல, அதனால மனதைத் தேற்றிக் கொண்டிருந்தோம் முடிவு வரும்வரை. முடிவு நல்லவிதமாக அமைந்ததில் மகிழ்ச்சி.//

    எப்போதுமே குழந்தைகள் கவலை இல்லாமல்தான் இருப்பார்கள், பெற்றோர்கள்தான் கவலைபட்டுக் கொண்டு இருப்பார்கள்.
    இனி சந்தோஷமாய் குழந்தையை வாழ்த்திக் கொண்டு இருங்கள். , இறைவனை வேண்டிக் கொண்டு இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.. கடவுள்தான் எல்லாமே.. மிக்க நன்றி.

      Delete
  42. வாழ்த்துகள் சகோதரி... (அம்மா)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ... ஆவ்வ்வ்வ்வ்வ் என்னை அம்மா ஆக்கிட்டீங்களோ?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி..

      Delete
    2. மகனுக்கு கிடைத்த வெற்றி அம்மாவுக்கு அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி.
      மகனுக்கும், அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறார். தனபாலன்.

      Delete
    3. திண்டுக்கல் தனபாலன், குறள், சினிமாப் பாடல்களில் தேர்ந்தவர்.

      அம்மா என்றால் அன்பு
      அப்பா என்றால் அறிவு
      ஆசான் என்றால் கல்வி
      அவரே உலகில் தெய்வம்

      என்ற பாடல் (ஜெ. பாடிய பாடல், அடிமைப் பெண் எம்ஜியார் படம்) அவர் மனதில் ஓடியிருக்கும். ஹாஹாஹா (இந்தச் சிரிப்பு, 'அறிவு' என்றால் ஆண்கள் என்பதை நினைத்து)

      Delete
    4. ஹா ஹா ஹா ஓ அதுவோ கோமதி அக்கா.. நான் ஒரு சுவீட் சிஸ்ட்டீன் பிள்ளையை [என்னைச்சொன்னேன்:)] டக்கென அம்மா ஆக்கிட்டாரோ என நினைச்சேன்:) ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

      Delete
    5. ///ஹாஹாஹா (இந்தச் சிரிப்பு, 'அறிவு' என்றால் ஆண்கள் என்பதை நினைத்து)//

      ஹையோ முருகா என்னால முடியல்ல:)) விடுங்கோ என்னை விடுங்கோ குளிர்ந்தாலும் பறவாயில்லை இதோ ஜம்ப் ஆறேன்ன் தேம்ஸ்ல:))..

      அல்லோஓஓஓஓஓஒ இன்னொரு பாடலும் இருக்குது ஜொள்ளட்டோ?:))..

      ஆரம்பம் தெரியவில்லை இது இடை வரி..

      அப்பன் எனும் பதவீஈஈஈஈஈஈஈஈ
      அது பெண்கள் செய்யும் உதவீஈஈஈஈஈ..:))

      ஹா ஹா ஹா [இந்தச் சிரிப்பு- அப்பா எனும் பதவி குடுக்கும் எம்பாலாரை நினைச்சு ஹா ஹா ஹா:))]

      Delete
  43. ஒரு டாக்டர் பிள்ளை டாக்டராவதில் ஆச்சர்யம் ஏதும் எனக்கு இல்லை.

    ஆனால் ’எங்கட அதிரா’வின் பிள்ளை டாக்டர் ஆகப்போவது
    கேட்கத்தான் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    சந்தோஷம் பொயிங்கிப் பொயிங்கி வருகிறது. :))))))

    அதிராவா கொக்கா !

    பிடித்தாலும் பிடித்தால் நல்ல புளியங்கொம்பாகவே,
    யோசித்து ஆரம்பத்திலேயே கைப்பிடித்து, கழுத்தை நீட்டி விட்டாள்.

    வருங்கால பிரபல டாக்டருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்லாசிகள்.

