நல்வரவு_()_


Sunday 26 April 2020

தேவசேனாவும்💕பாகுபலியும்👫

ரலோகத்தில் இருக்கின்ற எமது பிதாவே என்னை மன்னித்து அருளும்... இத்தனை காலமாக, இதைப் பார்க்காமல் இருந்துவிட்டேனே, ஏதோ எனக்குள் ஒரு வைராக்கியம் இதைப் பார்க்கக்கூடாதென, அதனால கொஞ்சம் கூடப் பார்க்க விரும்பாமல் இருந்துவிட்டேன்...
நான் எது பற்றிப் பேசுகிறேன் எனத் தெரியுதோ உங்களுக்கு?:), உங்களுக்கெங்கே அதிராவின் பாஷையும்...+ ஜொந்தக் கதை யோகக் கதை எல்லாம் புரியப்போகிறது கர்ர்ர்ர்ர்ர்:)).. அதனால நானே புலம்புகிறேன், நீங்கள் கேளுங்கோ:)..

பாகுபலி படம் வந்ததுதானே, நான் ட்ரெயிலர் பார்த்தேன், ஏதோ அரச உடைகளும், வாள், கத்தி வெட்டுச் சண்டையும் போல இருந்துதா.. அய்யய்யே.. இதெல்லாம் நான் பார்க்கவே மாட்டேன் எனச் சொல்லி விட்டேன்.. பகுதி இரண்டும் வந்தது, ம்ஹூம்ம் என் முடிவிலிருந்து யான் தளம்பவே இல்லை:)), நிறைகுடம் தளம்பாதெல்லோ?:)).. சரி அது, வந்து.. போய் எல்லாம் முடிஞ்சு போச்சு:)).

2 மாதங்களுக்கு முன், அக்காவின் மகன் ஃபோனில் பேசும்போது...
 “சித்தி பாகுபலி2 பார்த்து விட்டீங்களோ?”..
நான்:  “இல்லை அப்பன் பார்க்கவில்லை, எனக்கு அது ஏதோ அரச கதைபோல இருந்தது, அதனால பார்க்க விரும்பவில்லை”..
 “இல்லைச் சித்தி, நல்ல படமாம் என் ஃபிரெண்ட் பார்க்கச் சொன்னார், அதனால டிவிடி எடுத்து வந்திருக்கிறேன், பார்க்கப் போகிறேன்”..

அதையும் நான் பெரிசு படுத்தவில்லை, எங்கள் குடும்பங்களில் ஆருமே பெரிய படப் பைத்தியமோ அல்லது, படம் பார்ப்போரோ இல்லை, ஏதும் பொழுது போகாமல் இருக்கும்போது நினைச்சு ஒரு படம் பார்ப்பதுண்டு..

நிலைமை இப்படி இருக்கையில், இப்போ நெட்பிளிக்ஸ் இல், முன்னாலே முன்னாலே கூட்டி வந்து காட்டியது.. பாகுபலி.. பாகுபலி என,  சரி அதில என்னதான் இருக்கிறதெனப் பார்ப்போமே என ரிவியில் போட்டேனா.... ஆவ்வ்வ்வ்வ் என் கண்களை அதிலிருந்து எடுக்கவே முடியவில்லை.. என்ன ஒரு படம்... எப்படி இவ்ளோ காலமும் அதனை நான் மிஸ் பண்ணினேன்...

என்ன ஒரு பிரமாண்டம், என்ன ஒரு கலர், முக்கியமாக அந்த உடைகள், ஒவ்வொரு நகைகளையும் அப்படியே அணுவணுவாக ரசித்தேன்.... தேவசேனா[அனுஸ்கா] என்னா அழகு, பாகுபலி என்ன ஒரு தோற்றம் + அழகு, அப்படி ஒரு நடிகரை இதுவரை பார்க்கவில்லை எனத்தான் சொல்லுவேன்,  அவரோடு ஒப்பிடும்போது யாருமே எடுப்பான நடிகர்கள் என் கண்ணுக்குள் வரவில்லை..

நான் இதுவரையில், கண் வெட்டாமல் அப்படியே சொக்கிப்போய் மலைத்துப் போய், பிரமித்துப் போய்ப் பார்த்த படங்கள் சிலதான் உண்டு, அதில் ஒன்று Gravity .. இது தியேட்டரில் பார்த்தோம், இங்கு ரிவியூ எழுதியிருக்கிறேன்..

அடுத்து இப்போ சில வருடங்கள் முன்புதான் ரிவியில் பார்த்தேன், கலைஞரின் “பூம்புகார்”... இப்போ இந்த  “பாகுபலி 2”, இன்னும் சில இருக்கு .

இதில், தேவசேனாவை கைதியாக்கி, தன் தாயிடம் கூட்டிப்போவாரே பாகுபலி.. அப்போது தேவசேனா ஒரு நீல நிற சாறி உடுத்திருப்பா, அவரும் அதே நீல நிறத்தில் உடை அணிஞ்சிருப்பார், அப்படியே பாகுபலியின் தோள்களில் ஏறி, அந்த அன்ன படகில் இருப்பா... அந்தக் கலர் புடவை, நகைகள், அந்த படகுக் காட்சி, அது நகரும் நந்தவனம்போன்ற ஏரி.. ஆஹா.. அப்படியே அப்படகு மிதந்து போய், பறந்து மேகத்தின் மேலே போகும், அப்போ முகில்கள் எல்லாம் குதிரைபோல ஓடும்.. அந்த இடத்தில் நான் செத்தே போனேன் போங்கோ... ஹா ஹா ஹா..

அப்பாட்டில் இடையில் ஒரு கட்டம் அப்படியே ரைட்டானிக்:)..

இன்னொரு கட்டம், உற்றுக் கவனிச்சிருந்தால் மட்டுமே புரியும், பாகுபலி படகை ஓட்டுவார்.. அப்போ அவரின் திறமையைச் சோதிக்க, தேவசேனா தன் கையில் ஒரு வெளிச்சத்தை உருவாக்கி அதை அந்த அமைதியான ஆற்றினில் எறிவா, அது உடனே பெரிய கடல் அலைபோல பொங்கி அலை அடிக்கும், பாகுபலி என்ன பண்ணப்போகிறார் என யோசிக்கையில், ஆவ்வ்வ்வ் ஒரு முறுக்கு முறுக்குவார்ர்.. படகு பறந்து மேகத்தின் மேலே போகும்... ஸ்ஸ்ஸ்ஸ் சொல்லி வேலையில்லை... என் நாடி நரம்பெல்லாம் துடிக்க மறந்திருந்தது:)).. இதுதான் அப்பாட்டு... இதனை எத்தனை 100 தடவைகளும் பார்க்கலாம்:)).. அனுக்கா ரசிகர் மன்றத் தலைவர்கூடப் பார்த்திருக்க மாட்டார் இப்படி:))


படத்தில், கதை என்பதை விட, அந்தப் பிரமாண்டமான காட்சிகள், உடைகள் நகைகள், மற்றும் அழகிய சுற்றுச் சூழல்... ஆவ்வ்வ் அந்த மகிழ்மதி ஏரியா.. சொல்லி வேலையில்லை, சொக்கிப் போனேன் நான்..

பல்லாவின் முடி சூட்டு விழா, எனக்கு கம்பராமாயணத்தை நினைவூட்டியது, ஆனா அதில் பாகுபலியைப் பார்க்கக் கவலையாக இருந்தது என்னமோ உண்மைதான்....

பாகுபலி-தேவசேனா, அரண்மனையை விட்டுப் போகும் வரை, காட்சிகள் அழகோ அழகு, அவர்களை மீண்டும் அரண்மனைக்குள் கூப்பிட்டு விடவேண்டும் ராஜமாதா என எண்ணினேன்.. ம்ஹூம் அது நடக்கவில்லை..

பாகுபலி இறந்திடக்கூடாது என வள்ளிக்கு நேர்த்தி எல்லாம் வச்சேன்ன்.. ம்ஹூம் அதுவும் நடக்கவில்லை... ஆனா ஒன்று, துன்பக் கட்டத்தைப் பெரிசாக்கி நம்மை அழ வைக்காமல், அப்படியே ஸ்பீட்டாக நகர்த்தி, மீண்டும் பாகுபலியை உள்ளே இறக்கி, நம்மை துன்பத்திலிருந்து காப்பாற்றிய கதை.. பல படங்களில், இறந்த கட்டமே அரை மணி நேரமாக ஓடி நம்மை படம் பார்ப்பதையே வெறுக்க வைக்கும்.. ஆனா இதில் அப்படி இல்லை, பாரட்டப்பட வேண்டியது.

சண்டைக் காட்சிகள் பாண்டவர்களின் யுத்தத்தைக் கண் முன்னே கொண்டு வந்தது... வழமையாக, சண்டை மற்றும் பாடல் காட்சிகள் எல்லாம் ஃபோவேர்ட் பண்ணுவோம், ஆனா இதில் ஒரு அணுவைக்கூடப் ஃபோவேர்ட் பண்ண விடவில்லை நான்.. அவ்ளோ தூரம் விரும்பி ரசிச்சேன்...

நம்ப மாட்டீங்கள், 3 நாட்களுக்குள் இரு தடவைகள் பார்த்து விட்டேன், விட்டால் இன்னும் திரும்பப் பார்க்க நான் ரெடீஈஈஈஈஈ:)).. அப்படிப் பிடிச்சுப் போயிட்டுது எனக்கு...

எங்கள் ரிவி ஸ்கிறீன் கொஞ்சம் பெரிசுதான், இருப்பினும் நான் இதை பென்னாம் பெரிய தியேட்டரில் பார்க்கோணும்!!!, கொரோனா முடிஞ்சதும், தியேட்டரில் மீண்டும் போடச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்[ஐ படம்கூட இப்படி என்னைக் கவரவில்லை].

பாகுபலிக்கு இன்னும் திருமணமாகவில்லை எனில், அனுக்காவை அவரோடு நிஜ வாழ்வில் சேர்த்து வைக்கப் போகிறேன்:), என்ன ஒரு ஜோடிப் பொருத்தம்... ஆனாலும் அனுஸ்காவுக்கு முகம் கொஞ்சம் குண்டாக இருந்தால்தான் இன்னும் அழகு, இதில், மெலிஞ்சு போயிருக்கு முகம்.

சரி சரி “உணர்வுகளும் உணர்ச்சிகளும், நமக்கு அடங்க வேண்டுமே தவிர, நாம் அதுக்கு அடிமையாகிடக்கூடாது”.. கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார், அதனால என்னை அடக்கி, இத்தோடு என் விமர்சனத்தை நிறைவு செய்கிறேன்:)))..
🙏🙏🙏😻🙏🙏🙏

 இங்கு என்னா வெயில்.. முன்பக்கம் புல்லு வெட்டியாச்சு, மரத்தைப் பாருங்கோ பிங்காக எட்டிப்பார்க்குது மே ஃபிளவேர்ஸ்:)..

அடுத்தாத்து பிங்கி மலரைப் பார்த்தேளா... 
அவ கொத்தாகப் பூத்துக் குலுங்குவதை ரசிச்சேளா?:)).. 
இது பின் கார்டின், இங்கே வலது பக்கமாக பிங்கிக்கு நேரே இருப்பவதான் பாரிஜாதம் அக்கா[அம்முலு கேட்டவ போன தடவை 
இவ எங்கிருக்கிறா வீட்டில என]

ஆவ்வ்வ் இதில் வெள்ளைப்பூக்களோடு பூப்பெய்தி நிற்பவ தான் எங்கட 12 வருட மகாராணி.. பெயார் மரம்:))[pears].. இம்முறை எத்தனை பழம் தரப்போறாவோ தெரியல்லியே:))

ஊசி இணைப்பு

ஊசிக் குறிப்புக்கள்:
 
)))))))))))))))))))))))_()_((((((((((((((((((((((((

180 comments :

  1. பாஹுபலி முதல் பாகம் பார்க்கவில்லையா? அதைப் பார்த்துவிட்டு இரண்டாம் பாகம் பார்த்தால்நானே சுவாரஸ்யம்? முதல் பாகத்தில் தமன்னா, இரண்டாம் பாகத்தில் அனுஷ் ஆட்சி!

    ReplyDelete
    Replies
    1. //அனுஷ் ஆட்சி!// - அனுஷ் ஆச்சி என்று சொல்வதற்குப் பதிலாக 'ஆட்சி' என்று ஸ்ரீராம் சொல்லிவிட்டாரோ?

      ஸ்ரீராம் - உண்மையில் அந்தப் பாடல் காட்சியெல்லாம் (ஒரே ஒரு ஊரில், கண்ணன் பாடல்) அனுஷ்காவை கிராபிக்ஸில் காட்டினார்களாம் (கொஞ்சம் ஒல்லியாக்கி. ராஜமெளலி ரொம்பவும் கடிந்துகொண்டாராம் இஞ்சியில் நடித்து குண்டானதற்கு)

      Delete
    2. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. கோட் இஸ் கிரேட் பாருங்கோ:).. அனுக்கா ரசிகரையே முதலாவதாகக் களம் இறக்கி, அனுக்காவை வேறு ஆருக்கும் விட்டுக் கொடுத்திடாமல் அபேஸ் பண்ணிட்டீங்களே:) ஹா ஹா ஹா...

      புறுணம் என்னவென்றால் ஸ்ரீராம் , முதல் பாகம் இப்போதான் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன், 2ம் பாகம் பார்த்தபின் அதனைப் பார்க்கும்போது, இதிலிருக்கும் ஈர்ப்பு அதில் வரவில்லையோ என்னமோ..

      காதைக் கொண்டு வாங்கோ ஒரு ரகஜியம்:) ஜொள்றேன்.. பாகுபலிக்கு அனுக்காதான் பொருத்தம்:)) தமன்னாக்கா பெரிதாக ஜோடி பொருந்தவில்லை, தங்கை எனச் சொன்னால் பொருந்தும் ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் காதைக் கழுவிடுங்கோ:))

      Delete
    3. நெல்லைத் தமிழன்Monday, April 27, 2020 8:16:00 am
      //அனுஷ் ஆச்சி என்று சொல்வதற்குப் பதிலாக 'ஆட்சி' என்று ஸ்ரீராம் சொல்லிவிட்டாரோ?//

      ஹா ஹா ஹா உலை இப்பூடிப் பொயிங்கிப் பொயிங்கிக் கொதிக்கிறதே:))..

      நெல்லைத்தமிழன், இப்படத்தில் அனுக்காவுக்கு அழகைக்கொடுத்திருப்பதே, பாகுபலியை ஜோடியாக்கியமையாலதான்:)).. அதனாலதான் மிளிர்கிறா:)).. ஆனாலும் இப்படத்தில் மட்டும் அனுக்காவைக் குறை ஜொள்ள மாட்டேன்:).. அதுக்காக இனிமேல் குறையே ஜொள்ளமாட்டேன் என ஆராவது நினைச்சால் அது டப்பூஊஊ:))..

      //உண்மையில் அந்தப் பாடல் காட்சியெல்லாம் (ஒரே ஒரு ஊரில், கண்ணன் பாடல்) அனுஷ்காவை கிராபிக்ஸில் காட்டினார்களாம் (கொஞ்சம் ஒல்லியாக்கி.///

      ஆஆஆஆஆஆ இருக்கலாம், ஒல்லி ஆக்கவில்லை, ஆனால் உடம்பை நல்ல சேப் பண்ணி, வண்டியை உள்ளே தள்ளி.. இப்படிக் காட்டியிருக்கினம், ஆனா அவ கஸ்டப்பட்டு மெலிஞ்சதை முகம், கன்னம் காட்டிக் கொடுக்கிறது..

