நல்வரவு_()_


Tuesday, 14 February 2017

மூட் அவுட் ஆ??? அப்போ கொஞ்சம் இக்கரைச் சூடு:)

ஹா ஹா ஹா அதென்ன அது மூட் அவுட் என்றால்??.. இப்போ பலபேர் அடிக்கடி சொல்றார்கள், ஒரு சின்னப் பிரச்சனை மூடவுட் ஆகிட்டேன் அதனால வெளியே வரவில்லை, கொமெண்ட்ஸ் ஏதும் போடவில்லை:), பேசாமல் இருந்திட்டேன்..

Friday, 10 February 2017

கிரில் உம் பரிசும்:)மீயும்:)


ன்னுடைய புரொப்ளம் என்னன்னா... நினைக்கும்போது நிறைய எழுத வருது, ஆனா எழுதும்போது நினைவுக்கு நிறைய வருகுதில்ல:)).. [ஆனா மீ சுவீட் 16 என்பதனை இங்கே நினைவுகூர விரும்புறேன்[ஸ்ஸ்ஸ் இதை இங்கின கரெக்ட்டாச் சொல்லாட்டில்... 61 தான் என ஸ்ராம்ப் ஒட்டிடுவாங்க கர்ர்ர்ர்ர்ர்:))].

ங்கு நாம் நண்பர்கள் குடும்பங்கள் மாத்தி மாத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் கூப்பிட்டு ஹெட்டுகெதர் போல லஞ் அல்லது டின்னர் கொடுப்பதுண்டு.  அப்போ போகும்போது பிஸ்கட், சொக்கலேட் , கேக், இப்படிக் கொண்டு போவது பிடிக்காதெனக்கு.. அதனால தேடித் தேடி ஏதும் பிரயோசனமான பொருட்களாக கொடுக்க விரும்புவேன். குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிவிட்டு,

பெரியாட்களுக்காக, நல்ல அழகான நொன் ஸ்ரிக் சமையல் பாத்திரங்கள், அழகழகான டிசைன்களில் மின்னும் மின் விளக்குகள்(Table lamps), Flower vase, Perfume, விதம் விதமான வாசனை மெழுகுவர்த்திகள் இப்படியானவற்றை தேடி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்,

ந்த வகையில் இம்முறை கிரிஸ்மஸ் க்கு என்ன கொடுக்கலாம் என தேடிய இடத்தில், நல்ல ஒரு பொருளாக இந்த கிரில் தெரிஞ்சுது, 4 குடும்பங்களுக்கு இதை பிரசண்ட் பண்ணினோம்.. கிரிஸ்மஸ் க்காக.

னைவரும் சந்தோசப்பட்டார்கள், மிகவும் பிரயோசனமாக இருக்கிறது என்கிறார்கள், கேட்க எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்குது. இதில் நாங்கள் சாம்பிளுக்காக முதலில் குட்டிக் கிரில் வாங்கினோம், எங்களுக்கு பிரயோசனமாக இருந்ததனால், இதில் பெரிய சைஸ் வாங்கி பிரசண்ட் பண்ணினோம், நாமும் பெரிதாகவே வாங்கியிருக்கலாம் என எண்ணுகிறோம் இப்போ..., ஆனா பிள்ளைகளுக்கு அவசரமா ஒரு சான்விச் செய்து கொடுக்க, குட்டிக் கிரில்தான் வசதி.

இதில் செய்த சீஸ் சான்விச், ஹாம் சான்விச்.. அவரவர் விருப்பத்துக்கேற்ப நன்கு முறுகவிட்டும் எடுக்கலாம்.

நீங்களும் வாங்குங்கோ அல்லது அட்ரஸ் தாங்கோ அடுத்த கிரிஸ்மஸ் க்கு பிரசண்ட் பண்ணுறேன்:).

இது என்ன தெரியுமோ?:) இதையும் இதில்தான் கிரில் பண்ணி எடுத்தேன்:)..வாழைத்தண்டு:)

நாம் கிரில் பண்ணும் பொருட்களில் கொழுப்பு இருப்பின், கீழே இருக்கும் தட்டில் முழுவதும் வடிந்துவிடும், அதனால்தான் இதை அனைவரும் விரும்புகின்றனர்.

