நல்வரவு_()_


Monday 23 March 2020

என்றும் இளமையாக.. சே..சே பசுமையாக இருக்க, வாருங்கள்👧..

அதிரா வீட்டுக்குள்:)..

னக்குப் பாருங்கோ, வீடு முட்ட குட்டிப் பிளாண்டுகள் வைக்க விருப்பம், ஆனா இங்கு குளிர் அதிகமென்பதால, வளர்ந்தாலும் நெடு நாட்களுக்கு நிற்பதில்லை, பட்டு விடுகின்றன, ஆனாலும் நானும் விடுவதில்லை, ஒவ்வொரு சமரின் போதும் புதிதாக வாங்கி வைத்து விடுவேனே.. சரி சரி இப்போ அதிகம் அலட்டக் கூடாதாம்:)) வாய் மூடிப் பேசோணும் என்பதால, அதிரா அடக்கொடுக்கமாப் பேசிவிட்டு போஸ்ட்டுக்குள் சே..சே அதிரா வீட்டுக்குள் நுழைவோமா?:))
வாங்கோ வாங்கோ முதலில் இந்தாங்கோ நல்ல நெஸ்டமோல்ட்டும் போன்விட்டாவும் போட்ட ஸ்ரோங் ரீ குடியுங்கோ:))

இனி விளக்கம் தேவை இல்லைத்தானே, நான் வைத்திருப்பவற்றைப் பாருங்கோ..



 இது இடையில யும்மா:))

இதைத்தான் வைத்திருக்கிறேன் போடுவேன் என அஞ்சுவுக்கும் நெல்லைத்தமிழனுக்கும் சொன்னேன் போன கொமெண்ட்ஸில நாங்க சில விசயங்கள் சிலரைப்பற்றி விடுப்ஸ் பேசினோமெல்லோ:) அதுக்கு இது பொருந்தும்:))

 இது என்ன கள்ளி?? இவவுக்கு வயசு 8 ஆகிவிட்டது:))

ஹா ஹா ஹா இது என்ன தெரியுமோ? எங்கட ஒரு பார்த்றூமின் ஒரு பகுதி,, எனக்கு வெளியே எந்தப் பொருளும் வைப்பது பிடிக்காது, அனைத்தையும் கபேர்ட்டிலேயே வைக்கப்பண்ணுவேன், இது வெளியே இப்படி ஏதும் இயற்கைச் செடி வைக்கலாமே என வாங்கினால், அவற்றோடு செயற்கைப் பூக்களையும் சேர்த்து வைத்திருக்கிறேன் எப்பூடி என் ஐடியா.. இது ஒரு பக்கம் பெரிய கண்ணாடி, அதனால இதில் தெரிவது எல்லாம் கண்ணாடி விம்பமாக்கும்:))

இது என் பிறந்தநாள் பரிசு, இன்னும் சாடியில் நடவில்லை..



இப்போது நம் வீட்டில் நடந்த சிரிப்பொலி:)).. என்னவெனில் டெய்சிப்பிள்ளை நம்மோடு வந்து ஒட்டி, இடிச்சுப் படுப்பா, ஆனா இப்போ கொஞ்ச நாளாக நைட் ஆனதும், ஓடிப்போய் தன் வீட்டுக்குள்ளே படுக்கிறா, அதுதான் நாம் சொல்லியிருக்கிறோம், நம்மோடு படுத்தால், தனக்கு கொரொனா வந்திடும் என, தனியாகப் படுக்கிறாவாமாம்ம் ஹா ஹா ஹா:))

இந்த வீடியோவை சவுண்டுடன் பாருங்கோ:)) ஹா ஹா ஹா..

இப்போது இன்னொரு விஷயம் பேசிச் சிரிக்கிறோம் என்னவெனில், உங்களுக்குக் கடன்காரர் தொல்லையா?:)).. கவலையை விடுங்கோ, கடன்காரரைப் பார்த்ததும், விடாமல் தொடர்ந்து இருமுங்கோ.. ஓடிடுவினம்:)) ஹா ஹா ஹா..:)

இது இப்போ நம் வீட்டில் பூத்திருக்கும் முதல் மலர்:)).. வெள்ளிக்கிழமை பிடுங்கி சுவாமிக்கு வைத்தேன்..


ஊசிக்குறிப்பு
எப்பூடி என் போஸ்ட் பிடிச்சிருக்கோ உங்களுக்கு?:)

ஊசி இணைப்பு
😊😊😊😊😊😊

138 comments :

  1. படங்கள் அழகாக இருக்கின்றன...
    காணொளியில் தும்முவது நீங்களா ?

    கள்ளிச்செடி படம் மிகஅழகு.
    கீழிருந்து மேல் இரண்டாவது படம் அழகோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      //காணொளியில் தும்முவது நீங்களா ?//
      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) அது அஞ்சு:))

      மிக்க நன்றி... அது எங்கள் வீட்டு முற்றத்து பிங்கி.. அவ அழகான ரோஜா மாதிரி.

      Delete
  2. பாட்டு கேட்டேன், பூனையார் விளையாடுவது சூப்பர்.
    பசுமை, இளமை, ஆனந்தம் விளையாடும் வீடுதான் அதிராவின் வீடு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
      பாட்டுப் பிடிச்சுதோ? என் நண்பிக்குத் திருமணம் நிட்சயிக்கப்பட்டிருந்தபோது, கணவர் இந்தப் பாடல் வரிகளில் ஒரு பந்தியை மட்டும் கடிதத்திலோ கார்ட்டிலோ எழுதி அனுப்பியிருந்தார், இப்பாட்டைக் கேட்டிராத என் நண்பியோ.. இது அவர் கவிதை எழுதிட்டார்.. என்ன ஒரு அழகிய கவிதை பாருங்கோ என எனக்கு அனுப்பியிருந்தா:)) ஹா ஹா ஹா..

      ஏனெனில் படிக்கும் காலத்தில் என் வேலை கவிதைகள் சேர்த்து எழுதி வைப்பது, அதனால எங்கு நல்ல கவிதை கிடைச்சாலும், உடனே எனக்கு தருவார்கள்.

      மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  3. //வீடு முட்ட குட்டிப் பிளாண்டுகள் வைக்க விருப்பம், //

    அழகு எல்லாம்.

    எட்டு வயதுக்கு இவ்வள்வு உயரம் தான் வளர்ந்து இருக்கா?

    இது இடையில யும்மா:)) சொன்னதும் அருமை.

    //இது ஒரு பக்கம் பெரிய கண்ணாடி, அதனால இதில் தெரிவது எல்லாம் கண்ணாடி விம்பமாக்கும்:))//

    விம்பத்தில் மறைந்து இருக்கும் பன்னீர் ரோஜா தெரிந்தார்.

    //நம்மோடு படுத்தால், தனக்கு கொரொனா வந்திடும் என, தனியாகப் படுக்கிறாவாமாம்ம் ஹா ஹா ஹா:))//
    பரவாயில்லையே! அடம் பிடிக்காமல் தனியாக படுக்க ஒத்துக் கொண்டதற்கு.

    ReplyDelete
    Replies
    1. //எட்டு வயதுக்கு இவ்வள்வு உயரம் தான் வளர்ந்து இருக்கா?//

      ஓம் கோமதி அக்கா, ஆரம்பம் நான் கொஞ்சம் தண்ணீர் ஊத்திட்டேன், அதனால வளர்த்தி குறைஞ்சிருந்தது, தண்ணி ஊத்தப்படாதாமே...

      ///விம்பத்தில் மறைந்து இருக்கும் பன்னீர் ரோஜா தெரிந்தார்.//

      ஹா ஹா ஹா சே சே இந்த நேரம் பார்த்து என் செக் எங்கினமோ போயிட்டா கர்ர்ர்ர்ர்ர்:)) இதை எல்லாம் படிக்க மாட்டா:))..

      நன்றி நன்றி.

      Delete
  4. வீடியோ சூப்பர்.என் மடி கணினி சவுண்ட் குறைந்து வருகிறது. முடிந்தவரை வைத்து கேட்டேன். அருமை.
    மலர் வண்ணத்தில் உடை உடுத்தி மலர் கொய்யும் பாவை சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கோமதி அக்காவுக்கு இன்று கவித கவிதையா வருதே:)) ஆனா கவிஞர் எனப் பெயர் சூட்டியிருப்பது நான்:))

      Delete
  5. மலரும் மங்கையும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நன்றி.. கோமதி அக்கா.

      Delete
    2. பன்னீர் ரோஜா...   மலர் வனத்தில் மலர் கொய்யும் பாவை ...    கோமதி அக்கா அசத்தறாங்களே...

      Delete
    3. ஹா ஹா ஹா அதானே ஸ்ரீராம், கோமதி அக்காவுக்கு, அதிராவைப் பார்த்ததும் கவித கொட்டுது:))

      Delete
    4. அப்படிச் சொல்லாதீங்க அதிரா. 25% அதிராவைப் பார்த்த உடனேயே இப்படி கவிதை வந்தால், நீங்கள் முழுப்படமும் கோமதி அரசு மேடத்துக்கு அனுப்பினால் கவிதை கொட்டிவிடும் போலிருக்கிறதே (என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். காசா பணமா)

      Delete
    5. //நீங்கள் முழுப்படமும் கோமதி அரசு மேடத்துக்கு அனுப்பினால் கவிதை கொட்டிவிடும் போலிருக்கிறதே (என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். காசா பணமா)//

      ஹா ஹா ஹா என்னை உசுப்பேத்துறாராமாம்ம்ம்ம்ம்:)) மீயை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊஊஊ:))

      Delete
  6. ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு இரண்டும் அருமை.
    மலர் மங்கை என்று பாராட்டி கீழே வந்தால் இப்படி உருமாறி சிரித்து என் போஸ்ட் பிடித்து இருக்கா என்று கேட்கலாமோ!

    மனம் எல்லோருக்கும் நன்றாக இருக்கட்டும் நிம்மதி பூக்கள் பூக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. //மலர் மங்கை என்று பாராட்டி கீழே வந்தால் இப்படி உருமாறி சிரித்து என் போஸ்ட் பிடித்து இருக்கா என்று கேட்கலாமோ!///

      ஹா ஹா ஹா அது கொரொனா மிரட்டினாலும்:)) வந்த பாதையை.குருவை மறக்கக்கூடாதெல்லோ:)) மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  7. டெய்சிப்பிள்ளையும் நலமுடன் இருக்கட்டும்...

    வாழ்க வளத்துடன்...

    ReplyDelete
  8. /சமரின் போதும்// - இறைவா..இடுகையைப் படிக்குமுன், தவறுகள் மட்டும் உடனே தெரியும்படி எனக்கு ஏன் வைத்திருக்கிறாய்? அதை எழுதுவதால் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியிருக்கு.

    சமர் - போர். சம்மர் - வேனிற்காலம். In English it is SUMMER not SAMAR. ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெ தமிழன் வாங்கோ..

      ஹா ஹா ஹா என் வீட்டுக்குள் கால் வைக்கும்போதே:)) சமருக்கு ரெடியாவே வைக்கிறீங்க:)) இது வேற சமர் ஆக்கும் ஹா ஹா ஹா.. ஏதோ முற்பிறவியில நமக்குள் விட்ட சண்டை தொட்ட சண்டை இருந்திருக்குமோ:))..

