நல்வரவு_()_


Thursday 7 February 2019

மோர் மிளகாய் - அதிரா Style:)💧

ஜம்ப் பண்ணிட வேண்டியதுதேன்ன்:)
டந்துவிட்ட summer இல், நல்ல வெயில் , அதனால 2,3 தடவைகள் மோர் மிளகாய் செய்து காயப்போட்டு எடுத்தேன். கடையில் வாங்கினால் படு உப்பாக இருக்கு, இப்படி செய்யும்போது அளவோடு உப்பு சேர்த்தால் போதும்.  

ஒரு கிலோ அளவில் மிளகாய் வாங்கி வந்து,  நன்கு கழுவி, தண்ணி இல்லாமல் துடைத்து எடுத்துக் கொண்டேன். பின்னர், அதன் வண்டிப்பகுதியில் ஒரு அகலமான கீறல் , கத்தி இருபக்கமும் வருவதுபோல போட வேண்டும்[படத்தில் காட்டியிருப்பதைப்போல], வால் பகுதியை குட்டியாக வெட்டி விட்டிடலாம் அல்லது வாலிலும் இரண்டாக சிறிய பிளவு பண்ணி விட்டிடோணும்.. அப்போதானே தயிர் உள்ளே போய் ஊறும்.


இப்பொழுது, தயிருக்குக் கொஞ்சமாகத் தண்ணி விட்டு[மோர் போல அல்ல, கொஞ்சம் தளர்வான தயிர்போல கரைத்தால் போதும்], கறிக்குப் போடும் அளவுபோல, உப்புப் போட்டுக் கரைத்தெடுத்து மிளகாயில் ஊற்றி, நன்கு, அனைத்திலும் படுமளவு குலுக்கி விட்டு...

இப்படி ஒரு போத்தலில் போட்டு...

மூடி, வெயில் படும் இடமாக வைத்து விட வேண்டும், டெய்லி மூடியைத் திறந்துவிட்டு, நன்கு குலுக்கித், திரும்ப மூடி வைத்து விட வேண்டும்... இப்படி 3 அல்லது 4 நாட்கள் ஊறவிட்டபின்பு... 

காலையில் ஒரு தட்டில் மிளகாயை மட்டும் கவனமாக எடுத்துப் பரவி வெய்யிலில் வைக்க வேண்டும், மோரை அப்படியே போத்திலோடு வைக்கோணும், நைட் திரும்ப மிளகாயை போத்தலில் கொட்டிக் குலுக்கி மூடி விட வேண்டும்..

நல்ல வெயில் எனில் 2,3 நாட்களில் மோர் முழுவதும் மிளகாயில் ஒட்டி, வற்றி காய்ந்துவிடும், பின்பு போத்தலில் போடாமல், வெயிலிலேயே நன்கு முறுகும்வரை காய விட்டு எடுக்க வேண்டும். 

எவ்ளோ அழகாக முறுகிக் காய்ந்திருக்குது பாருங்கோ...

இதனைப் பொரிக்கும்போது கமகம என நெய் வாசனை மூக்கைத் துளைக்கும்... புட்டுடன் சாப்பிட்டால்ல் ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஅ என்னா சுசி:) தெரியுமோ?:). 

மிளகாய் வாங்கும்போது கேரளாவில் இருந்துவரும் உறைப்புக் குறைந்த பெரிய மிளகாய்தான் நான் வாங்குவேன், காரமான குட்டி மிளகாய் எனில், கொஞ்சம் அதிக நாட்கள் ஊற விடோணும், இல்லை எனில் படு காரமாக இருக்கும் பொரியல்.
⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪
ஊசி இணைப்பு:)

ஊசிக் குறிப்பு:-
⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪
 “ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்தை விடக் குறைந்ததல்ல,
 ஒரு தீக்குச்சியின் மரணம்”
 இவ்வரிய தத்துவம்போன்ற பொன்மொழியை, உங்களுக்காக வழங்கியிருப்பவர்.. உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் பாத்திரமான:) 
புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்.
⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪⇪

119 comments :

  1. இன்றைய பதிவில் மிகவும் மிக மிகவும் பிடித்தது ஹெலன் கெல்லர் ஊசிகுறிப்பு

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... எனக்கு அவங்க மோர் மிளகாய் செய்தது பிடித்திருந்தது.

      நல்லதைப் பாராட்ட மாட்டீங்களே

      Delete
    2. //இன்றைய பதிவில் மிகவும் மிக மிகவும் பிடித்தது ஹெலன் கெல்லர் ஊசிகுறிப்பு//

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... எனக்கு அவங்க மோர் மிளகாய் செய்தது பிடித்திருந்தது.

      நல்லதைப் பாராட்ட மாட்டீங்களே///

      ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:) இப்போ நான் எந்தக் கட்சியில நிண்டு பேசோணும்?:) மீ கொன்ஃபியூஸ்ட் யா:))

      Delete
  2. உப்புக்கெல்லாம் சாரி கேட்டா :) அப்புறம் எங்க வீட்டு கபேர்டில் பட்டு கடையே வைக்கலாம் ஹாஆஹா

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உப்பூடி உண்மையை பபுளிக்கில ஜொன்னா:), பின்பு டேவடைக் கிச்சினைத் திறக்க விடாமல் கல்லெறி விழப்போகுதே:)

      Delete
  3. ஆவ் மோர்மிளகாய் !!! பார்க்கவே மொறு மொறுன்னு நாவூறுதே ..
    போன சம்மருக்கு இங்கிலாந்தே கொதிச்சி போயிருந்தது நானும் அரிசி சவ்வரிசி வற்றல் லைம் ஊறுகாய்லாம் எல்லாம் போட்டேன் .

    ReplyDelete
    Replies
    1. சவ்வரிசி வற்றலா.. அப்போ ரெசிப்பியைப் போட்டிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நான் வழமையா தேசிக்காய் ஊறுகாயும் போடுவேன் ஆனா இப்போ உரிலிருந்து நிறைய தேசிக்காய் வற்றல் வேப்பம்பூ வடகம் வந்திருப்பதால அவற்றைச் செய்யவில்லை.

      மிளகாய் உண்மையில் சூப்பரா இருந்துது அஞ்சு, பார்த்துப் பெரிய மிளகாயாக வாங்கியமையால உறைப்பும் குறைவு.. சும்மாவே சாப்பிடலாம்போல் இருந்துது.

      Delete
  4. நீங்க கிரீக் யோகர்ட் சேர்த்திங்களா ? நெக்ஸ்ட்டைம் kefir யோகர்ட் சேருங்க செயின்ஸ்பரில கிடைக்குது .நம்மூர் தயிரின் சுவையோட இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்த யோகர்ட் நல்லா செட்டாகிவிட்டது அஞ்சு.. கடும் புளிப்பும் இல்லை, நல்ல கிரீமியாகவும் இருக்கும். சில சமயம் ஏசியன் ஷொப் இல் வாங்குவேன் ஆனா அந்த புளிப்பு ஓவராக இருப்பதைப்போல இருக்கும்.

      Delete
  5. நாங்க மோர் மிளகாயை பருப்பு தாளிக்கும்போது அப்புறம் மோர்க்குழம்பு தாளிக்கும்போது சேர்ப்போம் .

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் இந்த வெளாட்டு:) மீயும் பண்ணுவேன்.. அதாவது சுண்டல்/வறை அயிட்டங்களுக்கு.. செத்தலுக்குப் பதில் இதனைப் போட்டு விடுவேன்.

      Delete
  6. /மோர் மிளகாய் - அதிரா Style:)💧//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) இந்த ஸ்கொட்டிஷ்க்காரங்களுக்கு பெருந்தன்மையில்லை .நாங்க உங்களை விட்டுக்கொடுக்கமா லண்டன் ஸ்டைல்னுதானே குறிப்பு போடறோம் :)

    ReplyDelete
    Replies
    1. அல்லோ உங்களுக்கு உங்கள்ல நம்பிகை இல்லை:) அதனால லண்டனை வம்பில மாட்டி விடுறீங்க:)) ஹா ஹா ஹா...