      உண்மைதான் இஞ்சீடுப்பழகிக்காக உடம்பைக் கூட்டினா, ஆனா அப்படம் பெரிதாக வரவேற்புக் குடுக்கவில்லை என நினைக்கிறேன்.... ஆனாலும் நெல்லைத்தமிழன், அனுக்காவில கண் மூக்கு வாய் எனப் பார்க்கையில் அத்தனை அங்கமும் அழகு,,, ஆனா டமனாக்காவில அப்பூடி........ இருக்குமோ தெரியாது எனச் சொல்ல வந்தேன்ன் ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

      Delete
    4. அதாரு இங்க அனுஷை ஆச்சி என்று விளித்தது!!!!!!?? நெல்லை சுப்!! மேலே மேலே மேலே கொஞ்சம் பாருங்கோ...அங்க என்ன பாட்டு ஓடுதுன்னு!! அனுஷ் படம் போட்டு அதிரா அங்கே இந்தப் பாட்டு போட்டதன் அர்த்தம்!!! ஹையோ மீ ரன்னிங்க்..என்னை ஆரும் பிடிக்க முடியாதாக்கும்.....நான் இல்லைபப இந்த நாரத வெள்ளாட்டுக்கு...

      கீதா

      Delete
    5. @நெல்லைத்தமிழன் 
      //அனுஷ்காவை கிராபிக்ஸில் காட்டினார்களாம் (கொஞ்சம் ஒல்லியாக்கி
      //
      ஹாஹா :) எவ்ளோ சந்தோசம் எப்புடியாச்சும் சொல்லியே தீரணும்னு சொன்னபோல் இருக்கு :) 

      நான் கணவர் இன்னொரு நட்பு உரையாடும்போது நான் ஒரு வயதில்  (70 ) பெரியவர் நிறைய சேரிட்டி வர்க் செய்றாவரை பற்றி பேசிட்டருக்கும்போது நான் அவரை உயர்த்தி  பெருமையா பேசிட்டிருந்தேன் அப்போ நட்புக்கு ஒரு விஷயம் எப்படியாவது சொல்லியே ஆகணும்னு :)//உனக்கு தெரியுமா ..கேள்விபட்டாயா அப்பெண்மணிக்கும் அந்த  மற்ற ஆணுக்கும் (75) எதோ ஒரு இது :)
      //she was smitten by him ./// என்று எப்படியாவது தானறிஞ்ச உண்மையை எங்களுக்கு சொல்லிடணும்னு தவியா தவிச்சுய் முடிச்சார் சொல்லி :) நானும் பேச்சை டைவர்ட் பண்ண முயன்றும் அவர் சொல்லினர் :)) இன்னும்கணவர் சொல்லி சிரிப்பார் நான் அவாய்ட் செய்ய முயன்றதை இது நினைவுக்கு வருது :))

      Delete
    6. முதல் பாகம் பார்த்து முடித்து இரண்டாம் பாகத்துக்குக் காத்துக் கொண்டிருந்தபோது கட்டப்பா ஏன் பாஹுபலியைக் கொன்றார் என்று பெரிய விவாதமே நடந்த்து. மீம்ஸ்கள் பெருகின!.

      Delete
    7. நிஜ்மாவே சும்மா ஸ்ரீராமை வம்புக்கு இழுக்க எழுதினா, என்னவோ நான் அனுஷ்கா எதிரி மாதிரி நினைச்சுட்டீங்களே...... நமக்கு தமன்னா, அனுஷ்கா, போன்ற எல்லோரும் பிடித்தவர்கள்தாம்.

      ரன் படத்துலயா நான் நினைக்கிற பாட்டு வரும்? கண்டுபிடிக்க முடிந்தால் எழுதுங்கள். ஹா ஹா.

      Delete
    8. //பாகுபலிக்கு அனுக்காதான் பொருத்தம்:))// - உண்மைதான். நான் தமன்னாவை வேறாகவும் பிரபாஸை வேறாகவும் பார்த்தேன். ராஜ கம்பீரத்தை ரம்யா கிருஷ்ணனும், அனுஷ்காவும் ரொம்ப நல்லா பிரதிபலிச்சிருப்பாங்க. தமன்னாவின் ரோல் கவர்ச்சிக்குத்தான், அவந்திகா அந்த கோபத்தையும், போர் புரியும் லாவகத்தையும் கண்ணில் கொண்டுவந்தாலும்.

      முதல் பாகத்தை சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் பார்த்தேன். அப்போ தமன்னா ரோல் ரொம்பவும் கவரலை. ஆனால் ர.கி, அ, சத்யராஜ், நாசர் - இவங்கள்லாம் ரொம்ப நல்லாவே நடிச்சிருந்தாங்க.

      Delete
    9. கர்ர்ர் இப்போ எப்பவோ சைட் அடிச்ச மேடி யை மீண்டும் பார்க்க வைக்கிறார் :)பொய் சொல்லக்கூடாது பாட்டா :) இல்லைன்னா தேரடி வீதியில் பாட்டா ?
      ///நமக்கு தமன்னா, அனுஷ்கா, போன்ற எல்லோரும் பிடித்தவர்கள்தாம்.//

      ஆஆ !!! நமக்கா !!! அதுக்குள்ளே கூட்டா 

      Delete
    10. @ ஸ்ரீராம், கீதா, நெல்லைத்தமிழன், அஞ்சு
      இதில் நீங்கள் சொல்லாமல் விட்டதை நான் கீழே தொடர்கிறேன்:))

      Delete
  2. அனுஷ் பாடும் அந்த தாலாட்டுப் பாடல் மிக இனிமையாக இருக்கும். நான் இதன் இரண்டாம் பாகத்தை மட்டும் தியேட்டரில்தான் பார்த்தேன். பல வருடங்களுக்குப் பிறகு என்னைத் தியேட்டருக்கு இழுத்த படம்.

    ReplyDelete
    Replies
    1. இதில் பாடல்கள் எல்லாமே அழகுதான் ஸ்ரீராம், செண்டிமீட்டரில தான் கூடிக் குறையலாமே தவிர மற்றும்படி அத்தனை பாட்டுக்களும் சூப்பர்.

      //நான் இதன் இரண்டாம் பாகத்தை மட்டும் தியேட்டரில்தான் பார்த்தேன். //
      நீங்கள் நால்வரும் கால்நடையாகச் சென்று பார்த்துப்போட்டு வந்து, சொன்னனீங்கள், பாகம் ஒன்றை விட 2 நன்றாக இருக்கிறது என.. அப்போ அனுக்காவுக்காகத்தான் போனனீங்கள் என நினைச்சேன்:)) ஆனா இப்போ புரியுது, இப் படத்துக்காக நடந்தும் போகலாம் என ஹா ஹா ஹா.. இதைப் போஸ்ட்டில் எழுத நினைச்சு விட்டேன், பெரிசாகிறது போஸ்ட் என்பதனால.

      Delete
    2. இந்தப் படத்தின் சில முத்திரைக் காட்சிகளை மறக்கவே முடியாது! மாஸ்! அதேபோ லொகேஷன்.. மிக அருமையாயிருக்கும்.

      Delete
    3. உண்மைதான் ஸ்ரீராம், என்னால ஆறவே முடியாமலிருக்குது, அத்தோடு அவ்ளோ கிளியராக இருக்குது படம், நேரில் பார்ப்பதைப்போல இருக்குது கொஞ்சம் கூடக் கலங்கல் இல்லாமல்.. எனகு மகாபாரதம் கம்பராமாயணம் எல்லாம் கண்ணில வந்து வந்து போச்சுது..அங்கின அங்கின ஹா ஹா ஹா.. அந்த யானைப்படைகள், மாட்டுப் படைகள்... என்னா பிரமாண்டம், நல்லாவே கையாண்டிருக்கினம் கிரஃபிக்ஸ் வேர்க்ஸ்..

      Delete
    4. ஸ்ரீராம்.. இந்தப் படத்தை வெளிநாட்டில் 3 முறையும் (முதல் பாகம்), அப்போ சென்னை வந்திருந்தபோது, பையன் கண்டிப்பா இந்தப் படம் பார்க்கணும்னு (அப்போ 10வது எக்ஸாமுக்கு முன்னால சீரியஸா ஏதோ டியூஷன் போயிட்டிருந்தான்) அவனைக் கூட்டிக்கிட்டு உதயம் தியேட்டரில் இரவு 9 மணி காட்சி பார்த்தோம் (எனக்கு 4வது முறை). ஆனால் வெளிநாட்டு எக்ஸ்பீரியன்ஸ் மாதிரி உதயம் தியேட்டர் இல்லை.

      அங்கல்லாம், ஒரு படம் போகணும்னு நினைத்தால், டக்குனு போய், 250 ரூ அல்லது 500 ரூபாய் EQUIVALENTல (அதிகமான டிக்கட் விலை அவ்ளோதான்) டிக்கெட் வாங்கிக்கொள்வோம். கசகசன்னு கூட்டம் இருக்காது.நிம்மதியா படம் பார்ப்போம். நம்ம ஊர்ல அந்த மாதிரி அனுபவம் கிடைக்காது.

      Delete
    5. ஆவ்வ்வ்வ்வ் முதல்ப்பாகத்தையே 4 முறை பார்த்திட்டீங்களோ நெல்லைத்தமிழன் ஹா ஹா ஹா... இப்போதான் பல உண்மைகள் வெளிவருது:))..

      உண்மையில் பாகம் ஒன்றும் சூப்பர்தான், ஆனால் பாகம் இரண்டு அதை மறைத்துவிட்டது.. சொல்வார்களே.. “முன்னால் வந்த செவியைப் பின்னால் வந்த கொம்பு மறைத்த கதை” ஆகி விட்டது ஹா ஹா ஹா..

      Delete
  3. தோட்ட மலர்கள் அழகு. குண்டாகி, வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் ஜோக் ரசித்தேன்.

    ReplyDelete
  4. நன்றாக அலசியுள்ளீர்கள்
    பாராட்டுகள்

    நானோ படங்கள் பார்ப்பது குறைவு
    சித்தி - 2 பார்க்கலாம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ யாழ் அண்ணன் வாங்கோ..

      //சித்தி - 2 பார்க்கலாம்//
      ஹையோ ஆண்டவா.. நான் சீரியல்கள் பார்ப்பதை விரும்புவதில்லை, ஆனாலும் கிராமப்புறம் தழுவியதுபோன்றவை எனில் பார்க்கப் பிடிக்கும்.. அதனால சித்தி 2 வருகிறது என அறிஞ்சும் பார்க்க வில்லை, ஆனா எனக்கொரு குறுஞ்செய்தி வந்துது.. சித்தி ஒன்று நன்றாகப் போனது, சித்தி 2 பாருங்கோ என.

      அதுக்காக பார்க்கலாமே என எக்ஸ்பொக்ஸ் ஊடாக திறந்தால்ல்.. சித்தீஈஈஈஈஈஈ என்றதும்... கொயிங்ங்ங் என ராதிகா அன்ரி எழும்பி வந்தாவா.. அந்த வேகத்திலேயே ஓடிப்போய் ஓஃப் பண்ணிட்டேன்ன் ஹா ஹா ஹா ஏனோ பிடிக்கவில்லைப் பார்க்க, ஓவராக நல்லபிள்ளையாக காட்டுகிறார்கள்.. அதுக்காக சரியில்லை என அர்த்தமில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும்.

      மிக்க நன்றிகள்.

      Delete
  5. இன்னும் கருத்துகள் வெளியிட ஆரம்பிக்கலையா? இல்லைனா இதுக்குள்ளே 60 தாண்டி இருக்கணுமே! எங்கே உங்க செக்? வேலை மும்முரமா? பாகுபலி நானும் பார்த்தேன். ஆனால் அப்படி ஒண்ணும் கவரவில்லை. நீங்க இப்படி விமரிசனம் எழுதி இருப்பதைப் பார்த்தால் மறுபடி பார்க்கணும்னு தோணுது. பாகுபலி 2 பார்க்கவில்லை. அது பார்த்துட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. /பாகுபலி நானும் பார்த்தேன். ஆனால் அப்படி ஒண்ணும் கவரவில்லை. // - இந்தப் படம் பிடிக்காத (அதாவது கவரப்படாத) ஒரு ஆள் உலகத்தில் இருக்க முடியுமா? என்ன ஆச்சர்யம். ஒரு வேளை, பாகுபலி படத்துக்குப் பதிலா வேற தியேட்டருக்குப் போயிருப்பாங்களோ?

      Delete
    2. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      //இன்னும் கருத்துகள் வெளியிட ஆரம்பிக்கலையா?//
      ஜாமத்தில தட்டி எழுப்பிக் கேய்க்கும் கேய்விகளோ இது?:))..

      //இல்லைனா இதுக்குள்ளே 60 தாண்டி இருக்கணுமே! எங்கே உங்க செக்? வேலை மும்முரமா?///
      ஹா ஹா ஹா இல்லை போஸ்ட் போட்டதே லேட்டூஊ.... அவ இப்போதான் ஓடிப்போய்ப் பாகுபலி பார்க்கிறா போல:)) இனித்தான் வருவா:)..

      //பாகுபலி 2 பார்க்கவில்லை. அது பார்த்துட்டீங்களா?//
      ஹையோ வைரவா, ரிவியூ எழுதினதே 2 க்குத்தானே:).. பாருங்கோ கீசாக்கா.

      Delete
    3. ///ஒரு வேளை, பாகுபலி படத்துக்குப் பதிலா வேற தியேட்டருக்குப் போயிருப்பாங்களோ?//

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், அப்பூடித்தான் போலும் கீசாக்கா ஹிந்தித் தியேட்டருக்குப் போயிருப்பா:))

      Delete
    4. நான் திரை அரங்கில் எல்லாம் திரைப்படம் பார்த்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். எந்தத் திரை அரங்கிற்கும் சென்னையில் போனதே இல்லை. இங்கே திரை அரங்கு எங்கே இருக்குனே தெரியாது. ஆனால் எல்லோரும் ஆஹோ, ஓஹோனு சொல்றாப்போல் பாகுபலி 1 இல்லை. இரண்டாம் பாகம் பார்க்கலை.

      Delete
    5. //ஆனால் எல்லோரும் ஆஹோ, ஓஹோனு சொல்றாப்போல் பாகுபலி 1 இல்லை. இரண்டாம் பாகம் பார்க்கலை.//
      ஹா ஹா ஹா விடாதீங்கோ கீசாக்கா... அப்பூடித்தான் ஜொள்ளோணும் ஏனெனில் ஒன்றில நடிச்சது டமனாக்கா:)) ஹையோ இதை நான் ஜொள்ளல்லே மேலே ஸ்ரீராம்தான் ஜொள்ளியிருக்கிறார்:)

      Delete
    6. முதல் பாகத்தில் அனுஷைக் காக்க ப்ரபாஸ் தோன்றி ஓடி வரும் காட்சி...

      Delete
  6. ஊட்டியிலே அரவங்காடு ராணுவக் குடியிருப்பில் இருக்கிறச்சே அங்கே இப்படி எல்லா மரங்களும் உண்டு. பியர் பழங்களும் கிடைத்தன. வீட்டு முற்றத்தில் பெரிய அளவில் காய்கறித்தோட்டம். தினம் தினம் புதினா, தக்காளி, காரட் எனக் கிடைக்கும். அநேகமாக நாங்க இருந்ததெல்லாம் தோட்டங்களுடன் கூடிய பெரிய பங்களாக்கள் தாம். இப்போத் தான் ஏழு, எட்டு வருடங்களாக குடியிருப்பு வாசம். :(

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கீசாக்கா வளவோடு இருக்கும் வீட்டில் இருக்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் பொழுதுபோக்கும் அதிகம்.. வயதானாலும் கொஞ்சம் சின்னக் கார்டின் இருக்கும் வீடாயின் நல்லது, குட்டியாக ஏதும் தோட்டம் செய்வது மனதுக்கு மகிழ்வைத் தரும்.. மிக்க நன்றிகள் கீசாக்கா.