      //அதை எழுதுவதால் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியிருக்கு.//
      ஹா ஹா ஹா வாங்கிக் கட்டினாலும் விடவே மாட்டேன் என பிழை கண்களுக்கு தெரிஞ்சிடுதே:)) அது இராசி:)) அப்பூடிப்போலும்:))..

      ஓகே சம்மர்:))

      Delete
    2. அது மேடம் இங்கிலிஷ் pronunciation மாதிரியே எழுதிருக்கங்க suh muh  // 
      /ˈsʌmə(r)/
      ஆத்தீ எப்பமோ படிச்சா phonetics எல்லாத்தையும் நினைவுக்கு கொண்டாருது பூஸ் 

      Delete
    3. படித்த முதல் கணத்தில் நானும் அதை 'போர்' - சண்டை  என்றே நினைத்தேன்!

      Delete
    4. //AngelMonday, March 23, 2020 6:09:00 pm
      அது மேடம் இங்கிலிஷ் pronunciation மாதிரியே எழுதிருக்கங்க suh muh ////

      அது அது இதுக்குத்தான் ஒரு செக் வேணுமென்பது:)).. நாம் பேசும்போது ஒரு எம் ஐத்தான் உச்சரிப்போம்.. அதாவது ச..மர் என:)) சம்மர் என பேசினால் ஆருக்கும் புரியாதே:)) அதைத்தான் நான் எப்பவும் எழுதுவேன் அப்படியே.. ச்ச்சோஒ அது சமரே தேன்ன்ன்ன்:))..

      //ஸ்ரீராம்.Tuesday, March 24, 2020 12:03:00 am
      படித்த முதல் கணத்தில் நானும் அதை 'போர்' - சண்டை என்றே நினைத்தேன்!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்காகத்தான் அதிராவைப்போல டமில்ல:)) டி எடுத்திருக்கோணும்:) அப்போதான் எல்லாமே பிரியுமாக்கும்:))

      Delete
  9. //கண்ணாடி விம்பமாக்கும்:))// - இந்த நெஸ்டமோல்ட், போர்ன்விடாவில் நீங்கள் 'வால்' போடுவீர்களா இல்லை வெந்நீரில் போட்டு, சீனி சேர்த்துக் குடிப்பீர்களா?

    ReplyDelete
    Replies
    1. போர்விட்டாவுக்கு நிட்சயம் தேயிலை, பால் சேர்த்து அதனுள்தான் சேர்ப்போம்.

      நெஸ்டமோல்ட் க்கு சாயத்தினுள் நெஸ்டமோல்ட் சேர்க்கலாம், உடல் நலமில்லை, காச்சல் இப்படி நேரங்களில் நெஸ்டமோல்ட் மட்டும் சாயத்தில் சேர்த்துக் குடிப்பது வழக்கம், நல்ல உசாராக இருக்கும்... சாப்பிடாதவர்களுக்குக்கூட வெறும் நெஸ்டமோல்ட் குடுத்தால் தென்பாகிடுவினம்.

      மற்றும்படி பால், அல்லது பால்பவுடருள், இந்த நெஸ்டமோல்ட் ஒரு மே கரண்டி சேர்த்தால் போதும் சூப்பராக இருகும்.

      பால் சேர்க்காவிடில் நெ.மோ.. 3 கரண்டியாவது சேர்க்கோணும்.

      அதுசரி உங்களுக்கு நெஸ்டமோல்ட் தெரியுமோ?.. அங்கு இந்தியாவில் இது இல்ல்லையே.. பாரைனில் பழகினனீங்களோ?

      Delete
    2. //போர்விட்டாவுக்கு நிட்சயம் தேயிலை, பால் சேர்த்து அதனுள்தான் சேர்ப்போம்.//
      போர்ன்விட்டால தேயிலையா ????????????? அந்த வீடியோல ஓடுதே பூனை அதுகூடவே நானும் ஓடிடறேன் சாமீ ..

      Delete
    3. //
      AngelMonday, March 23, 2020 6:13:00 pm
      ///
      போர்ன்விட்டால தேயிலையா ????????????? அந்த வீடியோல ஓடுதே பூனை அதுகூடவே நானும் ஓடிடறேன் சாமீ ..///

      நெல்லைத்தமிழன்.. கொஞ்சம் காதைக் கூராக்குங்கோ நா ஒண்ணு ஜொள்ளப்போறேன்ன்:)) அஞ்சுக்கு வந்திருப்பது அதினாஃபியா:)).. ஹா ஹா ஹா இந்த ஸ்கொட்டிஸ் இங்கிலீசெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பதால மீ ஜொள்ளிடுறேன்ன்:) அதாவது .. ட்தெரியாதென எதையும் சொல்ல வராதாக்கும் அவோக்கு கர்ர்ர்:))..

      போன்விட்டா எப்பவாவது குடிச்சதுண்டோ? இல்லை கண்ணால பார்த்ததுண்டோ எனக் கேளுங்கோ நெ தமிழன்:)).. ச்சும்மா அடிச்சு விடுறா.. அது நெட் ல தேடினா, சொல்லுவினம், போன்விட்டாவை அப்பூடியே சுடுதண்ணியில கரைச்சு, அதுவும் ஏதும் ஹார்ட் வேர்க் பண்ணியபின்பு குடியுங்கோ என.. அது மருந்துபொல பாவிப்போருக்கு.

      இது நாம் வீட்டில சுவைக்காகப் பாவிக்கும்போது, தேயிலைச்சாயத்துள் மில்க் சேர்த்து அதனுள் ஒரு கரண்டி போர்ன்விட்டா சேர்த்துக் குடிச்சுப் பாருங்கோ.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ எனக்கு சாப்பாடே தேவையில்லை, இப்படி விதம் விதமாக ஸ்ரோங் ரீ மட்டும் குடிச்சே நான் உயிர் வாழ்ந்திடுவேன்:)).. அதனாலதானே இப்போ ஓமக்குச்சி உடம்புக்காரி ஆகிட்டேன்ன்..:)) சரி சரி முறைக்காதீங்கோ:))..

      இன்னொன்று தெரியுமோ உங்களெல்லோருக்கும்.. viva விவா என ஒரு மில்க் பவுடரும் இருக்கு... இது நெஸ்டமோல்ட் போல இன்னும் சுவை.. இவை எல்லாம் கோதுமையில் செய்பவை.

      Delete
    4. போர்ன்விட்டா, வீவா, நெஸ்டோமோல்ட் ஆ..... இப்ப இதெல்லாம் யார் ஞாபகப்டுத்தச்சொன்னது.. எனக்கு தெரியாது இப்ப எல்லாம் அனுப்புங்கோ உடனடியா. ..நாங்களும் டீ க்குள் போட்டு குடிப்பதுதான். சொல்ல வார்த்தையில்லை. நல்ல டேஸ்டா இருக்கும். எனக்கு நெ.மோல்ட், வீவா கொஞ்சம் எடுத்து அப்படியே சாப்பிடபிடிக்கும் .(லக்ஸ்பிறே மாவினுள் கொஞ்ச சீனி போட்டு கலந்து சிறு கிண்ணத்தில் எடுத்து சாப்பிடுவேன். அம்மா ......... எடுத்துக்கொண்டு வரமுன் எஸ்கேப்)

      Delete
    5. //அதனாலதானே இப்போ ஓமக்குச்சி உடம்புக்காரி ஆகிட்டேன்ன்..:))//

      ஏஞ்சலின் - எனக்கு ஒரு டவுட். உங்களை ஒரு படம் எடுத்துக்கிட்டு, அந்தப் படத்தில் 20% மட்டும் நெடுக வாக்கில் வெட்டி எடுத்துக்கொண்டு, 'நானும் ஒல்லியாயிட்டேன்' என்று விளம்பரப்படுத்திக்கொள்வீர்களா? இல்லை..உண்மையாகவே ஒல்லியாக ஆகியிருந்தால், 6 மாதத்துக்கு முன் கனடாவில் பெரிய மரத்தடியில் ஊஞ்சலாடியபோது, இப்போது மிக ஒல்லியானபோது என்று இரண்டுவிதமான படங்கள் வெளியிடுவீர்களா?

      Delete
    6. பிம்பம் என்பதற்குப் பதில் விம்பம் என்று போட்டிருக்கிறாரே.. ஒருவேளை இலங்கையில் 'ப' கிடையாது. அதற்குப் பதிலாக 'வ' தான் உண்டோன்னு நினைத்து பாலுக்குப் பதில் வால் என்று எழுதியிருந்தேன். இதுகூடத் தெரியாமல் சீரியஸா பதில் சொல்லி, கேள்வியை காமெடி ஆக்கிவிட்டாரே...

      இங்க கர்னாடகாவில், தமிழில் 'பா' வரும் இடத்தில் அனேகமா கன்னடத்தில் 'ஹா' என உபயோகிப்பார்கள். பால் - ஹால், பாம்பு - ஹாவு

      Delete
    7. @அம்முலு
      //எனக்கு தெரியாது இப்ப எல்லாம் அனுப்புங்கோ உடனடியா. //

      ம்ஹூம்ம்.. பிறகு அதிரா கொரொனாவையும் சேர்த்து அனுப்பிட்டா எனச் சொல்லும் ஐடியாவாக்கும்:)) மீ யை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:))..

      எனக்கே இப்போ பயமாக்கிடக்க்கூ.. வாங்கி வந்த 2 நெஸ்டமோல்ட், ஒரு வீவா, ஒரு நிடோ.. இவை முடிஞ்சிட்டால் எப்பூடி இனித் தமிழ்க்கடைக்குப் போவதாம்?:) பொலீசூஊஊஊஉ பிடிச்சிடும் எல்லோ அதிராவை:))..

      Delete
    8. @ நெல்லைத்தமிழன்
      ///இல்லை..உண்மையாகவே ஒல்லியாக ஆகியிருந்தால், 6 மாதத்துக்கு முன் கனடாவில் பெரிய மரத்தடியில் ஊஞ்சலாடியபோது, இப்போது மிக ஒல்லியானபோது என்று இரண்டுவிதமான படங்கள் வெளியிடுவீர்களா?///

      ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அதிராவை உசுப்பேத்தினால்... பப்பா மர உச்சியில ஏறிடுவா எனக் கரெக்ட்டாப் புரிஞ்சு வச்சிருக்கிறாரே:)), ஆனா இப்போதெல்லாம் மீ வலு உஷாராக்கும்:))..

      முதல்ல கோபு அண்ண்ணனுக்கு ஐஸூ வச்சு:)), அந்த:) செல்பியில ஒன்றையாவது வாங்கி எடுக்கோணும்:)) ஹா ஹா ஹா..

      Delete
    9. @நெ தமிழன்
      //நினைத்து பாலுக்குப் பதில் வால் என்று எழுதியிருந்தேன். இதுகூடத் தெரியாமல் சீரியஸா பதில் சொல்லி, கேள்வியை காமெடி ஆக்கிவிட்டாரே..//

      பவுக்குப் பதில் வ போட்டது புரிஞ்சது, ஆனா கேள்வி உண்மையில் தெரியாமல் கேட்கிறீங்க என நினைச்சிட்டேன் ஹா ஹா ஹா இப்போ புரியுதோ மீ ஒரு அப்பாஆஆஆஆஆவி:)) ஹா ஹா ஹா..