Breaded chicken, Asparagus. இதில் அஸ்பரகஸ் ஐ எதுவும் பண்ணத் தேவையில்லை, சும்மா கழுவிப்போட்டு அப்படியே கிரில் பண்ணிட்டால் சரி பின்பு சோல்ட் அண்ட் பெப்பர் போட்டு அப்படியே சாப்பிடலாம்.

ங்கு எல்லோரிடமும் சமைக்கும் குக்கரோடும் கிரில் இருக்கு ஆனா அது பெரிசு, நிறைய செய்யும்போது அதைப் பாவிக்கலாம், இது பிரெட் சான்விச் செய்ய இன்னும் சூப்பராக இருக்கு...

முன்பு இந்த சான்விச் ரோஸ்டர்தான் டிமாண்ட்டாக இருந்துது வீட்டில், இப்போ கிரில் க்குத்தான் முதலிடம், ரோஸ்ட்டர் உள்ளே ஒளிச்சிட்டார்ர்:).


சில சமையல் ரிப்ஸ்:)...
கவனமாக் கேட்டு:) கிட்னியில் சேஃப் பண்ணிடுங்கோ.. எப்பவாவது பிரயோசனமாகும்:)..

ரெடிமேட் பூக்களாக வாங்கி வைப்பதை விட, தேங்காய் வாங்கி வந்து இப்படி உடைச்சு உடனேயே திருவி, பிரீஸர் பாக்குகளில் போட்டு பிரீஸ் பண்ணிடுங்கோ.. தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.



நம் வீட்டு பிரிஜ் இல், அப்பப்ப கறி வாசனைகள் அல்லது மரக்கறி வேறு ஏதாவது வாசமோ வராமல் இருக்க, பிரிஜ்ஜில் ஒவ்வொரு தட்டிலும் அங்கங்கு பிளிந்து விட்ட தேசிக்காய் கோதுகளை ச்ச்சும்மா ச்சும்மா வச்சு விடுங்கோ.. எந்த விதமான மணமும் இருக்காது, சுத்தமான நல்ல மணம் மட்டுமே இருக்கும். ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா பிரிஜ்ல என்ன என்ன வச்சிருக்கிறா எனப் பார்க்காமல்:) தேசிக்காய் கோதுகள் எங்கெங்க இருக்கு எனப் பாருங்கோ:) கர்ர்:))


ஊசிக்குறிப்பு:-
இம்முறை ஊசிக்குறிப்பேதும் இல்லை:)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அதிரா எழுதும் டயரியிலிருந்து:)..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Tuesday, 7 February 2017

நான் பெத்த மகனே!!!  

ப்பவுமே, நகைச்சுவை, நகைச்சுவையான சினிமாக்கள் தான் அதிகமா தேடிப் பார்ப்போம். அந்த வகையில் போனகிழமை தேடிய இடத்தில்.. “நான் பெத்த மகனே” படம் கைக்குக் கிடைத்தது.

டிகர்கள் யாரென பார்த்தபோது, அத்தனை நகைச்சுவையாளர்களும் இருந்தார்கள்... மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேல்... இவர்களோடு ஊர்வசி.. மற்றும் ராதிகா, நிழல்கள் ரவி.

ப்போ என் சந்தோசத்துக்கு எல்லையே இல்லை, இதனை இப்பவே பார்த்து முடிக்க வேண்டும் என ஆரம்பித்தால்... முடிவு வரை நிறுத்தவே மனம் வரவில்லை எண்டால் பாருங்கோவன்... அவ்ளோ ஆர்வமா நகர்த்தியிருக்கிறார்கள் கதையை.

==========================இடைவேளை===========================
அப்போ எங்கட டொக்டர்- பிரின்சிபல்- செஃப் ... தாமோதரம்பிள்ளை அங்கிளைப் பார்த்தால் திருமணம் முடிச்சவர்போலவா தெரியுது:)).. ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

=========== சரி சரி லைட் ஓவ் பண்ணியாச்சு, தடக்குப் படாமல் உங்கள் உங்கள் seat  களில் எல்லோரும் வந்து இருந்திடுங்கோ.. மாறிக்கீறி இருந்திடாதையுங்கோ....... இடைவேளை முடிஞ்சுது===_()_

ல்ல விடுப்ஸ் கதை:).. நல்ல நகைச்சுவையான காட்சிகள். ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட படம், இடங்கள் பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு.