      Delete
  7. எனக்குத்தான் பாஹுபலி பைத்தியம் பிடித்திருக்கு என்று நினைத்தேன். உங்களுக்குமா.
    ஆஹா. நான் இதுவரை நாலஞ்சு தடவை பார்த்து விட்டேன்,.
    ஏதோ மனச் சோர்வென்றால் பாஹுபலி
    பாட்டு எதைக் கேட்டாலும் பறந்து போகும்.

    ஒரு துளி சிந்தாமல் சிதறாமல், தேன் அருந்துவது போல் தினந்தோறும்
    அனுபவிக்கிறேன்.
    இங்கே வந்து பார்த்தால் நீங்கள் என் எண்ணங்களை எழுதி விட்டீர்கள்.
    சில நேரங்களில் கண்ணீர் கூட வந்துவிடும்.
    அப்பா பாஹுவை ரொம்பப் பிடிக்கிறது.
    என்ன ஒரு மாக்னடிஸ்ம் மா. பாவம் தேவசேனா.
    வாழ்க்கையை அன்புவைக்கவே இல்லையே.
    அவர்கள் படகு உள்ளே நுழையும் போதே கொடி உடையும் பார்த்தீர்களா.

    என்னால் இந்தப் பிரமிப்பில் இருந்து மீளவே முடியவே இல்லை.
    ராணாவையும் பிடிக்கும்.
    அவர் கொஞ்சம் எங்க பேரனின் முக ஜாடை கொண்டிருப்பதால்.
    பாஹுபலி குத்தப்படும் வேளையைத் தெரியாமல் பார்த்துவிட்டேன்.
    இனிப் பார்க்க மாட்டேன்.
    பாஹுபலி சம்பந்தப் பட்ட அத்தனை வீடியோக்களையும் இன்னும் பார்க்கிறேன்.
    இந்த அனுஷும், ப்ரபாசும் திருமணம் செய்து கொள்ளக் கூடாதோ. அத்தனை அழகான ஜோடி.
    அவர்கள் மன்ம் எப்படியோ. நன்றி அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வல்லிம்மா வாங்கோ... ஆஹா நீங்களும் பாகுபலிக்கு அடிமையோ ஹா ஹா ஹா.. படம் பற்றி நிறையவே சொல்லலாம், அந்த காட்டுப்பன்றி வேட்டை எல்லாம் என்ன ஒரு அழகான காட்சி.. அதை பெரிய ஸ்கிரீனில் போய்ப் பார்க்க வேண்டும்.

      //பாவம் தேவசேனா.
      வாழ்க்கையை அன்புவைக்கவே இல்லையே.//
      உண்மைதான் அனுபவிக்கவே இல்லை, அதனாலதான் நானும் படம் பார்க்கும்போது நேர்ந்து கொண்டே இருந்தேன், பாகுபலிக்கு ஏதும் ஆகிடக்கூடாதென ஆனா அது நடக்கலியே:(..

      நான் நினைச்சேன் இதுவும் ஒரு சரித்திரக் கதையாக்கும் என, ஆனா அப்படி இல்லையாமே இயற்றிய கதையாமே.. அப்போ எதுக்கு பாகுபலியை கொன்றார்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்... வாழ விட்டிருக்கலாம் ..

      Delete
    2. //அவர்கள் படகு உள்ளே நுழையும் போதே கொடி உடையும் பார்த்தீர்களா.//

      ஆஆ அதையும் கவனிச்சேன் வல்லிம்மா, அனைத்தையும் சொன்னால் போஸ்ட் பெருத்துவிடும், படிப்பவருக்கு கஸ்டம் என்பதால விட்டு விட்டேன், அது மணப்பெண்ணைக் கூட்டி வரும்போது நிகழ்ந்தமையால, அபசகுனம் என்பதுபோல காட்ட நினைக்கிறார் போலும் இயக்குனர்:)..

      //என்னால் இந்தப் பிரமிப்பில் இருந்து மீளவே முடியவே இல்லை.
      ராணாவையும் பிடிக்கும்.//

      ஹா ஹா ஹா எனக்கும்தான், இந்தப் போஸ்ட் போடவில்லை எனில் வீட்டில் உள்ளோரின் நிலைமைதான் கவலைக்கிடமாகியிருக்கும் என் புலம்பலால் ஹா ஹா ஹா..

      //பாஹுபலி குத்தப்படும் வேளையைத் தெரியாமல் பார்த்துவிட்டேன்.
      இனிப் பார்க்க மாட்டேன்.//
      அது ஒரு கஸ்டமான கட்டம்தான், அதுவும் தான் நேசித்த மாமனாரே அப்படிச் செய்தது கொடுமை.. ஆனாலும் பாகுபலி மகனாக வரவேணும் என்பதற்காகத்தான் கதையை அப்படி நகர்த்தியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

      //அவர்கள் மன்ம் எப்படியோ//
      உண்மைதான் வல்லிம்மா... நாம் ஆசைப்பட்டு இணைக்கும் எந்தச் சோடியும் ஒன்று சேர்வதில்லை சினிமாவில் ஹா ஹா ஹா .. மிக்க நன்றிகள் வல்லிம்மா.

      Delete
  8. வணக்கம் அதிரா சகோதரி

    பாகுபலி விமர்சனம் அருமை. நானும் உங்களைப் போலத்தான். ஆகா.. ஓகோ என வீட்டிலிருந்தவர்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விட்டு வந்த போதும் அப்படியா என்று கண்டுக்காமல் இருந்து விட்டேன். பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்று கூடச் சொல்லவில்லை. அதன் பின் போன வருடம் என் மகன் சின்னவர் வாங்கிய புது டி. வியில் இந்தப்படத்தின் முதலாம் கதையை போட்டு காண்பித்தார். பார்க்கப் பார்க்க இனம் புரியாத ஒரு ஈர்ப்பு. அந்நேரம் நம் கவலைகளை மறந்து வேறு ஒரு உலகத்தில் சஞ்சாரிப்பதை போன்ற உணர்வு. இதன் 2ஆவது பகுதியையும் உடனே போடச் சொல்லி முழுவதையும் ஒரே நாளில் முடித்தேன். படத்தின் பிரம்மாண்டம் கண்களையும், மனதையும் கவர்ந்தது. ஒப்பனைகளும், நடிப்பும் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. 3ஆவது கதையும் வரப் போவதாகச் சொன்னார்கள். காத்திருக்கிறேன்.

    கண்ணதாசனின் கருத்து உண்மைதான். அது அவ்வளவு சுலபமான வாழ்வியல் கல்வியில்லை என்றாலும், உணர்வுகளை நாம் அடக்கியாள கற்க வேண்டும். மீண்டும் ஒரு சுற்று பிறகு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //பார்க்கப் பார்க்க இனம் புரியாத ஒரு ஈர்ப்பு. அந்நேரம் நம் கவலைகளை மறந்து வேறு ஒரு உலகத்தில் சஞ்சாரிப்பதை போன்ற உணர்வு. இதன் 2ஆவது பகுதியையும் உடனே போடச் சொல்லி முழுவதையும் ஒரே நாளில் முடித்தேன். //

      ஹா ஹா ஹா ஆனாலும் நீங்கள் ஒழுங்காகப் பார்த்திருக்கிறீங்கள் ஓடரில், ஆனால் நானோ 2 வதை முதலில் பார்த்துவிட்டமையால, முதலாவது ஸ்லோவாகப் போகிறதைப்போல பார்க்கிறேன் ஹா ஹா ஹா.. இதனாலதான் அக்காவைப் பெண் பார்க்க வரும்போது, தங்கையை ஒளிச்சு வைப்பார்களோ ஹா ஹா ஹா...

      //3ஆவது கதையும் வரப் போவதாகச் சொன்னார்கள். காத்திருக்கிறேன்.
      //
      அப்படியோ.. நான் கேள்விப்படவில்லை..

      வாங்கோ மிக்க நன்றி.

      Delete
  9. விமர்சனம் இவ்வளவு தூரம் பாராட்டி எழுதுவதை பார்த்தால் தயாரிப்பாளர் பெட்டியை ஸ்கோட்டுக்கு அனுப்பி விட்டாரோ'னு ஜந்தேகம் வருது...

    ReplyDelete
    Replies
    1. இருக்கும் ...இருக்கும்...

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //தயாரிப்பாளர் பெட்டியை ஸ்கோட்டுக்கு அனுப்பி விட்டாரோ'னு ஜந்தேகம் வருது...//

      ஹா ஹா ஹா என் விமர்சனத்தைப் பார்த்தபின்னர் எப்படியும் அனுப்பி வைப்பார் என நம்புகிறேன்..:) மிக்க நன்றி..

      Delete
    3. //துரை செல்வராஜூMonday, April 27, 2020 8:09:00 am
      இருக்கும் ...இருக்கும்...//

      கில்லர்ஜியை படுபயங்கரமாக ஆமோதிக்கிறீங்கள் அப்பூடித்தானே துரை அண்ணன்? ஹா ஹா ஹா.. இருக்கும் இருக்கும்...

      Delete
    4. இனிமேல்தான் பெட்டியை அனுப்பி வசூல் பார்க்க வேண்டுமா என்ன?

      Delete
    5. //ஸ்ரீராம்.Monday, April 27, 2020 2:09:00 pm
      இனிமேல்தான் பெட்டியை அனுப்பி வசூல் பார்க்க வேண்டுமா என்ன?//

      ஆஹா இன்று ஸ்ரீராமின் குரல் கொஞ்சம் ஓங்கித்தான் ஒலிக்குதாக்கும்:)) என்னா உசார்:)) ஹா ஹா ஹா..

      Delete
  10. இந்த பதிவிற்கு என்ன கமெண்ட் போடாலமுன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ...

      ஹா ஹா ஹா ட்றுத்தையே திகைக்க வைத்து கொமெண்ட் போட முடியாமல் யோசிக்க வைத்துவிட்டதே படம்:)) ஹா ஹா ஹா அப்பூடியே திகைச்சுப் போய் இருங்கோ, அதுக்குள் என் வடகம் வெளிவந்துவிடும்:)).. நன்றி ட்றுத்.

      Delete
    2. பார்த்திங்களா எதற்கு அசராத ட்ரூத்தையே குழப்பி விட்டிருக்கு உங்க போஸ்ட் :) பாவம் ப்ரண்ட் 

      Delete
    3. //பாவம் ப்ரண்ட்

      ஹா ஹா ஹா அஞ்சு, மோடி அங்கிளுக்கே அசையாத ட்றுத்தை:), என் பாகுபலி போஸ்ட் ஆட்டம் காண வைத்து விட்டதே:))

      Delete
  11. ஆறு மனமே ஆறு பாடலுக்கு காரணம் பதிவை படித்தவுடன் தெரிந்து கொண்டேன்.

    யோகா செய்யும் பூனையார் அழகு.அதை வியப்பாய் பார்க்கும் பூனைகளும் அழகு படத்தேர்வு அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      //ஆறு மனமே ஆறு பாடலுக்கு காரணம் பதிவை படித்தவுடன் தெரிந்து கொண்டேன்/

      ஆவ்வ்வ்வ் கரெக்ட்டாகக் கண்டு பிடிச்சிட்டீங்கள் ஹா ஹா ஹா..

      அது பூஸார் ஆண்டவரைப் பார்த்து மன்னிப்புக் கேட்கிறார்ர்..:))

      Delete
  12. மகன் ஊருக்கு போய் இருந்த போது தீபாவளி விழாவிற்கு சின்ன குழந்தைகள், பெரிய பெண்கள் எல்லோரும் பாகுபலி பாடலுக்கு சூப்பாராக ஆடினார்கள் நான் போஸ்ட் போட்டு இருந்தேன்.

    படம் வந்து பல வருடம் ஆச்சு. விஜய் தொலைக்காட்சியில் இரண்டு பாக படங்களையும் முதன் முறையாக என்று நிறைய தடவை போட்டு விட்டார்கள்.

    நீங்கள் சொல்வது போல் தியேட்டரில் போய் பார்த்தால் காட்சி அமைப்புகள் இன்னும் அழகாய் இருக்கும்.

    மிகவும் ரசித்து ரசித்து காட்சிகளை விவரித்து இருக்கிறீர்கள்.

    மனதை ஆற்றுப்படுத்ததான் அந்த முதல் பாடல் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓ அந்தக் கண்ணன் தாலாட்டுப் பாடலுக்கு ஆடினார்களோ.. அதில் அந்த ஆடை ஆபரணங்கள் சூப்பர்ர்.... பாகுபலியின் முகபாவனை எல்லாமே சூப்பர்ர்... அனுக்காவுக்கு இப்படி சேலை வகைகளே மிக அழகு. ஓ ரிவியில் போட்டு விட்டினமோ.. எங்களிடம் எந்த தமிழ் பொக்ஸ் உம் இல்லை அதனால அப்படி பார்க்கும் சந்தர்ப்பமும் அமையவில்லை.

      இந்தப் பிரமாண்டமான காட்சிகள் தியேட்டரில் பார்க்கும்போதுதான் சூப்பராக இருக்கும்... அதனை ஆற்றத்தான் அப்பாடல்.. 6 மனமே 6:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. நீங்கள் பகிர்ந்த பாடலுக்குத்தான் ஆடினார்கள்.

      Delete
    3. ஓ.. நானா.. நானா.. பாட்டுக்கோ ஆ... நன்றி கோமதி அக்கா.

      Delete
  13. எதற்கும் அதிராவாதவர் எனவே அதிரா என்று பெயர்கொண்ட அதிராவையே அதிர வைத்தது பாஹுபலி. ( கில்லெர்ஜீ மன்னிப்பாராக). பூஸார் புலி  இல்லை. பூஸார் தான். ஹா ஹா. 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

      //எதற்கும் அதிராவாதவர் எனவே அதிரா என்று பெயர்கொண்ட அதிராவையே அதிர வைத்தது பாஹுபலி.//

      ஹா ஹா ஹா அதிரவில்லை சொக்கிப்போனேன் நான்:)).. வீரத்துக்கு முன்னால் அதிராமல் இருக்கலாம் ஆனா அழகு, பிரமாண்டம்.. இதற்கு முன்னால் எப்படி அதிராமல் இருக்கலாம்:))..

      // கில்லெர்ஜீ மன்னிப்பாராக).//

      ஹா ஹா ஹா நானும் போஸ்ட் எழுதும்போது, கில்லர்ஜி வந்து திட்டிடப்போறாரே எனப் பயந்தேனாக்கும்:))...

      //பூஸார் புலி இல்லை. பூஸார் தான். ஹா ஹா. //

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நன்றி ஜேகே ஐயா.

      Delete
  14. //சரி சரி “உணர்வுகளும் உணர்ச்சிகளும், நமக்கு அடங்க வேண்டுமே தவிர, நாம் அதுக்கு அடிமையாகிடக்கூடாது”.. கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார், அதனால என்னை அடக்கி, இத்தோடு என் விமர்சனத்தை நிறைவு செய்கிறேன்:)))..//

    சரிதான்.


    //அடுத்தாத்து பிங்கி மலரைப் பார்த்தேளா...
    அவ கொத்தாகப் பூத்துக் குலுங்குவதை ரசிச்சேளா?:))..//

    அடுத்தாத்து பாடல் ராகத்தில் பாடி பார்த்துக் கொண்டேன்
    பாரிஜாதம் , 12 வருட மகாராணி எல்லோரும் அழகு. வானம், ஏரி தோட்டம் எல்லாம் அழகு.

    ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு எல்லாம் அருமை.