      //இங்க கர்னாடகாவில், தமிழில் 'பா' வரும் இடத்தில் அனேகமா கன்னடத்தில் 'ஹா' என உபயோகிப்பார்கள். பால் - ஹால், பாம்பு - ஹாவு//

      ஓ இப்போ நேக்கு எல்லாமே பிரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:)).. கர்நாடகாவை தமிழில மிக்ஸ் பண்ணிப்பேசிக்கொண்டு, அதிரா டமில்ப்பிழை விடுறேன் எனச் சொல்லுறீங்க கர்ர்ர்ர்ர்:)).. அதாவது இது எதுக்குப் பொயிங்கிறேன் எனப் புரியுதோ?:)).. அது வந்து,.. நான் ஹோல் என்றால்.. நீங்க ஹால் என்பீங்க கர்ர்ர்ர்ர்:)).. hall :)) ஹா ஹா ஹா எப்பூடி?:),
      எப்பூடி அடிச்சாலும் அதிரா ஒரு மண்ணுண்ணி ஆக்கும்:)).. ஒரு கட்டத்தில களைச்சுப்போய் நீங்களே கையைவிட்டிடுவீங்க ஹா ஹா ஹா:))..

      அனைத்துக்கும் மீள் வருகைகளுக்கும் மிக்க நன்றி நெ தமிழன்.. மிக்க மகிழ்ச்சி.

      Delete
  10. செடிகளின் படங்கள் அருமை. அதிலும் பாத்ரூம் அழகாக செடிகளுடன் இருக்கு.

    விடுமுறைலகூட யோசிச்சு நல்ல இடுகை போடாம, சும்மா சில பல படங்களோடு ஒப்பேற்றி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்பூடிச் சொல்லிடீங்க:)).. எவ்ளோ கஸ்டப்பட்டு இந்த போஸ்ட் போட்டேன் தெரியுமோ?:)) ஹா ஹா ஹா... ஒரு கதை எழுதிப்போட இருக்குது.. ஆசையாக இருக்குது, ஆனா பொறுமையாக இருந்து ரைப் பண்ண மனம் அமைவதில்லை... பார்ப்போம்.

      Delete
  11. படங்கள் ஒவ்வொன்றும் அழகு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ.. நன்றி.

      Delete
  12. உங்களுக்குத் தெரியுமா? ஒரு சாஃப்ட்வேரை உபயோகித்து நீங்கள் படத்தில் அழித்துள்ள உங்கள் பிம்பத்தை (விம்பத்தையாம்.... இலங்கைல ப வரும் இடத்தில் வ வரும் போலிருக்கு. பாம்பு என்பதற்குப் பதில் வாம்போ?) எரேஸ் செய்து உங்கள் படத்தைக் காண முடியும்.


    என்னா... இந்த கமெண்ட் பார்த்தவுடன், கொரோனா ஆளிடம் கை குலுக்கியதுபோல அதிர்ச்சி அடையறீங்க?

    ReplyDelete
    Replies
    1. ///பிம்பத்தை (விம்பத்தையாம்.//

      ஹா ஹா ஹா ஓ.. ஆஆஆஆஆஆஅ அது அதிராவின் பேச்சு வழக்காக்கும்:)) நாம ஆரு 1500 மீட்டரிலயே 2 வதா வந்தேனாக்கும்:)) இதை சமாளிக்க மாட்டேனோ:)) ஹா ஹா ஹா..

      //எரேஸ் செய்து உங்கள் படத்தைக் காண முடியும்.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதில இரேஸ் பண்ணினாலும் முகம் தெரியாது:) அப்படியே போட நினைச்சு பின்னர் வாணாம் என மறைச்சிட்டேன் தெரியுமோ?:)) ஹா ஹா ஹா...

      //என்னா... இந்த கமெண்ட் பார்த்தவுடன், கொரோனா ஆளிடம் கை குலுக்கியதுபோல அதிர்ச்சி அடையறீங்க?//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      மிக்க நன்றிகள் நெ தமிழன்..

      Delete
    2. நானும் ஒரு ஐபோன் ஆப்பை வைத்து உங்களின் இடுப்பை அளந்து பார்த்தேன்.. இடுப்பு சைஸ் 60 என்று காண்பிக்கிறது... இதுக்குதான் சொல்லுறது போட்டோ போடாக் கூடாது அப்படியே போட்டால் ம்றைத்து போடக் கூடாது அப்படி போட்டால் இப்படித்தான் அளந்து பார்க்க தோன்றுகிறது...

      Delete
    3. வாங்கோ ட்றுத் வாங்கோ.. இப்போ எல்லாம் ஆரையும் வரவேற்கவும் பயம்மாக்கிடக்கூ:)).. வாங்கோ எனக் கூப்பிட்டது ச்சுமமா ஒரு பேச்சுக்காகத்தேன்:)).. எதுக்கும் 4 அடி தள்ளி நிண்டு பேசுங்கோ:)).. ஹா ஹா ஹா..

      //இடுப்பு சைஸ் 60 என்று காண்பிக்கிறது.//

      உங்க ஆத்து மாமி இப்போ வீட்டில நிண்டுதானே வேர்க் பண்ணுவா:))??.. நான் அவவை நேரில சந்திக்கிறேன்:)).. ட்றுத் பூரிக்கட்டை அடி வாங்கி நீண்ட நாளாகிட்டுது எனத் தெரியுது:))
      ஹா ஹா ஹா.. நன்றி ட்றுத் வருகைக்கு.

      Delete
  13. வணக்கம் அதிரா சகோதரி

    செடிகளின் அழகான பசுமை மனதுள் நிறைந்தது. இனி இளமையாக இருப்போம் என்ற நம்பிக்கையும் வருகிறது.

    டீயில் போன்விட்டாவெல்லாம் கலப்பீர்களா?
    இந்த மாதிரி குடித்ததேயில்லை.

    கண்ணாடியில் தெரியும் செடிகளின், மலர்களின் பிம்பங்கள் படமும் மிக அழகு. ஆனால் ஒரு அழகான மலர் அநியாயமாய் பாதி மறைந்து விட்டதே..!

    மிகவும் அழகாக, இளமையாக இருப்பதால் "கள்ளியின்" வயதை நிர்ணயிக்க இயலவில்லை. ஹா.ஹா.ஹா.

    இடையில் ஒரு "சும்மா" வாசகம் அருமையாய் உள்ளது.

    அனைவரையும் மதித்து நடந்து கொள்கிறவர்களுக்குத்தான் அவமானம் தேடி வரும் என்பது சற்று சிந்திக்க வைக்கிறது. மதிப்பின் விலை அதுதானோ.?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //டீயில் போன்விட்டாவெல்லாம் கலப்பீர்களா?
      இந்த மாதிரி குடித்ததேயில்லை.//

      இதென்ன இது இப்பூடிக் கேட்டு விட்டீங்கள்.. எனக்கு பசுப்பால் அதிகம் சேர்ப்பது பிடிக்காது, அதனால இப்படியானதெல்லாம் கலப்பேன், எனக்கு ரீ எனில் நல்ல ஸ்ரோங்காக இருக்கோணும்.. இது நல்ல சுவையையும் கலரையும் குடுக்கும்...

      //ஆனால் ஒரு அழகான மலர் அநியாயமாய் பாதி மறைந்து விட்டதே..!//

      ஆஆஆ கவித கவித:)) ஹா ஹா ஹா..

      கள்ளிக்கு வயசு, என் வயசில பாதி:)))) உங்களுக்கு கணக்குப் பாடம் நன்கு வரும்தானே:)) ஹா ஹா ஹா..

      இல்லை, அடுத்தவர்களுக்கு மதிப்புக் கொடுப்போர், தனக்கும் அப்படி அடுத்தவர் மதிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கும்போது, கிடைக்காத இடத்து அவமானமாகிவிடுகிறது போலும்...

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  14. வீரா படப்பாடல் இன்னும் இளமை துள்ளும் ராஜாவின் இசை! படங்கள் அருமை. ஊசிக்குறிப்பு வழமை போல சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ நேசன் வாங்கோ வாங்கோ.. ஃபிரான்ஸ் நிலைமை கொஞ்சம் மோசமாகத்தானே இருக்க்குது, எதுக்கும் வீட்டுக்குள் இருங்கோ சேஃப் ஆக.

      மிக்க நன்றி நேசன்...

      Delete
  15. ஹலோ மியாவ் படங்கள் எல்லாம் அழகு ..இன்னிக்கு shopping தோட்ட க்ளீனிங்ன்னு வேலை முடிச்சா நாளைக்கு வேலைக்கு வரசொன்னாங்க .சரி சும்மா எட்டி பார்த்தா பூவெல்லாம் போட்டு வீடியோவில் வர அம்மிணி மாதிரி தும்ம வச்சிட்டீங்க :)அது மாதிரிதான் ஜெஸ்ஸி அலறி ஓடுவா :)இங்கே ஜெசியை என் கணவர் அழுத்தி தான் உச்சரிப்பார் :) எந்நேரமும் அவருக்கும் ஜெசிக்கும் ஒரு கோல்ட் வார் நடக்கும் :) அவரை பார்த்துட்டே சுவர் கீறிவிடுவா :)) இவர் நோ ன்னு கத்த  ஓடி ஒளிவா 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      //இன்னிக்கு தோட்ட க்ளீனிங்ன்னு வேலை முடிச்சா//
      இல்லையே இது நம்பும்படியாக இல்லையே.. இதோ இதில புஸ்பா அங்கிள் கடையில வாங்கின புகைவராத கற்பூரம் இருக்கு, அதைக் கோபு அண்ணன் கொளுத்துவார்:)) நீங்க அடிச்சு அணைச்சு ஜத்தியம் பண்ணுங்கோ:)) அப்போதான் மீ நம்புவேனாக்கும்:)).. ஆருகிட்ட?:)) அதிராவோ கொக்கோ?:)) ஹா ஹா ஹா.. முடியல்ல:))..

      இப்போ தும்மல் காலம் தானே, சும்மா தும்ம இரும முடியல்ல பயம்மாக் கிடக்கு.. ஒரு இருமல் ஸ்றப் வாங்கவே பயம்மாக் கிடக்கு.. கொரொனா ரெஸ்ட் எடு எனச் சொல்லிடுவினமோ எண்டு ஹையோ ஆண்டவா.

      Delete
  16. படங்கள் பூக்கள் எல்லாம் அழகு ..பூக்களில் நீங்களும் சேர்த்தி :)நான் வீட்டுக்குள் எதையும் வைப்பதில்லை ..ஜெஸியின் அட்டூழியத்தால் :) அதுவும் வெளில போயிட்டு வந்து பார்த்தா வீடே அதகளமா  இருந்திச்சி ஒரு ரெண்டு மீன்குட்டிங்களை தொட்டியில் போட்டு வச்சோம் இவை பண்ணின கலாட்டாவில் பயந்து நானே கொடுத்துத்தேன் பிரண்டுக்கு :) கையை உள்ளே போட்டு தொட பாத்தா :)

    ReplyDelete
    Replies
    1. //
      படங்கள் பூக்கள் எல்லாம் அழகு ..பூக்களில் நீங்களும் சேர்த்தி ://

      இத..இத.. த்தான் எதிர்பார்த்தேன்:)).. இந்த கொரொனாவால இப்போ மக்கள் எல்லாம் உண்மை சொல்லி, அடுத்தவரை வாழ்த்தப் பழகிட்டினம் பாருங்கோ:))..