மாமிமார்கள் எல்லோரும் ஒரு கட்சியாகவும், மருமகள்மார் எல்லோரும் ஒரு கட்சியாகவும் கூடி இருந்து பேசுவது, சந்தைக்குப் போய் வருவது எல்லாம் பார்க்க, அவ்விடத்தில் நாமும் இருந்தால் நன்றாக இருக்குமே எனும் ஆசை வருது..(மருமகளாக..,மாமியாராக இல்லை:)).. இதையெல்லாம் ஒழுங்காச் சொல்லிடோணும்)).

லோயராக கவுண்டமணியும், அவரிடம் கஸ்டமராக செந்திலும், செந்திலுக்கு மகனாக வடிவேல் வருகிறார். வடிவேலுக்குத் திருமணம் முடிந்து விட்டது, ஆனால் முதலிரவு நடப்பதற்குள்.. சம்பந்திமாருக்குள் பிரச்சனை ஏற்பட்டு வழக்கு தொடர்கிறது... தனக்கு எப்போ முதலிரவு நடக்கும் என பகல் கனவில் மிதக்கிறார் வடிவேல்ல்ல்.. நடந்ததா என்பதை அறியப் படம் பாருங்கோ:)).

னா நகைச்சுவைக்கு மத்தியில் நல்ல ஒரு படிப்பினையையும் ஒளித்து நகர்த்துகிறார்கள்.. ஒரே ஒரு மகனாக நிழல்கள் ரவி .. தன் மகனே உலகம் என வாழும் அம்மாவாக மனோரமா வருகிறார்.

தானாகவே விரும்பி மருமகளை செலக்ட் பண்ணுகிறார்..  ஒரு, தாய் தந்தை இல்லாத பெண்ணை, அப்போதான் மருமகள் தனக்குள் அடங்கி நடப்பார் என தப்புக் கணக்குப் போடுகிறார்... அம்மாவுக்காக  தன் காதலை விட்டுக் கொடுத்து, இப்பெண்ணை மணம் முடிக்கிறார் மகன்..

னா கொஞ்சம் ஓவராக, மனைவி கணவனுக்கு ஆசையாகச் செய்யும் பணி விடைகளை, மனைவியைச் செய்ய விடாமல் தானே செய்கிறார்.. மனோரமா., இதனால் மகனுக்கு எரிச்சல் வருகிறது... பின்பு மருமகளும் கொஞ்சம் மாமியை எதிர்க்க தொடங்குகிறார்.

வீட்டுக்குள் பூகம்பம் ஆரம்பம்... முடிவு கவலையான முடிவுதான்.. லோயர் ஆக ராதிகா வந்து நன்கு வாதாடுகிறார்.... விரும்பினால்.. பொழுது போகாதுவிட்டால் நிட்சயம் இப்படம் பாருங்கோ...  முடிவு கவலை எனினும் பார்க்கக்கூடிய படம், முடிவை சற்று மாற்றி அமைத்திருக்கலாம். மற்றும்படி படம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

சில கிராமங்களில் நடக்கும் உண்மைச் சம்பவத்தின் தழுவலாக இருக்கலாம் கதை.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதிராவும் சினிமா விமர்சனம் எழுதிட்டேன்ன்ன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஊசிக்குறிப்பு:
போனதடவை சிலபேர் வோட் பண்ணவில்லை என கறுப்புப் பூஸ் படைத்தலைவர் அறிவிச்சார்ர்:)) அதனாலதான் இம்முறை கண்காணிப்புப் படைத் தலைவரை:) இங்கின காவலுக்குப் போட்டிட்டேன்ன்:)).. சே சே சே எப்பூடி மிரட்டினாலும், சிலபேர் வோட் பண்ண மாட்டினமாமே:))
 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, 4 February 2017

மண் சட்டியும் மீன் குழம்பும்.. பக்குப் பக்கூஊ:)

ன்ன? என் தலைப்புப் பார்த்துப் பக்குப் பக்கெண்ணுதோ உங்களுக்கெல்லாம். முந்தின காலத்தில மண் பாத்திரங்கள், பித்தளை, கல்வெள்ளி, இரும்பு என வகை வகையாக சமைச்சார்கள். அதனால் அக்காலத்தவர்கள்  நலமாக இருந்தமைக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். இதுபற்றி விரிவாக நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கெல்லாம் தெரியும்தானே?:).