      Delete
  7. அஆவ் உங்க வலையில் முத முறையா வரலாறில் எழுதிக்கணும் பிக்காஸ் நீங்க போட்ட காணொளி பாட்டு நான் கேட்டிருக்கேன் ரேடியோவில்

    ReplyDelete
    Replies
    1. என்னாஆஆஆஆதூஊஊஊஊஊஊஊஉ நீங்க ரேடியோக் கேட்டீங்களோ?:) எப்போதிருந்து இந்த கெட்ட பழக்கமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ மீ பெயிண்ட்டாகிறேன்ன் எனக்கு ஆராவது சுட்டாறிய தண்ணி தெளிச்சு எழுப்புங்கோ:)) ஹா ஹா ஹா..

      இது நான் நேற்று யமுனை ஆற்றிலே பாடல் தேடிக் கேட்டேன்.. அதன் தொடர்சியாக யூ ரியூப்பில் போச்சுதா.. நம்மட முத்துராமன் மாமாவின் மூத்த மகனாச்செ என லபக்கென இங்கு போட்டிட்டேன்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  8. மாசி பிறந்து விட்டால் இங்கு வத்தல் , வடகம் போட ஆரம்பித்து விடுவோம்.
    நீங்கள் ஆரம்பித்து வைத்து விட்டீர்கள். இந்த வீட்டில் போட வசதி இல்லை.
    மொட்டைமாடி பூட்டி வைத்து இருக்கிறார்கள்.

    நீங்கள் மிளகாயை கீறியது போல் கீற மாட்டோம் பெரிய கோணி ஊசியால் இரண்டு மூன்று இடத்தில் துளை இடுவோம்.

    தஞ்சாவுர் குடைமிளகாய் என்று கிடைக்கும் குட்டியாக அழகாய். என் அத்தைக்கு காரம் வேண்டும் , அவர்கள் நீங்கள் போட்ட மிளகாய் போல் நீட்ட மிளகாயில் போடுவார்கள்.




    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. எங்களுக்கு மாசியிலதான் இன்னும் பனியாக இருக்கும்.. யூனிலதான் இங்கு ஆரம்பிக்கலாம். இம்முறையும் போடோணும் நிறைய...

      ஏன் கோமதி அக்கா, உங்கள் நாட்டு வெய்யிலுக்கு ஜன்னலில் ஒரு மேசையில் வைத்தாலே போதுமே காய்ந்து விடுமே.

      //நீங்கள் மிளகாயை கீறியது போல் கீற மாட்டோம் பெரிய கோணி ஊசியால் இரண்டு மூன்று இடத்தில் துளை இடுவோம்.//
      அது கோமதி அக்கா அப்படியும் செய்வோம்ம்.. ஆனா அதுக்கு புளி சேர்த்து கொஞ்சமாக அவிப்போம்ம்.. அதாவது வெக்கை காட்டுவது என்போம்.. அப்படி எனில் ஓகே, இல்லை எனில் எனக்கு உறைப்பு அதிகமாகிவிடுவதுபோல இருக்கு.. அதனாலேயே இப்படிக் கீறி விடுவேன்.

      //தஞ்சாவுர் குடைமிளகாய் என்று கிடைக்கும் குட்டியாக அழகாய். //
      ஓ அப்படி நான் காணவில்லை, இங்கு குட்டியாக ஒல்லியாக கிடைக்கும் அது காரமோ காரம்... சொல்லி வேலையில்லை.. நான் அது வாங்குவதில்லை.

      Delete
  9. இலங்கை ஓட்டலில் மண்பானை கட்டித் தயிர் வாங்கி சாப்பிடுவோம். அப்போது தயிர் சாதத்திற்கு மோர் மிளகாய் கொண்டு வந்து வைத்தார்கள். நம் ஊர் மிள்காய் போல் கடித்தால் கணில் தண்ணீர் வந்து விட்டது காரம்.

    எங்கள் ஊர் ப்க்கம் காரம் வேண்டாம் என்றால் உளுந்து அரைத்து தயிருடன் பிசறி காய வைப்பார்கள். அதை வாங்கி வரும் ஆள் நான். காரம் உடலுக்கும், வயிற்றுக்கும் ஒத்துக் கொள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இலங்கையில் கோமதி அக்கா.. அதிகமாக சிங்களப் பகுதிகளில், மண்பானையில் அழகாக கட்டியாக தயிர் போட்டு தென்னை ஓலையில் கூடாகக் கட்டி விற்பார்கள்.. சூப்பராக இருக்கும் அந்த தயிர், நாம் பிரயாணத்தின் போது எப்பவும் வாங்குவோம்.

      அது சிங்களவர்களின் கடையாக இருக்கலாம் என நினைக்கிறேன், ஏனெனில் அவர்கள் காரம் அதிகமாக சேர்ப்பார்கள். பிளேன் அப்பம் சுட்டு கட்டைச் சம்பல் என ஒரு செத்தல் மிளகயில் சட்னி.. தேங்காய் போடாமல் செய்வார்கள் காலைச் சாப்பாட்டுக்கு சூப்பராக இருக்கும் ஆனா உறைப்போ உறைப்பு.

      //எங்கள் ஊர் ப்க்கம் காரம் வேண்டாம் என்றால் உளுந்து அரைத்து தயிருடன் பிசறி காய வைப்பார்கள்//
      ஓ இது புதுசாக் கேள்விப்படுகிறேன்ன்ன்... நல்ல புதுமுறையாக இருக்கு.. எனக்கும் அதிக காரம் நெஞ்செரிக்கும்.

      Delete
    2. அதிரா இன்றுதான் பங்களூர் வந்தேன்...மீண்டும் ஞாயிறு பயணம் சென்னைக்கு...செவ்வாய் மதியம் மேல்தான் வருகை...ஸோ லேட்டாகிப் போச்சு ...பதிவை ஸ்க்ரோல் செய்யும் போது கோமதிக்கவின் கருத்து இலங்கை தயிர் என்றதும் உடனே இங்கு நின்றுவிட்டேன்...

      ஹையொ மட்டக்களப்பு தயிராக்கும் வரும் இலங்கையில் நாங்க இருந்தப்ப. பானையில் தென்னை ஓலை அலல்து பனை ஓலை தான் பெரும்பாலும் கட்டி வரும். அதன் டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

      இலங்கை தயிர் பல நினைவுகளை மீட்டிவிட்டது....நான் மிகவும் அனுபவித்த ஒரு லைஃப் என்பேன். மிகவும் பிடித்த ஊர்...நாங்கள் இருந்த பகுதியில் தமிழர்தான்...எத்தனையோ நினைவுகள்...

      கீதா

      Delete
    3. வாங்கோ கீதா வாங்கோ.. ஓ பயணத்தில் இருந்தீங்களோ அதுதான் என் போன போஸ்ட் கவிதையும் படிக்காமல் போயிட்டீங்க:)) ஹா ஹா ஹா.

      //மட்டக்களப்பு தயிராக்கும் வரும் இலங்கையில் நாங்க இருந்தப்ப. பானையில் தென்னை ஓலை அலல்து பனை ஓலை தான் பெரும்பாலும் கட்டி வரும். அதன் டேஸ்ட் அபாரமாக இருக்கும். //
      உண்மையில் அங்கு அப்படிப் பானையில் கிடைக்கும் தயிர் சூப்பரோ சூப்பர்.. இப்போ கிடைக்குமோ எனத் தெரியவில்லை அப்படி.

      இளமை நினைவுகள் என்றும் பசுமையானவைதானே..

      மிக்க நன்றி கீதா. பயண நேரத்திலும்.. ஜன்னலால எட்டிப் பார்த்தமைக்கு..

      Delete
  10. ஊசி இணைப்பு சிரிக்க வைத்தது, ஊசிக்குறிப்பு சிந்திக்க வைக்கிறது.

    புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள் அருளிய தத்துவ முத்து மிக மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி.. ஊசி இணைப்பில் அப்பெண் பேசுவது ரொம்ப அப்பாவித்தனமாக இருக்குதெல்லோ?:) அப்பூடியே அதிராவைப்போலவேதேன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)..

      Delete
  11. ஜம்ப் பண்ணிட வேண்டியதுதேன்ன்:)//

    பூனைக்குட்டி அழகு.

    செய்முறை விளக்க படங்கள் எல்லாம் அழகாய் எடுத்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா.. இது சமரில எடுத்தது, போடாமல் இப்போதான் போட முடிஞ்சிருக்கு.

      Delete
  12. தென்காசி போய் வந்த போது தென் பொதிகை காற்றை அனுபவித்த போது மனதில் தோன்றிய பாடல். பாடல் வரிகள் நன்றாக இருக்கும்.

    கேட்டு ரசித்தேன்.
    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் தலவிருட்சம் செண்பகபூதான்.
    போன முறை போனபோது ஒரு பூ மட்டும் இருந்தது. அதை படம் பிடித்து வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. //தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் தலவிருட்சம் செண்பகபூதான்.//

      ஓ.. எனக்கு செண்பகப்பூ தெரியாது.. பூவரசம்பூத்தெரியும் ஊரில் இருக்க்குது.

      படம் போடுங்கோ பார்க்கிறேன்.. மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  13. வனமெல்லாம் செண்பகப்பூ பாடல் எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல். எஸ் பி பியின் குரலுக்காகவும், இளையராஜாவின் இசைக்காகவும், வரிகளுக்காகவும்.... கார்த்திக் நடனமும் இந்தக் காட்சியில் பிடிக்கும். என் வெள்ளி லிஸ்ட்டில் நீண்ட நாட்களாய் தூங்கும் பாடல்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஆவ்வ்வ்வ்வ்வ் பல நாட்களாக நான் போடும் பாடல் எதுவும் பிடிக்கவில்லை என்றே சொல்லி வந்தீங்க.. இம்முறை பிடிச்சிடுச்சேஎ..:)))

      எனக்கு முத்துராமன் மாமாவின் மகன் பாடுவதனாலேயே பிடிச்சிருக்குது:).

      //என் வெள்ளி லிஸ்ட்டில் நீண்ட நாட்களாய் தூங்கும் பாடல்!//

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ உங்கள் லிஸ்ட்டில் இருந்து, நான் களவாடிய ரெண்டாவது பாட்டு இது:).

      Delete
    2. என்ன பாட்டு மாறியிருக்கிறது!

      Delete
    3. ஆஆஆவ்வ்வ் ஶ்ரீராம் பாட்டு மாறிவிட்டதென்றால், புது போஸ்ட் வந்திருக்கிறதென்று அர்த்தம், ஏன் உங்களுக்கு நோட்டிபிகேசன் காட்டவில்லை??????? ஏதோ நடக்கிறதூஊஊ:)..

      Delete
  14. மோர் மிளகாய் நாங்களும் போடுவோம். நானும் எங்கள் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். ஆனால் மிளகாய் இந்த மிளகாய் இல்லை. தஞ்சாவூர் குடைமிளகாய் என்று கிடைக்கும். அதை வாங்கி இப்படிப் போடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. ஓ த.குடைமிளகாய் எனத்தான் கோமதி அக்காவும் சொல்லியிருக்கிறா.. தேடிப் பார்க்கிறேன்ன் அது எப்படி இருக்குமென.

      Delete
    2. அதே அதே குடை மிளகாய்.ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல்...அதிரா....

      அல்லது நீட்ட மிளகாயிலும் போடலாம் ஸ்ரீராம்..ஹோட்டல்களில் எல்லாம் தருகிறார்களே தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள என்று அந்த மிளகாய்...எங்கள் வீட்டில் இரண்டிலும் போடுவோம்..அதிரா

      கீதா

      Delete
    3. நான் இதுவரை குடைமிளகாயில் மோர் மிளகாயோ அவிச்ச மிளகாயோ பார்த்ததில்லை கீதா, இம்முறை முயற்சி பண்ணப்போறேன்.

      Delete
    4. கவி அமுதம், அது குடமிளகாய் இல்லை. அதாவது It is not bell pepper, what you mean. ஶ்ரீராம், தி/கீதா சொல்லுவதெல்லாம் மோர்மிளகாய் போடுவதற்கெனத் தஞ்சாவூர்க்குடமிளகாய்னு ஒரு வகை சின்னச் சின்னதாகக் கிடைக்கும். நான் ஒரு வருஷம் போட்டேன். மிச்சம் இருக்கானு பார்த்துப் படம் எடுத்துப் போடறேன். நீங்க பாட்டுக்குக் குடமிளகாயில் மோர் மிளகாய் போட்டுடப் போறீங்க! இஃகி, இஃகி, நினைச்சுப் பார்த்தாலே சிப்புச் சிப்பா வருதே!

      Delete
    5. ஹா ஹா ஹா கீசாக்கா.. என் செக்கை இவ்ளோ சலரி குடுத்து ஏன் வச்சிருக்கிறேன்ன்?:)), அவ உடனேயே தேடி லிங் அனுப்பிட்டா எனக்கு, கீழே கடசிக் கொமெண்ட் பாருங்கோ:)), எங்கள்புளொக்கிலும் கண்டுபிடிச்சு இப்போ அங்கும் பேச்சு வார்த்தை நடக்குது இதுபற்றி:)) ஹா ஹா ஹா..

      இருந்தாலும் நீங்க இவ்ளோ அக்கறையா தெளிவுபடுத்துவதைப் பார்க்க எனக்கு இப்பவே ஒரு யூ ரியூப் ஷனல் ஓபின் பண்ணி சமையல் குறிப்புக்கள் போடும் ஆசை வருது:)).. மாதம் முப்பதாஆஆஆஆஅயிரம் பவுண்டுகள் கிடைக்குமாமே:))

      Delete
    6. மன்னிச்சுக்கோங்க... நானே தேடி எடுத்து லிங்க் தரவேண்டும் என்று இருந்தேன். வேறுவேலையில் இருந்து விட்டேன்.

      Delete
    7. ஆராட்சி அம்புஜம் இருக்கும்வரை கவலை எதுக்கு?:)... ஹா ஹா ஹா...

      Delete
  15. இந்த தஞ்சாவூர் கு,மி பிப்ரவரியில்தான் கிடைக்கும். சீஸன்! நிறையபேர் மோரில் போடுவார்கள். நானும் தயிரில்தான் போடுவேன். (நாங்களும் தயிரில்தான் போடுவோம் என்று திருத்திக்கொள்கிறேன்!)

    ReplyDelete
    Replies
    1. //நானும் தயிரில்தான் போடுவேன். (நாங்களும் தயிரில்தான் போடுவோம் என்று திருத்திக்கொள்கிறேன்!)//
      ஹா ஹா ஹா எவ்ளோ கஸ்டப்பட்டு இப்படி ரைப் பண்ணுறீங்க:)

      Delete
  16. ஆமாம், பொரிக்கும்போது நெய்வாசமாய் இருக்கும். நாங்கள் உப்புமா, மோர்க்களி போன்றவற்றில் போடுவோம். மேலும் தனியாய்ப் பொரித்து மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்வோம்!

    ReplyDelete
    Replies
    1. மோர்க்களி - எனக்கு பசி வந்துவிட்டது ஸ்ரீராம்.

      Delete
    2. நாங்கள் விரத காலத்தில் லஞ் க்கு பப்படத்தோடு இந்த மிளகாய் வடகம் பொரிப்போம், அல்லது புட்டுக்குத்தான் சூப்பராகப் பொருந்தும், எனக்கு இந்த மோர் மிளகாய் இருந்தால்.. வேறு எதுவுமே தேவையில்லை.. பிரெட் பன்னுக்குக்கூட உள்ளே வைத்து மடித்துச் சாப்பிடுவேன் அவ்ளோ விருப்பம் ஹா ஹா ஹா.