      எங்கட மூத்த மகன் ஒரு 8..9 மாதக் குழந்தையாக இருந்தபோது எங்கள் ஒரு அம்மப்பா வீட்டுக்கு வந்திருந்தார், அவர் எப்பவும் கொமெடியாகவும் சத்தமாகவும் ஒரு பெரிய அதட்டலாகவுமே பேசுவார்ர், அவர் செயாமனாக அரசியலில் இருந்தவர்.

      அப்போ அவருக்கு ரீ யோ, யூஸோ கொடுத்திருந்தோம், எங்கள் மகன் குடுகுடுவென அப்போ நன்கு ஓடித்திரிஞ்சார்.. ஓடியபோது, கப் தட்டுப்பட்டு கொஞ்சம் ஊத்துப்பட்டு விட்டது.. உடனே சொன்னார்ர்.. கொமெடிக்குத்தான்..

      “பெறும்போதே நல்ல பிள்ளையாகப் பெறோணும் பிள்ளை” என ஹா ஹா ஹா அதாவது ரீயைத் தட்டிப்போட்டாராம்..

      அப்பூடித்தான் நீங்களும், பெற்றபோதே நல்ல பிள்ளையாகப் பெத்திருக்கோணும் ஜெஸியை ஹா ஹா ஹா:)). எங்கட டெய்சி குட்டியாக இருக்கும்போது, சாடி மண்ணைக் கிண்டுவா, நான் குச்சிகள் எடுத்து மண் தெரியாமல் சாடி முளுக்க நாட்டு வைப்பேன், இப்போ தொட மாட்டா, பழகிட்டா..

      எங்களிடம் இப்பவும் 3 பேர் இருக்கினம்.. அதையும் போஸ்ட் போடோணும் என பல நாளாக படங்கள் எடுத்து வெயிட்டிங்கில் இருக்கு.. போட்டிடோணும் இந்த ஓய்வான காலத்தில்.

      Delete
  17. ஹலோ உங்களை பூக்களில் சேர்த்தின்னு எழுத சொன்னிங்களே அந்த கமெண்ட் வந்துச்சா :)இப்படிக்கு என் பக்கம் IT WING :)இங்கிலாந்து பிரான்ச் 

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆஆஆஆஆ இந்தக் கொரொனா நேரத்திலயும் குசும்பு குறையுதிலைப்பாருங்கோ.. ஒரு அப்பாவியைப் பார்த்துப் பேசுற பேச்சோ இது?:))

      Delete
  18. அந்த பிங்க் CAMELLIA அழகு :) எங்க வீட்ல முன் கதவை ஒட்டி ஒரு ரோஸ் செடி வளருது உள்ளே எட்டி பார்க்கும் :) அதுக்கும் உள்ளே வர ஆசையோதெரில :) படம் எடுக்கணும் அவளை 

    ReplyDelete
    Replies
    1. ஓம் ரோஜாப்ப்பூப்போல மரம் முட்டப் பூப்பா, ஆனா ஒரு கிழமையாக கடும் வெயில், இன்று மழை மெதுவாக ஆரம்பிச்சிருக்குது, மழை எனில் மொட்டுக்கள் அழுகிவிடும்.. அதுதான் கவலையா இருக்கு...

      Delete
  19. அந்த 8 வயது கள்ளி குத்தாதா ?? எனக்கு வீட்டுக்குள் செடியோ வைக்க இன்னொரு பயம் சிலந்தி வரும்னு :) ஜெசிக்கு அதுங்களோட விளையாட ஆசை அதிகம் .பாத்ரூமில் பிளாஸ்டிக் மலர்கள் அழகு .எங்க பொண்ணு அந்த இடத்தையும் விட்டுவைக்கலை :) ஸிங்கில் ஏறி பார்ப்பா ஷவர் CURTAIN பிடிச்சிழுப்பா :) என் 2 கால் பொண்ணுகூட இவ்ளோ அட்டகாசம் செய்யலை 

    ReplyDelete
    Replies
    1. செடிக்கு சிலந்து வருமோ? அது எப்படி?, அது நாம் கிட்டப்போகாமல் தொடாமல் விட்டால் வரலாம், இது நான் அடிக்கடி இலைகளை துடைச்சு தண்ணி கொஞ்சம் தெளிச்சு.. சுத்தமாக வைத்திருப்பேன்..

      //பாத்ரூமில் பிளாஸ்டிக் மலர்கள் அழகு//
      இல்ல இயற்கையான பிளாண்டுடன், பிளாஸ்ரிக் பூவையும் சேர்த்து வைத்திருக்கிறேன் அழகாக இருக்கட்டுமே என.

      // என் 2 கால் பொண்ணுகூட இவ்ளோ அட்டகாசம் செய்யலை //
      ஹா ஹா ஹா அது உண்மைதான்.. 4 காலுக்கு இவ்ளோ செல்லமோ என எங்கட சின்னவருக்கு சிலசமயம் ஜெலஸ் உம் வரும்..
      டெய்சியை மடும் வெளியே போக விடுறீங்க, என்னை விடமாட்டேன் என்கிறீங்க என்பார் ஹா ஹா ஹா.

      Delete
  20. உங்க வீட்டு மலர்களை செடியை  பார்க்கும்போது ஒரு ஒரு  வீக்  ஜெசியை  அங்கே அனுப்பி வைக்கலாமோன்னு தோணுது :))))))))))))))))))))))அந்த மாடத்திலே பாட்டு பார்க்கலை :)))))))))))))))
    சரி ஓகே நான் கொஞ்சம் பிசி எல்லாரையும் விசாரிச்சதா சொல்லிடுங்க 

    ReplyDelete
    Replies
    1. //ஒரு வீக் ஜெசியை அங்கே அனுப்பி வைக்கலாமோன்னு தோணுது //

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அனுப்புங்கோ, நான் நல்ல நல்ல பழக்கமெல்லாம் சொல்லிக் குடுக்கிறேன்:))..

      கன்னி மாடத்திலே பாருங்கோ அஞ்சு.. சூப்பர் பாட்டு..

      Delete
  21. /போன கொமெண்ட்ஸில நாங்க சில விசயங்கள் சிலரைப்பற்றி விடுப்ஸ் பேசினோமெல்லோ:) அதுக்கு இது பொருந்தும்:))//


    ஒரு பிரச்சினை எனக்கிருக்கு .நான்தான் எல்லாரையும் மதிப்பேனே :) ஒருவேளை அதுதான் பெரும் தவறோ :)))))))))

    ReplyDelete
    Replies
    1. மதிப்பது தவறில்லை, அதே அதே மதிப்பை எதிர்பார்ப்பதுதான் தவறுபோல இருக்குது இக்காலத்தில்.... எதையும் தாங்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ளோணும்..:)) அதிராவைப்போல என ஜொள்ள வந்தேன்:))

      Delete
  22. ஹலோவ் பிஞ்சு எழுத்தாளிணி  :) ஒரு முக்கியமான விசயம் சொல்லணும் அது அது :) KFC ,McDonald,  greggs burger கிங் எல்லாம் இங்கே மூடியாச்சே :) 

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) யூகே முழுக்கத்தான்...

      ஆனாலும் என்னால இப்போ பல உயிர்கள் சேஃப்ட்:)) எப்பூடின்னும் ஜொள்ள மாட்டேன்:))

      Delete
  23. இந்த food செயின்ஸ் மூடறதுக்கு முன்னாடி இலவச விநியோகம் நடந்தது :) நாங்க காரில் போகும்போது கியூ நின்னுச்சி அங்கே :)

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா? ஹையோ ஹையோ.. ஹா ஹா ஹா எனக்கும் ஒரு பாக் வாங்கி அனுப்பியிருக்கலாம் சரி விடுங்கோ:))..

      மிக்க நன்றிகள் அஞ்சு.

      Delete
  24. அன்பு அதிரா,
    வீரா பாடலோடு பதிவு அத்தனை ஜோர்.

    நான் பின்னூட்டம் போடும் வேளை எல்லோரும் உறங்கி இருப்பீர்கள்.

    வீடு அழகு. கள்ளிக் கன்னி அழகு.
    வண்ணம் அழகு.
    மறைந்திருந்து பார்க்கும் மங்கையும் அழகு.
    நல்ல கலை உணர்ச்சி உங்களுக்கு.

    உங்க மகள் வீட்டுக்குள் படுத்திருப்பதே சொகுசாக இருக்கிறது.

    யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமேன்னு ஒரு பாட்டே
    இருக்கிறது.
    நம் பாடு நமக்கு.
    மற்றவர்கள் புத்தியைப் பற்றி நாம் யோசிக்க வேண்டாம்.

    கதையை எழுதி எபிக்கு அனுப்பி விடுங்கள்.
    நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வல்லிம்மா வாங்கோ..

      //வீரா பாடலோடு பதிவு அத்தனை ஜோர்//

      ஆஆஆஆ நன்றி நன்றி... பாருங்கோ வல்லிம்மா.., இதை நெல்லைத்தமிழன் பார்க்காமல்:), போஸ்ட் சரியில்லை ஏதோ ஏனோதானோ எனப் போட்டிட்டேன் என்கிறார்ர்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒரு போஸ்ட் போட்டுப் பார்த்தால்தான் தெரியும் அதுக்கு எவ்ளோ செலவாகுதென:))... ஹா ஹா ஹா ..

      ஆஆஆ வல்லிம்மாவுக்கு கவிதை கொட்டுதே.. நன்றி நன்றி.

      //கதையை எழுதி எபிக்கு அனுப்பி விடுங்கள்.
      நன்றாக இருக்கும்.//

      அது நான் எழுதும் கதையா இல்ல... சரி இப்போ அது சஸ்பென்ஸ்:)).. எபிக்கோ ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொரொனா கூட நிலைமை நோர்மலாகிடும், ஆனா அங்கு அனுப்பினால் இனி அடுத்த வருடம்தான் வெளிவரும் ஹா ஹா ஹா.. நாங்க இந்த ஹொலிடேயைக் கொண்டாடவே கதையை இங்கு போட ஆசை:)).. ஆனா எழுதுவேனோ தெரியாது வல்லிம்மா. இப்போ மீ ஹொலிடே மூட் ல இருப்பதால், வலைக்கு வருவதை விட, றிலாக்ஸ் ஆக இருப்பதையே மனம் விரும்புது..
      ஹா ஹா ஹா..

      நன்றி வல்லிம்மா.

      Delete
  25. மாடத்திலே கன்னி மாடத்திலே பாடலின் இசை நன்றாய் இருக்கும்.  ரொம்பப் பிடித்த பாடல்கள் லிஸ்ட்டில் இலலாவிட்டாலும் போடும்போது கேட்டு ரசிக்கலாம் என்கிற வகைப்பாடல்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      உண்மை.. ரசிக்கக்கூடிய, பார்க்கக்கூடிய பாடல், நன்றி.

      Delete
  26. பூனை விளையாடுவது அழகாய் இருக்கிறது!  பெயர் சொல்லாமல் வைத்திருக்கும் செடிகள் விவரம் தெரியவில்லை.   நான் தென்னை மரத்தையே அது பனைமரமாயிருக்குமோ என்று சந்தேகமாய்ப் பார்க்கும் அளவு அறிவு படைத்தவன்!