    ReplyDelete
  15. ஆஹா...ஆஹா..பாகுபலி...

    எனக்கும் ரொம்ப பிடிக்கும்...முதல் பாகம் வந்த பொழுது பாட்டுக்கள் ரொம்ப ஈர்த்தது...

    எங்க அண்ணா வீட்டு குட்டீஸ் எல்லாம் அதே புகழாரம்...


    அப்போ அதை பார்த்து ரொம்ப பிடிச்சு போச்சு...

    அப்பவே இரண்டாம் பாகம்வந்தா தியேட்டர் கூட்டி போகணும் ன்னு சொல்லி இருந்தேன்...

    இரண்டாம் பாகம் வரவும் night show தான் தமிழ் show பரவாயில்ல ன்னு சென்று பார்த்தோம்...

    ஆஹா...ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு...நல்ல படம் பார்க்க வந்தோம் ன்னு..


    அந்த படகு காட்சி, நீல வண்ண புடவை😍😍😍😍😍😍😍😍..


    பார்க்க பார்க்க போதும் ன்னு தோணாத படம்...நல்ல காட்சி அமைப்புகள்😎😎😎😎😍..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ...

      பாகுபலி எனப் பார்த்ததும் உடனேயே ஜம்ப் ஆகிவிட்டீங்கள் இங்கு ஹா ஹா ஹா இதிலிருந்தே தெரியுது, எவ்ளோ தூரம் உங்களுக்கும் படம் பிடிச்சிருக்குது என்பது...

      ஓ நீங்கள் தியேட்டரில் பார்த்தீங்களோ.. குடுத்து வைத்தவர் நீங்கள் ஹா ஹா ஹா..

      நீலப் புடவை, பின்பு பட்டாபிசேகத்தின் போது ஒரு ஒரேஞ் கலர்ப் புடவை எல்ல்லாமே அழகோ அழகு.. மிக்க நன்றிகள் அனு.

      Delete
  16. பெயார் மரம்:))[pears].. இம்முறை எத்தனை பழம் தரப்போறாவோ தெரியல்லியே:)) //. ஆவ்வ்வ்வ் எங்கட மரம் முழுதும் பூக்கள். சத்தியமா நானும் இப்படி கணவரிடம் சொன்னேன். நீங்க பழம் என்றீங்க. நான் சொன்னேன், ""இம்முறை எத்தனை காய் தாறாவோ என... ஹா..ஹா..ஹா. மரம் முழுக்க பூத்தாலும் 1 அல்லது 2 தானே வருது. கர்ர்ர்ர்ர்ர்.

    பாரிஜாதம் இவ்வளவு பெரிய மரமாவா நிக்குது.. 😳 😳 😳 🤔

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      இதென்ன இது இம்முறை நீங்களும் கீழிருந்து மேலயோ ஹா ஹா ஹா..

      //""இம்முறை எத்தனை காய் தாறாவோ என...//

      ஹா ஹா ஹா ஓ அப்பூடியோ.. நாங்கள் ஊரில் மரம், பறவை, மிருகம் அனைத்தையும்.. மரியாதையாக+ செல்லமாக அவ, இவ எனத்தானே அழைப்பது வழக்கம் ஹா ஹா ஹா..

      பாரிஜாதம் அவவுக்கு எப்படியும் ஒரு 20 வயசிருக்கும் அம்முலு.. இன்னும் பெரிசாகி இருப்பா, இடையில வேலி போடுவோர், வேரையும் சில கொப்புக்களையும் வெட்டிப் போட்டினம், அதனால பழுத்து பட்டதுபோல வந்துவிட்டா, பின்னர் படவில்லை, இப்போதான் மீண்டும் வேரோடி பூக்கத் தொடங்கிட்டா, வீடு வாங்கிய புதிதில் நிறையப் பூக்கள்.

      இப்போ இலைகள் இன்னும் நல்ல பச்சையாகவில்லை, தெரிகிறதெல்லோ.. ஒரு மஞ்சள் நிறமாகவே இருக்கு.

      Delete
  17. இத்தனை நாட்கள் பார்க்கவில்லையா...? ஐயகோ...

    எங்கள்ஸ் ஸ்ரீராம் சாருக்கு மேல் ரசித்தால் எப்படி...? இது தகுமா...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..

      //இத்தனை நாட்கள் பார்க்கவில்லையா...? ஐயகோ...//
      அதுதானே.. எப்படிப் பார்க்காமல் விட்டேன்ன் ஹா ஹா ஹா..

      //எங்கள்ஸ் ஸ்ரீராம் சாருக்கு மேல் ரசித்தால் எப்படி...? இது தகுமா...? ஹா... ஹா..//

      ஹா ஹா ஹா அவர்கூட இந்தளவுக்கு ரசிச்சு எழுதவில்லை, படம் பார்த்ததும்:)).. ஒருவேளை சொக்கிப்போயிட்டாரோ... வார்த்தைகள் வரவில்லையோ அந்நேரம் அவருக்குத்தான் தெரியும், ஆனாலும் என் அளவுக்கு ஆரும் புகழ்ந்து தள்ளவில்லை எங்கும், அதனால எனக்கு இதன் அருமை புரியாமல் போச்ச்ச்ச்ச்:))..

      மிக்க நன்றிகள் சகோ டிடி.

      Delete
    2. ரசிக்காமல் யாராலும் இருக்க முடியுமா DD?!!

      Delete
    3. //ஸ்ரீராம்.Monday, April 27, 2020 2:11:00 pm
      ரசிக்காமல் யாராலும் இருக்க முடியுமா DD?!!//

      அதானே ஸ்ரீராம் என்ன அனுக்காவுக்காகவோ ரசிக்கச் சொல்றார்?:)) ஹா ஹா ஹா..

      Delete
  18. ஊசி இணைப்பு அளவு இங்கு இல்லை. எல்லாருக்கும் வேர்க் தொடங்கீட்டுது. மே 4 ஸ்கூலும் ஆரம்பம். ஆனா காலை,மாலை என நேரம் பிரித்து இருக்கிறாங்க. இதுவும் சொல்லமுடியாது. திட்டங்கள் மாறலாம். ஐஸ்கீரிம் கடையில் அருகருகே ஐஸ் குடித்ததால் ஆளுக்கு 200 யூரோ அபராதம்.கர்ர்ர்ர். coffee to go மாதிரி இப்ப இங்கு ice to go. கொஞ்சம் தளர்த்தியவுடன் அதிகமாகுது என சலசலப்பு மக்களிடையே.....
    ஊசிகுறிப்பு அருமை. நல்ல தத்துவ பாடல். இங்கும் நல்ல வெயில் ஆனா முடிஞ்சுபோச். இனி மழை. இங்கும் அப்பிள்,பியர்ஸ் மரம் முழுக்க பூக்களா பூத்திருக்கினம். பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. //ஊசி இணைப்பு அளவு இங்கு இல்லை. //

      ஹா ஹா ஹா இங்கும்தான் அம்முலு, பயத்திலேயே மெயின் மீல்ஸ் ஐக் கட் பண்ணிப்போட்டுத்தான் ஆசை உணவுகள் செய்கிறேன்:).

      //எல்லாருக்கும் வேர்க் தொடங்கீட்டுது. மே 4 ஸ்கூலும் ஆரம்பம். ஆனா காலை,மாலை என நேரம் பிரித்து இருக்கிறாங்க.//
      ஓ இது என்ன புதுக்கதை.. இங்கு எப்படியும் இனி செப்டெம்பர்தான் ஸ்கூல்ஸ் எல்லாம், யூனி கூட நெக்ஸ்ட் ஜனவரிதான் ஆரம்பமாகும் அதுவரை ஓன்லைன் கோர்ஸ் ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்கின்றனர், மகன் சொல்கிறார்.. அப்படிப் படிப்பது தனக்கு விருப்பமில்லையாம்... நான் சொன்னேன், எல்லாம் பழகத்தானே வேணும், ஸ்கூலை விட்டு யூனி போனபோது ஒரு புதுவித மாற்றம், அப்படித்தான் இதுவும் பழகப்பழகப் பிடிச்சுவிடும் என்று...

      இன்றுடன் எங்களுக்கும் வெயில் முடிகிறதாம், இனி மழைதான் எனச் சொல்கிறார் வெதர் அங்கிள்.. அதுவும் ஒருவகையில் நல்லதுதான், நன்கு போர்த்துக் கொண்டு படுக்கலாம்:).. இவ்ளோ நாளும் ஓடி ஓடி வடகம் போட்டே களைச்சுப் போனேன்:)..

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
  19. நானும் மொதல்ல பாகுபலி பார்க்கல.
    திரும்பிய பக்கம் எல்லாம் பாகுபலி பாகுபலினு காதுல வந்து விழ பார்த்தேன் அக்கா.




    உஞ்க விமர்சனம் வாசிக்கும்போது மீண்டும் ஒரு முரை பாகுபலி ரெண்டு பகுதியையும் பார்க்கனும்னு தோனுது.



    கண்ணதாசன் தத்துவம் சூப்பர் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மகேஷ் வாங்கோ..

      ஓ அப்படியோ ஹா ஹா ஹா மீண்டும் பாருங்கோ.. எங்களுக்கும் இனி மழை தொடங்கப் போகுதாம் அப்போ வீட்டுக்குள் இருந்து நானும் மீண்டும் பார்க்கப் போகிறேன் ஹா ஹா ஹா நன்றி மகேஸ்.. கண்ணதாசன் அங்கிள் எப்பவுமே சூப்பர்தான்:).

      Delete
  20. ஆஹா இப்பதான் மெயின் பிக்சருக்கு வாறேன். நான் பாகுபலி 1,2 பார்க்கவில்லை எனும் தகவலை சொல்லிக்கிறேன். மகனும்,கணவரும் தியேட்டரில் எனைவிட்டு பார்த்திட்டினம்.(நான் அப்ப ஊரில்) நீங்க இப்படி ஒரு படத்துக்கு விமர்சனம் செய்ததை நான் வாசிக்கேல்லை. எனக்கும் கில்லர் ஜீ அண்ணை சொன்னமாதிரி டவுட்டா வருது. அப்படி உருகி, ரசித்து ரசித்து எழுதியிருக்கிறீங்க. சரி டிவியிலாவது பார்ப்போம். பார்த்தவர்கள் (ஹஸ்,மகன் உட்பட) இப்படி படம் தியேட்டரில் பார்த்தால்தான் நல்லாயிருக்கும் என சொன்னாங்க. இப்படி நீங்க எழுதின்பின் பார்க்காம்ல் இருக்கிறது சரியில்லை. பிறகு வரலாறு என்னாவது.

    //பாகுபலிக்கு இன்னும் திருமணமாகவில்லை எனில், அனுக்காவை அவரோடு நிஜ வாழ்வில் சேர்த்து வைக்கப் போகிறேன்:), என்ன ஒரு ஜோடிப் பொருத்தம்.// ஆ... இதுதென்ன புதுசா....அஞ்சு கெதியா வாங்கோ. வோ பிஸ்ட் டூ?

    நானும் சரவணன்மீனாட்சி சீரியல் பார்த்த டைமில் நாயகனையும், நாயகியையும் பார்த்து, இவர்கள் நல்ல ஜோடி.திருமனம் செய்தால் என்ன என., ஆவ்வ் பலர் நினைப்பும் அதுவாக இப்ப நிஜ கணவன் மனைவி.
    பாருங்கோ உங்களை போலவே வல்லிம்மாவும் நினைத்திருக்கிறா. சொல்லமுடியாது யார்கண்டா.நடந்தாலும் ஆச்சர்யமில்லை.

    ReplyDelete
    Replies
    1. @ அம்முலு
      ஓ இப்போதான் மெயின் க்கு வந்திருக்கிறீங்களோ.. மேலே சொல்லிட்டீங்கள் என நினைச்சிட்டேன்:)..

      //இப்படி நீங்க எழுதின்பின் பார்க்காம்ல் இருக்கிறது சரியில்லை. பிறகு வரலாறு என்னாவது.//

      ஆஆஆஆஆஆ அப்போ நீங்களும் இன்னும் பார்க்கவில்லையோ.. இப்போதான் எனக்கு நிம்மதி:)).. அஞ்சு பார்த்தாவோ தெரியல்லியே கர்ர்ர்:))..

      // அஞ்சு கெதியா வாங்கோ. வோ பிஸ்ட் டூ?///

      ஸ்ஸ்ஸ்ஸ் கெட்ட வார்த்தையில அஞ்சுவைத் திட்டப்பிடாதாக்கும்:))..

      ஹா ஹா ஹா உண்மையில் நல்ல ஜோடி, அனுஸ்கா எப்படி முன்பு சூரியாவுடன் ஜோடியாக நடிச்சா என நினைக்க வியப்பாக இருக்குது ஹா ஹா ஹா.. நிறையக் கதைக்க வருகுது, ஆனா பின்னர் ரசிகர்கள் கொந்தளிச்சாலும் எனப் பயந்து அடக்கி வாசிக்கிறேன்ன்:) நன்றி அம்முலு.

      Delete
    2. /அனுஸ்கா எப்படி முன்பு சூரியாவுடன் ஜோடியாக நடிச்சா என நினைக்க வியப்பாக இருக்குது ஹா ஹா ஹா..//
      ப்ளீஸ் மியாவ் உங்களை மாதிரி நேர்மையானவர் இவ்வுலகில் இல்லை மனதில் பட்டத்தை ஒளிவு மறைவில்லாம எழுதுங்க :)
      ரசிகர்கள் பரம ரசிகர்கள் இங்க சிவா அங்கிள் குடும்பத்தின் ரசிகர்கள் வந்து உங்களை பாராட்டணும் அதை கண்ணார கண்டு களிக்கணும் நாங்க :) 

      Delete
    3. ஹாஹாஆ  ப்ரியா :) மேடம் இப்போ போராளி காதலர்களை சேர்த்துவைக்கும் போராளி :) அப்படியே ஷாருக்கான் கஜோல் :)சிம்ரன் விஜய் மாதவன் ஷாலினி அஜித் த்ரிஷா இவர்களையும் சேர்த்து வைங்க பிஞ்சு 

      Delete
    4. ஹையோ சூர்யா அசின் இவங்களை மறந்துட்டேன் :) முடிஞ்சா ஜி-- அங்கிளையும் அந்த ஆன்ட்டியையும் சேர்த்து வைங்க :)))))))))

      Delete
    5. Angel
      @ Ammulu :) ich bin hier

      [im] https://i.ytimg.com/vi/4fY45M0u_g4/hqdefault.jpg [/im]

      Delete
    6. //ப்ளீஸ் மியாவ் உங்களை மாதிரி நேர்மையானவர் இவ்வுலகில் இல்லை மனதில் பட்டத்தை ஒளிவு மறைவில்லாம எழுதுங்க :)
      ரசிகர்கள் பரம ரசிகர்கள் இங்க சிவா அங்கிள் குடும்பத்தின் ரசிகர்கள் வந்து உங்களை பாராட்டணும் அதை கண்ணார கண்டு களிக்கணும் நாங்க :) //

      ஹா ஹா ஹா கர்ர்:) நான் ஜொன்னனே எனக்கு எடிரி:) வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்:))..