      மோர்க்களியோ.. தெரியாதே.. நெல்லைத்தமிழனுக்கும் ஊரில் இருந்தே பசிக்குதாமே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பாரைனில் இருந்தால்கூடப் பறவாயில்லை.. இது நாளைக்கு டின்னருக்க்கு செய்யச் சொல்லிடலாமே அண்ணியை:).

      Delete
    3. ஹையோ அதே அதே ஸ்ரீராம் சொன்னதேதான் அதிரா...மோர்க்களி, புளு உப்புமா மோர் சாதத்திற்கு என்று நெய் வாசம் தூக்க சூப்பரா இருக்கும்

      கீதா

      Delete
    4. மோர்க்களிக்குறிப்பு தேடிப்பார்க்கோணும்.. எனக்கு களி வகைகள் பெரிதாக பிடிப்பதில்லை கீதா.

      Delete
    5. பச்சரிசி மாவை நல்ல புளிப்பு மோரில் ரவா தோசைப் பதத்துக்கு நன்றாய் கரைத்துக்கொண்டு, (மோர் இல்லாத பட்சத்தில் புளியில் கூட கரைத்துக்கொள்ளலாம்)

      வாணலியில் கடுகு, உ.ப, பெருங்காயம், இந்த மோர்மிளகாய் போட்டுப்புரட்டிக்கொண்டு,

      கரைத்து வைத்த மாவை வாணலியில் இட்டு உப்பு சேர்த்து கிளறி, அல்வா பதம் வரும்போது இறக்கி விடவேண்டும். நல்லெண்ணெய் தாராளமாக செலவாகும்!

      இதுவே மோர்க்களி. அல்லது மோர்க்கூழ்!

      இதுவும் எங்கள் தள சமையலில் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

      Delete
    6. ஓ இப்படி ஒரு களியை நான் பார்த்ததில்லை ஶ்ரீராம்... நன்றி..

      Delete
  17. கத்தி வைத்து லேசாய்ப் பிளந்து போடுவோம். அல்லது சுத்தமான ஈர்க்குச்சி வைத்து இருபுறம் ஒரு துளையிட்டும் போடுவோம். முதல்நாள் கல்லு உப்பு போட்டு ஊறவைத்து விடுவோம். மறுநாள் இதற்காகவே அளவாய் வாங்கி உறைகுத்திய தயிரை முழுகும் அளவு ஊற்றி வைத்து... மற்றப்பொடி இதே போலதான்! போத்தலில் அல்ல, சம்படத்தில் வைப்போம்! பெரிய நீண்ட அகல பாத்திரத்தில் ஊறவைத்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஓ கல்லுப்பு நல்லதுதான், கரையுமோ தெரியாதே எனும் பயம் எனக்கு... நீங்கள் எல்லோரும் இப்படிச் சொல்லச் சொல்ல எனக்கு இப்பவே மிளகாய் வாங்கிச் செய்யோணும் போல வருது..

      ஆனா இந்த பெப்ர்வரி பிறந்ததுதான் டக்கு டக்கென இருள் விலகுதே... காலையில ஏழியா விடியுது இரவு 5.30 ஆகுது டார்க் ஆக. போன மாதம் வரை 3.30 க்கே லைட் போட்டுத்தான் கார் ஓடினோம்ம்.. பாருங்கோ பக்குப் பக்கென வெளிக்குது.. என்னமாதிரிக் காலம் ஓடுது..

      Delete
    2. சேம் ப்ரொசீஜர் அதிரா ஸ்ரீராம் சொல்லிட்டதால நான் தனியா சொல்லலை...

      கீதா

      Delete
  18. சாரிக்கு ஸாரி கேட்கும் மனைவி போற்றத்தகுந்தவர்!!!! நிறைய புடைவைகள் சேர்த்திருப்பார்!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அந்தக் கணவனின் பாடு திட்டாட்டம்தான்.. திட்டவும் முடியாதே.. கணவர் சொன்னதைத்தானே செய்கிறார் மனைவி ஹா ஹா ஹா:).

      Delete
  19. ஊசிக்குறிப்பை நாங்கள் பள்ளி நாட்களிலேயே பாலோ செய்வோமாக்கும். பள்ளியில் லேட்டாகப் போகும்போது மு கேட் மூடி விட்டால் அவர்களுக்கு முன்னாள் இன்னொரு சின்ன கேட்டுக்கு ஓடி அதையும் மூடும் முன்பு அதன் வழியே உள்ளே பிரவேசித்து விடுவோம். எங்கள் பிடி மாஸ்டர் புன்சிரிப்புடன் அப்படி ஓடிவந்து நுழைபவர்களை அனுமதித்து விடுவார்! அதுமட்டுமல்ல, தியேட்டர்களில் ஒரு சினிமா ஹவுஸ்புல் ஆகிவிட்டால் வேகமாக அடுத்த தியேட்டருக்கு ஓடிவிடுவோம்! பின்னே? கல்லூரி கட் அடித்தது வீணாகிவிடுமே!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நல்லாத்தான் எஞ் சோய் பண்ணியிருக்கிறீங்க ஸ்ரீராம்... பசுமை நிறைந்த நினைவுகள்தானே... ஊசிக்குறிப்பு எப்பூடி எல்லாம் வேர்க் பண்ணுது பாருங்கோ:).

      மிக்க நன்றி.

      Delete
  20. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மோர்மிளகாய்க்குக்கூட செய்முறையா? நல்லா இருக்கு கதை! இந்த மோர்மிளகாயை வறுத்துக் கீரை மசியலில் போட்டுச் சாப்பிட்டால் என்ன ருசி தெரியுமா? அரிசி மாவைப் புளித்த மோரில் கரைத்து உப்புமா அல்லது மோர்க்கூழ் செய்தால் அதிலே காரத்துக்கு இந்த மோர்மிளகாயை நல்லெண்ணெயில் வறுத்துச் சேர்த்தால் ஆகா! ஓகோ! பேஷ், பேஷ்!

    ReplyDelete
    Replies
    1. மோர்க்கூழ்... அட்டஹாசம்.. ஒத்துக்கறேன்.

      கீரை மசியல்ல மோர் மிளகாயா? சிந்திக்கவே மனம் மறுக்குதே...

      Delete
    2. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மோர்மிளகாய்க்குக்கூட செய்முறையா?//
      என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க:) அஞ்சுவுக்குத் தெரியாது தெரியுமோ?:)..

      எல்லோரும் மோர்க் கூழ் என்கிறீங்க.. ஒருவேளை நாங்கள் தயிர்ச்சொதி என ஒன்று செய்வோம்ம்.. அதைத்தான் சொல்றீங்கபோல இருக்கே:).. பெயரில மாற்றம் இருக்கும்..

      //கீரை மசியல்ல மோர் மிளகாயா? சிந்திக்கவே மனம் மறுக்குதே...//
      அது நெல்லைத்தமிழன், கீரைக்கறிக்கு தாழிச்சுப் போடுவோமெல்லோ.. அதுக்கு இந்த மோர் மிளகாயைப் பாவிச்சால் சூப்பராக இருக்கும்.. அப்படித்தானே கீசாக்கா?..

      Delete
    3. நெல்லைத் தமிழரே, நினைவு தெரிஞ்சதில் இருந்து கீரை மசியலில் மோர் மிளகாய் தாளித்துக் குழம்புக் கருவடாமும் போட்டுச் சாப்பிட்டிருக்கேன். கல்யாணம் ஆகி வந்து தான் இங்கே இவங்களுக்கெல்லாம் பழக்கமும் இல்லை/பிடிக்கவும் இல்லை என்பதால் சாப்பிடுவதில்லை. ஆனால் பிறந்த வீடு போனால் கீரை மசிச்சால் இது போடாமல் தாளிப்பு இல்லை. ஒரு தரம் அரைக்கீரை மசியலில் போட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள். பிடிக்குதா என!