    ReplyDelete
    Replies
    1. //பெயர் சொல்லாமல் வைத்திருக்கும் செடிகள் விவரம் தெரியவில்லை.//

      சொன்னாலும் நீங்க மறந்திடுவிங்க என்பதால மீ சொல்லவில்லை.. முதல் பிளாண்டின் பெயர் ஸ்பைடர் பிளாண்ட்:))...

      //நான் தென்னை மரத்தையே அது பனைமரமாயிருக்குமோ என்று சந்தேகமாய்ப் பார்க்கும் அளவு அறிவு படைத்தவன்!///

      ஹா ஹா ஹா இது சந்தேகம் ஸ்ரீராம் சந்தேகம்:)) இதை ஏன் அறிவோடு ஒப்பிடுறீங்கள்:).

      Delete
  27. 'இடையில் சும்மா' சொல்லி இருக்கும் வாசகம் திருவாசகம்!   அந்த 8 வாசு கள்ளி எதற்குப் பயன்படுகிறது?  சும்மா காட்சிப்பொருளா? 

    டெய்சி தனியாய்ப் படுப்பது எதற்கு?  நிஜமாகவே அதற்கெல்லாம் இயற்கையாய் ஒரு உணர்வு இருக்குமோ!  எங்கள் காம்பவுண்டில் இருக்கும் ரௌடிப்பையன் என்னைக்கண்டதும் வயதான தன் உடலைத் தூக்கிக்கொண்டு டிங் டிங் என்று ஓடிவருவான்.  சமயங்களில் நான் எங்கோ பார்த்து யாருடனோ, அல்லது போனில் பேசிக்கொண்டிருக்கையில் என் கையில் மெத்தென்று ஏதோ படுகிறதே என்று சட்டெனத் திரும்பிப் பார்த்தால் இவன் தன் நெற்றியைக் கொண்டு வந்து என் கையில் உரசுவான்!

    ReplyDelete
    Replies
    1. //'இடையில் சும்மா' சொல்லி இருக்கும் வாசகம் திருவாசகம்!//

      ஆஆஆ அப்போ இதுதான் திருவாசகமோ:)) ஹா ஹா ஹா..

      //அந்த 8 வாசு கள்ளி எதற்குப் பயன்படுகிறது? சும்மா காட்சிப்பொருளா? //

      அது ஸ்ரீராம், வீட்டில் வளர்த்தால் நல்லதாமே.. அத்தோடு வீட்டின் அசுத்தத்தை உறிஞ்சும் தன்மையும் இருக்கு என்பதைப்போல எங்கோ படிச்சேன்ன்..

      //நிஜமாகவே அதற்கெல்லாம் இயற்கையாய் ஒரு உணர்வு இருக்குமோ!//
      உண்மை, அவர்களுக்கு உள்ளுணர்வு அதிகம்...

      //ரௌடிப்பையன் என்னைக்கண்டதும் வயதான தன் உடலைத்//
      எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈ:)).. அது பையனோ?:) இல்ல வயசாகிட்டுதோ?:)).. ஹா ஹா ஹா.. உங்களிடமும் இந்தச் செல்லங்கள் எல்லாம் ஓட்டமெட்டிக்காக வந்து ஒட்டிவிடும் எனத்தானே அறிஞ்சிருக்கிறோம்..

      Delete
    2. ஸ்ரீராம் //சமயங்களில் நான் எங்கோ பார்த்து யாருடனோ, அல்லது போனில் பேசிக்கொண்டிருக்கையில் என் கையில் மெத்தென்று ஏதோ படுகிறதே என்று சட்டெனத் திரும்பிப் பார்த்தால் இவன் தன் நெற்றியைக் கொண்டு வந்து என் கையில் உரசுவான்!//

      ஹையோ க்யூட் என்ன அன்பு இல்லையா உங்க கவனத்தை ஈர்க்க!! அதை நினைச்சுப் பார்த்து ரசித்தேன்...

      கீதா

      Delete
  28. அந்த வாட்சாப் காணொளி இரண்டு மூன்று நாட்களுக்குமுன் நானும் பார்த்து ரசித்தேன்!  ஊசி இணைப்பு எப்போதும் போல ஸூப்பர்!

    ReplyDelete
  29. அந்தப் பூனைக் காணொளி எனக்கும் வந்திருக்கிறது...

    இப்போது பூசை நேரம் போய்க் கொண்டு இருப்பதால் பதிவில் பூனையைப் போடவில்லை..

    வீட்டுக்குள் தோட்டம் அருமை....
    வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ... அங்கும் நிலைமை சரியில்லை என எழுதியிருந்தீங்கள், நலமாக சேஃப் ஆக இருங்கோ.

      அது துரை அண்ணன் வட்சப் இல் வருபவை எப்படியோ, நாம் ஒருவருடன் தொடர்பில் இல்லை எனினும், உலகம் முழுக்க பார்த்து விடுகிறது நாம் பார்ப்பதை.

      ஒரு பெப்பர் ஐ டிஸ் இல் போட்டு, அதைத்தொடச் சொல்லி லீசா எனும் குழந்தையைக் கூப்பிட்டு ரீச்சர் ஒருவர் சொல்லிக் கொடுக்கிறா, அதை நான் பார்த்தேன், ஸ்கூல் போனதும் இங்கு ஸ்கொட்டிஸ் ரீச்சர் அதைச் சொன்னா.. எனக்கு ஷொக்ட் ஆகிட்டுது, தமிழராகிய நாம் பார்த்ததை, இவர்களும் பார்த்திருக்கினமே என.. அப்போ பாருங்கோவன்:)) வட்சப்பின் மகிமையை.

      ஓ பூஜையில் பூஸார் வரக்கூடாதோ.. ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  30. செடிகள் நமக்கு நல்ல விஷயங்களைச் சொல்கின்றன - புத்துணர்வுடன் இருக்க உதவுகின்றன. உங்கள் வீட்டுச் செடிகள் அழகு.

    ஊசிக் குறிப்பு மற்றும் வாசகங்கள் அனைத்துமே சிறப்பு. விளையாடிக் கொண்டிருக்கும் பூனையார் - இடைவிடாத விளையாட்டு!

    அனைத்துமே நன்றாக இருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட், அதேதான் வீட்டுக்குள் இப்படியான செடிகள் வளர்ப்பதில் பல நன்மைகள் இருக்கு.

      மிக்க நன்றிகள் வெங்கட்.

      Delete
  31. //வாருங்கள்👧.. அதிரா வீட்டுக்குள்:)..//

    கொரானா சீசனில் ஒருத்தரும் வரமாட்டார்கள் என்ற தைர்யத்தில் இந்த அழைப்போ. கர்ர்ர்ர்ர்ர்ர்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..

      //கொரானா சீசனில் ஒருத்தரும் வரமாட்டார்கள் என்ற தைர்யத்தில் இந்த அழைப்போ. கர்ர்ர்ர்ர்ர்ர்//
      ஹா ஹா ஹா நேரத்துக்கேற்ற பஞ்:)) டயலொக்:)) ரசித்தேன்...:))

      Delete
  32. மாடத்திலே ...... கன்னி மாடத்திலே ........ பாட்டும், அந்த மீனா பொண்ணும் சூப்பர் !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. // அந்த மீனா பொண்ணும் சூப்பர் !//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்போ மீனா பற்றி ஆரூ கேட்டா?:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்போ மீனா பற்றி ஆரூ கேட்டா?:)) ஹா ஹா ஹா..//

      ஆரூ கேட்டாலும் எங்கட கண்ணழகியான அந்த மீனாவை மட்டும் நான் (விட்டுத்) தரவே மாட்டேனாக்கும். அவள் மட்டும் அந்தப்படத்தில் ஹீரோயினாக இல்லையென்றால், அந்தப் படமே படுதோல்வி அடைந்திருக்கும், தெரியுமா உங்களுக்கு. தெரியாட்டி எங்கள் நெ.த. ஸ்வாமியையோ, உங்கள் அஞ்சுவையோ கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கோ. :))

      Delete
  33. முதல் படத்தில் அந்தப் பூனை அனிமேஷன் அட்டகாசமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஅ அப்போ சுட்டிட்டீங்களோ?:)) ஹா ஹா ஹா ஹையோ இது வேற சுடுறது:))

      Delete
    2. சுடவில்லை. ஏனென்றால் எனக்கு இந்த பூனை நாய் போன்ற எந்த பெட் அனிமல்களும், ஜந்துக்களும், நேரில் பார்க்கப் பிடிக்கவே பிடிக்காது. படங்களில் பார்த்து ரஸிப்பதோடு சரி.

      Delete
    3. இதனை நான் என் டயறி ல நோட் பண்ணிக்கொண்டேன்:)) பார்ப்போம் இனி கோபு அண்ணன் பக்கம் ஏதும் பூஸ் பபிப் படங்கள் பார்த்தேனோ அவ்ளோதேன்ன்:)) ஹா ஹா ஹா..

      Delete
  34. //இது என்ன கள்ளி?? இவவுக்கு வயசு 8 ஆகிவிட்டது:))//


    எனக்கோர் உண்மை தெரிஞ்சாகணும் !

    ’க ள் ளி’ க்கு வயது (8) எட்டா அல்லது (80) எண்பதா?

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கள்ளிக்கு வயசு:)), அதிராட வயசில பாதீஈஈஈஈஈஈ அதாவது கால்ஃப்:))

      Delete
    2. ’கள்ளி’ என்று நான் குறிப்பிட்டுச் சொன்னதே அந்த நம் __ __ __ வை த்தான்.

      ஸ்வீட் சிக்ஸ்டீனில் பாதி 8 எனவும் வைத்துக்கொண்டு மகிழலாம் .... நீங்க.

      ஆனால் நாங்க 160-இல் பாதி 80 என வைத்துக்கொண்டோம் என்று நீங்கள், தவறாக ஏதும் நினைத்துக் கொள்ள வேண்டாம், என நெல்லைத்தமிழன் ஸ்வாமீ சாட்சியாக ஜொள்ளிக்கிறேன். :)

      Delete
    3. உங்கட உஸ்வாமி இதுக்கெல்லாம் ஜாட்சிக்கு வரமாட்டாராக்கும்.. பிறகு அண்ணியிடம் அவரால திட்டு வாங்க முடியுமோ வீட்டில் ஹா ஹா ஹா:))..

      Delete
  35. //இது ஒரு பக்கம் பெரிய கண்ணாடி, அதனால இதில் தெரிவது எல்லாம் கண்ணாடி விம்பமாக்கும்:))//

    எது முக்கியமோ அதைத்தவிர எல்லாவற்றையும் காட்டியுள்ளீர்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை?:))

      Delete
    2. ஒரு பிரச்சனையும் இல்லை. அந்தப்படத்தில், மிக அழகாகவும், அரைகுறையாகவும், காட்டப்பட்டுள்ள பெண்குட்டி அதிரா இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். :)

      Delete
    3. இம்முறை கோபு அண்ணனைப் பார்க்க, 2012...13 காலத்தில் பார்த்தவர்போல மிக குதூகலமாக மகிழ்ச்சியாக இருக்கிறீங்கள்.. இப்படியே இனியும் தொடர்ந்து இருங்கோ.. கொரொனா நெருங்காது:)).. ஹா ஹா ஹா நலமே இருங்கோ கோபு அண்ணன்.