    மொத்தத்தில், முதன்முதலாக ஓர் உறுப்படியான பதிவு .....
    அதுவும் மகிழ்ச்சியான செய்தியினைத் தாங்கி வந்துள்ளது.

    பாராட்டுகள் + வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. முக்கியமான இடுகைக்கு வந்திருக்கீங்க.

      அபூர்வ எழுத்துப் பிழை கோபு சார்.. உருப்படியான பதிவு.

      Delete
    2. டாக்டருக்கு மனைவியாவது நல்லதுதான். ஆனால் டென்ஷன் பார்ட்டியாவோ கோபக்காரராவோ இருந்தால் கஷ்டம்தானே கோபு சார். அப்போ இறைவன் கொடுத்த வரம்தானே

      Delete
    3. //நெல்லைத் தமிழன் Wednesday, September 26, 2018 3:16:00 pm
      முக்கியமான இடுகைக்கு வந்திருக்கீங்க.//

      அந்த முதல் பிள்ளையார் சுண்டி இழுத்து, என்னை இன்று இங்கு வரவழைத்து விட்டார் .... நானும் ஆழம் தெரியாமல் காலை வைத்து நன்கு மாட்டிக்கொண்டு விட்டேன்.

      //அபூர்வ எழுத்துப் பிழை கோபு சார்.. உருப்படியான பதிவு.//

      ஆமாம். எழுத்துப்பிழையாகி விட்டது. தவறாக அடித்து அவசரமாக அனுப்பி விட்டேன். சரியாக மீண்டும் படித்து கவனித்து அனுப்பியிருக்கலாம். உருப்படியாக ஒரு வேலையும் செய்ய முடியாதவனாக வழுவட்டையாக ஆகி விட்டேன். இதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். வேதனைப் படுகிறேன்.

      தவறு நேர்ந்த எழுத்து ஒரேயொரு உ’று’ப்படிதான் (எண்ணிக்கைதான்) என்றாலும், அதைக் கண்டு பிடித்துச் சொல்லியுள்ள உங்களை நான் மிகவும் மனதாரப் பாராட்டுகிறேன்.

      தாங்கள் எடுத்துச் சொல்லாவிட்டால் நான் இப்போதும் என் தவறை உணர்ந்து கொள்ளாமல் (மீண்டும் சிரத்தையாகப் படிக்காமல்) இருந்திருப்பேன்.

      மிக்க நன்றி ஸ்வாமீஈஈஈஈஈஈஈஈஈ. இந்த அதிராவுக்கு கமெண்ட்ஸ் கொடுத்தாலே எனக்கு கையும் ஓடாமல், லெக்கும் ஆடாமல், ஒரே பதட்டமாகி விடுகிறது, ஸ்வாமி. :))))

      Delete
    4. ///
      வை.கோபாலகிருஷ்ணன்Wednesday, September 26, 2018 10:49:00 am
      ஒரு டாக்டர் பிள்ளை டாக்டராவதில் ஆச்சர்யம் ஏதும் எனக்கு இல்லை.//

      ஆஆஆஆஆஆஅ இதாரிது நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட காலத்தின் பின்பு வலது லெக்கைத் தூக்கி வச்சு வந்திருப்பது:).. ஆஅவ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊஉ ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்ப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிங்கோ.. ஹையோ கோபு அண்ணன் லாண்டட்ட்ட்ட்ட்ட்:)).. ஹா ஹா ஹா..

      வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. வாழ்த்துப் பதிவு பார்த்து வந்தது மிக்க மகிழ்ச்சி.

      ///ஆனால் ’எங்கட அதிரா’வின் பிள்ளை டாக்டர் ஆகப்போவது
      கேட்கத்தான் மிகவும் சந்தோஷமாக உள்ளது.
      ///

      ஹா ஹா ஹா மீயும் டொக்டர் எல்லோ:) பட்டம் சுமப்பது அழகில்லை என ஞானி ஆக்கிட்டேன்ன் அதனால நீங்க மறக்கலாமோ என் பட்டத்தை கர்ர்ர்:)).