      [im] https://tse2.mm.bing.net/th?id=OIP.JvsSgFkbiM2qCZUOF7wHAQHaEI&pid=Api&P=0&w=283&h=159 [/im]

      Delete

    7. //அனுஸ்கா எப்படி முன்பு சூரியாவுடன் ஜோடியாக நடிச்சா என நினைக்க வியப்பாக இருக்குது ஹா ஹா ஹா..//

      உங்க கமெண்டை ரெண்டு பேர் பார்த்தா மட்டும் போதும் :) அந்த ரெண்டு பேர் யார்னு சொல்ல மாட்டேன் 

      Delete
    8. ////AngelMonday, April 27, 2020 2:29:00 pm
      ஹாஹாஆ ப்ரியா :) மேடம் இப்போ போராளி காதலர்களை சேர்த்துவைக்கும் போராளி :)///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வயசானவர்களை எல்லாம் சேர்த்து வச்சு என்னை வம்பில மாட்டிவிடப் பார்க்கிறீங்க... முன்பு அசினை விஜய்க்கு சேர்த்து வைக்கத் துடிச்சேன் அதுவும் முடியாமல் போச்சு கர்ர்ர்:))..

      //உங்க கமெண்டை ரெண்டு பேர் பார்த்தா மட்டும் போதும் :) அந்த ரெண்டு பேர் யார்னு சொல்ல மாட்டேன் //

      ஆஆஆஆ புளொக்கில இருக்கும் ரசிகர்களோ ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))

      Delete
    9. ஹாஹா :) ஸ்ரீராம் கண்டுபிடிச்சிருப்பார் :)

      Delete
  21. நானும் பார்க்காமல் தான் இருந்தேன் அதிரா. ஒரு முறை ஊருக்குச் செல்லும்போது டிவியில் நடுநடுவில் பார்த்தேன். அவ்வளவு தான்.

    கில்லர்ஜி - ஜந்தேகம் எனக்கும் உண்டு! ஹாஹா...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ... ஆ அப்போ நீங்களும் எங்கள் கட்சி:).

      //கில்லர்ஜி - ஜந்தேகம் எனக்கும் உண்டு! ஹாஹா...//
      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) மிக்க நன்றி.

      Delete
  22. Quarantine is over - அந்த நிலைமைதான் இங்கும். வெளியில் செல்லாததால் இன்னும் வெயிட் போட்டுடுச்சு (ஏற்கனவே அரைக்கோணல்..இதுல ஊரடங்குல முழுக்கோணல்தான்).

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      ஹா ஹா ஹா கர்:) இதுக்காகத்தான் யோகாச் செய்யச் சொல்வது, நான் முதுகால வளைஞ்சு, பின்பக்கத்தால தலையை தரையில தொடுகிறேனாக்கும் டெய்லி..
      உங்களால முடியுமோ?:) ஹா ஹா ஹா..

      என்ன இருப்பினும் நிறையக் குடும்பங்கள் இப்போதான் லைஃப் ஐ என் சோய் பண்ணிப் பிறந்ததின் பயனை அனுபவிக்கின்றனர்... அன்றாடம் உழைப்போர்தான் பாவம்.

      Delete
  23. தோட்டம் பற்றிய படங்கள் அழகோ அழகு. நல்லா இருந்தது (பக்கத்துவீடே தெரியாதமாதிரி பெருசா சுவர் கட்டியிருப்பதைத் தவிர)

    அந்த வீட்டுலதானே ஆப்பிள் மரம் இருந்தது? உங்க வீட்டு ஆப்பிள் மரம் எப்படி இருக்கு இப்போ?

    ReplyDelete
    Replies
    1. //(பக்கத்துவீடே தெரியாதமாதிரி பெருசா சுவர் கட்டியிருப்பதைத் தவிர)//

      ஹா ஹா ஹா .. இந்த ஏரியாவில் நாங்கள் வீடு வாங்கி வரும்போது, எல்லையுமில்லை வேலியுமில்லை, எங்கும் ஒரே திறந்தவெளியாக இருந்தது, முன்ன முன்னம் வேலி போட்டது நாங்கள்தான்[ஏசியன்ஸ் என்பதைக் காட்ட வாணாமோ?:)] ஹா ஹா ஹா அப்படி இல்லை, பிள்ளைகள் குட்டீஸ், ரோட்டுக்கு ஓடி விட்டாலும் எனும் பயத்தில, எங்களைத் தொடர்ந்து இப்போ எல்லோருமே வேலி போட்டு விட்டனர், நாம் போட்டபோது, பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்து ஜோக் ஆக கேட்டார்.. “ நாங்கள் ஏதும் தப்புப் பண்ணவில்லையே எதுக்கு வேலி போட்டு மறைக்கிறீங்கள்?:)” என ஹா ஹா ஹா..

      //அந்த வீட்டுலதானே ஆப்பிள் மரம் இருந்தது? //
      யேஸ் இப்பவும் இருக்குது, பல்ப் பூட்டியதைப்போல சிவப்பாக காய்த்துக் கொட்டும்..

      எங்கள் வீட்டுப் பிள்ளை, கொஞ்சம் இலை வச்சு நிக்கிறா, இன்னும் பூக்கவில்லை பார்ப்போம்...

      Delete
  24. உள்ளதை உள்ளத்தில் இருந்து எழுதியிருக்கின்றீர்கள்....

    நானும் நாலைந்து தடவை பார்த்து விட்டேன்..
    மீண்டும் பார்ப்பேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..

      //நானும் நாலைந்து தடவை பார்த்து விட்டேன்..
      மீண்டும் பார்ப்பேன்...//
      ஆஆஆஆஆ இதை நான் எதிர்பார்க்கவில்லை:), துரை அண்ணனை ஒரு சாமியார்போலவே பார்த்துப் பழகிவிட்டேன் ஹா ஹா ஹா.. மீண்டும் பாருங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  25. பாஹுபலி - இரண்டு பாகங்ளும் நான் தியேட்டரில், மூன்று நாட்கள் (இரண்டு படங்களும் இரு வருட இடைவெளியில் வந்தது) பார்த்தேன்.

    முதல் பாகம் பார்த்தபோது, மனைவி, 'என்ன தமன்னாவுக்காக பார்க்கறீங்களா'ன்னு கேட்டா.

    இரண்டாவது படம் ஆரம்பம்லாம் ஃபேண்டஸி மாதிரி இருந்தாலும், தேவசேனாவைப் பார்த்து 'நீ செய்தது தவறு' என்று சொல்லும் சீன் (அப்புறம் அவள் மேல் கை வைத்தவன் தலையை எடுத்துவிடுவார்), அரசவை சீன் இன்னும் நிறைய இடங்களில் இப்போது பார்த்தாலும் சிலிர்த்துவிடுவேன் (தியேட்டர் தவிர, எங்கள் பெரிய டிவி.லயும் மூணு நாலு முறை பார்த்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. //முதல் பாகம் பார்த்தபோது, மனைவி, 'என்ன தமன்னாவுக்காக பார்க்கறீங்களா'ன்னு கேட்டா.////

      ஹா ஹா ஹா நாங்களே கேட்போமே, அப்போ அவ கேட்கமாட்டாவோ என்ன?:))..

      //'நீ செய்தது தவறு' என்று சொல்லும் சீன் (அப்புறம் அவள் மேல் கை வைத்தவன் தலையை எடுத்துவிடுவார்), அரசவை சீன் இன்னும் நிறைய இடங்களில் இப்போது பார்த்தாலும் சிலிர்த்துவிடுவேன்//

      ஆஆஆஆஆ இது உண்மைதான் இந்தக் கட்டத்தை நானும் ரசிச்சேன்... ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும், மனைவியை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதை அழகாகக் காட்டியிருக்கின்றனர்...

      இதேபோல பல கட்டங்கள் சொல்லலாம், கடசிவரை நீதி நியாயத்தைப் பாகுபலி கடைப்பிடிப்பது எனக்கு நிறையப் பிடிச்சுப் போச்சு...

      //(தியேட்டர் தவிர, எங்கள் பெரிய டிவி.லயும் மூணு நாலு முறை பார்த்துவிட்டேன்.//
      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      Delete
  26. நேற்று இரவு சீசர் படம் பார்த்தேன். அப்போதுதான், என்னடா இது..இந்தப் படத்திலிருந்து பல காட்சிகளை ராஜமெளலி உருவியிருக்காரேன்னு தோன்றியது (போர் காட்சிப்படுத்தல்லாம்). பாஹுபலி base கதை மஹாபாரதத்தைத் தொட்டபோதிலும்.

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியோ... ஒன்றை ஒன்று களவாடித்தானே நிறையப் படக்கட்டங்கள் வருகின்றன.. பாகுபலியும் டைட்டானிக்கின் ஒரு கட்டம் அப்படியே வருதே.. நான் போட்ட பாட்டில்...

      Delete
  27. பாஹுபலி முதல் பாகத்தை மிடில் ஈஸ்டில் வாங்கிய விநியோகஸ்தர், படம் வசூலைக் குவித்து அவருக்கு பணமழை பொழிந்ததும், ராஜமெளலிக்கு 5 கோடி ரூபாய் தனியாகக் கொடுத்தாராம் (முதலிலேயே படத்தை வாங்கியிருந்தபோதும், போனஸாக). அவ்வளவு பணமழை அந்தப் படத்திற்கு.

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியோ எனக்கிது தெரியாது, அதுபற்றி ஆராயவுமில்லை... இனித்தான் ஆராட்சி நடத்தப் போகிறேன்:))..

      இப்போ நான் பார்க்கப் பார்க்க அவர்களுக்கு இன்னும் பணம் கொட்டப்போகுதே ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் நெ தமிழன்.

      Delete
  28. போட்ட கமென்ட் வந்ததோ என்று தெரியவில்லை. கமென்ட் போட்டதும் எரர் வந்து விட்டது.

    இந்தப் படம் நாங்கள் எல்லோரும் சேர்ந்து பார்த்த படம். (கீதா: நான் துளசியின் வீட்டிற்கு சென்றிருந்த போது அவர் குடும்பத்துடன் சேர்த்து பார்த்த படம். குறும்படம் ஷூட்டிங்க் முடிந்ததும்...) பிரம்மாண்டமான படம். காட்சிகள் அழகு.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன், கீதா..

      நான் போட்ட கூக்குரலால் இம்முறை துளசி அண்ணனும் களம் இறங்கி விட்டார் ஹா ஹா ஹா..

      ஆ அப்படியோ மிக்க நன்றி.

      Delete
  29. பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே பூசாரின் தளத்திற்குள் என்ன தடை யோ..உள்ளே நுழையவே முடியவிலையே...தளம் ஓப்பன் ஆனால் கறுப்பாகி வருதே..ஒவ்வொரு கமென்ட் போடும் பொதும் தளம் கறுப்பாகி எரர் வருதே...பரம்பிதாவே! எப்படியேனும் உள்ளே நுழைத்துவிடும். உமக்கு பூஸார் கடன் நேர்த்தி செய்விடுவார்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //பரம்பிதாவே! எப்படியேனும் உள்ளே நுழைத்துவிடும். உமக்கு பூஸார் கடன் நேர்த்தி செய்விடுவார்..//

      ஹா ஹா ஹா நீங்க பயப்பூடாமல் நேருங்கோ கீதா, என் நேர்த்தி எல்லாம் அஞ்சுவைத் தேம்ஸ்ல தள்ளுவது அல்லது காசிக்குக் கூட்டிப் போவது:)) அதனால நான் எப்படியும் கொரொனா முடிஞ்சதும் என் நேர்த்தியை நிறைவேத்திப் போடுவேன்:))

      Delete
  30. படம் செம படம் அதிரா அனுஷ் என்னா அழகு!! என்னா அழகு!! கம்பீரம்...பார்த்துக் கொண்டேர் இருக்கலாம்...வீரம் காட்டுவதிலும் கூட.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மை கீதா, இயக்குனர் வஞ்சகமில்லாமல் கையாண்டிருக்கிறார், மிக அழகான ஆபரணங்கள், உடைகளை அள்ளி வழங்கி.. ஒரு பெண்ணையோ ஆணையோ அழகாக்கிக் காட்டுவது, நடிப்பையும் தாண்டி, படமெடுக்கும் விதத்திலும் நிறைய இருக்கிறது எனப் புரிஞ்சது இப்படத்தின் மூலம், அவ்வளவு பிரமாண்டமான அரண்மனை சுற்றுச் சூழல் இல்லை எனில், இவ்ளோ தூரம் படம், நம் மனதைக் கவர்ந்திருக்குமோ தெரியவில்லை.

      Delete
  31. நீங்கள் ச்ல்லியிருக்கும் அந்தக் காட்சியை நானும் கவனித்திருக்கேன் அதிரா. தேவசேனா சவால் போல இப்ப என்ன செய்வன்னு கேட்பது போல்...உடனே ஹீரோ போட்டை அப்படியே வானில் எழுப்புவார்...அந்த முகபாவம் நான் நோட் செய்திருக்கேன்.

    படத்தில் கதை என்று ரொம்பப் பெரிசு இல்லை...ராஜ கதை ஆனால் பிரம்மாண்டம் அதுதான் இதில் ஹைலைட். அனுஷின் கை ப்ரேஸ்லெட் பார்த்தீங்களா அந்த ஒளியை வீசும் போது...செம இல்ல

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முக பாவனைகள் அனைத்தும் சூப்பர் கீதா, அந்த கண்ணனோடு தாலாட்டுப் பாட்டில் இருவரின் முக பாவமும், காதல் வயப்படும் த்ருணங்களும் அழகோ அழகு...

      Delete
  32. உங்கள் தோட்டம், பக்கத்துவீட்டு பிங்க் பூக்கள், ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாமே ரசித்தேன். உங்கள் வீடு ஏரியின் கரையிலேவா? அழகாக இருக்கிறது.

    அதிரா நலம் தானே. உங்கள் வீட்டில் எல்லோரும் நலம்தனே? உங்கள் ஊர் நிலவரம் எப்படி? உங்கள் ஊரிலும் லாக்டவுன் தானே?

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் வீடு ஏரியின் கரையிலேவா? //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எத்தனை வருடமாகப் படங்கள் போட்டுச் சொல்லிக்கொண்டிருக்கிறேன், இது ஏதோ நித்திரையால எழும்பி வந்து கேட்பதைப்போல ஒரு கேய்ள்வி:)) ஹா ஹா ஹா..

      அது ஏரி அல்ல கீதா ஆறு, இந்த ஆறு கொஞ்சம் உப்புக் கைக்கும், ஏனெனில் இது அப்படியே ஒரு 10,12 மைல் தொலைவில் சமுத்திரத்தோடு கலக்கிறது...

      இங்கும் லொக்டவுந்தான் கீதா ஆனா ஊரடங்குச் சடம் இல்லை, மக்களும் வெளியே போவதில்லை தேவையில்லாமல், அதனால ஊரே வெறிச்சோடிக் கிடக்கு... மக்கள் எல்லோரும் கார்டினுக்குள் கும்மாளம் போடுகின்றனர்:)

      Delete
  33. அதிரா பாட்டு மீண்டும் கேட்டு ரசித்தேன்..பார்த்தும்..

    பிங்கி பூக்கள் வரத் தொடங்கிவிட்டதே சூப்பர்...

    ஆ உங்க வீட்டுலயும் பேயார் மரமோ?!! பெயார் முதலில் அப்படித்தான் கண்ணில் பட்டுச்சு!!!! ஹா ஹா ஹா
    வெள்ளைப் பூக்கள் வாவ்…பார்த்தால் நிறைய பேயார் சாரி பெயார் பியார் வரும் என்று தோன்றுது.
    ஊசி இணைப்பு ஹா ஹா ஹா க்வாரண்டைன் முடியும் முன் இப்படிக் குண்டாகி இப்ப எப்படி வெளியில் போகப் போறோம் வாயிலை இடிக்கணுமோ?!! ஆஆஆஆஆஆ

    ஊசிக் குறிப்பு செம..அதெ அதே எதையும் பெரிதுபடுத்தாமல் எஸ் எஸ் ஈசிகோயிங்கா இருந்துவிட்டால் வாழ்க்கை இனிதுதான்……
    எதையும் சீரியஸா எடுத்துக் கொள்வோரிடம் பேசவே தயக்கமா இருக்கும்…..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //வெள்ளைப் பூக்கள் வாவ்…பார்த்தால் நிறைய பேயார் சாரி பெயார் பியார் வரும் என்று தோன்றுது.//
      அது சொல்ல முடியாது கீதா, பிரச்சனை என்னவெனில், மழை வந்து பூக்களைக் கொட்டப்பண்ணிப்போடும் அல்லது அழுகப் பண்ணும்.. இப்போ இனி தொடர் மழை வரப்போகுதெனச் சொல்லுது வானிலை அறிக்கை.. பொனவருடமும் இப்படிப் பூத்து, நிறையப் பிஞ்சுகளும் வந்தன ஆனா 3 பழங்கள் மட்டுமே கைக்குக் கிடைச்சது.