      அனைத்துக்கும் மீள் வருகைகளுக்கும் நன்றி... ஆனாலும் தேம்ஸ் கரை எல்லாம் புகைப்புகையா வருவதைத்தான் என்னால தடுக்க முடியேல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா...

      Delete
  36. //இது என் பிறந்தநாள் பரிசு, இன்னும் சாடியில் நடவில்லை..//

    பரிசு கொடுத்தவங்க அந்த நல்லவங்க ஜாடி கொடுக்கவில்லையோ ? கதைவிட ஒரு அளவே இல்லை, உங்களுக்கு.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. //ஜாடி கொடுக்கவில்லையோ ? //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பூந்தாவரம் தந்ததே பெரிசு என நினைக்காமல்:), சாடி தரவில்லை எனக் குறை கூறலாமோ?:).. இதை அந்த உச்சிப்பிள்ளையார் பொறுப்பாரோ?:) இல்ல உங்கட அந்த மொட்டை மாடிதான் தாங்குமோ?:))... சே சே அஞ்சுகூட இதைத் தட்டிக் கேய்க்க மாட்டாவாம் கர்ர்ர்:))

      ஹா ஹா ஹா..

      Delete
    2. ஜாடி மட்டுமல்ல. ஜாடிக்கேற்ற மூடியும் கொடுக்கப்பட வேண்டுமாக்கும். ஹா..ஹா..ஹா.

      புருஷன் பொண்டாட்டியை ‘ஜாடிக்கேற்ற மூடி’ எனச் சொல்லுவதும் உண்டு. சில ஜாடிகளுக்கு சில மூடிகள் பொருந்தாமலும் இருக்கும். :( அது அவரவர்களின் தலையெழுத்துப்படி மட்டுமே.

      Delete
    3. ஹா ஹா ஹா இதற்காகத்தானே பல பாடல்களும் வந்திருக்கின்றன..:)

      Delete
  37. //இந்த வீடியோவை சவுண்டுடன் பாருங்கோ:)) ஹா ஹா ஹா..//

    சூப்பர் சவுண்டு ... ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அருமை.

    ReplyDelete
    Replies
    1. //சூப்பர் சவுண்டு ... ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அருமை.//

      எனக்கிந்தச் சிரிப்பில டவுட் இருக்குது:)) ஹா ஹா ஹா

      Delete
    2. சவுண்டு கேட்டதும், அந்தப் பூனை பம்பரம் போலச் சுழன்று தலை தெரிக்க ஓடியது, என்னை மிகவும் சிரிக்க வைத்தது. :))))))) டவுட்டே வேண்டாம்.

      Delete
    3. ஹா ஹா ஹா என் டவுட் அதற்காக அல்ல:)).. ஏதோ இங்கு இப்போதான் முதல் தடவை பார்த்ததைப்போல சிரித்தமைக்கு:)) ஹா ஹா ஹா:). நன்றி அப்பூடித்தான் இருக்கோணும், இங்கு நான் எதைப்போட்டாலும், இப்போதான் பார்க்கிறேன் எனச் சொல்லிப் பலமாச் சிரிக்கோணுமாக்கும்:))

      Delete
  38. ஊசி இணைப்பு:

    இலைமறை காய்மறையாக அழகோ அழகு !

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி.. எல்லோருக்கும் கவித கவிதயா வருதே:) அதிரா பக்கம் வந்ததும்:))

      Delete
    2. எனக்கு அப்படி அல்ல. அதிரா பக்கம் வந்தும்கூட, குழம்பாமல் (குயம்பாமல்) நான் இன்னும் ஸ்டெடியாக கவிஞராகவும், கதாசிரியராகவும் ஜொலித்துக்கொண்டுதான் இருக்கிறேன். மற்ற சில கிழபோல்ட்கள் போலப் பொறாமைப்படாதீங்கோ. :)))))

      Delete
    3. ஹா ஹா ஹா சந்தடி சாக்கில என்பக்கம் வந்து திட்டுறீங்க:))...

      ஆனாலும் கோபு அண்ணன் ஒரு உண்மை சொல்லியே ஆகோணும், வயதானோரில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர், எதையும் பொஸிட்டிவ்வாக எடுப்பீங்கள், என்னைப்போல கொமெடியாகவே பார்த்துக் கொண்டு, எதிர்த்து வாய் காட்டி:) மகிழ்ச்சியாக இருப்பீங்கள்...சீரியஸ் ஆகாமலும், திட்டாமலும் கோபிக்காமலும்..

      அதனாலதான்..., அந்த நம்பிக்கையில்தான், உங்களோடும், இங்கு சிலரோடு பழகுவதைப்போல பயமில்லாமலும், யோசிக்காமலும் எதையும் எழுதி விடுகிறோம்ம்..

      Delete
  39. //ஊசிக்குறிப்பு: எப்பூடி என் போஸ்ட் பிடிச்சிருக்கோ உங்களுக்கு?:)//

    சகிக்கலை அந்தக் குரங்கு.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் கிரேட் குருவைப் பார்த்து உப்பூடிச் சொல்லப்பிடாதாக்கும்:)).. பிறகு நீங்க ரோட்டால நடந்து போகும்போது, உங்கட கையிலிருக்கும் குண்டா வைப் பறிச்சிடப்போறார்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை என்ற ஊர் அருகே சோளிங்கர் என்னும் பெருமாள் கோயிலும் அனுமார் கோயிலும் உள்ளன. 1500 + 500 = 2000 X 2 = 4000 படிகள் ஏறி இறங்கணும். ஒவ்வொரு படியிலும் 10 குரங்குகள் வீதம் மொத்தம் 40000 குரங்குகளைத் தாண்டித்தான் வரணும். கீழேயுள்ள கடைகளில் வாடகைக்கு வாக்கிங் ஸ்டிக் தருவார்கள். வாக்கிங் ஸ்டிக் தவிர வேறு எதுவும் கொண்டு போக முடியாது. 2005-ம் ஆண்டு நான் அந்த மலை ஏறி இறங்கி வந்துள்ளேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      Delete
    3. ஹா ஹா ஹா அப்போ வருடா வருடம் படி ஏறுவோர் .. இதுவரை எத்தனை கிரேட்குருக்களைப் பார்த்திருப்பினமோ:))..

      அப்பாவுக்கு ஒரு தடவை அம்மா சத்துமா செய்து ரின் ல அடைச்சுக் குடுத்துவிட்டா, ஒரு கூனா...ரங்குப் பிள்ளை உள்ளே வந்தாம் ரின்னை எடுத்துக் கொண்டு ஒரு மரக்கொப்பில் ஏறித் திறந்தாராம், கூடவே எல்லோரும் ஓடி வந்து கைகளை நீட்டினார்களாம், எல்லோருக்கும் ஒவ்வொரு பிடி அள்ளிக்கொடுத்து தானும் சாப்பிட்டதாம்:)).. பகிர்ந்து உண்கினமாமாம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா..

      Delete
  40. //டெய்சிப்பிள்ளை நம்மோடு வந்து ஒட்டி, இடிச்சுப் படுப்பா, ஆனா இப்போ கொஞ்ச நாளாக நைட் ஆனதும், ஓடிப்போய் தன் வீட்டுக்குள்ளே படுக்கிறா,//

    அது நம் நெல்லைத்தமிழன் ஸ்வாமீ போலவே, உஷாரான, விபரமான, புத்திசாலியான, முன்னெச்சரிக்கை முனுசாமியாக இருக்கும் போலிருக்குது. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கொமெண்ட் மட்டும் நீண்ட இடைவேளையின் பின்பு போட்டிருக்கிறீங்க, ஏனைய கொமெண்ட்ஸ் படிச்சதும் சத்தியமாக நினைச்சேன்ன்.. ஆஆஆ இன்று கோபு அண்ணன், “உஸ்வாமி”:)) பற்றிப் பேசாமல் போயிட்டாரே என:)).. அந்த எண்ண அலைகள் காற்றில் தவழ்ந்து வந்து, உங்களை எழுத வச்சுவிட்டதே:))..

      //உஷாரான, விபரமான, புத்திசாலியான, முன்னெச்சரிக்கை முனுசாமியாக இருக்கும் போலிருக்குது.///
      நீங்கள் அவரை நேரில் பார்த்திருப்பதால், “இதனை நம்புகிறேன்:))” ஹா ஹா ஹா.. ஆனா அவர் இப்போ மெளன விரதமாம்:) உங்களோடு மட்டும்:)) உங்கள் எழுத்தைப் பார்த்துக் காக்கா போயிடுறார்ர்.. பயமாக இருக்குமோ?:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்:))

      ஹா ஹா ஹா நன்றிகள் கோபு அண்ணன்

      Delete
    2. நெல்லைத்தமிழன் ஸ்வாமீ, என்னுடன் உள்ள பிரியத்தில், தினமும் வாட்ஸ்-அப்பில், என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டு, ஒட்டி உறவாடி வருகிறார். இல்லாத பொல்லாத சந்தேகங்களெல்லாம் என்னிடம் கேட்டு, என்னை வம்பு இழுப்பார். நானும் தக்க பதிலடி கொடுப்பேன். எங்களுக்குள் ஒரே தமாஷா இருக்கும்.

      Delete
    3. ///நெல்லைத்தமிழன் ஸ்வாமீ,//

      ஸ்வாமி இல்லை கோபு அண்ணன் :)) உப்பூடித் தமிழில் எழுத்து ஆரம்பிக்காதாக்கும்:)) இப்போ எங்கே போயிட்டார் உங்கட “உஸ்வாமி”:) இதனைத் திருத்தாமல் கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா இப்போ யூப்பர் மாட்டி அவர்:)).. ஸ் க்கு முன்னால உ போட்டுத்தான் இனி எழுதோணும் ஜொள்ளிட்டேன் எங்கிட்டயேவா?:)) ம்ஹூம் பூஸோ கொக்கோ:))

      Delete
    4. //தினமும் வாட்ஸ்-அப்பில், என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டு, ஒட்டி உறவாடி வருகிறார்//

      ஹையோ ஆண்டவா கோபு அண்ணன் பத்திரமாக இருங்கோ:)) அவர் ஊரெல்லாம் இன்னும் சுத்திக் கொண்டுதான் இருக்கிறார்:)) இந்த நேரம் பார்த்து கட்டிப்பிடிச்சு ஒட்டி உறவாடலாமோ கர்ர்ர்ர் ஒரு கால நேரம் கிடையாதோ:))..