Sunday, 29 January 2017

சகிப்புத் தன்மை...

ளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே வளர்த்தி என்று சொல்லிப்போட்டினம்.... ஆனா அத்தோடு சகிப்புத் தன்மையையும் வளர்க்க வேண்டி இருக்கே.

முக்கியமா இங்கு வெளிநாட்டுக்கு வந்ததில் இருந்து என் சகிப்புத் தன்மையை நாளுக்கு நாள் பல்லைக் கடிச்சு, நாக்கைக் கடிச்சு கூட்டிக்கொண்டே வாறேன்.. ஏனெனில் நாம் இருக்கும் ஊரும் அப்படிப்பட்டது. கலப்படமில்லாத வெள்ளையர்கள் இருக்கும் இடம், வெளிநாட்டவர்கள் எனில் நாமும் இன்னொரு குடும்பமும்தான், மற்றும்படி 2 சைனீஸ் குடும்பமும் உண்டு, எங்கு போனாலும் மிக ஒழுங்காக இருப்பார்கள்.

ரோட்டில் என்னதான் மெதுவா போனாலும், இடையே அவசரமா காரை நிறுத்தி யாருடன் பேசினாலும், பின்னாலே வரும் கார்கள் எல்லாம் பொறுமை காப்பார்கள், கோன் அடிக்க மாட்டார்கள். கோன் சத்தமே காதில் கேட்காது.

இரண்டே இரண்டு விசயத்துக்கு மட்டுமே கோன் அடிப்பார்கள்... 
1. சிக்னலில் முதலாவது ஆளாக காரை நிறுத்திவிட்டு கனவில மிதந்து கொண்டே இருந்து, கிரீன் லைட் மாறியபின்பும் அப்படியே கனவு காணும்போது:) கோன் பண்ணுவார்கள்... எடு காரை என:).

2. டக்கென ஏதும் றூல்ஸ் ஐ மீறி, காரைக் கண்டபடி திருப்பினாலோ, வெட்டினாலோ மட்டும் கோன் அடிப்பார்கள்(அதாவது, எதிர்பாராமல் பின்னே வரும் காரை திடுக்கிடப் பண்ணினால் மட்டும்).

ப்படியான மென்மையான ஊரில் இருப்பதனால் மிகவும் கவனமாக நாம் நடப்பது வழக்கம். தப்பித் தவறியும், ஏசியன்ஸ் என்றாலே இப்படித்தான் என இவர்கள் எண்ணிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதனால்.. அதிகமா சகிப்புத் தன்மை தேவைப்படுது.

டுத்து Learners car முன்னாலே போகும்போது, பின்னாலே ஊர்ந்து ஊர்ந்து போவதுக்கு எவ்வளவு சகிப்புத் தன்மை தேவை தெரியுமோ? Dual carriageway எனில் (டபிள் ரோட்) முந்திக்கொண்டு போயிடலாம், ஒரு ரோட் எனில் முந்தவும் முடியாது... அந் நேரம் ஸ்கூலுக்கு நேரமாச்சே என காருக்குள் இருந்து பதறத்தான் முடியுமே தவிர ஒண்ணும் பண்ண முடியாது:).

னா நான் நினைப்பேன் முன்பு ஒருகாலத்தில் கார் பழகும்போது, என் பின்னாலேயும் இப்படி சகிப்புத் தன்மையோடுதானே ஏனையோர் இருந்திருப்பார்கள்.... இனி நம் பிள்ளைகள் பழகும்போதும் யாரும் திட்டாமல் சகிச்சுக் கொண்டு பின்னாலே ஊர்ந்து செல்லத்தானே போகிறார்கள் அதனால.. இது நான் கடந்து வந்த பாதை.. என நினைச்சு மிகவும் சகிப்புத் தன்மையோடு..  "நீ ஓடு ராசா!! பத்திரமா ஓடு" என நினைச்சு, பொறுமை காப்பேன்.