      Delete
  34. ஓ அனுஷ் படம் என்பதால் மேலே பாட்டு தத்துவப் பாடலோ?!!! ஆறு மனமே ஆறு...இந்தத் தத்துவப் பாடல் ஆருக்கு??!!!!!!!!!!!!!!!!!!! நேக்கு ஒரு ஆள் மனதில் படுது...அனுஷ் படம் போட்டதால் ஹா ஹா ஹா ஹா ஹா (அடுத்த தமன்னாக்கா படம் போடுவீங்கதானே அதுவும் யங்கோ யங்க் தமனாக்கா!!!!!!!)

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஓ அனுஷ் படம் என்பதால் மேலே பாட்டு தத்துவப் பாடலோ?!!! ஆறு மனமே ஆறு//
      ஸ்ஸ்ஸ்ஸ் வரலாற்றைப் புரட்டப் போறிங்க:)).. அது நான் இவ்ளோ காலமும் தியேட்டரில் படம் பார்க்காமல் விட்டதுக்க்காகப் பாஅட்டுப் போட்டெனாக்கும்:))..

      //இந்தத் தத்துவப் பாடல் ஆருக்கு??!!!!!!!!!!!!!!!!!!! நேக்கு ஒரு ஆள் மனதில் படுது...அனுஷ் படம் போட்டதால் ஹா ஹா ஹா ஹா ஹா (அடுத்த தமன்னாக்கா படம் போடுவீங்கதானே அதுவும் யங்கோ யங்க் தமனாக்கா!!!!!!!)
      ///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) கோர்த்து விடுறதிலேயே குறியாக இருக்கலாமோ:))... நான் பாகுபலிக்கு அனுக்காவை மனைவியாக்கி, டமனாக்காவை தங்கை ஆக்கிட்டேன்.. இதிலிருந்து உங்களுக்கு என்ன புரியுது?:)).. அனுக்கா ஸ்ரீராமுக்கு இல்லை:)) ஆனா டமனாக்கா நெல்லைத்தமிழனுக்கே ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

      Delete
  35. அது சரி எப்பொதும் ஃபர்ஸ்ட் வரும் உங்க செக் எங்கே இன்று ஸ்ரீராம் அந்த இடத்தைப் பிடித்துவிட்டார்!! !!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இது சதி கீதா :) மாபெரும் சதி :) இருங்க இருங்க நான் பிரித்விராஜ் சுகுமாரன் படத்துக்கு ரிவ்யூ எழுதி நானே முதல் 10 கமெண்ட்டும் போடுவேன் :)

      Delete
    2. இருங்க இருங்க நான் பிரித்விராஜ் சுகுமாரன் படத்துக்கு ரிவ்யூ எழுதி நானே முதல் 10 கமெண்ட்டும் போடுவேன் :)

      [im]https://media0.giphy.com/media/xFOc3rYIGE3aE/giphy.gif?cid=ecf05e4743493766d38a57fb43f2c8cb44e4db145c976b63&rid=giphy.gif [/im]

      Delete
    3. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கீதா.. என் செக் இமுறை ச்ச்சோ லேட்டூஊஊஊஊஊ:)) சம்பளத்தைப் பாதியாக்கிட்டேன் எல்லோ கொரொனாவால:) அதனால போல லேட்டா வந்திருக்கிறா:).

      Delete
  36. நான் அசந்த நேரமா பார்த்து   பதிவு அதுவும் பாகு பலியா :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. இன்று காலையில்தான் போட நினைச்சேன், ஆனா என்னால எனைக் கொன்றோல் பண்ண முடியாமல் போச்ச்ச்ச்:)) படம் பார்க்கப் பார்க்க ஓடி ஓடி ரிவியூ எழுதினேனாக்கும் ஹா ஹா ஹா..

      Delete
  37. [im]https://1.bp.blogspot.com/-TdDnonC-P1s/XqazfLuKgPI/AAAAAAAAUcM/Dj6dykMI2GAUaLHritL4ZF_ijw3-IeGIQCLcBGAsYHQ/s400/vbnm.jpg[/im]

    பாருங்க மக்களே எல்லாரும் :) பூனையின் போஸ்டை பார்த்து அம்முலு பயந்து ஒதுங்கி மீ ஷாக்கில் :)

    ReplyDelete
    Replies
    1. //https://1.bp.blogspot.com/-TdDnonC-P1s/XqazfLuKgPI/AAAAAAAAUcM/Dj6dykMI2GAUaLHritL4ZF_ijw3-IeGIQCLcBGAsYHQ/s400/vbnm.jpg//

      haa haa haa படம் இணைக்கும்போதே ஓசிச்சேன்:)) இப்பூடி ஏதும் அசம்பாவிதம் நடக்க ந், நானே வழி அமைச்சுக் குடுக்கிறேன் என:)) ஹா ஹா ஹா.. என்னோடு சேர்ந்து நீங்களும் மன்னிப்புக் கேட்காமல் ஷொக்ட் ஆகிட்டினமாம் கர்ர்ர்ர்:))

      Delete
    2. ஹலோ :) பிஞ்சு பாருங்க நானும் அம்முலுவும் இதுவரைக்கும் பார்க்கலியே இந்த படத்தை .நாங்க எதுக்கு மன்னிப்புகேட்கனும் 

      Delete
    3. //பாருங்க மக்களே எல்லாரும் :) பூனையின் போஸ்டை பார்த்து அம்முலு பயந்து ஒதுங்கி மீ ஷாக்கில் :)///
      ஹா..ஹா..ஹா... அஞ்சு....... 🤣 🤣 🤣 சூப்பர்
      நான் இப்படி விமர்சனம் எழுதீ பார்த்ததே இல்லை. உண்மையிலே பயந்துட்டேன். அதான் ரிவர்ஸ் லே கருத்து போட்டிருக்கேன். பிஞ்சு ஞானி.... பட்டத்தை மாத்துங்கோ கெதியா....

      Delete
    4. @ அஞ்சு..
      பார்க்காதபடியாலதானே மன்னிப்புக் கேட்கச் சொல்றேன்:))... கர்:))

      @அம்முலு
      பிஞ்சு ஞானி எல்லோ:)) அதுதான் அடிக்கடி ட்ரக் மாறப்பார்க்குது:)) ஹா ஹா ஹா.. இதுக்குத்தான் அம்மம்மா சொல்றவ:)) காலம் தாழ்த்தாமல் முழு ஞானி ஆகிடு பிள்ளை என ஹா ஹா ஹா:)).. முற்றும் துறந்திட்டால் பிரச்சனை இல்லையாக்கும்:))

      Delete
  38. ஹலோ பிஞ்சு :) ஸ்ரீராமுக்கு பாஹுபலி விமரிசனத்தை அதுவும் அனுஷை டாப்புக்கு கொண்டு போய்  போட்டு நெல்லைத்தமிழனுக்காகவே ஸ்பெஷலா ஆறு மனமே ஆறு பாட்டை போட்ட மாதிரி இருக்கே :))))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா, இபூடி எல்லாமா ஜிந்திச்சு என்னை மாட்டி விடுவீங்க:)) நெல்லைத்தமிழன் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்ர் ஹா ஹா அஹ..

      6 மனமே 6:))

      Delete
    2. ஹா... ஹா.்்்்்். ஹா..்். ஆனால் மொபைலில் எனக்கு பாட்டு வரேது!

      Delete
    3. //ஸ்ரீராம்.Monday, April 27, 2020 2:12:00 pm
      ஹா... ஹா.்்்்்். ஹா..்். ஆனால் மொபைலில் எனக்கு பாட்டு வரேது!//

      ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊஊ ஸ்ரீராமைக் கொஞ்சம் அமைதியடையச் சொல்லுங்கோ ஹா ஹா ஹா:)))... இப்போ நெல்லைத்தமிழனுக்காகவும் ஒரு பட ரிவியூ எழுத வைக்கப் பண்ணுறீங்களே எல்லோரும்:))...

      Delete
    4. நான் பார்த்தேன் பாட்டை கடைசீ சீனில் ஜிவாஜி அங்கிள் கடலையை வாயில் போட்டுட்டே நடக்கிறார் :) ஆனா சும்மா சொல்லக்கூடாது நடிப்பு திலகம்தான் அவர் .அவர் நடையென்ன அந்த பாவங்கள் உணர்ச்சி செம சூப்பர்ப் 

      Delete
    5. @ஸ்ரீராம் இப்போவே சொல்லிட்டேன் இந்த 6மனமே பாட்டு 6 மாசத்துக்கு வரவே கூடாது :) 

      Delete
    6. இந்த அதிரா, பாஹுபலி பாகம் 1 பார்த்துட்டு பிறகு பாகம் 2 பார்த்திருந்தாங்கன்னா கதைல ரொம்பவே ஒன்றியிருப்பாங்க.

      ஆனா அவங்கதான் ஏஞ்சலினோட சேர்ந்து அவங்களோட கெட்டவழக்கத்தைப் பிடிச்சிக்கிட்டாங்களே (ஒரு இடுகைல, கீழ கமெண்டுல ஆரம்பிச்சு பின்னோக்கி கடைசியா இடுகையின் ஆரம்பத்தைப் படிக்கிறது). அதுனால பாகம் 2 பார்த்துட்டு அப்புறம் பாகம் 1 பார்க்கிறாங்களா இருக்கும். ஹையோ ஹையோ

      Delete
    7. ஹாஹாஆ :) அது எனக்கு பழகிடுச்சு படிக்கிற காலத்திலயே லாஸ்ட் டாப்பிக் என்னனு ஆரம்பத்தில் பார்ப்பேன் 

      Delete
    8. //AngelMonday, April 27, 2020 3:12:00 pm
      @ஸ்ரீராம் இப்போவே சொல்லிட்டேன் இந்த 6மனமே பாட்டு 6 மாசத்துக்கு வரவே கூடாது :) //

      அல்லோ மிஸ்டர் பாகுபலி பற்றிப் பேசும் நேரத்தில எதுக்குப் போய் ஜம்பந்தமே இல்லாமல் சிவாஜி அங்கிளை ரசிக்கிறீங்க கர்ர்ர்:))... அது ஸ்ரீராம் அதைப் போட மாட்டார்ர்:)) அப்பூடிப் போட்டாலும்.. அனுக்கா பாகுபலிக்கே பொருத்தம் எனச் சொல்லியாச்சு எனும் சோகத்தில போட்டதாக ட்ரக்[ஹையோ டமில்ப் புரொபிஸர் வந்திடப்போறாரே ஹா ஹா ஹா] கை மாத்திடுவோம்:))

      Delete
    9. //நெல்லைத் தமிழன்Monday, April 27, 2020 5:27:00 pm
      இந்த அதிரா, பாஹுபலி பாகம் 1 பார்த்துட்டு பிறகு பாகம் 2 பார்த்திருந்தாங்கன்னா கதைல ரொம்பவே ஒன்றியிருப்பாங்க.//

      ஹா ஹா ஹா விதி ஆரை விட்டது நெல்லைத்தமிழன், உங்கள் கவலை புரியுது:)) ஹா ஹா ஹா, இப்ப பாருங்கோ.. நான் பாகம் ஒன்று வந்தவுடன், தமனாக்காவை ஒருவேளை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து உங்களுக்குப் பட்டாபிஷேகம் சூட்டியும் இருக்கலாம் ரிவியூ எழுதி:))..

      ஆனால், 2 வதைப் பார்த்தபின்பே கடவுள் என்னை முதலாவதைப் பார்க்க வைக்கிறார்:)).. அதனாலதானே அது சப் என ஆகி விட்டது ஹா ஹா ஹா..

      //ஆனா அவங்கதான் ஏஞ்சலினோட சேர்ந்து அவங்களோட கெட்டவழக்கத்தைப் பிடிச்சிக்கிட்டாங்களே (//

      கரீட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)) இதை நான் படு பயங்கரமாக ஆமோதிக்கிறேன்:))

      Delete
  39. /அழகு, அப்படி ஒரு நடிகரை இதுவரை பார்க்கவில்லை எனத்தான் சொல்லுவேன்,  அவரோடு ஒப்பிடும்போது யாருமே எடுப்பான நடிகர்கள் என் கண்ணுக்குள் வரவில்லை..//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) இதெல்லாம் ஓவர் :) டூ 1234456677889 மச் நீங்கள் இன்னும் மலையாளம் ஹிந்தி படங்களை பார்க்கவில்லை :)அதைவிட இன்னமும் ஹேண்ட்ஸம்மாக இருக்கும் கமல் அங்கிளை பார்க்கவேயில்லை :)

    நிவின் பாலியையும்  ப்ரித்விராஜும் நீங்க பார்த்ததே இல்லையா :)

    ReplyDelete
    Replies
    1. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) இதெல்லாம் ஓவர் :) டூ 1234456677889 மச்///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) மீ ஒரு அப்பாவி:))

      /// நீங்கள் இன்னும் மலையாளம் ஹிந்தி படங்களை பார்க்கவில்லை :)///

      ஹா ஹா ஹா இல்ல அஞ்சு நான் சொல்லும் அழகு என்பது வெறும் முகத்தைப் பார்த்தோ உடலைப்பார்த்தோ வந்ததல்ல... அந்தத் தோற்றமும் ஒரு காரணம், கம்பீரம்... மற்றும் முக்கியமாக என்னைக் கவர்ந்த விசயம், கொடுத்த வாக்கை மீறாமல் காப்பாற்றுகிறார்... அம்மா ராஜமாதா சொல்கிறா, உனக்கு அரசபதவி வேண்டுமோ? அனுக்கா வேண்டுமோ என?, இல்லை எனக்கு கொடுத்த வாக்கே முக்கியம் எனச் சொல்லி, அனுக்கா பக்கம் போய் நின்றார் பாருங்கோ.. அதன் விளைவு என்னாகும் என்பது தெரிஞ்சிருக்கும் அவருக்கு, அப்படி இருந்தும் ,அம்மாவைக்கூட எதிர்த்து நீதி நியாயம் பேசுகிறார் அனுக்காவுக்காக.. அதை எல்லாம் பயங்கர அழகாக்குது அவரை.. அத்தோடு பாகம் ஒன்றில் இருக்கும் அழகை விட இரண்டில் அழகு அதிகம்.. அதுக்கு ஜோடிப்பொருத்தமும் ஒரு காரணம், மற்றொன்று.. 2 வயசு கூடி விட்டதெல்லோ பாகம் 2 இல்:)) ஹா ஹா ஹா..

      இப்போதைய சில ஆண்கள் எனில், நான் இப்போ அரசபதவியை ஏற்கிறேன், பின்னர் உன்னை நிட்சயம் கைப்பிடிப்பேன் அதுவரை கொஞ்சம் அவமானங்களைத் தாங்கிக்கொள் எனச் சொல்லி விடுவர்:))[கொடுத்த வாக்கை மீறி].. இது அனைத்துக்கும் காரணம் தயாரிப்பாளர்தான்...