      Delete
    4. ///நெல்லைத் தமிழரே, நினைவு தெரிஞ்சதில் இருந்து கீரை மசியலில் மோர் மிளகாய் தாளித்துக் குழம்புக் கருவடாமும் போட்டுச் சாப்பிட்டிருக்கேன். //

      ஹையோ கீசாக்காவுக்கு எப்போ நினைவு தெரியாமல் இருந்திருக்கூஊஊஊஊ:)) நேக்கு லெக்கும் ஆடல்லே காண்ட்டும் ஓடல்லே:)) ஹா ஹா ஹா :).

      Delete
  21. அது சரி, பட்டு சாரி கேட்கிறதைப் பார்த்தாலே நீங்க தான்னு தெரியுது? எத்தனை சாரி கலெக்ஷன் ஆகி இருக்குதாம்? ஜொள்ளவே இல்லையே?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் உப்பெல்லாம் மறக்க மாட்டனே:)) சமையலில் மீ தான் கில்லி.. சே..சே வல்லி.. சே..சே ராணி.. எங்கள் நட்பு[இங்கு] வட்டத்திலேயே:))

      Delete
  22. ஊசிக்குறிப்பும் தத்துப்பித்துவப் பொன்மொழியும் அபாரம். எங்கே தேடிக்கண்டு பிடிக்கிறீங்களோ! :)))))

    ReplyDelete
    Replies
    1. ///தத்துப்பித்துவப்//

      கர்ர்ர்ர்ர்ர் உப்பூடிச் சொல்லக்கூடா:) தத்துவத்தங்கம் அப்பூடிச் சொல்லலாம்:)) இது பித்தளை தகரம் எண்டுகொண்டு கர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கீசாக்கா.

      Delete
  23. மோர் மிளகாய் மிகவும் பிடித்தமானதுதான்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ... மிக்க நன்றி.

      Delete
  24. மோர் மிள்காய் பார்க்க மிக அழகா வந்திருக்கு. ஆமாம் நீங்கள் குட்டையான சிறிய குடமிளகாய் வடிவத்தில் உள்ள மிளகாய் உபயோகப்படுத்துவதில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      //ஆமாம் நீங்கள் குட்டையான சிறிய குடமிளகாய் வடிவத்தில் உள்ள மிளகாய் உபயோகப்படுத்துவதில்லையோ?//
      இந்தப் போஸ்ட் மூலம்தான் அதனைக் கேள்விப்படுகிறேன்ன், கடையில்கூட அப்படி மோர் மிளகாய் பார்த்ததில்லை.. இப்போ அஞ்சு லிங் போட்டிருக்கிறா அதில் பார்க்கிறேன்... இங்கு பார்த்ததாக நினைவில்லை இப்படி குட்டி குடைமிளகாய்.

      Delete
  25. மோர் மீளகாயை தயிர்/மோர் சாதத்துக்குன்னா தொட்டுக்கிட்டா நல்லா இருக்கும். நீங்க புட்டுக்குத் தொட்டுக்கொண்டேன்னு சொல்லியிருக்கீங்க?

    வித்தியாசமான ரசனை இருக்கவேண்டியதுதான். இவ்வளவு வித்தியாசமாகவா?

    அடுத்து கட் செய்த கேசரிக்குத் தொட்டுக்கொண்டேன், பிறந்த நாள் கேக்குக்குத் தொட்டுக்கொண்டேன் என்று எழுத வேண்டியதுதான் பாக்கி

    ReplyDelete
    Replies
    1. //மோர் மீளகாயை தயிர்/மோர் சாதத்துக்குன்னா தொட்டுக்கிட்டா//
      எங்கள் வீட்டிலதான் இப்படி சாதமெதுவும் பிடிக்காதே:).. என் குழை சாதத்துக்குப் பொரிச்சிருக்கிறேனே:). ஹா ஹா ஹா..

      புட்டுக்கு உண்மையில் சூப்பராக இருக்கும் தெரியுமோ? இலங்கை மக்களிடையே கேட்டால் தெரியும்...

      //வித்தியாசமான ரசனை இருக்கவேண்டியதுதான். இவ்வளவு வித்தியாசமாகவா?///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்காவை விடவோ?:).

      //அடுத்து கட் செய்த கேசரிக்குத் தொட்டுக்கொண்டேன், பிறந்த நாள் கேக்குக்குத் தொட்டுக்கொண்டேன் என்று எழுத வேண்டியதுதான் பாக்கி///
      ஹா ஹா ஹா சத்தியமாக சக்கரைப்புக்கைக்கு மோர் மிளகாய் சேர்த்துச் சாப்பிடுவேன்ன், என்ன சுவை தெரியுமோ?:) ஏனெனில் எனக்கு இனிப்பு பிடிக்காதென்பதால் சக்கரைப் புக்கைக்கு இப்படி பொரிச்ச மிளகாய் அல்லது நல்ல உறைப்புச் சட்னி சேர்த்தால் கடகடவெனச் சாப்பிட்டு விடலாம்.. இல்லை எனில் கொஞ்சம் தான் ரேஸ்ட் பண்ண முடியும் என்னால...

      Delete
  26. ஆமாம்..கடையில் வாங்கும்போது மிளகாய் காரமா இல்லையான்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க? நான் சாப்பிட்டுப் பார்த்து வாங்குவதைப் பார்த்து கடைக்காரன் ரொம்ப ஆச்சர்யப்பட்டிருக்கிறான்.

    நாகர்கோவிலில் தொட்டிப்பாலத்தின் கீழே சிறிய மிளகாய்கள் உள்ள செடி இருந்தது. (ஒரு வீட்டின் வெளியே). அது ஊசி மிளகாய் என்று சொல்லப்படும் வகை. நான் தைரியமாக ஒன்றை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு வலியால் (வயிற்றில்) துடித்துவிட்டேன். அந்த வீட்டு அம்மாவே மோர் தந்தார். அப்புறம் சொன்னார் இந்த மிளகாய் ரொம்ப ரொம்ப காரமானது என்று.

    ReplyDelete
    Replies
    1. அந்த மிளகாயின் பெயர் தெரியுமா? காந்தாரி
      Jayakumar

      Delete
    2. ஜலேபெனோ மிளகாயில் போட்டுப்பாருங்கள். காரம் ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கே கொன்டு போய்விடும்.

      Delete
    3. எங்கள் வீட்டு தொட்டியில் முன்பு ஊசி பச்சைமிளகாய் வைத்தோம், அப்போது வந்த முதல் பச்சைமிளகாயை என் கணவர்
      எடுத்து "நான் பச்சைமிளகாய் சாப்பிடுவேன்" என்று சாப்பிட்டு விட்டு ஆ, ஊ, என்று சத்தம் போட்டது இன்னும் நினைவு இருக்கிறது.

      Delete
    4. ஜேகே சார்.. இந்த ஜலெபெனோ மிளகாயைத்தானே பாப்பாஜான்ஸ் பிட்சா கூட கொடுப்பாங்க (எங்க கம்பெனில அப்படித்தான் வழக்கம்). அது ஒண்ணும் காராதே. ஒருவேளை உப்பில் ரொம்ப ஊறப்போட்டதினால் இருக்குமோ?

      Delete
    5. ///ஆமாம்..கடையில் வாங்கும்போது மிளகாய் காரமா இல்லையான்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க?//
      ஹா ஹா ஹா கரும் பச்சை நிறமெனில் உறைக்கும், மற்றும்படி குட்டி மிளகாய் எனினும் காரம் அதிகம்.. இதுதான் எனக்குத் தெரியும்..

      //நான் சாப்பிட்டுப் பார்த்து வாங்குவதைப் பார்த்து கடைக்காரன் ரொம்ப ஆச்சர்யப்பட்டிருக்கிறான்.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ வாய் வயிறெல்லாம் எரியுமே...

      //அது ஊசி மிளகாய் என்று சொல்லப்படும் வகை//
      தெரியும் அது மிகவும் குட்டி எல்லோ பொல்லாத காரம் அது..

      Delete
    6. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ..