      //அதிராவா கொக்கா ! //

      அதானே.. மக்கள்ஸ் கவனியுங்கோ கோபு அண்ணனே ஜொள்ளிப்போட்டார்ர்ர்ர்ர்:)).

      //பிடித்தாலும் பிடித்தால் நல்ல புளியங்கொம்பாகவே, //

      ஆவ்வ்வ்வ்வ்வ் முதலாவது ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊ:) இதை நெ.தமிழன் கவனிக்கவில்லை:) எனக்கு டமில்ல டி ஆக்கும்:)) ஹா ஹா ஹா:))

      Delete
    5. ///பிடித்தாலும் பிடித்தால் நல்ல புளியங்கொம்பாகவே,
      யோசித்து ஆரம்பத்திலேயே கைப்பிடித்து, கழுத்தை நீட்டி விட்டாள். //

      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) புரளியைக் கிளப்பி விட்டிடுவீங்கபோலிருக்கே:)) எங்களோடது அரேஞ் மரீச் ஆக்கும்:)) மணவறையில கூட மீ குனிஞ்ச தலை நிமிரேல்லை எண்டால் பார்த்துக்கோங்க:) ஹா ஹா ஹா:))..

      ///வருங்கால பிரபல டாக்டருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்லாசிகள்.///

      மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கோபு அண்ணன்.. எல்லோரும் வாழ்த்தி ஆசி சொல்வதைப்பார்க்க எனக்கு கண்கள் கலங்குது.. மிக்க நன்றி.

      ///மொத்தத்தில், முதன்முதலாக ஓர் உறுப்படியான பதிவு ..... ///
      ஹா ஹா ஹா என் போஸ்ட்டைப்பற்றிச் சொன்னது அந்த கையைக் காட்டி ஆசீர்வதிக்கும் பிள்ளையாருக்கே பொறுக்கவில்லை:) அதனாலதான் எழுட்த்ஹுப் பிழையைக் குடுத்திட்டார்ர்:)) ஹா ஹா ஹா ..

      Delete
    6. ///நெ.தமிழன்
      அப்போ இறைவன் கொடுத்த வரம்தானே///

      கோபு அண்ணன் கொஞ்சம் வியக்கம்:) ஜொள்ளுங்கோ பீஸ்ஸ்ஸ்:) நெல்லைத்தமிழன் சொல்ல வருவது.. அதிரா மனைவியாக அமைஞ்சது ..கடவுள் கொடுத்த வரமோ இல்ல அவர்[என் கணவர்]அதிராவுக்கு அமைஞ்சது பாக்க்கியமோ:)).. உடனேயே தெளிவு படுத்துங்கோ கோபு அண்ணன்.:)இல்லை எனில் காண்ட் கோர்ட் படி ஏறவும் தயங்க மாட்டேனாக்கும்.. நீங்க கூண்டிலே ஏறி ஜாட்சி சொல்ல வேண்டிவரும்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா:)).

      [im] http://everythingchangesbook.com/wp-content/uploads/2009/11/cat-gun.jpg [/im]

      Delete
    7. //

      வை.கோபாலகிருஷ்ணன்
      //அந்த முதல் பிள்ளையார் சுண்டி இழுத்து, என்னை இன்று இங்கு வரவழைத்து விட்டார் .... நானும் ஆழம் தெரியாமல் காலை வைத்து நன்கு மாட்டிக்கொண்டு விட்டேன்.//

      ஹா ஹா ஹா “உரலுக்குள் தலையைக் குடுத்துவிட்டு இடிக்குப் பயந்தால் முடியுமோ?:)”.. இனி கோபு அண்ணனின் நிலைமை கவலைக்கிடம்தேன்ன்ன்ன்:)).