      ///அதைவிட இன்னமும் ஹேண்ட்ஸம்மாக இருக்கும் கமல் அங்கிளை பார்க்கவேயில்லை :)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதுவரை கமல் அங்கிள்[முந்தைய] அழகு என்றுதான் நினைச்சிருந்தேன்:)) ஹா ஹா ஹா ஹையோ என்னைக் காப்பாத்துங்கோ:) என் வாயைக் கிளறி, என்னை மாட்ட வைக்கப் பார்க்கிறா அஞ்சு கர்:)) மீ ஒரு அப்பாவி:))

      Delete
  40. பாஹுபலியை இவ்ளோ ரசிச்சி விமர்சிச்சிருக்கீங்களே :))) நான் பார்க்கலை .பொதுவா படங்கள் பார்ப்பது குறைவு எப்போலாம் ஏதாச்சும் படம் கான்ட்ரவர்ஸியில் மாட்டுவதோ அதை மட்டும் தேடிப்பார்ப்பேனாக்கும் :)ஆனா மகளும் கணவரும் போன மாசம் பார்த்தாங்க இதை நெட்ப்ளிக்சில் :)நல்லாருக்குன்னாங்க அதனாலேயே நான் பார்க்கலை :)))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. //
      AngelMonday, April 27, 2020 11:56:00 am
      பாஹுபலியை இவ்ளோ ரசிச்சி விமர்சிச்சிருக்கீங்களே :))) நான் பார்க்கலை //
      அதானே, நான் யோசித்தேன், நீங்க பார்த்திருந்தா, 96 பார் என என்னைத் துரத்தித் துரத்திப் பார்க்க வைச்சதைப்போல இதையும் பார்க்கப் பண்ணியிருப்பீங்களே என நினைச்சேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இன்னுமா பார்க்காமல் இருக்கிறீங்க.. இன்றே ஸ்ராட் மூசிக் அஞ்சு...

      //நல்லாருக்குன்னாங்க அதனாலேயே நான் பார்க்கலை :))//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா ஒரு வில்லத்தனம்... பாருங்கோ முக்கியமாக அனுக்காவின் ஆடை ஆபரணங்களுக்காகவும் பார்க்கலாம் ஹா ஹா ஹா..

      பாகுபலியின் மேக்கப் உம் அழகோ அழகு, நன்கு பொருந்துது அவருக்கு..

      நாசரின் நடிப்பும் நகைச்சுவை.. சவகாமியாம்ம்.. சவகாமி. த்தூஊஊஊஊ என்பார்ர் கோபத்தில் மனைவியை ஹா ஹா ஹா:)), சிவகாமியின் நாய் வருகிறதடா என்பார் சத்தியராஜ் அங்கிளைப் பார்த்து.. இவை எல்லாம் சூப்பராக சிரிக்க வைக்கிறது..... சத்தியராஜ் அங்கிளின் நடிப்பும் சூப்பர்ர்...

      மிகுதிக்குப் பின்பு வருகிறேன்....

      Delete
  41. ஊசி இணைப்பு :))))))) ஹாஹா இப்போ பலர் நிலை இப்டித்தானாம் :) ஊசிகுறிப்பும் சூப்பர் உங்க வீட்டு pears மாதிரி இங்கே ரெட் கர்ரேன்ட் நிறைய பூக்களுடன் இருக்காங்க /பிளாக் பெரிஸ்  நிறைய காய்க்கும் இம்முறை .ஒரு ஆப்பிள் வச்சோம் அது வளரவில்லை .எப்படியாவது விகடோராயன் பிளம்ஸை வளர்க்கணும்னு முனைகிறேன் பாப்போம் 

    ReplyDelete
    Replies
    1. மரம் வளர்ந்துவிட்டாலும், பூக்கவும் காய்க்கவும் மிகவும் கஸ்டப்படுதே...

      Delete
  42. ஒரு ஒரு சொல் ஒரே ஒரு செய்கை அது இரண்டு விளைவுகளை ஏற்படுத்துமா ?ஒரு விஷயம் ஒருவருக்கு இன்பமாகவும்( ஸ்ரீராம் ) மற்றொருவருக்கு கடுந்துன்பமாகவும் (நெல்லைத்தமிழன் )அமைவது சாத்தியமா ?
    பதில்...சத்தியம் சாத்தியம் ..பாஹுபலி விமர்சனம் ஒரு உதாரணம் 

    ReplyDelete
    Replies
    1. உங்க கற்பனை ரொம்பவே அதிகம்தான். நானும் அனுஷ்காவின் (அதாவது ஸ்ரீராம் சமீபத்தில் பகிர்ந்துகொண்டாரே ஜீன்ஸ் போட்ட அனுஷ்கா.. ) ரசிகன். முந்தைய தமன்னாவுக்கும். அப்புறம் அதற்கு முன்பு ஸ்ரீதிவ்யா, அச்சம் என்பது மடமையடா முதல் பாதி மஞ்சிமா மோகன், கொடி படத்தில் நடித்த அனுபமா.... என்று லிஸ்ட் பெரிசு. ஹா ஹா. அடிக்கடி மாறுதலுக்கு உட்பட்டது.

      Delete
    2. //அது இரண்டு விளைவுகளை ஏற்படுத்துமா// - இதுல என்ன சந்தேகம்? நீங்களும் உங்க கலீக்கும் இருக்கீங்க. ஆபீஸ் ப்ரொமோஷன் உங்களுக்குக் கொடுக்கறாங்க. அது உங்களுக்கு மகிழ்ச்சியும் அவருக்கு ஏமாற்றத்தையும் உண்டாக்கலாம் அல்லவா?

      அல்லது அச்சப்பம் செய்வது ஒருவருக்கு இன்பமாகவும் இன்னொருவருக்குத் துன்பமாகவும் இருக்கலாம் இல்லையா?

      Delete
    3. ஹாஹாஆ :) சூப்பர்ப் 

      Delete
    4. ///அல்லது அச்சப்பம் செய்வது ஒருவருக்கு இன்பமாகவும் இன்னொருவருக்குத் துன்பமாகவும் இருக்கலாம் இல்லையா?//
      கர்ர்ர்ர்ர்ர்ர் 

      Delete
    5. ///
      AngelMonday, April 27, 2020 12:11:00 pm
      ஒரு ஒரு சொல் ஒரே ஒரு செய்கை அது இரண்டு விளைவுகளை ஏற்படுத்துமா ?ஒரு விஷயம் ஒருவருக்கு இன்பமாகவும்( ஸ்ரீராம் ) மற்றொருவருக்கு கடுந்துன்பமாகவும் (நெல்லைத்தமிழன் )அமைவது சாத்தியமா ?///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) எப்பூடியாவது அதிராட பக்கம் நெல்லைத்தமிழன் வராதளவுக்கு பகைமையை உருவாக்கிடோணும் எனத் துடியாய்த் துடிக்கிறா:)) அஞ்சு ஆனா அது நடக்காதூஊஊஊஊஊ ஏனெனில் இராஜி ஒண்டாச்சே ஹா ஹா ஹா...

      உங்களுக்கும் இன்னும் புரியவில்லை அஞ்சு:)), நெல்லைத்தமிழன் தமனாக்காவை எப்பவோ கழ்ட்டி விட்டிட்டார், ஆனா நாங்கதான் விடாமல் அவருக்குப் பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறோம்ம்.. அதில மாட்டி முழிக்கிறார் அவர்:)).. ஆனா இன்னொன்று, இப்போதுள்ளோரில் ஆர் மிக அதிகம் மனதைக் கவர்கின்றனர் எனத் தேஎடினால்.. அப்படி ஆரையுமே காணம்... நயன் அக்கா பழைய ஆள் ஆகிட்டா, ஹன்ஷிகாவும் அப்படி.. அமலாபோல் இப்போ அவ்வளவு நன்றாக இல்லை... ம்ஹூம்ம் ஆரும் மனதில் பதிகிறார்கள் இல்லையே:))

      Delete
    6. மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன், அஞ்சு....

      Delete
  43. பாகுபலியின் பிரம்மாண்டம் மிகவும் அருமை. பார்த்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. ஓ நீங்களும் பார்த்துவிட்டீங்கள்.. நான் தான் ரொம்ப லேட்டூ.. மிக்க நன்றி.

      Delete
  44. வணக்கம் அதிரா சகோதரி

    மரங்கள் அழகான மலர்கள் அனைத்தையும் ரசித்தேன். தோட்டத்தை நல்ல பாதுகாப்புதான் வளர்த்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ஊசி இணைப்பும், ஊசிக்குறிப்பின் வாசகங்களும் அருமை. ஆனால் அனைத்தும் முதலில் விமர்சித்த பிரமாண்டத்தில் சிறு துளியாய்.... பதிவு மிகவும் அருமை அதிரா சகோதரி. விறுவிறுப்பான கருத்துக்களும், பதில்களும் எப்போதும் போல் தங்கள் பதிவின் பிரமாண்டத்தையே காட்டுகிறது. அதில் கடைசியாய் என் கருத்தும், ஒரு சிறு துளியாய்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் வருக கமலாக்கா..

      //ஆனால் அனைத்தும் முதலில் விமர்சித்த பிரமாண்டத்தில் சிறு துளியாய்.... பதிவு மிகவும் அருமை//

      ஹா ஹா ஹா மிக்க நன்றி, உண்மையில் என்னால படத்திலிருந்து மீளவே முடியவில்லை, நானும் இப்போ மகிழ்மதி ஏரியாவில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்:)) அப்படித்தான் இருக்கிறது என் மனநிலை ஹா ஹா ஹா... எனக்கே வியப்பாக இருக்கிறது, எப்படி நான் இப்படி உள்ளே புகுந்துவிட்டேன் இப்படத்துனுள் என ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  45. போஸ்ட் பெருத்துவிடும் என நிறைய விசயங்கள் எழுதாமல் விட்டு விட்டேன் என மனதின் ஓரத்தில் ஒரு சிறு வருத்தம் உண்டு.

    அதிலும் முதல்ப் பாகம் பார்க்காமல்[அவந்திகாவைப் பார்க்காமல்] 2ம் பாகத்தை[தேவசேனாவை]ப் பார்த்துவிட்டேன் என நெல்லைத்தமிழனுக்கு வருத்தம்:)).. அதனால முதல்ப்பாகத்தையும் இப்போ பார்த்துவிட்டு, முடிவுரைக்கு வந்திருக்கிறேன்.
    முதல்ப்பாகமும் பிரமாண்டமாகத்தான் எடுத்திருக்கிறார்கள், ஆனா அது ஏதோ சோதனை முயற்சிபோல இருக்குது, 2ம் பாகத்துடன் ஒப்பிடுகையில், முதல் பாகத்தில் கலர்ஃபுல் காட்சிகள் இல்லை, அத்தோடு பாதிக்கு மேல் சண்டைக் காட்சிகளே அதிகம், சண்டைகூட, ஒரு கலரில் செய்திருப்பதனால் பெரிதாக கவரவில்லை.

    முதல்ப் பாகத்தில், ஆரம்பித்ததிலிருந்து, அவந்திகாவுடனான பாட்டு வரை நன்றாகவே இருக்கு, பின்பு பெரிதாக மனங்கவர் காட்சிகள் இல்லை.

    2ம் பாகம், மொத்தமும் காதல் மூழ்கி இருப்பதாலும், மிகவும் கலர்ஃபுல்லாக இருப்பதாலுமே அதிகம் மனதைக் கவர்கிறது, சண்டைக் காட்சிகள்க்கூட மிக அழகாகத் தெரிகிறது.

    ஆனாலும் என்னைப்பொறுத்து, அவந்திகா கரெக்டருக்கு, ஒரு புதுமுகத்தை அல்லது வேறு ஆரையாவது போட்டிருக்கலாம் எனத் தோணுது, ஏனெனில் தமனாவும் ஒரு பிரபல நடிகைதானே, அவவை இப்படி ஏதோ ஒரு சைட் நடிகைபோல போட்டது நன்றாக இல்லை.

    படம் முழுதும் ரசிக்கும் காட்சிகள் பலபல.. நகைச்சுவைக்கென ஸ்பெஷல் ஆட்கள் தேவையில்லாமல், தேவசேனாவின் மாமா, நாசர், கட்டப்பா.. மூவருமே அங்கங்கு விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றனர்.

    “இந்த நாயை நம்பலாமா பல்லா?”.. ஹா ஹா ஹா நாசர் மகனிடம் கேட்பது..

    சிங்களமொழியில் வள்ளா என்றால் நாய் எனப் பொருள்... எனக்கு பல்லா பல்லா எனச் சொல்லும்போதெல்லாம் வள்ளா வள்ளா எனத்தான் காதில கேட்டது ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. முதல் பாகத்தில் மகிழ்மதி மக்கள் (மட்டும்)பாஹுபலி மகனைப் பார்த்துப் பரவசமாகும் கட்டம் நன்றாய் இருக்கும். பரபாஸ் ரொம்ப நன்றாய் இருப்பார். அவர் இந்தப் படம் தந்த நம்பிக்கையில் ஆங்கிலப்பட பாணியில் ஒரு கண்றாவியான படத்தில் பின்னர் நடித்தார். மூன்று காட்சிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை. ராணா நடித்த இன்னொரு படம் பார்த்தேன். ஒரு கப்பலைக் காப்பாற்றும் படம். ஓகே ரகம்.

      Delete
    2. முதல் பாகம் தந்த பிரமிப்பில்தான் இரண்டாம் பாகம் தியேட்டரில் பார்த்தேன். என் மகனுக்கு நான் தியேட்டர் வந்தது ஏக குஷி. அப்படியே அவன் அபிமான நடிகர் படத்தையும் என்னைத் தியேட்டரில் பார்க்க வைக்க முயற்சித்தான். நடக்கவில்லை!!

      Delete
    3. அதிரா - நான் முதல் பாகம் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. பல தடவைகள் பார்த்த பிறகு படத்தில் இருந்த 'காது குத்தல்கள்' தெரிந்தது (நீர்வீழ்ச்சிக்கு மேலே பனி மலை, அதற்குப் பிறகு காடுகள் என்று நிலங்கள் ஒன்றை ஒன்று ஒட்டி இருப்பது). இன்னும் வரப்போகுதுன்னு நினைக்கும்போது சப் என்று முடிந்துவிட்டது கடுப்பாக இருந்தது (அடுத்த பாகம் எப்போ வந்து எப்போ பார்க்கிறது என்று). ஆனால் பாடல்கள் அருமை. படம் ஆரம்பமே ரம்யா கிருஷ்ணன் படத்தின் டோனை நன்றாக செட் பண்ணியிருப்பார்.

      ஆனால் இரண்டாம் பாகம்தான் சிலிர்க்கவைக்கும் நிகழ்வுகள் இருந்ததாகத் தோன்றியது. ஆனால் கடைசிப் போர்க் காட்சிகள் ரொம்ப காது குத்தலாகவும் அயர்வாகவும் இருந்தது.

      Delete
    4. //அவவை இப்படி ஏதோ ஒரு சைட் நடிகைபோல போட்டது நன்றாக இல்லை.// - ஏதோ ஒரு நடிகையின் (அதாவது பாத்திரத்தின்) முகத்துக்காக ப்ரபாஸ் அவ்வளவு கஷ்டப்பட்டு நீர்வீழ்ச்சிக்கு மேலே என்ன இருக்கிறது என்று பார்க்கப்போயிருப்பாரா? இல்லை நாங்கள்தான் 'பச்சைத் தீ நீயடா' பாடலைத்தான் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கப் போகிறோமா?