      //பொல்லாத சந்தேகங்களெல்லாம் என்னிடம் கேட்டு, என்னை வம்பு இழுப்பார். நானும் தக்க பதிலடி கொடுப்பேன்//

      ஆஹா அவர் கேள்வி கேட்கவென்றே பிறந்தவர்:)).. ஏதும் ஜந்தேகம் வந்தால், உடனேயே என் வட்சப்புக்கு அதனை அனுப்பி வையுங்கோ கோபு அண்ணன் இல்லை எனில் ஒரு வட்சப் மிஸ்ட் கோல் தாங்கோ மீ ஜெல்ப் பண்ணுவேனாக்கும் ஹா ஹா ஹா:)).. சரி சரி கோபிக்காதீங்கோ பிறகு பிபி ஏறிடும்:), பிபி ஏறினால் பொடி ரெம்பிரேச்சர் ஏறும்:).. அது ஏறினால் கொரொனா என 14 நாட்கள் உள்ளேயே அடைச்சுப் போடுவினமாக்கும் ஹா ஹா ஹா:))

      Delete
  41. வீட்டுக்குள் உருப்படியா நல்ல செடிகளை வைக்கலாமெல்லோ. கறிவேப்பிலை, கற்றாழை, கற்பூரவள்ளி என வைத்தால் உணவுக்கும், உடம்பு சுகமில்லையெனில் இவை பிரயோசனமா இருக்கும். இவை வடிவுக்குதான் தவிர வேறேதுவும் இல்லை. ஆனா....ஆனா உங்கட வீட்டுக்குள் நீங்க வடிவா வைத்திருக்கிறீங்க எழுத்தாணி....சொறி எழுத்தாளிணி.

    நான் டெய்சிதான் விளையாடுறாவோ என நினைத்தேன். நல்ல விளையாடுறா. சில வீடியோக்கள் பார்க்க ஆசையிருக்கும் அவங்க சேட்டைகளை.
    எங்கட வீட்டில் டீ யுடன் தனித்தனியா போட்டு குடிப்போம். இங்கும் நெஸ்டோமோல்ட் வாங்கி குடிக்க மகனுக்கு விருப்பமாகி பின் அவரே வாங்கி தொடங்கீட்டார்.வீவா இங்கு ஓரிடமும் இல்லை. ஊரிலும் நான் காணேல்லை.
    1வது படத்தில் இருக்கும் செடி வீட்டில் இருந்தது இப்ப இல்லை. கள்ளி இங்கு இருக்கு எனக்கு முள் பயம் இருக்கு.அதனால் வாங்கல. ரோஜா செடியே க்ளீன் செய்ய பயம். இங்கத்தைய செடியில நிறைய முள். 2வது படத்தில் இருக்கும் கொடிச்செடி வெளியில் கல்லில் வைத்திருக்கோம்.

    ச்சும்மா வசனம் தான் ஆனா அருமையான தத்துவம். மாடத்திலே கன்னி மாடத்திலே...பாட்டு நல்ல பாட்டு. ஹா..ஹா..
    பாத்ரூம் பூக்கலை போட்டோஷாப் ல் செய்து போட்டிருக்கிறீங்களோன்னு நினைச்சேன். அழகா இருக்(கிறீங்க)கு....
    Camellia அழகான பூ. அதுவும் பிங்கி...இன்னும் குளிர் சரியாகல. அப்பிளும்,பியர்ஸும் இப்ப எறிக்கிற வெயிலுக்கு எப்படா இலையை விரிக்கலாமென சின்ன துளிரா வருகினம். பூக்கள் பூக்கும் நேரம் குளிர் வந்தால் எல்லாமே போச்சு. நான் ப்ரே செய்தபடி. இங்கு குளிராகவே இருக்கு, வெயில் எறித்தாலும்..

    டெய்சிபிள்ளைக்கு தெரிந்துவிட்டது போல.. நானும் அந்த வீடியோ பார்த்தேன். கடன்காரர் தொல்லை மாதிரி..நான் வேறு ஒரு வீடியோ பார்த்தேன். அதில் போலீஸ்காரர் காரை மறித்து லைசன்செஸ் கேட்க, கார் கதவு கண்ணாடியை இறக்காமல் ஒரு துண்டுசீட்டில் தனக்கு கொரோனா இருப்பதாக எழுதி காட்ட, போலீஸ் ஓடுறார்...ஹா..ஹா.. கொரோனாவால் நிறைய மீம்ஸ்,வீடியோக்கள் உலா வருது.
    அழகான போஸ்ட் பிஞ்சு கவிஞர் அதிரா.
    (எழுதின கதையையும் டைப்புங்கோ பதிவா.)

    ReplyDelete
    Replies
    1. ////எழுத்தாணி////
      LOL:)))))

      Rofl:)))))

      Delete
    2. //உருப்படியா நல்ல செடிகளை வைக்கலாமெல்லோ. கறிவேப்பிலை, கற்றாழை, கற்பூரவள்ளி என வைத்தால் உணவுக்கும்// - ப்ளெயினா மனசுல தோணினதை எழுதியிருக்கீங்க. பாராட்டறேன். எனக்கும் எப்போவும் இது மனசுல தோணும். சும்மா கண்ட கண்ட செடிகள் வைக்கறதுக்குப் பதில் தக்காளி, மிளகாய் என்றெல்லாம் வைக்கக்கூடாதா என்று.

      Delete
    3. வாங்கோ அம்முலு வாங்கோ...

      //வீட்டுக்குள் உருப்படியா நல்ல செடிகளை வைக்கலாமெல்லோ. கறிவேப்பிலை, கற்றாழை, கற்பூரவள்ளி என வைத்தால் உணவுக்கும், உடம்பு சுகமில்லையெனில் இவை பிரயோசனமா இருக்கும்.///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா இந்தக் குளிர் நாட்டிலயும் இப்பூடி வீட்டுக்குள் வளர்க்கிறா, ஆனா அஞ்சு வளர்க்கவில்லை எனப் பாராட்டாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஹா ஹா ஹா நான் என்ன வைக்க மாட்ட்டேன் என்றா சொல்கிறேன் அவற்றை:)).. கிடைப்பதில்லை அம்முலு, 10,12 வருடம் முந்தி, கற்பூரவள்ளி என் நண்பி வீட்டுக்குப் போன இடத்தில வாங்கி வந்து வச்சிருந்தேன், பின்பு அது பட்டுப்போயிந்தி கர்:))..

      Delete
    4. @அம்முலு
      //இவை வடிவுக்குதான் தவிர வேறேதுவும் இல்லை.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடி எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் சொல்லப்பிடாதாக்கும்:)).. பாருங்கோ இதுதான் சாட்டென நெ தமிழன் ஓடிவந்து வழிமொழிஞ்சிட்டார் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      இல்லை அம்முலு, இவை இங்கு இப்படி கதவு ஜன்னல் எல்லாம் பூட்டியிருக்கும் நாடுகளில், வீட்டுக்குள் வளர்கவென்றே விற்கப்படுகின்றன, இவற்றில் பல நன்மை உண்டு, வீட்டை சுத்தப்படுத்தும், கார்பனைக் கொன்றோல் பண்ணும், சுவாசத்துக்கு நல்லது... அதனாலதான் இந்நாடுகளில் இத்தாவரங்கள் கடைகளில் கிடைக்குது, ஆனா நம் நாடுகளில் கள்ளி எனில் காட்டுப் பகுதியில்தானே காணலாம்..

      //எழுத்தாணி....சொறி எழுத்தாளிணி.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கும் வர வர டங்கு ஸ்லிப்பாகுதே:))...

      ஆஆஆ இதில ஒரு விஷயம் நான் சொல்லோணும்.. நான் எழுதுவதாயின் “ரங்” எனத்தான் எழுதுவேன்:)), ஆனா கொமெடிக்காகவே டங்கு என எழுதுவேன், ஆனாப் பாருங்கோ நெ தமிழன் பேசாமல் இருப்பதைப் பார்த்தால் இப்பூடித்தான் எழுதோணுமாக்கும் ஹா ஹா ஹா..

      Delete
    5. @அம்முலு
      //எங்கட வீட்டில் டீ யுடன் தனித்தனியா போட்டு குடிப்போம்.//
      இதேதான், இந்த சுவை அஞ்சுவுக்குத் தெரியாதாக்கும் கர்ர்ர்:)) இது நம் நாட்டில் தானே பேமஸ்..

      //வீவா இங்கு ஓரிடமும் இல்லை. ஊரிலும் நான் காணேல்லை.//
      இப்போ போன கிழமை தமிழ்க்கடை போனபோதுதான் பார்த்ததும் வாங்கிட்டேன் அம்முலு, அழகிய போத்தலில் கிடைக்குது.. நெஸ்டமோல்ட்டை விட விலை.. 6 பவுண்டுகள்.

      //1வது படத்தில் இருக்கும் செடி வீட்டில் இருந்தது இப்ப இல்லை//

      அது ஸ்பைடர் பிளாண்ட் அம்முலு, கணவரோடு ஹொஸ்பிட்டல் அவரின் றூமுக்குப் போவோம், அங்கு இது அவர்களின் ஸ்ராவ் றூமில்[ரீ றூம்] நடுவில் வைத்திருந்தார்கள், நிறையக் குட்டி போட்டு இருந்துதா, ஒரு குட்டியை எடுத்து வந்து வச்சேன்.. இப்போ பல வருடங்களாகியும் குட்டிக்கு மேல குட்டி போட்டு வளர்ந்து வருது..

      //கள்ளி இங்கு இருக்கு எனக்கு முள் பயம் இருக்கு.அதனால் வாங்கல.//
      எனக்கும்தான், ஆனா இது மூத்தவர் தான், தனக்கு வேணும் என வாங்கித் தன் றூமில் வச்சிருந்தார், எதையும் வாங்குவது மட்டும்தானே அவர்கள், பின்பு பராமரிப்பது மம்மீஸ் தானே:)) கர்ர்ர்ர்:))..

      //2வது படத்தில் இருக்கும் கொடிச்செடி வெளியில் கல்லில் வைத்திருக்கோம்.//

      ஓ இது வெளிக்குளிரிலும் வளருது, ஆனா வெளியே இருப்பதில் தண்டு மட்டும்தான் இருக்குது, வீட்டுக்குள்தான் இலைகள் வருது.

      Delete
    6. //பாத்ரூம் பூக்கலை போட்டோஷாப் ல் செய்து போட்டிருக்கிறீங்களோன்னு நினைச்சேன். அழகா இருக்(கிறீங்க)கு....///

      ஹா ஹா ஹா இல்ல எதுவும் பண்ணவில்லை, அது கண்ணாடியில் தெரிவதால் அப்படி இருக்குது, மற்றும்படி யும்மா:)) பெட்டி போட்டு விட்டேன்:))..

      ஒருகிழமையாக நல்ல வெயில், இன்று மழை ஆரம்பிச்சிருக்குது.

      //(எழுதின கதையையும் டைப்புங்கோ பதிவா.)//
      ஹா ஹா ஹா அதிகம் கொக்கரிக்கும் கோழி சிறிய முட்டைகளை இடுமாம்:)) அப்பூடி ஆகிடப்பொகுதோ என் நிலைமை:)) தெரியல்ல:)).. முடியுமானவரை முயற்சிக்கிறேன்.. அது அதிரா எழுதும் கதையா?:)).........:)

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
    7. //AngelTuesday, March 24, 2020 1:38:00 pm
      ////எழுத்தாணி////
      LOL:)))))

      Rofl:)))))//

      [im] https://i.ytimg.com/vi/TkC2WjVAOMM/hqdefault.jpg[/im]

      Delete
    8. @நெ தமிழன்
      /// ப்ளெயினா மனசுல தோணினதை எழுதியிருக்கீங்க. பாராட்டறேன்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதைத் தட்டிக்கேட்க இங்கின ஆருமே இல்லையோ:)).. அதிராவைப் பாராட்ட மனம் வரேல்லையாம்:)), அதிராவை அடிப்போரைப் பாராட்டுவாராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இவர் குருஷேத்திரம் போனதிலிருந்து ஒரு மாறீஈஈஈஈஈஈஈஈஈயாவே இருக்கிறாராகும்:)) ஹா ஹா ஹா..