ன்னொரு இடம், சில இடங்களில் வயதானோரின் பின்னால் நடப்பது. முந்தவும் முடியாத இடமாகவும் சன நெருசலான இடமாகவும் இருக்கும் இடங்களில், வயதானோர் மிக மெதுவாக நடப்பார்கள்.. ஒரு காலை எடுத்து வைத்து பின் மெதுவா அடுத்த காலை எடுத்து வைப்பார்கள், இவ்விடத்தில் பயங்கர சகிப்புத் தன்மை வேணும் - பின்னாலே மெதுவா ஊர:).. அப்போ நினைப்பேன்.. இது நான் பின்னாளில் சந்திக்கப் போகும் பாதைதானே- அதாவது கடக்க இருக்கும் பாதை, என. அதை நினைச்சே மிகவும் சகிச்சுக்கொண்டு பின்னாலே போவேன்.

னக்கு என்னமோ வயதானோரிலும், குழந்தைகளிலும் அதிக பாசம் உண்டு. எங்கு போனாலும் நான் அதிகம் ஒட்டியிருப்பது இந்த இருவரோடும்தான். அதிலும் நான் நினைப்பதுண்டு, நம் வயதை ஒத்தோரை எல்லோரும் கவனிப்பார்கள் நோர்மலா, ஆனா வயதானோரைத்தான் தேடுவது குறைவு, அதனால நான் நம் வீட்டுக்கு விருந்தினர் வரும்போது பெற்றோரை அழைச்சு வந்தால், பெற்றோரோடுதான் அதிகம் பேசுவேன்.

ம் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள் (65/70) வயசுக்காரர்(ஸ்கொட்டிஸ்) அவர்கள் என்னைக் கண்டால் நொன் ஸ்ரொப்பாக பேசுவார்கள், நானும் தப்பி ஓடாமல் பொறுமையா நின்று பேசுவேன், வீட்டுக்கும் போய்ப் பேசிவிட்டு வருவேன், நம் சமையல் பிடிக்கும் அவர்களுக்கு, ஏதும் செய்தால் கொண்டு போய்க் கொடுப்பேன்.  இந்த விசயத்தில் நிறையப் பேசலாம், ஆனா அது தற்பெருமை பேசுவது போலாகிடும் என்பதனால என்னைக் கொன்றோல் பண்ணிக் கொண்டு...

ப்போகூடப் பாருங்கோ உங்களுக்கும் சகிப்புத் தன்மை வந்திருக்குமே?:) என் போஸ்ட்டை ஒருவரிகூட விடாமல்:) முழுவதையும் சகிச்சுக்கொண்டு படிச்சு முடிச்சிட்டீங்கதானே?:)).

ச்ச்சோஓ நான் சொல்ல வருவது யாதெனில் சில நேரங்களில் கெட்ட கெட்ட கோபமா வரும், கோபத்தை அடக்க அடக்க உடம்பும் நடுங்கப் பார்க்கும்.. ஆனா இப்பூடியான நேரங்களில்.. மேலே நான் யோசிச்சதைப்போல “மாத்தியோசிச்சு” சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கோ...

இதிலிருந்து முடிவா நான் என்ன சொல்கிறேன் எனில்... பார்த்தீங்களோ? அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:)).. இதைச் சொல்லத்தான் சுத்தீஈஈஈ வளைச்சு இவ்வளவும் சொல்லி முடிச்சேன்ன்ன்.. ஸ்ஸ்ஸ் இனி யாரும் என்னைத் திட்டிடக்கூடாது:) சகிச்சுக் கொள்ளோனும்:))... ஹா ஹா ஹா..

ஊசிக்குறிப்பு:
புளொக் ஆரம்பித்து இத்தோடு ஒன்பது வருடங்கள்... ஆனா இதுதான் என் 200 ஆவது பதிவு:) எல்லோரும் ஓடி வந்து, அதிரா கையில தாம்பூலம் எடுத்து, வாழ்த்துங்கோ அதிராவை:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாழ்க்கையில் எந்த விசயத்தில் தோற்றாலும், 
ஒன்று மனசை மாத்தத் தெரியோணும், 
இல்லையெனில் தேற்றவாவது தெரியோணும்
இவ்வரிய தத்துவத்தை, இந் நன்னாளில் உங்களுக்காக காவி வந்து தந்திருப்பவர்.. 
உங்கள் பெருமதிப்பிற்கும்:), பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&