      Delete
    5. //மூன்று காட்சிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை. ராணா நடித்த இன்னொரு படம் பார்த்தேன். ஒரு கப்பலைக் காப்பாற்றும் படம். ஓகே ரகம்.//

      இந்த பாகுபலி மனநிலை இப்படியே இருக்கோணும் எனில், நாம் அவர்களின் வேறெந்தப் படமும் கொஞ்சக்காலத்துக்காகவது பார்த்திடக்கூடாது ஸ்ரீராம் ஹா ஹா ஹா..

      Delete
    6. இந்தப் படத்தை மட்டும் நான் தியேட்டரில் போய்ப் பார்த்தேந் இது ஸ்ரீராம்

      முதலாம் பாகத்தை மட்டும் தியேட்டரில் 4 தடவைகள் பார்த்தேந் இது நெல்லைத்தமிழன்...:))

      இதில இருந்து என்ன புரியுது எனில்... தம் தம் அபிமான...... க்காக வேஎ இருவரும் இப்படிப் புரட்சி பண்ணியிருக்கினம் ஹா ஹா ஹா:)).. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:))

      Delete
    7. @ நெல்லைத்தமிழன்..
      //ஆனால் இரண்டாம் பாகம்தான் சிலிர்க்கவைக்கும் நிகழ்வுகள் இருந்ததாகத் தோன்றியது. ஆனால் கடைசிப் போர்க் காட்சிகள் ரொம்ப காது குத்தலாகவும் அயர்வாகவும் இருந்தது.//

      நீங்க இப்ப சொல்வதும், மேலே ஆரம்பம் சொல்லியுள்ளதும்[கிரபிக்ஸ் மூலம் ஆட்களின் உடம்பையும் மாத்தியிருக்கின்றனர்] உண்மையேதான்..

      பட முடிவில் சண்டையின் போது, ரானாவின் தோள்களும் கையும் ஒரு மூட்டை களிமண் வைத்துத்தான் அப்பூடிப் பூசிப் பெரிசாக்கியிருப்பினம் என்பது புரியுது ஹா ஹா ஹா.. ஆனாலும் என்னால குறை சொல்லமுடியவில்லை படம் ஜூப்பரோ ஜூப்பர்ர்.. நான் இப்போ நாசர் போலவே பேசிக்கொண்டிருக்கிறேன் ஹா ஹா ஹா..

      //அவ்வளவு கஷ்டப்பட்டு நீர்வீழ்ச்சிக்கு மேலே என்ன இருக்கிறது என்று பார்க்கப்போயிருப்பாரா? இல்லை நாங்கள்தான் 'பச்சைத் தீ நீயடா' பாடலைத்தான் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கப் போகிறோமா?//

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்படியும் ஒரு வியூ இருக்கோ:))... அதுவும் சரிதான், பாகம் ஒன்றில் ஓகே, ஆனா ரெண்டில் பாவமாக இருந்தது, முடிவில மட்டும் போனாப்போகுதென ஒரு நீல சாறியை உடுத்து ஒரு 2 நிமிடம் அழகாக்கி விட்டிருப்பதைப் பார்க்க கஸ்டமாக இருந்தது:)) ஹா ஹா ஹா.

      ஆனால் பகுதி 3 வந்தால், அதில் தமனாக்காதான் இளவரசி ஆவார்.... அனுக்கா அம்மாவுக்கு வருவா.. ராஜமாதா:)) ஹா ஹா அஹ..

      Delete
  46. என்னதான் இருப்பினும், அனுக்கா ஸ்ரீராமுக்கே என நினைச்சுக் கொண்டிருந்த நாம், பாகுபலியின் சின்னிவிரலைத் தேவசேனா பிடித்தபோது, கொஞ்சம் கலங்கித்தான் போனேன் ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. //அனுக்கா ஸ்ரீராமுக்கே என நினைச்சுக் கொண்டிருந்த நாம், //

      garrrrrrrrrrrrrr :)இதை யாராச்சும் திருமதி ஸ்ரீராமுக்கு காட்டவும் 


      Delete
    2. ஹலோ பிஞ்சு நான் வேற மாதிரியாக்கும் :) பிரபாஸ் ஸ்ரீராம்னா அனுஷ் மிஸஸ் ஸ்ரீராம் அப்டி நினைச்சுக்கோங்க 

      Delete
    3. // என்னதான் இருப்பினும், அனுக்கா ஸ்ரீராமுக்கே என நினைச்சுக் கொண்டிருந்த நாம், //

      ஹா... ஹா... ஹா...

      Delete
    4. நான் ஊரில் இல்லை:) ஸ்பெஷல் பிளேனில்[ட்றம்ப் அங்கிள் அனுப்பிய:)] காசிக்குப்போக என் வலது காலைத்தூக்கிப் படியில வச்சிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்:))

      Delete
  47. நாம் என்னதான் மன்னிக்கும் குணம் படைத்தவர்கள், மன்னிப்போம் மறப்போம் எனத் தத்துவங்கள் பேசினாலும், பழிவாங்கும் குணம்தான் நமக்கு அதிகம் எனவும், பழி வாங்கினால்தான் மனம் மகிழ்ச்சி அடையுது என்பதையும் படம் பார்த்துப் புரிஞ்சு கொண்டேன்.

    மக்களின் மனநிலையை நன்கு புரிஞ்சுகொண்டுதான், தயாரிப்பாளர், கதாசிரியர் மிக அழகாகப் படத்தை நிறைவு செய்திருக்கிறார்.

    பாகுபலியைக் கொன்றதோடு படத்தை முடிச்சிருந்தால், நமக்கு பிபி ஏறி, பயங்கர கோபத்துடனும் கொலை வெறியுடனும் தான் மக்கள் தியேட்டரை விட்டு வெளியேறியிருப்பார்கள். ஆனால், அப்படியே விடாமல், அதே தோற்றத்துடன் கொஞ்சமும் மாற்றமில்லாமல் பாகுபதியை திரும்பக் கூட்டி வந்து, பல்லாவை எரித்து முடிச்சதும்தான் நமக்கும் பிபி இறங்கி, முகத்தில் மலர்ச்சி வந்தது என்பது மறுக்க முடியாத உண்மை, ஆனா பல்லாவும் ஒரு மனிதன் தானே, அவரை அப்படிக் கொல்லலாமோ என ஆரும் சண்டைக்கு வந்திருக்க மாட்டினம் என்றே நினைக்கிறேன், இதிலிருந்தே தெரியுதே மனிதருக்கு பழி வாங்கும் எண்ணம் தான் அதிகம் என்பது...

    ஒரு குட்டித் திருப்பத்துள், நாசரின் கறுப்பு மீசை, அப்படியே வெள்ளையாகி விட்டது ஹா ஹா ஹா வயசாகி விட்டதாம்:))..

    இன்னொன்றையும் சொல்லி என் முடிவுரையை முடித்துக் கொள்கிறேன், ரசித்த காட்சியில் இன்னொன்று, பாகுபலியின் தோள்களில் ஏறி நடந்து தேவசேனா படகில் ஏறும்போது, தேவசேனாவின் அண்ணனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. வெய்க்கம் வெய்க்கமாக வருகிறதாம் அவருக்கு ஹா ஹா ஹா இதுக்கே இப்படியா?:)).. இதுவரை கவனிக்கவில்லை எனில், மீண்டும் ஒருதடவை போட்டுப் பாருங்கோ.. ஹா ஹா ஹா..

    இன்னொர்ரு விசயம், ஒரு பட விமர்சனம் என்பது, எல்லோரும் பார்த்து முடிச்சபின் எழுதும்போதுதான் நன்றாக இருக்கிறது எனப் புரிஞ்சு கொண்டேன், நான் மட்டும் முதலாவதாகப் பார்த்துவிட்டு, விமர்சனம் எழுதினால் அதில் சுவை இல்லை..

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. [im]https://thumbs.gfycat.com/DefinitiveGrotesqueBelugawhale-mobile.mp4[/im]

      ///அங்கே பார் முழுசா தேவசேனாவாகிப்போன உன் நட்பினை  பார் ///  யாரோ எனக்கு சொல்றாப்ல இருக்கு :)ஹலோ மியாவ் போதும் அந்த இடத்தில இருந்து வெளில வாங்க வற்றல் வடாம் போடணும் :) 

      Delete

    2. Haa haa haa grrrrrrrr ����������������

      Delete
    3. [im]https://i.makeagif.com/media/8-28-2017/RjWP4B.gif[/im]


      Delete
  48. அடகடவுளே விமர்சனம் இன்னும் முடியேல்லையோ..விமர்சனத்துக்கு ஒரு விளக்கமோ... நான் இப்படி இந்த பூசார் ஒரு பதிவு எழுதி பார்க்கேல்லை. இந்த படம் நல்லா பாதிச்சுட்டுது இவாவை. எங்கட வயிரவகோவில் சாமியாரிட்ட வீபூதி போடோனும். கெதியா வாங்கோ. அங்க அஞ்சு வத்தல்,வடாம் என்று போட்டிருக்கா. நானும் போஸ்ட் போடுறேனே.....

    ReplyDelete
    Replies
    1. //எங்கட வயிரவகோவில் சாமியாரிட்ட வீபூதி போடோனும். கெதியா வாங்கோ//

      ஹா ஹா ஹா ஹையோ இப்போ என்னைஅ அரும் தொடக்கூடாதாக்கும்:)) 2 மீட்டர் தள்ளி நிக்கோணும்:))

      //நானும் போஸ்ட் போடுறேனே.....//

      ஆ போடுங்கோ போடுங்கோ.... எனக்கு எல்லாம் ரெடி, ஆனா போஸ்ட் ரெடி பண்ணப் பஞ்சியாக இருக்குது...:))

      Delete
    2. ப்ரியா அந்த வேப்பிலை மஞ்சள் எல்லாம் கொண்டாங்க கூடவே விபூதி அடிச்சி விடுவோம் பிஞ்சு பஞ்சா பறக்கட்டும் 

      Delete
    3. //பிஞ்சு பஞ்சா பறக்கட்டும் //

      ஆஆஆஆஆஆ ஐயா ஜாமீஈஈஈ எல்லோரும் கொலை வெறியாகிட்டினம்:)).. இனியும் என் நாக்கை அடக்காட்டில்.. இந்த மகிழ்மதி அரசசபைக்கே ஆபத்து வந்துவிடும் போலிருக்கே:)) ஹா ஹா ஹா...

      Delete
  49. நான் பாகுபலி முதல் பாகம் இன்னும் பார்க்கவில்லை. இரண்டாம் பாகம் என் பெரிய அக்காவின் பெண் துபாயிலிருந்து விடுமுறைக்கு வந்தவள் நாங்கள் எல்லோரும் இந்தப் படம் பார்த்தே தீர வேண்டும் என்று எல்லோரையும் அழைத்துச் சென்றாள். அவள் ஏழு, எட்டு முறை பார்த்து விட்டாள். பாகுபலி புடவை கூட வாங்கிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவர்,"என்னோடு வெளியே வரும்பொழுது இந்தப் புடவையை கட்டிக்க கொண்டு வரக்கூடாது" என்று கூறி விட்டாராம்  இதில் சிவகாமி ரோலுக்கு ஸ்ரீதேவியத் தான் கேட்டார்களாம்,நல்லவேளை, அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நோ ஒன் கேன் பீட் ரம்யா. அவருடைய குரல் ஒரு மிகப்பெரிய ப்ளஸ்.  அதைப் போல அனுஷ்கா ரோலுக்கு வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானு அக்கா வாங்கோ.. மீ ரொம்ப லேட்டாகிட்டேன்... இன்று வருவோம் நாளை வருவோம் என நாட்கள் ஓடிப்போச்ச்ச்ச்:)..

      உண்மைதான் பாகுபலியை ரசிக்கலாம், எனக்கு அந்த நகைகள்போல செய்யத்தான் விருப்பம், ஆனால் போட மாட்டேன் ஹா ஹா ஹா..

      ரம்யா கிருஸ்ணன்.., கம்பீரக் காட்சிகளுக்கு அழகு...

      மிக்க நன்றி பானு அக்கா.

      Delete
  50. எல்லோரும் இப்படி பாகுபலிக்காகப் பேசறதைப் பார்த்தால் அதைப் பார்க்காமல் விட்டுட்டோம் என்னும் குறையே இல்லாமல் போய்விட்டது! :))))) விமரிசனங்களில் இருந்து பார்க்கணும்னு ஆசை இருந்தாலும் பொறுமை இருக்குமானு தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கீசாக்கா.. எந்த ஒன்றும், நமக்கென ஒரு நேரம் வரோணும் அப்போதான் நம் மனம் தூண்டும் பார்க்கச் சொல்லி.. அடுத்தவர் சொல்லிப் பார்ப்பதென்பது கஸ்டம்தான்... யூ ரியூப்பில் தேடி, குட்டிக் குட்டிக் கட்டங்கள் பாருங்கோ.. நான் சில படங்கள் அப்படித்தான், பிடிச்ச கட்டங்களை மட்டும் பார்ப்பேன்.

      நன்றி கீசாக்கா.

      Delete
  51. பாகுபலிக்கி இசை மரகதமணி அழகான பாடல்கள் § ஆறுமனமே பாடல் காலத்துக்கு ஏற்றது! கொர்னா உள்ளிருப்புக்காலம் சிந்திக்க வைக்கின்ற்து .

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. உண்மைதான் கொரொனா லொக் டவுனில தான் மக்கள் அதிகம் சிந்திக்க செயல்பட நேரம் கிடைக்குது. இல்லை எனில்.. ஓடுவது உண்ணுவது உறங்குவது என்றே மக்கள் பழகி விட்டனர்..

      Delete
  52. மரத்தின் பெயர் தெரியாவிட்டால் தனிமரம் என்று போட்டுக்கொள்ளுங்கள்![[[

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பெர்மிசன் தந்திட்டீங்க, இனி அப்படியே போட்டு விடுகிறேன் நேசன்.. மிக்க நன்றிகள்.

      Delete
  53. அழகிய தோட்டம். பாகுபலி பிரமாண்டம் என்றதில் இரண்டுமே தியேட்டரில் பார்த்தது .

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மாதேவி வங்கோ.. நீங்கள் தியேட்டரில் பார்க்கக் குடுத்து வச்சிருக்கிறீங்கள்:), நான் மிஸ் பண்ணிட்டேனே:)... ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  54. பாகுபலியைப் பார்த்து மயங்கிப் போனவர் இன்னும் தெளியலையா? ஒரு வாரமாச்சு!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், எல்லோரும் தேடுவதற்குள் திரும்பி வந்திடோணும் என டெய்லி நினைச்சு நினைச்சே.. ஒரு கிழமையாச்சு:).. அது புளொக்கில ஒரு சொர்க்கம் எனில், புளொக் வராமல் இருப்பதில் இரு சொர்க்கம் தெரிவதைப்போலவும் இருக்கு சில சமயங்களில்.. அதனால கையை விட்டாஅல்.. அப்படியே இன்னும் கொஞ்சக்காலம் இருந்திடலாமோ எனும் எண்ணம் வந்திடுது:)).. அப்படி எண்ணம் வர விட்டிடக்கூடாது என்று, இப்போ பாகுபலி ரெயினுக்குப் பச்சைக்கொடி காட்டி ஸ்பீட் எடுக்கப் பண்ணிப்போட்டேன்ன்:))..

      இதோ அடுத்த ரெயின் வடகங்களைக் “கடகத்தில்” ஏற்றிக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது:) சிவப்புக் கொடியைக் காட்டி நிறுத்தப்போறேன்ன்.. மியாவ் ஸ்ரேஸனில்:)) ஹா ஹா ஹா நன்றி நெ த..

      Delete
  55. ஊசி இணைப்புக்கும், இரண்டாவதாகக் கொடுத்துள்ள ஊசிக்குறிப்புக்கும் நல்ல சம்பந்தம் உள்ளது. ஆஹ்ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா :)

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.