      //சும்மா கண்ட கண்ட செடிகள் வைக்கறதுக்குப் பதில் தக்காளி, மிளகாய் என்றெல்லாம் வைக்கக்கூடாதா என்று.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வீட்டுக்குள் தக்காளி வச்சால் வீடெல்லாம் மணக்கும், அது சுவாசத்துக்கு நல்லதோ தெரியவில்லையே, குளிர் காலத்தில் இங்கு அனைத்தும் கதவு ஜன்னல் மூடி எல்லோ வைத்திருப்போம்..

      ஏன் நான் நியூஸில படிச்சேனே, அங்கு டெல்லியில், கடும் பொலூசனால கார்பன் அதிகமாகி, எல்லா ஒபிஸ் களிலும், மற்றும் வீடுகளிலும் இத்தாவரங்களை வாங்கி வைக்கச் சொன்னார்கள்... இந்த நியூஸ் எல்லாம் படிக்க மாட்டார்ர் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நன்றி நெ தமிழன்...

      Delete
    9. நெல்லைத் தமிழன்Tuesday, March 24, 2020 3:25:00 pm
      //உருப்படியா நல்ல செடிகளை வைக்கலாமெல்லோ. கறிவேப்பிலை, கற்றாழை, கற்பூரவள்ளி என வைத்தால் உணவுக்கும்// - ப்ளெயினா மனசுல தோணினதை எழுதியிருக்கீங்க. பாராட்டறேன். எனக்கும் எப்போவும் இது மனசுல தோணும். சும்மா கண்ட கண்ட செடிகள் வைக்கறதுக்குப் பதில் தக்காளி, மிளகாய் என்றெல்லாம் வைக்கக்கூடாதா என்று.//

      வாடகை வீட்டில் செடிகள் வைக்கமுடியாது. இது சொந்த வீடு என்றபடியாலும் அத்துடன் அலங்காரச்செடிகள் எனக்கு ஒழுங்காக வருவதேயில்லை. அதனால் வைக்கவில்லை. நான் மல்லிகை,முல்லை,கறிவேப்பிலை,கற்றாழை,கற்பூரவள்ளி என வைத்திருக்கிறேன்.இவைகள் நன்றாக வருகின்றன. " நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர் என ""இச்செடிகள் பற்றி பதிவே போட்டிருக்கேன்.பாராட்டுக்கு மிக்க நன்றி நெ.தமிழன். அதிராவுக்கு புகை புகையா வருதேஏஏஏ....

      Delete
    10. இல்லை அம்முலு, இவை இங்கு இப்படி கதவு ஜன்னல் எல்லாம் பூட்டியிருக்கும் நாடுகளில், வீட்டுக்குள் வளர்கவென்றே விற்கப்படுகின்றன, இவற்றில் பல நன்மை உண்டு, வீட்டை சுத்தப்படுத்தும், கார்பனைக் கொன்றோல் பண்ணும், சுவாசத்துக்கு நல்லது..// இவ்விடயம் எனக்கு தெரியும். நான் வளர்க்க வரவேயில்லை. அதனால் விட்டிட்டேன். முன்பு இருந்தது. வீடு மாற பட்டுவிட்டது. 2 ஐந்தூரியம் மட்டும் இருக்கு.

      Delete
    11. // அதிராவுக்கு புகை புகையா வருதேஏஏஏ....///

      [im] http://i.imgur.com/r0e8jkX.gif[/im]

      Delete
  42. திரும்பிப் பார்க்கும் முகம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அதிராவுக்கு இல்லை போலும். அதனால் முகத்தை மறைத்து விட்டார். 
    அது சரி. கோகிஷாவுக்கும் அதிராவுக்கும் என்ன சம்பந்தம்.?

    கடைசி போட்டோவில் உள்ள போட்டோவில் உள்ள சின்ன பையன் உங்கள் பேரனா? 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

      //திரும்பிப் பார்க்கும் முகம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அதிராவுக்கு இல்லை போலும். அதனால் முகத்தை மறைத்து விட்டார். //
      ஹா ஹா ஹா இருக்கலாம்:), நான் என்ன இல்லை என்றா சொல்லி உங்களைப் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு அழைக்கப் போறேன்ன்:))..

      //அது சரி. கோகிஷாவுக்கும் அதிராவுக்கும் என்ன சம்பந்தம்.?//

      எல்லாம் அதிராவுக்கும் புளொக்குக்குமான ஜம்பந்தம் தேன் கர்:)) ஹா ஹா ஹா..

      //கடைசி போட்டோவில் உள்ள போட்டோவில் உள்ள சின்ன பையன் உங்கள் பேரனா? //

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கரீட்டூஊ என் மூதாதையர் ஆகிய பேரன்:)[இது ரிவேர்ஸ்ல வரும் பேரனாகும்:))]).. என் கிரேட் குரு அவர்தேன்ன்ன்ன்:)).

      மிக்க நன்றி ஜெகே ஐயா.

      Delete
  43. நெஸ்டமோல்ட்டும் போன்விட்டாவும் போட்ட ஸ்ரோங் ரீ குடியுங்கோ:))//

    இதென்ன டீ!!!???

    ஸாரி அதிரா லேட்டு..கணினி கையில் கிடைச்சப்ப.....உங்கள் பக்கம் இரு நாட்களாக ஓப்பன் ஆகவே இல்லை. படங்கள் வீடியோக்கள் இருப்பதாலா னெட் லிமிட்டட் செர்வீஸில் வருவதாலா தெரியவில்லை... ஓப்பன் ஆவது கடினமாக இருக்கு. இப்போதைய சூழலில் என்று நினைக்கிறேன். இனி எர்லி மார்னிங்க் எல்லோரும் தூங்கும் சமயம் வர பார்க்கணும் ஹா ஹா ஹா அப்போ ஈசியா திறக்கும் என்று நினைக்கிறேன் இப்போதும் கூட 25 நிமிடங்கள் ஆச்சு ஓப்பன் ஆக...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    அதிரா புது கணினி வாங்க இன்னும் காலம் செல்லும். எனது பழையது சரியாகி வந்துவிட்டால் கூட பிரச்சனை இல்லை. பார்ப்போம்...

    செடிகள் அழகாக இருக்கு அதுவும் பாத்ரூம் செம!!! அழகு அங்கு செடிகள் அரேஞ்ச்மென்ட் எல்லாம் ரொம்ப அழகு...

    முதல் பூஸார் விளையாட்டு ஹையோ மனதைக் கவர்ந்துவிட்டது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. துளசி அண்ணன் எப்படி இருக்கிறார்? நலம்தானே? கேரளாவிலும் கொரோனாவாமே...

      என் பதில்தான் ரொம்ப லேட்டாகிவிட்டது..

      //இதென்ன டீ!!!???//
      அது நெச்டமோல்ட் என்பது இலங்கையில் பேமஸ் ஆன ஒரு மில்க் பவுடர்.. கோதுமையில் இருந்து செய்யப்படுகிறது, சூப்பர் ரேஸ்ட், முக்கியமாக உடல் நலமில்லை, காச்சல் இப்படி எனில் இதில ஒரு கப் குடிச்சால், நல்ல தென்பாக இருக்கும்.

      ஓ என் பக்கம் ரைம் எடுக்குதோ ஓபின் ஆக, முன்பு இப்படிச் சிலர் சொன்னார்கள் ஆனா இப்போ இல்லை.

      //அதிரா புது கணினி வாங்க இன்னும் காலம் செல்லும்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது அப்போ சொன்னேன் வாங்கும்படி ஹா ஹா ஹா இப்போ அரிசி கிடைச்சாலே பெரும் மகிழ்ச்சி எனும் நிலைமையாகிட்டுதே ஹா ஹா ஹா..

      நன்றி கீதா..

      Delete
  44. பாடல் அருமையான ட்யூன். பிடித்த பாடல்களில் ஒன்று.டாப் என்று சொல்லாவிட்டாலும் பிடித்த பாடல்...

    ரோஸ் அழகு. நன்றாகப் பூத்திருக்கிறது இல்லையா..உங்களுக்கு மிகவும் பிடித்த கலர்...அது போல உங்கள் பர்த்டே கிஃப்டும் கூட அழகான கலர்...உங்களுக்குப் பிடித்த கலர்...பிங்கோ பிங்கி!!!

    சும்மா அந்த வாசகம் அட்டகாசமான வாசகம்! நச்!

    ஊசிக் குறிப்பு நம்மவர் ஹா ஹா ஹா...சமீபத்தில் ஒரு வாட்சப் வந்தது இன்னும் இப்படியே வீட்டிலேயே இருந்தால் இப்படி ஆகிப் போவோம் என்று...ஹா ஹா ஹா ஹா...

    ஊசி இணைப்பும் அருமை. உண்மை.

    டெய்சிப் பிள்ளை அவ வீட்டிற்குள் செம க்யூட்!! ஒரு வேளை அவர்களுக்குத் தெரியுமோ...சோசியஸ் டிஸ்டன்ஸ்...எங்கள் கண்ணழகியும் அப்படித்தான் செய்யுறா. எப்போதும் அவள் படுக்கையில் படுக்கவே மாட்டா நம்மோடு வந்து ஒட்டி உரசிக் கொண்டுதான்....இப்போது அவள் படுக்கையில் ரொம்ப நேரம் கிடக்கிறா....ஆச்சரியம் நாங்களும் சொல்லிச் சிரித்தோம்...

    வீடியோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வரவே இல்லை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //பிடித்த பாடல்...// டாங்ஸ் கீதா..

      //உங்களுக்கு மிகவும் பிடித்த கலர்...அது போல உங்கள் பர்த்டே கிஃப்டும் கூட அழகான கலர்...உங்களுக்குப் பிடித்த கலர்...பிங்கோ பிங்கி!!!//

      ஹா ஹா ஹா ஓம் கீதா, சிலது அப்படித்தான் தானாக அமைந்துவிடுகிறது...

      செல்லங்களின் சேட்டைகள் ரசிச்சு முடியாது.. அதிலயும் இப்போ நாம் எப்பவுமே வீட்டில் இருப்பதால் அவவுக்கு குஷியோ குஷி:))

      வீடியோப் பாருங்கோ கீதா...

      Delete
  45. பாத்ரூமில் மறைந்திருக்கு பார்க்கும் மர்மம் என்ன!!!!!!!! ஹா ஹா ஹாஹ் ஆ ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கண்பட்டிடக்கூடாதே என்றுதான்:)).. மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  46. உங்கட பொட்ப்ளாண்ட்ஸ் எல்லாம் வடிவா இருக்கு அதிரா. கமீலியா நல்ல அடர்த்தியா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆஆஆ றீஈஈஈஈச்சர் வந்திருக்கிறாக.. வாங்கோ இமா வாங்கோ....

      சொந்தம் விட்டுப் போயிடக்கூடாதென, இடைக்கிடை வந்து நலம் விசாரித்துப்போட்டுப் போறீங்க... உங்கள் வரவு பார்த்து மகிழ்ச்சி.. மிக்க நன்றிகள் இமா.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.