      ஓ ஊசி மிளகாயைச் செல்லமாக காந்தாரி என்பினமோ?:) ஹா ஹா ஹா பொருத்தமான பெயர்தான்... நாங்கள் சில சுட்டியான பெண் குழந்தையைப் பார்த்து .. பொல்லாத காந்தாரி.. எனச் செல்லமாகச் சொல்லுவோம்:)..

      Delete
    7. ///jk22384Friday, February 08, 2019 7:34:00 am
      ஜலேபெனோ மிளகாயில் போட்டுப்பாருங்கள். காரம் ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கே கொன்டு போய்விடும். //
      ஹா ஹா ஹா தெரியும். அது நான் பச்சையாக வாங்கியதே இல்லை. மிக்க நன்றிகள் வருகைக்கு.

      Delete
    8. கோமதி அக்கா .. இந்த ஊசி மிளகாய் எங்கள் வீட்டிலும் வளர்ந்துது ஊரில்.. அது வானம் பார்த்துத்தானே காய்க்கும்.. என்னா உறைப்பு அது.. உருவத்தைப் பார்த்து எடை போட்டிடக்கூடா ஜாமீஈஈஈஈஈஈ எனத்தான் நினைக்கத் தோணும் ஹா ஹா ஹா:).

      Delete
    9. //இந்த ஜலெபெனோ மிளகாயைத்தானே //
      நெல்லைத்தமிழன் இந்த ஹலப்பினோ பச்சையாக சாப்பிடவோ சமைக்கவோ முடியாது படு காரம், ஆனா பிட்சாவில் மற்றும் சப்வே சான்விச்சில் போடுவதெல்லாம் பிக்கிள்.. அதுவே கொஞ்சம் காரம்தான்.

      Delete
    10. ஆமாம் அதிரா...அது ஹலப்பினோதான். என் பெண் எப்போவும் நான் சொல்லும்போது கரெக்ட் பண்ணுவாள். பிக்கிள்னால காரம் இல்லையோ. அப்போ ஒரிஜினல் மிளகாயைக் கடித்துச் சாப்பிட ஆசை...

      Delete
    11. நாங்கள் இங்கு வந்த புதிதில் நெல்லைத்தமிழன், உறைப்பு எதுவும் கிடைக்காமல் மிகவும் கஸ்டப்பட்டோம்ம்.. அப்போ கணவரோடு வேர்க் பண்ணிய ஸ்கொட்டிஸ் சொன்னார், தனக்கு உறைப்பு பிடிக்கும், இங்கு ஒரு சைனீஸ் உறைப்பு பேஸ்ட் இருக்கு.. அதை ஒருக்கால் ட்றை பண்ணுங்கோ என, சூப்பமார்கட்டில் இருந்துது, அதை வாங்கினால்ல்ல்ல்ல்ல் ஓ மை கடவுளே.. நீங்களும் சாப்பிட்டிருப்பீங்க.. இப்போ ஷனா டாலுக்கு அதைப் பூசிக் காயவைத்ததுபோல கிடைக்குதே.. வசாப் ஓ என்னமோ பெயர்.. பச்சைக்கலரில இருக்கும் அது.. சைனீஸ் ரெஸ்ரோரண்ட்களில் இருக்கும்.. ஆஆஆஆஆஆஆஆ என்னா உறைப்பு கார்ட் அட்டாக்கே வந்திடும்:))).

      Delete
  27. ஒரு வாய்ப்பு மூடப்படும்போது இன்னொன்று திறக்கும் என்று சொல்றீங்க. எனக்குத்தான் அப்படி ஒரு வாய்ப்பு வந்த பாட்டைக் காணோம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இதுவும் கடவுளைப் பார்ப்பதைப்போலத்தான்:).. கடவுள் உருவத்திலேயே வரமாட்டார் எல்லோ.. அதுபோலத்தான், நீங்கள்தான் கதவைத் தேடிக் கண்டு பிடிக்கோணும்.. எங்காவது இருக்கும்:).

      Delete
  28. உங்க கிட்ட நிறைய சாரி (உங்க பாஷைல சாறீ) இருக்குன்னு சொன்னீங்கள்ல. அதுக்கு இதுதான் காரணமா? அதான் மோர் மிளகாய்லயும் தேவையான உப்பு போடலை போலிருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதெல்லாம் வேறு வழியில வாங்கினதாக்கும்:).

      Delete
  29. புட்டு கோதுமை ரவை உப்புமா மாதிரி எனக்கு மட்டும்தான் தெரியுதா இல்லை ஏஞ்சலின் கண்ணுக்கும் அப்படித்தான் தெரியுதா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா :) அது என் கண்ணுக்கு முழு கோதுமையை ஸ்டிம் செஞ்ச மாதிரில்ல தெரியுது :)

      Delete
    2. ///புட்டு கோதுமை ரவை உப்புமா மாதிரி//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கண்ணாடியைக் கழட்டி வச்சுப்போட்டுப் பார்த்தால் அப்பூடித்தான் தெரியுமாக்கும்.. நெல்லைத்தமிழனுக்கு அவரின் ஆன்ரிக்கும் ஹா ஹா ஹா:).

      நான் எப்பவும் புட்டு மீடியம் ஆட்டா மாவில்தான் செய்வேன்.. தவிடு அதிகமுள்ளதில்.. அத்தோடு எப்பவும் குழலில் போடுவதில்லை.. எப்பவாவது ஆசைக்கு மட்டுமே குழல், ஏனெனில் அது அதிகம் தேங்காய்ப்பூச் சேரும் எல்லோ அது நல்லதில்லைத்தானே அதனால, ஸ் ரீமரில்தான் அவிப்பேன்..

      //அது என் கண்ணுக்கு முழு கோதுமையை ஸ்டிம் செஞ்ச மாதிரில்ல தெரியுது :)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    3. ஏஞ்சலின்... உங்களுக்கு கோதுமை ரவை உப்புமா எப்படிச் செய்யறதுன்னு சொல்லித்தரேன். (அதிராவின் புட்டு செய்முறை மாதிரி).

      நான் இதுக்கு, கோதுமையை உபயோகிப்பதில்லை. ஏன்னா அது வேக நேரமாகும். ரவையைத்தான் (ரவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வை) வாங்குவேன். அப்புறம் உப்புமா செய்ய ஆரம்பிக்கும்போது ரவையை உபயோகிக்கமாட்டேன். அது உடம்புக்கு நல்லதில்லை அல்லவா? முதலில் கடுகு, உ.பருப்பு, மிளகாய், க.பருப்பு தேங்காய் எண்ணெயில் வறுத்துவிட்டு, பெருங்காயம், தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து....

      என்ன ரவையே போடலையே என்று சொல்றீங்களா... அது நல்லதில்லைதானே.. அதுனால

      இப்போ கோதுமை ரவை உப்புமா ரெடியா? என்ன... வெந்நீர்தான் ரெடியா இருக்குனு சொல்றீங்களா? நாந்தான் சொன்னேனே... இது அதிரா புட்டு செய்த மாதிரியான செய்முறைனு.

      Delete
    4. //என்ன ரவையே போடலையே என்று சொல்றீங்களா... அது நல்லதில்லைதானே.. அதுனால//நாந்தான் சொன்னேனே... இது அதிரா புட்டு செய்த மாதிரியான செய்முறைனு.////

      ஹா ஹா ஹா போகாது ஐயா போகாதூஊஊஊஊஊஉ எங்கு போனாலும்.. நம்மைப் பிடிச்சது போகாதூஊஊஊஊஉ:))..

      ஹையோ நெல்லைத்தமிழனும்.. புள்ள அம்மன், தஞ்சைப்பெருங்கோயில் எல்லாம் தரிசனம் பண்ணி வந்தார்ர்:) ஆனாலும் பாருங்கோ அதிராட புளொக்கில கால் வச்சதும் என்னமோ போலாகிடுறார்ர்:)) எல்லாமே மறந்து போயிடுதே ஹா ஹா ஹா:)..