      ///ஆமாம். எழுத்துப்பிழையாகி விட்டது. தவறாக அடித்து அவசரமாக அனுப்பி விட்டேன். சரியாக மீண்டும் படித்து கவனித்து அனுப்பியிருக்கலாம். உருப்படியாக ஒரு வேலையும் செய்ய முடியாதவனாக வழுவட்டையாக ஆகி விட்டேன். இதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். வேதனைப் படுகிறேன். ///

      ஹா ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஅ ஹையோ சிரிச்சு முடியுதில்ல..:) இனி என்ன பட்டும் ஒண்ணும் ஆகப்போவதில்லையாக்கும்:))..

      /தவறு நேர்ந்த எழுத்து ஒரேயொரு உ’று’ப்படிதான் (எண்ணிக்கைதான்) என்றாலும்,///
      ஹா ஹா ஹா நோஓஓஓ இது ரெண்டாவது உ”று”ப்படி எண்ணிக்கையாக்கும்:)).

      ///தாங்கள் எடுத்துச் சொல்லாவிட்டால் நான் இப்போதும் என் தவறை உணர்ந்து கொள்ளாமல் (மீண்டும் சிரத்தையாகப் படிக்காமல்) இருந்திருப்பேன்.//

      ஹா ஹா ஹா பூஸோ கொக்கோ நான் பப்ளிஸ் பண்ணும்போதே அந்த று வைப் பார்த்து விட்டேன்ன்.. கோபு அண்ணன் எப்படி இப்படிப் பிழை விட்டார் என ஓசிச்சேன்ன்:)).

      ///மிக்க நன்றி ஸ்வாமீஈஈஈஈஈஈஈஈஈ. இந்த அதிராவுக்கு கமெண்ட்ஸ் கொடுத்தாலே எனக்கு கையும் ஓடாமல், லெக்கும் ஆடாமல், ஒரே பதட்டமாகி விடுகிறது, ஸ்வாமி. :))))///

      ஹா ஹா ஹா ஹையோ என்னால முடியவே இல்ல.. சிரிச்சு சிரிச்சு கண்ணில தண்ணி வந்திட்டுதூஊஊஊஊ..

      ஹா ஹா ஹா மிகவும் மகிழ்ச்சி கோபு அண்ணன்.. மிக்க நன்றி_()_.

      Delete
  44. you can not suppress the deserving people வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. உண்மைதான்.. மிக்க நன்றிகள்.

      Delete

  45. தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி யிருப்பச் செயல்.

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.

    தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி யிருப்பச் செயல்.

    தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

    மகன் வெற்றிபெற்றதற்கு மூவருமே முயன்றுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
    டொக்ட்டர் எனக் கேட்ட தாய்

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் ஜேக்கே ஐயா வந்திருக்கிறார்ர் வாங்கோ வாங்கோ.. நான் எதிர்பார்க்கவே இல்லை.. நல்ல மகிழ்வான செய்தி என்றதும் நீங்களாகவே வந்து குறள்களைப்போட்டு வாழ்த்தியிருக்கிறீங்க.. முதன் முதலா வந்திருக்கிறீங்கள் நல்வரவு மிக்க மகிழ்ச்சி....

      //ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
      டொக்ட்டர் எனக் கேட்ட தாய்//

      ஆவ்வ்வ்வ்வ் என் பாசையில் பேசிட்டீங்க டொக்டர் என ஹா ஹா ஹா..

      மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  46. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் கோமதி அக்கா மிக்க நன்றிகள்.

      Delete
  47. இந்தப் போஸ்ட்டுக்கு எல்லோரும் வந்து மனதார வாழ்த்தி ஆசீர்வதித்தது மிக்க மிக்க மகிழ்வைத்தருது... அனைவருக்கும் நன்றி..

    [im] http://image.blingee.com/images17/content/output/000/000/000/643/568385366_1747760.gif?4 [/im]

    ReplyDelete
  48. வணக்கம் !