      நெல்லைத்தமிழன் மீ ரொம்ப ஹப்பியாக இருக்கிறேன்ன்ன்ன் ஏன் எண்டு ஜொள்ளட்டோ?:).. இல்ல இன்னொரு போஸ்ட்டில ஜொள்றேனே:) நாளைக்கே:), ஆனா இந்த ஆப்பி... அஞ்சுவுக்கு இல்லையாக்கும்:).. ஹா ஹா ஹா புவஹா புவஹா புவஹா:)).

      Delete
  30. ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஊஊஊ என்னா ருசீ.....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ டிடி வாங்கோ.. அது ருசீ அல்ல சுசீஈஈஈ எனச் சொல்லோணும் ஹா ஹா ஹா..மிக்க நன்றி.

      Delete
  31. நெல்லைத்தமிழன் ஸ்வாமீ ..... ஓடியாங்கோ..... ஓடியாங்கோ...... உடனே ஓடியாங்கோ.

    பச்சை மிளகாய் .... மோர் மிளகாய் .... என்று ஏதேதோ நம் அதிரா, தானே செய்ததாக பச்சைப் பொய் சொல்லியிருக்காங்கோ .... என்னால் நம்பவே முடியலை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இல்லை கோபு சார்... இந்த டிரிக் அதிராட்ட செல்லுபடியாகாது.

      நீங்க இப்படிச் சொன்னீங்களேன்னு, மோர் மிளகாயை கொரியரில் உங்களுக்கு அனுப்ப மாட்டார். படத்தைப் பார்த்து திருப்தி பட்டுக்கொள்ளுங்கள். ஹா ஹா

      Delete
    2. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ...

      இளங்கோ அண்ணனின் பிரிவால், மனம் கஸ்டப்படுவீங்க.. ஏதாவது போஸ்ட் எழுதுங்கோ, மனதை டைவேர்ட் பண்ணுங்கோ எனச் சொன்னதுக்காக:) இப்பூடியா ஓடி வந்து கையை.. சே..சே மிளகாயை வாருவது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஹா ஹா ஹா... மிக்க நன்றி கோபு அண்ணன்.. உங்களை இம்முறை எதிர்பார்க்கவே இல்லை நான். எதிர்பாராத நேரமெல்லாம் வாறீங்க.. எதிர்பார்த்தால் வரமாட்டீங்க.. இதுக்கும் உங்கட ச்ச்ச்சுவாமீஈஈஈஈஈஈ தேன் பதில் டெல்லோணும் ஹா ஹா ஹா:))..

      Delete
    3. ///நெல்லைத் தமிழன்Friday, February 08, 2019 3:20:00 pm
      இல்லை கோபு சார்... இந்த டிரிக் அதிராட்ட செல்லுபடியாகாது.///

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனை நல்லாத்தான் ரெயின் பண்ணி விட்டிருக்கிறேன் போலும்:) இல்லை எனில் அண்ணாஆஆஆஆஆ என அழைச்சிடுவேன் பப்புளிக்கில எனும் பயம்:) ஹா ஹா ஹா.. நன்றி நன்றி... நல்லவேளை எனக்கு சப்போர்ட் பண்ணிட்டிங்க.. இல்லை எனில் மீ இருந்தபாடில்லை:)) ஓவரா துள்ளியிருப்பார் கோபு அண்ணன்:).

      Delete
  32. மோர் மிளகாய் எனக்கும் பிடித்தமானது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ... எல்லோருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கே மோர் மிளகாய்.. மிக்க நன்றி.

      Delete
  33. ஆஹா மோர் மிளகாய் ...எனக்கு அம்மா செஞ்சு தருவாங்க ...

    கஞ்சிக்கும் களி க்கும் நல்ல துணை ...

    ஊசி இணைப்பு ..ஹா சூப்பர் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.. எதுக்கு வேணுமெண்டாலும் சூப்பராக பொருந்தும்.. நான் செவ்வாய்க்கிழமை வரகரிசிக் கஞ்சி செய்தேன்.. அதுக்குள் இதனை குட்டியாக கட் பண்ணிப் பொரிச்சுப் போட்டேன்ன் சூப்பராக இருந்துது. மிக்க நன்றி அனு.

      Delete
  34. காரமுரைப்பு காரணமாக அதிகம்செய்வதில்லை வேண்டுவோருக்காக கடையிலிருந்துவாங்கி விடுவோம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. கடையில் வாங்குவது ஈசிதான் ஆனா அதிகம் உப்பாக இருக்கும்.. வாயில் வைக்கவே முடிவதில்லை, பொதுவா நாங்கள் உப்பு குறைவாகவே சேர்த்துப் பழகிட்டோம் உணவில் .. அதனாலோ என்னவோ இந்த மிளகாய் உப்பு சகிக்க முடிவதில்லை.

      மிக்க நன்றிகள்.

      Delete
  35. வணக்கம் அதிரா சிஸ்டர்

    மோர் மிளகாய் செய்முறை மிக அருமை. என் அம்மா வீட்டில் இருக்கும் போது, இந்த முறையில் வீட்டில் தயாரித்த மோர் மிளகாய்களை சாப்பிட்டுள்ளேன். அதன் பின்னர் இடவசதி காரணமாக வீட்டில் தயாரிக்க இயலவில்லை. முன்பெல்லாம் விடுமுறைக்கு அம்மா வீட்டுக்கு சென்று விட்டு வரும் சமயம் வடாம், வற்றல் என என்னுடன் சாப்பிடும் ஐட்டங்களும் நிறைய பயணிக்கும். இப்போது காரம் ஒத்து வருவதில்லை. என்றாலும் என்றேனும் ஆசைக்காக கடையில் வாங்கும் மோர்வத்தல்களை, அரிசி மாவு உப்புமா, மோர் கூழ், ஏன் ரவை உப்புமாவுக்கே உடன் சேர்த்து தாளித்தால் நன்றாக இருக்கும். தங்கள் செய்முறை, படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளது.அங்குள்ள குளிருக்கு தங்களுக்கு காரம் அதிகம் தேவைப்படும் இல்லையா?

    ஊசி இணைப்பு இப்படியெல்லாம் கூட ஒரு உபாயம் இருக்கிறதாவென்று நகைக்க வைத்தது. ஊசி குறிப்பு... இந்த கதவு நமக்கு ஏன் கண்ணிலே படவே மாட்டேன் என்கிறது என்பதால் திகைக்க வைத்தது. அருமை.

    புலாலியூர்ப் பூஸானந்தா அவர்களின் தத்துவத்தை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா சிஸ்டர் வாங்கோ..

      உண்மைதான், வத்தல், வடகம் இவை எல்லாம் சுவைதான் ஆனால் உடம்புக்குக் கேடு.. அடிக்கடி சாப்பிடக்கூடாது பிரசரைக் கொண்டு வரும் என்பார்கள்.

      //அங்குள்ள குளிருக்கு தங்களுக்கு காரம் அதிகம் தேவைப்படும் இல்லையா?//
      அப்படிச் சொல்ல முடியாது கமலாக்கா.. அது நாம் சின்ன வயதில் பழகியதைப் பொறுத்தது.. நமக்கு தேவைப்படும்.. ஆனா பிள்ளைகள் சூடானதாக விரும்புவர் .. அதிகம் இனிப்பை விரும்புவார்கள். அதனால்தான் இங்கு எங்கு போனாலும் ஹொட் சொக்கலேட் கிடைக்கும்...

      //இந்த கதவு நமக்கு ஏன் கண்ணிலே படவே மாட்டேன் என்கிறது என்பதால் திகைக்க வைத்தது//
      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனைப்போலவே நீங்களும் கிடைக்கேல்லை என்கிறீங்க.. தேடினால்தானே கிடைக்கும்.. என்காவது உங்களுக்காக திறந்தபடி காத்திருக்கும். நாம் தான் தேடத் தவறி விடுகிறோம்.

      மிக்க நன்றிகள்.

      Delete
  36. http://2.bp.blogspot.com/-O7Jns_PVJW4/VOnbz-DVmGI/AAAAAAAAMb0/E4mcFFyP7s0/s1600/IMG_20150214_151554.jpg

    இதுதான் ஸ்ரீராம் சொன்ன தஞ்சாவூர் குடைமிளகாய்

    ReplyDelete
    Replies
    1. ஓ இப்போ பார்த்தேன் அஞ்சு.. நான் வாங்கியதில்லை/கண்டதில்லை, இம்முறை கவனிக்கிறேன் ஏசியன் கடையில் இருந்தால் வாங்கி செய்து பார்க்கலாம்.. நீங்க சமையலுக்குப் பாவிச்சிருக்கிறீங்களோ இதை..

      Delete
  37. [im]http://www.rahman.be/Pictures/Products/medium/bullet-chilli_201105081642.jpg[/im]
    இது புல்லட் சில்லி இங்கே எல்லா கடைலயும் கிடைக்கும் ஆன்னா விலை அதிகம் .நான் இதை வெஜ் பிரைட் ரைஸுக்கு க்ளியர் நூடுல்சுக்கு வறுத்து சேர்ப்பேன் .நெக்ஸ்ட் தான் சூர்யா வந்தா இதில் செஞ்சு பார்க்கணும் மோர் மிளகாய்

    ReplyDelete
    Replies
    1. ஓ இது உறைப்பிருக்காது என நினைக்கிறேன் ஒரு தடவை வாங்கி துப்பரவாக உறைப்பில்லாமல் பின்பு வாங்குவதில்லை. ஆனா கோமதி அக்கா, நெல்லைத்தமிழன் சொல்லியிருப்பது அது இன்னும் குட்டி, மெல்லிசாக இருக்கும் ஊசி மிளகாய்.. அது படு காரம்.

      மிக்க நன்றிகள் அஞ்சு.

      Delete
  38. ஜோக் செம...யம்மாடியோவ் அப்ப எம்பூட்டு கலெக்ஷன்....அதிரா அது நீங்க தானோ?!!!!!

    ஊசிக்குறிப்பு பொன் மொழி அட்டகாசம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹையோ கீதா, இதை எப்படி மிஸ் பண்ணினேனோ தெரியாது, தேடித்தேடிப் பதில் போட்டு, அனைத்தையும் முடித்துவிட்டேன் என நினைச்சே புது போஸ்ட் போட்டேன்...

      ஹா ஹா ஹா மிக்கநன்றி.

      Delete
  39. பாட்டு ரொம்பப் பிடித்த பாடல்....

    எபியில் ஸ்ரீராம் பகிரும் போது அங்கு ராகம் பற்றி சொல்லுறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இனி எபு கில் வருமோ தெரியாதே... நான் போட்ட “அடி என்னடி உலகம்..” பாடலும் லிஸ்ட்டில் இருக்குதென்றார் ஸ்ரீராம், இன்னும் இருக்கோ தூக்கிட்டாரோ தெரியாதே:)).. மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  40. அதிரா, தத்துவம், ஜோக் எல்லாம் அருமை. ஜோக்கை நினைத்து இப்படித்தான் பெண்கள் சாரிகள் கலெக்ஷன் நடக்கிறதோ என்றும் தோன்றியது!

    மோர் மிளகாய் விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியாததால் அதைப் பற்றி சொல்லத் தெரியவில்லை.

    பாடல் நல்ல பாடல். கேட்டதுண்டு. அப்போது பாலக்காட்டில் என்பதால்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..

      ஹா ஹா ஹா எப்பூடியாவது உடைகள் வாங்கினால் சரிதேன்ன்ன்[ஆர் குற்றியும் அரிசியானால் சரி:)].

      மோர் மிளகாய் உங்களுக்கும் பிடிக்கும்தானே.. செய்முறைதானே தெரியாமல் இருக்கலாம்.

      மிக்க நன்றி துளசி அண்ணன்.

      Delete
  41. லப்டப் பழுதானபடியால் உங்க பக்கம் ஐ பாட் ல பார்க்கமுடியல. இப்ப நான் இந்த போஸ்ட் க்கு கட்டக்கடைசியா வந்திருக்கிறன் பதில் தராட்டிலும் பப்ளிஸ் செய்யனும் சொல்லீட்டன்.
    புட்டுக்கு இந்த மிளகாய் சூப்ப்ப்ப்பரா இருக்கும். புட்டு,இடியப்பம், தாளிக்கும்போதும்,உப்புமா செய்யும்போதும் இதை போட்டு செய்தால் என்னா ருசி. எனக்கும் இந்த கிரீம் யோகர்ட் பிடிக்கும். முருங்கையிலை வறையும்,சாதத்துடன் இந்த யோகர்ட் சேர்த்து சாப்பிட்டால் அப்பப்பா...

    உங்க மோர்மிளகாய் படங்கள் சூப்பரா இருக்கு. ஊரில போட்டு கொண்டுவந்தேன்.நல்ல வெயில்.ஆனா அங்கும் இப்போ வித்தியாசமான குளிர்.

    ஹெலன் கருத்து மிக அருமை. அஞ்சு சொன்னமாதிரி கடைதான் வைக்கனும். ஹா..ஹா.. எனக்கு இந்த பிரச்சனை இருக்கு. எனக்கு உப்பாயிருந்தால், ஹஸ் உப்பில்லை என்பார். மாறி நடக்கும் இங்க. நீங்க அளந்து போடுவீங்களா அதிரா. அல்லது கையளவா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      நானும் புது ஐபாட் வாங்கியிருக்கிறேன் ஆனா இன்னமும் புளொக்ஸ் எதுவும் அதில் திறந்து பார்க்கவில்லை, செக் பண்ணோனும் எதுக்கு பெரும்பாலானோர் ஐ பாட் இல் தெரிவது குறைவு என்கின்றனர் என்பதை.. ஐ போனில் நன்கு வருதே எந்தப் பிரச்சனையுமில்லாமல்.

      ///இப்ப நான் இந்த போஸ்ட் க்கு கட்டக்கடைசியா வந்திருக்கிறன் பதில் தராட்டிலும் பப்ளிஸ் செய்யனும் சொல்லீட்டன்.///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பப்ளிஸ் பண்ணாமல் எப்பவும் விட்டதில்லை, ஆனா பிரச்சனை என்னெண்ணா:)) நான் பெரும்பாலும் கொமெண்ட் படிக்காமலே போனில் இருந்து பப்ளிஸ் பண்ணி விட்டிடுவேன், அப்போ புது போஸ்ட் வந்தபின்பு பழைய போஸ்ட் கொமெண்ட் எனில், நான் கவனித்திருக்க மாட்டேன், அது புதுப் போஸ்ட் கொமெண்ட்டாக்கும் என்றெ நினைச்சிடுவேன்:)..

      //முருங்கையிலை வறையும்,சாதத்துடன் இந்த யோகர்ட் சேர்த்து சாப்பிட்டால் அப்பப்பா...//
      ஹா ஹா ஹா..

      Delete
    2. //ஊரில போட்டு கொண்டுவந்தேன்//
      ஆஆ எனக்கும் வந்திருக்கு.

      //எனக்கு உப்பாயிருந்தால், ஹஸ் உப்பில்லை என்பார். மாறி நடக்கும் இங்க.//
      ஹா ஹா ஹா..

      //நீங்க அளந்து போடுவீங்களா அதிரா. அல்லது கையளவா?//
      உப்பு பொட்டில்[bottle] உப்புத்தான் வாங்குவேன், பக்கட் வாங்கினாலும் அதே பொட்டிலில் கொட்டி விடுவேன், அப்படியே அந்த பொட்டில் குட்டி வாயாலயே கொட்டுவேன் கறிகளுக்கு.. அப்படிப் பழகிட்டேன்ன்..

      அளந்து போடச்சொன்னாலோ இல்ல கையால போடச் சொன்னாலோ எனக்கு சரிவராது.. பிழைச்சுப்போகும் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.