    தங்கள் மகன் மருத்துவம் கற்கத் தேர்வானமைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பூசாரே மற்றும் அவனது இந்தப் பெருமைக்கு ஊன்றுகோலாய் இருந்த உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துகள் எதிர்காலம் சிறந்து எல்லோர்க்கும் நல்ல பிள்ளையாய் இருந்து மென்மேலும் சாதனைகள் பல படைக்க இறையாசிகள் நல்கட்டும் ! வாழ்க நலம்

    அன்புமகனுக்கு வாழ்த்துக் கவிதை நாளை அனுப்புகிறேன் மன்னிக்கவும் பூசாரே !

    ReplyDelete
    Replies
    1. சீராளன், நினைத்த உடனே கவிதை கொட்டும் உங்களுக்கு. உங்கள் பெயரைப் பார்த்து 'வாழ்த்துக் கவிதை' படிக்கும் ஆசையில் வந்தேன். நீங்கள் தாமதப்படுத்தியதால் இரண்டு செய்யுளாக எழுதவும்.

      Delete
    2. மீயும் மீயும் நெ தமிழனை படு பயங்கரமாக வழி மொழிகிறேன்ன்ன்.....

      Delete
    3. வாங்கோ மேஜரே வாங்கோ.. இத்தனை நாள் இடையில காணாமல் ஒளிச்சிருந்தீங்க.. நெல்லைத்தமிழனும் தேடிக் களைச்சுப் போயிட்டார் உங்களை.. இப்போ இந்த மகிழ்ச்சியான செய்தி என்றதும் ஓடி வந்திருக்கிறீங்க மிக்க சந்தோசம் மிக்க நன்றிகள்.. உங்கள் கவிதைக்காக வெயிட்டிங்:).. அப்படியே அம்மாவுக்கும்[என்னைச் சொன்னேன்] ஒரு அழகிய கவிதை எழுதுங்கோ ஹா ஹா ஹா:))

      Delete
  49. ஆஹா. மகிழ்ச்சி. மகனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. மிக்க நன்றிகள்.

      Delete
  50. மிக மிக சிறிய இன்டர்வியூ...வெற்றி...மகிழ்ச்சி...பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. உங்கள் கொமெண்ட் ஒளிச்சு இருந்துவிட்டது.. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.

      Delete
  51. உங்கள் மகனுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துகள். உங்கள் டென்ஷன் புரிகிறது. இனி எல்லாம் சுகமே!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ.. மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.

      Delete
  52. என்ன இது இண்டைக்கு ஆருமே கொமெண்ட் போடாமல் வெறிச்சோடிக்கிடக்கு?:).. கர்ர்ர்ர்ர்ர்:) அதுக்குள்ள அதிராவுக்கு புளொக் இருப்பதை எல்லோரும் மறந்திட்டினமே:)..

    ReplyDelete
  53. மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத்தெரிவியுங்கள்! உங்களுக்கும் தான்! மருத்துவரின் அம்மாவாயிற்றே!

    பிள்ளையாரின் வாழ்த்து அட்டகாசமாய் இருக்கிறது! அதுவும் படுத்துக்கொண்டிருக்கும் பிள்ளையாரும் அவரின் உடையின் டிசைனும் அமர்க்களம்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. நீண்ட நாட்களின் பின்பு வலையுலகில் வந்திருக்கிறீங்க.. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
  54. மகிழ்ச்சியான விடயம் பூசாரே.!. மகன் மருத்துவத்துறையில் சாதனை செய்ய இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. அடிக்கடி புளொக்கையும் எம்மையும் மறக்கிறீங்களே கர்ர்ர்:)) இது நியாயமோ?:)

      Delete
  55. பிள்ளையாரும் சாய்மனையில் /வடிவேலும் சாய்மையில் அருமையான ஆழ்ந்த சிந்தனை!))))

    ReplyDelete
  56. ஊசி இணைப்பு வழமைபோல சூப்பர்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.